Jump to content

மடை திறந்தது-யோகி பியின் தமிழ் HIPHOP


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தனித்துவ இசைப் பாரம்பரியமும்..பாரம்பரிய இசை வடிவங்களும் கருவிகளும்..

யாழ் எனும் இழை வாத்தியக் கருவியும் முரசு எனும் தோல் வாத்தியக் கருவியும் புல்லாங்குழல் எனும் துளை அல்லது காற்று வாத்தியக் கருவியும் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளில் அடங்கி இருந்திருக்கின்றன...( சிலப் பதிகாரம் இந்த வகையை 5 தாக்கி இருக்கிறது...கீழே உள்ள ஆங்கிலக் கட்டுரையை வாசியுங்கள்..) இன்றும் உலகின் வாத்தியக் கருவிகள் அடிப்படையில் இந்த மூன்று பிரிவுகளுக்குள் தான் அடக்கப்படுகின்றன. இலத்திரனியல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட பின்னும் அடிப்படைகள் என்னவோ மாறியதில்லை.

யாழின் வகைகளில் சில கீழே...! யாழ் இன்று வழமை இழந்து நிற்கிறது...மியூசியத்தில் காட்சிப் பொருளாகி நிற்கிறது..இந்த நிலை நாளை எமது இசை வடிவங்களுக்கும் வரும் என்பது நிச்சயம். தமிழர்கள் காப்பிலிகளின் தோற்றுவாய்கள் என்று சொல்ல தமிழர்களின் பாரம்பரிய இசையாக தூசண ராப் கருத்தில் எடுக்கப்படும் காலமும் இன்னும் 100 ஆண்டுகளில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சுயம் விரும்பாத சுதேசிய வெறுப்புணர்வும் தாழ்மை உணர்வும் இருக்கும் வரை தமிழர்கள் பாரம்பரியம் காப்பார்கள் என்றில்லை. பாரம்பரியத்தையே கட்டிக் கொண்டு கிடவுங்கள் என்று சொல்லவில்லை..பாரம்பரியத்தை நவீனத்தோடு கலந்து தனித்துவத்தைக் காப்பாற்றுங்கள் என்பதே வேண்டப்படுகிறது..! அதைச் சிந்தித்து செய்ய வேண்டிய இளைய சமூகம்..கொப்பி பண்ணுதல் எனும் இலகுவான வழியில் தன்னை ஈடுபடுத்தி பாரம்பரிய அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது மட்டுமன்றி இனத்தையே கேவலப்படுத்திக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயமே..!

அடுத்தவருக்காக படைக்கப்படும் ராப் என்பது வேறு எமக்காக படைக்கப்படும் ராப் என்பது வேறு. எமது கருத்துக்களை ராப் இசை மூலம் ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் அவர்களின் பாணியில் சொல்லுவது ஒரு முறையாக கருத்தில் கொள்ளப்பட்டாலும்..அதையே தமிழர்களின் மத்தியில் ஆதிக்கம் உள்ளதாக தமிழர்களுக்கு உகந்ததாக பின்பற்றுதல்..காட்டுதல்.. தவறான விடயம்..! வழிகாட்டுதல் இன்றி திக்குத்திசை தெரியாது பயணிக்கும் இளைஞர்களே சிந்தியுங்கள்.....

makarayazhie3.jpg

மகர யாழ்

mayilyazhef0.jpg

மயில் யாழ்

vilyazhwr4.jpg

வில் யாழ்

உதவி..

http://www.answers.com/topic/ancient-tamil-music

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply

இவை கர்நாடக சங்கீதத்துக்கு உரியவை. திராவிடத்துக்குச் சொந்தமானவை. இந்த ராகங்களைப் பெயரிட்டது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்தது. அதனால்தான் வடமொழியின் தாக்கம் உள்ளது. தமிழர்கள் திராவிடர்கள் என்பதால் இது எமக்கும் சொந்தமான இசையே.

இங்கே முதலில் தமிழிசை என்றால் என்ன என்று வரையறை செய்தால் நல்லது.

