Jump to content

நாதன்


Recommended Posts

கட்டாக்காலி காலம் ஆரம்பித்திருந்தால் வயலில் கால்நடைகள் நின்றன. மதகில் கனகாலம் கடந்து நாதன் உட்கார்ந்திருந்தான். நாதனிற்கு இளமைக்காலம் இலகுவாய் இருக்கவில்லை. பள்ளி புரியவில்லை. பெறுபேறுகள் கடிவாளம் இடவுமில்லை பாதைகாட்டவுமில்லை. 

பதின்மத்தில் நாதன் இயக்கத்தில் சேர்ந்தான். சிலகாலம் இயக்கத்தில் இருந்தான். இயக்கத்திலும் நாதன் உயரவில்லை. துண்டு குடுத்து முறைப்படி விலகி வெளிநாடு சென்றான். முப்பது வருடம் கடந்து இன்று மதகில் இருக்கிறான். 

திட்டமிட்ட செயற்பாடு எதுவும் எப்போதும் நாதனிடம் இருந்திராத போதும், எதேச்சையாய் ஒருமித்த காரணிகள் அனுகூலங்களை நாதனிற்கு உருவாக்கின. பணம் பெருக்குவது நாதனிற்கு மிக இலகுவாகத் தானாக நடந்தது. அது அதுவாகப் பெருகியது. 

ஊரில் நாதனின் வீடு பெருத்த காணிக்குள் சிறுசாய் இருந்தது. நாதனின் தாத்தாவின் இருபதாவது வயதில் நாதனின் தந்தை பிறந்தார். அவரிற்கு இருபது ஆனபோது நாதன் பிறந்தான். இன்று தொண்ணூறு வயதில் தாத்தா இன்னமும் அந்தப் பூர்வீக வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தந்தை போரில் ஒரு இலக்கமாகிப்போனார்.

தாத்தா, காலத்தின் அச்சில் நேரக்குடுவையாய் மாறாதிருந்தார். நாதன் காலத்தால் எத்தி எறியப்பட்டு அதன்போக்கில் மாறியிருந்தான். தாத்தாவும் நாதனைப் போல் அதிகம் பேசுவதில்லை. பட்டிமன்றம் ஏதும் இவர்களிடையே நிகழின் அதை நாம் கேட்பது சாத்தியமில்லை.

மதகில் இருந்த நாதன் காய்ந்த கிடைச்சிக் கட்டை ஒன்றை வைத்து மண்ணில் எதையோ வரைந்து கொண்டிருந்தான். நாதனிற்கு ஒவியம் தானாக வரும். ஆனால் ஒரு படந் தன்னும் கன்வசில் அவன் வரைந்ததுமில்லைத் தான் வரைந்ததை எவரிற்கேனும் தானாகக் காட்டியதுமில்லை. கையில் வரைவதற்கு ஏற்றதாய் ஏதேனும் அகப்படின் அந்தத் தருணத்தின் அவனது மனவெளி அப்படியே அச்சொட்டாய்ப் படமாகும்.

தாத்தா காலையில் கௌப்பி சுண்டியிருந்தார். நாதனும் அதையே உண்டிருந்தான். மண் சட்டியில் விறகடுப்பில் தாத்தா வழர்க்கும் பசுவின் பால் காய்ந்து கொண்டிருந்தது. தேயிலைச் சாயமும் சீனியும் சேர்த்துத் தாத்தா கொடுத்தபோது நாதன் அதையும் பருகியிருந்தான். காலையின் சத்தங்கள், பால், மண்சட்டி, கௌப்பிச் சுண்டல் இவையெல்லாம் முப்பது வருடங்களின் முன்னர் இருந்தது போன்றே எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தன. அப்பா, அம்மா, பாட்டி தவறியிருந்தார்கள். நாதனோடு கூடப்பிறந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்தார்கள். மற்றம்படி, முப்பது வருடங்கள் கடந்ததை நாதனால் உணரமுடியாதபடி தாத்தா வீட்டின் காலை அப்படியே இருந்தது.

மதகில் இருந்து விடுக்கென்று எழுந்த நாதன், வீட்டிற்கு வந்து உடைமாற்றிப் பையினை எடுத்துக் கொண்டு கிழம்புவதற்கு ஆயத்தமாய் வெளியே வந்தான். தாத்தா வாங்கில் படுத்திருந்து பார்த்துக்கொண்டிருந்தார். நாதன், குனிந்து தாத்தாவினைத் தழுவிய பின்னர் தான் வெளிநாடு மீழ்வதாக்கக் கூறி விடைபெற்றான். 

