Jump to content

வந்துவிட்டது I-OS 9...ஆப்பிளின் அடுத்த அடி...!


Recommended Posts

வந்துவிட்டது I-OS 9...ஆப்பிளின் அடுத்த அடி...!

 

ன்று ஒவ்வொரு சாமானிய மனிதனின் கனவும் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்பதுதான். அதை வாங்கிய பெரும்பாலோரின் கனவு ஐ-போன் வாங்க வேண்டும் என்பதுதான்.

எலக்ட்ரானிக் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவணத்தின் இந்த ஐ-போன்தான், இளைய தலைமுறையின் கனவு போன். மற்ற கம்பெனி போன்கள் எல்லாம் ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகிய இயக்கு தளங்களில்(ஆப்பரேட்ட்ங் சிஸ்டம்) இயங்க, தனக்கென்று ஓர் இயங்கு தளம் அமைத்துக் கொண்டது ஆப்பிள். ஐ-ஓ.எஸ்(i-os) எனப்படும் இந்த இயங்கு தளம் ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. ஆப்பிளின் அசாத்திய வளர்சிக்கு இதுவே பெரும் பங்காற்றியது. 2007, ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐ-ஓ.எஸ் போன்களில் மட்டுமின்றி ஐ-பேட்,  ஐ-பாட்களிலும் பயன்படுகிறது.

ios_vc1.jpg உலகிலுள்ள அனைத்து செல்போன் பயனீட்டாளர்களையும் கவர்ந்த i-os இதுவரை எட்டு வெர்ஷன்கள் தாண்டி, நாளை முதல் தனது ஒன்பதாவது வெர்ஷனில் காலடி எடுத்து வைக்கப் போகிறது. கடந்த 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த மென்பொருள், நாளை முதல் மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படுகிறது. அப்படி இதில் என்ன சிறப்புகள்தான் உள்ளது?  ஐ-போன் மீதான மக்களின் காதலை இது மேலும் அதிகரிக்குமா? பார்ப்போமே....

எளிதான பதிவிறக்கம்

பொதுவாக ஒரு ஓ.எஸ்-ல் இருந்து அடுத்த ஓஎஸ்-க்கு மாறும்போது, அது போனில் 'மெமரி ஸ்பேஸ்' எனப்படும் பயன்பாட்டு இடத்தை அதிகப்படியாக ஆக்கிரமித்துக் கொள்ளும். உதாரணமாக ஆப்பிளின் தற்போதைய வெர்ஷனான 'i-os 8' போனில் 4.58 GB இடத்தை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் தற்போதைய வெளியீடான 'i-os 9' மிகவும்

குறைவாக வெறும் 1.3 GB இடமே எடுத்துக் கொள்கிறது. இதனால் மற்ற அப்ளிகேஷன்கள் பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும். ஆப்ஸ்கள் அனைத்தும் வேகமாய் செயல்படும். ஹேங்கிங் பிரச்னைகள் இருக்காது.
 
நீண்ட பேட்டரி பயன்பாடு

i-os 9 ல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 'லோ-பேட்டரி மோட்' மூலம் பேட்டரியின் பயன்பாட்டு நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். சாதாரண மோடிலயே, i-os 8 யை விடவும் இது 40 நிமிடம் பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கிறது. லோ-பேட்டரி மோடில் வைத்து பயன்படுத்தினால் சுமார் 11 மணி நேரம் 38 நிமிடங்கள் வரை போனின் பேட்டரி வேலை செய்யும். இது i-os 8 யை விடவும் சுமார் மூன்றரை மணி நேரம் அதிகமாகும். i-os 8 பயன்படுத்தும் போனின் பேட்டரி 8 மணி நேரங்களே தாங்கும். இது i-os 9 ன் மிகப்பெரிய ஆதாயம். எந்த பழைய ஆப்பிள் போனாக இருந்தாலும் இந்த ஆபரேடிங் சிஸ்டம் அதனுடைய பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட சிரி

நாம் சொல்லும் கட்டளைக்கு இணங்கி செயல்பாடுகள் செய்யும் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட மென்பொருள்தான் இந்த சிரி. 2010 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மென்பொருள் இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. நம்மோடு பேசி நம் தேவைகளை அறிந்து செயல்படும் இம்மென்பொருள், பல மொழிகளையும் புரிந்து செயல்படக் கூடியது. இதுநாள் வரை ஒரு ரோபோ போல பேசிவந்ததற்கு இம்முறை ios_vc2.jpgமனிதக் குரல் கொடுத்துள்ளனர். இதனால் இது கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

உயிர்ப்பான திறன்(PROACTIVENESS)

    I-0S 9 ன் மிகச்சிறந்த சிறப்புகளுள் இதுவும் ஒன்று. நாம் தினசரி செய்யும் வேலைகளையும், அந்த நேரத்தையும் குறித்துக்கொள்ளும் இந்த மென்பொருள் நாம் அதை மறக்கும்போது நமக்கு நிணைவூட்டும். உதாரணமாக தினமும் மாலை நாம் 6 மணிக்கு பாடல்கள் கேட்கிறோம். ஒருநாள் நாம் மறந்து விடுகிறோம் என்றால், சரியாக 6 மணிக்கு 'இது பாடல் கேட்கும் நேரம்' என நமக்கு ஞாபகப்படுத்தும்.

