Jump to content

ஜெனிவாச் செய்திகள் ஒரே திரியில்.........


Recommended Posts

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜெனிவா மீது குவியும் கவனம்

SEP 14, 2015 | 1:21by கார்வண்ணன்in செய்திகள்

UNHRC-meeting-roomஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு இன்று தொடக்கம் அடுத்த மாதம் 2ஆம் நாள் வரை- மூன்று வாரங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமாக, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்றைய முதல் நாள் அமர்வில், சிறிலங்கா வெளி்விவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், மற்றும் மெக்சிகோவின் உள்நாட்டு அமைச்சின் மனித உரிமைகளுக்கான அடிநிலைச்செயலர்  ரொபேட்டோ கம்பா ஆகியோர்  முக்கிய அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமது உரையில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை நடத்துவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா தொடர்பான விவாதம் வரும் 30ஆம் நாளே நடைபெறவுள்ளது.

இதன் போது, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிகாரபூர்வமாக சிறிலங்கா பற்றிய விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து, இதுதொடர்பான தமது பரிந்துரைகளையும் முன்வைப்பார்.

அதன் போது, அமெரிக்கா தரப்பில் சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, உலகிலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9640

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் மங்கள சமரவீர

SEP 14, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

mangala-geneva1ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். 

ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத ஆரியசிங்க, கிழக்கு மாகாண ஆளுநரும், சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகருமான ஒஸ்ரின் பெர்னான்டோ, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சில் ஐ.நா பிரிவுக்கான பணிப்பாளருமான மகேஷினி கொலன்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

mangala-genevamangala-geneva1

இதன் போது, குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத் வாக்குறுதியை அவர்கள் மீள உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு அழைப்பு விட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9636

 

ஜெனிவா நெருக்கடியில் இருந்து தப்பிக்க இரு அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்துகிறது சிறிலங்கா

SEP 14, 2015 | 1:43by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

sri-lanka-emblemஜெனிவா நெருக்கடியைச் சமாளிக்க, சிறிலங்கா அரசாங்கம் இரண்டு உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் இந்தமாதம் சமர்ப்பிக்கவுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்திய மக்ஸ்வல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையும், 2006ஆம் ஆண்டில் மூதூரில் அனைத்துலக தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை, திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை உள்ளிட்ட மீறல்கள் குறித்து விசாரித்த உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையுமே, அவசரமாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளது.

காணாமற்போனோர் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம, தமது இடைக்கால அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா அதிபரிடம் கையளித்திருந்தார்.

இந்த இடைக்கால அறிக்கையில் அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், 2006ஆம் ஆண்டு மூதூரில் அக்சன் பெய்ம் அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட, நிசங்க உடலகம தலைமையிலான 8 பேர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாத அதேவேளை, சட்டமா அதிபரின் நடவடிக்கைக்காக 2007 ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று அனைத்துலக சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் அது பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த இரண்டு அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்துவதன் மூலம், அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கையைப் பெறும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடவுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9645

Link to comment
Share on other sites

விசாரணை அறிக்கை மிகத்தீவிரத்தன்மை கொண்டது – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

SEP 14, 2015 | 10:47by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

zeid-raadசிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை நாளை மறுநாள் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இந்த அறிக்கையின் கண்டறிவுகள் மிகத் தீவிரத் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் தொடக்கவுரை நிகழ்த்திய போதே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் மோசமான மீறல்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை எதிர்கொண்டோம்.

அந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஒரு நகர்வாக, பொறுப்புக்கூறல் அவசியம் என்று இந்தப் பேரவை ஆழமான செயற்பாட்டில் ஈடுபட்டது.

2014 மார்ச்சில் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மேற்கொண்ட விரிவான விிசாரணையின் அறிக்கையை- எனது பரிந்துரைகளையும் உள்ளடக்கியதாக வரும் புதன்கிழமை வெளியிடுவேன்.

இந்த விசாரணையின் கண்டறிவுகள் மிகத் தீவிரத் தன்மையுடையவை.

கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்த விடயத்தில் காட்டிய அக்கறையையும், அவரது தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகளையும் வரவேற்கிறேன்.

ஆனால் அதன் சொந்த நம்பகத்தன்மையை,  முடிவுகளை அளிக்கும் பொறுப்புக்கூறல் செயல்முறைகளை உறுதிப்படுத்தும் கடந்த காலத் தவறுகளுக்கு அப்பால் தீர்க்கமான நகர்வுகளை மேற்கொள்ளும், மீண்டும் நடக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்கும் ஆழமான நிறுவன மாற்றங்களைக் கொண்டு வரும் பொறுப்பை இந்தப் பேரவை இலங்கையர்களுக்கும், கொடுக்க வேண்டியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9655

ஜெனிவாவில் சிறிலங்கா குறித்த முறைசாராக் கூட்டங்களுக்கு ஏற்பாடு

SEP 14, 2015 | 5:20by கி.தவசீலன்in செய்திகள்

UNHRCஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான பல முறைசாராக் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, இந்த முறைசாராக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை, உள்ளிட்ட முன்னணி மனித உரிமை அமைப்புகள், இந்தக் கூட்டங்களுக்காக ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தின் அறைகளை முன்பதிவு செய்துள்ளன.

மேலும், அனைத்து வகையான பாகுபாடுகள், இனவாதத்துக்கு எதிரான அனைத்துலக அமைப்பு, பசுமைத் தாயகம், அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட மக்களின் சமூகம், உள்ளிட்ட அரசசார்பற்ற நிறுவனங்களும் சிறிலங்கா தொடர்பான முறைசாரா கூட்டங்களை ஒழுங்கு செய்துள்ளன.

