Jump to content

வெண்புறா நடாத்தும் அன்றும் இன்றும் என்றும்


Recommended Posts

இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ததில் எந்த தவறும் இல்லை. இந்திய கலைஞர்களாக இருந்தாலும் உணர்வோடு இலாபநோக்கோடு இல்லாது பங்கு பற்றி உதவி செய்ய வேண்டும். அவர்களது பயண தங்குமிட செலவுகளை பொறுப்பேற்பது தவறில்லை.

எத்தியோப்பியாவில் பட்டினிச் சாவை தடுக்க பொப் நட்சத்திரங்கள் சமாந்தரமாக அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு படுத்தியிருந்தனர் 1985 இல்.

http://news.bbc.co.uk/2/hi/uk_news/702700.stm

http://www.live8live.com/

அதே போன்றே இந்தியாவின் நட்சத்திரங்கள் பங்கு பற்றி தான் நிதியை திரட்ட முடியும் என்றால் ஏன் தவறு?

தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு நிகழ்வு நடக்க வேண்டும். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இந்தியாவில் இயங்க அனுமதிக்க வேண்டும். குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் ஆவது.

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேசன் இந்த நிகழ்விற்கு வெண்புறா தனது நிதியில் ஒரு பெனியேனும் செலவழிக்கவில்லை எல்லாமே விளம்பரத்தினூடாகவே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை 30 ஆயிரம் சேர்க்க நாட்கள் பல ஆகும் என நான் எழுதியiதை வசதியாக மறைத்து விட்டு சவால் விடுகிறியள். எனக்கும் சவால் வி;ட முடியும். இப்போதுதானே சுலபமாக நிதி சேர்க்கிற ரெக்கினிக் தெரிஞ்சுட்டுது. இனி ஒரு பவுணுக்கும் இரண்டுக்கும் உண்டியல் கிலுக்க வேண்டிய தேவை ஏற்படாது. இனி உண்டியலுடன் எங்களிடம் வரமாட்டார்கள் என்று வாக்கு தரமுடியுமா?

டுiஎந8 நிகழ்ச்சியையும் இதையும் போட்டு குழப்பாதீர்கள். அது ஆபிரிக்க மக்களுக்காக கலைஞர்கள் முன்வந்து செய்த மகத்தான நிகழ்ச்சி. இது வியாபார கலைஞர்களை கூலிக்கு பிடித்து நடாத்தும் கேளிக்கை நிகழ்ச்சி. அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த கலைஞர்கள் வருவார்களானால் .. இங்கு பிரச்சனைக்கே இடம் இல்லை.

பாலசுப்பிரமணியம் பொப் கெல்டோப் போல மனிதாபிமானியாக ஆக மாறுவாரானால் அவரை சிரந்தாழ்த்தி வரவேற்போம்.

Link to comment
Share on other sites

MI7,

தமிழனிடம் மனிதாபிமானத்தை பணத்தை காட்டித்தான் கறக்கலாம் என்ற கேவலத்தில் இருக்கிறம் என்றதை நான் மறுக்கவில்லை. Bob Geldof போன்றவர்களை நோக்கி இந்திய கலைஞர்களையும் மாற்றமடை செய்ய முயற்சிப்பது எமது பொறுப்பு. எமது புலம்பெயர்ந்த மக்களின் சந்தையை ஒரு அழுத்தமாக வைத்து செய்ய முயற்சிக்க வேண்டும்.

அதுவரை idealistic ஆக யோசித்து ஒன்றையும் செய்யாது இருக்க முடியாது. தற்போது உள்ள நிலையில் இவ்வாறு தான் பட்டினிச்சாவிற்கு எமது மக்களிடமும் கலைஞர்களிடமும் பங்களிப்பை பெற முடியும் என்றால் செய்யத்தான் வேணும்.

