Jump to content

மாவையின் பேச்சுக்கு சிறிதரன் பதிலடி(காணொளி)


Recommended Posts

சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டது
என நேற்றைய (05.09.2015) தினம் மாவை சேனாதிராசா தெரிவித்த நிலையில் இன்று(06.09.2015) ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கினை பெற்றவருமான சிறிதரன் அவர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தான் ஐ.நா செல்லவுள்ளதாக உறுதியாக தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தலுக்கு முன்னர் தாம் கூறியதுபோல மக்களுக்கு உறுதியளித்த கொள்கைக்காக தொடர்ந்தும் தனக்குரிய பணியை செவ்வனே செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவால் தான் எந்த தீர்மானத்தையும் கொண்டுவரமுடியும் என்றும் அதற்காக அமெரிக்கா சொல்லும் எல்லாவற்றுக்கும் நாம் தலைஆட்டவேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்தார்.
 

தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின்போது சர்வேதேச விசாரணை முடிவடைந்துவிட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்த கருத்தை மீண்டும் இந்த நிகழ்வில் வலியுறுத்திய மாவை சேனாதிராசா ஆனால் சிலர் சர்வதேச விசாரணை நடக்கவில்லை என்று புரியாமல் பேசுவதாகவும் நீதியரசராக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இது புரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் தான் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு நின்றுவிடாமல் தற்போது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து போராட்டத்திற்கும் முதலமைச்சருக்கும் தொடர்பிருப்பதாகவும் அது தொடர்பில் தாம் முதலமைச்சரை அணுகுவதற்கு (கையாள்வதற்கு) திட்டமிருப்பதாகவும் மிடுக்குடன் தெரிவித்திருந்தார்.  இந்த கையெழுத்து போராட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,சிறிதரன்,சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம்,அனந்தி சசிதரன் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகள் கையொப்பமிட்டிருந்தமை சுமந்திரன் மாவை தரப்பினரை கடும் கோபம் கொள்ள வைத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் கடந்த பெப்ரவரி மாதம் பல்கலை சமூகம் மற்றும் சிவில் அமைப்புகளால் நடாத்தப்பட்ட மாபெரும் பேரணியில் பேசிய மாவை சர்வதேச விசாரணையை தாம் தொடர்ந்து வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். (மேலுள்ள காணொளியில் மாவையின் இரு கட்ட பேச்சும் இணைக்கப்பட்டுள்ளது 1.46 ஆவது நிமிடத்தில்) இவ்வாறு சுமந்திரனைப்போல தேர்தலுக்கு முன்னர் வாக்கை பெறுவதற்காக சர்வதேச விசாரணை என வலுயுறுத்தி வாக்கை பெற்று வெற்றி பெற்ற பின்னர் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் மாவை சுமந்திரன் மற்றும் சம்பந்தன் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாகாணசபையில் 2ஆவது அதிகூடிய வாக்கினை பெற்ற(87,000) அனந்தி சசிதரன் அவர்களும் ஜெனீவா செல்லவுள்ளார்.
 
 
Link to comment
Share on other sites

... ".. எமக்கு ஒன்றை கூறுவது, சிங்கள மக்களுக்கு பிறிது ஒன்றை கூறுவது .." ... நன்றிகள் நீதி அரசர் விக்கினேஸ்வரன்

சிங்கள மக்களுக்கு:

"சிறிலங்காவுக்கும், சிறிலங்காவின் மக்களுக்கும் விசுவாசமாக இருப்பேன்" - சம்பந்தன் உறுதி!

“சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் அனைத்து வேலைகளையும் நான் செய்வேன்" - சம்பந்தன் உறுதி!

 

தமிழர்களுக்கு:

* சர்வதேச விசாரணை - சம்பந்தர் உறுதி

* சமஸ்டி அரசு - சம்பந்தர் உறுதி

* 2016 இற்குள் தீர்வு - சம்பந்தர் உறுதி

 

... எம்மாறுபவர்கள் இருக்கும் மட்டும், ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்! ...  டமிழ் டேசியம்!!!!!!!!

 

Link to comment
Share on other sites

மாவையின் பேச்சுக்கு.........

