Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: ஷாவியின் பயணம்!

 
masala_2626115f.jpg
 

ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் வசிக்கிறார் நீனா பரனோவ்ஸ்கா. ஒருநாள் இரண்டு கால்களும் உடைந்த நிலையில் கடுமையான வலியில் துடித்துக்கொண்டிருந்த நாயைப் பார்த்தார். உடனே வீட்டுக்கு அழைத்து வந்தார். கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்தார். ஷாவி என்று பெயரிடப்பட்ட அந்த நாய் மெதுவாக குணம் அடைந்தது. மிக புத்திசாலித்தனமாக நடந்துகொண்டது. எதையும் வேகமாகக் கற்றுக்கொண்டது. நீனாவுக்கு ஷாவி மீது அளவற்ற அன்பு இருந்தாலும் அவரது குறைவான வருமானத்தில் அம்மா, குழந்தை, 3 பூனைகள், 2 நாய்களை வளர்த்து வருவதே கடினமாக இருந்தது.

அவரால் சமாளிக்க முடியவில்லை. இணையதளத்தில் ஷாவியை யாராவது தத்தெடுத்துக்கொள்வீர்களா என்று வேண்டுகோள் விடுத்தார். 300 கி.மீ. தொலைவில் இருந்த நீனாவின் தோழி ஒருவர், ஷாவியை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். ஒருநாள் காரில் வந்து அழைத்தும் சென்றுவிட்டார். புதிய இடத்துக்குச் சென்ற ஷாவி, எதையும் உட்கொள்ளவில்லை. இயல்பாக இருக்கவில்லை. இரண்டாவது நாள் காணாமல் போய்விட்டது. நீனாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வேறோர் இடத்துக்குக் குடிபெயர்ந்திருந்தார். 300 கி.மீ. தூரத்தைக் கடந்து, 2 வாரங்களுக்குப் பிறகு ஷாவி சரியாகப் புதிய வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டது. ‘‘என்னால் நம்பவே முடியவில்லை.

ஒரு நாயால் இவ்வளவு தூரத்தை நினைவில் வைத்து, பயணம் செய்து வர முடியுமா? அதுவும் புதிய இடம் ஷாவிக்குத் தெரியாது. மனிதர்களின் அன்புக்குச் சிறிதும் குறைவானதில்லை விலங்குகளின் அன்பு. இனி என்ன கஷ்டம் வந்தாலும் நான் ஷாவியை விடப் போவதில்லை. ஷாவிக்கு அனுப்புவது பிடிக்கவில்லை என்று தெரிந்திருந்தால் அனுப்பி இருக்கவே மாட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டுத் திரும்பி வந்தபோது, ஷாவி கொஞ்சமும் கோபத்தைக் காட்டவில்லை. பாய்ந்து ஓடி வந்து அணைத்துக்கொண்டது” என்று நெகிழ்கிறார் நீனா.

ஷாவியின் பயணம் பிரமிப்பூட்டுகிறது!

ஜப்பானில் புதிய வகை சாக்ஸ் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘க்யூர்டெக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள சாக்ஸை அணிந்துகொண்டால் வியர்வையை உறிஞ்சிவிடும். நறுமணத்தை வெளியிடும். ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களிடமிருந்தும் காப்பாற்றும். காம்பி இன மரப்பட்டைகளில் இருந்து உருவாக்கப்பட்ட வாஷி காகித இழைகளால் இந்த சாக்ஸ் உருவாக்கப்படுகிறது. இது கிருமி நாசினியாகவும் துர்நாற்றத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது.

பாக்டீரியா, துர்நாற்றம், ஈரப்பதத்தை உறிஞ்சி, எப்பொழுதும் தூய்மையான சாக்ஸாகக் காட்சியளிக்கிறது. ‘‘இந்த சாக்ஸை அணிந்துகொண்டால் துர்நாற்றம் வருகிறது என்ற சங்கடமே ஏற்படாது. தன்னம்பிக்கையுடன் சாக்ஸைக் கழற்றாமல் எங்கும் செல்ல முடியும்’’ என்கிறார்கள் க்யூர்டெக்ஸ் நிறுவனத்தினர். கறுப்பு, சாம்பல் என 2 வண்ணங்களில் கிடைக்கின்றன. கால் விரல்களை எளிதாக நுழைக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஜோடி க்யூர்டெக்ஸ் சாக்ஸ் 1600 ரூபாய்.

துவைக்காவிட்டாலும் மூக்கை மூட வேண்டியதில்லை

பெய்ஜிங் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வகுப்புகளைக் கவனிப்பதற்கு வாடகைக்கு ஆட்களை நியமிக்கிறார்கள் மாணவர்கள். வாரத்துக்கு 5 வகுப்புகள், 2 வாரங்கள், ஒரு மாதம், 6 மாதங்கள் என்று தங்களுக்குப் பதில் வேறு ஆட்களை வாடகைக்கு நியமித்து, வகுப்புகளைக் கவனிக்க வைக்கிறார்கள். வாடகைக்கு வரும் மனிதர்களுக்கு மாணவர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கிறது. புகைப்படம் ஒட்டி, போலி அட்டைகளை அவர்களுக்கு வழங்கி விடுகிறார்கள்.

ஆங்கிலம், சீனம், தத்துவம் போன்ற வகுப்புகளுக்கு அதிக அளவில் வாடகை ஆட்கள் அமர்த்தப்படுகிறார்கள். மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக்கு வருகிறவர்கள் சம்பாதிக்கிறார்கள். இணையதளங்களில் 700 குழுக்கள் மாணவர்களுக்குப் பதிலாக வகுப்புகளைக் கவனிக்கும் பணிகளைச் செய்து வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் 200 முதல் 300 ஆட்கள் இருக்கிறார்கள். நிறைய மாணவர்கள் வகுப்பில் இருப்பதால், வாடகைக்கு வந்து அமர்பவர்களைக் கண்டுபிடிப்பது சிரமம் என்கிறார் ஒரு பேராசிரியர்.

அடப்பாவிகளா…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article7895383.ece

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: பிரிந்து செல்ல ஆலோசனை!

 
 
masala_2627811f.jpg
 

கார்வனா என்பது பழைய கார்களை விற்பனை செய்யும் ஓர் இணையதளம். இந்த நிறுவனம் நாணயத்தைப் போட்டால், கார் வழங்கும் வெண்டிங் மெஷினை 2 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டாவில் உருவாக்கியது. அந்த இயந்திரத்தில் மேலும் முன்னேற்றங்களைச் செய்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். உலகிலேயே நாணயத்தைப் போட்டு, காரை எடுத்துக்கொள்ளும் வெண்டிங் மெஷின் டென்னிஸியில் இப்போது இயங்கி வருகிறது. கண்ணாடியால் ஆன 5 மாடிக் கட்டிடம் ஒன்றில் 20 கார்கள் வரை அணிவகுத்து நிற்கின்றன. கார்வனா இணையதளத்தில் பார்வையிட்டு, நமக்குத் தேவையான காரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காரைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் இணையமே எடுத்துச் சொல்லிவிடும். காரையும் சுற்றிக் காண்பிக்கும். காருக்கான கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும். 7 நாட்களுக்குள் வெண்டிங் மெஷினுக்குச் செல்ல வேண்டும். அங்கே இருக்கும் ராட்சத நாணயத்தை மெஷினுக்குள் திணித்தால், நமக்கான கார் வெளியே வரும்.

‘‘நேரடியாக கார் வாங்குவதற்கும் வெண்டிங் மெஷின் மூலம் கார் வாங்குவதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் டெலிவரி செலவு இல்லை என்பதுதான். தானியங்கி இயந்திரம் என்பதால் மனிதர்களின் உழைப்பும் தேவை இல்லை, அவர்களுக்கான வருமானச் செலவும் இல்லை. ஒரு காருக்கு குறைந்தது 1 லட்சம் ரூபாயாவது வாடிக்கையாளர்களுக்குக் குறையும். வாடிக்கையாளர்களுக்கு வெண்டிங் மெஷின் மூலம் கார் பெறுவது நல்ல அனுபவமாக இருக்கும். கார்களை வாங்குவதும் எளிது. இன்னும் பல இடங்களில் கார் வெண்டிங் மெஷின்களை நிறுவும் எண்ணத்தில் இருக்கிறோம்’’ என்கிறார் கார்வனாவின் சி.இ.ஓ. எர்னி கார்சியா.

அட! பொம்மை கார்களைத் தந்துகொண்டிருந்த மெஷின்கள் நிஜ கார்களைத் தர ஆரம்பித்துவிட்டன!

அமெரிக்காவில் வசிக்கிறார்கள் ஐடென் டோனே, ஜெஸ்ஸி எமிலோ தம்பதியர். இருவருக்கும் நாய்கள் மீது அளவற்ற அன்பு. நாய்களின் கண்கள் சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள், காற்றில் கலந்து வரும் மாசுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நாய்களின் கண்களைக் காப்பாற்றுவதற்காக ரெக்ஸ் கண்ணாடிகளை உருவாக்கியிருக்கிறார்கள். பாலிகார்பனேட் லென்ஸுகளும் மென்மையான பிரேம்களும் கொண்ட இந்தக் கண்ணாடி நாய்களுக்கு நன்றாகப் பொருந்திக்கொள்கிறது. கண்களுக்குக் காற்றும் எளிதில் சென்று வருமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.

‘‘நாய்களுக்கான கண்ணாடியாக இருந்தாலும் மிகவும் அக்கறையோடு வடிவமைத்திருக்கிறோம். பனி சூழ்ந்த மலைப்பிரதேசமோ, சுட்டெரிக்கும் வெயில் பிரதேசமோ இந்தக் கண்ணாடியை அணிந்துகொண்டால் நாய்களின் கண்களுக்குப் பிரச்சினையே இல்லை. கண்ணாடியுடன் நாய்கள் நீரிலும் நீந்த முடியும். சாதுவான நாய்கள் எதிர்ப்புக் காட்டாமல் கண்ணாடியை ஏற்றுகொண்டு விடுகின்றன. சற்று முரட்டு நாய்களுக்குத்தான் ஏற்றுக்கொள்ள சில காலம் ஆகும்’’ என்கிறார் ஜெஸ்ஸி எமிலோ. ஒரு ஜோடி கண்ணாடிகள் 5,300 ரூபாய்.

மனிதனுக்குத்தான் செல்லப் பிராணிகள் மீது எத்தனை அன்பு...

‘தி பிரேக்அப் ஷாப்’ என்ற நிறுவனம் ஒன்று இணையத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கைத் துணைவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து செல்வது என்பது இருவருக்குமே மிகவும் வலி நிறைந்த விஷயம். ஒருவருக்கு ஒருவர் காயப்படுத்திக்கொள்ளாமல் பிரிந்து செல்லக்கூடிய வழிகளைச் சொல்வதோடு, அதைச் செய்தும் கொடுத்துவிடுகிறது இந்த பிரேக்அப் ஷாப். எப்படி, எவ்வளவு செலவு செய்து பிரிந்து செல்லும் முடிவை இன்னொருவருக்குத் தெரிவிப்பது என்பது அவரவர் விருப்பம். இமெயில் மூலம் தகவல் தெரிவிக்க 700 ரூபாய். கடிதம் என்றால் 1400 ரூபாய்.

தொலைபேசிக்கு 1900 ரூபாய். குக்கீஸ், வாழ்த்து அட்டை, சாக்லெட், டயரி, வீடியோகேம் போன்றவை அடங்கிய பரிசுப் பெட்டியுடன் 2 வைன் தம்ளர்களுடன் கூடிய நெஞ்சை உருக்கும் கடிதத்துடன் சொல்வதென்றால் 5,300 ரூபாய். இப்படிப் பிரிந்து செல்பவர்களுக்கு நிறுவனமே ஆளுக்கொரு பரிசுப் பெட்டியை வழங்குகிறது. இதில் கடந்த காலப் புகைப்படங்கள், பரிசுப் பொருட்கள், நகைகள், துணிகள் போன்றவற்றை அவரவருக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். கனடாவைச் சேர்ந்த சகோதரர்கள் மெக்கென்ஸியும் இவானும் இந்த இணையதளத்தை நடத்தி வருகிறார்கள்.

‘‘எங்கள் மூலம் பிரிந்து செல்பவர்களுக்குக் குறைந்த அளவே வலியும் வருத்தமும் இருப்பது போலப் பார்த்துக்கொள்கிறோம். இருவருமே ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு வராமல், என்றென்றும் நட்புடன் இருக்க வைக்கும் எங்களின் சேவை’’ என்கிறார் மெக்கென்ஸி.

புதிய தொழில்களுக்கு உலகில் பஞ்சமே இல்லை…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/article7899552.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒரிகாமி பாலம்!

 
 
masala_2629165f.jpg
 

சீனாவின் சுஸொவ் பகுதி கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படுகிறது. இங்கே 3 நாட்களில் காகிதங்கள் மூலம் ஒரு பாலம் உருவாக்கப்பட்டது. 54,390 காகிதங்களை வைத்து, 2,374 கிலோ எடைகொண்ட பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் காகிதங்கள் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களின் உதவியோடு நிற்கின்றன. ரேஞ் ரோவர் கார்களின் 45-வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக இந்தக் காகிதப் பாலம் உருவாக்கப்பட்டது. காகிதங்கள் பசையாலோ, போல்ட்களாலோ இணைக்கப்படவில்லை. நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 5 மீட்டர் நீளமுடைய இந்தக் காகிதப் பாலத்தின் மீது ரேஞ் ரோவர் கார் ஏறிச் சென்றது. இந்தக் காகிதங்கள் அனைத்தும் மறுசுழற்சி முறையில் உருவாக்கப்பட்டவை.

அட, ஒரிகாமி பாலம்!

ஜப்பானைச் சேர்ந்த மன்சன், செல்ஃபி எடுப்பதற்குப் புதிய வழியை உருவாக்கியிருக்கிறார். செல்ஃபி குச்சிகளைச் சற்று மாற்றி, நீண்ட செயற்கைக் கைகளாக உருவாக்கியிருக்கிறார். ‘செல்ஃபி கைகள்’ என்று பெயரும் வைத்திருக்கிறார். ‘‘பொதுவெளியில் செல்ஃபி குச்சிகளைப் பயன்படுத்துவதற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதனால் குச்சிகளை நீண்ட கைகளாகச் செய்தேன். அவற்றை என் கைகளில் பொருத்திக்கொண்டேன். இந்தச் செயற்கைக் கைகளின் நீளத்தை மறைப்பதற்கு நீண்ட கை வைத்த சட்டையைத் தைத்துக்கொண்டேன். செல்ஃபி குச்சிகளை விட இது மிக வசதியாக இருக்கிறது. செல்ஃபி குச்சியைப் போலத் தனியாகத் தூக்கிச் செல்ல வேண்டிய தொல்லை இல்லை. இதை நான் அதிக அளவில் உருவாக்க எண்ணவில்லை. யாராவது விரும்பி வேண்டும் என்று சொன்னார்கள் என்றால் அவர்களுக்கு மட்டும் உருவாக்கித் தர திட்டமிட்டிருக்கிறேன்’’ என்கிறார் மன்சன்.

இப்படியெல்லாம் செல்ஃபி எடுக்கலைன்னு யாருங்க வருத்தப்பட்டுட்டு இருக்காங்க?

