Jump to content

கே இனியவன் கவிதைகள்


Recommended Posts

இயற்கையின் அற்புதத்தை ....
பார்த்தாயா ....?
மனிதனுக்கு ஓட்சிசனை தந்து ....
வாழவைக்கிறது ....!
மனிதன் வெளியேற்றும் ....
காபனீர் ஓட்சைட்டில் ....
தாவரத்தை வாழவைக்கிறது ....!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
இயற்கை கவிதை 

Link to comment
Share on other sites

  • Replies 390
  • Created
  • Last Reply

முயற்சியாளன்...
ஆபத்தை சந்திக்கிறான் ....
வெற்றி பெறும்போது ...
மறு முதலீடு செய்கிறான் ....
தோல்வியடையும்போது ....
புதுமையை தேடுகிறான் ....!!!
நான் ஒரு முயற்சியாளன் ...!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
முயற்சி கவிதை 

ஒருவனுக்கு பெரும் ....
பாக்கியம் .....?
தாயின் மடியில் பிறந்தவன் ....
தாய் மடியில் இறப்பதுதான் ....
இறைவா அந்த பாக்கியத்தை ....
எனக்கு தராமல் அன்னையை ....
பறித்துவிட்டாயே....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
அம்மா கவிதை

Link to comment
Share on other sites

ழுந்திரு மனிதா ....
ழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
ன்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
ழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
ட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

வன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
வன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
வனல்ல அவன் - இறைவன் .....!
ல்லோர் இதயத்திலும் இருக்கும் 
ல்லையற்றவன் அவன் ....!!!

ங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
ப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
தற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
ந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
ல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

திரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
டுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
ல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
டுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
ல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!
 

Link to comment
Share on other sites

நடிப்பு நட்பு வேண்டாம் ...

உயிராய் உருகுவதுபோல் 
உனக்கே வாழ்வதுபோல் 
நடிப்பு நட்பு வேண்டாம் ...
அது தீ நட்பு .....!!!

உள்ளத்தில் இருந்து ...
தோன்றாத நடப்பும் 
உதட்டில் தோன்றும் 
நட்பும் வேண்டாம் ....
தீய வளர்வதை -நீ 
வெட்டி விடுவதே .....
நன்றோ நன்று ....!!!
+
குறள் 811
+
தீ நட்பு,
+
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -31

Link to comment
Share on other sites

விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!

பயன் இருந்தால் பழகும் 
நட்பும் வேண்டாம் ....
பயனில்லாவிட்டால் ....
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!

துன்பத்தில் சரிபாதியும் ....
இன்பத்தில் சரிபாதியும் .....
இணையாத நட்பு ....
இருதென்ன பயன் ....?

+
குறள் 812
+
தீ நட்பு,
+
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை 
பெறினும் இழப்பினும் என்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -32
 

பயனோடு பழகும் நட்பு ....

பயனோடு பழகும் நட்பு ....
திருடர்களோடு பழகுவதும் ....
ஒன்றே ....!!!

பயனோடு பழகும் ....
நட்பானது ....
விலைமாதருக்கு சமனே ...
பயனொடு பழகுவதை ....
பயனற்றதாக்குனதே அறிவு ....!!!

+
குறள் 813
+
தீ நட்பு,
+
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது 
கொள்வாரும் கள்வரும் நேர்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -33

Link to comment
Share on other sites

பேராபத்து நட்பால் வரும் ....

பேராபத்து நட்பால் வரும் ....
இவன் நட்பால் கெடுதல் ...
வரும் என்றால் ஏன் தொடர்கிறாய் ...?
தீய நட்பை ....!!!

போர்க்களத்தில் கலை வாரும் 
என்ற குதிரைமீது -யார் ,,,?
போர் செய்வார்கள் ....?
விலக்கிவிடு அந்த குதிரையை ...!!!

+
குறள் 814
+
தீ நட்பு,
+
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் 
தமரின் தனிமை தலை.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -34

நட்பே வேண்டாம் கேடு நட்பு ....!!!

ஓடி ஓடி உதவி செய்தாலும் ....
எதிர்பாராத உதவி செய்தாலும் ....
யாருமே இதுவரை செய்யாத 
உதவி செய்தாலும் வேண்டாம் 
தீய நட்பு ....!!!

பாதுகாப்பு இல்லாத நட்பு ....
பயனற்ற நட்பாகும் ...
எதற்கு இந்த நட்பு -நட்பே ....
வேண்டாம் இந்த கேடு நட்பு ....!!!

+
குறள் 815
+
தீ நட்பு,
+
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை 
எய்தலின் எய்தாமை நன்று.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -35

Link to comment
Share on other sites

ன் என்று கேள்வி கேள் ....
ளனமாக இருந்துவிடாதே ....
ராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ளனமாக இருந்தமையே .....!!!

காதிபத்தியம் பல தோன்றியதால் ....
ழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
காதிபத்திய பொருளாதாரம் ......!!!

ணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
றிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
கலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
கன் அடியே போற்றியேன்று சரணடை ...
ழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!!!

