Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: துணி துவைத்துக்கொண்டே உடல்பயிற்சி!

 
 
masala_2760395f.jpg
 

சீன மாணவர்கள் ஃபிட்னஸ் சைக்கிள், வாஷிங் மிஷின் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்ந்து ஒரே கருவியாக உரு வாக்கி இருக்கிறார்கள். ஆம், டலியன் தேசிய பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாண வர்கள் கண்டுபிடித்துள்ள இந்த இயந்திரத்தின் மூலம் உடற் பயிற்சி செய்துகொண்டே துணி களையும் துவைத்துவிட முடியும். “சைக்கிள் உடற்பயிற்சி உலகம் முழுவதும் மிகப் பிரபலமானது. சிலர் தினமும் துணிகளைத் துவைத்து விடுகிறார்கள். சிலர் வாரத்துக்கு ஒரு முறை துணி துவைக்கிறார்கள். இரு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடிந்தால் நேரமும் மிச்சமாகும்.

அப்படி யோசித்துதான் இதை உருவாக்கியிருக்கிறோம். சைக்கிளின் அடிப் பகுதியில் பெரிய ட்ரம் ஒன்று பொருத்தியிருக்கிறோம். சைக்கிள் பெடல்களை மிதிக்கும்போது ட்ரம்மில் உள்ள துணிகள் துவைக்க ஆரம்பிக்கும். அதே நேரத்தில் இதிலிருந்து உருவாகும் தேவைக்கு அதிகமான மின்சாரம் எதிர்கால தேவைக்கு சேமித்து வைக்கப்படும். ஒரே இயந்திரத்தின் மூலம் உடற்பயிற்சி கிடைக்கிறது, சலவை செய்யப்படுகிறது, மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது” என்கிறார்கள் மாணவர்கள். பரிசோதனை அளவில் இருக்கும் இந்தத் திட்டம் முழுமையாக வெற்றி பெறும்போது, மக்களின் உபயோகத்துக்கு வரும்.

உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்று யாரும் சொல்ல முடியாது!

அமெரிக்காவின் மிச்சிகனில் வசிக்கிறது வெஸ்லி என்ற நாய். சமீபத்தில் இதன் பற்களுக்கு க்ளிப் போடப்பட்டது. இதுதொட ர்பான படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டன. இதுகுறித்து வெஸ்லியின் உரிமையாளரான மோலி மூரே கூறும்போது, “நாயின் பற்கள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. அதனால் வாயைச் சரியாக மூட முடியவில்லை. சாப்பிடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. என் அப்பா கால்நடை மருத்துவராக இருந்ததால், பற்களுக்கு க்ளிப் போட்டு விட்டார். பற்களுக்கு க்ளிப் போட்ட முதல் நாய் வெஸ்லிதான்” என்றார்.

ஐயோ... பாவம்!

ஸ்வீடனில் உள்ள விகென் கிராமத்தில் 24 மணி நேரமும் ஒரு கடை திறந்திருக்கிறது. ஆனால் இந்தக் கடையில் ஆட்கள் யாரும் இருப்பதில்லை. ஸ்மார்ட்போன் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, செயலி மூலம் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். சில நிமிடங்களில் இந்த விஷயங்கள் முடிந்துவிடும். இதுகுறித்து ராபர்ட் இல்லிஜசன் கூறும்போது, “குழந்தைக்குப் பால் பவுடர் வாங்க வேண்டும் என்றாலும், 12.4 மைல்கள் கடந்து செல்ல வேண்டும். அருகில் ஒரு கடை கூட கிடையாது. அதற்காகத்தான் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கடையை திறந்தேன். இந்தச் செயலி ஆப்பிள் நிறுவனம் மூலம் கடந்த ஜனவரி மாதம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை எந்தப் பிரச்சினையும் எழவில்லை.

கடையில் எந்தப் பொருள் இல்லை என்றாலும் செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம். ஏதாவது பொருள் வேண்டும் என்றாலும் சொல்லலாம். குறைகளைச் சுட்டிக் காட்டலாம். இங்கே வரும் வாடிக்கையாளர்களின் வங்கி அட்டையின் நகலைச் சேகரித்து வைத்திருக்கிறோம். அவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருடர்கள் யாராவது நுழைந்தால் அவை காட்டிக் கொடுத்துவிடும். . இதுபோன்ற கடைகளை இன்னும் பல கிராமங்களில் திறக்க வேண்டும் என்பதே என் லட்சியம்” என்றார்.

வரவேற்க வேண்டிய முயற்சி!

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article8308611.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: சிங்கம், புலி, கரடி கூட்டம்!

 
 
masala_2761992f.jpg
 

ஜார்ஜியாவில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் மூன்று நண்பர்கள் மிகவும் அன்புடன் பழகி வருகிறார்கள். சிங்கம், புலி, கரடி மூன்றும் குட்டிகளாக இருந்தபோதே நோவா ஆர்க் விலங்குகள் பாதுகாப்பு மையத்துக்கு வந்துவிட்டன. அன்றுமுதல் இன்றுவரை 15 ஆண்டுகள் நட்புடன் பழகி வருகின்றன. குட்டிகளாக இருந்தபோது மூன்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டும் ஊட்டச் சத்துக் குறைபாட்டுடனும் இருந்தன.

இதில் மோசமாகப் பாதிக்கப்பட்ட கரடி குட்டியை மட்டும் தனியே அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மூன்று குட்டிகளும் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்தன. அதன் பிறகு மூன்றும் ஒருநாள் கூட பிரிந்திருக்கவில்லை. ஒன்றாகச் சாப்பிடுவது, ஒன்றாக ஓய்வெடுப்பது, ஒன்றாக விளையாடுவது என்று மகிழ்ச்சியாகத் தங்கள் வாழ்நாட்களைக் கழித்து வருகின்றன.

’’மூன்று விலங்குகளும் ஒரே அளவுக்கு அன்பைச் செலுத்தி வருவதை நினைக்கும்போது எங்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. ஒருநாள் முழுவதும் இவற்றைக் கவனித்தாலும் கொஞ்சம்கூட அலுக்காது. நமக்குள்ளும் அன்பு பெருகிவிடும்’’ என்கிறார் நோவா மையத்தின் காப்பாளர் ஆலிசன் ஹெட்ஜ்கோத்.

அடடா! மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும் காட்சியே அற்புதமாக இருக்கிறது!

உலகிலேயே முதன் முறையாக காலாவதியான உணவுப் பொருட்களுக்கான சூப்பர் மார்க்கெட் டென்மார்க்கில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்கும் நோக்கில் இந்த சூப்பர் மார்க்கெட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதில் தேதி காலாவதியான உணவுப் பொருட்களும் சேதமடைந்த உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ‘விஃபுட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். காலாவதியான பொருட்கள் என்றால் கெட்டுப் போன பொருட்கள் அல்ல. சாதாரணமாக விற்கப்படும் பொருட்களின் விலையிலிருந்து 30 முதல் 50 சதவிகிதம் குறைவாக இருக்கும்.

’’வருமானம் குறைவானவர்களுக்காக இயங்கும் சூப்பர் மார்க்கெட் இல்லை இது. உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. டென்மார்க் இளவரசி மேரி, முன்னாள் உணவு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் போன்றோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். இன்று உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. அதற்கு இதுபோன்ற செயல்கள் உதவி புரியும்’’ என்கிறார் இதன் தலைவர் பெர் ப்ஜெர்.

ஒவ்வோர் ஆண்டும் 7 லட்சம் டன் உணவுப் பொருட்கள் டென்மார்க்கில் மட்டும் வீணாகிறது. உலகம் முழுவதும் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. 795 கோடி மக்கள் உணவின்றி, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழ்கின்றார்கள். கடந்த 5 ஆண்டுகளில் உணவு வீணாவதைப் பல வழிகளில் டென்மார்க் தடுத்து வருகிறது. இதன் மூலம் 25 சதவீத உணவுப் பொருட்கள் வீணாவது தடுக்கப்பட்டிருக்கிறது.

வெல்டன் டென்மார்க்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8312797.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிங்கங்களின் நண்பன்!

 
 
masala_2763366f.jpg
 

தென்னாப்பிரிக்காவில் ரிச்சர்ட்சன் வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கங்கள் வளர்க்கப்படுகின்றன. சிங்கங்களுக்கும் கெவின் ரிச்சர்ட்சனுக்கும் மிகச் சிறப்பான புரிதல் இருக்கிறது. கெவினுடன் சிங்கங்கள் விளையாடுகின்றன, சண்டை போடுகின்றன. அவர் தலையோடு தலை வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

ஒரு கார் விளம்பரத்துக்காக புகைப்படக்காரர் அட்ரியன் ஸ்டெர்ன் சரணாலயம் சென்றார். கெவினுக்கும் சிங்கங்களுக்கும் இடையே இருக்கும் நட்பையும் புரிதலையும் கண்டு ஆச்சரியமடைந்துவிட்டார். ‘‘பூனைக் குடும்பத்தின் மிகப் பெரிய உயிரினம் சிங்கம். சிங்கங்களால் மனிதர்களுடன் இவ்வளவு இயல்பாகவும் அன்பாகவும் பழக முடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

இந்தப் புகைப்படங்கள் சிங்கங்கள் பாதுகாப்பு பற்றி சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். 20 ஆண்டுகளாக நான் புகைப்படங்கள் எடுத்து வருகிறேன். இந்த 2 நாட்கள் அனுபவம் அசாதாரணமானது’’ என்கிறார் அட்ரியன். ‘‘சிங்கங்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று தெரிந்துகொண்டால் போதும். அவை நம்மை நட்புடன் நடத்தும். சிங்கங்களிடம் நாம் செய்யும் ஒரு தவறுகூட நமக்கு ஆபத்தாக அமைந்துவிடலாம். அதனால் கவனமாக இருப்பது முக்கியம். நான் இந்தச் சரணாலயத்திலேயே வீடு கட்டி தங்கியிருக்கிறேன். சிங்கங்களின் ஒவ்வொரு அசைவுக்கும் எனக்குக் காரணம் தெரியும்’’ என்கிறார் கெவின்.

உங்க தைரியத்தை நினைத்தால் சிலிர்ப்பாக இருக்கிறது கெவின்!

தங்கள் குழந்தைகளுக்குப் போதைப் பொருள் பழக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கும் அமெரிக்கப் பெற்றோர், அதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழியை நாடுகிறார்கள். இவர்களுக்குத் தனியார் கே9 சேவையில் உள்ள மோப்ப நாய்கள் உதவுகின்றன. மோப்ப நாய் வீட்டுக்குள் நுழைந்து படுக்கை அறை, குளியலறை, படிக்கும் அறை, கார் என்று சகல இடங்களையும் மோப்பம் பிடிக்கிறது. ஹெராயின், கோகெய்ன் முதல் அனைத்துப் போதைப் பொருட்களையும் நுகர்ந்து பார்த்தே கண்டுபி

டித்துவிடுகிறது. மைகேல் டேவிஸ் என்பவர் ‘தி லாஸ்ட் சான்ஸ்’ என்ற பெயரில் போதைப் பொருள் கண்டுபிடிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இளைஞர்களின் போதைப் பொருள் பழக்கத்தைக் கண்டுபிடிப்பதுதான்.

