Jump to content

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1


Recommended Posts

cd3.jpg

யமுனோத்திரி ஆலயம் 

நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியின் தாய் வீடான இமயமலையில் சிவசக்தி வாசம் செய்யும் திருக்கயிலாயம் மற்றும் அநேக புண்ணிய தலங்கள் அமைந்துள்ளன அவற்றுள் நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகின்றது. இந்த தலங்கள் அனைத்தும் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ளதால் இந்த யாத்திரைஉத்தரகாண்ட யாத்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே இந்த தேவபூமியில் பனி மூடிய சிகரங்களின் அருகாமையில் அமைந்துள்ளன இந்த புண்ணிய தலங்களுக்கு அநேகம் பக்தர்கள் யாத்திரை செய்து ஆண்டவன் அருள் பெற்றுள்ளனர். அவனருளால் அடியேனுக்கும் அந்த அரிய வாய்ப்பு கிட்டியது, அந்த ஆனந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாருங்கள் ஜெகத்தீரே.

 

cd1.jpg

 

கங்கோத்ரி ஆலயம் 

சார்தாம் (நான்கு ஆலயங்கள் அல்லது பீடங்கள்) எனப்படுகின்ற மிகவும் புனிதமுடைய மற்றும் மதிப்பிற்குரிய நான்கு திருத்தலங்கள் இந்த பரதகண்டத்தின் நான்கு திசைகளிலும் எல்லைக் காவலாக அமைந்துள்ளன. அவையாவன வடக்கில் உள்ள பத்ரிநாதம், தெற்கில் உள்ளஇராமநாதம் – இராமேஸ்வரம், கிழக்கில் உள்ள துவாரகை மற்றும் கிழக்கில் உள்ள ஜெகந்நாதம்- பூரி ஆகிய ஆலயங்கள் சார்தாம் என்றழைக்கப்படுகின்றன. சிவபெருமானின் அம்சமாக காலடியில் அவதரித்த, ஹிந்து மதத்திற்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத்பாதாள் தனதுபீடங்களை இந்த நான்கு தலங்களில் ஸ்தாபனம் செய்தார். இந்த தலங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு இந்துவும் தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது சென்று வழிபட வேண்டும் என்பது நியதி.

 

cd4.jpg

கேதார்நாத் ஆலயம் 

அது போல உத்தராகாண்ட மாநிலத்தின் சோட்டா சார்தாம் ( சிறிய நான்கு பீடங்கள்) என்று அழைக்கப்படும் யமுனோத்திரி, கங்கோத்ரி, திருக்கேதாரம், பத்ரிநாதம் ஆகிய நான்கு தலங்களுக்கு செல்லும் யாத்திரையே அடியேன் மேற்கொண்ட சார்தாம் யாத்திரை. உத்தராகாண்ட மாநிலத்தில் இந்த தலங்கள் அமைந்துள்ளதால் இந்த யாத்திரையை உத்தராகாண்ட் யாத்திரை என்றும் இமயமலையில் அமைந்துள்ளதால் இமயமலை யாத்திரை என்றும் அழைக்கின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் குறிஞ்சி நிலமான இமயமலையும் அதைச் சார்ந்த பகுதிகளும் உத்தரக்காண்ட (உத்தராஞ்சல்) என்று தனி மாநிலமாக இப்போது பிரிக்கப்பட்டிருக்கின்றது.உத்தராகாண்ட் மாநிலம் இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாகும். பனி ஆறுகள்கம்பீரமான பனியடர்ந்த மலைகள்பிரம்மாண்டமான மற்றும் களிப்பூட்டும் சிகரங்கள்மலர்களின் பள்ளத்தாக்குகள்ஸ்கையிங் இடங்கள் மற்றும் அடர் வனங்கள்மேலும் புனித யாத்ரீகர்கள் தங்கிச்செல்வதற்கான பல மடங்கள் மற்றும் பல கோவில்கள் ஆகிவற்றை இம்மாநிலம் உள்ளடக்கியுள்ளது.

இந்த உத்தராக்காண்ட மாநிலம் இரண்டு மண்டலங்களாக அமைந்துள்ளன கிழக்குப்பகுதி குமோன்என்றும் மேற்குப்பகுதி கர்வால் என்றும் அழைக்கப்படுகின்றது. சார்தாம் யாத்திரையின் ஆலயங்கள் அனைத்தும் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளன. இந்த நான்கு ஆலயங்களில் இரண்டு புண்ணிய நதிகளான கங்கை மற்றும் யமுனையின் உற்பத்தி ஸ்தானமான சக்தி தலங்கள், ஒன்று சிவபெருமானின் ஜோதிர்லிங்க ஸ்தலம், தேவாரப் பாடல் பெற்ற தலம். ஒன்று பூலோக வைகுண்டம் என்று அறியப்படும், பெருமாள் தானே தோன்றிய ஸ்வயம்வக்த ஸ்தலமான ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திவ்யதேசம். ஆதிசங்கரின் பெரிய சார்தாம் யாத்திரையிலும் பத்ரிநாதம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவையல்லாமல் தேவாரப்பாடல் பெற்ற கௌரி குண்டம், மற்றும் இந்திர நீல பர்வதம் மற்றும் பிரயாகைகள் எனப்படும் நதியின் சங்கமங்கள் எனப்படும் பஞ்ச பிரயாகைகளையும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மற்றும் இரு வடநாட்டுத் திருப்பதிகளான தேவப்ரயாகை எனப்படும் கண்டம் என்னும் கடிநகரையும், திருப்பிருதி எனப்படும் ஜோஷிர்மட்டையும் தரிசனம் செய்கின்றோம்.

cd2.jpg

பத்ரிநாத் ஆலயம் 

இந்த நான்கு தலங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவையாவன இவை இமய மலையின் பனி மூடிய சிகரங்களின் மடியில் இவை அமைந்துள்ளன. வருடத்தில் ஆறு மாதத்தில் இவை பனி மூடி இருக்கும் அப்போது இங்குள்ள தெய்வ மூர்த்தங்கள் கீழே இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அனைத்து தலங்களும் பல்வேறு புராண கதைகளுடன் தொடர்புள்ளவை. நான்கு தலங்களும் கங்கை நதியின் உப நதிகளில் அமைந்துள்ளன. இத்தலங்களில் அல்லது அருகில் வெநீநீர் ஊற்றுகள் உள்ளன, ஆதி சங்கரருடன் தொடர்புடையவை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒருவர் முயற்சி செய்து அவனருள் இருந்தால்தான் இத்தலங்களுக்கு செல்ல முடியும் மலையேற்றம் அவசியம் என்பதால் நல்ல உடல் நலம் நன்றாக இருப்பவர்கள் மட்டுமே செல்வது புத்திசாலித்தனம். மேலும் ஒரு பனி மூடிய சிகரத்திற்கு சென்று தரிசனம் செய்து விட்டு பின்னும் அடுத்த தலத்திற்கு செல்ல வேண்டும், மேலும் கீழே இறங்கி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்பதால் நாட்களும் அதிகமாக ஆகும். டெல்லி வரை இரயில் மூலமாக சென்றால் நான்கு தலங்களையும் தரிசனம் செய்துவிட்டு திரும்பிவருவதற்கு குறைந்தது பதினைந்து நாட்களாவது ஆகும்.

இனி வரும் பதிவுகளில் இன்னும் இந்த யாத்திரைகளைப் பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள உடன் வாருங்கள் அன்பர்களே.

http://natarajar.blogspot.ch/2011/11/1.html

Link to comment
Share on other sites

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -2

 


 
சிவமயம்
kedarnath.jpg
கேதார்நாத் சிகரங்களுடன்
ஜோதிர்லிங்க கேதார்நாத ஆலயம்
இவ்வாறு அடியேன் சார்தாம் யாத்திரை சென்று வந்தேன் என்று கூறிய போது பல அன்பர்கள் அறிய விரும்பிய பல தகவல்கள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து செல்லும் நமக்கு இப்பகுதியில் நிலவும் தட்பவெப்பம், உணவு, மொழி, ஏன் கோவில்கள், வழிபாட்டு முறைகள் என்று அனைத்துமே புதுமையாக தோன்றும். ஆகவே மிக்க ஏற்பாடுகளுடன்தான் நாம் செல்ல வேண்டும். முதலாவது மலைகளில் அதிக குளிர் இருக்கும் என்பதால் கம்பளி உடைகள், கம்பளித் தொப்பி, கம்பளி கையுறை, கம்பளி காலுறை கட்டாயம் எடுத்து செல்வது அவசியம். அடுத்தது உணவு அங்குள்ள மக்கள் அதிகமாக கோதுமை மற்றும் கடுகு எண்ணெயை பயன் படுத்துவதால் அது நமக்கு பிடிக்காமலும் அதே சமயம் நமது உடலுக்கு ஒத்துக்கொள்ளாமலும் போகலாம் எனவே முடிந்த வரையில் பிஸ்கட், சாக்லேட், இனிப்பு வகைகள் காரங்கள், முந்திரி, பாதாம் போன்ற உலர்ந்த பழங்கள், காபி தூள், சூப் முதலிய எளிதில் சுமந்து செல்லக்கூடிய அதே சமயம் நமக்கு உகந்த உணவுப் பொருள்களையும், மற்றும் மருந்து மாத்திரைகள், முதலுதவிப் பெட்டி, பூஜை பொருட்கள், டார்ச் லைட் / மெழுகுவர்த்தி, மழைக் கோட், மலைப்பாதையில் நடப்பதற்கு ஏதுவான காலணிகள் (Shoes), ஆகியவற்றை எடுத்து செல்லவேண்டியது அவசியம். பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் நீண்ட நேரப்பயணம், நேரத்திற்கு நமக்கு தகுந்த உணவு கிடைக்காதது, மற்றும் நேரம் கடந்து உணவு உட்கொள்வது மற்றும் தங்கும் இடத்தில் அதிக குளிர், மலையேற்றம், மலையேற முடியாதவர்கள் மட்டக்குதிரை பயணம். நீண்ட நாள் பேருந்துப் பயணம் மற்றும் நடைப்பயணம் என்று பல்வேறு அசௌகரியங்களையும் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் எதிர்பாராத கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அனைத்திற்கும் தயாராக செல்வது மிகவும் நல்லது.
 
