Jump to content

'சைபர்-புல்லியிங்' கட்டுப்படுத்தும் ‘ஆப்’: சாதனை படைத்த 15 வயதுச் சிறுமி!


Recommended Posts

'சைபர்-புல்லியிங்' கட்டுப்படுத்தும் ‘ஆப்’: சாதனை படைத்த 15 வயதுச் சிறுமி!

 

rethink01.jpgணையத்தின் மூலம் மனதைப் புண்படுத்தும் செய்திகளையோ, இணைப்புகளையோ தொடர்ந்து அனுப்பி, ஒருவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கித் துன்புறுத்தும் குற்றமே ’சைபர் புல்லியிங்’ (Cyber Bullying).

தற்போதைய காலக்கட்டத்தில், சிறுவர் முதல் முதியோர் வரை இணையத்தில் இல்லாதவர்களே இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல. இப்படிச் சகலரும் புழங்கும் பொதுவெளியான இணையத்தில் எத்தகைய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று.

குறிப்பாக, மன முதிர்ச்சி முழுமை பெறாத வயதிலிருக்கும் போதே, சிறு பிள்ளைகளை இணையத்திற்கு, அறிமுகப்படுத்துவது பெற்றோரால் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்ட இந்த காலக் கட்டத்தில், சிறார்களைக் குறிவைத்துத் தாக்கும் ‘சைபர்-புல்லியிங்’களைப் பற்றி அறிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.

நான்கில் ஒரு குழந்தை இந்த இணையவழி வன்கொடுமைக்கு ஆளகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். 43 விழுக்காட்டிற்கு மேல் இணையவாசிகளைக் கொடுமை செய்யும் இந்த முயற்சி, பெரும்பாலும் திட்டமிடப்படாத விளையாட்டாகவேத் தொடங்குகிறது. உணர்ச்சிப் பெருக்கில் ஏவப்படும் இணைய ஏவுகணைகளால் இருதரப்பினரும் பாதிக்கப்பட்டு, மீள முடியாத துயரத்திற்குப் ஆளாகி விடுகின்றனர்.

இத்தகைய கொடுமைகளைத் தவிர்க்கும் வண்ணம் ஒரு சாதனை முயற்சி செய்திருக்கிறார், இந்திய வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்க வாழ் சிறுமி த்ரிஷா ப்ரபு. பதினைந்து வயதே நிரம்பிய த்ரிஷா, ஒரு பள்ளி மாணவி.

rethink02.jpg

சுருக்கமாகச் சொன்னால், ’யாகாவாராயினும் நாகாக்க’ என்பதே இவர் சாதனையின் தாரக மந்திரம்.

’ரீதின்க்’ என்னும் இவரது ’செயலி’, ஒரு ஆண்ட்ராய்டு கருவியில் நிறுவப்பட்ட உடனேயே, அக்கருவியின் எல்லா பரிவர்த்தனைகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. ஒரு தகவல் அந்தக் கருவியிலிருந்து பிறருக்கு அனுப்பப்படும் முன்னால், அதில் ஏதேனும் புண்படுத்தும் சொற்களோ, நிழற்படங்களோ இருப்பின், அதைத் தடை செய்வதோடு, பயனரிடம் அதன் தாக்கம் குறித்த செய்தியை எடுத்துரைக்கிறது.

இந்த ‘ஆப்’, உணர்ச்சி வேகத்தில் அல்லது அறியாமல் தொடப்படுகின்ற ‘ஸ்பேம்’ என்பது போன்ற அத்தனை வகையான ‘சைபர்-புல்லியிங்’களையும் வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது.

இந்த ஆப் தயாரிக்க தூண்டியது, தனக்குள் ஏற்பட்ட சோகமே என்கிறார் த்ரிஷா. “ஒருநாள் வழக்கம்போல் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 14 வயது. ’ரிபெக்கா’ என்னும் ஒரு 11 வயதுச் சிறுமி ’சைபர்-புல்லியிங்’ இன் மூலமாக நேர்ந்த மன உளைச்சல் தாளாமல் தற்கொலை செய்துகொண்டாள் என்று அந்த பத்திரிகையில் போடப்பட்டிருந்தது. அதை படித்தவுடன் பதறிப் போனேன்.

rethink03.jpg

என்னைவிட வயது குறைந்த ஒரு சிறுமி, தன் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளுமளவு கொடுமை வாய்ந்ததா இந்த ‘சைபர்-புல்லியிங்’ என்று ஒரு நொடி கலங்கிப் போனேன். அதுமுதல், இதைத் தடுக்க ஏதாவது வழிமுறை செய்ய வேண்டும் என்று தீவிரமாகச் சிந்தித்தேன். அதன் விளைவுதான் இந்த ’ரீத்ன்க்’ என்னும் செயலி'' என்றார்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட கருவிகளில் இந்த செயலியை நிறுவிப்பார்த்தப் பயனர்களில் 93 விழுக்காடு பயனர்கள் இந்தச் செயலியின் திறத்தால், நெறிமீறும் தகவல் (Abusive messages) அனுப்புவதிலிருந்து காக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து கூகிள் அறிவியல் கண்காட்சி, வாஷிங்டன் அறிவியல் கண்காட்சி எனப் பல்வேறு நிகழ்வுகளில் கவுரவிக்கப்பட்ட த்ரிஷா, மேலும் பல விருதுகளையும் வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கிறார். அமெரிக்காவின் அறிவியல் தொலைக்காட்சி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர், 'பில் நை, த ஸைன்ஸ் கை’ எனப்படும் பேராசிரியர் வில்லியம் நை. அவருடன் சென்ற மாதம் வெள்ளை மாளிகையின் விருந்திற்கு, அழைக்கப்பெறும் பெருமை அடைந்திருக்கிறார், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இந்த 15 வயதுச் சிறுமி.

rethink04.jpg

தற்போது ஆண்ட்ராய்டு இயங்குபொறியில் மட்டும் தரவிற்குக் கிடைக்கும் இந்த செயலி, விரைவில் ஆப்பிள் இயங்குபொறியான, ஐ.ஓ.எஸ்.ஸிலும் தரவேற்றப்படப் போகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

இந்நிலையில், தொடர்ந்து அறிவியல்சார் சமூகப் பயனிகளை உருவாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவிக்கும் த்ரிஷா, லண்டன், இல்லினோய், சிகாகோ என பல்வேறு இடங்களில் ’டெட் டாக்ஸ்’ எனப்படும் உரை நிகழ்த்தி வருகிறார். இவரை தொடர்பு கொள்வதற்காக, www.trishaprabhu.com என்னும் வலைதளம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அறிவியலும், சமூகமும் இரு கண்களெனக் கருதிப் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற, மீசைக்கவிஞனின் கனவு முற்றிலும் பொய்த்துப் போகவில்லை என்பதற்கு த்ரிஷா போன்றோர் ஓர் எடுத்துக்காட்டு.

http://www.vikatan.com/news/article.php?aid=52352

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.