 

பஸ் கண்டக்டர் அரசியலுக்கு வரக்கூடாது.ரஜினி மாதிரி இயற்கையாகவே நடித்து பணம் சம்பாதித்திருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கொம்பனி, ஜெனிவா செல்ல வில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற  பேச்சுக்களும்

பதில்களும்.. (அவர்கள் சொற்தொடரில் பதிலடிகளும்)

 

ஒற்றுமையைக்காட்டி வாக்கு வாங்கிவிட்டு

உடைக்க முயல்கிறார்கள்....

சிங்களத்துடன் பேச்சவார்த்தைக்கு போகும் போது

அவர்களே முதலில் ஒற்றுமையாக வாங்கோ என்று சொல்லவைப்பார்கள் போலுள்ளது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை மதில் மேல் பூனையா இருந்தவர்.தேர்தலுக்கு பின்னாடி சேர வேண்டிய பக்கத்துக்கு தாண்டினதே பெரிய காரியம். விடுங்க.. பாவம் அதுவும் எத்தின காலம் தான் வேசம் போட்டுக்கிட்டு இருக்கிறது. பொக்கட் நிரப்ப வேண்டாம். tw_blush:

Link to comment
Share on other sites

நாங்கள் பல்கலையில் படிக்கும் போது ஒரு சிங்கள மாஸ்டர் இடம் இங்கிலீஷ் படிக்க போனனாங்கள். ஒருநாள் கதையோட கதைய கேடார், படிப்பறிவு கொஞ்சமும் தேவையில்லாத 2 தொழில் சொல்லும்படி. நாங்களும் எங்களுக்கு தெரிந்த படிப்பறிவு அதிகம் தேவையில்லாத பல தொழில்களை சொன்னோம். அவர் கடைசியில் கூறினார் இங்கை (இலங்கையில்) அரசியல்வாதியாக மற்றும் பிச்சை எடுக்க எந்த தகுதியும் தேவையில்லை எண்டு.

இது அவரின் சொந்த கருத்து ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பல்கலையில் படிக்கும் போது ஒரு சிங்கள மாஸ்டர் இடம் இங்கிலீஷ் படிக்க போனனாங்கள். ஒருநாள் கதையோட கதைய கேடார், படிப்பறிவு கொஞ்சமும் தேவையில்லாத 2 தொழில் சொல்லும்படி. நாங்களும் எங்களுக்கு தெரிந்த படிப்பறிவு அதிகம் தேவையில்லாத பல தொழில்களை சொன்னோம். அவர் கடைசியில் கூறினார் இங்கை (இலங்கையில்) அரசியல்வாதியாக மற்றும் பிச்சை எடுக்க எந்த தகுதியும் தேவையில்லை எண்டு.

இது அவரின் சொந்த கருத்து ...

போகிற போக்கில்

கூடடமைப்புத்தான் உடையும் என்றிருக்க

தமிழரசுக்கட்சியே உடையும் போல இருக்கே....

Link to comment
Share on other sites

ஆமா, மாவையாருக்கு எத்தனை வாய்கள்? எத்தனை நாக்குகள்? ..

1. சர்வதேச விசாரணை அவசியம்

2. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது

3. கொஞ்சப்பேர் கிளம்பி இருக்கினம் சர்வதேச விசாரணை என்று

4. ..

இல்லையேல் ..

பாவம் இதுவும் டிமென்ஸ்ஹியா வருத்தத்தில் பாதிக்கப்பட்டிருகிறாரா? அப்படியாயின் பாவத்துக்கு றீட்மன்ட் அவசியம் ..

http://www.alzheimers.org.uk/site/scripts/documents.php?categoryID=200120&gclid=CK6Amb6E6McCFUHhGwodhdQEsw

 

Link to comment
Share on other sites

முதலமைச்சர் விக்கி மீது நடவடிக்கை ஏன்?

செய்தி- விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை! 11-ம் திகதி கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு - மாவை சேனாதிராஜா

இந்தியாவில் குடியிருக்கும் தலைவர்களை தெரிவு செய்யாமல் மக்கள் மத்தியில் வாழும் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்று விக்கி கூறினார். இது தவறா?

மக்களுக்கு ஒரு கருத்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இன்னொரு கருத்தும் சொல்லும் தலைவர்களை தெரிவு செய்யாதீர்கள் என்று விக்கி சொன்னார். அது தவறா?