‘‘ஒரு சிறுவன் சாக்ஸுக்குள் 4 கிராம் ஹெராயினை ஒளித்து வைத்திருந்தான். இன்னொருவன் தன் 5 வயது தம்பியின் உணவு டப்பாவுக்குள் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்தான். ஆண்களைவிட பெண்கள் மிகத் திறமையாக போதைப் பொருட்களை ஒளித்து வைக்கிறார்கள். போதைப் பொருட்களால் இளைஞர்கள் எதிர்காலம் சீரழிவதையும் பெற்றோர் துன்பப்படுவதையும் பார்த்து, நான் இந்த வேலையைக் கையில் எடுத்துக்கொண்டேன். போதைப் பொருட்களைக் கண்டுபிடித்து, அவர்களை அதிலிருந்து மீட்பதுதான் எங்கள் நோக்கம். எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும் இந்த வேலை எனக்கு மன நிறைவாக இருக்கிறது’’ என்கிறார் மைக்கேல் டேவிஸ்.

உங்க சேவை தொடரட்டும் மைக்கேல்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/article8317622.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பிச்சைக்காரரின் ஆடி கார்

 
 
masala_2764382f.jpg
 

இங்கிலாந்தைச் சேர்ந்த 35 வயது மாத்யு பிரின்டன், பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வருகிறார். அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர். சமீபத்தில் அவரது பேஸ்புக்கில் விலை உயர்ந்த ஆடி கார் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது. அதைப் பார்த்த மக்கள் கொதித்துப் போனார்கள். தினமும் அவருக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ‘‘பாவம் என்று இரக்கப்பட்டு எத்தனையோ நாட்கள் பணம் கொடுத்திருக்கிறேன். என்னிடம் பிச்சை வாங்கிய ஒருவர் ஆடி கார் வைத்திருக்கிறார். நான் சாதாரண கார் வைத்திருக்கிறேன். அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் இவரைப் போன்றவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது’’ என்கிறார் சார்லஸ்.

மாத்யு வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் ஏகப்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. மாத்யு மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ‘‘ஒரு காலத்தில் உறவினர்கள் கொடுத்த பணம் என்னிடம் இருந்தது. அதைச் சரியாகக் கையாளாமல், அனைத்தையும் தொலைத்துவிட்டேன். பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் என் பாட்டி இந்த ஆடி காரை எனக்குக் கொடுத்தார். அதை அருகில் நிறுத்தியிருந்தேன். சிலர் நான் பிச்சை எடுத்து இந்த காரை வாங்கியதாகத் திட்டுகிறார்கள். சிலர் நான் காரைத் திருடி விட்டதாகச் சொல்கிறார்கள்.

இன்னும் சிலர் என் உயிருக்கே ஆபத்து என்று மிரட்டுகிறார்கள். நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு பேஸ்புக் அக்கவுண்ட் எதுவும் இல்லை. யாரோ இப்படி என் பெயரில் விளையாடியிருக்கிறார்கள். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்’’ என்கிறார் மாத்யு. யாரோ கோபத்தில் ஆடி கார் மீது கல் எறிந்து, கண்ணாடியை உடைத்துவிட்டனர்.

ஐயோ ரொம்பப் பாவமா இருக்கே...

 

5 வயது மார்க் கேன்னனுக்கு அல்ஃபி என்ற நாய்தான் உற்ற தோழன். மார்க் பிறந்ததில் இருந்தே அல்ஃபி அவனுடனே இருந்து வருகிறது. அல்ஃபி எப்போதும் மார்க்கின் வலது பக்கம்தான் அமரும். வலது பக்கம்தான் நடந்து செல்லும். இடது பக்கத்தில் உட்கார வைத்தாலும் உட்காராது. அல்ஃபி ஏன் இப்படிச் செய்கிறது என்று குடும்பத்தினர் குழம்பினர்.

மார்க்கை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, நாய் வலது புறம் அமரும் விஷயத்தையும் கூறினர். மருத்துவர் கண்களைப் பரிசோதித்தபோது, இடது கண்ணில் பார்வை சரியாக இல்லை என்பதைக் கண்டுபிடித்தார். இன்னும் தாமதமாக வந்திருந்தால் முழுவதுமாக பார்க்கும் திறனை கண் இழந்திருக்கும் என்றார். மனிதர்களைவிட ஒரு நாய் குழந்தையின் பிரச்சினையைக் கண்டுபிடித்திருப்பதில் எல்லோருக்கும் ஆச்சரியம். நாய் மூலம்தான் இடது கண் இன்னும் மோசமான பாதிப்பில் இருந்து தப்பியிருக்கிறது என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார்கள் மார்க் குடும்பத்தினர். மார்க் இடது கண்ணுக்குச் சிகிச்சை எடுத்து வருகிறான்.

ஆஹா! அல்ஃபிக்குத்தான் எவ்வளவு அறிவு!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article8320489.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கடவுள் இல்லையென்று சொன்னால் சிறை!

 
 
masala_2766628h.jpg
 

ரஷ்யாவில் வசிக்கும் விக்டர் க்ரஸ்நோவ் ஓராண்டு சிறைத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார். கடவுள் நம்பிக்கையை நிந்தித்தார் என்ற குற்றச்சாட்டில், அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட இருக்கிறது. 2014-ம் ஆண்டு விகே.காம் என்ற இணைய தளத்தில் கடவுள் எங்கும் இல்லை, பைபிள் என்பது யூதர்களின் தேவதைக் கதைகள் என்றெல்லாம் விவாதங்களை நிகழ்த்தி வந்தார் விக்டர்.

திடீரென்று விக்டரும் அவரது அம்மாவும் முகம் தெரியாதவர்களிடமிருந்து மிரட்டல்களைச் சந்தித்தனர். 2015-ம் ஆண்டு டிமிட்ரி, அலெக்சாண்டர் என்ற இரு நண்பர்கள் விக்டருக்கு எதிராகக் குற்றங்களைச் சுமத்தினர். தீவிர மத உணர்வாளர்களை விக்டர் புண்படுத்திவிட்டார் என்று வழக்கு பதிவு செய்தனர். விக்டரை ஒரு மாதம் விசாரித்தனர்.

மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். மருத்துவர் இயல்பான மனிதர் என்று சான்றிதழ் வழங்கிவிட்டார். விசாரித்த குழு, விக்டர் எந்தத் தனி மனிதரையும் புண்படுத்தவில்லை, அவருடைய கருத்துகள் மத நம்பிக்கையுடையவர்களை வருத்தப்பட வைத்திருக்கிறது என்று அறிக்கை கொடுத்தது. 2012-ம் ஆண்டு முதல் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துகிறவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். இந்தக் காரணத்துக்காகவே விக்டர் தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார். ஆரம்பக் கட்ட விசாரணையில் விக்டரின் தரப்பைச் சொல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மார்ச் 15 அன்று விசாரணை நடைபெற இருக்கிறது. ’’மத நம்பிக்கை உடையவர்களுக்கு இருக்கும் அத்தனை உரிமையும் மத நம்பிக்கை அற்றவர்களுக்கும் இருக்கிறதுதானே? அவர்கள் கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கும்போது எனக்கும் இல்லை என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். என்னுடைய விவாதங்களில் நான் தரக்குறைவாகவோ, தனிப்பட்ட முறையிலோ வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.

என்னுடைய வார்த்தைகளை விசாரணை செய்பவர்கள் வேறு விதங்களில் கையாள்கிறார்கள். சில பகுதிகளை நீக்கியிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த விவாதத்தை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே பார்த்தார்கள் என்றால் என் மீது சுமத்தப்பட்ட குற்றம் அர்த்தமற்றது என்பது அனைவருக்கும் புரியும். என்னைப் போல இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது. நாத்திகர்களைப் பாதுகாக்கும் சட்டம் கொண்டு வரவேண்டும்’’ என்கிறார் விக்டர்.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை…

கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரெட்ரிக் காலிசன் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்க இடமின்றி, வேலையின்றி தவித்து வருகிறார். யாராவது பணம் கொடுத்தால் மறுத்து விடுகிறார். எல்லோருக்கும் தன்னுடைய சுயவிவரக் குறிப்பைக் கொடுக்கிறார். தன் திறமைக்கு ஏற்ற வேலை இருந்தால் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார். பல ஆண்டுகள் உணவு விடுதிகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. அதற்கான அடையாள அட்டையும் வைத்திருக்கிறார்.

‘’எனக்குப் பிச்சை எடுப்பது பிடிக்காது. எனக்குத் தெரிந்த, திருப்தியான வேலை ஒன்று யாராவது கொடுத்தால் செய்யத் தயாராக இருக்கிறேன். எல்லோரும் ஏதாவது பணம் கொடுத்துவிட்டு, கடந்து செல்லவே நினைக்கின்றனர். எனக்குப் பணம் தேவையில்லை. ஒரு வேலை கொடுத்தால், நானே உழைத்துச் சாப்பிட்டுக்கொள்வேன். ஒரு வேலை கிடைத்து, சம்பாதித்து சாப்பிடும் வரை என் வயிறு பொறுமையாக இருப்பதில்லை. அதனால் ’வேலை வேண்டும், பசிக்கிறது’ என்று ஒரு அட்டையில் எழுதி பிடித்தபடி அமர்ந்திருப்பேன்’’ என்கிறார் பிரெட்ரிக். இவரைப் பார்த்து மைக்கேல் மார்டின் என்பவர் ஆர்வமாகி, ஃபேஸ்புக், இணையம், நண்பர்கள் என்று பலவிதங்களிலும் வேலைக்கு முயற்சி செய்து வருகிறார்.

விரைவில் வேலை கிடைக்கட்டும் பிரெட்ரிக்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/article8326746.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நாய்க்குக் கவசம் அளித்த வள்ளல்!

 
 
masala_2767756f.jpg
 

கலிபோர்னியாவைச் சேர்ந்த பால், பமீலா மோட் இருவரும் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்கள். இந்த நாயை கயோடி என்ற நரி வகையை ஒத்த விலங்குகள் அடிக்கடி காயப்படுத்தி விடுகின்றன. அதனால் மிகவும் கவலை அடைந்த பால் ஒரு புது வழியைக் கண்டுபிடித்தார். நாயின் முதுகைச் சுற்றிலும் ஒரு பிளாஸ்டிக் கவசத்தை உருவாக்கினார்.

அதில் பிளாஸ்டிக் குச்சிகளையும் உலோகத்தால் ஆன கூர்முனைகளையும் இணைத்தார். இந்தக் கவசத்தை நாயின் முதுகில் கட்டினார். தூரத்தில் இருந்து வரும் எந்த விலங்கும் நாயின் உருவத்தைக் கண்டு திகைக்கும். அருகில் வரவே அஞ்சும். அதையும் மீறி நாய் மீது பாய்ந்தால் பிளாஸ்டிக் குச்சிகள் குத்தும். விலங்குகள் நாயை விட்டு அகன்று விடும். ’’எங்கள் நாயைப் பார்த்த நண்பர்கள் தங்கள் நாய்களுக்கும் இந்தக் கவசத்தை உருவாக்கித் தருமாறு கேட்டனர். ’கயோடி வெஸ்ட்’ என்ற பெயரில் ஒரு புதிய தொழிலையே ஆரம்பித்துவிட்டோம்.

அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தற்காப்பு முட்களை இணைக்கிறோம். அதற்கேற்ப விலையையும் நிர்ணயிக்கிறோம். நாயை நேசிக்கும் அனைவரும் இந்தக் கவசத்தை வாங்கி விடுவதால், தொழில் சிறப்பாகச் செல்கிறது’’ என்கிறார் பால்.

நாய்க்குக் கவசம் அளித்த வள்ளல் வாழ்க!

கென்ய கிராமம் ஒன்றில் புதைகுழிக்குள் தவறி விழுந்துவிட்டது யானை. குழியில் இருந்து வெளியே வருவதற்கு எவ்வளவோ போராடியது. ஆனால் முடியவில்லை. யானையின் அலறலைக் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். தாகத்தால் தவித்த யானைக்கு 100 லிட்டர் தண்ணீர் வரை கொடுத்தனர். வனத்துறையினர் வந்து, நீண்ட நேரம் போராடி, யானையை வெளியே இழுத்து வந்தனர். சிறு காயங்களுடன் யானை உயிர் பிழைத்தது.