இந்தக் கூட்டங்களில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

அதேவேளை, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வருவது தொடர்பாக, வரும் வியாழக்கிழமை, அமெரிக்காவும் ஒரு முறைசாராக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9651

உண்மை ஆணைக்குழுவை அமைக்கப் போகிறதாம் சிறிலங்கா – ஜெனிவாவில் மங்கள வாக்குறுதி

SEP 14, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

Mangala-unhrc (1)சிறிலங்கா அரசாங்கம் உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்த பணியகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதி அளித்துள்ளது.

ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் சற்று முன்னர் உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

மேலும் அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலமாக, அரசியல் தீர்வு ஒன்றை உறுதிப்படுத்தவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mangala-unhrc (1)Mangala-unhrc (2)

”சிறிலங்காவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னின்று செயற்படும்.

எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டமை மற்றும் 44ஆவது பிரதம நீதியரசர் நியமனம் என்பன, தற்போதைய அரசாங்கத்தினால் இன, மத, மொழி, பால், வேறுபாடுகள் காரணமாக பொருத்தமுடைவர்களுக்கான நியமனங்கள் மறுக்கப்படாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளன.

சிறிலங்கா படையினர் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், அது ஒரு சிலர் செய்த தவறேயாகும்.

இனிமேல் அவ்வாறு நடைபெறமாட்டாது என்பதை உறுதிப்படுடுத்தும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையும்.

அதேவேளை, அனைத்துலக அமைப்புக்களின் உதவியுடன், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும்.

இந்த உண்மை கண்டறியும் செயல்முறை இரண்டு பொறிமுறைகளாக மேற்கொள்ளப்படும்.

முதலாவதாக, தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்டது போன்று உண்மை, நீதி, நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அமைக்கப்படும்.

இரண்டாவதாக, காணாமற்போனோர் குறித்த பணியகம் ஒன்று அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப அமைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9657

சிறிலங்காவுடன் இணைந்து தீர்மானம் கொண்டு வருவோம்- அமெரிக்கா அறிவிப்பு

SEP 14, 2015 | 11:55by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

eagle-flag-usaசிறிலங்காவில் பொறுப்புக் கூறல் குறித்த செயல்முறைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து, அதன் இணக்கப்பாட்டுடனும்,  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆதரவுடனும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் பணியில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

அதேவேளை, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, தாம் தொடர்ந்தும் சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9665

விசாரணை அறிக்கை தொடர்பாக ஊடக மாநாட்டை நடத்துகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

SEP 14, 2015 | 12:07by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

Zeid-Raad-al-Husseinசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை குறித்த அறிக்கை வரும் புதன்கிழமை வெளியிடவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதுபற்றிய ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளார்.

நாளை மறுநாள், புதன்கிழமை – மத்திய ஐரோப்பிய நேரம் காலை 10.30 மணியளவில், சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்.

அத்துடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்திலுவும் அது வெளியிடப்படும்.

இந்த அறிக்கையின் கண்டறிவுகள் தொடர்பாக, அந்த ஊடகவியலாளர் மாநாட்டில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விளக்கமளிப்பார்.

தமது பரிந்துரைகள் தொடர்பாகவும், அவர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9667

Link to comment
Share on other sites

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஆற்றிய உரை- (முழுமையாக)

SEP 15, 2015by புதினப்பணிமனைin செய்திகள்

Mangala-unhrc (1)கடந்தகாலத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், குத்துக்கரணங்களை வைத்து எம்மை எடைபோடாதீர்கள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என்று அனைத்துலகஅ சமூகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது உரை முழுமையாக தரப்படுகிறது.

“ஐ.நா மனித உரிமை பேரவையின் 28 ஆவது கூட்டத் தொடரில் வெளியிடப்படவிருந்த சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கையை பிற்போட்டமைக்காக ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஐ.நா மனித உரிமை பேரவையால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட இந்த காலஅவகாசமானது மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக காணப்பட்டது.

மனித உரிமை பேரவை, மனித உரிமை ஆணையாளர் பணியகம், அனைத்துலக சமூகத்துடன் எமது ஈடுபாட்டை புதுப்பித்துக் கொள்ளவும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை அடைவதற்கும் ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் இது தேவைப்படும்.

கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றதன் காரணமாக கருத்தொருமைவாத தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் முடிந்தது.

Mangala-unhrc (1)

சம்பிரதாயபூர்வமான எதிரிகளாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் கொள்கை, மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 17 ஆம் நாள் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக நவீன தலைவர்கள் நாடாளுமன்றத்தில் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

உலக பண்புகளான சமத்துவம், நீதி, சுதந்திரம், என்பனவும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் அரசியல் தீர்வும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எட்டாவது நாடாளுமன்றத்தை இரண்டு வாரங்களுக்கு முன் ஆரம்பித்து வைத்த அதிபர் மைத்திரிபால சிறிசேன தென்னாபிரிக்காவின் மோதலின் பின்னர் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்ததையும் நினைவுகூர்ந்தார்.

அதேபோன்று போருக்குப் பின்னரான சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைப்பதும் இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வருவதும் அவசியமானது. குறிப்பாக நாட்டின் முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளவும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் இது உதவும்.

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக மூன்றாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நியமிக்கப்பட்டதும். 44 ஆவது பிரதம நீதியரசர் நியமனமும் சிறிலங்காவில் எந்தவொருவரினதும் உரிமையை இனம், மற்றும் மதத்தினால் தடுக்க முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததும் உரிய கொள்கைகளைக் கொண்டு செயற்படாதன் காரணமாக நல்லிணக்கம் எம்மை விட்டு நழுவிச்சென்றது.