உள்ளக விசாரணை வேண்டாம். சர்வதேச விசாரணையே வேண்டும் என்று விக்கி கூறினார். அது தவறா?

ரணில் விக்கிரமசிங்காவிடம் சிலர் இரகசியமாக பணம் பெற்றுக் கொண்டதை மக்களுக்கு விக்கி வெளிப்படுத்தினார். இது தவறா?

எதற்காக விக்கி மீது ஒழுங்கு நடவடிக்கை?

நீங்களே அவரை பெரும் நீதிமான் என அழைத்து வருவீர்கள். அப்புறம் நீங்களே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பீர்கள்.

உங்க கூத்துக்கு எல்லாம் ஆமாம் போட மக்கள் என்ன வெங்காயங்களா?

 

 

போகிற போக்கில்

கூடடமைப்புத்தான் உடையும் என்றிருக்க

தமிழரசுக்கட்சியே உடையும் போல இருக்கே....

அப்படி உடைந்தால் தான் ரணிலின் சித்து விளையாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். நான் ஒரு பார்வையாளன் மட்டுமே,ஏனெனில் ஒரு புலம் பெயர்ந்து அந்த நாட்டில் குடியுரிமையும் பெற்ற தமிழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி உடைந்தால் தான் ரணிலின் சித்து விளையாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். நான் ஒரு பார்வையாளன் மட்டுமே,ஏனெனில் ஒரு புலம் பெயர்ந்து அந்த நாட்டில் குடியுரிமையும் பெற்ற தமிழன்.

 எதற்காக இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை

தாயக மக்கள் மீது எமது தீர்ப்புக்களை திணிக்கக்கூடாது என்பதில் உடன்பாடுண்டு

ஆனால் பார்வையாளன் மட்டுமே என்பதில் உடன்பாடில்லை

அவ்வாறு ஒரு போதும் இருந்ததில்லை

ஒரு அநியாயம் நடக்கும் போது

ஒரு ஏமாற்றுதல் நடக்கும் போது

பார்வையாளனாக இருப்பீர்களா??

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

 

Link to comment
Share on other sites

 எதற்காக இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை

தாயக மக்கள் மீது எமது தீர்ப்புக்களை திணிக்கக்கூடாது என்பதில் உடன்பாடுண்டு

ஆனால் பார்வையாளன் மட்டுமே என்பதில் உடன்பாடில்லை

அவ்வாறு ஒரு போதும் இருந்ததில்லை

ஒரு அநியாயம் நடக்கும் போது

ஒரு ஏமாற்றுதல் நடக்கும் போது

பார்வையாளனாக இருப்பீர்களா??

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

 

இலங்கையில் உள்ள தமிழர் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிப்பார்கள் என்ற போர்வையில் தானே அதிகமான கருத்துக்கள் உலாவருகின்றது. அதன் பிரதி பலிப்புத்தான் அவ்வாறு எழுதத் தூண்டியதுஅதே நேரம் இலங்கையில் விரைவில் இன்னுமொரு அழிவு காத்திருக்கின்றது என்பது மட்டும் திடமாகத்தெரிகின்றது.அப்போதாவது அனைவரும் புரிந்து கொள்வார்கள்.அந்த நேரத்திலாவது புலம் பெயர் அகதிகளும் தமிழ் நாட்டுத்தமிழனும் தேவைபடுவான்.இலங்கையில் விரைவில் ராணுவம் சட்டத்தை கையிலெடுக்கலாம்.இதற்கான சமிக்ஞைதான் சரத் பொன்சேகாவின் பதவி மறுப்பு அறிக்கையாகவிருக்கலாம்.இதே போல கைது செய்யப்பட்ட ராணுவம்யாராவது கோத்தபாயாவை நோக்கி கை காட்டினார்களா? அவ்வளவு விசுவாசம் இன்னும் உண்டு.83ம் ஆண்டு அமிர் ஐயா பெண் வேடம் தரித்துத் தான் கொழும்பிலிருந்து வெளியேறினார்.இன்று நிலைமை அவ்வாறில்லை உடுப்புமில்லாது உயிருமில்லாதுதான் சதைப் பிண்டம் வெளியேறும்.ஏனெனில் தமிழனை துகிலுரித்து பழகிவிட்டார்கள்.பொறுத்திருந்து பார்ப்போம் 

Link to comment
Share on other sites

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

 

என்னது புலம்பெயர் கூட்டம் அரைவாசியா? எதோடு ஒப்பிடும்போது?

