Jump to content

உறை பனி உலகில்


Recommended Posts

ஆண்டு 1912. சனவரி 17. பிற்பகல் 3.00 மணி. உலகின் தென் துருவம். அண்டார்டிகா. எங்கு பார்த்தாலும் பனி, பனி, பனி. மிகப் பெரும் பனிப் பாலைவனம்.

ராபர்ட் பால்கன் ஸ்காட். ஒரு ஆங்கிலேய கடற்படை அதிகாரி. தென் துருவத்தில் காலடி பதிக்கும் முதல் மனிதன் என்ற பெருமையினைப் பெற்றிட வேண்டும் என்பதற்காக, மேற்கொண்ட அயரா முயற்சியின் பயனாய், இதோ, தென் துருவத்தில் நிற்கிறார்.

 

 

amundsen_1911_south_pole.jpg

ரால்ட் ஆமுண்ட்சன்

 

ஆனாலும் அவருக்கு முன்பே, நார்வே நாட்டின் தேசியக் கொடி அங்கு பறந்து கொண்டிருக்கிறது. ரால்ட் ஆமுண்டசன் என்பவர் ஏற்றிய கொடி, பனிக் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கிறது.

 

Robert%2BFalcon%2Bscott%2Bteam.jpg

ராபர்ட் பால்கன் ஸ்காட் தன் குழுவினருடன்

 

முதல் மனிதராக இல்லாவிட்டால் என்ன? என் பயணம் வெற்றி. தன் நாட்டுக் கொடியை ஏற்றுகிறார். உடன் வந்த நால்வருடன் இணைந்து, ஐவருமாய் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

அப்பொழுது மெதுவாக, மிக மெதுவாகத்தான் காற்று வீசத் தொடங்கியது. பனிக் காற்று. நேரம் செல்லச் செல்ல, பனிக்காற்றின் வேகமும் கூடியது. பனிக் காற்று பனிப் புயலாய் உருவெடுத்து, பெரும் வேகத்தோடு, தென் துருவத்தையே புரட்டிப் போட்டது.

 ஐவரும் பனிப் புயலில் மெல்ல மெல்ல முன்னேறி நடக்கத் தொடங்கினர். இன்னும் 67 கி.மீ தொலைவு பயணித்தாக வேண்டும்.

 பனிப் புயலில் தொடர்ந்து நடக்க இயலாத நிலை. கொண்டு வந்த உணவுப் பொருளோ, வேகமாய் தீர்ந்து கொண்டே இருக்கிறது. பனிப் புயலோ இவர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது.

 ஐவரில் ஒருவரான ஓட்ஸ் என்பார், தென் துருவத்தில் இருந்து புறப்பட்ட 21வது நாளில், பிப்ரவரி 18 இல் இறந்தே போனார்.

 பனியிலேயே அவரைப் புதைத்து விட்டு நடந்தனர். பனிப் புயலோ விட்டபாடில்லை. பல மாதங்கள் ஆனாலும் விடாமல் தொடரும் புயலாய் இப்புயல் மாறிப்போனது.

ஈவன்ஸ் என்பார் ஓர் நாள் திடீரென்று மற்றவர்களை விட்டு விட்டு, பனிப் புயலினுள் தனித்து ஓடத் தொடங்கினார். தனது உடல் நிலை மோசமாகவே, மற்றவர்களுக்கு சுமையாய் மாறிவிடக் கூடாது, என்னும் எண்ணத்தில், பனிப் புயலினுள் ஓடிப் போய் தற்கொலையே செய்து கொண்டார்.

மீதமிருப்பதோ மூவர். பனிப் புயலோ ஓய்ந்த பாடில்லை. உணவோ வேகமாய் குறைந்து, குறைந்து, கடைசியில் தீர்ந்தும் போய்விட்டது.

இன்னும் 11 கி.மீ தொலைவு நடந்தால் போதும், உணவும், தங்குமிடமும் இவர்களுக்காகக் காத்திருக்கிறது. ஆனாலும் நடக்க இயலவில்லை.

பசியின் கொடுமையால், கை கால்களைக் கூட அசைக்க இயலாத நிலை. மெல்ல மெல்ல இவர்களது உடல், தன் செயற்பாடுகளை, ஒவ்வொன்றாக நிறுத்தத் தொடங்கியது.

தன் உடலில் மீதமுள்ள வலு அனைத்தையும் திரட்டி, ஸ்காட் தனது நாட் குறிப்பை பையில் இருந்து வெளியே எடுத்தார். எழுது கோலைத் திறந்து, நடுங்கும் கரங்களால், மெதுவாக மிக மெதுவாக எழுதத் தொடங்கினார்.

 

 

image-1-for-captain-scott-gallery-695556

 

We shall stick it out to the end. but we are getting weaker.

 

Of course, and the end cannot be far.

 

It seems a pity, but I do not think I can write more.

 

Last entry

 

For God’s sake Look after our people.

 

 

 

என்னால் எதுவும் எழுத முடியவில்லை.

 

நாங்கள் பட்டினியால் இறக்கிறோம் என்பது எவ்வளவு வேதனை.

 

எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள்.

 

 

 

 ஸ்காட் தனது நாட்குறிப்பில் எழுதிய நாள் மார்ச் 29, 1912. அன்றே மீதமிருந்த மூவரும் இறந்து போனார்கள்.

ஆண்டு 1987. மே மாதம் 7 ஆம் நாள். ஜம்மு காஷ்மீர் இராணுவ முகாம். கர்னல் கணேசன் அவர்கள், அன்று வந்த அலுவலகக் கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு சாதாரணத் தோற்றத்தில் ஓர் கடிதம். இராணுவத் தலைமையகத்தில் இருந்து வந்த கடிதம். பிரித்தார், படித்தார். படித்த அடுத்த நொடி பிரமித்தார்.

ஒரே ஒரு பக்கக் கடிதம். ஆனால் எவ்வளவு பெரிய செய்தி. இக்கடிதம் தன் வாழ்வினையே புரட்டிப் போடும் செய்தியினை அல்லவா, சுமந்து வந்திருக்கிறது.

இந்தியத் தென் துருவ பயணக் குழுவின் துணைத் தலைவராகவும், தென் துருவ ஆராய்ச்சித் தளமாகிய, தக்ஷின் கங்கோத்ரியின் தலைவராகவும்கர்னல் கணேசன் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

தொடரும்

 

http://karanthaijayakumar.blogspot.com/2015/08/blog-post_18.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனதினுள் பல கேள்விகள் புதைக்கப்பட்டிருக்கின்றன!

அவற்றில் ஒன்று.. மானிடப் பிறப்பின் நோக்கம் என்ன என்பது?

அரிது... அரிது மானிடராதல் அரிது.. என்பதுடன் அவ்வையார் விடை பெற்று விடுகிறார்.. எதற்காக அரிது என்று அவர் கூறவில்லை!

ஆனால் நீங்கள் எழுதிய தென் துருவத்தைத் தேடிய பயணக்கதை, மானிடப் பிறப்பின் நோக்கத்தை ஓரளவுக்கேனும் சொல்லிச் செல்கின்றது என்றே கருதுகின்றேன்!

தொடருங்கள்.. சேர்வயர்!

 

Link to comment
Share on other sites

வருகைக்கு நன்றி அண்ணா. விரைவில் அடுத்தபகுதி தொடரும் .....

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 2

கொந்தளிக்கும் கடலில்

    

 THULELAND_71446.940x1000.jpg

 

1987, நவம்பர் 25. கோவா துறைமுகம். ஸ்வீடன் நாட்டு துலேலாண்ட் என்னும் கப்பல் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.