ஆனால் எமது புதிய தேசிய அரசாங்கம் நல்லிணக்கத்தை புதிய அணுகுமுறையிலும் முக்கியத்துவம் மிக்க முன்னுரிமையின் அடிப்படையிலும் முன்னெடுக்கிறது.

ஏதோ ஒரு கட்டத்தில் அனைத்துலகத்திற்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன என்பதற்காகவன்றி நாட்டின் மக்களுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் சிறிலங்கா  அரசாங்கம் எப்போதும் பொறுப்புக்கூறுவதாக இருக்கும்.

Mangala-unhrc (2)

நல்லிணக்கம் என்பது நீண்டகாலம் எடுக்கக்கூடிய ஒரு செயற்பாடு என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். இந்த விடயத்தில் பலர் பொறுமை இழந்துள்ளனர் என்பது எனக்குத் தெரியும்.

அவர்களின் பொறுமையின்மையை நாம் புரிந்து கொள்கின்றோம். அவர்கள் அவ்வாறு கருதவதற்கு உரிமையும் உள்ளது. ஆனால் இந்த செயற்பாடு மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும்.

எமது நாடு சுதந்திரத்தின் பின்னர் பல தடவைகள் விழுந்துள்ளது . மீண்டுமொருமுறை தோல்வியடைவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

உண்மையைக் கண்டறிதல் நீதி, அர்த்தமுள்ள மறுசீரமைப்பு, அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் கவலைகளை ஆராய்தல் என்பன நல்லிணக்க செயற்பாட்டில் உள்ளடங்குகின்றன என்பதை சிறிலங்கா  அரசாங்கம் அங்கீகரிக்கிறது.

அதிபருக்கும் பிரதமருக்கும் மக்களினால் வழங்கப்பட்ட ஆணைக்கமைய அரசாங்கம் ஏற்கனவே அரசியல் தீர்வை நோக்கிய சில பேச்சுகளை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சட்டத்தை ஆட்சிப்படுத்துவதிலும் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்துவதிலும் பொறுப்புக்கூறுவது என்பது மிகவும் அவசியமானதாகும்.

அத்துடன் நீதி, மற்றும் நிர்வாகத்துறை மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சிப்படுத்தலில் இவை மிகவும் முக்கியமானவையாகும்.

அதுமட்டுமன்றி மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள், மற்றும் ஊழல்வாதிகள் சட்டத்தில் இருந்து தப்பிப்பதை தடுக்கவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

இது தொடர்பான பாடங்களை நாங்கள் ஏனைய நாடுகளிலிருந்து மட்டுமன்றி எமது நாட்டின் வரலாற்றில் இருந்தும் கற்றுக்கொள்கின்றோம். அந்த வகையில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள சுயாதீன, நம்பகரமான உள்ளக விசாரணை பொறிமுறையில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.

உண்மையைக் கண்டறிதல்:

  1. தென்னாபிரிக்காவின் முக்கிய அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பிரகாரம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்படும். இதில் மதத்தலைவர்கள், மற்றும் ஆணையாளர்களைக் கொண்ட ஒரு பேரவை உருவாக்கப்படும். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் விடயத்தில் குற்றமிழைத்தவர்கள் தெரியாத நிலைமை காணப்படின் இந்த ஆணைக்குழு ஊடாக உண்மை கண்டறியப்படும். என்ன நடந்தது என்பது தொடர்பாகவும், எவ்வாறு அதனை சரிப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் இந்த ஆணைக்குழு ஆராயும்.
  2. காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக ஒரு பணியகம் அமைக்கப்படும். அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணர்களின் ஆலோசனையுடன் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கமை இந்த அலுவலகம் அமைக்கப்படும்.

நீதிக்கான உரிமை விடயத்தில் நீதித்துறை பொறிமுறையுடன் சிறப்பு ஆலோசகர் குழுவொன்று அமைக்கப்படும். இது பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிப்பதை தடுப்பதற்காகவும் செயற்படும்.

Mangala-unhrc (3)

இவ்வாறு அமைக்கப்படும் காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் பரிந்துரைகளையும் உண்மையைக் கண்டறிதல் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் கற்றறிந்த பாடங்களும், நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அமுல்படுத்துவதற்கு மறுசீரமைப்பு பணியகம் ஒன்று உருவாக்கப்படும்.

அதுமட்டுமன்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறைகளைத் தூண்டும் பேச்சுக்களை தடுப்பதற்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வைக் காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் தீர்வைக் காண முடியும் என நம்புகின்றோம். இதற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சபை ஒன்று உருவாக்கப்படும்.

இந்த பொறிமுறை, மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் அனைத்து துறைசார் நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்கள்,ஆகியோரின் உதவியுடனும் மற்றும் அனைத்துலக சமூகத்தின் நிதி உதவி, பொருள் உதவி , தொழிலுட்ப உதவியுடனும் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உரிமையுடனும் உருவாக்கப்படும்.

அதுமட்டுமன்றி சிறிலங்காவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கு சிறிலங்கா  அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் உடலகம, மற்றும் பரணகம அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்படும்.

வர்த்தக செயற்பாடுகளிலிருந்து சிறிலங்கா இராணுவத்தின் ஈடுபாட்டை நிறுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதுமட்டுமன்றி சிறிலங்காவுக்கு ஐ.நா சிறப்பு  அறிக்கையாளர்களை அழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கிவிட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் ஒன்றை அனைத்துலக தரத்திற்கு அமைய கொண்டு வருவது தொடர்பிலும் ஆராயப்படும்.

சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் மீளாய்வு செய்யப்பட்டு இந்த வருடம் அமுல்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு  தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யும் செயற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பது சிறிலங்காவுக்கு அவசியமான ஒன்றாக காணப்பட்டது. இன்று நாட்டைக் கட்டியெழுப்பவும், சமாதானத்தை கட்டியெழுப்பவும் எமக்கு மிகவும் சிறந்த சுதந்திரம் கிடைத்துள்ளது.

எமது இராணுவத்தினர் கடந்த காலங்களில் ஒழுக்கமாகவும், தொழிற்சார் ரீதியாகவும் செயற்பட்டமை தொடர்பில் பாராட்டப்பட்டுள்ளனர்.

எனினும் ஒரு சில பதவிகளின் பொறுப்புக்களின் முறைமை காரணமாக இராணுவத்தினரின் நன்மதிப்பு பாதிக்கப்பட்டது. அதனால் அனைத்து தரப்பினரிலும் பொறுப்புக்கூறல் தொடர்பான அவநம்பிக்கை காணப்பட்டது.

எவ்வாறெனினும் பொறுப்புக்கூறலில் சந்தேகம் கொண்டுள்ள அனைவருக்கும் ஒரு விடயத்தை கூறுகின்றேன். எக்காரணம் கொண்டும் யாரும் பயப்பட வேண்டாம் என நான் கூற விரும்புகின்றேன்.

நாம் மேற்கொள்ளும் இந்த செயற்பாடு பக்கச்சார்பற்ற ரீதியில் இருக்கும் என்பதில் உங்கள் நம்பிக்கையை நீடித்துக் கொள்ளுங்கள், மேலும் எங்களுக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது இராணுவத்தின் நம்பகத் தன்மையை மீண்டும் நாங்கள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்போம். எமது இன்றைய அரசாங்கம் கடந்த கால தவறுகளை அங்கீகரிக்கிறது.

எமது நிறுவனங்களின் வீழ்ச்சியையும் நாம் அனைவரும் அறிந்திருந்தோம். எமது அரசாங்கம் அனைத்து குடிமக்களின் நலன் தொடர்பிலும் அர்ப்பணிப்புடன் இருக்கும். கலந்துரையாடல்களுக்கு திறந்த மனதுடனேயே இருக்கின்றோம்.

சிறிலங்காவில் மீண்டும் நீதி நிலைநாட்டப்படாது என சிலர் கூறுகின்றனர். சிறிலங்காவில் மீண்டும் சமத்துவம் அங்கீகரிக்கப்படாது என சிலர் கூறுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு விடயத்தை கூறுகின்றோம்.

அதாவது ஜனவரி 8 ஆம்நாள் மக்கள் என்ன சாதனையை நிலைநாட்டினர் என பாருங்கள். உலகம் சிறிலங்காவின் எதிர்பார்ப்பை ஒரு கட்டத்தில் இழந்தது.

எனினும் சில நாடுகள் எம்மீது நம்பிக்கை வைத்தன. அந்த செயற்பாடு மீண்டும் ஆகஸ்ட் 17 ஆம் நாள் உறுதிப்படுத்தப்பட்டது.இரண்டு தரப்புக்களிலும் இனவாதிகள் நிராகரிக்கப்பட்டனர்.

கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் குத்துக்கரணங்களையும், வைத்துக்கொண்டு எம்மை மதிப்பிட வேண்டாம். நாங்கள் புதிய உருவாக்கத்தை மேற்கொள்ளவும், எங்களது எதிர்காலத்தை நம்பிக்கைகளினாலும், அபிலாஷைகளினாலும், உருவாக்கவும் எமக்கு இடமளியுங்கள்.

நாம் கனவுகளைக் கண்டு பயப்படவில்லை. பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை நடத்துவதற்கு நாம் பயப்படுவதற்கு வழிசமைக்க வேண்டாம். நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

சிறிலங்கா குடிமக்களிடம் இருந்தும் அனைத்துலக சமூகத்திடமிருந்தும், பொறுமையையும், புரிந்துணர்வையும் எதிர்பார்க்கின்றோம்.

சிலருக்குத் தேவையான வகையில் இந்தப் பயணம் மிகவும் வேகமாக இல்லாமல் இருக்கலாம். சில விடயங்களைப் பொறுத்தவரை நாங்கள் தூர பயணித்திருக்கின்றோம்.

எனினும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார்கள்.

உங்கள் அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். எம்மீது நம்பிக்கை வைத்து எம்முடன் இணைந்து செயற்படுங்கள், புதிய சிறிலங்காவைக் கட்டியெழுப்புவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கையை மேற்கொள்ள எமக்கு உதவுங்கள்.” என்று குறிப்பிட்டார்.

http://www.puthinappalakai.net/2015/09/15/news/9687

Link to comment
Share on other sites

பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை விடயம் முக்கியத்துவம் பெறுவதில் சிரியாவின் உள்நாட்டுப் போர் தாக்கம் செலுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.

Link to comment
Share on other sites

குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம் பொறுப்புக்கூறலைப் பாதிக்கும் – ஐ.நா நிபுணர்

SEP 16, 2015 | 0:01by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

Special Rapporteur Pablo de Greiffசிறிலங்காவில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரமானது, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை கமையாக பாதிக்கும் என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட உண்மை, நீதி, இழப்பீடு, மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் அவர், “சிறிலங்கா அரசு நாட்டின் நிலைமையை சரியாகக் கையாண்டால், அது அந்தப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, உலக அளவில் எப்படி நீடித்திருக்கக் கூடிய சமாதானத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமையும்.

