Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: 4 வயது சக்லனாவின் துணிச்சல்

 

 
ulaga_masala_3140813f.jpg
 
 
 

சைபீரியாவின் துவா ஆற்றுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் வசித்துவந்தாள் 4 வயது சக்லனா. தாத்தாவுக்குப் பார்வை கிடையாது. கணவரையும் பேத்தியையும் கவனித்து வந்த பாட்டி, சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் இறந்துபோனார். நகரத்தில் வசிக்கும் மகன், மகளிடம் தகவல் சொல்லவேண்டும் என்றால் கூட 5 மைல் தொலைவு செல்லவேண்டும். அருகில் எந்த வீடும் கிடையாது. வேறு வழியின்றி பாட்டி இறந்த தகவலை சக்லனாவிடம் சொல்லி அனுப்பினார் தாத்தா. மைனஸ் 42 சென்டிகிரேட் வெப்பநிலை என்பதால் ஆறு உறைந்திருந்தது. அதிகாலை 6 மணிக்கு மார்பளவு பனியில் நடக்க ஆரம்பித்தாள் சக்லனா. 3 மணி நேரங்கள் கழித்துப் பக்கத்து கிராமத்தை அடைந்தாள். பாட்டி இறந்த தகவலைச் சொன்னாள். அங்கிருந்தவர்கள் தொலைபேசி மூலம் சக்லனாவின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். “மிக மோசமான பருவநிலை. மார்பளவு பனியில் 4 வயது குழந்தை 5 மைல்களைக் கடந்துவந்தது ஆச்சரியமான விஷயம். ஓநாய்கள் உலவும் பகுதி. எந்தக் கால்நடைகளையும் அவை விட்டு வைப்பதில்லை. நல்லவேளை சக்லனாவுக்கு ஆபத்து எதுவும் வரவில்லை. சக்லனாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனாலும் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும். ஒரு மருத்துவருடன் சக்லனா வீட்டுக்குச் சென்று, பாட்டி இறந்ததை உறுதி செய்தோம். தாத்தாவைப் பாதுகாப்பாக அழைத்துவந்துவிட்டோம்” என்கிறார் சக்லனாவின் உறவினர். அரசியல்வாதிகளிலிருந்து பொதுமக்கள் வரை சக்லனாவின் துணிச்சலைப் பாராட்டுவதற்காக மருத்துவமனைக்கு வந்துகொண்டேயிருக்கிறார்கள்.

4 வயது சக்லனாவின் துணிச்சலை என்னவென்று சொல்வது?

பிரேசிலின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அன்ட்ரெஸ்ஸா லூகாஸும் லாரென் மெனெகானும் கரப்பான் பூச்சிகளைச் சேர்த்து பிரெட், கேக் போன்ற உணவுப் பொருட்களை உருவாக்கி வருகிறார்கள். “அடுத்த 10 ஆண்டுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். சத்தான உணவு இல்லாமல் மக்கள் துன்பத்துக்கு ஆளாவார்கள். அப்போது பூச்சிகளை உணவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை. சாதாரண கோதுமை மாவை விட கரப்பான் பூச்சிகள் சேர்த்த கோதுமை மாவில் 40% சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது வீட்டில் சுற்றித் திரியும் கரப்பான்பூச்சிகள் இல்லை. சுத்தமான இடங்களில் காய்கறிகளையும் பழங்களையும் உண்டு வாழும் சிறப்புக் கரப்பான்கள். இவற்றில் 70% புரோட்டீன் சத்துகள் உள்ளன. ஒமேகா 3, ஒமேகா 9 உட்பட அத்தியாவசியமான 9 சத்துகளில் 8 சத்துகள் இருக்கின்றன. பூச்சிகளை மாவாக மாற்றி, கோதுமை மாவில் கலந்துவிடுகிறோம். கோதுமை மாவுடன் ஒப்பிடும்போது 10% கரப்பான் மாவில் 49.16% புரோட்டீன் அதிகமாக இருப்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பூச்சி உணவுகள்தான் பிரதானமாக இருக்கப் போகின்றன” என்கிறார்கள் இந்த இளம் ஆராய்ச்சியாளர்கள்.

வந்துவிட்டது சத்துகள் மிகுந்த கரப்பான் பிரெட்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-4-வயது-சக்லனாவின்-துணிச்சல்/article9573392.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: வேக வைக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

 

 
oaktree_3141066f.jpg
 
 
 

ஜெர்மனியின் யுடின் காட்டில் உள்ள ஓர் ஓக் மரம், தனக்கென தபால் முகவரியைப் பெற்றிருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான காதலர்கள் இந்த மரத்துக்குக் கடிதங்கள் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். இவை அனைத்தும் காதலைச் சேர்த்து வைக்கும்படிச் சொல்லும் வேண்டுதல் கடிதங்கள். பெரும்பான்மையான காதலர்கள் திருமணத்தில் இணைந்திருக் கிறார்கள்! காதலர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் இந்த ஓக் மரத்துக்கு 500 வயதாகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டிலாகா அதிகாரியின் மகளை, சாக்லேட் உற்பத்தியாளரின் மகன் காதலித்தார். அதிகாரி காதலை ஏற்கவில்லை. காதலர்கள் ரகசியமாக இந்த ஓக் மரத்தில் உள்ள பொந்தில் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டனர். 1891-ம் ஆண்டு ஜூன் 2 அன்று இருவருக்கும் இந்த மரத்தின் கீழ் திருமணம் நடைபெற்றது. இந்தக் கதை அப்படியே வெளியில் பரவியது. காதலர்கள், தங்கள் காதல் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக மரப்பொந்தில் கடிதங்களை வைக்க ஆரம்பித்தனர். நேரில் வர முடியாதவர்கள் தபால் மூலம் கடிதங்களை அனுப்பினர். ஒருகட்டத்தில் கடிதங்களின் எண்ணிக்கை

அதிகமானது. காதலர்களைச் சேர்த்து வைக்கும் ஓக் மரத்துக்கென்று தபால் முகவரி அளிக்கப்பட்டது. பின்னர் உலகம் முழுவதிலுமிருந்து கடிதங்கள் வர ஆரம்பித்தன. 3 மீட்டர் உயரத்திலிருக்கும் மரப்பொந்தில் கடிதங்களை வைக்க வேண்டும் என்றால் ஓர் ஏணியில் ஏறித்தான் செல்ல வேண்டும். இங்குள்ள கடிதங்களை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம், படிக்கலாம், பதில்கூட அனுப்பலாம். பெரும்பாலான காதலர்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. நூறு திருமணங்கள் இந்த மரத்தடியிலேயே நடந்திருக்கின்றன.

காதலர்களைத் திருமணத்தில் இணைக்கும் அதிசய மரம்!

குழந்தைகளுக்கு வேக வைக்காத குக்கீ மாவைச் சாப்பிடப் பிடிக்கும். நியூயார்க்கில் உள்ள டிஓ குக்கீ கடையில் வேக வைக்காத குக்கீ மாவுகளைச் சுவைக்கப் பெரியவர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நிறுவனர் கிறிஸ்டென் டோல்மன், “ஒருமுறை குக்கீ கடைக்குச் சென்றோம். அங்கே குக்கீகள் தீர்ந்துவிட்டன. வேக வைக்காத மாவை வாங்கிச் சுவைத்தோம். பிரமாதமாக இருந்தது. விரைவில் குக்கீ மாவு கடை ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்தேன். என் திருமணத்துக்கு 2 மாதங்களுக்கு முன்பு கோமா நிலைக்குச் சென்றேன். 3 வாரங்களுக்குப் பிறகு சுயநினைவு வந்தது. வாழ்க்கை மிகவும் சிறியது. அதில் என் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக குக்கீ மாவு கடையை ஆரம்பித்துவிட்டேன். விதவிதமான சுவைகளில் குக்கீ மாவுகளை அறிமுகம் செய்தேன். வேகமாகப் பிரபலமானது. காலை 10 மணிக்குக் கடையைத் திறப்போம். 8.30 மணிக்கே மக்கள் வரிசையில் காத்திருப்பார்கள். ஒரு நாளைக்கு 680 கிலோ குக்கீ மாவுகளை விற்பனை செய்கிறோம். 13 சுவைகளில் குக்கீ மாவுகள் கிடைக்கின்றன. ஒரு கப் குக்கீ மாவு 267 ரூபாய். எங்கள் குக்கீ மாவு பாதுகாப்பானது. மாவை வறுத்துதான் பயன்படுத்துகிறோம்” என்கிறார் கிறிஸ்டென் டோல்மன்.

வேக வைக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வேக-வைக்க-வேண்டாம்-அப்படியே-சாப்பிடலாம்/article9575091.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இரண்டு கால்களுடன் வலம் வரும் சூப்பர் சிமோன்!

 

 
cat_3141560f.jpg
 
 
 

நியூசிலாந்தின்,ஆக்லாந்தில் வசிக்கும் ராபர்ட், 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் ஒரு காலை இழந்த பூனையைத் தத்தெடுத்தார். மூன்று கால்களுடன் சிமோன் இயல்பாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் பக்கத்துவீட்டு நாய், சிமோனை மிக மோசமாக தாக்கியது. அடிபட்ட சிமோனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் ராபர்ட். “மிக மோசமான பாதிப்பு. ஒரு காலை எடுத்தால்தான் சிமோன் பிழைக்கும் என்றார் மருத்துவர். வேறு வழியின்றி சம்மதித்தோம். நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு சிமோன் உடல் தேறியது. நடக்க ஆரம்பித்தபோது, தன்னுடைய காலைத் தேடும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு ஆச்சரியம். தனக்கு இன்னொரு கால் இல்லை என்ற எண்ணமே சிமோனுக்கு ஏற்படவில்லை. இரண்டு கால்களுடன் மெதுவாக நின்று பழகியது. பிறகு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தது. சிமோன் உயிர்ப் பிழைத்து, இரண்டு கால்களோடு வாழ்க்கையை அழகாக எதிர்க்கொண்ட விதத்துக்கு முன்னால் நாங்கள் சிகிச்சைக்காகச் செலவு செய்த 14.5 லட்சம் ரூபாய் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் இன்னும் இயல்பாக மாறிவிட்டது. வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் எதிர்கொள்கிறது. சிமோனைப் பார்த்து மனிதர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கிறது” என்கிறார் ராபர்ட்.

இரண்டு கால்களுடன் வலம் வரும் சூப்பர் சிமோன்!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசித்து வருகிறார் ஹுவா யுன்கிங் (62). கடந்த 36 ஆண்டுகளாக தனது மகளுடன் சேர்ந்து ஜென்ஜியாங் ஏரியில் புகைப்படம் எடுத்து வருகிறார். ஒரு வயது ஹுவாஹுவாவை அழைத்துக்கொண்டு ஏரிக்கு வந்தபோது, தற்செயலாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அடுத்த ஆண்டும் அதே ஏரிக்கு மகளுடன் வந்து, ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகுதான் ஒவ்வோர் ஆண்டும் தன் மகளுடன் ஏரியில் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கடந்த 36 ஆண்டுகளாக அப்பாவும் மகளும் அதே ஏரியில் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். 1998-ம் ஆண்டு மட்டும் ஹுவாஹுவா விடுமுறைக்காக வெளியூர் சென்றுவிட்டார். 36 ஆண்டுகளில் 35 புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை வரிசையாக வைத்துப் பார்க்கும்போது, ஹுவாஹுவாவின் வளர்ச்சி தெரிகிறது. இவர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கும் ஏரியும் பல மாற்றங்களைச் சந்தித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஹுவாஹுவாவுக்கு திருமணமாகி, குழந்தைகள் பிறந்தபோதும் பேரன், பேத்தியுடன் சேர்ந்து ஏரியில் புகைப்படம் எடுப்பதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ஹுவா யுன்கிங்.

கடந்த காலத்தை ஆவணப்படுத்தும் புகைப்படங்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் வின்னி ஓ ஒப்பனைக் கலைஞராகவும் மாடலாகவும் இருக்கிறார். இதுவரை ரூ.34 லட்சம் செலவு செய்து, 110 அழகு சிகிச்சைகளை மேற்கொண்டு, வேற்று கிரகவாசியாகத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். “பல காரணங்களுக்காக அழகு சிகிச்சைகளைச் செய்து கொள்கிறார்கள். எனக்கு சின்ன வயதிலிருந்தே ஏலியன் மேல் ஆர்வம் அதிகம். 17 வயதிலிருந்து ஒவ்வொரு உறுப்பையும் சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டு வருகிறேன். இந்த உலகத்திலிருக்கும் பாலினம், இனம், மொழி பாகுபாடெல்லாம் எனக்குக் கிடையாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். ஹாலிவுட்டில் என்னை ஏலியனாகப் பயன்படுத்த இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்கிறார் வின்னி ஓ.

ஏலியனாக மாறிய மனிதர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இரண்டு-கால்களுடன்-வலம்-வரும்-சூப்பர்-சிமோன்/article9577163.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அசர வைக்கும் சோப்பு சிற்பங்கள்!

