Jump to content

தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா? நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதா? நிலாந்தன்:-

30 ஆகஸ்ட் 2015
 
தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்துகொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒரு நாள்  ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர் ‘ஒரு நாடு இருதேசம்’. அதில் இச்சிறு தீவில் உள்ள எல்லா அரசியல் போக்குளையும் பிரதிபலிக்கும் விதத்தில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அரசியல் கட்சி பிரமுகர்களை ஒரு நாடு இரு தேசம் என்றகருத்துத் தொடர்பாக பேச வைப்பதாக அந்த நாடகம் உருவாக்கப்பட்டிருந்தது. நாடகம் முடிந்தபின் வளவாளர்கள் அந்நாடகம் தொடர்பாக  அபிப்பிராயங்களைத் தெரிவித்ததோடு அதைப்பற்றி கலந்துரையாடவும்பட்டது.  இதன் போது ஒரு வளவாளர் அந்நாடகத்தில் வரும்  பாத்திரங்களில் பொது பலசேனாவைத் தவிர ஏனைய எல்லா அரசியல் தலைவர்களும் வேடிக்கை மனிதர்களாகச் சித்திரிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.  ஆனால்  பொதுபலசேன மட்டும் சீரியசான விட்டுக்கொடுப்பற்ற மூர்க்கமான ஒரு தரப்பாக சித்திரிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.


இலங்கையில் இப்போதுள்ள கட்சித் தலைவர்களை ஹரிக்கேச்சர்களாக- கேலிச் சித்திரங்களாக உருவகித்த நெறியாளர் ஏன் பொதுபல சேனவை அவ்வாறு  கேலிச்சித்திரமாக உருவாக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆதற்கு நாடகக் குழுவினர் பதிலளித்த போது தாங்கள் வேண்டும் மென்றே அவ்வாறு பாத்திரங்களை உருவாக்கியதாக  கூறினார்கள். பொதுபல சேனா போன்ற  சிங்கள பௌத்த கடும் போக்குவாதிகள்  தமது கொள்கைகளில் விட்டுக் கொடுப்பின்றி  உறுதியாகக் காணப்படும் பொழுது ஏனைய அரசியல் கட்சிகள்தமது செயற்பாடுகளைப் பொறுத்தவரை கோமாளிகளாகவே மாறிவிட்டதாகவும் அவர்களுடைய செயற்பாடுகளில் பெருமளவிற்கு கோமாளித்தனமும் அபத்தமும்  காணப்படுவதாகவும் அவர்கள் கூறினார்கள்.


இந்த உரையாடலின் முடிவில்  சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கருத்துத் தெரிவித்தார். பொதுபல சேனாவை முஸ்லிம்களும் தமிழர்களும் அதிகம் சீரியசாகப் பார்ப்பது போல சிங்கள மக்கள் பார்க்கவில்லை என்று அவர் சொன்னார். சிங்கள மக்கள் ஞானசார தேரரை  ஒரு வேடிக்கை மனிதராகவே  பார்ப்பதால்தான் தேர்தலில் அவரையும் அவரோடு சேர்ந்து நின்ற பிக்குகளையும் தோற்கடித்திருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னர்.


நடந்து முடிந்த தேர்தலில் பொதுபலசேனாவிற்கு கிடைத்த தோல்வியை சிங்கள பௌத்த கடும் போக்குவாதத்திற்குக் கிடைத்த தோல்வியாக மேற்கு நாடுகள் பார்க்கின்றன. சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதி விமர்சகர்களும் அவ்வாறுதான் கூறுகிறார்கள்.  யுத்த வெற்றி நாயகரான சரத்பொன்சேகாவையும் இம்முறை சிங்கள வாக்காளர்கள் தோற்கடித்துவிட்டார்கள். இலங்கைத் தீவின் முதலாவது பீல்ட் மார்சல் அவரது சொந்த மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டுவிட்டார்.