சாதாரண பயணிகள் கப்பல் அல்ல இது. உறை பனியை உடைத்துக் கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்த கப்பல். விமானப் படையின் ஹெலிகாப்டர்கள், கப்பலின் மேல் தளத்தில் இறங்கி, அண்டார்டிகா பயணத்திற்காகக் காத்திருக்கின்றன.

Map.jpg

South%2Bpole%2B5%2Bth%2Bwinter%2Bparty.j

தமிழகத்தில் இருந்து ஐவர், கேரளத்தில் இருந்து மூவர், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், தில்லி, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் என 15 பேர் அடங்கிய கூட்டனியினர், கர்னல் கணேசன் அவர்களின் தலைமையில், கோவாவில் இருந்து, தங்கள் கடல் வழிப் பயணத்தைத் தொடங்கினர்.

ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 12,000 கிமீ தொலைவு, கடலில் பயணித்தாக வேண்டும். முழுவதுமே இடைநில்லா பயணம்தான்.

Antartica%2BRoute%2BMap.jpg

கோவாவில் இருந்து அண்டார்டிகா செல்லும் வழியில், இரண்டே இரண்டு தீவுகள் மட்டுமே உண்டு. ஒன்று மொரீசியஸ் மற்றொன்று மொரியன் தீவு.மற்றபடி கடல், கடல், கடல் மட்டும்தான்.

அண்டார்டிகா சென்றடைவதற்குள் ஒன்பது முறை கால மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. கடிகார முள்ளை நாமே திருப்பி, நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

கப்பலில் தன் அறையில் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம், கர்னல், தான் கொண்டு வந்த ஒரு பையினை, ஆசை தீர தொட்டுப் பார்ப்பார்.

தன் சொந்த ஊரான சன்னா நல்லூரில் இருந்தும், தனது வசிப்பிடமான சென்னை, அண்ணா நகரில் இருந்தும், தான் பணியாற்றிவரும் ஜம்மு காஷ்மீரில் இருந்தும் கொண்டு வந்த மண், இந்தப் பையில் அல்லவா இருக்கிறது.

தாய் மண்ணைத் தொட்டுப் பார்ப்பதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி. வழி நெடுக தனக்கு ஊக்கமும், தளரா தன்னம்பிக்கையினையும் அல்லவா, வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது இந்த தாய் மண்.

டிசம்பர் 10 ஆம் நாள். பயணத்தின் 15 ஆம் நாள் கப்பல் மெதுவாக, முதலில் மெதுவாகத்தான் ஆடத் தொடங்கியது. காரணம் கடல் கொந்தளிப்பு. நேரம் செல்லச் செல்ல, கடல் கோபத்தின் உச்சிக்கே சென்று கொந்தளிக்கத் தொடங்கியது.

கப்பலில் இருந்த பொருட்கள் எல்லாம், மேலும் கீழுமாக பறக்கத் தொடங்கின. சரியான பிடிப்பு இல்லாத கட்டில்கள், மேசைகள், நாற்காலிகள் அனைத்தும் தலை கீழாய் புரண்டன்.

ஆய்வுக் குழுவினர் பலரும், வாந்தி எடுத்து, நிற்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், ஒவ்வொருவராய் மயங்கி விழத் தொடங்கினர்.

 

 தொடரும்.....................

 http://karanthaijayakumar.blogspot.com/2015/08/2.html

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 3

அண்டார்டிகா

antar1.jpg

உலக உருண்டையை உற்று நோக்கினால், தெற்கே 40 டிகிரிக்கும் 60 டிகிரிக்கும் இடைப்பட்ட தூரத்தில், கடலானது, பூமிப் பரப்பை அணுகாமல், பூமியில் சுற்றுப் பாதையில் சுழன்று வருவதைக் காணலாம்.

அட்லாண்டிக் மகா சமுத்திரமும், தெற்கு மகா சமுத்திரமும் ஒன்றோடு ஒன்றாய் இணையும் இப்பகுதி, உலகிலேயே மிகவும் ஆபத்தான கடற் பகுதி ஆகும்.

தென் துருவம் முழுவதுமே கடலால் சூழ்ந்த பகுதி அல்ல, அங்கேயும் பூமி இருக்கிறது, அங்கு நாம் காலூன்றி நிற்கலாம், நடக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்த விஞ்ஞானிகள், கி.பி ஆறாம் நூற்றாண்டு முதலே, தென் துருவத்தை அடையும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

ஆனாலும் அனைவரின் முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது.

கி.பி 1578ஆம் ஆண்டில் பயணம் மேற்கொண்ட பிரான்சிஸ் ட்ரேக்  (Francis Drake) என்ற விஞ்ஞானி, இப்பகுதியைக் கடக்கும் போது, பலத்த சூறாவளியால் தூக்கி எறியப்பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்தார்.

உயிர்பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று எண்ணி, தென் துருவத்தைக் காணாமலேயே ஊர் திரும்பிய, இந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ட்ரேக் அவர்கள்தான், உலகிற்கு, இப்பகுதி பற்றிய உண்மைகளை அறிவித்து, எச்சரித்தார்.

எனவே இப்பகுதி இன்றும்  ட்ரேக் பாதை ( Drake Passage) என்றே அழைக்கப் படுகிறது.

இப்பகுதியைக் கப்பல் கடக்கும் பொழுது, மிகப் பெரிய கடல் கொந்தளிப்பை எதிர்கொண்டே ஆக வேண்டும்.

இரண்டு மகா கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்பதால், கடல் கொந்தளிப்பானது, இடதும் வலதுமாய், முன்னும் பின்னுமாய் கப்பலை அலைக் கழிக்கும்.

பொதுவாக கப்பல், இப்பகுதியைக் கடப்பதற்கு நான்கு நாட்களாகும். நான்கு நாட்களுமே, ஒரு நொடி கூட, அமைதியாய் இராத கடலில்தான் பயணித்தாக வேண்டும். தூங்க முடியாது, உட்கார முடியாது, நிற்கக் கூட முடியாது. வேறு வழியில்லை, சமாளித்துத்தான் ஆக வேண்டும்.

அடுத்தடுத்த நாட்களில் நிலைமை சீரடையவே, ஆய்வுக் குழுவினர், ஒவ்வொருவராய் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

இயற்கையின் எண்ணற்ற வினோதங்களில் கடலும் ஒன்று. நேரில் பார்ப்பதால் மட்டுமே கடலைப் புரிந்து கொள்ள முடியாது. நீரும் அலைகளும் மட்டுமே கடல் அல்ல என்பதை ஆய்வுக் குழுவினர் அனைவரும் உணர்ந்தனர்.

டிசம்பர் 13 ஆம் நாள், கப்பல் குளிர் பிரதேசத்தை மெதுவாய் நெருங்கியது. குளிர் மெல்ல மெல்ல, உடலின் நாடி நரம்புகளில் எல்லாம் நுழையத் தொடங்கியது.

பனிப் பாறைகள் ஒன்றிரண்டு கடலில் மிதக்கும் காட்சியைக் கண்டார்கள்.

ice-web_1.jpg

அண்டார்டிகாவில் இருந்து உடைந்து, பிரிந்து கடலில் மிதந்த, ஒரு பெரும் பனிப் பாறை, பதிவேடுகளில் பதிவாகி உள்ளது.

அப் பனிப் பாறையின் அளவு என்ன தெரியுமா? 110 கிமீ நீளம், 75 கிமீ அகலம். நாம் வசிக்கும் ஊரினை விட பெரிய பாறை, ஒரே பாறையாய் கடலில் மிதந்தால் எப்படி இருக்கும்.