 

 
ulagam_3141923f.jpg
 
 
 

இத்தாலியைச் சேர்ந்த 26 வயது டேனியல் பார்ரெஸி உணவுப் பொருள் சிற்பக் கலைஞர். உலக சாம்பியன் பட்டங்களையும் பல்வேறு விருதுகளையும் பெற்றவர். இவரது சமீபத்திய சோப்பு சிற்பங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. 7 வயதிலிருந்தே உணவுப் பொருட்களில் சிற்பங்களைச் செதுக்க ஆரம்பித்துவிட்டார் டேனியல். சொந்தக் காரணங்களால் இவரால் பள்ளிக் கல்விக்கு மேலே படிப்பைத் தொடர முடியவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமையல் கலையில் ஆர்வம் வந்து, படிக்க ஆரம்பித்தார். அங்கே தன்னுடைய சிற்பக் கலையை எடுத்துக் காட்டும் வாய்ப்பு கிடைத்தது. அதிக மதிப்பெண்களுடன் வெளிவந்தபோது, அவருக்கு உணவுப் பொருள் சிற்பங்களின் மீது ஈடுபாடு அதிகரித்தது. அதையே தன் தொழிலாக எடுத்துக்கொண்டார். சர்வதேச அளவில் பதக்கங்களையும் பரிசுகளையும் குவித்து வருகிறார். உலகின் மிகச் சிறந்த உணவுப் பொருள் சிற்பக் கலைஞர்களில் முக்கியமானவர் டேனியல். தன்னுடைய திறமையைப் பல்வேறு பொருட்களில் செய்து பார்க்க நினைத்தார். சோப்பு சரியான தேர்வாக அமைந்தது. உணவுப் பொருட்களில் வடிக்கும் சிற்பங்கள் சில நாட்களுக்குத்தான் தாக்குப் பிடிக்கும். ஆனால் சோப்பு சிற்பங்களுக்கு அழகும் ஆயுளும் அதிகம். “நான் சிற்பம் வடிப்பது ஒரு மேஜிக் மாதிரிதான் தெரிகிறது. கத்தியைத் தொட்டவுடன் மூளை கற்பனையை விரல்களுக்கு அனுப்பி வைக்கிறது. விரல்கள் சில மணி நேரங்களில் சோப்பை ஒரு சிற்பமாக மாற்றி விடுகின்றன” என்கிறார் டேனியல்.

அடடா! அசர வைக்கின்றனவே இந்த சோப்பு சிற்பங்கள்!

உலகம் முழுவதும் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் வணிகமயமாகிவிட்டன. ரஷ்யாவில் 101 ரோஜாக்களைக் கொண்ட பெரிய பூங்கொத்துடன் 10 நிமிடங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு 900 ரூபாயிலிருந்து 1,100 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. “மகளிர் தினத்தின்போது தோழிகளுக்கு மலர்க்கொத்து கொடுத்து, புகைப்படம் எடுத்துக்கொள்ள பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் பணம் செலவு செய்ய முடிவதில்லை. அவர்களுக்காகவே இந்தச் சேவையை ஆரம்பித்திருக்கிறேன். எங்களிடம் விதவிதமான ரோஜாக்களில் மிகப் பெரிய பூங்கொத்துகள் இருக்கின்றன. தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தால், வீடுகளுக்கே பூங்கொத்து, புகைப்படக்காரருடன் சென்றுவிடுவோம். இந்த ஆண்டு எங்கள் சேவைக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பணம் இல்லாததால் ஒருவர் தன் தோழிக்கு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை என்ற சூழல் இனி ஏற்படாது. வாழ்த்துச் சொல்வதற்குத் தோழி இல்லாதவர்களுக்கு ஒரு மாடலையும் ஏற்பாடு செய்து, பூங்கொத்து அளிக்கச் செய்கிறோம்” என்கிறார் இந்த நிறுவனத்தை நடத்திவரும் யூஜின்.

ரஷ்ய புரட்சிக்கே வித்திட்ட மகளிர் போராட்டங்கள் விளைந்த மண்ணில், இப்படி ஒரு மகளிர் தினக் கொண்டாட்டமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அசர-வைக்கும்-சோப்பு-சிற்பங்கள்/article9578875.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அம்மாவுக்காகப் பெண் உடைகளை அணியும் லி யிங்லாய்!

 

 
 
 
 
lady_3142318f.jpg
 
 
 

சீனாவைச் சேர்ந்த 74 வயது லி யிங்லாய், கடந்த 14 ஆண்டுகளாக வார இறுதி நாட்களில் பெண்கள் உடைகளை அணிந்துகொள்கிறார். குன்மிங் பகுதியிலுள்ள க்ரீன் லேக் பூங்காவில் நடனமாடி சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கிறார். இது இவரது தொழில் அல்ல. தன்னுடைய 96 வயது அம்மாவை மகிழ்விப்பதற்கே பெண் உடைகளை அணிவதாகச் சொல்கிறார். “என் அம்மாவுக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று மிகவும் விரும்பினார். சின்ன வயதில் எனக்குப் பெண் குழந்தைகளுக்கான உடைகளைப் போட்டு அழகு பார்ப்பார். விவரம் அறிந்தபிறகு, நான் பெண்களின் உடைகளைப் போட்டுக்கொள்ள மறுத்துவிட்டேன். அவர் மிகவும் கவலையடைந்தார். ஆனால் நான் உறுதியாக மறுத்துவிட்டேன். அம்மா மீது அளவற்ற அன்பும் மரியாதையும் எனக்கு இருந்தது. அதனால் திருமணம் செய்துகொள்ளாமல் அம்மாவுடனே இருந்துவிட்டேன். எனக்கு வயதானபோதுதான் அம்மாவின் விருப்பத்தை இப்படி உதாசீனப்படுத்திவிட்டோமே என்ற எண்ணம் வந்தது. அம்மாவை மகிழ்விக்கவே பெண் உடைகளை அணிய ஆரம்பித்தேன். உடைகளுக்கு ஏற்ப கண்ணாடி, காதணிகள், மோதிரம், விரல்களுக்கு நகப்பூச்சு, சடை எல்லாம் போட்டுக்கொண்டேன். என் அம்மாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவ்வளவு அலங்காரம் செய்து வீட்டிலேயே ஏன் இருக்கணும் என்று தோன்றியது. அதனால் அருகில் இருக்கும் பூங்காவுக்குச் சென்று நடனமாட ஆரம்பித்தேன். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்” என்கிறார் லி யிங்லாய்.

அம்மாவுக்காகப் பெண் உடைகளை அணியும் லி யிங்லாய்!

நெதர்லாந்தில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கிவருகிறது பன்றிகள் சரணாலயம். இங்கே கசாப்புக் கடைகளில் இருந்து மீட்கப்பட்ட பன்றிகள், நோய்வாய்ப்பட்ட பன்றிகள், ஆதரவற்ற பன்றிகளுக்கு நல்ல சூழ்நிலை, நல்ல உணவு, மசாஜ் போன்றவை அளிக்கப்பட்டு வளர்க்கப் படுகின்றன. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை டேஃபின் வெஸ்டர்ஹோஃப் என்ற விலங்குகள் நல ஆர்வலர் நடத்தி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பன்றிகளைக் காப்பாற்றி, நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். “நான் முழு நேரமாக இங்கே பணியாற்றி வருகிறேன். பன்றிகளைக் கவனித்துக் கொள்ள தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். பன்றிகளுக்கான உணவை நானே தயார் செய்துவிடுவேன். இடத்தைச் சுத்தம் செய்வது, பன்றி களுக்கு மசாஜ் செய்வது, குளிப்பாட்டுவது, விளையாடுவது என்று நாள் முழுவதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். உடல் நலம் குன்றிய பன்றிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வைத்திருக்கி றோம். எங்கள் சரணாலயத்துக்குப் பார்வையாளர்கள் அதிகம் வருகிறார் கள். வார இறுதி நாட்களில் பட்டறைகள் நடத்தி வருகிறோம். பன்றிகள் குறித்த புரிதல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். பார்வையாளர்கள் பன்றிகளுடன் பழகலாம். மசாஜ் செய்துவிடலாம். விளையாடலாம். உணவளிக்கலாம். சில பன்றிகள் வாடிக்கையாளர்களை நினைவில் வைத்துக்கொண்டு, அவர்களைக் கண்டதும் மசாஜ் செய்து விடச் சொல்கின்றன, கட்டிப் பிடிக்கச் சொல்கின்றன. பன்றிகளும் செல்லப் பிராணியாக வளர்க்க ஏற்ற விலங்குகள்தான். மறதி நோய், மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட பன்றிகளைத் தனியே வைத்திருக்கிறோம். அவற்றை யாரும் தொந்தரவு செய்ய அனுமதிப்பதில்லை. எங்களின் சேவையைப் பார்த்து ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் நன்கொடை அளிக்கிறார்கள்” என்கிறார் டேஃபின் வெஸ்டர்ஹோஃப்.

பன்றிகளுக்காக ஒரு சரணாலயம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அம்மாவுக்காகப்-பெண்-உடைகளை-அணியும்-லி-யிங்லாய்/article9580628.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இனி தந்தையாலும் உணர முடியும்!

 

 
 
wat_3143431h.jpg
 

ஆரோக்கியம் குறித்து கணவனுக்கு இன்னும் அதிகமான ஈடுபாடு இருக்க வேண்டும் என்பதற்காக டென்மார்க்கைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் பிரேஸ் லெட்டை உருவாக்கி யிருக்கிறது. வயிற்றுக் குள் இருக்கும் குழந்தை யின் நகர்தல், உதைத்தல் போன்றவற்றை உடனுக் குடன் அப்பாவும் இந்த பிரேஸ்லெட் மூலம் உணர்ந்துகொள்ள முடியும். நடைப் பயிற்சிக்காகத் தற்போது கையில் அணியக்கூடிய பிரேஸ்லெட்டைப் போலவே Fibo பிரேஸ்லெட்டும் உருவாக்கப்பட்டிருந்தாலும் இதன் நோக்கம் முற்றிலும் மாறுபட்டது. தாயின் வயிற்றுப் பகுதியில் ஒரு கண்காணிப்புக் கருவி இணைக்கப்பட்டிருக்கும். அந்தக் கருவியிலிருந்து பிரேஸ்லெட்டுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கும். குழந்தையின் அசைவுகளை மிகத் துல்லியமாக இந்த பிரேஸ்லெட் தந்தைக்கு உணர்த்திவிடும். அருகில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பரிசோதனைகளின்போது ஏராளமான ஆண்கள் தங்கள் குழந்தையின் அசைவுகளை உணர்ந்து, இதயத் துடிப்பை அறிந்து பரவசப்பட்டிருக்கிறார்கள். “இதுபோன்ற உணர்வுகளை நான் இதுவரை பெற்றதில்லை. வார்த்தைகளில் சொல்ல முடியாத சந்தோஷம், பரவசம் உண்டாகியிருக்கிறது. ஃபிபோ பிரேஸ்லெட் அணிந்த பிறகு குழந்தையின் மீது மட்டுமல்ல, மனைவியின் மீதும் அன்பும் மதிப்பும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது” என்கிறார் ஒரு தந்தை. கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபிபோ பிரேஸ்லெட், மேலும் சில பரிசோதனைகளுக்குப் பிறகு 2018-ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது. விலையைப் பற்றி தகவல் இல்லை.

கர்ப்பத்திலிருந்துக்கும் குழந்தையின் அசைவுகளை இனி தந்தையாலும் உணர முடியும்!

லாவோஸிலிருந்து வியட்நாமுக்குச் செல்லப் பிராணியாக அழைத்து வரப்பட்டது டோர்லே கரடி. 4 வயதானபோது உரிமையாளர்களைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் சிறிய கூண்டுக்குள் கரடியை அடைத்து வைத்துவிட்டனர். தூங்கும் நேரம் தவிர்த்து, கூண்டிலிருந்து வெளியே வருவதற்காகக் கம்பியை எப்பொழுதும் கடித்தபடியே இருக்கும் டோர்லே. இதனால் கரடியின் பற்களும் ஈறுகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அனிமல்ஸ் ஏசியாவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் டோர்லேவை மீட்டு, தங்கள் சரணாலயத்துக்கு அழைத்துவந்தனர். சிகிச்சையளித்து, இயற்கையான சூழலில் வசிக்கவிட்டனர். அதற்குப் பிறகு டோர்லேவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை குறைந்து, 10 வயதில் முழுப் பார்வையையும் இழந்துவிட்டது. “பார்வை முற்றிலும் இழந்தாலும் டோர்லே அதற்கு ஏற்றார்போல தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது. பார்க்கும் திறன் குறைந்து வரும்போதே, மற்ற புலன்களை அதிகம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டது. மிகவும் அமைதியாக இருந்த டோர்லே, பார்வையிழந்த பிறகு ‘டிராமா ராணி’ என்று பெயர் வாங்கிவிட்டது. எதையும் பார்க்க இயலாததால், அதைச் சரிகட்டும் விதத்தில் அடிக்கடி உரக்கக் குரல் கொடுக்கும். அழ ஆரம்பித்துவிடும். அருகில் சென்று குரல் கொடுத்தால் அமைதியாகிவிடும். காட்டில் உள்ள மூங்கில்களை உடைத்து விளையாடுவதில் ஆர்வம் அதிகம். பிறந்ததிலிருந்து டோர்லே மிகக் குறைவாகவே மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறது. அதனால் டோர்லேவை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் நாங்கள் தனிக்கவனம் செலுத்திவருகிறோம். மீதி இருக்கும் வாழ்நாளை மிகச் சிறப்பாகக் கழிக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்கிறார் அனிமல்ஸ் ஏசியா அதிகாரி க்வைன்.

பார்வையிழந்தாலும் தன்னம்பிக்கையுடன் வாழும் கரடி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இனி-தந்தையாலும்-உணர-முடியும்/article9583028.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: 30 குழந்தைகளுக்குத் தாயான பெண் துறவி!

