Jump to content

மேற்குலகின் இலங்கை மீதான ஈடுபாடு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகின் இலங்கை மீதான ஈடுபாடு.

சீனாவின் மடியில் இருந்து இலங்கை மீட்கப் பட்டு உள்ளது. அண்மைய தேர்தலில் ராஜபக்சே, ஜனநாயக ரீதியில் மண் கவ்வ வைக்க, பின்புலத்தில் மேற்கின் கடும் உழைப்பு இருந்தது அவதானிக்கப் பட்டு உள்ளது.

ராஜபக்சேவின் வெற்றியானது, நாட்டினை மீண்டும் சீனாவின் கைக்கு கொண்டு செல்லும் நிலைமை கொண்டதாக இருந்தாலும், மைத்திரி எனும், அதிகார மையத்தினை சரியாக கையாண்டு அவரது தோல்வி உறுதிப் படுத்தப் பட்டு உள்ளது.

அடுத்து என்ன?

இந்திய நிலைப்பாடு 

இந்தியாவிலும் பார்க்க வேகமாக அமரிக்கா செயல்படுவது தெளிவாக தெரிகின்றது. சிலர் அமெரிக்க ஈடுபாடு, இந்தியாவிற்கு பிடிக்காவிடினும், சீனாவிலும் பார்க்க, அமெரிக்கா, பரவாயில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழ் நாட்டில், அமெரிக்கா, சிங்களவர்களுக்கு சார்பாக நிலை எடுத்து விட்டது என்று குரல்கள் எழுகின்றன.

எனினும் இந்திய, மத்திய அரச நிலைப்பாடானது வழைமை போல தெளிவு இல்லாமல் உள்ளது.

சிங்களவர் நிலைப் பாடு

ஜெனிவாவினை இலக்கு வைத்து, அவசரமாக வெளிநாடு அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் மீள் குடி அமர்வு, புனர்வாழ்வு அமைச்சு பதவிகள் நிரப்பப் பட்டு உள்ளன. 

அமெரிக்க உயர் அதிகாரிகள் வந்து போனார்கள். 

உள்நாட்டு விசாரணைக்கு, அமெரிக்காவின் ஆதரவு, ஜெனிவாவில், பெரும் ராஜதந்திர வெற்றி என கொண்டாடுகின்றனர். 

உள்நாட்டு விசாரணைகள் வெளி நாடுகளினால் கண்காணிக்கப் படும் என்பதனை அவர்கள் கவனித்தார்களோ என்னவோ, சில வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப் பட்டு வருகின்றன.

பிரகீத் எக்னலிகொட வழக்கு, இராணுவத்தின் எதிர்ப்பினையும் மீறி, வழக்கு வேகமாக முன்னேருவதனையும், கைதான இராணுவத்தினர் மேல் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளதை கவனிக்க கூடியதாக உள்ளது. 

இது இலங்கை வரலாறில் ஒரு போதும் நிகழாதது. சிங்கள மக்களிடையேயான JVP வன்முறை காலத்து இராணுவ அத்து மீறல்கள் கூட விசாரிக்கப் பட வில்லை என்பது கவனிக்கப் பட வேண்டும்.

விரைவில், வாசிம் தாஜுதீன், ரவிராஜ், லசாந்த, பரராஜசிங்கம் போன்றோர் வழக்குகளும், மூதூர் 17, திருமலை 5 மாணவர் கொலை வழக்குகளும் கிளறப் படலாம்.

அதாவது தமது நீதித்துறை சிறப்பாக இயங்கும் என காட்ட முயல்வார்கள்.

தமிழர் நிலைப்பாடு

புலர் பெயர் அமைப்புகள், உள்நாட்டு விசாரணை ஆதரவு எனும் அமெரிக்க நிலைப்பாட்டுக்கு எதிரப்பு தெரிவிகின்றன.

தமிழர் கூட்டமைப்பின் சுமந்திரனோ, உள்நாட்டு விசாரணை ஆயின் வெளி நாட்டு கண்காணிப்பு தேவை என்கிறார்.

