Jump to content

சீமான் வீட்டு பூசையறையில் பார்வதியம்மாளின் அஸ்தி….


raja.m1982

Recommended Posts

http://www.asrilanka.com/2015/09/07/29807

விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனுடைய தாயாரின் அஸ்தி அடங்கிய (உடல் எரிக்கப்பட்ட சாம்பல்) மண் பானையொன்று, தனது வீட்டின் பூசையறையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தமிழகத் திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவருமான சீமானின் புதிய குண்டை வெடிக்க வைத்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு சீமான் வழங்கிய பேட்டியொன்றிலேயே இந்தக் குண்டைப் போட்டுள்ளார்.  புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயாரான பார்வதியம்மாள் 2011 ஆம் ஆண்டு, தனது 81 ஆவது வயதில் – வல்வெட்டித்துறையில் மரணமடைந்தார்.

பார்வதியம்மாளின் இறுதிக் காலங்களில், அவரை – தற்போதைய வட மாகாணசபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் பராமரித்து வந்தார்.

மரணமடைந்த பார்வதியம்மாளின் உடல், வல்வெட்டித்துறையிலேயே தகனம் செய்யப்பட்டது.
இவ்வாறாதொரு நிலையில், பார்வதியம்மாளின் அஸ்தி அடங்கிய மண் பானையொன்று, தனது தமிழக இல்லத்தில் உள்ளதாக சீமான் கூறியுள்ளார்.

இதேவேளை, சீமானின் வீட்டிலுள்ள பூசையறையில் மேலும் இரண்டு மண் பானைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பானைகளில் ஒன்றில், புலிகளின் தலைவர் பிரபாகரனின் கோட்டையாக விளங்கிய வன்னிப் பிரதேசத்து மண்ணும், மற்றைய பானையில் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போருக்கு எதிராக, தீக்குளித்து மரணமான ஊடகவியலாளர் ஒருவரின் சாம்பல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீமானின் வீட்டில், புலிகளின் மறைந்த தலைவர் பிரபாகரனின் பல்வேறு விதமான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடயம் தொடர்பாக உண்மை நிலை தெரியவில்லை, அப்படியே இது உண்மையான செய்தியாக இருந்தால்..... அன்னைக்காய் அழுது, அன்னையைப்பாதுகாத்து பராமரித்த அத்தனை வல்வையருக்கும் அன்னையின் அஸ்தியை அந்தரவழியில் விட்ட பாவம் அனைத்தும் சேரும். அன்னை சுமந்து பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் கூடவா அன்னைக்கு செய்யவேண்டிய உயரிய பணியைச் செய்யவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடயம் தொடர்பாக உண்மை நிலை தெரியவில்லை, அப்படியே இது உண்மையான செய்தியாக இருந்தால்..... அன்னைக்காய் அழுது, அன்னையைப்பாதுகாத்து பராமரித்த அத்தனை வல்வையருக்கும் அன்னையின் அஸ்தியை அந்தரவழியில் விட்ட பாவம் அனைத்தும் சேரும். அன்னை சுமந்து பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் கூடவா அன்னைக்கு செய்யவேண்டிய உயரிய பணியைச் செய்யவில்லை?

 நிலைமை இப்படி ஆகிவிட்டது! இதுவும் தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி! சூப்பர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் தலைமுடி.. பல்லு.. வேட்டி.. கச்சை என்று எதை எதையோ எல்லாம் எடுத்து வைச்சுக்கிட்டு.. இது புத்த தேசம் என்று உலகம் பூரா ஒரு இனமே பிச்சை எடுத்துக்கிட்டு அடுத்த இனத்தை அழிச்சு வாழுது.. அதோட ஒப்பிடேக்க.. சீமான் தன் விசுவாசத்திற்குரிய தலைவனின் தாயின் அஸ்தி கலந்த மண்ணில் ஒரு பிடியை எடுத்து வைச்சிருக்கிறதில என்ன பிரச்சனையோ..?! tw_anguished:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 
நெடுக்கு உங்கள் வழிக்கே வருகிறேன் ஏன் அம்மாவுடையது மட்டுந்தான் எடுத்து வைப்பாரா அப்பாவினது கிடையாதா?