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் மர்மப் பள்ளங்கள் அதிகரித்து வருகின்றன. 2013-ம் ஆண்டு ஹெலிகாப்டரில் பயணித்த பைலட்டுகள் யாமல் பகுதியில் மர்மப் பள்ளங்களைக் கண்டுபிடித்தனர். சில நாட்களில் மேலும் சில பள்ளங்கள் தென்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராட்சச பள்ளம் ஒன்றும் அதைச் சுற்றிலும் ஏராளமான சிறிய பள்ளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சில பள்ளங்கள் ஏரிகளாக மாறிவிட்டன. இன்னும் 30 பள்ளங்களாவது இந்தப் பகுதியில் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். நிரந்தர பனிப்பிரதேசங்கள் பூமி வெப்பம் அடைவதால் உருகி வருகின்றன. அவற்றின் உள்ளே இருக்கும் மீத்தேன் வாயு வெடித்து வெளியே வரும்போது இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுவதாகச் சில நிபுணர்கள் சொல்கிறார்கள். இதைச் சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். நிரந்தர பனி இருக்கும் பகுதிகளில் 200 மீட்டர் ஆழத்தில் மீத்தேன் நிலைகொண்டிருப்பதில்லை. ஆர்டிக் மற்றும் ஆர்டிக் சார்ந்த இடங்களில் இருக்கும் பிங்கோ திட்டுகளையும் பள்ளங்களையும் உதாரணமாகச் சொல்கிறார்கள். பல்வேறு ஆய்வாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இன்னும் இந்தப் பள்ளங்கள் ஏன் உருவாகின்றன என்பதற்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால் இவை மிக முக்கியமான பிரச்சினைகள். விரைவில் ஆராய்ந்து, உலகத்துக்கு ஏற்பட இருக்கும் இயற்கைப் பேரழிவில் இருந்து மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார் மாஸ்கோவின் ஆராய்ச்சியாளர் வசில் போகோயவ்லென்ஸ்கி.

இன்னும் விலகாத மர்மம்…

வீரியம் மிக்க புற்றுநோய் செல்களைக் கண்டுபிடிப்பதில் பறவைகளும் தேர்ச்சி பெற்றவையாக இருக்கின்றன. அதிலும் புறாக்கள் மார்பகப் புற்றுநோய்களை மிகச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிடுகின்றன. மேமோகிராம், பயாப்ஸி முடிவு களை புறாக்களிடம் காட்டியபோது, அவை சரியாகக் கண்டுபிடித்திருக் கின்றன. விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்து விட்டனர். 15 நாட்கள் புறாக்களை வைத்துப் பரிசோதித்தபோது, 85 சதவீதம் சரியாகப் புறாக்கள் கணித்திருப்பது தெரியவந்தது. ‘‘நல்ல உணவும் பயிற்சி யும் அளித்தால் புறாக்கள் மனிதர்களைப் போல வேலை செய்யக்கூடி யவை’’ என்கிறார் பேராசிரியர் லெவென்சன். 8 புறாக்களை வைத்து இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. புற்றுநோய் செல்களைப் பார்த்து, நீலம் மற்றும் மஞ்சள் பட்டன்களை அழுத்தி, தங்கள் கண்டு பிடிப்பைத் தெரிவித்தன புறாக்கள். ஒவ்வொரு பரிசோதனைக்குப் பிறகும் புறாக்களுக்கு நல்ல உணவு பரிசாகக் கொடுக்கப்பட்டன.

ஆச்சரியம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article7903354.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஆபத்தை ஏன் விலை கொடுத்து வாங்கணும்?

 
 
newzealand_2629796f.jpg
 

லகிலேயே மிக ஆபத்தான பாலங்களில் ஒன்றாக இருக்கிறது ரஷ்யாவின் குவாடின்ஸ்கை பாலம். விடிம் நதி மீது 570 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம், 2 மீட்டர் அகலமே கொண்டது. பாலத்தின் இருபக்கங்களிலும் தடுப்புச் சுவர்களோ, கம்பிகளோ இல்லை. சற்றுத் தடுமாறினாலும் கீழே உறைந்திருக்கும் ஆற்றில் விழவேண்டியதுதான். இரும்புக் கம்பிகள் மீது மரப் பலகைகளை வைத்து, பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாலம் கட்டப்பட்டாலும் முறையாகத் திறந்து வைக்கப்படவில்லை. அருகில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 1500 குடும்பங்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. பாலம் கட்டி முடிக்கப்பட்ட இந்த 30 வருடங்களில் ஒருமுறைகூட பாதிப்புகளைச் சரி செய்ததில்லை. இந்த ஆபத்தான பாலத்தில் கார், பெரிய ட்ரக் போன்ற வாகனங்கள் வந்து செல்கின்றன. சிறிது சக்கரங்கள் நகர்ந்தாலும் ஆற்றில் விழவேண்டிய ஆபத்து தெரிந்தாலும் மக்கள் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. மன தைரியமுடைய மிகச் சிறந்த வாகன ஓட்டிகளே இந்தப் பாலத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதால், விபத்துகள் நிகழ்வதில்லை என்பது ஆறுதலானது.

ஆபத்தை ஏன் விலை கொடுத்து வாங்கணும்?

னடாவில் வசிக்கிறார்கள் லெஸ்லி, டக் ஃபேஸி தம்பதியர். கஸகிஸ்தானில் வசிக்கும் 4 வயது கிரில் என்ற சிறுவனை மிகவும் விரும்பி தத்தெடுத்திருக்கிறார்கள். கிரிலுக்குப் பிறக்கும்போதே ஒரு கை இல்லை. குறைபாடு காரணமாக அவனது பெற்றோர், காப்பகத்தில் விட்டுவிட்டனர். கனடா திரும்பிய கிரிலுக்கு விமான நிலையத்தில் ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஃபேஸியின் தந்தை கிறிஸ் ஒரு கையோடு, பொம்மைகளைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். கிரிலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கிறிஸ் கீழே உட்கார்ந்து, ஒரு கையை நீட்டி, கிரில்லை வரவேற்றார். ’’என்னைப் போலவே என் பேரனும் ஒரு கையுடன் இருக்கிறான். இந்தக் கையை வைத்தே என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும். உனக்கு இன்னொரு கையாக இந்தக் குடும்பம் இருக்கும்’’ என்று கிறிஸ் கூறியதைக் கேட்டு அனைவரும் நெகிழ்ந்து போய்விட்டனர்.

கிரில்லுக்கு எவ்வளவு அன்பான குடும்பம் கிடைத்துவிட்டது!

மெரிக்காவில் உணவு, மருந்து கழகம் மரபணு மாற்றப்பட்ட ஒரு மீனை, உணவில் சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட சாலமன் மீன்கள் 2018-ல் விற்பனைக்கு வர இருக்கின்றன. அட்லாண்டிக் சாலமன் மீன்கள் முதிர்ச்சியடைவதற்கு 3 ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன. மரபணு மாற்றத்தின் மூலம் ஒன்றரை ஆண்டுகளில் சாலமன்கள் முதிர்ச்சியடைந்து விடுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். இயற்கை ஆர்வலர்களோ மரபணு மாற்றம் செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மரபணு மாற்றம் ஏற்படும்போது சாலமன் மீன்களின் இயல்பான தன்மையே மாறிவிடும். சூழலும் மாறும். பிற உயிரினங்களும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கிறார்கள்.

மனிதனால் இன்னும் என்னென்ன விளைவுகளை இந்தப் பூமி சந்திக்க இருக்கிறதோ…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7905315.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நிஜ பார்பி பெண்!

 
barbie_2476597f.jpg
 

28 வயது டச்யானா டஸோவா ரஷ்யாவைச் சேர்ந்தவர். இவருக்கு லிவிங் பார்பி, ரியல் டால் போன்ற செல்லப் பெயர்களும் உண்டு. ஒரு பார்பி பொம்மை உயிரோடு வலம் வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறார் டச்யானா. தலைமுடி, முக ஒப்பனை, ஆடைகள் என அனைத்தையும் பார்பியைப் போன்றே மாற்றிக்கொண்டார். அவரது அறை, படுக்கை, கார் அனைத்தும் இளம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கின்றன.

‘‘12 வயதில் ஒரு பார்பி பொம்மை எனக்குக் கிடைத்தது. அன்று முதல் பார்பியின் மேல் அளவுக்கு அதிகமான ஆர்வம் வந்துவிட்டது. வளர, வளர என்னை பார்பியாகவே நினைத்துக்கொண்டேன். இன்று எல்லோரும் என்னை நிஜ பார்பி என்று அழைக்கும்போது, நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போய்விட்டன’’ என்கிறார் டச்யானா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், குழந்தைகள் பார்ட்டிகள் என்று எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறார்.

உடலை வருத்தி ஒரு பார்பியாக இருப்பதை விட, ஒரு சாதாரண டச்யானாவாக இருப்பதில் என்ன கஷ்டமோ?

ஆட்ரி ஹெப்பர்ன் உலகப் புகழ்பெற்ற நடிகையாகவும் மாடலாக வும் திகழ்ந்தவர். ஆஸ்கர், கோல்டன் க்ளோப் உள்ளிட்ட பல விருது களைப் பெற்றவர். பிற்காலத்தில் யுனிசெஃப் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு, பணியாற்றி வந்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் அளித்து வந்தார். பலவிதங்களிலும் வித்தியாச மானவராக இருந்த ஆட்ரி ஹெப்பர்னைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார் அவரது மகன் லுகா டோட்டி.

‘‘என் அம்மா மிகப் பெரிய நடிகை என்றோ, புகழ்பெற்ற மாடல் என்றோ எங்களுக்குத் தெரியாது. ஆடம்பர வாழ்க்கை நாங்கள் வாழவில்லை. எத்தனையோ பிரபலங்கள் அம்மாவைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் பிரபலங்கள் என்று தெரியாது. அம்மாவின் நண்பர்கள் என்றுதான் நினைத்திருக்கிறோம். மிக எளிமையான அம்மாவாக மட்டுமே அவர் எங்களிடம் நடந்துகொண்டார். விதவிதமாகச் சமைத்துப் போடுவார்.

அம்மா என்றாலே அன்பு, உணவு, நண்பர்கள் மூன்று மட்டுமே எங்கள் நினைவுக்கு வருகின்றன. பொதுவாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மிகப் பெரிய இடைவெளியை வைத்திருந்தார். யுனிசெஃப் வேலைகள், பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுதல் என்று எப்பொழுதும் பரபரப்பாகவே இருப்பார். அம்மா இறந்த பிறகுதான் அவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பது எங்களுக்குத் தெரிந்தது’’ என்கிறார் லுகா.

உருவத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் மிக அழகான பெண்மணி!

கனடாவைச் சேர்ந்த தம்பதியர் ஜெனிவிவ் எபன் ஸ்டோல்ஸ். 5 வயது அரியாவும் 2 வயது எல்லியாவும் இவர்களது மகள்கள். கடலில்தான் இந்தச் சிறிய குடும்பம் வசிக்கிறது. நீச்சல், அலை விளை யாட்டு, படகு விளையாட்டு, நீர் விளையாட்டுகள் என்று எப்பொழுதும் சாகசமான விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடலில் வசிக்கும் டால்பின்கள்தான் அரியா, எல்லியாவின் நண்பர்கள். ஜெனிவிவ் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அந்த வேலை அலுப்பூட்டியது.

உடனே ராஜினாமா செய்தார். ஸ்டோல்ஸைத் திருமணம் செய்துகொண்டு, சேமிப்பை வைத்து ஒரு படகு வாங்கினார். அதில் ஒரு குடும்பம் வசிப்பதற்கான எல்லா வசதிகளும் இருந்தன. நிலத்தை விட்டு, நீருக்குள் குடிபுகுந்தனர். இரு குழந்தைகளின் பிரசவத்துக்கு மட்டுமே இருவரும் கனடா திரும்பினார்கள். கடலில் வசித்தாலும் குழந்தைகள் படிக்கிறார்கள்.

ஸ்டோல்ஸ் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்த அனுபவத்தில், மகள்களுக்கு ஆசிரியராகி விட்டார். ‘‘வெளியில் இருந்து பார்க்க அலுப்பூட்டும் நீர்ப்பரப்பாகத் தெரிந்தாலும் கடல் ஏராளமான பொக்கிஷங்களை ஒளித்து வைத்திருக் கிறது. ஒவ்வொன்றையும் தேடிப் பார்ப்பதும், அறிந்துகொள்வதும், புத்தகமாக எழுதுவதும் சுவாரசியமாக இருக்கிறது’’ என்கிறார் ஸ்டோல்ஸ். கப்பல்கள், படகுகளில் வரும் மனிதர்களுக்கு ஏதாவது வேலை செய்துகொடுத்து, சம்பாதிக்கவும் செய்கிறார் ஜெனிவிவ்.

ஒவ்வொரு நொடியும் இயற்கையுடன் போராடும் சாகசக் குடும்பம்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/article7433411.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாம்பு ஃப்ரண்ட்!

 
masala_2474874f.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கிறார் ராப் கவான். இவர் ஒரு பாம்பு ஆர்வலர். 19 பாம்புகளை வளர்த்து வருகிறார். அதிலும் ஆஸ்டின் என்ற மஞ்சள் நிற மலைபாம்புதான் அவரது செல்லப் பிராணி. 82 கிலோ எடை கொண்ட ஆஸ்டின் பிறந்து 10 மாதங்களே ஆகின்றன.

ஆஸ்டினின் நெருங்கிய தோழி ராப்பின் இரண்டு வயது அலிஷா மே. ஆஸ்டினையும் அலிஷாவையும் தன் மகன், மகள் போலவே வளர்த்து வருகிறார் ராப். 15 அடி நீளம் கொண்ட ஆஸ்டின் தோட்டம், வீடு என்று எங்கும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது. அலிஷாவோ தினமும் ஆஸ்டின் பாம்புக்கு முத்தம் கொடுத்து, குட்நைட் சொல்லிவிட்டுத்தான் தூங்கச் செல்கிறாள்.

கொஞ்சம் நடுங்கத்தான் செய்யுது ராப்…

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 19 வயது பாடகர் ஜேம்ஸ் மெக்எல்வர். ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, லண்டனிலிருந்து கிளாஸ்கோவுக்குச் செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அவருடைய குழுவினர் ஏற்கெனவே விமானத்துக்குள் சென்று விட்டனர். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக எடை வைத்திருந்தார். அதற்காக அதிகமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் ஜேம்ஸிடம் பணம் இல்லை. நண்பர்களும் அருகில் இல்லை.

என்ன செய்வது என்று யோசித்தார். வேகமாகக் குளியலறைக்குச் சென்றார். ஒவ்வொரு துணியாக எடுத்து, ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் போட்டுக்கொண்டார். இப்படி 12 சுற்றுத் துணிகளைச் சுற்றிக்கொண்டார். 6 சட்டைகள், 4 டிசர்ட்கள், 3 ஜீன்ஸ், 2 கால் சட்டைகள், ஒரு கோட், 2 தொப்பிகள் இவற்றில் அடக்கம். அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. விமானத்தில் ஏறி, தன் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அவரது உடல் வெப்பத்தால் கொதிக்க ஆரம்பித்தது. கிளாஸ்கோ விமான நிலையத்தில் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் ஜேம்ஸ்.

ஐயோ… பாவமே…

ஜப்பானில் கொசுக்களை ஒழிப்பதற்கு ஸ்ப்ரே, வலை என்று என்னெ ன்னவோ பயன்படுத்திப் பார்த்துவிட்டனர். ஆனால் முற்றிலுமாகக் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. பிபி லேப் என்ற நிறுவனம் கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் புதிய வகை ஆடைகளை உருவாக்கியிருக்கிறது. இந்த ஆடை தலை முதல் கால் வரை, உடலைச் சுற்றி மூடிவிடுகிறது.

