Jump to content

2016ம் ஆண்டில் தீா்வைப் பெற்றுத்தருவேன் என்று நான் கூறவில்லை” -இரா.சம்பந்தன்


Recommended Posts

2016ம் ஆண்டில் தீா்வைப் பெற்றுத்தருவேன் என்று நான் கூறவில்லை” “அவ்வாறு வெளியான சுடரொளி பத்திரிகையின் தலைப்புச் செய்தியை நான் ஏற்றுக்கொள்வில்லை“


“2016ம் ஆண்டில் இந்தத் தீா்வு ஏற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு..... அதைப் பெறுவதற்கு எம்மாலான அத்தனை முயற்சிகளையும் பெறுவோம் என்று உறுதியாகக் கூறியது உண்மை! நாங்கள் தீா்வைப் பெற்றுக்கொள்ள எம்மாலான அனைத்து நடவடிக்கை முயற்சிகளையும் மட்டுமே நாம் மேற்கொள்வோம்! (23.50ல் இருந்து கேளுங்கள்)

 

ஐயா! என்னே உங்களின் ராசதந்திரம்!


2016ம் ஆண்டில் நாம் தீா்வைப் பெற்றுத்தருவோம். எமக்கு ஒரு சந்தா்ப்பத்தைத் தாருங்கள் என்ற தோ்தல்கால பிரசாரங்கள் என்னவாயிற்று!

https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3

 

11951808_1902986086592655_34963533258561

11953071_10153230832643666_8851123443984

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடவுளுக்கே அல்வா கொடுக்கிற ஆட் கள்.......இதில தமிழனுக்கு அல்வா கொடுக்கிறது பெரிய விடயமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களின் பின்னால் நம்பி போனது பிரபாகரனுடன் மட்டும் தான்..

நீங்க நடாத்துங்க

நல்ல அரசியல்வாதியாக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்கும் முழுசா விளங்காத சமஸ்டி இருக்குதானே ?
ஏன் சம்மந்தர் அவசரபடுகிறார்......?? 

Link to comment
Share on other sites

...சப்பத்ந்தர் .. "வாற வருடம் தீர்வை பெற்றுத்தருவேன்" ..  என்று கூறி இருக்க வேண்டும்? அல்லது அப்படி கூறுவதற்கு பதிலாக டங் சிலிக் பண்ணி இருக்க வேண்டும்? ..

.. முன்பொருமுறையாம் சிவனிடம் பிள்ளையார் சென்று "எனக்கு எப்போ வெடிங்?" என்றொரு கேள்வியை கேட்டாராம்! அதற்கு சளைக்காத சிவன் "நாளைக்கு" என்று சொன்னாராம்! ... அடுத்த நாள் பிள்ளையாரும் சிவனிடம், இன்டைக்கு வெடிங் என்று புழுகத்தில் போக, சிவனோ "நாளைக்கு, எண்டல்லோ சொன்னனான்" என்று கூற ... அது நாளை .. நாளை ... ஆகியே போய் விட்டதாம்!

அப்பூ சப்பந்தா! உது எங்களுக்கு பழக்கம்! 40ஓ, 50ஓ, 60 வருடங்களாக பழகிப்போச்சுது எணை! மேல் தள்ளாத வயதில் விளக்கம் சொல்லி பதறாதையுங்கோ! 

 

Link to comment
Share on other sites

நேற்று ... 

"மைத்திரி சிறிசேன மாத்தயா நல்லவர்" ..  சம்பந்தர்

 

http://athavansrilanka.com/?p=260849

 

இன்றோ ..

ஜனாதிபதியின் உரையில் உள்ளடங்காத இனப்பிரச்சினை : கவலையில் கூட்டமைப்பினர்

http://onlineuthayan.com/News_More.php?id=231124237302745863

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வைப்பற்றியே சம்பந்தர் ஐயா இன்னும் யோசிக்கவில்லை
அதற்குள் 2016 க்குள் தீர்வு என்றால் யார் நம்புவார்.
நிச்சயமாக நான் நம்பவில்லை tw_blush:

Link to comment
Share on other sites

11846673_1620020824936310_14912231893924   11826074_1620021201602939_49473515196442

காணாமல் போனோர் பற்றி காலில் விழுந்து கெஞ்சினாலும் அது குறித்து அக்கறையின்றி இருக்கும் ரணில் அவர்களை நாம் நினைவு வைத்தக்கொள்ளப் போவதில்லை. அனால் இது பற்றி கள்ள மௌனம் சாதிக்கும் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரனை நினைவில் வைத்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் பிரட்டுக்களை சொல்லும் கேடுகெட்ட சம்பந்தன் கூட்டத்தை தமிழ்ச்சனம் நம்பியே ஆகவேண்டும்....ஏனெனில் ஈழத்தமிழ் அரசியலுக்கு தமிழரசு எழுதப்படாத விதி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது போன மாதம்.. இது இந்த மாதம்..

 

அது இலக்சன் வாயி.. இது ஏமாந்த வாயி..

