Jump to content

ஆங்கிலப்பெயர்கள் சூடும் கிறிஸ்தவ தமிழர்கள்


Recommended Posts

90 வீதமான கிறிஸ்தவர்கள் ஐரோப்பிய மொழிப் பெயர்களை வைக்கிறார்கள்.

99.99 வீதமான இந்துக்கள் வடமொழிப் பெயரை வைக்கிறார்கள்.

தமிழர்களில் கிறிஸ்தவர்கள் 5 வீதத்திற்கும் குறைவு.

கணக்குப்படி நூறு முறை இந்துக்கள் பற்றி பேசுகின்ற பொழுது ஒரு முறை கிறிஸ்தவர்கள் பற்றி பேசினால் போதும். அது கூடத் தேவை இல்லை.

இந்துத் தமிழர்கள் தமது பெயர்களை தூய தமிழில் வைக்கின்ற பொழுது, கிறிஸ்தவர்களும் தாமாகவே தூய தமிழில் பெயர் வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியர்கள் யாராவது மகாலிங்கம் என்ற பெயரை வைத்திருக்கிறார்களா?. வல்லைக்குமரன், முல்லைக்குமரன்(முருகக் கடவுளின் பெயர்), பிரபாகரன், மனோகரன், திலீபன், மோகன், சபேசன், கந்தப்பு, பிரணவன்(பிள்ளையாரின் இன்னொமொரு பெயர்), சரவணன்(முருகனின் பெயர்) என்ற பெயர்கள் வட இந்தியர்கள் யாருக்கும் உண்டா?. அந்தோணிப்பிள்ளை, அருளப்பர் என்ற பெயர் வெள்ளைக்காரர்களுக்கு உண்டா?

கடவுள் நம்பிக்கை யாருக்கும் இருக்கலாம், இல்லாமல் போகலாம். அது அவர் அவர் விருப்பம். அந்தோணியரைக் கும்பிடுபவர்கள் அந்தோணிப்பிள்ளை என்று ஒரு சிலர் சூடுகிறார்கள். ஏன் மைக்கல் என்று பெயர் வைக்க வேண்டும். சிவனைக்கும்பிடுபவர்கள் சிவனேசன் என்று பெயர் வைக்கிறார்கள். ஆனால் சில இந்துக்கள் கைலாஸ் என்று வட இந்தியர்களின் பெயரைச் சூடி அடையாளத்தினை இழக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவ தமிழர்களின் பெயர்கள் வெள்ளைக்காரரின் பெயரிலே இருக்கிறது. அவுஸ்திரெலியா அணியில் 2002ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண துடுப்பாட்டப்போட்டியில் ஈழத்தமிழ்ச் சிறுவன் ஒரு போட்டியில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினைப்பெற்றார். ஆனால் அவரின் பெயர் ஆங்கிலப் பெயரில் இருந்ததினால் என்னுடன் வேலை செய்யும் பல வெள்ளைக்காரர்கள் வெள்ளைக்காரர் ஒருவர் தான் அவர் என நினைத்திருந்தார்கள். நான் சொல்லித்தான் விளங்கப்படுத்த வேண்டியதாக இருந்தது.

பெரும்பாலான கிறிஸ்த மதத்தினைச் சேர்ந்த தமிழர்கள் ஐரோப்பியர்களின் பெயரையும், சில இந்துக்கள் வட இந்தியாவில் உள்ளவர்களின் பெயர்களையும் சூடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ தமிழர்களையும், இஸ்லாமிய தமிழர்களையும் குறை சொல்லாதையுங்கோ... பிறகு அவர்களை எங்களோட இருந்து பிரிக்கிறதாய் சிலர் சொல்லக் கூடும்...!

தமிழர் பொதுமுறை, வரலாறு என்பதுக்குளே இருந்து அவர்கள் எப்போதும் வெளியிலேயே நிக்கிறார்கள்... அவர்களாய் உள்ள வரட்டுக்கும் அது வரைக்கும் தமிழருக்கு மொழி ரீதியான தொடர்பு மட்டும்தான் அவர்களுடன் எங்களுக்கு இருக்கிறது...!

தமிழர்களின் திரு நாள் தைப்பொங்கலினை தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எத்தனை பேர் கொண்டாடுகிறார்கள். அவர்களைக் கேட்டால் அது இந்துப்பண்டிகை என்று சொல்கிறார்கள். தைப்பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்றும் இது இந்துக்களின் பண்டிகை இல்லை என்று அவர்களுக்கு தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

தைப் பொங்கல் தமிழர்திருநாள் என்று அவர்களுக்கு தெரியாமல் போனதற்கு நாம்தான் காரணம்.

