Jump to content

கே இனியவன் கவிதைகள்


Recommended Posts

இயற்கையின் அற்புதத்தை ....
பார்த்தாயா ....?
மனிதனுக்கு ஓட்சிசனை தந்து ....
வாழவைக்கிறது ....!
மனிதன் வெளியேற்றும் ....
காபனீர் ஓட்சைட்டில் ....
தாவரத்தை வாழவைக்கிறது ....!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
இயற்கை கவிதை 

Link to comment
Share on other sites

  • Replies 390
  • Created
  • Last Reply

முயற்சியாளன்...
ஆபத்தை சந்திக்கிறான் ....
வெற்றி பெறும்போது ...
மறு முதலீடு செய்கிறான் ....
தோல்வியடையும்போது ....
புதுமையை தேடுகிறான் ....!!!
நான் ஒரு முயற்சியாளன் ...!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
முயற்சி கவிதை 

ஒருவனுக்கு பெரும் ....
பாக்கியம் .....?
தாயின் மடியில் பிறந்தவன் ....
தாய் மடியில் இறப்பதுதான் ....
இறைவா அந்த பாக்கியத்தை ....
எனக்கு தராமல் அன்னையை ....
பறித்துவிட்டாயே....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
அம்மா கவிதை

Link to comment
Share on other sites

ழுந்திரு மனிதா ....
ழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
ன்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
ழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
ட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

வன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
வன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
வனல்ல அவன் - இறைவன் .....!
ல்லோர் இதயத்திலும் இருக்கும் 
ல்லையற்றவன் அவன் ....!!!

ங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
ப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
தற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
ந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
ல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

திரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
டுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
ல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
டுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
ல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!
 

Link to comment
Share on other sites

நடிப்பு நட்பு வேண்டாம் ...

உயிராய் உருகுவதுபோல் 
உனக்கே வாழ்வதுபோல் 
நடிப்பு நட்பு வேண்டாம் ...
அது தீ நட்பு .....!!!

உள்ளத்தில் இருந்து ...
தோன்றாத நடப்பும் 
உதட்டில் தோன்றும் 
நட்பும் வேண்டாம் ....
தீய வளர்வதை -நீ 
வெட்டி விடுவதே .....
நன்றோ நன்று ....!!!
+
குறள் 811
+
தீ நட்பு,
+
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -31

Link to comment
Share on other sites

விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!

பயன் இருந்தால் பழகும் 
நட்பும் வேண்டாம் ....
பயனில்லாவிட்டால் ....
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!

துன்பத்தில் சரிபாதியும் ....
இன்பத்தில் சரிபாதியும் .....
இணையாத நட்பு ....
இருதென்ன பயன் ....?

+
குறள் 812
+
தீ நட்பு,
+
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை 
பெறினும் இழப்பினும் என்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -32
 

பயனோடு பழகும் நட்பு ....

பயனோடு பழகும் நட்பு ....
திருடர்களோடு பழகுவதும் ....
ஒன்றே ....!!!

பயனோடு பழகும் ....
நட்பானது ....
விலைமாதருக்கு சமனே ...
பயனொடு பழகுவதை ....
பயனற்றதாக்குனதே அறிவு ....!!!

+
குறள் 813
+
தீ நட்பு,
+
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது 
கொள்வாரும் கள்வரும் நேர்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -33

Link to comment
Share on other sites

பேராபத்து நட்பால் வரும் ....

பேராபத்து நட்பால் வரும் ....
இவன் நட்பால் கெடுதல் ...
வரும் என்றால் ஏன் தொடர்கிறாய் ...?
தீய நட்பை ....!!!

போர்க்களத்தில் கலை வாரும் 
என்ற குதிரைமீது -யார் ,,,?
போர் செய்வார்கள் ....?
விலக்கிவிடு அந்த குதிரையை ...!!!

