Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

கண்ணீரும் புன்னகையும்: என் தந்தை என்னை வீராங்கனை ஆக்கினார்

 
 
kanneer_2621298f.jpg
 

பெண்கள் கல்விக்கு ஆதரவாகப் பேசியதால் தலிபான்களால் சுடப்பட்டு மீண்டு தற்போது உலகம் முழுவதும் பெண் கல்வியின் முகமாக அறியப்படும் மலாலா குறித்து ‘ஹி நேம்ட் மீ மலாலா’ என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. நோபல் பரிசு பெற்றவர்களிலேயே மிக இளம் வயதில் நோபல் பரிசை வென்ற மலாலா குறித்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் ஆஸ்கர் விருது வென்ற டேவிஸ் குக்கன்ஹீம்.

மலாலாவின் போராட்ட வாழ்க்கைக்குப் பின்னால் இருந்தவர் அவரது தந்தை ஜியாவுதீன் யூசஃபி. 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் படையினருக்கு எதிராகப் போரிட்ட வீராங்கனையின் பெயரைத் தனது மகளுக்குப் பெயராக வைத்தவர். அனைத்துத் துயரங்களிலும் மகளின் வளர்ச்சிக்குத் துணை நின்றவர். சொந்த கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை நிர்வகித்துவந்தவர். மலாலா தலையில் சுடப்பட்டு இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அற்புதமான வகையில் பிழைத்தெழுவதிலிருந்து தொடங்குகிறது இந்த ஆவணப்படம்.

எத்தனையோ சர்வதேசக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பேசும் ஆளுமையாக இருந்தாலும், வீட்டில் சிறு பெண்ணின் குறும்புகள் மற்றும் விளையாட்டுகளை விட்டுக்கொடுக்காதவர் மலாலா என்பதை இப்படம் காட்டுகிறது. மலாலாவுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி. டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்.

ட்விட்டரில் வந்த காவல் துறையினர்

தெரியாத ஆண்களிடமிருந்து தொலைபேசிக்கு வரும் தவறான அழைப்புகள், ஆபாசமான குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பிலும் தொந்தரவுகள் தொடங்கியுள்ளன. பெங்களூருவைச் சேர்ந்த சனாந்த்லர் பாங் என்ற பெண்மணி, இரவு உணவுக்காக ஒரு உணவு விடுதியைத் தொடர்புகொண்டு ஆர்டர் செய்தார். உணவு கொண்டுவந்த டெலிவரி நபர், சானந்த்லர் தனியாக வசிப்பதை அறிந்துகொண்டு தொடர்ந்து வாட்ஸ்அப்பில் தொந்தரவு செய்யத் தொடங்கினார். அந்த டெலிவரி நபரின் தொலைபேசி எண்ணை ப்ளாக் செய்த பின்னும் வெவ்வேறு எண்களில் தொந்தரவுகள் தொடர்ந்தன.

ஒரு கட்டத்தில் அவர் உள்ளூர் காவல் துறையினரைத் தொடர்புகொண்டார். எந்த உதவியும் இல்லை. வேறு வழியின்றி தனது கோபத்தை ட்விட்டரில் புகாராகப் பதிவுசெய்தார். ட்விட்டரில் அவருக்குப் பெருகிய ஆதரவைப் பார்த்து பெங்களூரு போலீசார் களத்தில் இறங்கினர். ட்விட்டர் வழியாகவே அவரைத் தொடர்புகொண்ட போலீஸ் அதிகாரிகள் வேண்டிய உதவிகளைச் செய்ய உறுதிமொழியும் தந்தனர். கடைசியில் வழிக்கு வந்த போலீசாருக்கு ட்விட்டரிலேயே நன்றியும் கூறியுள்ளார் சானந்த்லர்.

சுசீலா 80

தென்னகத் திரையுலகின் மறக்க இயலாத பாடகிகளில் ஒருவரான சுசீலாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 80 வயது. ஞானகோகிலம் என்று பெருமையுடன் அழைக்கப்படும் பி.சுசீலா தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தலைமுறைகளைக் கடந்தும் நினைவில் நிற்கும் பாடல்களைப் பாடியவர். ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனத்தால் மாதச் சம்பளம் கொடுத்து அமர்த்தப்பட்ட அரிதான பாடகி அவர். பாடல் வரிகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் பாடலின் முழு உணர்வையும் பாவத்தையும் கொண்டுவரும் மேதை என்று புகழப்பெற்றவர்.

கேரளத்தில் இன்றும் தாலாட்டுப் பாடலாகத் தாய்மார்களால் பாடப்படும் ‘பாட்டுப்பாடியுறக்கம் ஞான்’ பாடல்தான் இவரது முதல் மலையாளப் பாடல். இசையமைப்பாளர் வி.தக்ஷிணாமூர்த்தி. தென்னிந்தியாவில் அதிகபட்ச ரசிகர்களைக் கொண்ட ஒரே பாடகி இவர்தான் என்கிறார் பாடகர் ஜெயச்சந்திரன். ‘சொன்னது நீ தானா’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘நலந்தானா’ முதலிய அமரத்துவம் வாய்ந்த பாடல்களைப் பாடிய சுசீலாவை வாழ்த்துவோம்.

http://tamil.thehindu.com/society/women/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7880447.ece

Link to comment
Share on other sites


வரலாற்றில் இன்று: நவம்பர் 17
 
 

article_1447735999-s.jpg1511: பிரான்ஸுக்கு எதிராக ஸ்பெய்னும் இங்கிலாந்தும் கூட்டுச்சேர்ந்தன.

1558: இங்கிலாந்தில் எலிஸபெத் யுகம் ஆரம்பம். மகாராணியார் முதலாம் மேரி இறந்தபின் அவரின் சகோதரரி முதலாம் எலிஸபெத் ஆட்சிக்கு வந்தார்.

1800: அமெரிக்க நாடாளுமன்றம் முதல் தடவையாக வாஷிங்டன் டி.சியில் கூடியது.

1831: கொலம்பியாவிலிருந்து ஈக்குவடோரும் வெனிசூலாவும் பிரிந்தன.

1869: மத்தியத்தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறந்துவைக்கப்பட்டது.

1903: ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் (பெரும்பான்மை) மேன்ஷ்விக் (சிறுபான்மை) என இரு குழுக்களாகப் பிரிந்தன.

1922: ஒட்டோமான் இராஜ்ஜியத்தின் முன்னாள் மன்னர் சுல்தான் 6ஆம் மெஷ்மெத் இத்தாலியில் தஞ்சம் புகுந்தார்.

1933: சோவியத் யூனியனை அமெரிக்கா அங்கிகரித்து.

1969: ஆயுதக்குறைப்பு தொடர்பாக அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஹெல்சிங்கியில் பேச்சுவார்த்தை நடத்தின.

1970: சோவியத் யூனியனின் லூனாகோட் -1 எனும் ரோபோ சந்திரனின் தரையில் இறங்கியது. மற்றொரு கோளில் அல்லது உபகோளில் தரையிறங்கிய முதலாவது ரோபோ இதுவாகும்.

1970: டக்ளஸ் ஏங்கல்பர்ட் என்பவர் முதலாவது கணினி மௌஸுக்கு காப்புரிமை பெற்றார்.

1997: எகிப்தில் யாத்திரிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 62 பேர் பலி.

- See more at: http://www.tamilmirror.lk/159281/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.p1b2SXsT.dpuf
Link to comment
Share on other sites

11249030_943373965711298_788521959584477

செம்பருத்தி மூலம் தமிழ் சினிமாவில் மனம் வீசிய நடிகை ரோஜாவின் பிறந்தநாள்.

Link to comment
Share on other sites

இந்த கலர்ஃபுல் கால் டாக்ஸி சென்னைக்கு எப்போ வரும்?