இந்த ஆடைய அணிந்துகொண்டு வீட்டிலும் இருக்கலாம், வெளியிலும் செல்லலாம் என்பது கூடுதல் சிறப்பு. மென்மையான ஆடை முழுவதும் மிகச் சிறிய துளைகள் இருப்பதால் சுவாசிக்கவும் எளிதானது. கை, கால், தலை என்று ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனி ஜிப்கள் தைக்கப்பட் டிருக்கின்றன. வேகமாகப் பிரிக்கலாம், மடக்கலாம். மூன்று வண்ணங் களில் கிடைக்கின்றன. இந்த ஆடையின் விலை 3,400 ரூபாய்.

கொசுத்தொல்லைக்கு இது நிரந்தர தீர்வாக இருக்குமா…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/article7428759.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாடம் சொல்லித் தந்த பறவை!

 
masala_2632039f.jpg
 

அடர்ந்த பனி நிறைந்த பகுதிகளில் விமானங்கள் பறக்கும்போது பனியால் மூடப் பட்டு விபத்துக்கு உள்ளாகின் றன. இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள் கின்றன. இந்தப் பிரச்சினைக் குத் பெங் குயின்களிடமிருந்து ஒரு தீர்வை கண்டுபிடித்திருக் கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பெங்குயின்களின் இறகில் ஒருவித எண்ணெய் சுரப்பதால் அவை நீந்தும்போது உடலில் தண்ணீர் ஒட்டிக்கொள்வதில்லை. அதேபோல மைனஸ் 40 டிகிரி செல்சியஸுக்கு வெப்பநிலை போனாலும் பெங்குயின்களின் உடலில் மட்டும் பனி படர்வதில்லை. இதற்கும் காரணம் அந்த எண்ணெய்ச் சுரப்புதான். பெங்குயின் வால் பகுதியில் இருந்து சுரக்கும் எண்ணெய், அப்படியே இறக்கைகளுக்குப் பரவி விடுகிறது.

இந்த நுட்பத்தை விமானங்களின் இறக்கைகளில் செயல்படுத்தினால், பனிப் பிரதேசங்களில் விமானங்கள் பறந்து செல்லும்போது பனியால் மூடப்படாது. விபத்துகளையும் தடுக்க இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெங்குயின் இறகுகளைச் சேகரித்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். விமானங்களின் இறக்கைகளிலும் நீர்விலக்கியாக பெங்குயின் எண்ணெயைப் போல ஒரு பொருளைப் பயன்படுத்த இருக்கிறார்கள்.

பறக்க இயலாத பறவை, பறக்கும் விமானத்துக்குப் பாடம் சொல்லித் தந்திருக்கிறது!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மெக்கார்தி புதிய உடற்பயிற்சி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அதாவது இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் பயன்படுத்தி விலங்குகளைப் போல நடந்து செல்ல வேண்டும். ‘‘நான்கு கால் பிராணிகளைப் போல நடந்து செல்வது உடலுக்கு மிகச் சிறந்த பயிற்சி. மற்ற உடற்பயிற்சிகளைப் போல இது ஒன்றும் எளிதான செயல் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் வேறு எந்த உடற்பயிற்சியை விடவும் இந்தப் பயிற்சி உடலுக்கு மிகச் சிறந்த முறையில் நன்மை விளைவிக்கிறது. கைகளையும் கால்களையும் கொண்டு நடந்து செல்லும்போது அனைத்துப் பகுதிகளுக்கும் பயிற்சி கிடைக்கிறது. தலை, கழுத்து, கைகள், உடல், கால்கள், விரல்கள் என்று ஒட்டு மொத்த உடலும் வேலை செய்கின்றன. அதனால் ஓடுவது, நடப்பது போன்ற பயிற்சிகளை விட இது சிறந்தது. கலோரிகள் வேகமாகக் கரைந்துவிடுகின்றன.

தொடைகளில் இருக்கும் அதிகப்படியான சதைகளைக் கரைக்க வேண்டும் என்றால் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்வது நல்லது’’ என்கிறார் மெக்கார்தி. இதை மற்ற உடற்பயிற்சி நிபுணர்கள் மறுக்கிறார்கள். ‘‘உடல் முழுவதுக்கும் பயிற்சி தரக்கூடிய உடற்பயிற்சிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. மெக்கார்தியின் பயிற்சியில் அபாயம் அதிகம். கழுத்து சுளுக்கிக்கொள்ளும். வேகமாகச் செல்லும்போது மூக்கு உடைந்துவிடலாம். கைகளால் நடக்கும்போது காயம் ஏற்படலாம். தோள்களுக்குக் கடுமையான வலி உண்டாகும். மனிதன் ஏன் விலங்குகளைப் போல நடக்க வேண்டும்? மனிதனுக்கு உரிய உடற்பயிற்சிகளைச் செய்தாலே ஆரோக்கியமாக வாழலாம்’’ என்கிறார்கள். பாதுகாப்பான கையுறை, மெதுவாகச் செல்வது போன்றவற்றைக் கடைபிடித்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்கிறார் மெக்கார்தி.

எங்கிருந்துதான் இப்படியெல்லாம் யோசனை உதிக்குதோ…

சீனாவின் குன்மிங் பகுதியில் உணவு விடுதி நடத்தி வருகிறார் வாங். கடந்த மாதம் இரவில் காரை விடுதிக்கு வெளியே நிறுத்திவிட்டு, சென்றுவிட்டார். அதிகாலை அவர் வெளியே வந்தபோது காரின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சியடைந்த வாங், அருகில் இருக்கும் காவலாளிகளை விசாரித்தார். ஒருவருக்கும் யார் இப்படிச் செய்தது என்று தெரியவில்லை. காவல்துறையில் புகார் அளித்தார் வாங். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் பார்த்தனர். வெள்ளை காரில் இறங்கிய ஒருவர், நீண்ட குடையால் கார் கண்ணாடிகளை உடைப்பது தெரிந்தது.

ஆனால் அந்த ஆளின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. இன்னும் பல வழிகளில் முயன்றும் குற்றவாளி மட்டும் அகப்படவில்லை. குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாததால் வாங் மிகவும் மனம் உடைந்து போனார். எப்படியும் அந்தக் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார். பாதாளக் கடவுளிடம் முறையிட முடிவு எடுத்தார். ஒரு பெரிய தாளில் 4 மோசமான விதங்களில் குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும் என்று எழுதி, கார் மீது ஒட்டினார். மெழுகுவர்த்திகளை ஏற்றினார். கோழி படையல் இட்டார். இன்றுவரை குற்றவாளி யார் என்பதும், அவனை பாதாளக் கடவுள் தண்டித்தாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் வாங் மனத்தைத் தேற்றிக்கொண்டு, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்.

அடப் பாவமே…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/article7911756.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நாய்களுக்காக எல்லாச் சொத்துக்களையும் செலவிட்ட பணக்காரர்!

 
masala_2633215f.jpg
 

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் வசிக்கிறார் 29 வயது வாங் யான். இரும்புத் தொழிற்சாலை நடத்தி, மிகப் பெரிய பணக்காரராக 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார். ஆனால் இன்று அவர் பெயரில் சிறிதும் பணம் இல்லை. அத்தனை சொத்தையும் தெரு நாய்களை காப்பாற்றுவதற்காகச் செலவிட்டிருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு யானின் செல்ல நாய் ஒன்று காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர் ஒருவர் கசாப்புக் கடைகளில் தேடிப் பார்க்கச் சொன்னார். அப்படிச் சென்றபோது ஒரு நாயை கொல்லும் காட்சியைக் கண்டார்.

மிகவும் மனம் உடைந்து போனார். அன்று முதல் தெருவில் சுற்றித் திரியும் நாய்களில் இருந்து கசாப்புக் கடைகளுக்கு வரும் நாய்கள் வரை காப்பாற்றி வருகிறார். இதற்காக நிறைய பணம் செலவு செய்து ஒவ்வொரு நாயையும் மீட்டு வருகிறார். நாய்களைத் தங்க வைப்பதற்கான இடமாகத் தன்னுடைய தொழிற்சாலையை மாற்றிவிட்டார். நாய்கள் காப்பகம் என்று பெயரும் வைத்துவிட்டார். சிலர் தாங்களாகவே நாய்களைக் கொண்டு வந்து இங்கே விட்டுவிடுகிறார்கள். இதுவரை 215 நாய்களை வைத்துப் பராமரித்து வருகிறார். நாய்களுக்கான உணவு, மருந்து, நாய்களைப் பராமரிப்பவர்களுக்குச் சம்பளம் என சொத்து முழுவதும் கரைந்துவிட்டது.

ஆனாலும் நன்கொடையாகப் பணம் பெற மறுத்து வருகிறார் யான். நாய்களுக்குத் தேவையான கட்டிடம் கட்டுவதற்குப் பொருளாகக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார். எதிர்காலத்தில் 1000 நாய்களாவது இங்கே பராமரிக்கும் நிலை உருவாகலாம் என்கிறார். ‘பணக்காரனாக இருந்ததைவிட இன்று நாய்களைப் பராமரிப்பவனாக, அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வோம் என்று யோசிப்பவனாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது’ என்கிறார் யான்.

எதில் மகிழ்ச்சி என்பதை யாரால் சொல்லிவிட முடியும்?

இங்கிலாந்தில் வசிக்கும் ஜோன் மர்பி வீட்டுக்குத் தேவையான 24 பொருள்கள் கொண்ட கிச்சன் செட் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தார். ஜோனின் வீட்டு வாசலில் ஒரு பெரிய ட்ரக் வந்து நின்றது. ட்ரக் முழுவதும் பெரிய, பெரிய அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. சேமிப்புக் கிடங்குக்குப் பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள் என்று நினைத்தார் ஜோன். ஒரு ட்ரக் முழுவதும் இருந்த பெட்டிகள் அனைத்தும் ஜோனின் வீட்டுக்குள் வைக்கப்பட்டன. அந்த அறையே ஒரு கிடங்காக மாறிவிட்டது. 24 பொருட்களுக்கு 48 ராட்சச பெட்டிகளில் வைத்து, பாதுகாப்பு என்ற பெயரில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ‘’ஒரு சின்ன ஸ்பூனுக்கு இத்தனை பெரிய அட்டைப் பெட்டி என்பதை எல்லாம் சகிக்க முடியவில்லை. பெட்டியைத் திறந்து பொருட்களை எடுப்பதற்குள் சோர்ந்து போய்விட்டோம். வீடே அட்டைப் பெட்டிகளும் காகிதங்களுமாகக் காட்சியளிக்கிறது. இதில் 5 பாத்திரங்கள் உடைந்துவிட்டன. புகார் அளித்து, இந்த அட்டைப் பெட்டிகளைச் சுத்தம் செய்யவேண்டும் என்றும் உடைந்த பாத்திரங்களுக்கு வேறு பாத்திரங்கள் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்’’ என்கிறார் ஜோன்.

குறைந்த காகிதங்களில் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்பது கூடவா தெரியாது?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/article7915461.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நீ பாதி... நான் பாதி...!

 
 
masla_2634447f.jpg
 

தொலைதூரத்தில் இருக்கும் உறவுகள் துயரமானவை. ஆனால் கொரியாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, இந்தப் பிரச்சினையை வேறுவிதமாகக் கையாண்டிருக்கிறது. டான்பின் ஷின், சியோக் லி தம்பதியர் புகைப்படக் கலைஞர்கள். ஒருவர் நியுயார்க்கிலும் இன்னொருவர் சியோலிலும் வசிக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே 14 மணி நேர வித்தியாசம். இருவரும் அவரவர் இடங்களில் ஒரே நேரத்தில், ஒரே மாதிரி புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பிறகு இந்த இரு படங்களையும் ஒன்றாக இணைக்கிறார்கள். வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட படங்களில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறார்கள்.

நாடு, நகரம், சூழல் மாறினாலும் இருவரும் ஒன்றாக இருப்பது போல படங்களை உருவாக்குகிறார்கள். இந்தக் கலைக்கு ‘ஷின்லி ஆர்ட்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய ஷின்லி ஆர்ட் படங்களுக்கு இணையத்தில் உலகம் முழுவதிலுமிருந்து மிகப் பெரிய வரவேற்பும் வாழ்த்துகளும் குவிகின்றன.

நீ பாதி… நான் பாதி… என்று பெயர் வைத்திருக்கலாம்!

ஃபோர்ட் நிறுவனம் ‘டிரக் டிரைவிங் சூட்’ ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் போதைப் பொருட்களை எடுத்துக்கொண்டு, வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். இதனால் உலகம் முழுவதும் விபத்துகள் நிகழ்கின்றன, ஏராளமானோர் உயிரிழந்து விடுகிறார்கள். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த சூட் உருவாக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி, ஹெட்போன், கால், கை முட்டிகளுக்குப் பட்டைகள் என்று இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதை அணிந்துகொண்டு காரை இயக்குவது மிகக் கடினமானது. கண்ணாடி தெளிவான பிம்பத்தைக் காட்டாது. குகைக்குள் செல்வது போலக் காட்டும். ஹெட்போனில் அளவுக்கு அதிகமாகச் சத்தம் வெளிப்படும். கை, கால் முட்டிகளில் கட்டப்பட்டுள்ள பட்டைகள் எளிதாக அசைக்க முடியாதபடி செய்துவிடும். மொத்தத்தில் இந்த சூட் அணிந்து காரை ஓட்டவே முடியாது. இப்படித்தான் போதைப் பொருட்களை எடுத்துக்கொண்டு, வாகனங்களை ஓட்டுவதும் என்று சொல்கிறார்கள். “இந்த சூட் அணிந்து என்னால் சிறிது தூரம் கூட செல்ல இயலவில்லை. போதைப் பொருள் எடுத்துக்கொண்டு ஓட்டுவது எவ்வளவு மோசமானது என்பதை அறிந்துகொண்டேன்” என்கிறார் ஓர் ஓட்டுநர். ஜெர்மனியில் உள்ள மேயர் ஹெண்ட்ஷெல் இன்ஸ்டிடியூட் உருவாக்கியுள்ள டிரைவிங் சூட் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

நல்ல விஷயம்…

பெய்ஜிங்கில் உள்ள சான்யுவான் பாலத்தை இடித்து, 43 மணி நேரங்களில் புதிய பாலத்தைக் கட்டி முடித்திருக்கிறார்கள். பாலத்தின் கட்டுமானப் பணிகள் வீடியோவாக இணையத்தில் வெளியிடப்பட்டது. சில நாட்களுக்குள் 15 லட்சம் மக்கள் பார்வையிட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் இந்தப் பணியைச் செய்ய 5 ஆண்டுகள் ஆகியிருக்கும், 3 மடங்கு செலவு அதிகரித்திருக்கும். பிரான்ஸில் 2 முதல் 5 ஆண்டுகளில் இந்தப் பணியைச் செய்து முடித்திருப்பார்கள். பிலிப்பைன்ஸில் 7 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று பல நாட்டைச் சேர்ந்தவர்களும் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சீனக் கட்டுமான நிறுவனமோ, “24 மணி நேரத்தில் கட்டி முடிப்பதாக உறுதியளித்திருந்தோம். எங்களால் அதைச் செய்து முடிக்க முடியவில்லை. 43 மணி நேரங்களை எடுத்துக்கொண்டோம்” என்று கூறியிருக்கிறது. பாலத்துக்குத் தேவையான உத்திரம், தூண்கள் போன்ற பல பாகங்களும் ஏற்கெனவே செய்து தயாராக இருந்ததால், இத்தனை விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

அசத்துகிறார்கள் சீனர்கள்!

