Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: கடலில் இருந்து பட்டு!

 
 
masala_2548303f.jpg
 

பழங்கால இத்தாலிய கலைகளில் ஒன்று ‘ கடல் பட்டு’ நெய்தல். இன்று பட்டுப் புழுக்களில் இருந்து பட்டு நூல்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் இத்தாலியின் சார்டினியன் தீவில் வசிக்கும் சியாரா விகோ, சிப்பியில் சுரக்கும் உமிழ்நீரில் உருவாகும் பட்டு நூலை எடுக்கிறார். தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்தப் பட்டுத் துணியை பைசஸ் என்கிறார்கள். எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற இடங்களில் கடல் பட்டு உற்பத்தி ஒருகாலத்தில் இருந்திருக்கிறது. கடல் பட்டு எடை இல்லாதது. தொட்டால் சிலந்தியின் வலையைத் தொடுவதுபோல அத்தனை மென்மையாக இருக்கிறது. தண்ணீர், அமிலம், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ளக்கூடியது. வசந்த காலத்தில் கடல் பட்டுக்காக அதிகாலை கடலுக்குச் சென்று விடுகிறார் விகோ. ஒவ்வொரு சிப்பியிலும் உருவாகியிருக்கும் பட்டு நூலை, சிப்பிக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படுத்தாமல் வெட்டி எடுக்கிறார். 300 முதல் 400 தடவை வரை கடலில் மூழ்கி, 200 கிராம் பட்டு நூலைச் சேகரிக்கிறார். பைசஸ் அருங்காட்சியகத்தில் வைத்து, நூலைப் பக்குவப்படுத்தி நூற்க ஆரம்பிக்கிறார். கடல் பட்டு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கலை. இதுவரை கடவுள், அரசர், போப் போன்றவர்களுக்கே கடல் பட்டு நெய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறிய அளவு கடல் பட்டுத்துணி ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விலை போகிறது. ஆனால் இன்று சாதாரணமானவர்களுக்கும் கடல் பட்டை அளிக்கிறார் விகோ. இதற்காக பணம் எதையும் அவர் பெற்றுக்கொள்வதில்லை.

ஒரு சின்னச் சிப்பியில் இருந்து முத்து, பட்டு எல்லாம் ஆச்சரியமா இருக்கு!

கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் அழகுக் கலை நிபுணர் அர்ஜெனிஸ் பைனல். இன்று காமிக் புத்தக ஓவியங்களில் புகழ்பெற்றவராக விளங்குகிறார். காமிக் புத்தகங்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள், வில்லன்கள், பெண் கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் அச்சு அசலாகத் தன் உடல் ஓவியத்தில் கொண்டு வந்துவிடுகிறார். கண்ணாடி முன் நின்றுகொண்டு, தனக்குத் தானே வெகு வேகமாக ஓவியம் தீட்டுகிறார். சாதாரண அர்ஜெனிஸ் சில மணி நேரங்களில் முழு கார்ட்டூன் கதாபாத்திரமாக விஸ்வரூபம் எடுத்துவிடுகிறார். இவருடைய கார்ட்டூன் ஓவியங்களுக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

நடமாடும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள்!

அமெரிக்காவில் உள்ள வெர்மிலியன் சிறைச் சாலை, தங்கும் விடுதியாக மாறியிருக்கிறது. 1910ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சிறைச் சாலை, பின்னர் நூலகமாக மாற்றம் அடைந்தது. 2013-ம் ஆண்டு தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. ஓர் இரவில் 4 பேர் தங்கக்கூடிய வசதிகளுடன் அறைகள் அமைக்கப்பட்டி ருக்கின்றன. நவீன வசதிகள் அனைத்தும் இங்கே உள்ளன. கம்பிக் கதவுகள் மட்டுமே சிறையை நினைவூட்டுகின்றன. மற்றபடி தங்கும் விடுதி 5 நட்சத்திர விடுதிகளுக்கு இணையாக இருக்கிறது.

விருப்பத்துடன் செல்லக்கூடிய சிறை!

சீனாவின் யான்தாய் பொறியியல் கல்லூரியில் பிரசவத்துக்கு விடுமுறை கேட்டு ஒரு மாணவி கோரிக்கை வைத்தார். இதுவரை கல்லூரியில் வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே பிரசவ விடுப்பு கொடுத்துள்ள நிர்வாகம், மாணவியின் கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்துவிட்டது. மாணவிகளுக்குப் பிரசவ விடுப்பு கொடுக்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டது. சிறிதும் மனம் தளராத மாணவி, தனக்காக விதிகளைக் கொஞ்சம் தளர்த்தும்படி பல்வேறு தரப்புக்கும் கோரிக்கை வைத்தார். மாணவியின் இக்கட்டான சூழலைப் புரிந்துகொண்ட நிர்வாகம், தன்னுடைய விதிகளைத் தளர்த்திக்கொண்டு விடுமுறை அளித்துவிட்டது. குழந்தை பிறந்த பிறகு, கல்லூரிக்கு வரும் மாணவிக்குச் சிறப்பு வகுப்புகள் எடுக்கவும் ஏற்பாடு செய்துவிட்டது.

வெல்டன்!

பாங்காக்கில் நகைக்கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. அந்தக் கண்காட்சியைப் பார்வையிட வந்த 39 வயது ஜியாங் ஸுலியனை ஸ்கேன் செய்தபோது, அவரது பெருங்குடலில் வைரக் கல் இருப்பது தெரிய வந்தது. காவலர்கள் அவரைப் பிடித்து விசாரித்தனர். சாப்பிடச் சொன்னபோது மறுத்துவிட்டு, தண்ணீர் மட்டும் பருகினார் ஜியாங் ஜுலியன். மருத்துவர்கள் பெருங்குடலில் இருந்து வைரத்தை எடுத்தனர். 1.85 கோடி மதிப்பு மிக்க வைரம் அது. இதுவரை போதைப் பொருட்களைத்தான் இப்படிக் கடத்தியிருக்கிறார்கள். முதல்முறை ஒரு வைரம் விழுங்கப்பட்டு, கடத்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள் தாய்லாந்து காவலர்கள்.

கண்காணிப்பு கேமரா, காவலர்கள் எல்லாம் இருந்தும் எப்படி இப்படியெல்லாம் நடக்கிறது…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கடலில்-இருந்து-பட்டு/article7654763.ece

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: இறந்தவர்களுடன் செல்ஃபி போட்டி!

 
 
 
selfie_2515685f.jpg
 

ரஷ்யாவில் இறந்த மனிதர் களுடன் செல்ஃபி எடுக்கும் போட்டி இணையத் தில் நடத்தப்பட்டது. மிகச் சிறந்த செஃல்பிக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. உடனே ஆயிரக்கணக் கானோர் களத்தில் இறங்கிவிட்டனர். பாட்டி, தாத்தா, மாமா என்று இறந்த உடல்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இறந்த உடல்களுக்கு அருகே சிரித்துக்கொண்டு செல்ஃபி எடுக்கிறோமே என்று ஒருவர் கூட யோசிக்கவில்லை. விபத்தில் இறந்த 13 வயது பெண்ணுடன் எடுத்த செல்ஃபி பரிசைத் தட்டிச் சென்றது. இறுதி அஞ்சலியில் செல்ஃபி எடுத்ததைப் பார்த்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சே… மனிதப் பண்புகளைக் கூட மாற்றியமைத்து விடுகிறதே இந்த செல்ஃபி மோகம்…

அமெரிக்காவில் முடிதிருத்தும் பணியைச் செய்து வருகிறார் கோர்ட்னி ஹோம்ஸ். குழந்தைகளின் முடிகளை வெட்டுவதற்குப் பணம் பெற்றுக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, பார்லரில் இருக்கும் புத்தகங்களைப் படிக்கச் சொல்கிறார். குழந்தைகள் கதைகளைப் படித்துக் காட்டினால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. படிக்கத் தெரியாத குழந்தைகளுக்குப் படிக்கவும் சொல்லித் தருகிறார் கோர்ட்னி. படிக்காத குழந்தைகளையும் படிப்பைப் பாதியில் நிறுத்திய குழந்தைகளையும் மீண்டும் பள்ளியில் சேர்க்கச் சொல்கிறார்.

‘’4 குழந்தைகளைத் தேடிச் சென்று முடி வெட்டினேன்... இப்பொழுது 20 குழந்தைகள் தானாகவே வந்து புத்தகம் படித்துக் காட்டுவதாகவும் இலவசமாக முடி வெட்டிவிடும்படியும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்’’ என்று தன்னுடைய திட்டம் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைகிறார் கோர்ட்னி. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் படிப்பின் மூலமே தங்களை முன்னேற்றிக்கொள்ள இயலும். ஆனால் அவர்களிடம்தான் பள்ளி இடை நிறுத்தம் அதிகமாக இருக்கிறது. அதற்காகவே ’மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறார்கள்.

அடடா! எவ்வளவு நல்ல காரியம் செய்யறீங்க கோர்ட்னி!

ஸ்காட்லாந்தில் உள்ள க்ருனே தீவில் கலங்கரை விளக்கத்தின் முன்னாள் பாதுகாவலர்கள் இருவரின் குடியிருப்புகள் இருக்கின்றன. இந்தத் தீவில் மனிதர்கள் நடமாட்டம் கிடையாது. சீல்களும் ஆட்டர்களும்தான் இந்தப் பகுதியில் வசிக்கின்றன. தீவு இப்பொழுது சுமார் 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்தத் தீவில் குடி தண்ணீர் கிடையாது. மின்சார வசதி கிடையாது. ஆனால் அருகில் உள்ள தீவுகளில் பள்ளி, அஞ்சலகம் போன்ற வசதிகள் இருக்கின்றன.

இந்தத் தீவுகளுக்கு 5 நிமிடங்களில் படகில் பயணம் செய்துவிடலாம். ஜாக்கி பால்ட்வின் 12 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சேமிப்பை வைத்து, இந்தத் தீவை வாங்கினார். ஆனால் இதுவரை 5 முறையே இந்தத் தீவுக்கு வந்திருக்கிறார். குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்பு இருந்ததால் தீவில் தங்கவோ, வசதியை அதிகரிக்கவோ முடியவில்லை. வேறு யாராவது தீவை வாங்கினால், முன்னேற்றலாம் என்பதற்காக விற்க முடிவெடுத்ததாகச் சொல்கிறார் பால்ட்வின். இந்தப் பகுதியில் இருக்கும் 100 தீவுகளில் 17 தீவுகள் மனித நடமாட்டமின்றி இருக்கின்றன.

மிக விலை குறைந்த தீவாக இருக்கே!

சீனாவின் டோங்ஃபாங் சதுக்கத்தில் ஒருவர் கொட்டும் மழையில் முழங்காலிட்டு, இரண்டு கைகளிலும் இரண்டு அட்டைகளைப் பிடித்தபடி பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். ஓர் அட்டையில் ‘மனைவியே, நீ வரும் வரை நான் முழங்காலிட்டு அமர்ந்திருப்பேன்’ என்றும் இன்னோர் அட்டையில் ‘என் மனைவி என்னைத் தவறாக நினைத்துவிட்டார்’ என்றும் தொலைபேசி எண்ணுடன் எழுதப்பட்டிருந்தது.

அந்த வழியே வருகிறவர்கள் எல்லாம் மனிதரைப் பார்த்துப் பரிதாபம் கொண்டனர். அட்டையில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டனர். ஒவ்வொரு தடவையும் எதிர் முனையில் ஒரு பெண், கோபத்துடன் பேசி வைத்துவிட்டார். ’’எனக்கு யாராவது உதவி செய்ய நினைத்தால் என் மனைவியிடம் பேசுங்கள்’’ என்று கெஞ்சுகிறார் அந்த மனிதர். ஆனால் ஒருவரைக் கூட முழுமையாக விஷயத்தைச் சொல்ல அந்தப் பெண் அனுமதிக்கவில்லை.

என்ன கொடுமைங்க இது!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இறந்தவர்களுடன்-செல்பி-போட்டி/article7557079.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: காஸ்ட்லி கேக்!

 
masala_2549557f.jpg
 

பிரிட்டனைச் சேர்ந்த டெப்பி விங்ஹாம் புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனர். உலகிலேயே மிக விலை உயர்ந்த ஆடை ஒன்றை வடிவமைத்து கவனத்தை ஈர்த்தார். தற்போது உலகிலேயே விலை உயர்ந்த கேக் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவரின் மகள் பிறந்தநாள் மற்றும் நிச்சயதார்த்த விழாவுக்காக இந்த கேக்கை உருவாக்கியிருக்கிறார். 6 அடி நீளமும் 450 கிலோ எடையும் கொண்டது இந்த கேக். இதில் 4 ஆயிரம் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

மதிப்பு மிக்க 17 அபூர்வ வைரக் கற்களின் விலை மட்டும் 300 கோடி ரூபாய். கறுப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை வைரக் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 120 கிலோ ஐஸிங்கும் 60 கிலோ சாக்லேட்டும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கேக் மீது வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் சாக்லெட்கள் மூலம் கைகளால் உருவாக்கப்பட்டவை. 1,100 மணி நேரங்களைச் செலவிட்டு, 512 கோடி ரூபாய் மதிப்புள்ள கேக்கை டெப்பி உருவாக்கியிருக்கிறார்!

ஐயோ… இந்தப் பணத்தால் எத்தனையோ ஆயிரம் அகதிகளின் துயர் துடைத்திருக்கலாமே!

ஃபேஷன் உலகின் அத்தனை விதிகளையும் தகர்த்து எறிந்திருக்கிறார் 59 வயது யாஸ்மினா ரோஸி. இன்றும் சர்வதேச நிறுவனங்களின் விருப்பத்துக்குரிய மாடலாக இருந்து வருகிறார். பிரான்ஸில் பிறந்த யாஸ்மினா, 28 வயதுக்குப் பிறகுதான் மாடலிங் துறைக்கே வந்தார். அந்த வயதில் தொழில்முறை மாடல்கள் ஓய்வெடுக்கக் கிளம்பினார்கள். 45 வயதில் யாஸ்மினாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. பிரான்ஸில் இருந்து நியூயார்க் வந்து சேர்ந்தார். மிக முக்கியமான சர்வதேச நிறுவனங்களின் மாடல் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை மாடலிங்கில் யாஸ்மினா வின் ஆதிக்கம் குறையவே இல்லை.

‘‘உரம் போடாத இயற்கை உணவுகளையே சாப்பிடுகிறேன். பழங்களும் மாமிச உணவுகளையும் சேர்த்துக்கொள்கிறேன். உடலுக்கும் தலைக்கும் கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்துகிறேன். வாரம் ஒருமுறை ஆலிவ் எண்ணெய்யுடன் சர்க்கரைக் கலந்து தோலைச் சுத்தம் செய்கிறேன். மிக முக்கியமான விஷயம் அளவான உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை. இயற்கை வழியில் நோய்களைச் சமாளித்து வருகிறேன். புற உடல் 45 வயதைக் காட்டினாலும் மனத்தளவில் நான் இன்னும் 20 வயதிலேயே இருக்கிறேன்’’ என்கிறார் 2 பேரக் குழந்தைகளின் பாட்டியான யாஸ்மினா.

கலக்குங்க யாஸ்மினா!

பிரான்ஸைச் சேர்ந்தவர் 54 வயது கிறிஸ்டியன் ஹாட்டிச். 15 வயதில் கார் விபத்து மூலம் ஒரு கையையும் காலையும் இழந்து விட்டார். ஆனால் இன்று 1,600 மைல்கள் தூரம் சைக்கிளில் சுற்றி வந்து சாதனை படைத்துவிட்டார். கிறிஸ்டியனுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் அது. அவரது மனைவியின் ஊக்கு விப்பில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ‘‘35 வயதில் தான் சைக்கிள் பழக ஆரம்பித்தேன். மிகத் தாமதமான முயற்சிதான் என்றாலும் இன்று சாதித்துவிட்டேன். வலது கையும் வலது காலும் கடுமையாக உழைத்திருக்கின்றன’’ என்கிறார் கிறிஸ்டியன். அடுத்தது 10 ஆயிரம் மைல்கள் பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

அதிசய மனிதர்!

பஹ்ரைன் சந்தையில் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பூனை ஒன்றை மீட்டிருக்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள். கடுமையான கோடைக் காலத்தில் செயற்கை வண்ணப்பூச்சு ஒவ்வாமை ஏற்படுத்தி, பூனையை மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. மருத்துவர்கள் வைத்தியம் செய்து வருகிறார்கள். பலமுறை பூனையைத் தண்ணீரில் மூழ்க வைத்து வண்ணத்தைக் கரைத்து வருகிறார்கள். ‘‘மனிதனின் ஆர்வக்கோளாறு ஒரு உயிரைப் பலி வாங்கும் அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. எல்லா உயிரினங்களும் சமமானவை என்பதைப் புரிந்துகொண்டால் இப்படிச் செய்ய மாட்டார்கள்’’ என்கிறார் மருத்துவர்.

ஓர் உயிரோடு விளையாடலாமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-காஸ்ட்லி-கேக்/article7658658.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: இனிமேலாவது திருந்துவார்களா?