ஓர் உயிரைக் காப்பாற்றிய கிராமத்துக்கு நன்றி!

அமெரிக்காவில் உள்ள ஹெண்டர்சன் நகரில் ’Bad Owl’ என்ற பெயரில் ஒரு காபி ஷாப் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இங்கே வரிசையில் காத்திருந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள். காரணம், பேட் அவுல் காபி ஷாப், ஹாரி பாட்டர் தீமில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 2 வாரங்களிலேயே உலகம் முழுவதும் இந்த காபி ஷாப் பிரபலமாகிவிட்டது. ’’நான் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் வேகமாக இங்கே வந்தேன். ஒரு மணி நேரம் வரிசையில் நின்ற பிறகே என்னால் காபி ஷாப் உள்ளே நுழைய முடிந்தது. ஆனாலும் எனக்கு அதில் வருத்தம் இல்லை. நான் ஹாரி பாட்டரின் தீவிர ரசிகை’’ என்கிறார் ஷெல்பி.

பல ஆண்டுகளுக்கு ஹாரி பாட்டரை அசைக்க முடியாது!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D/article8330798.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இவரல்லவோ நல்ல கணவர்?!

 
 
masala_2768990f.jpg
 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகானத்தில் வசிக்கும் டாமி சொன்னென் குடும்பத்தினருக்கு கடந்த 4 தலைமுறைகளாக கால்நடைகள் வளர்ப்பதுதான் முக்கியத் தொழிலாக இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு இந்த கால்நடைப் பண்ணைகள் எல்லாம் வீட்டு விலங்குகளின் பாதுகாப்பு மையங்களாக மாறிவிட்டன! 6 ஆண்டுகளுக்கு முன்பு ரெனீ என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் டாமி. ரெனீக்கு விலங்குகள் மீது அளவற்ற அன்பு. விலங்குகளுக்கு பெயர் சூட்டினார்.

விலங்குகளிடம் அன்பாகப் பேசினார். விலங்குகளிடம் இப்படி அன்பு வைக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் டாமி. ஆனால் ரெனீயின் அன்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டாமிக்கு வேறு வழியில்லை. தன்னை மாற்றிக்கொள்ள முடிவு செய்தார். குடும்பமே ‘வீகன்’ உணவுக்கு மாறியது. அதனால் பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய், இறைச்சி சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

“நான் விலங்குகளைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருந்தேன். ஒருவேளை டாமி ஆடு, மாடுகள் விற்பனை செய்யும் தொழிலை கைவிடவில்லை என்றால் நான் அவரை விட்டு விலகும் முடிவில் இருந்தேன். இறுதியில் நான் வெற்றி பெற்றேன். பல தலைமுறைகளாகப் பார்த்து வந்த ஒரு வேலையை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. எனக்காக இந்தக் காரியத்தைச் செய்த டாமியை நான் மிக உயர்வாக மதிக்கிறேன்’’ என்கிறார் ரெனீ.

ரொம்ப நல்ல கணவரா இருக்கீங்களே டாமி!

வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் வசிக்கும் லீ பாம் கா டி கடல் கன்னி உடையில் இணையத்தைக் கலக்கி வருகிறாள். 6 மாதக் குழந்தையான லீயின் பெற்றோர் ‘தி மெர்மைட்’ திரைப்படத்தைப் பார்த்தனர். உடனே மிகவும் ஆர்வமாகி, தங்கள் குழந்தைக்கும் கடல் கன்னி ஆடையை அணிவித்து, படங்கள் எடுத்தனர். இந்தப் படங்கள் கடந்த வாரம் இணையத்தில் சூறாவளியாகக் கிளம்பி, பல்லாயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகின்றன!

இந்தக் கடல் கன்னியை யாருக்குத்தான் பிடிக்காது!

இயற்கையில் யாரும் குறையற்றவர்களாக இருக்க முடியாது’ என்பதை மையமாக வைத்து, ஒழுங்கற்ற வடிவங்களில் விளையும் காய்கள், பழங்களை விற்பனை செய்து வருகிறது கனடாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஒன்று. இந்தக் காய்களும் பழங்களும் சாதாரண காய், பழங்களின் விலையை விட 30 சதவிகிதம் குறைவாக இருக்கின்றன.

“பொதுவாக மக்கள் ஒழுங்கற்ற உருவம் கொண்ட காய்கள், ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கும் காய்களை வாங்க மாட்டார்கள். ஆனால் எங்கள் சூப்பர் மார்க்கெட்டில் இவற்றை விற்பனை செய்து வருகிறோம். ஒழுங்கற்ற வடிவமாக இருந்தாலும் இந்தக் காய்களிலோ, பழங்களிலோ சுவை குன்றுவதில்லை, கெடுதல் இல்லை என்பதைப் புரிய வைத்தோம். இந்த விழிப்புணர்வுக்குப் பிறகு ஒழுங்கற்ற வெங்காயம், குடை மிளகாய், காளான் போன்றவற்றையும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். இயற்கை அன்னை எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக வடிவமைத்து விடுவதில்லை. இவற்றைக் கண்களை மூடிக் கொண்டு உண்டால் எந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணரப் போவதில்லை’’ என்கிறார் இந்த சூப்பர் மார்க்கெட்டின் துணைத் தலைவர் இயான் கார்டன்.

உருவத்தைக் கண்டு எடை போடக்கூடாது!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article8334773.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மலைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் விடுதி!

 
 
masala_2770616f.jpg
 

மெக்ஸிகோவில் விநோதமான இடத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது காப்பர் கேன்யன் காக்டெயில் பார். பஸாசியாசிக் அருவிக்கு எதிர்ப்புறம் இருக்கும் உயரமான மலையின், பக்கவாட்டில் இந்த விடுதி கட்டப்பட்டிருக்கிறது. மலையில் இருந்து கட்டிடம் வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. இதன் தரைத்தளம் முழுவதும் கண்ணாடியால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் நீச்சல் குளமும் உண்டு. இந்த விடுதிக்குச் செல்வதென்றால், கயிற்றைப் பிடித்துக்கொண்டு மலையேறிச் செல்ல வேண்டும்.

உணவோடு, எதிரில் கொட்டும் அருவியை ரசிக்கலாம். சாப்பிட்டு முடித்தால், மொட்டை மாடிக்குச் சென்று இயற்கை அழகை ரசித்துக்கொண்டே அமர்ந்திருக்கலாம். கண்ணாடி உடைந்துவிடுமோ என்ற பயம் ஒருவிதமான அமிலத்தை வயிற்றில் சுரக்கும். ஆனால் எந்த ஆபத்தும் நேராது என்கிறார்கள் விடுதியின் உரிமையாளர்கள். துபாயின் புர்ஜ் கலிஃபா உலகின் உயரமான விடுதி என்ற பெயரை 2011-ம் ஆண்டில் இருந்து பெற்றிருக்கிறது. இனி காப்பர் கேன்யன் அந்த இடத்தைப் பிடிக்கலாம் என்கிறார்கள்.

எவ்வளவு உயரமான இடத்தையும் மனிதர்கள் விட்டு வைப்பதில்லை…

அமெரிக்காவில் ஏழை எளிய மக்களுக்காக உணவுகளை இலவசமாக வழங்கி வந்த சூப் கிச்சன் ஒன்று, தரமான உணவு விடுதியாக மாற்றம் அடைந்திருக்கிறது. எபிஸ்கோபல் கம்யூனிட்டி சர்வீசஸ் என்ற நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக இந்த சூப் கிச்சனை நடத்தி வந்தது. இது கடந்த பிப்ரவரி மாதம் புதிய அவதாரம் எடுத்தது. விடுதியின் அமைப்பு, மேஜை, நாற்காலி, உள் அலங்காரம், உணவுகள் என்று ஒரு தரமான உணவு விடுதிக்குரிய அத்தனை அம்சங்களோடு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணியிலிருந்து 2 மணி வரை இங்கே உணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

வாயிலில் சாப்பிட வருகிறவர்களை அன்புடன் வரவேற்கிறார்கள். நாற்காலியில் அமர வைத்து, அன்றைக்குரிய சிறப்பு உணவுகளைச் சொல்கிறார்கள். விரும்பியதைக் கேட்டுச் சாப்பிட வேண்டியதுதான். புகழ்பெற்ற செஃப் மைக்கேல் கரியின் தலைமையில் இந்த உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. உணவுகள் சுடச் சுடப் பரிமாறப்படுகின்றன. “இந்த விடுதி ஏழை எளிய மக்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களும் வந்து சாப்பிடலாம். ஆட்சேபம் இல்லை.

தினமும் உணவுகள் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் சூப் கிச்சன் போல இந்த விடுதி சலிப்பை ஏற்படுத்தாது. ஆரோக்கியமான, சுவையான உணவுகளைத் தரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்கள் விடுதிக்கு மாணவர்கள் பயிற்சிக்காகவும் தன்னார்வலர்கள் சேவை செய்யும் நோக்கோடும் வந்து வேலை செய்கிறார்கள். யார் வேண்டுமானாலும் சாப்பிட வரலாம். ஆனால் வரிசையில் நின்று, உள்ளே நுழைய வேண்டும் என்பதுதான் ஒரே கட்டுப்பாடு.

ஏழைகளின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பதற்குத்தான் இத்தனை பேரும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இங்கே உணவு மட்டுமில்லாமல், அன்பு, கனிவு, அக்கறை, மரியாதை எல்லாம் கூடுதலாகக் கிடைக்கும். நானும் ஒருகாலத்தில் சூப் கிச்சனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன்தான். இன்று அதைத் திருப்பி அளிக்கிறேன்’’ என்கிறார் இதன் டைரக்டர் மேண்டி கருசோ யானே.

அடடா! இதைச் செய்ய எவ்வளவு பெரிய மனம் வேண்டும்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/article8340571.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: குத்து வாங்கியவர்கள் வீட்டில் குத்து விடாமல் இருந்தால் சரி...

 
masala_2771931f.jpg
 

சீனாவின் லாவோஜுன்ஷான் கிராமத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் ஒரு நிகழ்வாக கணவர்கள் தங்கள் மனைவியரை எப்படி அக்கறையோடு நடத்துகிறார்கள் என்பதை அறிவதற்காக ஒரு போட்டி நடத்தப்பட்டது. கணவர்கள் குத்துச் சண்டை பயிற்சி பெறும் ‘பன்ச் பேக்’ உள்ளே நின்று கொண்டார்கள். மனைவியரிடம் “உங்கள் கணவர் மீது கோபம் இருந்தால், கோபம் தீரும் வரை குத்துங்கள்’’ என்று சொல்லிவிட்டார்கள்.

கையுறையுடன் ஏராளமான பெண்கள் வரிசையில் காத்திருந்தார்கள். ஆண்கள் பயத்துடன் தங்கள் மனைவியைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். சில பெண்கள் குத்துவது போல நடித்துவிட்டு, சென்றுவிட்டனர். சிலர் வலிக்காதது போலக் குத்தினர். இந்தக் கணவர்கள் எல்லாம் சந்தோஷமாகத் தங்கள் மனைவியை நன்றியுடன் பார்த்துச் சிரித்தனர். பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கோபத்தைக் காட்டி நிஜமாகவே குத்துவிட்டனர். நிஜக் குத்து வாங்கியவர்கள், தங்களை மாற்றிக்கொண்டு மனைவியிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

குத்து வாங்கியவர்கள் வீட்டில் குத்து விடாமல் இருந்தால் சரி…

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் லாரல் கேன்யன் நிறுவனம் விலங்குகளுக்காகவே பிரத்யேகமாக இசையை உருவாக்கி, வெளியிட்டு வருகிறது. 1999-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. விலங்குகளின் தகவல் பரிமாற்றத்தைக் கண்காணித்து, ஆராய்ச்சி செய்து, அவற்றுக்கு ஏற்றபடி இசையை உருவாக்கி, வெளியிட்டு வருகிறது.

