Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!

 

சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

prithika%20Yasini.jpg

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம்.

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/article.php?aid=54723

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

இன்று

1860 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.

   

1935 - எட்வின் ஆம்ஸ்ட்ரோங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.

   

1999 - அவுஸ்திரேலியர்கள் அனைத்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருக்க சம்மதம் தெரிவித்தனர

 

  • 1891 - இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் 'லேடி ஹவ்லொக்' முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.

     

    1911 - விமானம் ஒன்று முதன்முறையாக இலங்கை வந்தடைந்தது.

     

    1963 - இலங்கை பற்றரிகளை உற்பத்தி செய்ய தொடங்கியது.

     

    1969 - ஆசிய அபிவிருத்தி வங்கி முதல் முறையாக இலங்கைக்கு அபிவிருத்தி தேவைகளுக்காக கடன் வழங்கியது.

Link to comment
Share on other sites

உலகம் சுற்றும் ஃபேமிலி!

 

நெடுந்தூர பயணங்களின் அருமை தெரியாத முதல் தலைமுறை நாம் தான். காதில் செவிட்டு மெஷின்  (ஹெட் போன்ஸ்) மாட்டி வெளியுலக சத்தங்களுக்கெல்லாம் ம்யூட் போட்டு விட்டு, சகிக்க முடியாத ஒரு பாடலை  ஃபுல் வால்யூமில் கேட்டு  நொடிக்கு நொடி காதில் ஒரு சின்ன பூகம்பமே உருவாகும் அளவிற்கு பயணிக்கிறோம்.

இங்கிருந்து ஆபீஸ் சென்று வருவதற்குள்ளேயே  டயர்ட் ஆகிடுது. பேசாமல் காரை விட்டு இறங்கி நடந்தே போயிடலாம் என தோன்றும் அளவுக்கு  டிராபிக் பாடாய் படுத்துது என்று நினைப்பவரா நீங்கள்?

ஒரு குடும்பம்  பெங்களூருவிலிருந்து பாரீஸ் வரை 11 நாடுகளை கடந்து, 50 க்கும் மேற்பட்ட நகரங்களை தாண்டி , 111 நாட்களாக பயணித்து தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். இவர்கள் ப்ளைட்டில் பறக்கவில்லை, 22, 780 கி.மீ. காரிலேயே பயணித்து இருக்கின்றனர்.

car_vc1.jpg


இது போன்ற சாதனைகளை மேற்கத்திய நாடுகளில் தனி நபர்கள் செய்ததாக கேள்விபட்டது உண்டு  எ.கா.-  சைக்கிளில் உலகை வலம் வருபவர்கள். ஆனால் இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி இப்படி ஒரு பயணம் சாத்தியமானது என்பது ஆச்சரியம்தான். இவர்கள் பயணத்தில் சந்தித்த இன்னலகள் கொஞ்ச நஞ்சம் இல்லை.நேபாள  பூகம்பம் ஏற்பட்ட சமயம் இவர்கள் மிகவும் பாதிப்படைந்த பகுதிகளுக்கு மிக அருகிலேயே இருந்தனர். வெயில் மலை, பனிச்சரிவுகள், உணவு, விசா அனுமதிகள் என பல பல.

ஆனந்த பெயிட், அவரது மனைவி புனிதா பெயிட் மற்றும் இரு குழந்தைகள் யஷ் , த்ரிஷ்டிதான் இந்த இமாலய பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.

car_vc2.jpg

ஏப்ரல் 8-ம் தேதி பெங்களுரில் தொடங்கிய இந்த பயணம், மத்திய இந்தியாவின் நகரங்களை கடந்து, வாரணாசி, டெல்லி வழியாக பார்டரை தாண்டி நேபாளை அடைந்த சமயம்தான் அங்கு பூகம்பம். ஐந்து நாட்களுக்கு மேல் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர். 'ஓவர்லேண்ட் ஸ்டோரீஸ்' என்ற தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்கள் போட்டு வந்தவர், பூகம்பம் தாக்கிய இடத்திற்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என ஒரு படத்தையும் போட்டிருக்கிறார்.

திபெத், சீனா, மத்தியா ஆசியா என இவர்களது பயணம் பல தட்ப வெப்ப நிலைகளையும், இயற்கை வளங்களையும் தாண்டி சென்றது. சைவ உணவு எல்லா இடங்களிலும் கிடைக்காது என்பதால் இரு சின்ன அடுப்பையும், பாத்திரங்களையும் கூடவே எடுத்து சென்றனர்.

