Jump to content

மாவையின் பேச்சுக்கு சிறிதரன் பதிலடி(காணொளி)


Recommended Posts

சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டது
என நேற்றைய (05.09.2015) தினம் மாவை சேனாதிராசா தெரிவித்த நிலையில் இன்று(06.09.2015) ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கினை பெற்றவருமான சிறிதரன் அவர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தான் ஐ.நா செல்லவுள்ளதாக உறுதியாக தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தலுக்கு முன்னர் தாம் கூறியதுபோல மக்களுக்கு உறுதியளித்த கொள்கைக்காக தொடர்ந்தும் தனக்குரிய பணியை செவ்வனே செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவால் தான் எந்த தீர்மானத்தையும் கொண்டுவரமுடியும் என்றும் அதற்காக அமெரிக்கா சொல்லும் எல்லாவற்றுக்கும் நாம் தலைஆட்டவேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்தார்.
 

தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின்போது சர்வேதேச விசாரணை முடிவடைந்துவிட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்த கருத்தை மீண்டும் இந்த நிகழ்வில் வலியுறுத்திய மாவை சேனாதிராசா ஆனால் சிலர் சர்வதேச விசாரணை நடக்கவில்லை என்று புரியாமல் பேசுவதாகவும் நீதியரசராக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இது புரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் தான் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு நின்றுவிடாமல் தற்போது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து போராட்டத்திற்கும் முதலமைச்சருக்கும் தொடர்பிருப்பதாகவும் அது தொடர்பில் தாம் முதலமைச்சரை அணுகுவதற்கு (கையாள்வதற்கு) திட்டமிருப்பதாகவும் மிடுக்குடன் தெரிவித்திருந்தார்.  இந்த கையெழுத்து போராட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,சிறிதரன்,சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம்,அனந்தி சசிதரன் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகள் கையொப்பமிட்டிருந்தமை சுமந்திரன் மாவை தரப்பினரை கடும் கோபம் கொள்ள வைத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் கடந்த பெப்ரவரி மாதம் பல்கலை சமூகம் மற்றும் சிவில் அமைப்புகளால் நடாத்தப்பட்ட மாபெரும் பேரணியில் பேசிய மாவை சர்வதேச விசாரணையை தாம் தொடர்ந்து வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். (மேலுள்ள காணொளியில் மாவையின் இரு கட்ட பேச்சும் இணைக்கப்பட்டுள்ளது 1.46 ஆவது நிமிடத்தில்) இவ்வாறு சுமந்திரனைப்போல தேர்தலுக்கு முன்னர் வாக்கை பெறுவதற்காக சர்வதேச விசாரணை என வலுயுறுத்தி வாக்கை பெற்று வெற்றி பெற்ற பின்னர் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் மாவை சுமந்திரன் மற்றும் சம்பந்தன் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாகாணசபையில் 2ஆவது அதிகூடிய வாக்கினை பெற்ற(87,000) அனந்தி சசிதரன் அவர்களும் ஜெனீவா செல்லவுள்ளார்.
 
 
Link to comment
Share on other sites

... ".. எமக்கு ஒன்றை கூறுவது, சிங்கள மக்களுக்கு பிறிது ஒன்றை கூறுவது .." ... நன்றிகள் நீதி அரசர் விக்கினேஸ்வரன்

சிங்கள மக்களுக்கு:

"சிறிலங்காவுக்கும், சிறிலங்காவின் மக்களுக்கும் விசுவாசமாக இருப்பேன்" - சம்பந்தன் உறுதி!

“சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் அனைத்து வேலைகளையும் நான் செய்வேன்" - சம்பந்தன் உறுதி!

 

தமிழர்களுக்கு:

* சர்வதேச விசாரணை - சம்பந்தர் உறுதி

* சமஸ்டி அரசு - சம்பந்தர் உறுதி

* 2016 இற்குள் தீர்வு - சம்பந்தர் உறுதி

 

... எம்மாறுபவர்கள் இருக்கும் மட்டும், ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்! ...  டமிழ் டேசியம்!!!!!!!!

 

Link to comment
Share on other sites

மாவையின் பேச்சுக்கு.........

