Jump to content

கே இனியவன் கவிதைகள்


Recommended Posts

வருமானம்

உன்னால் ஏதேனும்( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் ) இருக்கும் என்பதான் வருமானம் 
என்கிறார்களோ ...

உலக அழிவு

2012ல் உலகம் அழியாது என்று
முதல் முதல் சொன்னவள் ..என்
காதலிதான் ...
என்னை முத்தமிட்டி சொன்னால்
2013ல் மீண்டும் தருவேன் என்று
நிச்சயம் உலகம் அழியும்
இந்த உலகில் காதல் இல்லாத போது

இறப்பதற்கு முன் வருவாயா?
----
உன் நினைவுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
வெகுவாக குறைந்து கொண்டே
வருகிறது
இறப்பதற்கு முன் வருவாயா?

உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்

கண் இல்லாமல்
காதல் வரலாம், கற்பனை 
இல்லாமல் கவிதை வரலாம், 
ஆனால் உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது, 
இதயத்தில் இடம் கொடுப்பது காதல் 
இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான் நேசிக்கும் 
பலர் என்னை நேசிக்க மறந்தாலும்,
என்னை
நேசிக்கும் உன்னை உயி௫ள்ள 
வரை மறக்க மாட்டேன்

Link to comment
Share on other sites

  • Replies 390
  • Created
  • Last Reply

எனக்கு மட்டுமே சொந்தம்


யாருக்கு வேண்டுமானாலும்
உன் உடல் சொந்தமாகலாம்
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம்

உன் இதழ்களை
யாரேனும் சுவைக்கலாம்
ஆனால் உன் இதயத்தை
தொட்டவன் நான் மட்டுமே..

கிரிக்கட் காதல்


நானும் நீயும் ..
அப்பபோது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது

மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல

அதிஸ்டம் இல்லாத
--
அதிஸ்டம் இல்லாத ஒருவன்
அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்

உண்மைதான்


கண்ணாடிக்கு 
எதிர் விம்பம் இருக்கிறது
என்பது உண்மைதான்
கண்ணாடி முன் நான் நின்றால்
நீ தெரிகிறாய்

இதய மயானம்


காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை
 
Link to comment
Share on other sites

வாடினால்

---

மரம் வாடினால்
தண்ணீர் விடலாம்.
மனம் வாடினால்
கண்ணீர் விடலாம் ...!!!

இன்னும் இறக்கவில்லை ...
-----
நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை
உன் நினைவால் 
காதல் ஒரு உயிர் கொள்ளி ...!!!

என் தொலைபேசி காதலி
------------

காற்றுக்கு தான்.....
நன்றி கூறுகிறேன்....
தினம் உன்குரல்...
சேர்ப்பதால் .....
தொலைவில் - நீ 
தொலைபேசியிலும் -நீ 
இன்ப தொல்லையும் -நீ 

Link to comment
Share on other sites

நீ மட்டும்
-----
செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!
 

குத்தாதீர்
----
தபாலகமே காதலி அனுப்பும்....
தீபாவளி  வாழ்த்து அட்டையை ....
இலச்சனையால் குத்தாதீர் ....
வர இருப்பது.......
வாழ்த்து அட்டை அல்ல ....
என் உயிரின் இதய அட்டை ...!!!

 

சொல்லமாட்டேன்...
-----
உன்னை என் இதயமென்று 
சொல்லமாட்டேன்...
என் இதயத்தில் இருப்பவன் 
நீயென்றே சொல்லுவேன்!!!

உன்னை உயிர் என்று ....
சொல்லமாடேன் ....
என் உயிர் வாழ்வதே ...
நீ தான் என்பேன் ....!!!
 
Link to comment
Share on other sites

காதல் உறவு ....!!!
---------

பலமுறை ஏங்குவதும் 
ஏங்க வைத்து பின் ....
வார்த்தையில் தூங்குவதும் ....
தூங்கிய வார்த்தையை ....
துலங்கமாய் கூறுவதும் ....
காதல் உறவு ....!!!

காதல் கனவு!
----
மனிதன் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம் கனவு ....!!!

என்னவள் ....
என் இன்பத்துக்கு ....
இலவசமாய் வழங்கும் ....
சேவை காதல் கனவு .....!!!

Link to comment
Share on other sites

ஒரு துளி கண்ணீர்
------

உன் கண்களில்
ஒரு துளி கண்ணீர்
வருமென்றால் என்
மரணத்தைக் கூட
நிறுத்தி வைப்பேன்...!!!

உன் ஆத்மாவில் ....
சிறு உரசல் காதலாய் 
வருமென்றால் ....
மறு ஜென்மம் வரை ....
காத்திருப்பேன் ....!!!