சிறிலங்காவில் நீதித்துறையில் மாறுதல்களைக் கொண்டு வந்து, போருக்கு பின்னரான காலப் பகுதியில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் மனதில் கொண்டு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் நோக்கில், அதற்கேற்ற வகையில் உத்திகள் வகுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

அதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேபோல் உண்மைகளை கண்டறிய சுயாதீனமான வழிமுறை ஏற்படுத்தப்பட்டு, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான வகையில் நியாயங்கள் வழங்கப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் .

இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் சிறிலங்கா தனது முழுமையான வலிமையை உணர்ந்து கொள்ள முடியும்.

சிறிலங்காவின் அனைத்து சமூக மக்களிடமும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, அவர்களும் உள்வாங்கப்படுவது மிகவும் அவசியம்.

அனைத்திலும் முக்கியமாக கடந்த காலங்களில் இடம்பெற்ற பெரிய அளவிலான அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் உள்வாங்கப்படுவது அவசியம்.

அதிகாரிகள் நீண்டகால அடிப்படையில் உறுதியுடன் செயல்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.

மறுபுறத்தில் காணாமல் போனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை தெளிவுபடுத்த உடனடி நடவடிக்கை தேவை.

நாட்டின் வடக்கு-கிழக்கு பகுதியில் பெண்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களும், சட்டத்துக்கு விரோதமாக தடுத்து வைப்பது போன்ற நடவடிக்கைகளும் முடிவுக்கு வருவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் .

கடுமையான விதிமீறல்களைச் செய்தவர்கள் நீதிமன்றத்தின் முன்னர் குற்றச்செயல்களுக்காக நிறுத்தப்படுவது அவசியம்.

நாடு தற்போதுள்ள நிலையில் மீண்டும் எவ்விதமான தவறுகளும் செய்யும் நிலை ஏற்படக் கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/16/news/9714

சிறிலங்காவில் நம்பகமான நீதிச் செயல்முறைகள் தேவை – அமெரிக்கா வலியுறுத்தல்

SEP 16, 2015 | 0:05by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

eagle-flag-usaசிறிலங்காவில் போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக, தீர்வு காண்பதற்கு நம்பகமான நீதிச் செயல்முறைகள் தேவை என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில், உண்மை, நீதி, இழப்பீடு, மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பான உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி மிச்செல் ரோல்பேர்ட்,

“ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, கண்காணித்த விடயங்களை நாம் மதிக்கிறோம்.

அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளபடி, அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கை மற்றும், சிறிலங்காவின் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதில் தான், நீதிச் செயல்முறைகளில் சிறிலங்கா காட்டும் ஆர்வம்,  தங்கியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/16/news/9717

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.நா விசாரணை அறிக்கை இன்று வெளியாகிறது

SEP 16, 2015 | 1:16by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

zeid-raadசிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.

மத்திய ஐரோப்பிய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும். அத்துடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்திலும் இது வெளியிடப்படவுள்ளது.

அதேவேளை, இந்த அறிக்கையின் கண்டறிவுகள் பரிந்துரைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் ஜெனிவாவில் இன்று நடத்தவுள்ளார்.

இந்த ஊடக மாநாடு ஜெனிவா நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான இந்த அறிக்கை அனைத்துலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/09/16/news/9730

Link to comment
Share on other sites

ஐ.நா அறிக்கையை வரவேற்கிறது பிரித்தானியா

SEP 16, 2015 | 13:12by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

HugoSwireசிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வரவேற்றுள்ள பிரித்தானியா, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை உன்னிப்பாக ஆராயப் போவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியா வெளிவிவகார, கொமன்வெல்த் பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வயர்,

“இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்காவுடனும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஏனைய பங்காளர்களுடனும், இணைந்து பணியாற்றுவதற்கு பிரித்தானியா எதிர்பார்க்கிறது.

கடந்தகால விவகாரங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், சிறிலங்காவில் நிலையான அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கும், உதவும் வகையில் இணக்கப்பாட்டுத் தீர்மானம் ஒன்றை கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம்.

இந்த முக்கியமான அறிக்கை வெளியிடப்பட்டதை வரவேற்பதுடன், இதற்காகப் பணியாற்றிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் பணியாளர்களையும் மதிக்கிறோம்.

ஐ.நாவின் விசாரணைக்காக பிரித்தானியா கடுமையாக வாதிட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/16/news/9754

Link to comment
Share on other sites

இலங்கையில் ஒரு கலவரம்..
இது உறுதி படுத்தப் பட்டுள்ளது..

அவர்கள் --- இவர்களை கொண்டார்கள்
இவர்கள் -அவர்களை கொண்டார்கள் ..
நடந்தது ஒரு கலவரம் மட்டுமே!

நான் உறுதியாக நம்புகிறேன்..
எங்கள் புதைகுழிகளுக்கு 
காதுகள் இல்லை என்று..

(முக நூல் நண்பரொருவரின் கருத்து)

20 பேருந்துகளில் ஆட்கடத்திய மகிந்த- கோத்தா: ஐ.நாவில் கண்ணீருடன் முஸ்லீம் தாயார் கதறல்
[ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 01:47.09 PM GMT ]
muslim_mother-un_001.jpg
2009 செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கும்போது எனது மகனை கடத்தி விட்டார்கள். ஐ.நாவில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன்.

புதிய அரசாங்கம் வந்தாலும் வேலையில்லை. மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அவர்கள் பேசுகிறார்கள். எனது மகனை கோத்தபாய ராஜபக்ச தான் கடத்தியுள்ளார் என்பது நன்றாகவே தெரியும் என முஸ்லிம் பெண்ணொருவர் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

 

muslim_un_001.jpg

muslim_un_002.jpg

muslim_un_003.jpg

 
Link to comment
Share on other sites

பாலச்சந்திரனை படுகொலை செய்தது இலங்கை இராணுவம்தான்: ஐநா அறிக்கை
[ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 01:47.21 PM GMT ]
balachandran.jpg
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் படுகொலை செய்ததாக ஐநா மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

அதில், இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் ஜித் அல் உசேன்‌ இன்று தாக்கல் செய்தார்.

