Jump to content

கே இனியவன் கவிதைகள்


Recommended Posts

கேள்வி ....!!!
உனக்கு எப்படி ....?
இப்படியெல்லாம் ....
கவிதை வருகுது ..?
காதலிக்கிறாயா ..? 
காதலிக்க போகிறாயா ...?
காதல் தோல்வியா ..?

பதில் ....!!!
கவிதை வருகிறது காதலால் ....
காதலுக்காக காத்திருந்தேன் ...
கவிதை தொடர்ந்து வருகிறது ....
புரியவில்லையா ...?
என்னானாலும் புரியமுடியவில்லை....
அவளின் காதலை .....!!! 

Link to comment
Share on other sites

  • Replies 390
  • Created
  • Last Reply

ஒருமுறை சிரி உயிரே ....
உன் கன்னகுழியின்....
அழகை ரசிப்பதற்கு ....!!!

என்னை ஒருமுறை திட்டு .....
உதடுகளின் அசைவை ....
அழகை ரசிப்பதற்கு ....!!!

என்னை ஒருமுறை .....
முறைத்து பார் உயிரே ....
உன் கண்கள் கதகளி....
ஆடுவதை ரசிப்பத்தற்கு ....!!!

ஒரு முறை கோபித்துவிடு.....
உன் மௌனத்தின் வரிகளை ...
கவிதையாக வடிப்பதற்கு ....!!!

Link to comment
Share on other sites

கண்களால் ஜாடைசெய்தால் ...
காதலில் தவிர்க்க விட்டாள் ....
காதலின் வலியென்ன ...?
கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!!

அவளின் இதயம் என்னிடத்தில் 
அவள் எப்படி உயிர் வாழ்கிறாளோ ....?
நான் வாழ்கிறேனே  ......
என் இதயம் அவளிடம் ...!!!

நான்  கல்லறையில் இருக்கிறேன்
அவளின் கல்லறையை எதிர்க்கிறேன்..
வேண்டாம் வேண்டாம் அவள் வேண்டாம் ...
அவளாவது வாழட்டும்  காதலோடு ....
எனக்கும் சேர்த்து சில காலம் ..............!

Link to comment
Share on other sites

நட்பியல் கவிதைகள் நன்றாய் உள்ளன. பாராட்டுக்கள் இனியவன்

நன்றி   நன்றி  

Link to comment
Share on other sites

இதயத்தால் 
கவிதை எழுதினால் .....
இன்பக்கவிதை ....!!!

கண்ணீரால்
கவிதை எழுதினால் ..
சோகக்கவிதை ...!!!

ஒரு இதயம் துடிக்க ....
மறு இதயம் புரியாமல் இருக்க ....
கவிதை எழுதினால் ....
ஒருதலை காதல்கவிதை ....!!!

கண்ணால் பேசி ....
சைகையால் உரையாடி ....
கவிதை எழுதினால் .....
காதல் அரும்புக்கவிதை ....!!!

இதயங்களால் பிரியாமல் ....
உறவுகளால் பிரிக்கப்பட்டால் ....
கல்லறை காதல் கவிதை ....!!!

காதல் செய் ....!!!
இன்றே செய் ....!!!
நன்றே செய் ....!!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நீங்க எழுதியிருக்கிறது என்ன கவிதை?:)

 

Link to comment
Share on other sites

உறுதியில்லாத வாழ்வில்.....
உறுதியான நேர்மையுடனும்.....
உறுதியான நியாயத்துடனும் ...
உண்மையாக வாழ்வாயாக ....
என் தாயின்வேண்டுகோள் ...!!!

ஆம் என்றேன்...!!!

உண்மை பேசினேன்....
உளருகிறான் என்றார்கள்....
நியாயம் சொன்னேன்...
நீ என்ன நீதிபதியா....?
வினா எழுப்பினார்கள்.....
உண்மை கூற ஓயாமல்...
உழைத்தேன் -ஆனால்....
கேட்பார் யாரும் இல்லை.....
வெடித்தது -இதயம்...
வேதனைப்பட்டேன்...
வெட்கப்பட்டேன்......!!!

ஓயவில்லை நான் ...!!!