 

மும்பை நகர் சாலைகள் எங்கும் டாக்சிகளே அதிகம். கறுப்பு, மஞ்சள் நிறத்தில் இருக்கும் இவை, பெரும்பாலும் அழுது வடியும் பழைய கார்கள். ஆனால், இந்தக் கார்கள், இப்போது பயணிகளைக்  கவர்ந்து வருகின்றன. இதற்குக் காரணம், 'டாக்சி ஃபேப்ரிக்' (Taxi Fabric) டெக்னிக்தான். அப்படியென்றால்?

colour%20taxi01.jpg

கார்களில் இன்டீரியர் டெக்ரேஷன் பண்ணி மார்டனாக்குவதுதான் இந்தத் திட்டம். டாக்சிக்குள் உட்கார்ந்தால், வண்ண வண்ண ஓவியங்கள் நம் மனதைக் கவரும். காருக்குள்தான் இருக்கிறோமா என்ற ஆச்சர்யத்தை உண்டாக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, Sanket Avlani என்ற டிசைனரால் அறிமுகம் செய்யப்பட்டது. கம்ப்யூட்டரில் விதவிதமான டிஸைன்களை காண்பிப்பார்கள். அதில் நமக்குப் பிடித்த டிஸைனைத் தேர்வு செய்தால் போதும், அதை சீட் கவர்களில் பிரிண்ட் செய்து, இருக்கைகள், கதவுகளின் மேல் பகுதிகளில் பொருத்தி விடுவார்கள். ஒரு டாக்சியில் உள்ள டிசைனை மற்றொரு டாக்சியில் பார்க்க முடியாது.

colour%20taxi02.jpg

ஒன்றில், மீன்கள், மீனவர்கள், கப்பல்கள் என இருக்கும். மற்றொன்றில் தேச பக்தியை உணர்த்தும் விதத்தில் சுதந்திர தின நிகழ்ச்சிகள், போராட்ட வீரர்களின் படங்கள் இருக்கும். இன்னொன்றில் மும்பை நகர வாசிகளின் வாழ்க்கை வரலாறு குறிக்கப்பட்டிருக்கும். மற்றொன்றில், சிறுவர்களுக்குப் பிடித்த விலங்குகள், தீம் பார்க், சாக்லேட், ஐஸ்க்ரீம் என இருக்கும்.

இப்படி, மும்பை நகர் டாக்சிகள் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

அட, சீக்கிரம் சென்னை டாக்ஸிகளையும் இப்படி அழகாக்குங்கப்பா..!

http://www.vikatan.com/news/article.php?aid=55175

Link to comment
Share on other sites

 

பெய் என்றால் பெய்யும் மழை!

அம்மா உத்தரவுப்படி பெய்த மழை !!

:grin::grin:‘முதல்வர் உத்தரவுப்படி
பெய்த மழை’

 

Link to comment
Share on other sites

11906827_943373155711379_779228249142353


தமிழ்த் திரையுலகின் மும்முடி மன்னவர்களில் ஒருவராக விளங்கிய, 'காதல் மன்னன்' ஜெமினி கணேசனின் பிறந்த தினம் இன்று.

அனைத்து காலகட்டங்களிலும் தனி முத்திரை பதித்த ஜெமினி, காலமாகும் வரை திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்த நாயகர் இவர்.

Link to comment
Share on other sites

ஃபார்மல் கம் பார்ட்டிவேர்... கலக்கல் காம்பினேஷன்!

 

காஸ்ட்யூம் ஸ்டுடியோ!

 

ந்த இதழ் ‘காஸ்ட்யூம் ஸ்டுடியோ’வில் த்ரீ இன் ஒன் அவுட்ஃபிட் பத்தி சொல்கிறார், சென்னை, அண்ணா நகரில் உள்ள ‘ஸ்டுடியோ 149 பை ஸ்வாதி’ டிசைனர் டிரெஸ் ஸ்டுடியோவின் நிர்வாகி ஸ்வாதி புருஷோத்தமன்.

p12a.jpg

மாடல் போட்டிருக்கும் இந்த டிரெஸ், கிட்டத்தட்ட மிக்ஸ் அண்ட் மேட்ச் கான்செப்ட் தான். இதை மூணு  விதமா யூஸ் செய்யலாம். இந்த டிரெஸ் 15 வயசுல இருந்து 30 வயசுவரை உள்ள பொண்ணுங்களுக்கானது.

சிம்பிள் பார்ட்டி

ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸோட பர்த்டே பார்ட்டி மாதிரியான சின்னச் சின்ன `கெட் டுகெதர்’ செலிபிரேஷனுக்கு ஏத்த டிரெஸ் இது. கறுப்பு கலர், க்ரேப் சில்க் மெட்டீரியலில் ஸ்டிச் பண்ணியிருக்கும் க்ராப் டாப்ஸ்தான், இந்த டிரெஸ்ஸோட ஸ்பெஷல். கொஞ்சமா ஒரு ரிச்னஸ்க்காக, ஷோல்டரில் சம்கி வைத்து எம்ப்ராய்டரி செஞ்சிருக்கேன். இந்த டாப்புக்கு, ஹை வெயிஸ்ட் பேன்ட்டை பாட்டமா குடுத்திருக்கேன். கூடவே எம் பிளிஷ்ட் பெல்ட் ரிச் லுக்குக்காக. இதை தேவைக்கு ஏத்த மாதிரி கழட்டி மாட்டிக்கலாம்.

மத்தபடி, கம்மல், வளையல், செயின் போன்ற அக்ஸசரீஸ் எதுவும் இந்த டிரெஸ்ஸுக்கு பெருசா தேவை இருக்காது. அதான் இதோட ஸ்பெஷல்.

கிராண்ட் பார்ட்டி

p12b.jpg

இந்த க்ராப் டாப்ஸுக்கு மேட்ச்சா, ஒரு ரிச்சான ஃபுல் ஸ்கர்ட் போட்டுட்டு, லாங் ஹேங்கிங் டைப் கம்மல், ஃப்ரீ ஹேர்ஸ்டைல் விட்டு, கூடுதல் அழகுக்கு, பேன்ட்டில் இருக்கும் டிசைனர் பெல்ட்டை தலைக்கு ஹேர் பேண்டாக யூஸ் செய்யலாம்.

ஃபார்மல் அவுட்ஃபிட்

ஹை வெயிஸ்ட் பேன்ட்டுடன், ஒரு பிளெய்ன் காட்டன் ஷர்ட்டை, டக் இன் செஞ்சாலே போதும்... ஆபீஸ் மீட்டிங்குக்குக் கான அவுட்ஃபிட் ரெடி!

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

அமெரிக்கா ஏன் உலகின் சிறந்த நாடு இல்லை தெரியுமா?

 

மெரிக்கர்களை விட, இந்தியர்களுக்கு அமெரிக்காவின் மீது பிரமிப்பு அதிகம். ஆனால், அமெரிக்காவை அமெரிக்காவிலேயே கிண்டலடிக்கும் போக்கு சகஜம். அப்படி HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நியூஸ் ரூம்” என்ற அரசியல் தொடரில் ஒரு விவாதம் நடந்தது.

usa%20tv01.jpg

அமெரிக்காவை உலகின் சிறந்த நாடு என ஏன் சொல்கிறீர்கள்’ என்ற தலைப்பிலான விவாதத்தில், அனைவரும் அமெரிக்காவின் அருமை பெருமைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் ’இன்னும் அமெரிக்காவை உலகின் சிறந்த நாடென நீங்கள் நம்புகிறீர்களா?’ என்று சாட்டையடியாகக் கேட்பார்.

usa%20tv02.jpg

அந்த உரை கீழே...

“ஒரு சில விஷயங்களின் நிதர்சனத்தை நாம் புரிந்து கொள்ள  வேண்டும். நாம்தான் உலகின் சிறந்த நாடு எனச் சொல்ல, எந்த ஆதாரமும் நம்மிடம் இல்லை. உலகில் கல்வியறிவில் நாம் 7 வது இடம், கணிதத்தில் 27 வது இடம், அறிவியலில் 22 வது இடம். தனிநபர் ஆயுளில் 49 வது இடம், குழந்தைகள் மரணத்தில் 178 வது இடம், குடும்பங்களின் வருமானத்தில் 3 வது இடம், தொழிலாளர் சக்தியில் 4 வது இடம், ஏற்றுமதியில் 4 வது இடம். ஆனால், மூன்று விஷயங்களில் மட்டும் உலகளவில் நாம் டாப் ரேங்கில் இருக்கிறோம்.

அதிகம் சிறைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள நாடு, ராணுவம் மற்றும் ஆயுதக் கொள்முதலுக்கு அதிகம் செலவு செய்யும் நாடு, ’தேவதைகள் நிஜத்தில் வாழ்கின்றனர்’ என நம்பும் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு.

usa%20tv04.jpg


வீடியோவை காண இங்கே கிளிக் செய்க...

இவைகள்தான் அந்தப் பெருமை. 26 நாடுகளின் ராணுவச் செலவைக் கூட்டினால் தொகைதான், நம் நாட்டின் ராணுவ செலவு. அறிவியலில் நாம் முன்னேறி விட்டோம். பூமியைத் தாண்டி பல கிரகங்களைக் கண்டுபிடித்து விட்டோம். பல நோய்களை குணப்படுத்தி விட்டோம். நமக்குத் தேவையான உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் தேடிச் சென்று அடைகிறோம். ஆனால், உலகின் தேவைகளுக்கு நாம் உதவியதே இல்லை!”


அமெரிக்காவையே ஜெர்க் ஆக்கிய அந்த வீடியோ பல காலமாக வைரலாக இருக்கிறது!

http://www.vikatan.com/news/article.php?aid=55188

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: நவம்பர் 18
 
 

article_1447820229-6.jpg1307: சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் டெல் என்பவர் தனது மகனின் தலையில் வைக்கப்பட்ட அப்பிளை துப்பாக்கியால் சுட்டார்.

