Jump to content

சம்பூர் மீள்குடியேற்ற பிரதேசங்களை கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் இன்று பார்வையிட்டுள்ளார்


Recommended Posts

 
[ வெள்ளிக்கிழமை, 09 ஒக்ரோபர் 2015, 12:52.45 PM GMT ]
thandayuthapany_trinco_001.jpg
சம்பூர் மீள்குடியேற்ற பிரதேசங்களை கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் இன்று பார்வையிட்டுள்ளார்.

திருகோணமலை சம்பூர் பிரதேச மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண அரச திணைக்களங்களைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன்,  சம்பூர் மீள்குடியேற்ற பிரதேசங்களினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் பார்வையிட்டார்.

 

இதன்போது, மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்கு தேவையானவற்றினை பகுப்பாய்வு செய்தனர்.

தற்போது சம்பூர் பிரதேசத்தில் UNHCR தொண்டு நிறுவனத்தினால் 210 வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும் மற்றும் 50 வீடுகள் ARR எனும் தொண்டு நிறுவனத்தினால் கட்டப்படவுள்ளதாகவும்,

இப்பிரதேச கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி மற்றும் குடிநீர் மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் மீள்குடியேற்ற மக்களுள் அரச ஊழியர்களும் உள்ளடங்குவதனால் அவர்களுக்கான உதவிகள் கிடைக்கப்பெறாமையினால் மேற்குறிப்பிட்ட குடும்பத்தினை சேர்ந்தவர்கள் பல இன்னல்களை சந்திப்பதாக இதன்போது தெரிவித்தனர்

 
 
Link to comment
Share on other sites

  • 1 month later...
சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
[ வெள்ளிக்கிழமை, 04 டிசெம்பர் 2015, 02:41.35 PM GMT ]
sampoor_cycle_003.jpg
சம்பூரில் விடுவிக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளில் மீள்குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த பகுதியிலிருந்து சேனையூர் மகா வித்தியாலயம் மற்றும் சம்பூர் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்கின்ற பாடசாலை மாணவர்களுக்கு, பாடசாலைக்கு சென்று வருவதற்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
 
கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீழ்குடியேற்ற அமைச்சின் நிதியின் கீழ் 105 துவிச்சக்கர வண்டிகள் கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீழ்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவர்களால் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு சேனையூர் மகா வித்தியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
 
ஆண் மாணவர்களுக்கு 51 துவிச்சக்கரவண்டிகளும் பெண் மாணவர்களுக்கு 54 துவிச்சக்கரவண்டிகளுமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
 
sampoor_cycle_001.jpg

 

sampoor_cycle_002.jpg

 

sampoor_cycle_003.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.