மகிழ்வோடு வாழ்
----
நான் கோபப்படாமல் இருப்பேனாக.
நான் வெறுப்பில்லாமல் இருப்பேனாக.
நான் பொறாமைப்படாமல் இருப்பேனாக.
நான் மனக் கவலையின்றி இருப்பேனாக.
நான் உடல் நலத்தோடு இருப்பேனாக.
நான் அமைதியோடு வாழ்வேனாக.
நான் மகிழ்வோடு வாழ்வேனாக.
நான் உழைத்து கொண்டே இருப்பேனாக ...
நான் அறிவை தேடிக்கொண்டே இருப்பேனாக ...
நான் தியானித்துக்கொண்டு இருப்பேனாக ....
நான் காதலித்து கொண்டு இருப்பேனாக ....
+
மகிழ்வான வாழ்வுக்கு இதை ....
தொடர்ந்து செய்வேனாக ....!!!

Link to comment
Share on other sites

என் மனைவி
-------------
ஒரு வேளை 
எனக்கு முன் என் மனைவி இறந்தால்
அவளுக்காக உலகிலையே புதிய கோயில் 
ஒன்றைக்கட்டுவேன் ..இதுவே மனைவிக்கு கட்டிய
மனைவி மஹாலாகஇருக்கும் ..
ஆனால் அந்த கோயிலை நான் தான்....!!!

நான் தான் அமைப்பை வடிவமைப்பேன்
நான் தான் கல் உடைப்பேன்
நான் தான் மண் சுமப்பேன்
நான்தான் கட்டி முடிப்பேன்
நானே அழகு பார்ப்பேன் -...!!!

அந்த கோவிலில் என்குடும்ப உறுப்பினரை 
யாரையும் வணங்க விடமாட்டேன் .-
அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் 
.நான் கடவுளாக பார்க்கிறேன் ...
என் மீதிக்காலத்தை அங்கேயே 
உண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...!!!

Link to comment
Share on other sites

  • 7 months later...
அரச வாழ்க்கைதான் வாழுகிறது ....!!!

ஆடம்பர மாளிகையில்
அலங்கார மின் விளக்குகளே 
அவர்கள் வீட்டு நட்சத்திரங்கள் 
எம் வீட்டில் நட்சத்திரங்களே 
அலங்கார விளக்குகள் 
வீட்டு கூரையில் பிரகாசமாய் 
ஒளிந்துகொண்டிருக்கும் 
எங்கள் வீட்டு மின் விளக்குகள் ….!!!

ஒரு கடி கடித்து விட்டு 
ஓரமாய் கிடக்கும் ஆப்பிள் பழம் 
அந்த வீட்டின் அநாதை பிறப்பு 
எப்போது எங்கள் வீட்டுக்கு 
அப்பிள் பழம் வரும் என்பது 
அப்பிளுக்கு எங்கள் வீடு 
பிரதம விருந்தினர் …..!!!

பழங்கஞ்சிதான் எங்கள் 
தினம் தோறும் ஊட்டப்பாணம் 
எம் குழந்தையின் அழுகை ஓசை 
அடங்கும் வரை …
“குழலினிது யாழினிது ” என்ற 
குறள் கூட வியப்புடன் தான் 
பார்க்கிறோம் …….!!!

சப்பாத்து இல்லையே என்று 
கவலைப்படாதே -கால் 
இருக்கே என்று சந்தோசப்படு 
என்றான் ஒரு தத்துவ ஞானி 
பழங்கஞ்சியாவது கிடைக்கிறதே 
என்று சந்தோசப்படுவதன் மூலம் 
வெறும் வயிற்றோடு துடிக்கும் 
குடும்பத்தை விட எம் குடும்பம் 
அரச வாழ்க்கைதான் வாழுகிறது ….!!! 

Link to comment
Share on other sites

  • 3 months later...

"மனவேறுபாடு "
----------------------
மனிதனோடு ......
மட்டுமல்ல பகை ......
உயிரினங்கள் .....
எல்லாவற்றோடும் பகை .....!!!

எல்லாவற்றோடும் ....
ஒப்பிட்டு ,வேறுபடுத்தி ....
தன்னை தானே குறைத்து ....
மதிப்பிட்டு வாழ்வதே .....
"மனவேறுபாடு " என்பர் ....!!!
+
குறள் 851
+
இகல்
+
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் 
பண்பின்மை பாரிக்கும் நோய்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 71

Link to comment
Share on other sites

நண்பா .....
நீ எனக்கு எத்தனை .....
வலிகளை துன்பங்களை ....
தந்தாலும் - நீ எந்தன் ....
நண்பனே ......!!!