 

 
ulk_3143789f.jpg
 
 
 

புத்த மதத்தைச் சேர்ந்த சாங்மியாவோ, சீனாவின் நிங்டு பகுதியிலிருக்கும் ஹைலியன் புத்த மடாலயத்தில் மூத்த பெண் துறவியாக இருக்கிறார். கடந்த 37 ஆண்டுகளில் 30 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். 15 வயதில் துறவு பூண்ட சாங்மியாவோ, 1980-ம் ஆண்டு புத்த ஆலயத்தின் வாயிலில் ஒரு பெண் குழந்தை ஆதரவின்றி தரையில் கிடந்ததைப் பார்த்தார். எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்த குழந்தைக்கு உதவ ஒருவரும் முன்வரவில்லை. குழந்தைக்குச் சிகிச்சையளித்தார். பிறகு தன் மகளாக தத்தெடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு மடாலயத்தின் வாயிலிலும் அருகில் உள்ள ஆலயத்திலும் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளை வரிசையாகத் தத்தெடுத்து, வளர்த்தார். இதைக் கேள்விப்பட்டுச் சிலர் தங்களின் நோய்வாய்ப்பட்ட, மாற்றுத்திறனாளி குழந்தைகளை வாயிலில் போட்டுவிட்டுச் சென்றனர். 37 ஆண்டுகளில் 30 பெண் குழந்தைகளுக்கு அம்மாவானார் சாங்மியாவோ. அனைவரையும் அவர்கள் விரும்பியபடி நன்றாகப் படிக்க வைத்தார். சொந்தக் காலில் நிற்க வைத்தார். அதேசமயம் அவர்களுக்கு எளிமையாக வாழும் விதத்தையும் கற்றுக் கொடுத்தார். மிகச் சிறப்பாகப் படித்த குழந்தைகள், சீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றனர். சில குழந்தைகள் தங்கள் அம்மாவைப் போல புத்த துறவியாக மாறினர். 30 குழந்தைகளில் 20 குழந்தைகள் பெரியவர்களாகிவிட்டனர். 10 குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். “30 பேரும் என் மகள்கள் என்பதால், என்னுடனேயே தங்க வைத்துக்கொண்டேன். ஒரு காப்பகம் ஆரம்பித்திருந்தால் இன்னும் அதிகமான குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. விரைவில் ஒரு காப்பகம் ஆரம்பிக்கும் எண்ணமும் இருக்கிறது. பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள். பெற்ற குழந்தைகளை ஒருநாளும் பாலினம், நோய் போன்ற காரணங்களால் கைவிடாதீர்கள். அது போன்ற ஒரு துயரம் எதுவும் இல்லை” என்கிறார் சாங்மியாவோ.

30 குழந்தைகளுக்குத் தாயான பெண் துறவி!

மாலத்தீவைச் சுற்றிப் பார்க்க ஆண்டுக்கு 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். அங்கே தினமும் சேரும் டன் கணக்கான குப்பைகளைக் கொட்டுவதற்கு இடமில்லை. தலைநகர் மாலேவிலிருந்து சில மைல் தூரத்தில் இருக்கிறது திலாஃபுஷி தீவு. 1991-ம் ஆண்டு முதல் இது குப்பை கொட்டக்கூடிய தீவாக மாறிவிட்டது. தினமும் 33 ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கிருந்து கடல் அலைகளால் அரிக்கப்படும் குப்பைகள் மாலே கடற்கரைகளில் கரை சேர்கின்றன. சில பெரிய நிறுவனங்களின் கிடங்குகளும் வங்கதேசத்தைச் சேர்ந்த 150 தொழிலாளர்களுக்கான தங்கும் இடங்களும் இங்கே அமைந்துள்ளன. குப்பைகளை எடுத்துச் செல்பவர்களின் பொறுமையின்மையால் முறையாகக் குப்பைகளைக் கொண்டு செல்வதில்லை. இதனால் போகும் வழியிலேயே கடலுக்குள் குப்பைகள் விழுந்துவிடுகின்றன. குப்பை மேலாண்மை அரசாங்கத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருந்துவருகிறது. 2011-ம் ஆண்டு முதல் குப்பைகளைக் கொட்டுவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதி குப்பைகள் மறுசுழற்சி செய்வதற்காக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

குப்பைகளின் நாடா இந்தியா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-30-குழந்தைகளுக்குத்-தாயான-பெண்-துறவி/article9584857.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இமோஜி மலைப் பாம்பு!

 

 
 
tui_3144201f.jpg
 
 
 

ஜார்ஜியாவைச் சேர்ந்த பிராணிகள் வளர்ப்பாளர் ஜஸ்டின் கோபில்கா. 8 ஆண்டுகள் செய்த பரிசோதனைகள் மூலம் ஒரு மலைப் பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கிவிட்டார். உயிரினங்களின் நிறத்தையோ, டிசைனையோ மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் ஜஸ்டின். இதுவரை அவர் உருவாக்கிய விலங்குகளில் இமோஜி பால் மலைப் பாம்பு அளவுக்கு வியக்க வைத்த விலங்கு எதுவும் இல்லை. அல்பினோ வகையைச் சேர்ந்த வெள்ளை மலைப் பாம்பின் உடலில் மஞ்சள் வண்ண இமோஜிகளை உண்டாக்கி சாதனை படைத்திருக்கிறார். ஆப்பிரிக்க மலைப் பாம்புகளில் இது சிறியது. சாதாரணமாக ஒரு விலங்கை 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பார். இமோஜி மலைப் பாம்பு 3 லட்சம் வரை விலை போகும் என்றாலும் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்கிறார் ஜஸ்டின்.

இமோஜி மலைப் பாம்பு!

இத்தாலியைச் சேர்ந்த 57 வயது கேப்ரில்லாவும் 69 வயது லூகி அம்ப்ரோசிஸும் தங்களுக்கு குழந்தை இல்லை என்பதால், ஒரு குழந்தையை தத்தெடுக்க முயன்றனர். இத்தாலிய சட்டப்படி வயதான தம்பதியர் தத்தெடுக்க அனுமதி இல்லை. வேறு வழியின்றி வேறொரு நாட்டுக்குச் சென்று, செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றனர். 2010-ம் ஆண்டு வயதான தம்பதியர் பெற்ற குழந்தை என்று தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றனர். உறவினர்களும் நண்பர்களும் கடுமையாக எதிர்த்தனர். எதையும் பொருட்படுத்தாமல் குழந்தையை மிகவும் கவனமாகவும் அன்பாகவும் வளர்த்து வந்தனர். 15-வது மாதத்தில் குழந்தையுடன் கேப்ரில்லாவும் லூகியும் வெளியே கிளம்பினர். காரில் ஏறும்போது பால் பாட்டில் எடுத்து வருவதற்காக வீட்டுக்குள் சென்றார் கேப்ரில்லா. போனை எடுப்பதற்காக பின் சீட்டில் குழந்தையை பத்திரமாக வைத்துவிட்டுச் சென்றார் லூகி. பக்கத்து வீட்டுக்காரர்கள் காரில் குழந்தை தனியாக இருந்ததைப் புகைப்படம் எடுத்து, காவல்துறையிடம் புகார் கொடுத்து விட்டனர். வயதான காலத்தில் உங்களால் குழந்தையை சிறப்பாகக் கவனிக்க இயலவில்லை. அதனால் இந்தக் குழந்தையைக் காப்பகத்துக்கு எடுத்துச் செல்கிறோம் என்றார்கள் காவலர்கள். கேப்ரில்லாவும் லூகியும் நிலைகுலைந்து போனார்கள். வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. “ஒரு குழந்தையை வளர்க்கும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இல்லை. அதனால் நீங்கள் பெற்ற குழந்தையாக இருந்தாலும் உங்களிடம் கொடுக்க முடியாது. இளம் தம்பதியர் யாருக்காவது குழந்தையை தத்து கொடுத்துவிடலாம். இது பெற்றோருக்கு துயரம் மிகுந்த விஷயம்தான் என்றாலும் குழந்தையின் எதிர்காலம்தான் முக்கியம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டது. மனம் தளராமல் கேப்ரில்லாவும் லூகியும் தொடர்ந்து மேல் முறையீடு செய்து, 2016-ம் ஆண்டு சாதகமான முடிவை பெற்றனர். ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாகக் குழந்தை ஒரு வீட்டில் வளர்ந்து வருகிறாள். அவளை வலுக்கட்டாயமாக மீண்டும் பெற்றோரிடம் கொண்டுவந்தால், அவள் மனநலம் பாதிக்கப்படலாம் என்பதால் குழந்தையைக் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 75 வயது லூகியும் 63 வயது கேப்ரில்லாவும் தங்கள் 7 வயது மகளைக் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்து, காத்திருக்கின்றனர்.

பெற்றோருக்கு அநீதி இழைத்த சட்டம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இமோஜி-மலைப்-பாம்பு/article9586794.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: டிஸ்னி திரைப்படத்தில் வரும் மந்திர ரோஜா போலிருக்கிறதே!

 

 
 
rose_3144575h.jpg
 

லண்டனைச் சேர்ந்த ஆடம்பர மலர்கள் தயாரிக்கும் நிறுவனம், 3 ஆண்டுகள் வாடாத ரோஜா மலர்களை உருவாக்கியிருக்கிறது. 100% இயற்கையான ரோஜா மலர்கள் இவை. இந்த ரோஜா செடிக்கு சூரிய ஒளியோ, தண்ணீரோ தேவையில்லை. ஆனா லும் 3 ஆண்டுகள் வாடாமல் ஒரு கண்ணாடிக் குடுவைக் குள் அப்படியே இருக்கும். எப்பொழுதாவது கண் ணாடிக் குடுவையை எடுக்க நேர்ந்தாலும் ரோஜாக்கள் அப்படியேதான் இருக்கின்றன. 30 கண்கவர் நிறங்களில் ரோஜாக்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த வாடாத ரோஜாக்களின் விலை மிகவும் அதிகம். 13 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை ரோஜாக்களின் வகைகளுக்கு ஏற்ப விற்பனை செய்து வருகிறார்கள். இயற்கை மலர்கள் வாடாமல் இருப்பதற்கான காரணம், கனிம வளம் நிறைந்த எரிமலை மண் என்கிறார்கள். ஈக்வடாரில் உள்ள எரிமலை மண் ரோஜா இதழ்களை, மிக உறுதியாக மாற்றி விடுகின்றன. சாதாரண ரோஜா இதழ்களைவிட 10 மடங்கு தடிமனாகவும் 5 மடங்கு பெரிதாகவும் பூக்க வைக்கின்றன. Forever Rose என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோஜாக்களில் கருஞ்சிவப்பு ஒற்றை ரோஜா அதிகமாக விற்பனையாகி வருகிறது.

டிஸ்னி திரைப்படத்தில் வரும் மந்திர ரோஜா போலிருக்கிறதே!

உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட தீவு மிகிங்கோ. கென்யாவின் லேக் விக்டோரியாவில் உள்ள சின்னஞ்சிறு தீவு. 0.49 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் இந்தத் தீவில் 131 வீடுகள் இருக்கின்றன. சுமார் 1000 மனிதர்கள் வசிக்கின்றனர். கென்யாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் இருப்பதால் இரு நாடுகளும் இந்தத் தீவுக்குச் சொந்தம் கொண்டாடி வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக கென்யா வரைபடத்தில் மிகிங்கோ இடம்பெற்றுள்ளது. 1991-ம் ஆண்டு கென்யாவைச் சேர்த டால்மாஸ் டெம்போ, ஜார்ஜ் கிபேப் என்ற இரு மீனவர்கள் இந்தத் தீவுக்கு வந்து இறங்கினார்கள் என்கிறார்கள் கென்யர்கள். உகாண்டாவைச் சேர்ந்த ஜோசப் உன்சுபுகா என்ற மீனவர் தன் நண்பர்களுடன் இந்தத் தீவில் காலடி எடுத்து வைத்துள்ளார் என்கிறார்கள் உகாண்டா மக்கள். ஆனால் இன்று இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வசித்துவருகின்றனர். இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு தீவுக்குள் பல விஷயங்களைக் கொண்டுவந்துள்ளன. 2008-ம் ஆண்டு உகாண்டா ராணுவத்தை அனுப்பி, தீவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இரு நாடுகளுக்கான போட்டியில் தீவு எப்பொழுதும் பதற்றமாகவே இருந்துவந்தது. 2016-ம் ஆண்டு இரு ஆப்பிரிக்க நாடுகளும் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தனர். இரு நாடுகளும் மீனவர்களிடமிருந்து வரி வசூலிக்க வேண்டும், இரு நாடுகளும் காவலர்களை அனுப்பி கடல் கொள்ளையர்களிடமிருந்து தீவைக் காப்பாற்ற வேண்டும் என்று பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இன்று இந்தத் தீவில் கென்ய மீனவர்களும் உகாண்டா மீனவர்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்துவருகின்றனர். இந்தத் தீவைச் சுற்றிலும் உள்ள நீரில் மீன்கள் அளவுக்கு அதிகமாகக் கிடைக்கின்றன. மிகிங்கோவுக்கு அருகிலேயே யுசிங்கோ என்ற சற்றுப் பெரிய தீவு இருக்கிறது. ஆனால் பேய் பயம் காரணமாக ஒருவரும் அங்கே குடியேறவில்லை.

ஒருவேளை ராபின்சன் க்ரூசோ இறங்கிய தீவாக இருக்குமோ!

http://tamil.thehindu.com/business/உலக-மசாலா-டிஸ்னி-திரைப்படத்தில்-வரும்-மந்திர-ரோஜா-போலிருக்கிறதே/article9588816.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இதை வைத்து என்னதான் செய்வது?

