Jump to content

அமெரிக்காவின் உளவு அமைப்புக்கும், பேஸ்புக்கிற்கும் வித்தியாசம் இல்லை: கொதிக்கும் ஐரோப்பிய நாடுகள்


Recommended Posts

அமெரிக்காவின் உளவு அமைப்புக்கும், பேஸ்புக்கிற்கும் வித்தியாசம் இல்லை: கொதிக்கும் ஐரோப்பிய நாடுகள்

 

 லண்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜென்சி அமைப்பான என்.எஸ்.ஏ எப்படி மக்களை உளவு பார்க்கிறதோ அதேபோலத்தான் பேஸ்புக்கும் உளவு பார்ப்பதாக பெல்ஜிம் நாட்டு தனியுரிமை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. பேஸ்புக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சமூக வலைத்தளமாக மாறியுள்ளது. ஆனால், இந்த வலைத்தளம், பிறரின் ரகசியங்களை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Facebook snoops on people just like NSA: Belgian watchdog

குறிப்பாக ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளின் தனியுரிமை அமைப்புகள் இக்குற்றச்சாட்டை பலமாக முன்வைத்து வருகின்றன. பேஸ்புக்கில் கணக்கு வைக்காதோர் வெப்சைட்டில் இருந்தும் தகவல்களை அது எடுத்துக்கொள்வதாகவும், சமூக விரோத செயல்களுக்கு இது பயன்படும் என்றும் குற்றம்சாட்டி, ஐரோப்பிய யூனியனின் ஒரு நாடான பெல்ஜியத்தை சேர்ந்த, பெல்ஜியன் பிரைவசி கமிஷன் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் ஐரோப்பிய யூனியனின் சட்ட திட்டங்களை பேஸ்புக் மீறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரடெரிக் டெபுஸ்ரே, அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜென்சியான என்.எஸ்.ஏ எவ்வாறு, உலகமெங்கும் உள்ள மக்களிடம் உளவு பார்க்கிறதோ, அதேபோல பேஸ்புக்கும் உளவு பார்ப்தாக குற்றம்சாட்டி வாதிட்டார். லைக், கமெண்ட் போன்றவற்றின் மூலமாக, பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாதவர்களின் கணக்குகளும் உளவு பார்க்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். ஆனால் பேஸ்புக் இதனை தொடர்ந்து மறுத்துவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுடைய விடுப்புக்களை அறிவதில் பலருக்கும் குஷி
உளவோ பார்த்தாலும்  இழவு வந்தாலும் உந்தப்பேஸ் புக் இல்லாட்டால் கன பேருக்கு விசர் பிடிக்கும்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Denmark's EU commissioner for competition, Margrethe Vestager

இந்த டென்மார்க் அம்மாவை வீட்டுக்கு அனுப்பினால்தான் சரிபோல இருக்கு ...
அமெரிக்க கம்பனிகளை இலக்கு வைக்கிறார்கள் 
இப்போதான் கூகிளிற்கு 6 பில்லியன் டொலர் பைன் அடித்தார் 
இப்போ பேஷ்புக்
இனி ?

நாடுகள் என்றால் உளவு பார்ப்பது சகசம்தானே ........
இதில் நாம் மட்டும் விதி விலக்கா ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.