Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

சின்ன சின்ன வரலாறு: ஜிலீர் ஐஸ்க்ரீம்

 

 
icecream

கத்திரி வெயில் வாட்டி எடுக்கிறது. இந்தப்பொழுதில் முதலில் மனதில் தோன்றும் தித்திப்பான வஸ்து "ஐஸ்க்ரீம்". இப்படி ஆழ் மனதை கொள்ளைகொண்டுள்ள பொருளின் சரித்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டாமா?

சமீபத்தில் படித்த ஒரு செய்தி. வெனிசூலா நாட்டின் மிகப்பழமை வாய்ந்த கார்னாட்டோ ஐஸ்க்ரீம் பார்லர் சமீபத்தில் மூடப்பட்டுவிட்டது. ஒரு நிமிடம் ஓர் இறப்பில் ஏற்படும் துயரம் எட்டிப்பார்த்தது. இதில் என்ன அவ்வளவு முக்கியமான செய்தியா என்று யோசித்துப்பார்த்தால், ஆம் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், ஐஸ்க்ரீமின் வரலாறு அப்படி இது முதலில் ஒரு பணக்கார வர்க்கத்தின் பிரத்தியேக ஆடம்பர உணவாக இருந்து பின் மிக மெதுவாக நத்தைபோல் ஊர்ந்து சாதாரண மக்களின் கைகளில் வந்தடைந்தது என்பதைச் சொல்கிறது.

 

ஆக ஒரு நாட்டில் இப்படி எல்லோருக்குமாகிப்போன பண்டம் மறுபடியும் இல்லாமல் போனால், பொருளாதார மாற்றத்திற்கான ஆரம்பமோ என்று அச்சம் வருகிறது. வெனிசூலா நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம்... இறங்கு முகத்தில் இருக்கும் ஆயிலின் சர்வதேச விலை. எண்ணை ஏற்றுமதியை முக்கியமான பொருளாதார அம்சமாகக் கொண்ட இந்த நாட்டில் தற்போது ஐஸ்க்ரீம் தயாரிக்கத் தேவையான பால் ,சர்க்கரை எனப் பொருள்களுக்கு ஏகத்தட்டுப்பாடு.

கவலையைப் பின்தள்ளி ஐஸ்க்ரீமைப்பற்றிய சில ஜில் தகவல்களைப்பார்ப்போம்.

சில ஐஸ்க்ரீம்களில் முட்டைச் சேர்க்கப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அட, முட்டைதான் இப்போது வெஜிடேரியன் முட்டையாக வருகிறதே என்று சமாளித்தாலும்  அக்மார்க் நான்வெஜிடேரியன் ஐஸ்க்ரீம் வெனிசூலாவின் இந்தக் கார்னாட்டோ பார்லரின் அதி ருசிகரமான பண்டமாக இருந்திருக்கிறது. இங்கே கிடைக்கப்பெற்ற சில வினோதவகைகள்...பூண்டு, அவகேடோ, ஆக்டபஸ், மீட்.... இவை ஐஸ்க்ரீமா என்று வாயைப்பிளக்கப்போய், ஒரு ஆக்டபஸ்லாகவமாக உள் நுழையும் அபாயமிருப்பதால்.... வேண்டாம் வாயைத்திறக்க வேண்டாம்.

ஆனால் வியப்பான இந்த ஐஸ்க்ரீம்களை வியக்காமல் முதல் முதல் கண்டுபிடித்தவர் யார் என்பதைச் சரியாக சொல்லிவிடலாம். வேறு யார், சீனர்கள் தான். யோசித்துப் பார்த்தால், எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் சொன்னது போல் இந்தியாவில் இட்லி சுடுவதற்கான ஆவியைக் கண்டுபிடித்துக்கொண்டிருந்த வேளையில், சீனாவில் மற்ற

கண்டுபிடிப்புக்களுடன் இந்த ஐஸ்க்ரீமையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது சுமார் 200 பிசியில் என்று கருதப்படுகிறது. சீனாவின் ராஜா, டாங்க் ஆப் ஷாங்க் இதற்காகவே 99 ஆட்கள் கொண்ட குழு ஒன்றை ஏற்படுத்தி, இவர்களை மலையிலிருந்து ஐஸ் கட்டிகளைப் பிளந்து எடுத்துவரச்செய்து, அதில் மாவு, பச்சைக்கற்பூரம், மற்றும் பசும்பால் கலந்து கலவையாகச்செய்து முதல் முதல் இந்த அபார வஸ்துவைச் செய்தாராம்.

இதனால் தான், முதல் முதலில் ஐஸ்க்ரீம் கட்டியாக இல்லாமல் ஓர் குளிர் பானம் போல் தான் இருந்திருக்கிறது.

ice%20cream

மார்கோபோலோ இத்தாலி சென்றபோதுதான் அந்த நாட்டிற்கு இதை அறிமுகம் செய்து வைத்தாராம். அப்போது ஐஸ்எப்படிச் செய்வது என்பது யாருக்கும் தெரியாது.ஆகவே மலைகளில் விழுந்து கிடக்கும் பனிப்பாறைகளைப் பெயர்த்துவந்து அதைப்பொடி செய்து, ஒரு சர்பத் போலத்தான் தயாரித்திருக்கிறார்கள்.