 

பஸ் கண்டக்டர் அரசியலுக்கு வரக்கூடாது.ரஜினி மாதிரி இயற்கையாகவே நடித்து பணம் சம்பாதித்திருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கொம்பனி, ஜெனிவா செல்ல வில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற  பேச்சுக்களும்

பதில்களும்.. (அவர்கள் சொற்தொடரில் பதிலடிகளும்)

 

ஒற்றுமையைக்காட்டி வாக்கு வாங்கிவிட்டு

உடைக்க முயல்கிறார்கள்....

சிங்களத்துடன் பேச்சவார்த்தைக்கு போகும் போது

அவர்களே முதலில் ஒற்றுமையாக வாங்கோ என்று சொல்லவைப்பார்கள் போலுள்ளது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை மதில் மேல் பூனையா இருந்தவர்.தேர்தலுக்கு பின்னாடி சேர வேண்டிய பக்கத்துக்கு தாண்டினதே பெரிய காரியம். விடுங்க.. பாவம் அதுவும் எத்தின காலம் தான் வேசம் போட்டுக்கிட்டு இருக்கிறது. பொக்கட் நிரப்ப வேண்டாம். tw_blush:

Link to comment
Share on other sites

நாங்கள் பல்கலையில் படிக்கும் போது ஒரு சிங்கள மாஸ்டர் இடம் இங்கிலீஷ் படிக்க போனனாங்கள். ஒருநாள் கதையோட கதைய கேடார், படிப்பறிவு கொஞ்சமும் தேவையில்லாத 2 தொழில் சொல்லும்படி. நாங்களும் எங்களுக்கு தெரிந்த படிப்பறிவு அதிகம் தேவையில்லாத பல தொழில்களை சொன்னோம். அவர் கடைசியில் கூறினார் இங்கை (இலங்கையில்) அரசியல்வாதியாக மற்றும் பிச்சை எடுக்க எந்த தகுதியும் தேவையில்லை எண்டு.

இது அவரின் சொந்த கருத்து ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பல்கலையில் படிக்கும் போது ஒரு சிங்கள மாஸ்டர் இடம் இங்கிலீஷ் படிக்க போனனாங்கள். ஒருநாள் கதையோட கதைய கேடார், படிப்பறிவு கொஞ்சமும் தேவையில்லாத 2 தொழில் சொல்லும்படி. நாங்களும் எங்களுக்கு தெரிந்த படிப்பறிவு அதிகம் தேவையில்லாத பல தொழில்களை சொன்னோம். அவர் கடைசியில் கூறினார் இங்கை (இலங்கையில்) அரசியல்வாதியாக மற்றும் பிச்சை எடுக்க எந்த தகுதியும் தேவையில்லை எண்டு.

இது அவரின் சொந்த கருத்து ...

போகிற போக்கில்

கூடடமைப்புத்தான் உடையும் என்றிருக்க

தமிழரசுக்கட்சியே உடையும் போல இருக்கே....

Link to comment
Share on other sites

ஆமா, மாவையாருக்கு எத்தனை வாய்கள்? எத்தனை நாக்குகள்? ..

1. சர்வதேச விசாரணை அவசியம்

2. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது

3. கொஞ்சப்பேர் கிளம்பி இருக்கினம் சர்வதேச விசாரணை என்று

4. ..

இல்லையேல் ..

பாவம் இதுவும் டிமென்ஸ்ஹியா வருத்தத்தில் பாதிக்கப்பட்டிருகிறாரா? அப்படியாயின் பாவத்துக்கு றீட்மன்ட் அவசியம் ..

http://www.alzheimers.org.uk/site/scripts/documents.php?categoryID=200120&gclid=CK6Amb6E6McCFUHhGwodhdQEsw

 

Link to comment
Share on other sites

முதலமைச்சர் விக்கி மீது நடவடிக்கை ஏன்?

செய்தி- விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை! 11-ம் திகதி கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு - மாவை சேனாதிராஜா

இந்தியாவில் குடியிருக்கும் தலைவர்களை தெரிவு செய்யாமல் மக்கள் மத்தியில் வாழும் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்று விக்கி கூறினார். இது தவறா?