 
 
selfie_2550908h.jpg
 

சவப்பெட்டிக்குள் இறந்த கணவன். அருகில் மனைவியும் குழந்தைகளும் சிரித்தபடி வெளியான புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடையாதவர்களே இருக்க முடியாது. அமெரிக்காவின் சின்சினாட்டியில் வசித்த 26 வயது மைக் செட்டில்ஸ் ஹெராயின் போதைப் பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டதால் மரணம் அடைந்துவிட்டார். அவரது மனைவி இவா ஹாலண்ட், “இந்தப் புகைப்படம் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தலாம். என்னை மனிதாபிமானம் அற்றவளாகக் காட்டலாம். மைக்கின் கதையைக் கேட்டுவிட்டு, முடிவு செய்துகொள்ளுங்கள். மைக்கை சிறிய வயதில் இருந்தே காதலித்து வருகிறேன். திருமணம் மூலம் அழகான இரண்டு குழந்தைகள். ஹெராயினுக்கு மைக் அடிமையான விஷயம் எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. எவ்வளவோ பேசிப் பார்த்தேன். கெஞ்சிப் பார்த்தேன். அழுது பார்த்தேன். ஒருகட்டத்தில் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு மையத்தில் 4 மாதங்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். மகிழ்ச்சியான வாழ்க்கை திரும்பக் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் சிறிது காலத்தில் மீண்டும் ஹெராயினை நாடிவிட்டார். எங்களைப் பிரிந்திருந்த மைக்கால் ஹெராயினைப் பிரிந்திருக்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான ஹெராயினை எடுத்துக்கொண்டு மனைவியையும் குழந்தைகளையும் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார். ஹெராயினுக்கு என் கணவர் பலி ஆனார் என்று நான் எழுதினால் ஆயிரம் செய்திகளில் ஒன்றாக மாறியிருக்கும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஏற்பட்ட நிலை இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக்கூடாது என்று முடிவு செய்தேன். விழிப்புணர்வு ஏற்படுத்தவே துயரத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு, கணவனின் உடலோடு சிரித்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டேன். நான் நினைத்தது போல மிகப் பெரிய தாக்கத்தை இந்தப் புகைப்படம் ஏற்படுத்திவிட்டது. நிறைய பேர் என்னிடம் ஆலோசனை கேட்கிறார்கள். எப்படியாவது தங்கள் கணவரைக் காப்பாற்றிவிடத் துடிக்கிறார்கள். சிலர் போதை பழக்கத்தை விட்டுவிடுவதாகக் கூறியிருக்கிறார்கள். எனக்கு இது போதும். மைக்கின் ஆன்மா என்னைப் புரிந்துகொள்ளும்” என்கிறார்.

இனிமேலாவது திருந்துவார்களா?

பிரிட்டனில் வசிக்கிறார் 79 வயது பால் ராக்ஹம். மிகப் பெரிய பணக்கார விவசாயி. கடந்த 25 ஆண்டுகளாக டிராக்டர்களை சேகரித்து வருகிறார். அவரது அருங்காட்சியகத்தில் 230 டிராக்டர்கள் இருக்கின்றன. இவற்றின் இன்றைய மதிப்பு 20 கோடியே 40 லட்சம் ரூபாய். “எனக்கு இருக்கும் ஆர்வம் என் குடும்பத்தினருக்கு இல்லை. அதனால் இந்த டிராக்டர்களை விற்பனை செய்ய முடிவெடுத் திருக்கிறேன். மீதி வாழ்க்கையை சுவாரசியப்படுத்த வேறுவித பொழுதுபோக்குகளில் இறங்கப் போகிறேன்” என்கிறார் பால். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்ட டிராக்டர்கள், இன்றும் புத்தம் புதிதாகக் காட்சியளிக்கின்றன. 1916 முதல் 1970-ம் ஆண்டு வரை உள்ள டிராக்டர்கள் இங்கே இருக்கின்றன.

பொழுதுபோக்குகள் பலவிதம்!

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகம் வசிக்கின்றன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிக அளவில் ஆமைகள் கரைக்கு வந்து முட்டைகளை இட்டுச் செல்கின்றன. இந்த நிகழ்வை கோஸ்டா ரிகா அரசாங்கம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதத்தில் பயன்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் அளவுக்கு அதிகமாகக் குவிந்துவிட்டனர். ஆனால் பாதுகாவலர்களோ மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முட்டைகளை இடுவதற்காகக் கரைக்கு ஒதுங்கிய ஆமைகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். சிலர் ஆமைகளின் மீது ஏறி நின்றும், ஆமைகள் மீது அமர்ந்தும் புகைப்படம் எடுத்தார்கள். அளவுக்கு அதிகமான கூட்டமும் கூச்சலும், ப்ளாஷ் வெளிச்சங்களும் ஆமைகள் முட்டை இட விடாமல் மீண்டும் கடலுக்குச் செல்ல வைத்தன. கோஸ்டா ரிகா சுற்றுச்சூழல் அமைப்பினர் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ரிட்லி ஆமைகள் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோஸ்டா ரிகா அரசாங்கமோ ரிட்லி ஆமைகள் இடக்கூடிய முதல் 3 நாள் முட்டைகளை அதிகாரப்பூர்வமாகவே விற்பனை செய்து வருகிறது.

சந்ததியைப் பெருக்க வரும் ஆமைகளை இப்படிச் சங்கடப்படுத்தலாமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இனிமேலாவது-திருந்துவார்களா/article7662148.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிங்கத்தின் வாயில் கத்தி!

 
 
masala_2514639f.jpg
 

எகிப்தில் நடந்த தேசிய சர்க்கஸில் முகம்மது சையத் என்ற விலங்குகள் பயிற்சியாளர் உறைய வைக்கும் சாகசம் ஒன்றை நிகழ்த்தினார். முகம்மது சையத் வாயில் ஒரு கத்தி, அதை சிங்கத்தின் வாய்க்குள் வைக்கும்போது பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கறுப்பு ஆடையில், விளக்கு வெளிச்சத்தில், வியர்வை வழிய இந்த சாகசத்தைச் செய்து முடித்தார் முகம்மது சையத்.

இருவருக்கும் இடையே ஓர் அங்குல இடைவெளியே இருந்தது. புலி, முதலை, கரடி, குரங்குகளை வைத்து நிகழ்ச்சி நடத்தி வந்தவர்கள், தற்போது சிங்கங்களுடன் சாகசங்கள் செய்து வருகின்றனர். ஒரு கூண்டுக்குள் 10 சிங்கங்களுடன் இருவர் தங்கியிருந்த சாகசத்தையும் செய்து முடித்திருக்கின்றனர்.

சாகசத்துக்காக ஆபத்தை வரவழைத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி…

பாண்டாக்கள் பொதுவாக கறுப்பு, வெள்ளையிலேயே காணப்படுகின்றன. சீனாவின் க்வின்லிங் மலைகளில் மட்டும் சில பழுப்பு, வெள்ளைப் பாண்டாக்கள் அரிதாகக் காணப்படுகின்றன. 1985-ம் ஆண்டில் இருந்து இதுவரை 5 பாண்டாக்கள் மட்டுமே பழுப்பு வெள்ளையில் இருந்திருக்கின்றன. அவற்றில் க்யு லை என்று பெயரிடப்பட்டுள்ள பழுப்பு பாண்டா ஒன்றுக்கு தற்போது வயது 5. தாய் இல்லாமல் 2 மாதக் குழந்தையாகத் தனியே இருந்த குட்டியை வனப்பாதுகாப்பு மையத்தில் வளர்த்து வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச பாண்டாக்கள் பாதுகாப்பு அறக்கட்டளைக்காக கேத்தரின் ஃபெங், க்யு லை பாண்டாவை முதல் முறையாகப் படம் எடுத்திருக்கிறார். க்யு லை அம்மா கறுப்பு வெள்ளையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் க்யு லை மட்டும் எப்படி நிறம் மாறியிருக்கிறது என்பதைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன. சூழ்நிலை, தண்ணீர், உணவு போன்ற காரணங்களால் பாண்டாவின் நிறம் மாறியிருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

கறுப்போ, பழுப்போ பாண்டா அழகுதான்!

பிரிட்டனைச் சேர்ந்தவர் 16 வயது ரிலே மிடில்மோர். 4 சகோதரர்களுடன் ஒரே பெண்ணாக வளர்ந்தார். அவர்களின் ஆடைகளை அணிந்துகொள்வார். தன்னையும் ஓர் ஆணாகவே நினைத்துக்கொண்டார். ஆனால் 12 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றம், அவரது நினைப்பை மாற்றிவிட்டது. தான் ஒரு பெண் என்பதை மிடில்மோரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வீட்டில் உள்ளவர்களிடம் தான் ஆணாக மாற விரும்புவதாகச் சொன்னார்.

முதலில் மறுத்தவர்கள், பிறகு மிடில்மோரின் சந்தோஷத்துக்காகச் சம்மதித்தனர். 18 வயதில் மிடில்மோர் ஆணாக மாறிவிடுவார். இந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்குப் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட இருக்கின்றன. தன்னுடைய கரு முட்டைகளை மட்டும் பத்திரப்படுத்திவிட்டார் மிடில்மோர். எதிர்காலத்தில் தன்னுடைய வாழ்க்கைத் துணை மூலம் தன் முட்டையில் இருந்து குழந்தை பெற்றுக்கொள்வதற்காக இப்படிச் செய்திருக்கிறார் மிடில்மோர்.

சிகிச்சைக்குப் பிறகாவது உங்களுக்கு சந்தோஷம் நிலைக்கட்டும் மிடில்மோர்…

வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதம் அரசியல் பேரணி ஒன்று நடந்தது. அப்போது மோதல் வெடித்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 8 மாதக் கர்ப்பத்தோடு அங்கே வந்த நஜ்மாவின் வயிற்றில் ஒரு குண்டு துளைத்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் நஜ்மா. 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை சுரையா பிறந்தாள்.

ஆனால் வலது தோளும் வலது கண்ணும் குண்டு துளைத்ததால் சேதமடைந்திருந்தன. டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு சுரையா குணமடைந்துவிட்டாள். நஜ்மாவும் சுரையாவும் ஒரு மாதப் பிரிவுக்குப் பிறகு சேர்ந்திருக்கிறார்கள்.

உலகின் இரண்டு முகங்களையும் சந்தித்துவிட்டாள் சின்னஞ்சிறு சுரையா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிங்கத்தின்-வாயில்-கத்தி/article7553222.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா - ஐபாட் உணவகம்

 
 
masala_2551995f.jpg
 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ‘ஈட்சா’ என்ற புதுமையான உணவு விடுதி தொடங்கப்பட்டுள்ளது. விடுதிக்குள் ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதாவது கண் முன் தெரியமாட்டார்கள். சுவர்களை ஒட்டி ஐபாட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் கார்டை தேய்க்க வேண்டும். உடனே நம் பெயர் திரையில் தெரியும். பிறகு மெனு வரும். தேவையான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்கிறது, விலை எவ்வளவு என்பதை எல்லாம் காட்டும். பழக்கலவை என்றால் என்னென்ன பழங்கள் வேண்டும் என்று நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

பிறகு பில் எவ்வளவு என்று காட்டும். ஓகே என்று பட்டன் அழுத்திவிட்டு, காத்திருக்க வேண்டும். எதிரில் இருக்கும் திரைகளில் நம் பெயர் தெரிந்தால், அருகில் சென்று இரண்டு முறை அழுத்த வேண்டும். சட்டென்று திரை அகன்று, நாம் கேட்ட உணவுகள் அங்கிருக்கும். அவற்றை எடுத்து, மேஜையில் வைத்துச் சாப்பிட வேண்டியதுதான். ‘‘இது புது முயற்சி. இன்னும் மக்கள் பழகவில்லை. மனிதர்களின் சேவை எதிர்பார்த்து வருபவர்கள் ஏமாற்றமடைவார்கள். சாப்பிடத்தானே வந்திருக்கிறோம் என்று நினைப்பவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். எதிர்காலத்தில் உணவகங்கள் இப்படித்தான் இருக்கப் போகின்றன’’ என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான டிம் யங்.

ம்ம்...டிப்ஸ் தரவேண்டிய வேலை இல்லை!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வசிக்கிறார்கள் டோனி கொலியர்,கொரின் ஜோன்ஸ். இவர்கள் இருவருக்கும் 1961-ம் ஆண்டு வெளிவந்த 101 டால்மேஷன்ஸ் என்ற டிஸ்னி க்ளாஸிக் திரைப்படம் மிகவும் பிடிக்கும். இந்தக் காதல் கதையில் 2 நாய்கள் முக்கியப் பங்கு வகித்தன. டோனியும் ஜோன்ஸும் தங்கள் நிச்சயதார்த்தத்தை வித்தியாசமாக நடத்த முடிவு செய்தனர். திரைப்படத்தில் வருவது போலவே தாங்களும் உடைகள் அணிந்து, இரண்டு நாய்களுடன் புகைப்படங்கள் எடுத்திருக்கின்றனர். “என் மீது எவ்வளவு அன்பு இருந்தால் டோனி இந்தக் காரியத்தில் இறங்கியிருப்பார்! எந்தப் பெண்ணுக்கும் இவ்வளவு வித்தியாசமான நிச்சயதார்த்தம் நடந்திருக்காது” என்கிறார் ஜோன்ஸ்.

ஆஹா! ரசனையான ஜோடி!

நடந்தே உலகைச் சுற்றி வந்திருக்கிறார் கனடாவைச் சேர்ந்த ஜீன் பெலிவா. 6 கண்டங்களில் உள்ள 64 நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். 45 வயதில் பயணம் தொடங்கியவர் 75,500 கி.மீ. தூரத்தை 11 ஆண்டுகளில் கடந்திருக்கிறார். ஒரு கைவண்டியில் பொருட்களை வைத்துக்கொண்டு, எங்கும் நடந்தே சென்றிருக்கிறார். இரவு நேரங்களில் கோயில், பூங்கா, காடு, தேவாலயம், பள்ளி, ஜெயில் போன்ற இடங்களில் தங்கியிருக்கிறார். இவை தவிர, 1,600 வீடுகளிலும் தங்கியிருக்கிறார்.

தன் பயணத்தில் நெல்சன் மண்டேலா உட்பட நோபல் பரிசு பெற்ற நால்வரைச் சந்தித்திருக்கிறார். 54 ஷூக்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தன் அளவுக்கு ஷூ கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கிறார். “ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த எனக்கு உலகப் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. என் மனைவியிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டேன். உலக அமைதிக்காக இந்தப் பயணத்தைத் திட்டமிட்டுக்கொண்டேன். ஏராளமான அனுபவங்கள். ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள மக்களின் ஏழ்மை நிலை என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது” என்கிறார் ஜீன்.

நடை மூலம் உலகைச் சுற்ற முடியும் என்று காட்டியவருக்குப் பாராட்டுகள்!

சமீபத்தில் அறிமுகமான நியான் உடோன் நூடுல்ஸை சாப்பிட ஜப்பானியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். காலம் காலமாக இருந்து வரும் வெள்ளை நூடுல்ஸை வண்ண நூடுல்ஸாக மாற்றியிருக்கிறார்கள். கண்களைப் பறிக்கும் அடர்ந்த நியான் வண்ணங்களில் இந்த நூடுல்ஸ் இருக்கின்றன. இவற்றுடன் சேர்க்கப்படும் டோஃபுவும் வண்ணத்துக்கு மாறிவிட்டது.

ஆனால் பார்ப்பதற்கு இவை உணவுப் பொருட்கள் போலவே தெரியவில்லை. உணவு ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான குரரே ராகு நியான் நூடுல்ஸை உருவாக்கியிருக்கிறார். இரவு நேரத்தில் ஒளிரும் தன்மைகொண்ட இந்த நியான் நூடுல்ஸ், சோதனை முயற்சியாக சில இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் உணவகங்களில் கிடைக்கும் என்கிறார் குரரே ராகு.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள் தேவையா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஐபாட்-உணவகம்/article7664148.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பேஸ்ட்டை மறந்த விண்வெளிப்பெண்!

 
 
masala_2553224f.jpg
 

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் ரஷ்யாவின் வாலண்டீனா தெரெஷ்கோவா. 1963-ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்று 3 நாட்கள் தங்கியிருந்து, வெற்றிகரமாகத் திரும்பியவர். லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் விண்வெளிக் காட்சிக் கூடத்தைத் அவர் திறந்து வைத்தார். ‘‘சாதாரண பெண்ணான எனக்கு விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. விண்வெளிக்குச் செல்வது என்று முடிவான பிறகு நான் கேட்காமலே எல்லாம் என்னைத் தேடி வந்தன. பூமியில் இருந்து கிளம்பி, 144 மைல்கள் பயணித்த பிறகுதான் பல் துலக்கும் பேஸ்ட் எடுத்துவரவில்லை என்று நினைவுக்கு வந்தது.

