Jump to content

கே இனியவன் கவிதைகள்


Recommended Posts

ஆறடி பனை போல் 
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை 
பாவாடை போடச்சொல்லி .....?

குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே 
குதி இருக்குதுகால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர 
கண்டதையும்வைதிருந்தவளே 
கை இருக்குதுகைப்பை எங்கே ...?

கண்டதையும் பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
உன் முகம் எங்கே .....?
முகம் இருக்குது அழகு எங்கே ..?

கானா கவிதை 
கே இனியவன்

Link to comment
Share on other sites

  • Replies 390
  • Created
  • Last Reply

காதல் என்று சொல்லிக்கொண்டு
தெருக்களின் மூலைகளிலும் ...
தெரு சனங்கள் கூடுமிடத்திலும் ....
உலகில் நீங்கள் மட்டும் தான் ....
மனிதர் என்று நினைப்பவர்களே ....
தெருவோரா காதல் செய்பவர்களே ....
உங்களை கட்டையால் அடிக்க ....
முடியவில்லை என்னால் .....
கவிதையால் அடிக்கிறேன் ......!!!


சிறுவர் பூங்காவிலும் ...
சிறுவர் பாடசாலை வீதிகளிலும் 
பேரூந்தின் இறுதி ஆசனத்திலும் ...
திரை அரங்கிலும் தெரு எங்கிலும் ...
கேவலம் சாமியின் இடத்திலும் ...
சாமியின் ஊர்வலத்திலும் .....
காதல் என்று சொல்லி காதலை ....
கேவலப்படுத்தும் மடையர்களே ....
உங்களை கட்டையால் அடிக்க ....
முடியவில்லை என்னால் .....
கவிதையால் அடிக்கிறேன் ......!!!


ஒரு குடைக்குள் இருவரும்
நடமாமும் விபச்சாரம் செய்து ....
காதல் என்று காதலை வியாபாரம் ....
செய்யும் மூடர்களே அடிப்பேன் .....
கட்டையால் அல்ல ..
என் கவிதை சாட்டையால் ....!

Link to comment
Share on other sites

ஒருவன் 
வெற்றி பெற வேண்டும் 
என ஆசைப்படால் ......
அதிகாலை 
ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும் ....!!!

ஒருவன் 
சாதனை செய்ய வேண்டும் ....
என்ற ஏக்கம் இருந்தால் 
அதிகாலை ........
நான்கு மணிக்கே துயில் எழவேண்டும் ....!!!

ஒருவனை..... 
உலகம் திரும்பி பார்க்க ....
வேண்டுமென்றால் அவன் .....
அதிகாலை ......
மூன்று மணிக்கு ....
துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும் ....!!!

இவை..... 
வாழ்க்கையாக மாறவேண்டும் .....
சிலநாட்கள் சிலமாதங்கள் போதாது ....
வெற்றியடைந்தவர்கள் அனைவரும் ....
இந்த நிலையில் தான் வெற்றி ....
அடைந்திருக்கிறார்கள் ......!!!

முயற்சித்து பாருங்கள் ....
வெற்றி நிச்சயம் .....!!!

Link to comment
Share on other sites

ஈமெயில் வந்தவுடன் ......
தந்தி செயலிழந்தது......
நம் காதலும் அதேபோல் .....
வசதியான இடம் வந்தது .....
நான் செயழிலந்தேன் ....!!!

என்னதான் ஈமெயில் ....
அனுப்பினாலும் ....
கடிதம்.. தந்தி எழுதும் ...
சுகம் ஈமெயிலில் ....
வரவே வராது .....!!!

நீயும் உணர்வாய் .....
என்ன வசதி வந்தாலும் .....
என் முதல் காதல் ....
மூச்சுவரை இருக்கும் ....!!!

+

கே இனியவன் 
நவீன சிந்தனை கவிதை 
தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

Link to comment
Share on other sites

ஜாவா என்பார்கள் ....
மாயா என்பார்கள் ....
கணனியில் காலத்துக்கு ....
காலம் மாறிக்கொண்டே ....
போகிறது அதன் குணம் ....!!!