மக்களுக்கு ஒரு கருத்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இன்னொரு கருத்தும் சொல்லும் தலைவர்களை தெரிவு செய்யாதீர்கள் என்று விக்கி சொன்னார். அது தவறா?

உள்ளக விசாரணை வேண்டாம். சர்வதேச விசாரணையே வேண்டும் என்று விக்கி கூறினார். அது தவறா?

ரணில் விக்கிரமசிங்காவிடம் சிலர் இரகசியமாக பணம் பெற்றுக் கொண்டதை மக்களுக்கு விக்கி வெளிப்படுத்தினார். இது தவறா?

எதற்காக விக்கி மீது ஒழுங்கு நடவடிக்கை?

நீங்களே அவரை பெரும் நீதிமான் என அழைத்து வருவீர்கள். அப்புறம் நீங்களே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பீர்கள்.

உங்க கூத்துக்கு எல்லாம் ஆமாம் போட மக்கள் என்ன வெங்காயங்களா?

 

 

போகிற போக்கில்

கூடடமைப்புத்தான் உடையும் என்றிருக்க

தமிழரசுக்கட்சியே உடையும் போல இருக்கே....

அப்படி உடைந்தால் தான் ரணிலின் சித்து விளையாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். நான் ஒரு பார்வையாளன் மட்டுமே,ஏனெனில் ஒரு புலம் பெயர்ந்து அந்த நாட்டில் குடியுரிமையும் பெற்ற தமிழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி உடைந்தால் தான் ரணிலின் சித்து விளையாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். நான் ஒரு பார்வையாளன் மட்டுமே,ஏனெனில் ஒரு புலம் பெயர்ந்து அந்த நாட்டில் குடியுரிமையும் பெற்ற தமிழன்.

 எதற்காக இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை

தாயக மக்கள் மீது எமது தீர்ப்புக்களை திணிக்கக்கூடாது என்பதில் உடன்பாடுண்டு

ஆனால் பார்வையாளன் மட்டுமே என்பதில் உடன்பாடில்லை

அவ்வாறு ஒரு போதும் இருந்ததில்லை

ஒரு அநியாயம் நடக்கும் போது

ஒரு ஏமாற்றுதல் நடக்கும் போது

பார்வையாளனாக இருப்பீர்களா??

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

 

Link to comment
Share on other sites

 எதற்காக இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை

தாயக மக்கள் மீது எமது தீர்ப்புக்களை திணிக்கக்கூடாது என்பதில் உடன்பாடுண்டு

ஆனால் பார்வையாளன் மட்டுமே என்பதில் உடன்பாடில்லை

அவ்வாறு ஒரு போதும் இருந்ததில்லை

ஒரு அநியாயம் நடக்கும் போது

ஒரு ஏமாற்றுதல் நடக்கும் போது

பார்வையாளனாக இருப்பீர்களா??

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

 

இலங்கையில் உள்ள தமிழர் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிப்பார்கள் என்ற போர்வையில் தானே அதிகமான கருத்துக்கள் உலாவருகின்றது. அதன் பிரதி பலிப்புத்தான் அவ்வாறு எழுதத் தூண்டியதுஅதே நேரம் இலங்கையில் விரைவில் இன்னுமொரு அழிவு காத்திருக்கின்றது என்பது மட்டும் திடமாகத்தெரிகின்றது.அப்போதாவது அனைவரும் புரிந்து கொள்வார்கள்.அந்த நேரத்திலாவது புலம் பெயர் அகதிகளும் தமிழ் நாட்டுத்தமிழனும் தேவைபடுவான்.இலங்கையில் விரைவில் ராணுவம் சட்டத்தை கையிலெடுக்கலாம்.இதற்கான சமிக்ஞைதான் சரத் பொன்சேகாவின் பதவி மறுப்பு அறிக்கையாகவிருக்கலாம்.இதே போல கைது செய்யப்பட்ட ராணுவம்யாராவது கோத்தபாயாவை நோக்கி கை காட்டினார்களா? அவ்வளவு விசுவாசம் இன்னும் உண்டு.83ம் ஆண்டு அமிர் ஐயா பெண் வேடம் தரித்துத் தான் கொழும்பிலிருந்து வெளியேறினார்.இன்று நிலைமை அவ்வாறில்லை உடுப்புமில்லாது உயிருமில்லாதுதான் சதைப் பிண்டம் வெளியேறும்.ஏனெனில் தமிழனை துகிலுரித்து பழகிவிட்டார்கள்.பொறுத்திருந்து பார்ப்போம் 

Link to comment
Share on other sites

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

 

என்னது புலம்பெயர் கூட்டம் அரைவாசியா? எதோடு ஒப்பிடும்போது?