அன்றைய ரஷ்ய அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியுமே தவிர, அவற்றை வெளியே சொல்ல அனுமதி இல்லை. 30 ஆண்டுகள் வரை இந்த ரகசியத்தை நான் பாதுகாத்து வந்தேன். தற்போதுதான் வெளியுலகத்துக்குச் சொல்லியிருக்கிறேன்’’ என்றார் வாலண்டீனா. அருங்காட்சியகத்தின் இயக்குனர், ‘‘இருபதாம் நூற்றாண்டில் ரஷ்யர்கள் நிகழ்த்திய விண்வெளி ஆராய்ச்சிகள் மிக மிக முக்கியமானவை. அவர்களின் பங்களிப்பையும் சாதனைகளையும் கெளரவிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியை உருவாக்கியிருக்கிறோம்’’ என்றார்.

அட, இதுக்காகவெல்லாம் ரஷ்யாவின் சாதனை குறைந்துவிடாது...

ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமான எல்ப்ரஸின் உச்சிக்குச் சென்று பலரும் சாதனை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் ரஷ்யாவின் ஆண்ட்ரே ரோடிசேவ்க்கு இணையாக மாட்டார்கள். பளூ தூக்கும் வீரரான ரோடிசேவ், 75 கிலோ எடையைத் தூக்கிக்கொண்டு மலை ஏறி சாதனை படைத்திருக்கிறார். மலையேற்றத்தையும் எடை தூக்குதலையும் சேர்த்துப் புதிய விளையாட்டை உருவாக்கியிருக்கிறார். தினமும் காலை, மாலை பயிற்சிகளை மேற்கொண்டார். ஜிம்மில் உடற்பயிற்சிகளைச் செய்தார்.

இந்தச் சாதனைக்காகத் தன்னுடையை உடல் எடையில் 20 கிலோவை இழந்திருக்கிறார். பொதுவாக 26 முதல் 30 கிலோ எடையைச் சுமந்துகொண்டு வீரர்கள் பயணிப்பர். அதுவும் அடிவாரத்தை அடைந்த உடன் பெரும்பாலான எடையை விட்டுவிட்டு, மலை ஏறுவார்கள். ரோடிசேவ் சாதனை சாதாரணமானதல்ல என்கிறார்கள் மலையேற்ற வீரர்கள். ரோடிசேவ் மலை ஏறும்போது மோசமான வானிலை நிலவியது. எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு 8 நாட்களில் மலை உச்சியை அடைந்துவிட்டார். இவரது மலையேற்றம் முழுவதும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆவணப் படமாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இரட்டைச் சாதனைக்குரியவர்!

டென்னிசி மாநிலத்தில் வசித்து வருகிறார் 87 வயது ஹெலன் வான் வின்கிள். விதவிதமான ஆடைகளை அணிந்து, புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இவரை 15 லட்சம் மக்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். ‘‘என் சிந்தனை முதுமையடையாத போது, நான் ஏன் முதியவர்களின் ஆடைகளை அணியவேண்டும்? பல ஆண்டுகளுக்கு முன்பு என் கணவரையும் மகனையும் இழந்துவிட்டேன். கடவுளிடம் சண்டை போட்டு, அழாத நாள் இல்லை. இந்தத் துன்பத்தில் இருந்து மீள வேண்டும் என்று தோன்றியது. என் கொள்ளுப் பேத்தியின் ஆடையை எடுத்து அணிந்து பார்த்தேன். எனக்கு நன்றாகப் பொருந்திப் போனது.

உடனே என் தலைமுடிக்கு டை அடித்தேன். மேக்-அப் போட்டுக்கொண்டேன். எனக்கே என்னை மிகவும் பிடித்துப் போனது. அதுவரை இல்லாத தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் என் மனத்தில் குடிவந்தன. என்னைப் பார்த்த பேத்தி, மிக அழகாக இருக்கிறேன் என்று கூறி, புகைப்படங்கள் எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டாள்.

ஒரு பாட்டியைப் போய் யார் ரசிப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு, மிகப் பெரிய ரசிகர்கள் கிடைத்தனர். விதவிதமாக உடைகள் அணிவதையும் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதையும் வாடிக்கையாக்கினேன். இன்று இணையப் பிரபலமாக மாறிவிட்டேன். வாழும் வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’’ என்கிறார். இந்த ஆண்டு 2 ஃபேஷன் ஷோக்களிலும் பங்கேற்று திரும்பிவிட்டார் ஹெலன்.

அமெரிக்காவின் அசத்தல் பாட்டி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பேஸ்ட்டை-மறந்த-விண்வெளிப்பெண்/article7667662.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வீடியோ எடுத்த பிறகாவது பர்கர் கொடுத்தீங்களா ஜுலியோ?

 
dog_2554285f.jpg
 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் வசிக்கும் ஜுலியோ லோபெஸ், சைபீரிய ஹஸ்கி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். பிறந்து 18 மாதங்களே ஆன இந்த நாயின் முகபாவனைகள் எல்லோரையும் ஆச்சரியத் தில் ஆழ்த்துகின்றன. பொது வாக நாய்கள் இவ்வளவு பாவனைகளை முகத்தில் வெளிப்படுத்துவதில்லை. யுகா என்ற இந்த நாய் முன்பாக ஜுலியோ ஒரு பர்கரைச் சுவைத்துச் சாப்பிடுகிறார். ஒவ்வொரு முறை கடிக்கும்போதும் தனக்கு ஒரு துண்டு தருவார் என்று எதிர்பார்க்கிறது யுவா. ஆனால் ஜுலியோ தான் மட்டுமே சாப்பிடச் சாப்பிட யுவாவின் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது. இறுதியில் கடைசித் துண்டு பர்கரை ஜுலியோ விழுங்கிய பிறகு, அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறது யுவா. இந்த வீடியோவை இணயத்தில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

வீடியோ எடுத்த பிறகாவது பர்கர் கொடுத்தீங்களா ஜுலியோ?

ஜப்பானின் கியோடா நகரில் வசிக்கும் 68 வயது சிசாகோ ககேஹி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவரின் கதையைக் கேட்டவர்கள், கியாட்டோவின் ‘பிளாக் விடோ’ என்று அழைக்கிறார்கள். இதுவரை 8 முறை திருமணம் செய்திருக்கிறார் சிசாகோ. கணவர்கள் அனைவருமே ஒருகட்டத்தில் மரணம் அடைந்துவிட்டனர். இன்று கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் சிசாகோ. 2013ம் ஆண்டு சிசாகோவின் 75 வயது கணவர், திருமணம் ஆன ஒரே மாதத்தில் திடீரென்று இறந்து போனார். ஆரம்பத்தில் மாரடைப்பு என்று நினைத்தனர். ஆனால் கியோடோ காவல்துறை சிசாகோவின் பழைய விஷயங்களை ஆராய்ந்து பார்த்தது. அதில்தான் அவரது கணவர்கள் வரிசையாக மரணம் அடைந்த விஷயம் தெரிந்தது. சிசாகோவுக்கே தெரியாமல் முழு வீச்சில் விசாரணையில் இறங்கியது காவல்துறை. மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் உயில் எழுதிக் கொடுத்த பிறகு, விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. சிலர் மாரடைப்பு, புற்றுநோய், விபத்து போன்றவற்றிலும் மரணத்தைத் தழுவியிருக்கின்றனர். கடந்த 21 ஆண்டுகளில் 8 பேரைத் திருமணம் செய்து, 8 பேரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். 8 பேரிடமிருந்தும் ஏராளமான சொத்துகள் சிசாகோவுக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.

‘‘எனக்கு எதுவும் தெரியாது. நான் ஒரு அப்பாவி. 8 முறை திருமணம் செய்தது ஒரு குற்றமா?’’ என்று சிசாகோ கேட்கும்போது அவர் மீது பரிதாபம் மட்டுமே வருகிறது. ஆனால் அவரது வீட்டைச் சோதனை செய்தபோது, விஷம் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பத்திரிகைகளில் வரும் வயதான, பணக்காரர்களின் விளம்பரங்களைப் பார்த்து, அவர்களைத் திருமணம் செய்திருக்கிறார் சிசாகோ. ஆனால் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

யாரைத்தான் நம்புவதோ…

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் வசிக்கிறார் கன்ஹுய். கத்திச் சண்டைப் பயிற்சியாளராக இருக்கிறார். ஒருநாள் அவரின் காதலி பயிற்சி நடக்கும் இடத்துக்கு வந்தார். ஆனால் கன்ஹுய் வேலையில் மும்முரமாக இருந்தார். நீண்ட நேரம் கழித்தே காதலியைச் சந்தித்தார். உடனே காதலிக்குக் கோபம் வந்து கத்த ஆரம்பித்துவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாகச் சண்டை வளர்ந்து பெரிதாகிவிட்டது. எப்படிச் சமாளிப்பது என்று தெரியாத கன்ஹுய், தன் நண்பனிடம் பைக் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார். 2,200 கி.மீ. பயணம் செய்து பெய்ஜிங் வந்துவிட்டார். கோபம் குறைந்த பிறகு கன்ஹுயைத் தேடிக்கொண்டு காதலியும் வந்து சேர்ந்தார். அவரும் இந்தப் பயணத்தில் இணைந்துகொண்டார். இருவரும் ஒற்றுமையாகப் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். இரண்டு ஆண்டுகளில் மீண்டும் சண்டை வந்தது. தங்களது சண்டையை நிறுத்தும் சக்தி பயணத்துக்குத்தான் இருக்கிறது என்பதை இருவரும் அறிந்திருந்தனர். இந்த முறை சைக்கிள் மூலம் ஆப்பிரிக்கா செல்லத் திட்டமிட்டனர். சீனா, திபெத், நேபாளம் வழியாக கென்யா வரை செல்லத் திட்டமிட்டனர்.

‘‘ஆப்பிரிக்காவில் எங்களை வேற்றுக் கிரகவாசிகளைப் போலப் பார்த்தனர். எத்தனையோ முன்னேற்றங்கள் இன்னும் எவ்வளவோ மக்களுக்குச் சென்று சேரவில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஜாம்பியாவில் பயணம் செய்தபோது எங்களின் பை களவு போய்விட்டது. நல்லவேளை பாஸ்போர்ட், கிரடிட் கார்ட் எல்லாம் வேறொரு பையில் இருந்ததால் தப்பித்தோம். 6 மாதப் பயணங்களுக்குப் பிறகு மீண்டும் வீடு திரும்பினோம். இனி சண்டை வந்தால் பயணங்களைப் பற்றிப் பேசுவோமே தவிர, இன்னொரு பயணத்துக்குக் கிளம்பிவிட மாட்டோம்’’ என்கிறார் கன்ஹுய்.

அட! நல்ல டெக்னிக்காக இருக்கே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வீடியோ-எடுத்த-பிறகாவது-பர்கர்-கொடுத்தீங்களா-ஜுலியோ/article7670688.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நாய்களைக் காக்கும் நல்ல மனிதர் ஸ்டீவ்!

 
 
dog_2512462f.jpg
 

கலிபோர்னியாவில் வசித்து வருகிறார் ஸ்டீவ். கடந்த 14 ஆண்டுகளாக 50 தெரு நாய்களைப் பராமரித்து வருகிறார். தினமும் நாய்களுக்கு உணவிடுவது, பராமரிப்பது என்பது மிகவும் செலவு பிடித்த விஷயம். சொந்த வீடுகூட இல்லாத ஸ்டீவ், நாய்கள் மீது உள்ள அன்பால் இந்த வேலையைச் செய்து வருகிறார். நாய்களைப் பராமரிப்பதால் அவர் அடிக்கடி வீட்டை மாற்றும்படி நேர்ந்து விடுகிறது. இண்டியானாவில் நண்பர் ஒருவர் உதவி செய்வதாகச் சொன்னதால், நாய்களுடன் கிளம்பத் தயாரானார். ஆனால் 2000 மைல்கள் தொலைவில் இருக்கும் ஓரிடத்துக்கு 50 நாய்களுடன் எப்படிப் பயணிக்க முடியும்? 11 நாய்களைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு, 400 ரூபாய்களுடன் கிளம்பினார். வழியில் அலிசியா எட்ரிங்டன் என்பவரைச் சந்தித்தார். ஸ்டீவின் கதை முழுவதையும் கேட்ட அலிசியா, தான் நன்கொடை திரட்டித் தருவதாகக் கூறினார். ஓர் இரவு தன் விடுதியில் இலவசமாகத் தங்கிக்கொள்ளவும் சம்மதித்தார். இணையத்தில் ஸ்டீவ் பற்றிய செய்தியைப் பகிர்ந்துகொண்டார் அலிசியா. உடனே சிலர் நாய்களுக்கான உணவுகளுடன் விடுதிக்கு வந்துவிட்டனர். கெல்லி சியட்டன் என்ற பெண், நாய்களையும் ஸ்டீவ்வையும் இண்டியானாவுக்கு தன்னுடைய வண்டியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டார். ஸ்டீவ் பத்திரமாக இண்டியானா வந்து சேர்ந்தார். 20 லட்சம் ரூபாய் நன்கொடை மூலம் கிடைத்திருந்தது. ஒரு ட்ரக் வாங்கி, மீண்டும் நாய்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட இருப்பதாகச் சொல்கிறார் ஸ்டீவ். அதிகமான நன்கொடைகளைத் திரட்டிக் கொடுத்த அலிசியா, ‘‘நாய்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார் ஸ்டீவ். அவருக்கு உதவியதில் மகிழ்ச்சி’’ என்கிறார் அலிசியா.

நாய்களைக் காக்கும் நல்ல மனிதர் ஸ்டீவ்!

பிரிட்டனில் வசித்து வருகிறார் பேர்ரி கிர்க். இவருக்கு வேக வைக்கப்பட்ட பீன்கள் என்றால் மிகவும் பிடிக்கும். 1986-ம் ஆண்டு ஒரு குளியல் தொட்டி முழுவதும் வேக வைக்கப்பட்ட பீன்களை நிரப்பி, 100 மணி நேரம் அதில் படுத்திருந்தார். இந்தச் சாதனை மூலம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். தான் என்ன சாதனை செய்தாலும் அதில் வேக வைக்கப்பட்ட பீன் வருவது போலப் பார்த்துக்கொள்வார். அதனால் இவரை எல்லோரும் ’கேப்டன் பீனி’ என்று அழைக்கிறார்கள். 60-வது பிறந்த நாளுக்காக தலையில் 60 பீன்களை டாட்டூவாகக் குத்திக்கொண்டார். ஒவ்வொரு பீனையும் விளம்பரத்துக்காக ஒதுக்கிவிட்டார். ஒரு பீனில் தங்களுடைய விளம்பரத்தை வெளியிட 6500 ரூபாய் வசூலித்தார். மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்களை மூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமிக்கு அளித்துவிட்டார். ’’பேர்ரியின் நடவடிக்கைகள் அடுத்தவர்களுக்கு விநோதமாகத் தெரியலாம். ஆனால் அவரைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்கள் யாரும் இருக்க முடியாது’’ என்கிறார் குழந்தையின் தாத்தா ராபர்ட்ஸ். பேர்ரி கிர்க் தன் வாழ்நாள் முழுவதுமே அறக்கட்டளைகளுக்கு நன்கொடை பெற்றுத் தரும் வேலைகளிலேயே ஈடுபட்டு வருகிறார்.

கிரேட் கிர்க்!

சீனாவில் வசித்து வருகிறார் 39 வயது ஸெங். 2005-ம் ஆண்டு ஓர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றார். அப்பொழுது ஸெங் கர்ப்பமாக இருந்ததால், சிறையில் அடைக்கவில்லை. சிறைக்கு வெளியே அவரைப் பராமரித்து வந்தனர். குழந்தை பிறந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஸெங் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே நடைபெற்ற பரிசோதனையில் மீண்டும் கர்ப்பம் என்று தெரிய வந்தது. மீண்டும் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். இப்படிக் கடந்த 10 ஆண்டுகளில் 14 தடவை கர்ப்பமாக இருந்ததால், சிறையில் அடைக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. 13 கர்ப்பங்களை சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கலைத்திருக்கிறார். பிரசவ காலம் வரை குழந்தையைச் சுமப்பதுபோல நடித்திருக்கிறார். தற்போது உண்மை கண்டுபிடிக்கப்பட்டு, சிறைக்குள் சென்றுவிட்டார் ஸெங்.

ஐயோ… எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நாய்களைக்-காக்கும்-நல்ல-மனிதர்-ஸ்டீவ்/article7546566.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் கடைசி ஆடியோ கேஸட் கம்பெனி

 
masala_2556321f.jpg
 

சிடியின் வரவால் உலகம் முழுவதும் ஆடியோ கேஸட்களின் ஆதிக்கம் குறைந்து பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. உலகின் கடைசி ஆடியோ கேஸட் கம்பெனி அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அதுவும் நல்ல லாபத்துடன் இன்றும் செயல்படுகிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். நேஷனல் ஆடியோ கம்பெனி 1969ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

சிடி அறிமுகமான பிறகு, மற்ற ஆடியோ கேஸட் கம்பெனிகளும் சிடிகளுக்கு மாறிவிட்டன. ஆனால் நேஷனல் ஆடியோ கம்பெனி மட்டும் மூடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.‘‘இன்றும் கூட நிறைய இசையமைப்பாளர்கள் ஆடியோ கேஸட்களை விரும்புகிறார்கள். சில சிறிய இசைக்குழுக்கள் தங்கள் இசையை ஆடியோ கேஸட்களில் மட்டுமே வெளியிட விரும்புகின்றன.