சமூக சேவை செய்தேன்....
இந்த பூச்சாண்டி வேலையெல்லாம்.....
எங்களுக்கு காட்டாதே என்றார்கள்.....
சமூக சீர்திருத்தத்துக்காக....
சிந்தனை பேச்சு பேசினேன்....
மாரி தவளைபோல்...
கத்துகிறான் என்றார்கள்.....!!!

ஓரமாக இருந்து யோசித்தேன்...???

சமூக சிந்தனையை ...
சுய சிந்தனையாக்கினேன்..
நியாயம் இல்லாமல்...
காலில் விழுந்தேன்....
பிழைக்க தெரிந்தவன்....
என்று பாராட்டினார்கள்......!!!

பொருள் வந்தது...
பதவி வந்தது....
தலைவா,,,!!! தலைவா ,,,!!!
கூச்சல் இட......
ஒரு கூட்டமும்....
சேர்ந்தது........!!!

எல்லாம் வந்தது...
அன்னையின்...
ஆசைபோனது......!
மனிதத்தை விற்றுவிட்டு...
மனிதனாக நடிக்கிறேன்.....
என்றோ ஒருநாள்...
மனிதம் பிறக்கும்....
நானும் அம்மாவின்....
மகனாவேன் ...!!!

அதுவரை தாயே என்னை
மன்னித்துவிடு
உன்னைவிட இந்த உலகில்
மன்னிக்கும் நீதிமன்றம் இல்லை.....!!! 

Link to comment
Share on other sites

நேற்று 
வரை உனக்கு
தோல்வி .....!!!


இன்று
உனக்கு மட்டும் தான்
வெற்றி ....!!!

எழுந்துவா...
கல் எறிவிழும்...
சொல் எறிவிழும்...
உடல் காயப்படும்...
உள்ளம் காயப்படும்...
இறுதியில் ....
நீதான்
தலைவன் ...!!!

+
தன்னம்பிக்கை கவிதை 

 

Link to comment
Share on other sites

மனம்....
ஆட்டிப்படைக்கும் ..
மனம்....
யாருக்கும் அடங்காது ..
ஒருவனால் .....
மட்டும் அடக்கி வைக்கமுடியும் ....
மனம் 
என்ற மந்திரிதான் அவன் ...!!!

மனதை 
நீயே மனத்தால் அடக்கு....!!!
மனமே கோயில்,,,,
மனமே குப்பை.....
மனமே தாமரை.....
மனமே சேறு......
எண்ணமே இத்தனை ....
வேஷங்கள் போடுகின்றன ....!!!
+
ஆன்மீக கவிதை 

Link to comment
Share on other sites

முயற்சிக்க கூடியதை
முயற்சிக்காமல் இராதே....!!!

முற்சிக்க தேவையில்லாததை
முயற்சிக்காதே....!!!

முயற்சி என்றால் என்ன என்பதை
முயற்சிக்காமலே ..
மூச்சிசை விட்டவர் தான்
அதிகம் ...!!!
 
Link to comment
Share on other sites

வெற்றி 
மகிழவைக்கும் -பூவல்ல 
அடுத்தநிமிடம் -வாடும் பூ ...!!!

தொடர்ந்து விழித்திரு... 
தோல்வி தயாராக.... 
இருக்கிறது ....
வெற்றியை பறிக்க ...!!!

வெற்றி 
வாழ்க்கைதரும் ....
தோல்வி வாழ்க்கையை 
உணர்த்தும் ....!!!

தன்னம்பிக்கை கவிதை

Link to comment
Share on other sites

  • மோகன் changed the title to ஆன்மீக கவிhttp://www.yarl.com/forum3/topic/163746-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/தை

எல்லோருக்கும் 
மனம் தான்
பெரும் குப்பை தொட்டி...!!!

நிரப்புவதும்...
தடுப்பதும்.....
உன் கையில் அல்ல......
உன் எண்ணத்தில்....!!!

சிந்தனை குப்பையை
தவிர்க்கும்
பிறர் வஞ்சனை 
குப்பையை நிரம்பும்....!!!

வெள்ளியடிக்கப்பட்ட
சுவர் ஒருநாள் வெளுறும்.....
வெள்ளை அடிக்கப்பட்ட
மனசு என்றும் மிளுரும் ....!!!