உஸ்பெகிஸ்தான், ஈரான், துர்க்மேனிஸ்தான் என வித்தியாசமான கலாச்சாரங்களை கொண்ட நாடுகளை கண்டு களித்தனர்.

car_vc3.jpg

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி,  ஃபிரான்ஸ் வழியாக பாரீஸ் நகரத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா  வந்தனர். காரை என்ன செய்தார்கள் என்று யோசிக்கிறீர்களா?

குடும்பத்தில் ஒருவராகி விட்ட அந்த காரை விமான கார்கோ மூலம் கொண்டு வந்து விட்டனர். பள்ளிக்கூடம் கற்று தர இயலாத பாடங்களை ,இந்த நீண்ட் நெடும் பயணம் நிச்சயம் கற்பித்து இருக்கும்.

துர்க்மேனிஸ்தானின்  'டோர் டு ஹெல்', கிரீஸின் பழமையான கட்டிடங்கள், கிரிகிஸ்தானின் பனி படர்ந்த மலைகள், துருக்கியின் இயற்கை அழகு, சைவ உணவே கிடைக்காத ஈரான் என எண்ணில் அடங்காத அனுபவங்கள் நிறைந்தது இவர்களது பயணம்.

இவர்கள் குடும்பத்தின் ஐந்தாவது உறுப்பினரான கார், தற்போதுதான் இந்தியா வந்து அடைந்துள்ளது. குடும்பம் ஒரு வழியாக ஒன்று சேர்ந்து விட்டது.

 
Link to comment
Share on other sites

12227679_10154049578919578_3390879306650

களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய கலைப்பயணத்தில் ஒருபோதும் களைப்படையாமல் தூங்காவனம் வரை தொடர்ந்து பரிணமித்துக் கொண்டிருக்கும் கமலுக்கு இன்று பிறந்தநாள்!

12106897_1018590378199752_37750906136059

12188185_1018778368180953_77007076468493

Link to comment
Share on other sites

துபாயில் ஃபிளை எமிரேட்ஸ் விமானத்துடன் பறந்த இரு மனிதர்கள்!(வீடியோ )

 

துபாயில் ஃபிளை எமிரேட்ஸ் நிறுவனத்தின்  ஏர்பஸ் 380 ரக விமானத்துடன் இணைந்து இரு ஜெட் மனிதர்கள் பறந்து சாதனை படைத்துள்ளனர்.

 

 

            

 

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 'ஜெட் மனிதர்'  என்று அழைக்கப்படும் யூவ்ஸ் ரோசி மற்றும் வின்சென்ட் ரெஃபே ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

துபாய் நகரின்  மேல் ஃபிளை எமிரேட்சுடன் இந்த மனிதர்கள் இணைந்து பறப்பது பிரமிக்க வைத்துள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=54815

 

Link to comment
Share on other sites

இன்று

2012 - பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்கு 9 பேர் அடங்கிய குழு பாராளுமன்றில் நியமிக்கப்பட்டது

 
    • 1492 - உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.

         

      1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

         

      1941 - இரண்டாம் உலகப் போர்: 'ஆர்மேனியா' என்ற சோவியத் மருத்துவக் கப்பல் ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சில் மூழ்கியது. 5,000 பேர் வரையில் இதில் கொல்லப்பட்டனர்.

        

      2002 - அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.

 
 
Link to comment
Share on other sites

12182612_939448062770555_858182241701153

இந்திய சினிமாவின் அற்புத நட்சத்திரம்...
தமிழிலும் 'அழகி'யாக மனம் கவர்ந்த அபூர்வ நடிகை..

Link to comment
Share on other sites

‘தீ' இல்லாத தீபாவளி கொண்டாடலாமே!

no_2611363f.jpg
 

தீபாவளி என்றாலே பட்டாசுதானே. ‘ஒரு நாள் கூத்துக்கு ஏன்டா இப்படி காசைக் கரியாக்குற' என்கிற பெற்றோர்களுக்கும், ‘இன்னிக்கு ஒரு நாள்தானே' என்று பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் கெஞ்சல், கொஞ்சல் விளையாட்டுகளை பரஸ்பரம் இரு தரப்புமே காதில் போட்டுக்கொள்வதில்லை.