நாங்கள் தயாரிக்கும் கேஸட்களில் 70 சதவிகிதம் இசைப்பதிவுக்கே பயன்படுத்தப்படுகின்றன. மீதியுள்ளவை எதுவும் பதிவு செய்யாத வெற்று கேஸட்களாகவே விற்பனையாகின்றன. லாபத்துடன் ஓடினாலும் இந்த நிறுவனத்தை வெகு காலத்துக்குத் தொடர்ந்து நடத்த இயலாது. இதுதான் அமெரிக்காவின் கடைசி கேஸட் கம்பெனி’’ என்கிறார் உரிமையாளர்.

ம்ம்… தொழில்நுட்ப வளர்ச்சியில் காணாமல் போனவற்றில் ஆடியோ கேஸட்டும் ஒன்று…

‘அசிங்கமே அழகு’ என்ற பொருளில் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் ஒரு போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் அளவுக்கு அதிகமான எடையை இழுக்கவேண்டும். அப்படி இழுக்கும்போது அவர்களின் முகம் வலியால் எவ்வளவு அசிங்கமாக மாறுகிறது என்பதை வைத்துதான் வெற்றி கணிக்கப்படுகிறது. 1267ம் ஆண்டில் இருந்து இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

ஏராளமான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இதுவரை 16 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற டாம்மி மாட்டின்சன் தோல்வியைச் சந்தித்தார். கார்டன் பிளாக்லாக் சாம்பியன் பட்டம் வென்றார். க்ளார் ஸ்பெடிங் என்ற பெண் இரண்டாவது முறையாகப் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஒப்பனை செய்யக்கூடாது, செயற்கைப் பற்களை வைத்திருக்கக்கூடாது போன்ற விதிகள் இந்தப் போட்டிக்கு உள்ளன.

விசித்திரப் போட்டி…

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கரென் லெபேகாப். இவர் வரையும் படங்கள் அனைத்தும் ஒரு ரூபாய் நாணயம் அளவிலேயே இருக்கின்றன. ஆனால் ஒவ்வோர் ஓவியமும் அத்தனை நுணுக்கமாகவும் அழகாகவும் தீட்டப்பட்டிருக்கின்றன. விலங்குகள், பறவைகள், இயற்கைக் காட்சிகள், ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்கள் என்று எல்லாமே கண்களைக் கவர்கின்றன.

‘‘என்னுடைய சிறிய ஓவியங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. நான் ஒரு ஓவியர். பணத்துக்காகவே இதுபோன்ற சிறிய ஓவியங்களை வரைந்து தருகிறேன். இதைத்தான் வரைய வேண்டும் என்ற கொள்கை எல்லாம் இல்லை. என்ன கேட்டாலும் வரைந்து தருவேன். என் அம்மா மூலமே ஓவியங்கள் மீது எனக்கு ஆர்வம் வந்தது. புகைப்படத்தில் இருக்கும் உருவத்தை அப்படியே ஓவியத்தில் கொண்டு வரவே விரும்புகிறேன்’’ என்கிறார் கரென் லெபேகாப்.

சிறியதே அழகு!

அயர்லாந்தில் உள்ள லாகன் நதி மீது ஓர் உலோகப் பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள் பொறியியல் கல்லூரி மாணவர்கள். 100 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம் மிக மெல்லிய உலோகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. 11 ஆயிரம் உலோகத் துண்டுகள் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. 70 ஆயிரம் போல்ட், நட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

‘‘நாங்கள் இளம் தலைமுறையினருக்கு எப்படி யோசிக்க வேண்டும், எப்படிக் கனவு காண வேண்டும், எப்படிக் கனவை நிஜமாக்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் பயிற்சியளிக்கிறோம். இன்று எங்கள் மாணவர்கள் தங்கள் கனவை நிஜமாக்கிவிட்டனர். இது எடை குறைந்த உலோகத்தால் உருவாக்கப்பட்ட பாலம். அதாவது பொம்மைப் பாலம் என்று அழைக்கலாம். இதைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாது’’ என்கிறார் பேராசிரியர் ட்ரெவோர் விட்டேகர். மாணவர்கள் உருவாக்கிய இந்த உலோகப் பாலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது.

இளம் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-கடைசி-ஆடியோ-கேஸட்-கம்பெனி/article7677095.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விநோத ரசிகர்

 
fan_2511403f.jpg
 

ரொனால்டாவின் விநோத ரசிகர்!

நட்சத்திரக் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் 17 வயது ஷாண்டாவைப் போல் ஒரு ரசிகரை பார்த்திருக்க முடியாது. டென்மார்க்கைச் சேர்ந்தவர் ஷாண்டா. பல லட்சம் ரூபாய்களைச் செலவு செய்து தன்னை ஒரு ரொனால்டோவாக மாற்றிக்கொண்டிருக்கிறார். தலை முடி, உடைகள், நடப்பது, பேசுவது என்று ஒவ்வொரு விதத்திலும் ரொனால்டோவை அப்படியே செய்து காட்டுகிறார். தன்னுடைய பெயரையும் ஷாண்டா ரொனால்டோவாக மாற்றிக்கொண்டு விட்டார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் அணிக்காக ஆடிவரும் ரொனால்டோவை இந்த ஆண்டு மட்டும் 5 முறை சந்தித்துவிட்டார் ஷாண்டா.

நல்லது நடந்தால் சரி...

அமெரிக்காவின் டெக்சாஸில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜோஸ்டென் பண்டி என்பவர் எலிஸபெத் ஜேனஸ் என்பவரைக் காதலித்து வந்தார். எலிஸபெத்தின் முன்னாள் காதலர் எலிஸபெத்தைப் பற்றித் தரக்குறைவாக பண்டியிடம் பேசினார். உடனே பண்டிக்குக் கோபம் வந்தது. இருவருக்கும் சண்டை ஆரம்பித்து, இறுதியில் ஒருவரை ஒருவர் தாக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. இருவருக்கும் காயம். பண்டி மருத்துவமனையை நாடிச் சென்றார். முன்னாள் காதலர் நீதிமன்றம் சென்றுவிட்டார். வழக்கை விசாரித்தார் நீதிபதி.

“நான் நான்கு சகோதரிகளுடன் வளர்ந்தவன். யாராவது பெண்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசினால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது’’ என்றார் பண்டி. திடீரென்று நீதிபதி பண்டியிடம், “எலிஸபெத்தை 30 நாட்களுக்குள் திருமணம் செய்துகொள்கிறாயா, அல்லது 15 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கிறாயா?’’ என்று கேட்டார். பண்டியும் எலிஸபெத்தும் அதிர்ந்து போனார்கள். தவறு செய்தவனை விட்டு, தங்களுக்குத் தண்டனை தருவதாக நினைத்தனர். 15 நாட்கள் சிறையில் இருந்தால் பண்டியின் வேலையும் பறிபோய்விடும். இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னார்கள். வழக்கு முடிவுக்கு வந்தது. “எங்கள் திருமணம் பற்றி ஒரு கனவு இருந்தது. இந்தக் குறிப்பிட்ட நாட்களுக்குள் அதைச் செயல்படுத்த முடியாது. தற்போது அதற்கான பணமும் இல்லை. எளிமையாகத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். எதிர்காலத்தில் பணம் சேர்த்த பிறகு, விமரிசையாகத் திருமணத்தைக் கொண்டாடிக்கொள்கிறோம்’’ என்கிறார் பண்டி.

ரோபோக்களால் செலவு மிச்சம்

ஜப்பானில் உள்ள ஹென் நா தங்கும் விடுதியில் வேலை செய்பவர்கள் அனைவருமே ரோபோக்கள். விடுதிக்குள் நுழைந்தவுடன் டைனோசர் ரோபோ வரவேற்கிறது. ஆங்கிலத்தில் தங்கும் விவரங்களைக் கேட்கிறது. பிறகு ரிஜிஸ்டரில் கையெழுத்து இடச் சொல்கிறது. அருகில் இருக்கும் பெண் ரோபோ, திரையில் முகத்தைப் பதியச் சொல்கிறார். பிறகு ஒரு ரோபோ பெட்டிகளை எடுத்துக்கொண்டு அறைக்குச் செல்கிறது. இன்னொரு ரோபோ உணவையும் பழச்சாற்றையும் வைத்துவிட்டுச் செல்கிறது. மொத்தத்தில் மனிதர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் இந்த விடுதியில் ரோபோக்களே செய்துவிடுகின்றன. மனிதர்கள் இல்லை என்ற குறையே தெரியவில்லை. எந்தவிதமான அசெளகரியத்தையும் உணரவில்லை என்கிறார்கள் வாடிக்கையாளர்கள். ரோபோக்களால் செலவும் மிச்சம், விடுமுறையும் எடுப்பதில்லை என்கிறார்கள் விடுதி உரிமையாளர்கள்.

ம்ம்... ஐசக் அசிமோவ் கதையில் வருவது போல ரோபோக்கள் ஒருநாள் சிந்திக்கப் போகின்றன…!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-விநோத-ரசிகர்/article7543948.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பக்தி கஷ்டம் அறியாது!

 
masala_2557450f.jpg
 

சீனாவில் உள்ள செங்குவான் மலையில் ஒரு கோயில் இருக்கிறது. 130 பேர் மலையடிவாரத்தில் இருந்து 3 மணி நேரம் கைகளாலும் கால் முட்டிகளாலும் தவழ்ந்து சென்று, கோயிலை அடைந்திருக்கிறார்கள். இதில் 81 வயது முதியவர் முதல் 3 வயது குழந்தை வரை கலந்துகொண்டுள்ளனர். 3 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இவர்களுடன் மற்றவர்களும் சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டனர். கைகளும் கால்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் இவர்கள் தங்கள் செயலைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பக்தி கஷ்டம் அறியாது...

இன்றைய காலகட்டத்தில் பணம் இல்லாமல் எதையும் செய்ய இயலாது. ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதியர் ஒரு வருடம் முழுவதும் பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள்! 24 வயது ரேச்சல் நியுபையும் 26 வயது லியாம் குல்பர்ட்சனும் ஒரு பரிசோதனை முயற்சியாக ஒரு வருடம் பணம் இன்றி வாழ்ந்திருக்கிறார்கள். நண்பரின் தோட்டத்தில் தேவையற்ற பொருட்கள், மரக்கட்டைளை வைத்து ஒரு சிறிய வீட்டை உருவாக்கினார்கள். தோட்டத்தில் உணவுப் பயிர்களைப் பயிரிட்டனர். தாங்கள் விளைவித்த காய்கறிகளையும் தானியங்களையும் அருகில் இருக்கும் விவசாயிகளிடம் கொடுத்து, அவர்களிடம் இருக்கும் உணவுப் பொருட்களைப் பண்டமாற்றம் செய்துகொண்டனர்.

‘‘5 வாத்துகளை வளர்த்து முட்டைகளை உணவாக்கிக்கொண்டோம். விவசாய வேலை, சமையல் வேலை, தண்ணீர் கொண்டு வருவது, துவைப்பது என்று நாள் முழுவதும் வேலை சரியாக இருக்கும். எங்கள் பரிசோதனை மூலம் பணம் இல்லாமலும் மனிதர்களால் வாழ முடியும் என்று இந்த உலகத்துக்குப் புரிய வைத்திருக்கிறோம். இது கொஞ்சம் கஷ்டமான வாழ்க்கைதான். ஆனால் எல்லாவற்றையும் நம் உழைப்பு மூலம் பெறும்போது அதில் கிடைக்கும் நிம்மதி, பணம் கொடுத்து வாழும் வாழ்க்கையில் இருப்பதில்லை’’ என்கிறார்கள் இந்தத் தம்பதியர்.

இதற்கு முன்பு கனடாவில் ஒரு வருடம் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அங்கே உறைபனி, விவசாயம் செய்ய முடியாத சூழல் என்று நிறையவே கஷ்டங்களை அனுபவித்துவிட்டனர். இந்த ஓராண்டில் 2 தடவை பணத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல். பல் எடுப்பதற்காக லியாம் மருத்துவமனை சென்றபோதும் புது பைக் ஒன்றை நகரத்திலிருந்து எடுத்து வந்தபோதும் பணத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

ரொம்ப அழகா சொன்னதோடு, வாழ்ந்தும் காட்டியிருக்கீங்க...

ஜப்பானிய பெண்கள் வேலை, வீடு என்று அதிக மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கண்ணீரைத் துடைத்து விடுவதற்காகவே ‘இகேமெசோ’ என்ற நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே படித்த, தோற்றப் பொலிவு மிக்க 7 இளைஞர்கள் இருக்கிறார்கள். மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் இவர்களைத் தொடர்புகொள்ள வேண்டும். 7 இளைஞர்களில் யார் வரவேண்டும் என்பதையும் பெண்களே முடிவு செய்து சொல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்துக்கோ, வீட்டுக்கோ இளைஞர் வருவார்.

அவரிடம் மனம் விட்டுப் பெண்கள் பேசுகிறார்கள். இளைஞர் அனைத்தையும் சிரத்தையுடன் கேட்டுக்கொள்வார். பெண்கள் கண்ணீர் விடவில்லை என்றால், அழுகை வரவழைக்கக் கூடிய திரைப்படம் ஒன்றைப் போட்டுக் காட்டுவார். தங்கள் சோகமும் திரைப்பட சோகமும் ஒன்று சேர, இப்பொழுது பெண்கள் கதறி அழுவார்கள். மென்மையான கைக்குட்டை மூலம் கண்ணீரைத் துடைத்துவிடுவார். ஆறுதல் கூறுவார். அவர்கள் பிரச்சினைக்குத் தன்னால் முடிந்த தீர்வையும் சொல்வார். எல்லாம் முடியும்போது பெண்களின் மனம் லேசாகி இருக்கும்.

நிம்மதியை உணர்வார்கள். சகோதரனாக, புத்திசாலியாக, வயதானவராக, நகைச்சுவை உணர்வு மிக்கவராக இருக்கும் இளைஞர்களில் பெண்கள் அவர்கள் விரும்பும் இளைஞரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். கண்ணீர் துடைக்கும் ஆண்கள் அமைப்புக்கு ஒருபக்கம் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் இணையதளம் ஆரம்பித்த ஒரே வாரத்தில் ஏராளமான பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

‘கண்ணீர் தெரபிஸ்ட்’ என்ற லைசென்ஸும் இந்த இளைஞர்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள்.

மனம் விட்டுப் பேசக்கூட அங்கே நட்போ, உறவோ இல்லையா

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பக்தி-கஷ்டம்-அறியாது/article7680521.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பருமனான யோகா ஆசிரியர்

 
masala_2558743f.jpg
 

எடை மிகுந்தவர்களால் எதையும் செய்ய இயலாது என்ற கட்டுக்கதையைத் தகர்ந்தெறிந்து இருக்கிறார் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த யோகி வலெரி சாகுன். கடந்த 3 ஆண்டு களாகத் தன் எடை மிகுந்த உடலுடன் கடினமான யோகா சனங்களைச் செய்து, புகைப் படங்கள் எடுத்து வெளி யிட்டு வருகிறார். ‘‘என் உடல் பருமனால் நான் மிகவும் தன்னம்பிக்கை அற்றவளாக இருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு வாரம் இருமுறை யோகா வகுப்புகளுக்குச் செல்ல ஆர்ம்பித்தேன். கடினம் என்று நினைத்திருந்த யோகா, எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

யோகா குரு, என்னை மிகவும் உற்சாகப்படுத்தி ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுத்தார். என் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. என் எடை குறைந்ததை விட என் மனத்தில் இருந்த அவநம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை போன்றவை காணாமல் போனதில்தான் நான் ஆச்சரியமடைந்தேன். யோகா செய்வதற்கு முன் என்னால் மலை ஏற முடியாது, ஸ்கைடைவிங் செய்ய முடியாது.

இன்று எல்லாவற்றையும் எளிதாகச் செய்துவிடுகிறேன். என்னைப் போல பருமனானவர்கள் எடை குறித்து தாழ்வுமனப்பான்மை கொள்ளத் தேவை இல்லை என்பதைச் சொல்வதற்காகப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறேன்’’ என்கிற வலேரி, இன்று யோகா ஆசிரியர்.

தலைகீழாகவும் ஒற்றைக் கையிலும் நிற்கும் வலேரியைப் பார்க்கும்போது நிச்சயம் நம்பிக்கை வருகிறது!

அமெரிக்காவின் பிரபல டாட்டூ கலைஞர் சார்லஸ் ஹாம். சமீபத்தில் ‘சேவ் மை இங்க்’ என்ற அமைப்பை ஆரம்பித்திருக்கிறார். டாட்டூ போட்டுக்கொண்டவர்கள் இறந்த பிறகும் அவர்களது டாட்டூ இந்த உலகத்தில் பத்திரமாக இருக்கும். ‘‘எத்தனையோ மணி நேரங்களைச் செலவிட்டு, எவ்வளவோ பணத்தைக் கொடுத்து தங்களுக்குப் பிடித்த டாட்டூக்களை உடலில் வரைந்துகொள்கிறார்கள். நான் 150 மணி நேரங்களைச் செலவிட்டு, உடல் முழுவதும் டாட்டூ வரைந்துகொண்டேன். நடிகர் ஜானி டெப் தன் டாட்டூவைத் தனக்குப் பின்னாலும் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னதைக் கேள்விப்பட்டேன். டாட்டூ சேமிக்கும் முறையை உருவாக்கிக்கொண்டேன்.