அதை இந்து மத விழாவாக நாம்தான் மாற்றி வைக்கிறோம்.

குமரன் என்ற பெயர் வடமொழியில் இல்லை. ஆனால் குமார் இருக்கிறது. பிரபாகர், மனோகர், திலீப், மோகன், பிரணவ் என்ற பெயர்களும் இருக்கிறது.

நாங்கள் வடமொழிப் பெயர்களை சிறிது மாற்றி விட்டு, அதை தமிழ் என்று சொல்லமுடியாது.

அதே போன்று அன்ரனி என்பதுதான் அந்தோணி. இங்கே அந்தோணி என்று வைப்பதோ அன்ரனி என்று வைப்பதோ, எல்லாம் ஒன்றுதான்.

மொத்தத்தில் தமிழர்கள் எந்த மதமாக இருந்தாலும், தூய தமிழில் பெயர்களை வைப்பதுதான் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறிஸ்துவர்கள் தமிழில் வழி பட மக்களை கவர்ந்திழுப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இது என்ர மதம் எண்ட ஒரு பீலிங்கை மக்கள் மத்தியில கொண்டந்து அவையளை கவர்ந்திழுக்க இதொரு தந்திரரமாக கூட இருக்கலாம்.

ஆனால் தமிழர்களள் தமது மதமான இந்து மதத்தின் மூல மொழியான சமஸ்கிரதத்தில் தான் வழி பட வேணும் என்றது... சரியில்லை.. அப்படியானால் தமிழ் சமஸ்கிரதத்தில் இருந்து பிரிந்த தொன்றாகும் என்றே கருத வேணும்..

அல்லது இந்து சமயத்துக்கு முதல் தமிழன் வேறொரு மதத்தை பின்பற்றிக்கொண்டிருந்தான் என்று எண்ணலாம்.

ஆனால் தூயவன்.. தமிழில் வழிபடச் சொல்வது இந்து சமயத்தை உடைகஇக என்று எப்படி சொலஇகிறீர்கள். அப்ப சமஸ்கிருதம் இந்த சமயத்தை தாங்கிப் பிடிக்கிறது என்று அர்த்தமா.. ?

என்ன இருந்தாலும் அவரவர் நம்பிக்கையை தங்கள் சொந்த மொழியிலேயே பின்பற்றலாம். நம்பிக்கை தான்..

மற்றும்படி எல்லா மதங்களிலும் காதில் மலர் சுற்றும் விடயங்கள் தான் காலா காலமாய் கொள்ளப்படுகின்றன..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் வழிபாடு வேண்டாம் என்று சொல்லவில்லை காவடி. ஆனால் இவர்கள் தமிழில் செய் என்று அடம்பிடிப்பது சூழ்ச்சி மிக்க வார்த்தைகள் என்பதே என் கருத்து. இவர்களுக்கு அங்கே, ஆரிய வெறுப்பு இருப்பதால் தான், அதைத் தூக்கிப் பிடிக்கின்றார்கள். சொல்லுங்கள்! தமிழில் மந்திரம் ஓதுவது என்பது தமிழின் வளர்ச்சிக்கான அடிப்படையா?

தமிழின் வளரச்சிக்கு அதைத் தான் காரணமாகக் காட்டி ஏமாற்ற முனைகின்றார்கள் என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

தமிழில் வழிபாடு செய்வதன் மூலம் தமிழ் வளரப் போவதில்லை. அப்படி நம்புகின்ற அளவிற்கு நாம் மூடர்கள் அல்ல. இது மொழி வளர்ச்சி பற்றிய பிரச்சனை அல்ல.

நாம் கடவுள் வழிபாடு என்பதே தேவையில்லை என்று சொல்கிறோம்.

சிலைகளுக்கு பூசை செய்வதே ஒரு மூட நம்பிக்கை. அதை தமிழில் செய்தாலும், அது மூட நம்பிக்கைதான்.

ஆனால் தமிழர்களுக்கு தாங்கள் நம்புகின்ற கடவுளை தமிழில் வழிபட, பூசை செய்ய உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் இங்கு பிரச்சனை. "தமிழில் வழிபாடு" என்பது உரிமைப் பிரச்சனை.

நீங்கள் யாரும் தடுக்கவில்லை என்று வாதிடலாம்.