தமிழில் பாடப்படுவதையே நான் தமிழிசை என்பேன்.மற்றவை தமிழரினிசை அல்ல.தெலுங்குக் கீர்த்தனங்கள் தமிழிசை ஆக முடியாது.தமிழிசைக்கென நடக்கும் இயக்கம்பற்றி அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்து இசையின் வடிவம்.இதைப் பற்றித் தான் நான் சொல்லி உள்ளேன்.உலகில் பல்வேறு இசைவடிவங்களுள்ளன.தமிழிலும் உள்ளன.புதிய இசைவடிவங்கள் பல்வேறு சூழல்களால் உருவாகி உள்ளன.குடியிபெயர்தலின் போதோ அன்றி படயெடுப்புக்களின் போதோ ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்திற்கு இந்த இசை வடிவங்கள் குடி பெயர்ந்தன.இன்றைய இணைய உலகில் இந்த குடிப் பரம்பல் இல்லாமலே இசை இணயம் வழியாகவோ அன்றி தொலைக் காட்சி வழியாகவோ ஊடுரூவி விடுகிறது.இவ்வாறான நிலையில் எந்த இசை வடிவம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாம் அணை கட்டி விட முடியாது.கறுப்பினத்தவரால் உருவாக்கப்பட்ட ரப் இசை தமிழ் இழஞர்களை மட்டும் அல்ல கீழ்த்தட்டு வெள்ளை இளஞர்களையும் ஆட்கொண்டுள்ளது.அது ஏன் என்பது சமூகவியல் ஆய்வுக்கு உட்பட்டது. நானிங்கே எனது விருப்பத்தை கூற வரவில்லை, எவரும் தமது சொந்த விருப்பங்களை இன்னொருவர் மீது திணித்து விட முடியாது.எமது சமூகத்தில் சூழலில் நடப்பதைத் தான் கூற விரும்புகிறேன்.இப்படியான நிலையில் நாம் நூதன சாலையில் எம்மாலையே அனுப்பட்டுள்ள யாழை மீட்டுங்கள் என்பது வெறும் கற்பனவாதமாகவே இருக்கும். நான் சொல்வது இந்த இளஞர்களின் இந்த ஈடுபாட்டை சரியான திசையில் நெறிப்படுத வேண்டுமாயின், நாம் இசை வடிவத்தை உள்வாங்கி அதனை தமிசையாக உருமாற்று வதை வரவேற்பதே நடை பெறக்கூடிய காரியம் என்று.

கர்னாடக இசையிலிருந்து, மெல்லிசை ,பின்னர் திரை இசை, கலப்பிசை (fusion) என்று உருவானதை போல, அடுத்த கட்டம் தமிழ் ரப்பாக இருப்பதில் என்ன பிரச்சினை.அந்த வகையில் யோகி பி மற்றும் நற்சத்திராவின் படைப்பு ஒரு புதிய திசையை புல இளஞர்களுக்குக் காட்டி உள்ளது.இதனை காப்பிலி என்று பரிகசிப்பதால் நாம் இன்னும் இன்னும் இவர்களை அன்னியப் படுத்தப் போகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பொப் டிஸ்கோ எல்லாம் ஆடி முடித்து விட்டுத்தான் இப்போ ராப் க்கு தாவியுள்ளனர். அதுவும் தூசண ராப். தாவுவதால் இசை வளர்க்கப்படுகிறது என்பது தவறு. இதை இப்படியே அனுமதிப்பின் இன்னும் ஒரு 20 ஆண்டுகளின் பின் ராப் புலம்பெயர்ந்த இடத்தில் இருந்து தாயகத்தில் போய் நின்றாலும் ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கப் போவதில்லை. கவலை என்பது எமது பாரம்பரிய இசைக்கருவிகள் மேற்கத்தேய நவீன இசைக் கருவிகளின் ஆக்கத்தோடு வழக்கழிந்து போனது போல..( புல்லாங்குழல் மேற்கிலும் விற்கப்படுகிறது..வாசிக்கப்பட

Link to comment
Share on other sites

இங்கே முதலில் தமிழிசை என்றால் என்ன என்று வரையறை செய்தால் நல்லது.