உங்களின் தாயகம் என்றபதம் தனிய யாழ் மாவட்டத்தோடு மட்டுபட்டது எப்படி?

அல்லது இலங்கை தமிழ் மக்களின் எண்ணிக்கை பற்றி உங்களின் புரிதல்தான் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது புலம்பெயர் கூட்டம் அரைவாசியா? எதோடு ஒப்பிடும்போது?

உங்களின் தாயகம் என்றபதம் தனிய யாழ் மாவட்டத்தோடு மட்டுபட்டது எப்படி?

அல்லது இலங்கை தமிழ் மக்களின் எண்ணிக்கை பற்றி உங்களின் புரிதல்தான் என்ன?

அதென்ன  புலம் பெயர் கூட்டம்

புலம் பெயர் தமிழர் பற்றி ஏன் இந்த இழிவான பார்வை

அதற்க முதலில் பதில் தாருங்கள்.

 

அடுத்து

வடக்குக்கிழக்கு வாழ் தமிழர்களின் தொகை எவ்வளவு?

புலம் பெயர் வாழ் தமிழரின் தொகை எவ்வளவு?

தரவுகள் இருந்தால் தாருங்களேன்

தப்பென்றால் திருத்திக்கொள்கின்றேன்

 

Link to comment
Share on other sites

அதென்ன  புலம் பெயர் கூட்டம்

புலம் பெயர் தமிழர் பற்றி ஏன் இந்த இழிவான பார்வை

அதற்க முதலில் பதில் தாருங்கள்.

 

அடுத்து

வடக்குக்கிழக்கு வாழ் தமிழர்களின் தொகை எவ்வளவு?

புலம் பெயர் வாழ் தமிழரின் தொகை எவ்வளவு?

தரவுகள் இருந்தால் தாருங்களேன்

தப்பென்றால் திருத்திக்கொள்கின்றேன்

கூட்டம் என்றால் இழிவா, யார் சொன்னது?

இந்த இணைப்பை நான் தான் இணைக்கவேண்டியதில்லை, நீங்களே தேடி அறிவது நல்லது.

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டம் என்றால் இழிவா, யார் சொன்னது?

இந்த இணைப்பை நான் தான் இணைக்கவேண்டியதில்லை, நீங்களே தேடி அறிவது நல்லது.

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

வடக்கு கிழக்கில் 15 லட்சத்துக்கு உட்பட்ட தமிழர்களே வாழ்கிறார்கள் 

12 லட்சத்துக்குமதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்று அண்மையில் பார்த்தேன்

அண்மைய தேர்தலின் போது கணிக்கப்பட்ட மக்கள் தொகைக்கணிப்பை யாராவது இணைத்தால் நன்று.

 

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கில் 15 லட்சத்துக்கு உட்பட்ட தமிழர்களே வாழ்கிறார்கள் 

12 லட்சத்துக்குமதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்று அண்மையில் பார்த்தேன்

அண்மைய தேர்தலின் போது கணிக்கப்பட்ட மக்கள் தொகைக்கணிப்பை யாராவது இணைத்தால் நன்று.

 

 

மேலே நீங்கள் சொன்னதும் தவறான தரவு,

 

2012ம் ஆண்டு புள்ளிவிபரப்படி 2,270,924 வடக்கு கிழக்கில் 

புலபெயர்ந்த கூட்டம் 450,000 to one million

According to the 2012 census there were 2,270,924 Sri Lankan Tamils in Sri Lanka, 11.21% of the population.[1] Sri Lankan Tamils constitute an overwhelming majority of the population in the Northern Province and are the largest ethnic group in the Eastern Province.[1] They are minority in other provinces. 70% of Sri Lankan Tamils in Sri Lanka live in the Northern and Eastern provinces.[1]

 

There are no accurate figures for the number of Sri Lankan Tamils living in the diaspora. Estimates range from 450,000 to one million.[73][74]

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மேலே நீங்கள் சொன்னதும் தவறான தரவு,

 