 

 
 
vinkal_3144942f.jpg
 
 
 

சீனாவைச் சேர்ந்த லியு ஃபெய், விண்கல் ஒன்றைப் பரிசாக அளித்து, காதலியிடம் திருமணக் கோரிக்கை வைத்திருக்கிறார். வழக்கத்துக்கு மாறான இந்தத் திருமணக் கோரிக்கை சீனா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 33 டன் எடை கொண்ட ராட்சத விண்கல்லைத்தான் பரிசாக அளித்திருக்கிறார்! கடந்த ஆண்டு லியு ஃபெய்யும் அவரது தோழியும் பழம்பெருமை வாய்ந்த கஷ்கர் நகருக்குச் சென்றனர். அங்கே பழம்பொருட்கள், அரிய பொருட்கள் இடம் பெற்ற அருங்காட்சியகத்தைப் பார்த்தனர். மிகப் பெரிய விண்கல் ஒன்றைக் கண்டதும் லியு ஃபெய்க்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தோழி அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. எல்லாப் பொருட்களும் பூமியில் இருந்து கிடைத்தவை. இந்த விண்கல் மட்டும் வானிலிருந்து வந்தது என்பதால் இது எவ்வளவு முக்கியமானது என்று அருமை, பெருமைகளை எடுத்துரைத்தார் லியு ஃபெய். அவரது தோழியும் ஆச்சரியமடைந்தார். இருவரின் நட்பு, காதலானது. திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவானபோது, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தன் காதல் எவ்வளவு உன்னத மானது என்பதைக் காட்டுவதற்காகவும் விண்கல்லை வாங்கி, பரிசளிக்க முடிவு செய்தார் லியு ஃபெய். தான் வீடு வாங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த ஒரு கோடி ரூபாயில் விண்கல்லை விலைக்கு வாங்கினார். பொதுமக்கள் கூடக்கூடிய ஓரிடத்தில் விண்கல்லை வைத்து, சிவப்புத் துணியால் மூடினார். தன் காதலியை அழைத்து வந்து, விண்கல்லுக்கு முன் நின்று, பூங்கொத்துடன் திருமணக் கோரிக்கை வைத்தார். விண்கல் மீது இருந்த சிவப்புத் துணியை விலக்கியதும் காதலியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார். தற்போது சீனாவிலேயே அதிக எடை கொண்ட விண்கல் லியு ஃபெய்யிடம்தான் இருக்கிறது.

அரிய பரிசாக இருந்தாலும் இதை வைத்து என்னதான் செய்வது?

ஸ்லோவாகியாவைச் சேர்ந்த 26 வயது ஸ்டீபன் போல்காரி, இது வரை 3,500 மொபைல் போன்களைச் சேகரித்து வைத்திருக் கிறார். 15 வயதிலிருந்தே ஸ்டீபனுக்கு மொபைல் போன்கள் மீது ஆர்வம் வந்துவிட்டது. தொழில்நுட்பரீதியாக நிறைய கற்றுக் கொண்டார். ஒவ்வொரு பிராண்ட் மொபைல் போனும் புதிய தகவல் களை இவருக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மொபைல் போன்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார். பழைய போன்களைச் சேகரித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் 1000 போன்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார். பிறகு தன்னுடைய சேமிப்பில் இல்லாத போன்களை மட்டும் தேடித் தேடிச் சேகரிக்க ஆரம்பித்தார். இன்று 1,231 மாடல்களில் 3,500 மொபைல் போன்கள் இருக்கின்றன. “செங்கல் போலிருந்த நோக்கியா 3310 மாடலிலிருந்து தொடு திரை ஸ்மார்ட் போன்கள் வரை குறுகிய காலத்தில் மொபைல் போன்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது” என்கிறார் ஸ்டீபன் போல்காரி. இவரது வீட்டிலேயே மொபைல் போன் அருங்காட்சியகத்தை வைத்திருக்கிறார். சிறிய மர அலமாரிகளில் வீடு முழுவதும் மொபைல் போன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்லோவாகியா சாதனைப் புத்தகத்தில் ஸ்டீபன் போல்காரி இடம்பெற்றிருக்கிறார்.

மொபைல் போன் அருங்காட்சியகம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இதை-வைத்து-என்னதான்-செய்வது/article9590621.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒரு மனிதனை மனிதனாக உணரச் செய்த ஒப்பனை!

 

 
ulagam_3145126f.jpg
 
 
 

ஸ்பெயினைச் சேர்ந்த 55 வயது ஜோஸ் அன்டோனியோ, கடந்த 25 ஆண்டுகளாக வீடின்றி, வீதியில் வாழ்ந்துவருகிறார். அழுக்கான உடையும் நீண்ட தாடியுமாக, கார்களைத் துடைக்கும் பணியைச் செய்து வருகிறார். இவரை இதுவரை யாரும் நிமிர்ந்து கூடப் பார்த்ததில்லை. மஜோர்கா நகரில் சலூன் கடை வைத்திருக்கும் ஒருவர் ஜோஸ் அன்டோனியாவைப் பார்த்தார். யாரும் நிமிர்ந்து பார்க்காத இந்த மனிதரை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்க வைக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். அவரது சலூனின் மூன்றா வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜோஸ் அன்டோனியோவின் உருவத்தை மாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். உள்ளூர் தொலைக்காட்சி இதை நேரடியாகப் படம் பிடிக்க முன்வந்தது. ஜோஸ் அன்டோனியோவைக் குளிக்க வைத்து, தலை முடியை ஸ்டைலாக வெட்டினர். தாடியை அளவாக நறுக்கினர். டை அடித்தனர். முகத்துக்கு ஒப்பனை செய்தனர். நவீன உடைகளை அணிவித்து, குளிர் கண்ணாடியை மாட்டிவிட்டனர். பிறகு கண்ணாடி முன் நிறுத்தினர். ஜோஸ் அன்டோனியோ தன் உருவத்தைக் கண்டு வாயடைத்துப் போனார். வழக்கம் போல் தான் அமரும் இடத்தில் அமர்ந்தார். யாரோ ஒரு புது மனிதர் ஸ்மார்ட்டாகவும் ஸ்டைலாகவும் அமர்ந்திருக்கிறார் என்று மக்கள் ஆச்சரியப்பட்டனர். பெண்கள் நளினமாகப் புன்னகை செய்தனர். ஒரு சிலர் ஆர்வத்துடன் பேசினர். “25 வருடங்களாக இந்த இடத்தில்தான் அமர்ந்திருக்கேன். ஒருவர் கூட நிமிர்ந்து பார்த்ததில்லை. ஆனால் பெண்கள் கூட புன்னகை செய் கிறார்கள்! முதல் முறை நானும் மனிதன் என்ற உணர்வைப் பெற்றேன். மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்கிறார் ஜோஸ் அன்டோனியோ.

ஒரு மனிதனை மனிதனாக உணரச் செய்த ஒப்பனை!

பிரிட்டனைச் சேர்ந்த 80 வயது அல்மா வில்லியம்ஸ், இரண்டாம் உலகப் போரில் இறந்து போன தன்னுடைய அண்ணன் ரொனால்ட் ப்ளாக்ஹாமைக் கடந்த 71 ஆண்டுகளாகத் தேடிவந்தார். கடினமான தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டு இவரது அண்ணனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தன் அண்ணன் என்பதற்கு ஆதாரம் வேண்டும் என்றார் அல்மா. டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ரொனால்ட் என்பது உறுதிசெய்யப்பட்டது. பிரிட்டனிலிருந்து அல்மாவின் குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் இத்தாலிக்கு வந்தனர். அவரது உடலைப் பெற்றுக்கொண்டனர். பிறகு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, ராணுவ மரியாதையோடு வீரர்களின் கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. “நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து இறுதி அஞ்சலி செலுத்தியது எனக்கு நிறைவைத் தருகிறது. என் அண்ணன் கால்பந்து வீரர். மிகவும் ஆர்வத்தோடு ராணுவத்தில் சேர்ந்தார். எனக்கு 6 வயதானபோது அண்ணன் போருக்குச் சென்றுவிட்டார். அண்ணன் எப்போது வருவார் என்று அம்மாவைக் கேட்டுக் கொண்டிருப்பேன். வாசலில் உள்ள மரத்தில் பூக்கள் பூக்கும்போது அண்ணன் திரும்பி வந்துவிடுவான் என்பார் அம்மா. பல ஆண்டுகள் அந்த மரம் பூத்தும் அண்ணன் மட்டும் வரவேயில்லை. நாஜிக்களால் அவர் கொல்லப்பட்ட தகவல் வந்தது. அண்ணன் எங்காவது உயிரோடு இருப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அண்ணனைத் தேட ஆரம்பித்தேன். 75 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போதுதான் உரிய மரியாதை செலுத்தி அடக்கம் செய்திருக்கிறோம். என் அண்ணன் ஆன்மா மகிழ்ச்சியடையட்டும்” என்கிறார் அல்மா வில்சன்.

75 ஆண்டுகளாகத் தேடிக் கண்டுபிடித்து அண்ணனை அடக்கம் செய்த தங்கை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஒரு-மனிதனை-மனிதனாக-உணரச்-செய்த-ஒப்பனை/article9591263.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இனி அக்கம்பக்கம் பார்த்துப் பேச வேண்டியதில்லை!

 
 
phone_3145796f.jpg
 
 
 

ஏராளமானவர்கள் அமர்ந்திருக்கும் அலுவலகத்தில் அலைபேசியில் பேசுவது பேசுபவர்களுக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் சங்கடமான விஷயம். இதற்காக இருக்கையை விட்டுத் தனியாக ஓரிடம் தேடிச் சென்று பேசிவிட்டு வரவேண்டியிருக்கிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து அழைப்புகள் வந்தால் எழுந்து செல்வதும் கடினம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஹஸ்மி மாஸ்க் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாஸ்க் என்றாலும் இது முகத்தை மூடாது, வாயை மட்டும் மூடும். இதை மாட்டிக்கொண்டு உரையாடினால் அருகில் இருப்பவர்களுக்குக் கூட சிறிதும் கேட்காது. எந்தவிதத் தயக்கமும் இன்றி உரையாடலாம். போனிலிருந்து ப்ளூடூத் மூலம் காதுகளுக்கு குரல் கடத்தப்படுகிறது. பல்வேறு நிறங்களில் இந்த ஹஷ்மி மாஸ்க் கிடைக்கிறது. காற்று, அலை, சாரல், பறவைகளின் கூக்குரல் போன்ற பல்வேறு மெல்லிய ஒலிகளோடு உங்கள் குரலும் பயணிக்கும். எதிராளிக்கு சுவாரசியத்தை அளிக்கும். ’உலகின் முதல் மொபைல் போன் குரலுக்கான முகமூடி’ இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வருகிறது. விலை 13 ஆயிரம் ரூபாய்.

இனி அக்கம்பக்கம் பார்த்துப் பேச வேண்டியதில்லை!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெரால்டின் ஃபாஸ்டர் 72 வயதில் நாடு நாடாகச் சுற்றி வருகிறார். ஓராண்டில் சில மாதங்களே மகன்கள், பேரக்குழந்தைகளுடன் வசிக்கிறார். மீதிக் காலம் முழுவதும் ஒரு பையை முதுகில் மாட்டிக்கொண்டு, தனியாக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவருகிறார். “சின்ன வயதில் ஸ்பெயினுக்கு அழைத்துச் சென்றார் அப்பா. அந்த நாடு எனக்கு மிகவும் பிடித்துப் போனது. 19 வயதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டு, ஸ்பெயினுக்கு வந்தேன். மூன்று குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு சலூனையும் நடத்தினேன். 12 ஆண்டுகளில் என் கணவர் பிரிந்து சென்றார். குழந்தைகளுடன் இங்கிலாந்து வந்து, 3 சலூன்களை ஆரம்பித்தேன். வீடு, கடை, குழந்தை வளர்ப்பு என்று இருந்தாலும் சின்ன ஓய்வு கிடைத்தால் என் அக்கா, இளைய மகனுடன் அருகில் இருக்கும் நாடுகளுக்குச் சென்று திரும்புவேன். என்னுடைய நாற்பதாவது வயதில் உலகம் சுற்றும் தோழி கிடைத்தாள். நாங்கள் இருவரும் தாய்லாந்து சென்று திரும்பினோம். அவள் திருமணம் செய்துகொண்ட பிறகு, நான் தனியாகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறேன். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா கண்டங்களில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். என்னிடம் ஒரே ஒரு பைதான் உண்டு. அதில் லேப்டாப், கேமரா, சில உடைகள் மட்டும் இருக்கும். பட்ஜெட் கட்டணத்தில் இருக்கும் சிறந்த விடுதிகளில் மட்டுமே தங்குவேன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் சாலைகளில் விற்கப்படும் உணவுகளைத்தான் சாப்பிடுவேன். பெரும்பாலும் பேருந்துகளைத்தான் பயன்படுத்துவேன். இரவில் பாதுகாப்பு கருதி பேருந்துகளில் பயணிக்க மாட்டேன். குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துவிட்டேன். மீதிக் காலத்தை என் விருப்பப்படிதான் வாழ்வேன். வாழ்க்கை ஒருமுறைதான். அதனால் ஓய்வெடுக்கும் எண்ணமில்லை” என்கிறார் ஜெரால்டின்.

72 வயதில் கலக்குங்கம்மா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இனி-அக்கம்பக்கம்-பார்த்துப்-பேச-வேண்டியதில்லை/article9594007.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சீன ரயில் திட்டங்கள் பிரமிக்க வைக்கின்றன!