Link to comment
Share on other sites

காதல் யாருக்கும்....
வலியை கொடுக்காமல்....
விட்டதில்லை -என்றாலும்....
காதலிக்காமல் யாரும்...
இருந்ததுமில்லை.....!!!

காதலால் கெட்டவர்கள்
யாருமில்லை.....
காதலர்களால்.....
கெட்டவர்கள் உண்டு....!!!

ஜாக்கிறதை ...
 I  LOVE YOU 
உலகிலேயே
மிகவும் எச்சரிக்கையான
வார்த்தை ...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வலி சுகமானது... அதுதான் ஓரிடத்தில் கருகினாலும் மீன்டும்  இன்னோர் இடத்தில் துளிர் விடுகின்றது...!

காதலர்கள் வெல்லும்போது, தோல்வியின் வலியைச் சந்திக்காத மனம் தோற்று விடுகின்றது...!!

Link to comment
Share on other sites

உண்மையை ஊமையாக்காதே ..
உறவுகளை அதிகம் நம்பாதே ..
உணர்வுகள் இறந்தாலும்....
உயிர் இத்துப்போனாலும்....
உறுதியிழந்து வாழாதே....
உறுதி கொள் -நிச்சயம்....
உறுதியான வெற்றிஉண்டென்று....
உன் முகத்தை திருத்து....
உலகத்துக்கு நீ ஒரு கண்ணாடி....
உள்ளத்தில் கசப்பு ஏற்பட்டாலும்....
உதட்டில் உண்மைபேசு....
உலகம் இப்போ விலை உலகம்....
உலகமயத்தில் இது சாதாரணமப்பா ..
உன்னை நீ மதிப்பீடு செய்....
உண்மையில் கிடைக்கும் பெரு வெற்றி ....!!!

Link to comment
Share on other sites

ஏழையாக இருக்கிறேன்
ஏமாளியாக இருக்கவில்லை....!!!

ஏழ்மையில் வாழ்கிறேன்
எடுப்பார் கைப்பிள்ளையக இருக்கமாடேன்....!!!

மன்னிக்க மனம் அதிகமில்லை
மனம் புண்படுமாறு நடப்பதில்லை....!!!

கற்காதவர் மத்தியில் பேசமாட்டேன்
கற்றவர் மத்தியில் கவனமாக பேசுவேன்...!!!

அறிவாளியாக என்னை கருத மாட்டேன்
அறிவை தேடாமல் இருக்க மாட்டேன்....!!!

எல்லாம் முடியும் என்னால் என்று கூறமாட்டேன்
எதுவும் முடியாது என்று இருக்கமாட்டேன்....!!!

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு...
என்பதை நிச்சயம் நம்புகிறேன் ..
முடிவு இல்லையென்றால் ......
முடிவில்லையென்று கலங்கமாட்டேன் ..!!!

+
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

நான் இறந்தால் ...
புதைப்பார்களா ...?
எரிப்பார்களா ...?
என்றோ அவளின் ....
வார்த்தையால் ...
சாம்பலாகி விட்டேன் ...!!!

அழகுக்கு
அழகுதருவது
காதல் உண்மைதான் ...
உன்னோடு இருக்கும் ..
காலத்தில் உணர்ந்தேன் ...!!!

தட்டிய தீக்குச்சி
விரைவாக
அணைந்துவிடும்
அந்த மன வேதனைதான்
எனக்கும் ...!!!

கே இனியவன் - கஸல் 

Link to comment
Share on other sites

என் வழி தனிவழி 

என் வழி தனிவழி ....
வார்த்தையால் பேசி பேசி ....
வாழ்கையை இழப்பவர்கள் ....
தன் வழி எதுவென அறியாதவர் ....!!!

தன் வழியை அறியாதவனும் ....
தன்னால் செய்ய முடியாதவற்றை ....
வார்த்தை ஜாலத்தால் செய்பவனும் ....
தானும் கேட்டு தன் செயலையும்.....
கெடுப்பான் ....!!!