மதகின் அருகில் நாதன் வரைந்திருந்த ஒவியம் ஏறத்தாள நான்கு சதுர அடியில் கிறுக்கல் சித்திரமாய் இருந்தது. இடமிருந்து வலமாக அந்தச் சித்திரத்தின் நகர்வு இருந்தது. ஒரு சிறுவன், பள்ளி, சிறுவனின் வளர்ச்சி, ஆயுதம் ஆயுதத்தின் மேல் ஒரு வரி எழுத்து, விமானம், தாத்தா முடிவில் ஒரு கேள்விக் குறி, கேள்விக்குறியின் கீழ் சிந்தனை நீட்சியினைக் குறிக்கும் மூன்று குற்றுகள் அதைத் தொடர்ந்து ஒரு வரி எழுத்து. ஓவியம் ஒரு சட்டத்துள் இருந்தது.

ஆயுதத்தின் மேலும் கேள்விக் குறியின் கீழும் பின்வரும் வரிகள் முறைப்படி தமிழில் இருந்தன:

“பல்லாயிரமாண்டுப் பாரம்பரியம்”
“நான்”

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்குள் இருக்கும் சூக்குமத்தை என்னளவில் புரிந்தகொண்டதன்படி கடந்த முப்பது வருடங்களில் வயதானதைத் தவிர மிச்சம் எல்லாம் அப்படியேதான் உள்ளது என்று தெரிகின்றது. அதுதானே உண்மையும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் பலவற்றை மாற்றிவிட்டது.....என்பது எனது கருத்து

Link to comment
Share on other sites

 

“பல்லாயிரமாண்டுப் பாரம்பரியம்”
“நான்”

 

எல்லா இனத்துக்கும் இது பொருந்தும் .

Link to comment
Share on other sites

காலம் நகர்கின்றது

எம் மனிதர்களும் அவர் சிந்தனைகளும் மட்டும் உறைந்து போய் கிடக்கின்றது

போராட்டமும் இவ் உறைவில் உறைந்து நகராமல் பாரம்பரியப் பொறியில் அந்த பாட்டன் போன்று ...

நாதன் முப்பது வருடங்களின் பின்னும் அந்த உறைந்து கிடக்கும் பாரம்பரியத்தினை கடக்க முடியாமல் அதை தழுவி சமரசம் கொள்கின்றான்

Link to comment
Share on other sites

நிழலி, சுபேஸ், காவலூர் கண்மணி, கிருபன், நுணாவிலான், புத்தன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. 

கிருபன் நீங்கள் கூறுவதும் சரிதான், ஆனாhல் நாதனில் மாறாதிருப்பது அவன் மாறிக்கொண்டே இருப்பது.

நிழலி, உங்கள் புரிதலை மிகவும் ரசித்தேன்—குறிப்பாகக் கடைசி வரி சொன்ன சமசரசம். 


நாதனிற்கும் அவன் தாத்தாவிற்கும் இடையேயான மௌனமான பட்டிமன்றமே “2 தர 2” பெட்டிக்குள் வரையப்பட்டிருந்த ஓவியம்—எல்லாப் பரிமாணத்திலும் இரு தெரிவுகள் பரிசீலிக்கப்பட்டன. அதனால் தான் அந்தப் பெட்டியினை நான்கு சதுர அடி என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பட்டிமன்றத்தில் ஒரு வித்தியாசம், தன்பக்கக் கருத்தை நிறுவி விடுவதற்காக முயல்வதற்குப் பதில் மற்றையவர் முன்வைக்கும் தெரிவு தனக்குப் பொருந்துமா என இரண்டு வாதிகளும் தம் வாழ்வை அதற்குள் பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ள முயன்றமையே. இறுதியில் நாதன் நிற்கவுமில்லை தாத்தா தடுக்கவுமில்லை ஆனால் தழுவல் ஆத்மார்த்தமாய் ஒரு நிரந்தர பிரியாவிடையினை உணர்ந்து நிகழ்ந்தது—ஒருவகையில் இதிலும் ஒரு சமரசம் இருக்கத் தான் செய்கிறது.

பாரம்பரியம் என்ற சொல்லு தன்நிலை நின்று உணரப்படாது ஒரு அப்ஸ்ற்றாக்ற் கருத்து நிலையாகப், புனிதமாகப் பார்க்கப்படும் தருணங்கள் உலகில் ஆயுதத்தின் தேவையினை உணர்ந்த தருணங்களாகவே காணப்படுகின்றன. மாறாது கட்டிக் காப்பது சிறந்த பெறுமதி என்ற விவாதங்கள் பலவற்றில் ஏன் மாறாதிருப்பது சிறந்தது என்ற கேள்விக்கான பதில், ஆழம் அதிகரிக்கையில் பெரும்பாலும் நிசப்த்தமாகவே இருக்கிறது.