1533 யில் காதிரீன் டீ மென்ஸி எனும் ராணி இரண்டாவது ஹென்றியை மணந்து இந்த சர்பத் வகை ஐஸ்க்ரீமை பிரான்ஸ் நாட்டிற்கு அறிமுகம் செய்தாராம். பேரரசர் அலெக்சாண்டருக்கும் தேன் கலந்த இந்த ஐஸ்க்ரீம்கள் மிகவும் பிடிக்குமாம்.

இந்த ஐஸ்க்ரீம்கள் பொதுமக்களுக்கு கிடைக்க ஆரம்பித்தது பதினேழாம் நூற்றாண்டில் தான். பிரான்ஸ் நாட்டின் கஃபேப்ரோகோப் எனும் இடத்தில் தான். அப்போதும் கூட இதன் விலை ஏழு குதிரை விலையாக உயர்ந்து நின்றதால், மிகவும் வசதி பெற்றவர்களின் ஏகபோக தின்பண்டமாகவே இருந்தது. அமெரிக்காவின் பிரெசிடெண்ட் திரு ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மிகவும் பிடித்திருந்ததால், தினமும் 200$ (இந்தக்காலத்தில் 3500$) க்கு வாங்கிச் சாப்பிடுவாராம். மறக்காமல் இதை மனதில் வைக்கவும்.

தற்போது உள்ள அரசியல் சூழலில் அவ்வப்போது எடுத்துவிட செளகர்யமாக இருக்கும்.

ஆனால் அப்போதிருந்த ஒரே சிக்கல், குளிர்பதன வசதி இல்லாததால் நாம் தி நகர் தெரு ஓர கடைகளில் வாங்கிச் சாப்பிடும் ஐஸ்க்ரீம் போல் உருகி வழிந்து பாடாய்ப்படுத்தித்தான் இருந்திருக்கிறது. அதனால் 1800 வரையில், சில முக்கியமான தருணங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த ஐஸ்க்ரீம்களின் திடத்தன்மையைக்காக்க, மலைகளிலிருந்து ஐஸ்கட்டிகள் பாளம் பாளமாக வெட்டிவந்து, இதற்காகவே செய்யப்பட்ட செங்கல் வீடுகளில் வைக்கோல் நிரப்பப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். ஐஸ்க்ரீம் செய்யும் முறைக்கு பாட் ஃப்ரீசர் என்று பெயர். உப்பும் ஐஸ்கட்டிகளும் போடப்பட்ட பக்கெட்டுகளில் பால் ஏட்டை வைத்து உறைந்தபின் அதுவே ஐஸ்க்ரீம்.

பென்சில்வேனியா நகரத்தில் 1851 ல் ஜேகப் பசில் என்பவரால் முதல் முதல் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

1870-ல் ஜெர்மானியர் கார்ல் வான்லிண்டே என்பவரால் குளிர்பதனப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டு. .இதற்குப்பிறகு ஐஸ்க்ரீம் நமக்கு எவ்வளவு நெருக்கமாகவந்துள்ளது என்பதை நான் சொல்லத்தேவை இல்லை.

இதற்குப்பின் வரும் வெவ்வேறு காலகட்டத்தில் இதற்கான கோன், திடத்தன்மையைக்குறைத்து உள்காற்றை இரட்டிப்புசெய்யப்பட்ட சாஃப்ட் ஐஸ்க்ரீம் ,சேமியா தூவி அலங்கரிக்கப்பட்ட பலூடா.. .என்று ஆச்சர்யங்கள் அசத்தலாக வந்துகொண்டே இருந்தன.

ஒன்றை யோசித்துப்பார்த்தால் , மருந்துக்குக்கூடக் குளிர் இல்லாத இந்திய தேசங்களில் இந்த ஐஸ்க்ரீம் எப்படிச் செய்யப்பட்டது? முதல் முதலில் கல்கத்தாவில் மக்னோலியா என்ற உணவகத்தில் தான் செய்யப்பட்டது.

kids%20icecream

1956-களில்தான் இதன் தயாரிப்புக்குத் தேவையான இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, தில்லியில் க்வாலிடி ஐஸ்க்ரீம்மின் தயாரிப்பு தொடங்கியது. அது வரையில் இங்கு ஐஸ்க்ரீம் என்றால் ஒரு குச்சியில் ஐஸ் கட்டி சொருகப்பட்டு அதில் ஏதாவது ஒருவகை சிரப் ஊற்றப்பட்டுக் கொடுக்கப்பட்டது. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் நீங்கள் கடைகளில் பானம் வாங்கினால், இப்போது போல் ஐஸ் தேவை கேட்கப்படும்.