 
 
train_3146120f.jpg
 
 
 

சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சாங்க்விங், மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம். இங்கே 31,000 சதுர மைல்களில் 4.9 கோடி மக்கள் வசிக்கிறார்கள். காலியான இடம் கிடைப்பதே கடினம். புதிதாக சாலையோ ரயில் வழித்தடமோ அமைப்பதற்குக்கூட இடம் இல்லை. அதற்காக போக்குவரத்து வசதிகள் செய்யாமல் இருக்க முடியாது. ரயில் செல்லும் பாதையில் இருக்கும் கட்டிடங்களை இடிக்காமல், ரயில் பாதையை அமைத்துள்ளனர். 19 மாடிகள் கொண்ட மூன்று குடியிருப்புகளுக்குள் ரயில்கள் செல்லுமாறு இந்த பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. 6, 7, 8-வது தளங்கள் மட்டும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில் பாதைக்குக் கீழும், மேலும் மக்கள் குடியிருக்கிறார்கள். ஒரு ரயில் போவதற்கும் இன்னொரு ரயில் வருவதற்குமாக இரண்டு பாதைகள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. ரயில் செல்லும் சத்தம் குடியிருப்புவாசிகளைப் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக ஒலி உள்வாங்கிக்கொள்ளும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. “கட்டிடத்தைப் பாதிக்காத வகையில் எடை குறைந்த தண்டவாளங்கள்தான் போடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டிடத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரயில் ஓடும்போது சில நேரங்களில் பாத்திரம் சுத்தம் செய்யும்போது கருவியில் வரும் ஒலி போல் கேட்கும். மற்றபடி எங்கள் தலைக்கு மேல் ரயில்கள் ஓடுகின்றன என்ற நினைப்பே வராது. வரிசையாக மூன்று குடியிருப்புகளுக்குள் நுழைந்து ரயில் வெளிவருவதைப் பார்க்க அற்புதமாக இருக்கும்!” என்கிறார் ஒரு குடியிருப்பு வாசி.

அடடா! சீன ரயில் திட்டங்கள் பிரமிக்க வைக்கின்றன!

பெல்ஜியத்தின் பிரெலென் நகரில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கே ஒரு தேவாலயத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனை கூட்டம் முடிந்த பிறகு, மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கிராமத்தில் இருந்த மதுபானக் கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. மக்கள் மதுவுக்காக மிகவும் சிரமப்பட்டனர். மக்களின் கஷ்டத்தை அறிந்த தேவாலய பாதிரியார் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்த பிறகு, மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கினார். பிரெலெனில் உள்ள பிராட்டஸ்டாண்ட் தேவாலயம், மனிதர்கள் மகிழ்ச்சியோடு மதுபானங்களை அருந்தும்போது கடவுளுக்கு நெருக்கமாக செல்கிறார்கள் என்கிறது. உள்ளூர் அரசாங்க அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்றே மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. ஞாயிறு பிரார்த்தனை முடியும் வரை வழக்கமான தேவாலயமாகக் காட்சியளிக்கும். பிரார்த்தனை முடிந்த சிறிது நேரத்தில் மதுபானக் கடையாக மாறிவிடும். தேவாலயம் சில விதிகளை உருவாக்கி, அதைக் கடுமையாகக் கடைபிடித்து வருகிறது. பிரார்த்தனைக்கு வருகிறவர்கள் மட்டுமே மதுவை வாங்க முடியும். அளவுக்கு அதிகமாகக் குடிக்கக்கூடாது. ஆனால் ஆடவோ, இசைக்கவோ, பாடவோ கூடாது. மதியம் 1 மணிக்கு முன்பு எல்லோரும் இடத்தைக் காலி செய்துவிட வேண்டும்.

வித்தியாசமான தேவாலயம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சீன-ரயில்-திட்டங்கள்-பிரமிக்க-வைக்கின்றன/article9595597.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வாழ்ந்து காட்டும் டவுன்சிண்ட்ரோம் ஜோடிக்கு வாழ்த்துகள்!

 

ame_3146514f.jpg
 
 
 

இங்கிலாந்தைச் சேர்ந்த மரியானும் டாம்மி பில்லிங்கும் டவுன்சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள். 18 மாத காதலுக்குப் பிறகு, 1995-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களைவிட எதிர்த்தவர்களே அதிகம். ஆனால் 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இருவரும் மகிழ்ச்சியாகவும் காதலுடனும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! “டாம்மி ஒருநாள் என் அம்மாவிடம் வந்து மரியானை திருமணம் செய்து தரும்படி, சாதாரண பிளாஸ்டிக் மோதிரத்தைக் காட்டிக் கேட்டார். அம்மாவுக்கு ஆனந்த அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. உடனே நகைக் கடைக்குச் சென்று திருமண மோதிரங்களை வாங்கி வந்தார். எங்கள் இருவரது குடும்பங்களைத் தவிர, மற்றவர்கள் டவுன்சிண்ட்ரோம் பாதிப்பில் இருப்பவர்களுக்கு திருமணம் அவசியமா என்று கேட்டனர். ஆனால் நாங்கள் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இத்தனை ஆண்டுகளில் இவர்களைப் போல அன்பான ஜோடியை நாங்கள் கண்டதே இல்லை. டவுன்சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. கற்றுக் கொள்வதில் சிரமம் இருந்தாலும் அவர்களாலும் திருமணம் செய்து, மற்றவர்களைப் போல இயல்பாக வாழ முடியும் என்பதை மரியான், டாம்மி ஜோடி நிரூபித்திருக்கிறார்கள்” என்கிறார் லின்டா. “என் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் என் திருமணம்தான். அவர் என்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்றபோது அதிர்ச்சியடைந்தேன். இரண்டாம் முறை கேட்டபோது மறுக்க முடியவில்லை” என்கிறார் மரியான். மரியானும் டாம்மியும் யாருடைய உதவியும் இன்றி, தனியாக வசித்து வருகிறார்கள். இவர்களின் 22-ம் ஆண்டு திருமண நாள் விழாவுக்கு வந்தவர்களும் ஃபேஸ்புக்கில் இவர்களது கதையைப் படித்தவர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

வாழ்ந்து காட்டும் டவுன்சிண்ட்ரோம் ஜோடிக்கு வாழ்த்துகள்!

தாய்லாந்து குளத்திலிருந்து மீட்கப்பட்ட 25 வயது ஆமையைப் பரிசோதித்தபோது நாணயங்களை விழுங்கியிருந்தது தெரிந்தது. குளத்தைக் கண்டதும் நாணயங்களை வீசினால் அதிர்ஷ்டம் என்று தாய்லாந்து மக்கள் நம்புகிறார்கள். இதன்படி ஒரு குளத்தில் வீசிய நாணயங்களை அதில் இருந்த ஆமை தொடர்ந்து விழுங்கி வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாமல், நீந்த முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆமையை மருத்துவமனையில் சேர்த்தனர். பல்வேறு நிபுணர்களின் தலைமையில் ஏராளமான செலவில் ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் 915 நாணயங்கள் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்டன. 5 கிலோ எடை உள்ள அந்த நாணயங்கள் எடுத்தவுடன் அந்த ஆமையின் உடலில் முன்னேற்றம் தெரிந்தது. திரவ உணவுகள் கொடுக்கப்பட்டன. முழுமையாக குணமடைய 3 வாரங்கள் ஆகும் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீரென்று குடலில் பிரச்சினை ஏற்பட்டது. ரத்தம் நஞ்சாக மாறியது. மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் ஆமையைக் காப்பாற்ற முடியவில்லை. 80 ஆண்டுகள் வசிக்கக்கூடிய ஆமை 25 ஆண்டுகளில் மறைந்துவிட்டது.

மனிதர்களின் அறியாமையால் உயிரிழந்த ஆமை…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வாழ்ந்து-காட்டும்-டவுன்சிண்ட்ரோம்-ஜோடிக்கு-வாழ்த்துகள்/article9597484.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அன்னாவின் துயர் துடைக்க யாராவது வரமாட்டார்களா?

 
ulga_masala_3147256f.jpg
 
 
 

சீனாவின் ஜுன்யி நகரின் மலைக் கிராமம் ஒன்றில் வசிக்கிறாள் 5 வயது அன்னா வாங். பிறந்த 3 மாதங்களில் இவளது அப்பா ஜெயிலுக்குச் சென்றுவிட்டார். அம்மா வேறு திருமணம் செய்துகொண்டார். அன்னாவை அவரது பாட்டியும் பாட்டியின் அம்மாவும்தான் வளர்த்தார்கள். பெரிய பாட்டிக்கு 92 வயது. சின்னப் பாட்டிக்கு 75 வயது. இருவராலும் தற்போது எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. உடல் நலம் குன்றியதால் வீட்டுக்குள் எப்போதாவது நடமாடுகிறார்கள். அன்னா குடும்பத்துக்கென்று உறவினர்களோ, நண்பர்களோ இல்லை. அதனால் தன்னையும் தன்னுடைய பாட்டிகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அன்னாவுக்கு வந்துவிட்டது. அதிகாலை எழுந்து தேநீர் போடுகிறாள். பாட்டிகளைக் கழிவறைக்கு அழைத்துச் செல்கிறாள். பாத்திரங்களைச் சுத்தம் செய்கிறாள். காலை உணவு தயாரிக்கிறாள். வெந்நீர் வைத்து பாட்டிகளைக் குளிக்க வைக்கிறாள். உணவை ஊட்டிவிடுகிறாள். பிறகு பக்கத்து தோட்டங்களுக்குச் சென்று அன்றைய உணவுக்குத் தேவையான கீரைகள், காய்கறிகளைப் பறித்து வருகிறாள். அன்னாவின் கஷ்டத்தை அறிந்தவர்கள், இலவசமாகக் கீரைகளையும் காய்கறிகளையும் எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறார்கள். பாட்டிகளின் மேற்பார்வையில் அன்றைய சமையலைச் செய்து முடிக்கிறாள் அன்னா. வீட்டைச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல், கணப்பு அடுப்பை மூட்டுதல் என்று நாள் முழுவதும் வேலைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. மற்ற குழந்தைகளைப் போல அன்னா பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. விஷயம் வெளியில் தெரிந்து மீடியாக்காரர்கள் அன்னாவின் வீட்டுக்குச் சென்றனர். ஒரு முக்காலியின் மீது ஏறி நின்று, பெரிய பாத்திரங்களை வைத்து அடுப்பில் அன்னா சமைப்பதையும் வெந்நீரைத் தூக்க முடியாமல் தூக்கிச் செல்வதையும் கண்டு அதிர்ந்து போனார்கள்.

ஐயோ… அன்னாவின் துயர் துடைக்க யாராவது வரமாட்டார்களா?

சிலருக்கு ஃபேஸ்புக்கில் அதிகமான நண்பர்கள் இல்லை என்று குறை. பிரிந்த காதலர்களுக்குத் தங்கள் முன்னாள் காதலி, காதலனை விடப் பிரமாதமான புதிய காதலன், காதலியை உலகத்துக்குக் காட்ட விருப்பம். இவர்களுக்காகவே ஃபேமிலி ரொமான்ஸ் என்ற ஜப்பானிய நிறுவனம் போலியான நண்பர்களையும் காதலன், காதலிகளையும் ஏற்பாடு செய்து போட்டோ எடுத்துக் கொடுக்கிறது. “அழகான மாடல்களை வரவழைத்து, அவர்களோடு பேசுவது, சாப்பிடுவது, நடந்து செல்வது போன்று விதவிதமான உடைகளில், விதவிதமான இடங்களில் புகைப்படங்கள் எடுப்போம். இந்தப் புகைப்படங்களைச் சம்பந்தப்பட்டவர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்வார். சக ஊழியர்கள், நண்பர்கள் இவர் மீது பொறாமைப்படுவார்கள். இவரது மதிப்பு உயரும். 2 மணி நேரம் புகைப்படங்கள் எடுப்பதற்கு 4,700 ரூபாய் கட்டணம். சுற்றுலாத் தலங்களில் படம் எடுக்க வேண்டும் என்றால் பயணச் செலவு, அறை வாடகை, சாப்பாடு போன்றவற்றுக்கும் செலவு செய்ய வேண்டி யிருக்கும். குடும்பம் இல்லாதவர்களுக்கு அம்மா, அப்பா, அண்ணன், தங்கை போன்றவர்களை ஏற்பாடு செய்து புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கிறோம்” என்கிறார் ஃபேமிலி ரொமான்ஸ் நிறுவனர்.

இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவதெல்லாம் அநியாயம்...

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அன்னாவின்-துயர்-துடைக்க-யாராவது-வரமாட்டார்களா/article9600986.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அடடா! அசத்துகிறாரே இந்த ஹிப் ஹாப் கணித ஆசிரியர்!

 

 
yuy_3148149f.jpg
 
 
 

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள இபன் டாங்கஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கணித வகுப்புகள் என்றால் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்! குர்த் மின்னார் என்ற 33 வயது ஆசிரியர் ஹிப் ஹாப் இசையில் நடனத்தோடு கணிதப் பாடங்களைச் சொல்லித் தருகிறார்! கணிதம் என்றாலே பயந்து ஓடியவர்கள் இன்று கணித வகுப்புகளுக்காகவே விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருகிறார்கள்! “நான் ஆரம்பத்தில் நடனக் கலைஞராக இருந்தவன். பிறகுதான் ஆசிரியர் பணிக்கு வந்தேன். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி கற்கும் திறன் இருக்காது. சிலருக்கு எளிதில் புரியும். சிலருக்கு அதிகக் காலம் தேவைப்படும். ஆனால் எல்லா மாணவர்களும் நடனத்தையும் இசையையும் ஒரே மாதிரி விரும்புகிறார்கள். அதனால் கணிதத்தை இசையும் நடனமும் கலந்து சொல்லிக் கொடுக்க முடிவெடுத்தேன். நான் நினைத்ததை விட மிக அதிகமாகவே மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். நான் இந்தப் பள்ளிக்கு வந்தபோது எட்டாம் வகுப்பு மாணவர்கள், நான்காம் வகுப்பு மாணவர்களின் கணிதத்தைக் கூடப் போட முடியாதவர்களாக இருந்தனர். அவர்களுக்காகவே நான் பிரத்யேகமாக யோசித்து, பாடம் நடத்தும் முறையை வடிவமைத்தேன். மேஜையில் ஏறி நின்று, பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கணிதத்தைக் கற்றுக் கொடுத்துவருகிறேன். சாதாரணமாகச் சொல்லிக் கொடுப்பதை விட இந்த முறையில் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் கவனம் இதிலேயே குவிக்கப்படுகிறது. வகுப்பை விட்டுச் சென்றாலும் மீண்டும் மீண்டும் இசை மூலம் கணிதம் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் அவர்களும் பாடி, ஆடியபடியே கணிதத்தைச் செய்து பார்க்கும்போது மறந்து போவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. மாணவர்களின் கற்கும் திறன் மிக நல்ல முறையில் அதிகரித்திருக்கிறது என்பதை அவர்களின் தேர்வு முடிவுகள் காட்டிவிட்டன. கற்பிப்பதில் இன்னும் பல புதுமைகளைப் புகுத்த இருக்கிறேன்” என்கிறார் குர்த் மின்னார்.