இறுக்கமானவர்கள் அதிகம் பணம் பண்ணுவதில்லை, உத்தியோகத்தில் அதிகம் உயர்வதில்லை. இறுக்கம் நடுத்தர வர்க்கத்தின் குணவியல்பு. இறுக்கம் நடுத்தர வர்கத்தினை உருவாக்கும் காரணிகளில் ஒன்று. மாறாதிருப்பதற்கு இறுக்கமாய் இருப்பது உதவும். இறுக்கம் கிறியேற்றிவிற்றிக்கு எதிரி. இறுக்கம் தேடலின் தேவையினைக் குறைக்கும். பார்வைகளின் பரந்துபட்ட விரிதலிற்கு இறுக்கம் எதிரி.

நாதன் பள்ளியில் மிளிரவில்லை. பரீட்சைகளில் வெல்லவில்லை. இராணுவ கட்டமைப்பிற்குள் உயரவில்லை. திட்டமிட்டு செயற்படுவது நாதனிற்குத் தெரியவில்லை. அதனால் நாதனின் வாழ்வு, ஏற்கனவே போடப்பட்ட பாதையில் கடிவாளமிடப்பட்ட நகர்வாக இருக்கவில்லை. இருந்த பாதைகளில் பயணிக்கும் தகுதி தவறியதால் நிரந்தரமின்றித் தோன்றி மறைந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் பாதைகளின் இருப்பும் சாத்தியங்களும் நாதனிற்குப் புலப்பட்டது. பிறந்த பாரம்பரியத்திற்குள் சாத்தியப்படாத தேர்வுகள் வெளியே கிடைத்தன. இதனால், அன்பு பிணைப்பு முதலியனவெல்லாம் தான் பிறந்த வீட்டோடு நாதனிற்கு இருந்தபோதும் அவன் தானாக உணர்ந்தது வீட்டிற்கு வெளியே தான். 

நேற்றோடு இன்றையினை ஒப்பிடுவதும், நாளையினை இன்றையோடு ஒத்துப்போகும்படி திட்டமிடுவதும் மாறதிருப்பதற்கு அவசியம். ஒருவகையில் பாரம்பரியமும் இப்படித்தான். தாத்தாவிற்கு அது இயல்பு, நாதனிற்குப் புரியாத புதிர்.

நுணாவிலான் கூறியதைப் போல அனைத்து இனங்களிற்கும் இது பொருந்தும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80,90 வருடங்களுக்கு முன்னர் பிறந்தவர்கள் இன்னும் வாழ்க்கையை அனுபவித்துத் தான் வாழ்கின்றார்கள். அதற்குப் பின்னர் பிறந்தவர்கள் தான் வாழ்க்கையை கொஞ்சம்,கொஞ்சமாக தொலைத்துத் கொள்கிறார்கள் என எடுத்துக் கொள்ளமாமா?

Link to comment
Share on other sites

சிந்திக்கத் தூண்டும் பதிவிற்கு நன்றி. 

ஒரு உதராணம். 90 ம் ஆண்டுவரையில் அரசியல் பொறுப்பாளராக இருந்த ஒருவர் வரதட்சணை உட்பட்ட பல சமூகப் பிரச்சனைகளுக்கான விளிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்டார். பின்னர் துண்டுகொடுத்து விலத்தியதும் நல்ல வரதட்சணையுடன் கூடிய பெண்ணை தேடி திருமணமும் செய்துகொண்டார். இப்படி பல உதராணங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. பாரம்பரியத்தின் பெரும்பங்கும் சுரண்டலும் சுயநலத்திலும் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இறுக்கமும் இவ்வாறான பாரம்பரியத்தை கட்டிக்காப்பற்றுவதிலேயே பெரும் பங்கை கொண்டுள்ளது. வெளிநாட்டு வாழ்வை தனியே இனப்பிரச்சனை மட்டும் தீர்மானிக்கவில்லை ஒருவன் உழைப்பில் என்னுமொருவன் வாழ முற்படும் அடிப்படைஇயக்கமும் சேர்ந்தே தீர்மானிக்கின்றது. அதை தியாகம் மற்றும் குடும்பப் பொறுப்பு என வேறுவிதமான புரிதலுக்குள் நகர்த்திவிடுகின்றோம். எவ்வாறு தனிமனித இயக்கத்தில் இந்த சுழற்ச்சி நடக்கின்றதோ அவ்வாறே போராட்ட சூழலும் என்னுமொருவன் தியாகத்தில் சுதந்திரமடைய முற்படும் தன்மையும் இருந்தது. மாற்ற முடியாத இந்த பாரம்பரியமும் அதைச் சுற்றிய இறுக்கமும் ஒட்டுமொத்தமாக எல்லாவிதமான இனம் சமூகம் சார்ந்த அடயாளத்தையும் மெல்லமெல்ல உணவாக்கிக்கொள்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய வளவு  சிறிய வீடு. போதிய உழைப்பின்றியே வந்து சேரும் பணம். தன்னை மட்டுமே எண்ணும் சுயநலம். ( இல்லையெனில் 90 வயதிலும் பால் காய்ச்சித்தரும் தாத்தாவுக்கு இன்னும் ஒருசில வருடங்கள் உதவியாய் இருந்திருக்கலாம்) அவன் பிரிவதைத் தடுக்காத தாத்தா. அத் தலைமுறைக்கேயுரிய மிடுக்கு, பாரம்பரியத்துள் சிக்காமல் இந்த உலகில் அடுத்த சுவாரசியங்களைத் தேடிப் பயணிக்கும் ஒரு கலைஞனின் மனம்...!