தமிழில் பாடப்படுவதையே நான் தமிழிசை என்பேன்.மற்றவை தமிழரினிசை அல்ல.தெலுங்குக் கீர்த்தனங்கள் தமிழிசை ஆக முடியாது.தமிழிசைக்கென நடக்கும் இயக்கம்பற்றி அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

தமிழிசை பண்ணை அடிப்படையாகக் கொண்டது. இதுபோன்ற அடிப்படைகளிலிருந்துதான் கர்நாடக இசை உருவாகியது என்று சொல்லப்படுகிறது.

http://en.wikipedia.org/wiki/Pann

http://en.wikipedia.org/wiki/Carnatic_music

இதிலிருந்து ஒரு செய்தி:

"Ancient South Indian music had certain classical music concepts that Carnatic Music is believed to have inherited. The concept of Pann in Ancient Tamil music is related to Ragas used in Carnatic music. The rhythmic meters found in ancient religious literature resemble the talas that are in use today"

கர்நாடக சங்கீதம் தமிழுக்கு மட்டும் சொந்தமெனக் கொள்ள முடியாது. அதற்காக் தமிழருக்குச் சம்பந்தமில்லாதது என்றும் விட்டுவிட முடியாது. தெலுங்கில் கீர்த்தனைகள் இயற்றப்பட்டது ஒரு பாரம்பரியத்துக்காக. பல கீர்த்தனைகள் தெலுங்கில் தஞ்சை தியாகைய்யர் (தமிழர்) போன்றவர்களால் இயற்றப்பட்டன.

Link to comment
Share on other sites

இன்றைய இணைய உலகில் இந்த குடிப் பரம்பல் இல்லாமலே இசை இணயம் வழியாகவோ அன்றி தொலைக் காட்சி வழியாகவோ ஊடுரூவி விடுகிறது.இவ்வாறான நிலையில் எந்த இசை வடிவம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாம் அணை கட்டி விட முடியாது.கறுப்பினத்தவரால் உருவாக்கப்பட்ட ரப் இசை தமிழ் இழஞர்களை மட்டும் அல்ல கீழ்த்தட்டு வெள்ளை இளஞர்களையும் ஆட்கொண்டுள்ளது.அது ஏன் என்பது சமூகவியல் ஆய்வுக்கு உட்பட்டது. நானிங்கே எனது விருப்பத்தை கூற வரவில்லை, எவரும் தமது சொந்த விருப்பங்களை இன்னொருவர் மீது திணித்து விட முடியாது.எமது சமூகத்தில் சூழலில் நடப்பதைத் தான் கூற விரும்புகிறேன்.இப்படியான நிலையில் நாம் நூதன சாலையில் எம்மாலையே அனுப்பட்டுள்ள யாழை மீட்டுங்கள் என்பது வெறும் கற்பனவாதமாகவே இருக்கும். நான் சொல்வது இந்த இளஞர்களின் இந்த ஈடுபாட்டை சரியான திசையில் நெறிப்படுத வேண்டுமாயின், நாம் இசை வடிவத்தை உள்வாங்கி அதனை தமிசையாக உருமாற்று வதை வரவேற்பதே நடை பெறக்கூடிய காரியம் என்று.

கர்னாடக இசையிலிருந்து, மெல்லிசை ,பின்னர் திரை இசை, கலப்பிசை (fusion) என்று உருவானதை போல, அடுத்த கட்டம் தமிழ் ரப்பாக இருப்பதில் என்ன பிரச்சினை.அந்த வகையில் யோகி பி மற்றும் நற்சத்திராவின் படைப்பு ஒரு புதிய திசையை புல இளஞர்களுக்குக் காட்டி உள்ளது.இதனை காப்பிலி என்று பரிகசிப்பதால் நாம் இன்னும் இன்னும் இவர்களை அன்னியப் படுத்தப் போகிறோம்.

ஒரு அறிவார்ந்த இனம் எப்போதும் தன் சுய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது. அப்படியாயின் நம் அடுத்த தலைமுறை புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழே தெரியாமல் வளர்கிறதே? அதில் உமக்கு உடன்பாடுதானா? எத்தகைய திணிப்புகள் இருப்பினும் நம் பாரம்பரியத்தைவிட்டுக்கொடுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராப்பும் மண்ணாங்கட்டியும்.. கனடாக் காரங்கள் சொன்னவங்கள்.. விஜயின்ர குத்தாட்ட பாட்டுக்கு ஆடச் சொல்லி.. எங்கடை தமிழ்ப் பெடியங்கள் உந்த தூசணப் பாட்டுக்களுக்கு ஆடாமல் என்னாத்தை சொல்வேனுங்கோ.. வடு மாங்கா ஊறுதுங்கோ.. எண்ட பாட்டுகளுக்கு ஆடினாங்கள் எண்டால் அதில ஒரு நியாயம் இருக்கும். அல்லது ஒரு வேட்டியைக் கொடுக்காக கட்டி ஆடினாங்கள் எண்டால் அது எங்கடை பண்பாட்டையும் வளத்தது போல கிடக்கும்.. பாத்தியள் எண்டால் அதில விஜய் வேட்டி கட்டிதான் ஆடினாவர். அட உங்கம்மா உங்கம்மா எம்மை சேத்து வைப்பாளா.. அட அட அட..