  இரண்டாம் உலக மஹா யுத்தத்தின் போது வின்சன்ட் சேர்ச்சிலை ஒரு தலைவராக ஏற்றுக் கொண்ட பிரித்தானியர்கள் யுத்தம் முடிந்ததும் அவரை நிராகரித்ததைப் போலவா இது?. இப்படியாக  தெற்கில் பொதுபல சேனா சரத்பொன்சேகா போன்றவர்கள் பெற்ற தோல்விகளை வைத்தும் வடக்கு கிழக்கில் மக்கள் முன்னணி பெற்ற தோல்வியை வைத்தும்  இலங்கைத் தீவில் தீவிர போக்குடைய சக்திகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக  மேற்கு நாடுகள் வியாக்கியானம் செய்கின்றன.


அண்மையில் இச்சிறிய தீவுக்கு வந்த போன நிஸா பிஸ்வால் அவ்வாறுதான் கருத்துத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள மிதப்போக்குடைய  விமர்சகரான  ஜெயதேவ உயாங்கொடவும்  அவ்வாறுதான் எழுதியுள்ளார்.   அதாவது நடந்து முடிந்த தேர்தலில் முழு இலங்கைத் தீவும் தீவீர நிலைப்பாடுள்ள கட்சிகளை நிராகரித்து விட்டதாகவும் மிதநிலைப்பாடுள்ள கட்சிகளையே தெரிந் தெடுத்திருப்பதாகவும் இதன் மூலம் இன நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கான வாப்புக்கள் அதிகரித்திருப்பதாகவும் இப்பொழுது வியாக்கியானம் செய்யப்படுகின்றது. இது சரியா? மெய்யாகவே இச் சிறுதீவானது நல்லிணக்கத்தின் பாதையில் அடி எடுத்து வைத்துள்ளதா?


முதலில் தெற்கைப் பார்க்கலாம். அங்கு  இனவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதா?  ஆல்லது இனவாத்தின் ஆகப்பிந்திய  வடிவமாகக் காணப்பட்ட யுத்த வெற்றிவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதா?


தேர்தல் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி ராஜபக்ஸ அணியை மிகப் பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கவில்லை என்பது தெரியவரும். சிங்கள கடும் போக்குவாதிகளின் இதயத்தில் இப்பொழுதும் ராஜபக்ஸக்களே வீற்றிருக்கிறார்கள்.

பொதுபலசேனவானது  யுத்த வெற்றிவாதத்தின் ஒரு குழந்தைதான். சிங்களபௌத்த கடும் போக்குவாதத்தை முழுக்க முழுக்க தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ராஜபக்ஸ சசோதரர்கள் முயற்சித்தார்கள்.  ஆனால் தனக்கென்று ஒரு தத்துவ அடித்தளத்தைக் கொண்டிருந்த, ஒப்பீட்டளவில் சுயாதீனமான ஜாதிக ஹெல உறுமயவை ராஜபக்ஸக்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அரசின் அனுசரணை பெற்ற பொதுபலசேனவை ஹெல உறுமயவுக்கு எதிராக ஊக்குவித்தார்கள்.  இந்நிலையில் வெற்றிவாதத்துக்கு வாக்களிக்க விரும்பிய சிங்கள வாக்காளர்கள் தாய்க்கு வாக்களித்தால் போதும் குழந்தைக்கு வாக்களிக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கக் கூடும்.  மேலும்  சரத்பொன்சேகாவா? ராஜபக்ஸ சசோதரர்களா? என்று தெரிவு செய்ய வேண்டிவரும்பொழுது  மேற்கின் ஆதரவைப் பெற்ற  பொது எதிரணியோடு அடையாளம் காணப்பட்ட சரத்பொன்சேகாவைவிடவும் ராஜபக்ஸக்களைத் தெரிவு செய்வதையே அவர்கள் விரும்பியிருந்திருக்கக்  கூடும்.


அதே சமயம் தனக்கென்று ஒரு கோட்பாட்டு அடித்தளத்தைக் கொண்டிருக்கும் ஜாதிகஹெல உறுமயவானது பொதுபல சேனவைப் போல  முற்றாக மண் கவ்வவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.   ஜே.வி.பி.யும்  எதிர்பார்த்த வெற்றியை  பெறத் தவறினும் முற்றாகத் தோற்கடிக்கப்படவில்லை. எனவே தென்னிலங்கை நிலவரங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால்    விக்ரர் ஐவன்   கூறுவது போல அங்கு அரைவாசிக்கும் குறையாத வாக்காளர்கள்  இனவாதத்துக்கே வாக்களித்திருக்கிறார்கள்.  அதாவது இனவாதம் இப்பொழுதும் பலமாகத்தான் இருக்கிறது.