இரண்டாம் நாள் நீலக் கடல், வெண் பனிப் பரப்பாக மாறும் அற்புதக் காட்சியைக் கண்டார்கள்.

Lemaire_Channel.jpg

இப்படமானது, கப்பல் பனிக்கட்டிகளை உடைத்துக் கொணடு  சென்ற வழியே மீண்டும் திரும்பிவரும்  காட்சியாகும்.ஆனால் குளிர்காலங்களில் இவ்வாறு வருவது இயலாது என கர்னல் அவர்கள் தெரிவித்தார். ஆதிக குளிரால் கப்பலின் நாற்புறமும் பனிக் கட்டிகள் சூழ்ந்து கப்பலை முன்னேற விடாமல் தடுத்து விடும்.கோடைக் காலம் வரும் வரையில், கப்பலிலே இருக்க வேண்டியதுதான்

cruise-antarctica_1403764c.jpg

9577861.jpg

Explorer-6.jpg

aag30-8.jpg

கப்பலானது வெண் பனியைப் பிளந்து கொண்டு மெதுவாய், மிக மெதுவாய் முன்னேறத் தொடங்கியது.

கப்பலின் தலைவர், ஹெலிகாப்டரில் பறந்து, உறை பனி குறைவாக உள்ள இடங்களைக் கண்டு, அவ்வழியே கப்பலைச் செலுத்தத் தொடங்கினார்.

 டிசம்பர் 20. இரவு 8.30 மணி. கப்பலின் தலைவர் அறிவித்தார்.

தக்ஷின் கங்கோத்ரியை அடைந்து விட்டோம்.

ஆய்வுக் குழுவினர் மகிழ்ச்சியோடு, கப்பலின் மேல் தளத்திற்கு ஓடினார்கள்.

சூரிய ஒளியில் கடற்கரை பிரகாசித்துக் கொண்டிருந்தது.

மணியோ இரவு 8.30.

உச்சி வெயிலோ மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது,

                                                            

தொடரும்

http://karanthaijayakumar.blogspot.com/2015/08/3.html

mb_wide_ice-20131225193647184399-620x349

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உறை பனி உலகில் 4

வெயிலில் வாடும் இரவு

    walking-up-to-the-ridge-with-sun-shining

 

 

நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. தவறு தவறு என்று நீங்கள் உரத்துக் கூறுவது என் செவிகளில் விழுகிறது.

என்ன இரவு 8.30 மணிக்கு, சூரிய ஒளியில் கடற்கரை பிரகாசித்துக் கொண்டிருந்ததா? யாரிடம் கதை விடுகிறீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் இதுதான் உண்மை, உண்மை, உண்மை.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்பதும், பூமி 90 டிகிரி செங்குத்தான் அச்சில் இருந்து இருபத்து ஒன்றரை டிகிரி சாய்வாக இருப்பதும் நாம் அறிந்த்தே.

இதன் காரணமாகவே இரவும், பகலும் மாறி, மாறி வருகிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே.

ஆனால் இந்தக் கதையெல்லாம், பூமியின் வட துருவத்திலும், தென் துருவத்திலும் செல்லுபடி ஆகாது.

இங்கே பகல் ஆறு மாதம். இரவு ஆறு மாதம்.

 SunRun_.jpg

 

                              The trajectory of the sun above Concordia over a 24 hour period

 

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல், மார்ச் 21 ஆம் தேதி வரை சூரியன் தென் துருவத்தில் மறைவதே இல்லை.

டிசம்பர் 21 ஆம் தேதியில் இருந்து, மார்ச் 21 ஆம் தேதிவரை, சூரிய வெளிச்சம் மெல்ல, மெல்லக் குறையும்.

மார்ச் 21 முதல் ஜுன் 21 வரை சூரியன் தலைமறைவாகி, இருளையே பரிசாய் வழங்கும்.

ஜுன் 21 முதல் வெளிச்சம் மெல்ல, மெல்ல தலை தூக்கி, செப்டம்பர் 21 முதல் மீண்டும் பகல் தொடங்கும்.

இதுதான் அண்டார்டிகா.

அதோ, தொலைவில் தெரிகிறதல்லவா.

Dakshin%2BGangotri%2B1.jpg

 

 அதுதான்,

  தக்ஷின் கங்கோத்ரி.

  தொடரும்

http://karanthaijayakumar.blogspot.com/2015/08/4.html

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 5

தக்ஷின் கங்கோத்ரி

கர்னலும் மற்றவர்களும், கப்பலில் இருந்து இறக்கப் பட்ட வண்டிகளில், தக்ஷின் கங்கோத்ரி நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

வாருங்கள், அவர்களுக்கு முன்னே சென்று, தக்ஷின் கங்கோத்ரியை ஒரு முறை நன்றாக பார்த்து விடுவோம்.

Dakshin%2BGangotri%2B1%2B%25281%2529.jpg

நம் இந்திய அரசால், 1982 ஆம் ஆண்டிலேயே, பணிகள் தொடங்கப் பெற்ற போதிலும், 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதிதான், தக்ஷின் கங்கோத்ரி ஆய்வுத் தளம் முறையாகச் செயல் படத் தொடங்கியது.

ஆய்வுத் தளம் இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று பிளாக் . மற்றொன்று பிளாக் பி.

முதலில் தங்குமிடம். ஒன்றிரண்டு அதிகாரிகள் தங்குவதற்கான தனித் தனி அறைகள். அதனைத் தொடர்ந்து, ரயில்வேயின் முதல் வகுப்பு பெட்டி போன்ற, இருவர் இருவராகத் தங்குவதற்கான அறைகள்.

ஒரு ரேடியோ அறை. ரேடியோ மூலமாகவும், தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் மூலமாகவும், வெளி உலகைத் தொடர்பு கொள்வதற்கான தனி அறை. தகவல் தொடர்பு சார்ந்த அத்தியாவசிய உதிரிப் பாகங்களுக்காக, தனியே ஒரு கிடங்கு.

ஒரு சிறிய மருத்துவ மனை.

விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ள ஒரு விசாலமான ஆய்வகம்.

ஒரு அற்புதமான நூலகம்.

அருமையான சமையலறை. சாப்பிடுவதற்குத் தனியே ஒரு பெரிய அறை.

உறை பனியைத் தொட்டிக்குள் தள்ளவும், பின் அத்தொட்டியில் உள்ள பனிக் கட்டிகளை உருக வைத்து, தண்ணீராக மாற்றி, அத் தண்ணீரை மேல் நிலைத் தொட்டியில் நிரப்புவதற்கான வசதி.

இவை அனைத்தும் சேர்ந்தது பிளாக் .

தொழில் நுட்பப் பணிகளுக்காக ஒரு பெரிய தொழிற் கூடம். நான்கு ஜெனரேட்டர்கள். ஒரு ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, இரண்டாவது ஜெனரேட்டர், ஓடுவதற்கான தயார் நிலையில் இருக்கும். முதல் ஜெனரேட்டர் நின்று விட்டால், இரண்டாவது ஜெனரேட்டர், தானே, சுயமாய் உடனடியாக இயங்கத் தொடங்கும்.

மூன்றாவது ஜெனரேட்டர் ஏற்கனவே ஓடியது. பராமரிப்புப் பணிகளுக்காகக் காத்திருக்கும். எதற்கும் இருக்கட்டுமே என, உபரியாய் நான்காவது ஜெனரேட்டர். ஒரு வாரத்திற்குத் தேவையான எரி பொருள்.