“விலங்குகளை நேசிக்கக்கூடியவர்கள் எல்லாம் இசையை நேசிக்கக்கூடியவர்களாக இருந்தனர். மனிதர்கள், இசை, விலங்குகள் மூன்றையும் இணைத்து, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகிறேன். ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு விதமான இசை. மகிழ்ச்சி, கோபம், விளையாட்டு, தூக்கம் போன்ற சூழலுக்கு ஏற்ற இசையை உருவாக்கியிருக்கிறோம். இந்த இசையைக் கேட்டால் விலங்குகள் தங்கள் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துகின்றன. விலங்குகளுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் போன்றவர்களை உலகம் முழுவதும் இருந்து பயன்படுத்திக்கொள்கிறோம். இசை தயாரானதும் எங்கள் இணையதளத்தில் டிரெய்லர் வெளியிடுவோம். அதைக் கேட்ட பிறகு எங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும்.

நாய், பூனை, கிளி, கொரில்லா போன்ற பல விலங்குகளுக்கும் இசையை வெளியிட்டு இருக்கிறோம். ஆனாலும் நாய்களுக்குத்தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறோம். நாய்களைப் போல இசையைக் கேட்கக்கூடிய விலங்கு வேறு இல்லை. அதிலும் அழகற்ற, ஆதரவற்ற நாய்கள் மனிதர்களின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்குகின்றன. இந்த நாய்களுக்காகவே சிறப்பு இசையை வெளியிட்டிருக்கிறோம். இந்தப் பாடல்களைக் கேட்கும்போது அவற்றின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. ஓரிடத்தில் ஆயிரம் நாய்கள் இருந்தாலும் இந்த இசையைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன’’ என்கிறார் இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஸ்கைப் ஹெய்ன்ஸ்.

இன்னும் கொஞ்ச நாளில் நாய்களே இசையமைக்குமோ!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/article8345847.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: இனி காபியைக் குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்!

 
coffee_2772979f.jpg
 

சான் பிரான்சிஸ் கோவைச் சேர்ந்த ஜியோஃப்ரே வூ, மைக்கேல் பிராண்ட் இருவரும் காபி பிரியர்களுக்கு ஒரு புதிய வழியைக் கண்டுபிடித் திருக்கிறார்கள். இந்த காபியைக் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை, வாயில் போட்டுச் சுவைத்தால் போதும். காபி குடித்த திருப்தி வந்துவிடும். ’Go Cube’ என்ற பெயரில் கஃபின் சேர்த்த வில்லைகளாக இந்த காபி கிடைக்கிறது. 35 கலோரி உள்ள இந்த வில்லையைச் சாப்பிட்டால், ½ கப் காபி குடித்ததற்குச் சமமானது. இந்த காபி வில்லைகள் நூறு சதவிகிதம் வீகன் உணவுப் பொருளாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு வில்லையில் 50 மி.கி. கஃபின், 10 மி.கி. வைட்டமின் பி6, 100 மி.கி. எல்-தியானின், 6 கிராம் சர்க்கரை போன்றவை உள்ளன. 3 விதமான சுவைகளில் கிடைக்கின்றன. 4 வில்லைகள் கொண்ட 6 பாக்கெட்களின் விலை 1,400 ரூபாய். ஒரு காபியின் விலை 115 ரூபாய். மிகப் பெரிய கடைகளில் காபி குடிப்பதை விட இது விலை மலிவானது என்கிறார் மைக்கேல். காபி வில்லைகளைப் பரிசோதித்த ஓர் உணவு இதழ், இது பாதுகாப்பானது, இதைச் சாப்பிட்டால் புத்துணர்வு கிடைக்கிறது என்று சொல்லியிருக்கிறது.

இனி காபியைக் குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்!

டென்மார்க்கில் ‘மனித நூலகம்’ ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. புத்தகங்களைப் படிக்கும்போது திடீரென்று தோன்றும் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்காது. ஆனால் ’மனித நூலகம்’ அந்த இடைவெளியை இட்டு நிரப்புகிறது. மனித நூலகத்துக்குச் சென்று, பட்டியலில் இருக்கும் புத்தகங்களைப் பார்க்க வேண்டும். எந்தப் புத்தகத்தைப் படிக்க நீங்கள் விரும்புகிறீர்களோ, அதைத் தேர்வு செய்து சொல்ல வேண்டும். பிறகு கதை சொல்லும் அறைக்குள் அனுப்பி வைப்பார்கள். அங்கே ஒரு மனிதர் நீங்கள் விரும்பிய புத்தகத்தைப் படித்துக் காட்டுவதற்கு காத்திருப்பார். ½ மணி நேரத்தில் ஒரு புத்தகத்தைச் சொல்லி முடித்துவிடுவார். இடையில் நிறுத்திக் கேள்விகள் கேட்கலாம். அதற்குப் பதில் கிடைத்தவுடன் புத்தகத்தைத் தொடரலாம். நாடோடி கதைகள், இராக் போர், ஒலிம்பிக், சுய வரலாறு என்று பட்டியலில் இருக்கும் எந்தப் புத்தகத்தையும் மனித நூலகம் மூலம் அறிந்துகொள்ள முடியும். 2007-ம் ஆண்டு முதல் ‘வன்முறையைத் தடுப்போம்’ என்ற பெயரில் இயங்கி வந்த தொண்டு நிறுவனம், இந்த மனித நூலகத்தை ஆரம்பித்திருக்கிறது. மனிதர்கள் சக மனிதர்களிடம் மனம் விட்டு உரையாடுவதில்லை. அதனால் மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு இனங்கள் கொண்ட மனித இனத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில் இதை ஆரம்பித்திருக்கிறார்கள். மனித நூலகத்தின் முதல் நிகழ்வு கோபென்ஹேகனில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் 50 நாடுகளில் மனித நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் கதை சொல்ல யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் வந்து கதை சொல்லலாம். யாருக்குக் கேட்க விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் வந்து கேட்கலாம். புத்தகத்தைப் பார்ப்பதற்குப் பதில், கதை சொல்பவரின் வாயைப் பார்க்கப் போகிறீர்கள், வேறு ஒன்றும் வித்தியாசம் இல்லை என்கிறார்கள் இந்த அமைப்பினர். முன்முடிவோடு கேட்கப்படும் கேள்விகள், குதர்க்கமான கேள்விகள்தான் இந்த மனித நூலகத்தின் மிகப் பெரிய சவால்.

அட, வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது இந்த மனித நூலகம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article8348580.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: எல்லாத்துலயும் பாதி! 

 
masala_2449420f.jpg
 

ஜெர்மனியில் வசிக்கிறார் பிரெட்டி க்ரேஸி. அவருடைய மனைவி லாரா, 12 ஆண்டுகள் மணவாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து சென்றுவிட்டார். பிரெட்டிக்கு மனைவியின் பிரிவைத் தாங்கவும் முடியவில்லை, அந்தச் சோகத்திலிருந்து மீளவும் முடியவில்லை. கடைசியில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இரண்டாகப் பிரித்துவிட்டார்.

அதாவது டிவி, ஐபோன், லேப்டாப், சோஃபா, நாற்காலி, சைக்கிள், அலமாரி, கரடி பொம்மை, தபால் பெட்டி என்று ஒன்று விடாமல் பவர் மெஷினை வைத்து இரண்டாகப் பிரித்துவிட்டார். வாசலில் கார் நின்றுகொண்டிருந்தது. அதையும் இரண்டாக்கினார்.

`உன்னுடனான அழகான வாழ்க்கைக்கு என்னுடைய அன்பளிப்பு’ என்று குறிப்பிட்டு, ஒரு பாதிப் பொருட்களை லாராவுக்கு அனுப்பி வைத்தார். தன்னுடைய மீதிப் பாதிப் பொருட்களை விற்பனைக்கு வைத்துவிட்டார். லட்சக்கணக்கான மதிப்புள்ள கார், 2 யுரோவுக்குத்தான் விற்பனையாகியிருக்கிறது. தற்போது பிரெட்டியின் மனம் அமைதி அடைந்திருக்கிறது.

ஒரு பிரிவு எத்தனை வலியைத் தருகிறது…

செயற்கைக் கால்களுடன் வலம் வருபவர்களுக்கு ஓர் இனிமையான செய்தி. என்னதான் செயற்கைக் கால் வேலை செய்தாலும் இயற்கையான கால்களைப் போல உணர்வுகளை அவற்றால் உணர்ந்துகொள்ள இயலாது. அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், செயற்கைக் கால்கள் மூலம் உணரும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

வுல்ஃபாங் ராங்கர் என்பவர் உணரக்கூடிய முதல் செயற்கைக் காலை, பொருத்தி யிருக்கிறார். புல்வெளி, மணல், கற்கள் என்று எதன் மீது நடந்தாலும் செயற்கைக் காலால் அதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தன்னுடைய கால் போலவே இருப்பதாகச் சொல்கிறார் வுல்ஃபாங்.

நல்ல கண்டுபிடிப்பு!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/article7349675.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: 2 மூக்குகள் கொண்ட நாய்!

 
 
masala_2775358f.jpg
 

கலிபோர்னியாவைச் சேர்ந்த டோட் ரேயிடம் 2 மூக்குகள் உள்ள டோபி என்ற நாய் இருக்கிறது! லாஸ் ஏஞ்சல்ஸில் தெருவில் ஆதரவு இன்றி சுற்றிக் கொண்டிருந்த, இந்த நாயைத் தத்தெடுத்துக்கொண்டார் டோட் ரே. ’’இயல்பாக இல்லாத உயிரினங்களைச் சேகரிப்பதும், அவற்றை வைத்து நிகழ்ச்சி நடத்துவதும்தான் என்னுடைய வேலை. என்னிடம் இரண்டு தலைகள், 8 விரல்கள் போன்று வித்தியாசமான உயிரினங்கள் இருக்கின்றன. இப்போது இரண்டு மூக்குகள் உடைய நாயைத் தத்தெடுத்திருக்கிறேன்.

எந்த 2 மூக்குகளால் இந்த நாய் ஆதரவற்று தெருவில் அலைந்ததோ, அதே மூக்குகளால் இன்று உலகப் புகழ் பெற்றுவிட்டது. டோபியின் புகைப்படங்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இரண்டு தலை உயிரினங்கள் சேகரிப்பில் நான் கின்னஸ் சாதனை நிகழ்த்திவிட்டேன். உருவத்தைக் கண்டு குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதைத்தான் என் நிகழ்ச்சிகள் மூலம் உலகத்துக்குச் சொல்லி வருகிறேன்’’ என்கிறார் டோட் ரே.

ரெண்டு மூக்கு டோபி வெரி க்யூட்!

பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டெபானி ரிச்சர்ட் பூச்சிகளைச் சேர்த்துப் புதுமையான பாஸ்தாவை உருவாக்கியிருக்கிறார். இன்று பூச்சிகளில் அதிக புரோட்டீன் இருப்பதாகக் கருதுவதால், தன்னுடைய பூச்சி பாஸ்தாவுக்கு அளவுக்கு அதிகமான ஆதரவு இருக்கும் என்று நம்பினார். ஆனால் ஆர்டர்கள் கிடைப்பது மிகக் கடினமாக இருக்கிறது. ’’எதிர்காலத்தில் பூச்சிகளில் இருந்துதான் அதிக அளவு புரோட்டீன்கள் மனிதர்களுக்குக் கிடைக்க இருக்கிறது. நான் அதைக் கொஞ்சம் முன்னால் ஆரம்பித்துவிட்டேன். 2012ம் ஆண்டு பூச்சி பாஸ்தாவை நான் உருவாக்கியபோது, விளையாட்டு வீரர்களுக்கு இது வரப்பிரசாதம் என்று கொண்டாடப்பட்டது.