ஆனால் ஆம் என்று சொல்லிற்கு அதிகமாக ஐம்பது காசுகள் சேர்க்கப்படும். காரணம், ஐஸ் விலை கொடுத்து வாங்கப்பட்டது.

சென்னையில் 1842-ல் கட்டப்பட்ட விவேகானந்தர் இல்லத்திற்கு அப்போது வைக்கப்பட்டப் பெயர் ஐஸ் ஹவுஸ். காரணம் இங்குதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஐஸ் லண்டனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த வியாபாரம் ஜிங் ஃப்ரெட்ரிக் ட்யூடர் என்பவரால் செய்யப்பட்டது. ஆனால் 1880 களில் பெரும் நஷ்டத்தால் மூடப்பட்டது.

ஆக இனி சாப்பிடும்போது சில்லென்று தொண்டையில் இறங்கும் ஐஸ்க்ரீமுடன் , எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறோம் இந்த பதார்தத்தைக் கண்களால் பார்க்க என்பதை நினைவில் கொண்டால், ஜிஸ்டி யினால் ஏற்பட்ட ஐஸ்க்ரீம் விலை ஏற்றம் மனதில் படாமல் போகலாம்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

"பணத்தால் ஒருபோதும் வாழ்க்கையை வாங்க முடியாது!" - லவ் யூ பாப் மார்லி

 
 

சென்னையில் நீங்கள் அந்த முகத்தைப் பார்த்திருப்பீர்கள்; புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கானா பாடும் இளைஞர்களின் டீ-ஷர்ட்களில், கீசெயின்களில், ஆட்டோக்களின் பின்னால் எனப் பல இடங்களில் அந்த முகத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சுருள் சுருளான தலைமுடி, பாசாங்கற்ற புன்னகையைக்கொண்டிருக்கும் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் பாப் மார்லி.

கஞ்சா புகைப்பவன், எந்த ஒரு வரம்புமற்று பாடித் திரிபவன். அதனால் பலருக்கும் அவரைப் பிடிக்கும் என்ற மேம்போக்கான பார்வையை பாப் மார்லியின் மீதும், அவரது ரசிகர்கள் மீதும் கூறியபடி பலரும் கடந்து போயிருப்பர். ஆனால், மார்லி இந்த நூற்றாண்டில் அதிகம் கொண்டாடப்பட்ட கலகக்காரக் கலைஞன். அவரின் நினைவுதினம் இன்று.

 

பாப் மார்லி

ஜமைக்காவைச் சேர்ந்த ஓர் இளைஞனை சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் கொண்டாடுவதற்குக் காரணம், பாப் மார்லி வெறும் இசைக்கலைஞன் மட்டுமல்ல...  இசையின் வழியே மனிதத்தைப் பரப்பிய விடுதலைக் கலைஞன். ஜமைக்காவில் பெரும்பகையாளர்களாக மல்லுக்கட்டிக்கொண்டிருந்த இரண்டு அரசியல் கட்சிகளை, ஒரே மேடையில் கைகோத்தபடி நிற்கவைத்து `ஒரே அன்புதான், ஒரே இதயம்தான்...'  என  அவர் பாடியது ஜமைக்காவின் சரித்திரப்  பக்கங்களில் அன்பின் வேர்களைப் பரப்பியவை. `ஒரே அன்புதான், ஒரே இதயம்தான்...' என அவர் மைக்கைப் பிடித்துப் பாடிய பாடல் ஜமைக்காவுக்கானது மட்டுமல்ல... அன்பின் நிராகரிப்பில், ஆதிக்கத்தின் சுரண்டலில் தவிக்கும் உலகெங்குமுள்ள பல கோடி இதயங்களுக்கானது; பிரிவினையை அகற்ற இதயங்களால் இணையத் துடிக்கும் அத்தனை மனங்களுக்குமானது. 

Bob Marley

`இசையின் ஆகப்பெரும் மகத்துவமே, அது உங்களைத் தாக்கும்போது நீங்கள் உங்கள் வலியை மறப்பீர்கள்' - பாப் மார்லியின் புகழ்பெற்ற வாசகம் இது. இசையை மக்களுக்கான ஒரு வலிநிவாரணியாகவே அவர் பார்த்தார். ஏனென்றால், துயரம் நிரம்பிய வாழ்விலிருந்து அவரை மீட்டெடுத்ததே அந்த `ரெக்கே' (reggae) வகை இசைதான்.

ஆம், உலகின் மகத்தான பல கலைஞர்களைப்போலவே மார்லியும் வறுமையின் கரம் பிடித்து கலைக்குள் நுழைந்தவர். அவரின் அப்பா  நார்வல் சிங்ளேர் மார்லி, ஒரு வெள்ளையினத்தவர். அம்மா செடெல்லா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். தேயிலைத் தோட்டத்தின்  மேலாளராகப் பணிபுரிந்த 60 வயதான நார்வல், 18 வயதான செடெல்லாவைத் திருமணம் செய்துகொண்டார். பாப் மார்லி  சிறுவனாக இருந்தபோதே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு தன் ஏழ்மையின் துயரை மறக்க, இசையின் பக்கம் வந்தார். தன் பள்ளி நண்பன் லிவிங்ஸ்டனுடன் இணைந்து பள்ளியில் கித்தார் வாசிக்க ஆரம்பித்தார். அங்கிருந்துதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இசைக்கலைஞன் உருவாக ஆரம்பித்தான். தன்னைப்போலவே இசைப் பித்து பிடித்த தன் நண்பர்கள் பலருடன் இணைந்து `வெய்லர்ஸ்' (The Wailers) என்ற இசைக்குழுவைத் தொடங்கினார்.