+
குறள் 814
+
தீ நட்பு,
+
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் 
தமரின் தனிமை தலை.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -34

நட்பே வேண்டாம் கேடு நட்பு ....!!!

ஓடி ஓடி உதவி செய்தாலும் ....
எதிர்பாராத உதவி செய்தாலும் ....
யாருமே இதுவரை செய்யாத 
உதவி செய்தாலும் வேண்டாம் 
தீய நட்பு ....!!!

பாதுகாப்பு இல்லாத நட்பு ....
பயனற்ற நட்பாகும் ...
எதற்கு இந்த நட்பு -நட்பே ....
வேண்டாம் இந்த கேடு நட்பு ....!!!

+
குறள் 815
+
தீ நட்பு,
+
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை 
எய்தலின் எய்தாமை நன்று.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் -35

Link to comment
Share on other sites

ன் என்று கேள்வி கேள் ....
ளனமாக இருந்துவிடாதே ....
ராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ளனமாக இருந்தமையே .....!!!

காதிபத்தியம் பல தோன்றியதால் ....
ழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
காதிபத்திய பொருளாதாரம் ......!!!

ணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
றிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
கலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
கன் அடியே போற்றியேன்று சரணடை ...
ழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!!!

ர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
டு தொடக்கிய ஆசானும்  ஏகன் .....
மாற்றுபவனை காட்டிலும் ....
மாறுபவனே புத்தி அற்றவன் .....
மாறாதே அத்துடன் ஏமாற்றாதே .....!!!

Link to comment
Share on other sites

மலர்களே 
மறைந்து விடுங்கள் ....
என்னவளின் 
அழகில் வாடிவிடுவீர்கள்...!!!

நட்சத்திரங்களே 
ஓடிவிடுங்கள் ...
என்னவளின் கண் 
சிமிட்டலில் ஒளியை இழந்திடுவீர் 

தென்றலே 
வீசுவதை நிறுத்து ....
என்னவளின் ....
மூச்சு காற்றில் காணாமல் போயிடுவீர்.....!

பனிதுளிகளே 
சிந்துவதை நிறுத்துங்கள்...
என்னவளின் ....
வியர்வை துளியில் மறைந்திடுவீர் ....!

குயில்களே 
பாடுவதை நிறுத்துங்கள் .....
என்னவளின் ...
குரலில் ஓசையில் இழந்திடுவீர்...! 

மயில்களே
தோகை விரிப்பதை நிறுத்துங்கள் ....
என்னவளின் ....
கூந்தல் அழகில் சிக்கி தவிப்பீர்கள் ...!

Link to comment
Share on other sites

கண்களே ...
கலங்காதீர்கள் ...
என்னவளின் இதயம் ...
அழகில்லை காதலும் ...
அழகில்லை ....!!!

இதயமே ....
வருந்தாதே ...
என்னவளிடம் இதயம் ....
இல்லை அவளிடம் ...
காதலும் இல்லை ......!!!

மனசே ....
மயங்காதே ....
என்னவளிடம் மனசே ...
இல்லை மயங்கி ...
நீ வேதனை படாதே ....!!!

கனவுகளே ...
களைந்துவிடுங்கள்...
என்னவளிடன் -என் 
நினைவுகள் இல்லை ...
கனவு வர வாய்ப்பேயில்லை ....!!!

இதயத்தின் ...
அழகே காதலின் ...
அழகு - இதயம் 
உள்ளவர்கள் காதலியுங்கள் ....!!!

Link to comment
Share on other sites

காதலின் வலிமை 
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!

நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!

+
காதல் சிதறல் 
கே இனியவன்

உன் செயல்கள் யாவும் ....
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

தொட்டு 
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு 
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு 
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு 
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

தினமும் 
உன் நினைவுகள் தான் 
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே 
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

நானும் 
நீயும் கை கோர்த்து .....
திரிந்த காலமெல்லாம் ....
கைவிரிச்சு போச்சு ....!!!