தீபாவளி நெருங்க ஆரம்பித்த சமீபத்திய சில வாரங்களாக ‘இந்த தீபாவளியை பட்டாசுகளின்றி பசுமையாகக் கொண்டாடலாமே' என்ற வாசகங்களைத் தாங்கிய பதாகைகளுடன் இளைஞர்கள் பலரின் ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் மாறி மாறி பதிவிடப்பட்டன.

அந்த பிரசாரத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் யார் என்று தேடினால்... அவர்தான் குர்மீத் சபல். அவர் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் காதைக் கொடுப்போமே?

பசுமை தீபாவளி

"பொதுவாக நமது ஊர்கள் எல்லாம் எப்போதும் குப்பைக் கூளமாகக் காட்சி தருகின்றன. தீபாவளி நேரம் சேரும் குப்பைகள் குறித்து தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. குப்பை ஏற்படுவது தவிர, பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் வேதிப் புகை, ஏற்கெனவே மாசடைந்த நமது சூழலை மேலும் மாசுபடுத்துகிறது" என்று சொல்லும் இந்த டெல்லிக்காரர் ஒரு திரைக் கலைஞர்.

"நாம் ஏன் பட்டாசுகள் இல்லாத தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று என் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அதை உடனடியாகச் செயல்படுத்த நினைத்தேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள இளைஞர்களிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர்களும் ஆர்வமாக முன்வந்தார்கள். உடனே விழிப்புணர்வு பதாகைகளைத் தயார் செய்து ஒவ்வொருவரையும் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றினேன். இப்போது அது தேசத்தின் பல மூலைகளுக்கும் சென்றடைந்துள்ளது" என்கிறார் பூரிப்புடன்.

உயிர்ப்புள்ள பிரசாரம்

இந்தப் பிரசாரம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய ஒளிப்படங்கள்தான், இந்த ஆண்டும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பல சமூக வலைதள ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அப்படியானால், இந்தப் பிரச்சாரத்துக்கான தேவை இன்றும் இருக்கிறது என்பதுதானே அர்த்தம்?!

http://tamil.thehindu.com/society/lifestyle/தீ-இல்லாத-தீபாவளி-கொண்டாடலாமே/article7850119.ece

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: நவம்பர் 07
 

article_1446784577-t.jpg1492 - உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.

1502 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.

1665 - உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.

1893 - கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை, ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1918 - மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு (வைரஸ்) நோய் காரணமாக 7,542 பேர் (20வீத மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.

1931 - மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.

1941 - நாசி ஜெர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.

1983 - ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.

1991 - மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.

1996 - நைஜீரிய விமானம் ஒன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/158468/2015-11-06-04-53-32#sthash.9W07qnAM.dpuf
Link to comment
Share on other sites

உலகமே வியக்கும் 12 வயது மாணவி!

 

'மென்ஸா சங்கம்' எனப்படுவது உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் திறமிக்க அறிவாளிகளின் கூட்டமைப்பு ஆகும். இச்சங்கம் நடத்தும் IQ டெஸ்ட் என்று சொல்லக்கூடிய நுண்ணறிவு திறனை சோதிக்கும் தேர்வை எழுதுபவர்களின் மொத்த எண்ணிக்கையில், 98 சதவீதத்தை விட அதிகமாக மதிப்பெண் எடுப்பவர்களே சங்கத்தின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இந்தியாவில் கூட இச்சங்கம் செயல்பாட்டில் உள்ளது. சமீபத்தில் இத்தேர்வை எழுதிய 12 வயது பிரிட்டிஷ் மாணவி எடுத்திருக்கும் மதிப்பெண், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. காரணம், ஏழாம் வகுப்பு மாணவியான நிகோல் பர் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்களை விட அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பதுதான்.

Nikol01.jpg

மென்ஸா தேர்வில் அதிகபட்சமான 162 மதிப்பெண்கள் எடுத்திருக்கும் நிகோல் கூறும்போது,  “கடந்த வார  தேர்வு முடிவுகளை பார்த்து என்னால் நம்பவே முடியவில்லை” என வியக்கிறார்.

