Jump to content

கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு ரணிலைக் கோரும் உரிமை எவருக்கும் இல்லை – விக்கிரமபாகு


Recommended Posts

கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு ரணிலைக் கோரும் உரிமை எவருக்கும் இல்லை – விக்கிரமபாகு

SEP 18, 2015 | 14:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Vikramabahu_Karunaratne-300x200.jpgகலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நிராகரித்துள்ள புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும்படி ரணில் விக்கிரமசிங்கவைக் கோரும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ரணில் விக்கிரமசிங்க இனவாதியல்ல.  அவர் விடுதலைப் புலிகளின் தலைவருடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர். கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அவரிடம் கோரும் உரிமை எவருக்கும் இல்லை.

2005 அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். தமிழர்கள் வாக்காளிக்காததால் தான் அவர் தோல்வியடைந்தார்.

கலப்பு நீதிமன்றம் என்ற பரிந்துரை, ஜனநாயகத்துக்காக போராடிய எம்மை, இலக்கு வைத்து அவமானப்படுத்தும் செயல்.

இந்த கலப்பு நீதிமன்றம், சிலரால், ஜனவரி 8ஆம்  நாளுக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், முன்னைய காவல்துறை, நீதித்துறை தான் சிறிலங்காவில் இன்னமும் இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது.  ஜனவரி 8 புரட்சி எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தியுள்ளது.

புதிய இடதுசாரி முன்னணி, தமிழர்களின் தன்னாட்சி உரிமைகளையும், வடக்கில் போரின் போது குற்றங்கள் இழைக்கப்பட்டது என்பதையும், ஏற்றுக் கொள்கிறது.

லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, தாஜுதீன் படுகொலைகளும்  போர்க்குற்றங்களுக்குள் அடக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஆயுதப்படைகளினால், போர்க்காலத்தில் தான் இவை மேற்கொள்ளப்பட்டன.

இவை குறித்து விசாரிக்க சிறிலங்கா தமது சொந்த நீதிமன்றத்தை உருவாக்க முடியும்.

இந்தியாவைப் போன்று இந்தப் பிரச்சினையை ஒற்றையாட்சி அரசுக்குள் தீர்க்கப்பட முடியும். சமஸ்டி முறை இங்கு தேவையற்றது.

எல்லா கெரில்லா தலைவர்களும், போராளிகளும், பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை கொன்றிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடயத்தில் இது ஒன்றும் புதியதல்ல.

நெல்சன் மண்டேலா கூட வெள்ளையின மக்களையும், குடும்பங்களையும் கொலை செய்திருக்கிறார். புதிய இடதுசாரி முன்னணி வன்முறைகளைக் கண்டிக்கிறது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.puthinappalakai.net/2015/09/18/news/9817

இவர் தமிழருக்கு ஆதரவானவரா?

Link to comment
Share on other sites

கலப்பு நீதிமன்றம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். கஜேந்திரகுமார் கோரிக்கை

 

 

கலப்பு நீதிமன்றம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். கஜேந்திரகுமார் கோரிக்கை
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கலப்பு சிறப்பு நீதிமன்றத்தின் ஊடான சர்வதேச விசாரணை தொடர்பில் முழுமையான தெளிவு வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 
 
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் 
 
இலங்கை அரசாங்கமும் அவர்களை சார்ந்துள்ள கட்டமைப்புக்களும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பங்காளிகள். எனவே அவர்களிடம் அந்த அநீதிகளுக்கான விசாரணையினை ஒப்படைத்தால் அங்கே உண்மைகள் மறைக்கப்படும் என்பதே எங்கள் நிலைப்பாடாகும். 
 
இந்தக் கருத்துப்படவே ஆணையாளரும் உள்ளக விசாரணை பொறிமுறையினை நிராகரித்துள்ளார்.மேலும் இலங்கையில் கடந்த 30 வருடங்கள் நடைபெற்ற போர் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மற்றும் நீதி கட்டமைப்புக்கள் நீதியாக நம்பகத்தன்மையாக செயற்படும் என்பதில் நம்பிக்கையற்றுப் போகின்றது. என்பதை உள்ளக விசாரணையினை நாம் எதற்காக நிராகரிக்கிறோம். என்பதற்கான காரணங்களாக ஆணையாளர் குறிப்பிட்டிருக்கின்றார்.
 
அதேவேளை கலப்பு விசேட நீதிமன்றம் என்ற ஒன்றை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விடயத்தில் தெளிவின்மை காணப்படுகின்றது. 
 
எங்களை பொறுத்தமட்டில் உள்ளக விசாரணை பொறிமுறை எதற்காக நிராகரிக்கப்பட்டதோ அந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்ட அந்தக் கட்டமைப்புக்களுடன் கலந்த வகையில் ஒரு கலப்பு விசேட நீதிமன்றத்தை அமைப்பது முற்றிலும் பொருத்தமற்ற ஒன்றாகும் என்பதே எங்கள் நிலைப்பாடாகும்.
 
எனவே இந்த விடயத்தில் தெளிவுபடுத்தல் வழங்கப்படும் வரையில் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் தொடர்ந்தும் வலுவாக இருப்பது சிறப்பானதாக அமையும். 
 
தமிழக முதல்வருக்கு நன்றி.
 
தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றார். அதாவது இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே வேண்டும். என அதனை நாங்கள் வரவேற்பதுடன் தமிழக முதல்வருக்கு எங்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். 
 
மேலும் பொறுப்பு கூறல் விடயத்திலும் தமிழகத்தினால் ஒத்துழைப்புக்களை வழங்க முடியும். இதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. 
 
அதுவே எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்றது. எனவே அந்த பிரேரணை காத்திரமானதாக தமிழ் மக்களுக்கு நன்மையளிப்பதாக வருவதற்கும் தமிழகம் தமது காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்
Link to comment
Share on other sites

சனவரி 8 புரட்சியின்பின்னர் அரசியலில் அதிகாரம் கொண்ட எந்தச் சிங்கள அரசியல்வாதிகளும், தமிழர்களுடைய உரிமைப் பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்துவைப்போம் என்பதுபற்றி இன்றுவரை மறந்தும் வாய்திறக்கவில்லை. திறந்திருந்தால், அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால், தமிழர் பகுதிகளில் மைத்திரிபாலாவும், ரணில் விக்கிரமசிங்காவும் சென்ற தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றிருப்பார்கள்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.