Jump to content

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் சர்வாதிகார முடிவுகளின் பலன்களை அனுபவிக்கும் வடமாகாண மக்கள்


Recommended Posts

.

Published on October 9, 2015-9:10 am   ·   No Comments

Wigneswaran-with-Sambanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்கள் சர்வாதிகாரப்போக்கில் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு கடந்த பல வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றுதான் வடமாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் ஒன்றாக ஒரு முடிவை எடுத்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவித்த போது அதை முற்றாக நிராகரித்து முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என சம்பந்தன் தன்னிச்சையாக முடிவை எடுத்திருந்தார். இறுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த நான்கு கட்சிகளும் வேறு வழியின்றி சம்பந்தனின் முடிவுக்கு இணங்கி வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டனர்.

வடக்கு மாகாண மக்களுக்கு முன்னர் அறிமுகமில்லாத விக்னேஸ்வரனை வெல்லவைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் விக்னேஸ்வரனுக்கு ஒரு வாக்கை போடுமாறு பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் விக்னேஸ்வரன் வடமாகாணசபை தேர்தலில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ஆனால் பொதுத்தேர்தலுக்கு முன்னர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் சென்று வந்த பின்னர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூற ஆரம்பித்ததும், கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மறைமுக பிரசாரத்தில் ஈடுபட்டதும் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மறைமுக பிரசாரத்தில் ஈடுபட்டதும் தெரிந்ததே.

வடமாகாணசபை தேர்தல் முடிவடைந்த உடன் அப்போது ஜனாதிபதியாக இருந்தவரும் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமாக இருந்தவரும் என குற்றம் சாட்டப்படும் மகிந்த ராசபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யக் கூடாது என தமிழ் மக்களின் பெரும்பாலானவர்கள் கோரினார்கள்.

ஆனால் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அதனை நிராகரித்திருந்தார். அதற்கு சில காரணங்கள் இருந்திருக்கலாம்.

முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் நெருங்கிய நண்பரும், சம்பந்தியுமான வாசுதேவ நாணயக்காரவின் அழுத்தம் காரணமாகவும் மகிந்த ராசபக்சவுக்கு தனது விசுவாதத்தை காட்ட வேண்டிய தேவை இருந்ததாலும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் விரும்பங்களையும் உதாசீனம் செய்த அவர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அந்த சத்தியப்பிரமாண வைபவத்திற்கு விக்னேஸ்வரனின் சிங்கள சம்பந்திகளாக வாசுதேச நாணயக்கார உட்பட அவரின் சிங்கள உறவினர்களே சென்றிருந்தனர்.

மகிந்த ராசபக்ச அரசாங்கத்துடன் நெருக்கத்தையும் உறவையும் வளர்த்துக்கொண்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏன் ரணில் அரசாங்கத்துடன் மோதலை ஏற்படுத்திக்கொண்டார் என்பதற்கும் தன்னை ஒரு தமிழீழ தேசியவாதியாக எப்படி காட்டிக்கொண்டார் என்பதற்கும் சில காரணங்கள் உண்டு.

வாசுதேச நாணயக்காரவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எந்த காலத்திலும் உறவு இருந்ததில்லை. தனது சிங்கள சம்பந்திகளை பகைத்து கொள்ளாத போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவுடன் தான் உறவை வைத்துக்கொள்ளவில்லை என விக்னேஸ்வரன் காட்டிக்கொண்டார்.

இந்நிலையிலேயே தமிழ் மக்களின் பக்கமே தான் இருப்பதாக சில தீர்மானங்கள் அறிக்கைகள் பேச்சுக்கள் மூலம் காட்டிக்கொண்ட முதலமைச்சர்; விக்னேஸ்வரன் மீது ஐக்கிய நாடுகள் அலுவலகம் மிகப்பெரிய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் அலுவலகம் சுமந்தியிருக்கும் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐ.நா. எங்களை பணிய வைக்க பார்க்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார்.
விக்னேஸ்வரன் தனது உறவினரை அல்லது தனக்கு வேண்டப்பட்ட ஒருவரை வடமாகாண இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு ஐ.நா அலுவலகத்தால் நிதி ஒதுக்கப்படும் திட்டத்திற்கு விசேட ஆலோசகராக நியமிக்குமாறு நிர்ப்பந்தித்ததாக ஐக்கிய நாடுகள் அலுவலகம் சுமத்தியிருக்கிறது.

