Jump to content

கே இனியவன் கவிதைகள்


Recommended Posts

ஒரு நொடியில் ...
மலரும் காதல் தான் ...
ஒரு நொடியில் ...
வாடியும் விடுகிறது ......!!!

வேகப்போகும் என் ....
உடல் படும் வேதனையை ...
ஒத்திகை 
பார்த்துகொண்டிருக்கிறேன்.....
உன் பிரிவின் நொடியில் ...
கணப்பொழுதிலிருந்து....!!!  
+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

 

@@@@@@@@@@@@@

உன்னிடம் காதலை ....
பெற்றுகொண்டதோடு ....
பிறருக்கு தெரியாமல் ....
எப்படி அழுவதென்பதையும்....
கற்று கொண்டேன் ....!!!

வளைந்து வளைந்து ...
ஓடாத ஆற்றில் அழகில்லை ....
வலித்து வலித்து ....
வளராத காதலிலும் ....
அழகில்லை .....!!!
+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

  • Replies 390
  • Created
  • Last Reply

எனக்கு ....
காதல் தந்தவளே ....
இன்றும் இருப்பாய் 
இருக்கிறது - நம் காதல் ....!!!

காதல் 
கடைதான் மூடபட்டு ...
இருக்கிறது .....
வெற்றிடமாகவில்லை ...
நம் காதல் ....!!!
+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

அச்சத்தை உணர்த்துகிறது ....!!!

என் தோழியே ....
என்னவனை பிரிந்து ...
வாடிய துன்பம் கொடுமை...
அத்தனையும் மறைந்தது ....
என்னவன் என்னை கட்டி ...
தழுவிய நொடி ....!!!

என் மனது ஏதோ....
தவிக்கிறது மீண்டும் ...
என்னவன் பிரிந்தால் ...
என் நிலை எதுவாகுமோ ....
அச்சத்தை உணர்த்துகிறது ....!!!
+
குறள் 1276
+
குறிப்பறிவுறுத்தல் 
+
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி 
அன்பின்மை சூழ்வ துடைத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 196

Link to comment
Share on other sites

மிக்க நன்றி கருத்துரைத்தோருக்கு நன்றி 
தொடர்வோம் 

Link to comment
Share on other sites

நட்பை விட எவையும் இல்லை ....!!!

நட்பு உயிருக்கு சமன் .....
நட்புக்காக நல்லவை ....
எதையும் செயலாம் ....
நட்பை விட உயர்வு ....
எவையும் இல்லை ....!!!

கண்டவுடன் நட்பும் ....
ஆராயத நட்பும் ......
கேடுதளிலும் கெடுதல் ....
உயிருள்ளவரை ....
கெடுதலே கொடுக்கும் ....!!!
+
குறள் 791
+
நட்பாராய்தல்
+
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -11
 
@@@@@
 
நட்பு சொல்வதெல்லாம் செய்யாதே ....!!!

நட்பு சொல்வதெல்லாம் .....
ஆராயாமல் செய்யாதே ....
நட்புக்கு அடிமை படாதே ....
நல்ல நட்பே உயர் நட்பு ....!!!

கெட்ட நட்புக்கு ....
உறுதுணையாக இருப்பது ...
உயிர் போகுவரை ....
உயிர் குடிக்கும் துன்பம் ...
தரும் மனிதா ....!!!
+
குறள் 792
+
நட்பாராய்தல்
+
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -12
 
@@@@@
 
குணமறியாத நட்பு நட்பல்ல ....!!!

அன்பான குணம் ....
அழகான குடும்ப பிறப்பு .....
ஒருவனின் குற்றங்கள் ....
குறையாத சுற்றம் ...
உடையோனே ....
சிறந்த நட்பு .....!!!

குணமறியாத நட்பு ....
புரியாத பிறப்பு ....
குற்றங்கள் நிறைந்த நட்பு ...
கெட்ட நட்பாகும் ....!!!
+
குறள் 793
+
நட்பாராய்தல்
+
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -13
 
@@@@@

நற்குடி பிறப்பு நல் நட்பு ....!!!

நட்குடியில் பிறந்தவன் ....
நட்பே நட்பு ....
நற்குடி பிறப்பு ...?
தனக்கும் நட்புக்கும் ....
பழிச்சொல் வரக்கூடாது ...
என நினைக்கும் நட்பு ....!!!