+
குறள் 836
+
பேதைமை
+
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் 
பேதை வினைமேற் கொளின்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 56

Link to comment
Share on other sites

சொத்தை சேர்க்காதே

அறிவுடன் செல்லவத்தை.....
சேர்ப்பதே சிறந்த அறிவு ....
அறிவில்லாமல் பேதையுடன் ....
சொத்தை சேர்க்காதே ....
நீ உண்ணாமல் ஊர் உண்ணும் ...!!!

அறிவில்லாமல் சொத்தை ....
நீ சேர்ப்பாய்யாயின்....
கைக்கு எட்டியது வாய்க்கு ....
எட்டாததுபோல் .....
உன் உறவுகள் பசியுடன் ...
வாடி வதங்குவர் -உன் ...
செல்வம் வேடிக்கை ....
பார்த்து சிரிக்கும் ....!!!

+
குறள் 837
+
பேதைமை
+
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை 
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 57

Link to comment
Share on other sites

ஒன்றுமே அறியாதவன் ...!!!

பேதை என்பவன் ...?
எது நல்லது எது கெட்டது...
ஒன்றுமே அறியாதவன் ...!!!

பேதையிடம் ....
கிடைக்கும் செல்வம் ...
பித்து பிடித்தவனிடம் ....
கிடைத்த போதைப்பொருள் ...
போன்றது ......!!!

+
குறள் 838
+
பேதைமை
+
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் 
கையொன்று உடைமை பெறின்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 58

Link to comment
Share on other sites

நட்பின் பிரிவு துன்பம் இல்லை 

நட்பின் பிரிவு ஒன்றும் .....
துன்பம் இல்லை ....
அறிவற்றவருடன் நட்பு .....
கொண்டால் பிரிவு ....
துன்பமில்லையே....!!!

அறிவற்ற பேதையுடன் ....
பழகிய நட்பு இனிமை ...
அதை பிரிந்து செல்வதும் ....
இனிமையே ....!!!

+
குறள் 839
+
பேதைமை
+
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் 
பீழை தருவதொன் றில்

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 59

செந்தாமரை மத்தியில் ....

அறிஞர்கள் கூடிய ....
மகாசபையில் ....
அறிவற்றவன் ஒருவன் ....
அமர்ந்திருந்தால் .....
செந்தாமரை மத்தியில் ....
நாற்றம் எடுக்கும் பிணம் ...
போன்றது ....!!!

மஞ்சு மெத்தையில் ....
கழுவாத காலுடன் ....
மிதிப்பதுபோல் ....
பேதை ஒருவன் ....
அறிஞர்கள் மத்தியில் ....
இருப்பதாகும் .....!!!

+
குறள் 840
+
பேதைமை
+
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் 
குழாஅத்துப் பேதை புகல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 60

Link to comment
Share on other sites

காதலை மறக்காமல் ....
இருப்பதற்கு காதலில் .....
தோற்க வேண்டும் ....!!!

@

காதலில் இரண்டு துன்பம் ...
காதலை சொல்ல முன் ....
காதலை சொன்ன பின் .....!!!

+
கே இனியவன் 
மைக்ரோ கவிதைகள்

Link to comment
Share on other sites

நினைத்-தேன் கேட்டதை தந்தாய் ...!
திகைத்-தேன் முத்தம் தந்தாய் .......!

சிரித்-தேன் காதலை தந்தாய்.......!
மகிழ்ந்-தேன் உன்னை தந்தாய் ....!

சுவைத்-தேன் வாழ்க்கை தந்தாய் ..!
வாழ்ந்-தேன் உயிரை தந்தாய் ..........!

துடித்-தேன் நினைவுகள் தந்தாய் ......!
அழைத்-தேன் பிரிவை தந்தாய் ....!

Link to comment
Share on other sites

அழைத்தேன் நின்றாய் பார்த்தேன்
பார்த்தேன் என்னை மறந்தேன்

மறந்தேன் உன்னிடம் விழுந்தேன்
விழுந்தேன் உன்னோடு மகிழ்ந்தேன்

மகிழ்ந்தேன் உயிராய் நினைத்தேன்
நினைத்தேன் காற்றாய் சுவாசித்தேன்

சுவாசித்தேன் உன்னையே நேசித்தேன்
நேசித்தேன் காதலாய் வாழ்ந்தேன்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.