தற்பொழுது செய்வதை குழப்பாதீங்கள். அடுத்த முறை இன்னும் திறமையாக செய்ய முயற்சிக்கலாம். இந்த பட்டினிச் சாவும் அவலுமும் ஒர் இரு வருடங்களில் முடிந்துவிடப் போவது இல்லை. Live8 போன்று நிதி திரட்டி பட்டினிச் சாவை தடுக்க வேண்டிய அளவிற்கு நிலமைகள் தாயகத்தில் மோசமாகும். அது போன்ற நிதி திரட்டல் யுக்த்திகளை நடை முறைப்படுத்த வேண்டி நிலைக்கு நாமும் தயாராக வேண்டும். உங்கள் சிந்தனைகளை செயற் திறனை காட்டுவதற்கு எதிர்காலத்தில் போதிய சந்தர்ப்பங்கள் வரும். நிரூபியுங்கள் அப்பொழுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் அதுவா.....? இப்பத்தானே உங்களை பற்றி தெரியுது.... நீங்கள் இப்படிப்பட்ட மனத்துடன் கொடுக்கும் ஒரு பெனியால் நாட்டின் தேவையை நிறைவு செய்யலாம் என்ற கனவுடன் இருப்பவரா?

பெனி பெனியாக இல்லை இல்லை ஒரு பவுண் இரண்டு பவுண் ஆக உண்டியலுக்கு போடும் நிலை உங்களுக்கு இனியும் வேண்டாம்.

ஒரேயொரு உதவி இறுதியாக 250 பவுண் பெறுமதியான நுழைவுச்சீட்டை வாங்கி நிகழ்வையும் கண்டுகழியுங்கள்.

Link to comment
Share on other sites

நான் M17 என்பவரை ஒரு மக்கள் துறோகியாக கருதுகிறேன். ஒரு நல்ல நோக்குடன் அனைவரும் ஒன்ரினையும் இந்த நேரத்தில் இப்படி கதைப்பவர்களை துறோகியாகவே கருத முடியும்.

இது எமது இறுதி சந்தர்ப்பம் என்பதை மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த கலைஞர்கள் வரவில்லை என்று யார் உங்களிடம் சொன்னது?

டுiஎந8 நிகழ்ச்சியையும் இதையும் போட்டு குழப்பாதீர்கள். அது ஆபிரிக்க மக்களுக்காக கலைஞர்கள் முன்வந்து செய்த மகத்தான நிகழ்ச்சி. இது வியாபார கலைஞர்களை கூலிக்கு பிடித்து நடாத்தும் கேளிக்கை நிகழ்ச்சி. அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த கலைஞர்கள் வருவார்களானால் .. இங்கு பிரச்சனைக்கே இடம் இல்லை.
Link to comment
Share on other sites

குடிப்பதற்கு கூத்தடிப்பதற்கு சந்தர்ப்பமாக கலைநிகழ்ச்சியை ஏற்படுத்திவிட்டு, போதையின் உச்சத்தில் உள்ளவனிடம் சேலை ஏலம் விட்டு மட்டக்கள்ப்புக்கு காசு சேர்கிறாங்கள்.

வெண்புறா எவ்வளவு புனிதமான பணியை செய்கிறது. வரவேற்றுக்கொள்ளுங்கள். கரம் கொடுத்து உதவி செய்யுங்கள்.....

லண்டன் குறைடன் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையின் நத்தார் விழா நடை பெற்றது. பாடசாலை விழாத்தானே என்று போனால் அங்கு எல்லாவிதமான குடிவகைகளும் அளந்து அளந்து விற்கப்பட்டன. முன்னுக்கு பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் பின்னுக்கு அமோக மதுபான விற்பனை கடைசியாக டிஸ்கோ லயிற் போட்டு இருட்டுக்குள் ஒரே ஆட்டம் தான். சேலைகளும் சேர்ந்து ஆட்டம்தான்.

நிகழ்ச்சியின் இறுதியில் அறிவிப்பாளர் மேடைக்கு வந்தார். சொன்னார் மட்டக்களப்பு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு சேலை ஏலம் போடப்படும் என்று அதில் வரும் பணம் அவர்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்படும் என்று. நல்ல மது ஏற்றிவிட்டு நின்ற ஒருவர் 5 பவுனில் ஆரம்பித்த ஏலத்தை 40 பவுன் வரை கொண்டு சென்று தானே வாங்கினார். மற்றவர்கள் பலத்த கைதட்டல் மட்டக்களப்புக்கு பெரிய தொகை கிடைத்து விட்டது என்று. நிகழ்வு இனிதே முடிவடைந்தது.