1421: நெதர்லாந்தில் ஸுய்டர்ஸீ எனும் இடத்தில் கடலிலிருந்து பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருந்த மதில் உடைந்ததால் 72 கிராமங்களில் கடல்நீர்புகுந்து சுமார் 10 ஆயிரம் பேர் பலி.

1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் பியூர்ட்டோ ரிக்கோ தீவை முதல் தடவையாக கண்டார்.

1809: வங்காள விரிகுடாவில் கிழக்கிந்திய கம்பனியின் படைகளை பிரெஞ்சு படைகள் தோற்கடித்தன.

1903: அமெரிக்கா கனடாவில் ஆயிரக்கணக்கான இருந்த நேர வலயங்களுக்குப் பதிலாக  5 நேர வலயங்கள் ஏற்படுத்தப்பட்டன.

1905: டென்மார்க் இளவரசர் கார்ல், நோர்வேயின் 7 ஆம் ஹக்கோன் மன்னரானார்.

1918: ரஷ்யாவிலிருந்து லத்வியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1926: ஜோர்ஜ் பேர்னாட்ஸா தனத நோபல் பரிசுப் பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தார்.

1943: இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் நகர் மீது பிரிட்டனின் 440 விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். பிரிட்டன் 9 pமானங்களையும் 53 படையினரையும் இழந்தது.

1945: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறந்தார்.

1947: நியூஸிலாந்தில் கடைத்தொகுதியொன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் 41 பேர் பலி.

1961: அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 18 ஆயிரம் இராணுவ ஆலோசகர்களை வியட்நாமுக்கு அனுப்பினார்.

1963: பொத்தான் இலக்கங்களை கொண்ட தொலைபேசிகள் சேவைக்கு வந்தன.

1978: கயானாவில் மதநிலையமொன்றின் அறிவுறுத்தல் காரணமாக 270 சிறார்கள் உட்பட 900 பேர் கூட்டாக தற்கொலை.

1987: லண்டனில் பாதாள ரயில் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் பலி.

- See more at: http://www.tamilmirror.lk/159366/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.owBb3zYl.dpuf
Link to comment
Share on other sites

12244407_943683622346999_386245410186342


இலங்கை அணியின் இளம் விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரரும்,
தற்போதைய கலக்கும் நம்பிக்கை நட்சத்திரமான துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமாலின் பிறந்தநாள்.

Link to comment
Share on other sites

நயன்தாராவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? - ஒரு நயன் ரசிகனின் பார்வை

 

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் தண்ணீர் பிரச்னை, தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் தண்ணீர் பிரச்னை. மூணு மாநிலங்களும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சதில்ல. ஆனா, இந்த மூன்று மாநிலங்களுக்கும் உயிர்நாடி ஒண்ணுதாங்க. அது நம்ம நயன்தாராதாங்க.

‘தேசிய நயன்தாரா இணைப்புத் திட்டம்’னு ஒண்ணு ஆரம்பிச்சு நயனை இந்திக்கும் கொண்டு போக முயற்சி நடக்குது. அப்புறம் வடக்கு மட்டும் வாழும், தெற்கு தேயும். அதுக்கு நம்ம ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் போராளிகள் இடம் கொடுக்கக்கூடாது. என்னதான் இருந்தாலும் நயன் எப்பவுமே நமக்கு மட்டுமே சொந்தம். அதனால்தான் அவர் தென்னிந்தியாவின் ’ஜொள்ளெண்ணத் தூதுவரா’ கடந்த பத்து வருஷமா நீடிச்சுக்கிட்டு வருகிறார்.

Nayan%20Spl.jpg

இப்போதைய ஹீரோயின்களில் பப்ளியாக இருந்தாலும், ஷேப்புக்கு வந்தாலும், எப்படிப் பார்த்தாலும் அழகா இருக்குறது நயன் மட்டும்தான். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் எங்க தேடினாலும், அனைத்து ஆங்கிள்களிலும் அழகா இருக்குறது நம்ம நயன் மட்டும்தான். 'ஐயா' பட தாவணி நயனை அடிச்சுக்க இன்னமும் ஆளே இல்லை என்று இன்னமும் குமுறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் பல முன்னாள், இந்நாள் இளைஞர்கள்.

நடிகைக்கு திருமணம்னு செய்தியை கேள்விப் பட்டாலே கொடுத்த அட்வான்ஸைக்கூட திரும்பி வாங்காமல் தயாரிப்பாளர்கள் ஓடிவிடுவார்கள். ஆனால், நயன்தாராவைச் சுற்றி எத்தனையோ திருமண வதந்திகள் வந்தாலும் இன்னைக்கும் அவர்தான் ஃபீல்டில் நம்பர் 1. ஒவ்வொருமுறை திருமண வதந்தி கிளம்பி அடங்கும்போதும் நயனின் சம்பளம் அதிகமாகிறது. சிம்பு கூட வாய்க்கா தகராறு, பிரபு தேவாவுடன் பிரிவு, உதயநிதியுடன் உரசல்னு எதுகை மோனையோடு கிசுகிசுக்கள் வந்தாலும் எதுவுமே நயனின் செல்வாக்கை மூன்று மொழிகளிலும் அசைச்சுவே முடியாது.

நயன் நிறைய பேரை காதலிச்சிருக்காங்கனு பொத்தாம் பொதுவா விமர்சனம் செய்யும் ஆண்களிடம், ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்க ஆசைப்படுறேன். உங்களில் எத்தனை பேர் ஒரே ஒரு பொண்ணை மட்டும் காதலிச்சிருக்கிங்களோ, அவங்க மட்டும் நயனை விமர்சனம் செய்யுங்களேன்...! இப்போ கிரவுண்டே காலியாகும் பாருங்களேன்! நயன் பச்சமண்ணு சார், இவ்ளோ பாராட்டி எழுதி இருக்கோமே... அதைப் படிக்கக்கூட தெரியாத குழந்தை சார்!

‘நானும் ரவுடிதான்’ படத்துல "என் போன் எப்ப கிடைக்கும்"னு நயன் அப்பாவியா கேட்குமே, அந்த மாதிரி, "எனக்கு நல்ல பாய் ஃப்ரெண்டு எப்ப கிடைப்பான்னு"தான் நயன் இன்னமும் தேடிக்கிட்டு இருக்கு. அதைப்போய் தப்பா பேசுறீங்களே? இப்போ கூட, நயன் விக்னேஷ் லவ்வுல ஏதாவது தகராறு வந்துட்டா, நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்காதான்னு க்யூவுல நிக்கிற பயகபூரா நம்ம ஹீரோஸ்தான். "பாஸ், இன்னைக்கி நான் லட்டரு குடுத்துக்குறேன், பில்லாவுல இருந்து ஃபாலோ பண்றேன் ப்ளீஸ்" என ஒரு புது ஹீரோ சொல்வதும், "டேய் நான் சந்திரமுகிலேர்ந்து வெயிட்டிங்’’ என இன்னொரு ஹீரோ சொல்வதுமாக போட்டி நீள்கிறது.

நவம்பர் 17 காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த நாள். மறுநாள் காதல் இளவரசி ந‌யன் பிறந்த நாள்... எவ்வளவு பொருத்தம் பாருங்க! நயன் பிறந்த நாளை தேசிய பேரின்ப நாளாக அறிவிக்க இதைவிட வேறு காரணமும் வேண்டுமா? சுருக்கமா சொல்றதுன்னா... 'நானும் ரவுடிதான்' நயன்தாரா நாமம் வாழ்க. ’இது நம்ம ஆளு’ நயன் புகழ் ஓங்குக. அம்புட்டுதேன்!

http://www.vikatan.com/cinema/article.php?aid=55204

12273643_943683115680383_655828325209828

ஊரெல்லாம் கண்டு வியக்கும் நயன்தாரா...
இன்று தான் பிறந்தாராம்.

தமிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி நடிகை..
எல்லா ஹீரோக்களினதும் கனவு நாயகி..
தொடர்ந்து வெற்றிப் படங்களின் கதாநாயகி

நயன்தாராவின் பிறந்தநாள்.

Link to comment
Share on other sites

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!

 

ஷாக்கிங் தகவல்கள்... சமாளிக்க 10 கட்டளைகள்!அவேர்னஸ்

 

‘‘குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!’’ என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாகப் பேசுகிறார்...

p60a.jpg

குளிர்சாதனப்பெட்டி... எதற்காக?

``மருந்தையும், சமைக்காத உணவையும் குளிர்படுத்தி பாதுகாத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மின்சாதனமே, இயந்திர தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியக் கண்டுபிடிப்பான குளிர்சாதனப்பெட்டி. உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அவற்றைப் பாதுகாத்து, குறிப்பிட்ட அந்த உணவுக்கு தட்டுப்பாடு வரும் காலத்தில் பயன்படுத்துவது, உணவுகளை உற்பத்தி இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு பாதிப்படையாமல் எடுத்துச் செல்வது, மருந்துகளைப் பாதுகாக்கப் பயன்படுத்துவது, பால், காய்கறி போன்ற சமைக்காத உணவுகளைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது... இதெல்லாம்தான் குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிப்பின் நோக்கங்கள்.