நட்குடி நட்பை ...
எந்த விலைகொடுத்தும் ...
பெற்றிட வேண்டும் ....
உயிரிலும் மேலான ...
நட்பென்பதும் இதுவே ....!!!
+
குறள் 794
+
நட்பாராய்தல்
+
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -14
 
@@@@@
 
தட்டிக்கேட்பதும் நட்பின் கடமை ....!!!
தட்டி கொடுப்பது ....
மட்டுமல்ல நட்பின் ...
கடமை ....!
தட்டிக்கேட்பதும் ....
நட்பின் கடமை ....!!!
தவறு
செய்யாமல் இருக்கவும்...
செய்தால் உரத்தகுரலில் ...
ஏசுவதும் - அவசியத்தில் ...
தண்டிக்கவும் உரிமை ...
உள்ளதே நட்பு ....!!!
+
குறள் 795
+
நட்பாராய்தல்
+
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -15
Link to comment
Share on other sites

துன்பத்தில் இணைபவனே நண்பன்

இன்பத்தில் இணைபவன் ...
நண்பன் அல்லவே அல்ல ...
துன்பத்தில் இணைபவனே...
உற்ற நண்பன் .....!!!

இறைவா எனக்கு ....
துன்பத்தை கொடு ....
உற்றநண்பன் யாரோ ...
உள்ளபோது மட்டும் ...
யார் என்பதை கண்டறிய .....!!!
+
குறள் 796
+
நட்பாராய்தல்
+
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -16

 

@@@@@

 

அறிவற்ற நண்பனை விலக்கு....!!!

இறைவன் எனக்கு ....
கொடுத்த வரம் ....
அறிவற்ற நண்பர்களை ....
என்னிடம் இருந்து ....
பிரித்தமையே .....!!!

அறிவற்ற நண்பனை ....
இழப்பது ஒருவனின் ...
வாழ்க்கை பாக்கியமே ....
இறைவன் கொடுத்த ...
பெரும் ஊதியம் ....!!!
+
குறள் 797
+
நட்பாராய்தல்
+
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -17

 

@@@@@

 

துன்பத்தில் உதவாத நட்பு வேண்டாம் ...!!!

ஊக்கம் என்பது ....
வாழ்க்கையின் ஊட்டசத்து ....
ஊக்கமற்ற செயல்கள் ...
வாழ்கையே கெடுத்துவிடும் ....!!!

துன்பத்தில்
உதவாத நட்பு ....
இருந்தென்ன பயன் ....?
அந்த நட்பு விலகுவதால் ...
என்ன கவலை ....?
+
குறள் 798
+
நட்பாராய்தல்
+
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -18
 
@@@@@@

துன்பத்தில் உதறிய நண்பனே ....!!!

துன்பத்தில் துடித்தபோது ....
கை உதறிவிட்ட நண்பனே ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீர்கூட சுடுகிறது ....!!!

உன்னை நினைக்கும் ...
நொடியெல்லாம் நெஞ்சம் ...
நெருப்பாய் கொதிக்கும் ....
உயிர் பிரியும் பொழுதில் ...
உன் நினைவு தணலாய் ...
சுடுமட நண்பா ....!!!

+
குறள் 799
+
நட்பாராய்தல்
+
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -19
 
@@@@@

விரும்பாத நட்பை விலக்கி வை ...!!!

மனதிலே மாசில்லை ...
செயலிலே குற்றமில்லை .....
அற்புதமான நட்பை ...
எதை கொடுத்தேனும் ..
பெற்றிட வேண்டும் ....!!!

அன்போடு ஒத்துவராத ....
உலகோடு சேர்ந்துவராத....
நட்பை எந்த விலை ....
கொடுத்தேனும் விலகிட ...
வேண்டும் ....!!!
+
குறள் 800
+
நட்பாராய்தல்
+
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -20


 

 

 
Link to comment
Share on other sites

பழமை பேணும் நட்பு ....!!!

என் 
அருமை தோழா ....
நாம் காலத்தால் அழியாத ....
நண்பர்கள் -காலம் காலமாய் ...
வாழும் நண்பர்கள் .....!!!

நான் 
விட்ட தவறை நீயும் ....
நீ விட்ட தவறை நானும் ....
கண்டுகொள்ளாமல் ....
நட்போடு தொடர்கிறோம்
இதுதாண்டா உயிர் நட்பு ...
பழமை பேணும் நட்பு ....!!!
+
குறள் 801
+
பழைமை
+
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் 
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -21

 

@@@@@@

 

நட்புக்கு சான்றடா நண்பா ....!!!

நண்பா.....
நீ என்னை உரிமையுடன் ....
திட்டுவதும் அரவணைப்பதும் ...
நான் உன்னை உரிமையுடன் ...
திட்டுவதும் அரவணைப்பதும் ...
தாண்டா பழமை நட்பு ....!!!