உங்களின் தாயகம் என்றபதம் தனிய யாழ் மாவட்டத்தோடு மட்டுபட்டது எப்படி?

அல்லது இலங்கை தமிழ் மக்களின் எண்ணிக்கை பற்றி உங்களின் புரிதல்தான் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது புலம்பெயர் கூட்டம் அரைவாசியா? எதோடு ஒப்பிடும்போது?

உங்களின் தாயகம் என்றபதம் தனிய யாழ் மாவட்டத்தோடு மட்டுபட்டது எப்படி?

அல்லது இலங்கை தமிழ் மக்களின் எண்ணிக்கை பற்றி உங்களின் புரிதல்தான் என்ன?

அதென்ன  புலம் பெயர் கூட்டம்

புலம் பெயர் தமிழர் பற்றி ஏன் இந்த இழிவான பார்வை

அதற்க முதலில் பதில் தாருங்கள்.

 

அடுத்து

வடக்குக்கிழக்கு வாழ் தமிழர்களின் தொகை எவ்வளவு?

புலம் பெயர் வாழ் தமிழரின் தொகை எவ்வளவு?

தரவுகள் இருந்தால் தாருங்களேன்

தப்பென்றால் திருத்திக்கொள்கின்றேன்

 

Link to comment
Share on other sites

அதென்ன  புலம் பெயர் கூட்டம்

புலம் பெயர் தமிழர் பற்றி ஏன் இந்த இழிவான பார்வை

அதற்க முதலில் பதில் தாருங்கள்.

 

அடுத்து

வடக்குக்கிழக்கு வாழ் தமிழர்களின் தொகை எவ்வளவு?

புலம் பெயர் வாழ் தமிழரின் தொகை எவ்வளவு?

தரவுகள் இருந்தால் தாருங்களேன்

தப்பென்றால் திருத்திக்கொள்கின்றேன்

கூட்டம் என்றால் இழிவா, யார் சொன்னது?

இந்த இணைப்பை நான் தான் இணைக்கவேண்டியதில்லை, நீங்களே தேடி அறிவது நல்லது.

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டம் என்றால் இழிவா, யார் சொன்னது?

இந்த இணைப்பை நான் தான் இணைக்கவேண்டியதில்லை, நீங்களே தேடி அறிவது நல்லது.

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

வடக்கு கிழக்கில் 15 லட்சத்துக்கு உட்பட்ட தமிழர்களே வாழ்கிறார்கள் 

12 லட்சத்துக்குமதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்று அண்மையில் பார்த்தேன்

அண்மைய தேர்தலின் போது கணிக்கப்பட்ட மக்கள் தொகைக்கணிப்பை யாராவது இணைத்தால் நன்று.

 

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கில் 15 லட்சத்துக்கு உட்பட்ட தமிழர்களே வாழ்கிறார்கள் 

12 லட்சத்துக்குமதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்று அண்மையில் பார்த்தேன்

அண்மைய தேர்தலின் போது கணிக்கப்பட்ட மக்கள் தொகைக்கணிப்பை யாராவது இணைத்தால் நன்று.