  இந்நிலையில்   ரணிலும் மைத்திரியும் சந்திரிகாவும்  இனவாதத்துக்கு எதிராக  நல்லிணக்கவாதத்தை முன்வைப்பார்களா? அல்லது மனித முகத்துடன் கூடிய  2015 ஆம் ஆண்டுக்குரிய ஓரு புதிய இனவாதத்தை அல்லது மாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான  ஓரு புதிய இனவாதத்தைக் கண்டுபிடிப்பார்களா?  இது தென்னிலங்கை நிலவரம்.


இனி தமிழ்ப்பகுதிகளைப் பார்க்கலாம். மக்கள் முன்னணியின் தோல்வியை வைத்து ஒரு நாடு இரு தேசம் கோட்பாடு தோற்டிக்கப்பட்டு விட்டதாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. இது சரியா?  ஒரு கட்சியின் தோல்வி ஒரு கோட்பாட்டின் தோல்வியாகுமா?  தவிர ஒரு நாடு இரு தேசம் கோட்பாடு என்பது மக்கள் முன்னணியோடு தோன்றிய ஒரு கோட்பாடா?  மக்கள் முன்னணிக்கு முன்பு அது இருக்கவில்லையா?


தமிழ் மக்கள்  ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது கஜேந்திரகுமாருக்கு முன்னரே இருந்த ஒன்று. அது பிரபாகரனுக்கு முன்னரும் இருந்தது.  காவலூர் நவரத்தினதுக்கு முன்னரும் இருந்தது.  அது ஈழத் தமிழர்களின்  நூற்றாண்டு காலக் கனவு.  மிதவாதிகளும் ஆயுதப் போராளிகளும்  அதற்கு  அவ்வவ்போது  தலைமை தாங்கினார்கள்.  விடுதலைப் புலிகள் இயக்கம்  அக்கனவின் பிரகாரம் ஒரு நடைமுறை அரசையே கட்டி எழுப்பியது. 

கூட்டமைப்பில்  முதன்மைக் கட்சியாகக் காணப்படும்  தமிழரசுக் கட்சியின் பெயரில் அந்தக் கனவு  தொங்கிக் கொண்டிருக்கிறது.  ஆங்கிலத்தில்  கட்சிப் பெயரை  பெடரல் பாட்டி – சமஸ்டிக் கட்சி என்று மொழி பெயர்த்த அக்கட்சியானது தனது சொந்த வாக்காளர்களுக்கு  தமிழரசுக் கட்சியாகவே தோற்றம் காட்டியது.


எனவே ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு புதிய கோட்பாடு அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.   இன்னொரு விதமாகச் சொன்னால்  சிங்கள பௌத்த  இனவாதத்தின் விளைவாக  பலப்படுத்தி புதுப்பிக்கப்பட்ட ஒரு பழைய கனவு அது.

 கடந்த நூற்றாண்டில் சிங்களத் தலைவர்களால் திட்டமிட்டு ஏமாற்றப்படும் போதெல்லாம் அக்கனவு  புதுப்பிக்கப் பட்டிருக்கிறது.  ஒவ்வொரு இனக்கலவரத்தின் போதும் தமிழ் மக்கள் வடக்குக்கிழக்கை நோக்கி அகதிகளாக ஓடி வந்த போது அக்கனவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. தார்ஸி விற்றார்ச்சிஇ ஜி.எச்.பார்மர் போன்ற  அறிஞர்கள் அதை ஏற்கனவே  பல தசாப்தங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறார்கள்.


எனவே  ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது  இலங்கைத் தீவின் நவீன அரசியலைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த இனவாதத்தின் விளைவாக பலமடைந்த ஒரு தோற்றப்பாடுதான்.  தெற்கில் அரைவாசிக்கும் குறையாத வாக்காளர்கள் இனவாதத்திற்கே  வாக்களித்திருக்கும் ஒரு அரசியல் சூழல் தொடர்ந்தும் இருக்கும் வரை தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் ஒரு தேசமாகச் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.