 
வருடத்தில் ஆறு மாதம் இத்தலங்களில் பனிமூடி இருக்கும் என்பதால் ஏப்ரல் முதல் ஜூன் வரையும், செப்டெம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையும் இந்த யாத்திரைக்கு ஏற்ற காலமாகும் , ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மழைக்காலமாகும் எனவே இச்சமயங்களில் பயணம் செல்லாமல் இருப்பது நன்று. இவ்விடங்களில் கோடைக்காலங்களில் கூட குளிராக இருக்கும். மலைகளின் உச்சியில் பயணம் செய்வதால் சீதோஷ்ண நிலை ஒரே சீராக இருக்காது. திடீரென்று மாறக்கூடியது. நல்ல வெயில் அடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று பலத்த மழை பெய்யக்கூடும், நல்ல மழை பெய்யும் போது நிலச்சரிவுகள் ஏற்பட்டு பாதைகள் அடைபடும் போகின்ற இடத்திற்கு சரியான சமயத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். சில சமயம் பனி மழை பொழியும். ஏப்ரல் மே மாதங்களில் பலத்த காற்று வீசும். புழுதிப்புயல் எனப்படும் மண்ணைவாரி வீசும் காற்றும் கூட இருக்கும். அவர் விரும்பினால் மட்டுமே நமக்கு அவர் தரிசனம் கிட்டும் என்று சரணாகதி மனப்பன்மையுடன் சென்றால்தான் ஒரே தடவையில் நான்கு தலங்களையும் தரிசனம் செய்ய முடியும் என்பது பலர் தங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.
 
cd5.jpg
துவாரம் திறக்கும் தினத்தின்
பத்ரிநாத்தின் சிறப்பு மலர் அலங்காரம்
சித்திரை (ஏப்ரல்-மே மாதம்) அக்ஷய த்ரிதியையன்று தொடங்கி தீபாவளி (அக்டோபர்- நவம்பர்) மாதம் வரையில் இத்திருக்கோவில்கள் திறந்திருக்கும். துவாரம் திறக்கும் நாள் அகண்டஜோதி தரிசனம் செய்ய பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும், பின்னர் இரண்டு மூன்று நாள் கழித்து கூட்டம் குறைந்து விடும், பாதையும் சரியாக இருக்கும் ஆகவே பள்ளி விடுமுறை காலமாக இல்லாமல் இருந்தால் இச்சமயம் யாத்திரை செய்வது உத்தமம். மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதை சரியாக இருக்கும் ஆனால் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும் ஆகவே தங்கும் வசதிகளை முன்னரே செய்து கொண்டு செல்வது நல்லது. சில சமயம் தரிசனத்திற்காக 2 கி.மீ தூரம் வரிசை இருக்கும், சுவாமி தரிசனம் மிக சிறிய நேரத்திற்கு மட்டுமே கிட்டும். ஜூலை , ஆகஸ்டு மாதங்கள் பருவமழைக் காலம் என்பதால் அதிகமாக நிலச்சரிவுகள் ஏற்படும் என்பதால் அச்சமயத்தில் யாத்திரை மேற்கொள்ளாமல் இருப்பது உத்தமம்.
cd8.jpg
தேவாரப்பாடல் பெற்ற இந்திரநீல பர்வதம் என்னும் நீலகண்ட சிகரம்
(பத்ரிநாத்தில் அதிகாலையில் கிடைக்கும் தரிசனம்)
பொதுவாக செப்டெம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் செல்வது ( துவாரம் அடைக்கப்படும் நாள்) மிகச் சிறந்தது. ஆயினும் சென்ற வருடம் செப்டம்பர் மாதத்திலும் மழை அதிகமாக பெய்து யாத்திரை சென்ற நாங்கள் நான்கு தலங்களையும் தரிச்சிக்க முடியாமல் திரும்பி வந்தோம். எல்லாம் அவன்செயல் எப்பொது நமக்கு எப்படி தரிசனம் தர வேண்டும் என்பதை அவர் நிர்ணயம் செய்கின்றார். அக்டோபர் மாதம் குளிர் அதிகமாகவே இருக்கும் அப்போது கம்பளி ஆடைகள் அதிகம் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இந்த வருடம் அக்டோபர் மாதம் பயணம் செய்தோம் எங்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை அருமையான தரிசனமும் கிட்டியது.
cd6.jpg
மழைக்காலத்தில் ஏற்படும் நிலச்சரிவுகள்
( ஜுலை முதல் செப்டெம்பர் முதல்வாரம் வரை)
மலைப்பிரதேசம் என்பதால் 1962 சீனப்போருக்கு முன்னால் இப்பகுதியில் அதிகமான வளர்ச்சி இல்லாமல் இருந்தது அப்போது யாத்திரிகள் பெரும்பாலும் நடைப் பயணமாகவே சென்று இத்தலங்களை தரிசித்து வந்தனர். அதற்கு பின்னால் சாலை வசதிகள் மேம்பட்டன. தற்போது கங்கோத்ரி மற்றும் பத்ரிநாத் ஆகிய இரண்டு தலங்களுக்கு மிக அருகாமை வரை பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் செல்கின்றன. தங்கும் வசதிகளும் மேம்பட்டுள்ளன.
 
cd7.jpg
இமய மலையின் அற்புத மலர்கள்
( தாங்கள் படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கலாம்)
 
தங்குவதற்கு பல வசதிகள் உள்ளன. மடங்கள், சத்திரங்கள், ஹோட்டல்கள் என எல்லா வகை , அவரவர்கள் பண வசதிக்கேற்றாற்போல தங்கும் வசதிகள் கிட்டும். அங்கு சென்றும் அறைகளை அமர்த்திக்கொள்ளலாம் அல்லது அழைத்துச் செல்லும் யாத்திரை அமைப்பாளர்கள் தங்க வைக்கும் இடத்தில் தங்கிக் கொள்ளலாம். முதல் வருடம் நாங்கள் GMVN ( Garhwal Mandal Vikas Nigam) எனப்படும் நமது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தைப் போன்ற உத்தராகண்ட் மாநிலத்தின் கர்வால் மண்டல வளர்ச்சி கழகத்தின் மூலம் சென்றோம். தங்குமிடம் , வண்டி( வழிகாட்டியுடன்), மற்றும் உணவு எல்லாவற்றையும் அவர்கள் கவனித்துக் கொண்டார்கள். உணவுக்கு நாம் தனியாக பணம் தரவேண்டி இருந்தது. இவர்கள் அலுவலகம் சென்னையிலேயே உள்ளது. இங்கேயே நாம் பதிவு செய்து கொள்ளலாம். டெல்லியில் இருந்தும் பல யாத்திரை அமைப்பாளர்கள் உள்ளனர் , வண்டி, உணவு, தங்குமிடம் ஆகியவற்றை அவர்கள் கவனித்துக் கொள்கின்றனர்.
 
இனி இந்த சார்தாம் யாத்திரை செய்யும் முறை எவ்வாறு என்று பார்ப்போமா? முதலில் யமுனோத்ரி சென்று கேதாரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய யமுனை தீர்த்தம் அடுத்து கங்கோத்ரி சென்று கங்கை தீர்த்தம் சேகரித்துக் கொண்டு பின் கேதாரீஸ்வரம் சென்று அவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு இறுதியாக பத்ரிநாதம் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் பின் இராமேஸ்வரம் சென்று கங்கை நீரால் இராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சாலச்சிறந்தது. நாங்களும் இவ்வாறே யாத்திரையை மேற்கொண்டோம். இன்னும் இது போன்ற பல அரிய தகவல்கள் மற்றும் புராண கதைகள் மற்றும் அருமையான படங்களுடன் காண பின் தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
 
 
Link to comment
Share on other sites

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -3

 
 
 
 
