Jump to content

கே இனியவன் கவிதைகள்


Recommended Posts

நட்பு வளர்பிறை மதி

அன்புடனும் அறிவுடனும் ...
உருவாகும் நட்பே உயிர் நட்பு ....
உயிர்நட்பு வளர்பிறை மதிபோல் ....
தினமும் வளரும் ....!!!

சுயநலத்துக்காகவும் ....
குறு நோக்கத்துக்காகவும் ...
இணையும் நட்புக்கள் ....
முழுநிலா தேய்வதுபோல்....
தேய்ந்து கொண்டே செல்லும் ....!!!
+
குறள் 782
+
நட்பு
+
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் 
பின்னீர பேதையார் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 02

Link to comment
Share on other sites

  • Replies 390
  • Created
  • Last Reply

உன்னுடன் பழகுவது ....!!!

அன்பு நண்பா ....
படிக்க படிக்க இன்பம் ....
தரும் புத்தங்கங்ககள் போல் ....
இருக்குதடா உன்னுடன் ...
பழகுவது ....!!!

நீ 
மீண்டும் எப்போது ....
வருவாய் மீண்டும் ...
எப்போது பேசுவாய் ...
ஏங்குதடா மனசு ......!!!
+
குறள் 783
+
நட்பு
+
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
பண்புடை யாளர் தொடர்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 03

Link to comment
Share on other sites

இன்பத்துக்கு மட்டுமே நட்பல்ல ....!!!

கூடி 
கும்மாளம் அடிப்பது ...
நட்பல்ல - இன்பத்துக்கு ....
மட்டுமே நட்பல்ல ....!!!

நண்பன் வழிதவறும் ...
புத்தி தவறும் போது...
புத்தி கூறுவது தான் ...
உண்மை நட்பு .....!!!
+
குறள் 784
+
நட்பு
+
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 04

Link to comment
Share on other sites

நட்புக்கு அவசியம் அன்று ....!!!

அருகில் இருப்பத்தோ ...
முகம் பார்பதோ 
நெருங்கி பழகுவதோ ...
நட்புக்கு அவசியம் அன்று ....!!!

எண்ணத்தால் ....
உன்னை நான் நினைப்பதும் ...
என்னை நீ நினைப்பதும் ...
உண்மை நட்பின் அடையாளமே ...!!!
+
குறள் 785
+
நட்பு
+
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் 
நட்பாங் கிழமை தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 05

Link to comment
Share on other sites

நீ 
பேசாமல் இருந்தால் ...
எனக்கென்ன ....?
ஒவ்வொரு நொடியும் ...
நீ என்னோடு பேசுவதை ....
உன் கண்கள் சொல்கிறதே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

காதலின் ....
கொடிய விஷம் .....
காதலியின் பேச்சு ,,,,,
பேசினாலும் வலிக்கும் ...
பேசாமல் விட்டாலும் ...
வலிக்கும் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

தனிமையில் இருந்து ...
உன்னிடம் வந்தேன் ....
காதலித்தாய் .....!
தனிமையே உனக்கு ...
பொருத்தமெண்டு...
தள்ளி விட்டாயே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

கண்ணால் காதல் ....
தந்தவனே .....
கவிதையால் ....
வலிகளை தருகிறான் ....!!!
உனக்கு வலித்தால் ...
எனக்கு வலிக்கும் ...
என்று எப்போதடா ...
புரிவாய் ....?
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

என்னவன் ....
ஒரு சிரிப்பு சிரித்தான் ...
இதயத்தில் முளைத்தது ....
காதல் இறக்கை ....!!!
 
என்னவனே ...
எங்கு சென்றாய் ...?
உன் நினைவுகளை ...
அடைகாக்கும் பறவையாய் ....
இவள் ......!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
Link to comment
Share on other sites

என்னவனே ....
எதை வேண்டுமென்றாலும் ....
பேசு... ஏசு....நினை .... 
உன்னை தவிர நான் ...
எதையும் நினைத்ததில்லை ...
என்பதை என்  மரணத்தின் பின் 
உணர்வாய் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
 
Link to comment
Share on other sites

என்னவனே ....
உயிரற்ற என் உடலை ....
உயிருள்ள உடலாக்குவது ....
உன் கவிதைகள் தான் ...!!!
 
எனக்காக ....
எத்தனை கவிதைகள் ....
எழுதினாயோ ....?
அத்தனை நாள் வாழ்வேன் ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
 

என்னவனே ....
உயிரற்ற என் உடலை ....
உயிருள்ள உடலாக்குவது ....
உன் கவிதைகள் தான் ...!!!
 
எனக்காக ....
எத்தனை கவிதைகள் ....
எழுதினாயோ ....?
அத்தனை நாள் வாழ்வேன் ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
 
Link to comment
Share on other sites

பூவாய் பூப்பதே நட்பு .....!!!

கண்டவுடன் மனம் ....
குளிர பேசுவதும் ....
கைகுலுக்குவதும் ...
நட்பே இல்லை ....!!!