என்ன? ஒரு வாரத்திற்குத் தேவையான எரிபொருள் மட்டும்தானா? என்ற கேள்வி எழுகிறதல்லவா? நியாயமான கேள்விதான். ஒன்றரை ஆண்டுகளுக்குத் தேவையான சுமார் ஆறு இலட்சம் லிட்டர் எரிபொருளும், ஐந்து வருடங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும், பீப்பாய் பீப்பாயாக, பெட்டி பெட்டியாக, ஆய்வுத் தளத்திற்கு வெளியே, உறை பனியில் உறங்கிக் கொண்டிருக்கும்.

ஒரு வாரத்திற்கு ஒரு முறை, எரிபொருளையும், உணவுப் பொருட்களையும், வெளியே இருந்து எடுத்து, ஆய்வகத்திற்கு உள்ளே கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

ஆய்வுத் தளத்தில் இருந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவது என்பது, எப்பொழுதுமே ஒரு சவாலான வேலைதான்.

பெரும்பாலும் கதவைத் திறக்க இயலாதவாறு பனி நிறைந்தே இருக்கும். ஹாட்ச்  (Hatch) என்று சொல்லக் கூடிய, தரை மட்டத்தில் இருந்து, உயரே இருக்கும் கதவினைத் திறந்து கொண்டுதான், பெரும்பாலும் வெளியே வர இயலும்.

சில சமயங்களில், அக் கதவினையும் பனி மூடி விடுமானால், இருக்கவே இருக்கிறது புகைப் போக்கி.

என்ன புகைப் போக்கி வழியாக, வெளியே வருவதா? வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனாலும் வேறு வழியில்லை.

ஆய்வுத் தளத்தின் கூரை மீது, புகை போக்கி போன்று, நீண்டு உயர்ந்த, ஒரு கட்டுமானம் உண்டு. அதன் உட்புறமும், வெளிப் புறமும் ஏணி பொறுத்தப் பட்டிருக்கும்.

பனி அதிகமாகி, எந்தக் கதவினையும் திறக்க இயலாவிட்டால், புகை போக்கியின் ஏணி வழியே, மேலே ஏறி, வெளிப் புற ஏணி வழியே இறங்கியாக வேண்டும்.

பின்ன்ர் வெளிப்புறம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், புல்டோசரை இயங்கி, பனியினை அற்புறப்படுத்தியாக வேண்டும்.

ஒவ்வொரு நாளுமே போராட்டம் நிறைந்த வாழ்க்கைதான் அண்டார்டிகா வாழ்க்கை.

Gangothri.jpg

Gangothri1.jpg

img034.jpg

கர்னல் கணேசன் குழுவினர் தக்ஷின் கங்கோத்ரியில் காலடி எடுத்து வைத்தபோது, அவர்கள் கண்ட காட்சி, திகைப்பைத்தான் வாரி வழங்கி வரவேற்றது.

சற்றேறக்குறைய முழு தக்ஷின் கங்கோத்ரியும், பனியில் மூழ்கி மூச்சு விட திணறிக் கொண்டுதான் கிடந்தது.

வெளியே ஒரு சிறிய மூங்கிலில் இந்திய தேசியக் கொடி.

கொடிக்கு அருகே மூவர் நின்றிருந்தனர். சற்று தள்ளி மூவர், அங்கொருவரும், இங்கொருவருமாய் நின்றிருந்தனர். அனைவருமே முகத்தை மறைக்கும் தாடிகளுடனும், சோகம் நிறைந்த முகங்களுடனுமே காணப்பட்டனர்.

இவர்கள்தான் ஏற்கனவே, கர்னலுக்கு முன்பாக, தங்கியிருக்கும், நான்காவது குளிர் காலக் குழுவினர்.

நூற்றுக் கணக்கான பீப்பாய்கள், பெட்ரோலுடன், ஓர் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடந்தன.

ஒருவர் மட்டும் முன் வந்து, கர்னலின் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.

பல்வேறு ஆசைகளையும், கனவுகளையும் நெஞ்சில் சுமந்து வந்த கர்னல் அவ்ரகளுக்கும், அவர்தம் குழுவினருக்கும் கிடைத்த வரவேற்பு இதுதான்.

பாவம், அவர்கள்தான் என்ன செய்வார்கள். அவர்கள் அனுபவித்த வாழ்க்கை அப்படி.

கர்னல் கணேசன், தக்ஷின் கங்கோத்ரியில் தன் முதல் வேலையாக, தான் உடன் கொண்டு வந்த பையினைப் பிரித்தார். உள்ளே சன்னா நல்லூர் மண்ணும், சென்னை அண்ணா நகர் மண்ணும், ஜம்மு காஷ்மீர் மண்ணும் மெதுவாய் எட்டிப் பார்த்தன. மண்ணை மெதுவாய் விரல்களால் எடுத்து, விதைபோல், அண்டார்டிகா பனியில் தூவினார்.

இங்கும் என் தாய் மண்.

இங்கும் என் தாய் மண்.

இனி இதுவும் என் தாய் மண்.

கர்னல் கணேசன் குழுவினர், தங்களது தினசரி செயல்பாடுகள், மேற்கொள்ளப் பட வேண்டிய ஆய்வுகள் குறித்து, நான்காவது குளிர்காலக் குழுவினரிடம் பயிற்சி பெற்றனர்.

கர்னலும் அவர்தம் குழுவினரும், தக்ஷின் கங்கோத்ரிக்கு வந்துவிட்ட போதிலும், அவர்களோடு பயணித்த, பாதிக்கும் மேற்பட்ட பொருட்கள் கப்பலிலேயே இருந்தன.

காரணம் பனிப் புயல். உறை பனிக் காற்று வேகமாய் வீசூம் பொழுது, கப்பலை கரையை ஒட்டி நிறுத்துவது என்பது ஆபத்தான செயலாகும். அவ்வாறு நிறுத்தினால், கப்பலானது, காற்றின் வேகத்தால் தள்ளப்பட்டு, உறை பனியில் மோதி உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே கிரேன் உதவியுடன் இறக்கப்பட வேண்டிய பொருட்கள் எல்லாம், இறக்கப் படாமல் கப்பலிலேயே இருந்தன.

1988, சனவரி 13. காற்றின் வேகம் குறைந்துள்ளதால், கப்பலானது, கரையை ஒட்டி நிற்பதாக தகவல் வந்தது.

கர்னல் கணேசன் அவர்களும், அவர்தம் குழுவினர் ஐவரும், இரு வண்டிகளில், கப்பலை நோக்கிப் புறப்பட்டனர்.

கர்னல் அவர்கள் முதல் வண்டியைத் தானே ஓட்டிச் செல்ல, இரண்டாவது வண்டி சற்று தொலைவில் பின் தொடர்ந்தது.

சிறிது நேரம்தான் பயணித்திருப்பார்கள். திடீரென்று ஒரு பலத்த சத்தம்.

வண்டியை கிறீச்சிட்டு நிறுத்திய கர்னல், பின் புறம் பார்த்தார்.

இரண்டாவது வண்டியைக் காண வில்லை.

தொடரும்.

http://karanthaijayakumar.blogspot.com/2015/08/5.html

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 6

 

பனிப் பிளவு

crevasse-on-larsen-ice-shelf-antarctica.

கர்னல் அவர்களுக்கு சில நொடிகள் ஒன்றும் விளங்கவில்லை. பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிக்கு என்னவாயிற்று. எங்கே போனது?

சற்றுமுன் கேட்ட சத்தம் என்ன என்றும் முதலில் புரியவில்லை.

கர்னல் அவர்களும், அவருடன் பயணித்த இருவரும், வண்டியில் இருந்து கீழே இறங்கினர்.