அடடா! அசத்துகிறாரே இந்த ஹிப் ஹாப் கணித ஆசிரியர்!

இங்கிலாந்தில் பிளாட்டினம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் ஆன்லைன் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்துவருகிறது. மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு வீடு விற்பனைக்கு வந்தது. ஆனால் அந்த வீட்டை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. வீட்டின் உரிமையாளர் விரைவாக விற்பனை செய்து தரும்படிக் கேட்டார். பிளாட்டினம் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீவ் லேகாக், விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கிளி போன்று மாறுவேடமிட்டார். வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உட்கார்ந்து, படுத்து, வேலை செய்வது போன்றெல்லாம் புகைப்படங்கள் எடுத்தார். பிறகு ஆன்லைனில் வீட்டு விற்பனை குறித்த தகவல்களுடன் புகைப்படங்களையும் வெளியிட்டார். ஒரே வாரத்தில் 1 லட்சம் பேர் பார்வையிட்டனர். ஸ்டீவ் லேகாக்கின் சக ஊழியர்கள் மட்டுமின்றி நிர்வாகத்தினரும் ஆச்சரியப்பட்டனர். இதுவரை இவ்வளவு பார்வையாளர்கள் தங்களுக்குக் கிடைத்ததில்லை என்கிறார்கள். 2 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்குவதற்குப் பலரும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

வீடு விற்பனையில் புதிய முயற்சி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அடடா-அசத்துகிறாரே-இந்த-ஹிப்-ஹாப்-கணித-ஆசிரியர்/article9604163.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வாழ்த்துகள் கெரிம்!

 

 
ulaga_3148567f.jpg
 
 
 

போஸ்னியாவைச் சேர்ந்த 16 வயது கெரிம் அஹ்மெட்ஸ்பாஹிக், 35 நொடிகளில் 111 சிமெண்ட் பலகைகளைத் தலையால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்துவிட்டார்! டைகுவாண்டோ என்ற தற்காப்புக் கலையில் சாம்பியன் பட்டம் வென்ற கெரிம், தன்னுடைய அடுத்த முயற்சியாகத் தலை மூலம் சிமெண்ட் பலகைகளை உடைக்கும் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். 16 வரிசைகளில் வைக்கப்பட்டிருந்த 111 சிமெண்ட் பலகைகளை 35 நொடிகளுக்குள் உடைத்து சாதனை படைத்தார். தனக்கு உதவி செய்த அத்தனை மக்களுக்கும் பயிற்சியாளருக்கும் பெற்றோருக்கும் இந்தச் சாதனையைச் சமர்ப்பிப்பதாகக் கூறினார் கெரிம்.

மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள் கெரிம்!

பிரேசிலின் ககாபாவா டு சட் நகரில் வசிக்கும் வெள்ளை அகிடா வகை நாய் ஹச்சிகோ, கடந்த 9 ஆண்டுகளாகத் தன்னை வளர்த்தவருக்காகக் காத்திருக்கிறது. ஓவியர் க்ளாடியோ கேன்டாரெல்லி ஒரு வருடம் ஹச்சிகோவை வளர்த்துவந்தார். க்ளாடியோவும் ஹச்சிகோவோவும் ஒருவருக்கு ஒருவர் மிக அன்பாகப் பழகிவந்தனர். தினமும் நீண்ட தூரம் நடைப் பயிற்சி மேற்கொள்வார்கள். ஓவியருக்கு நண்பர்களும் ரசிகர்களும் அதிகம். வழியெல்லாம் நலம் விசாரிப்பார்கள். தேநீர்க் கடையில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, இருவரும் வீடு திரும்புவார்கள். ஒருநாள் க்ளாடியோவுக்கு உடல்நலம் மிக மோசமானது. மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. க்ளாடியோவின் குடும்பத்தினர் ஹச்சிகோவை நன்றாகப் பார்த்துக்கொண்டாலும் க்ளாடியோவின் அன்புக்காக மிகவும் ஏங்கியது. உடல் நலம் குன்றியது. ஹச்சிகோவின் நிலையைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் சையோனாரா, தான் எடுத்துச் சென்று வளர்ப்பதாகக் கூறினார். உடனே ஹச்சிகோவை அனுப்பி வைத்தனர். மருத்துவமும் நல்ல உணவும் சில மாதங்களில் ஹச்சிகோவின் உடலைத் தேற்றின. தினமும் க்ளாடியோ நடைப் பயிற்சி செல்லும் நேரத்துக்குத் தயாராக நின்றது ஹச்சிகோ. சையோனாராவும் ஹச்சிகோவும் நடக்க ஆரம்பித்தனர். க்ளாடியோ யாரிடமெல்லாம் பேசுவாரோ, அவர்களைக் கண்டதும் வாலை ஆட்டிக்கொண்டு நின்றது. அவர் எந்தெந்தக் கடைகளுக்குச் செல்வாரோ, அங்கெல்லாம் சென்றது. ஒரு சின்ன விஷயத்தைக் கூட மறக்காமல் அத்தனையும் இன்றுவரை செய்துகொண்டேயிருக்கிறது. தன் அன்புக்குரிய க்ளாடியோ சென்ற ஆண்டு மறைந்து போன விஷயம் அறியாத ஹச்சிகோ, இன்னும் அவரைத் தேடிக்கொண்டே இருக்கிறது. ஹச்சிகோவின் கதையை அறிந்த நகரவாசிகளும் கடைக்காரர்களும் தினமும் உணவு, பால், தண்ணீர் கொடுத்து அன்பாக உபசரிக்கிறார்கள். “இப்படி ஒரு அன்பான புத்திசாலியான நினைவுத்திறன் அதிகமுள்ள நாயை நான் கண்டதில்லை. ஒன்பது வருடங்களில் க்ளாடியோ உட்பட எதையும் மறக்கவில்லை ஹச்சிகோ!” என்கிறார் சையோனாரா.

ஹச்சிகோவின் அன்பும் நினைவுத்திறனும் ஆச்சரியமூட்டுகின்றன!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வாழ்த்துகள்-கெரிம்/article9605232.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அட, ரொம்ப ஜாலியான வேலை!

 

 
ulagam_3148950f.jpg
 
 
 

ரஷ்யாவைச் சேர்ந்த 26 வயது அன்னா செர்டன்ட்சேவா, முழுநேர சோஃபா பரிசோதகராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். தினமும் 10 மணி நேரம் விதவிதமான சோஃபாக்களில் அமர்ந்து, படுத்து, வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்து கொடுக்கிறார். கடந்த மாதம் ரஷ்யாவின் மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம் MZ5 சோஃபா பரிசோதகர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தது. 5 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன. பல கட்டங்களாகத் தேர்வு நடத்தப்பட்டு, 7 பேர் நேர்முகத் தேர்வுக்குத் அழைக்கப்பட்டனர். இதில் அன்னாவுக்கு வேலை கிடைத்துவிட்டது. “கடுமையான போட்டிக்கு நடுவே எனக்கு வேலை கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம். என் கனவு வேலை இது. சோஃபாக்களை இன்னும் முன்னேற்ற பல யோசனைகள் வைத்திருக்கிறேன். வாடிக்கையாளர்களின் சந்தேகங்களைப் போக்குவதும் சோஃபா அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்று பரிசோதித்து சொல்வதும்தான் என் வேலை. நேரடியாக வாடிக்கையாளர்களைச் சந்திக்கும்போது அவர்களின் தேவை, எதிர்பார்ப்புகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் நிறுவனத்தையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறேன். தினமும் விதவிதமான சோஃபாக்களில் அமர்வதும் படுப்பதும் பரிசோதிப்பதுமாக வேலை சுவாரசியமாகப் போய்க்கொண்டிருக்கிறது” என்கிறார் அன்னா. மூன்று மாதங்களுக்குப் பிறகே அன்னாவின் வேலை நிரந்தரமாக்கப்படும். 65 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் அன்னா.

அட, ரொம்ப ஜாலியான வேலை!

இங்கிலாந்தில் வசிக்கும் கேட் ஸ்நூக் வளர்க்கும் செல்ல நாய் ஜாக் ரஸ்ஸலுக்கு இனிப்பு என்றால் மிகவும் விருப்பம். 20 வயது ஜாக் தினமும் கோலாவைக் குடித்து வருகிறது. இந்நிலையில் பல் வலியால் துடித்த ஜாக்கை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் கேட் ஸ்நூக். 16 பற்களில் 12 பற்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்துவிட்டனர். “நான் ஒரு ஆசிரியராக இருந்தும் நாய்க்குக் கோலாவைப் பழக்கப்படுத்தி இருக்கிறேன் என்று என்னை மோசமான மனிதராகச் சித்தரிக்கிறார்கள். ஆனால் ஜாக் சாதாரணமான நாய் இல்லை. பிடிவாதம், கோபம், விளையாட்டு எல்லாமே அதிகமாக இருக்கும். ஒருநாள் இரவு கோலா டின்னைப் பக்கத்தில் வைத்துவிட்டு படித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் பார்த்தால் டின் காலி. ஜாக்தான் குடித்திருந்தாள். அன்றுமுதல் தினமும் இரவானால் கோலா கேட்டு தொந்தரவு செய்கிறாள். கொடுக்காவிட்டால் மூர்க்கமாகி விடுகிறாள். வயதாகிவிட்டதால் அவளுக்கு விருப்பமானதை சாப்பிடட்டும் என்று விட்டுவிட்டேன். கோலாவால் பற்கள் விழுந்தன என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வயதாகிவிட்டதால் தான் ஜாக் பற்களை இழந்திருக்கிறாள். அவளுக்குப் பிடித்த வான்கோழி இறைச்சியைச் சாப்பிடத்தான் இப்போது பற்கள் இல்லை. இன்றும் கோலாவையும் சாக்லேட்களையும் ஒரு பிடி பிடிக்கிறாள். வயதானதோடு மறதி நோயும் இவளைத் தாக்கியிருக்கிறது. இன்னும் எவ்வளவு நாள் என்னுடன் இருப்பாள் என்று தெரியவில்லை. அதுவரை அவள் விருப்பப்படி வாழ்ந்துவிட்டுப் போகட்டும்” என்கிறார் கேட் ஸ்நூக்.

நாய்க்கு இப்படிப் பழக்கப்படுத்தியது என்ன நியாயம்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அட-ரொம்ப-ஜாலியான-வேலை/article9607126.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அட! இப்படிக் கூட வரைய முடியுமா!

 

 
 
 
oviyam_3149398f.jpg
 
 
 

நைஜீரியாவைச் சேர்ந்த அரின்ஸ் ஸ்டான்லி, புகைப்படத்தைப் போல மனித உருவங்களை வரைவதில் மிகச் சிறந்தவராகத் திகழ் கிறார். பென்சில் மூலம் இவர் வரையக்கூடிய மனிதத் தலை களைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போகாதவர்களே இல்லை! அரின்ஸின் குடும்பம் காகித நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தது. சின்ன வயதிலிருந்து காகிதங்களுடன் பழகியவர், ஒருகட்டத்தில் பொழுது போக்குவதற்காக வரைய ஆரம்பித்தார். 2012-ம் ஆண்டுதான் இவருடைய ஓவியங்கள் தத்ரூப ஓவியங்களாக மாற்றமடைந்தன. அன்றுமுதல் கூடுதல் உழைப்பைச் செலவிட்டார். தன்னுடைய ஓவியத் திறமையை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டார். கடந்த ஆண்டு தொழில்முறை ஓவியராக மாறினார். இதுவரை முறையாக ஓவியங்களை யாரிடமும் இவர் கற்றுக்கொண்டதில்லை! “பயிற்சி, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்றைத்தான் என்னுடைய மந்திரமாக வைத்திருக்கிறேன். இவற்றால்தான் என்னால் மேலும் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க முடிகிறது. ஓவியத்தை முடிப்பதற்கு 200 மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறேன். பகலில் நான் வேலைக்குச் சென்றுவிடுவதால் இரவில் மட்டுமே வரைய முடியும். எவ்வளவு நேரம் ஆகிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எவ்வளவு நன்றாக வரைய முடியும் என்பதில்தான் கவனமாக இருப்பேன். என்னைச் சுற்றியிருக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பேன். நான் வரையக்கூடிய முகங்களை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வேன். எல்லாவற்றையும் ஆராய்ந்து, அறிந்துகொண்ட பிறகே ஓவியம் தீட்ட ஆரம்பிப்பேன்” என்கிறார் அரின்ஸ். புகைப்படத்தைப் பார்த்து வரையும்போது ஒருவரின் தலைமுடி எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது, எவ்வளவு நீளமாக இருக்கிறது, எந்த வகையான முடி என்றெல்லாம் ஆராய்கிறார் அரின்ஸ்!