இங்கிலாந்தில் வசிக்கும் ஜேன், ஒரு முட்டையை உடைத்து வாணலியில் ஊற்றிய உடன் அலறினார். அவரது கணவர் கிறிஸ் ஓடி வந்து பார்த்தபோது, வாணலியில் உடைத்த முட்டைக்குள் ஒரு மஞ்சள் கருவும் ஒரு முட்டையும் இருந்தன. ஒரு முட்டைக்குள் 2 மஞ்சள் கருக்கள் அரிதாக இருப்பதுண்டு. ஆனால் ஓடுடன் கூடிய முழு முட்டை இருந்தது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. முட்டைக்குள் இருந்த முட்டையை உடைத்தபோது, மஞ்சள் கரு இல்லை. வெள்ளைக் கரு மட்டுமே இருந்தது என்கிறார் கிறிஸ்.

ஒரு முட்டை காசில் இரண்டு முட்டைகள்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/article7918830.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இரட்டை அந்நியர்கள்!

ladieas_2636448f.jpg
 

லகத்தில் ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று சொல்வார்கள். அயர்லாந்தைச் சேர்ந்த நியாம் ஜியானே ’இரட்டை அந்நியர்கள்’ என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். ஒருவரைப் போல இருக்கும் இன்னொருவரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேலையை இவரது இணையதளம் செய்து வருகிறது. இதற்காக கட்டணமும் வசூலிக்கிறார். நியாம் தன்னைப் போல இருக்கும் ஒருவரை 28 நாட்களுக்குள் கண்டுபிடித்துவிட்டார். கரென் பிரனிகன் என்பவர் நியாம் வசிக்கும் இடத்தில் இருந்து ஒரு மணி நேரப் பயணம் செய்யும் தூரத்தில்தான் இருந்தார். இருவரும் நேரில் சந்தித்தனர். ‘’என்னால் நம்பவே முடியவில்லை. அச்சு அசலாக என்னைப் போலவே இருந்தார் கரென். சின்னச் சின்ன அசைவுகள் கூட எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்ததைக் கண்டு எனக்கு ஆனந்த அதிர்ச்சி. ஒரே மாதிரி உடை அணிந்து, தலை வாரி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். என் வாழ்நாளில் அருமையான தருணம் அது.

என்னைப் போல வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேட ஆரம்பித்தேன். ஒரே வாரத்தில் லூயிசா கைஸார்டி கிடைத்தார். இருவரும் நேரில் சந்தித்தோம். லூயிசாவின் அம்மாவுக்கு என்னையும் லூயிசாவையும் தூரத்தில் இருந்து பார்க்கும்போது வித்தியாசமே தெரியவில்லை என்றார். நான் செய்யும் பல செயல்களை லூயிசாவும் செய்தது கண்டு அசந்து போனேன். இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஒருவேளை 7 பேர் உண்மையிலேயே ஒரே மாதிரியாக இருப்பார்களோ என்ற நம்பிக்கை வந்தது. மீண்டும் தேடினேன். சில வாரங்களுக்குப் பிறகு ஐரேன் ஆடம்ஸைக் கண்டுபிடித்தேன். அவரும் அயர்லாந்தில்தான் வசிக்கிறார்.

அவருடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது ஒரே உருவத்தில் 4 பேர் ஒரே நாட்டிலேயே வசிக்கிறோம் என்பது எவ்வளவு அதிசயமானது! எங்களைப் போல இருக்கும் இன்னும் 3 பேரை விரைவில் கண்டுபிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை அதிகமாகிவிட்டது. எங்கோ பிறந்த நாங்கள் நால்வரும் சகோதரிகள் போல இருக்கிறோம். ஆனால் என் தங்கை என்னைப் போல இல்லை. நியாம் குடும்பத்தில் இன்னும் 3 பேர் வந்து சேர்ந்துவிட்டால் என்னைப் போல மகிழ்ச்சியானவள் யாரும் இருக்க முடியாது’’ என்கிறார் நியாம்.

அட! ரொம்பவே ஆச்சரியமா இருக்கு!

மெக்ஸிகோவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரும் பாதிரியாருமான செர்ஜியோ பெனிடெஸ் வித்தியாசமானவர். 1945-ம் ஆண்டு பிறந்த பெனிடெஸ், ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தை நடத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் இல்லத்தைத் தொடர்ந்து நடத்துவதற்குப் பணம் இல்லை. அதனால் தன்னுடைய சிறிய வயது விளையாட்டான குத்துச் சண்டையை மீண்டும் விளையாட ஆரம்பித்தார். பகலில் பாதிரியாராகவும் இரவில் விளையாட்டு வீரராகவும் வலம் வந்தார். தானே வடிவமைத்த மஞ்சளும் சிவப்பும் கொண்ட முகமூடியை அணிந்துகொண்டார். தன்னுடைய பெயரை ஃப்ரே டோர்மெண்டா என்று மாற்றிக்கொண்டார். 17 குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த பெனிடெஸ், சின்ன வயதில் போதைப் பொருளுக்கு அடிமையானவர். பிறகு அவருக்கு குத்துச் சண்டையில் ஆர்வம் வந்தது. அதன் பிறகு பாதிரியாராக மாறினார். 270 குழந்தைகள் கொண்ட ஒரு காப்பகத்தையும் நடத்தி வந்தார். ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்தன. தொடர்ந்து காப்பகத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. காப்பகத்தை தேவாலயத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர். பணம் திரட்டுவதற்காக மீண்டும் குத்துச் சண்டை வீரராகக் களம் இறங்கினார். போட்டிகளில் பங்கேற்றார். ஆரம்பத்தில் குறைவான நிதியே கிடைத்தது. பிறகு அவருடைய வித்தியாசமான முகமூடி அணிந்த விளையாட்டைக் காண ஏராளமானவர்கள் வர ஆரம்பித்தனர். நிதியும் சேர்ந்தது. பெனிடெஸ் மீது தேவாலயத்துக்கு நம்பிக்கை வந்தது. மீண்டும் குழந்தைகள் காப்பகத்தை அவரிடம் ஒப்படைத்தனர். 23 ஆண்டுகள் காப்பகத்துக்காக முகமூடி அணிந்த குத்துச் சண்டை வீரராக இருந்த பெனிடெஸ், 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2006-ம் ஆண்டு நாச்சோ லிபர் என்ற திரைப்படம், இவரது தாக்கத்தால் எடுக்கப்பட்டது.

வித்தியாசமானவர்!

ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் பெண்கள் சிறைச் சாலையில் ஒவ்வோர் ஆண்டும் அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் விதவிதமான ஆடைகளை அணிந்து, கேட் வாக் செய்தார்கள் குற்றவாளிகள். 27 வயது மிஷெலி நெரி ராஞ்செல் என்பவர் அழகிப் பட்டம் வென்றார். இவர் கொள்ளை மற்றும் சில குற்றங்களுக்காக 39 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர். சிறையில் இருக்கும் பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதற்காக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது என்கிறார்கள் சிறை நிர்வாகத்தினர்.

நல்ல குணமே அழகு என்பதை இவர்கள் உணர்வார்களா?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7922752.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாம்பூ டவர்!

 
 
masala_2637876f.jpg
 

பாரிஸில் இருக்கும் ‘ஃப்ளவர் டவர்’ பார்க்கும்போது அடுக்கு மாடிக் கட்டிடத்தில் சின்னக் காடு இருப்பது போலத் தோற்றம் தருகிறது. 10 மாடிகள் கொண்ட அந்தக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் 380 மூங்கில் மரங்கள் தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. மழை நீர் சேமிக்கப்பட்டு, செடிகளுக்குத் தானாகத் தண்ணீர் செல்லும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாவிட்டாலும்கூட மூங்கில் மரங்கள் பசுமை மாறாமல் காட்சியளிக்கின்றன.

அட, இந்த ‘பாம்பூ டவர்’ அற்புதமான யோசனை!

அலெக்ஸ் அஸ்ஸாலி சிரியாவில் இருந்து அகதியாக ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தவர். கடந்த ஓராண்டு காலமாக வீதியில் உணவுகளை வைத்து பசியால் வாடும் ஜெர்மன் மக்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறார். அலெக்ஸின் சேவையைக் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் ஜெர்மன் மக்கள். சிலர் அவருடன் சேர்ந்து உணவளிக்கும் சேவையில் பங்கேற்கவும் செய்கிறார்கள். ‘’சிரியாவில் இருந்தபோது, அதிபரை எதிர்த்து ஃபேஸ்புக்கில் விமர்சனம் செய்தேன். என் உயிருக்கே அது ஆபத்தாக அமைந்துவிட்டது. என்னுடைய அடையாளத்தை மாற்றிக்கொண்டு, 2007-ம் ஆண்டு ஜெர்மனிக்கு அகதியாக வந்து சேர்ந்தேன். எங்கே செல்வது என்று புரியவில்லை.

தெருவில் அலைந்த எனக்கு, நிறைய ஜெர்மன் மக்கள் உணவு, உடை என்று உதவி செய்தனர். ஒரு மூதாட்டி அவர் வீட்டில் என்னை தங்கிக் கொள்ளச் சொன்னார். ஒரு வேலை தேடிக்கொண்டேன். கம்ப்யூட்டர் படித்தேன். இன்று ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். 8 ஆண்டுகளில் நல்ல நிலைக்கு வந்துவிட்டேன். என்னைக் காப்பாற்றி, இன்று இந்த நிலைக்கு வாழ வைத்த ஜெர்மன் மக்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் தினமும் பசிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறேன். நான் நன்கொடையாக எதையும் பெற்றுக்கொள்வதில்லை.

என் சம்பாத்தியத்தில் இருந்து இதைச் செய்து வருகிறேன். கம்ப்யூட்டர் பொறியாளராக இருந்தாலும் எனக்குச் சமைப்பது என்றால் விருப்பம் அதிகம். அதனால் நானே சமைத்து, எடுத்து வந்துவிடுவேன். ’ஏதாவது ஜெர்மன் மக்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும்’ என்று எழுதி வைத்துவிடுவேன். என்னைப் போல வேறு யாராவது இதுபோலச் செய்வதற்கு உதவியாக இருக்கும் இல்லையா?’’ என்கிறார் அலெக்ஸ்.

வெல்டன் அலெக்ஸ்!

சீனாவின் ஸிங்ஜெங் நகரில் வசிக்கும் 54 வயது ஷி ஜுபின் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். தன் உழைப்பால் வெற்றிகரமான தொழிலதிபராக மாறிவிட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சிலைகளைச் செய்ய ஆரம்பித்தார். இன்று 9,200 சிலைகளைச் செய்து பார்வைக்கு வைத்திருக்கிறார். இன்னும் 800 சிலைகள் செய்து, 10 ஆயிரம் சிலைகளாக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். சிரிப்பு புத்தர் சிலைகள் ஒவ்வொன்றும் சிறிய உணர்ச்சிகளில் ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகின்றன. சில சிலைகள் 2 மீட்டர் உயரம் வரை இருக்கின்றன. புத்தர் சிலைகள் நெருக்கமாக அணிவகுத்து நிற்பதைப் பார்த்தால், ராணுவ புத்தர் அணிவகுப்பு போலத் தோன்றுகிறது. தானாகப் பட்டுப்போன மரங்களில் இருந்தே சிலைகளைச் செய்வதால், சுற்றுச் சூழலுக்கு எந்த விதத்திலும் தான் தீங்கு விளைவிக்கவில்லை என்கிறார் ஷி ஜுபின்.

டெரகோட்டா ஆர்மியிலிருந்து இன்று வரை சீனர்களுக்கு பிரமாண்டத்தில் உள்ள ஆர்வம் குறையவில்லை!

ஃப்ளோரிடாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஸுல்ஸ், லிலா என்ற கறுப்பு லேப்ரடார் நாயை வளர்த்து வருகிறார். மிக புத்திசாலி என்பதால் நீச்சல், கடலுக்குள் சென்று லாப்ஸ்டர் பிடிப்பது எப்படி என்று பயிற்சி அளித்திருக்கிறார். அலெக்ஸும் லிலாவும் படகில் கடலுக்குள் செல்கிறார்கள். லாப்ஸ்டர் இருக்கும் பகுதிகளில் நாயை இறக்குகிறார். கீழே சென்று, லாப்ஸ்டரை வாயால் கவ்விக்கொண்டு, மேலே வருகிறது. அலெக்ஸ் வாங்கிக்கொண்டு, லிலாவைத் தட்டிக் கொடுக்கிறார். மீண்டும் கடலுக்குள் சென்று வேட்டையாடிக் கொண்டு வந்து தருகிறது லிலா.

ஓர் அன்பான தட்டலுக்கு எவ்வளவு வேலை செய்கிறது இந்த லிலா!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article7926980.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: 164 அடி உயரத்தில் அஞ்சலி

 
 
masala_2639015f.jpg
 

இத்தாலியின் மோன்டே பியானா பகுதியில் அமைதி மற்றும் முதல் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வானவில் ஊஞ்சல் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 164 அடி உயரமுள்ள 2 மலைகளை இணைத்து ஒரு கம்பி கட்டப்பட்டது. இதில் 26 பேர் நடை பயின்றார்கள். பிறகு இந்தக் கம்பியில் 17 வண்ணங்களில் ஊஞ்சல்கள் அடுத்தடுத்து கட்டப்பட்டன.

ஒவ்வோர் ஊஞ்சலிலும் வீரர்கள் அமர்ந்திருந்தனர். இந்த ஊஞ்சலுக்குள் ஒரு செய்தித்தாள், விளையாட்டுப் பொருள், சிப்ஸ், குளிர் பானம் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. அவரவருக்குப் பிடித்த செயல்களைச் செய்தபடி அமர்ந்திருந்தனர். இந்த இடம் இயற்கை எழில் மிக்க இடம் இல்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். 18 ஆயிரம் வீரர்களின் நினைவாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை, 2 மணி நேரம் நின்று மக்கள் ரசித்தனர்.

நோக்கம் நல்லதுதான் என்றாலும் ஆபத்தானதாக இருக்கிறதே…

சீனாவின் ஸியாங்செங் நகரில் கணவர் மற்றும் 5 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் கையிங் லீ. பக்கத்து வீட்டுக்காரருடன் ஒரு சிறிய தகராறு. மிக மோசமாக நடந்துகொண்டதால், லீயின் கணவர் காவல்துறையில் புகார் கொடுத்தார். ஆத்திரம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், 5 ஆட்களை வைத்து லீயின் கணவரைக் கொலை செய்துவிட்டார்.

லீயின் கண் முன்னே இந்தக் கொலை நடந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. உடனே கொலைகாரர்கள் தலைமறைவானார்கள். லீ காவல்துறையிடம் சென்றார். ஆனால் குற்றவாளிகள் தப்பிவிட்டதாலும் சாட்சிகள் இல்லாததாலும் அந்த வழக்கு அப்படியே முடங்கிப் போனது. ஆண்டுகள் கரைந்தன. லீயின் மனத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. அடிக்கடி குற்றவாளிகளைத் தேடிக் கிளம்பிவிடுவார். 10 ஆண்டுகளில் 9 மாகாணங்களுக்குப் பயணம் செய்திருந்தார். 2011-ல் ஒரு குற்றவாளியின் அலைபேசி எண் கிடைத்தது.