 
 

cd8.jpg

குபேரன்- கருடன்- உத்தவர் -நாரதர்- நரநாரயணர்களுடன் பத்ரிநாதர்

இனி எவ்விதம் இந்த சார்தாம் யாத்திரை செய்யும் ஆசை வந்தது என்பதை சுருக்கமாக தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். அம்பாளையோ, சுவாமியையோ வர்ணிக்கும் பொது பாதாதி கேசம் மற்றும், கேசாதி பாதம் என்று இரண்டு முறை உண்டு. அது போலவே யாத்திரையும் அருகில் உள்ள கோவில்களை முடித்து யாத்திரையின் சிகரமான திருக்கயிலாயம் செல்வது அநேகமாக அனைவரும் செய்வது. ஆனால் அடியேனுக்கு அவர் அருளியது கேசாதி பாதம் முதலில் யாத்திரைகளின் சிகரமான திருக்கயிலை மலையில் தரிசனம். அடியேன் மேற்கொண்ட கடினமான முதல் யாத்திரை அது. அப்போது அந்கு வந்தவர்கள் கூறியதிலிருந்து பன்னிரு ஜோதிலிங்க ஸ்தல யாத்திரை, இந்த சார்தாம் யாத்திரை, மற்றும் பஞ்சகேதார் யாத்திரை, பஞ்ச கைலாய யாத்திரை, சதோபந்த் - ஸ்வராகோரணி என்னும் பல்வித யாத்திரைகள் சென்று வந்தவர்கள் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது முடிந்தால் சார்தாம் யாத்திரையை மேற்கொள்வோம் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. மூன்று வருடங்கள் கழித்து அந்த வாய்ப்பு ஏற்பட்டது. முன்பே கூறியது போல முதல் வருடம் எதிர்பாராத மழை அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு முதலியவற்றால் யமுனோத்ரி, கங்கோத்ரி, மற்றும் பத்ரிநாத் மூன்று தாம்களை மற்றுமே தரிசனம் செய்யும் வாய்ப்புக்கிட்டியது. எப்படியும் சார் தாம் யாத்திரையை முடித்து விடவேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டு இறைவனை அவனது தரிசனம் செய்ய வேண்டி இந்த வருடம் அக்டோபர் மாதம் பயணம் செய்து கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் யாத்திரையை முடித்தோம்.
cd7.jpg
தேவேந்திரன், மோகன்,வைத்திலிங்கம்
மனோகரன்,கோபால், தேவராஜ்
முன்னரே கூறியது போல மூன்று வருடங்கள் ஒடி விட்டன அடியேன் திருக்கயிலாய யாத்திரையின் போது மனதில் சங்கல்பித்துக் கொண்டது நிறைவேறுவதற்கு. என்னுடன் திருக்கயிலாய யாத்திரைக்கு உதன் வந்த திரு. தனுஷ்கோடியுடன் சேர்ந்து இந்த யாத்திரைக்கு திட்டமிட்டேன். அவருடைய நண்பர்கள் மேலும் 13 நபர்கள் உடன் வருவதாக கூறினார். சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழக சுற்றுலாத்துறையின் அலுவலக வளாகத்தில் உள்ள GMVN அலுவலகத்தில் சென்று 12 நாட்கள் செல்லும், யமுனோத்திரி, கங்கோத்ரி, கௌமுக் (கங்கையின் பிறப்பிடம்), கேதார்நாத், பத்ரிநாத் சுற்றுலாவிற்காக பணம் கட்டினோம். அந்த அலுவலகத்தின் முகவரி PRO, GMVN, Tamilnadu Tourism Complex, Wallahjah Road, Chennai -02, Tel-044-25363524. ரிஷிகேஷிலிருந்து ரிஷிகேஷ் வரை வண்டி, தங்குமிடம் அவர்கள் பொறுப்பு. உணவு நம்முடையது. பணம் கட்டி பயணத்தை உறுதி செய்து கொண்டோம். எங்களின் குழு பெரியது என்பதால் Dormitary எனப்படும் தங்குமிடங்களுக்கு பணம் கட்டினோம். வேண்டுபவர்கள் இரண்டு நபர்கள் தங்கும் அறைக்கும் பதிவு செய்து கொள்ளலாம் கட்டணம் சிறிது அதிகமாகும். திரு.தனுஷ்கோடி அவர்கள் Spicejet விமானத்தில் அனைவருக்கும் டெல்லி செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் விமான டிக்கெட் முன்பதிவு செய்தார். இறைவனின் எண்ணம் என்று அறியாமல் இனி ஒரு தடவை ஏன் செல்ல வேண்டும், ஒரே தடவையில் கோமுக்கையும் பார்த்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு யாத்திரைக்கு கிளம்பும் நாளுக்காக காத்திருந்தோம்.
cd6.jpg
சொக்கலிங்கம், இரவி,தனுஷ்கோடி
அந்த (05-09-10) நாளும் வந்தது காலை 7.20க்கு விமானம் என்பதால் அடியேன், திரு.இரவி மற்றும் மனோகரன் ஆகிய மூன்று பேரும் விமான நிலையத்தை அடைந்தோம். சிறிது நேரத்தில் அனைவரும் வந்து சேர்ந்தனர். ஒருவரால் மட்டும் வரமுடியவில்லை. விமானம் கிளம்பிவிட்டது, இப்போது அது வானத்தில் உள்ளது அது டெல்லியில் தரை இறங்குவதற்குள் அடியேனுடன் யாத்திரை செய்யும் அன்பர்கள் யார் என்று சிறு அறிமுகம் செய்துவிடுகிறேன், ஏனென்றால் புகைப்படங்களிலும் கட்டுரையிலும் அவர்களை சந்திப்பீர்கள் அல்லவா?
cd5.jpg
அடியேனுடன் திருக்கயிலாய யாத்திரை செய்த திரு. தனுஷ்கோடி அவர்கள், சூத்திரதாரி இவர்தான் . ஹிந்தியும் அறிந்தவர். வழியில் ஏற்பட்ட பல இடர்கள் இவர் சாமார்த்தியத்தால் சரியாகியது. பின்னர் இவருடன் பணி புரியும் திரு.கோபாலன் தம்பதியர், இவருக்கு உடம்பு சரியில்லை இருந்தாலும் பத்ரிநாதரை தரிசனம் செய்யவேண்டும் என்பதற்காகவே மனைவி ரேணுகா அவர்களுடன் வந்தார். அவருக்கு துனையாக இருக்க திரு. தேவேந்திரன் அவர்களும் தனது மனைவி இராதாகுமாரியுடன் வந்தார். மேலும் திரு.மனோகரன் மற்றும் திரு.தேவராஜன், திரு.மோகன் ஆகிய மூவரும் தனுஷ்கோடிக்கு அலுவலக நண்பர்கள். இதல்லாமல் தனுஷ்கோடியின் பால்ய நண்பரான, சிதம்பரத்தில் தினமும் ஆடல்வல்லானை தரிசனம் செய்யும் திரு. வைத்திலிங்கம் அவர்களும் அவரின் நண்பர்களான திரு.சொக்கலிங்கம் ஐயாவும், திரு.கணேசன் அவர்களும் உடன் வந்தனர். மேலும் அடியேனது திருக்கயிலாய யாத்திரை புத்தகத்தை பதிப்பிட்ட . சென்னை , கோடம்பாக்கம், பிரேமா பிரசுரத்தின் உரிமையாளர் திரு.இரவி என்று பதிமூன்று பேர் இந்த யாத்திரைக்காக கிளம்பினோம்.
cd9.jpg
ருத்ரபிரயாகை சங்கமம்
 
ஹரித்வாரும், ரிஷிகேஷும் இந்த யாத்திரையின் முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலா தலங்கள் அவைகளைப்பற்றியும் பின்னர் காணலாம் அன்பர்களே தொடர்ந்து அடியேனுடன் வாருங்கள்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ரஜனிகாந்த் போகின்ற இமயமலை" என்று தலைப்பு வைத்தால் தான்... பலர் இந்தத் திரியை பார்ப்பார்கள் ஆதவன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ரஜனிகாந்த் போகின்ற இமயமலை" என்று தலைப்பு வைத்தால் தான்... பலர் இந்தத் திரியை பார்ப்பார்கள் ஆதவன். :grin:

அந்தாள்...சபரிமலைப் பக்கமெல்லோ போறது...!:rolleyes:

Link to comment
Share on other sites

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -4

ஓம் நமசிவாய:
 
cd11.jpg

ரிஷிகேஷ் நகரம் ஹரித்துவாரத்திலிருந்து டேராடூன் செல்லும் சாலையில் 24 கி.மீ தூரத்தில் உள்ளது.இது சார் தாம் யாத்திரையின் நுழைவு வாயில் ஆகும். சீசன் சமயத்தில் (மே-ஜூன்) மாதங்களில்இங்கிருக்கும் எண்ணற்ற சுற்றுலா நிறுவனங்களின் மூலம் யாத்திரிகள் நான்கு கோவில்களுக்கும்யாத்திரை செல்கின்றனர். புனித நீராட பல "காட்" என்று இங்கு அழைக்கப்படும் ஸ்நான கட்டங்களும்,இறைவனை தரிசனம் செய்ய பல கோவில்களும், மடங்களும், யாத்திரிகள் தங்குவதற்கு பலசத்திரங்களும் நிறைந்த கங்கையின் வலக்கரையில் அமைந்த நகரம். சங்கரர் நிறுவிய பரதாலயம்இங்குதான் உள்ளது. இங்குள்ள திரிவேணி கட்டத்தில் பிண்ட ஸ்ரார்த்தம் செய்வது விசேஷம்.எண்ணற்ற ரிஷிகளும் மகான்களும் வாழ்ந்த இடம். இங்கிருந்துதான் நாங்கள் 06-09-2011 அன்று எங்கள்யாத்திரையை துவங்கினோம்.