இந்த கருத்துக்கு நான் பதிலெதுவையும் எதிர்பாக்க வில்லை. ஏனெண்டால் கொடுக்கை கட்டினவர் அவ்வளவு சீக்கிரத்தில இறக்க மாட்டார். மறை கழண்டதுகளுக்கு பதில் சொல்லுற எல்லாருமே மறை கழண்டவை எண்டொரு புதிய விதி இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழ் தட்டு வர்க்கம் எண்டது அதிகாரத்தின் கீழ் அடக்கு முறைகளினால் அல்லல் படுகிறார்களே அவர்கள் தான்.

வெள்ளைக்காரன் மாதிரி உடுப்பு போட்டுக்கொண்டு.. சிங் இந்த சோங்.. சொய்ங்:. எண்டு பாடினால்.. அதில ஒரு மரியாதை எண்டு எண்ணுறவை.. இன்னமும் வெள்ளை நாயை எசமானா கும்பிடுறவைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராப்பும் மண்ணாங்கட்டியும்.. கனடாக் காரங்கள் சொன்னவங்கள்.. விஜயின்ர குத்தாட்ட பாட்டுக்கு ஆடச் சொல்லி.. எங்கடை தமிழ்ப் பெடியங்கள் உந்த தூசணப் பாட்டுக்களுக்கு ஆடாமல் என்னாத்தை சொல்வேனுங்கோ.. வடு மாங்கா ஊறுதுங்கோ.. எண்ட பாட்டுகளுக்கு ஆடினாங்கள் எண்டால் அதில ஒரு நியாயம் இருக்கும். அல்லது ஒரு வேட்டியைக் கொடுக்காக கட்டி ஆடினாங்கள் எண்டால் அது எங்கடை பண்பாட்டையும் வளத்தது போல கிடக்கும்.. பாத்தியள் எண்டால் அதில விஜய் வேட்டி கட்டிதான் ஆடினாவர். அட உங்கம்மா உங்கம்மா எம்மை சேத்து வைப்பாளா.. அட அட அட..

இந்த கருத்துக்கு நான் பதிலெதுவையும் எதிர்பாக்க வில்லை. ஏனெண்டால் கொடுக்கை கட்டினவர் அவ்வளவு சீக்கிரத்தில இறக்க மாட்டார். மறை கழண்டதுகளுக்கு பதில் சொல்லுற எல்லாருமே மறை கழண்டவை எண்டொரு புதிய விதி இருக்கு

பேசாமல் காவடி ஆட்டம் ஆடித்தான் பாருங்கோவன்..ராப்பை வெண்டிடுவியள். ஆக உங்களுக்கு அடுத்தவையைப் போல நடிக்காட்டி உங்கள அடுத்தவை மதிக்காயினம் என்ற தாழ்வுமனப்பான்மை இருக்கும் வரை நீங்கள் தனித்துவம் பேண முடியாது.

எங்கையோ கனடாவில இருந்த வந்த காப்பிலி கூட... அட இவங்க கூட கொஞ்சம் தங்கட ஸ்ரைலுக்கு செய்யுறாங்கள் எங்கடைய விட வித்தியாசமா என்றுதான் விஜயின் குத்தாட்டத்தைப் பார்க்கிறானே தவிர..எவருமே அதுதான் தமிழரின் இசை வடிவம் என்று சொல்லேல்ல. அது அடுத்தவர முழுசாக் கொப்பி பண்ணாமல் இந்திய சினிமாக்குரிய தனித்துவ முறையில இருக்கிறதால அவங்கள் அப்படிச் சொன்னாங்கள். அதைக் கூட புரிஞ்சுக்க நேரம் எடுக்க முடியாம கருத்து எழுதிற அளவுக்கு எங்கட ஆக்களுக்கு புத்தியும் கீழதான் போயிட்டு இருக்குது..!