புத்தரின் தலைமுடி.. பல்லு.. வேட்டி.. கச்சை என்று எதை எதையோ எல்லாம் எடுத்து வைச்சுக்கிட்டு.. இது புத்த தேசம் என்று உலகம் பூரா ஒரு இனமே பிச்சை எடுத்துக்கிட்டு அடுத்த இனத்தை அழிச்சு வாழுது.. அதோட ஒப்பிடேக்க.. சீமான் தன் விசுவாசத்திற்குரிய தலைவனின் தாயின் அஸ்தி கலந்த மண்ணில் ஒரு பிடியை எடுத்து வைச்சிருக்கிறதில என்ன பிரச்சனையோ..?! tw_anguished:tw_angry:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்வியை நீங்கள்... சீமானின் அடுப்படி ச்சா..பூஜை அறை வரை சென்று துளாவி செய்தி போட்ட  ஊடகக் காரரை கேட்பது தான் நல்லது. முதலில் தந்தையின் அஸ்தி கலந்த மண்பிடி இருக்கோ இல்லையோன்னு உறுதி செய்யாமல்.. சகட்டுமேனிக்கு.. கேள்வி கேட்பது அழகல்ல அல்லவா. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு....,

அண்ணையின் இல்லத்திலிருந்து மண் எடுத்துக்கொண்டுபோய் வீட்டில் வைத்து போற்றும் பலரை அதன் உண்மைத்தன்மையை அறிவேன் ஆனால் சீமானின்...... செவ்வியாக ஊடகத்தில் வெளிவந்ததாக  அன்னையின் அஸ்தி தொடர்பான விடயத்தை என்னால் ஏற்கவோ நம்பவோ முடியாது.

Link to comment
Share on other sites

இல்லை.. அவர் ஒரு தமிழ் செவ்வியிலேயே சொல்லியுள்ளார். ஏற்கனவே கேள்விப்பட்டதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு....,

அண்ணையின் இல்லத்திலிருந்து மண் எடுத்துக்கொண்டுபோய் வீட்டில் வைத்து போற்றும் பலரை அதன் உண்மைத்தன்மையை அறிவேன் ஆனால் சீமானின்...... செவ்வியாக ஊடகத்தில் வெளிவந்ததாக  அன்னையின் அஸ்தி தொடர்பான விடயத்தை என்னால் ஏற்கவோ நம்பவோ முடியாது.

எங்களுக்கு என்னவோ.. சீமான் இதனை நம்பச் சொல்லிச் சொன்னதாகத் தெரியவில்லை. ஒரு தகவலாகச் சொல்லி இருக்கலாம் என்றே படுகிறது. அதனை ஊடகக்காரர்கள் தங்கள் விளம்பரத்துக்கு ஊதிப் பெருப்பிக்க.. சிலர் அதன் மேல் ஏறி நின்று குதிபோடுகிறார்கள்.. அவ்வளவே. இது அவரவர் விசுவாசப் பிரச்சனை. நாங்க நம்பினால் என்ன விட்டால் என்ன..! அவைக்கு ஒரு பாதிப்பும் இல்லை. tw_blush:

Link to comment
Share on other sites

காணொளி செய்தவருக்கு மார்க்ஸ் யாரென்றே தெரியவில்லை..

தமிழன் என்று சொன்னால் யாருக்கெல்லாம் கோப‌ம் வருகிறதோ அவர்கள் எல்லோரும் திராவிடன் என்கிற போர்வையில் தமிழ்நாட்டை சூறையாடுகிறவர்கள்தான். இந்த திராவிட அரசியல் ஒழிந்தால்தான் தமிழகம் தேறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் நந்தன்.

கோமாளி கந்தன் சீமான் - முரண்பாடுகளின் மொத்த வடிவம்.

அவங்க திராவிடத்தச் சொல்லி கொள்ளை அடிச்சாங்க. இவர் தமிழைச் சொல்லி அடிக்கப் பாக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் நந்தன்.

கோமாளி கந்தன் சீமான் - முரண்பாடுகளின் மொத்த வடிவம்.