நீ 
என்னை உரிமையோடு ....
திட்டியதும் அன்பு கொண்டதையும் 
எண்ணி எண்ணி மகிழ்வதே ...
நட்புக்கு சான்றடா நண்பா ....!!!
+
குறள் 802
+
பழைமை
+
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு 
உப்பாதல் சான்றோர் கடன்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -22

Link to comment
Share on other sites

நான் ஏற்கிறேன் நண்பா ...!!!

என் 
அருமை நண்பா ....
நீ எனக்காக உரிமையோடு ...
செய்த காரியம் எனக்கு ...
பிடித்ததோ இல்லையோ ...
நான் ஏற்கிறேன் நண்பா ...!!!

எனக்காக ....
என் உரிமைக்காக நீ ...
செய்த காரியத்தை நான் ...
ஏற்காவிட்டால் நம் நட்பில் ...
என்ன பயன் உண்டு ....?
+
குறள் 803
+
பழைமை
+
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை 
செய்தாங்கு அமையாக் கடை.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -23

அறிவற்ற நண்பனில்லை நான் ....!!!

மன்னித்துவிடு நண்பா ....
உன் மீது வைத்த உரிமை ...
நட்பால் உன்னை கேளாது ....
ஒரு செயல் செய்துவிட்டேன் ...
உனக்கு பிடிக்குமோ ....?
புரியவில்லை .....!!!

நீ எதை செய்தாலும் ...
என் நன்மைக்காகவே ...
செய்திருப்பாய் ....!
அதைகூட புரியாத அறிவற்ற ...
நண்பனில்லை நான் ....
உன் பழமை மாறாநண்பன்....!!!

+
குறள் 804
+
பழைமை
+
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் 
கேளாது நட்டார் செயின்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -24

Link to comment
Share on other sites

கவலை படாதே நண்பா ....

கவலை படாதே நண்பா ....
நீ செய்த செயலால் நான் ...
வருந்தவில்லை ....
எனக்கு தீமையாகிவிட்டதே...
என்று கவலைபப்படாதே ...!!!

நீ 
அறியாமல் செய்யவில்லை ...
என் மீதுள்ள உரிமையால் ..
செய்த தவறை மன்னிக்கிறேன் ....
இல்லையேல் நம் நட்பில் ...
என்ன பயனுண்டு .....?

+
குறள் 805
+
பழைமை
+
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க 
நோதக்க நட்டார் செயின்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -25

Link to comment
Share on other sites

மீண்டும் 
என்னை காதலிக்காதே .....
அழுவதற்கு  நாதியில்லை ...
கண்ணீரும் இல்லை ...!!!


உன் 
நினைவுகளின் ஈட்டிகள் 
தினமும் இதயத்தை சல்லடை ...
போடுகிறது - அப்போதும் ...
என் இதயம் சிரித்தபடியே ...
துடிக்கிறது ......!!!


+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

காதலே உலகம் ....
வாழ்ந்துவிடாதீர் ....
கடலால் சூழப்பட்ட ....
தீவுப்போல்   ....
கண்ணீரால் சூழப்பட்ட .....
இதயமாக வாழ்வீர்கள்......!!!

தனிமையில் இருந்து ....
சிந்தித்தேன் காதல் இனித்தது ....
காதலோடு இருந்து சிந்தித்தேன் ...
தனிமை இனிக்கிறது ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

னிய 
னிமையான 
ன்பமான 
ல்லத்தில் 
றையருள்மிக்க 
ல்லறவாழ்க்கை 
ன்றும் என்றும் 
றையருளால் 
டையூறுகள் நீங்கி 
ன்பமே 
டைவிடாமல் கிடைக்க 
ந்தநாள் மட்டுமல்ல 
தயத்துடிப்பு உள்ளவரை 
ன்பலோகத்தில் வாழ 
ந்த 
னியவனில் 
தயம் கனிந்த 
னிய வணக்கம் 
யன்றவரை அயலவரையும்
ன்பமாய் வைத்திருங்கள் 
றைவன் விரும்புவதும் 
வ்வுலகில் எல்லோரும் 
ன்பமாய் வாழவைக்கும் 
இயல்புடைய மனிதனை தான் ....!!!

Link to comment
Share on other sites

இத்தனை நாள் வரையும்....
எத்தனையோ உறவுகள் ...
என்னை தூக்கி எறிந்தபோது ....
இதயம் வலிக்கவில்லை  ....!!!