ராப் கூத்தென்று காப்பிலியாட்டம் போடுறது காப்பிலிக்கே நக்கலா இருக்கேக்க..நம்மாக்கள் சிலர் பேஷ் பேஷ் சோக்கா இருக்கு என்றிட்டு இருக்கினம். இவைக்குத் தேவை அப்படி ஒரு கூட்டம் இருந்தால் தானே தங்களை பெருமைப்படுத்த அவையை உதாரணத்துக்கு இழுக்க முடியும்..என்னே சிந்தனை..சுதேசியப் பற்று..! :P :lol:

சுயமாத்தான் படைக்க முடியல்ல..அற்லீஸ் இப்படியாவது... கொஞ்சம் ...என்றாலும்..அடையாளத்தையாவது காட்டலாமே...

வேட்டி கட்டி ஆட்டம்..

ராப் மிக்ஸ் பண்ணி வந்த ஒரு வித்தியாசமான வடிவம்...

http://www.youtube.com/watch?v=n9XxYlxreWk&NR

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாக்காரனின்ரை கதையை கேட்டு குத்தாட்டம் போடுற ஒரு சிவகாசி இவர். இது மாதிரி கலையள் தான் வளரோணும்

http://www.youtube.com/watch?v=wirvw8XrYnY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாக்காரனின்ரை கதையை கேட்டு குத்தாட்டம் போடுற ஒரு சிவகாசி இவர். இது மாதிரி கலையள் தான் வளரோணும்

http://www.youtube.com/watch?v=wirvw8XrYnY

அற்லீஸ் தமிழன் தமிழனைக் கொப்பி பண்ணினான் என்றாவது கொள்ளலாம். இது காப்பிலி போலவே ஆடனும் பாடனும்..உடுக்கனும் என்றது..வெட்கக் கேடானது.

இது தமிழர் கலை என்று யாரும் சொல்லேல்ல..ஆனால் அடுத்தவையின்ரையை கொப்பி பண்ணாம சிவகாசில உள்ள கிரியேட்டிவிற்றியை கொப்பி பண்ணினது...அடுத்தவன் பார்த்து நக்கலடிக்கக் கூடிய அளவுக்கு இடமளிக்கேல்ல...அப்படி அடிச்சாலும் தமிழன் தான் அடிக்க வேணும்...! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் கர்நாடக சங்கீத்தை இரவல் வாங்கலாம்.. என்னெண்டே விளங்காத மொழியில கீர்த்தனையள் பாடினால் துடையைத் தட்டிக் கேட்பினம்.. பேஸ் பேஸ் ரொம்ப நண்ணாயிருக்கு எண்டு..

கறுப்பின இசையைப் படித்தால் கத்த தொடங்கி விடுவினம். இனி யாரும் சங்கீத சபாக்களில புரியாத மொழியில கீத்தனை அது இது எண்டு பாடட்டும்.. கல்லால எறியோணும்.

கொப்பி பண்ணுறதிலையும் சட்டம் இருக்குதாம்.. விஜய் ஆடினது ஏதோ தமிழரின்ர பாரம்பரிய ஆட்டம் தானே.. தமிழரை தமிழன் கொப்பி பண்ணினானாம்.

வெள்ளைக்காரன் மாதிரி உடுப்பு போடுவினம்.. ஏனெண்டால் அடிமைச் சேவகம் செய்த புத்தி.. அதை பிழை எண்டு சொல்லாது. ஆனால் கறுப்பினத்தவன் மாதிரி உடுப்பு போடக் கூடாதாம். உது சாதித் தடிப்பில உருவாகி இனத்தடிப்பில வந்து நிக்குது. கலரில எஙஇகளை விட பெரியாக்கள் எண்டு நினைச்சுக் கொண்டு வெள்ளையளின்ர சப்பாத்தை நக்கிறது.. குறைஞ்சவை எண்டு எட்டி உதைக்கிறது.

சிவகாசியில கிரியேட்டிவ்.. பேரரசுவுக்கு சொல்லும்.. சந்தோசப்படுவர்.

கழண்ட கேசுகளோடை (காப்பிரிகள் மாதிரி இதுவும் ஒரு குறிச்சொல்) கதைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் கர்நாடக சங்கீத்தை இரவல் வாங்கலாம்.. என்னெண்டே விளங்காத மொழியில கீர்த்தனையள் பாடினால் துடையைத் தட்டிக் கேட்பினம்.. பேஸ் பேஸ் ரொம்ப நண்ணாயிருக்கு எண்டு..