சிறு வயதிலிருந்தே அதீத அறிவுதிறனுக்கான அறிகுறிகள் நிகோலிடம் காணப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பாடங்களில் காணப்படும் சிக்கலான கணக்குகளுக்கு கூட ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே வெகு சுலபமாக விடை கண்டுபிடித்து விடுவாராம். மிகவும் கடினமாக உழைக்கும் நிகோல், பள்ளி நேரம் முடிந்த பின்னரும் கூட கூடுதல் நேரம் வேலை பார்த்து பிற வகுப்பு பாடங்களையும் படிப்பாராம்.

படிப்பை தவிர பாட்டு மற்றும் நாடங்களில் ஆர்வமுள்ள நிகோலை இன்று உலகே கண்டு வியக்கிறது.

1946ல் ரோலந்து பெரில் மற்றும் லேன்செலோட் வேர் என்பவர்களால் தொடங்கப்பட்ட மென்ஸா சங்கம், இன்று 100 நாடுகளில் கிட்டத்தட்ட 1.2 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/article.php?aid=50584

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 8
 
 

article_1446785145-5.jpg1520 - டென்மார்க் படைகள் சுவீடனை முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1889 - மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.

1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.

1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

1938 - பாரிஸ் நகரில் ஜெர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.

1939 - மியூனிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1942 - மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.

1950 - கொரியப் போர்: ஐக்கிய அமெரிக்க வான்படையினர் வட கொரிய மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.

1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1977 - கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1987 - வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 - பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/158470/2015-11-06-04-54-27#sthash.CLUqcYKG.dpuf
Link to comment
Share on other sites

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று.
வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.
அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.

புலி கரடியிடம் கூறிற்று:
இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்;
இவனைக் கீழே தள்ளி விடு!

இருக்கலாம் ஆனால்,
இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால்
என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான்.
சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன்
இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.

சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று:
எனக்கு பசியாக இருக்கிறது.
நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால்,
நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான்
கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு,
விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.

அப்போது புலி கரடியிடம் சொன்னது.
இந்த மனிதன் நன்றிகெட்டவன்.
சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!

அதற்கு கரடி சொன்னது:
எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான்
என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது.
இன்னமும் அவன் சரண் புகுந்தவனே.
அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு.
சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும்,
துன்பம் இழைக்க மாட்டார்கள்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேள் கொட்டக் கொட்ட அதனை நீரிலிருந்து வெளியே எடுத்துக் காப்பாற்றி ஒரு துறவியின் கதையை மாற்றியமைத்திருக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

ரஷ்ய அதிபர் புதின் - சூப்பர் ஹீரோ அதிபரின் டாப் 14 புகைப்படங்கள்

 

லக நாடுகளின் அதிபர்களில் யாருக்கு இணையத்தில் விசிறிகள்(ஃபேன்ஸ்) அதிகம் தெரியுமா? பராக் ஒபாமா என்றால் நீங்கள் இணையத்தின் ஒரு பகுதியைத்தான் பார்த்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இணையத்தின் ஃபேவரிட் எப்போதும் ரஷ்யாவின் அதிபர் புதின்-தான். ஏன்? புதின்-ன் புகைப்படங்கள்தான்.

 ரஷ்ய அதிபர் புதினுக்கு தன்னை மற்ற அதிபர்களிடம் இருந்து வித்தியாசமாகக் காட்டிக் கொள்வதில் எப்போதுமே விருப்பம் அதிகம். மற்ற நாடுகளின் அதிபர்களின் புகைப்படங்களில் பெரும்பாலும், கோட்சூட் அணிந்துகொண்டு கைகுலுக்கிக் கொண்டிருப்பார்கள் அல்லது நம்மூர் அரசியல்வாதிகள் அரெஸ்ட் ஆகும்போது சிரித்துக்கொண்டே கையசைப்பதுபோல டாடா காண்பித்துக்கொண்டிருப்பார்கள்.

 

ஆனால் புதின், காட்டில் துப்பாக்கியுடன் உலாவுகிறார். சட்டையில்லாமல் குதிரைகளில் வலம்வருகிறார்.  ஃபார்முலா 1 காரில் சீறிப் பாய்கிறார்.  நீர்மூழ்கிக் கப்பலில்  Baikal ஏரியின் ஆழம் பார்க்கிறார். ஜூடோ பயிற்சியில் எதிரியை தூக்கி அடிக்கிறார். இன்னொரு பக்கம் கச்சேரியில் பியானோ வாசிக்கிறார், பாடுகிறார். ஐஸ் ஹாக்கியில் கோல் போடுகிறார். பப்பி நாய்க்குட்டியைத் தூக்கிக் கொஞ்சுகிறார்.