ஆனால் படிப்படியாகப் பூச்சி பாஸ்தாவுக்கு ஆதரவு குறைந்து வருகிறது. 7 சதவிகிதம் வெட்டுக்கிளிகள், 93 சதவிகிதம் கோதுமை மாவு இவற்றுடன் முட்டைகளைச் சேர்த்து பாஸ்தாவை உருவாக்குகிறேன். இளம் பழுப்பு நிறத்தில் பாஸ்தாவைப் பார்க்கவே அழகாக இருக்கும். சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மிகப் பெரிய மாற்று உணவாக இது இருக்கும். விரைவில் என் நிறுவனத்தை விரிவாக்கப் போகிறேன். பூச்சி பாஸ்தா பற்றிய விழிப்புணர்வு கொண்டு வர இருக்கிறேன்’’ என்கிறார் ஸ்டெபானி ரிச்சர்ட்.

பழகும் வரைதான் இந்தத் தயக்கம்…

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆஸ்டின் ஷீல்ட் என்ற நிறுவனம் குண்டுகள் துளைக்காத சோஃபாக்களையும் நாற்காலிகளையும் உருவாக்கியிருக்கிறது. ’’திடீரென்று நிகழும் துப்பாக்கிச் சூடுகளின்போது ஒளிந்துகொள்வதற்கு இடம் இருக்காது. அநியாயமாக ஏராளமான உயிர்களை இழந்து இருக்கிறோம். எதிர்பாராத தாக்குதல்கள் நிகழும்போது, சட்டென்று சோஃபா, நாற்காலிகளின் பின் ஒளிந்துகொண்டு தப்பிவிடலாம். அதற்கு ஏற்றவாறு இவற்றைத் தயாரித்து இருக்கிறோம்.

மக்கள் அதிகம் வந்து செல்லும் விடுதிகள், தூதரகங்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களில் இந்த சோஃபாக்களையும் நாற்காலிகளையும் வைக்கலாம். ஒரு சில உயிர்களைக் காப்பாற்ற முடிந்தாலும் அது நல்ல விஷயம்தானே! சாதாரண சோஃபா, நாற்காலிகளை விட விலை மிக அதிகம். அதாவது ஒரு சோஃபா 4.6 லட்சம் ரூபாய்! பாதுகாப்பு என்பதைக் கருத்தில் கொண்டால், இது பெரிய செலவாக இருக்காது’’ என்கிறார் ஆஸ்டின் ஷீல்ட் உரிமையாளர்.

மொத்த கட்டிடத்துக்கும் பாதுகாப்பு கொடுப்பது, இதை விட மலிவாக இருக்கும் போலிருக்கே!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-2-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/article8356004.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வேற்று கிரகவாசி... ரேமுன்டோ... பிரமிடு... புரியாத புதிர்!

 
masala_2776507f.jpg
 

மெக்சிகோவைச் சேர்ந்த விவசாயி ரேமுன்டோ கோரோனா. 22 அடிகள் உயரம் கொண்ட அஸ்டெக் பிரமிடு ஒன்றை 74 கி.மீ. தூரத்தில் மெக்சிகோ, அமெரிக்கா எல்லையில் உள்ள பாலைவனத்தில் கட்டியிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு வேற்று கிரக மனிதர் ஒருவர் வந்து, இந்தப் பிரமிடை உருவாக்கச் சொன்னதாகச் சொல்கிறார் ரேமுன்டோ.

‘’ஒரு நாள் என் வீட்டுக்கு மிக உயரமான மனிதர் ஒருவர் வந்தார். அவரது கண்கள் தேன் நிறத்தில் மின்னின. வெள்ளை முடி. தன்னுடைய பெயரை ஹெருலேகா என்றும் நெஃப்லின் என்ற கிரகத்தில் இருந்து வருவதாகவும் சொன்னார். நம் பூமியை விட 20 மடங்கு பெரிதான கிரகம். ஓரியன் விண்மீன் தொகுப்பில் அது இருக்கிறது என்றார். அப்போது எனக்கு 33 வயது. என் மனைவி பெண் குழந்தை பெற்றெடுத்த நேரத்தில் என் கனவில் அந்த வேற்று கிரக மனிதர் தோன்றினார். அடுத்த சில நாட்களில் என் வீட்டின் கதவை அதே மனிதர் தட்டினார். நான் பயந்து ஓடப் போனேன். அவர் என்னைத் தடுத்தார். கடவுளா என்று கேட்டேன். நான் உன்னைப் போல ஒரு மனிதன் என்றார்.

அவர்தான் இந்தப் பிரமிடைக் கட்டச் சொன்னார். காற்று, மழை, புயலால் சேதமடையாத, வானை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பிரமிடைத் தனக்காக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் கிரகத்தில் பூமியைப் போலவே மனிதர்கள் வசிக்கிறார்கள். ’’ என்கிறார் ரேமுன்டோ. பிரமிடு கட்டுவது மிகவும் கடினமான பணி. இதற்காகப் பல்வேறு கணிதங்களைப் போட வேண்டியிருக்கும்.

அதுவும் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ரேமுன்டோவால் அந்தக் கணக்குகள் போடுவது எளிதல்ல. இதை எவ்வாறு ரேமுன்டோவால் கட்டி முடிக்க முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை அஸ்டெக் மக்களின் வழிதோன்றல் என்பதால், மரபணுவிலேயே இந்தத் திறமை இருந்திருக்குமோ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வேற்று கிரகவாசி… ரேமுன்டோ… பிரமிடு… புரியாத புதிர்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது ஒரு வித்தியாசமான புத்தர் ஆலயம். வாட் சம்ப்ரன் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் தங்கத்தால் ஆன மிகப் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. இது தவிர, ஏராளமான புத்தர் சிலைகள் ஆலயத்துக்குள் இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்ப்பது 17 மாடிகள் கொண்ட, இளம் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட கோபுரத்தைச் சுற்றியிருக்கும் ராட்சத டிராகன்தான். டிராகனின் உடலுக்குள் படிகள் இருப்பதால், அதன் மூலம் மாடிகளுக்குச் செல்ல முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காகச் சில மாடிகளுக்குப் பொது மக்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த ஆலயத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் அதிகம் இல்லை. இதை யார், எப்போது கட்டினார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

அழகான ஆலயத்தைக் கட்டிவிட்டு, தங்களை யார் என்று காட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/article8360156.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

On 14/03/2016 at 2:41 PM, நவீனன் said:

ஜெர்மனியில் வசிக்கிறார் பிரெட்டி க்ரேஸி. அவருடைய மனைவி லாரா, 12 ஆண்டுகள் மணவாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து சென்றுவிட்டார். பிரெட்டிக்கு மனைவியின் பிரிவைத் தாங்கவும் முடியவில்லை, அந்தச் சோகத்திலிருந்து மீளவும் முடியவில்லை. கடைசியில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இரண்டாகப் பிரித்துவிட்டார்.

அதாவது டிவி, ஐபோன், லேப்டாப், சோஃபா, நாற்காலி, சைக்கிள், அலமாரி, கரடி பொம்மை, தபால் பெட்டி என்று ஒன்று விடாமல் பவர் மெஷினை வைத்து இரண்டாகப் பிரித்துவிட்டார். வாசலில் கார் நின்றுகொண்டிருந்தது. அதையும் இரண்டாக்கினார்.

நவீனன் இது அன்பில இல்லை பாதியை மனிசிக்கு கொடுக்க சொல்லி வந்த கோரட் ஓடர் மேலிருந்த கடுப்பில.

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: குறைபாட்டைக் குணமாக்கும் அற்புத பூனை!

 
masala_2777870f.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கும் 6 வயது ஐரிஸ் கிரேஸ், கடுமையான ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு துணையாக மோகி என்ற பூனை செல்லப் பிராணியாக வந்து சேர்ந்தது. விரைவில் ஐரிஸுக்கும் மோகிக்கும் நல்ல நட்பு உருவாகி விட்டது. அதற்குப் பிறகுதான் மெதுவாக பேச ஆரம்பித்தாள் ஐரிஸ். ஒரு துளி நீர் பட்டாலே பயப்படும் ஐரிஸ் இன்று குளியல் தொட்டியில் நீச்சலடிக்கிறாள் என்றால் அதற்குக் காரணமும் மோகிதான்.

அவளது பயத்தைப் போக்கி, மெதுவாக நீந்தக் கற்றுக்கொடுத்தது. சாப்பிடுவது, விளையாடுவது, ஓவியம் தீட்டுவது, பிக்னிக் செல்வது, தூங்குவது என மோகியும் ஐரிஸும் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கிறார்கள். ஐரிஸை கவனித்துக்கொண்டே இருக்கிறது மோகி, ஏதாவது ஆபத்து என்றால் எச்சரித்து, காப்பாற்றி விடுகிறது.

“என் மகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாள். மருத்துவம் கொடுக்காத முன்னேற்றம், ஒரு பூனையால் கிடைத்தது. மோகியால் என் மகளின் குறைபாடு பெருமளவு குறைந்துவிட்டது. இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஐரிஸின் ஓவியங்கள் இதுவரை 1.4 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் மோகிதான்” என்கிறார் ஐரிஸின் அம்மா.

ஆஹா! குறைபாட்டைக் குணமாக்கும் அற்புத பூனை!

சிங்கப்பூரைச் சேர்ந்த மெங் ஜியாங், தன்னுடைய 3 நாய்களையும் பாண்டா போல் மாற்றியிருக்கிறார். வெள்ளை நாய்களின் உடல், கண்கள், காதுகளில் கறுப்பு வண்ணத்தைப் பூசியிருக்கிறார். முடிகளை அழகாகக் கத்தரித்துவிட்டிருக்கிறார். பார்ப்பதற்கு அசல் பாண்டாக்களைப் போலவே தெரிகின்றன இந்த மூன்று நாய்கள். நாய்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானபோது கிடைத்த ஆதரவைக் கண்டும் மெங் ஜியாங்கும் அவரது கணவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். தினமும் நாய்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஏராளமானவர்கள் வந்துகொண்டிருந்தனர்.

அவர்களுக்காக ஒரு புதிய தொழிலை ஆரம்பித்தார் மெங் ஜியாங். ஸ்டூடியோவுக்கு வந்து ஆசை தீர போட்டோ எடுத்துக்கொள்ளலாம். அதற்குக் கட்டணம் நிர்ணயித்தார். 3 மணி நேரத்தில் 500 பேர் நாய்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். பின்னர் நாய்களை அழைத்துக்கொண்டு மக்கள் இருக்கும் இடத்துக்கே சென்றால் என்ன என்று மெங் ஜியாங் யோசித்தபோதுதான் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்தார். முதலில் சிலரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இன்றோ சிங்கப்பூர் விலங்குகள் நல அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாய்களின் உடலில் சாயம் பூசுவது நல்லதல்ல. நாயை நாயாக வைத்திருக்காமல் இன்னொரு விலங்காகக் காட்டுவது உரிமை மீறல் என்கிறார்கள். மெங் ஜியாங் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறார்.

“இவை எங்களுக்கு நாய்கள் அல்ல, செல்லக் குழந்தைகள். இவற்றின் மேல் எங்களுக்கு இருக்கும் அக்கறையைவிட வேறு யாருக்கும் இருக்க முடியாது. குழந்தைகளை மாடலாகவோ, நடிக்கவோ வைக்கிறார்களே அப்பொழுது எங்கே போனது இவர்களது இரக்கம்?” என்கிறார் மெங் ஜியாங்.