பாருங்கள் ஒரு தமிழ் பாடசாலை குடிவகைகளை விற்று கூத்தாடுவது எவ்வளவு கேவலம். போதாததிற்கு ஒரு பெருமை மிக்க நகரத்தின் பெயரைச்சொல்லி தாங்கள் அங்கு ஏதோ சேவை செய்கிறார்கள் என்று சொல்லி சேலை ஏலம் விட்டு அந்த மக்களையே அவமானப்படுத்துகிறார்கள்.

தமிழ் உறவுகளே பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளில் பலரது வீடுகளில் காசு கொடுத்து சூரியத் தொலைக்காட்சி பாக்கினாம். ஆனால் மாவீரர் தினம் காலத்தில் ரி.ரி.என்னில் இலவசமாக மாவீரர் தினம் ஒளிபரப்ப வேணும் என்று கேக்கினம். தாயக நிகழ்வினை எமக்குத் தரும் தொலைக்காட்சிக்கு காசு கொடுக்காமல் சூரியத்தொலைக்காட்சிக்கு எவ்வளவு பணம் போகிறது?. புலம் பெயர்ந்த மக்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு எத்தனை பேர் ஆதரவு தருகிறீர்கள்?. ஆனால் தமிழகத்திரைப்படங்களுக்கு எம்மக்களால் எவ்வளவு கோடி பணம் போகுது?. எத்தனை சனம் ஈழத்து இசை நிகழ்ச்சிக்கு போகுதுகள்?. இப்படிப்பட்ட மக்கள் இருப்பதினால் தான் இந்தப்பாடகர்களினை வெண்புறா அமைப்பு அழைக்கிறது. நீங்களும் உதவி செய்யமாட்டீர்கள், ஆனால் குறை சொல்ல மட்டும் வந்துவிடுவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பார்த்தவுடன் உங்களில் சிலருக்கு எரியுமே....

இன்னமும் இருக்கின்றது. பொறுத்திருங்கள்...... காலம் பதில் சொல்லும்......

trofranceme3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லலுறும் மக்களுக்காக பலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் சேர்க்கப்படுவதில் எதுவித தவறும் கிடையாது. தமிழ் மக்கள் ஒழுங்கு படுத்தும் நிகழ்வுகள் சிறிய அளவிலிருப்பதால் அதில் வரும் இலாபம் குறைவாக இருப்பதுதான் ஒரு குறை. அதை விடுத்து மற்றய நாடுகளை எடுத்துப்பார்த்தீர்களானால் பல மில்லியன் பவுண்களைச் செலவிட்டு நிகழ்வுகளை நடாத்தி, அதன்மூலம் பெரிய அளவிலான பணத்தைச் சேகரிக்கிறார்கள். இந் நிகழ்வில் பங்குபற்றும் பிரபலங்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியமாகக் கொடுக்கிறார்கள். உதாரணமாக பிரித்தானிய தொலைக்காட்சியில் வருடந்தோறும் ஒழுங்கு செய்யப்படும் “சிறுவர் நலனுக்கான நிகழ்வில் பல மில்லியன்கள் 3-4 நாட்களுக்குள் சேகரிக்கப்படுகின்றது.

இப்படியான நிகழ்வுகள் இந்தியாவிலும் நடத்தப்படுகின்றது. இலங்கையிலும் நடத்தப்படுகின்றது. புலம்பெயர் மக்கள் தினமும் தமக்காகவும், தமது உறவுகளுக்காகவும் கஸ’டப்பட்டு உழைத்து, உடலையும் மனதையும் வருத்தி வாழ்கிறார்கள். இவர்களுக்கு இப்படியான ஒரு நல்ல நிறுவனத்தால் ஒழுங்செய்யப்படும் நிகழ்விற்கு குடும்பத்தினருடன் சென்று எவ்வித குழப்பங்களும் (குழுச்சண்டைகள், வெட்டுக்கொத்து) இல்லாமல் மன நிறைவுடன் பார்த்து மகிழ்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாகவே அமையும்.