 

எல்லாத்தையும் நீங்களே பாருங்க பாஸ்!

 

putin1.jpg

 

வாட் எ மேன்...!

 putin.jpg
 
டாப்லெஸ் புதின்!
(ஆகஸ்ட் 15, 2007. Dmitry Astakhov/AP)
 
Putin-stares-down-a-young-chick-at-an-Ag
 
ச்சோ க்யூட்ல...!
(அக்டோபர் 11, 2008. REUTERS/RIA Novosti/Alexei Druzhinin/Pool)
 
Putin-in-a-Tree.jpg
 
                                                                                                   ஓவர் ஆக்டிங்                                                                                                        (AFP/GETTY)
 
 
putin-gun.jpg
 
காட்டுக்குள் வேட்டை!
(ஆகஸ்டு15, 2007. REUTERS/RIA Novosti/KREMLIN)
 
putin_si.jpg
 
பாசக்கார நண்பன்ஸ்..!
(RIA Novosti / Alexsey Druginyn)
 
 
putingun.jpg
 
 
ரஷ்யாவின் GRU மிலிட்டரி இன்டெலிஜென்ஸ் தலைமையகத்தில் 'பாயின்ட் & ஷூட்'!
(Reuters)
 
o-PUTIN-HORSE-facebook.jpg
 
குதிரையுடன் கூலிங் கிளாஸில் புதின்!
(Getty)
 
Putin-Drinking.jpg
 
சைபீரியாவின் Khakasiya பகுதியில் இளைப்பாறும்போது!
(ஃபிப்ரவரி 25, 2010 - REUTERS/Ria Novosti/Alexei Druzhinin/Pool)
 
Putin-Horse-Topless-2.jpg
 
என்னா ஸ்டைலான ஃபோட்டோ...!
(ஆகஸ்டு 3, 2009. REUTERS/RIA Novosti/Pool/Alexei Druzhinin)  
 
no-guns-no-problem-putin-also-holds-a-si
 

(டிசம்பர் 18, 2009 - REUTERS/Ria Novosti/Pool/Alexei Druzhinin)

vijayakanth-delhi-press-meet-reactions%2

(இப்ப எதுக்குய்யா சம்பந்தமில்லாம என்ன இழுக்குறீங்க..?)

 
fishing1.jpg
 
'அமெரிக்காவையும் இப்படித்தான் டீல் செய்வேன்!'
(AP)
 
putin-dinner.jpg
 
அந்த வானத்தப்போல மனம் படைச்ச மன்னவனே..!
(மே 9, 2012. . REUTERS/Alexei Nikolsky/RIA Novosti/Pool)  
 
swim.jpg
 
தல...நீங்க ஹீரோ லெவல்....
(ஆகஸ்டு 3, 2009. REUTERS/RIA Novosti/Pool/Alexei Druzhinin)
 
%5BUntitled%5D.jpg

                       புதின் அதிகமாக பியானோவில் வாசிக்கும் இசை 'From What the Motherland Begins?'                                 (செப்டம்பர் 15, 2011. REUTERS/Alexei Nikolsky/RIA Novosti)

இவற்றில் பெரும்பாலான புகைப்படங்கள் புதினுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்டது. அவர் நன்றாக இருக்கிறார் என்று ரஷ்ய மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கவும், உலகத்துக்குச் சொல்லவும் 'அரெஞ்ச்' செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இதனாலே புதின் மீம்களும் இணையத்தில் பிரபலம்.

ஆனாலும், ரசனைக்கார பிஆர் டீமைத்தான் வைத்திருக்கிறார் மனுஷன்!

http://www.vikatan.com/news/article.php?aid=50134

Link to comment
Share on other sites

ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக ஒரு மூலகம்...???

® பெயர்..பெண் (Girl) ?

® குறியீடு .. GL

® பெளதீக இயல்பு

1.திடீர் திடீரென காரணம் இன்றி சூடாகும்.

2.காதல்,அன்புடன் கையாளும் போது உருகக்கூடியது.

3.முறையாக கையாளாதவிடத்து கசந்து விடும்.