Link to comment
Share on other sites

நன்றி சேவயர், நந்தன், ரதி, சண்டமாருதன், சுவி. 

சிரிய அகதிகள் சார்ந்து நம்மவர்கள் மத்தியில் பரவலான விவாதங்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. பலரிற்குப் பழைய ஞாபகங்களைக் கிழறிப்போடும் நிகழ்வாக சிரிய அகதிகள் விவகாரம் இருக்கிறது. இருப்பினும் இந்த விவாதங்களும் கூட முழுமையானதாக இல்லையோ என்றே தோன்றுகின்றது.

எதனால் பல புராதன பாரம்பரியங்களிற்கு, மேற்கு கவர்ச்சிகரமானதாக இருக்கிறது என்ற முனை பலநேரங்களில் பொருளாதாரம் என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளப்படுகிறது.  மேற்கு தனது வாழ்வுமுறை சிறந்ததது என்பதை திணிக்கும் ஊடக உத்திகளை ஏராளம் செய்கிறது—ஆசைகளை அளவின்றி விதைக்கிறது. அந்த வகையில், மேற்கு பற்றிய பட்டறிவு இன்றி, கேழ்விப்பட்டதை மட்டும் வைத்து மேற்கு வர விரும்புவோரின் காரணங்கள் சிலவாக இருக்கலாம். ஆனால், மேற்கிற்கு வந்து பலகாலம் வாழ்ந்ததன் பின்னர் தமது பூர்விக நிலங்களிற்கு மீழ்தல் என்பது பலரிற்கு சிக்லானதாக இருக்கிறது. ஊர் மீளல் என்ற முனையில் தான் பாரம்பரியம் சார்ந்த முழுமையான விவாதம் கைப்படும். ஊர் மீளத் தயங்கும் குழந்தைகள் சார்ந்து ஏன் மக்கள் வெளியேறத் துடிக்கிறார்கள் என்பது முழுமையாகப் புரிந்து கொள்ளப்படலாம். 

வீட்டுக்குத் திரும்புவதற்குத் தயங்கும் ஒரு குழந்தை சார்ந்து வீடு பார்க்கப்பட வேண்டும். இது எமது பாரம்பரியத்திற்கு மட்டுமேயான பிரச்சினை அல்ல. உண்மையில் தற்போது, ஓர்ஹான் பாமுக் என்ற துருக்கிய எழுத்தாளரின் ‘சைலன்ற் கவுஸ் (நிசப்த்த வீடு)’ என்ற நாவலினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சிரிய அகதிகள் மற்றும் மேற்படி நாவல் சார்ந்து தான் இந்தச் சிறுகதை எழுதத் தோன்றியது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு தனது வாழ்வுமுறை சிறந்ததது என்பதை திணிக்கும் ஊடக உத்திகளை ஏராளம் செய்கிறது—ஆசைகளை அளவின்றி விதைக்கிறது.
 

சகல மனித மனமும் வசதியான வாழ்க்கை வாழத்தான் ஏங்குகிறது,மேற்குலகையும் அதன் ஊடகத்தின் மூலம் இந்த ஆசைகள் வருகின்றது என சொல்ல முடியாது.காந்தீய மக்கள் இன்று மேற்குலக வாழ்க்கையை விரும்புகின்றார்கள்,சீனா,ரஸ்யா ,கியுபா போன்ற நாடுகளில் புரட்சிகள் மூலம் மக்களை மாற்றினார்கள் ஆனால் அந்த மக்களின் அடுத்த பரம்பரை வசதியான வாழ்க்கையை தெடுகிறார்கள்.மதங்களை தீவிரமாக பின்பற்றும் மக்களும் பலர் மரணத்தின் பின்பு சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள்.அதற்காக இறைபக்தியை கண்மூடித்தனமாக பின்பற்றுவோரும் உண்டு.

 

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டுக்கு பலர் இரையகின்றார்கள் என்று அறிந்தும் அமெரிக்காவுக்கு செல்வதற்கு பலர் போட்டி போடுகிறார்கள்....ஏன் என்ற கேள்வி எழுகின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.