பனிக் காற்று அவர்களின் காட்சியை மறைத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, பனிக் காற்று மெல்ல மெல்ல விலகிய பொழுது, தொலைவில், இரண்டாவது வண்டியின் ஒரு சிறு பகுதி மட்டும், பனித் தரைக்கு மேலே தெரிந்தது. மீதிப் பகுதியைக் காணவில்லை.

பதறியபடி மூவரும் ஓடினார்கள். வண்டியின் அருகில் செல்வதற்குள், காரணம் தெரிந்து விட்டது. ஓட்டத்தை உடனடியாக நிறுத்தினார்கள்.

ஓடக் கூடாது, ஓடினால் ஆபத்து என்பதும் புரிந்து விட்டது. இனி கவனமாகத்தான் காலடியினை எடுத்து வைக்க வேண்டும்.

பனிப் பிளவு.

640_sno-cat.jpg

640_sno-cat-able.jpg

கர்னல் அவர்களைப் பின் தொட்ர்ந்து சென்ற வண்டி அல்ல இது

அண்டார்டிகா பல்வேறு பனிப் பிளவுகளைக் கொண்ட ஒரு மர்ம தேசம்.

பனிப் பிளவுகளின் அகலமும், நீளமும், ஆழமும், சில அடிகளில் இருந்து சில கிலோ மீட்டர்களை வரை இருக்க வாய்ப்பு உண்டு.

பனிக் காற்றின் போது, இப் பனிப் பிளவுகள் மூடப்பட்டு விடும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் பனிப் பிளவுகள் அதிக ஆபத்தானவை.

காரணம் இவை கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். தவறி இவற்றின் மீது கால் வைத்தால், முழுதாய் உள்ளே போய்விட வேண்டியதுதான்.

அப்புறமென்ன, பனிச் சமாதிதான்.

நல்ல வேளையாக, வண்டி விழுந்த இடத்தில், பனிப் பிளவு அதிக ஆழமில்லை.

முதலில் வண்டியில் இருந்த ஆட்களை மெதுவாக மீட்டார்கள்.

அடுத்து கடற்கரையில் காத்திருந்த கப்பலுக்குத் தகவல் தெரிவித்தார்கள். சிறிது நேரத்தில், தொழில் நுட்ப உபகரணங்களையும், வல்லுநர்களையும் சுமந்தபடி, ஒரு ஹெலிகாப்டர் வந்தது. வண்டி மீட்கப் பட்டது.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கர்னல் கணேசன் குழுவினரைத் தனிமையில் விட்டு விட்டு, நான்காவது குளிர்காலக் குழுவினர், தாயகம் நோக்கிப் புறப் பட்டனர்.

1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல், கர்னல் குழுவினரின் தனிமை வாழ்க்கை, தொடங்கியது.

சூரியனும் இருளைப் பரிசாய் வழங்க, மெல்ல மெல்ல மறையத் தொடங்கினான்.

ஒவ்வொரு நாளாய் நகர்ந்து, வாரங்கள் கடந்தன. வாரங்கள் மாதங்களாகின.

இந்தியாவின் சுதந்திர நாளும் வந்தது.

Independence%2B3.jpg

Independence%2B1.jpg

Independence%2B2.jpg

 

அகஸ்ட்டு 15, ஆண்டு 1988.

நண்பர்களே, ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 50 நாடுகள், தங்களது ஆய்வுக் கூடங்களை அண்டார்டிகாவில் நிறுவியுள்ளன.

ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, தென் அமெரிக்காவின் சேன், பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள், இந்தியாவின் ஆய்வுத் தளத்துடன் ரேடியோ தொடர்பில் இருக்கும் நாடுகளாகும்.

கர்னர் கணேசன் அவர்கள் உறை பனியாய் இருந்தால் என்ன?, கடும் குளிர்தான் வாட்டினால் என்ன? சுதந்திரத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்தார்.

ஆய்வுத் தளத்தின் வெளியே, உறை பனியில் மேடை அமைத்தார். கலியான பீப்பாய்களை அழுகுற அடுக்கி, இந்தியாவின், பல ஆய்வு அமைப்புகளின் கொடிகளையும் பாங்குற பறக்க விட்டார்.

சுதந்திர தின விழா என்றால் சிறப்பு விருந்தினர்கள் இருந்தாக வேண்டுமல்லவா?

ரஷ்யா மற்றும் கிழக்கு ஜெர்மனியின் ஆய்வுக் குழுவின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொள்ள, தேசியக் கொடியை ஏற்றினார் கர்னல் கணேசன்.

சுதந்திர தின விழாவிற்குப் பின், ஒரு மாதம் நன்றாகத்தான் நகர்ந்தது,

செப்டம்பர் 19 ஆம் தேதியும், வழக்கம் போல்தான் நகர்ந்து கொண்டிருந்தது. பிற்பகல் 3.00 மணி வரை.

Scientist%2BPM%2BGulane.jpg

பிற்பகல் 3.00 மணி அளவில், விஞ்ஞானி திரு குளானே என்பவருக்குத்தான், முதன் முதலில், மெதுவாக, மிக மெதுவாக, அந்த சந்தேகம் வந்தது.

யாரோ ஒருவர் குறைவது போல் தோன்றியது. யாரிடமும் சொல்லாமல், ஆய்வுத் தளத்தின் உள்ளே, ஒரு முறைக்கு இரு முறையாய், சுற்றிச் சுற்றி வந்தார்.

வெளியிலோ, கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து, ஓய்வின்றி வீசிக் கொண்டிருக்கும் பனிப் புயல். ஆய்வுத் தளத்தின் கதவினைத் திறந்தே பல நாட்களாகி விட்டன.

உள்ளே இருப்பவர்களை, ஒவ்வொருவராக எண்ணினார்.

Scientist%2BM%2BSudhakar%2BRao.jpg

விஞ்ஞானி சுதாகர் ராவ் அவர்களைக் காணவில்லை.

தொடரும்.

 

http://karanthaijayakumar.blogspot.com/2015/09/6.html

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 7

 

பனியில் புதைந்தவர்

antarctic%2B%25281%2529.jpg

நண்பர்களே, சம தளத்தில் நாம் நடக்கும் பொழுது, கண்களை மூடிக் கொண்டே நடப்போமேயானால், நமது பயணம் நிச்சயமாக ஒரே நேர்க்கோட்டில் அமையாது. சற்றே இடது புறமோ அல்லது வலது புறமோ நகர்ந்திருப்போம்.

சாலைகளோ, அறிவிப்புப் பலகைகளோ இல்லாத, அண்டார்டிகாவில் நடக்கும் பொழுது, சிறிது வழி மாறினாலும், நம் கதி அதோ கதிதான்.

Colonel%2BGanesan%2Bwith%2Bbeard.jpg

தக்ஷின் கங்கோத்ரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாளே, கர்னல் அவர்கள், தம் குழுவினர் ஒவ்வொருவரையும், கண்களைக் கட்டிக் கொண்டு நடக்கச் சொன்னார். நடக்கச் செய்து சுமார் 100 அடி தூரத்திலேயே, அவர்கள் தங்கள், நேர் பாதையினை விட்டு, எவ்வளவு தூரம் விலகுகிறார்கள் என்பதை உணரச் செய்தார்.

ஆறு மாதங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கும் பகுதியில் அல்லவா இனி குடியிருந்தாக வேண்டும். எனவே இது ஒரு முக்கியப் பயிற்சி ஆகும்.

ஆய்வுத் தளத்திற்கு வெளியே இருக்கும் பொழுது, பனிக் காற்றில் சிக்கிக் கொண்டால், பாதை தெரியாது. அச்சமயங்களில், நாம் நேராகத்தான் நடக்கிறோம் என்று எண்ணி நடக்கத் தொடங்கினால், முற்றிலும் மாறுபட்ட திசையில் பயணித்து, ஆபத்துடன் கை குலுக்க வேண்டிய சூழல் உருவாகும்.