அட! இப்படிக் கூட வரைய முடியுமா!

இங்கிலாந்தில் வசிக்கும் பாட்ரிசியா டேவிஸ், 90 வயதில் திருநங்கையாக மாறியிருக்கிறார். “3 வயதில் நான் பெண்ணாக உணர ஆரம்பித்தேன். பெண்களைப் போல அலங்காரம் செய்துகொள்ளவும் உடை அணியவும் ஆசையாக இருக்கும். ஆனால் வெளியே சொல்வதற்குப் பயமாக இருந்தது. படித்து முடித்தவுடன் ராணுவத்தில் சேர்ந்தேன். என்னை வெளிப்படுத்திக்கொள்ள முயன்றபோது, திருமணம் செய்து வைத்துவிட்டனர். சில மாதங்களில் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்கச் சென்றுவிட்டேன். 63 ஆண்டு கால மண வாழ்க்கை ஓடிவிட்டது. 6 ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி இறந்து போனார். தனிமையில் இருந்தபோது பெண்ணாக மாற வேண்டும் என்ற எண்ணம் அதிகமானது. இனியும் என்னால் இந்தச் சுமையை மனத்தில் சுமக்க இயலாது. என்னுடைய 90 வருட வாழ்க்கையைப் போலியாக வாழ்ந்தது போதும். எங்கள் பரம்பரையில் 104 வயது வரை கூட வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் இன்னும் 10 ஆண்டுகளாவது நான் உயிரோடு இருப்பேன். மீதியிருக்கும் வாழ்நாளை உண்மையாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புகிறேன். இந்த வயதான காலத்தில் நான் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போவதில்லை. பெண் தன்மையை அதிகரிப்பதற்காக ஈஸ்ட்ரோஜன் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பெண்களுக்கான உடை, நீளமான முடி, ஆபரணங்கள், அலங்காரம் என்று முற்றிலுமாக மாறிவிட்டேன். இப்பொழுதுதான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார் பாட்ரிசியா டேவிஸ்.

நம் வாழ்க்கை, நம் உரிமை! கலக்குங்க பாட்ரிசியா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அட-இப்படிக்-கூட-வரைய-முடியுமா/article9609434.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மினியேச்சர் கடைகள்!

 

 
miniature_kadai_3149796f.jpg
 
 
 

உலகம் முழுவதும் தெருவோரக் கடைகள் இருக்கின்றன. அதிக வாடகை கொடுத்து கட்டிடங்களில் கடை வைக்க இயலாதவர்களே பெரும்பாலும் தெருவோரக் கடைக்காரர்களாக இருக்கிறார்கள். பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் இருக்கும் தெருவோரக் கடைகள் சற்று வித்தியாசமானவை. இந்தக் கடைகள் அனைத்தும் முழங்காலுக்குக் கீழே இருக்கின்றன. கடையில் உள்ள பொருட்கள் கண்ணாடி அலமாரிகளில் வெளியில் தெரியும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. என்ன வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டு, வாடிக்கையாளர்கள் குனிந்து சிறிய ஜன்னல் வழியே கடைக்காரரிடம் பொருட்களைக் கேட்டு வாங்க வேண்டும். இந்தக் கடைகளில் சிகரெட், மது பானங்கள், நொறுக்குத் தீனிகள், குளிர் பானங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் இரவில்தான் திறக்கப்படுகின்றன. மற்ற கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன. கம்யூனிச அரசாங்கம் வீழ்ந்த பிறகு புதிதாக உருவான தொழில்முனைவோர்கள் இவர்கள். கடைகளின் வாடகை கட்டுப்படியாகாததால் மினியேச்சர் கடைகளை உருவாக்கிக் கொண்டனர். தற்போது இந்தக் கடைகள் மெதுவாக மறைந்து வருகின்றன. ஆனால் பல்கேரியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடையைப் பார்வையிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மினியேச்சர் கடைகள்!

ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் சிபைல் ஜ்விகார்ட் குடும்பத்துக்கு மாடு வளர்ப்பதுதான் தொழில். 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாடு மூன்று கன்றுகளை ஈன்றது. அவற்றில் 2 பெண் கன்றுகள் மலட்டுத் தன்மையுடனும் இன்னொன்று காளையாகவும் இருந்தன. இவற்றை வைத்து பால் வியாபாரம் செய்ய முடியாது என்று நினைத்த சிபைல், இறைச்சிக் கடையில் விற்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவருடைய மகள்கள் கன்றுகளை விற்கக்கூடாது என்றனர். கன்றுகளைப் பராமரிக்கும் செலவுகளை அவர்கள் ஏற்றுக் கொள்வதானால் விற்கப் போவதில்லை என்றார் சிபைல். மூன்று கன்றுகளுக்கும் பெயரிட்டு வளர்த்தனர். கன்றுகள் ஓரளவு வளர்ந்தவுடன் அவற்றை வைத்து சம்பாதிக்க முடிவு செய்தனர். “பால் எதிலிருந்து கிடைக்கிறது என்று கேட்டால் குழந்தைகள் கடைகளிலிருந்து என்கிறார்கள். குழந்தைகளை மாடுகளுடன் பழக விட்டு, எல்லாவற்றையும் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொள்ளும் திட்டத்தை உருவாக்கினோம். இன்று பெரியவர்கள் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களே மாடுகளைச் சுத்தம் செய்து, மாடுகளைக் கட்டிப் பிடித்தபடி அமர்ந்திருந்தால் அவர்களின் மன அழுத்தம் மாயமாகும். 2 மணி நேரம் மாடுகளுடன் செலவிட 3,300 ரூபாய் கட்டணம். 7 வயதிலிருந்து குழந்தைகளை அனுமதிக்கிறோம். மாடுகளை வாடிக்கையாளர்களுக்குப் பழக்கப்படுத்துவோம். விளம்பரதாரர்கள் கிடைத்தால் இன்னும் பல விஷயங்களைச் சேர்த்து, மாடு தெரபியைப் பெரிய அளவுக்குக் கொண்டு செல்வோம்” என்கிறார் சிபைலின் மகள். விலங்குகள் ஆர்வலர் மரியோ பெக்கர் கூறியபோது, “நாய், பூனை களைப் போல மாடுகள் மக்களின் நெருக்கத்தை விரும்புவதில்லை. மாடுகளைக் கட்டிப் பிடிப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்கிறார்.

மாடு தெரபிக்கு கட்டணமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மினியேச்சர்-கடைகள்/article9611197.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஐயோ, உலகிலேயே பாவப்பட்ட குதிரைகள்...

 

 
masala_3150039f.jpg
 
 
 

போலந்து நாட்டின் பால்டிக் கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சூரியக் குளியல் எடுப்பவர்கள் தங்களுக்கென்று தனி இடத்தை ஒரு துணியால் மறைத்துக்கொள்கின்றனர். கடற்கரை முழுவதும் பல வண்ணத் துணிகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. “போலந்து கடற்கரையில் ஒவ்வொரு குடும்பமும் துணிகளைத் தடுப்புகளாக வைத்து, தங்கிக்கொள்வது பல காலமாகவே நடைபெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில்தான் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு மக்கள் குவிவார்கள். தங்கள் பொருட்களைப் பத்திர மாகப் பாதுகாப்பதும் நிம்மதியாகச் சூரியக் குளியல் எடுப்பதும் கஷ்டமாக இருக்கும். அதனால் அவரவர் வசதியைக் கருத்தில் கொண்டு நீண்ட துணிகளை இரும்புக் கம்பிகளில் கட்டி, தடுப்புகளை அமைத்துக்கொள்கிறோம். கடற்கரையில் மணலே தெரியாமல் வண்ணத் துணிகளாகவே தெரியும் அளவுக்கு எல்லோரும் தடுப்பு களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அடிக்கடி இங்கு வேகமாகக் காற்று வீசும். அப்போது உடல் முழுவதும் மணலாகிவிடும். தடுப்புகளால் மணல் பறப்பதும் தடுக்கப்படுகிறது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் முதலில் தடுப்புகளைக் கண்டு திகைத்தாலும் வேறுவழியின்றி அவர்களும் தடுப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். சீசன் காலங்களில் இடம் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. தடுப்புத் துணிகள் விற்பனை ஒரு தொழிலாக மாறிவிட்டது. மணிக்கணக்கில் வாடகைக்குத் தடுப்புகளை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார் போலந்து பயணி அலெக்ஸி.

வண்ணக் கடற்கரை!

வீடுகளில் வளர்க்கப்படும் குதிரைகளின் குளம்புகள் சில வாரங்களுக்கு ஒருமுறை அளவாக வெட்டிவிடப்படுகின்றன. பெல்ஜியத்தின் வல்லோனியா பகுதியில் வளர்க்கப்பட்ட இரு குதிரைகள் மிக மோசமான நிலையில் விலங்குகள் பாதுகாப்பு மையத்தினரால் மீட்கப்பட்டிருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக குதிரைகளின் குளம்புகள் வெட்டப்படாமல், மிகப் பெரிதாகவும் வளைந்தும் வளர்ந்திருக்கின்றன. இதனால் குதிரைகளால் இயல்பாக நடக்கவே முடியவில்லை. தடுமாறி விழுவதால் கால் முட்டிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போதுமான உணவுகள் வழங்கப்படாததால் உருவமும் சிறுத்து, ஆரோக்கியமும் குன்றி காணப்படுகின்றன. இந்தக் குதிரை பற்றிய தகவல்கள் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்தனர். உரிமையாளர் ஏன் இப்படிக் குதிரையை வைத்திருந்தார் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் இவர் குதிரை வளர்ப்பதே தெரியாது என்கிறார்கள். “நாங்கள் இதுவரை இந்த மாதிரி விலங்குகளை மீட்டதில்லை. பத்து ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல், குதிரைகளுக்குச் சரியாக உணவும் அளிக்காமல் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்று புரியவில்லை. 205 கிலோ எடை இருக்க வேண்டிய குதிரைகள் 63 கிலோதான் இருந்தன. இன்னும் சில நாட்களில் இறந்து போகும் நிலையில் இருந்த குதிரைகளை மீட்டுவிட்டோம். தொடர்ந்து மருத்துவம் செய்து வருகிறோம். முன்னேற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனால் சாதாரணமான குதிரைகளைப் போல இந்தக் குதிரைகளால் இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்” என்கிறார் மீட்பு மையத்தைச் சேர்ந்த அதிகாரி.

ஐயோ, உலகிலேயே பாவப்பட்ட குதிரைகள்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஐயோ-உலகிலேயே-பாவப்பட்ட-குதிரைகள்/article9612165.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சாதனை மேல் சாதனை

 

gert_3150653h.jpg
 

அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயது பெகி விட்சன், எட்டாவது முறையாக விண் வெளி ஆய்வு மையத்தில் நடந்தார். இதன் மூலம் விண் வெளிநடை மேற்கொண்ட வயதான பெண்மணி என்ற சாதனையையும் அதிக முறை விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார். விண் வெளி நிலையத்தில் பழுதைச் சரி செய்வதற்காக 7 மணி நேரம் விண்வெளி நடை மேற்கொண்டார். இதுவரை 53 மணி நேரங்கள் 22 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்டிருக்கிறார். அதிகமான நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர்களில் அவர் ஐந்தாவது இடத்திலிருக்கிறார். 2007-ம் ஆண்டு முதல் பெண் கமாண்டராக விண்வெளிக்குச் சென்று வரலாற்றில் முத்திரைப் பதித்திருந்தார். அமெரிக்க விண்வெளி வீரர் ஜெஃப் வில்லியம்ஸ் மொத்தம் 534 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்ததுதான் இதுவரை சாதனையாக இருந்துவருகிறது. இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம் 500 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் பெகி விட்சன், ஜூன் மாதம் பூமிக்குத் திரும்பும் பொழுது அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற சாதனையையும் படைக்க இருக்கிறார்! கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய 57-வது பிறந்த நாளை விண்வெளியில் கொண்டாடிய அவர், நாசாவின் லட்சியங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் அனுப்பும் திட்டத்தை தன் வாழ்நாளுக்குள் பார்த்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்.

சாதனை மேல் சாதனை செய்துவரும் பெகி விட்சனுக்கு மலர்க்கொத்து!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்காட் சஃபியனும் சிண்டியும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். அரிய மரபணுக் குறைபாட்டால் சிண்டியின் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன. மாற்றுச் சிறுநீரகம் பொருத்தாவிட்டால் அவரைக் காப்பாற்ற இயலாது. ஒரு சிறுநீரகத்தால் வாழ்ந்துவிட முடியும் என்பதால் தன்னுடைய இன்னொரு சிறுநீரகத்தை மனைவிக்குத் திருமண நாள் பரிசாகக் கொடுத்துவிட்டார் ஸ்காட் சஃபியன். மருத்துவர்களின் பரிசோதனையில் அவரின் சிறுநீரகம் நூறு சதவீதம் சிண்டிக்குப் பொருத்தமாக இருந்ததால், அறுவை சிகிச்சை செய்வதில் பிரச்சினைகள் வரவில்லை. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, தங்களின் இருபதாவது திருமண நாளை இருவரும் முன்கூட்டியே மருத்துவமனையில் கொண்டாடினார்கள். “ஆறு ஆண்டுகளுக்கு முன்பே எனக்குப் பிரச்சினை வந்துவிட்டது. அப்போதே தன்னுடைய சிறுநீரகத்தைத் தருவதாகச் சொன்னார் ஸ்காட். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டிலேயே டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தேன். சமீபத்தில் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழலில் கணவரின் தானத்தை ஏற்றுக்கொண்டேன். அவரின் இந்தச் செயலுக்கு என்னால் எதையும் ஈடு செய்ய முடியாது” என்கிறார் சிண்டி. “அன்புக்குரியவர்கள் கஷ்டப்பட்டால் நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதிலும் சிண்டி என் மனைவி. அவருக்கு இதைக் கூடச் செய்யாமல் எப்படி இருக்க முடியும்? மனைவிக்குத் தானம் கொடுத்தது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை” என்கிறார் ஸ்காட் சஃபியன்.