ஒரு நொடியில் என்னை ....
மறுத்துவிட்டாய் தூக்கி ....
எறிந்து விட்டாய் ....
வலிக்கவில்லை இதயம் ....
இறந்துகொண்டிருக்கிறது ....!!!

என்றோ ஒருநாள் .....
என்னை திரும்பி பார்ப்பாய் ....
என் உடல் வலுவிழந்தாலும் ....
நினைவுகள் இறக்காது உயிரே .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

கே இனியவன்
அணுக்கவிதை

*************

 

நெருப்பில் கருகியவர்கள்
பலர் உன் சிரிப்பில்
கருகியவன் நான் தான் ...!!!

 

heart.gif

 

மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌
என் இதயம்....!!
 

heart.gif

இதயம்
துடிக்க‌ காற்று
தேவையில்லை
காதல் போதும் ...!!!

heart.gif

 

நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!!!

heart.gif

நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!

heart.gif

ஒன்றில் நீ பேசு
அல்லது உன் கண்
பேசட்டும் இரண்டும்
பேசினால் நான் எப்படி
பேசுவது ...?

heart.gif

அவளுக்கு இதயம்
இருக்கும் இடத்தில்
முள் கம்பிகள் இருக்கிறது
போல் இப்படி வலி தருகிறாள் ..?

heart.gif

உன்
சின்ன சிரிப்பு போதும்
என் நெஞ்சில் இருக்கும்
வலியை உடைத்தெறிய ....!!!

heart.gif

நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை

heart.gif

நான் தற்கொலை செய்ய
மாட்டேன் - நீதான் என்னை
தினமும் கொல்கிறாயே...!!!

 

heart.gif

உன்னை அணு அணுவாக
காதலிக்கிறேன் -உனக்கு
அணுக்கவிதை எழுதுகிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

கே இனியவன்

Link to comment
Share on other sites

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

*************************

 

என் இதயத்தில் குடியிருப்பவளே
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என்
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது

 

-------------------------------

 

கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!

 

-------------------------------

 

காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்
இரண்டையும் செய்பவன் ஞானி

 

-------------------------------

 

உலக போதையிலேயே கொடூரம்
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை

 

-------------------------------

 

நெற்றி கண் திறந்தபோது நக்கீரன் எரிந்தார்

நீ கண் திறந்த போது நான் எரிந்தேன்
முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...?

 

------------------------------

 

நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை

 

---------------------------------------

 

நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்

 

-------------------------------

 

உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்

 

-------------------------------

 

பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்

 

-------------------------------

 

சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!!

 

------------------------------

 

நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!!!


------------------------------

 

நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்

நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!


------------------------------

 

உலக போதையிலேயே கொடூரம்
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை

-------------------------------


உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

 

கே இனியவன்

 

 

Link to comment
Share on other sites

 ன்பு உள்ளங்களே..... 
அ ன்பு காலை வணக்கம் .....
அ திகாலை எழுத்தவன் ......
அ திசக்தி ஆதவ்னையே.....
 ருகில் வரவைப்பான்......!!!

 ன்பினால் ...
அ கிலத்தையே வெல்லலாம் ....
அ ங்கிகள் தொடக்கம் ...
 ருகில் உள்ள உயிர்வரை ...
அ ன்பு செலுத்துங்கள் .....!!!

 ற்புதங்கள் என்பது ....
 திசயம் செய்வதல்ல ...
 ன்புக்கு கட்டுபட்டு ...
அ ண்ட சராசரத்தோடு ....
அ டக்கமாவதே .........!!!

 ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
 தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
 ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!

 ந்தி சாயும் நேரம் ....
 ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
 ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!!!

Link to comment
Share on other sites

தவன் துயில் எழமுன் ....
ராவாரத்துடன் எழுந்த .....
ருயிர் நண்பர்களே ....
ண்டவன் கிருபையால் .....
சீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

னந்தம் பொங்கிட ....
த்மா திருப்தியுடன் ....
ரம்பிப்போம் பணிகளை ....
யிரம் பணிவந்தாலும் ....
ர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ரம்பிக்கும் வாழ்க்கை ...
லயத்துக்கு சமனாகட்டும்....
ண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
னந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

த்திரமே பகையின் சூத்திரவாதி ....
த்திரத்தை வென்றவன் ...
ண்டவனை வெல்கிறான் ....
ண்டாண்டுகாலம் நட்புடன் ....
ட்சி செய்கிறான் உலகை .....!!!