Bob Marley

1960-களில்  ஜட்ஜ்நாட், சிம்மர்ஸ் டவுன், சோல் ரெபல்ஸ், கேட்ச் எ ஃபயர், கஞ்சா கன், எக்ஸோடஸ், சர்வைவல் என வெளியான ஆல்பங்கள் அவருக்கு உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. கித்தாருடன் மேடையேறி எந்தவித ஆர்பாட்டமுமின்றி மார்லி பாடும் பாடலை, பல ரசிகர்களும் தங்களுக்கான கீதமாகக் கொண்டாடினர். காதல் திருமணம் செய்துகொண்ட பாப் மார்லிக்கு, 11 குழந்தைகள்! தன் குரலின் வழியே மனித வாழ்வின் கசடுகளை நீக்கப்  பாடித் திரிந்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்டடார். தன் இதயத்துடிப்பு மெள்ள மெள்ள தன் செவிகளுக்குக் கேட்காமல் விலகத் தொடங்கிய நாள் ஒன்றில்  தன் மகனை அழைத்தார். அவனிடம் ``பணத்தால் ஒருபோதும் வாழ்க்கையை வாங்க முடியாது" எனக் கூறினார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள். பெரும்புகழ், பெரும் ரசிகர் கூட்டம் என இருந்தபோதும் `வாழ்வின் ஆதாரம் அன்பு மட்டுமே!' என்பதைத் தீர்க்கமாக நம்பினார் மார்லி.

ஜமைக்காவின் இசையான `ரெக்கே' இசையை உலகெங்கும் பரப்பிய பாப் மார்லி, தன் 36-வது வயதில் அவரது இசையை உலகுக்குக் கொடுத்துவிட்டு விடைபெற்றார். ஒரு மனிதனை நிறம், உடை, தோற்றம் எனப் பிரித்துப் பார்த்து ஒதுக்கிவைக்கும் இந்த உலகுக்கு பாப் மார்லி கூறியது ஒன்றே ஒன்றுதான், `இசை போன்றதுதான் மனிதமும், உருவங்களற்றது; உணரவேண்டியது'.

மிஸ் யூ மார்லி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

ஆயிரம் விமானங்களின் அற்புத நடனம்

1,374 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சீனாவின் சியான் நகர வான்பரப்பில் நடனமாடி ஒளியூட்டும் அற்புதக் காட்சி. ஒரே சமயத்தில் அதிக ட்ரோன்கள் 13 நிமிடம் பறந்த இந்த நிகழ்வு முன்பிருந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

42p1_1525685083.jpg

ங்கிலாந்தின் கவுன்ட்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது ஐந்து போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார் கோலி. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இவர் தலைமையில் இந்திய அணி மீண்டும் இங்கிலாந்து செல்கிறது. உலகின் அனைத்து ஏரியாக்களிலும் கில்லியாக மிரட்டிய விராட் இங்கிலாந்திலும் பட்டையைக் கிளப்ப முடிவெடுத்துள்ளார். விறுவிறு விராட்!


42p2_1525685097.jpg

யீஃப் அலிகானின் மூத்த மகள்  சாரா அலிகான் நெகுநெகுவென வளர்ந்து நிற்கிறார். ஃபேஷன் ஷோ ஒன்றில் பூனை நடை போட்ட சாராவைப் பார்த்து ஒட்டுமொத்த பாலிவுட்டும் அசந்து போயிருக்கிறது. `என்னுடைய கனவான சட்டப்படிப்பை முடித்ததும் சினிமாதான்’ என்று கறாராக இருக்கிறார் சாரா.  கோலிவுட்டுக்கும் பூனை வரணும்!


42p3_1525685200.jpg

ஜாக்கிசானின் மகள் எட்டா என்ஜி ஒருபால் ஈர்ப்பு கொண்டவர். இதனால் தாயார் எலைன் என்ஜியால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, சாலை யோரங்களிலும் மேம்பாலங்களுக்கு அடியிலும் வசித்து வருகிறார்.  ஜாக்கிசானுக்கும் அவரது முன்னாள் காதலியான எலைன் என்ஜிக்கும் பிறந்தவர் எட்டா. ஜாக்கி சான் இப்போது மனைவி ஜோவன் லின்னுடனும் மகன் ஜேசி சானுடனும் வசித்து வருகிறார். `எட்டாவைக் கவனிங்க ஜாக்கி’ என குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். மகளைக் கவனிங்க ஜாக்கி!


