Jump to content

இந்தியாவால் மட்டுமே சிறிலங்காவை காப்பாற்ற முடியும் – கேணல் ஹரிகரன்


Recommended Posts

இந்தியாவால் மட்டுமே சிறிலங்காவை காப்பாற்ற முடியும் – கேணல் ஹரிகரன்

SEP 18, 2015 | 12:45by நித்தியபாரதிin கட்டுரைகள்

col-hariharan-1ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி சிறிலங்காவுக்குத் தேவைப்படுகிறது.

இவ்வாறு dailyo ஊடகத்தில் கேணல் ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதுடில்லி அரசியல் வட்டாரத்திற்கு அந்நியமானவரோ அல்லது இந்திய அரசாங்கத்தின் மத்தியில் பரீச்சயமற்ற ஒருவரோ அல்லர். எனினும், கடந்த ஒராண்டாக, ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசியலில் வரவேற்கப்படுகின்ற ஒருவராகக் காணப்படுகிறார்.

சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் அரசியலில் பெற்றுக் கொண்ட வெற்றிகளை விட இவர் சந்தித்த தோல்விகளே அதிகம். ஆனாலும் இவர் வெற்றிகரமாக தனது நாட்டில் இடம்பெறவிருந்த அரசியல் சதியை முறியடித்திருந்தார். இதனால் இவர் தற்போது பெரிதும் வரவேற்கப்படுகின்ற ஒரு அரசியற் தலைவராக இடம்பிடித்துள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உதவியுடன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டு தடவைக்கும் மேலும் அதிபராக இருக்க முடியும் என்கின்ற அரசியல் சீர்திருத்தத்தை அரசியல் சாசனத்திலிருந்து நீக்கிய பெருமை ரணில் விக்கிரமசிங்கவைச் சாரும்.

கடந்த ஜனவரியில் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச ஏழு மாதங்களின் பின்னர் தனது விசுவாசிகளின் உதவியுடன் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இதன் மூலம் மீண்டும் சிறிலங்காவின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மகிந்த முனைந்தார். ஆனாலும் இந்த முயற்சியையும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மிகவும் வெற்றிகரமாக முறியடித்தனர்.

இதன் பெறுபேறாக, கடந்த ஒரு ஆண்டு காலத்தில் இரண்டு தடவைகள் சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். பல்வேறு அரசியற் தடைகள் இருப்பினும், விக்கிரமசிங்க-சிறிசேன கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யும் விதமாக சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர். நிறைவேற்று அதிபர் கொண்டிருந்த சில அதிகாரங்கள் தற்போது நாடாளுமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளமை, பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை, ஊழல் மற்றும் மோசடி நிறைந்த நிர்வாகம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை உட்பட பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜபக்சவின் எதேச்சதிகார ஆட்சியால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் நல்லாட்சியானது தற்போது சிறிசேன-விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களாலும் மீளவும் நிலைநிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விக்கிரமசிங்க சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகின்றார். 1977 இன் பின்னர் தற்போது முதன் முறையாக, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் இணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளன. இதன்மூலம் நாட்டில் ஒற்றுமை, சமாதானம் மற்றும் அமைதி போன்ற சூழலில் அபிவிருத்தியை முன்னுரிமைப்படுத்தி தேசிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை நிறுவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் நாட்டில் பிரபலம் பெற்றிருந்த மகிந்த ராஜபக்ச அமைதியை உருவாக்குவதில் தோல்வியடைந்துள்ளார். போருக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால அமைதிச் சூழலில் தனக்கான ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதிலேயே மகிந்த ராஜபக்ச குறியாக இருந்தார்.

இதன் பெறுபேறாக, சிறிலங்காவின் சமூக-அரசியல் சூழலானது கசப்புணர்வு, விரோதப்போக்கு, அவநம்பிக்கை மற்றும் இன-மத எதிர்ப்புக்கள் மற்றும் கலவரங்களால் நாசமாக்கப்பட்டது.

சிறிலங்காவின் அரசியல் சூழலில் பரவலாக ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றிருப்பினும், அரசியல் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் ஒன்றை வரையறுப்பதற்கான வாய்ப்பை தற்போதைய அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. ஆனால் சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் தற்போது புதுடில்லிக்கான தனது சுற்றுப்பயணத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளமையானது முன்னரை விட இவருக்கு மிக அதிகளவான நம்பிக்கையை வழங்கியுள்ளது.

சிறிலங்கா மற்றும் இந்தியத் தலைவர்களுக்கிடையில் முன்னரைவிடத் தற்போது அதிகளவு தொடர்பாடல்கள் ஏற்பட்டுள்ளன. ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது நாட்டின் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலானது சீனா நோக்கிய சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது.

ஆகவே சில மாதங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுடன் அதன்மூலம் சிறிலங்காவுடன் விரிவான உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது அதனை விக்கிரமசிங்க-சிறிசேன கூட்டணி வரவேற்றதில் எவ்வித ஆச்சரியமுமில்லை.

இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட விரிசல்களை சீர்செய்வதற்கான மோடியின் விருப்பத்திற்கு விக்கிரமசிங்க-சிறிசேன கூட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியது. ஆகவே சிறிலங்காவின் பிரதமர் புதுடில்லிக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளமையானது இந்திய அரசியல் வட்டாரத்தால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. ஏனெனில் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தை விடத் தற்போதுள்ள சிறிலங்கா அரசாங்கமானது புதுடில்லியின் நம்பிக்கையை அதிகம் பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பச் செயற்படுவதற்கு விக்கிரமசிங்க மற்றும் சிறிசேன ஆகியோர் தயாராக உள்ளனர். இது சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் துணைபுரியும்.

ராஜபக்சவின் அரசாங்கத்தால் போரின் போதும் அதன்பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தியா மற்றும் மேற்குலகம் அழுத்தம் கொடுத்தபோது, அதனை முறியடிப்பதற்காக ராஜபக்ச பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொண்டார். இது இந்தியா மற்றும் மேற்குலகை எரிச்சலடையச் செய்தது.

ராஜபக்ச தனது அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காக, சிங்களத் தேசியவாதம் மற்றும் சீனாவின் தலையீட்டைப் பெரிதும் வரவேற்றார். இதேபோன்று, தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் கலந்துரையாடல்களை மகிந்த ராஜபக்ச புறந்தள்ளினார். தமிழ் மக்களின் நீண்டகால அரசியற் கோரிக்கைகளைப் பரசீலிக்காது அதனை மகிந்த ராஜபக்ச தட்டிக்கழித்தார்.

இது இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியலில் அதிகம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது இந்திய மத்திய அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தமாக இருந்தது. சிறிலங்காவுடன் வெற்றிகரமான நட்புறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டிருந்த போதும் சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளைத் தட்டிக்கழித்தமையானது இதன் உள்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்பலவீனத்தை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவிற்குள் நுழைந்து கொண்டது.

இந்தியாவின் கூட்டணி ஆட்சி முடிவடைந்துள்ள போதிலும், சிறிலங்காவில் நிலவும் இனமுரண்பாடுகள் இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லது இதன் தேசிய பாதுகாப்பு நலனிலும் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதே.

புவியியல் ரீதியாக இந்தியாவும் சிறிலங்காவும் மிகவும் நெருக்கமானவை. ஆகவே இவற்றின் தேசிய பாதுகாப்பு நலன்கள் மிகவும் பாராட்டத்தக்கவையாகும். இதுவே இவர்கள் தமக்கிடையிலான உறவைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றது.

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது இந்தியாவால் ஆதரவளிக்கப்படும் 13வது திருத்தச் சட்டத்திற்கு ஏற்ப தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும் இத்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளிடம் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களைக் கையளிப்பதானது சிறிலங்காவின் அரசியலைப் பொறுத்தளவில் மிகவும் கடினமான ஒன்றாகும்.

இந்தியா மற்றும் மேற்குலகைப் பொறுத்தளவில் ராஜபக்ச சீனாவைத் தனது நாட்டிற்குள் வரவேற்றமையானது இவற்றின் கேந்திர மூலோபாய அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியது. குறிப்பாக ராஜபக்சவின் ஆதரவுடன் இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சித்தமையானது இந்தியாவின் தேசிய நலன்களுக்கு சவாலாக எழுந்தன.

இந்திய மாக்கடலின் ஊடாக சீனா தனது கடல்சார் வர்த்தகத்தை விரிவுபடுத்தியது. அத்துடன் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் குறிப்பாக இந்திய மாக்கடலில் சீனா தனது கடற்படைத் தளத்தை நிறுவியதானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்துள்ளது.

இதற்கு ராஜபக்சவே காரணம் என்பதால் சிறிலங்காவுடனான இந்திய உறவு கடந்த சில ஆண்டுகளாக விரிவடைந்திருந்தது. தற்போது சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இவர்கள் சீனாவை விட இந்தியாவுடனேயே உறவை நீட்டித்துக் கொள்ள முனைகின்றனர்.

சிறிலங்காவைப் பொறுத்தளவில் சில விவகாரங்களில் இந்தியாவின் உதவியும் அதன் புரிந்துணர்வும் மிகவும் அவசியமானதாகும். சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது கடந்த மூன்று ஆண்டுகளாக ஆராயப்பட்டு வரும் வெள்ளியன்று இறுதி வடிவாக்கப்படவுள்ளது.

ஆகவே சிறிலங்கா மீதான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையகம் வெளியிடப்பட்ட பின்னர் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இதற்கு இந்தியாவின் உதவியும் புரிந்துணர்வும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும்.

அமெரிக்காவின் தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளது. ஆகவே சிறிலங்கா இது தொடர்பில் தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது.

அமெரிக்காவின் நகர்வானது தமிழ்நாடு, புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ள போதிலும் அனைத்துலக விசாரணைக்குப் பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்துள்ளது. இந்தவகையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியாவும் ஆதரவளிக்கும் என நம்பப்படுகிறது.