இன்றோ, சமைத்த உணவுகளையும் ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது, பல வகையான உணவுப் பொருட்களையும் வைக்கும்போது சரியாக மூடாமலும், சரிவர பிரித்து வைக்காமலும் ஸ்டோர் செய்வது, போன வாரம் வாங்கிய காளான் முதல், மிகுந்துபோன குழம்பு வரை அடைத்து வைப்பது என... ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி, கண்ணுக்குப் புலப்படாத விஷப்பெட்டியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது!

குளிர்சாதனப்பெட்டி அவசியமா?

குளிர்சாதனப்பெட்டி அவசியம் இல்லை என்பதுதான் உண்மை. நம் முன்னோர் குளிர்சாதனப் பெட்டியை அறியவில்லை; அவர்களின் ஆரோக்கியத்துக்கும் குறைவில்லை. அவர்களிடம் இருந்த சுறுசுறுப்போ, நேரமோ நமக்கில்லை என்பதால், நம் சோம்பேறித்தனத்துக்கு சாமரம் வீசும் ஃப்ரிட்ஜை சார்ந்து வாழப் பழகிவிட்டோம். முழுக்க முழுக்க, மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்காக கண்டிபிடிக்கப்பட்ட இந்த சாதனம், அவர்களின் சீதோஷ்ணம், வேலை, சூழலுக்குப் பொருந்தும். ஆனால், எல்லாவற்றிலும் ‘வெஸ்டர்னைஸடு’ ஆகும் நமக்கு, ஃப்ரிட்ஜும் விதிவிலக்கல்லாமல் போய்விட்டது. இதனால், அடிக்கடி காய்கறி வாங்க வேண்டிய வேலையும், மூன்றுவேளை சமைக்கும் வேலையும் குறையும் என்பதே பலரின் நினைப்பு. கொஞ்சம் மெனக்கெட்டால், இந்த சார்பை விலக்கலாம். இல்லையென்றால், அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் நம் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் குறைக்கும்.

செய்ய வேண்டிய விஷயங்கள்!

பெரியவர்கள், குழந்தைகள் உள்ள வீடுகளில் வயிற்றுவலி, பேதியில் இருந்து, ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமன் வரை ஃப்ரிட்ஜ் உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல. ‘இவ்வளவு பாதிப்புகளா?! ஆனாலும், ஃப்ரிட்ஜ் இல்லாமல் இருக்க முடியாதே?’ என்பவர்களுக்கு... 10 கட்டளைகள்... இதோ!

1. 5 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான டெம்பரேச்சரில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளரக்கூடும் என்பதால், -15 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் டெம்பரேச்சரை செட் செய்ய வேண்டியது மிக முக்கியம். முடிந்தவரை 4 டிகிரி செல்சியஸ் அளவில் எப்போதும் வைத்துப் பயன்படுத்துவது நல்லது.

2.  மின்சாரம் தடைபட்டால் இரண்டு மணி நேரம் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவு கெடாமல் இருக்கும். அதற்குப் பின்னும் மின்சாரம் இல்லையெனில், உடனடியாக ஃப்ரிட்ஜில் உள்ள உணவுகளை வெளியே எடுத்து, சூடுபடுத்தி சாப்பிட்டுவிட வேண்டும். வெயில் காலத்தில், ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் இருந்தாலே, உணவுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்திவிட வேண்டும்.

3. காய்கறி, பழங்கள், கீரைகள், உணவுகள், அசைவ உணவுகள் இப்படி அனைத்தையும் சரிவரப் பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அதாவது, ஃப்ரீஸரில் அசைவ உணவுகள், டிரேயில் பால் பாக்கெட்டுகள், டோர்களில் கூல்டிரிங்ஸ், கீழ் டப்பாவில் காய்கறிகள், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகள், நடுத்தட்டில் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மேல்தட்டில் சமைத்த உணவு... இப்படி ஒவ்வொன்றையும் அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் முறையாக இறுக்கமாகப் பேக் செய்து/ மூடி வைக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டியது மிக முக்கியம்.

செய்யக் கூடாத விஷயங்கள்!

4. என்னதான் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டாலும், உணவில் மாற்றம் நிகழத்தான் செய்யும். உதாரணமாக, பிரெட் உள்ளிட்ட மைதா சார்ந்த பொருட்களில் உருவாகும் பூஞ்சை, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு எந்தப் பொருளையும் ஸ்டோர் செய்ய வேண்டாம்.

5. ஆட்டுக்கறி, கோழிக்கறி, வடித்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும், அது மற்ற உணவுகளுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால் இவற்றை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வதைத் தவிர்க்கவும்.

6. அதிக சூடான உணவுப் பொருட்களை ஒருபோதும் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கக்கூடாது. அது அதிக மின்சாரம் செலவாக வழிவகுப்பதுடன், அந்த வெப்பம் ஃப்ரிட்ஜின் மொத்த டெம்பரேச்சரையும் தொந்தரவு செய்து, உணவுப் பொருட்களை பாதிக்கும்.

7. பொதுவாக, குறைந்த டெம்பரேச்சரில் இருந்து அதிக டெம்பரேச்சருக்கு உள்ளாகும்போது, அந்தப் பொருட்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கும் காய்கறிகள், உணவுகளை அவற்றிலிருக்கும் குளிர் தன்மை குறைந்ததும் சமைத்தோ, சூடுபடுத்தியோ பயன்படுத்தாவிட்டால் ஆபத்து.

8. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது பரிந்துரைக்கத்தக்கதல்ல. காரணம், அதில் நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் உருவாகி பாழாவதோடு, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும். இதில் சிலர் சமைத்து, உள்ளே வைத்து, வெளியே எடுத்து சூடுபடுத்தி, மீண்டும் உள்ளே வைத்து என்று பயன்படுத்தினால் அது உணவாக இருக்காது, விஷமாகிவிடும். 

9. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், நுண்சத்து குறைபாடு உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது. 

10. குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்றாலும், சுவை, விட்டமின் சத்து குறைவதுடன், போனஸாக பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று கிடைக்கும். எனவே, எச்சரிக்கை தேவை!

ஃபிரிட்ஜ்... உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக எடுத்து சாப்பிடத்தானே அன்றி, அழுகும் நிலைக்கு முன்வரை வைத்திருந்து சாப்பிட அல்ல என்பதை நினைவில் கொள்க!’’

- விழிப்பு உணர்வும் எச்சரிக்கையும் தந்து நிறைவு செய்தார், பவானி!  

  சா. வடிவரசு


என்னதான் மாற்று?!

p60c.jpg

காய்கறிகளை வாரக் கணக்கில் வாங்கி வைக்காமல் அதிகபட்சம் இரண்டு, மூன்று நாட்களுக்கு என வாங்கிப் பயன்படுத்தலாம். தேவைக்கும் அதிகமாகச் சமைத்து, மீகுந்துவிட்டது என ஃப்ரிட்ஜுக்குள் திணிக்காமல் அளவாகச் சமைத்து அன்றன்றே சாப்பிட்டுவிடலாம். சாதம் மிகுந்துவிட்டால், வடகம் போடலாம். மீன், நண்டு போன்ற அசைவ உணவுகள், கடலில் இருந்து பிடிக்கப்பட்டு பல நாட்கள் கழித்தே நம்மை வந்து அடைகின்றன. அவற்றை மேலும் வீட்டில் ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்தால் கிருமித் தொற்று நிச்சயம். அது மற்ற உணவுகளுக்கும் பரவும் ஆபத்தும் உள்ளது.


ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்? 

p60b.jpg


ஃப்ரிட்ஜ் பராமரிப்பு!

