Jump to content

40 ஆவது ரொறன்றோ அனைத்துலக திரைப்பட விழாவில் தீபன் என்ற ஃபிறெஞ்சு மொழித் திரைப்படம்,


Recommended Posts

கனடாவில் 40 ஆவது ரொறன்றோ அனைத்துலக திரைப்பட விழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.எதிர்வரும் 11 நாட்களில் சுமார் 400 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பதவுள்ளன.

ஃபிறாண்ஸ் செல்லும் இலங்கைத் தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தீபன் என்ற ஃபிறெஞ்சு மொழித் திரைப்படம் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
நேற்றும், சனிக்கிழமை காலை எட்டு முப்பதுக்கும் அந்தத் திரைப்படம் திரையிடப்படும்.

திரைப்பட விழாவை முன்னிட்டு ரொறன்றோவின் கிங் வீதியின் ஒரு பகுதியில் வாகனப் போக்குவரத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.fran

- See more at: http://www.canadamirror.com/canada/48934.html#sthash.pHYGcwlY.dpuf

 

தீபன் படம் திரையரங்குகளுக்கு வந்து மூன்று வாரங்களாகிவிட்ட நிலையில் அந்தப் படம் பற்றிய புரிதல் தமிழ் பரப்பிலே மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ் பொது புத்தி சார்ந்து எதெற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டு குறைகளை உருப்பெருக்கு கண்ணாடி வைத்து தேடி முன்வைத்து தங்களை மோதாவிகளாக காட்ட முறையும் ஒரு கூட்டம்….
சோபாசக்தி ஒரு புலி எதிர்ப்பாளர் அதனால் இந்தப்படம் நிச்சியமாக ஒரு புலி எதிர்ப்பு படம் அது போராட்டத்துக்கு எதிரான கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல ஏற்றுகிறது எந்தவித ஆதராமும் இல்லாமல் கருத்துக்களை முன் வைக்கும் மரபுவழி கருத்தாளர்கள் ஒரு புறம்…..

“ஏதோ எங்களை பற்றி நல்லா காட்டியிருக்கிறாங்களாம்” என்று திருப் திப்பட்டுக்கொள்ளும் சராசரி ரசிகர்கள் ஒரு புறம்…
படத்தின் குறை நிறைகளை தங்கள் தளத்தில் வைத்து ஆக்க பூர்வமாக விமர்சிக்க முற்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர் ஒரு புறம் என்று இப்படி பல தரப்பட்டவர்களை இந்த மூன்று வார காலத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை இந்தப்படம் ஈழத் தமிழர்களின் அவலத்தை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட படமல்ல. ஆனால் அது அந்த வேலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு செய்திருக்கிறது.

அதே போல இந்தப்படம் தமிழ் மரபுவழி புத்தி சீவிகள் நினைக்குமளவுக்கு அவர்களது மொழியில் கூறுவதானால் அடையான் கறுவலுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் என்று என்னால் கூறமுடியவில்லை.ஆனால் பாரிசின் புறநகர் அல்லது பிரான்சிலுள்ள ஏனைய பெரு நகரங்களின் புற நகர் பகுதிகளில் பிரெஞ்சு அரசால் உருவாக்கப்பட்ட தொடர்மாடி குடியிருப்புகளின் களநிலை யதார்த்தத்தை இந்தப்படம் படம் பிடித்து காட்டுகிறது. உண்மையில் இந்தப் படம் பிரான்சின் விடுதலை சமத்துவம் சகோதரத்துவம் என்ற அடிப்படை கொள்கைகளை கவசமாக பயன்படுத்திக் கொண்டு வறுமையையும் வன்முறை கலாச்சாரத்தையும் மறு உற்பத்தி செய்யும் பிரெஞ்சு அரசாங்கங்களின் போலி முகத்தை கட்டுடைக்கிறது.