ர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
டு தொடக்கிய ஆசானும்  ஏகன் .....
மாற்றுபவனை காட்டிலும் ....
மாறுபவனே புத்தி அற்றவன் .....
மாறாதே அத்துடன் ஏமாற்றாதே .....!!!

Link to comment
Share on other sites

மலர்களே 
மறைந்து விடுங்கள் ....
என்னவளின் 
அழகில் வாடிவிடுவீர்கள்...!!!

நட்சத்திரங்களே 
ஓடிவிடுங்கள் ...
என்னவளின் கண் 
சிமிட்டலில் ஒளியை இழந்திடுவீர் 

தென்றலே 
வீசுவதை நிறுத்து ....
என்னவளின் ....
மூச்சு காற்றில் காணாமல் போயிடுவீர்.....!

பனிதுளிகளே 
சிந்துவதை நிறுத்துங்கள்...
என்னவளின் ....
வியர்வை துளியில் மறைந்திடுவீர் ....!

குயில்களே 
பாடுவதை நிறுத்துங்கள் .....
என்னவளின் ...
குரலில் ஓசையில் இழந்திடுவீர்...! 

மயில்களே
தோகை விரிப்பதை நிறுத்துங்கள் ....
என்னவளின் ....
கூந்தல் அழகில் சிக்கி தவிப்பீர்கள் ...!

Link to comment
Share on other sites

கண்களே ...
கலங்காதீர்கள் ...
என்னவளின் இதயம் ...
அழகில்லை காதலும் ...
அழகில்லை ....!!!

இதயமே ....
வருந்தாதே ...
என்னவளிடம் இதயம் ....
இல்லை அவளிடம் ...
காதலும் இல்லை ......!!!

மனசே ....
மயங்காதே ....
என்னவளிடம் மனசே ...
இல்லை மயங்கி ...
நீ வேதனை படாதே ....!!!

கனவுகளே ...
களைந்துவிடுங்கள்...
என்னவளிடன் -என் 
நினைவுகள் இல்லை ...
கனவு வர வாய்ப்பேயில்லை ....!!!

இதயத்தின் ...
அழகே காதலின் ...
அழகு - இதயம் 
உள்ளவர்கள் காதலியுங்கள் ....!!!

Link to comment
Share on other sites

காதலின் வலிமை 
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!

நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!

+
காதல் சிதறல் 
கே இனியவன்

உன் செயல்கள் யாவும் ....
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

தொட்டு 
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு 
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு 
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு 
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

தினமும் 
உன் நினைவுகள் தான் 
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே 
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

நானும் 
நீயும் கை கோர்த்து .....
திரிந்த காலமெல்லாம் ....
கைவிரிச்சு போச்சு ....!!!

உன்னோடு பேசிய ....
வார்த்தையெல்லாம் ....
வீண் பேச்சாய் போச்சு .....!!!

என் இதயம் முழுதும் ....
நிறைந்திருக்கும் ....
நினைவுகள் மட்டும் ...
ஊற்று நீராய் ஊறுதடி ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

இரத்தம் வெளியில் ....
வராமல் என் இதயத்தை ....
கிழித்து சென்று விட்டாய் ...
பாவம் இதயம் நீ வருவாய் ...
என்று தவமிருக்கிறது ....!!!

காதல் உடலுக்கும் ....
உள்ளத்துக்கும் நன்மை ....
எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...?
உன் விஷமருந்தியும் ....
இறக்காமல் இருக்கிறேன் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

எத்தனை  முறைதான் ...
என்னை பிடிக்காதத்துபோல் ...
நடித்துகொண்டிருப்பாய் ....
தயவு செய்து மௌனத்தை ...
உடைத்து எறிந்துவிடு ....!!!

ஒன்றை மட்டும் நினைவு ....
படுத்திக்கொள் - உனக்கு ...
காதல் வலியே வராது ....
உன் இதயம் என்னிடம் ....
இருப்பதால் ......!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

என்னிடம் 
நிறைய இருக்கும் ....
காதலை உனக்கு ......
கொஞ்சமாவது ......
தர ஆசைப்படுகிறேன் ...
என்னை காதலித்து விடு ...!!!

வா உயிரே ...
உன்னிடம் வரப்போகும் ....
காதலையும் என்னுடன் ...
இருக்கும் காதலையும் ....
இணைத்து 
காதல் சாம்ராச்சியம் ....
உருவாக்குவோம் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

மழையில் 
நனைந்தபடி ....
அழுகிறாய்  -அப்போதும் ...
உன் கண்ணீர் எனக்கு ....
தெரிகிறது ....!!!

தூய 
காதலால் எதையும் ....
மறைக்கவும் முடியாது .....
மறக்கவும் முடியாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

யாரோடு 
உன்னை ஒப்பிடுவேன் ....?
எதனோடு 
உன்னை ஒப்பிடுவேன் ....?
ஒப்பிடப்படும் எல்லாவற்றையும் ....
காட்டிலும் -நீ 
உச்சமாக இருப்பதால் ....!!!
நம் காதலுக்கு நிகர் 
காதல் தான்....!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை

Link to comment
Share on other sites

பல மொழி வாழும் உலகில் ....
உயிர் மொழி எங்கள் 
தமிழ் மொழி .....