ஆனால் ஆகம விதிகளையும், வேதங்களையும் காட்டி மனப் பயத்தை கொடுத்து, கேள்வி கேட்பதை தடுத்து ஒரு மாய விலங்கின் மூலம் தமிழர்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை.

ஆகவே ஒரு இனத்திற்கு அந்த இனத்தினுடைய தாய்மொழியில் வழிபடும் உரிமை மறுக்கப்படுவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடவுள் வழிபாடு எமக்குத் தேவையா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்பது தான் நிலை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது உங்களின் உரிமை. என் உரிமையில் தலையிட உங்களுக்கு உரிமையில்லைத் தானே!

அது மூட நம்பிக்கையா இல்லை என்பது குறித்தும், நீங்கள் வரைவு கொடுக்க உரிமையற்றவரே! எங்களுடைய நம்பிக்கை சரியா, தவறா என்று தீர்மானிக்க உரித்துடையவராகின்றோம். மற்றவர்களின் நம்பிக்கையை, மூட நம்பிக்கை என்றும், உங்களுடைய சிந்தனைகளைப் பகுத்தறிவு என்றும் படம் காட்டுகின்ற வேலை வேண்டாமே!

Link to comment
Share on other sites

"தமிழா விழித்தெழு"

கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்

"தமிழா போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்" ;

பங்களிப்பதும் பங்களிக்காததும் உங்கள் விருப்பம்

உலகத் தமிழினமே ஒன்றுபடு"

ஒன்றுபடுவதும் படாது இருப்பதும் உங்கள் விருப்பம்

"சிறிலங்கா பொருட்களை புறக்கணி"

புறக்கணிப்பதும் நெக்றோ குடிப்பதும் உங்கள் விருப்பம்.

"தமிழா தாய்மொழியை முன்னிறுத்து"

தாய்மொழியை முன்னிறுத்துவதும், சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவதும் உங்கள் விருப்பம்

இப்படி பல கருத்துக்களை பலர் சொல்கிறார்கள். சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. முடிவெடுப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

எமக்கு சரி என்று படுகின்ற இலக்கை நாம் அடையும் வரை, நாம் அதற்கான பரப்புரைகளை மேற்கொள்வோம். அதை யாரும் தடை செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தைப் பொங்கல் தமிழர்திருநாள் என்று அவர்களுக்கு தெரியாமல் போனதற்கு நாம்தான் காரணம்.

அதை இந்து மத விழாவாக நாம்தான் மாற்றி வைக்கிறோம்.

அவர்கள் என்ன வெளி நாட்டில் இருந்து வந்தார்கள்?. அல்லது இடையில் வேறு நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து விட்டார்களா?

காலம் காலமாக தமிழர் பண்டிகையாக தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. வெள்ளைக்காரனின் ஆங்கிலப்பெயர்கள் தெரிகிறது. ஆனால் தமிழனின் தைப்பொங்கல் தெரியவில்லை.

எனக்கும் கோவில்களில் சமஸ்கிருத வழிபாட்டில் உடன் பாடு இல்லை. கனடாவில் ஒரு சைவக்கோவிலில் தமிழ் வழி பாடு நடை பெருகிறது. மற்றைய கோவில்களும் இதனைப்பார்த்தவது திருந்தலாம் தானே. சம்பந்தர் தேவாராம் பாடிய போது சிவபெருமான் காட்சி அளித்ததாகச் சைவர்கள் சொல்கிறார்கள். இது உண்மைச் சம்பவமோ அல்லது கற்பனையோ தெரியாது. ஆனால் தமிழில் பாடிய போது சிவபெருமான் காட்சி அளிக்கும் போது ஏன் சமஸ்கிருத வழிபாடு தேவை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...

ஆனால் நல்ல தூய தமிழ் பெயர்களை வைத்திருந்தால், இந்த பெயர் மாற்ற வேண்டிய தேவையே வராது. உதாரணத்திற்கு "தூயவன், மலரவன்" போன்ற பெயர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பெயர்களை எந்த மதத்திற்கு போனாலும் வைத்துக் கொள்ளலாம்.

காரணம் தூய தமிழ் பெயர்கள் மொழியின், இனத்தின் அடிப்படையிலேயே வைக்கப்படுகின்றன. மதத்தின் அடிப்படையில் அல்ல.

ஆகவே இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு நாம் இனியாவது நல்ல தமிழ் பெயர்களை வைப்பதுதான்.