அவங்க திராவிடத்தச் சொல்லி கொள்ளை அடிச்சாங்க. இவர் தமிழைச் சொல்லி அடிக்கப் பாக்கிறார்.

தமிழக அரசியல் மேடையில் சீமான் தனக்கென ஒரு சிறு இடத்தைப் பிடிக்க ஈழப்பிரச்சனையைப் சிறந்த முறையில் பயன்  படுத்திக் கொண்டார்.

அதற்காக சிறைக்குக் கூட சென்றார்.

இப்போதெல்லாம், ஈழத்தமிழர் பிரச்சனையிலும் பார்க்க தமிழக அரிசியலே அதிகம் பேசுகிறார்.

பார்க்கும் போது சரியானதோர் Strategy உடன் மூவ் பண்ணுகிறார் போல தெரிகிறது.

திராவிடம் குறித்தும், தமிழ் தேசியம் குறித்து பேசுவது, பாரம்பரிய திராவிடத் தலைகளை பதற வைப்பது தெரிகிறது. எனினும், இது பிரித்தானிய ஆட்சியில் சலுகை அடைந்திருந்த தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசியல் வாதிகள் செய்ய அதே தந்திரம் போலுள்ளதும் மறுக்க முடியாது.

ஈழப்பிரச்சனை எனும் சிறு படகின் ஊடாக, தமிழக அரசியல் எனும் பெரும் சமுத்திரத்தினை அடைந்து இருக்கிறார். 

சமுத்திரத்தை வந்து சேர்ந்ததும், சிறிய படகில் இருந்து, சமுத்திரத்தில் சமாளிக்கும் வகையில், திராவிட எதிர்ப்பு என்னும் பெரிய கப்பலில் ஏறிக் கொண்டார். 

இங்கே ஈழத் தமிழர், பிரபாகரன், புலிகள் குறித்து முழங்கினால், உள்ளே போட தயங்க மாட்டார்கள் என்பது தெரிந்து தமிழ் தேசியம் பேசுகிறார்.

தமிழர்கள் என்ற வகையில், பத்திரிகை, மீடியா உலகத்தினர், திரை உலகத்தினர் இதை உள்ளூர ரசிக்கின்றனர். தமிழ் தேசியம் அவர்களை கவருகின்றது. மறைமுக ஆதரவு தருகின்றனர். இதில் பலர் அவருக்கு சரியான ஆலோசனை தருகின்றனர்.

கர்நாடகாவில் தமிழருக்கு அவ்வபோது அடிப்பார்கள், தாக்குவார்கள். தமிழக அரசு எதுவுமே செய்யாது. காரணம் திராவிடம். இப்போது சீமான் தமிழ் தேசியம் பேசும் போது, நியாயமாகப் படுவதால் ஆதரவு வருகிறது.

"என் தம்பிங்க கொஞ்சப் பேரு, போலீஸ்காரங்க அடிச்சாங்க என்னுட்டு வந்தாங்க. யாரது என்று பார்த்தபோ அவிங்க தமிழங்க என்னு தெரிஞ்சுது. அட நம்மவங்க, நம்ம குடும்பத்தில சித்தப்பு, மாமு அடிச்சிபுட்டாறு என்னுட்டு போயிட்டு இருங்கப்பா என்னு சொல்லி அனுப்பிட்டேன்", என்று சொல்லும் போதே அவரது நோக்கு புரிகிறது.

இது பெருகும் என்பது, இலங்கையில் சிங்கள தேசிய வாத அரசியலில் எமக்கு கிடைத்த அனுபவம்.

சீமான் மீதான இந்த வீடியோ, அவர் வளர்கிறார் என சொல்கிறது. காய்க்கும் மரத்துக்கு தான் கல் எறி விழும்.

அண்ணா, காமராஜ், எம் ஜி ஆர், ஜெயலலிதா, கலைஞர் பார்க்காத வசவுகளா, அவமானங்களா? அவர்கள் அடைந்த உயரம் என்ன ?

வசைகளைத் தாங்க முடியாமல் அரசியலில் இருந்து வெளியேறியவர்களில் முக்கியமானவர் சிவாஜி கணேசன். வசைகளுக்கு பயந்து வராமலே இருப்பவர் ரஜனி.