தமிழ் மக்கள் என்ன சொல்கிறார்கள்.

மக்களில் பலர் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

உள்நாட்டு விசாரணையோ, வெளிநாட்டு விசாரணையோ இது கிலுகிலுப்பை, நமக்கு பணியாரம் தான் தேவை என்பது பலரது நிலைப்பாடு.

நடந்து முடிந்த கொடுமைக்கு தண்டனை கொடுப்பது வேறு, தமது சிதைந்து போன  வாழ்வினை கட்டி எழுப்புவது வேறு என லண்டன் வந்துள்ள யாழ் பிரபல கோவில் குருக்கள் ஐயா குறிப்பிட்டார். தமிழருக்கு இரண்டாவதே முக்கியமானது இப்போது என்கிறார் அவர்.

முக்கியமாக பலரும் குறிப்பிடுவது, அமெரிக்காவின் ஈடுபாடானது, இந்தியாவினது நம்பகத் தன்மை இல்லா ஈடுபாட்டிலும் பார்க்க நல்லது என்பதனை. அதாவது, தமிழர்களது உரிமையினை அமரிக்காவின் அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய பலம் மூலமாக உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்பதனை.

முன்னரே ஒரு கட்டுரையில், மகிந்தவின் இரும்புப் பிடியில் நாடு இருந்த போது  குறிப்பிட்டிருந்தேன்: ஹாங்காங் கினை சீனாவிடம் இழந்த மேற்குலகு, ஆசியாவில் ஒரு நம்பிகையான பொருளாதார தளம் தேடுகின்றது. 

தைவான் சீனாவின் கையில். சிங்கப்பூர் சீனர்களைப் பெரும் பான்மையாகக் கொண்டது. மலேசியா, இந்தோனேசியா அவர்களது மத நிலைபாடுகளால் மேற்குலக நம்பிக்கைக்கு உகந்தது அல்ல. தாய்லாந்து அரசியல் உறுதிப் பாடு இல்லாத நாடு. 

இந்த தளம் இலங்கை, குறிப்பாக வடக்கு கிழக்கு. காரணம் அந்த பிரதேசங்களின், புலம் பெயர்ந்த மக்கள் பொருளாதார பலம் கொண்ட மேற்குலக பிரசைகள். 

இன்னும் தெளிவாக சொல்லப் போனால், தமது பிரசைகளை, மீள் குடியேற வைத்து அவர்களை நம்புவதும், அவர்களை தம்மை நம்ம வைக்குமாறு நடந்து கொள்வதும் அவர்களது நீண்ட கால நலன்களுக்கு சிறப்பானது.

இது மத்திய கிழக்கில் இஸ்ரேலின் மீதான மேற்குலக நம்பிக்கை போன்றதாக அமையப் போகின்றது. ஏனெனில் இஸ்ரேலின் பெரும்பாலானோர் மேற்குலக பிரசைகள். இதுவே இஸ்ரேல், மேற்குலக தொப்புள் கொடி தொடர்பு. 

எனவே, இந்தியாவின் நம்பிக்கை வைக்க முடியாத மதியஸ்தத்திலும் பார்க்க அமெரிக்காவின் மதியஸ்தத்தில் நம்பிக்கை கொண்டோராக இயங்கி எமது உரிமைகளை வென்றெடுப்பதே உசிலமானதாக படுகின்றது. 

சீன அல்லது இந்திய நிகழ்ச்சி நிரலிலும் பார்க்க, மேற்குலக நிகழ்ச்சி நிரலுடன் எம்மை ஒருங்கிணைப்பதே சிறப்பானது என்பதே எனது கருத்து. 

போர்க் குற்ற விசாரணை? 

உள்நாடோ, வெளிநாடோ, அதை, அந்த கிளுகிளுபையை ஆர்வமாக ஓரத்தில் இருந்து கவனிப்போம்.  

ஆனால் எமக்கு பணியாரம் தான் முக்கியம் என்பதை நினைவில் கொள்வோம்.

யாழுக்காக நாதமுனி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.