 

இதை நீங்க எப்படியாவது எடுத்துக் கொள்ளலாம். தேர்தலில் வென்றிட்டா அப்புறம் நமக்கு மக்களைப் பற்றி.. எந்தக் கவலையும் இல்லை. முள்ளிவாய்க்கால் சமயத்தில் நாங்க பண்ணாததா. போய் சென்னை.. டெல்லின்னு கிடக்கல்ல. இதெல்லாம்.. எங்களுக்கு பழக்கப்பட்டது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11951808_1902986086592655_34963533258561

சுடரொளியில் இந்தச் செய்தி 20 ஜூலை மாதம் வந்து..... 
தேர்தல் எல்லாம் முடிந்து, வாக்குகளை... பொறுக்கி பாராளுமன்றம் சென்றுவிட்டு,
40 நாளுக்குப் பிறகு, மறுப்பறிக்கை விடுவது... 
சம்பந்தனின்.... பித்தலாட்டத்தையும், பொய் முகத்தையும், முள்ள மாரித்தனத்தையும் காட்டுகின்றது. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் ஒன்றே மாறாதது.இனி எங்களுக்கான நேரம்

கல்லும்  தயார்

முடிவு திகதி 31/12/2016...........

Link to comment
Share on other sites

கல்லும்  தயார்

முடிவு திகதி 31/12/2016...........

பரிஸில இருந்து எறிஞ்சா கல்லு இலங்கை மட்டும் பறக்குமோ?  :unsure:

Link to comment
Share on other sites

பரிஸில இருந்து எறிஞ்சா கல்லு இலங்கை மட்டும் பறக்குமோ?  :unsure:

அவர் சந்திரனுக்கும் எறிவார்  .தலைவர் அவரிடம் தான் பொறுப்பை கொடுத்திருக்கின்றார் .

Link to comment
Share on other sites

அவர் சந்திரனுக்கும் எறிவார்  .தலைவர் அவரிடம் தான் பொறுப்பை கொடுத்திருக்கின்றார் .

11951119_1047678848598765_69718861250706

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வளவளவெண்டு கொண்டு நிக்காமை நடையக் கட்டுங்கோ அடுத்த எலெக்சனுக்கு இன்னும் 6 வருசம் இருக்கு! சில சனத்துக்கு அடிச்சுச் சொன்னாலும் விளங்காது! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அப்பவே சொல்லல ....இவ்வளவு காலமும் யாரிடமும் உத்தரவாதம் கேட்டீர்களா ...ஏன் கூத்தமைப்பிடம் கேட்கிறீர்கள் 
என்று கண்ணகி கணக்கா கிளர்ந்தெழுந்து கேள்விகளை அள்ளி விட்டினம் ....இப்போது தெரிகிறதா (நாங்கள் கூறியது காலம் பதில்சொல்லும் என்று
இப்போது காலம் ரொம்ப கெட்டது முதல் மாதிரி வருசக்கணக்காக இழுக்காது ஒரு மாதத்திலே உங்களுக்கு பதில் வந்து விட்டது )

தலைவரிடம் கேட்கவில்லை.....ஓம் எங்களுக்கு ஒரு விடயம் நன்றாக  தெரியும் ஒன்று தமிழீழம் இருக்கும் இல்லையேல் தலைவரே இருக்கமாட்டார் .சொன்ன மாதிரி சிங்கன் செய்துகாட்டினார் ....

NaySayers ....YaySayers எல்லாம் புள்ளி விபரம் ..நிகழ்தகவோடு கருத்து சொல்ல இங்கே Thesis உம் theory உம் கதைக்கவில்லை ....இதற்கெல்லாம் உந்தமாதிரி அறிவும்  தேவையில்லை....சாதாரண அடிமட்ட அரசியல் அறிவே போதும் .....

சரி 2016 தேர்தல் கால புறுடா (சாரி உங்களை பொறுத்தவரை தேர்தல் கால கோஷம்) என்றால் ...எனது கேள்வி மொத்த தேர்தல் விஞ்சாபனமே தேர்தல் கால புருடா அல்ல  (சாரி உங்களது தேர்தல் கால கோஷமில்லை) என்று  நிரூபிக்க உங்களிடம் எத்தனை வீத நிகழ்தகவு உள்ளது ....? 

இது ஆரம்பம் தான் இன்னும் இருக்கு .....Stay Tuned 
மீண்டும் சொல்கிறோம் காலம் பதில் சொல்லும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில இருந்து எறிஞ்சா கல்லு இலங்கை மட்டும் பறக்குமோ?  :unsure:உங

உங்களால் பரிசுக்கு எறிய முடியும்  போது

என்னாலும் முடியும் என்று தான் நினைக்கின்றேன்

நம்பிக்கை தானே வாழ்க்கை

முயற்ச்சி செய்யணும் அல்லவா.....:rolleyes: 

அவர் சந்திரனுக்கும் எறிவார்  .தலைவர் அவரிடம் தான் பொறுப்பை கொடுத்திருக்கின்றார் .

என்னைப்பற்றி  தங்களது ஆராய்ச்சி முடிவுகள் தான் பிரச்சினையே

என்னைப்பற்றிய விம்பங்களை அழியுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்...