 

cd14.jpg

யாத்திரை சென்ற பேருந்து 

GMVN நிறுவனத்தினர் ஒரு 15 பேர் அமரக்கூடிய மேலே உள்ள வண்டியை எங்களுக்காக ஒரு வழிகாட்டியுடன் கொடுத்திருந்தனர். அவருடைய பெயர் அர்விந்த் மைதானி, வண்டி ஒட்டியின் பெயர்மதன்சிங் நெகி, அவருக்கு துனையாக கிளீனர் சிபுசிங் என்பவரும் உடன் வந்தாற். அதிகாலை எழுந்து இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரத்தில் அமைந்துள்ள இந்த ரிஷிலோக் சுற்றுலா பங்களாவின் அருமையான தோட்டத்தையும் அதில் பூத்துக்குலுங்கும் மலர்களையும் புகைப்படம் எடுத்தோம். காலையை சிற்றுண்டியை அங்கேயே முடித்துக்கொண்டு வண்டியில் அனைவரும் ஏறினோம். அவர்கள் வழக்கப்படி, யமுனா மய்யாக்கீ ஜே! கங்கா மய்யாக்கீ, ஜே! ஜெய் கேதார் நாத் கீ! ஜெய் பத்ரி விஷால் கீ! என்று யாத்திரை தொடங்கியது.

cd13.jpg

 

cd1.jpg

 

 

ரிஷிலோக் சுற்றுலா விடுதியின் அழகான பூங்கா 

வழிகாட்டி அவர்கள் முதலில் கூறிய செய்தி இன்று நாம் மதிய உணவிற்கு பார்கோட் என்ற இடத்தில் நிற்போம். யமுனோத்த்ரியை அடைய 5 கி.மீ நடைப்பயணம் செய்ய வேண்டும் எனவே இன்று அதன் அடிவாரத்தில் தங்குவோம். மழை இந்த வருடம் அதிகம் என்பதால் எப்போதும் ஒரு சிறு பையில் இரண்டு செட் துணிமணிகள் மற்றும் சோப்பு, பல்பொடி மற்றும் அவசியமான பொருட்கள் பூஜை சாமான்கள் எடுத்து தனியாக எப்போதும் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா பெரிய பெட்டிகளையும் மேலே தூக்கிச்செல்ல வேண்டாம். எதிர்பாராமல் எங்காவது தங்க நேர்ந்தாலும் சிரமம் இருக்காது என்று கூறினார், ஒட்டடைக்குச்சி போல் நெடிதுயர்ந்த மரங்கள் வானத்தை ஒட்டடை அடிப்பதை பார்த்துக்கொண்டே முசோரி செல்லும் பாதையில் வண்டி நகர்ந்தது. முதலில் ஜாலி கிராண்ட் என்ற இடத்தில் உள்ள விமான நிலயத்தை பார்த்தோம். டெல்லியிலிருந்து டேராடூன், ஹரித்வார், ரிஷிகேஷ் விமானம் மூலம் வருபவர்கள் இங்குதான் வரவேண்டும்.

 

cd12.jpg

 


1.jpg

 

ரிஷிலோக் சுற்றுலா பங்களா

நமது யாத்திரை முழுவதும் இமயமலையில் என்பதால் முதலில் இமயமலையின் புராண சிறப்பைப் பற்றி பார்க்கலாமா அன்பர்களே?

கொழுந்து திகழ்வெண் பிறைஜடிலக் கோவே மன்றில் கூத்தாடற்கு

எழுந்த சுடரே; இமயவரை என்தாய் கண்ணுக்கு இனியானே;

தொழும்தெய் வமும்நீ, குருவும்நீ, துணைநீ, தந்தை தாயும்நீ,

அழுந்தும் பவம்நீ, நன்மையும்நீ, ஆவி, யாக்கை நீதானே.

(பொருள்): பிறையை அணிந்தவனே, சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்கு எழுந்த சுடரே, இமயவன் பெற்ற உமையின் கண்ணுக்கு இனியவனே, எனது தெய்வமும், குருவும், தாயும் தந்தியும், இவ்வுலகமும், நன்மையும், உயிரும் உடலும் என அனைத்தும் நீயே! என்று தாயுமானவ சுவாமிகள் பாடியபடி நம் அன்னை மலையரசன் பொற்பாவை, பார்வதியின் தாய் வீடுதான் இந்த இமயமலை.

நமது நாட்டின் வடக்கு எல்லையும் அரணுமான இமயமலையே புராணங்களின் படி பார்வதியின் தாய்வீடுஸ்ரீ லலிதா அஷ்டோத்தரத்தில் ஒரு நாமாவளி ஹிமாசல மஹா வம்ச பாவனாயை நமோ நம"ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமம் "உமா சைலேந்த்ர தனயா கௌரி கந்தர்வ சேவிதா"உமையம்மைமலைகளுக்கெல்லம் அரசனான, இமய மலையின் அரசன் இமவான் மகளாக பிறந்துவளர்ந்துவிளையாடி தவமிருந்து சர்வேச்வரனை கை பிடித்த இடம் இமயமலை.

இதை குமரகுருபரர் மீனாக்ஷி அம்மன் பிள்ளைத் தமிழில்

“வளர்சிமய இமயப்பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே” என்றும்

அபிராமி பட்டர்

“குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடைக் கோலவியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை”, 

கருணை குலவு கிரிராச புத்ரி,

அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே .

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங் குழையே

சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ தனயை

என்றெல்லாம் அன்பொழுக பாடுகின்றார்.

 

அம்பிகையைப் பற்றி பாடும் போது ஆதி சங்கர பகவத் பாதாள் இமஹிரி சுதேஎன்றும் கிரி கன்யேஎன்றும்சைலசுதே என்றும் கிரிராஜ புத்ரி என்றும் வாத்சல்யத்துடன் பாடுகின்றார்.

n28.jpg

சகல செவங்களும் தரும்

இமய கிரிராஜ தனயை கற்பகவல்லி 

 

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி

பராந்தகி த்ரியம்பகி யெழில்

புங்கவி விளங்குசிவ சங்கரி ஸஹஸ்ரதள

புஷ்பமிசை வீற்றிருக்கும்

நாரணி மனாதீத நாயகி குணாதீத

நாதாந்தசக்தி என்றுன்

நாமமே உச்சரித்திடுமடியர் நாமமே

நானுச்சரிக்க வசமோ

ஆறணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ

அகிலாண்டகோடி யீன்ற

அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்

ஆனந்த ரூப மயிலே

வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்

வளமருவுதேவை யரசே

வரை ராசனுக்கிருகண் மணியாயுதித்த மலை வளர்

காதலிப்பெண் உமையே!

 

(இராமேஸ்வரத்தில் வளர் பர்வதவர்த்தினி அம்பாள் மேல் தாயுமானவர் பாடிய அற்புத பதிகத்தின் ஒரு பாடல்)

பரம கருணாமுர்த்தி, வானருய்ய தான் ஆலமுண்ட நீலகண்டர் எம்பெருமானை மாணிக்க வாசகரும்தமது திருவாசகத்திலே மலைக்கு மருகனைப் பாடி நாம் தேள்ளேணம் கொட்டோமோ என்றுபாடுகின்றார். அன்னை ஜகத்ஜனனி, ஜகன்மாதா, மஹா த்ரிபுரசுந்தரி நாம் எல்லாரும் உய்ய இமவான் மகளாக பிறந்து அருள் பாலித்ததால் அன்னையை, மலையரசன் பொற்பாவைவரைமகள்வரையரசன் புத்ரிமலைமகள்மலைமங்கைஷைலபுத்ரிபார்வதிபர்வதவர்த்தினிகிரிஜாகிரிசைகிரிநந்தினி,கிரிவர புத்ரிமலை வளர் காதலி உமைபர்வத புத்ரிபார்வதிஇமவான் மடந்தை உத்தமிஎன்றெல்லாம் அழைத்து மகிழ்கின்றனர் பக்தர்கள்.

 

 

 

இப்புனிதமலையில் இந்து, புத்த சமயங்களின் பல்வேறு புண்ணிய தலங்கள் அமைந்துள்ளன.திருக்கயிலாயம், தொடங்கி, கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், வைஷ்ணோ தேவி, காமாக்யா, கங்காத்ராதேவிதாராதேவிசாமுண்டாதேவிஜூவாலாமுகி, முக்திநாத், பசுபதிநாத்என்று எண்ணற்ற இந்து புண்ணியத்தலங்கள் இமயமலையில் அமைந்துள்ளன. மேலும் எண்ணற்ற புத்தவிகாரங்கள் இமயமலையெங்கும் பரவியுள்ளன.

 

"மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலமீதினில் இது போல் பிரிதில்லையே'' என்றும்“வெள்ளிப்பனி மலை” என்றும் மகாகவி பாரதியார் போற்றிய மாமலையான இமயமலைபுவியியலின் படி, இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரியமிக உயர்ந்தமாபெரும் மலைத்தொடராகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும் இந்த இமயமலைத் தொடர்ஆசியாவிலுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடருக்கு வடக்கே 4,300 மீட்டர் உயரத்திலே திபெத் உயர் பீடபூமி உள்ளது. உலகத்திலேயே உயரமானதும்அதே சமயத்தில் இளைய மலை அம்மலைத்தொடர் சுமார் 30மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது.

cd2.jpg

மஞ்சு கொஞ்சும் மலை முகடுகள் நிறைந்த இமயமலை

ஹிம் என்றால் பனி ஹிமாலயம் என்றால் பனி ஆலயம் என்று பொருள். எனவே இமாலயத்தில்எப்போதும் பனி நிறைந்திருக்கும். பனி மூடிய சிகரங்களை கொண்டுள்ளதால் இம்மலைத் தொடர்அதிகமாக சிதைவு அடையவில்லைஇம்மலைத் தொடர் கிழக்கு மேற்கில் இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் விரிந்து பரந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொடங்கி, பாகிஸ்தான். இந்தியா, நேபாளம். சீனா, பூடான், மியான்மார் வரை பரவியுள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இந்த மலைத்தொடர்கள் மட்டும் இல்லாமல்இருந்திருந்தால் நம்முடைய இந்தியத் திருநாடே பாலைவனமாக மாறியிருக்கும்இந்து மஹாசமுத்திரத்திலிருந்து வரும் மேகக்கூட்டங்களை தடுத்து நிறுத்தி இந்திய திருநாட்டை வளமிக்க நாடாகமாற்றியுள்ளது இம்மலைகள். அதே சமயம் திபெத்திலிருந்து வரும் குளிர் காற்றை தடுத்து நிறுத்தி நல்ல தட்பவெப்ப நிலை வடநாட்டில் நிலவ உதவுவது இம்மலைத்தொடர்கள்தான். செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு.