இன்பத்தை தருபவன் .....
மட்டுமே நண்பன் இல்லை .....
துன்பத்தையும் தருவான் .....
சகித்து கொண்டு அவன் ....
நட்பையும் தொடர்வதே ....
நட்பின் சிறந்த குணம் ....!!!  

+
குறள் 852
+
இகல்
+
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி 
இன்னாசெய் யாமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 72
+
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites


நீக்கு நீக்கு ....
மனவேறுபாடு ......
நீக்கு .........
நீக்கவேண்டியதில் .....
இதுவே முதன்மை ....!!!

நீக்கிய மனவேறுபாடை ......
நீக்கிய கணமே ........
கொட்டி கிடைக்கும் .....
புகழ் ........!!!

+
குறள் 853
+
இகல்
+
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் 
தாவில் விளக்கம் தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 73
+
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

துன்பத்தில் கொடிய ....
துன்பம் மனத்துன்பம் .....
மனதை கொல்லும்....
மகா துன்பம் .......!!!

மனத்துன்பத்தை ......
நீக்கியவன் என்னவோ .......
அதுவே அவனுக்கு ....
இன்பத்தில் பெரும் .....
இன்பமாகும் .....!!!

+
குறள் 854
+
இகல்
+
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் 
துன்பத்துள் துன்பங் கெடின்
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 74
+
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

மனவேறுபாடை .....
தோன்றும் போதே ....
தடுக்கும் ஆற்றல் .....
எவனுக்கு வருகிறதோ ....?
அவனை வெல்ல இந்த .....
உலகில் யாரும் இல்லை .....!!!

மன கசப்பை நீக்கியவன் .....
முன் அனைவரும் தோல்வியை .....
சந்தித்தே ஆகவேண்டும் .....!!!
+
குறள் 855
+
இகல்
+
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே 
மிக்லூக்கும் தன்மை யவர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 75
+

திருக்குறளை கொண்டு எழுதிய என் கவிதைகள் 
------------------
திருக்குறளும் இன்பத்து பால் - 250 கவிதைகள் 
திருக்குறளும் நட்பும்  - 75 கவிதைகள் ( தொடரும் )
திருக்குறள் சென்றியூ - 100 கவிதைக்கு மேல் 
திருக்குறள் வசனக்கவிதை - 10 கவிதை (தொடரும் )
திருக்குறள் கதையும் கவிதையும் - 05 கவிதை (தொடரும் )

நன்றி 
கவிப்புயல் இனியவன் 
 

Link to comment
Share on other sites

  • 8 months later...

உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இதயத்தில் குடியிருப்பவளே....
மெதுவாக மூச்சு விடுகிறேன் .....
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....!

-------------------------------

கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!

-------------------------------

காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்......
இரண்டையும் செய்பவன் ஞானி.....!

-------------------------------

உலக போதையிலேயே கொடூரம்.......
உன் போதை கண் தான் -இன்னும்.......
போதையில் இருந்து மீளவில்லை........!

-------------------------------

சிவன் கண் திறந்தார் நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்தாய்  நான் எரிந்தேன்
நீ எப்போது என்னை உயிர்ப்பிப்பாய்.......?

------------------------------

நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை

---------------------------------------

நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்

-------------------------------

உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்

-------------------------------

பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்

-------------------------------

சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வலியில் இருந்து மீள......!

------------------------------

நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!

------------------------------

நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!

------------------------------

வாட்சப் , எஸ் ம் எஸ் , குறுஞ்கவிதைகள்
&
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

கவிப்புயலின் சிந்தனைகள் 

^^^
எரித்தால் ஒரு பிடி சாம்பல் 
பிடித்தால் ஒருபிடி இதயம் 
இடையில் ஆயிரம் ஆயிரம் 
சுமைகள் ....!

^^^

கூடி இருந்து சிரிக்கும் 
நண்பனையும் பார் ...!
தனியே இருந்து .....
அழுதபோது தன் சுட்டு 
விரலால் துடைத்த 
நண்பனையும் பார் ...!
சிரிக்கும் நண்பர்கள் 
நிலைப்பதில்லை ....!

^^^

பெண்ணின் அழுகை 
வலிமையானது 
ஆணின் அழுகை 
கொடூரமானது 
ஆண் அழுதால் 
அந்த குடும்பமே 
அழும் ....!

^^^

தெளிவான அறிவோடு பேசுங்கள்........
இல்லையேல் தெரியாது என்ற அறிவோடு.....
இருங்கள்.........!

^^^

கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 3 months later...

கொக்கரிப்பவனிடம் வீரமில்லை.....
கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....
கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....
கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!

கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......
கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......
கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......
கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!

கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........
கொடும்புலி கொள்கையானது.......
கொக்கின் பொறுமை விசித்திரமானது.......
கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.