சபேசன,் அப்ப வேலவன், சேயோன், வல்லி, முருகன், முக்கண்ணன், பிறைசூடியன், பரிமேலழகர், ஆனைமுகன், பிள்ளையார், வேழமுகன், மாயவன், திருமால், திருமகள், மலைமகள், கலைமகள், நான்முகன், ஐயனார், முதலிய பெயர்களெல்லாம் இனத்தின் அடிப்படையில் வைக்கப்படும் பெயர்களோ, சமய அடிப்படையில் வைக்கப்படவில்லையோ? :rolleyes:

தமிழர்களின் திரு நாள் தைப்பொங்கலினை தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எத்தனை பேர் கொண்டாடுகிறார்கள். அவர்களைக் கேட்டால் அது இந்துப்பண்டிகை என்று சொல்கிறார்கள். தைப்பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்றும் இது இந்துக்களின் பண்டிகை இல்லை என்று அவர்களுக்கு தெரிவதில்லை.

கந்தப்பு, தமிழ்க்கிறிஸ்த்தவர்களில் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் தைப்பொங்கல் கொண்டாடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

தூய தமிழிலும் மதம் சார்ந்த பெயர்களை வைக்க முடியும் என்கின்ற உங்களுடைய கருத்துச் சரி! அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பொதுவாக தூய தமிழ் பெயர்கள் என்று பரிந்துரைக்கப்படுகின்ற பெயர்கள் பெரும்பாலும் மதம் சாராத பெயர்களாகவே இருக்கின்றன என்ற அடிப்படையிலேயே என்னுடைய கருத்தை சொன்னேன்.

பிறைசூடியன், பரிமேலழகர், ஆனைமுகன், வேழமுகன், நான்முகன் போன்ற பெயர்கள் பொதுவாக தமிழார்வலர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை.

முருகன், வேலவன், சேயோன், வள்ளி போன்ற பெயர்கள் எம்மிடையே வாழ்ந்த மனிதர்களை குறிக்கவே பயன்படுகிறது. தமிழர்கள் மத்தியில் புகழோடு வாழ்ந்து இறந்து நடுகல் வழிபாட்டு மூலம் வணங்கப்பட்டவர்கள். இதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை.

புகழ் பூத்த தமிழர்களை குறிக்கின்ற பெயர்கள் என்ற அடிப்படையில் இப்பெயர்களையும் எந்த மதத்தவரும் கொள்ள முடியும்

மற்றையபடி உலகின் அனைத்து மொழியிலும் மதம் சார்ந்த பெயர்களை வைக்க முடியும் என்கின்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழிலும் மதம் சார்ந்த பெயர்களை வைக்க முடியும் என்கின்ற உங்களுடைய கருத்துச் சரி! அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இதைத்தான் நானும் சொல்கிறேன். கிறிஸ்தவத்தமிழர்கள் ஆங்கிலப்பெயரில் பெயர் சூடாமல் கிறிஸ்தவமதம் சார்ந்த தமிழ்ப்பெயரிலும்(கிறிஸ்தவ மதப்பெயர் வைக்க விரும்பினால்), இந்துக்கள் சமஸ்கிருதமொழியில் பெயர் சூடாமல், இந்து மதம் சார்ந்த(இந்து மதம் சார்ந்த தமிழ்ப் பெயர் வைக்க விரும்பினால்) தமிழ்ப்பெயரிலும் பெயர் வைத்தால் நல்லது. அல்லது தூயவன்,மலரவன்,அருவி,பூங்கோதை என்ற தூயதமிழ்ப்பெயரில் வைத்தால் நல்லது. என்னுடன் வேலை பார்க்கும் தமிழர் அல்லாத இந்தியர்கள், அவுஸ்திரெலியாவில் சாதனை படைத்து வரும் சில தமிழ்ப்பெயர் இல்லாத ஈழத்தமிழர்களின் சாதனைகளை, இந்தியரின் சாதனையாகச் சொன்னார்கள். நான் அதற்கு அவர் ஈழத்தமிழன் என்று சொல்ல, அவர்கள் சாதனை படைத்தவரின் பெயர் வட இந்தியர் போல் அல்லவா இருக்குது என்று சொன்னார்கள். இதைக்கேட்கக் கவலையாக இருந்தது. இது போலத்தான் ஆங்கிலப்பெயரில் உள்ள ஈழத்து துடுப்பாட்டக்காரரின் சாதனையினை வெள்ளைக்காரர்களுடன் கதைத்தபோது அவர்களுக்கும் அவர் தமிழர் அல்ல என்று நினைத்தது எனக்கு கவலையினைத்தந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.