கொழும்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும், தற்போது ஒஸ்ரேலிய குடியுரிமை பெற்று ஒஸ்ரேலியாவில் வாழும் நிர்மலன் கார்த்திகேயன் என்பவரையே விசேட ஆலோசகராக நியமிக்குமாறும் அவருக்கு ஊதியமாக மாதமொன்றிற்கு ஏழு லட்சம் ரூபாய்களும் அவருடைய போக்குவரத்து, குடியிருப்பு, இதர செலவுகளும் வழங்கப்பட வேண்டுமென முதலமைச்சர் நிபந்தனை விதிக்கதாக ஐக்கிய நாடுகளைவையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிர்மலன் கார்த்திகேயனை விசேட ஆலோசகராக நியமிப்பதற்கான ஒப்புதலை ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முதல் ஜனவரி 2ஆம் திகதி விக்னேஸ்வரன் நேரடியாக அலரிமாளிகைக்கு சென்று மகிந்த ராசபக்சவிடம் பெற்றிருந்தார் என்பதை தற்போது மாகாணசபையில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

வடமாகாணத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு விசேட ஆலோசகராக ஒருவரை நியமிப்பதாக இருந்தால் முதலில் மாகாணசபைக்கு அதனை தெரியப்படுத்தியிருக்க வேண்டும். 
இவ்வாறான ஒரு பதவியை நிரம்பும் போது தகுதியானவர்களை தெரிவு செய்வதற்காக பொது அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களை கோரி தகுதியானவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் மட்டுமே வேறு ஒருவரை தேடி இருக்க வேண்டும். நிர்வாக ஒழுங்கின் படி சட்டப்படி இவ்வாறான விடயங்கள் இருக்கும் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்கு வேண்டிய ஒருவரை நியமிக்க முற்பட்டதேன்?.

அதுவும் வடமாகாணசபைக்கு தெரியாமல் நேரடியாக ஜனாதிபதி மகிந்த ராசபக்சவை சந்தித்து இந்நியமனத்திற்கான ஒப்புதலை பெற்றது எந்த வகையில் நியாயமாகும்?

வடமாகாணத்தில் இப்பதவிக்கு தகுதியானவர்கள் இருந்தால் சொல்லுங்கள், அவரை நியமிக்கலாம் என கூறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி ஒன்றை நிரப்பும் போது அதற்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்விக்கு அவர் இதுவரை பதிலளிக்கவில்லை.

வடமாகாணத்திலும் சரி இலங்கையிலும் சரி இலங்கை நிர்வாக சேவையில் உயர்தகமை கொண்ட பலர் உள்ளனர். அவர்களில் பலர் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு திட்டங்களில் அனுபவமும் ஆற்றலும் கொண்ட பலர் உள்ளனர்.

இலங்கை நிர்வாக சேவையின் உயர் தரத்தை சேர்ந்த அதிகாரிகள் தற்போதும் வடமாகாணத்தில் ஓய்வு பெற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் வாழவில்லை, யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமே வாழ்கின்றனர். திறமையும் ஆற்றலும் அனுபவமும் கொண்ட பலர் உள்ளுரில் இருக்கும் போது எதற்காக ஒஸ்ரேலியாவில் உள்ள ஒருவரை இலங்கை பிரஜா உரிமை அல்லாத ஒருவரை விசேட ஆலோசகராக நியமிக்க வேண்டும். அதுவும் மாதாந்தம் 7 இலட்சம் ரூபா சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் மாதாந்தம் 10 இலட்சம் கொடுத்து எதற்காக நியமிக்க வேண்டும். அவருக்கு மாதாந்தம் கொடுக்கும் ஊதியத்தில் எத்தனை குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க முடியும்.