42p4_1525685256.jpg

சிறந்த நடிகைக்கான தேசிய விருது, மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, `மாம்’ படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தன் தந்தை போனி கபூர் மற்றும் தங்கை குஷி கபூருடன் இணைந்து  இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். விழாவில் ஜான்வி அணிந்திருந்த புடவை ஸ்ரீதேவியுடையது. தெலுங்கு நடிகர் ராம்சரணின் திருமணத்தின்போது ஸ்ரீதேவி உடுத்தியிருந்த உடை அது.  மிஸ் யூ மயில்!


விவாகரத்துக்குப் பிறகு ஆறு ஆண்டுகளாக டாம்க்ரூஸ் சிங்கிள்தான்.  இந்நிலையில் டாமுக்கு `மிஷன் இம்பாசிபிள் 6’ ஹீரோயின் வெனிஷா கிர்ப்பியுடன் காதல் என்றும், இருவரும் டேட்டிங் போகிறார்கள் என்றும் அமெரிக்கப் பத்திரிகைகள் கிசுகிசுக்கள் எழுதிவந்தன. ``இந்த நூற்றாண்டின் அழகான ஜோக் இதுதான். அதை நானும் என் பாய் ஃப்ரெண்டும் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தோம். அவருடன் ஒரு லிப்-லாக் சீனில் நடித்ததாலேயே காதல் என்று எழுதுவதெல்லாம் சுத்த போர்’’ என்று சொல்லியி ருக்கிறார் கிர்ப்பி. ஆனால்   டாம்க்ரூஸ் இதுபற்றி வாய் திறக்கவேயில்லை. சிங்கிளே சிறப்பு!


42p5_1525685277.jpg

ஜானி டெப் ஒரு படத்துக்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குபவர். தற்போது இவர்மீது சம்பளப் பாக்கி புகாரை எழுப்பியுள்ளனர் இவரது பாதுகாவலர்கள். கடந்த இரண்டு வருடங்களாக ஓவர்டைம் வேலை கொடுப்பதோடு இதர சலுகைகளையும் தராமல் இழுத்தடிக்கிறார் டெப் என்று அவர்கள் பேட்டி கொடுக்க, டெப் தரப்பு கப்சிப் ஆகிவிட்டது. நியாயமா டெப்?


42p6_1525685293.jpg

ஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்-2’ எடுக்கும் முயற்சிகளில் இருக்கிறார் கௌதம் மேனன். ‘என்னை அறிந்தால்’ நேரங்களில் நடந்த பல குளறுபடிகள் களையப்பட்டு அஜித் ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரியான படமாக இதை இயக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். மெல்லிசா ரெண்டாவது கோடு!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

போலந்து வதை முகாமில் 1500 யூதர்கள் நச்சு வாயு செலுத்தி கொல்லப்பட்ட நாள்: மே 12, 1942

 
 
 

அவுஸ்விட்ஸ் வதை முகாம் 1940-1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜெர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் என்ற நகரருகில் அமைந்திருந்தது.

 
 
 
 
போலந்து வதை முகாமில் 1500 யூதர்கள் நச்சு வாயு செலுத்தி கொல்லப்பட்ட நாள்: மே 12, 1942
 
அவுஸ்விட்ஸ் வதை முகாம் 1940-1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜெர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் என்ற நகரருகில் அமைந்திருந்தது.

இம்முகாம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, அவுஷ்விட்ஸ் I, இது நிர்வாக மையம்; இரண்டாவது, அவுஷ்விட்ஸ் II (பிர்க்கெனாவு), கொலை முகாம்; மூன்றாவதாக, அவுஷ்விட்ஸ் III (மொனோவிட்ஸ்), தொழில் முகாம். முதல் இரண்டும் 1979 இலிருந்து உலக பாரம்பரியக் களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைவிட கிட்டத்தட்ட 40 சிறு முகாம்கள் இம்முகாமைச் சுற்றி 10 கிமீ வட்டாரத்தில் இருந்தன.

ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்து கைது செய்யப்பட்ட யூதர்கள் தொடருந்துகளிலும் வேறு வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக மிகக் கடுமையான நெரிசலில் கொண்டுவரப்பட்டு இங்கு அடைக்கப்பட்டனர். உழைக்கக்கூடியவர்கள், உழைக்க முடியாதவர்கள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படக்கூடியவர்கள் என்று பல தேர்வு நடக்கும். ஏனையோர் சைக்ளோன்-பி என்ற பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்த நச்சு வாயு பரவிய அறைகளில் அடைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். குழந்தைகள் தாய்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வயதான பெண்களுடன் சேர்த்து நச்சுவாயு அறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். மற்றும் பலர் கடும் உழைப்பு, ஊட்டச்சத்து இல்லாத உணவு, சுத்தமின்மை, பட்டினி, தொற்று நோய், தனிப்பட்ட மரண தண்டனைகள், மருத்துவப் சோதனைகள் போன்ற பல காரணிகளால் இறந்தனர்.