இறந்த உடலில் சில ரசாயனங்களை ஊற்றி, டாட்டூவை ஒரு தாளில் சேமித்துவிடலாம். அதை ஒரு கண்ணாடிக்குள் வைத்து பிரேம் செய்து, வீட்டில் மாட்டி விடலாம். நம் அன்புக்குரியவர்களின் விருப்பம் அவர்கள் மறைந்தாலும் இந்த உலகத்தில் நிலைபெற்று இருக்கும்’’ என்கிறார் சார்லஸ். இவருடைய அமைப்பில் உயிருடன் இருக்கும்போது உறுப்பினர்களாகிவிட வேண்டும். இறந்த பிறகு 18 மணி நேரத்துக்குள் தகவல் சொல்லிவிட வேண்டும். இறுதி நிகழ்ச்சிக்குள் டாட்டூவைப் பத்திரமாக எடுத்துச் சென்றுவிடுவார்கள். 3 மாதங்களில் வீட்டுக்கே டாட்டூ பிரேம் செய்யப்பட்டு வந்து சேரும்.

உலகில் புதுப் புதுத் தொழில்கள் உருவாகிக்கிட்டே இருக்கு…

உக்ரைனின் க்ரொலெவெட்ஸ் நகரில் இருக்கும் ஓர் ஆப்பிள் தோட்டம் உலகிலேயே தனித்துவம் மிக்கது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்து வளர்ந்திருக்கும் ஆப்பிள் மரங்கள் அனைத்தும் ஒரே ஒரு மரத்தில் இருந்து தோன்றியவை. அந்தத் தாய் மரத்துக்கு வயது 220 ஆண்டுகள்! இத்தனை ஆண்டுகள் ஆப்பிள் மரம் உயிர் பிழைத்திருப்பதற்குக் காரணம், அந்த மரம் மரணத்திலிருந்து தப்பிக்கொள்ள மேற்கொண்ட உத்திதான். எல்லா ஆப்பிள் மரங்களைப் போலத்தான் இதுவும் இருந்தது. ஆனால் வயதாக வயதாக, ஆப்பிள் மரத்தின் கிளைகள் தாழ்வாகப் படர ஆரம்பித்தன. அப்படியே நிலத்தில் ஊன்றியபடி வளர்ந்தன. ஒருகட்டத்தில் ஆப்பிள் மரம் உயிர் இழக்கும் தறுவாயில், நிலத்தில் பதிந்துள்ள கிளைகளில் இருந்து வேர்கள் பரவி மரத்தைக் காப்பாற்றிவிடுகின்றன.

இப்படியே 220 ஆண்டுகள் இந்த ஆப்பிள் மரம் பூமியில் வசித்து வருகிறது. 1970ம் ஆண்டு 9 கிளைகளில் இருந்து புதிய மரங்கள் தோன்றியிருந்தன. 2008ம் ஆண்டு 18 மரங்களாகப் பெருகிவிட்டன. இன்று அந்தத் தோட்டம் முழுவதும் தாய் மரத்தின் கிளைகளில் இருந்து உருவான மரங்கள்தான் பரவியிருக்கின்றன. சீசன் காலத்தில் பாதி மரங்கள் மட்டுமே பூக்கின்றன. மீதி மரங்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்த ஆப்பிள்கள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவைகொண்டவை. விஞ்ஞானிகள் இந்த ஆப்பிள் மரத்தின் தப்பிப் பிழைக்கும் காரணம் அறிய பல முறை முயன்றும் தோல்வியே கிடைத்திருக்கிறது. இந்த ஆப்பிள் மரம் 1972ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் உயிரினங்கள் தொடர்ந்து வாழும் என்று சொல்லியிருக்கிறாரே டார்வின்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பருமனான-யோகா-ஆசிரியர்/article7684590.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பையில் அடங்கும் கார்

 
 
masala_2509731f.jpg
 

பையில் வைத்து எடுத்துச் செல்லும் அளவுக்கு ஒரு காரைக் கண்டுபிடித்திருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த எஞ்சினியர் குனைகோ சைட்டோ. இது அமர்ந்து செல்லும் கார் அல்ல, நின்றுகொண்டே பயணிக்கும் கார். இதற்கு ‘வாக் கார்’ என்று பெயரிட்டிருக்கிறார். லேப்டாப் அளவுக்கு இருக்கிறது இந்த வாக் கார். ஸ்கேட் போர்ட் போலவே வேலை செய்கிறது. ஆனால் இதன் மீது நின்றுகொண்டு நாம் எந்த விசையையும் செலுத்த வேண்டியதில்லை. மிக வேகமாகப் பயணிக்கலாம். படிகள் குறுக்கிட்டால், வாக் கார் நின்றுவிடும். மீண்டும் சமதளத்தில் வைத்தால் வேகமாக ஓட ஆரம்பித்துவிடும்.

இறக்கத்தில் மட்டுமல்ல, செங்குத்தான இடங்களில் ஏறிச் செல்லவும் முடியும். எந்தப் பகுதியில் திரும்ப வேண்டுமோ, அந்தப் பகுதியை நோக்கி உடல் எடையை அழுத்தினால் போதும். தானாகச் சென்றுவிடும். கோகோ மோட்டார்ஸ் நிறுவனம் இவருடன் கைகோத்திருக்கிறது. வாக் காரை இன்னும் எப்படி எல்லாம் மேம்படுத்த முடியும் என்பதை ஆய்வு செய்துவருகிறார்கள். லித்தியம் பாட்டரிகளால் இந்த வாக் காருக்கு வேண்டிய சக்தி கிடைக்கிறது. 3 மணி நேரம் சார்ஜ் செய்தால், 7.4 மைல் தூரம் செல்ல முடியும். 120 கிலோ எடையைத் தாங்கக்கூடியது.

வாக் காரில் நின்றுகொண்டு எடை சுமந்த ட்ராலிகள், சக்கர வண்டிகள் போன்றவற்றைக் கைகளால் பிடித்துக்கொண்டால், எளிதில் அவற்றையும் எடுத்துச் சென்றுவிடலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஆண்டு அக்டோபரில் இருந்து முன்பதிவு செய்யலாம். ஒரு வாக் காரின் விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய்.

நம்ம சாலைகளுக்கு இந்த காரை யோசிக்கவே முடியாது…

சீனாவில் வசிக்கிறார் 39 வயது லியு ஜிங்சோங். கோடீஸ்வரராக இருந்தவர், இன்று புத்த துறவியாக மாறியிருக்கிறார். கோடிக் கணக்கில் வருமானம் கொழிக்கும் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வந்தார். எவ்வளவு வருமானம் வந்தபோதும், போதும் என்று தோன்றியதே இல்லை. ஆனாலும் இந்த வருமானத்தால் அவருக்கு முழுமையான சந்தோஷம் கிடைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் காட்டு வழியே காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, மோசமான விபத்து ஏற்பட்டது. புது காரை வரவழைத்தார் லியு. ஆனால் அதில் எல்லோருக்கும் இடம் இல்லை. அவரை விட மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களை அனுப்பிவிட்டு, அருகில் இருந்த விடுதியில் தங்கிக்கொண்டார். கையில் மருந்து இல்லை. புத்தரின் புத்தகம் ஒன்றுதான் இருந்தது. அதைப் படிக்க, படிக்க அவரது வலி மறந்து போனது. இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிவிட்டாலும் புத்தர் அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தார். தொழிற்சாலை, பங்களா, கார்கள், குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு துறவு வாழ்க்கை நோக்கிக் கிளம்பிவிட்டார். ஸோங்னன் மலையில் மிகக் குறைந்த தேவைகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

வைக்கோல் படுக்கை, தியானம், படிப்பு என்று வாழ்க்கை நகர்ந்தது. கோயிலில் உள்ள பொதுச் சமையலறையில் சமையல் வேலைகளையும் செய்துவருகிறார். மாதம் ஒருமுறை அருகில் இருக்கும் நகரத்துக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்.

நீங்க சொல்றது முற்றிலும் உண்மை லியு!

இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் போர் நடைபெற்ற காலகட்டத்திலும் ஜப்பானிய ராணுவ வீரர்கள், தென்கொரிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். 13, 15 வயது சின்னஞ்சிறு பெண்களால் ராணுவ வீரர்களிடமிருந்து தப்பிச் செல்ல இயலவில்லை. தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டதால் நிறையப் பெண்கள் இறந்து போனார்கள்.

சிலரின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இன்னும் சில பெண்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். பல பெண்கள் நடந்த கொடுமையை வெளியே சொல்லாமல், திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டனர். இரண்டாம் உலகப் போர் நடைபெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் உயிருடன் இருக்கும் சில பெண்கள், ஜப்பான் தங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று போராடி வருகிறார்கள். இவர்களுக்காகப் பல்வேறு பெண்ணுரிமை இயக்கங்கள் உலகம் முழுவதும் போராடி வருகின்றன. 1993ம் ஆண்டு ஜப்பான் மன்னிப்பு கோரியது.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறையான மன்னிப்பைக் கோர வேண்டும் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பையில்-அடங்கும்-கார்/article7536288.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

 

உலக மசாலா: மரத்தை வெட்டி சிற்பம்!

 
masala_2561785f.jpg
 

சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் ஒரு நிறுவனம் மரங்களை வெட்டி, சிற்பங்களைச் செதுக்கி வைத்திருக்கிறது. உயிருடன் இருக்கும் கற்பூர மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டு, நடு மரத்தில் டிராகன் உட்பட பல சிற்பங்களைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்தச் சிற்பங்களின் மீது தங்க வண்ணம் பூசி விடுகிறார்கள். பார்ப்பதற்கு உலோகச் சிற்பங்கள் போல இவை காட்சியளிக்கின்றன. இப்படிச் சிற்பங்களுக்காகச் செதுக்கப்படும் மரங்கள் விரைவில் மடிந்து போய் விடுகின்றன.

‘‘ஒவ்வொரு மரச் சிற்பம் உருவாக்கு வதற்கும் 100 நாட்கள் தேவைப்படுகின்றன’’ என்கிறார் சிற்பங்களை உருவாக்கி வரும் நிறுவனத்தின் உரிமையாளர். ஆனால் இந்த மரங்களைப் பார்த்து பெரும்பாலான மக்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். உயிருடன் இருக்கும் மரத்தை, சிற்பம் என்ற பெயரில் கொடூரமாகக் கொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். எதிர்ப்பு வலுத்து வருவதால், அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தைக் கைவிடும் எண்ணத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சே… அழகுணர்ச்சிக்கு ஓர் அளவில்லையா?

ஜப்பானைச் சேர்ந்தவர் 105 வயது ஹிடெகிசி மியாஸாகி. கியோடோவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு, 44.22 நொடிகளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார். அவர் வயதுக்குரியவர்களில் உலகின் அதிவேக ஓட்ட மனிதர் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார். உலகின் அதிவேக ஓட்டப்பந்தயக்காரரான உசேன் போல்ட் 100 மீட்டரை 32.64 நொடிகளில் கடந்திருக்கிறார். ஆனால், மியாஸாகியின் வயதை வைத்துப் பார்க்கும்போது இந்தச் சாதனை மகத்தானது என்கிறார்கள்.

உலகின் அதிவேக தாத்தா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மரத்தை-வெட்டி-சிற்பம்/article7691888.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: என்ன அவசரம்... குழந்தையை, குழந்தையாக வளரவிடுங்களேன்...

 
 
ulagam_2562798f.jpg
 

ட்டைக் கத்தியை வைத்து குழந்தைகள் சண்டை போடுவார்கள். ஆஸ்திரேலியாவில் பீரங்கி, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட போர் ஆயுதங்களையும் விலங்குகளையும் அட்டையில் செய்து சண்டைகளை நடத்தி வருகிறார்கள். ஹோஸ் சிகெல், ராஸ் கோகெர் என்ற நண்பர்கள் தங்களின் குழந்தை விளையாட்டுகளை பெரிய அளவில் அட்டைப் பெட்டிச் சண்டையாக நடத்தி வருகிறார்கள். ’’எங்களிடம் ஏராளமான அட்டைப் பெட்டிகள் குவிந்துவிட்டன. ஒருநாள் இந்த அட்டைப் பெட்டிகளை வைத்து போர் ஆயுதங்களைத் தயாரித்து, போட்டியாக நடத்தினால் என்ன என்று தோன்றியது. 2002-ம் ஆண்டு எங்கள் முதல் போட்டியை ஒரு பூங்காவில் ஆரம்பித்தோம். விளையாட்டாக ஆரம்பித்த இந்தப் போட்டி 13 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. போட்டியைக் காண்பதற்கும் பங்கேற்பதற்கும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். இதற்காக அட்டைகளில் பிரம்மாண்டமான போர்க் கருவிகளையும் டாங்குகளையும் உருவாக்குகிறோம். பாதுகாப்புக் கவசங்களும் அட்டைகளில் செய்யப்பட்டிருக்கும். போட்டி நடைபெறும் அன்று வீரர்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு களத்தில் குதித்துவிட வேண்டியதுதான். இசை, மக்கள் ஆரவாரம் என்று போர்க்களமே களை கட்டும். அனைத்து அட்டை ஆயுதங்களும் வாகனங்களும் கிழிக்கப்பட்ட பிறகு போட்டி முடிவடையும். ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளுக்கு இந்தப் போட்டி பரவிவிட்டது. நெதர்லாந்து, ரஷ்யாவிலும் போட்டியை நடத்த ஆரம்பித்துவிட்டனர். சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட விஷயம் இவ்வளவு தூரம் பரவும் என்று நாங்கள் நினைக்கவில்லை’’ என்கிறார் ராஸ் கோகெர்.

ஆயுத விளையாட்டுகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் உலகில், அட்டை விளையாட்டு வித்தியாசமானதுதான்…

கொரியாவில் வசிக்கிறார்கள் சாங் ஜின் யூ, ஷின் ஜி ஹூ தம்பதியர். தாங்களே திட்டமிட்டு உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் 5 மாதங்களில் தங்கள் உடலைச் சிற்பம் போல் மாற்றிக்கொண்டனர். தினமும் 3 மணி நேரம் ஏரோபிக் உடற்பயிற்சி செய்கிறார்கள். வாரத்துக்கு 2 நாட்கள் ஒன்றரை மணி நேரம் பளூ தூக்கும் பயிற்சி செய்கிறார்கள். ‘’செயற்கையாக நாங்கள் எங்கள் உடலை வடிவமைக்க முயற்சி செய்யவில்லை. உணவுக் கட்டுப்பாடே உலகின் மிகச் சிறந்த பிளாஸ்டிக் சர்ஜரி. முயற்சியும் பொறுமையும் இருந்தால் உடற்பயிற்சியிலும் உணவுக் கட்டுப்பாட்டிலும் நாம் நினைத்த உடல் வடிவத்தை அடைந்துவிட முடியும்’’ என்கிறார் சாங் ஜின் யூ. 150 கிராம் கோழி இறைச்சி, 120 கிராம் இனிப்பு உருளைக்கிழங்கு, 5 பாதாம் பருப்புகள், தக்காளி, வெங்காயம், முட்டைக்கோஸ் போன்றவற்றை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுகிறார் சாங் ஜின். 4 முட்டைகளின் வெள்ளைக் கரு, 50 கிராம் உருளைக்கிழங்கு, கொஞ்சம் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஒருநாளைக்கு 5 முறை எடுத்துக்கொள்கிறார் ஷின் ஜி ஹூ. 83 கிலோவில் 16 சதவீதம் கொழுப்பு இருந்தது, இன்று 71 கிலோவில் 5 சதவீத கொழுப்பே இருக்கிறது என்கிறார் சாங் ஜின். 71 கிலோவில் 32 சதவீதம் கொழுப்பு இருந்தது, இன்று 49 கிலோவில் 18 சதவீத கொழுப்பே இருக்கிறது என்கிறார் ஷின் ஜி ஹூ. தாங்களே உருவாக்கிய உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிக விரைவாக எதிர்பார்த்த பலனை அளித்திருப்பதில் இருவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தங்களின் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு, எடை குறைப்பு குறித்த விளக்கங்களையும் அளித்து வருகிறார்கள்.

ம்… எடை குறைப்பு இன்று உலகின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது…

சீனாவின் ஹுனான் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் பரபரப்பான சாலைகளில் காரை அநாயசமாக ஓட்டிச் செல்கிறான். அவனது அப்பா கார் ஓட்டும் நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டே வீடியோ எடுத்திருக்கிறார். மகனை மடியில் வைத்துக்கொண்டு, ஆக்சிலரேட்டர், பிரேக், க்ளட்ச் போன்றவற்றை அப்பா கையாள்கிறார். ஸ்டீரிங்கைப் பிடித்தபடி கவனமாக காரை ஓட்டுகிறான் மகன். இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். ஒரு குழந்தையை கார் ஓட்ட வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்தது மிகப் பெரிய தவறு என்று எதிர்ப்புக் காட்டி வருகிறார்கள். சீனக் காவல்துறை விசாரணையில் இறங்கியிருக்கிறது.