நிர்மலன் கார்த்திகேயன் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி அல்ல, அவர் அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் மட்டுமே அவருக்கு உண்டு. யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தற்போது வாழும் அனுபவமும் திறமையும் கொண்ட இலங்கை நிர்வாக சேவையின் உயர்தரத்தில் உள்ள சிலரின் பெயர்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

சுந்தரம்பிள்ளை ( முன்னாள் உலக வங்கியின் வடகிழக்கு மாகாண பிரதிப்பணிப்பாளர்) லங்காநேசன் ( முன்னாள் நிக்கொட் பணி;ப்பாளர், வவுனியா அரசாங்க அதிபர்) செல்லையா பத்மநாதன் ( முன்னாள் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ) இ.தியாகலிங்கம் ( முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சின் செயலாளர.; வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர்) பரமலிங்கம் ( முன்னாள் வடகிழக்கு மாகாண காணி அமைச்சின் செயலாளரும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரும்) இ.தர்மகுலசிங்கம் ( முன்னாள் தேச கட்டுமான அமைச்சின் மேலதிக செயலாளரும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் ) இராசநாயகம் ( முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், திட்டமிடல் துறையின் மூத்த அதிகாரியும்) ரங்கராசா ( முன்னாள் வடகிழக்கு மாகாண பிரதம செயலாளர்)

இவ்வாறு பலர் வடமாகாணத்தை சேர்ந்த அம்மாகாணத்தை நன்கு அறிந்த பலர் இலங்கையில் இருக்கும் போது ஒஸ்ரேலியாவில் உள்ள ஒருவரை மாதாந்தம் 10 இலட்சம் கொடுத்து விசேட ஆலோசகர் என்ற பதவியில் அமர்த்துவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏன் முற்பட்டார் என்பதற்கான தெளிவான பதிலை  வழங்கவில்லை.

நிதிவழங்கும் நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்விற்காக வழங்கப்படும் பணங்களில் பெரும்பகுதி நிர்வாக செலவு என்ற பெயரில் மாதாந்த சம்பளமாக 7 இலட்சம் 10 இலட்சம் என செலவழிக்கும் போக்கே காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது வடக்கில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தான் என்பதை விக்னேஸ்வரன் போன்றவர்கள் உணரத்தவறியதேன்?

விக்னேஸ்வரன் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக இனப்படுகொலை மற்றும் சர்வதேச விசாரணை என்ற தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு மறுபுறத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கான நியமனங்களில் அதிதீவிரம் காட்டி வருவது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தேசிய வாதிகள் என தம்மை கூறிக்கொள்பவர்களுக்கு புரிவதில்லை.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவி ஏற்றதும் தனது செயலாளர் உட்பட தனது ஆலோசகராக சிலரை நியமித்தார். இவர்கள் யாரும் வடக்கை சேர்ந்தவர்கள் அல்ல. அனைவரும் கொழும்பை சேர்ந்தவர்களாகும்.
முக்கியமாக முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் கொழும்பை சேர்ந்த முன்னாள் இரத்மலானை இந்து கல்லூரி அதிபராக இருந்த மன்மதராசா. இவரின் நடத்தை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பாடசாலை மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு பெரும் குழப்பங்கள் ஏற்பட்டதும் இவர் பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டதும் மலையக அரசியல் தலைவர்களின் செல்வாக்கை பிரயோகித்து இவர் மேற்கொண்ட காரியங்களும் பலரும் அறிந்த விடயம்.

பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவரை வடமாகாணம் பற்றியும் அம்மக்கள் பற்றியும் தெரியாத ஒருவரை வடமாகாண முதலமைச்சரின் செயலாளராக நியமித்தது ஏன் என்ற கேள்விக்கும் அவர் இதுவரை பதிலளித்தது கிடையாது.

தனக்கு வேண்டிய ஒருவருக்கு விசேட ஆலோசகர் பதவி வழங்கப்படவில்லை என்பதற்காக ஐ.நா. போன்ற சர்வதேச நிறுவனம் ஒன்றுடன் விக்னேஸ்வரன் மோதல்களை ஏற்படுத்திக்கொள்வது அவருக்கு பாதிப்பு இல்லை என்றாலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் ஐ.நா.வின் இவ்வாறான உதவிகள் தடைப்பட்டு போவது வடமாகாண மக்களை மிகவும் பாதிக்கும் விடயமாகும்.

இவை அனைத்திற்கும் மூல காரணமாக அமைந்த விடயம் சம்பந்தன் போன்றவர்களின் சர்வாதிகாரப்போக்குதான்.

70 வயதிற்கு மேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என விக்னேஸ்வரன் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கூறியிருந்தார். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இந்த நிபந்தனை சம்பந்தனுக்கு மட்டுமல்ல விக்னேஸ்வரனுக்கும் பொருந்தும்.