அதில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளிட்டோரை இலங்கை இராணுவம் படுகொலை செய்தது.

சர்வதேச அளவில் இலங்கையில்தான் அதிகமாக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவம், கடற்படை, சிஐடி பாலியல் வன்முறையில் ஈடுபட்டன.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாகினர் என்று கூறப்பட்டுள்ளது.

balachandran.jpg

 
 
Link to comment
Share on other sites

இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தெரியவரவில்லை – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

SEP 17, 2015 | 1:02by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

Zeid Raad Al Husseinசிறிலங்காவில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக இப்போது தாம் கருதவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“விசாரணை செய்யப்பட்ட 9 ஆண்டுகளில், சிறிலங்காவில் மோசதான மனித உரிமை மீறல்களும், துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கட்டாயமாக காணாமற்போகச் செய்யப்படுதல், பாடுபாடின்றி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை, சிறார் படைச்சேர்ப்பு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வன்முறைகள், சித்திரவதைகள், மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டமை என்று மிகமோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

எனினும் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக விசாரணையில் தற்போது தெரியவரவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/17/news/9766

Link to comment
Share on other sites

ஜெனிவாவில் அடுத்தவாரம் சிறிலங்கா குறித்த தீர்மானம்

SEP 18, 2015 | 2:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

UNHRCசிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் முன்வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பான கருத்தொருமித்த தீர்மானம், வரும் 24ஆம் நாள் அல்லது 25 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுடன் இணைந்து, அனைத்துலக பங்காளர்களின் அனுசரணையுடன் கருத்தொருமித்த தீர்மானத்தைக் கொண்டு வர விரும்புவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது.

இது தொடர்பான முதல் வரைவை ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கா கையளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக, வரும் 30ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2015/09/18/news/9794

Link to comment
Share on other sites

ஐ.நாவை உருக்கிய இலங்கையின் சித்திரவதைகள்
[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 03:49.38 PM GMT ]
un-17-0.jpg
ஐ.நா மன்றத்தின் பக்க அறையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பிலான பல காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டது.

இவ்விசேட கலந்துரையாடலின் போது  பிரபல மனித உரிமை ஆர்வலரான யஸ்மின் சூக்கா, மனித உரிமை கண்காணிப்பகத்தின் பணிப்பாளர்,  இலங்கையின் மனித உரிமைகள் அமைப்புக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்களான சுமந்திரன் ,  சிறிதரன் மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புக்கள் புலம் பெயர் அமைப்புக்கள் என்பன கலந்து கொண்டன.

un-17-01.JPG

un-17-02.JPG

un-17-03.JPG

un-17-04.JPG

un-17-05.JPG

un-17-06.JPG

un-17-07.JPG

un-17-08.JPG

un-17-09.JPG

un-17-10.JPG

un-17-11.JPG

un-17-12.jpg

un-17-013.jpg

 

http://www.tamilwin.com/show-RUmtyJSbSVjw5E.html

 

மகிந்தவின் கடத்தல்! உடையில் கணவனின் படத்துடன் ஐ.நா மன்றத்தில் சிங்களப் பெண்!
[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 02:57.47 PM GMT ]
ina.jpg
பிரகீத் காணாமல்போன நாளில் இருந்து இன்றுவரை நடைபெற்ற ஐ.நா அமர்வுகளில் நான் பங்கு பற்றி உள்ளேன்.

இம்முறை வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரகீத் காணாமல்போனமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது எனக்கு கிடைத்த ஒரு பிரதிபலன்.

எனது கணவர் காணாமல் போனமைக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் தொடர்பு இருக்கின்றதா என இன்னும் சந்தேகம் உள்ளது என காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியாரான சந்தியா, லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில்  இவ்வாறு தெரிவித்தார்.

un_santhiya_001.jpg

un_santhiya_002.JPG

http://www.tamilwin.com/show-RUmtyJSbSVjw5E.html

புலிகளை விசாரிப்பது யார்? குழப்பத்தில் ஐ.நா அறிக்கை
[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 04:10.58 PM GMT ]
may17.jpg
ஐ.நா அறிக்கையில் இரண்டு தரப்பினையும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் மீது விசாரணை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஏனெனில் தமிழர் தரப்பை ஒரு நிர்வாகமாக அல்லது அரசாக பார்க்காமல் குற்றவாளிகளாக பார்க்கும் தன்மையே காணப்படுகின்றது.

ஐ.நா அறிக்கையில் தமிழர்கள் தரப்பினர் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் என்ற தரப்பை தொடர்ச்சியாக அங்கீகரிக்க மறுக்கும் பணி நடந்து வருகின்றது என  மே 17 இயக்கத்தின் தலைவா் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyJSbSVjw5H.html

 

Link to comment
Share on other sites

சிறிலங்கா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்

SEP 18, 2015 | 13:03by கி.தவசீலன்in செய்திகள்

ban-ki-moonஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவரது பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இந்த அறிக்கையின் பரிந்துரைகள், சிறிலங்கா அரசாங்கத்தினதும், மக்களினதும்  அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப உண்மையான நம்பகமான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயல்முறைகளின் மூலம், நிலையான அமைதி, உறுதித்தன்மை, மனித உரிமைகளை மதிக்கின்ற நிலையை அடைவதற்கான முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மோதல் காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக எல்லா பங்காளர்களுடனும், பரந்தளவில் ஆலோசித்து பொறிமுறைகளை வடிவமைக்க வேண்டும்.” என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/09/18/news/9812