காதலில் .....
இன்று ஒன்று நாளை ஓன்று .....
என்று வாழ்பவன் ....
காதலிக்கவில்லை ......
காதலை தவறாக புரிந்தவன் ....!!!

காதல் என்பது ....
வன்பொருள் கணனிபகுதி .....
நினைவுகளும் கனவுகளும் ....
மென் பொருள் கணனி பகுதி ....!!!

+

கே இனியவன் 
நவீன சிந்தனை கவிதை 
தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

Link to comment
Share on other sites

இன்பமாக வாழ்ந்து .....
இல்லற வாழ்க்கையை .....
இறுதிவரை வாழ்ந்தவனுக்கு .....
இறைவன் கொடுக்கும் ....
இன்ப அன்பளிப்பே ....
மரணம் .....!!!

நோயினால் அவத்திப்பட்டு.....
எப்போது தனக்கு மரணம் ....
காத்திருக்கும் நோயாளிக்கு .....
இறைவன் கொடுக்கும் .....
அளப்பரிய வெகுமதி ....
மரணம் .......!!!

தெரியாமல் மனிதனாய் ....
பூவுலகில் பிறந்தவனின் ....
முட்டாள் தனமான செயல் ....
தற்கொலை மரணம் .....!
இறைவன் தந்த உடலையும் ....
உயிரையும் -அனுமதியின்றி ....
பறிக்கும் செயலே தற்கொலை.... 
மரணம் ...!!!

மரணத்தை விரும்புபவன் ....
மரணத்தோடு வாழ்பவன் .....
மரணம் இயற்கையின்கொடை.....
மரணத்தை உணர்ந்து வாழ்பவன் ....
மரணத்தை தவமாய் கருதுபவன் ....
பிரபஞ்சத்தில் ஞானி .....!!!

Link to comment
Share on other sites

வாழ்வில் நான்
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் - நீ

நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் - நீ

உனக்கெனக்கொடுக்க
உண்மைக்காதலும் என்
உயிரும் மட்டுமே
உள்ளது என்னிடம் .....!
நீ எதுவும் தர முடிந்தால் ....
உள்ளத்தால் உண்மையான ...
காதலை தந்துவிடு ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Link to comment
Share on other sites

நீ 
தூக்கி எறிந்த -என் இதயம்
துடித்துக்கொண்டு இருக்கிறது ....
சிதறு தேங்காய் போல் ....
சிதறிக்கிடந்தாலும் .....
இன்னும் இறக்காமல் .....
துடித்துக்கொண்டே இருக்கிறது ....!!!


நீ தூக்கி எறிந்த ....
உன் நினைவுகளும்....
என் நினைவுகளோடு.... 
சேர்ந்து அழுதுகொண்டே ....
இருக்கிறதடி ......!!!

என் 
நரம்புகள் துடி துடித்து 
சாகுதடி ....!
என் நரம்புகளில்....
நகர் வலம் வரும்.....
உன் நினவகளுடன் ....
கலந்த என் நினைவுகளும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
 

பகல் நேர நிலவு
இரவு நேர சூரியன்

நீரற்ற அருவி
இசையற்ற காடு

இவையெல்லாம் 
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Link to comment
Share on other sites

உயிருள்ள ஒரு உருவம் கண்ணுக்குத் தெரியாது மறைந்துபோகத் தொடங்கும் ஆரம்பமே மரணம்.

Link to comment
Share on other sites

உயிருள்ள ஒரு உருவம் கண்ணுக்குத் தெரியாது மறைந்துபோகத் தொடங்கும் ஆரம்பமே மரணம்.

ஆமாம் 
நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

காதலிக்கும் போது....
கிறுக்கிய வரிகளை .....
காதல் கவிதை என்றாள் ....
அற்புதம் அற்புதம் ....
இன்னும் எழுதுங்கள் ...
என்றாள்........!!!

காதலில் தோற்றபின் ....
கிறுக்கிய வரிகளை ....
காதல் தத்துவம் என்றாள் ....
போதும் போதும் ....
இனிமேல் எழுத வேண்டாம் ...
என்கிறாள் ....!!!
+
கே இனியவன் 
காதல் கவிதையும் தத்துவமும் 01

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரா இருக்கு இனியவன்!