 

மூலம்: http://www.thinakkathir.com/?p=62937

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்க கரி ஸார், இப்ப இவர்தான் எங்கட நம்பிக்கை நட்சத்திரம்! நீங்கள் இப்படி எல்லாம் உண்மைகளைக் கேட்கக்கூடாது. இப்ப    வாசுதேவ நாணயக்கார என்னும் மகிந்தவின் அடிவருடியின் சம்பந்தியும், பாலியல் சாமியாரான பிரேமானந்தாவின் முக்கிய சீடருமான விக்கி சொல்லுறதும் செய்யிறதும் தான் எங்களுக்கு மக்களின் முதுகில் மீண்டுமொரு முறை சவாரிசெய்யும் பேராசைக்கான நம்பிக்கை!:unsure:

Link to comment
Share on other sites

இவரினதும் இவர் சார்ந்த கும்பல்களினதும் சுயநல அரசியல் சம்பூர் காணி விடுவிப்பில் இருந்தே பார்க்கின்றோம். இதுவும் கடந்து போகும்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கையை காட்டியவர்களுக்கெல்லாம் நாங்கள் போட்டோம் பாருங்கோ வோட்டு. தலைவர் எங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில். இப்ப என்னடா என்றால் விக்கி ஐயா கொஞ்சம் மக்களின் கண்ணை திறக்கப் பாக்கிறார் பாருங்கோ. பரம்பரைத் தொழிலுக்கு பாதிப்பு வரப்போகுது எண்டு அங்கலாக்கினம். தங்கட வரட்டுக் கௌரவத்தை காப்பாற்ற அவரை இழுத்துக் கொண்டு வரேக்கை அவரின் வயது தெரியேல, அவரின் வாழ்க்கை பற்றி தெரியேல. இப்பதான் எல்லாம் தெரியுது. தேர்தலுக்கு முன் ஒரு கதை, பின் ஒரு கதை, இந்தியாவில ஒரு கதை, கொழும்பில ஒரு   கதை. மாறி, மாறி கதை எழுதி நாறிப்போன மரியாதையை, இவரை நாறடிப்பதன் மூலம் காப்பாற்றலாம் என்ற நப்பாசை. 

"வேண்டாப் பெண்டாட்டி கை பட்டா குற்றம், கால் பட்டா குற்றம்."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுடைய மற்றும் சுமந்திரனுடைய நேரடி செயல்பாடுகள்மூலமே விக்கியருக்கு உலைவைக்க அலுவல் நடக்குது. ஐநா ஆணையாளரால் அனுப்பட்ட கடிதப் பிரதி சம்பந்தருக்கும் அனுப்பப்பட்டது அக்கடிதம் கனடா மிரருக்கு அண்மைக்காலங்களில் கனடா சென்றவேளையில் சுமந்திரன்மூலமாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

இதுபற்றி எல்லோரும் சுத்திநின்று விக்யருக்குக் கல்லெறிந்துகொண்டிருக்கையில், நான் உடனடியாகத் தொடர்புகொண்டு விடையத்தைத் தெரிவித்திருந்தேன் அவ்வேளையில் அவர் கிளிநொச்சியில் மைத்திரியோடு நிகழ்சியில் கலந்துகொண்டிருந்தார் அவரது செயலாளருக்கு முன்னஞ்சல்மூலம் கனடாமிரர் இணைப்பயும் அது யாழ் இனையத்தளத்தில் மறுபிரசுரம் செய்யப்படதையும் இணைத்திருந்தேன். அவரது செயலாளர் மின்னஞ்சல் கிடைத்ததாகவும் இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கு கூடிய விரைவில் கொண்டுசெல்வதாகவும் பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Thanks Iya for highlighting the message, and this news has been shared with Hon CM short while ago. 

 
Thanks
Priyan.
 
ஆனால் இந்தவிடையம் கிணத்தில் போட்ட கல்லாகத்தான் சிலநாட்கள் இருந்தது ஆனால் மாகாணசபை உறுப்பினர் தவராசா அவர்கள் மாகாணசபக்கூட்டத்தொடரில் கேள்விகேட்டதால்தான் விக்கியருடமிருந்து பதில்கிடைத்தது.
 
இதில் கேவலம் என்னவென்றால் சம்பந்தர் இக்கடிதத்தை கனடா மிரருக்குக் கொடுத்த கீழ்த்தரமான அரசியல்தான்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.