உன்னோடு பேசிய ....
வார்த்தையெல்லாம் ....
வீண் பேச்சாய் போச்சு .....!!!

என் இதயம் முழுதும் ....
நிறைந்திருக்கும் ....
நினைவுகள் மட்டும் ...
ஊற்று நீராய் ஊறுதடி ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

இரத்தம் வெளியில் ....
வராமல் என் இதயத்தை ....
கிழித்து சென்று விட்டாய் ...
பாவம் இதயம் நீ வருவாய் ...
என்று தவமிருக்கிறது ....!!!

காதல் உடலுக்கும் ....
உள்ளத்துக்கும் நன்மை ....
எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...?
உன் விஷமருந்தியும் ....
இறக்காமல் இருக்கிறேன் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

எத்தனை  முறைதான் ...
என்னை பிடிக்காதத்துபோல் ...
நடித்துகொண்டிருப்பாய் ....
தயவு செய்து மௌனத்தை ...
உடைத்து எறிந்துவிடு ....!!!

ஒன்றை மட்டும் நினைவு ....
படுத்திக்கொள் - உனக்கு ...
காதல் வலியே வராது ....
உன் இதயம் என்னிடம் ....
இருப்பதால் ......!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

என்னிடம் 
நிறைய இருக்கும் ....
காதலை உனக்கு ......
கொஞ்சமாவது ......
தர ஆசைப்படுகிறேன் ...
என்னை காதலித்து விடு ...!!!

வா உயிரே ...
உன்னிடம் வரப்போகும் ....
காதலையும் என்னுடன் ...
இருக்கும் காதலையும் ....
இணைத்து 
காதல் சாம்ராச்சியம் ....
உருவாக்குவோம் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

மழையில் 
நனைந்தபடி ....
அழுகிறாய்  -அப்போதும் ...
உன் கண்ணீர் எனக்கு ....
தெரிகிறது ....!!!

தூய 
காதலால் எதையும் ....
மறைக்கவும் முடியாது .....
மறக்கவும் முடியாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

யாரோடு 
உன்னை ஒப்பிடுவேன் ....?
எதனோடு 
உன்னை ஒப்பிடுவேன் ....?
ஒப்பிடப்படும் எல்லாவற்றையும் ....
காட்டிலும் -நீ 
உச்சமாக இருப்பதால் ....!!!
நம் காதலுக்கு நிகர் 
காதல் தான்....!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை

Link to comment
Share on other sites

பல மொழி வாழும் உலகில் ....
உயிர் மொழி எங்கள் 
தமிழ் மொழி .....

உலகில் 
வாழும் காதலருக்கு .....
ஊட்டசத்தாய் அமைவது ...
கவிதை மொழி ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
ஏனைய கவிதைகள் 

Link to comment
Share on other sites

சிறுவயதில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினார் 
அம்மா ....!!!

பள்ளி பருவத்தில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினார் ...
ஆசிரியர் ,.....!!!

பருவ வயதில் விழுந்தேன் 
கை கொடுத்து தூக்கினான் 
உயிர் நண்பன் ....!!!

முதுமை வயதில் விழுந்தேன் ...
கை கொடுத்து தூக்கியது 
முதியோர் இல்லம் ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
வாழ்க்கை கவிதைகள்

Link to comment
Share on other sites

விருந்தன்று விடுமுறை 
---------------------------

உல்லாசப்பயணம்
செய்யும் மந்தைகளுக்கு 
எம் வீட்டில் உல்லாச பயணி 
வந்ததும் விடுமுறை ....
வழங்கப்படும் ....!!!
+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
விருந்தன்று விடுமுறை

Link to comment
Share on other sites

கவலைக்கு மருந்து மதுவா ...?

காதலியை 
மறக்கமுடியவில்லை ...
அவளை மறக்க மது 
அருந்துகிறேன் ....!!!