அவன் பெய்ஜிங்கில் வசிப்பதும் தெரிய வந்தது. அடுத்த 4 ஆண்டுகள் ஒவ்வோர் அடியையும் மிகக் கவனமாக எடுத்து வைத்தார். ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்தினார். இன்று 5 குற்றவாளிகளில் 4 பேரைப் பிடித்துக் கொடுத்துவிட்டார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்போம் என்று நினைக்காத குற்றவாளிகள் அதிர்ச்சியில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒருவனைத் தேடும் முயற்சியில் இருக்கும் லீயிடம், கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்று எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.

காவல்துறை செய்ய வேண்டியதைத் தனி ஒரு பெண்ணாகச் சாதித்துக் காட்டிய லீக்கு வாழ்த்துகள்!

கனடாவின் ஹாலிஃபாக்ஸ், நோவா ஸ்காடியா பகுதிகளில் உள்ள சில குழந்தைகள் குழுக்கள் சேர்ந்து நல்ல காரியங்களில் இறங்கியுள்ளன. இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பரிசாக, ஏழைக் குழந்தைகளுக்கு குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள், ஜெர்கின்கள் போன்றவற்றைச் சேகரிக்கிறார்கள். பிறகு அவற்றை தெருக்களில் இருக்கும் கம்பங்களில் கட்டி வைத்துவிடுகின்றனர்.

தேவைப்படுபவர்கள் அவற்றை எடுத்துக்கொள்ளலாம். டாரா அட்கின்ஸ் ஸ்மித் ஒவ்வோர் ஆண்டும் கதகதப்பான ஆடைகளைச் சேகரித்து, இல்லாதவர்களுக்கு வழங்கி வந்தார். டாராவின் மகளுக்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்தது. ‘‘8 வயது மகளுக்கு, பிறருக்குக் கொடுப்பது எவ்வளவு இன்பமானது என்பதை உணர்த்துவதற்கு இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்தேன். அவளுடன் அவள் நண்பர்களையும் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தேன். உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சியான சூழல் அமைந்துவிடவில்லை என்பதைப் புரிய வைத்தேன்.

நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது நம் கடமை என்று சொன்னேன். கனடாவில் கடுமையான பனிப் பொழிவு காலம் என்பதால், கதகதப்பான ஆடைகளைக் கொடுப்பது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றேன். குழந்தைகள் அனைவரும் ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டனர். நான் நினைத்ததைவிட ஆடைகளைக் கொண்டு வந்து குவித்துவிட்டனர். குழந்தைகளுடன் சேர்ந்து ஏழைகள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள கம்பங்களில் கட்டி வைத்துவிட்டு, வந்துவிடுகிறோம்’’ என்கிறார் டாரா.

அடடா! குழந்தைகள் மனம் எவ்வளவு அற்புதமானது!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-164-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/article7929786.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிக்கன் சர்ச்!

 

 
masala_2473702f.jpg
 

இந்தோனேசியக் காட்டுக்குள் ஒரு தேவாலயம் வித்தியாசமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது. ஜாவாவின் மத்தியில் உள்ள மேகேலாங் பகுதியில் கெரிஜா அயம் என்ற தேவாலயம் உள்ளது. இதை `சிக்கன் சர்ச்’ என்றும் அழைக்கிறார்கள். கோழியின் வடிவில் இந்தத் தேவாலயம் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்தோனேசியாவுக்கு வரும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், இந்த சிக்கன் சர்ச்சையும் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.

வித்தியாசமாகக் கட்டிடத்தை வடிவமைத்திருந்தாலும், இது இன்னும் முழுமை பெறவில்லை. பிரார்த்தனை செய்வதற்கு நீண்ட மேல் தளம். 15 தங்கும் அறைகள் கொண்ட கீழ்த்தளம் கட்டப்பட்டிருக்கிறது. 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம் பற்றிச் சரியான தகவல்கள் இல்லை. இது ஒரு தேவாலயம் அல்ல, பிரார்த்தனைக் கூடம் என்றும் கூறப்படுகிறது. சர்ச் சிக்கன், சர்ச் டவ், பிஜியன் ஹில் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது.

ஒரு வித்தியாசமான முயற்சி முழுமை பெறாமல் இருக்கிறதே…

விளக்குகள் வெளிச்சத்தில் ஓவியங்களைக் காட்சிக்கு வைப்பார்கள். ஆனால் ஜான் பாப்பெல்டன் தன்னுடைய ஓவியங்களை இருளில் வைத்து, புகைப்படங்கள் எடுக்கிறார். ஒளிரக்கூடிய வண்ணங்களைப் பயன்படுத்தி, மனித உடல்களில் ஓவியங்களைத் தீட்டுகிறார். பிறகு இருளில் புகைப்படங்கள் எடுக்கிறார். ஓவியமும் புகைப்படமும் இணைந்து புதுமையான படைப்பாக, எல்லோரையும் ஈர்த்துவிடுகின்றன.

20 ஆண்டுகளாகப் புகைப்படக்காரராக இருந்து வந்த பாப்பெல்டனுக்கு, புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இருளில் ஒளிரும் விளக்குகள் அவரை எப்பொழுதுமே ஈர்த்துக்கொண்டிருந்தன. உடனே ஒளிரும் ஓவியங்களை உருவாக்கிவிட்டார். ஓர் ஓவியத்தை முடிக்க மூன்றரை மணி நேரங்களை எடுத்துக்கொள்கிறார்.

அடடா! பிரமாதம் பாப்பெல்டன்!

ஜப்பானிய பெண்களின் மனங்களைக் கவர்ந்த ஹீரோவாக இருக்கிறது ஷபானி என்ற கொரில்லா. கம்பீரமான தோற்றம், பெண் கொரில்லாக்களுடன் காதல், தன் இரு மகன்களுக்கு அன்பான அப்பா என்று பல பொறுப்புகளையும் அழகாகச் செய்கிறது இந்த 18 வயது ஷபானி. நெதர்லாந்தில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்தது ஷபானி. அம்மா, அப்பாவுடன் அமைதியான வாழ்க்கை. 2007-ம் ஆண்டு ஜப்பானுக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கே 3 பெண்களுடன் குடும்பம் நடத்தி, 2 மகன்களுக்குத் தந்தையானது ஷபானி. நொடிக்கு ஒருமுறை அட்டகாசமாக முகபாவனைகளை மாற்றுவதில் ஷபானிக்கு இணை வேறு எதுவும் இல்லை.

மிக நளினமாகவும் புகைப்படத்தில் அழகாகவும் தோற்றம் அளிக்கிறது ஷபானி. இணையதளத்தில் வெளியாகும் ஷபானியின் புகைப்படங்களுக்கு ஏராளமான ஜப்பானிய பெண்கள் விசிறிகளாக இருக்கின்றனர். ஒரு குடும்பத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஜப்பானிய ஆண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது, உலகிலேயே மிக அழகான கொரில்லா ஷபானிதான் என்கிறார்கள் ஜப்பானிய பெண்கள். ஒருநாளைக்கு எத்தனை முறை புகைப்படங்கள் எடுத்தாலும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு தருகிறது ஷபானி. ஹிகாஷியமா விலங்குகள் சாலையில், ஷபானியால் பெண்களின் வருகை அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அட! என்ன ஓர் ஆளுமை!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/article7424614.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: இளம்பெண் மிஜினோவுக்கு ஒரு பூச்செண்டு!

masala_2641428f.jpg
 

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அயிசா மிஜினோ, கட்டிடக் கலைஞர். சமீபத்தில் புரட்சிகரமான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். பேட்டரிகளுக்குப் பதில் உப்பு நீரைப் பயன்படுத்தி விளக்குகளை எரியச் செய்கிறார். சுற்றுச் சூழலுக்குச் சாதகமான இந்தக் கண்டு பிடிப்பு, கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகச் சிறந்த விஷயமாக இருக்கப் போகிறது. ’’நான் பிலிப்பைன்ஸில் உள்ள பல்வேறு பழங்குடி மக்களிடமும் பழகியிருக்கிறேன். காளிங்காவில் உள்ள பட்பட் பழங்குடி மக்களிடமிருந்துதான் இந்தக் கண்டுபிடிப்புக் கான யோசனையைப் பெற்றுக்கொண்டேன்.

அவர்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சாரமே கிடையாது. ஒரு தம்ளர் நீரில் 2 ஸ்பூன் உப்பு, சில ரசாயனங்களைச் சேர்க்கும்போது, அதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த மின்சாரத்திலிருந்து வெளிவரும் வெளிச்சம் 8 மணி நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கிறது. மண்ணெண்ணெய், எலக்ட்ரிக் விளக்குகளைவிட இது சிக்கனமானது. சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. இது ஒரு பொருள் அல்ல. சமூக இயக்கம்’’ என்கிறார் மிஜினோ. உப்பு விளக்குக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்திருக் கிறது.

பிலிப்பைன்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளில் அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு விருது களைப் பெற்றிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் போன்களுக்கும் யுஎஸ்பிக்கும் சார்ஜ் செய்துகொள்வதற்குப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார் மிஜினோ. பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு சந்தைக்கு வர இருக்கிறது. விலை அதிகமான, ஆபத்து விளைவிக்கும் மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து எளிய மக்கள் வெளியேறும் காலம் வந்துவிட்டது என்கிறார் மிஜினோ.

அற்புதமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கும் இளம் பெண் மிஜினோவுக்கு ஒரு பூச்செண்டு!

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் தர்ஷன் கார்வாத். தன்னுடைய மாணவப் பருவத்தை, குப்பைகள் இல்லா பருவமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் அவருடைய குப்பைகளை 2 பிளாஸ்டிக் பைகளில் அடக்கிவிடலாம்! துரித உணவகங்களில் சாப்பிடு வதில்லை. புதிய ஆடைகள் வாங்குவதில்லை. டாய்லெட் பேப்பரை உபயோகிப்பதில்லை. முதல் ஆண்டு 3.4 கிலோ குப்பைகள் சேர்ந்தன. அடுத்த ஆண்டு 2.7 கிலோ குப்பைகளாகக் குறைத்துவிட்டார். சராசரி அமெரிக்கர்கள் ஓர் ஆண்டில் சுமார் 680 கிலோ குப்பை களைக் கொட்டுகிறார்கள். ஆனால் 0.4 சதவீத குப்பைகளையே தர்ஷன் வெளியேற்றுகிறார்.

‘’ஒருமுறை வானொலியில் பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியர், குப்பைகள் இல்லா வாழ்க்கை நடத்துவதைப் பகிர்ந்துகொண்டனர். அன்று முதல் எனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை. நான் இந்தியாவில் இருக்கும்போதே குப்பைகளைக் குறைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். மிச்சிகன் வந்த பிறகு கொள்கையை இன்னும் கடுமையாக்கிக்கொண்டேன். சிப்ஸ் பாக்கெட்டுகள், பால் பாட்டில் மூடிகள், பழங்களில் இருக்கும் ஸ்டிக்கர்கள், உடைந்த கண்ணாடிகள், பழைய துணிகள், தேவையற்ற மரச் சாமான்கள், ஸ்பூன், ஃபோர்க் போன்ற குப்பை கள்தான் அதிகம் என்பதால் அவற்றைக் குறைக்க ஆரம்பித் தேன். உணவகங்களுக்குச் செல்லும்போது நானே ஸ்பூனையும் ஃபோர்கையும் எடுத்துச் சென்றுவிடுவேன். சாப்பிட்ட பிறகு, சுத்தம் செய்து கொண்டு வந்துவிடுவேன்.

ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகளைப் பயன்படுத்த மாட்டேன். உணவை பார்சல் வாங்கினால் அதிகக் குப்பை சேரும் என்பதால் அதைத் தவிர்த்துவிடுவேன். இங்கே டாய்லெட் பேப்பர்தான் பயன்படுத்துவார்கள். நான் தண்ணீர் பயன்படுத்தி, பேப்பர் குப்பையில் இருந்து தப்பிவிட்டேன். காய்கள், பழங்களில் இருந்து கிடைக்கும் குப்பைகளை மட்கச் செய்து, செடிகளுக்கு உரமாக்கிவிடுவேன். ஜூஸை ஸ்ட்ராவில் குடிக்க மாட்டேன். மாமிசம் சாப்பிட்டால் பல் குத்தும் குச்சியைப் பயன்படுத்த வேண்டும் என்பதால், சைவ உணவுக்கு மாறிவிட்டேன். பயன்படுத்தாத துணிகள் மிகப் பெரிய குப்பை. அதனால் புதிய துணிகள் வாங்காமல், இருப்பதையே வைத்துக்கொண்டேன்.

இமெயிலில் கூட ஜங்க் மெயில்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுவேன். என் கொள்கைகளை நான் பிறர் மீது திணிக்க மாட்டேன். அதே சமயம் பெரிய பார்ட்டிகளில் குப்பைகளைக் குறைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுக்கவும் செய்வேன். காகித தம்ளர் பயன்படுத்தும் இடங்களுக்கு நானே ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்துச் சென்றுவிடுவேன். அமெரிக்காவில் ஓராண்டுக்கு 25 கோடி டன் குப்பைகள் சேருகின்றன. கொஞ்சம் கடினமான வாழ்க்கை என்றாலும் பூமியின் சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு, குப்பைகள் இல்லா வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழப் பழகிக்கொள்ளலாம்’’ என்கிறார் தர்ஷன்.

தனி மனிதரில் ஆரம்பித்தால் அது ஒரு பெரிய இயக்கமாக மாறிவிடும்… வெல்டன் தர்ஷன்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article7936519.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அதிசய கிராமம்!

 
masala_2642519f.jpg
 

பாலி நாட்டில் உள்ள பெங்கலா கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடா கோலோக் என்ற நூற்றாண்டு பழமையான சைகை மொழி சரளமாக எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இங்கே காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள். உலகிலேயே காது கேட்காத, பேச முடியாத மக்கள் அதிகமாக இருக்கும் இடம் பெங்கலா கிராமம்தான். அவர்களிடம் பேசுவதற்காக உருவானதே சைகை மொழி. தாய்மொழியைப் போலவே ஒவ்வொருவரும் இந்தச் சைகை மொழியையும் இயல்பாகக் குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள்.

இவர்களின் சைகை மொழி தனித்துவம் வாய்ந்தது. கடந்த 7 தலைமுறைகளாக இங்கே காது கேட்கும் பெற்றோருக்கு, காது கேட்காத குழந்தைகளும், காது கேட்காத பெற்றோருக்குக் காது கேட்கும் குழந்தைகளும் பிறக்கின்றன. இதனால் சைகை மொழி தவிர்க்க முடியாததாகி விட்டது. குறைபாடு உடையவர்களை மட்டமாகப் பார்ப்பதோ, பரிதாபமாகப் பார்ப்பதோ இவர்களிடம் இல்லை. எல்லோரையும் ஒரே மாதிரி மதிக்கும் பழக்கம் இங்கே நிலவுவதால், யாருக்கும் தங்கள் குறையை நினைத்து வருத்தமே இல்லை. ’’தேவா கோலோக் என்ற கடவுளின் பரிசுதான் காது கேளாமை என்று நாங்கள் நம்புகிறோம். வாய் பேச முடியாமல் போவதற்குக் காரணம், வெகு காலத்துக்கு முன்பு ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டார்கள்.