நாயை நாயாக நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை மெங் ஜியாங்?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88/article8364531.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவுகள் நவீனன்!

பச்சை தான் கைவசம் இல்லை!

என்னிடமும் 'பொன்னம்மா;  என்று ஒரு பூனை இருக்கின்றது!

ஒரு கரப்பொத்தான் கூட வீட்டுக்குள் வர விடாது! ஒரு செல்லமான தட்டுத் தான்! 

அதனைச் சாப்பிடுவதும் இல்லை!

சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு மேலாக உதவி செய்கிறது!

Link to comment
Share on other sites

உலக மசாலா: சக்கர நாற்காலியில் நாட்டைச் சுற்றி வரும் சாகச மனிதர்!

 
masala_2779572f.jpg
 

பெரும்பாலான மக்கள் சக்கர நாற்காலி என்றால் குறைபாட்டின் அடையாளமாகக் கருதுகிறார்கள். ஆனால் அதைத் தன்னம்பிக்கையின் அடையாளமாக நிரூபித்திருக்கிறார் சீனாவைச் சேர்ந்த 29 வயது க்வான் பெங் பேகன். கடந்த 2 ஆண்டுகளாகச் சக்கர நாற்காலியில் சீனாவைச் சுற்றி வந்து, தன்னுடைய நீண்ட கால லட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறார். 2014-ம் ஆண்டு, ஆகஸ்ட் 31 அன்று பெய்ஜிங்கில் தன் பயணத்தை ஆரம்பித்தார். 566 நாட்களில் ஃபுஸோவ் நகரத்தை வந்தடைந்தார். 2,800 கி.மீ. தூரத்தைக் கடந்திருக்கிறார். இத்துடன் அவர் பயணம் நிறைவடையவில்லை.

இன்னும் 1,700 கி.மீ. தூரம் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ’’என் 17வது வயதில் முதுகுத்தண்டில் ஒரு கட்டி அகற்றப்பட்டபோது, என் கால்களின் இயக்கம் முடங்கிப் போனது. ஆரம்பத்தில் இது என்னை மிகவும் பாதித்தது. ஆனால் விரைவில் என்னை மாற்றிக்கொண்டேன். சக்கர நாற்காலியைக் கைகளால் இயக்கும்போது ஆரம்பத்தில் தோள்பட்டைகளில் வலி உயிர் போகும் அளவுக்கு இருக்கும். அதற்காக நான் விட்டுவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தையும் தூரத்தையும் அதிகரித்து, என்னைத் தயார் செய்துகொண்டேன். இன்று சக்கர நாற்காலியில் நீண்ட நெடும் பயணம் செய்தவன் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறேன். இந்தப் பயணத்தில் 6 முறை சக்கர நாற்காலி கவிழ்ந்துவிட்டது.

500 கி.மீ. தூரம் கடந்ததற்குப் பிறகு என் பயணம் ஜாலியாகவும் அற்புதமாகவும் மாறியது. அதற்கு காரணம் ஆங்காங்கே எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்கள்தான். என் பயணத்தில் விரும்பத்தகாத விஷயங்களும் நடந்திருக்கின்றன. உடல் குறைபாடு உடையவர்களுக்கு ஏற்ற வசதிகள் பெரும்பாலும் இல்லாததுதான் வருத்தமாக இருக்கிறது. உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்கோ, உங்கள் லட்சியங்களை அடைவதற்கோ நிச்சயம் சக்கர நாற்காலி ஒரு தடையாக இல்லை என்பதைத்தான் நான் செல்லும் இடங்களில் எல்லாம் நிரூபித்து வருகிறேன்.

சக்கர நாற்காலியில் நாட்டைச் சுற்றி வரும் சாகச மனிதர்!

டுகாங் என்பது கடலில் வாழும் அரிய பாலூட்டி. கடல் பசுவைப் போலத் தோற்றம் கொண்டது. இந்தோனேஷியாவில் இரண்டு டுகாங்குகளைப் பிடித்து, கடலுக்கு அடியே கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள். சுற்றுலாப் பயணிகளைக் கவரவே இந்தச் செயலைச் செய்திருக்கிறார்கள். நீச்சல் வீரர்கள் சிலர் இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டனர். வீடியோ எடுத்தனர். ‘’தாயைக் ஒரு கூண்டிலும் குட்டியை ஒரு கூண்டிலும் அடைத்து வைத்திருந்தார்கள்.

இரண்டும் ஒன்றை ஒன்று பார்ப்பதற்காகத் தவித்தன. வால் பகுதியில் சங்கிலி கட்டப்பட்டிருந்ததால், இழுக்கும்போது காயம் ஏற்பட்டிருந்தது. வீடியோவை எடுத்து புகார் அளித்தோம். உள்ளூர் மீனவர்கள் சிலர் இந்தக் காரியத்தைச் செய்திருப்பது தெரியவந்தது. விலங்குகள் நலத்துறையைச் சேர்ந்தவர்கள் விடுவித்திருக்கிறார்கள்’’ என்கிறார் ஒரு நீச்சல் வீரர்.

சே, என்ன மனிதர்கள் இவர்கள்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/article8369851.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

On 16.3.2016 at 9:43 AM, ஜீவன் சிவா said:

நவீனன் இது அன்பில இல்லை பாதியை மனிசிக்கு கொடுக்க சொல்லி வந்த கோரட் ஓடர் மேலிருந்த கடுப்பில.

 

உண்மை ஜீவன், ஆனால் சில ஊடகங்கள் இப்படி எழுதும்போது நான் அவற்றை மாற்றுவது அழகல்ல.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி..

23 hours ago, புங்கையூரன் said:

அருமையான பதிவுகள் நவீனன்!

பச்சை தான் கைவசம் இல்லை!

என்னிடமும் 'பொன்னம்மா;  என்று ஒரு பூனை இருக்கின்றது!

ஒரு கரப்பொத்தான் கூட வீட்டுக்குள் வர விடாது! ஒரு செல்லமான தட்டுத் தான்! 

அதனைச் சாப்பிடுவதும் இல்லை!

சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு மேலாக உதவி செய்கிறது!

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. இப்படி 2 வரி எழுதும்போதுதான் தெரிகிறது யார் யார் எல்லாம் வாசிக்கிறார்கள் என்று..:)

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: பறவைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பவர்!

 
masala_2780911f.jpg
 

டென்மார்க்கைச் சேர்ந்த கலைஞர் தாமஸ் டாம்போ. தன்னுடைய சிற்பக் கலையை, உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு உதவி செய்வதில் பயன்படுத்தி வருகிறார். மனிதர்கள் மற்ற உயிரினங்களுடன் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காகவே ஆயிரக்கணக்கான பறவை வீடுகளை அமைத்து வருகிறார். உலகம் முழுவதும் 7 ஆண்டுகளில் 3,500 வீடுகளை அமைத்திருக்கிறார்! ‘’பறவைகளும் குறைவான விலங்குகளும் நம் நகரங்களில் தற்போது வசித்து வருகின்றன. அதனால்தான் பறவை வீடுகள் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தேன்.

வீடுகள், விளக்குக் கம்பங்கள், மரங்கள், சுவர்கள் என்று கிடைக்கும் இடங்களில் எல்லாம் பல வண்ண மர வீடுகளை அமைத்து வருகிறேன். பழங்களைச் சாப்பிடும் பறவைகள், நகர் முழுவதும் எச்சங்களைப் போடுகின்றன. அதிலிருந்து வரும் விதைகளால் புதிய மரங்கள், செடிகள் தானாக வளரும் வாய்ப்பு உருவாகிறது. இந்தப் பறவை வீடுகளால் பரபரப்பான நகரத்தில் பறவைகள் பாதுகாப்பாக உணர்கின்றன. மறுசுழற்சி என்பதை மக்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் விகிதம் குறையும். பூமிக்கும் நல்லது. அதனால் ஒரு பயிற்சிப் பட்டறை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு’’ என்கிறார் தாமஸ் டேம்போ. பெரும்பாலான பறவை வீடுகளை ஆந்தை, கிளிகளைப் போலவே உருவாக்கி வைத்திருக்கிறார்! ஒரே ஒரு பறவை வீட்டைத் தனக்காகப் பெரிய அளவில் உருவாக்கி வைத்திருக்கிறார் தாமஸ்.

பறவைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் தாமஸ் வாழ்க!

ஆஸ்திரேலியாவின் பில்பாராவில் உள்ள விட்டென்நூம் அழகான பகுதி, அதே நேரத்தில் மிக ஆபத்தான பகுதியும்கூட. 80 ஆண்டுகளுக்கு முன்பு நீலக் கல்நார் இங்கே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வெட்டி எடுப்பதற்காகச் சுரங்கம் அமைக்கப்பட்டது. கல்நார் அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது. கல்நாரின் மெல்லிய இழைநார்களை வெட்டி எடுக்கும்போது ஏராளமான தூசிகள் காற்றில் கலக்கின்றன. நாளடைவில் குணமாக்க முடியாத புற்றுநோயைத் தோற்றுவித்து விடுகின்றன. 20 ஆயிரம் மக்கள் சுரங்கத்துக்கு அருகில் வாழ்ந்தார்கள். அதில் 2 ஆயிரம் பேர் கல்நார் பாதிப்பு நோய்களால் மரணமடைந்துவிட்டனர். 1966-ம் ஆண்டு இந்தச் சுரங்கம் மூடப்பட்டது.

இதற்குக் காரணம் மனிதர்கள் மீது உள்ள அக்கறை அல்ல. வருமானம் குறைந்துவிட்டதால்தான் மூடப்பட்டது. 1978-ம் ஆண்டு அங்கு வசித்த மக்களை வேறு இடங்களுக்குச் செல்ல அரசாங்கம் ஊக்குவித்தது. ஆனால் சிலர் வெளியேற விருப்பம் இன்றி, அங்கேயே வசித்து வந்தனர். 2006-ம் ஆண்டு வரைபடத்தில் இருந்து இந்தப் பகுதி நீக்கப்பட்டது. ஆபத்துகளை விளக்கி இந்தப் பகுதிகளில் எச்சரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனாலும் இங்கே இன்னும் 3 மனிதர்கள் வசித்து வருகின்றனர்!

ஆபத்து.. உள்ளே வராதே...

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article8374264.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மக்களைத் தேடி வரும் படகு உணவகம்!

 
ulagam_2782133f.jpg
 

பொதுவாகத் தாவரங்களின் தண்டுகளில் காம்புகள் தோன்றி, பூக்கள் பூத்து, காய்த்து, பழங்கள் உருவாகும். ஆனால் Butcher’s Broom என்ற புதர்ச் செடியில் இலைகளின் நடுவில் காம்புகள் தோன்றி பூத்து, காய்த்து, பழமாகின்றன. சிறிய தடிமனான இலைகளுக்கு நடுவே சின்னஞ் சிறிய சிவப்புப் பழம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தாவரங்களின் எந்த விதியையும் இந்தச் செடி மாற்றிவிடவில்லை. இலைகள்தான் இந்தச் செடியில் தண்டுகளாகச் செயல்படுகின்றன. அதாவது தண்டுகள் தட்டையாக இலைகள் போல இருக்கின்றன. தங்களுடைய வேலையைச் சரியாகச் செய்கின்றன. புட்சர்ஸ் ப்ரூம் செடிகள் ஈரானிலிருந்து மத்திய தரைக்கடல், அமெரிக்காவின் தென் பகுதி வரை பரவலாகக் காணப்படுகின்றன. இந்தச் செடியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் அரிப்பு, வீக்கம், மூலம் போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இளம் வேர்களையும் மருந்தாகச் சாப்பிடுகிறார்கள். செடியின் கிளைகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்தால், கசாப்புக்கடைக்காரர் பயன்படுத்தும் துடைப்பம் போல இருந்ததால், ‘புட்சர்ஸ் ப்ரூம்’ என்ற பெயர் வந்தது.