1942-ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் 1500 யூதர்கள் இந்த வதை முகாமில் நச்சு வாயு அறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தனர்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்

*1656 - ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.

*1689 - பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான்.

*1797 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிஸ் நகரைக் கைப்பற்றினான்.

*1922 - 20 டன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.

*1949 - சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.

*1952 - காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினான்.

*1965 - சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.

*1978 - சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

நீண்ட தூரம் பறக்கும் பறவைகள் ``V" வடிவில் பறப்பதால் என்ன லாபம்?

 

மனிதன், சிறகு முளைத்தபின் அவன் தவழ்ந்த பூமியை விட்டு வீட்டைக் கட்டிக்கொள்கிறான். பறவைகள் கூட்டைவிட்டு பூமியைக் கட்டிக்கொள்கின்றன. அந்தப் பூமியைச் சுற்றிப் பறந்து திரியும் அவை அழகு மட்டும் அல்ல, அறிவியலும் கூட. கடந்த வருடம் சென்ற இடத்திற்கே மீண்டும் செல்வது தொடங்கி, குச்சிகளைக் குறுகிய அலகுகளால் கொத்திக் கொத்திக் கூடுகட்டும் அதன் மேஸ்திரி வேலை வரை எதுவுமே அவற்றுக்குக் கற்றுக்கொடுக்கப் படுவதில்லை. அவைதான் அவற்றுக்கு ஆசான். சுய பாடம் கற்கவேண்டும், புதுப் புது அனுபவங்கள் வேண்டும் என்பதை நொடிக்கொருமுறை தன்னைப் பார்க்கும் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் பறவைகள் நமக்கும் ஆசான். அதைப் பார்த்தே நாமும் பறக்கத் துணிந்தோம் என்பது பழங்கதை. அவை பறப்பதும் மிகப் பழைமையான கதைதான். கண்டம் தாண்டும் பறவைகள் பல சமயங்களில் கடலைக் கடந்து பறக்கவேண்டி வருகிறது. அது எப்படி? பொதுவாகப் பறவைகள் கூட்டமாகப் பறந்தால் V வடிவத்தில் ஓர் ஒழுங்குமுறையோடுதான் பறக்கின்றன. அந்த ஒழுங்குமுறைக்குக் காரணம் என்ன? அது வெறும் ஒழுங்கு தானா? இல்லை; அதில் அவற்றின் பறக்கும் திறனை அதிகப்படுத்தும் ஆற்றல் ஒளிந்திருக்கிறது.

பறவைகள்

 

இதைப் பற்றிய ஆய்வுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ஹென்றி வெய்மர்ஸ்கிர்ச் என்ற ஒரு பறவையியல் அறிஞர். 2001 ம் ஆண்டு கூழைக்கடா என்ற பறவை பற்றிய ஓர் ஆய்வுக்காக அதன் உடலில் இதயத்துடிப்பை அளக்கும் கருவியைப் பொருத்தினார். அந்தப் பதிவுகள் அவர் கைக்குக் கிடைத்தபோது ஒரு வித்தியாசத்தைக் கண்டார். ஒரு பறவையின் இதயத்துடிப்பை விட மற்றொரு பறவையின் இதயத்துடிப்பு குறைவாக இருந்ததுதான் அது. அனைத்தும் ஒன்றாகவே பறக்கின்றன. சீரான வேகத்தில் செல்கின்றன. பிறகு எப்படி ஒன்றுக்கு ஒன்று மாறுபடும்?

பிறகு ஸ்டீவன் போர்ச்சுகல் என்பவர் இதைப் பற்றி முழுமையாக ஆராய முனைந்தார். லண்டனில் இருந்த ராயல் வெர்ட்டினரி கல்லூரியில் அவரது சகாக்கள் இதற்காகவே பிரத்யேகமாக டேட்டா லாக்கர்களை ( Data Loggers) உருவாக்கினார்கள். அதில் ஒரு சவால் இருந்தது. பறவைகளின் வலசைப் பாதை, வேகம், இருப்பு போன்றவற்றைப் பதிவு செய்யக்கூடிய அளவுக்குத் திறனோடு இருக்கவேண்டும். அதே சமயம் அதைப் பறவைகள் சிரமமின்றிச் சுமந்துசெல்லும் அளவுக்கு எடை குறைவாக இருக்கவேண்டும். அவர்கள் அதைச் சாத்தியப்படுத்தினார்கள்.