தியும் அந்தமும் இல்லாத ....
ண்டவனை தினமும் தொழு ....
யிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ருயிர் குடும்பத்துடன் ....
னந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!
 

Link to comment
Share on other sites

பசிக்கும் போது ஏதோ....
கிடைப்பெதேல்லாம் ....
வயிற்றுக்குள் போட்டு .....
தணிக்கமுடியும் உயிரே ....!!!

காதல் இதயத்தில் ....
பூக்கிறது  உன்னைத்தவிர ...
அதற்குள் யாரையும் ...
திணிக்கமுடியாது .....
உன் பதில் கிடைக்கும்வரை ....
என் இதயம் பட்டினியால் ...
வாடும்  மறந்துடாதே ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

உன் மீது காதலை ....
நிறுத்துவதென்றால் ....
வீசும் காற்றை  நிறுத்து ....
நானும் நிறுத்துகிறேன் ......!!!

புரிகிறதா ....?
என்னில் காற்று இருக்கும்....
காலம் வரை உன் மீது ...
காதல் இருந்தே தீரும் .....
நீ என்னை பார்த்த ஒவ்வொரு ...
பார்வையும் மாலையாய் ....
கோர்த்துவைதிருகிறேன்....
எந்த மாலையாக்குவாய் ,,,,?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

ர விழிகளை திறந்து ....
சன் நினைவில் இருக்கும்
ரமான இனிய உள்ளங்களே ...
ரேழுலக இன்பம் பெற ...
சன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

கை கொண்ட இதயம் ...
சன் குடியிருக்கும் இதயம் ....
கையுடன் வாழ்பவர்கள் ....
ரேழு தலைமுறை வாழ்வர் ....
கை தலைமுறை காக்கும் ....!!!

ட்டி முனைபோல் பேசாதே ....
விரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
கையை விளம்பரமாக்காதே ...
ன செயல் எதையும் செய்யாதே ....
ன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ரமான பார்வையே இரக்கபார்வை....
ரமான செயலே உயர் சேவை ....
ரமான ஈரமான என்றால்....?
சனை இதயத்தில் நினைத்து ....
சனைபோல் வாழும் வாழ்கை ...!!!

Link to comment
Share on other sites

நீ 
சிரித்த சின்ன சிரிப்பு ...
என் சிந்தைவரை ...
நிலைத்துவிட்டது ....!!!

எத்தனை துன்பம் வந்தும் ...
அத்தனைக்கும் மருந்து ....
உன் கன்னகுழி சிரிப்புதான் ...
உன்னை நினைக்காத இதயம் ....
எனக்கு தேவையே இல்லை ...!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை 

Link to comment
Share on other sites

நட்பு , நண்பன் ....
ஒன்று இல்லாவிட்டால் ..
மயான உலகில் ....
வந்திருப்பேன் ....!!!

எந்த துன்பம் வந்தாலும் ....
அருகில் இருந்து ஆறுதல் .....
எந்த இன்பம் வந்தாலும் ....
வஞ்சகம் இல்லாத உறவு ....
இன்பத்திலும் ....
துன்பத்திலும் 
நட்பு ஒரு தராசு ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
நட்பு கவிதை

Link to comment
Share on other sites

வாழ்கை தொடக்கம் 
வாழ்கை முடிவு 
பூ மாலை 

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
ஹைக்கூ

Link to comment
Share on other sites

உன்னோடு ....
எடுத்த செல்ஃ யும் 
நீ பேசிய வார்த்தையின் ....
கைபேசி பதிவும் ....
உன் ப்ரோஃ பைல் படமும் ...
நாம் பிரிந்திருந்தாலும் .....
நினைவுகளை உயிர்கிறது ...!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
கைபேசி கவிதை

காதலுக்கு 
தெரியவில்லை எல்லை ...
அதிகம் நேசித்துவிட்டேன் ....
விஷத்தை பருகிய ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

நீ 
என்னை விலக்கும்
போதெலாம் -தனிமையின் 
கொடுமையை உணர்கிறேன் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல்தோல்வி  கவிதை

Link to comment
Share on other sites

நீண்டுகொண்டே போகிறது ...
தொலைகாட்சி தொடர்கள் ....
சுருங்கிக்கொண்டே போகிறது ...
உறவுகளின் தொடர்பு ....!!!

வந்த உறவை வரவேற்க .....
நேரமற்று... விருப்பமற்று ....
படலையுடன் திருப்பியனுப்பும்....
தொ(ல் )லைக்காட்சி ஆதிக்கம் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
வாழ்கை கவிதை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.