பிரெஞ்சு அரசாங்கத்தின் அகதிக்கொள்கையிலுள்ள போலித்தனத்தை இந்த படம் சுட்டிக்காட்டுகிறது.
பிரான்சுக்கு அகதிகளாக வரும் புலம் பெயர்ந்த சமூகங்களை பிரெஞ்சு சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டகளை முதன்மைபடுத்தாமல் “சித்தே” என்று பிரெஞ்சில் அழைக்கப்படும் தொடர்மாடி குடியிருப்புக்களை உருவாக்கி அதிலே அகதிகளை குறிப்பாக வெளிநாட்டவர்கள் மட்டும் வசிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை கட்டிக்காத்துவரும் பிரெஞ்சு அதிகார வர்க்க மனோபாவத்தை இந்தப்பட்டம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.

படத்தின் தொடக்கத்திலேயே தீபனும் யாழினியும் இளையாளும் தங்கள் வேர்கள் அறுக்கப்பட்ட நிலையில் நிச்சயமற்ற அந்நியமான உறவுகளாக ஒருங்கிணைந்து பிரான்சுக்கு வருகிறார்கள். (இது தமிழ் கலாச்சாரத்துக்கு புறம்பானது தமிழர்கள் இப்படி சேர்ந்து வாழமாட்டார்கள் என்று மரபுவழி விமர்சகர்களின் கொதிப்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.) இந்த படத்தின் இயக்குனர் ஜக் ஒடியார்; இந்த மூவரின் கையறு நிலையை இங்கே குறியீடாக காட்டுகிறார்;.இந்த இடத்தில் ஒரு சில வினாடிகளில் திரை எந்த வித சலனமும் இன்றி இருட்டாக இருக்கிறது.இது நிச்சயமற்ற அவர்களது எதிர்காலத்தையும் அந்த இருளின் ஊடே ஒளியை நோக்கிய பயணத்தையும் எடுத்துக்காட்டுகிறது.இந்த இருளுக்குப் பின்பு சிவப்பு நீல வெள்ளை விளக்குகள் ஒளிர்வது காண்பிக்கப்படுகிறது.இது அவர்கள் பிரான்சுக்கு வந்துவிட்டதையும் அவர்களது இருண்ட வாழ்வில் ஒரு ஒளிக் கீற்று தென்படுவதையும் வெளிப்படுத்துகிறது.அதன் பின் தீபன் சிறு பொருட்களை கூவி விற்பவராக காட்டப்படுகிறார்கள்.(இதை பார்த்துவிட்டு நாங்கள் இப்படி செய்வதில்லை இந்த தொழிலை பங்களாதேசுகாரன் தான் செய்யிறவன் என்று நம்மவர்கள் தங்கள் மானம் போய்விட்டதாக புலம்புவது குறிப்பிட வேண்டிய ஒன்று)
ஏதிலியாக வந்த அவர்கள் தங்களுக்கு கிடைத்த ஒளிக்கீற்றை தொடர்ந்து சென்று உழைத்து வாழமுடியும் என்று நம்புவதை குறிக்கிறது.

அதன் பின் பாரிசின் தற்காலிக தங்குமிடம் மொழி தொரியாமல் படும் துன்பம் அகதி விண்ணப்பத்தை விசாரிக்க வரும் மொழி பெயர்பாளரின் அலட்சிய மனப்பான்மை அல்லது திமிர் இதையெல்லாம் இந்த படத்தின் இயக்குனர் ஜக் ஒடியார் யதார்த்தமாகவே படம் பிடித்துக்காட்டுகிறார்.

அதன் பின்பு அவர்கள் மூவரும் வறுமையையும் அதன் தொடர்ச்சியான வன்முறை கலாச்சாரத்தையும் மறுஉற்பத்தி செய்யும் சித்தே(புற நகர தொடர்மாடி குடியிருப்பு)க்கு அனுப்பி வைக்கப்படும் காட்சி வருகிறது. இந்த சித்தே வாழ்க்கை இவர்களை இன்னும் சமூகத்தில் இருந்து அந்நியமாக்குவது பல காட்சிகள் மூலம் புரிய வைக்கப்படுகிறது.