குளிர்சாதனப்பெட்டியை பராமரிக்கும் முறைகளைச் சொல்கிறார், சென்னை, ‘ஜே.கே. எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்’ உரிமையாளர் ராமகிருஷ்ணன்...

red-dot%282%29.jpg குளிர்சாதனப்பெட்டியை எப்போதும் காற்றோட்டமான, சூரியஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும்.

red-dot%282%29.jpg சிலிண்டரில் இருந்து கசியும் வாயு, குளிர்சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறியுடன் சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அடுப்பில் இருந்து ஃப்ரிட்ஜை தூரமாக வைக்கவும்.

red-dot%282%29.jpg குளிர்சாதனப் பெட்டியிலேயே குறிப்பிட்டிருக்கும் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற கூலிங் அளவைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி திறந்து மூடினால், அதிக மின்சாரம் செலவாகும்.

red-dot%282%29.jpg ஃப்ரீஸரில் ஐஸ் சேர்ந்துவிட்டால் ‘டிஃப்ராஸ்ட்’ ஆப்ஷனை பயன்படுத்த வேண்டுமே தவிர, கூர்மையான பொருட்களைக்கொண்டு குத்தி எடுப்பது கூடாது.

red-dot%282%29.jpg பழைய மாடல் ஃபிரிட்ஜில் பின்புறம் இருக்கும் டிரைனேஜ் வாட்டரை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும்.

red-dot%282%29.jpg இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உட்புறம் உள்ள கிளாஸ் டோர்களை வெளியே எடுத்துத் துடைக்கவும்.

red-dot%282%29.jpg வாரத்தில் ஒருநாள் சோப் பவுடர் கலந்த தண்ணீரில் மிருதுவான துணியை நனைத்துப் பிழிந்து உட்புறம், வெளிப்புறம் துடைத்து, நன்றாகக் காயவிட்டுப் பயன்படுத்தலாம். எலுமிச்சைப் பழத்தை கட் செய்து அல்லது கரித்துண்டுகளை இரண்டு மூலைகளில் வைத்தால், துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.


குழந்தைகளுக்கு ஆகாது... குளிர்சாதனப் பொருட்கள்!

ன்றைக்கு பெரும்பாலான குழந்தைகள் வீட்டில் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் ஆகியிருக்கும் சாக்லேட், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் வகைகளைத்தான் ஆசையாகச் சாப்பிடுகின்றன. இந்தப் பொருட்களில் உள்ள சர்க்கரையின் அளவு, குளிர்படுத்தப்படும்போது இன்னும் அதிகமாகி, குழந்தைக்கு வயிற்றுவலியில் இருந்து ஒபிஸிட்டி வரை பிரச்னைகளைத் தரும். ‘ஃப்ரிட்ஜ்ல இருந்து கூல்டிரிங்க்ஸ், சாக்லேட்ஸ் சாப்பிடக் கூடாது’ என்று குழந்தைகளை கண்டிப்பது அல்ல தீர்வு. அதை வாங்கி ஸ்டோர் செய்யாமல் இருப்பதே நிரந்தரத் தீர்வு!

மருந்துகள் பத்திரம்!

குளிர்சாதனப்பெட்டியில் மருந்துகளை ஸ்டோர் செய்யும் முறைகளைச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற குழந்தைகள்நல மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ்...

‘‘இன்சுலின் போன்ற கட்டாயம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தே பயன்படுத்த வேண்டிய மருந்துகளுக்கு, ஓர் இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இதன் அருகில் உணவுப் பொருட்கள், பூக்கள் வைப்பது கூடாது. மருந்து இருக்கும் சமயத்தில் அசைவ ஸ்டோரேஜ் கூடாது. மருந்தால் உணவும், உணவால் மருந்தும் பாழாகக்கூடும்.’’

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=112699

Link to comment
Share on other sites

12227053_1024047087654081_85620903397593

உலகிலேயே கவர்ச்சிகரமான ஆணாக இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமை 'பீப்புள்' இதழ் தேர்வு செய்துள்ளது.

Link to comment
Share on other sites

12241382_1024104474315009_24508243603524

தமிழகம் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருசமயம் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நேரடியாக களத்தில் இறங்கி வெள்ளப்பகுதிகளை பார்வையிட்ட காட்சி!... பொக்கிஷ பகிர்வு...

Link to comment
Share on other sites

தெரியுமா? பெருஞ்சுவரின் பெருமை!

 
 
  • great_wall_2624817g.jpg
     
  • great_wall2_2624816g.jpg
     

உலக அதிசயங்களில் பிரம்மாண்டமான ஒன்று, சீனப் பெருஞ்சுவர். நிலாவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனிதப் படைப்பு இதுதான். காலத்தால் அழிக்க முடியாத சீனப் பெருஞ்சுவர் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோமா?

# பாதுகாப்புக்காகவே சீனப் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் யோசனையின் பேரில் இந்தப் பெருஞ்சுவர் கட்டப்பட்டது. கி.மு. 220-206-ம் ஆண்டு காலத்தில் இது கட்டப்பட்டது.

# கிழக்கே ஹெபேய் மாகாணத்தில் உள்ள ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கேல் லோப்நுர் வரையில் பிரதானச் சுவர், கிளைச் சுவர் என 8,850 கி.மீ. தூரத்துக்குப் பிரமாண்டமாய் நீள்கிறது இந்தச் சுவர்.

# பல மன்னர்களின் ஆட்சியில் பெருஞ்சுவர் கட்டப்பட்டது. இடியும் நிலையில் இருக்கும் பகுதிகள் அவ்வப்போதுப் புதுப்பிக்கப்பட்டு வந்தது.

# இந்தச் சுவர் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், ஓ மரத்தையும் கல் போலப் பயன்படுத்திச் சுவர் கட்டியது தொல்பொருள் ஆய்வில் பின்னர் தெரியவந்தது.

# ஓ மரத்தைப் பயன்படுத்தி மிங் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1368 1644) பெருஞ்சுவர் கட்டப்பட்டுள்ளது. மரம் மக்கிப்போன பிறகு, அந்த இடத்தில் கற்களைக் கொண்டு சுவர் சீரமைக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/article7891338.ece

Link to comment
Share on other sites

சி.ஓ.பி.டி அச்சம் வேண்டாம்!

 

நவம்பர் 18 உலக சி.ஓ.பி.டி தினம்

 

லக அளவில், மனித உயிர் இழப்புக்கான காரணிகளில் நான்காவது இடத்தில் சி.ஓ.பி.டி (Chronic obstructive pulmonary disease) இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

சி.ஓ.பி.டி

நாம் உயிர்வாழ ஆக்சிஜன் தேவை. காற்றில் உள்ள ஆக்சிஜனை நுரையீரல் பிரித்து ரத்தத்தில் சேர்க்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியாகத்தான் நுரையீரலை அடைகிறது. மூச்சுக்குழாயில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு, சுருக்கம் ஏற்படும்போது காற்று செல்வது தடைப்படுகிறது. தொடக்கத்திலேயே இந்தப் பிரச்னையைக் கண்டறிந்து சரிசெய்யாவிட்டால், முற்றிலும் பாதிக்கப்படும் நிலைதான் நாள்பட்ட மூச்சுக்குழாய் நோய்.

p24a.jpg

எதனால் ஏற்படுகிறது?

புகைபிடிப்பதுதான் இந்த நோய்க்கு முக்கியக் காரணம். புகைபிடிக்கும்போது, மூச்சுக்குழாயில் நச்சுக்கள் படிந்துகொண்டே இருக்கும். இது மூச்சுக் குழாய் சுவரைப் பாதிக்கக்கூடியது. தொடர்ந்து புகை உள்ள காற்றைச் சுவாசித்துக்கொண்டே இருக்கும்போது, மூச்சுக்குழாயின் தன்மை பாதிக்கப்பட்டு, சுருங்க ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் மூச்சுவிடவே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

சிகரெட் புகை மட்டுமல்ல, மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதாலும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சிகரெட் புகை, தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை ஆகியவை காற்றில் கலப்பதால், மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும்.

விறகு அடுப்பில் சமைப்பவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, முடிந்த வரை விறகு அடுப்பைத் தவிர்ப்பதே சிறந்தது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகரெட் புகை காரணமாக சி.ஓ.பி.டி பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்கள் சிகரெட் பிடிக்கவும் கூடாது, சிகரெட் பிடிக்கப்படும் இடங்களில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

அறிகுறிகள்

இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல் அதிகமாக இருத்தல்.

தொடர்ந்து, 15 நாட்களுக்கு மேல் அடர் மஞ்சள் நிறம், கறுப்பு, சிவப்பு நிறங்களில் கெட்டியாகச் சளி வருவது.

நீண்ட நேரம் உறங்கிய பின்னர் படுக்கையில் இருந்து விழிக்கும்போது தொண்டையில் அடைப்பு ஏற்படுவது போன்ற பிரச்னைகள்.

மாடிப்படி ஏறும்போதோ, அதிக எடையுள்ள  பொருளைத் தூக்கிக்கொண்டு சிறிது தூரம் நடக்கும்போதோ, மூச்சுவிட சிரமப்பட்டால் உடனடியாக சி.ஓ.பி.டிக்கான பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

p25a.jpg

ஸ்பைரோமெட்ரி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே

இந்தப் பரிசோதனையில், ஸ்பைரோமெட்ரி கருவியில் உள்ள குழாய் போன்ற வடிவத்தில் ஒரு முனையில் வாய் வைத்து நன்றாக ஊத வேண்டும். நுரையீரலுக்கு எவ்வளவு வேகத்தில், எவ்வளவு காற்று செல்கிறது என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
எக்ஸ்ரே பரிசோதனை மூலம் நுரையீரல் எந்த அளவுக்கு வீங்கியிருக்கிறது, நெஞ்சுக்குள் எவ்வளவு சளி கட்டியிருக்கிறது என்பதை அறிய முடியும்.