என்ன அவசரம்... குழந்தையை, குழந்தையாக வளரவிடுங்களேன்...

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-என்ன-அவசரம்-குழந்தையை-குழந்தையாக-வளரவிடுங்களேன்/article7694606.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: தண்ணீரைக் காக்கும் கறுப்புப் பந்து!

 
 
 
masala_2508410f.jpg
 

கலிஃபோர்னியாவில் புதுப் புது வழிகளில் நீர் நிலைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது அரசாங்கம். லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள சில்மர் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீர் வேகமாக ஆவியாகி வருகிறது. அதைத் தடுப்பதற்காக நீர்த்தேக்கம் முழுவதும் மூடும் விதத்தில் 9.6 கோடி கறுப்பு பிளாஸ்டிக் பந்துகள் போடப்பட்டிருக்கின்றன. தண்ணீரே கண்களுக்குத் தெரியாதவாறு பந்துகள் அந்தப் பகுதியையே மறைத்துவிட்டன.

இதன் மூலம் தண்ணீரை அழுக்கு, ரசாயனம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதோடு, நீர் ஆவியாகாமலும் தடுக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பந்துகள் மூலம் ஓராண்டுக்கு 300 காலன் (1135 லிட்டர்) தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள். அத்துடன் சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களையும் தண்ணீருக்குள் ஊடுருவ விடாமல் தடுத்து விடுகின்றன இந்தப் பந்துகள்.

பிளாஸ்டிக் பந்துகள் மூலம் சுற்றுச் சூழல் சீர்கேடு வராமல் இருந்தால் சரி

பொதுவாக விலங்குகளுக்கு கறுப்பு, வெள்ளை நிறங்களையே அறிய முடியும். விலங்குகளின் உடல் மேல் இருக்கும் வரிகள், எதிரிகளின் கண்களுக்கு எளிதில் சிக்காமல் தப்பிவிட முடியும் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் வரிக்குதிரையின் கோடுகள் மிக எளிதாக சிங்கம், புலி போன்ற விலங்குகளின் கண்களுக்குக் காட்டிக் கொடுப்பதாகவே இருக்கின்றன என்று சொல்கிறார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி.

சாம்பல் வண்ணத்தை விட, கறுப்பு கோடுகள் இரை தேடி வரும் விலங்குகளுக்குச் சாதகமாக இருக்கின்றன. வரிக்குதிரையின் வரிகள் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் வரிக்குதிரையின் வேகம், செல்லும் திசை போன்றவற்றை அறிந்துகொண்டு, சுலபமாக வேட்டையாடி விடுகின்றன சிங்கங்கள்.

அடப் பாவமே… பாதுகாப்புன்னு நினைச்சது இப்படி ஆபத்தா மாறிருச்சே!

துருக்கியைச் சேர்ந்த ஃபெதுல்லாவுக்கும் எஸ்ராவுக்கும் கடந்த வாரம் கோலாகலமாகத் திருமணம் நடந்துமுடிந்துள்ளது. மணமக்கள் இருவரும் தங்கள் கல்யாண விருந்தை சிரியாவைச் சேர்ந்த அகதிகளுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட சிரிய அகதிகள், உலகிலேயே மோசமான நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று மணமக்கள் தீர்மானித்தனர். தங்களது திருமணத்தையொட்டி அறக்கட்டளை மூலம் சிரிய அகதிகளுக்கு விருந்து வைக்க முடிவு செய்தனர். திருமணம் முடிந்த பிறகு, மணமக்கள் இருவரும் 4 ஆயிரம் அகதிகளுக்கும் தங்கள் கைகளாலேயே உணவுகளைப் பரிமாறினர்.

‘’சிரியாவைச் சேர்ந்த சகோதரர்களுக்கு உதவ விரும்பினோம். இந்தச் செய்தி உலகம் முழுவதும் புகைப்படங்களுடன் பரவிவிட்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துச் சொன்ன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி” என்கிறார் ஃபெதுல்லா. ’’முதலில் ஃபெதுல்லா என்னிடம் சொன்னபோது, நான் இதை நன்கு புரிந்துகொள்ளவில்லை. ஆனால் சிரியாவைச் சேர்ந்த குழந்தைகளின் கண்களில் மகிழ்ச்சியைப் பார்த்தபோது, ஆச்சரியமடைந்துவிட்டேன்.

மற்றவர்களின் மகிழ்ச்சியில்தான் எங்களின் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை இதன் மூலம் உணர்ந்துகொண்டேன்’’ என்கிறார் எஸ்ரா. இந்த யோசனையைக் கொடுத்தவர் ஃபெதுல்லாவின் தந்தைதான். ‘’பக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, நாம் மட்டும் மகிழ்ச்சியாக இருந்து விடமுடியுமா? எங்களால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மகனிடம் சொன்னேன். எல்லோருக்கும் இதை ஏற்றுக்கொண்டனர்’’ என்கிறார் அலி.

நல்ல மனம் வாழ்க!

ஜெர்மனியைச் சேர்ந்த 26 வயது ஸ்டீவ் ஹகிமியர், மிக நீளமான பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியிருக்கிறார். அதிலும் ஆகாயத்தில் விழாவை நடத்தி முடித்திருக்கிறார். ஆக்லாந்து, நியூஸிலாந்து, ஹவாய், ஆஸ்திரேலியா என்று தொடர்ந்து 46 மணி நேரங்கள் விமானத்தில் பறந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதன் மூலம் கின்னஸ் சாதனையையும் பெற்றுவிட்டார். அடுத்த பிறந்தநாளை குடும்பத்தினருடன் வீட்டுக்குள் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டீவ்.

வாழ்த்துகள் ஸ்டீவ்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தண்ணீரைக்-காக்கும்-கறுப்புப்-பந்து/article7534156.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: மண்டையோடு இல்லாத குழந்தை!

 
masala1_2565120f.jpg
 

அமெரிக்காவில் வசிக் கிறார்கள் பிரான்டன் புல், பிரிட்டானி தம்பதியர். ஜாக்சன் ஸ்ட்ராங் என்ற தங்களது மகனின் முதல் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கிறார்கள். ஜாக்சனைப் பார்த்து மருத்துவ உலகமே வியப்பில் ஆழ்ந்தி ருக்கிறது. பிரிட்டானி கருவுற்றி ருந்தபோது, பரிசோதனையில் ஆன்என்செபலி (Anen cephaly) என்ற மண்டை யோடு குறைபாட்டுடன் குழந்தை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மண்டை யோடும் பெருமூளை வளர்ச்சியும் இல்லாத குழந்தை என்பதால் 23 வாரங்களில் கருக்கலைப்பு செய்யச் சொன்னார்கள் மருத்துவர்கள்.

ஒருவேளை குழந்தை பிறந்தாலும் ஓரிரு வாரங்களில் மரணம் அடைந்துவிடும் என்றும் எச்சரித்தார்கள். பிரான்டனும் பிரிட்டானியும் கலந்து ஆலோசித்தார்கள். இறுதியில் குழந்தையைப் பெற்றுவிடத் தீர்மானித்தார்கள். ‘‘குழந்தை எவ்வளவு குறைபாட்டுடன் இருந்தாலும் அது எங்கள் குழந்தைதான். அதனால் குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் உறுதியுடன் இருந்தோம். குழந்தை நலமாகப் பிறந்தான். பாதி மண்டை மட்டும்தான் இல்லை.

குழந்தையைப் பார்ப்பவர்கள் எவ்வளவு நாள் தாங்கும் என்று எங்களிடமே இரக்கமற்ற முறையில் சொல்வார்கள். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் எங்கள் மகன் பிழைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தபடி வளர்த்தோம். இதோ முதல் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டான் ஜாக்ஸன்’’ என்கிறார் பிரான்டன். அமெரிக்காவில் 4900 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த மண்டையோடு பாதிப்பு குறைபாடு இருக்கிறது. அந்தக் குழந்தைகள் கருவிலேயோ, பிறந்த சில நாட்களிலேயோ உயிரிழந்துவிடுகின்றன. ஜாக்சன் மட்டுமே இதுவரை இருந்துவந்த கற்பிதங்களைத் தகர்த்தெறிந்திருக்கிறான்.

மெடிக்கல் மிராகிள்!

மனிதர்களைப் போலவே உங்கள் செல்ல நாய்களும் செல்ஃபி எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு ‘பெட்போட்’ என்ற கருவியை வாங்க வேண்டும். வீட்டில் நாயைத் தனியே விட்டுவிட்டு, வேலைக்குச் செல்லும்போது நாய் என்ன செய்கிறது, எப்படி இருக்கிறது என்ற கவலை வருவது உண்டு. பெட்போட் வாங்கி, நாய் இருக்கும் அறையில் வைத்துவிட வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை வாய்ஸ் மெசேஜ் மூலம் நாயை அழைக்க வேண்டும். நாய் அருகில் வந்தவுடன், கருவியில் இருந்து நாய்க்கான பிஸ்கட் வெளியே வரும். நாய் பிஸ்கெட்டைச் சாப்பிடும்போது புகைப்படம் எடுக்கப்பட்டு, உரிமையாளரின் மொபைல் போனுக்குச் சென்றுவிடும். எங்கிருந்தாலும் நாய் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

ம்… என்னத்தைச் சொல்றது…

ரஷ்யாவைச் சேர்ந்தவர் நிகிடா லெஸ்னோய். இவர் நடந்து வரும்போது எக்ஸ் ரே உருவம் நடந்து வருவது போலவே இருக் கிறது. டாட்டூ கலைஞரான நிகிடா, தன் முகத்தில் மண்டை ஓட்டைடாட்டூ வாகக் குத்தியிருக்கிறார். கறுப்பு கண், எலும்புகள், பெரியப்பற்கள் என்று மண்டையோட்டை அப்படியே வரைந்திருக்கி றார். சாலைகளில் செல்லும் போது பெரும்பாலான வர்கள் பயந்து, விலகியே செல்கிறார்கள். ‘‘என் அப்பாவைப் பார்த்துதான் டாட்டூ மீது ஆசை வந்தது. 15 வயதில் முதல் டாட்டூ குத்திக்கொண்டேன்.

18 வயதில் அதிபயங்கர டாட்டூவுக்கு மாறிவிட்டேன். என்னைப் பார்த்து பயந்து ஒதுங்குபவர்களுக்கு மத்தியில் சிலர் பாராட்டவும் செய்கிறார்கள். என் அம்மா முதலில் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். ஆனாலும் பிறரின் விருப்பத்துக்கு மதிப்பளிப்பவர் என்பதால் என்னை ஏற்றுக்கொண்டார். டாட்டூ குத்தும்போது வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து கொடுப்பது வழக்கம். ஆனால் நான் மயக்க மருந்து எடுத்துக்கொள்ளவில்லை. முகத்தில் டாட்டூ குத்துவதற்கு முன் மருத்துவரைச் சந்தித்தேன். ரத்தத்தின் மூலம் வண்ணம் மூளைக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் வேண்டாம் என்றார். ஆனால் ஏற்கெனவே முகத்தில் டாட்டூ குத்திக்கொண்டவர்களின் அனுபவங்களைக் கேட்ட பிறகு துணிச்சலுடன் இறங்கினேன்’’ என்கிறார் நிகிடா.

என்ன சொன்னாலும் இது நல்லாவா இருக்கு நிகிடா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மண்டையோடு-இல்லாத-குழந்தை/article7701458.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: க்யூவில் நிற்கும் ரோபோ

 
masala_2566193f.jpg
 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லூசி கெல்லி பிரத்யேகமான ஐபாட் ரோபோவை வைத்திருக் கிறார். அவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில் 6 ரோபோக்கள் இயங்கி வருகின்றன. ஆப்பிள் ஐபோன்களின் தீவிரமான விசிறி லூசி கெல்லி. புதிய போன் அறிமுகம் ஆகும் போது மணிக்கணக்கில் வரிசையில் நின்று முதல் பத்து நபர்களுக்குள் ஐபோனை வாங்கி விடுவார். இதற்காக அடிக்கடி விடுமுறை போட வேண்டியி ருந்தது. மணிக்கணக்கில் நிற்பதால் கால் வலியும் நேரத்தை வீண் செய்கிறோம் என்ற குற்ற உணர்வும் இருந்தது. லூசி கெல்லியின் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முன்வந்தது அவரது அலுவலகம். கலிஃபோர்னியா நிறுவனம் தயாரித்த ஐபாட் ரோபோ ஒன்றை லூசிக்கு வழங்கியது. இந்த ஐபாட் திரையில் எங்கிருந்தாலும் லூசியின் முகம் தெரியும்.

‘‘ஆப்பிள் கடைகளில் புது போன் வெளியாகும் அன்று எனக்குப் பதிலாக ஐபாட் ரோபோவை வைத்துவிடுவேன். ஐபாட் திரையில் எப்பொழுதும் என் முகம் தெரிந்துகொண்டே இருக்கும். யாராவது கேள்விகள் கேட்டால் எனக்குத் தெரியவரும். எங்கிருந்தாலும் நான் பதில் அளித்துவிடுவேன். ஐபோன் 6எஸ் கடந்த வாரம் வெளிவந்தபோது லூசி ரோபோ வரிசையில் நின்று எனக்கு போனை வாங்கிக் கொடுத்துவிட்டது. நான்காவது ஆளாக எனக்கு போன் கிடைத்தது. ரோபோவாக இருந்தாலும் யாரும் பொறாமை கொள்ளவில்லை, வரிசையைத் தாண்டிச் செல்லவில்லை. ஒரு இயந்திரம் போல அதை நடத்தாமல், மிக அன்பாகப் பார்த்துக்கொண்டனர்’’ என்கிறார் லூசி கெல்லி.

ரோபோக்களுக்கு அடிமையாகிவிடுவானோ மனிதன்…

பிரான்ஸைச் சேர்ந்த சாகசக்காரர்கள் டான்க்ரேட் மெலெட், ஜூலியன் மில்லட். இரண்டு வெப்பக் காற்றுப் பலூன்களைப் பறக்கவிட்டு, அவற்றை இணைத்திருக்கும் கயிற்றின் மீது நடக்கும் சாகசத்தைச் செய்து முடித்திருக்கிறார்கள். ஓராண்டு காலமாக இந்த சாகசத்துக்காகப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். மோசமான வானிலை காரணமாக, இந்தச் சாதனை அத்தனை எளிதாக அமைந்துவிடவில்லை. அளவுக்கு அதிகமான காற்றால், கயிற்றில் இருந்து தவறினார். கைகளால் கயிற்றைப் பிடித்துக்கொண்டு பத்திரமாகத் தரைக்கு வந்தார். ஜூலியன் நடக்க முயற்சி செய்தபோது காற்று இன்னும் வலிமையாக வீசியதால், முழுமையாக நடந்து முடிக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஆனாலும் இரண்டு வெப்பக் காற்றுப் பலூன்களுக்கு இடையே நடக்கும் முயற்சியே பாராட்டத்தக்கது என்கிறார்கள்.

பயமறியாதவர்கள்!

இங்கிலாந்தின் மிகச் சிறிய பாடிபில்டர் சூ டான். 4 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட 21 வயது சூ டான், இன்று பிரிட்டனின் முக்கியமான பாடிபில்டராக வலம் வருகிறார். ‘’மரபணுக் குறைபாடால் என் எலும்புகள் வளர்ச்சியடையவில்லை. என் உயரத்தைப் பார்த்துக் கிண்டல் செய்யாதவர்களே கிடையாது. மிகவும் வருத்தமாக இருந்தது. இன்று கிண்டல் செய்பவர்களை ஒருநாள் ஆச்சரியப்பட வைக்க வேண்டும் என்று தோன்றியது. உடற்பயிற்சி மூலம் என் உயரத்தை அதிகரிக்க முடியாது. ஆனால் என் உடலை பாடிபில்டராக மாற்ற முடியும்.

உணவுப் பழக்கத்தை மாற்றினேன். வாரத்துக்கு 5 நாட்கள் உடற்பயிற்சி செய்தேன். இந்தப் பயிற்சி என் உடலை மட்டுமல்ல, என் உள்ளத்தையும் பக்குவப்படுத்தியது. என் உயரம் குறித்து எனக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை அகன்றது. பிறரின் கிண்டலைக் கண்டு கலங்காமல் இருக்க முடிந்தது. இங்கிலாந்தின் பாடிபில்டிங் ஃபெடரேஷன் பல போட்டிகளில் என்னைப் பங்கேற்க வைக்கிறது. இன்று என் உயரம் ஒரு குறையாக யாருக்கும் தெரியவில்லை’’ என்கிறார் சூ டான்.

தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கும் சூ டானுக்கு வாழ்த்துகள்!