எனவே, பனிக் காற்றில் சிக்கிக் கொண்டால், நடக்கவே வேண்டாம். அங்கேயே உட்கார்ந்து விடுங்கள். பனிக் காற்றில், கொட்டும் பனியில் முழுவதுமான் மூழ்கிப் போகா வண்ணம், அவ்வப்போது இடம் மாறி அமர வேண்டும் என்பதே, கர்னல் அவர்கள், தன் குழுவினருக்கு அளித்த பயிற்சி ஆகும்.

download.jpg

செப்டம்பர் 15ஆம் தேதி அண்டார்டிகாவில் பனிப் புயல் ஆரம்பமானது. நாட்கள் பல கடந்தும் ஓய்வதாகத் தெரியவில்லை.Scientist%2BM%2BSudhakar%2BRao.jpg

இந்நிலையில்தான், செப்டம்பர் 19 ஆம் நாள், சுதாகர் ராவ் காணாமல் போனார்.

தகவல் அறிந்த கர்னல், அனைவரையும் ஒன்று கூட்டினார்.

என் குழு உறுப்பினர்களைக் காப்பது என் பொறுப்பு. நானே செல்கிறேன். பனிப் புயலுள் நுழைந்து தேடுகிறேன் எனக் கிளம்பினா

ர்.Lence%2BNaik%2BP.Sree%2BKumar.jpg

மற்றவர்கள் தடுக்கவே, உறுப்பினர்களிலேயே திருமணமாகாத இளைஞரான ஸ்ரீகுமார் என்பாரை உடன் அழைத்துக் கொண்டார்.

மருத்துவ முதலுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு வேளை சுதாகர் ராவ் அவர்களைத் தேடச் செல்லும் இருவருமே திரும்பி வராவிட்டால், குழுவினை வழி நடத்த, தலைமையேற்க வேண்டியவர் யார் என்பதையும் அறிவித்து விட்டுப் புறப்பட்டார்.

கதவுகளைத் திறப்பது என்பது இயலாது. காரணம் ஆய்வுத் தளமே பனிக்குள் புதைந்திருந்தது. புகைப் போக்கியைத் தவிர வேறு வழியில்லை.

இருவரும் ஏணியில் ஏறி, வெளிப்புற ஏணி வழியே இறங்கினார்கள்.

ஒரு மிகப் பெரிய நைலான் கயிற்றில் தன்னையும், சிறிது இடைவெளி விட்டு ஸ்ரீகுமாரையும் பிணைத்துக் கொண்டார். கயிற்றின் மறு முனையை வெளிப் புற ஏணியில் கட்டினார்

.snow%2Bstorm.jpg

தன்னிடம் இருந்த கயிற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர விட்டுக் கொண்டே, ஒவ்வொரு இடமாக, பனியில் தடவிக் கொண்டே இருவரும் நகர்ந்தார்கள்.

பனிப் புயலின் வேகத்தில் கண்களைக் கூட முழுதாய் திறக்க இயலாத நிலை. 30 நிமிடத் தேடலுக்குப் பின், காலடியில், மிருதுவாய் ஏதோ இடிபட்டது.

               

தொடரும்...................

http://karanthaijayakumar.blogspot.com/2015/09/7.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுதான் ஒரு ஆங்கில கட்டுரையில் சர்வதேச வின்கூடத்தில் ஆராய்ச்சிக்காக ஒருவருடம் தங்கி இருந்து விட்டு வந்தவர் கதை படித்தேன் 

இன்று இது ....

உலக மனித கூட்டத்திற்காக 
எமக்கு தெரியாமலே பல மனிதர்கள் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 8

பனிப் புயலின் கோரப் பிடியில்

Scientist%2BM%2BSudhakar%2BRao.jpg

பிற்பகல் 3.00 மணி அளவில், ஆய்வகத்தில் அமர்ந்திருந்த சுதாகர் ராவ், காற்றின் வேகம், திடீர் திடீரென திசை மாறுவதை கவனித்தார்.

காற்றின் வேகத்தையும், திசையினையும் காட்டும் கருவி சரிவர வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தார்.

வெளியில் உள்ள கருவியில் இருந்து, ஆய்வகத்தில் உள்ள கருவிக்கு வரும் இணைப்பில், ஏதோ கோளாறு என்பது தெரிந்தது.

புகைப் போக்கி போன்ற அமைப்புடைய அவசர கால, பாதை வழியே ஏறி மெதுவாக எட்டிப் பார்த்தார். வானிலைக் கருவி இருக்கும் இடம் 15 மீ தூரத்தில் தெளிவாய் தெரிந்தது.

Dakshin%2BGangotri%2BAriel%2Bview.jpg

Dhakshin Gangothri sky View

சுதாகர் ராவ் அப்பொழுது, கடும் குளிரினை எதிர் கொள்ளும் உடையினைக் கூட அணிந்திருக்க வில்லை. சாதாரண உடையிலேயே இருந்தார். 15அடி தூரம்தானே, ஒரு சில நிமிடத்தில் திரும்பிவிடலாம் என்று நினைத்தார். இறங்கினார். நடந்தார். கருவியைச் சரி செய்தார்.

நிமிர்ந்து பார்த்த பொழுது, ஆய்வகத்தையே காணாமல் திகைத்தார். பனிக் காற்றின் அடர்த்தி ஆய்வகத்தையே மறைத்து விட்டது.

காற்றானது கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி, வெகு வேகமாய் வீசிக் கொண்டிருந்தது.

சுதாகர் ராவ் யோசித்தார். ஆய்வகம் இருக்கும் திசையை நோக்கி நடந்தால், புயல் காற்றானது, தன்னை அதன் போக்கில் தள்ளும் என்பதையும், அதனால் பாதையில் இருந்து விலகி தத்தளிக்க நேரிடும் என்பதையும் உணர்ந்தார்.

கிழக்கு நோக்கி காற்றை எதிர்த்து நடக்கத் தொடங்கினார்ஆனாலும்தான் இறங்கி வந்த ஏணியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

antarctic%2B%25282%2529.jpg

சற்றே மேற்கு நோக்கி நடந்தால், நிச்சயமாக ஆய்வுத் தளத்தின் சுவற்றினைத் தொட்டு விடலாம். சுவற்றினைப் பிடித்து விட்டோமானால், சுவற்றைத் தடவிக் கொண்டே நடந்தால், ஏணி இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விடலாம் என்று எண்ணி, திசை மாறி நடக்கத் தொடங்கினார்.

பனிப் புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, திசை மாறிவிட்டோமோ என்ற பயம் அவரைத் தொற்றிக் கொண்டது.

பனிப் புயலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பற்றி, கர்னல் அவர்கள் சொன்னது நினைவிற்கு வரவே, அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டார். அமர்ந்த சில நிமிடங்களிலேயே, பனி உடம்பின் அத்தனை எழும்புகளிலும் புகுந்து, நாடி நரம்புகளை எல்லாம் சில்லிடச் செய்தது.

நேரம் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக நினைவினை இழக்கத் தொடங்கினார்.

தொடரும்.....

http://karanthaijayakumar.blogspot.com/2015/09/8.html

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 9

மறு ஜென்மம்

காலடியில் மிருதுவாய் ஒரு பொருள். கர்னல் குனிந்து தடவிப் பார்த்தார்.

ஓர் மனித உடல்.

பனியில் சற்றேறக்குறைய முழுவதுமாய், புதைந்து போன நிலையில், விறைத்துப் போன ஓர் உடல்.