தீர்வு

சி.ஓ.பி.டி பிரச்னையைக் குணப்படுத்த முடியாது.  மூச்சுக்குழாய் சுருக்கம் ஏற்பட்டுவிட்டால், அதை சரிசெய்ய முடியாது. ஆனால், ஆரம்ப நிலையில் இந்த பிரச்னையைக் கண்டறிவதன் மூலம், பாதிப்பு தீவிரம் அடைவதைத் தடுக்க முடியும். அதனால், சி.ஓ.பி.டி பிரச்னை ஏற்பட்டாலே மரணமோ என்ற பீதி வேண்டாம். அடிக்கடி நுரையீரலைப் பரிசோதித்துக்கொள்வதன் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே சி.ஒ,பி.டியை கண்டுபிடித்துவிட்டால் ,சிகிச்சைகள் மூலம் பாதிப்பில் இருந்து எளிமையாகத் தப்பித்துவிடலாம்.

சி.ஓ.பி.டியைத் தவிர்க்க

dot3%2813%29.jpgசிகரெட் புகை உட்பட புகை நிறைந்த சூழலை தவிர்க்கலாம்.

dot3%2813%29.jpgசாலைப் புகையில் இருந்து தப்பிக்க, மாஸ்க் அணிவது நல்லது.

dot3%2813%29.jpgதினமும்  இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

dot3%2813%29.jpgதினமும் மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

dot3%2813%29.jpgவீட்டைச் சுற்றி பசுமைத் தோட்டங்கள், மரங்கள் வளர்ப்பது நல்லது.

ஒவ்வோர் ஆண்டும் ‘உலக சி.ஓ.பி.டி அமைப்பு’ வெவ்வேறு ‘தீம்’களைக் கடைப்பிடிக்கும். இந்த வருடம் பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் டாக்டர்களுக்கான தீம்களை அறிவித்திருக்கிறது.

பொதுமக்களுக்கு  - உங்களுக்கு சுவாசித்தலில் சிரமம் இருந்தால், இதுவரை மருத்துவரை அணுகாவிட்டாலும் பிரச்னை இல்லை, இன்னும் நேரம் இருக்கிறது. விரைவில் மருத்துவரை அணுகுவது நல்லது.

நோயாளிகளுக்கு -  சி.ஓ.பி.டி இருப்பதை நினைத்து வருந்த வேண்டாம். ஆரோக்கியமாகப் பல வருடங்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

மருத்துவர்களுக்கு - சி.ஓ.பி.டி இருப்பவர்களைக் கண்டறிந்து நல்ல சிகிச்சை அளித்து அவர்களின் சுவாசத்தை மேம்படுத்த உதவுங்கள்!

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=112564&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

Link to comment
Share on other sites


 
வரலாற்றில் இன்று: நவம்பர் 19
 
 

article_1447902163-zx.jpg1941: இரண்டாம் உலக யுத்தத்தில் அவுஸ்திரேலிய கப்பலொன்றும் ஜேர்மனிய கப்பலொன்றும் ஒன்றையொன்று மூழ்கடித்ததால் 645 அவுஸ்திரேலியர்களும் 77 ஜேர்மனியர்களும் பலி.

1943: மேற்கு உக்ரேனில் நாஸி தடுப்பு முகாமிலிருந்து யூதர்கள் தப்பியோடும் முயற்சி தோல்வியுற்றபின் 6000 இற்கு மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1946: ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஐ.நாவில் இணைந்தன.

1969: சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச்சென்ற இரண்டாவது விண்கலம் (அப்பலோ 12 பயணம்) சந்திரனில் தரையிறங்கியது.

1969: பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் பேலே தனது 1000 ஆவது கோலை அடித்தார்.

1977: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ததன் மூலம் அங்கு சென்று முதலாவது அரபு தலைவரானார்.

1977: போர்த்துக்கல் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 500 பேர் பலி.

1984: மெக்ஸிகோவில் எரிபொருள் களஞ்சியமொன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் சுமார் 500 பேர் பலி.

1985: அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனும் சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவும் முதல் தடவையாக சந்தித்தனர்.

1988: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனிடம் மோனிகா லூவின்ஸ்கி விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் குற்றவியல் விசாரணை ஆரம்பம்.

2005:   மஹிந்த ராஜபக்ஷ முதல் தடவையாக இலங்கையின் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/159443/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.n5zi3v1Y.dpuf
Link to comment
Share on other sites

12240473_944082262307135_523573209455599

சிரிப்போடு சிந்தனையையும் அள்ளி வீசும் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்கின் பிறந்தநாள்.
கலக்கல் நகைச்சுவையாளரான இவர் அற்புதமான பேச்சாளரும் கூட.

Link to comment
Share on other sites

அவர்களும் கடலின் அலையை அருகில் காண வழி செய்வோம்!

 

டற்கரை மணலில் நடப்பது சாதாரண மக்களுக்கே மிகக் கடினம். அப்படி இருக்கையில் மாற்று திறனாளிகள்  வீல் சேரை மண்ணில் ஓட்டிச் செல்வது என்பது இயலாத காரியம். இதனாலேயே பலரும் தூரத்தில் இருந்தபடியே கடலை ரசித்து விட்டுச் சென்று விடுவது உண்டு.

beac_vc3.jpg

அரசு அலுவலகங்கள், உணவகங்கள் , ஏ.டி.எம் போன்றவைக்  கூட முழுமையாக மாற்று திறனாளிகளுக்கு  சாதகமாக இல்லை.  இந்நிலையில்  கலிஃபோர்னியாவை சார்ந்த க்ளோரியா ரோசென்பாம் என்ற மாற்று திறனாளி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருந்த படம்,  மாற்று திறனாளிகளின் கோரிக்கையை முன் வைத்தது.

உதவி, பரிதாபம் என்ற கோணங்களில் மட்டுமே அவர்களை அணுகுகிறோம். அவர்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்க பொழுதுபோக்கு இடங்களில் வரவேற்போம்.

http://www.vikatan.com/news/article.php?aid=55253

Link to comment
Share on other sites

12235049_944074065641288_863391728546917

சர்வதேச ஆண்கள் தினம் இன்று..

உலகை இயக்குவோர் நாம்.
அன்பை ஆயுதமாகக் கொண்டோர் நாம்.
பொறுப்பை இனிப்பான சுமையாக எடுப்போர் நாம்.
குடும்பத்தையும் சமூகத்தையும் பேணிப் பாதுகாத்து,
பெண்களுக்கும் உரிய கௌரவம் + அன்பை வழங்கி
உண்மையான ஆண்களாக உலகில் பெருமை கொள்வோம்.

Link to comment
Share on other sites

12240293_944072715641423_894886966576023

முன்னாள் பிரபஞ்ச அழகி, ஹிந்தியின் முன்னணி நடிகை சுஷ்மிதாசென் பிறந்தநாள்.

Link to comment
Share on other sites

நவ. 19: இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!

 

ரு அமைதியான பெண்மணியாக அரசியலில் வாழ்வைத்துவங்கி, நாட்டின் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்து தானே அதை தகர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டு வந்த வரலாறு இந்திராவுடையது.

விடுதலை போரில் குடும்பமே கலந்து கொண்ட சூழலில்தான் இந்திரா பிறந்தார். அப்பாவும்,தாத்தாவும் அடிக்கடி சிறைக்கு போவதையும் விடுதலைப்போரில் ஈடுபடும் எண்ணற்றோர் வந்து போவதையும் பார்த்தே அவரின் இளமைக்காலம் நகர்ந்தது. கூடவே,அவரே வானர சேனை என்கிற அமைப்பை அமைத்து சிறுவர்களை கொண்டு விடுதலைப்போருக்கு உதவவும் செய்தார். சாந்தி நிகேதனில் பெற்ற கல்வி,நேருவின் கடிதங்கள் அவரை செதுக்கின. இந்திராவுக்கு ஜோன் ஆப் ஆர்க் மிகப்பெரிய ஆதர்சம் .

indira1.jpg



இந்திரா தன் அன்னை உடல்நலம் இல்லாத பொழுது அவரை கவனிக்க வந்த பெரோஸ் காந்தியுடன் காதல் பூண்டார். சில போராட்டங்களுக்கு பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். விடுதலை பெற்ற பின் நேரு இந்தியாவின் பிரதமர் ஆனதும் அவரின் பி.ஏ போலவே இந்திரா பங்காற்றினார். பெரோஸ் காந்தி காங்கிரஸ் எம்.பி யாக இருந்தாலும் முந்த்ரா ஊழல்,காப்பீட்டு ஊழல் என்று ஊழல்களை வெளியே கொண்டு வந்து காங்கிரசுக்கு சிக்கலை உண்டு செய்தார்.