காதலில் வெண்டாப்பிறகு நான் உண்மையாக கவிதை எழுதினாலும் குப்பை எண்டு கசக்கிப் போடுகிறாள்! அப்ப நான் என்ன செய்ய?

Link to comment
Share on other sites

கண்களால் கதைபேசி..... 
என்னை காணமல் ஆக்கியவளே .....
கடைசிவரை உன் நினைவையும் ....
காதலையும்கர்ப்பணி தாய் போல்
கவிதையாய் சுமர்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!

இதயத்தில் பெரு காயத்தை .....
வார்த்தையால் தந்தவளே .....
கடைசிவரை உன் வார்த்தையை ....
கல்லறைவரை சுமப்பேன் .....
கல்லறை தத்துவங்களாய் ....!!!
+
கே இனியவன் 
காதல் கவிதையும் தத்துவமும் 02

Link to comment
Share on other sites

மாணவர்களே .....
தினமும் படிக்கவேண்டும் ....
கடும் பயிற்சி எடுக்க வேண்டும் ....
வீணாகும் நிமிடங்களை நினைத்து ....
கண்ணீர் விடவேண்டும் .....
வருத்து வருத்து உன்னை வருத்து ....
சிறந்த பெறுபேறு நிச்சயம் ....
உன் கையில் தவழும் .....!!!

விளையாட்டு வீரனே......
தினமும் பயிற்சி செய்துகொள் ....
முயற்சிக்கு மேலாக பயிற்சி .....
பயிற்சிக்கு மேலாக முயற்சி .....
வருத்து வருத்து உன்னை வருத்து ....
உலக வெற்றிக்கிண்ணம் .....
உன் கையில் தவழும் .....!!!

முயற்சியாளனே ......
தினமும் ஆபத்தை எதிர்கொள் .....
முட்டு மோது போராடு ......
புதியனபற்றி சிந்தனை செய் .....
வருத்து வருத்து உன்னை வருத்து ....
சிறந்த முதலீட்டுக்கு சிறந்த இலாபம் 
உன் கையில் தவழும் .....!!!
+
கே இனியவன் 
முயற்சிசெய் - பயிற்சிசெய் 
முயற்சி கவிதைகள்

Link to comment
Share on other sites

நான் பழகுவதற்கு
எத்தனையோ மனங்கள் ....
இருக்கலாம் - ஆனால் 
நான் மனம் விட்டு பேச .....
உன்னைவிட்டால் யார் ...?

காதல் கண்ணில் தோன்றி ....
கண்ணில் மறைபவர்களுக்கு ....
காண்பதெல்லாம் காதல் .....
என் இதயத்தில் தோன்றி ....
என் இதயம் வரை இருக்கும் ....
பாக்கியம் உன்னைவிட்டால் யார் ...?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

Link to comment
Share on other sites

நீ 
அங்கே கைவிரலுக்கு ....
மோதிரம் மாற்றுகிறாய் ....
என்று நினைக்கிறேன் ....
இங்கே .....
நீ தந்த கைவிரல் மோதிரம் ....
என் கையில் கதறி அழுகிறது ....!!!
+
கல்லறை இதயத்தின் கதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

நீ 
பேசிய வார்த்தைகளை 
கவிதையாக்கினேன் ....!!!
நீ 
இப்போ பேசாமல் இருக்கும் ....
வார்த்தைகள் கல்லறை ....
வாசகங்களாய் மாறி வருகிறது ....!!!
+
கல்லறை இதயத்தின் கதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

உன்னை ...
காதல் செய்தபோது ......
மரணம் தாண்டி வாழ்வேன்....
இனி நான் இறந்தாலும்
உயிர்ப்பேன் ..........
என்றெல்லாம் நினைத்தேன் ....
எல்லாம் கனவாய் ...
போய்விட்டதே .....!!!
+
கல்லறை இதயத்தின் கதறல் 
கே இனியவன்

Link to comment
Share on other sites

மன்னித்துவிடாதே ....!!!

நண்பா ....
அறியாமையை அறிந்து கொள் ....
அறியாமல் தவறு செய்தால் ....
மன்னிக்கலாம் .....
அறிந்தே தவறுசெய்தால் ....
மன்னித்துவிடாதே ....!!!