உலகில் 
வாழும் காதலருக்கு .....
ஊட்டசத்தாய் அமைவது ...
கவிதை மொழி ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
ஏனைய கவிதைகள் 

Link to comment
Share on other sites

சிறுவயதில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினார் 
அம்மா ....!!!

பள்ளி பருவத்தில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினார் ...
ஆசிரியர் ,.....!!!

பருவ வயதில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினான் 
உயிர் நண்பன் ....!!!

முதுமை வயதில் விழுந்தேன் ...
கை கொடுத்து தூக்கியது 
முதியோர் இல்லம் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
வாழ்க்கை கவிதைகள்

Link to comment
Share on other sites

விருந்தன்று விடுமுறை 
---------------------------

உல்லாசப்பயணம்
செய்யும் மந்தைகளுக்கு 
எம் வீட்டில் உல்லாச பயணி 
வந்ததும் விடுமுறை ....
வழங்கப்படும் ....!!!
+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
விருந்தன்று விடுமுறை

Link to comment
Share on other sites

கவலைக்கு மருந்து மதுவா ...?

காதலியை 
மறக்கமுடியவில்லை ...
அவளை மறக்க மது 
அருந்துகிறேன் ....!!!

மதுக்கடையில் கணவன்..
மனைவி கவலையுடன்
முறைப்பாட்டுடன் ....
விவாக ரத்து பத்திரத்துடன் ....!!!
+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
கவலைக்கு மருந்து மதுவா ...?

என்னோடு அழும் நண்பன் 
----

யாரோ
இறந்ததற்றகாக
கண்ணீர் விடும் 
மெழுகுதிரிபோல் ....!!!

என் தோல்விக்காக ...
என்னோடு சேர்ந்து ....
அழுகிறான் ...
என் நண்பன் .....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
என்னோடு அழும் நண்பன்

Link to comment
Share on other sites

தொலைபேசி அழைப்பு 

-----

காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது
தொலைபேசியே ....!!!
என்றாலும் காதலியின் ...
பேச்சை எப்போதும் 
கேட்கலாம் ....!!!

உன் தொலைபேசி ...
அழைப்பு மணிதான்... 
எனக்கு - இன்ப ஓசை ....
அபாய மணியாக மாற்றி 
விடாதே அன்பே ....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
தொலைபேசி அழைப்பு 

காதலும் உறவுதான் ...!!!
---
பலர் ஏங்குவதும்
ஏங்க வைத்து
பின் ஏமாற்றுவதும்
உறவு ....!!!

காதலும் 
உறவுதான் ...
ஏங்கவைக்கும் 
இன்பம் தரும் ...
ஏமாற்றும் ....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
காதலும் உறவுதான் ...!!!

Link to comment
Share on other sites

காதலி -மனைவி ....!!!
---
பூவாய் நிலவாய்
பெயரிட்ட பிரமன்
படைத்த நகல் பிரதி
பெண்.....!!!

உயிராய் உணர்வாய் ....
கனவாய் நினைவாய் ....
உடலாய் குருதியாய் ....
என்னோடு வாழ்பவள் ...
காதலி -மனைவி ....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
காதலி -மனைவி ....!!!

Link to comment
Share on other sites

காதலன் -காதலி ...!!!
---

மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிபற்ற  வரம் 
கனவு.....!!!

மனிதனிடம் இருந்து 
மனிதர்களுக்கு கிடைக்கும் 
அற்புத பொக்கிஷம் ...
காதலன் -காதலி ...!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
காதலன் -காதலி ...!!!

மழையும் கண்ணீரும் ....!!!

---

முகிலும் முகிலும் .....
காதல் கொண்டு மோதி ...
காயப்பட்டு பூமிக்கு வந்த...
மேக கண்ணீர் - மழை ....!!!

உன் 
கண்ணும் என் கண்ணும் ...
காதலால் மோதி வந்த மழை ....
கண்ணீர் ,,,,!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
மழையும் கண்ணீரும் ....!!!

Link to comment
Share on other sites

தபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....!!!
---
கடிதங்களுக்காக்காத்திருந்து....
காத்திருந்து கடைசியாக மனமுடைந்து.....
தற்கொலை செய்து கொண்டது....
எங்கள் வீட்டுத் தபால்ப்பெட்டி......!!!

உனக்காக கவிதை எழுதி எழுதி ....
கவிதையை திருத்தி திருத்தி .....
நிரம்பி விட்டது என் வீட்டு ....
குப்பை தொட்டி .....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
தபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....!!!

Link to comment
Share on other sites

ம் பொறியை அடக்கி ....
யங்களை தெளிவுபடுத்தி ....
ம்பூதத்தை வசப்படுத்தி .....
ந்து வகை நிலத்தை ஆழும் ...
யன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

யங்களை தூக்கி எறிந்து விடு ....
க்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
யக்காட்சிக்கு இடமளிக்காதே .....
யமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
யங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

சுவரியத்தை  நேர்மையாய் உழை ....
க்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
யிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
யிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

யா என்று பணிபோடு முதியோரை அழை ....
யர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
வாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
யனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.