இந்தியா – சிறிலங்கா வர்த்தக உறவு இரண்டாவது விவகாரமாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது, முழுமையான பொருளாதார உடனப்பாட்டில் கைச்சாத்திடுவதற்கான கருத்தை முன்வைத்திருந்தார். இந்த உடன்பாடானது 2008ல் ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட முற்பட்ட போது சிறிலங்காவின் உள்நாட்டு வர்த்தகர்களின் எதிர்ப்பால் இது கைவிடப்பட்டது.

தற்போது சிறிலங்கா பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது. சீனாவின் கடன்களை சிறிலங்கா ஈடுகட்டுவதற்கு அனைத்துலக நாணய நிதியம் தனது பக்க ஆதரவை வழங்குவதில் பெரிதளவில் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டுள்ள சிறிலங்காவானது இந்தியாவின் கைகளை இறுகப்பற்ற வேண்டிய தேவையுள்ளது.

எனினும், வெளிப்படையாக இந்தியாவின் முழுமையான பொருளாதார உடன்பாட்டிற்கு ஆதரவளிப்பதென்பது சிறிலங்காவின் அரசியலில் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிறிலங்காப் பிரதமர் முழுமையான பொருளாதார உடன்பாடு தொடர்பாக முன்னுரிமைப்படுத்தியுள்ளதாக சிறிலங்காவின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹார்சா டீ சில்வா தெரிவித்திருந்தார்.

எதுஎவ்வாறிருப்பினும், இது போன்ற உடன்படிக்கைகளை இந்தியா போன்ற நாடுகளுடன் சிறிலங்கா மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும், ஆனாலும் கண்மூடித்தனமாக இவ்வாறான உடன்படிக்கைகளைச் செயற்படுத்தத் தொடங்கக்கூடாது எனவும் இதனை முழுமையாக ஆராய்ந்து கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு இவ்வாறான பொருளாதார உடன்படிக்கைகளில் கைச்சாத்திட வேண்டிய தேவையுள்ளதாக ஹார்சா டீ சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவுக்கு நலன் பயக்கக்கூடிய இருதரப்பு அல்லது பல்தரப்பு வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கான உந்துதல் அளிக்கப்பட வேண்டும் எனவும் பிரதி வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/18/news/9810

இவர் ஏன் ஒரு றோவின் அதிகாரியாகவிருக்கக் கூடாது?

Link to comment
Share on other sites

ஒன்றா இருந்தவர்களை ஆயுதமும் பயிற்சியும் குடுத்து அடிபட விட்டு இலங்கை எனும் அற்புத நாட்டை சீரலிச்ச நவீன வானரம்கள் கதை சொல்லுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியாவில்தான் முழுப்பிழையுமா? பிரச்சினை 1983 இலிருந்துதான் தொடங்கிச்சா?

நான் நினைச்சேன் 52-78 பல கலவரங்களில் அடி பட்டு, ஒப்பந்தங்கள் கிழிக்கப் பட்ட பின் 80 களில் இளைஞர் போராடத் தொடங்கியதாக.

இப்பதானே தெரியுது 48-83 இலங்கை ஒரு அற்புதத்தீவு எனும் சேதி ....

இந்த வரலாறு சிந்துபாத் கதையிலா வருகுது ?

Link to comment
Share on other sites

முதலில் ஒன்றை கவனிக்கவும் எந்த திரியிலும் சிறிலங்காவை தரம் தாழ்த்தி எழுதியது கிடையாது மற்றவர்களுடன் பாய்வது போல் என்னிடம் பாய வேண்டாம் .
தமிழரின் அரசியல் ஸ்திரமின்மையை வாகாக வைத்து இங்கு களத்தில் குழப்பகரமான கருத்துக்களின் உரிமையாளர்  அதுவும் லண்டனில் இந்த விடிகாலயில் பொறியில் மாட்டுபட்ட்து ஆச்சரியம் இல்லை நிதானமானது கொப்பிலக்காது உம்முடன் கொள்ளுப்பட நான் சொறிநாய் அல்ல .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் இன்னொருவனில் முதுகில் ஏறிச் சவாரி செய்யத்தான் முடியும்!

அந்த முதுகு அமெரிக்காவோ அல்லது ரசியாவோ அல்லது சீனாவோ என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

தனித்து நின்று ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

இதை எழுத்தில் கூடத் தருவேன் கேணல் ஹரி கரன்!:love:

கேட்டால் ராச தந்திரம் என்பீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாயவில்லை ஸ்பைடர். கேள்விதான் கேட்டேன்.

இந்தியா ஆயுதம் கொடுக்க முன் இலங்கை அற்புத தீவாய் இருந்தது என்பது நான் இதுவரை கேள்விப் படாதது.

அப்புறம் நீங்கள் அது இல்லை என்று விளக்கம் கொடுக்க முன்பே எனக்குத் தெரியும் நீங்கள் அது இல்லை என்று.

அவைக்கு எழுத வராது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.