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் வலிமிக்கது, ஆனால் அவசியமானது – ஐ.நா சிறப்பு ஆலோசகர்கள்

SEP 18, 2015 | 13:41by கார்வண்ணன்in செய்திகள்

UN pecial Advisers  Adama Dieng- Jennifer Welshமோதல் காலங்களில் எல்லா சமூகங்களுக்கும் பாரிய துன்பங்களை விளைவித்த  இருண்ட காலத்தை சிறிலங்கா கடந்து வந்திருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், பாகுபாடற்ற பீரங்கித் தாக்குதல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமற்போகச் செய்யப்படுதல், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், சிறார் படைச்சேர்ப்பு என்று மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின், இனப்படுகொலையைத் தடுத்தலுக்கான சிறப்பு ஆலோசகர் அடமா டையிங், மற்றும் பாதுகாப்புப் பொறுப்புக்கான சிறப்பு ஆலோசகர் ஜெனிபர் வெல்ஸ் ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

”பொறுப்புக்கூறல் என்பது, தனியே நீதியை நிலைநாட்டுவதற்கு மட்டுமானது அல்ல. இது நல்லிணக்கம், அமைதி, மீளத்திரும்பாமை ஆகியவற்றுக்கும் முக்கியமானது.

சிறிலங்காவின் வரலாற்றில் புதிய அமைதியான பக்கங்களை எழுதுவதற்கு கடந்தகாலக் காயங்களுக்கு பொருத்தமான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துலக மனித உரிமை சட்ட நியமங்களுக்கு ஏற்ப, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்கப்பட வேண்டும்.

இந்த செயல்முறை வலிமிக்கதாகவும், கடினமானமாகவும் இருக்கும். ஆனால், நீண்டகால அமைதிக்கும், நாட்டின் உறுதிப்பாட்டுக்கும் இது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.

பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல், பாடுபாடின்மை என்பன தேசிய கொள்கைகளாக வகுக்கப்பட வேண்டும்.

எல்லா இன, மத சமூகங்களின் அதிக பிரதிநிதித்துவத்தை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினரின் குரல்களையும் கூட கேட்கவேண்டிய தேவை உள்ளது, ஏனென்றால், அவர்களும் இலங்கையர்கள் தான்.” என்றும் ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் இருந்து தனது நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்கிறது.

குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதிலும் இந்தப் பொறுப்பு இருக்கிறது.

மீள நடக்காது என்பதற்கான உறுதியான நகர்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் பாதுகாப்புப் பொறுப்புக்கான சிறப்பு ஆலோசகர் ஜெனிபர் வெல்ஸ்.

அதேவேளை, சிங்கள தமிழ் சமூகங்களிடையே காணப்படும் ஆழமான குறைகளால் மேலும் வன்முறைகள் நிகழக் கூடும் என்று இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகர் அடமா டையிங் எச்சரித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/18/news/9814

Link to comment
Share on other sites

தமிழ் இன அழிப்பின் புதிய வதைகள்... ஐ.நா மன்றத்தில் கண்ணீரில் பலர்!
[ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 03:57.52 PM GMT ]
uno-film.JPG
இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார்.

இதில் சா்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைகள் ஆர்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் புலம்பெயர் தமிழர் அமைப்பின் தமிழர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் இதில் கலந்து கொண்ட அனைவரும் கண்ணீரில் மூழ்கியதை அவதானிக்க முடிந்தது.

ஐ.நாவின் சில பெறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் இவ் ஆவணப்பட வெளியீட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

uno-film-01.JPG

uno-film-02.JPG

uno-film-03.JPG

uno-film-04.JPG

uno-film-05.JPG

uno-film-06.JPG

uno-film-07.JPG

uno-film-08.JPG

uno-film-09.JPG

uno-film-10.JPG

 
அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய்
[ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 03:39.43 PM GMT ]
tamil_women_001.jpg
2009 பெப்ரவரி மாதம் எனது கணவன் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் கடத்தப்பட்டார்.

எனது பிள்ளைகளின் கண் முன், இராணுவ சீருடையில் வந்தவர்கள் கணவரைக் கடத்தும்போது என்னுயை மூத்த மகன் dont shoot uncle i want my father என அழுதார் என ஐ.நா மன்றத்தில் தாயெருவர் கண்ணீருடன் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார்.

tamil_mother.JPG

 
இலங்கையின் வெளிவரா தடுப்பு முகாம்கள்! ஐ.நாவில் வெளிவரும் இலங்கைப் பெண்ணின் சாட்சியம்
[ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 02:21.39 PM GMT ]
uno-santhiya.JPG
இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாக இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

Forum Asia Franisans Intenational ஆகிய அமைப்புக்கள் இணைந்து நிமல்கா பெர்னாண்டோ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடா்பான பக்க அறைக் கலந்துரையாடலில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியாரான சந்தியா தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் சா்வதேச மற்றும் தமிழா் மனித உரிமைகள் ஆா்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

uno-ashok-01.JPG

தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்பிக்க கூடாது: யஸ்மின் சூகா
[ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 11:36.06 AM GMT ]
yasmin_zuka_001.jpg
இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்றவைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் உரையாற்றும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திரளான மக்கள் மடிந்துள்ளனர், போர்க்குற்றங்கள், மனித உரிமைகளுக்கெதிரான அச்சுறுத்தல்கள் என நிகழ்ந்துள்ளன, ஆனாலும் அவையாவும் இன்னமும் தொடர்கின்றன.