தீமை என்று தெரிந்தும் ,,,,
நட்பு என்று சொல்லிகொண்டு .....
வரபோகும் நன்மையை ....
அறியாமல் விடுவதே ....
அறியாமையாகும் .....!!!

+
குறள் 831
+
பேதைமை
+
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு 
ஊதியம் போக விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 51

Link to comment
Share on other sites

அறுத்துவிட வேண்டும் ....!!!

அறியாமையில் பெரும் ....
அறியாமை அறிந்துகொள் ....
நண்பா .....!!!

அனுகூலம் இல்லையென்று ....
அறிவுக்கு எட்டியபோதும் ....
தொடர்ந்து அதன்மேல் பற்று ....
வைத்துகொண்டு தொடர்வதாகும் ....
அனுகூலம் இல்லாதவற்றை ....
அறுத்துவிட வேண்டும் ....!!!
+
குறள் 832
+
பேதைமை
+
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை 
கையல்ல தன்கட் செயல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 52

Link to comment
Share on other sites

தலை குனிந்து வெட்கப்படு
--
தீமை ஏற்பட்டால் தலை 
குனிந்து வெட்கப்படு .....
ரசிக்க வேண்டியவற்றை ....
ரசித்து வாழ்,,,,,,
அன்பு வைக்கவேண்டின் ...
அன்புவை .....!!!

செய்ய 
வேண்டிய அனைத்தையும் .....
செய்யாதிருப்பது அறியாமையின் .....
உச்சகட்டம் ....!
அறிவற்றவனின் செயலாகும் ,,,,,!!!

+
குறள் 833
+
பேதைமை
+
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் 
பேணாமை பேதை தொழில்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 53

 
 

நிறைய தவறு செய்பவர்களே 
----
படிக்க வேண்டும் ....
படித்தற்போல் நடக்க வேண்டும் ....
படித்ததை மற்றவருக்கு ....
சொல்லியும் கொடுக்கவேண்டும் ....
இவர்களே அறிவுடையோர் ....!!!

நிறைய படித்து .....
நிறைய அறிந்து ....
நிறைய தவறு செய்பவர்களே .....
அறிவற்றவர்களின் முதன்மை ....
இடத்தவர் ஆவர் ,,,,!!!

+
குறள் 834
+
பேதைமை
+
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் 
பேதையின் பேதையார் இல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 54

Link to comment
Share on other sites

எல்லாம் எனக்கு தெரியும் ....
----
தான் சொல்வதே சரி ....
தான் செய்வதே சரி ....
யாரும் தடுக்க முடியாது .....
எல்லாம் எனக்கு தெரியும் ....
இதுவே அறிவின்மையின் ....
உச்சமாகும் ....!!!

அறிவின்மையில் வாழ்பவன் ....
நரகலோகத்துக்கு...... 
போகத்தேவையில்லை ......
வாழும் காலத்திலேயே ....
நகரத்திலேயே வாழ்கிறான் ...!!!

+
குறள் 835
+
பேதைமை
+
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் 
தான்புக் கழுந்தும் அளறு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 55

Link to comment
Share on other sites

....................................ஒரு வரியில் இதயக்கவிதைகள்.......................................

" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி

.............................. "ஒரு வரியில் காதலும் கவிதையும் "............................

" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி -02

Link to comment
Share on other sites

....................................ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை .......................................

"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "
----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "
-----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு "

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி - 03

Link to comment
Share on other sites

இங்கே.....!!!
துடித்து கொண்டிருக்கும் ....
என் இதயத்தில் உன்நினைவுகள் ....
பூத்து கொண்டிருக்கிறது ....!!!

அங்கே.....?
துடிப்பில்லாத உன் இதயத்தில் .....
நான் என்ன பாடுபடுவேனோ ...?
ஒருமுறை என்னை நினைத்துவிடு ....
உன்னிடம் இருந்து நான் ....
வெளியேறுவிடுகிறேன் ....!!!

நீபாதி நான்பாதி தான் காதல் .....
நீ வேறுபாதி நான் வேறு பாதியாய் .....
என்றாகிவிட்டது நம் காதலில் ....?
நீ இங்கே இருக்கிறாய் 
நான் எங்கே...?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.