அவசர அவசரமாகப் பனியினை அகற்றி, உடலினைத் தூக்க முயன்றனர். முடியவில்லை. உடலோடு பனியானது அகற்ற இயலாத நிலையில் ஒட்டிக் கொண்டிருந்தது. தலையும், இரு கைகளும் மட்டுமே வெளிப்புறம் தெரிந்ததே தவிர, உடலானது, பனிக் கட்டிக்குள் முழுவதுமாய் மறைந்திருந்தது.

article-2265089-1709CED2000005DC-894_634

சுகாதர் ராவ்.

லேசாக, மிகவும் லேசாக, இளம் சூடாய், மிகவும் இளம் சூடாய், மெதுவாக, மிக மெதுவாக மூச்சுக் காற்று வந்து கொண்டிருந்தது.

உயிர் இருக்கிறது. காப்பாற்றி விடலாம்.

சுதாகர் ராவ் அவர்களின் இரு கைகளையும், ஆளுக்கொரு கையால் பிடித்து இழுத்தனர். உடல் மட்டும் வரவில்லை. உடலோடு ஒட்டியிருந்த பனியும், ஒரு பெரு மூட்டையாய், ஒடலோடு ஒட்டியவாரே வந்தது.

இருவரும், ஆளுக்கு ஒரு கையால் சுதாகர் ராவ் அவர்களையும், மற்றொரு கையால் நைலான் கயிற்றினையும் பிடித்துக் கொண்டு, பனி மூட்டைக்குள் புதைந்திருந்த சுதாகர் ராவ் அவர்களை, பனியோடு இழுத்துக் கொண்டு ஏணி வரை வந்தனர்.

அதற்குள் மற்றவர்களும் ஏணி வழியே எட்டிப் பார்க்கவே, அனைவரின் உதவியுடனும், ஏணியில், சுதாகர் ராவை மெதுவாக மேலே ஏற்றினர். பின் ஆய்வுத் தளத்திற்குள் இறக்கினர்.

ஆய்வுத் தளத்திற்கு வெளியே அதிக நேரம் இருப்போமேயானால், குளிரினாலும், பனிக் காற்றினாலும், உடலின் வெளிப் பாகங்களிலும், பனி உடையின் மேற்புறத்திலும் பனி உறையத் தொடங்கி விடும்.

முகம், மீசை, தாடி, கண் இமை போன்ற இடங்களில் பனி உறைந்து கட்டியாகிவிடும். கண் இமையினை மூடக் கூட இயலாது.

இப் பனியை கைகளாலும் அகற்ற இயலாது. கைகளால், உடலில் உறைந்திருக்கும் பனியை நீக்க முயன்றால், முகம், தோல், முடி இவையெல்லாம், பனியோடு சேர்ந்து பிய்த்துக் கொண்டு வந்து விடும்.

எனவே இப்பனியினை நீக்குவதற்கான ஒரே வழி, இவற்றை உருக வைப்பதுதான்.

Letter%2Bof%2BHonour.jpg

பாராட்டுக் கடிதம்

சுதாகர் ராவ் அவர்களின் உடலினைச் சுற்றியும், கழுத்திலும், முகத்திலும் சூடான தண்ணீர் பைகள் வைக்கப் பட்டன.

மேலும் ஆய்வுத் தளத்தில் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும், ஜெனரேட்டரின், விசிறியின் மூடி திறக்கப்பட்டது. அதன் அருகில் சுதாகர் ராவ் நிற்க வைக்கப்பட்டார்.

ஜெனரேட்டரின் விசிறியானது வெப்பத்தை வெளித் தள்ளும். எனவே மின் விசிறியின் வெப்பத்தால், சுதாகர் ராவ் அவர்களின் உடலில் ஒட்டியிருந்த, பனி மூட்டை, கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்தது.

உடலும் கொஞ்சம் கொஞ்சமாக, சூடேறத் தொடங்கியது.

சுதாகர் ராவ் மெல்லக் கண் விழித்தார்.

ஆய்வுக் குழுவினர் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

ஆய்வுக் குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்ட, சில நாட்களில், இரவில், வானில் அந்த அதிசயம் அரங்கேறியது.

தொடரும்.........................

 

http://karanthaijayakumar.blogspot.com/2015/09/9.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

உறை பனி உலகில் 10

 

தாய் மண்ணே வணக்கம்

பூமியின் வட துருவமும், தென் துருவமும் காந்தத்தின் இரு முனைகள் போல் இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.   சூரியனில் இருந்து வரும் அணுக் கதிர்களால், பூமியின் காந்த வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை.   காரணம் பூமியின் அணுக் கதிர்கள், சூரியஅணுக் கதிர்களை நேருக்கு நேராய் எதிர்கொண்டு, இது எங்கள் ஏரியா, உள்ளே வராதே என நெஞ்சம் நிமிர்த்தி நிற்பதுதான்.  ஆனாலும் பூமியின் வட துருவத்திலும், தென் துருவத்திலும் இந்தக் காந்த வட்டம் மிகவும் குறைவாக இருக்கும்.   எனவே சூரியனின் கதிரியக்க அணுக்கள் இவ்விரு பகுதிகளிலும், பூமிக்கு மிக அருகில் வருகின்றன.

 அப்படி பூமிக்கு மிக அருகில் வரும் கதிரியக்க அணுக்களும், வட தென் துருவ கதிரியக்க அணுக்களும், ஒன்றை ஒன்று நேருக்கு நேராய் சந்தித்து, வான வீதியில், ஒரு மாபெரும் மல்யுத்தத்தினையே நடத்தும்.

3e663.jpg

10008870.jpg

Antarctic-Observatories-Gather-Info-on-0

aurora-003-Small.jpg

aurora_australis.jpg

 

இந்த மின் காந்த மோதல்களால் வானில், வண்ண ஜாலமே உருவாகும். நாம் உலகின் எப்பகுதியிலும் இதுவரை கண்டிராத ஒரு வான வேடிக்கை, தென் துருவத்தில் அன்று அரங்கேறிக் கொண்டிருந்தது. கர்னல் அவர்கள் உறைபனியில் மல்லாந்து படுத்துக் கொண்டு முழுக் காட்சியினையும் கண்டு ரசிக்கத் தொடங்கினார். உறை பனி உலகில் இத்தனை நாள் பட்ட துன்பமெல்லாம், இக் காட்சியினைக் காண்ணாரக் காணத் தானோ என்று எண்ணி எண்ணி வியந்தார்.

மின் காந்த மோதல்களால் வானமானது. பல வித வண்ணங்களில், பலவித உருவங்களில், நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருந்தது. ஐந்தாவது குளிர்காலக் குழுவினருக்கு இயற்கை அளித்த விருந்து இந்த வண்ண ஜாலம். இவ்வாறாக கர்னல் கணேசன் அவர்களின் தலைமையில், இக் குழுவினர், அண்டார்டிகாவில் செலவிட்ட நாட்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 480 நாட்கள்.  நினைத்துப் பாருஙகள், குடும்பத்தினரை விட்டுவிட்டு, வெளியூர் சென்றால், இரண்டாம் நாளே குடும்பத்தின் நினைவு வந்து, நம்மை வாட்டும். எப்பொழுதடா வீட்டிற்க்குச் செல்வோம் என மனது ஏங்கும். முழுதாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்து 480 நாட்கள். அதுவும் உறை பனி உலகில். அதுவும் முன் பின் அறிமுகமற்ற 14 பேருடன்.