மனைவிக்குச் சிறுநீரகம் கொடுத்த கணவருக்குப் பாராட்டுகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சாதனை-மேல்-சாதனை/article9614945.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ரசிகர்களை இப்படி ஏமாற்றலாமா?

 
ulaga_masala_3151081f.jpg
 
 
 

சீனாவில் சமீபத்தில் பிரபலமான பாப் இசைக்குழு அக்ரஷ். இந்த இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரும் பெண்கள். ஆண்களைப் போல உடை, தலையலங்காரம், உடல்மொழி எல்லாம் மாற்றிக்கொண்டு இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்புதான் இவர்களின் இசை வீடியோ வெளிவந்தது. அதற்குள் பிரபலமடைந்துவிட்டனர். இசைக்குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் ட்விட்டரில் 10 லட்சம் பேர் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆண்கள் என்று நம்புவதால், பெண் விசிறிகள்தான் அதிகமாக இருக்கிறார்கள். “2005-ம் ஆண்டு சீனாவில் ‘சூப்பர் கேர்ள்’ என்ற பட்டத்தை வென்ற பாப் ஸ்டார், ஆணைப் போன்றே இருந்தார். அதைப் பார்த்துதான் பெண்களை ஆண்களைப் போல மாற்றி ஓர் இசைக்குழுவை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது. சீனா முழுவதும் தேடியதில் 10 பேர் இறுதிக் கட்டத்துக்குத் தேர்வானார்கள். அதில் ஐந்து பேருக்கு இரண்டு மாதங்கள் பயிற்சியளித்தோம். நாங்கள் நினைத்ததைப் போல பிரமாதமாக மாறினார்கள். எங்கள் குழுவை ஆண்கள் என்றோ பெண்கள் என்றோ அழைப்பதைவிட, ‘அழகான இளைஞர்கள்’ என்று அழைத்தால் போதும்” என்கிறார் நிறுவனர் ஜோவ் ஸியாவோபாய். “எங்கள் குழுவுக்குப் பெண் ரசிகைகள்தான் அதிகம். ஐந்து பேருக்கும் காதல் கடிதங்கள் குவிகின்றன. 15% ஆண்கள் எங்கள் மீது கொண்ட பொறாமையால் எதிரிகளாகப் பார்க்கின்றனர். எங்கள் குழுவைப் பற்றி ஆணா, பெண்ணா என்ற குழப்பம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் எந்தப் பாலினம் என்பதைவிட, எங்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்” என்கிறார் இசைக் குழுவின் தலைவர் லு கெரான்.

ரசிகர்களை இப்படி ஏமாற்றலாமா?

அமெரிக்காவின் தென் கரோலினாவில் வசிக்கும் பிராண்டி பென்னர், தன் 2 வயது குழந்தை சோபியாவை அழைத்துக்கொண்டு பொம்மைக் கடைக்குச் சென்றார். குழந்தைக்கு விருப்பமான ஏதாவது ஒரு பொம்மையைப் பரிசளிப்பதாகச் சொன்னார். குவிந்து கிடந்த பொம்மைகளில் ஓர் ஆப்பிரிக்க பொம்மையை அவள் தேர்ந்தெடுத்தாள். ஆச்சரியமடைந்த பிராண்டி, பொம்மைக்கு பில் போடும்படிச் சொன்னார். கடை ஊழியரோ, “உனக்கு இந்தப் பொம்மைதான் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார். குழந்தை புன்னகையுடன் ‘ஆமாம்’ என்றாள். “உனக்குச் சரியாகத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. அங்கே நிறைய அழகான பொம்மைகள் இருக்கிறதே!” என்றார். மீண்டும் தனக்கு அந்தப் பொம்மைதான் பிடித்திருக்கிறது என்றாள் சோபியா. அப்படியும் அந்த ஊழியர் விடவில்லை. இந்தப் பொம்மை ஏன் பிடித்திருக்கிறது என்று கேட்டார். “நான் மருத்துவராக விரும்புகிறேன். இந்தப் பொம்மையும் மருத்துவர். நான் ரொம்ப அழகா இருக்கேன். இந்த பொம்மையும் என்னைப் போலவே அத்தனை அழகாக இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒரே மாதிரி இருக்கிறோம். இவள்தான் என்னுடைய தோழி” என்று குழந்தை சொன்னவுடன் கடை ஊழியரும் பிராண்டியும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

சோபியாவைப் பார்த்துக் கற்றுக்கொள்ளணும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ரசிகர்களை-இப்படி-ஏமாற்றலாமா/article9616587.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: புத்தர் உங்களை மன்னிப்பாராக!

 

 
ulagam_3151760f.jpg
 
 
 

ஜப்பானிய கலைஞர் யோன்ஜி இனாமுரா வண்டுகளை வைத்து புத்தரின் உருவத்தை வடித்திருக்கிறார்! 6 ஆண்டுகள் பல்வேறு விதமான வண்டுகளைச் சேகரித்து, புத்தர் சிலையை உருவாக்கியிருக்கிறார். இவர் வசித்த பகுதியில் பூச்சிகளும் வண்டுகளும் ஏராளமாக இருந்தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வண்டுகளைச் சேகரிப்பதைப் பொழுது போக்காக வைத்திருந்தார். 1970-ம் ஆண்டு தன்னிடமிருந்த 5 ஆயிரம் வண்டுகளை வைத்து, 10 மாதங்களில் சாமுராய் உருவத்தைச் செய்து முடித்தார். பலரும் ஆச்சரியப்பட்டுப் பாராட்டினர். சிலர் வண்டுகளைக் கொன்று கலையை உருவாக்குவதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இவர் விமர்சனத்தைப் பொருட்படுத்தவில்லை. இரண்டே ஆண்டுகளில் 5 அடி உயர போதிச்சத்துவரை வண்டுகளால் உருவாக்கிவிட்டார். அதற்குப் பிறகு 6 ஆண்டுகளில் 20 ஆயிரம் வண்டுகளைச் சேகரித்து புத்தரைச் செய்து முடித்தார். சாமுராய், போதிச்சத்துவரை விட புத்தர் மிக நேர்த்தியாக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ அருங்காட்சியகத்தின் நிர்வாக இயக்குநர், வண்டு புத்தரைக் கண்டுபிடித்தார். யோன்ஜியின் அனுமதியோடு இடாகுரா அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்தார். கடந்த ஆண்டு 98 வயதில் மறைந்துபோன யோன்ஜி, கடைசிவரை வண்டுகளை வைத்து ஏன் உருவங்களைச் செய்தார் என்ற காரணத்தை மட்டும் சொல்லவே இல்லை.

புத்தர் உங்களை மன்னிப்பாராக!

கியூபாவில் ஒயின் தயாரிப்பாளராக இருக்கிறார் 65 வயது ஒரெஸ்டெஸ் எஸ்டீவெஸ். பழச்சாறுகள் நொதித்து சரியான பக்குவத்தில் ஒயினாக மாறுவதை ஆணுறைகள் மூலம் அறிந்துகொள்கிறார். “ஆணுறைகளைக் கருத்தடைக்கு மட்டும் நாங்கள் பயன்படுத்துவதில்லை. ஆணுறைகளைப் பயன்படுத்தி சிலர் மீன் பிடிக்கிறார்கள். நான் ஒயின் தயாரிப்பில் பயன்படுத்திக் கொள்கிறேன். விதவிதமான பழக்கலவைகளைத் தயார் செய்து பெரிய ஜாடிகளில் ஊற்றி, வாயில் லேடக்ஸால் ஆன ஆணுறைகளை மாட்டி விடுவேன். சில நாட்களில் பழச்சாறு நொதிக்க ஆரம்பித்துவிடும். அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் ஆணுறைகளை நேராக நிற்க வைக்கும். சிறிய ஊசிகளைக் கொண்டு ஆணுறைகளில் ஓட்டையிடுவேன். வாயு வெளியேறும். வாயு அனைத்தும் வெளியேறி ஒயின் சரியான பக்குவத்துக்கு வரும்போது, ஆணுறை சாய்ந்துவிடும். உடனே அந்த ஜாடியை எடுத்து விற்பனைக்கு வைத்துவிடுவேன். எப்பொழுதும் 300 ஜாடிகளில் ஒயின் தயாராக இருக்கும். எங்கள் மக்கள் எளிமையானவர்கள். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஒயின்களை அவர்களால் வாங்க இயலாது. எங்கள் நாட்டில் விளையும் பழங்களையும் காய்கறிகளையும் பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் ஒயினைத் தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறேன். கியூபாவில் எங்கள் ஒயின் மிகவும் பிரபலமானது” என்கிறார் ஒரெஸ்டெஸ் எஸ்டீவெஸ்.

ஒரு பொருள்; பல பயன்பாடு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-புத்தர்-உங்களை-மன்னிப்பாராக/article9621581.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: இது என்ன விநோதமான நோயாக இருக்கிறது!

 

 
nails_3152447f.jpg
 
 
 

வியட்நாமைச் சேர்ந்த 58 வயது லூ காங் ஹுயென், 35 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வருகிறார். நகத்தை வெட்டினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாதக்கணக்கில் படுக்கையில் இருக்க வேண்டியிருப்பதால் நகங்களை வெட்டுவதில்லை என்கிறார். “முதலில் ஜாலியாக நகங்களை வளர்க்க ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் நகங்களால் இடையூறு ஏற்பட வெட்டிவிட்டேன். உடனே உடல்நிலை மிகவும் மோசமானது. பல மருத்துவர்களைப் பார்த்தும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வருடம் படுக்கையில் இருந்தேன். பிறகு உடல் தேறி, நகங்களை வெட்டியபோது மீண்டும் உடல்நிலை மோசமானது. நகங்களுக்கும் உடலுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நினைத்தேன். அதிலிருந்து நகங்களை வெட்டாமலும் உடையாமலும் பாதுகாத்து வருகிறேன். ஒரு நகம் தானாக உடைந்தாலும் சில மாதங்கள் படுக்கையில் விழுந்துவிடுவேன். இதனால் என் மனைவியும் குடும்பத்தினரும் நகங்களை வெட்ட அனுமதிப்பதில்லை. பார்ப்பதற்கு உறுதியாகத் தோன்றினாலும் ரொம்ப எளிதாக உடைந்துவிடும். தண்ணீர் பட்டால் உடையும் என்பதால் நகங்கள் மீது தண்ணீர் படாமல் குளிப்பேன். அதனால் அடிக்கடி குளிப்பதில்லை. உணவைக் கூட மனைவிதான் ஊட்டிவிட வேண்டும். மழை வரும்போது நகங்களை மட்டும் பிளாஸ்டிக் பையால் மூடிவிடுவேன். உடைகளைப் போடும்போதுதான் அதிக சிரமத்துக்கு உள்ளாகிறேன். இரவில் இரண்டு பக்கங்களிலும் தலையணைகளை வைத்து நகங்களைக் கிடத்தி வைத்திருப்பேன். தூக்கத்தில் கூடப் புரண்டு படுக்க முடியாது. வண்டி ஓட்டினாலும் சிரமமாகவே இருக்கும். ஒருமுறை விபத்தில் மாட்டிக்கொண்டேன். என்னைக் காப்பாற்றிக்கொள்வதைவிட நகங்களைத்தான் காப்பாற்ற நினைத்தேன். சிலர் நகங்களைக் கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகச் சொல்கிறார்கள். எப்படிக் கொடுப்பேன்? சுவர்களில் ஓவியம் தீட்டுவதுதான் என் தொழில். எவ்வளவு சிரமம் இருந்தாலும் அதை மட்டும் விட்டுவிடவில்லை. குழந்தைகள் என்னைப் பார்த்தாலே பயந்து அலறுவார்கள். பெரியவர்கள் பாராட்டுவார்கள். 55 செ.மீ. நீளமிருக்கும் என் நகங்களை கின்னஸில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது” என்கிறார் லூ காங்.

இது என்ன விநோதமான நோயாக இருக்கிறது!

ண்டர்நேஷனல் ஃபுட் இன்ஃபர்மேஷன் கவுன்சில் தினமும் 300 மி.கி. கஃபீன் எடுத்துக்கொள்ளலாம் என்கிறது. ஃபுட் அன்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் தினமும் 400 மி.கி. கஃபீன் சாப்பிடலாம் என்கிறது. ஆனால் ஒரு கப் பிளாக் இன்சோம்னியா காபியில் 702 மி.கி. கஃபீன் இருக்கிறது. இரவில் இதை எடுத்துக்கொண்டால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்கிறார்கள். 2016-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சியான் கிறிஸ்டஃபர் என்ற காபி பிரியரால், பிளாக் இன்சோம்னியா காபி உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் ஸ்ட்ராங்கான காபியை உருவாக்க வேண்டும் என்பதே இவரின் நோக்கம். கடந்த ஜுன் மாதம் கேப் டவுனின் சில காபி கடைகளில் பிளாக் இன்சோம்னியா காபி கிடைத்தது. அக்டோபர் மாதம் உலகின் 22 நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. அதிகமான கஃபீனை உட்கொண்டால் ரத்தநாளங்கள் சுருங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு...

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இது-என்ன-விநோதமான-நோயாக-இருக்கிறது/article9625233.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.