 

 

மேலே நீங்கள் சொன்னதும் தவறான தரவு,

 

2012ம் ஆண்டு புள்ளிவிபரப்படி 2,270,924 வடக்கு கிழக்கில் 

புலபெயர்ந்த கூட்டம் 450,000 to one million

According to the 2012 census there were 2,270,924 Sri Lankan Tamils in Sri Lanka, 11.21% of the population.[1] Sri Lankan Tamils constitute an overwhelming majority of the population in the Northern Province and are the largest ethnic group in the Eastern Province.[1] They are minority in other provinces. 70% of Sri Lankan Tamils in Sri Lanka live in the Northern and Eastern provinces.[1]

 

There are no accurate figures for the number of Sri Lankan Tamils living in the diaspora. Estimates range from 450,000 to one million.[73][74]

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மேலே நீங்கள் சொன்னதும் தவறான தரவு,

 

2012ம் ஆண்டு புள்ளிவிபரப்படி 2,270,924 வடக்கு கிழக்கில் 

புலபெயர்ந்த கூட்டம் 450,000 to one million

According to the 2012 census there were 2,270,924 Sri Lankan Tamils in Sri Lanka, 11.21% of the population.[1] Sri Lankan Tamils constitute an overwhelming majority of the population in the Northern Province and are the largest ethnic group in the Eastern Province.[1] They are minority in other provinces. 70% of Sri Lankan Tamils in Sri Lanka live in the Northern and Eastern provinces.[1]

 

There are no accurate figures for the number of Sri Lankan Tamils living in the diaspora. Estimates range from 450,000 to one million.[73][74]

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

நன்றி  தரவுகளுக்கு சூறாவளி

உங்களது தரவு சரியாக இருந்தால்

சந்தோசப்படக்கூடிய விடயம்.....

ஆனால் எனக்கு அதில் சந்தேகமுண்டு

தெளிவடைய எவராவது உதவுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

அதாவது ஒருவன் வந்து நீங்கள் சொன்னது சரி என்று சொல்லவேண்டுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது ஒருவன் வந்து நீங்கள் சொன்னது சரி என்று சொல்லவேண்டுமா?

 

முதலில்  கருத்தக்கள உறவுகளை ஒருமையில் எழுதுவது தவிர்க்கப்படணும்

மற்றது விசுகு பற்றிய தங்கள் பார்வை தப்பானது

ஏன் உண்மைத்தரவுகள் வந்தால் உங்கள் கருத்துக்கு இடைஞ்சலா??

நாலு பேரிடம் கேட்டு தரவுகளைப்பெறுதல் சரியற்ற பாதையா??

 

 

Link to comment
Share on other sites

 எதற்காக இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை

தாயக மக்கள் மீது எமது தீர்ப்புக்களை திணிக்கக்கூடாது என்பதில் உடன்பாடுண்டு

ஆனால் பார்வையாளன் மட்டுமே என்பதில் உடன்பாடில்லை

அவ்வாறு ஒரு போதும் இருந்ததில்லை

ஒரு அநியாயம் நடக்கும் போது

ஒரு ஏமாற்றுதல் நடக்கும் போது

பார்வையாளனாக இருப்பீர்களா??

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

 

பார்வையாளனுக்கும் பங்காளிக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கு நிலைமை .

அண்ணைக்கு உடம்பு முழுக்க யுத்தத்தில் ஏற்பட்ட விழுப்புண்கள் நடக்கமுடியாமல் தான் இருக்கின்றார் . 

போராட்டம் என்றவுடன் ஓடிவந்ததுதான் உங்கள் பங்களிப்பு பிறகு பார்வையாளர்தான் .

Link to comment
Share on other sites

முதலில்  கருத்தக்கள உறவுகளை ஒருமையில் எழுதுவது தவிர்க்கப்படணும்

மற்றது விசுகு பற்றிய தங்கள் பார்வை தப்பானது

ஏன் உண்மைத்தரவுகள் வந்தால் உங்கள் கருத்துக்கு இடைஞ்சலா??

நாலு பேரிடம் கேட்டு தரவுகளைப்பெறுதல் சரியற்ற பாதையா??

 

 

முதல்ல தமிழை பழகுங்க. அதுக்கு பிறகு ஒருமைக்கும் பன்மைக்கும் வித்தியாசம் விளங்கும்.

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 

விதியை நினைப்பவன் ஏமாளி ..... 

 

இன்னமொன்று, நான் தந்த தரவுகள் எல்லாம் சுத்த பொய். நீங்க நாலு பேருக்கிட்ட கேட்டு எழுதிகோங்க.

 

தேர்தல்கால வாக்காளர் கணக்குக்கும் சனத்தொகை கணக்குக்கும் வித்தியாசம் தெரியாது.. என்ன கொடுமை சரவணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.