cd16.jpg

 

மோகன், வைத்திலிங்கம், தனுஷ்கோடி

எப்போதும் பனியால் மூடப்பட்டிருப்பதால் அப்பனி உருகி பாயும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, யாங்சிகீ, மஞ்சளாறு, ஐராவதி என்னும் வற்றாத ஜீவநதிகள் அனைத்தும் உருவாகி ஆசிய கண்டத்தையே வளமாக்குகின்றன. அகழ்வாராய்ச்சியின் மூலமாக முதன் முதலில் நாகரீகம் இந்தஇமய மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடும் ஆற்றின் கரையோரங்களில் தான் என்றுநிரூபிக்கப்பட்டுள்ளதுஇவ்வாறு நாகரீகத்தின் தொட்டிலும் இமயமலைதான்இப்பூவுலகின் ஒப்பற்ற கொடுமுடியாகிய எவெரெஸ்ட் தொடங்கி அனைத்து 8000 மீட்டருக்கும் உயர்வான பனி மூடிய சிகரங்கள் அனைத்தும் அமைந்திருப்பதும் இம்மலைகளிள்தான். உலகின் பத்து மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலையில் உள்ளன.

cd10.jpg

பச்சைப் போர்வை போர்த்தது போல காட்சி தரும் இமயமலை

இம்மலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனஅவையாவன சிறிய இமயம்பெரிய இமயம்,எல்லை கடந்த இமயம்இமயமலை கொடுமுடிகள் இறைவனின் வாசஸ்தலம் இவற்றில்விண்ணைத் தொடும் கைலாயம் சிவலிங்க முடி எழிலின் திரு வடிவமாகும், திருக்கயிலாயம்எல்லை கடந்த இமயத்தில் அமைந்துள்ளதுபெரிய இமயத்தின் தென் பகுதில் மற்ற இமய மலையின்புண்ய தலங்களான ரிஷகேசம்திருக்கேதாரம்பத்ரிகாச்ரமம்கங்கோத்ரியமுனோத்ரி முதலியவைஉள்ளன.

 

உத்தரகாண்ட மாநிலத்தின் கிழக்குப்பகுதிக்கு குமோன் என பெயர் வரக்காரணம் விஷ்ணு பகவான்எடுத்த கூர்ம அவதாரம் ஆகும்இரண்டாவது அவதாரமாக கூர்ம அவதாரம் எடுத்த போது எம்பெருமான்இமயமலையில் இப்பகுதியில் மூன்று மாதங்கள் தங்கியதாக ஐதீகம்அவரது காலடித்தடம் இன்னும்இம்மலைகளில் உள்ளனகூர்ம்மாச்சல் என்பதே மருவி குமூ ஆகி பின் குமோன் என்று இன்றுஅழைக்கப்படுகின்றது.

 

பாண்டவர்களுடன் தொடர்புடையது இமயமலை. இந்த இமயமலைப் பகுதியில்தான் அர்ஜூனன் தவம் புரிந்து சிவபெருமானுடன் விற்போரும், மல்யுத்தமும் புரிந்து பாசுபதாஸ்திரம் பெற்றான். பாண்டவர்கள் சொர்க்கம் புகுந்ததும் யமதர்மராஜன் அவர்களை நாய் ரூபத்தில் சோதித்தும் இம்மலைகளில்தான். வேதவியாசர் வேதங்களைச் சரிபார்த்து நான்கு ஆக்கிய நல்லிடம் இமயமலைப் பகுதியே. மகாபாரதம் எழுதப்பட்ட புனித இடம் இமயமலைப் பகுதிதான் என்று இமயமலையின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

cd15.jpg

 

 

இவ்வாறு தாங்கள் இமயமலையின் சிறப்பைப் படித்துக்கொண்டிருப்பதற்குள் வண்டி டேராடூன் நகரில் நுழைந்து மலைகளின் அரசியானதும் சிறந்த மலை வாசஸ்தலமும் ஆன முசோரி நோக்கி சென்று கொண்டிருந்தது. டேராடூன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது அதன் அருகே உள்ள முசோரி மலையின் மேலே அமைந்துள்ளது. ஆகவே வண்டி மலை சிகரத்தை நோக்கி ஏறிக்கொண்டிருந்த போது சிவபுரி என்னும் ஊர் வந்தது. அங்கு வண்டியை நிறுத்தினார்கள் எதற்காக என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா இப்பதிவு சிறிது நீளமாகிவிட்டது எனவே அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.

http://natarajar.blogspot.ch/2011/11/4.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்திருக்கின்றோம், தொடருங்கள் நன்பரே...!

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது. தொடருங்கள்....

valley of flowers National Park பற்றி யாராவது தெரிந்தால் எழுத முடியுமா????

Link to comment
Share on other sites

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -6

பர்கோட்டிலிருந்து யமுனோத்ரி பயணம்

cd34.jpg

பர்கோட் GMVN சுற்றுலா விடுதி

பர்கோட் என்னும் இந்த சிறு நகரம் ஒரு சந்திப்பு ஆகும். ரிஷிகேசிலிருந்து யமுனோத்ரி செல்பவர்கள் இரு வழியாக இவ்விடத்தை அடையலாம். முதலாவது நாங்கள் பயணம் செய்த முசோரி, யமுனா பாலம், டம்டா, நௌகான் வழியாக 157 கி.மீ பயணம். இரண்டாவது வழி . நரேந்திரநகர், சம்பா, தெஹ்ரி, தாராசு, பிரம்மகால் வழியாக 175 கி.மீ பயணம்.


இந்த பாதை வழிகளின் விவரம்

புறப்படும் இடம்- செல்லும் இடம்- தூரம் கி.மீ - உயரம் மீ
ரிஷிகேஷ் - முசோரி- 36- 1921
முசோரி- கெம்ப்டி அருவி- 12- 1524
கெம்ப்டி அருவி- யமுனா பாலம்- 16- 772
யமுனா பாலம்- டம்டா- 25- 1372
டம்டா- நௌகான்- 28- 1524
நௌகான்- பர்கோட்- 11- 1828
பர்கோட்- சயானாசட்டி- 29 -1982
சயானாசட்டி- ஹனுமான்சட்டி- 5 -2134
ஹனுமான்சட்டி- பூல்சட்டி- 5- 2561
பூல்சட்டி- ஜானகிபாய் சட்டி- 3- 2576
ஜானகிபாய் சட்டி-யமுனோத்ரி- 5- 3323 (நடை)

இரண்டாவது வழி

ரிஷிகேஷ்- நரேந்திர நகர்- 16-1067
நரேந்திர நகர்-சம்பா- 46- 1524
சம்பா- தெஹ்ரி- 21- 770
தெஹ்ரி- தாராசு- 37- 1036
தாராசு- பிரம்மகால்- 15- 1158
பிரம்மகால்- பர்கோட்- 40- 1828

பர்கோட்டிலிருந்து மேலே சொன்ன வழிதான். இதில் தற்போது ஜானகிபாய் சட்டி வரையிலும் வண்டியில் செல்ல இயலும் அதற்கு மேல் நடை பயணம்தான். (சட்டி : என்றால் தங்கும் இடம் என்று பொருள்)

உயரத்தைப்பார்த்தால் நாம் எவ்வாறு , மலை மலையாக ஏறி இறங்கி பயணம் செய்கின்றோம் எனப்து விளங்கும்.

 

மேலும் இவ்வூரிலிருந்து கங்கோத்திரிக்கும் ஒரு பாதை செல்கின்றது இரண்டாவது வழியில் பர்க்கோட்டிலிருந்து தெஹ்ரி வரை சென்று பின்னர் உத்தரகாசி சென்று கங்கோத்ரியையும் அடையலாம். இப்பதிவில் நான்கு தலங்களுக்கு செல்லும் பாதை வரைபடமும்(Road Map) கொடுத்துள்ளேன்.

 
cd30.jpg
சார்தாம் பாதை வரைபடம்
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

 


பர்கோட் அருமையான இயற்கை சுழ்நிலையில் அமைந்துள்ளது. ஒரு பக்கம் ஓங்கி உலகளந்த உத்தமன் போல பச்சை மேனியுடன் நெடிதுயர்ந்த இமயமலை கீழே பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்நகரம். இங்கிருந்து பந்தர்ப்பூஞ்ச் மலையை பார்க்க முடியும். முதலிலேயே சொல்லிவிட்டதால் உணவு தயாராக இருந்தது, ஒன்றை மட்டும் இங்கே குறிப்பட விரும்புகிறேன். சாதத்திற்காகவும் இவர்கள் நாம் பிரியாணி செய்ய பயன்படுத்தும் பாஸ்மதி அரிசியைத்தான் பயன்படுத்துகின்றனர். சுவையானதாக இருந்தாலும் அதிகம் சாப்பிடமுடியாது. மேலும் குளிர்பிரதேசம் என்பதால் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவது நல்லது. எங்கள் குழுவில் சிலருக்கு இந்த உணவு சேரவில்லை. யமுனோத்ரி தரிசித்து விட்டு திரும்பி வரும் போது இங்கு ஒரு நாள் இரவு தங்க வேண்டும் என்று எங்கள் வழிகாட்டி கூறினார். பர்கோட் ஒரு சிறிய நகரம் யமுனோத்ரி செல்லும் வழியில் எதுவும் கிடைக்காது என்பதால் உங்களுக்கு வேண்டிய மருந்து மற்றும் அவசிய பொருட்களை இங்கேயே வாங்கிக்கொள்ளுங்கள்.
 
cd28.jpg
 
பர்கோட் GMVN சுற்றுலா விடுதி பூங்கா
 
தாங்கள் காண்கின்ற இந்த கட்டிடம்தான் பர்கோட்டில் உள்ள GMVN தங்கும் விடுதி. விடுதியின் வர்ணத்தைப் பாருங்கள் பச்சை நிறம். எங்கிருந்தாலும் நீங்கள் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அதே சமயம் மழை இவ்வாறு தாறுமாறாக பெய்வதற்கு உலக வெப்பமயமாதல் (Global Warming) ஒரு காரணம் அல்லவா? ஆகவே காடுகளை நாம் காக்க வேண்டும், மரங்களை வெட்டக்கூடாது, சுற்றுசூழலை மாசு படாமல் காக்க வேண்டும் என்பதையும் இது குறிப்படுகின்றது.
 