அதிலிருந்து இந்த கிராமத்தில் 2 குறைபாடுகளும் சர்வ சாதாரணமாகிவிட்டன’’ என்கிறார் கிராமத்து தலைவர் மர்டானா. பள்ளியிலும் மொழி பாடங்களோடு சைகை மொழியும் ஒரு பாடமாக இருப்பதால் பக்கத்து கிராமத்து குழந்தைகளும் இந்த மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். பெங்கலா கிராமம் இப்பொழுது உலகப் புகழ் பெற்றுவிட்டது. சுற்றுலாப் பயணிகள், சமூக ஆர்வலர்கள், காது கேட்காதவர்கள் என்று பலரும் இங்கே வந்து செல்கிறார்கள். அவர்களுக்காகக் காது கேட்காதவர்கள் ஸ்பெஷல் நடன நிகழ்ச்சியை நடத்திக் காட்டுகிறார்கள்.

அதிசய கிராமம்!

அமெரிக்காவில் வசிக்கும் காரா அல்ட்ரிட்ஜ், பேப்பர் கப்களில் கண்கவர் ஓவியங்களைத் தீட்டி வருகிறார். இதற்காகப் பயன்படுத்திவிட்டு, தூக்கி எறியக் கூடிய கப்களைச் சேகரித்துக்கொள்கிறார். ’’கிறிஸ்டினா வெப் என்ற கலைஞரிடம் இருந்துதான் நான் இந்த கலையைக் கற்றுக்கொண்டேன். ஓவியங்கள் தீட்டப்பட்ட கப்களை பேனா, பென்சில்கள் வைப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். சீசனுக்கு ஏற்றவாறு ஓவியங்களை மாற்றிக்கொள்வேன். இலையுதிர் காலங்களில் இலைகள், பரங்கிக்காய் போன்றவற்றை வரைவேன். இதில் ஆரஞ்சு வண்ணத்தின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும். குளிர் காலத்தில் நீல நிற ஓவியங்களைத் தீட்டுவேன். என்னுடைய நீல நிற கப்களுக்கு உலகம் முழுவதும் விசிறிகள் இருக்கிறார்கள். என் கப் ஓவியங்கள் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது’’ என்கிறார் காரா.

அட, அசத்தலா இருக்கே!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/article7940373.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இசை வாழ்க்கை!

 
 
masala_2472597f.jpg
 

நியூயார்க்கைச் சேர்ந்தவர் டோடன் நெக்ரின். 5 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். சொத்துகளை விற்றார். ஒரு ட்ரக்கையும் பியானோவையும் வாங்கினார். செல்ல நாயை அழைத்துக்கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்தார். அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா, ஐரோப்பா என ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிட்டார்.

இதுவரை 300 நகரங்களையும் 21 நாடுகளையும் பார்த்திருக்கிறார். முக்கியமான இடங்களில் பியானோவை வாசிக்கிறார். அவரது இசையைக் கேட்டு மக்கள் கூடுகிறார்கள். அவர்களிடம் உரையாடுகிறார். 10 ஆயிரம் மனிதர்களைச் சந்தித்துவிட்டார். பியானோவுடன் பயணம் செய்வது அத்தனை எளிதான விஷயமில்லை.

இறக்குவதும் ஏற்றுவதும் கடினமானது. ஒருமுறை பியானோ கையில் விழுந்து, நெக்ரினின் இரண்டு விரல்கள் உடைந்துவிட்டன. ‘’இந்த நாடோடி வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பயணம், இசை, விதவிதமான மனிதர்கள், புதுப்புது இடங்கள் என்று எல்லோருக்கும் எளிதில் கிடைக்காத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார் நெக்ரின்.

ஆஹா! என்ன மாதிரியான வாழ்க்கை!

காமிக் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் வரக்கூடிய ஒரு கதாபாத்திரம் ‘Punisher’. கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்களை அழிக்கக்கூடியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ நகரின் மேயர் ரோட்ரிகோ டுடெர்ட்டை Punisher என்று அழைக்கிறார்கள்.

அரசாங்கத்தில் இருந்துகொண்டு, கிரிமினல்களை ஒழிப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகளை உலகம் மிகவும் கடுமையாக விமர்சித்தது. ஆனால் இன்று அவரை ஒரு ஹீரோவாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஒருகாலத்தில் குற்றங்களின் தலைநகராக இருந்த டாவோ, இன்று தென்கிழக்கு ஆசியாவின் மிக அமைதியான நகரமாக மாறியிருக்கிறது.

ரோட்ரிகோவின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தன. கிரிமினல்கள் பலரும் திடீர் திடீரென்று மாயமானார்கள். 2005 முதல் 2008 வரை 700 மனிதர்கள் டாவோவில் மாயமாகியிருக்கிறார்கள். அநேகமாக அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் ரோட்ரிகோ, தன்னுடைய எந்தச் செயலையும் இதுவரை பகிரங்கமாக வெளியிட்டதில்லை. இரவு, பகல் என்று எந்த நேரமும் நகரைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.

மனித உரிமை ஆர்வலர்கள் ரோட்ரிகோவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் பொதுமக்கள் ரோட்ரிகோவை ஆதரிக்கிறார்கள். ’’நான் நூறு சதவீதம் தீவிரவாதிதான். ஆனால் யாருக்கு எதிராகத் தீவிரவாதம் செய்கிறேன்? ஆள் கடத்துபவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், அரிசி கடத்துபவர்கள், கிரிமினல்களுக்கு எதிராகத்தான் போராடுகிறேன்’’ என்கிறார் ரோட்ரிகோ.

நீங்க நல்லவரா? கெட்டவரா?

இங்கிலாந்தில் உள்ள டேவென் சிறைச் சாலையில் 86 கைதிகள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று, உள்ளூர் செய்தித்தாளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ’கடந்த வியாழன் அன்று வெளிவந்த செய்தித்தாளில் இடம்பெற்ற சுடோகு மிகவும் கடினமாக இருந்தது. 86 பேரும் முயன்று பார்த்தோம். ஒருவராலும் போட இயலவில்லை.

வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே செய்தித்தாள் எங்களுக்கு அனுமதிக்கப்படுவதால், மறுநாள் வரும் விடையையும் எங்களால் பார்க்க இயலாது. அதனால் எளிதான சுடோகு வெளியிடும்படிக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று கையெழுத்து இட்டிருந்தனர். செய்தித்தாள் ஆசிரியருக்குக் கடிதம் எழுதியவர் 33 வயது மைக்கேல் ப்ளாட்ச்ஃபோர்ட். சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் யாரையாவது கடுமையாகத் தாக்கிவிட்டு, அடிக்கடி தண்டனை அனுபவித்து வருபவர்.

எளிய சுடோகு போட்டுவிட வேண்டியதுதான்…

குளவி இனத்தைச் சேர்ந்த பூச்சி டாரண்டுலா ஹாக். ஒருமுறை கொட்டினால் மூன்று நிமிடங்களுக்கு வலி உயிர் போய்விடும். அதாவது மின்சாரத்துடன் ஒரு கம்பியை வேகமாகக் குத்தினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் வலி. அந்த வலியை வாழ்நாள் முழுவதும் உணர முடியும்.

உலகில் அதிக வலி தரக்கூடிய விஷயங்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தக் குளவி. பூச்சிகளிலேயே அதிக விஷம் கொண்டது இதுதான். ஆனால் மனித உயிர்களைப் பறிக்கும் அளவுக்குச் சக்தி கிடையாது. பூந்தேன் இவற்றின் உணவு. பெண் குளவிகளுக்கு மட்டுமே விஷக் கொடுக்குகள் இருக்கின்றன.

ஒரு சின்னக் குளவிக்கு இத்தனை சக்தியா…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7420649.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அப்படி என்ன ரகசிய ப்ராஜக்ட் ஸ்நோரி?

 
masala_2470386f.jpg
 

நியுஸிலாந்தில் வசிக்கும் ஜஸ்டினும் ஜோலா சிஸெனும் வித்தியாசமான தம்பதியர். இருவரும் கயிற்றின் மேல் சாகசங்கள் நிகழ்த்தும் கழைக்கூத்தாடிகள். அதனால் நிரந்தரமாக ஓர் இடத்தில் வாழ்க்கை நடத்த இயலாது. ஊர் ஊராகச் சென்றுகொண்டிருப்பார்கள். தங்களுக்கு என்று ஒரு வீட்டை உருவாக்கி, தாங்கள் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்தனர். ஒரு ட்ரக்கில் வீட்டை உருவாக்கினார்கள். பயணத்தின்போது சாதாரணமாகத் தெரியும் இந்த ட்ரக், ஓரிடத்தில் நிறுத்தி, வீட்டைப் பிரித்தால், பிரம்மாண்டமாக விரிகிறது. சோஃபாக்களுடன் ஹால், படுக்கை அறை, அனைத்து வசதிகளும் கொண்ட நவீன சமையல் அறை, இயற்கை காற்று உள்ளே வரும் விதத்தில் வீடு முழுவதும் ஜன்னல்கள், கண்ணுக்குத் தெரியாதபடி அலமாரிகள், நீச்சல் தொட்டியுடன் கூடிய குளியலறை என்று பிரமாதமாக இருக்கிறது. வீட்டின் மேல் தளத்தில் உடற்பயிற்சி செய்வதற்கும் விளையாடுவதற்கும் இடம். வீட்டின் வாயிலில் கோட்டையை நினைவூட்டும் இரண்டு கோபுரங்கள் என்று ஒவ்வொன்றையும் ரசனையுடன் உருவாக்கியிருக்கிறார்கள். சூரிய ஒளியில் இருந்து மின்சாரம், மழை நீர் சேகரிப்பு என்று திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள். ‘‘வேலை இல்லாத நாட்களில் இந்தக் கோட்டையில் எங்கள் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம். நிகழ்ச்சி இருந்தால், குடையை மடிப்பது போல, வீட்டை மடித்து, சிறியதாக்கிவிடுவோம். பிறகு ட்ரக்கை ஓட்டிச் சென்று விடுவோம். சின்ன இடத்தில் அனைத்தையும் திட்டமிட்டு உருவாக்க முடியும் என்ற யோசனையை விமானம்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது’’ என்கிறார் ஜஸ்டின்.

வீட்டை உருவாக்கியவர்களின் கற்பனைத்திறனும் தொழில்நுட்பமும் பிரமாதம்!

ஐஸ்லாந்தைச் சேர்ந்தவர் ஸ்நோரி அஸ்முண்ட்சன். தன்னுடைய ஒரு ப்ராஜக்ட்டுக்காக இறந்துபோன சடலங்களைத் தானமாகத் தருமாறு கேட்கிறார். இறந்தவர்களின் உடல்களை வைத்து நடனமாடி, வீடியோ எடுத்துவிட்டு, மீண்டும் குடும்பத்தினரிடம் அப்படியே சடலத்தை ஒப்படைத்துவிடுகிறார். 2008-ம் ஆண்டு இறந்த சடலங்களைக் கேட்டு விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தைப் பார்த்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் 20 பேர் சடலங்களை ஒப்படைக்கத் தயாராகினர். அந்த நேரம் வீடியோ எடுப்பதற்குத் தேவையான பணம் ஸ்நோரியிடம் இல்லை. சில ஆண்டுகள் தன் ப்ராஜக்ட்டை மறந்து இருந்தவர், தற்போது மீண்டும் வேலையில் இறங்கிவிட்டார். இந்த முறை அவருடைய நண்பர்கள் மெக்ஸிகோ, சீனாவில் இருந்து இறந்த சடலங்களை வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். மறுத்துவிட்டார் ஸ்நோரி. ’’என்னுடைய ப்ராஜக்ட் என் நாட்டு மக்களுக்குத்தான் பயன்படப் போகிறது. அதில் என் நாட்டு மக்களைப் பயன்படுத்துவதுதான் நியாயம். ப்ராஜக்ட் வெளிவந்த பிறகு, சடலங்களைக் கொடுத்த குடும்பங்கள் பெருமிதம்கொள்வார்கள். இறந்தவர்களை மதிப்பார்கள். நான் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்யவில்லை. இந்த ப்ராஜக்ட்டை இதுவரை உலகில் யாரும் செய்ததில்லை’’ என்கிறார் ஸ்நோரி. ஆனால் இதுவரை அந்த ப்ராஜக்ட் என்ன என்பதை ஒருவருக்கும் சொல்லவில்லை.

அப்படி என்ன ரகசிய ப்ராஜக்ட் ஸ்நோரி?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/article7413538.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: மனிதக் காதல் அல்ல!

 
 
masala_2466785f.jpg
 

பிரிட்டனைச் சேர்ந்தவர் 65 வயது ஜெனிசிஸ் ப்ரேயர் பி-ஒரிட்ஜ். இசைக் கலைஞர், கவிஞர், பாடலாசிரியர், பாடகர் என்று ஏராளமான திறமைகளைக் கொண்டவர். 1993-ம் ஆண்டு அவருடைய வருங்கால மனைவி ஜாக்குலினைச் சந்திக்கச் சென்றார். அப்பொழுது ஜாக்குலினைப் போலவே உடைகள் அணிந்துகொண்டார். ஒப்பனை செய்துகொண்டார். தலைக்கு விக் வைத்துக்கொண்டார். ஜெனிசிஸைப் பார்த்ததும், தன்னைக் கண்ணாடியில் பார்ப்பது போலவே இருக்கிறது என்று ஆச்சரியமானார் ஜாக்குலின்.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது. “நாங்கள் இருவரும் இரண்டு உயிர்கள் அல்ல. நான்தான் அவர். அவர்தான் நான்’’ என்பதை இருவருமே உணர்ந்துகொண்டோம் என்கிறார் ஜெனிசிஸ். கடந்த இருபது ஆண்டு திருமண வாழ்க்கையில் இருவரும் ஒரே உருவத்தை அடைவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். மூக்கு, கண், தாடை ஒவ்வொன்றையும் அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டே இருந்தனர்.

இதற்காக 1 கோடியே 27 லட்சம் ரூபாயைச் செலவு செய்துள்ளனர். ஒரே மாதிரி ஒப்பனை, ஒரே மாதிரி ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே சென்றனர். பார்ப்பவர்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள். திடீரென்று ஜெனிசிஸ், ஜாக்குலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வயிற்றுப் புற்றுநோயால் ஜாக்குலின் மரணம் அடைந்தார்.

“எங்கள் திருமண வாழ்க்கையில் நான், நீ என்ற வார்த்தைகளே கிடையாது. நாங்கள், எங்கள் என்பது மட்டும்தான் இருந்தன. என்னுடைய பரிசோதனை முயற்சிக்கெல்லாம் ஈடுகொடுத்த ஜாக்குலின், இன்று என்னை விட்டுச் சென்றுவிட்டார். துயரம் என்றால் என்ன என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உணர்கிறேன்’’ என்கிறார் ஜெனிசிஸ்.

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல…

சிகாகோவில் வசிக்கிறார் ஓவியர் கைல் பைஸ். ஓவியக் கலையில் பட்டம் பெற்றிருக்கிறார். ஆயில் பெயின்ட் மூலம் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தவர், சமீபக் காலமாக பியரை வைத்து ஓவியம் தீட்டி வருகிறார். தன்னுடைய ஓவிய பாணிக்கு, `ட்ரிங்க் அண்ட் ட்ரா’ என்று பெயர் வைத்திருக்கிறார். ஒருநாள் பெயிண்ட் டப்பாவை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். பிரஷ் மட்டும்தான் இருந்தது. அருகில் ஒரு பியர் பாட்டில் இருந்தது.