கருவி தயாராக உள்ளது. ஆனால் பறவை வேண்டுமே. ஏதாவது பறவையைப் பிடித்துப் பொருத்திவிடலாம் என்னும் அளவுக்கு இது எளிமை இல்லை. அவர்கள் பொருத்தும் பறவைகள் எங்கே தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. எங்கே போய்ச்சேரும் என்ற தகவல்கள் வேண்டும். அது தெரிந்தால்தான் அவற்றின் மீது பொருத்தப்படும் கருவியை அங்கே போய் எடுக்க முடியும். அதை எடுத்தால்தான் அவர்களின் கேள்விக்கான விடை கிடைக்கும். அப்போது வந்தவர்தான் ஜோஹன்ஸ் ஃப்ரிட்ஸ். அவர் ஆஸ்திரியாவின் ஒரு பறவைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர். வடக்கத்திய ஐபிஸ் பறவைகளை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார். பிணந்தின்னிக் கழுகுகள் நம் பார்வைக்குக் கொஞ்சம் அழகாகத் தெரியவேண்டுமென்றால் அவற்றைப் பார்த்த பிறகு இதைப் பார்த்தால் போதும். சொட்டைத் தலையுடன், நீண்டு வளைந்து சிவந்திருக்கும் அலகோடும் கறுத்த உடலோடும் இருக்கும் இந்தப் பறவை மத்திய ஐரோப்பாவில் 17 ம் நூற்றாண்டிலேயே முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதை மீண்டும் அங்கே அறிமுகப்படுத்தத் தேவையான முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தார்.

Northern bald Ibis

அதற்காக ஐபிஸ் பறவைகளில் 14 இளசுகளை நன்றாகப் பழக்கிக்கொண்டு ஒருவர் மட்டும் அமரும் சிறிய விமானத்தில் அவர் முன்செல்ல அவை பின்தொடர்ந்து வருமாறு செய்திருந்தார். இதன்மூலம் அவற்றின் முன்னோர்கள் வலசை வந்துசென்ற பாதையைப் பழக்கமாக்கி மீண்டும் தொடங்க வைக்கமுடியும் என்று நம்பினார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஸ்டீவன் போர்ச்சுகலுக்கு நுனிநாக்குத் தேனாய் இனித்தது. உடனே அவரது குழு ஃப்ரிட்ஸிடம் விரைந்தது. விவரத்தை எடுத்துக்கூறினார்கள். அவரும் ஒப்புக்கொண்டார். பறவைகளோடு ஃப்ரிட்ஸ் வானில் பறப்பது. அவர்களைத் தொடர்ந்து போர்ச்சுகலின் குழு தரைவழியே செல்வது எனத் திட்டம் தயாரானது. 

ஒருவழியாகத் தேவையான தரவுகள் கிடைத்துவிட்டன. இனி நமது கேள்விக்கு விடை காண்போம் என்று அமர்ந்தார்கள். ஐபிஸ்களின் வேகத்தை ஆராய்ந்தபோது சீராகவே இருந்தது. இதயத்துடிப்பு ஹென்றி கண்டதுபோலவே வேறுபட்டது. தற்போது அவை சிறகுகளை அடிக்கும் முறையை ஆராய்ந்தார்கள். முன்னால் செல்லும் பறவை தன் சிறகைக் காற்றில் அடிக்கும்போது அதற்குப் பின்னால் காற்று கீழ்நோக்கிச் செல்லும், பக்கவாட்டுப் பக்கங்களில் காற்று மேல்நோக்கிச் செல்லும். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு சுழற்சி முறையில் சுழலும் அந்தக் காற்று அதற்குப் பின்னால் தனது பக்கங்களில் பறக்கும் பறவைக்கு எளிமையானதோர் உந்துவிசையைக் கொடுக்கும். அந்த உந்துவிசை பின்செல்லும் பறவைக்குப் பறப்பதைச் சுலபமாக்கிவிடும். உதாரணமாகத் தன் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு பனிச்சரிவில் முன்னால் தந்தை செல்கிறார். அவரது காலடியைத் தொடர்ந்து குழந்தை செல்கிறது. அது தன் தந்தையின் கால்தடங்களிலேயே கால் வைத்துச் செல்லும்போது அதற்கு நடப்பது எளிதாகிவிடும். ஏனென்றால் அந்த இடத்தில் இருக்கும் பனியைத் தந்தை கால் வைக்கும்போதே விலகிவிடுகிறது. அதேபோல் முன்செல்லும் பறவை தன் முழுத்திறனிலும் காற்றைக் கிழித்துச் செல்வதால் அந்தக் கிழிந்த காற்றால் ஏற்படும் சுழற்சி பக்கங்களில் பறக்கும் பறவைகள் பறப்பதை எளிதாக்கிவிடும். ஆகையால் பின்னால் பறக்கும் பறவை சிரமம் ஏதுமின்றி ஓரளவுக்குப் பறந்தாலே போதும். முன்செல்லும் பறவையே அதன் வேகத்திற்கு இட்டுச்சென்றுவிடும்.
அதுவே பறவைகள் வரிசையாகச் சென்றால் அந்தச் சுழற்சியின் தன்மையை அவற்றால் உணர முடியாது. அவை எப்படி இந்த மாதிரியான காற்றின் சுழற்சியைப் புரிந்துகொள்கின்றன. இறகு நுனியில் படும் காற்று எத்தன்மையது, வேகம் என்ன ஆகியவற்றை உணர்த்திவிடும். பறக்கும் சமயங்களில் பறவைகளின் இறகு நுனி கிட்டத்தட்ட ஒரு சென்சார் போலச் செயல்படும். ஒருவேளை ஏதேனும் பறவை அந்த அமைப்பிலிருந்து பிறழ்ந்து விட்டால் என்ன செய்யும்?