மதிய உணவிற்குப்பின் யமுனோத்திரிக்காக வண்டியில் கிளம்பினோம்.கிளம்பும் போதே ராணா சட்டி அருகில் ஒரு நிலச்சரிவு என்ற செய்தி கிடைத்தது. சிறிது தூரம் சென்றதும் பாதை இரண்டாகப் பிரிந்தது இடப்பக்கம் செல்லும் பாதை யமுனோத்திரிக்கும், வலப்பக்கம் செல்லும் பாதை கங்கோத்திரிக்கும் செல்கின்றது. இடப்புறம் செல்லும் பாதையில் திரும்பி சிறிது கீழே இறங்கி யமுனை நதியை கடந்து பயணம் தொடர்ந்தது. இதற்கப்புறம் பாதை ஒரே எற்றம் யமுனையும் மெலிந்து கொண்டே ஒடிக்கொண்டிருந்தாள் ஏனென்றால் உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகில் செல்கின்றோம் அல்லவா?

 
cd27.jpg
அஸ்னால் காட் சுற்றுலா விடுதி
cd3.jpg
உயரம் அதிகமாகிக்கொண்டே வந்ததால் மலைகள் செங்குத்தாகவும் மற்றும் குறுகலாகவும் ஆனது. மரங்கள் நெட்டையாகிக்கொண்டே வந்தன. வெறும் கூம்பு வடிவ பைன் மரங்களும், தேவதாரு மரங்களும் தான் மேலே உள்ளன. நடுநடுவே சிறு கிராமங்கள், பாலங்களில் பல இடங்களில் யமுனையை கடந்து இரு கரையிலுமாக பயணம் செய்தோம். மலைப் பிரதேசம் மாசு படாத சுத்தமான ஈரகாற்றை சுவாசித்து தெம்படைந்தோம். நம் நகரங்களில் வெறும் பெட்ரோலியம் புகையைத்தானே சுவாசிக்கின்றோம். பாதை மலை பெய்ததினாலோ என்னவோ? என்று நினைத்தோம் ஆனால் பாதை இரட்டிப்பு வேலை நடைபெறுவதால் பாதை தோண்டப்பட்டதாலும் மழை அதிகமாக பெய்ததாலும் பாதை இவ்வாறு இருப்பதாக வழிகாட்டி கூறினார் மிகவும் மோசமாக இருந்தது. தார் சாலையே இல்லை வெறும் சேறும் சக்தியுமாகத்தான் இருந்தது. வண்டி ஒட்டுனர் எறும்பு ஊர்வது போல வண்டியை உருட்டிகொண்டே சயானாசட்டியை கடந்து ராணாசட்டி அடைந்தார். நிலச்சரிவை சரி செய்திருந்தனர். அதற்கு மேல் வண்டியை ஓட்ட பயந்தார் ஏனென்றால் மறுபடியும் நிலச்சரிவு ஏற்பட்டால் திரும்பி பெரிய வண்டியில் வருவது கடினம் என்று. ஆகவே வழிகாட்டில் அங்குள்ள இரண்டு ஜீப்களில், அவர்கள் செலவில் எங்களை அஸ்னால் காட் என்னும் இடத்தில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றார் ஏனென்றால் ஜானகி பாய் சட்டியில் 13 பேர் தங்கும் வசதியில்லை.

 
10.jpg
காலையில் பனி மூட்டம்
 
cd28.jpg
யமுனோத்ரி கிளம்புகின்றோம்
 
இரவு குடும்பத்தினர் ஒரு அறையிலும் மற்றவர்கள் Dormitaryயிலும் தங்கினோம். இரவு வெகுநேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தது. சாப்பிடும் சமயம் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் ஜெனரேட்டரை போட்டனர். அப்போது எங்களுடைய கைப்பேசிகள், புகைப்படக் கருவிகளை சார்ஜ் செய்து கொண்டோம். எனவே இந்த யாத்திரையின் போது டார்ச் லைட் அல்லது மெழுகுவர்த்தி, தீப்பெட்டி வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். சிறிது நேரம் ரஜாய்க்குள் குளிருக்கு இதமாக பயண களைப்பு தீர ஒய்வு எடுத்துக் கொண்டு சுட சுட ரொட்டி (சப்பாத்தி) தயார் ஆனவுடன் சாப்பிட்டு விட்டி சிறிது நேரம், இந்த க்ஷேத்திரங்களின் புராணங்களைப் பற்றி விவாதித்து விட்டு படுக்க சென்றோம். நாம் எந்த ஸ்தலத்திற்கு சென்றாலும் அந்த தலத்தின் புராண வரலாற்றை அறிந்து கொண்டால், எதோ எம்புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்பது போல இல்லாமல் யாத்திரை மிகவும் பொருள் பொதிந்த்தாக இருக்கும் எனவே இப்பதிவுகளில் தங்களுக்கு இந்த ஸ்தலங்களைப் பற்றிய பல தகவல்கள் கிட்டும்.

 
cd1.jpg
ஜானகி சட்டி சுற்றுலா மாளிகை
 
இரவே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. காலையில் எழுந்து பார்த்தால் ஒரே பனி மூட்டம் எதிரே இருந்த மலை சிகரங்கள் கண்ணில் படவில்லை. உயர் மட்டங்களில் எவ்வளவு சீக்கிரம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடுகின்றோமோ அவ்வளவு நல்லது. எனவே ஆறு மணிக்கெல்லாம் வெந்நீரிலே குளித்து அனைவரும் தயாராகி விட்டு மழை சிறிது குறைவதற்காக காத்திருந்தோம். மலையேறும் போது அதிக சாமான்களை எடுத்து செல்ல வேண்டாம். சுமார் ஏழு மணி அளவில் மழை கொஞ்சம் மட்டுப்பட்டது வெளிச்சமும் கூடியது ஜீப் மூலம் மழைக்கோட் அணிந்து கொண்டு ஜானகி சட்டி அடைந்தோம்.

14.jpg
 
ஜானகிபாய் சட்டி அடைவதற்கு முன் ஹனுமான் சட்டி என்ற இடம் உள்ளது. அஷ்ட சஞ்ஜீவிகளில் ஒருவரான அனுமன் இலங்கையை எரித்த பின் தனது வாலை இங்கு வந்து அணைத்ததாக ஐதீகம். மேலும் கங்கோத்ரியையும் யமுனோத்ரியையும் இணைக்கும் மலைத்தொடர் பார்ப்பதற்கு குரங்கின் வால் போல் உள்ளதால் இந்த மலை பந்தர்பூஞ்ச் ( பந்தர்= குரங்கு, பூஞ்ச் = வால்) என்றும் அழைக்கபப்டுகின்றது. இம்மலையிலிருந்து ஹனுமான் கங்கா நதி ஒடி யமுனையில் கலக்கின்றது. ஜானகி பாய் என்னும் மூதாட்டி யமுனா மய்யா ( யமுனை அன்னை )விடம் மிகவும் பக்தி கொண்டு அன்னையை வணங்கி வந்ததால் இந்த கிராமத்திற்கு அவர் ஞாபகார்த்தமாக ஜானகிபாய் சட்டி என்னும் பெயர் வந்தது. சட்டி என்றால் யாத்திரிகள் தங்கும் இடம் என்று முன்பே பார்த்தோமல்லவா? இங்கிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் கர்சாலி என்ற கிராமம் உள்ளது. யமுனை அன்னை குளிர் காலத்தில் இக்கிராமத்தில்தான் வந்து தங்குகின்றாள்.

cd4.jpg
ஜானகிபாய் சட்டி சுற்றுலா விடுதி

cd32.jpg
 
ஜானகி சட்டியில் காலை உணவை முடித்துக்கொண்டு யமுனோத்திரிக்கான நடைபயணத்தை துவங்கினோம். அகலமான பாதைதான் பல இடங்களில் படிகளும் உள்ளன. ஆனால் ஒரே ஏற்றம் சுற்றி சுற்றி மலையேற வேண்டும். நடக்க முடியாதவர்களுக்கு என்ன வசதிகள் உள்ளன என்ற எண்ணம் தோன்றுகிறதா? முதலில் போனிகள் எனப்படும் (கோவேறு) குதிரைகள் உள்ளன. குதிரையில் பயணம் செய்யும் போது ஜாக்கிரதையாகதான் பயணம் செய்யவேண்டும். இயல்பிலேயே இவை மலையை ஒட்டி செல்லுகின்றன. ஏற்றத்தில் முன்னால் குனிந்து கொண்டும், இறக்கத்தில் பின்னால் சய்ந்து கொண்டும் எப்போதும் கால்களை சேணத்தில் சரியாக வைத்துக்கொண்டும் பயணம் செய்வது நல்லது. முதலில் பயம் இருக்கக்கூடாது. மலையை ஒட்டி குதிரை செல்லும் போது மேலே உள்ள பாறைகளை கவனித்து தலையையும் உடலையும் வளைத்து நாம்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும். நாம் நம்முடைய போர்வை ஒன்று எடுத்து சென்றால் அதை நாம் சௌகரியமாக குதிரையின் மேல் அமர்வதற்கு பயன்படுத்திக்கொள்லலாம். குதிரையிலும் முடியாத வயோதிகர்கள் தண்டியில் பயணம் செய்யலாம். இது பல்லக்கு போன்றது.
 