முகத்தில் நட்பை ...
காட்டாதே உள் அகத்தில் ...
நட்போடு பழகு ....
மனமும் முகமும் ...
பூவாய் பூப்பதே நட்பு .....!!!
+
குறள் 786
+
நட்பு
+
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 06

Link to comment
Share on other sites

உனக்கு உறுதுணையாக .....!!!
 
தீய 
வழியில் செல்லாதே ....!!!
நண்பா - நான் 
இருக்கிறேன் உனக்கு 
உறுதுணையாக .....!!!
 
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பொறுத்திடுவேனோ ....?
உன் துன்பத்தில் சரிபாதி ...
நானடா - நீ என் 
உயிர் நண்பணடா  ....!!!
+
குறள் 787
+
நட்பு
+
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் 
அல்லல் உழப்பதாம் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 07
Link to comment
Share on other sites

என் உயிர் நண்பனே ....!!!
 
ஆடை அவிழும் போது .....
கூட்டத்தில்  மானம் ...
காக்கும் கைபோல் ....!!!
 
நண்பா ....
உனக்கொரு துன்பம் ...
வந்தால் பார்திருப்பேனோ...?
உடன் வந்து காப்பேண்டா ...
என் உயிர் நண்பனே ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 08
Link to comment
Share on other sites

அன்புடன் உதவுவதே நட்பு 
 
நட்பென்றால் ...
மனவேறுபாடில்லாமல் ...
தானாக முன்வந்து ....
உதவுவதே ....!!!
 
உனக்கு நானும் ...
எனக்கு நீயும் ...
என்றும் மாறாத ....
அன்புடன் உதவுவதே ....
உயிர் நட்பு ....!!!
+
குறள் 788
+
நட்பு
+
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 09
Link to comment
Share on other sites

அது நட்பல்ல ....!!!
 
உன்னை நானும் ....
என்னை நீயும் ...
புகழ்ந்து பேசின் ...
அது நட்பல்ல ....!!!
 
எம்மைப்போல் ...
நட்பு யாரும் இல்லை ....
நட்புக்கு நாமே சின்னம் ...
வசையான வார்த்தைகள் 
உண்மை நட்பல்ல ...
நட்பு ஒன்றும் அலங்கார ...
வார்த்தையில்லை....!!! 
+
குறள் 790
+
நட்பு
+
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று 
புனையினும் புல்லென்னும் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -10
Link to comment
Share on other sites

நீ 
முகத்தால் ...
வெறுக்கிறாய் ....
இதயத்தால்.... 
அழைக்கிறாய் ..!!!

பாவம் 
உன் கண்கள் ...
படாத பாடு படுகிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

பிறப்பு எத்தனை ....
வலி என்பதை தாய்மை
உணர்த்தியது ....!!!

இறப்பு எத்தனை ....
வலி என்பதை உன் ....
பிரிவு உணர்த்தியது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

இன்னுமொரு ஜென்மம் ....
பிறந்து வந்தது உன்னை ....
காதலிக்க வேண்டும் .....!!!

நீ 
பிரிந்து செல்ல வேண்டும் ....
வலியின் வலியை....
அடுத்த ஜென்மமும் ....
அனுபவிக்க வேண்டும் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

நீ 
தப்பு செய்ய போவதில்லை 
நான் விரும்பியதையே ...
செய்தாய் .....!!!

நான் ....
மலர் மாலை எதிர்பார்தேன் ....
நீ 
மலர்வளையம் தருவாய் ....
போலிருக்கிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

கண்ணோடு....
ஆரம்பித்த காதல் ....
கண்ணீரோடு ....
வாழ்கிறது .....!!!

மலர் கொடுத்து ....
காதல் செய்தேன் ....
மலர் வளையம் ...
வரும்போல் இருக்கிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என் 
கவிதையை ரசிக்கும் ..
உனக்கு தெரியுமா ..?
நான் 
உன்னை ரசிப்பதால் ...
என் கவிதையை எல்லோரும் ...
ரசிக்கிறார்கள் என்று ...?

அருகில் 
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!

யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!

என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!

என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!

Link to comment
Share on other sites

காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயமும் ....
வலித்துக்கொண்டு ...
துடித்துகொண்டிருக்கும் .....!!!

காதலில்லாத ....
ஒவ்வொரு இதயமும் ...
வலிக்காக ........
துடித்து கொண்டிருக்கும் ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில சமயம் காதல் தோல்வியின் வலி மனசுக்கும் தேவையாய் இருக்கிறது...!

கவிதைகள் நன்றாக இருக்கின்றன நன்பரே...! வாழ்த்துக்கள்...!!

Link to comment
Share on other sites

உன் 
பார்வையால் ...
ஜனனம் ஆனேன் .....
வார்த்தையால் ....
மரணமானேன் ....!!!

காதல் 
பார்வையில் ...
பிறந்து ....
வார்த்தையால் ....
இறக்கிறது .......!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.