தமிழிலும் நிறையக் கீர்த்தனைகள் இருக்குங்கோ.நீங்கள் கேட்டதில்லையே. அதுபோக பல பிறமொழிக் கீர்த்தனைகள் தமிழர்களால் அம்மொழிக்காகப் பாடப்பட்டவையும் கூட..!

கறுப்பின இசையைப் படித்தால் கத்த தொடங்கி விடுவினம். இனி யாரும் சங்கீத சபாக்களில புரியாத மொழியில கீத்தனை அது இது எண்டு பாடட்டும்.. கல்லால எறியோணும்.

தமிழில் கீர்த்தனைகள் பாடப்படுவது இப்போ பொதுவாகி விட்டது. பலரும் அதை உணர்ந்து செயற்படுகின்றனர்.

கொப்பி பண்ணுறதிலையும் சட்டம் இருக்குதாம்.. விஜய் ஆடினது ஏதோ தமிழரின்ர பாரம்பரிய ஆட்டம் தானே.. தமிழரை தமிழன் கொப்பி பண்ணினானாம்.

தமிழனின் ஆட்டமோ இல்லையோ தென்னிந்திய திரைத் தமிழன்ர கிறியேட்டிவிற்றிவ் ... ஒரு தனித் தன்மை இருக்குது அடுத்தவையின்ர ஆட்டத்திலிருந்தும்..வேறுபடுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் ஆட்டமோ இல்லையோ தென்னிந்திய திரைத் தமிழன்ர கிறியேட்டிவிற்றிவ்...

இதில இந்த தென்னிந்திய கிறியேட்டிவ் காறர் ஆரையாம் கொப்பி பண்ணகினம்..

http://www.youtube.com/watch?v=_MlHZOfZKVc

Link to comment
Share on other sites

வாதிட்டு களைச்சிருப்பியள்.... ஒரு ரிலாக்சுக்கு இதையும் பாருங்களேன்

லம்படா டான்ஸ் போட்டு கலக்கினம்

Link to comment
Share on other sites

தமிழன் கர்நாடக சங்கீத்தை இரவல் வாங்கலாம்.. என்னெண்டே விளங்காத மொழியில கீர்த்தனையள் பாடினால் துடையைத் தட்டிக் கேட்பினம்.. பேஸ் பேஸ் ரொம்ப நண்ணாயிருக்கு எண்டு..

தமிழன் கர்நாடக சங்கீதத்தை இரவல் வாங்கவில்லை. தமிழ் பண்ணை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த கர்நாடக சங்கீதம்.

http://en.wikipedia.org/wiki/Carnatic_music

தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடுவதைக் கேட்க ஒரு மிகக்குறைந்த கூட்டமே உள்ளது. அதைப் பொதுவாகக் கேட்பவர்கள் யாரென்று நீரே குறிப்பால் உணர்த்தியுள்ளீர். (பேஸ் பேஸ் ரொம்ப நண்ணாயிருக்கு எண்டு.. ) :P

கறுப்பின இசையைப் படித்தால் கத்த தொடங்கி விடுவினம். இனி யாரும் சங்கீத சபாக்களில புரியாத மொழியில கீத்தனை அது இது எண்டு பாடட்டும்.. கல்லால எறியோணும்.

சங்கீத சபாக்களில பாட்டுக் கேட்கிறது பெரும்பாலும் ரிட்டையர்ட் ஆன கிழ போல்ட்டுகள். அவங்கள்மேல் ஏன் இவ்வளவு காண்டு? விட்டுடுங்களேன். :P

கறுப்பின இசையோடு சேர்ந்து வருவது புகை, போதை, மது மற்றும் மாது.

வெள்ளைக்காரன் மாதிரி உடுப்பு போடுவினம்.. ஏனெண்டால் அடிமைச் சேவகம் செய்த புத்தி.. அதை பிழை எண்டு சொல்லாது. ஆனால் கறுப்பினத்தவன் மாதிரி உடுப்பு போடக் கூடாதாம். உது சாதித் தடிப்பில உருவாகி இனத்தடிப்பில வந்து நிக்குது. கலரில எஙஇகளை விட பெரியாக்கள் எண்டு நினைச்சுக் கொண்டு வெள்ளையளின்ர சப்பாத்தை நக்கிறது.. குறைஞ்சவை எண்டு எட்டி உதைக்கிறது.