2012ம் ஆண்டு புள்ளிவிபரப்படி 2,270,924 வடக்கு கிழக்கில் 

புலபெயர்ந்த கூட்டம் 450,000 to one million

According to the 2012 census there were 2,270,924 Sri Lankan Tamils in Sri Lanka, 11.21% of the population.[1] Sri Lankan Tamils constitute an overwhelming majority of the population in the Northern Province and are the largest ethnic group in the Eastern Province.[1] They are minority in other provinces. 70% of Sri Lankan Tamils in Sri Lanka live in the Northern and Eastern provinces.[1]

 

There are no accurate figures for the number of Sri Lankan Tamils living in the diaspora. Estimates range from 450,000 to one million.[73][74]

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

நன்றி  தரவுகளுக்கு சூறாவளி

உங்களது தரவு சரியாக இருந்தால்

சந்தோசப்படக்கூடிய விடயம்.....

ஆனால் எனக்கு அதில் சந்தேகமுண்டு

தெளிவடைய எவராவது உதவுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

அதாவது ஒருவன் வந்து நீங்கள் சொன்னது சரி என்று சொல்லவேண்டுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது ஒருவன் வந்து நீங்கள் சொன்னது சரி என்று சொல்லவேண்டுமா?

 

முதலில்  கருத்தக்கள உறவுகளை ஒருமையில் எழுதுவது தவிர்க்கப்படணும்

மற்றது விசுகு பற்றிய தங்கள் பார்வை தப்பானது

ஏன் உண்மைத்தரவுகள் வந்தால் உங்கள் கருத்துக்கு இடைஞ்சலா??

நாலு பேரிடம் கேட்டு தரவுகளைப்பெறுதல் சரியற்ற பாதையா??

 

 

Link to comment
Share on other sites

 எதற்காக இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை

தாயக மக்கள் மீது எமது தீர்ப்புக்களை திணிக்கக்கூடாது என்பதில் உடன்பாடுண்டு

ஆனால் பார்வையாளன் மட்டுமே என்பதில் உடன்பாடில்லை

அவ்வாறு ஒரு போதும் இருந்ததில்லை

ஒரு அநியாயம் நடக்கும் போது

ஒரு ஏமாற்றுதல் நடக்கும் போது

பார்வையாளனாக இருப்பீர்களா??

நான் நினைக்கின்றேன்

இன்றைய தாயக மக்களது தொகையும்

கிட்டத்தட்ட புலம் பெயர் மக்கள் தொகையும் ஒன்றென....

அப்படியாயின் அரைவாசி ரத்த உறவுகள் பார்வையாளர்கள் மட்டுமே தானா??

 

பார்வையாளனுக்கும் பங்காளிக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கு நிலைமை .

அண்ணைக்கு உடம்பு முழுக்க யுத்தத்தில் ஏற்பட்ட விழுப்புண்கள் நடக்கமுடியாமல் தான் இருக்கின்றார் . 

போராட்டம் என்றவுடன் ஓடிவந்ததுதான் உங்கள் பங்களிப்பு பிறகு பார்வையாளர்தான் .

Link to comment
Share on other sites

முதலில்  கருத்தக்கள உறவுகளை ஒருமையில் எழுதுவது தவிர்க்கப்படணும்

மற்றது விசுகு பற்றிய தங்கள் பார்வை தப்பானது

ஏன் உண்மைத்தரவுகள் வந்தால் உங்கள் கருத்துக்கு இடைஞ்சலா??

நாலு பேரிடம் கேட்டு தரவுகளைப்பெறுதல் சரியற்ற பாதையா??

 

 

முதல்ல தமிழை பழகுங்க. அதுக்கு பிறகு ஒருமைக்கும் பன்மைக்கும் வித்தியாசம் விளங்கும்.

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி 

விதியை நினைப்பவன் ஏமாளி ..... 

 

இன்னமொன்று, நான் தந்த தரவுகள் எல்லாம் சுத்த பொய். நீங்க நாலு பேருக்கிட்ட கேட்டு எழுதிகோங்க.

 

தேர்தல்கால வாக்காளர் கணக்குக்கும் சனத்தொகை கணக்குக்கும் வித்தியாசம் தெரியாது.. என்ன கொடுமை சரவணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.