® இரசாயன இயல்பு

1.மிக அதிகமான எதிர்வினை கொண்டது.

2.அதிகம் நிலைத்து நிற்பதில்லை.

3.GOLD , DIAMOND, PLATINUM, CLOTHES மற்றும் பெறுமதி மிக்க பொருட்களால் அதிகம் ஈர்க்கப்படக் கூடியது.

® இயற்கை இயல்பு

1.பணத்தை சுலபமாக கறக்க கூடியது.

2.தனிமையில் விடப்படும் போது துரிதமாக ஆவியாகும்.?

® காணக்கூடிய இடம்

1.கண்ணாடிக்கு அருகில்?

2. phone உடன்

 

Link to comment
Share on other sites

மேரி க்யூரி

MARY_2612782f.jpg
 

நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் விஞ்ஞானி

இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவரும், கதிர்வீச்சைக் கண்ட றிந்தவருமான மேரி க்யூரி (Marie Curie) பிறந்த தினம் இன்று (நவம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# போலந்து தலைநகர் வார்சாவில் (1867) பிறந்தார். இயற்பெயர் மரியா சலோமியா ஸ்கோடோஸ்கா. பள்ளி ஆசிரியரான தந்தையிடம் கணிதம், இயற்பியல் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கினார்.

# இவருக்கும், இவரது அக்காவுக்கும் மருத்துவம் படிக்க ஆசை. இவர் வேலை பார்த்து அக்காவைப் படிக்கவைப்பது, பிறகு அவர் வேலைக்குப் போய் இவரைப் படிக்கவைப்பது என்று உடன்படிக்கை செய்துகொண்டனர். அக்கா பாரீஸ் சென்றார். அவருக்கு உதவ ஒரு வீட்டில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தார் மேரி. 6 ஆண்டுகளாக அக்காவுக்கு பணம் அனுப்பினார்.

# அக்காவின் அழைப்பை ஏற்று, பாரீஸ் சென்றார். அங்கு சோர்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் பயின்றார். பகுதிநேர வேலைகள் பார்த்து சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்தினார்.

# பியரி என்ற ஆராய்ச்சியாளரின் அறிமுகம் கிடைத்தது. இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இருவரும் வாழ்விலும் இணைந்தனர். எக்ஸ் கதிர்களை ஆராய்ந்துவந்த விஞ்ஞானி பெக்கரெல், அந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளும் பணியை மேரியிடம் ஒப்படைத்தார். தம்பதிகள் இணைந்து ஆராய்ச்சிகளில் இறங்கினர்.

# யுரேனியம் விலை அதிகம் என்பதால், இவர்களால் வாங்க இயலவில்லை. ஆஸ்திரியாவில் யுரேனியத்தைப் பிரித்தெடுத்த பிறகு, எஞ்சியவற்றை குப்பையில் கொட்டுவதாக கேள்விப்பட்டனர். போக்குவரத்து செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து, அதை கொண்டுவந்தனர். டன் கணக்கில் குப்பை குவிந்தது.

# உரிய கருவிகள், உபகரணங்கள் இவர்களிடம் கிடையாது. எளிமையாக மண்ணைக் கரைத்து, கொதிக்க வைத்து பக்குவம் செய்து, சளைக்காமல் ஆய்வு செய்தனர். யுரேனியக் கதிர் போல 300 மடங்கு ஆற்றல் கொண்ட கதிர்களைக் கண்டறிந்தனர்.

# அந்த கதிர்கள் பட்டு இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையிலும் மேரி, ‘இது திசுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. எனவே நோய் விளைவிக்கும் திசுக்களையும் இதன்மூலம் அழிக்கலாம்’ என்பது தெரியவருவதாக கூறி மகிழ்ந்தார்.

# தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். யுரேனியக் கழிவில் இருந்து பொலோனியம் தனிமத்தைக் கண்டறிந்தார். தொடர் ஆய்வுகளில் கிடைத்த சில படிகங்கள் ஆற்றல் மிக்க கதிர்களை தொடர்ந்து வீசின. இந்த கதிரியக்க ஆராய்ச்சிகளுக்காக பெக்கரெல் மற்றும் க்யூரி தம்பதிக்கு 1903-ல் நோபல் பரிசு கிடைத்தது.