சீனாவின் ஹிஃபெய் ரயில் நிலையத்தில் வாய் வார்த்தைகளில் சண்டை போட்டுக்கொண்டிருந்த இளம் ஜோடி ஒன்று, திடீரென்று கைகலப்பில் இறங்கியது. அருகில் இருந்த காவலர்கள் இருவரையும் அழைத்து விசாரித்தனர். சில வாரங்களுக்கு முன் திருமணம் ஆனவர்கள். ஒரு திருவிழாவுக்கு முதல் முறை வெளியூர் பயணம் மேற்கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். கணவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி விட்டு வருவதற்குள் ரயில் கிளம்பிவிட்டது.

கணவர் ஏற்கெனவே அந்த ரயிலுக்கு டிக்கெட் எடுத்துவிட்டார். ஏமாற்றம் அடைந்த மனைவி ரயிலைத் தவற விட்டதற்காகவும், டிக்கெட் வீணாகிவிட்டதற்காகவும் சண்டையிட ஆரம்பித்து, அடிதடியில் முடிந்தது. தம்பதியர் இருவரையும் சமாதானம் செய்த காவல்துறை, மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்தது. பிறகு அடுத்த ரயிலில் இலவசமாக ஏற்றி அனுப்பி வைத்தது.

அட! ஒரு ஜோடியை சேர்த்து வைத்திருக்கிறதே காவல்துறை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-க்யூவில்-நிற்கும்-ரோபோ/article7705684.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஆடுகளின் ஓட்டப் பந்தயம்

 
 
masala_2506044f.jpg
 

ஸ்காட்லாந்தில் ஆடுகளுக்கு இடையே ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது. இதற்காக ஆடுகளுக்கு ஆடை அணிவிக்கப்படுகிறது. ஆடுகளின் மேல் கம்பளியால் உருவாக்கப்பட்ட வண்ண பொம்மைகள் கட்டி வைக்கப்படுகின்றன. ஆடுகளின் மீது பொம்மைகள் சவாரி செய்வது போலக் காட்சியளிக்கின்றன. நூறாண்டுகளைக் கடந்த கம்பளி தொழிற்சாலையும் ஆட்டுப் பண்ணைகளும் இணைந்து இந்த ஓட்டப் பந்தயத்தை நடத்துகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறும் போட்டியில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பங்கேற்று வருகின்றன. ஆடுகள் நிற்காமல் ஓடுவதற்காக, அவற்றின் பின்னே ஒரு சிறுவன் குச்சியுடன் ஓடுகிறான். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக, பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கிறார்கள். ஆரவாரம் செய்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் இந்தப் போட்டிக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.

விலங்குகளுக்கு இடையே போட்டி வைத்து ரசிப்பதில் மனிதனுக்கு அப்படி என்ன ஆர்வமோ!

மிகப் பெரிய விளையாட்டு அரங்குகளில், குவிந்து கிடக்கும் பொம்மைகளை ரோபோவின் கைகளால் எடுக்கும் போட்டி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இந்த விளையாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் ரோபோவை இயக்கி, எவ்வளவு பொம்மைகளை எடுக்கிறோம் என்பதுதான் சுவாரசியம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ஒரு பொம்மை கூட குறிப்பிட்ட நேரத்துக்குள் எடுக்க முடிவதில்லை. இதனால் எல்லோரும் அதிருப்தியே கொண்டிருக்கின்றனர். சீனாவின் சோங்ஃவிங்கில் உள்ள விளையாட்டு அரங்கம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது. ரோபோக்களுக்குப் பதிலாக, குழந்தைகளையே கயிற்றில் கட்டி, கைகளுக்கு உறைகளை மாட்டி, பொம்மை குவியல்களுக்கு அழைத்துச் செல்கிறது. குழந்தை ஒரு பொம்மையையாவது எடுக்க முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. பெற்றோரிடமும் குழந்தைகளிடமும் இந்த முயற்சி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சீனர்களுக்கு இணை யாருமில்லை…

கனடாவில் உள்ள டொலிசியஸ் டோனட்ஸ் நிறுவனத்தில் ஒரு டோனட் 6,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சாதாரண டோனட் அல்ல. 24 காரட் தங்கத் துகள்களும் சாப்பிடக்கூடிய வைரத்துகள்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு டோனட்டும் தயாரிப்பதற்கு 3 முதல் 5 மணி நேரங்களாகின்றன. வாடிக்கையாளர் ஒருவர், தன் காதலைச் சொல்லும்போது வித்தியாசமான, மறக்க முடியாத, விலையுயர்ந்த டோனட் வேண்டும் என்று கேட்டார். அப்பொழுது உருவானதுதான் இந்த டோனட்டோபியா. முதல் டோனட்டோபியாவைப் பரிசோதனை முயற்சியாகத்தான் செய்து பார்த்தோம். ஆனால் பிரமாதமான சுவையாக இருந்தது. டோனட்டோபியாவுடன் அலங்கார பாட்டிலில் தண்ணீர், வினிகர், சாக்லேட் கரைசல் போன்றவையும் பரிமாறுகிறோம் என்கிறார் உரிமையாளர் ஜியான் கமின்ஸ்கி.

ம்ம்… இதையெல்லாம் வாங்கிச் சாப்பிடவும் ஆட்கள் இருக்கிறார்களே…

இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரிய ஃபேஷன் நிறுவனம் டோல்ஸ் அண்ட் கபானா. உலகப் புகழ்பெற்ற இந்த நிறுவனம் வடிவமைக்கும் ஆடைகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலை உயர்ந்தவை. குழந்தைகளின் வண்ண ஓவியங்களை வைத்து, இந்த நிறுவனம் வடிவமைத்த ஆடைகள் லட்சக்கணக்கில் விலை போகின்றன. சார்லொட்டே கெம்ப் என்ற 5 வயது சிறுமி, இந்த ஆடைகளில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை மறு உருவாக்கம் செய்கிறார். அவரது அம்மா மார்தா, அந்த ஓவியத்தைக் கொண்டு ஆடை வடிவமைக்கிறார். கபானாவின் குழந்தைக்கான ஆடை ஒன்று 40 ஆயிரம் ரூபாய், ஆனால் சார்லொட்டேவும் மார்தாவும் தயாரித்த ஆடை 2 ஆயிரம் ரூபாய். இரண்டு ஆடைகளுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதுதான் சிறப்பு.

ரொம்ப அழகா செய்திருக்கீங்க… ஆனா நஷ்ட ஈடு கேட்கப் போறாங்க பார்த்துக்குங்க…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஆடுகளின்-ஓட்டப்-பந்தயம்/article7523080.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: கடலுக்குள் விவசாயம்!

 
 
masala_2567453f.jpg
 

இத்தாலியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கடலில் விவசாயம் செய்து சாதனை படைத்திருக்கிறது. நிலம் மாசு, பருவ மழை தவறுதல், வெப்பநிலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் எதிர்காலத்தில் நிலத்தில் விவசாயம் செய்வது கடினமாக இருக்கப் போகிறது. அதற்கான தீர்வு ஒன்றைக் கண்டறியும் முயற்சியாக கடலுக்குள் பயிர் செய்திருக்கிறார்கள். இதை ‘நேமோ கார்டன்’ என்று அழைக்கிறார்கள். இந்தத் தோட்டத்தில் இருந்து ஸ்ட்ராபெர்ரி, துளசி, பீன்ஸ், பூண்டு, கீரைகளை விளைவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் செய்தி தொடர்பாளர் லுகா காம்பெரினி, ‘‘நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்று விவசாயத்தை முயற்சி செய்திருக்கிறோம்.

கடலில் 18 36 அடி ஆழத்தில் மிதக்கும் கோள வடிவக் கூண்டுகளை அமைத்திருக்கிறோம். அதற்குள் பாதியளவு தண்ணீர் இருக்கும். மேலே செடிகளை தொட்டிகளுக்குள் வைத்திருக்கிறோம். இரவிலும் பகலிலும் 79 டிகிரி வெப்பமும் 83 சதவிகிதம் ஈரப்பதமும் கூண்டுக்குள் இருக்கும். இங்கிருந்து வெளியேறும் அதிக அளவிலான கார்பன் டையாக்ஸைட் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது.

வெப் கேமராக்கள் மூலம் இவற்றைக் கவனித்து வருகிறோம். இந்த அழகான கடலில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இரண்டு ஆண்டுகளில் பல முறை தோல்விகளைச் சந்தித்தோம். இறுதியில் எங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது. கடல் விவசாயம் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்தாது என்பது மிக முக்கியமானது’’ என்கிறார். ஆக்டோபஸ், கடல்குதிரை, நண்டு போன்ற உயிரினங்கள் இந்தக் கூண்டுக்கு அருகில் அடிக்கடி வந்து செல்கின்றன.

ஆனால் எந்த ஓர் உயிரினமும் செடிகளுக்குத் தீங்கு விளைவிக்கவில்லை. இதுவரை கடலுக்கு அடியில் விளைவிக்கப்பட்ட காய்களையும் பழங்களையும் விற்பனைக்கு வைக்கவில்லை. ஆய்வுகளுக்கும் விருந்தினர்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். எதிர்காலத்தில் உற்பத்தி அதிகமாகும்போது விற்பனைக்கு வரும்.

நிலத்தில் கட்டிடங்களைக் கட்டிவிட்டால், கடலுக்குள்தான் விவசாயம் பண்ணணும் போல…

சீனாவின் குவாங்ஸொவ் பகுதியைச் சேர்ந்த பணக்கார இளைஞர் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். அவரது காதலி பள்ளியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறார். இளைஞர் சீனாவின் விலை உயர்ந்த 11 கார்களை வாடகைக்கு எடுத்தார். காதலியின் விடுதிக்கு முன்பு, இதய வடிவில் நிறுத்தினார். காதலியை அழைத்தார். கார்களுக்கு நடுவே வைர மோதிரத்துடன் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டினார். அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தார். ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகுதான் திருமணம் என்று கூறிவிட்டார். இளைஞரும் ஒப்புக்கொண்டார். ’இவள் என் காதலி, யாரும் அருகில் வராதீர்கள்’ என்று ஒரு பேனரில் எழுதி, இருவரும் அதற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்னும் 4 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் என்றாலும் இன்றே இவர்களைப் பற்றிய பரபரப்பு மீடியாக்களில் தொற்றிக்கொண்டது.

இந்தப் புரிதலும் அன்பும் என்றும் தொடரட்டும்!

கரினா அலியானி கடல் சாகசக்காரர். ஒரு படப்பிடிப்புக்காக ஆழ்கடலுக்குச் சென்றார். குகை போன்ற இடத்தை அடைந்தபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அங்கே 8 மீட்டர் நீளம் கொண்ட மிகப் பெரிய அனகோண்டா சில நாட்களுக்கு முன் இரையைக் கொன்று விழுங்கிவிட்டு, அசையாமல் படுத்திருந்தது. இந்த அனகோண்டாவின் எடை சுமார் 400 கிலோ இருக்கும் என்கிறார். கரினாவையும் அனகோண்டாவையும் அலெக்சாண்டர் சோஸ்சி படம்பிடித்தார்.

‘‘20 நிமிடங்கள் அனகோண்டாவைக் கவனித்தோம். பெரிதாக அசைவு இல்லை. எங்களால் தலையை மட்டுமே நன்றாகப் பார்க்க முடிந்தது. வாலைப் பார்க்க முடியவில்லை. பாம்புகள் தண்ணீரில் வேகமாக நீந்தக்கூடியவை. அதனால் பாதுகாப்புக்காக கத்தி வைத்திருந்தேன். ஆனால் அன்றைக்கு நாங்கள் அனகோண்டாவின் இரை அல்ல என்பது எங்களுக்குத் தெரிந்த பிறகே நிம்மதி வந்தது. ஆபத்தை நேருக்கு நேர் சந்தித்தாலும் கடலில் அனகோண்டா வசிப்பதை நான்தான் கண்டறிந்திருக்கிறேன்’’ என்கிறார் கரினா.

மனிதனுக்கு இன்னும் தெரியாத மர்மங்கள் எவ்வளவோ!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கடலுக்குள்-விவசாயம்/article7710698.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: 12 ஏக்கரில் பயிர் ஓவியம்

 
masala_2569168h.jpg
 

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் வசிக்கிறார் ஸ்டான் ஹெர்ட் என்ற கலைஞர். சமீபத்தில் தன்னுடைய மிகச் சிறந்த படைப்பு ஒன்றை மின்னியாபொலிஸில் உருவாக்கியிருக்கிறார். இவர் உருவாக்கியிருப்பது வயல்வெளியில் `பயிர் ஓவியம்’. 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் 1889-ம் ஆண்டு வான் காவின் மிகச் சிறந்த `ஆலிவ் மரங்கள்’ ஓவியத்தை வயலில் உருவாக்கியிருக்கிறார் ஸ்டான் ஹெர்ட். ஓவியத்தை வரைந்து, அதன் மீது விதைகளைப் போட்டு பயிர்களை வளர்க்கவில்லை ஸ்டான். வளர்ந்த பயிற்களைக் கத்தரித்து, வெட்டி, இடம் மாற்றி நட்டு ஓவியத்தை உருவாக்கியிருக்கிறார்.

இதற்காக 6 மாதங்கள் வேலை செய்திருக்கிறார். இந்தப் பிரமாண்ட ஓவியத்தை பறவைப் பார்வையில் இருந்து பார்த்தால்தான் ரசிக்க முடியும். மின்னியாபொலிஸிலிருந்து செல்லும் விமானங்களில் இருந்து முழு ஓவியத்தையும் பார்க்கலாம். “ஓட்ஸ், வெள்ளரி, பரங்கி, கீரை, கோதுமை போன்ற பயிர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். இதன் மூலம் மஞ்சள், ஆரஞ்சு, பொன், பச்சை நிறங்கள் கிடைத்தன. என் மூளையில் பதிந்திருந்த விஷயம் அப்படியே காட்சியாகி இருப்பதில் எனக்கு சந்தோஷம். வான் கா மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு என்னால் முடிந்த அன்பைச் செலுத்தியிருக்கிறேன். வான் கா கோதுமை நிலத்தைத்தான் தன் ஓவியத்தில் காட்டியிருக்கிறார். கோதுமையுடன் ஓட்ஸையும் நான் சேர்த்துக்கொண்டேன்.

நான் விவசாயி கிடையாது. ஆனால் பயிர் ஓவியராக இருக்க வேண்டும் என்பது என் லட்சியம். வாரத்துக்கு 70 மணி நேரங்களைச் செலவிட்டு இதை உருவாக்கியிருக்கிறேன். ஆஸ்திரேலியா, கியூபா, இங்கிலாந்து, பிரேஸிலில் என்னுடைய பயிர் ஓவியங்களுக்கான காட்சியகங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்கள் என் ஒருவனால் மட்டும் உருவானதில்லை. எனக்குப் பல்வேறு நண்பர்கள் உதவி செய்திருக்கிறார்கள்’’ என்கிறார் ஸ்டான் ஹெர்ட்.

வான் கா இருந்திருந்தால் அசந்து போயிருப்பார்!

செல்லப் பிராணிகளுக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி

தென்கொரியாவில் செல்லப் பிராணிகளுக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆரம்பித்துவிட்டனர். மனிதர்களுக்கு மட்டுமின்றி, செல்லப் பிராணிகளுக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி அவசியம் என்கிறார் கள். நீண்ட வாலை குட்டையாக்குவது, காதுகளைச் சிறியதாக மாற்றுவது, எடையைக் குறைப்பது, தழும்புகளை நீக்குவது, சுருங்கிய தோல்களைச் சரி செய்வது போன்ற பல விஷயங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாய்களுக்குச் செய்கிறார்கள்.

இதற்காக 4 ஆயிரம் ரூபாயிலிருந்து பல்லாயிரம் ரூபாய் வரை செலவு செய் கிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரிகளின் தலைநகரமாக இருக்கிறது தென்கொரியா. அதிக அளவில் பிளாஸ்டிக் சர்ஜரிகள் இவர்கள் தான் செய்துகொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நாய்களின் இமைகளைத்தான் சர்ஜரி செய்ய விரும்புகிறார்கள். இதன் மூலம் நாய்களின் கண்கள் பெரியதாகவும் அழகாகவும் தெரிகின்றன. “செல்லப் பிராணிகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவக் காரணங் களுக்காகவே செய்து வருகிறோம்.

ஆனால் இதில் அழகும் சேர்ந்து கொள்கிறது. இதனால் நிறைய மக்கள் தங்கள் செல்லப் பிராணி களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய விரும்புகிறார்கள்’’ என்கிறார் ஒரு கால்நடை மருத்துவர். செல்லப் பிராணி உரிமையாளர்களின் உரிமையில் யாரும் தலையிட முடியாது, செல்லப் பிராணிகள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் தவறு ஒன்றும் இல்லை என்கிறார்கள் சிலர். மருத்துவ ரீதியாக செல்லப் பிராணிகளுக்கு இதன் மூலம் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும் விலங்கு நல ஆர்வலர்களும் 63 சதவிகித தென்கொரிய மக்களும் எதிர்த்து வருகிறார்கள்.