இந்த சித்தேயின் வன்முறை சூழலும் தொடரும் பதட்டமும் அங்குள்ள அந்தியமாதலும் போரில் வாழ்வை தொலைத்த உறவுகளை தொலைத்த இவர்களுக்கு அவற்றை மறந்துவிட்டு புது வாழ்க்கையை தொடங்க இவர்களுக்கு உதவவில்லை.
போராளியான தீபன் யானை பலம் கொண்டவன்.அவன் நினைத்தால் அல்லது மதங்கொண்டால் அவனால் அனைத்தையும் துவம்சம் செய்யமுடியும் ஆனால் அவான் அமைதியாக பிரெஞ்சு சமூகத்தில் வாழவே விரும்புகிறான் என்பதை காண்பிப்பதற்கே யானை ஒன்று காண்பிக்கப்படுகிறது.

புலம் பெயர்ந்த போராளிகள் அரைவேக்காட்டு வன்முறையாளர்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஏற்படும் ஆற்றாமை கோபம் வெறுப்பு விரக்தி கையறு நிலை என்பன தீபன் பாத்திரத்தின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடத்திலே தீபனாக மாறிய சோபாசக்தி என்ற போராளி வெற்றியடைந்திருக்கிறார்.புலி எதிர்ப்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்ட சோபா சத்தி தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

ஏதிரிகளின் பாசறையை நோக்கிப் போகிறோம்.தமிழீழ மண்ணை மீட்கப் போகிறோம் என்ற பாடலை பாடி அவர் நடித்த அந்தகாட்சியை அவ்வளவு தத்துரூபமாக உணர்வுபூர்வமாக ஒரு போராளியால் அல்லாமல் வேறு எவராலும் நடித்திருக்க முடியாது.இந்த ஒரு காட்சிக்காக நான் சோபா சக்தியை ஆயிரம் தடவை பாராட்டுவேன். அந்தக் காட்சியில் அவருக்கு வந்த அழுகை கிளிசறீன் போட்டு வந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.விடுதலைக்காக தங்கள் வாழ்வை இளமையை அவயங்களை என்று அனைத்துயும் கொடுத்துவிட்டு போராட்டம் தோற்றுப் போன நிலையில் மற்றவர்களிடம் அவமானப்பட்டு கூனிக்குறுகி நிற்கும் போராளிகளின் மன நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்வது கடினம்.

படத்தின் இறுதிப்பகுதியில் தீபன் தன்னை கொல்ல திட்டமிட்ட வன்முறைக் கும்பலை அழித்துவிட்டு பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்று அங்கு யாழினியுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி ஒரு குழந்தையும் பெற்று இளையாளையும் சேர்த்துக்குக் கொண்டு அழகிய குடும்பமாக வாழ்வதாக காட்டப்படுகிறது. பிரித்தானியாவில் அவர்கள் தொடர்மாடியில் வாழவில்லை மற்ற அகதி குடும்பங்களுடன் பவியோன் எனப்படும் தரை வீடுகளிலேயே சந்தோசமாக வாழ்வதாக காட்டப்படுகிறது.

பிரான்சில் தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற வன்முறையை காவல்துறையை பயன்படுத்தி அடக்க முற்படாததும் வன்முறையாளர்களை கொலை செய்த தீபனை காவல்துறை தேடுவது போல காண்பிக்கப்படாததும் இந்த வன் முறைக்களத்தை பிரஞ்சு அரசாங்கமே வளர்த்துவிடுகிறது,தக்கவைக்கிறது மறு உற்பத்தி செய்கிறது என்பதே இந்தப் படம் சொல்லும் செய்தியாகும்.

– சிவா சின்னபொடி
Cannes_2015

- See more at: http://www.canadamirror.com/canada/48962.html#sthash.Dqw9AHG3.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.