cd31.jpg
தண்டியில் ஒரு மூதாட்டி

இதை நான்கு பேர் சுமந்து செல்கின்றனர். நான்கு பேரும் ஒருமித்து இராணுவ வீரர்கள் நடை போட்டு செல்வது போல செல்லும் அழகே ஒரு அழகு. அதுவும் அடங்காமல் குதிரைகள் இவர்கள் மேல் மோதுவது போல் வருவதைப் பார்க்கும் எவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இதல்லாமல் பிட்டு என்னும் கூடையில் சிறு குழந்தைகளை உட்கார வைத்து ஒருவர் தூக்கிச் செல்லும் வசதியும் உள்ளது. அதுவே பெரியவர்களாக இருந்தால் காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்து செல்லலாம் இதற்கு கண்டி என்று பெயர். சாமான்களை எடுத்துச்செல்ல கூலிகள் கிட்டுவார்கள். இவர்கள் எல்லாரிடமும் அரசு வழங்கிய அடையாள் அட்டை இருக்கும் அதை வேண்டுமென்றால் வாங்கி பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வோரு ஆண்டும் உத்தராகாண்ட் அரசு இவற்றுக்கான கட்டணம் நிர்ணயம் செய்கின்றது அதிக கிராக்கி இருந்தால் கட்டணம் அதிகமாகும் என்பது போல் யாத்திரிகளின் கூட்டத்தை பொறுத்து விலை மாறுபடுகின்றது. சீசன் சமயத்தில் கட்டணம் அதிகமாக இருக்கும் அதே செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் கட்டணம் குறைவாக இருக்கும்.

 
cd33.jpg
20ரூபாய் மழைக்கோட்டில் இருவர்
 
cd29.jpg
அழகிய வெள்ளை செம்பருத்திப்பூ
 
நாங்கள் நடை பயணத்தை துவக்கும் போதும் மழை தூறிக்கொண்டு இருந்தது. இங்கு 20 ரூபாய்க்கு ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக மழைக் கோட்டுகள் கிடைக்கின்றன. மழைக்கோட்டு கொண்டு வராதவர்கள் அதை வாங்கிக்கொண்டனர். எங்களில் மூன்று பேர் குதிரையிலும் மற்றவர்கள் நடந்தும் யமுனோத்திரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் யமுனையைப் பற்றிய கதைகள் சிலவற்றை சொல்லுகிறேன். கேட்டுக்கொண்டே தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே
 

 

Link to comment
Share on other sites

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -7

யமுனோத்ரி மகிமை

cd35.jpg

சப்தரிஷி குண்டிலிருந்து உற்பத்தியாகி ஓடி வரும் யமுனை நதி

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள இறைப்பரம்பொருள் நாம் எல்லோரும் உய்ய பல்வேறு தலங்களில் தனது தெய்வீக சக்தியை நிலை நாட்டி அருள் புரிகின்றார் இவையே ஜோதிர்லிங்க தலங்கள்திவ்ய தேசங்கள்சக்தி பீடங்கள் என்று பல்வேறு நாமங்களில் சிறப்பிக்கப்படுகின்றன.இப்புண்ணியத்தலங்கள் எல்லாம் இன்று நேற்று தோன்றியவை அல்ல அநாதி காலமாக இவை புண்ணிய தலங்களாக உள்ளன இன்னும் புண்ணிய தலங்களாகவே திகழும். எவ்வாறு கோமாதாவின் உடலில் எல்லா பாகங்களிலும் இரத்தம் ஓடினாலும் மடியில் மட்டும் அது பாலாகி நமக்கு பயன்படுகின்றதோ அது போல இறைப்பரம்பொருளின் சக்தி நமக்கு பயன்படும் விதமாக அமைந்தவைதான் இந்த புண்ணிய ஸ்தலங்கள். இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் பல்வேறு புராணங்களின் மூலமாக நமக்கு இந்த உண்மையை உணர்த்தி சென்றுள்ளனர். இவ்வாறு உத்தராகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் மடியில் இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் சூழலில் தேவபூமியில் அமைந்துள்ளன நான்கு புண்ணிய தலங்கள் யமுனோத்திரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகியவை அவற்றுள் யமுனையின் சிறப்புகளை முதலில் காணலாம்.

 

 

 

யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே

 

கண்ணனோடு நான் ஆட

 

என்னும் திரைப்பாடல் எனக்குப் பிடிக்கும் தங்களுக்கும் பிடிக்கும்தானே வாருங்கள் சார்தாம் யாத்திரையின் முதல் தலமானதும் உத்தராகாண்ட மாநிலத்தின் மேற்கு கோடியில் அமைந்துள்ளதுமான அந்த யமுனை நதியின் உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகில் உள்ள யமுனோத்திரி தலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

பாரத பூமியில் நமது பாவங்களை எல்லாம் தாம் எடுத்துக்கொண்டு நம்மை பவித்திரப்படுத்தும் புண்ணிய நதிகள் ஏழு

 

கங்கே ச யமுநே ஸைவ கோதாவரீ சரஸ்வதீ

 

நர்மதே சிந்து காவேரீ... என்று நம் புராணங்கள் அவற்றை கூறுகின்றன. இவற்றுள் கங்கைக்கு அடுத்தபடியாக புண்ணிய நதியாக விளங்குவது யமுனை ஆகும். யமுனா, ஜாமுனி முனிவர் துதி செய்த ஜமுனா, யமனின் சகோதரி யமிதந்தை காளிந்தன் என்னும் தந்தை சூரியனின் பெயரால்காளிந்தி என்னும் பல நாமங்கள் யமுனைக்கு உள்ளது.
 
20.jpg
முதலில் சிறு தாரையாக இருந்த
யமுனை யமுனோத்ரி அருகில்
இந்த யமுனை நதியில் தான் கண்ணன் பால பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான். கண்ணனின் பாதம் பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான சியாமள வண்ணமாகவே உள்ளாள். கண்ணன் சிறைச்சாலையில் பிறந்தவுடன் வசுதேவர் கோகுலத்திற்கு கூடையில் குட்டிக்கண்ணனை எடுத்து செல்லும் போது அவரது நாசி வரை வந்தும் யமுனையின் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. அப்போது அடை மழை பொழிந்து கொண்டிருந்தது, ஆகவே ஆதிசேஷன் வந்து பெருமாளுக்கு குடைப்பிடித்தான். அப்போதுதான் பால கிருஷ்ணன் ஒரு திருவிளையாடலை செய்தான் தன் பிஞ்சுக்கால்களால் யமுனையின் தண்ணீரைத் தொட்டான். கண்ணனின் கால்பட்டு புனிதம் அடைந்தாள் யமுனை, உடனே பிரிந்து வழிவிட்டாள். 
யமுனை நதிக்கரை குழந்தை ஸ்ரீகிருஷ்ணனின் நினைவுகளால் புனிதமடைந்தது. இதன் கரையில்தான் கோபியருடன் ராசலீலை செய்தருளினான் கண்ணன் தன் கள்ளமற்ற இனிய லீலைகளினால் கோபிகைகளுடன் விளையாடி தெய்வ அவதாரத்திற்கும் அவன் அடியார்களுக்கும்இடையே என்றும் நிலவும் பேரன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தியுள்ளான். காளியனின் ஆணவத்தை அடக்கி கிருஷ்ணன் காளிய மர்த்தனம் ஆடியதும் இந்த யமுனையில்தான்.
DSC02514a.JPG

 

காளிய மர்த்தனன் கமலா நாயகன்
ஆகவேதான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் தனது திருப்பாவையில்

 

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை...... .