பியரை ஊற்றி, பிரஷ் மூலம் வரைந்து பார்த்தார். வித்தியாசமான ஓவியம் கிடைத்தது. “வாட்டர் கலரில் பெயின்ட் செய்வது போலத்தான் பியரிலும் பெயின்ட் செய்கிறேன். ஆரம்பத்தில் இந்த பியர் ஓவியங்களுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இன்று இதையே முழு நேரமாகச் செய்யும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது’’ என்கிறார்.

வித்தியாசமான முயற்சிக்கு வெற்றி உறுதி!

பின்லாந்தில் மனைவியைத் தூக்கிச் செல்லும் போட்டி, இருபதாவது ஆண்டாக நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து 14 நாடுகளைச் சேர்ந்த 60 ஜோடிகள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் நிறைய விதிமுறைகள் உண்டு. அவர்கள் குறிப்பிட்டுள்ள நான்கு முறைகளில்தான் மனைவியைத் தூக்கிச் செல்ல வேண்டும். 253.5 மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

நடுவில் தண்ணீர்த் தொட்டி, மணல், தடை போன்ற பலவற்றைக் கடந்து, வெற்றிக் கோட்டைத் தொட வேண்டும். கணவன், மனைவியாகத்தான் கலந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. சென்ற ஆண்டு வில்லெ பர்வியைனென் சரி வில்ஜனென் ஜோடி வெற்றி பெற்றது. இந்த ஆண்டும் அதே வில்லேதான் வெற்றி பெற்றார், ஆனால் வேறோர் இணையோடு!

ம்… ரொம்பக் கஷ்டமான போட்டிதான்…

ஃப்ளோரிடாவின் வளைகுடா பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சதுப்பு நிலக் காடுகள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இந்தப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குடும்பத்தோடு பறந்து செல்வது வாடிக்கை. இந்த ஆண்டும் பறவைகள் வந்தன. ஆனால் திடீரென்று பறவைகள் எல்லாம் மாயமாகிவிட்டன. காரணம் அறிந்துகொள்வதற்காக ஒரு நிபுணர் குழு சென்றது. பறவைகளின் கூடுகள் காலியாக இருந்தன. நிலத்தில் சில முட்டை ஓடுகள் மட்டும் காணப்பட்டன. ரக்கூன் போன்ற புது எதிரிகளால் பறவைகள் வேறு இடங்களுக்குச் சென்றிருக்கலாம். அல்லது, நோய்த் தொற்று காரணமாக இடப் பெயர்வை மேற்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

ஐயோ… பாவமே…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/article7402633.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: இனிமேலாவது உங்கள் துயரம் தீரட்டும் மார்க்...

 
 
 
world_picture_2646122f.jpg
 

டிசம்பர் இரண்டாம் தேதியை சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு நாளாகக் கடைபிடித்து வருகிறது சீனா. ஆனாலும் சீனாவின் பல பகுதிகளில் உள்ள சாலைகளில் செல்லும் வாகனங்களைப் பார்த்தால் திகில் ஏற்பட்டுவிடுகிறது. இரண்டு தடவை எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களை ஒரே தடவையில் கொண்டு செல்ல வாகன ஓட்டிகள் துணிச்சலாக முடிவெடுக்கிறார்கள்.

ஒரு சிறிய வாகனம், மிகப் பெரிய அளவில் பொருட்களை எடுத்துச் செல்லும்போது சாலையையே அடைத்துக்கொண்டு செல்கிறது. அட்டைப் பெட்டிகள், ஹீலியம் பலூன்கள், வைக்கோல்கள், ராட்சசக் குழாய்கள், அரிசி மூட்டைகள் போன்ற பல பொருட்களும் செல்லப்படுகின்றன.

இரு சக்கர வாகனத்தில் 3 பெரியவர்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் தைரியமாகப் பயணிக்கின்றனர். சீனாவில் உள்ள 80 சதவீத டிரக்குகள் அதிக எடைகளைத்தான் சுமந்து செல்கின்றன. இதனால் 6,60,000 பாலங்களில் அடிக்கடி சேதம் ஏற்படுகிறது. விபத்துகளும் அதிகம் நடக்கின்றன. வாகனச் சட்டத்தை மேலும் கடுமையாக்க இருக்கிறது சீனா.

சாலைகளில் சர்க்கஸ்!

நியூயார்க்கைச் சேர்ந்த மார்க் ரே ஃபேஷன் போட்டோகிராபர். 6 ஆண்டுகள் ஃபேஷன் உலகில் மாடலாகவும் இருந்திருக்கிறார். ஆனால் இன்று வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல, அவருக்கு ஒரு வீடு இல்லை.

நியூயார்க்கில் இருக்கும் வீடற்ற ஆயிரக்கணக்கான மனிதர்களில் மார்க்கும் ஒருவர். பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பிறகு ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வேலை செய்தார் மார்க். பிறகு 4 ஆண்டுகள் மாடலாகவும் வலம் வந்தார்.

ஆனாலும் வருமானம் ஒன்றும் பெரிதாக இல்லை. மீண்டும் நியூயார்க் திரும்பினார். பின்னர் ஃபேஷன் போட்டோகிராபியில் கவனம் செலுத்தினார். “ஃபேஷன் துறையில் இருந்ததால் இந்த வேலை எளிதாக இருக்கும் என்று நினைத்தேன்.

அதிலும் தோல்வியையே சந்தித்தேன். சேமிப்பும் கரைந்துவிட்டது. அதனால் உணவகத்தில் வேலை செய்து வந்தேன். தங்குவதற்கு இடம் இல்லை. கிடைத்த இடங்களில் தூங்குவேன். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு, ஒரு ஜிம்மில் சேர்ந்துகொண்டேன்.

அங்கே குளிக்க, துவைக்க, துணியை இஸ்திரி போடஎன்று பல வசதிகள். மீண்டும் மாடலிங் துறையில் மிகச் சிறிய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் நியூயார்க்கில் ஒரு மனிதன் வாழ்க்கை நடத்துவதற்கு இது போதுமானதாக இருக்காது.

என் வாழ்க்கையில் நான் எப்போதுமே என் கஷ்டத்தை நினைத்து கவலைப்பட்டதில்லை. மாடலாக, நடிகராக, போட்டோகிராபராக நல்ல வேலைகளில்தான் இருந்திருக்கிறேன். ஆனாலும் என் பொருளாதார நிலைமை சீரடையவில்லை’’ என்கிறார் மார்க். வீடற்ற மாடல் என்ற பெயரில் மார்க்கை வைத்து ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இனிமேலாவது உங்கள் துயரம் தீரட்டும் மார்க்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/article7951812.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மீண்டும் நீராவி இன்ஜின்!

 
 
Masala_2646971f.jpg
 

உக்ரைனைச் சேர்ந்த கார் ஓட்டுனர்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி வருகிறார்கள். பெட்ரோல், காஸ் போன்றவற்றின் விலையேற்றத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. அதனால் மரத்துண்டுகளை எரித்து, நீராவி மூலம் வண்டி ஓடுவதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் கணிசமாகப் பணம் மிச்சமாகிறது என்கிறார்கள்.

ஆட்டோ மொபைல் துறை மெதுவாக மின்சக்தியை நோக்கிப் பயணிக் கிறது. மரத்தை எரித்து, ஆற்றலைப் பயன்படுத்துவது என்பது பழைய வழிமுறை. முதல் உலகப் போரில் இப்படிப்பட்ட வாகனங்கள்தான் மிகவும் பிரபலமாக இருந்தன. இன்று உக்ரைன் ஓட்டுனர்கள் நவீன கார்களில் மர பர்னர்களையும் பாய்லர் களையும் பொருத்திக்கொள்கிறார்கள். யுஜின் செர்னிகோவ் தன்னுடைய ஓபெல் காரை இப்படி மாற்றிவிட்டார். ‘‘கார் ஓட்டுவது நாளுக்கு நாள் செலவு பிடித்த விஷயமாகிவிட்டது. அதைச் சமாளிப்பதற்குத்தான் இப்படி யோசித்தேன். நான் இயற்பியல் ஆசிரியர்.

மரத்தை எரித்து, எவ்வாறு எரிபொருளை எடுப்பது என்பதை 2 மாதங்களில் இணையத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். என்னுடைய காரில் மரம் எரிக்கும் கலமும் உலோகக் கேனையும் பொருத்தி, அவற்றை கார் இன்ஜினுடன் இணைத்துவிட்டேன்.

100 கி.மீ. தூரத்தைக் கடக்க 18 கிலோ மரத் துண்டுகள் தேவைப்படும். காஸுக்குச் செலவழிப்பதில் பாதிதான் செலவாகிறது. மணிக்கு 60 மைல் வேகத்தில் கார் பயணிக்கும். இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது. புகை கக்குவதில்லை. நீராவியும் கார்பன் டையாக்ஸைடு மட்டுமே வெளியேறும்’’ என்கிறார் செர்னிகோவ். இவரைப் பார்த்து ஏராளமானவர்கள் தங்கள் கார்களில் பர்னரையும் உலோகக் கலத்தையும் பொருத்திக்கொள்கிறார்கள்.

மீண்டும் நீராவி இன்ஜின்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் ஆடம்ஸ் வித்தியாசமான போட்டோகிராபர். கண்ணில் உள்ள கருவிழியில் தெரியும் பிம்பங்களை மிக நுட்பமாகப் படம் பிடித்திருக்கிறார். ஒரு திருமணத்தில் மிக முக்கியமான காட்சிகளை எல்லாம் வெவ்வேறு மனிதர்களின் கண்கள் மூலம் படமாக எடுத்திருக்கிறார். கண் களை வரிசைப்படுத்தினால் திருமணத்துக்கு முன்பு மணப்பெண், திருமணத்தில் மணப்பெண், திருமணத்துக்குப் பின்பு மணப் பெண் என்று அழகான காட்சிகளாகத் தெரிகின்றன.

‘‘சிறிது மெனக்கெட்டால் இந்த மாதிரி படங்களை எடுத்துவிடலாம். மனிதக் கண்கள் வளைந்த கண்ணாடி போல இருக்கின்றன. கண்களுக்கு அருகில் விளக்கு வெளிச்சம் இருக்க வேண்டும். அதேபோல கண்களில் பிரதிபலிக்கும் மனிதர்கள் மீதும் வெளிச்சம் இருக்க வேண்டும். இரண்டும் ஒன்றாகச் சேரும்போது பிரமாதமான ரிசல்ட் கிடைக்கிறது. திருமண ஆல்பத்தில் கண் பிரதிபலிப்பு படங்கள்தான் என்னுடைய ஸ்பெஷல்!’’ என்கிறார் ஆடம்ஸ்,

அடடா! அற்புதம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/article7954757.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: திமிங்கலத்துடன் செல்ஃபி!

 
masala_2465676f.jpg
 

சப்ரினா பெல்லோனி ஆழ்கடல் சாகசக்காரர். கரீபியன் கடலில் 10 நாட்கள் தொடர்ந்து நீந்திக்கொண்டிருந்தார். அப்பொழுது 7 ஸ்பெர்ம் திமிங்கிலங்களைக் கண்டறிந்தார். பேருந்தை விடப் பெரிதாக இருந்த ஒரு திமிங்கிலத்துடன் தானும் இரண்டரை நிமிடங்கள் நீந்தினார். அந்தக் காட்சிகளைப் புகைப்படங்கள் எடுத்தார் ஃப்ரான்கோ பான்ஃபி.

இதுவரை திமிங்கிலங்களுடன் இவ்வளவு நெருக்கமாகவும், இவ்வளவு நேரமும் யாரும் நீந்தியதில்லை. அதேபோல திமிங்கிலங்களை இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் புகைப்படங்கள் எடுத்ததும் இல்லை. ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் 60 அடி நீளம் வரை வளரக்கூடியவை. பத்து நாட்களும் ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன. கூட்டம் கூட்டமாகவே திமிங்கிலங்கள் வாழ்கின்றன. அதிலும் தாயும் குட்டிகளும் ஒன்றாகவே நீந்திக்கொண்டிருக்கின்றன என்கிறார் சப்ரினா.

சபாஷ் சப்ரினா!

கிழக்கு சீனாவின் ஹிஃபேய் பகுதியில் வசிக்கிறார் ஷெங் ரு ஸி. இவருடைய மகன் ஸாங் கை, புற்றுநோயால் 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகனின் நண்பர்கள் 7 பேரும் இன்று வரை ஷெங்கைக் கவனித்து வருகிறார்கள். 2001ம் ஆண்டு, பள்ளி மாணவராக இருந்த ஷாங் கைக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து தாயையும் மகனையும் நண்பர்கள் ஏழு பேரும் அன்புடன் கவனித்துக்கொண்டார்கள்.

அடுத்த மூன்றாவது ஆண்டு ஸாங் இறந்து போனார். ஒரு மகனையும் இழந்து, தனியாக நின்ற ஷெங்கைக் கவனித்துக்கொள்ள நண்பர்கள் முடிவு செய்தனர். “மகனை இழப்பது ஒரு தாய்க்கு எவ்வளவு கொடுமையான விஷயம்? அந்தத் துயரத்திலிருந்து என்னை மீட்டவர்கள் இந்தக் குழந்தைகள்தான். இந்த ஏழு பேரிலும் என் மகன் வாழ்கிறான். கல்லூரிப் படிப்பு முடித்து, அவரவர் குடும்பம், குழந்தை என்று ஆகிவிட்டாலும் கூட இந்தத் தாயை ஒருவரும் மறக்கவில்லை’’ என்கிறார் ஷெங்.

அன்பால் உருவாக்கப்பட்ட அபூர்வ மகன்கள்!

சூரிய ஒளியைக் குவித்து, விதவிதமாக உடலில் ஓவியங்கள் தீட்டிக்கொள்வது சமீபக் காலமாக நடந்து வருகிறது. ஒரு தாளில் வேண்டிய டிசைனை வெட்டி விட்டு, உடல் மீது ஒட்டி விட வேண்டும். பிறகு பல மணி நேரம் வெயிலில் அப்படியே படுத்திருக்க வேண்டும். சூரியன் படும் பகுதி மட்டும் அடர்ந்த நிறமாக மாறும். மற்றப் பகுதிகள் தோலின் நிறத்தை ஒத்திருக்கும். டாட்டூ போன்று வலியும் கிடையாது, நிரந்தரமாக இந்த ஓவியம் உடலில் இருக்கப் போவதும் இல்லை என்பதால், இதைச் செய்துகொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சூரிய ஒளியில் இப்படி நேரடியாகப் பல மணிநேரம் இருக்கும்போது தோல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள். சூரியக் குளியலின்போது தோலை இவ்வளவு தூரம் யாரும் வருத்திக்கொள்வதில்லை. ஆனால் இந்த ஓவியத்துக்காக அதிகப்பட்சமாகத் தோல் பாதிக்கப்படுகிறது. அதனால் ஆபத்தும் அதிகரித்திருக்கிறது. சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாப்பதுதான் சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.

வம்பை விலை கொடுத்து வாங்கணுமா என்ன?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article7398467.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: மறு உருவாக்கம்!