இந்த விநோதமான செடிக்கு இன்னும் நல்ல பெயர் வைத்திருக்கலாம்…

ராளமானவர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, உணவுத் தொழிலில் இறங்கிவருகிறார்கள். டாராவும் சாஷா போயிஸும் சற்று வித்தியாசமானவர்கள். இந்த இளம் தம்பதியர் ‘பிட்ஸா பை’ என்ற நகரும் உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். கரீபியன் கடலில் படகில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. ’’எங்கள் இருவருக்கும் அவரவர் வேலை அலுப்பைத் தந்தது. வாழ்வதற்கு வருமானம் வேண்டும். அந்த வருமானம் கிடைப்பதற்குப் பிடித்த வேலையை அமைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. 10 ஆண்டுகளுக்கு முன் நான் கம்ப்யூட்டர் புரோகிராமர் வேலையை விட்டுவிட்டு, படகு தயாரிக்கும் வேலை செய்துகொண்டிருந்தேன். அங்கேதான் ஆசிரியர் வேலை செய்துகொண்டிருந்த டாராவைச் சந்தித்தேன். 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டோம். இருவரும் ஒரே வேலையில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். உணவுத் தொழில் எங்களை ஈர்த்தது. படகு உணவகம் என்று முடிவு செய்தோம். பழைய படகு ஒன்றை வாங்கி, சரி செய்வதற்கே இரண்டு ஆண்டுகள் பிடித்தன. பாத்திரங்கள், இயந்திரங்கள் எல்லாம் தயார். ஆனால் பிட்ஸா எப்படிச் செய்வது என்பது எங்களுக்குத் தெரியாது. இருவரும் பிட்ஸா பயிற்சிக்குச் சென்றோம். விரைவில் நிபுணர்கள் ஆனோம். தொழில் சூடுபிடித்தது. கடலில் சூடான பிட்ஸா கிடைப்பது எல்லோரையும் ஈர்த்தது. 3 மாதங்களுக்கு ஒருமுறை உணவு வகைகளை மாற்றிக்கொண்டே இருப்போம். பொதுவாக உணவகங்களைத் தேடி மக்கள் வருவார்கள். நாங்கள் மக்களைத் தேடிச் செல்கிறோம். ஒரு நாளைக்கு 20 முதல் 30 படகு நிறுத்தங்களுக்குச் செல்வோம். காலை 11 மணி முதல் 6 மணி வரை உணவகம் இருக்கும். ஒரு நாளைக்கு 25 பிட்ஸாக்களை விற்பனை செய்கிறோம். வாரத்தின் 7 நாட்களும் பிட்ஸா கேட்கிறார்கள். ஆட்களை வேலைக்குச் சேர்க்க முடிவு செய்திருக்கிறோம். வாழ்க்கை சுவாரசியமாகப் போகிறது’’ என்கிறார் சாஷா.

மக்களைத் தேடி வரும் படகு உணவகம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8377341.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: மரங்களின் தாய்!

 
masala_2784513f.jpg
 

ஷாங்காயைச் சேர்ந்தவர் யி ஜிஃபெங். மங்கோலியாவில் கடந்த 12 ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார். அலாஷான் பாலைவனத்தில் மீண்டும் காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். 16 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தன் மகனின் நினைவாக இந்தப் பணியைச் செய்து வருகிறார். ’’என் ஒரே மகன் ஜப்பானில் சாலை விபத்தில் பலியாகிவிட்டான். காற்று, மழை, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என இயற்கையின் ஒவ்வொரு படைப்பையும் மிகவும் நேசித்தான். அந்த வயதிலேயே பாலைவனத்தில் மரங்களை நட்டு, சோலைவனமாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தான். என் மகனின் லட்சியத்தை நான் நிறைவேற்றி வருகிறேன்.

ஒவ்வொரு மரத்தை நடும்போதும் என் மகன் என்னுடனேயே இருக்கிறான் என்பதை உணர்கிறேன். என் மகனின் இன்சூரன்ஸ் பணம் 1.76 கோடி ரூபாய் கிடைத்தது. 2003ம் ஆண்டு ‘க்ரீன் லைஃப்’ என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தோம். என் மகனின் லட்சியத்தை நிறைவேற்ற ஆரம்பித்த இந்தத் திட்டம், இன்று மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. சீனாவில் மரங்கள் குறைந்து வருகின்றன.

எங்களுடைய சேமிப்பு, 2 வீடுகளை விற்றுக் கிடைத்த பணம் முழுவதையும் மரங்கள் நடுவதில் செலவிட்டிருக்கிறேன்’’ என்கிறார் யி ஜிஃபெங். 66 வயதில் தினமும் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். மீதி நேரம் முழுவதும் மரம் நடும் பணியில் இருக்கிறார். இவரைப் போலவே குழந்தைகளை இழந்தவர்கள், இந்தத் திட்டத்தில் சேர்ந்து, ஆர்வத்துடன் வேலை செய்து வருகிறார்கள்.

மரங்களின் தாய்!

ஸ்வீடன் பல்கலைக்கழகத்தில் பூனைகள் பற்றிய 5 ஆண்டு ஆராய்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு பூனைகளின் ஒலிகளுக்கு என்ன அர்த்தம் என்பதை வெளியிட இருக்கிறார்கள். காட்டுப் பூனைகள் முதிர்ச்சியடையும் வரை மியாவ் என்று குரல் கொடுக்கின்றன. வளர்ந்த பிறகு தாயை அழைக்கவோ, பால் குடிக்கவோ அவசியம் இல்லை என்பதால் கைவிட்டுவிடுகின்றன. ஆனால் வீட்டில் வளர்ந்து வரும் செல்லப் பூனைகள், மனிதர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால், ’மியாவ்’ சொல்லிக்கொண்டேருக்கின்றன.

குரல், பார்வை மூலம் உணவு, அன்பு போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் கேட்கின்றன. வெவ்வேறு இடங்களில் இருந்து 50 பூனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் மனநிலைக்கு ஏற்றவாறு மியாவ் ஒலி எப்படி மாறுகிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். நட்பு, மகிழ்ச்சி, கோபம் போன்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரே மியாவ், பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. விலங்குகள் ஆராய்ச்சியாளர் ஷரோன் க்ரோவெல் டேவிஸ், பூனையின் மொழியைப் புரிந்துகொண்டு சில தகவல்களை வெளியிட்டார். பூனையின் மெல்லிய உறுமலுக்கு ‘தயவுசெய்து எங்கேயும் சென்றுவிடாதீர்கள்’ என்ற அர்த்தத்தைக் கண்டுபிடித்தார். பிறகு பூனையைப் பரிசோதித்தபோது, உடல்நிலை சரியில்லாமல் இருந்தது தெரிந்தது. பூனை கால்களைச் சுரண்டினாலோ, தாவினாலோ நம்மில் ஒருவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் என்கிறார்.

பூனை மொழி!

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/article8384154.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: தானாக இயங்கக்கூடிய ஷூ!

 
 
masala_2785674f.jpg
 

ஷூ போடுபவர்களுக்கு லேஸ் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். ஷூ தயாரிக்கும் பிரபல நைக்கி நிறுவனம், தானாக இயங்கக்கூடிய ஷூக்களை உருவாக்கியிருக்கிறது. 1989-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, 2015-ம் ஆண்டில் வெற்றி பெற்றுவிட்டது. நைக்கி ஹைபர் அடாப்ட் 1.0 என்ற ஷூக்களை வாங்கி, கால்களை நுழைத்தால் தானாகவே இறுகிக்கொள்ளும். அதைத் தளர்த்த வேண்டும் என்றால் ஷூக்களின் பக்கவாட்டில் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும்.

2 நொடிகளில் தளர்த்திவிடும். காலை வெளியில் எடுத்துவிடலாம். ஷூ வாங்கி 2 வாரங்கள் வரை இப்படி பட்டனை அழுத்தும் வேலை இருக்கும். பிறகு தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும். பாட்டரியில் இந்த ஷூ வேலை செய்கிறது. 2 வாரங்களுக்கு ஒருமுறை பாட்டரியை சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். இது ஆரம்ப முயற்சி. இன்னும் ஷூக்களில் பல புதுமைகளைச் செய்ய இருக்கிறோம் என்கிறார்கள் நைக்கி நிறுவன உரிமையாளர்கள். விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஷூக்கள், பல வண்ணங்களில் கிடைக்கின்றன.

தானியங்கி ஷூ!

டெக்சாஸில் கடந்த 59 ஆண்டுகளாக மார்ச் மாதம் இரண்டாவது வார இறுதியில் ‘ரேட்டில் ஸ்நேக் ரவுண்ட்அப்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கண் முன்னே ஆயிரக்கணக்கான பாம்புகளின் தலைகள் வெட்டப்பட்டு, தோல்கள் உரிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் தென் பகுதிகளில் பாம்புகள் பிடித்து, கொல்லப்படும் நிகழ்ச்சி சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. டெக்சாஸில் மட்டும்தான் மிகப் பெரிய அளவில் இது நடைபெறுகிறது. அதிக விஷம் கொண்ட ரேட்டில் பாம்புகள், ஏராளமான கால்நடைகளைக் கொன்று வந்தன.

1958-ம் ஆண்டு ஜூனியர் சேம்பர் ஆஃப் காமர்ஸ், பெருகியிருந்த பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தது. இன்றும் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வருகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பே பாம்புகளைப் பிடித்து ஓரிடத்தில் சேகரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரே இடத்தில் நெருக்கமாகவும் போதிய உணவு இன்றியும் வசிக்கும் பாம்புகள், கொல்வதற்கு முன்பே இறக்கும் நிலைக்குச் சென்று விடுகின்றன.

மயக்கத்தில் இருக்கும் பாம்புகளைக் கண்ணாடி அறைக்குள் வைத்து, பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாம்பு பிடிப்பவர்களிடம் அழகிப் போட்டியும் நடத்தப்படுகிறது. பாம்புகளின் தோல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பாம்புகளின் மாமிசத்தில் செய்யப்பட்ட உணவுகள் கிடைக்கின்றன. சமீபக் காலங்களாக பாம்புகளை கொல்லும் இந்த நிகழ்ச்சி மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. ’மனிதர்கள், கால்நடைகள் பாம்புகளால் பாதிக்கப்படும்போது, கொல்வது தவிர்க்க இயலாது. பெருகும் பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க, இதுதான் வழி’ என்கிறார்கள் ஆதரவாளர்கள். ‘இன்று அறிவியலும் மருத்துவமும் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. பாம்பு கடித்தால், மருத்துவம் செய்துகொள்ள முடியும். கடந்த 10 ஆண்டுகளாக எந்தக் கால்நடையும் பாம்பு கடித்து இறக்கவில்லை’ என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். அதிகாரப்பூர்வமாக இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டாலும் இன்றும் பல இடங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

விலங்குகள் நல அமைப்புகள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AF%82/article8388755.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சுருங்கும் கிராமம்!

 
 
masala_2786972f.jpg
 

கிரேக்க (கிரீஸ்) நாட்டில் மலைப் பகுதியில் இருக்கிறது ரோபோடோ கிராமம். பெரிய பங்களாக்கள், வீடுகள், பள்ளி, மருத்துவமனை, தேவாலயம், உணவு விடுதி என்று எல்லா வசதிகளும் நிறைந்த ஊர். இங்கே 300 குடும்பங்கள் வசித்து வந்தன. 2012-ம் ஆண்டு கட்டிடங்கள் சாய ஆரம்பித்தன. நான்கே ஆண்டுகளில் ரோபோடோ, மனிதர்கள் வசிக்காத இடமாக மாறிவிட்டது.