 


என்று பாடுகின்றாள். யமுனை கருமை நிறமானவள் என்றாலும் கண்ணனின் பாதம் பட்டு புனிதம் பெற்றவள் என்பதால் தூயப்பெருநீர் யமுனை என்று கொண்டாடுகின்றாள் ஆண்டாள் நாச்சியார். கங்கையும் யமுனையும் அந்தர் வாகினியாகிய சரஸ்வதியுடன் சங்கமம் ஆகும் அலகாபாத் திரிவேணி சங்கமம் என்னும் புண்ணிய சக்தி பீடம் ஆகும். கடலில் நேராக கலக்காத புண்ணிய நதி யமுனை ஆவாள்.
suri1.jpg
உஷா தேவி சாயாதேவி
உடனாய சூரிய பகவான்
 

 

யமுனை சூரிய புத்ரி, சூரியனுக்கும் உஷா தேவிக்கும் (சரண்யு) பிறந்தவள். யமதர்மராஜனின் இரட்டை சகோதரி. ஸம்ஜ்ஞா தேவி. சஞ்சனா தேவி என்றும் அழைக்கப்படும் உஷாதேவி தேவ சிற்பி விச்வகர்மாவின் மகள் ஆவாள். இவள் இவள் சூரியனின் முதல் மனைவி. இவள் அருணோதய காலம், மற்றும் மேகங்களின் தேவதையாவாள். சூரியனின் தேஜஸ்ஸை தாங்க முடியாமல் உஷா தேவி நேராக அவரை பார்க்க முடியாததால் தனது நிழலாக சாயா தேவி ( நிழல்) உருவாக்கி அவருக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைத்தார். இவ்வாறு உஷா தேவி இருந்ததால் தாயைப் போலவே யமுனையும் குணம் கொண்டவள் என்று நம்பப்படுகிறாள். சாயா தேவியின் குழந்தைகள் சனி, சம்வந்தர மனு, தப்தி ஆவார்கள்.
ஒரு சமயம் தனது சகோதரனான யமதர்மராஜன் சகோதரியே! நான் உனக்கு சீதனமாக ஏதும் தரவில்லை ஏதாவது வரம் கேள் என்று கூற யமுனையானவள் “அண்ணா எனக்கு ஒன்றும் வேண்டாம், எனது நீரில் நீராடுபவர்களுக்கு யமபயம் இருக்க கூடாது என்று வரம் கேட்க யமதர்மராஜனும் அவ்வாறே அருளிச் செய்தார்”. எனவே தமது பாவங்களை தொலைக்கவும் யமபயம் நீங்கவும் பக்தர்கள் யமுனோத்திரிக்கு புண்ணிய யாத்திரை செய்து யமுனையிலும், வெந்நீர் ஊற்றான சூரிய குண்டத்திலும் நீராடி, அதன் வெந்நீரில் சாதம் சமைத்து அதை யமுனா தேவிக்கு பிரசாதமாக சர்ப்பணம் செய்து தங்கள் இல்லங்களுக்கும் பிரசாதத்தை எடுத்து செல்கின்றனர். யாரொருவர் யமுனை நதியில் நீராடி யமுனை அன்னையை இங்கு தரிசனம் செய்கின்றார்களோ அவர்களின் ஆயிரம் ஜன்ம பாபம் அழிந்து விடுகின்றது.
cd29.jpg
கேதாரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய யமுனை தீர்த்தம்
பிடிக்கும் வைத்தி அண்ணன்
 

 

யமுனை கண்ணனிடம் ஆழ்ந்த காதல் கொண்டவள் என்று வல்லபாச்சாரியார் தமது யமுனாஷ்டகத்தில் பாடுகின்றார். இவளும் கண்ணனைப்போலவே சியாமள(கருமை) நிறமானவள்.யமுனையின் கருப்பு, கண்ணனால் வந்ததா?, கோபியர்களால் வந்ததா?, துளசியால் வந்ததா? காளியனின் விஷத்தால் வந்ததா? என்று வேதாந்த தேசிகர் கூறுகின்றார். யமுனை கருமையானவள் என்பதால் இதன் ஆழத்தை பார்ப்பது கடினம்.
15.jpg
யமுனை இறங்கி வரும் அழகும் யமுனோத்ரி ஸ்தலமும்
 
யமனும் யமியாகிய யமுனையும் சகோதர சகோதரி பாசத்திற்கு உதாரணமாக விளங்குகின்றனர். வடநாட்டில் தீபாவளியை அடுத்து கொண்டாடப்படும் பாய்தூஜ் (பையா தூஜ்) என்னும் பண்டிகை. யமன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் வரிசை கொண்டு வந்ததையும் அதற்காக யமுனை தன் சகோதரனுக்கு இனிப்பு பலகாரங்கள் படைத்ததையும் ஆதாரமாக கொண்டது. இவையெல்லாம்யமுனையுடன் தொடர்புடைய சில புராணக் கதைகள் ஆகும் இனி யமுனோத்ரி ஆலயத்தைப்பற்றி சிறிது காணலாம்.
 
21.jpg

 

யமுனோத்ரி ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 3293 மீட்டர் (10804 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. யமுனை உற்பத்தியாகும் யமுனோத்திரி பனியாறு கீழ் இமாலயத்தில் 4421மீ உயரத்தில் பந்தர் பூஞ்ச் (குரங்கின் வால்) மலைத்தொடர்களின் கீழ் பகுதியில் சப்தரிஷி குண்ட்டில்(குளம்) அமைந்துள்ளது. சப்தரிஷி குளத்திற்கு பயணம் செய்வது மிக்க கடினம் என்பதால் மலையேறும் வல்லுநர்களும் மிக்க சிரத்தை கொண்ட பக்தர்கள் மட்டுமே இங்கு நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். இம்மலைத்தொடருக்கு அருகில் காளிந்தி எனப்படும் சூரிய மலைத்தொடர் உள்ளது.
yamunotri_glacier.JPG

 

யமுனையின் உற்பத்தி ஸ்தானம் (பனி படர்ந்த மலை)
யமுனை உத்த்ர (வடக்கு) வாஹிணியாக இங்கு ஓடுவதால் இத்தலம் யமுனோத்திரி ஆயிற்று.யமுனோத்திரியில் யமுனையின் இடக்கரையில் அமைந்துள்ள இக்கோவிலை 19ம் நூற்றாண்டில்ஜெய்ப்பூர் மஹாராணி குலேரியா முதன் முதலில் நிர்மாணம் செய்தார் பின்னர் இயற்கை சீற்றத்தினால் கோவில் சிதைய, பின்னர் தேரி கர்வால் மஹாராஜா பிரதாப் ஷா தற்போது உள்ள கோவிலை நிர்மாணம் செய்தார் என்று நம்பப்படுகின்றது. கருப்பு பளிங்குக்கல் விக்ரஹமாக கூர்ம வாகினியாகிய யமுனை இங்கே பத்மாஸனத்தில் அமர்ந்த கோலத்தில் கங்கை மற்றும் சரஸ்வதியுடன் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள்.

 

அசீத முனிவரின் ஆசிரமாக இத்தலம் ஆதி காலத்தில் இருந்துள்ளது. அவர் தினம் தவறாமல் கங்கையிலும் யமுனையிலும் தீர்த்தமாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். முதுமை காலத்தில்அவர் கங்கை செல்ல முடியாதபோது கங்கையே இங்கு வந்து யமுனோத்ரியில் அவருக்காக ஓடியதாக ஐதீகம் எனவே தான் யமுனை இங்கு கங்கையுடனும் ஸரஸ்வதியுடனும் தர்பார் சேவை சாதிக்கின்றாள். அருகிலேயே ஹனுமனுக்கும் ஒரு தனிக் கோவில் உள்ளது.இக்கோவிலில் இராமானுஜரும் அருள் பாலிக்கின்றார்.
ஆதிகாலத்தில் அக்னி தேவன் இங்கு வெகு காலம் தவம் செய்து திக்பாலகர்களில் ஒருவராகும் பேறு பெற்றார் எனவே இங்குள்ள வெந்நீர் குண்டம் தப்த் குண்டம் என்று வழங்கப்படுகின்றது.இந்த சரோவரில் ஸ்நானம் செய்பவர்கள் ஜனன மரண பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி அடைகின்றனர் என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்படுள்து.
 
 
cd36.jpg
அதே யமுனை நதி முசோரி அருகில்

 

இங்கு வரும் பக்தர்கள் முதலில் வெந்நீர் ஊற்றான தப்த் குண்டத்தில் நீராடி பின் சூரிய குண்டத்தில் சாதம் வடித்து அல்லது உருளைக்கிழங்கை வேக வைத்து, புத்தாடை புனைந்து அருகில் உள்ள திவ்ய சிலா என்னும் பாறைக்கு (வெந்நீர் ஊற்று இங்கிருந்துதான் பாறைகளின் நடுவிலிருந்து உற்பத்தியாகி வருகின்றது) அர்ச்சனை செய்து பின்னர் முப்பெரும் தேவியருக்கு சூரிய குண்டத்தில் வேக வைத்த பிரசாதத்தை நைவேத்யம் செய்து, வளையல், குங்குமம், கண் மை படைத்து வழிபாடு செய்து பின்னர் திருக்கேதார நாதருக்கு அபிஷேகம் செய்யவும், தங்கள் இல்லத்தில் சேமித்து வைத்துக் கொள்வதற்காகவும் யமுனை நதியின் புண்ணிய தீர்த்தம் எடுத்துக்கொண்டு அனுமனை தரிசனம் செய்து விட்டு மிக்க மனமகிழ்ச்சியுடன் அடுத்த தலமான கங்கோத்திரிக்கு புறப்படுகின்றனர். யமுனோத்த்ரியில் இரவு தங்குவது மிகவும் விஷேசமானது என்று புராணங்களிலே கூறப்பட்டுள்ளது.

 

யுனியால் கிராமத்தைச் சார்ந்த பூஜாரிகள் இக்கோவிலில் பூஜை செய்கின்றனர். நவம்பர் மாதத்தில் தீபாவளிக்குப் பின் அன்னை ஜானகிசட்டிக்கு அருகில் உள்ள கர்சாலி கிராமத்திற்கு எழுந்தருளி ஆறு மாதங்களுக்கு அருள்பாலிக்கின்றாள் பின்னர் அக்ஷய திருதியை அன்றைக்கு யமுனோத்திரிக்கு திரும்பிச் செல்கின்றாள்.
 

 

 
cd38.jpg
அழகிய ரோஜா கொத்து
யமுனோத்ரி பனியாற்றில் உருவாகும் யமுனை உத்தராகாண்ட், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், டில்லி மாநிலங்களின் வழியாக சுமார் 1370 கி,மீ தூரம் கங்கைக்கு இணையாக பாய்ந்து அலகாபாத்தில் திரிவேணி சங்கமமாக கங்கை மற்றும் அந்தர்வாகினியாகிய சரஸ்வதியுடன் இணைகின்றாள்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.