தெளுங்கர் விஜயகாந், கன்னடர் இளங்கோவன், பம்பாய் குஸ்பு, குஜராத்தி நமீதா போன்றவர்களுக்கு தமிழக அரசியல் கனவு வரும் போது, ஏன் எம் தமிழன் சீமானுக்கு வரக்கூடாது ?

மற்ற வகையில், அவர் அங்கே செய்யும் அரசியலில் எமக்கு என்ன வந்தது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) ஒரு கொள்கைவாதியை அவர் வளரும் போதே இனம்கானலாம். சீமான் கருணாநிதியை போல தன் வளர்சிக்கு தமிழுணர்வை பயன்படுத்தி விட்டு, தன் இலக்கை அடைந்ததும் தமிழை அம்போ என விட்டு விடுவார். சீமான் அங்கே செய்யும் அரசியலால் எமக்கு ஒரு பாதகமுமில்லை. ஆனால் சாதகம் இருக்கிறதாய் சொல்லி கடை விரிப்பதுதான் ஏற்கவில்லை.

2) தமிழகத்தில் இனி இன உணர்வு தூண்டப் பட வழியே இல்லை. அந்தளவுக்கு தேசிய உணர்வு மரித்துப் போய்விட்டது அங்கு. சிங்களவர்கள் இனமானச்சிங்கங்கள். அங்கு பலித்த உத்தி தமிழகம் போல் ஓரிடத்தில் எடுபடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) ஒரு கொள்கைவாதியை அவர் வளரும் போதே இனம்கானலாம். சீமான் கருணாநிதியை போல தன் வளர்சிக்கு தமிழுணர்வை பயன்படுத்தி விட்டு, தன் இலக்கை அடைந்ததும் தமிழை அம்போ என விட்டு விடுவார். சீமான் அங்கே செய்யும் அரசியலால் எமக்கு ஒரு பாதகமுமில்லை. ஆனால் சாதகம் இருக்கிறதாய் சொல்லி கடை விரிப்பதுதான் ஏற்கவில்லை.

2) தமிழகத்தில் இனி இன உணர்வு தூண்டப் பட வழியே இல்லை. அந்தளவுக்கு தேசிய உணர்வு மரித்துப் போய்விட்டது அங்கு. சிங்களவர்கள் இனமானச்சிங்கங்கள். அங்கு பலித்த உத்தி தமிழகம் போல் ஓரிடத்தில் எடுபடாது.

1.  எதையுமே எதிர்பாராமல் இருப்பதால், ஒரு ரசிப்பு மட்டும் தான் ஐயா. உங்களுக்கு எரிச்சல் அல்லது கோபம் வருவதன் காரணம் புரியவில்லை.

2. ஜெர்மானியர் அல்லாத ஆஸ்திரியரான ஹிட்லரின் ஆத்வேகமான, உணர்ச்சிகரமான, எழுச்சி கரமான பேச்சுக்களின் விளைவு, ஜூதர்கள் அழிவு, ஒரு சூரியன் மறையா சாம்ராஜியத்தின் வீழ்ச்சி, உட்பட்ட பல.....

மக்கள் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும், தர்க்க ரீதியான பேச்சுக்கள் வரலாறுகளை தலை கீழாக்கி உள்ளன....

அடிமைகளிடையே, மார்டின் லூதர் கிங் பேச்சின் விளைவு, (அமெரிக்க சிவில் உரிமை) போராட்டம் மூலம் தமது உரிமைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை பெற வைத்தது...

பெரும் ஊழல்கள் செய்து, 'உடன்பிறப்பே' என்று ஆரம்பிக்கும் எழுச்சிப் பேச்சில் புதைத்தார் 'கொள்கை வாதி' கருணாநிதி...

அதே பேச்சு வன்மை டீ பாய் நரேந்திர மோடியை இந்திய பிரதமர் ஆக்கி உள்ளதே. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை இதற்கு நம் பெரியாரை விட பெரிய உதாரணம் இருக்கப் போவதில்லை. ஆனால் தம் திறமையை கொள்கைக்காக பயன் படுத்திய வகையினர் ஒன்று. அதே திறமையை கொள்ளைக்காக பயன் ப்டுத்தியவர்கள் இன்னொன்று.