 தக்ஷின் கங்கோத்ரியில் கால் பதித்த முதல் நாளே, ஆய்வகத்தின் சுவற்றில், அனைவரும் பார்க்கும் வகையில், கர்னல் கணேசன் எழுதினார். இப்பொழுது நீங்கள் உலகிலேயே, தைரியமானவர்களின் மத்தியில் இருக்கிறீர்கள். தனது குழுவினரைத் தொடர்ந்து உற்சாகப் படுத்தியும், அவ்வப்போது குழுவினரிடையே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை, சலசலப்புகளை, விரக்தி எண்ணங்களை எல்லாம், ஒரு தாயின் பரிவோடு உணர்ந்து, பாசமிகு தந்தையாய் அரவணைத்து, பேசிப் பேசி சரிசெய்து, தன் பயணத்தை வெற்றிப் பயணமாக்கினார் கர்னல் கணேசன்.      தொடக்கம் என்று ஒன்றிருந்தால், முடிவு என்று ஒன்றிருக்க வேண்டுமல்லவா.

1988 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள், அடுத்த குளிர்காலக் குழுவினர், தக்ஷின் கங்கோத்ரிக்கு வருகிறார்கள் என்னும் செய்தி வந்தது.   செய்தி கிடைத்த மறு நொடி, கர்னலின் மனம், தங்களுக்குக் கிடைத்த வரவேற்பை எண்ணிப் பார்த்தது. அதுவா வரவேற்பு? நாங்கள் தருகிறோம், வரவேற்பு, உண்மையான வரவேற்பு.  அடுத்த நொடி செயலில் இறங்கினார்.

 டிசம்பர் 21, காலை 8.00 மணி. அடுத்த குளிர்காலக் குழுவினரைத் தாங்கிய ஹெலிக்காப்டர், கப்பலில் இருந்து புறப்பட்டு, வின்னில் வட்டமிட்டது. ஹெலிகாப்டர் இறங்க வேண்டிய இடம், உறைபனியில், நீல வண்ணத்தில் பளிச்சிட்டது. அதன் அருகிலேயே, காற்றின் திசையினைத் தெரிவிக்கும், துணியிலான கூம்பு வடிவிலான (wind socks ) கொடி. ஹெலிகாப்டர் இறங்கிய இடத்தில் இருந்து, ஆய்வுத் தளம் வரை, இரு மருங்கிலும், பல்வேறு ஆய்வுத் துறைகளின் கொடிகள் காற்றில் படபடத்து, புதுக் குழுவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைத்தன.  ஆய்வுத் தளத்தின் முன், கைகளை முடிந்த வரையில் உயர்த்திய நிலையில், இரண்டு கிரேன் வண்டிகள். அதில் குழுவினரை வரவேற்கும் வரவேற்புப் பதாகை.

ஹெலிகாப்டர் பனியில் இறங்கியதும், குழுவினர் அலங்கரிக்கப் பட்ட வண்டிகளில் ஏற்றப் பட்டனர்.  இரண்டு, இருசக்கர பனி வாகனங்கள் (Snow Scooter) வழி காட்டியவாறு முன் செல்ல, வண்டிகள் பின் தொடர்ந்தன.

Reception%2B1.jpg

Reception%2B2.jpg

Reception%2B3.jpg

ஆய்வுத் தளத்தை நெருங்கும் பொழுது, ஆய்வுத் தளத்தின் முன் கட்டப் பெற்றிருந்த ஒலிப் பெருக்கிகளில் இருந்து, வரவேற்புப் பாடல்கள் காற்றில் மிதந்து வந்து, திருவிழாச் சூழலை உருவாக்கின.   இதுமட்டுமல்ல, கர்னல் அவர்கள், குழுவினருக்கு சந்தன மாலைகளை அணிவித்து வரவேற்கும் பொழுது, இதோ நாங்களும் வரவேற்கிறோம் என்று கூறி இணைந்து கொண்டன, தொடர் வெடி முழக்கங்கள். வான வேடிக்கைகள்.

முதன் முதலில் உறை பனியில் கால் வைத்தக் குழுவினர் மயங்கித்தான் போனார்கள். பூமிப்பந்தின் மூலையில், இப்படி ஒரு வரவேற்பா? நெகிழ்ந்துதான் போனார்கள்.    தன் பணியினைச் செம்மையாகச் செய்து விட்டோம் என்ற நிறைவு கர்னலுக்கு.

 தாய் மண் வா,வா என்றழைக்கின்றது.  தாயகம் திரும்புவதற்கான நேரம் வந்து விட்டது.

உறை பனியில் வாழ்ந்த நாட்களின் நினைவாக, நினைக்கும் பொழுதெல்லாம், நெஞ்சம் இனிக்கும் வகையில், உறை பனி உலகில் இருந்து, எப் பொருளை எடுத்துச் செல்ல்லாம் என்று யோசித்தார்.

தக்ஷின் கங்கோத்ரியில் குடி புகுந்த முதல் நாளே, கர்னல் கணேசன், சன்னா நல்லூர் மண்ணையும், அண்ணா நகர் மண்ணையும், ஜம்மு காஷ்மீர் மண்ணையும், உறை பனியில் தூவி, விதையாய் வித்திட்டதை அறிவீர்கள்.

இமயம் வரை படையெடுத்து வென்ற, சேரன் செங்குட்டுவன், இமய மலையில் இருந்து கல் எடுத்து வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த காட்சி, கர்னல் அவர்களின் கண் முன்னே தோன்றி மறைந்தது.

நவீன சேரன் செங்குட்டுவன், கர்னல் கணேசன் அவர்கள், சுமார் 50 கோடி ஆண்டுகளாக, உறை பனியில் மூழ்கிக் கிடந்த கற்பாறைகள் பலவற்றைப் பெயர்த்தெடுத்தார்.

கிரேன்களில் உதவியுடன் கப்பலில் ஏற்றி, தாயகம் நோக்கிப் பயணித்தார்.

1989 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று கோவா கடற்கரையில் கால் பதித்தனர்.

தாய் மண்ணே வணக்கம்.

உறை பனி உலகினல், உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த கற்கள், இன்று பெங்களூர், இந்திய இராணுவத்தின்பொறியாளர் படைப பிரிவின், மூத்த பிரிவான Madras Engineer Group அலுவலகத்தின் முன்பாகவும்,

Stone%2B1.jpg

கர்னல் கணேசன் அவர்களின் வீட்டு வரவேற்பறையிலும்,

Stone2.jpg

சன்னா நல்லூர்அகத்தூண்டுதல் பூங்காவிலும்,

Stone%2B5.jpg

பேரளம் காரைக்கால் சாலையில் அமைந்துள்ள, மாங்குடி கிராமத்தில்,வேதாத்ரி மகரிஷியின் சீடர்களுள் முதன்மையானவரான,டாக்டர் அழகர்மானுஜம் அவர்கள் அமைத்துள்ள

பெரு வெளி ஆலயத்திலும் சென்னை, அண்ணா நகர் வீட்டு வாசலுக்கு அருகிலும் தலை நிமிர்ந்து நிற்கின்றன.

 

---------------சன்னா நல்லூர் அகத்தூண்டுதல் பூங்காவில்

கர்னல் அவர்களுடன் நானும்

நண்பர்களும்

 

நண்பர்களே,

கடந்த ஒரு மாத காலமாக,

உறை பனி உலவில்

என்னுடன் இணைந்து பயணித்த

தங்களுக்கும்,

இத்தொடரினை எழுதிட அனுமதி வழங்கிய

குடியரசுத் தலைவரின்,

வசிஸ்ட் சேவா விருது பெற்ற

கர்னல் பா.கணேசன் அவர்களுக்கும்

 

நன்றி   நன்றி   நன்றி

----------------------------------------------------

http://karanthaijayakumar.blogspot.com/2015/09/10.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.