கனடாவில் வேட்டி கட்டினால் இந்த சீசனில எல்லாம் விறைச்சுப் போயிடும். :lol: வேலை நிமிர்த்தம் உடை வரையறையும் உள்ளது. அதையெல்லாம் பார்க்கவேணும்தானே. ஆனால் கறுப்பர்களின் ராப் இல்லாவிட்டால் குடி ஒன்றும் முழுகிப்போகாது. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பர்கள் எம்மை விட எல்லா விதத்திலும் தாழ்ந்தவர்கள் என்ற நிறவெறி மட்டுமே உங்கள் மறுப்புக்களுக்கு காரணம். இத்தோடு நிறுத்துகிறேன்.

Link to comment
Share on other sites

யாரும் யாருக்கும் தாழ்ந்தவரில்லை. உமது கருத்துக்களில் "புகை"மூட்டம் தெரிகிறது. முற்றும்.

Link to comment
Share on other sites

ஒரு அறிவார்ந்த இனம் எப்போதும் தன் சுய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது. அப்படியாயின் நம் அடுத்த தலைமுறை புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழே தெரியாமல் வளர்கிறதே? அதில் உமக்கு உடன்பாடுதானா? எத்தகைய திணிப்புகள் இருப்பினும் நம் பாரம்பரியத்தைவிட்டுக்கொடுக
Link to comment
Share on other sites

சுய அடையாளம் என்றால் என்ன? எந்த ஆண்டில் ஏற்பட்ட அடையாளம்?தமிழரின் அடையாளம் என்பது மாற்றம் பெற்று வருவது.எந்த காலச்சாரமும் ஒரு குறிப்பிட்ட உறைனிலையில் இருப்பதில்லை.ஒரு காலத்தில் சமணராக இருந்த தமிழர் பின்னர் சைவர் ஆனார்கள்.இசையும் அவ்வாறு தான் கரு நாடகா ,தெலுங்கான வில் இருந்து உள்வாங்கப்பட்டது.இன்று தமிழர்கள் உலகளாவிய ரீதியாக புலம் பெயரும் போதும் உலகம் வீட்டுக்குள் வரும் போதும் உலகளாவிய ரீதியான காலாச்சாரப் பாதிப்புக்கள் இருக்கும்.இங்கே எவ்வளவு தான் கூரையில் நின்று கத்தினாலும் மொழியின் பயனோ அன்றி இசையின் பயனோ உணரப்படாதவிடத்து அது வழக்கொழிந்து விடும். இங்கே ரப்பினால் எவ்வாறு தமிழிசை சாகும் என்கிறீர்கள் என்று விளங்கவில்லை.முன்னர் சிறந்தது தான் நிலைக்கும் என்றீர்கள், அப்படியானால் ரப் இசை உந்த கருனாடக சங்கீததை விடச் சிறந்தது என்கிறீர்களா?ராப் என்பது ஒரு இசை வடிவம்,அது தமிழில் பாடப்பட்டால் அதுவும் தமிழிசை தான்.சமுதாய மாற்றங்களை உள் வாங்காதா மொழி வழக்கொழிந்து விடும்.ஆகவே தான் சொல்கிறேன் புலத்தில் தமிழ் வாழ தமிழ் ரப் ஒரு ஊடகமாகத் தொழிற் படட்டும் என்று.

தமிழரின் அடையாளம் என்று நான் சொல்வது தமிழர் மட்டுமே வழக்கில் கொண்டுள்ள விடையங்களை. அவை மாற்றம் பெறுகின்றன. ஆனால் சில மாற்றங்களை எதிர்க்க வேண்டும். உதாரணமாக ஊடகங்களின் மூலம் ஆங்கிலக் கலப்பு தமிழில் ஏற்படுகிறது. சரி என்று விட்டுவிடலாமா? ஈழத்தில் ஏன் மாய்ந்து மாய்ந்து தமிழில் பெயர்சூட்டுகிறார்கள். அது விதண்டாவாதமா? இசையிலும் மாற்றங்கள் வரும். ஆனால் தமிழ் எப்படி எமக்கு உயிர் மூச்சொ அதே போலத்தான் இசையும் என்னைப் பொறுத்தவரையில். இயல், இசை, நாடகம் தமிழ் கலாச்சாரத்தின் அடி நாதம். ஆனால் அதற்காகப் பிற இசைகளைப் பயிலக்கூடாது என்பதல்ல. பயில்பவர்கள் தமிழ் இசையயும் பயின்று தழைக்கவைக்கவேண்டும். சில இளைஞர்கள் அப்படி இருக்கலாம். ஆனால் பெரும்பாலோர் அப்படி இல்லை.