இவையாவும் பாதிக்கப்பட்டவர்களின் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தால் மட்டுமே முடிவானதும் சாதகமானதுமான தீர்வினை பெறமுடியும்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை என்பது இந்த விவகாரத்தில் முதற்படியே.

சர்வதேச அளவில் நிபுணர்கள் அடங்கிய பல்வேறு குழுவினர் இந்த விவகாரத்தை முக்கியமானதாக கருதி செயல்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விசாரணைக்கு அங்கு அமைந்துள்ள புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக முக்கியமானதாக கருதப்படுவது தேசிய தலத்தில் ஒட்டுமொத்த கலந்தாலோசனையே

ஆனால் இந்த தேசிய அளவிலான கலந்தாலோசனையில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள் பிரதிபலிக்குமா? பாதிக்கப்பட்டவர்கள், ஒன்றுமல்லாமல் சிதைக்கப்பட்டவர் என இலங்கையின் ஒட்டுமொத்த பொதுமக்களின் பங்களிப்பு இருக்குமா?

மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்துவதற்கென இலங்கையில் பல்வேறு அமைப்புகளை அமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவை அனைத்துமே வரலாற்றுப் பிழை அன்றி வேறில்லை.

அடுத்ததாக அனைவருக்கும் எழும் கேள்வி என்பது பாதுகாப்பு சீரமைப்பு குறித்துதான்.

மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் மட்டுமல்ல பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டுவது கெட்டுப்போன சிலர் குறித்து அல்ல.

இங்கு நாம் சுட்டிக்காட்டுவது பொலிஸ் அல்லது இராணுவ வீரர்கள் களங்கமடைந்திருப்பதாக அல்ல, தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது என்பதே.

பாதுகாப்புத்துறையில் சரியான சீர்திருத்தம் அமைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பலனை அளிக்கும்,

வெளிவந்துள்ள அறிக்கையில் விடுபட்டுள்ள முக்கியமான கருத்து மிரட்டல்களால் உடமையை அபகரித்தல். அதுகுறித்து பல ஆண்டுகளாக நாங்கள் உழைத்து வருகின்றோம்.

மிரட்டல்களால் உடமையை அபகரிப்பது அல்லது பணம் பறிப்பது என்பது முகியமான பணிகளில் ஒன்றாக உள்ளது.

உயிர் பிழைத்து தப்பிக்க வேண்டும் எனில் பணம் தரவேண்டிய கட்டாயம் உள்ளது, இதுபோன்ற முறைகேடுகளை இலங்கையில் இருந்து மொத்தமாக ஒழிக்க வேண்டும்.

பாதுகாப்புத்துறையின் சீரமைப்பினால் மட்டுமே இதுபோன்ற முக்கிய விடயங்கள் சாத்தியமாகும்.

சாட்சியம் அளிப்பவர்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பை நாம் உறுதி செய்யவில்லை எனில் அவர்களின் குரல்களை நாம் உதாசீனம் செய்வதேயாகும்.

நம்பிக்கை என்பது இலங்கையில் முக்கியமான விடயமாக உள்ளது. பல்வேறு மதத்தினருக்கிடையே இருக்கும் நம்பிக்கையல்ல, மாறாக அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான நம்பிக்கை.

மக்களிடம் அரசின் மீதான நம்பிக்கை மீள்கொணர்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

சர்வதேச அமைப்புகளாலான நீதிமன்றம் குறித்து மனித உரிமை ஆணையர் குறிப்பிட்டார், ஆனால் அதற்கும் இலங்கை அரசு கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் நிபுணர்களை கொண்ட ஒரு அமைப்பையே பரிந்துரைத்திருக்கிறது மனித உரிமைகள் ஆணையம்.

பல்வேறு காரணங்களால் இலங்கையில் பாதிப்புக்குள்ளான மக்கள் அங்குள்ள விசாரணை அமைப்புகளை நம்ப தயாராக இல்லை.

மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டது போன்று இலங்கை அரசு இதுவரை நடைமுறைப்படுத்தியுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச சமூகத்தோடு பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். அதுவரையில் நமக்கு அங்குள்ள மூன்னேற்றம் குறித்து மதிப்பிட முடியாமல் போகும்.

இதுவரையான அறிக்கைகளில் நமக்கு தற்போது கிடைத்திருப்பது மிக முக்கியமான அறிக்கை, மட்டுமின்றி மிக முக்கியமான பரிந்துரைகளும் கூட. 
மிக முக்கியமாக ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்டவர்களின் குரல்கள் சர்வதேச சமூகத்தின் முன்பு கேட்கப்பட வேண்டும் என்பதே என தெரிவித்துள்ளார்.

un-17-12.jpg

un-17-09.JPG

un-17-06.JPG

 
இலங்கையின் இரகசிய முகாம்களை பார்வையிட விரையும் நிலையில் ஐ.நா அதிகாரிகள்
[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 05:06.53 PM GMT ]
yokeswaran_rev_001.jpg
காணாமல் ஆக்கப்பட்டோரை விசாரிக்கும் நிபுணர் குழுவை சந்தித்து அக்குழுவிடம், இரகசிய முகாம் இருப்பதையும் அவர்கள் வந்து சந்திக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அக்குழுவினர் இலங்கைக்கு வரும்போது, அவற்றைப் பார்வையிட இலங்கை அரசாங்கம் அனுமதி கொடுக்குமென நம்பபுகிறேன்.

இரகசிய தடுப்பு முகாம் இருந்ததாக நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்ட விடயம். அதனை இலங்கையின் புதிய அரசாங்கம் மறைப்பதற்கு வழியில்லை என மனித உரிமைகள் ஆர்வலரான அருட்தந்தை யோகேஸ்வரன் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.