நேருவும் முறையான விசாரனைக்கு உத்தரவிட்டு நடவடிக்கைகள் எடுத்தார். இந்திராவுக்கும்,பெரோஸ் காந்திக்கும் இடையே இருந்த விரிசல் ஒட்டுப்படுவதற்கு முன்னமே பெரோஸ் இறந்து போனார். கையில் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள்.

நேருவுடன் இந்திரா தொடர்ந்து செயலாற்றினார். ஒரு முறை அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆக்கினார் நேரு. அப்பொழுது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை கலைக்கச்சொல்லி நேருவை கட்டாயப்படுத்தி அதை சாதிக்கவும் செய்தார். நேரு இவரை தனக்கு அடுத்து வாரிசாக ஆக்க எண்ணவில்லை. தன்னுடைய நெருங்கிய தோழிக்கு எழுதிய கடிதத்தில் சீக்கிரம் அமெரிக்காவில் வந்து செட்டில் ஆகலாம் என்று எண்ணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

indira4.jpg



நேருவின் மறைவுக்கு பின்னர் சாஸ்திரி பிரதமர் ஆனதும் இந்திராவை மொத்தமாக லண்டனுக்கு தூதுவராக அனுப்பி மொத்தமாக அரசியல் வாழ்வை அஸ்தமித்து விடலாம் என்று எண்ணினார். அவர் தாஷ்கண்ட்டில் இறந்து போக, சொன்ன பேச்சை கேட்பார் என்று நம்பி சிண்டிகேட்டின் காமராஜர், நிஜலிங்கப்பா முதலியோர் இந்திராவை பிரதமர் ஆக்கினார்கள்

நாடாளுமன்றத்தில் குங்கி குடியா (ஊமை பொம்மை ) என்று லோகியா குறிக்கிற அளவுக்கு ஆரம்ப காலங்களில் திணறிக்கொண்டுதான் இருந்தார் இந்திரா. சிண்டிகேட்டின் ஆதிக்கம் அவரை வெறுப்பேற்றியது. அவர்களை மீறி ரூபாயின் மதிப்பை குறைத்தார் ; மொரார்ஜி தேசாயை பதவி இறக்கம் indira3.jpgசெய்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜகஜீவன் ராமை இவர் ஆதரிக்க போக சிண்டிகேட்டோ இவருக்கு தொல்லை தரக்கூடிய சஞ்சீவ ரெட்டியை நிறுத்தியது. இவரின் ஆசி பெற்ற சுயேச்சை வேட்பாளர் வி.வி.கிரியை மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று சொல்லி வெல்ல வைத்தார் இவர். கட்சி உடைந்தது.

பிற கட்சிகளின் உதவியோடு ஆட்சி செய்து வந்த இந்திரா பின்னர் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றார். நேருவின் காலத்தில் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார். அவருக்கு ஆமாம் சாமி போடுகிறவர்கள் மட்டுமே முதல்வராக தொடர முடியும் என்கிற நிலை உண்டானது. நகர்வாலா ஊழல் தொடங்கி மாருதி திட்டம் வரை ஊழலின் உருவம் பெருத்துக்கொண்டே போனது.

பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு,பசுமைப்புரட்சி,வங்கதேச உருவாக்கம்,வங்கிகள் தேசிய மயமாக்கம் என்று சாதனைகளும் இந்திரா செய்தார். மாநில அரசுகளை ஒரு வகையான இறுக்கமான சூழலிலேயே இந்திரா தன் காலத்தில் வைத்திருந்தார்.
மொத்தமாக ஒன்பது,பத்து அரசுகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துகிற அளவுக்கு ஜனநாயகத்தை மறந்தவராக போனார் அவர். உச்சபட்ச சோகம் ராஜ் நாராயண் வழக்கால் வந்தது

எம்.பி தேர்தலில் வெற்றி பெற்ற இந்திரா, அரசாங்க சம்பளம் பெற்ற அவரின் செயலாளரை தேர்தல் பணிக்கு பயன்படுத்தினார்,அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட அதிகமான உயரத்தில் கூட்டத்தில் பேசினார்,அரசாங்க நிலத்தில் அமைந்த மேடையை பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவரின் தேர்தல் வெற்றி செல்லுபடியாகாமல் போனது என்று அலகாபாத் கோர்ட் அறிவித்தது.

ஏற்கனவே கேசவனந்தா பாரதி வழக்கில் அரசு எண்ணிய மாதிரி அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியாது என்று தீர்ப்பு வாசித்து இருந்தார்கள். அதனால் மூன்று நீதிபதிகள் முன்னணியில் இருந்தும் தனக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னவரை தலைமை நீதிபதி ஆக்கி நீதித்துறைக்குள் அரசியலை கலந்தார் இந்திரா.

ஊழல் மலிந்து போயிருந்த குஜராத் மற்றும் பீகார் அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஜெபி போராட்டங்கள் ஆரம்பித்து அசைத்துக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் உள்நாட்டு கலகம் என்கிற வார்த்தையின் படி அவசரநிலையை பிரகடனம் செய்தார்.

எல்லா வகையான சுதந்திரங்களும் பிடுங்கப்பட்டன,ஒரே நாளில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நாடாளுமன்றம்,உச்சநீதிமன்றம் எல்லாமும் செயலிழந்தது. எழுத்து,பேச்சு சுதந்திரங்கள் பறிபோயின. சஞ்சய் காந்தி வந்தார் ; பல லட்சம் முஸ்லீம்கள்,தலித்துகள் உட்பட்ட எண்ணற்ற எளிய ஏழை மக்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்தார். ஊரை அழகாக்குதல் என்று டெல்லியில் பல லட்சம் மக்களை வெளியேற்றி துப்பாக்கி சூட்டில் பல மக்கள் இறக்க நேர்ந்தது.

சட்டத்தின் சரத்துகள் திருத்தப்பட்டு இந்திராவின் வெற்றி செல்லுபடியாக்கப்பட்டது. பிரதமர் முதலியோரின் தேர்வை கோர்ட் விசாரிக்க முடியாது என்று மாற்றப்பட்டது. இந்த காலத்தில் பேருந்துகள் முதலிய எல்லா சேவைகளும் ஒழுங்காக நடந்தது. விலைவாசி குறைந்தது ; மக்கள் விதிகளை பின்பற்றினார்கள். என்ன சுதந்திரம் தான் இல்லவே இல்லை.

indira5.jpg



தேர்தல்களை வென்று விடலாம் என்று நம்பி இந்திரா அறிவித்தார். அமைதியாக காத்திருந்த மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். ஜெபியின் ஒருங்கிணைப்பால் இணைந்த ஜனதா கட்சி இவரை,இவர் கட்சியை தோற்கடித்தது. வனவாசம் போனார். ஷா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்த பொழுது ரகசிய காப்பு பிரமாணத்தை காரணம் சொல்லி பதில் சொல்ல மறுத்தார்.

ஸ்டாம்பை ஒட்டாமல்,போலீஸ் காவல் கேட்காமல் இவர் மீதான வழக்குகளில் கோட்டை விட்டார்கள். காந்தி தேசாயை இந்திரா காத்ததற்கு நன்றிக்கடன் போல மொரார்ஜி தேசாய் இவரை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கவில்லை. சட்ட திருத்தங்களை திரும்ப பெற்றார்கள். உள்நாட்டு கலகத்தின் போது அவசரநிலை என்பதை ஆயுத புரட்சியின் பொழுது என்று மாற்றினார்கள். இவர்களும் மாநில அரசை கலைத்தார்கள். பதவிக்காக அடித்து கொண்டார்கள். மக்கள் நொந்து போனார்கள்.

மூன்றே வருட இடைவெளியில் மீண்டும் இந்திரா வந்தார். பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளத்தை சமாளிக்க ஆதரவளித்த பிந்தரன்வாலே குழு பஞ்சாபை வன்முறை பூமியாக்கி கொண்டிருந்ததது. பொற்கோயில் உள்ளே எக்கச்சக்க ஆயுதங்கள்,பஞ்சாபில் பெருங்கொலைகள் என்றிருக்க இந்திரா பல்வேறு அமைதி முயற்சிகளுக்கு பிறகு ராணுவத்தை அனுப்பினார். போர்க்கள பூமியானது பஞ்சாப். அந்த வன்மத்தோடு அவரின் உயிரை அவரின் காவலாளிகள் பறித்தார்கள். இந்தியாவை கட்டி ஆண்ட ஒரு வரலாறு முடிவுக்கு வந்தது.

http://www.vikatan.com/news/article.php?aid=35027

Link to comment
Share on other sites

அந்த 7 இந்தியப் பெண்கள் யார்?