அடக் கொடுமையே…

துக்க அடையாளமாக ஐஃபோன்

உலகிலேயே துக்கமான செய்திகளை மிகவும் செலவு செய்து இதுவரை யாரும் அனுப்பியதில்லை. சீனாவைச் சேர்ந்த பணக்கார இளைஞர் ஒருவர் தன் முன்னாள் காதலிக்குத் தகவல்களை புதிய வரவான 6எஸ் ஐபோன்களை வாங்கி, திரை மீது எழுதி அனுப்பியிருக்கிறார். விலை உயர்ந்த 9 ஐபோன்களை வாங்கினார். ஒவ்வொரு போனின் திரையிலும் `நீ என்னைப் பார்த்தாய், உனக்காக நான் கடினமாக உழைத்து வெற்றி பெற்றேன், நம் சந்திப்பின் முதல் ஆண்டு நிறைவு நாள் அன்று காதல் முறிந்தது, நான் 9 ஐபோன்களை உனக்குப் பரிசாக அளிக்கிறேன், நம் உறவு முறிவின் துக்க அடையாளமாக இந்த போன்கள் இருக்கட்டும்’ என்று எழுதினார். பிறகு புகைப்படங்கள் எடுத்துவிட்டு, போன்களை அனுப்பி விட்டார். இணையத்தில் ஐபோன் புகைப்படங்களை இதுவரை 15 ஆயிரம் தடவைகள் வெளியிட்டிருக்கிறார்.

பிரிவு துயரம் தரும்தான்… அதுக்காக இப்படியா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-12-ஏக்கரில்-பயிர்-ஓவியம்/article7715447.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மின்மினி பூங்கா!

 
masala_2570406f.jpg
 

ஒரு மின்மினி பூங்கா அமைக்க வேண்டும் என்ற சீனாவின் கனவு நிறைவேறிவிட்டது. மத்திய சீனாவின் வுஹான் நகரில் அமைந்திருக்கிறது இந்த மின்மினிப் பூங்கா. இரவு நேரங்களில் பல்லாயிரக்கணக்கான மின்மினிகளின் ஒளியைக் கண்டு ரசிக்கலாம். இந்தப் பூங்கா 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பறக்கும் பகுதி, கவனிக்கும் பகுதி, தொலைவில் இருந்து பார்க்கும் பகுதி, இனப்பெருக்கப் பகுதி, அறிவியல் விளக்கப் பகுதி என்று பிரிக்கப்பட்டு, பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது. இங்கே பார்வையாளர்கள் தவிர, ஆராய்ச்சியாளர்களும் பெருமளவில் வருகிறார்கள். இங்கிருந்து மின்மினிகளை விலைக்கு வாங்கிக்கொண்டும் செல்ல முடியும்.

மே மாதம் திறக்கப்பட்ட இந்த மின்மினிப் பூங்காவில் இன்று வரை கூட்டத்துக்குக் குறைவில்லை. பூச்சிகள் வாழக்கூடிய இயற்கை வளங்கள் குறையும் நேரத்தில் இப்படிப்பட்ட பூங்காக்கள் பூச்சிகளுக்கு நன்மை அளிக்கின்றன. இங்கிருந்து உற்பத்தியாகும் மின்மினிப்பூச்சிகளை ஒரு ஜாடியில் அடைத்து, பல்வேறு இடங்களுக்கும் இணையம் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள். அக்டோபர் வரை இந்தப் பூங்கா திறந்திருக்கும். மீண்டும் அடுத்த ஆண்டு மே மாதம் திறக்கப்படும். டைனோசர் கண்காட்சி, குழந்தைகள் விளையாட்டுகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளும் மின்மினிப் பூங்காவில் நடைபெற்று வருகின்றன.

அடடா! நினைக்கும்போதே சுவாரசியமா இருக்கு!

நோரா கென்னடியும் மார்டின் ஜாக்ஸும் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்கள். பழங்கால பழக்கவழக்கங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். வில்லோ மரங்களின் பிரம்புகளில் இருந்து அவரவருக்குத் தேவையான சவப்பெட்டி செய்யும் கலையைக் கற்றுத் தருகிறார்கள். “நமக்கு நாமே சவப்பெட்டி என்பது கொஞ்சம் சங்கடமாக இருக்கலாம். ஆனால் என்றாவது ஒருநாள் அது நமக்குத் தேவைப்படத்தானே போகிறது?

இறந்த பிறகாவது ஏழை, பணக்காரன் அடையாளம் இன்றி, சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் உடல் மட்கிப் போகவேண்டும். அதற்காக நமக்கு நாமே சவப்பெட்டி செய்துகொள்ளும் பயிற்சியை அளித்து வருகிறோம். நாம் இறக்கும் வரை இந்தச் சவப்பெட்டியை புத்தக அலமாரியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்கிறார் மார்டின் ஜாக்ஸ். பயிற்சியில் சேருவதற்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணம்.

டூ இன் ஒன் பெட்டி!

அமெரிக்காவில் வசிக்கும் அபிகைல் கிங்ஸ்டனுக்குத் திருமணம் நிச்சயமானது. உடனே 120 ஆண்டுகளுக்கு முன் தன் பாட்டிக்கும் பாட்டிக்கும் பாட்டி அணிந்திருந்த திருமண ஆடையை அணிந்துகொள்ள முடிவு செய்தார். 1895ம் ஆண்டு மேரி லோரி வாரென் இந்தத் திருமண ஆடையை அணிந்திருந்தார். அதற்குப் பிறகு 10 பெண்கள் இந்த ஆடையை அணிந்து திருமணம் செய்துகொண்டார்கள். மேரி லோரியின் மகள்கள் யாரும் இந்த ஆடையை அணிய விரும்பவில்லை. ஆனால் மேரியின் பேத்திகளில் இருந்து அணியும் வழக்கம் உருவானது. “நான் சிறுமியாக இருந்தபோது இந்த ஆடையை அணிந்த முதல் 6 மணப்பெண்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். நானும் இதை அணிந்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.

என் அம்மாவுக்கும் பாட்டியின் ஆடை மிகவும் பிடித்திருந்தது. அதனால் என் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். உடனே கடைசியாக இந்த ஆடையை அணிந்த மணப்பெண்ணைத் தொடர்புகொண்டோம். அவரும் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தார். ஆர்வத்துடன் பெட்டியைத் திறந்த நான் அதிர்ந்து போனேன். துணி வண்ணம் மாறியிருந்தது. என் உயரத்துக்குக் குட்டையாகவும் இருந்தது. இதை அணிய முடியாது என்றார்கள். நான் அணிந்தால் இந்த ஆடைதான் என்பதில் உறுதியாக நின்றேன். பலமுறை ஆடையில் திருத்தங்களை மேற்கொண்டோம். துளைகள் விழுந்திருந்த கைகளுக்கான பகுதிகளை மாற்றினோம். சுத்தம் செய்தோம். 200 மணி நேரங்களைச் செலவிட்டு, ஆடையின் அழகை மீட்டு எடுத்தோம்.

நான் அந்த பழம் பெருமை வாய்ந்த ஆடையை அணிந்தபோது ஒரு சிண்ட்ரெல்லாவாக உணர்ந்தேன்’’ என்கிறார் அபிகைல். திருமணம் முடிந்து சிறிது நேரம் வரை இந்த ஆடையில் இருந்தவர், பிறகு புது ஆடையை அணிந்துகொண்டார். மேரியின் 50வது திருமணநாளுக்கு அவரது கணவர் அளித்த லாகெட், மோதிரம் போன்றவற்றுடன் ஒரே ஆடையை அணிந்த 10 மணப்பெண்களின் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 12வது மணமகள் அணிவதற்காக அந்தச் சிறப்பு மிக்க ஆடை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

பழைய பொருட்களை மதிப்பதில் அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் நிகர் யாரும் இல்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மின்மினி-பூங்கா/article7718713.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: முரடு என்று நினைக்கும் கங்காருவுக்குள் எத்தனை அன்பு!

 
ulagam_2571531f.jpg
 

உலகின் முதல் மணல் கோட்டை தங்கும் விடுதிகள் ஹாலந்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் கடற்கரைகளில் மணற் சிற்பங்கள் உருவாக்கி வருகிறார்கள். ஹாலந்தின் ஓஸ், ஸ்நீக் என்ற இரண்டு நகரங்களில் ஆண்டுதோறும் மணற் சிற்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தத் திருவிழாவுக்குப் பொருத்தமாக தங்கும் விடுதிகள் மணற் சிற்பங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதாவது கான்க்ரீட் சுவர்களுக்கு மேலே மணல் சிற்பங்களைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். விடுதியின் தங்கும் அறைகளிலும் மணலால் சுவர்களைப் பூசியிருக்கிறார்கள். களிமண் சிற்பங்களை ஆங்காங்கு வைத்திருக்கிறார்கள். மணல் விடுதியாக இருந்தாலும் அனைத்து நவீன வசதிகளும் இந்த அறைகளில் செய்யப்பட்டிருக்கின்றன. பழங்காலத்து மண் சுவர் வீடுகளுக்குள் நுழைந்தது போலத் தோன்றினாலும் வசதிகளில் இன்றைய காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. ஓர் அறை முழுவதும் கார்ட்டூன் கதாபாத்திரங்களும் இன்னோர் அறை முழுவதும் சீன டிராகன்களும் இடம்பெற்றுள்ளன. மணற் சிற்பத் திருவிழாவுக்கு 4 வாரங்களுக்கு முன்பு இந்த விடுதியை உருவாக்குகிறார்கள். ’’பனிக்கட்டி சிற்பங்களால் உருவான தங்கும் விடுதிகளை ஸ்வீடனிலும் பின்லாந்திலும் பார்த்திருக்கிறேன். அதிலிருந்துதான் மணற் சிற்பத் தங்கும் விடுதி உருவானது. மணலால் உருவான அறைகள் என்றாலும் தங்குபவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது’’ என்கிறார் இதன் உரிமையாளர். ஓர் இரவு தங்குவதற்கு 11 ஆயிரம் ரூபாய் கட்டணம். இரண்டு நகரங்களிலும் 30 பெரிய மணற் சிற்பங்கள் இந்தத் திருவிழாவின்போது உருவாக்கப்படுகின்றன. இதற்காக 8 லட்சம் கிலோ மணல் பயன்படுத்தப்படுகிறது. திருவிழா முடிந்தவுடன் இந்த மணல் விடுதிகளும் மூடப்பட்டுவிடுகின்றன. விடுதிகளுக்குக் கிடைத்த வரவேற்பால் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் விடுதிகளை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

ம்… ரசனையான விடுதி!

அமெரிக்காவில் வசிக்கிறார்கள் டயானா, லாரி மோயர் தம்பதியர். இவர்களின் செல்லப் பிராணி ஜிம்மி என்ற 9 மாதக் குட்டி கங்காரு. டயானா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு ஒரே ஆறுதல் ஜிம்மிதான். விதவிதமான ஆடைகளை ஜிம்மிக்குப் போட்டு அழகு பார்க்கிறார் டயானா. ‘’எனக்குப் புற்றுநோய் என்று அறிந்த அன்று நான் மிகவும் உடைந்து போய்விட்டேன். என்னைத் தேற்றும் விதத்தில் என் கணவர் இந்தக் கங்காரு குட்டியைப் பரிசளித்தார். என் நோயை மறந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஜிம்மிதான் காரணம். எப்பொழுதும் என் அருகிலேயே இருக்கும். என்னை ஆதரவாக அணைக்கும். விளையாடும். நான் சிறிது நேரம் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தால் என் கவனத்தை திசை திருப்பி, என் மனநிலையை மாற்றிவிடும். ஜிம்மிக்குப் பிடித்த மக்ரோனி சீஸை நான் கொடுப்பேன். வாரம் ஒருமுறை குளிப்பாட்டுவேன். தினமும் பல் தேய்த்துவிடுவேன்’’ என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார் டயானா. ‘’ஜிம்மி வந்ததில் இருந்து என் மனைவியின் மனநிலையில் நல்ல முன்னேற்றம். மகிழ்ச்சி மரணத்தைத் தள்ளிப் போடும். என்னுடைய வேலைகளில் பாதியை ஜிம்மியே செய்துவிடுகிறது. டயானாவும் ஜிம்மியும் ஒன்றாகச் சாப்பிடுவார்கள், ஒன்றாகத் தூங்குவார்கள், ஒன்றாக விளையாடுவார்கள். நாங்கள் இருவரும் ஜிம்மிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்’’ என்கிறார் லாரி.

முரடு என்று நினைக்கும் கங்காருவுக்குள் எத்தனை அன்பு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-முரடு-என்று-நினைக்கும்-கங்காருவுக்குள்-எத்தனை-அன்பு/article7722892.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: லாராவின் பிரச்சினை

 
 
 
lara_2503872f.jpg
 

பிரேஸிலில் வசிக்கிறார் லாரா போன்ஸ். கடந்த 20 ஆண்டுகளாக விநோதமான பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் அழும்போது கண்ணீருடன் படிகமும் உருவாகிறது. வெள்ளை நிறத்தில் மென்மையாக உருவாகும் படிகம், விரைவில் கட்டியான படிகமாக மாறிவிடுகிறது. ஒரு நாளைக்கு 30 முறை சவ்வு போன்ற படலம் கண்ணில் தோன்றுகிறது. அதை உடனுக்கு உடன் கஷ்டப்பட்டு எடுத்து விடுகிறார் லாரா. எடுக்க முடியாதபோது கட்டியாக மாறிவிடுகிறது. அந்தப் படிகத்தை கண் மருத்துவரிடம் சென்று, வாரம் ஒருமுறை நீக்கி வருகிறார்.

15 வயதில் லாராவுக்கு இந்தப் பிரச்சினை ஆரம்பித்தது. மருத்துவர்களே குழம்பிப் போனார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முடியவில்லை. பார்க்காத மருத்துவர்கள் இல்லை. ‘’ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் எனக்கு இந்தப் பிரச்சினை மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. கண்ணிலேயே கவனம் இருப்பதால் மற்றவற்றை என்னால் கவனிக்க முடியவில்லை’’ என்கிறார் லாரா. கண் மருத்துவரான ரால் கோன்கால்வ்ஸ், ‘’இதுவரை இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. 25 ஆண்டுகால பணி வாழ்க்கையில் முதல் முறை லாராவை இந்தப் பிரச்சினையோடு சந்திக்கிறேன்.

நம் கண்ணீர் மூன்று விதமான அடுக்குகளைக் கொண்டது. தண்ணீர், புரதம், கொழுப்பு. இதில் புரதம் பாக்டீரியாக்களில் இருந்து கண்களைப் பாதுகாக்காததால், அடுத்த அடுக்கில் இருக்கும் கொழுப்பு அதிக அளவில் சுரக்கிறது. இதனால் கார்னியாவின் மேற்புறம் உருவாகும் கெரட்டின் போன்ற பொருளைக் கரைப்பதற்காக சில்வர் நைட்ரேட் என்ற மருந்தைச் செலுத்துகிறேன். இது சிறிது நேரத்துக்கு வேலை செய்கிறது. ஆனால் நாள் முழுவதும் வேலை செய்யாது’’ என்கிறார். 24 மணி நேரமும் கண்களில் உறுத்தல்களோடு வாழ்ந்து வருகிறார் லாரா.

ஆண்டர்சன் கதைகளில் கண்ணீர், முத்துகளாக மாறுவதைப் போல இருக்கிறதே லாராவின் பிரச்சினை…

ஐரோப்பாவில் புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதில் மிகவும் பின்தங்கியிருந்த நாடு பிரிட்டன். அதைச் சரி செய்யும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று, நாய்களை வைத்து ரத்த மாதிரிகளில் இருந்து புற்றுநோயைக் கண்டறிவது. 6 ஹங்கேரியன் நாய்களுக்கு 6 மாதங்கள் பயிற்சியளிக் கப்பட்டன. அவற்றில் 2 நாய்கள் மிகக் கச்சிதமாகத் தங்கள் வேலைகளைச் செய்து வருகின்றன. ஆண்களுக்கு வரும் விந்துப்பை, சிறுநீரகப் புற்றுநோய்களைக் கண்டறிந்து சொல்லி விடுகின்றன. இதுவரை 3 ஆயிரம் மாதிரிகளைப் பரிசோதித்து, 93 சதவிகிதம் சரியாகச் சொல்லியிருக்கின்றன. ஒரு நாய் கண்டறிந்தததை இன்னொரு நாயிடம் காட்டி, உறுதி செய்துகொள்கிறார்கள். இதன் மூலம் புற்றுநோய் இல்லாதவர்கள் அநாவசியமாக பயாப்ஸி செய்து, வலியை அனுபவிக்க வேண்டியதில்லை. புற்றுநோய் இருப்பவர்கள் மேற்கொண்டு பயாப்ஸி மூலம் உறுதி செய்துகொண்டு, மருத்துவம் செய்துகொள்ளலாம். ரத்தம், சிறுநீர் மாதிரிகளை வைத்து, தன் மூக்கின் உதவியால் நோய் குறித்த தகவல்களை அளித்து விடுகின்றன நாய்கள்.

அடடா! ஒரு பிஸ்கெட்டுக்கு எவ்வளவு வேலைகளைச் செய்கின்றன இந்த நாய்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-லாராவின்-பிரச்சினை/article7518735.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.