பிற சிறப்புகள்

நாம் வீடியோ எடுக்கும் போது ஜூம் செய்யும் வசதியும், வீடியோவின் தரத்தை அப்போதே மாற்றிக்கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மிகப்பெரிய ஃபைல்களை சேமித்துக்கொள்ளும் கூகுள் டிரைவ் போல ஐ-க்ளௌட் டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நமக்கு தேவையான செய்திகளை மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் நியூஸ் அப்ளிகேஷனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ios_vc3.jpg ஐ-பாடை வைத்து நமது ஐ போனிற்கு வரும் தொலைபேசி அழைப்பை எடுக்கும் வகையில் மல்டிடாஸ்கிங் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தற்போது ஐ-பாடிற்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு பயன்பாடுகள் இந்த புதிய மென்பொருளில் பொதிந்துள்ளன. இத்தனை நாட்களாக இருந்த ஆப்பிள் மேப் இம்முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கூகுள் மேப் அளவிற்கு இது இன்னும் சிறப்பாய் செயல்படுவதில்லை. இது சற்று பின்னடைவாக இருந்தாலும், மற்ற மாற்றங்கள் அதை சரிகட்டிவிடும். நாளை வெளியாகும் இந்த I-OS 9 எப்படியும் ஒரே நாளில் கோடிக்கணக்கில் பதிவிறக்கம் செய்யப்படும். இதற்காக அமெரிக்கர்களும், இங்கிலாந்துகாரர்களும் மட்டுமல்ல, இந்தியர்கள் உட்பட உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த மென்பொருள், அமெரிக்க நேரப்படி நாளை இரவு 9.30 முதல் 10.30 மணிக்குள் தலைநகர் டில்லியில் வெளியாகிறது.

இதனால் பயன்படப்போவது ஐ போன் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல. ஆன்ட்ராய்டு, விண்டோஸ் பயனாளர்களும்தான். காரணம், இன்று செல்போன் உலகின் பல மாற்றங்களும் ஆப்பிள் நிறுவனத்தால் ஏற்பட்டதே. ஆப்பிளைப் பார்த்துதான் பலரும் தங்கள் மென்பொருள்களை உருவாக்குகிறார்கள், மேம்படுத்துகிறார்கள். எனவே I-OS 9 ல் உள்ள அனைத்தும் மற்ற போன்களிலும் வந்துவிடும். என்ன, சற்று தாமதம் ஆகும். காத்திருப்போமே... நல்லதற்காக காத்திருப்பதில் தவறில்லையே!

http://www.vikatan.com/news/article.php?aid=52519

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குரல் வழி கட்டளைகள் மூலம் ஆப்பிள் சாதனங்களை இயக்கும் வசதியினை தரும் அப்பிளிக்கேஷன் ஆன ஆப்பிள் Siri இன் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அண்மையில் பொதுப் பாவனைக்காக வெளியிடப்பட்ட iOS 9.1 பீட்டா பதிப்புடன் இணைத்து இந்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு குரல்களையும் இனம் கண்டு செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

குரல் வழி கட்டளைகள் மூலம் ஆப்பிள் சாதனங்களை இயக்கும் வசதியினை தரும் அப்பிளிக்கேஷன் ஆன ஆப்பிள் Siri இன் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அண்மையில் பொதுப் பாவனைக்காக வெளியிடப்பட்ட iOS 9.1 பீட்டா பதிப்புடன் இணைத்து இந்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு குரல்களையும் இனம் கண்டு செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

   

காரணம் இதற்கு முன்னை பதிப்புக்களில் பலரது குரல்களை இந்த அப்பிளிக்கேஷன் முறையாக இனம் கண்டு செயற்படாத குறை காணப்பட்டிருந்தது. இவ்வாறு ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட குரல்களை அடையாளம் காட்டுவதற்கு General > Siri > Allow ‘Hey Siri’ இனுள் உள்ள வசதியினை செயல்படுத்த வேண்டும்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=140686&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.