 
 
masala_2649132f.jpg
 

அமெரிக்காவில் ஜர்னலிசம் படித்து வருகிறார் லிடியா. அவரது தாய் ரீடா, 33 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படங்களை லிடியா பார்த்தார். லண்டனிலும் இத்தாலியிலும் புகழ்பெற்ற இடங்களில் நின்றுகொண்டிருந்தார் ரீடா. உடனே லிடியாவுக்கு யோசனை வந்தது. 33 வருடங்களுக்கு முன்பு அம்மா சென்ற இடங்களுக்குச் சென்று, படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். தோழிகளுடன் கிளம்பினார்.

‘‘என் அம்மா எந்தெந்த இடங்களில் எப்படி நின்று படங்கள் எடுத்துக்கொண்டாரோ, அதை அப்படியே மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இத்தாலியில் உள்ள ஹெர்குலிஸ் சிலை, வாட்டிகன் சிட்டி தேவாலயம், நேஷனல் லைப்ரரி, கொலோசியம், பீசா கோபுரம், லண்டனில் உள்ள டவர் பாலம், பார்லிமெண்ட் கட்டிடம் போன்றவை பெரிதாக மாற்றத்தைச் சந்திக்கவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது’’ என்கிறார் லிடியா.

மறு உருவாக்கம் என்பதே சுவாரசியமாக இருக்கிறது!

பெய்ஜிங்கில் ஓவியராக இருக்கிறார் பிரதர் நட். அத்துடன் சுற்றுச் சூழலுக்கான விழிப்புணர்வு பிரசாரத்திலும் இறங்கியிருக்கிறார். 100 நாள் ‘டஸ்ட் ப்ளான்’ என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படும் வேக்குவம் க்ளீனரை எடுத்துக் கொண்டு நகரின் பரபரப்பான இடங்களுக்குச் செல்கிறார். கட்டிடங் களில் படிந்திருக்கும் தூசிகளை வேக்குவம் க்ளீனர் மூலம் உறிஞ்சி எடுக்கிறார். ‘‘1000 வாட் வேக்குவம் க்ளீனரைப் பயன்படுத்தினால் 100 கிராம் தூசியை இழுக்க முடிகிறது. இந்த தூசியை 62 மனிதர்கள் 4 நாட்களில் நுரையீரலுக்குள் இழுத்துக்கொள்கிறார்கள். ஒருநாள் முழுவதும் எடுத்த தூசிகளை வைத்து, ஒரு செங்கல்லாக மாற்றியிருக்கிறேன். நான் செல்லும் இடங்களில் இந்தச் செங்கலை வைத்து சுற்றுச்சூழலின் அவசியத்தையும் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் எடுத்துச் சொல்கிறேன்’’ என்கிறார் பிரதர் நட்.

நல்ல காரியம் செய்யறீங்க பிரதர் நட்!

பிரிட்டனில் வசிக்கும் டெபி ஸ்மித் வீட்டுக்குத் தினமும் க்ளோரியா என்ற அன்னம் வரும். காலை உணவைச் சாப்பிடும். சிறிது நேரம் ஓய்வெடுக்கும். பிறகு கிளம்பிவிடும். அன்றும் வாசல் கதவைத் தன் அலகால் தட்டியது க்ளோரியா. டெபி ஸ்மித் கதவைத் திறந்துவிட்டு, உணவு எடுக்கச் சென்றார். திரும்பி வந்தபோது அவருக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது. ‘‘கண்ணாடி ஒன்றை இறக்கி வைத்திருந்தேன். க்ளோரியா கண்ணாடியில் தம் பிம்பத்தைக் கண்டவுடன், வேறொரு அன்னம் என்று நினைத்துக்கொண்டு ஆர்வத்துடன் அருகில் சென்றது. தலையை ஆட்டியது. அலகால் தட்டியது. இறக்கைகளைப் படபடவென்று அடித்தது. சிறிது நேரத்தில் அது வேறொரு பறவை இல்லை என்பதை உணர்ந்துகொண்டது. மிக சந்தோஷமாகக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே இருந்தது. தன்னுடைய பிம்பம்தான் அது என்பதை அறிந்துகொண்டது என்று நினைக்கிறேன்’’ என்கிறார் டெபி ஸ்மித்.

குரங்கு, யானை போன்றவைதான் கண்ணாடி பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளன…

அன்னமும் அதில் சேருமா?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7961369.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வாழ்நாளையே அர்ப்பணிக்கும் படம்!

 
 
masala_2650291f.jpg
 

முயற்சி செய்துகொண்டே இருந்தால் ஒரு நாள் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஸ்காட்லாந்து போட்டோகிராபர் ஆலன் மெக்ஃபேடின் மிகச் சிறந்த உதாரணம். மீன்கொத்தி பறவையின் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக 6 ஆண்டுகள் உழைத்திருக்கிறார். 7,20,000 தடவை படங்கள் எடுத்திருக்கிறார்.

’’என் தாத்தா ராபர்ட் முர்ரேதான் நான் போட்டோகிராபராக வருவதற்குக் காரணம். 6 வயதிலேயே ஸ்காட்லாந்தின் ஏரிக்கு அருகே அமர்ந்து, மீன்கொத்தி பறவைகளைக் கவனிக்க வைத்தார். எப்படிப் படங்கள் எடுக்க வேண்டும் என்ற நுட்பத்தையும் சொல்லிக் கொடுத்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு மீன்கொத்தியின் குறிப்பிட்ட காட்சியைப் படம் பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஏரிக்கு அருகில் தங்கிக்கொண்டேன். அடிக்கடி ஏரியில் தண்ணீர் அதிகரிப்பதால் மீன்கொத்திகளுக்கு ஆபத்து அதிகம். பாதுகாப்பான இடத்தில் ஒரு கூட்டை நானே உருவாக்கினேன். அங்கே மீன்கொத்திகள் குடும்பம் நடத்தி, முட்டைகள் இட்டு, குஞ்சு பொரித்தன. 6 ஆண்டுகள் ஒரே இடத்தில் மீன்கொத்திகளையே படங்கள் எடுத்துக்கொண்டிருந்தாலும் எனக்குச் சலிப்பு வரவில்லை.

என் லட்சியப் படத்துக்காக சிறிதும் ஆவல் குறையாமல் காத்திருந்தேன். ஒரு வருடத்தில் 100 நாட்கள் மீன்கொத்திகளுக்காக ஒதுக்கியிருந்தேன். இறுதியில் அந்தக் கனவு காட்சி அமைந்தே விட்டது. துப்பாக்கியில் இருந்து வெளிவரும் புல்லட் போல, மீன்கொத்தி தண்ணீரில் அலகைத் தொட்டுக்கொண்டு சில நொடிகள் நின்றதை மிகச் சரியாக கேமராவில் பதிய வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் அற்புதமான தருணம் அது. மிகப் பெரிய சாதனை நிகழ்த்திவிட்ட பெருமிதம்.

உலகிலேயே இதுபோன்ற காட்சிகள் எடுத்தவர்கள் மிகச் சிலரே. மீன்கொத்தியைப் படம் எடுப்பது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. பறவைகளின் வாழ்நாள் மிகக் குறைவானது. ஆனால் இந்த மீன்கொத்தியின் படம் இன்னும் நீண்ட காலம் இந்தப் பூமியில் நிலைத்திருக்கும். நான் எத்தனையோ படங்கள் எடுத்திருந்தாலும் இந்தப் படத்தை விட மிகச் சிறந்த படம் என்னிடம் இல்லை’’ என்கிறார் ஆலன்.

அடடா! இந்தக் காட்சிக்காக வாழ்நாளையே அர்ப்பணிக்கலாம்!

ஆஸ்திரியாவில் உள்ள டான்யூப் நதியில் திடீரென்று ஓர் இளைஞர் குதித்தார். தற்கொலை செய்துகொள்வதற்காகக் குதித்துவிட்டார் என்று கருதிய காவலர்கள், ஆற்றில் குதித்து இளைஞரைக் காப்பாற்றினார்கள். அவர் கைகளில் ஏகப்பட்ட பணம். பணத்தை எடுக்கவே இளைஞர் குதித்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது. சுமார் 72 லட்சம் ரூபாய் பணம் யாருடையது, எங்கிருந்து வந்தது என்பது குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. செய்தித்தாள்களில் பணம் குறித்து தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. உரிமையாளர்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளும்போது, 5 முதல் 10 சதவீதப் பணம் அந்த இளைஞருக்குக் கிடைக்கும். ஓராண்டு வரை யாரும் பணம் பெற்றுக்கொள்ள வரவில்லை என்றால், முழுப்பணமும் இளைஞருக்கே கிடைத்துவிடும் என்கிறார்கள்.

மர்மப் பணம்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7965303.ece

Link to comment
Share on other sites

 

உலக மசாலா: நம்பிக்கை மனிதர்!

 
masala___2651495f.jpg
 

அரிஸோனாவில் வசிக்கும் 27 வயது ப்ரையன் டாகலோக்கு பிறக்கும்போதே 2 கைகளும் இல்லை. துன்பமான வாழ்க்கை அமைந்தாலும் சாதாரண மனிதர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ப்ரையன். கைகளுக்குப் பதிலாக கால்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். கால்களால் கார் ஓட்டுகிறார். டாட்டூ வரைகிறார். உலகிலேயே கைகள் இல்லாமல், டாட்டூவுக்குச் சான்றிதழ் வாங்கியிருக்கும் ஒரே டாட்டூ கலைஞர் இவர்தான். “எல்லோரும் எனக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் சந்தேகத்துடன் வருவார்கள், டாட்டூவைப் பார்த்து திருப்தியாகச் செல்வார்கள். எல்லோரும் கால்கள் மூலம் வேலைகளைச் செய்வதைப் பார்த்து ஆச்சரியமடைகிறார்கள்.

எனக்குப் பிறக்கும்போதே கைகள் இல்லை. கால்களைக் கொண்டு, கைகளால் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் என்னால் செய்ய முடிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. கால்களால் டாட்டூ வரைவதை அனுமதிக்கும் என் வாடிக்கை யாளர்கள்தான் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள். நம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் போதும். எது இல்லை என்றாலும் உலகில் வாழ்ந்துவிட முடியும்” என்கிறார் ப்ரையன்.

நம்பிக்கை மனிதர்!

கனடாவில் வசிக்கும் 30 வயது சியான் கூப்பருக்கு அதிக வருமானம் தரக்கூடிய வேலை கூட இல்லை. 2012ம் ஆண்டு 2 கோடியே 83 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கினார். தன்னுடைய சிக்கன நடவடிக்கைகளால் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனை குறைந்த காலத்தில் அடைத்து விட்டார். தான் வழக்கமாகப் பார்த்து வந்த வேலையுடன் கூடுதலாக 2 வேலைகளையும் செய்து வருகிறார். மீதி இருக்கும் நேரங்களில் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளை எழுதி, அதன் மூலம் கொஞ்சம் வருமானம் ஈட்டுகிறார். அசைவம் விலை அதிகம் என்பதால், சைவ உணவுக்கு மாறிவிட்டார்.

காரையும் பைக்கையும் பயன்படுத்தாமல், பொது வாகனங்களைப் பயன்படுத்தியதால் ஆண்டுக்கு 6.5 லட்சம் ரூபாய் சேமிக்க முடிந்தது. வீட்டின் அடித்தளத்தில் தங்கிக்கொண்டார். மேல் தளத்தை வாடகைக்கு விட்டதில் கணிசமான வருமானம் வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஒருமுறை கூட அவர் விடுதியில் சாப்பிடவில்லை. திரைப்படத்துக்குச் செல்லவில்லை. பிக்னிக் கூட போகவில்லை. ’’வீட்டுக் கடன் இன்னும் 30 ஆண்டுகளுக்கு என் தலை மீது கத்தி போலத் தொங்கிக்கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்தக் கடனில் இருந்து வெளிவர வேண்டும்.

இன்னும் 3 ஆண்டுகளில் மொத்த கடனிலிருந்து வெளிவந்துவிடுவேன். அதற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்க்கையை வாழவேண்டியதுதான். என்னைப் பார்த்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கடனை அடைத்துக்கொண்டிருப்பார்கள். நான் மகிழ்ச்சியாக இல்லை என்று நினைக்கிறார்கள். யாருக்கு எதில் மகிழ்ச்சி என்பதை யாரால் தீர்மானிக்க முடியும்?’’ என்கிறார் கூப்பர்.

அட, நல்ல யோசனையாக இருக்கே!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/article7969458.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விவசாயிகள் கவனத்துக்கு!

 
 
masala_2653161f.jpg
 

ஆப்பிரிக்க விவசாயிகள் எல்லோரும் விலங்கியலாளர் டாக்டர் லூசி கிங்குக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க ‘யானைகளும் தேனீக்களும்’ என்ற பிராஜக்டை உருவாக்கினார் லூசி. யானைகளுக்கு வேல மரங்கள் என்றால் பிடிக்காது, காரணம் அந்த மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுதான். பல ஆண்டுகள் யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, தேனீக்களுக்கு யானைகள் பயப்படுவதைக் கண்டுபிடித்தார் லூசி.

விவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தேன் கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிடும்.

யானை அலறியடித்துகொண்டு ஓடிவிடும். பிறகு இந்தப் பக்கமே வராது. ’’தேனீக்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வருகிறது. யானைகளிடமிருந்து பயிர்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. யானைகள் மிகச் சிறந்த உயிரினங்கள். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தினால் அது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிடுகின்றன. தேன் கூடுகளால் வேலி அமைத்து விட்டால் மனிதர்கள், யானைகளுக்கு மட்டுமில்லை, இயற்கைக்கும் நல்லது’’ என்கிறார் லூசி கிங்.

‘’யானை ஒருநாளைக்கு 400 கிலோ உணவு சாப்பிடும். எங்க நிலத்துக்குள் நுழைந்தால் ஒன்றும் மிச்சம் இருக்காது. இதுவரை யானைகளைப் பார்த்தால் தகர டப்பாவால் தட்டுவோம், நெருப்புப் பந்தம் பிடிப்போம். இப்போது எங்களுக்கும் பிரச்சினை இல்லை, யானைகளுக்கும் பிரச்சினை இல்லை. வருமானமும் கூடியிருக்கிறது’’ என்று மகிழ்கிறார் ஒரு விவசாயி. இயற்கை, மனிதர்கள், யானைகள் என்று எல்லா வழியிலும் பிரமாதமான திட்டத்தை வகுத்து கொடுத்த லூசி கிங்குக்கு சர்வதேச விருதுகள் குவிகின்றன.

நம் ஊர் விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றணும்…

பார்சிலோனாவில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் வசிக்கும் உராங்குட்டானை விலங்கியல் ஆர்வலர் படம் பிடித்தார். கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த உராங்குட்டான் அருகே சென்று ஒருவர் அமர்ந்தார். கையில் இருந்த பழம் ஒன்றை தம்ளருக்குள் போட்டார். பிறகு ஒரு குலுக்கு குலுக்கி, காலியான தம்ளரைக் காட்டினார். உராங்குட்டான் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் பழத்தை எடுத்துக் காட்டினார். உடனே கண்ணாடிக்கு அருகில் வந்து அமர்ந்தது உராங்குட்டான். தம்ளருக்குள் பழம் போடுவதை உற்று நோக்கியது. ஒரு குலுக்கலில் தம்ளரில் இருந்த பழம் மாயமானதைக் கண்டவுடன், வாய்விட்டுச் சிரித்தது. தரையில் புரண்டு, கைகளால் தரையை அடித்தபடி சிரித்துக்கொண்டே இருந்தது.

அடடா! நம்மைப் போலவே உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article7974813.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.