சும்மா மசாலா திரைப்படங்களை அதிகவிலை கொடுத்து எடுத்து இங்கு திரையிடுகிறார்கள், அதை நாமும் திரையிலும், திருட்டுக்கொப்பியிலும் பார்த்து மகிழ்கிறோம். ஆனால் அதைப்பற்றி யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அதில் செலவிடும் பணமும், திரையரங்களில் காங்குளின் கூச்சலுக்கும், குரங்குச்சேட்டைகளுக்கும் மத்தியில் பொறுமையாகப் படம் பார்க்கும் எம்மவருக்கு, இப்படியான ஒரு நிகழ்ச்சி தொல்லையாகவும், மக்களின் பணத்தைச் சுருட்டுவதுபோலும் இருப்பது வியப்புக்குரியதாக இருக்கின்றது.

நன்றி!

Link to comment
Share on other sites

தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கொழும்பு மகசீன் சிறைக் கைதிகள் தங்கள் உணவைத்துறந்து அஞ்சலி செலுத்துகிறார்களாம். நாங்கள் சிறினிவாசினது குத்தாட்டப்பாடலால் அஞ்சலி செய்வோம்.

வாருங்கள் வாருங்கள் வந்து உங்கள் தமிழுணர்வைக் காட்டுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

How to type in thamil

இங்கு போய் பாருங்க

http://www.yarl.com/forum3/index.php?autom...p;blogid=1&

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூடவே குத்தாட்டம் போடுவதற்கு நம்ம நமீதாவையும் கூப்பிடுங்கோ. இதெல்லாம் உங்களுக்குச் சொல்லியா தரோணும்.

10 ஆண்டுகளுக்கு முன் பிரான்சில் சுசீலாவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல என்று சுசீலா உருக்கமாக பாடி முடிப்பார். அடுத்து பொன் மேனி உருகுதெ என்று சில்க் ஸ்மிதா ஒரு குத்தாட்டம் போடுவா. அடுத்து அமுதைப் பொழியும் நிலவே என்று சுசீலா அம்மையார் பாடுவார் அதன் பின் வெள்ளரிக் காய் பிஞ்சு போடுதே என்று சிலுக்கு அக்கா ஆடுவா.

வெண்புறாவும் அந்த மாதிரி நடத்தினால் நல்லயிருக்கும். புலம் பெயர் வாழ் தமிழ் முதியவர்களுக்கும் தேவி தரிசனத்தைப் பார்த்த மாதிரியும் இருக்கும்.

Link to comment
Share on other sites

அப்படிச் சொல்லாதீர்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாலா அண்ணாவை மறக்கவில்லை.

அவருக்காக கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு என்ற பாடல் பாடப்படும். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணாவின் மறைவினால் உங்களில் எத்தனை பேர் உணவை துறந்தீர்கள்? அல்லது உங்கள் நடைதுமுறை வாழ்க்கையை மாற்றி அமைத்தீர்களா? ஏன் இப்படி வேடம் போடுகிறீர்கள்?

இங்கிலாந்திலிருக்கும் 150 000 தமிழர்களில் எத்தனை வீதமானவர்கள் இறுதி அஞ்சலி நிகழ்விற்கு வந்திருந்தார்கள்?

எனவே வேலைவெட்டியில்லாமல் திரைமறைவிலிருந்து எழுதுவதை விடுத்து யதார்த்த நிலமைக்கு ஏற்ப வாழுங்கள்.

Link to comment
Share on other sites

அம்மணி,

உணர்வில்லாத சுயநாலமாகச் சிந்திக்கின்ற தாய்நாட்டைப் பறிறி நினைக்காத மக்களை விட்டுவிடுங்கள்.