ஆக்கொள்கையை முன்வைத்த ஒரு கட்சி பெற்ற  தோல்வி என்பது  அக் கொள்கைக்கு கிடைத்த தோல்வியா? அல்லது அக்கொள்கையின் உண்மையான வாரிசு அக்கட்சிதான் என்று தமிழ் மக்களை நம்பச் செய்வதில்  அக்கட்சி பெற்ற தோல்வியா?


இப்பொழுது கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்கும் மக்களாணையை  மாற்றத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவானது என்று வியாக்கியானம் செய்யும் தரப்புக்கள் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில்  உள்நாட்டுப் பொறிமுறைகளை  ஆதரித்து  செயற்படத் தொடங்கியுள்ளன. 

அண்மையில் கொழும்புக்கு வந்து போன  முன்னாள் பிரிட்டிஸ் பிரதமர் ரொனி பிளேயர்  தனக்குப் பின் வரப்போகும்  நிஸா பிஸ்வால்  கூறப்போகும் கருத்துக்களுக்கு ஆதரவான தளத்தை முன்கூட்டியே தயாரிக்கும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். 

நல்லிணக்கத்துக்கான  ஏழு கோட்பாடுகள் பற்றி அவர்  அண்மையில் பேசியிருக்கிறார்.  இதில் ஏழாவது கோட்பாடு உள்நாட்டு விசாணைப் பொறிமுறையின் நோக்கத்தை  ஓரளவுக்கு வெளிக்காட்டுகிறது.

ரொனி பிளேயர் கூறுகிறார்  வெற்றிகரமான நல்லிணக்கத்துக்காக இறந்தகாலத்தை அழிக்கவோ மறைக்கவோ முடியாது என்று…. ஆனால்  அவ்வாறு இறந்த காலத்தைப் பரிசோதிப்பது  என்பது உண்மையை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும்.

பழிவாங்கும் உணர்வோடு தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் ஒன்றாக அமையக் கூடாது என்ற பொருள்பட.   உலகின் வெற்றி பெற்ற எந்தவொரு போர்க்குற்ற விசாரணையிலும் சரி, அல்லது நல்லிணக்க முயற்சிகளின் போதும் சரி, ஒரு பொதுப் போக்கை அவதானிக்க முடியும். அதன்படி முதலில் விசாணைகளின் போது உண்மையை அச்சமின்றி வெளிப்படையாகப் பேசத்தக்க ஒரு சூழல் உறுதி செய்யப்படும். அவ்வாறு உண்மை வெளிவருமிடத்து அந்த உண்மையின் அடிப்படையில் வளங்கப்படும் நீதியே  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிரந்தர பரிகாரமாக அமைகிறது. 

பலராலும் முன்னுதாரணமாகக் காட்டப்படும் தென்னாபிரிக்க நல்லிணக்க முயற்சிகளில்  இவ்வாறு உண்மை பகிரங்கமாகப் பேசப்படும் ஒரு சூழல் உறுதி செய்யப்பட்டது. உண்மை பகிரங்கமாகப் பேசப்படும் ஒரு விசாரணைச் சூழல் எனப்படுவது எல்லா விதத்திலும் ஓர் அரசியல் சூழல்தான்.  இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் கணக்கெடுப்பது  இறந்தவர்களை நினைவு கூர்வது போன்றவை அனைத்தும் அவ்வாறான  ஓர் அரசியல் சூழலில்தான் சாத்தியப்படும். அப்படி ஓர் அரசியல் சூழலை ஏற்படுத்துவது என்பது முழுக்க முழுக்க  ஓர் அரசியல் தீர்மானம்தான். புதிய அரசாங்கத்திடம் அப்படி ஓர் அரசியல் தீர்மானத்தை எடுக்கக் தேவையான அரசியல் திடசித்தம் உண்டா? அப்படி ஓர் அரசியல்  சூழல் உருவாக்கப்படுமிடத்து வெளிவரும் உண்மையின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படுமா?  அந்நீதியானது   குற்றவாளிகளைத் தண்டிப்பதாக அமைந்தால்  அது  நிச்சயமாக சிங்கள பௌத்த கடும் போக்குவாதிகளைச் சீண்டுவதிலேயே போய் முடியும்.  அது  மாற்றத்ததைப் பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடும். என்பதால் தான்  மேற்கு நாடுகளும் இலங்கை அரசாங்கமும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.


உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை  தமிழ் மக்கள் சந்தேகத்தோடேயே பார்க்கிறார்கள் என்பது மேற்கு நாடுகளுக்குத் தெரியும் என்பதனால்தான் அனைத்துலக நிபுணத்துவ உதவி என்ற புனித நீரைத் தெளித்து உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பாவ நீக்கம்  செய்ய முற்படுகிறார்கள். ஆனால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் எவ்வாறு அமையக் கூடும் என்பதற்கு ஓர் ஆகப்பிந்திய ஒரு உதாரணத்தைச் இங்கு சுட்டிக்காட்டலாம்.

காணாமல் போனவர்களுக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவானது அண்மையில் கிழக்கில்  விசாரணைகளை மேற்கொண்டது.  இது தொடர்பான காணொளிப் பதிவுகள் இணையத்தில் பகிரப்பட்டன. அப்பதிவுகளை உற்றுக் கவனிக்கும் எவரும் மிக எளிமையான ஓர்  உண்மையைப் பிரயத்தனமின்றிக் கண்டு பிடிப்பர். அதாவது  அந்த விசாரணைகளின் போது மொழிபெயர்ப்பாளராக இருப்பவர்  எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது.அவருடைய குரலில் ஒரு வித அதிகாரம் தொனிக்கிறது.  சில சமயங்களிலில் வேண்டா வெறுப்பாகவும் அல்லது சலிப்போடும்  இதை நான் கடமைக்கே செய்கிறேன் என்று  மற்றவர்கள் உணரத்தக்க விதத்திலும் மொழி பெயர்ப்பாளரின் குரல் அமைந்திருக்கிறது.

  இத்தகையதோர் விசாரணைச் சூழலானது கண்ணீரோடு வந்து நிற்கும் சாட்சிகளுக்கு உற்சாகமூட்டுமா அல்லது இடைஞ்சலாக இருக்குமா?  


இது தொடர்பாக  விசாரித்த பொழுது  மேற்படி விசாரணைகளைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து வரும் மனிதநேயச் செயற்பாட்டாளர் ஒருவர் சொன்னார்  கடந்த பல மாதங்களாக இது தொடர்பாக தாங்கள் சுட்டிக்காட்டி வருவதாகவும் இந்த விசாரணைச் சூழலை மாற்றி அமைக்குமாறு தாங்கள் முறைப்பாடு செய்துவருவதாகவும் ஆனால் இதுவரையில் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும். இதுதான் உள்நாட்டு விசாணைகளின் இப்போதுள்ள நிலமை.


இப்பொழுது மட்டுமல்ல இனிமேலும் அப்படித்தான் இருக்கக் கூடும். ஏனெனில் இலங்கைத்தீவில் உண்மை வெளிப்படையாக பேசப்படும் ஒரு விசாரணைச் சூழல் உறுதி செய்யப்பட்டால் அதில் வெளிவரும் உண்மையானது இனவாதிகளுக்கு  எதிராகவே இருக்கும்.  அந்த உண்மையின் மீது கட்டி எழுப்பப்டும் நீதியானது போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பதாகவே அமைய முடியும்.  அது  மாற்றத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலையே குழப்பிவிடும். அதாவது இலங்கைத் தீவின் போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்கும் ஒரு பொறிமுறையும் மாற்றத்தைப் பலப்படுத்தும் ஒரு பொறிமுறையும் சமாந்திரமாகப் பயணிக்க முடியாத ஓர் அரசியல் சூழலே தற்பொழுதும் நிலவுகிறது.

இனவாதிகளைப் பலப்படுத்தக் கூடாது என்று சொல்லிச் சொல்லியே  தமிழ் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய நீதியும் மறுக்கப்படும். அப்பொழுது தமிழ் மக்கள் ஒரு தேசமாகச் சிந்திப்பார்களா?அல்லது வேறெப்படியும் சிந்திப்பார்களா?

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123427/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.