பெரியாரையும், கடவுள் மறுப்பையும், தமிழ் தேசியத்தையும், காளிமுத்து மகளை கரம்பிடித்த வித்தையையும் இப்படி இவரின் முரண்பாடுகளை பார்கும் யாருக்கும் புரியும், எதைப் பிடித்தாவது மேலே வந்தால் போதும் என்ற இவரின் அங்கலாய்ப்பு.

இலங்கையில் ஒரு சிறிரங்கா, தமிழ்நாட்டில் சீமான்.

நாளைக்கே மேலே வந்தவுடன், ஒருக்கா டெல்லி போய்வந்தவுடன், தமிழ் தேசியத்தை மடித்து பெட்டிக்குள் வைத்து விட்டு, ஜன கண மன பாடுவார்.

ஆனானப்பட்ட அண்ணாவே இதைத்தானே செய்தார்?

என் ஆத்திரமெல்லாம் தன் சுயநலத்துக்காக இப்படி எம் சாவுவீட்டில் வந்து அரசியல் செய்கிறாரே என்பது மட்டும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை இதற்கு நம் பெரியாரை விட பெரிய உதாரணம் இருக்கப் போவதில்லை. ஆனால் தம் திறமையை கொள்கைக்காக பயன் படுத்திய வகையினர் ஒன்று. அதே திறமையை கொள்ளைக்காக பயன் ப்டுத்தியவர்கள் இன்னொன்று.

பெரியாரையும், கடவுள் மறுப்பையும், தமிழ் தேசியத்தையும், காளிமுத்து மகளை கரம்பிடித்த வித்தையையும் இப்படி இவரின் முரண்பாடுகளை பார்கும் யாருக்கும் புரியும், எதைப் பிடித்தாவது மேலே வந்தால் போதும் என்ற இவரின் அங்கலாய்ப்பு.

இலங்கையில் ஒரு சிறிரங்கா, தமிழ்நாட்டில் சீமான்.

நாளைக்கே மேலே வந்தவுடன், ஒருக்கா டெல்லி போய்வந்தவுடன், தமிழ் தேசியத்தை மடித்து பெட்டிக்குள் வைத்து விட்டு, ஜன கண மன பாடுவார்.

ஆனானப்பட்ட அண்ணாவே இதைத்தானே செய்தார்?

என் ஆத்திரமெல்லாம் தன் சுயநலத்துக்காக இப்படி எம் சாவுவீட்டில் வந்து அரசியல் செய்கிறாரே என்பது மட்டும்தான்.

அது தவறான பார்வை தானே ஜயா!

அவரது பேச்சால், கருணாநிதியின் எமதவர்கள் மீதான பொய் பித்தலாட்டம் தெரிய வந்ததே...

ரங்கா ?? (he was running with hares and hunting with hounds)

தவறான ஒப்பீடு!

சீமானின் தமிழ் தேசிய வாத அரசியலுக்கும், பழைய துட்டகெமுனுவின் அல்லது SWRD, JR ஜயவர்தனே, சிங்கள தேசிய வாத அரசியலுக்கும் ஒப்பீடு சரியாக இருக்கும்.

மேலும், தெலுங்கு கப்டனினதும், மாராட்டிய ரஜனியும், காங்கிரஸ் தலைமையை பிடிக்க முயலும் பம்பாய் குஸ்புவும் தமிழக முதவ்வர் கனவு பனால் ஆவதில் தமிழன் என்ற வகையில் ஒரு அற்ப சந்தோசம்.

மற்றப்படி, அவரது எதிர்கால நிலை குறித்த உங்கள் கருத்தை காலமே சரியா, பிழையா என்று சொல்லும்.

Link to comment
Share on other sites

பக்கத்தில் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது .

hahaha..... அப்படி வீசுங்க வாளை!

Link to comment
Share on other sites

பக்கத்தில் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது .

உண்டியல் வச்சிருக்காத ஒரு அரசியல் கட்சியிண்ட பேர் சொல்லுங்கண்ணே

Link to comment
Share on other sites

1) ஒரு கொள்கைவாதியை அவர் வளரும் போதே இனம்கானலாம். சீமான் கருணாநிதியை போல தன் வளர்சிக்கு தமிழுணர்வை பயன்படுத்தி விட்டு, தன் இலக்கை அடைந்ததும் தமிழை அம்போ என விட்டு விடுவார். சீமான் அங்கே செய்யும் அரசியலால் எமக்கு ஒரு பாதகமுமில்லை. ஆனால் சாதகம் இருக்கிறதாய் சொல்லி கடை விரிப்பதுதான் ஏற்கவில்லை.

2) தமிழகத்தில் இனி இன உணர்வு தூண்டப் பட வழியே இல்லை. அந்தளவுக்கு தேசிய உணர்வு மரித்துப் போய்விட்டது அங்கு. சிங்களவர்கள் இனமானச்சிங்கங்கள். அங்கு பலித்த உத்தி தமிழகம் போல் ஓரிடத்தில் எடுபடாது.

 

இந்தக் குற்றச்சாட்டை சற்று ஆழ்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.

தனித்தே நிற்பேன் என்று கூறிய அண்ணன் வைகோவும், மருத்துவர் இராமதாசும், விஜயகாந்தும் இறுதியில் திராவிடக் கட்சிகளிடம் அடிபணிந்து தொகுதிகளைப் பெற்றுக்கொண்டதும் தமிழக அரசியலில் நடைபெற்றதுதான். ஆகவே சீமானும் தமிழுணர்வை இப்போது பற்றிக்கொண்டுவிட்டு பிறகு போட்டு மிதிக்கலாம் அல்லவா? நியாயமான சந்தேகம்தான்.

இதற்கு கடந்த சில ஆண்டுகளை பின்னோக்கிச் சென்று பார்ப்பது பலனைத் தரும்.
 
சீமான் மீது பொதுவாக உள்ள குற்றச்சாட்டு..
 
1) மே 2009 இன் பின் ஈழ அரசியலை தூக்கிப் பிடிக்கிறார்.
2) தமிழுணர்வை தூண்டுகிறார்.
3) காசுக்காக அரசியல் நடத்துகிறார்.
4) ஜெயாவின் பினாமியாக உள்ளார்.
5) கிறிஸ்தவராக (சைமன்) இருப்பதை மறைத்து சீமான் என பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
6)  மேலும்...
 
இதில் முதலாவது விடயம்.. சீமான் எனக்குத் தெரிந்து 2006 இல் இருந்தே ஈழவிடயத்தைப் பேசி வருபவர். இதற்கான காணொளி ஆதாரமும் உள்ளது. அதுபோக ஈழம் என்று பேசினாலே சிறைக்குப் போக வேண்டி வந்த 2008 காலப்பகுதியிலேயே அதைப் பற்றிப் பேசி ஐந்து முறை சிறை சென்றவர்.
 
இரண்டாவதாக, இவர் திடீரென்று தமிழுணர்வு பெற்று பேசுவதாக ஒரு குற்றச்சாட்டு. கீழ்க்கண்ட காணொளி 2007 இல் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பகுதி. முதல் ஐந்து நிமிடங்களை நாம் பார்த்தோமானால் இன்றுள்ள சீமான் தான் அன்றும் இருந்துள்ளார் என்பது புலனாகும்.

https://www.youtube.com/watch?v=5c8LHqEt2uc

காணொளி 2013 இல் தரவேற்றப்பட்டாலும், 2007 இல் நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் என்பதற்கான ஆதாரம் கீழே.. tw_blush:

http://www.dailymotion.com/video/x2c0vf_asatha-povadhu-yaaru-episode-18-par_fun

 

மிகுதியை அப்புறம் பார்க்கலாம்.. tw_blush:

 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் என்றால் சிங்களவருக்கு புலி என்பது போன்று, சிலருக்கு தமிழ் என்றவுடன் உ ண்டியல் தான் நினைவில் வருகின்றது.....

Link to comment
Share on other sites

பக்கத்தில் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது .

ஹா  ஹா  செம அண்ணே tw_blush:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.