மதுக்கடையில் கணவன்..
மனைவி கவலையுடன்
முறைப்பாட்டுடன் ....
விவாக ரத்து பத்திரத்துடன் ....!!!
+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
கவலைக்கு மருந்து மதுவா ...?

என்னோடு அழும் நண்பன் 
----

யாரோ
இறந்ததற்றகாக
கண்ணீர் விடும் 
மெழுகுதிரிபோல் ....!!!

என் தோல்விக்காக ...
என்னோடு சேர்ந்து ....
அழுகிறான் ...
என் நண்பன் .....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
என்னோடு அழும் நண்பன்

Link to comment
Share on other sites

தொலைபேசி அழைப்பு 

-----

காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது
தொலைபேசியே ....!!!
என்றாலும் காதலியின் ...
பேச்சை எப்போதும் 
கேட்கலாம் ....!!!

உன் தொலைபேசி ...
அழைப்பு மணிதான்... 
எனக்கு - இன்ப ஓசை ....
அபாய மணியாக மாற்றி 
விடாதே அன்பே ....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
தொலைபேசி அழைப்பு 

காதலும் உறவுதான் ...!!!
---
பலர் ஏங்குவதும்
ஏங்க வைத்து
பின் ஏமாற்றுவதும்
உறவு ....!!!

காதலும் 
உறவுதான் ...
ஏங்கவைக்கும் 
இன்பம் தரும் ...
ஏமாற்றும் ....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
காதலும் உறவுதான் ...!!!

Link to comment
Share on other sites

காதலி -மனைவி ....!!!
---
பூவாய் நிலவாய்
பெயரிட்ட பிரமன்
படைத்த நகல் பிரதி
பெண்.....!!!

உயிராய் உணர்வாய் ....
கனவாய் நினைவாய் ....
உடலாய் குருதியாய் ....
என்னோடு வாழ்பவள் ...
காதலி -மனைவி ....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
காதலி -மனைவி ....!!!

Link to comment
Share on other sites

காதலன் -காதலி ...!!!
---

மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிபற்ற  வரம் 
கனவு.....!!!

மனிதனிடம் இருந்து 
மனிதர்களுக்கு கிடைக்கும் 
அற்புத பொக்கிஷம் ...
காதலன் -காதலி ...!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
காதலன் -காதலி ...!!!

மழையும் கண்ணீரும் ....!!!

---

முகிலும் முகிலும் .....
காதல் கொண்டு மோதி ...
காயப்பட்டு பூமிக்கு வந்த...
மேக கண்ணீர் - மழை ....!!!

உன் 
கண்ணும் என் கண்ணும் ...
காதலால் மோதி வந்த மழை ....
கண்ணீர் ,,,,!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
மழையும் கண்ணீரும் ....!!!

Link to comment
Share on other sites

தபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....!!!
---
கடிதங்களுக்காக்காத்திருந்து....
காத்திருந்து கடைசியாக மனமுடைந்து.....
தற்கொலை செய்து கொண்டது....
எங்கள் வீட்டுத் தபால்ப்பெட்டி......!!!

உனக்காக கவிதை எழுதி எழுதி ....
கவிதையை திருத்தி திருத்தி .....
நிரம்பி விட்டது என் வீட்டு ....
குப்பை தொட்டி .....!!!

+
கே இனியவன் 
தலைப்புகளும் கவிதைகளும் 
தபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....!!!

Link to comment
Share on other sites

ம் பொறியை அடக்கி ....
யங்களை தெளிவுபடுத்தி ....
ம்பூதத்தை வசப்படுத்தி .....
ந்து வகை நிலத்தை ஆழும் ...
யன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

யங்களை தூக்கி எறிந்து விடு ....
க்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
யக்காட்சிக்கு இடமளிக்காதே .....
யமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
யங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

சுவரியத்தை  நேர்மையாய் உழை ....
க்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
யிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
யிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

யா என்று பணிபோடு முதியோரை அழை ....
யர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
வாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
யனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.