# சாலை விபத்தில் கணவர் பியரி 1906-ல் இறந்தார். சிறிதுகாலம் சோகத்தில் இருந்த மேரி, பின்னர் உறுதியுடன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். கணவர் பார்த்த பேராசிரியர் பணியை பிரான்ஸ் அரசு இவருக்கு வழங்கியது. பாரீஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியை என்ற பெருமையைப் பெற்றார். ரேடியக் கூட்டுப் பொருளின் படிவங்களை பிரித்தெடுத்து, ரேடியம் தனிமத்தை தனியாகப் பிரித்தார். இதற்காக 1911-ல் 2-வது நோபல் பரிசைப் பெற்றார்.

# கதிர்வீச்சால் தன் உறுப்புகள் பாதிக்கப்படுவதை அறிந்தார். ஆனாலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ரேடியத்தைக் கண்டறிந்த தன்னலமற்ற விஞ்ஞானி மேரி க்யூரி உடல்நலம் பாதிக்கப்பட்டு 67-வது வயதில் (1934) மறைந்தார்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-10/article7854526.ece

Link to comment
Share on other sites

12186778_940069049375123_737406924017897

உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய,அவுஸ்திரேலிய அதிவேகப் பந்துவீச்சாளர் ப்ரெட் லீ நேற்று பிறந்தநாள் கொண்டாடினார்.

டெஸ்ட், ஒருநாள், T 20 சர்வதேசப் போட்டி ஆகிய மூன்று வகைப் போட்டிகளிலும் ஹட் ட்ரிக் எடுத்த ஒருவர் லீ மட்டுமே.

Link to comment
Share on other sites

  • இன்று
  • 1506 - இலங்கை முதன்முறையாக புவி வரைபடம் தொடர்பான நூலை வெளியிட்டது.

     

    1640 - போர்த்துகீசரால் நீர்கொழும்பு மீண்டும் கைப்பற்றப்பட்டது.

     

    1941 - ரிட்டிகல மலைப்பகுதி உயரம் கூடியபகுதியாக அறிவிக்கப்பட்டது.

     

    1908 - ராகம தொடக்கம் யா எல வரையான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.

 

 

 

1920 - புனித பைபிள் என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது.

 

1965 - ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

2012 - கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்தனர்.

1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.

   

1963 - ஜப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.

Link to comment
Share on other sites

பலமே வாழ்வு; பலவீனமே மரணம் !

உலகில் சுவாமி விவேகானந்தர் மிகவும் வெறுத்தது ஒன்று உண்டு என்றால், அது 'பயம்'தான்! ''பலமே வாழ்வு; பலவீனமே மரணம்'' என்றார் விவேகானந்தர்.

பயத்தை எப்படி வெல்வது? பயம் யாருக்கு வரும்? தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்க்கே பயம் வரும்.

'இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்கிறார்கள். ஆனால் நான் கூறுகிறேன்... முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே உள்ளன' என்றார் விவேகாந்தர்.

’இளைஞன்’ என்பதற்கு அவர் சொல்லும் இலக்கணம் என்ன தெரியுமா? 'பயமற்றவனே இளைஞன்!'

12190873_1019470944778362_34259906871161

Link to comment
Share on other sites

பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர் எனற அறிய வேண்டுமா..?

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது. பெயரில் என்ன உள்ளது என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் பெயரானது வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

ஒருவரின் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே அவர்களின் பெயர் தான். சில நேரங்களில் அவரவர்களின் விதியை பிரதிபலிக்கும் விதமாகவும் பெயர் உள்ளது.
அப்படிப்பட்ட பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளல்லாம்.

பெயரின் முதல் எழுத்து A to Z:
A: உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.


B: உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.


C: உங்கள் பெயர் எழுத்து C-யில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.


D: உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.


E: உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.


F: உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.


G: நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.


H: H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.


I: நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.


J: J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.


K: ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.


L: வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில் அமையும்.


M: M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.


N: N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.


O: O என்ற எழுத்து அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.


P: உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.


Q: Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்


R: உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.


S: S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.


T: எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.


U: அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும். ஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில் பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.


V: V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.


W: W என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.


X: சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.


Y: சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.


Z: இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.

12227667_1071585299548910_81728193160842

இது ஒரு பல்சுவை பதிவு மாத்திரமே.:)

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣
    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.