Jump to content

கலப்பு நீதிமன்றத்துக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – ‘நியூயோர்க் ரைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்


Recommended Posts

கலப்பு நீதிமன்றத்துக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – ‘நியூயோர்க் ரைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்

SEP 19, 2015 | 1:12by நித்தியபாரதிin செய்திகள்

New-York-Timesசிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு போர்க் குற்றங்களை உள்ளடக்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கடந்த புதனன்று வெளியிட்டது. 2009ல் முடிவடைந்த இந்த உள்நாட்டு யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்கள் அனைத்தும் ‘மிகப் பயங்கரமான வன்முறைகள் மற்றும் மீறல்கள்’ என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ‘பல பத்தாண்டுகளாக சிறிலங்காவில் வன்முறைகள் மற்றும் மீறல்கள் தொடரப்பட்டுள்ளன.  இவை தொடர்பில் சிறிலங்காவால் முன்வைக்கப்பட்ட எவ்வித வாக்குறுதிகளும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் சிறிலங்காவில் பரவியுள்ள வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒருபோதும் வெற்றியளிக்காது’ என குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் இந்தக் கருத்தை சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போது மறுதலித்தார்.

‘சிறிலங்கா அரசாங்கமானது உண்மையான, நீதியான மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதுடன், இதற்கான புதிய அரசியல் யாப்பு ஒன்றையும் வரையும். இதன்மூலம் போர்க் குற்றங்களை விசாரணை செய்யப்படும்’ என சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

2009ல் சிறிலங்கா இராணுவத்தினர் மூலம் போரை முடிவிற்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு அனைத்துலக விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதன் காரணமாக 2014 மார்ச் மாதம் சிறிலங்காவின் ஒத்துழைப்பின்றி ஐ.நா தனது விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்தது.

ராஜபக்ச ஜனவரி மாதத் தேர்தலில் தோல்வியுற்றபோது, தேசிய மீளிணக்கப்பாடு மற்றும் அனைத்துலக விசாரணையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டத்தை வரைவதற்கான கால அவகாசத்தை மனித உரிமைகள் பேரவை, மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்திற்கு வழங்கியது.

சிறிலங்காவில் பரவியிருந்த இன மற்றும் மத வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதாக சிறிசேன வாக்குறுதி வழங்கினார். இம்மாதம் மூன்றாம் நாள், தமிழரான இராஜவரோதயம் சம்பந்தன், சிறிலங்கா நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். 1983 இன் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும்.

ஆனால் சிறிலங்கா வாழ் தமிழ் மக்கள் தமக்கு எதிராக தமது நாட்டு அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் இவ்வாறான மீறல்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறை ஒருபோதும் சாத்தியப்படாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது சிறிலங்கா அரசாங்கமானது உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதற்கும், குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கும், சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதற்குமான இயலுமையைக் கொண்டிருக்கவில்லை என தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்திற்குத் தலைமை தாங்கிய ஜெகத் டயஸ் மற்றும் சரத் பொன்சேகா ஆகிய இருவரும் தற்போது சிறிசேன அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்கின்றனர். சிறிசேனவின் அரசாங்கத்தின் கீழும் பல்வேறு மீறல்கள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனைத்துலக நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான ஒரு பொறிமுறையின் ஊடாக மட்டுமே போர்க் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட முடியும்.

சிறிசேனவின் அரசாங்கமானது எவ்வித கால தாமதமுமின்றி சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மொழியாக்கம் – நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2015/09/19/news/9823

Link to comment
Share on other sites

இந்த செய்தியை அமெரிக்கர்களின் நிலைப்பாடு என்று கொள்ளமுடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை அமெரிக்கர்களின் நிலைப்பாடு என்று கொள்ளமுடியுமா? 

நிச்சயமாக அமெரிக்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என கொள்ளமுடியாது,அமரிக்கா அரசின் நிலைப்பாடு எவ்வளவு விலைகொடுத்தாவது தங்களுக்கு ஆதரவு அற்ற ஆயுத குழுவை அழிக்க வேண்டும் என்பதாகும்.அமெரிக்கவின் மனித உரிமை ஆதரவாளர்களின் நிலைப்பாடு என கொள்ளமுடியும்......

Link to comment
Share on other sites

ஒன்றில் எங்களுக்கு கிடைத்திருக்கிற அரைகுறை வாய்ப்புகளின் மூலம் புத்தியாக  போராடி வாய்ப்புகளை பலப்படுத்தி விரிவாக்கி முன்னோக்கி நகர வேண்டும். எங்களால் வேறு வாய்ப்புகளை உருவாக்க முடியுமானால் மட்டும் அதை உறுதிப்படுத்திக்கொண்டு கிடைத்த வாய்ப்பை நிராகரிக்கலாம். பொறுப்பில்லாத தீவிர வாதிகள் மாற்று வாய்ப்பை உருவாக்க வக்கற்ற நிலையில் அதி தீவிரமாக கிடைத்த வாய்ப்பையும் நிராகரித்துவிட்டு விஸ்கி அருந்த போய்விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் எங்களுக்கு கிடைத்திருக்கிற அரைகுறை வாய்ப்புகளின் மூலம் புத்தியாக  போராடி வாய்ப்புகளை பலப்படுத்தி விரிவாக்கி முன்னோக்கி நகர வேண்டும். எங்களால் வேறு வாய்ப்புகளை உருவாக்க முடியுமானால் மட்டும் அதை உறுதிப்படுத்திக்கொண்டு கிடைத்த வாய்ப்பை நிராகரிக்கலாம். பொறுப்பில்லாத தீவிர வாதிகள் மாற்று வாய்ப்பை உருவாக்க வக்கற்ற நிலையில் அதி தீவிரமாக கிடைத்த வாய்ப்பையும் நிராகரித்துவிட்டு விஸ்கி அருந்த போய்விடுவார்கள்.

நீங்கள் சொல்வது உண்மைதான் ....

better than nothing

என்றும் கொள்ளலாம் இல்லையா ?

ஆனால் 
வாய்ப்பு 
வாய்ப்பு மாதிரி ஒன்று 

இரண்டையும் எப்படி இனம் காணுவது.
தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் இதுதான் எமக்கு வேண்டும் என்று எதையாவது அங்கு கேட்கிறார்களா ?
எமக்கு சொல்கிறார்கள் ..... சமஸ்டி குமச்டி என்று ....
தெற்கில் யாருடனாவது வாய் திறக்கிரார்களா ?

2012இல் யாழ்களத்தில் கூட த தே கூ விற்கு இருந்த ஆதரவு அலை ஏன் இப்போ இல்லாது போனது ? 
யார் காரணம் ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.