ஒவ்வொரு மழைக் காலத்திலும் இந்த கிராமத்தைச் சுற்றி, தண்ணீர் நிறைந்துவிடும். பெரிய இயந்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றுவார்கள். ஆனால் 2011-ம் ஆண்டு தண்ணீரை வெளியேற்ற இயந்திரங்கள் கிடைக்கவில்லை. முதலில் மலையில்தான் விரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டிடங்களிலும் விரிசல் வந்தது. கிராமமே சுருங்க ஆரம்பித்துவிட்டது. இங்கே இருந்த 300 குடும்பங்களும் வெளியேறிச் சென்றுவிட்டன.

“இங்கே யாராலும் இனி வசிக்க முடியாது. என்னுடைய வீடும் இங்குதான் இருக்கிறது. ஆவணப்படம் எடுப்பதற்காக மட்டுமே மீண்டும் இந்த கிராமத்துக்கு வந்தேன். பேய் கிராமம் போல திகிலாகக் காட்சியளிக்கிறது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக தப்பி விட்டோம். இந்த கிராமம் தன்னையும் சூன்யமாக்கிக்கொண்டு, எங்கள் எதிர்காலத்தையும் சூன்யமாக்கிவிட்டது. ஆண்டுக்கு 10 முதல் 15 செ.மீ. அளவுக்கு இந்தப் பகுதி நிலம் சுருங்கிக்கொண்டு வருகிறது” என்கிறார் ரோபீஸ்.

சுருங்கும் கிராமம்… இயற்கையின் விநோதம்…

பிரேசிலைச் சேர்ந்த மெகடோஸ் என்ற நிறுவனம், ஜிகா வைரஸ் தாக்காத கர்ப்பிணிகளுக்கான ஆடையை உருவாக்கியிருக்கிறது. இயற்கையிலேயே சிட்ரோனெல்லா புற்கள் பூச்சிகளை விரட்டும் சக்தி படைத்தவை. இந்த சிட்ரோனெல்லாவை சேர்த்து துணிகளில் நெய்திருக்கிறார்கள். இந்த ஆடையை அணியும் பெண்கள் கொசுக்கடியில் இருந்து தப்பி விடுவார்கள். ஜிகா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசியோ, மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கொசுக்கடியில் இருந்து காப்பாற்றிக்கொள்வது, தற்காப்பு நடவடிக்கையாக இருக்கிறது.

ஜிகா வைரஸ் கர்ப்பிணி பெண்களைத் தாக்கினால், குழந்தைகளையும் பாதித்து, குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. அதனால் கொலம்பியா, ஈக்வடார், எல் சல்வடார் போன்ற அரசாங்கங்கள் கர்ப்பத்தை தள்ளிப் போடச் சொல்லியிருக்கின்றன. அதையும் மீறி கர்ப்பமாகும் பெண்களுக்கு, மெகடோஸ் பாதுகாப்பு வழங்குவதற்காகவே இந்த ஆடைகளைத் தயாரித்து இருக்கிறது என்கிறார்கள் இதன் உரிமையாளர்கள். சிட்ரோனெல்லாவை நேரடியாக உடலில் தடவினால் 20 முதல் 30 நிமிடங்கள்தான் தாக்குப் பிடிக்கும். அதை 4 மணி நேரம் வரை நீட்டிக்கும்படி இப்போது உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்த நுட்பத்தை ஆடைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்டனர். சாதாரண ஆடைகளைவிட இந்த ஆடைகள் 10 முதல் 12 சதவீதம் விலை அதிகம். 20 முதல் 30 தடவைகள் துவைக்கும் வரை இது வேலை செய்யும். பிறகு புது துணிதான் வாங்க வேண்டும். ஆனால் இந்த ஆடைகள் விஞ்ஞான ரீதியில் பரிசோதிக்கப்பட்டதாக தெரியவில்லை, உண்மையிலேயே ஜிகா வைரஸில் இருந்து காப்பாற்றுகிறதா என்றும் தெரியவில்லை. ஆனால் பயத்தில் இருக்கும் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

உண்மையிலேயே காப்பாற்றினால் சந்தோஷம்தான்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/article8392500.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: குளிர்ந்த நீர் உடலுக்கு நல்லதல்ல

 
masala_2788447f.jpg
 

வெயில் காலங்களில் குளிர்ந்த நீரைப் பருகினால் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் சீனாவில் இதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. வெயிலோ, மழையோ எந்தக் காலங்களிலும் சூடான நீரையே பருகுகிறார்கள். பெரும்பாலானவர்கள் வெளியே செல்லும்போது ஃப்ளாஸ்கில் சுடுதண்ணீர் எடுத்துக்கொள்கிறார்கள். தண்ணீர் தீர்ந்துவிட்டாலும்கூட ஆங்காங்கே தண்ணீர்க் குழாய்களில் வரும் சுடுநீரைப் பிடித்துக்கொள்கிறார்கள்.

குளிர்ந்த நீர் உடலுக்கு நல்லதல்ல என்ற எண்ணம் பெரும்பாலான சீனர்களிடம் இருக்கிறது. 1949-ம் ஆண்டில் கம்யூனிஸ சீனாவில் ஓர் அறிவிப்பு வெளியானது. குழாய்களில் வரும் நீர் அவ்வளவு தூய்மையாக இல்லாததால், தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள் என எங்கும் சுடு தண்ணீர் குடிக்க ஆரம்பித்தனர். பழங்காலச் சீன மருத்துவத்திலும் சூடான நீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சூடான நீர் விரைவில் ஜீரணமாக்கும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், நச்சுகள் வெளியேற உதவும். குளிர்ந்த நீர் தசைப் பிடிப்பு ஏற்படுத்தும், உடல் உறுப்புகள் மெதுவாக இயங்க வைக்கும். சூடான நீரையும் குளிர்ந்த நீரையும் கலந்து பருகக்கூடாது என்கிறது சீன மருத்துவ குறிப்புகள். பழங்காலத்தில் இருந்தே புழக்கத்தில் இருக்கும் தேநீர் கலாசாரத்தில் இருந்து சுடு நீர் பருகும் பழக்கம் உருவாகியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், கொரியாவிலும் நீண்ட காலமாக தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக சுடு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்ற எண்ணம் எல்லோரிடமும் உறுதியாக இருக்கிறது. எனவே வெளி நாடுகளுக்குச் சென்றால்கூட இந்தப் பழக்கத்தை சீனர்கள் மாற்றிக்கொள்வதில்லை.

ஆரோக்கியத்தில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள்!

ஆம்ஸ்டர்டாமில் பூனைகள் வசிக்கும் படகைப் பார்ப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். இந்தப் படகு, பூனைகளின் சரணாலயம். ஆதரவற்ற பூனைகளை இந்தப் படகில் பராமரித்து வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக இந்தப் பூனைகள் சரணாலயம் அமைக்கப்படவில்லை என்றாலும் ஆண்டுக்கு 4,500 பேர் வந்து பார்வையிடுகிறார்கள். இந்தப் பயணிகளில் பெரும்பாலானோர் தங்கள் செல்லப் பூனைகளைத் தொலைத்தவர்களாக இருக்கிறார்கள். 1966-ம் ஆண்டு ஹென்ரிட்டே வான் வீல்டே என்ற பெண், ஆதரவற்ற பூனைகளைத் தன் வீட்டில் வளர்த்து வந்தார். ஹென்ரிட்டேவின் நல்ல உள்ளத்தைக் கண்ட மக்கள், பூனைகள் எங்கே தனியாக இருந்தாலும் அவர் வீட்டில் கொண்டு வந்து சேர்க்க ஆரம்பித்தனர்.

அவரும் மறுப்பே சொல்லவில்லை. 2 ஆண்டுகளில் வீடு நிறையப் பூனைகள். இடம் போதவில்லை. ஒரு படகை வாங்கி, அதில் பூனைகளை வளர்த்து வந்தார். 1987-ம் ஆண்டு இந்தப் பூனை சரணாலயம் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றது. 2005-ம் ஆண்டு ஹென்ரிட்டே மறைந்தார். தன்னார்வலர்கள் உதவியோடு இப்போதும் இயங்கி வருகிறது இந்தச் சரணாலயம். எந்த நாள் சென்றாலும் குறைந்தது 50 பூனைகளைப் பார்க்க முடியும். இதில் பூனைகளுக்கான மருத்துவமனையும் இருக்கிறது. இந்தச் சரணாலயத்தைப் பார்வையிட கட்டணம் எதுவும் இல்லை. ஆனால் வருகிறவர்கள் நன்கொடை கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறார்கள்.

பூனைகள் சரணாலயம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/article8396124.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: 170 கிலோ எடை தூக்கும் வீராங்கனை

 
 
weight_2446472f.jpg
 

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகிலேயே மிகச் சிறந்த விமான நிலையம் என்ற விருதைக் கடந்த 3 ஆண்டுகளாகப் பெற்று வருகிறது. தற்பொழுது இந்த விமான நிலையத்துக்குள் ஓர் அட்டகாசமான வனத்தையும் அருவியையும் உருவாக்க இருக்கிறார்கள். இதற்காக 7,300 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஓர் ஆண்டுக்கு 5 கோடியே 40 லட்சம் மக்கள் இங்கே வந்து செல்கிறார்கள்.

இனி 13 கோடி மக்கள் வரும் விமான நிலையமாக மாறும். ‘‘இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதனால் சிங்கப்பூருக்கு மக்களின் வருகையும் வேகமாக அதிகரித்து வருகிறது. மக்களை ஈர்க்கவும், அவர்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரவும் இந்த விமான நிலையத்தை அமைத்திருக்கிறோம். 2018-ம் ஆண்டு இந்தப் பணிகள் முழுமையடையும்’’ என்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள்.

விமான நிலையத்தைச் சுத்திப் பார்க்கவே ஒருநாள் வேணும் போல!

ரஷ்யாவில் வசிக்கிறார் 23 வயது நடாலியா ட்ருகினா. பளு தூக்கும் போட்டிகளில் அத்தனை பிரிவுகளிலும் உலக சாதனைகளைப் படைத்திருக்கிறார். 14 வயதிலேயே பளு தூக்குதலில் ஆர்வம் வந்துவிட்டது. அப்பொழுதே 40 கிலோ எடையைத் தூக்க ஆரம்பித்துவிட்டார். அப்படியே தன்னுடைய உடலையும் பாடிபில்டராக மாற்றிக்கொண்டார். 168 செ.மீ. உயரமும் 92 கிலோ எடையும் கொண்ட மிகப் பெரிய உருவமாக மாறிவிட்டார் நடாலியா. நின்றுகொண்டு 240 கிலோ எடையையும், பெஞ்சில் படுத்த நிலையில் 170 கிலோ எடையையும் தூக்கக்கூடியவராக இருக்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும் தன்னுடைய சாதனையை முறியடித்து, புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார். நடாலியாவை நேரில் பார்த்துப் பாராட்டும் மக்கள், இணையதளத்தில் கிண்டல் செய்கிறார்கள். மோசமான வார்த்தைகளைக் கொட்டி வருகிறார்கள். ’’என்னுடைய இந்த உயரத்துக்குக் காரணம் பல்லாண்டு கடின உழைப்பு, ஆரோக்கியமான அளவான சாப்பாடு, நாள் தவறாத உடற்பயிற்சிகள்தான். என்னுடைய சாதனைகளைப் பற்றி விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும். பொழுதுபோக்குக்காக இணையதளத்துக்கு வருகிறவர்கள் இப்படித்தான் சொல்வார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை’’ என்கிறார் நடாலியா.

நீங்க அசத்துங்க நடாலியா!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-170-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88/article7337201.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.