 

Asha%20bhonle.jpgந்த வருடத்தின் உலகின் சிறந்த 100 முன்னோடி பெண்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது பி.பி.சி. நிறுவனம். சினிமா, அரசியல், அறிவியல், வணிகம், விளையாட்டு என உலகம் முழுக்க சிறந்து விளங்கும் 100 பெண்களில் இந்தியாவைச் சேர்ந்த 7 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பற்றிய சின்ன ட்ரெயிலர் இங்கே...

1. ஆஷா போன்ஸ்லே (பாடகி)

இந்திய இசையின் எவர்கிரீன் இசைக்குயில் ஆஷாவுக்கு இப்போது வயது 82.  இதுவரைக்கும் 1000 படங்களை தாண்டி, 20 மொழிகளை தாண்டி, 1943 முதல் 72 வருடங்களாக இன்னும் ஆஷா போஸ்லேவின் குரல் காற்றில் தவழ்கிறது.

இத்தனை வயது ஆனாலும், “நான் சுறா மீன் போல. எப்போதும் சும்மா இருப்பதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. நான் கடின உழைப்பாளி என மற்றவர்கள் சொல்வதைத்தான் விரும்புகிறேன். எப்போதும் பிசியாக இருப்பது பிடித்திருக்கிறது. நான் பாடுவதை கேட்க மக்கள் இருக்கின்றனர். நான் பாடுவதை அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் அன்பு இருக்கும் வரை எனக்கு ஓய்வு என்பது எல்லாம் கிடையாது” என எனர்ஜி குறையாமல் சிரிக்கிறார் ஆஷா.

2. சானியா மிர்சா (டென்னிஸ் வீராங்கனை)

சானியா - ஹிங்கிஸ் என்ற இரண்டு பேர் கூட்டணியின் பரிசு, இந்த வருடம் மட்டும் 9 சர்வதேச பட்டங்கள். இதுவரை 22 போட்டிகளில் தோல்வி முகமே காணாமல் இருக்கும் இந்த ஜோடியின் தற்போதைய டார்கெட் பிரேசில் ஒலிம்பிக். “அடுத்த வருடம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள்தான் எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். அது மட்டும் நடந்து விட்டால் என்னுடைய கனவு நனவாகி விடும்” என்கிறார் சானியா.

sania%20mirza600.jpg

இப்போது வெற்றிப்புன்னகை வீசும் சானியாவின் கடந்த காலம் எதுவுமே, சர்ச்சைகளின்றி கிடையாது. வாழ்க்கையின்  நீண்ட போராட்டங்களுக்கு பின்னரே, தற்போது மகிழ்ச்சியை ருசித்திருக்கிறார்.

“நான் முதன்முதலில் டென்னிஸ் விளையாடும்போது, யாருமே 'ஒரு ஐதராபாத் பெண், சர்வதேச அளவில் புகழ் பெறுவாள்' என நினைக்கவில்லை. எந்த பெண் குழந்தைகளையும் விளையாட்டில் சாதிக்க அனுமதிக்கவில்லை. ஆனால், இப்போது என்னை போல நிறைய பேர் விளையாட வருகின்றனர். விளையாட்டு கற்றுத் தரும் பாடங்கள்தான் வாழ்க்கையின் பிரச்னைகளை சந்திக்க உதவும். அத்தனை பிரச்னைகளுக்கு பின்னும் இப்போது பக்குவமடைந்த ஒரு பெண்ணாக நான் நிற்பதற்கு விளையாட்டுதான் காரணம்” என சமீபத்தில் கொண்டாடிய 29-வது பிறந்த நாளின் போது நெகிழ்ந்திருந்தார் சானியா.

Kamini%20kowshal.jpg

3. காமினி கௌஷால் (நடிகை)

பத்மினி, சரோஜா தேவி போல பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை காமினி. ஆனால், இவர் இயற்பெயர் உமா காஷ்யப். இயக்குனர் சேட்டா ஆனந்தின் நீச்சா நகர் மூலம் புகழ் பெற்ற காமினி, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். 1946-ல் வெளியான அந்த படம்தான், கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம். சிறந்த எழுத்தாளரும் கூட. இவர் எழுதிய குழந்தைகளுக்கான கதைகள் நிறைய பத்திரிகைகளில் வெளியாகின. தூர்தர்ஷன், ஸ்டார் ப்ளஸ் போன்ற சேனல்களின் சீரியல்களிலும் நடித்திருந்தார் காமினி. சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, பிலிம்பேர் வாழ் நாள் சாதனையாளர் விருது, கல்பனா சாவ்லா விருது போன்றவை இவர் பெற்ற கௌரவங்கள்.

smiriti%20nagpal.jpg

4. ஸ்மிருதி நாக்பால் (தொழிலதிபர்)

25 வயது ஆகும் இவரின் நிறுவனத்தின் பெயர் அடுல்யகலா.  கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்மிருதியின் சிறப்பு, இவை அனைத்தும் காது கேளாத கலைஞர்களை கொண்டு, வடிவமைக்கப்படுபவை.

“இந்தியா காதுகேளாத மக்கள் அதிகம் உள்ள நாடு. ஆனால், இங்கு அவர்களுக்கு ஏற்ற வசதிகள் அதிகம் இல்லை. நிறைய மனிதர்கள் ஏராளமான கற்பனை வளத்தோடும், திறமையோடும் இருக்கின்றனர். ஆனால், காதுகேளாமை பிரச்னையால் இவை அனைத்தும் யாருக்கும் தெரியாமல் போய் விடுகிறது. அவர்களை கண்டறிந்து, வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைக்கு அந்த திறமை உதவி செய்கிறது. அந்த பணத்தின் மூலம், நிறைய பேருக்கு உதவ முடிகிறது” என்கிறார் ஸ்மிருதி.

http://www.atulyakalaindia.com/ மூலம் இந்த பொருட்களை விற்பனை செய்கிறார் ஸ்மிருதி.

mumtaj%20sayk.jpg

5. மும்தாஜ் ஷாய்க் (சமூக ஆர்வலர்)

பெண் குழந்தைகள் மற்றும் பெண்ணுரிமைகளுக்காக குரல் கொடுப்பவர். மும்பையில் ஏழைக்குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறைகள், கொடுமைகள் ஆகியவற்றை வெளியுலகிற்கு கொண்டு வந்தவர். அதோடு பல பலாத்கார வழக்குகள், ஒழுங்காக விசாரிக்கப்படாமலோ அல்லது குற்றவாளிகள் தப்பும் போதோ, முறையான விசாரணை தொடங்கி நீதி கிடைக்கும் வரை போராடுபவர்.

“இந்தியாவில் இன்னும் கணக்கிடலங்கா வீடுகளில் கழிவறைகளே கிடையாது. அதுதான் முதல் தேவை. அது பற்றி குடும்ப ஆண்களும் சரி, பெண்களும் சரி கவலைப்படுவதே கிடையாது. முறையான வளர்ச்சி அங்கிருந்துதான் ஆரம்பமாகும்” என்கிறார் மும்தாஜ். இதற்காக மும்பையில் 35 தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து, 'right to pee' என்னும் பெயரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

kanika%20tekriwal.jpg

6. கனிகா டேக்ரிவால்

20 வயதிலேயே கேன்சர் பாதிப்புக்கு உள்ளான கனிகா, அப்போதுதான் வாழ்க்கையின் அருமையை உணர்ந்து சாதிக்க வேண்டும் என நினைத்துள்ளார். பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து, தொழில்துவங்க நினைத்தவருக்கு அது அவ்வளவு எளிதில் கைவரவில்லை. பின்னர் இந்தியாவில் தனிநபர் விமானப்பயணம் இல்லையே என நினைத்தவர், JetsetGo என்ற பெயரில் தனி நபர்களுக்கான ஜெட்விமான போக்குவரத்தை இணையம் மூலம் தொடங்கினார்.

rimppi%20kumari%281%29.jpgதற்போது இந்த தொழிலில் முன்னணியில் இருக்கிறது இவரது நிறுவனம். 

“எங்கெல்லாம் நம்மால் முடியாது என நினைக்கிறீர்களோ, அந்த இடங்கள்தான் நமது வெற்றியின் படிக்கட்டுக்கள். முடியாததை எல்லாம், முடித்துக் காட்டுங்கள்” என வார்த்தைகளில் உற்சாகமூட்டுகிறார் கனிகா.

7. ரிம்பி குமாரி (விவசாயி)

இத்தனை பெரிய சாதனை பட்டியலில் இடம் பெற்ற ரிம்பி குமாரி ஒரு விவசாயி என்றால் நம்ப முடிகிறதா? ஆம். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரிம்பி, தனது தந்தையை இழந்த பிறகு, 32 ஏக்கர் நிலத்தை எடுத்து, தனது தங்கை கரம்ஜித் உடன் இணைந்து விவசாயத்தை தொடர்ந்து வருகிறார். அதன் வெற்றியின் பரிசாக, இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

http://www.vikatan.com/news/article.php?aid=55284

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.