Link to comment
Share on other sites

என்னைப்பற்றி  தங்களது ஆராய்ச்சி முடிவுகள் தான் பிரச்சினையே

என்னைப்பற்றிய விம்பங்களை அழியுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்...

அண்ணணை லாசப்பலுக்கு கூப்பிட்டு ஒரு பேச்சுவார்த்தை வைத்தால் என்ன? இடமாற்றத்திற்கு சிலவேளை மைண்ட்செட் மாறினாலும் மாறும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கருணாவை வன்னிக்கு பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டதுதான் நியாபகம் வருது ?

அர்ஜூன் பதுமன விட கெட்டிக்காரன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பாசையில பேச்சுவார்ததை எண்டால் "அதே" அர்த்தம்? பன்னாட்டுச் சமுகத்துக்கு உந்த விசியம் தெரியாமல் போனது துன்பியல் சம்பவம்! நல்ல காலம் கருணா அம்மான் தப்பீட்டார்!:innocent: நான் சொன்னது பேச்சுவார்த்தையில் இருந்து தப்பீட்டார் எண்டு!:unsure:

Link to comment
Share on other sites

சும்மா வளவளவெண்டு கொண்டு நிக்காமை நடையக் கட்டுங்கோ அடுத்த எலெக்சனுக்கு இன்னும் 6 வருசம் இருக்கு! சில சனத்துக்கு அடிச்சுச் சொன்னாலும் விளங்காது! :grin:

சொன்னாப்போல வார வருஷம் பிரதேச சபை எலக்சன் வருது.

பிரதேச சபை தேர்தலிலும் இருதேசம் ஒருநாடு எண்டு வெளிக்கிடாமல் உள்ளூர் பிரச்சனையை பற்றி பேசினால் கொஞ்சம் தேறும். 

கொத்து கோஸ்ட்டியோடு சகவாசம் இருந்தால் அதிலையும் ஊத்திக்கும்.. 

Link to comment
Share on other sites

சும்மா வளவளவெண்டு கொண்டு நிக்காமை நடையக் கட்டுங்கோ அடுத்த எலெக்சனுக்கு இன்னும் 6 வருசம் இருக்கு! சில சனத்துக்கு அடிச்சுச் சொன்னாலும் விளங்காது! :grin:

சம்பந்தர் அய்யா அவர்களே! 
இன்னும் 350 நாட்களே உள்ளது தீர்வு பெறுவதற்கு!

எதிர்பாராதவிதமாக எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது. எத்தனை நாளைக்கு இதனை விட்டு வைப்பார்களோ தெரியவில்லை? எனவே அதற்குள் இயன்றதை தமிழினத்திற்கு செய்ய முயலுங்கள் என வாழ்த்துகிறோம்.

இதற்கு முன்னர் அமிர்தலிங்கம் அவர்களும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அவரால்கூட அப் பதவி மூலம் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தும்கூட 1983 கலவரத்தின் போது தமிழ் மக்களை மட்டுமல்ல தன்னைக்கூட காப்பாற்ற முடியவில்லை.

அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்தும் உயிர் பாதுகாப்பு தேடி இந்தியாவுக்கு ஓடினார். அவர் இந்தியாவுக்கு தப்பி ஓடும்போது பெண்கள் போல் புடவை கட்டிக்கொண்டு தப்பி வந்ததாக சென்னையில் அவரே அப்போது பேட்டி கொடுத்திருந்தார்.

அமிர்தலிங்கத்ததை புடவை கட்டிக்கொண்டு ஒடவைத்தவர்கள் உங்களை கோமணத்துடனாவது ஓட விடுவார்களா தெரியவில்லை. பொறுத்திருந்து பாhப்போம்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி எற்றதும் உங்கள் முதல் கோரிக்கை சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதாக இருக்கும் என நம்பினோம். ஆனால் நீங்கள் அமைச்சர்கள் எண்ணிக்கை தொடர்பாக உங்கள் முதல் எதிர்ப்பை பதிவு செய்துள்ளீர்கள்.

மேலும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் உள்நாட்டு விசாரணையே போதும் என்றும் அமெரிக்க அமைச்சரிடம் வாக்குறுதி வழங்கிவிட்டீர்கள் என செய்தி வருகிறது. இச் செய்தி உண்மையாயின் இதைவிட துரோகம் எதவும் இருக்க முடியாது.

என்ன சொன்னாலும் நீங்கள் கேட்கப் போவதில்லை. எந்தப் பதவி கிடைத்தாலும் அதனைப் பெறாமல் விடப்பொவதில்லை. எனவே அது குறித்து எழுதுவது வீண் வேலை. ஆனால் உங்களுக்கு ஒரு விடயத்தை நினைவூட்ட விரும்புகிறோம்.

நடந்து முடிந்த தேர்தலில் ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். எனவே அதன்படி இன்னும் 350 நாட்களே உள்ளன என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

வரலாறு மட்டுமல்ல கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும் முக்கியம் தலைவரே!

11894007_1630406797231046_69231042778724

 நன்றி தோழரே! (Balan tholar)

 

படத்தில ஒரு திருத்தம், அது போர்குற்றம் இல்லை  இனப்படுகொலை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.