மற்றையது, ஏன் நம் தமிழ் இளைஞர்கள் கறுப்பினத்தவரின் கலாச்சாரத்தை மட்டுமே பின்பற்றுகிறார்கள்? சிங்கப்பூர், மலேசியாவில் மலாய் இனத்தவரோ அல்லது சீனரோ இப்படிச் செய்வதில்லை. கனடாவிலும் இதில் நம்மவர்தான் முன்னிலை. இவை நான் கண்டவை. ஏன் வேறு கலாச்சார வகைகளைத் தொடுவதில்லை?

ஒரு இடத்தில் எந்த இசை வடிவமும் தாழ்ந்தது இல்லை என்று விட்டு இன்னொரு இடத்தில் ஏன் சமூகத்தில் கீழ் மட்டத்தினரின் இசையை நாம் இசைக்க வேண்டும் என்று கேட்பது என்ன விதத்தில் நியாயமாகும்? இது வெறும் உயர் வர்க்கச்சிந்தனை அன்றி வேறென்ன? நாடுப்புற மக்களால் பாடப்படும் சிந்துக்கள் எவ்வாறு உயர் குடி மக்களால் கீழ்த்தரமாகப் பார்க்கப்பட்டதோ அவ்வாறன ஒரு பார்வையே இது. புலத்தில் முப்பது பவுன் மாசம் மாசம் குடுத்து தமது பிள்ளைகளுக்கு பரத நாட்டியமும்,மிருதங்கமும், கருனாடக இசையும் படிப்பித்துக் குடுக்க எத்தினை பெற்றோரால் முடியும்? வசதி அற்ற மக்களின் பிள்ளைகள் இவ்வாறு தான் தாங்களாகவே தம்மால் இயன்ற இசையை இசைப்பார்கள்.எது தமது சூழலைப் பற்றிப் பாடுகிறதோ ,எது தமக்கு இயற்கையாக வருகிறதோ அதனையே நாடுவார்கள்.இவற்றை இவர்கள் பணம் கொடுத்து கற்க வேண்டியதில்லை.சுயமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.புலத்த
Link to comment
Share on other sites

வாவ்.. கறுப்பி! அற்புதம்..!

மூன்றாவது இணைப்பில் அந்த சீன ஆசாமி சரியில்லை. என்னதான் அவர் தலை குத்தெண சுழண்டாலும் அவரின் உடுப்பு போதிய அளவு தொப்புளாசா இல்லை. அவருக்கு கெந்திக் கெந்தியும் நடக்கவும் தெரியேல்லை. நேரா நடக்கிறார். கெதியா பணிநீக்கம் செய்திடுவினம்.

:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.. கறுப்பி! அற்புதம்..!

மூன்றாவது இணைப்பில் அந்த சீன ஆசாமி சரியில்லை. என்னதான் அவர் தலை குத்தெண சுழண்டாலும் அவரின் உடுப்பு போதிய அளவு தொப்புளாசா இல்லை. அவருக்கு கெந்திக் கெந்தியும் நடக்கவும் தெரியேல்லை. நேரா நடக்கிறார். கெதியா பணிநீக்கம் செய்திடுவினம். :P :P :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.. கறுப்பி! அற்புதம்..!

மூன்றாவது இணைப்பில் அந்த சீன ஆசாமி சரியில்லை. என்னதான் அவர் தலை குத்தெண சுழண்டாலும் அவரின் உடுப்பு போதிய அளவு தொப்புளாசா இல்லை. அவருக்கு கெந்திக் கெந்தியும் நடக்கவும் தெரியேல்லை. நேரா நடக்கிறார். கெதியா பணிநீக்கம் செய்திடுவினம்.

:lol:

நன்றி டங்குவார் சார்.

இதையும் கேட்டு பாருங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.