உங்களைப் போன்ற உணர்வுள்ள தாய்நிலத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற நிறுவனத்தைச் சேர்ந்த நிங்களே ஈழத்தமிழர்களைப் பணம்பண்ணுவதற்காக மட்டும் பாவிக்கின்ற ஒரு கூட்டத்தை அழைத்து களியாட்டம் போடத் துடிக்கும் பொழுது மற்றவர்களைப் பற்றி எப்படிக் கதைப்பது?

எங்கே பாலசுப்பிரமணியம் அல்லது சிறினிவாஸ் தமிழ்நாட்டிலே நடந்த ஏதாவதொரு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்தியராஜ் இது போன்ற இன்னும் பல தமிழக சினிமாக் கலைஞர்கள் காட்டிய அனுதாப உணர்வைக் கூட இவர்கள் காட்டினார்களா?

தமிழுணர்வே இல்லாத இந்தக் களைக் கூத்தாடிகளுக்கு தமிழரின் பணத்தைச் சுருட்டிக் கொடுப்பது தான் உங்கள் மன்றத்தின் பணியா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தாருங்கள். அதை விடுத்து நாங்கள் உங்கள் கலைநிகழ்வை பார்த்து எரிச்சல் படுகிறோம் என்று கூப்பாடு போடாதீர்கள்.

பதில் தாருங்கள் சகோதரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி போரட்டத்தில் கலந்து தான் தமிழ்த்தேசிய ஆதரவை காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் இல்லை.

நீங்கள் குறிப்பிட்ட இருவருமே தங்கள் துறை சார்ந்து தங்களின் பங்களிப்பை செய்திருக்கின்றார்கள் இனியும் செய்வார்கள். இவர்கள் பாடிய பாடல்களை நீங்கள் கேட்டதில்லையா..?

ஈழத்தமிழர்களை பணம் பண்ணுவதற்காக பாவிக்கின்ற கூட்டம் என்று சொல்லிக்கொண்டு ஏன் அவர்கள் உங்களை பயன்படுத்த அனுமதிக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

நாங்க - எல்லா பக்கதாலயும் இறுக்கப்பட்டிருக்கோம் - .....

சுற்றிவளைபினூடும்- அதை மீறியும் - ஏதும் செய்யணும் - என்னு

நினைக்கிறாங்களே... விட்டுடலாமே- காவியா!

அரசாங்கத்தால் அல்ல- சுற்றி எம்மை இருப்பவர்களால் .........

கரணம் தப்பினா - மரணம் என்பது - இப்போலாம் - தாயகத்தில் மட்டுமில்ல...

எங்கயும் அப்பிடி ஆச்சாம்-ஆகவே- கோவபடாதீங்க - நிறைய!

பதிலா- அதன்மூலம் - நிகழ்ச்சி ஏற்பாடாளர்கள் -முயற்சி செய்கிறார்கள் என்று

என்று - புரிஞ்சு கொண்டால் -எல்லாம் சரி ஆகும்! :huh:

இவளவும்- வெண்புறா அமைப்பின் - நோக்கங்கள் - தெரிந்தவர்களுக்கு மட்டும்!

தெரிந்தும் - கோவபடுபவர்களுக்காக - அல்ல ! :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஜனவரி 14ம் திகதி கடலில் வீரகாவியமாகிய கிட்டண்ணாவிற்கும் ஏனைய போராளிகளுக்குமான அஞ்சலி நிகழ்வு 'மிச்சம்' என்னும் இடத்தில்; மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

எது மிகவும் முக்கயமான நிகழ்வு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

சகோதரி போரட்டத்தில் கலந்து தான் தமிழ்த்தேசிய ஆதரவை காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் இல்லை.

நீங்கள் குறிப்பிட்ட இருவருமே தங்கள் துறை சார்ந்து தங்களின் பங்களிப்பை செய்திருக்கின்றார்கள் இனியும் செய்வார்கள். இவர்கள் பாடிய பாடல்களை நீங்கள் கேட்டதில்லையா..?

ஈழத்தமிழர்களை பணம் பண்ணுவதற்காக பாவிக்கின்ற கூட்டம் என்று சொல்லிக்கொண்டு ஏன் அவர்கள் உங்களை பயன்படுத்த அனுமதிக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.