V- shape

காற்றின் தன்மையைப் புரிந்துகொண்டு உடனே அது முன்செல்லும் பறவையின் சிறகு அசைவுகளுக்கு முற்றிலும் எதிர்த்திசையில் அடிக்கத் தொடங்கும். அது காற்றின் வேகத்தால் அமைப்பை விட்டுப் பிரிந்து செல்லாமல் இருக்கவைக்கும். பிறகு தன்னைச் சமாளித்துக்கொண்டு சரிசெய்துகொள்ளும்.

அந்த இளம் பறவைகளுக்கு யார் இதைக் கற்றுக்கொடுத்தது. அவை இப்போதுதான் இவ்வளவு தூரம் பறக்கின்றன. பிறகு எப்படிப் புரிந்துகொண்டன. இந்தக் கேள்விக்கு விடைகாணும்போது ஒன்று புரிந்துவிட்டது. இது மரபுரீதியாக வருவது இல்லை. பொதுவாக இளம் பறவைகள் மூத்த பறவையிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. ஆனால், இங்கே பறக்கும் அனைத்துமே ஒத்த வயதுடையவை. சொல்லப்போனால் இவை பறக்கத் தொடங்கியதும் ஆளுக்கொரு விதமாகத்தான் பறக்கத் தொடங்கின. நேரம் போகப் போகக் காற்றின் தன்மையும் இறகுகளின் திறனையும் படிப்படியாகப் புரிந்துகொண்டு அவை சுயமாகக் கற்றுக்கொண்டன. சில மணிநேரத்துக்கு ஒருமுறை அவை தம் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தன. முன்னால் வழிநடத்திச் செல்லும் பறவை சோர்வடையும்போது மற்றொரு பறவை முன்வந்துவிட அது பின்னால் சென்றுவிடும். இப்படி மாறி மாறிப் பயணம் செய்து காற்றைத் தனக்குச் சாதகமாக்கிப் பறக்கவே பறவைகள் அந்த அமைப்பில் பறக்கின்றன.

இவ்வாறு தன்னைக் கீழே தள்ளக்கூடிய காற்றைத் தவிர்த்து சாதுர்யமாக மேலே மேலே செல்வதோடு சோர்வின்றிக் கடல் கடந்து பறப்பதற்கும் அவை செய்யும் முயற்சிகள் அபூர்வம். சிறகு பலப்பட்டதும் வானத்தில் பாதைபோட்டுப் பறக்கும் பறவைகள் அந்தப் பாதையில் தன்னையே ஓட்டிக்கொள்ளத் தனித்திறன் கொடுத்திருக்கிறது இயற்கை.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வலைபாயுதே

 
 

சைபர் ஸ்பைடர்

 

112p1_1525777254.jpg

twitter.com/nelsonvijay08

அப்பாவை மார்ச்சுவரிக்கு அனுப்பியாயிற்று; மகனைப் பாதுகாப்பாக போலீஸ் ஜீப்பில் ஏற்றியாயிற்று. அவன் தேர்வெழுதிய பேனாவைத் தூக்கிலிட்டு விடுங்கள். சமன்பாடு சரியாகட்டும்!

twitter.com/Satya_Twtz

ஒரு சாதாரணக் குடும்பத்தில பிறந்து, இப்ப 1 லிட்டர் பெட்ரோல் போடும் அளவுக்கு முன்னேறியிருக்கேன்னு நினைச்சா எனக்கே புல்லரிப்பா இருக்குது..!

twitter.com/AnirudhAakash4

ஒரு ஹோட்டலின் மொத்த ருசியும் ஐந்து ரூபாய் அஜினோமோட்டோவில் அடங்கியுள்ளது.

112p2_1525777309.jpg

twitter.com/packiarajan

வழக்கறிஞர் அணி இருக்குற கட்சியைப் பார்த்திருக்கிறோம். ஆனா உலகத்திலேயே நீதிபதி அணி வச்சுருக்குற ஒரே கட்சி நம்ம B.J.P தான்.

- யாரோ ஓர் உண்மை விளம்பி.

twitter.com/SKtwtz

அ: என் பொண்டாட்டி ’சூரியவம்சம்’ தேவயானி மாதிரி சொன்னதைச் செஞ்சிட்டா..

இ: என்ன, படிச்சு கலெக்டர் ஆகிட்டாங்களா?

அ: இல்லை... இட்லி உப்புமா பண்ணியிருந்தா..

112p3_1525777323.jpg

twitter.com/mufthimohamed1

அலாரம் இல்லாமலே தூக்கம் கலையும் நாளுக்குப் பெயர்தான் ஞாயிற்றுக்கிழமை.

twitter.com/ShivaP_Offl

எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதைக் கேட்டதும், ‘எதிர்க்கட்சிக்கே அடுத்த எலெக்‌ஷன்ல ஓட்டு போடலாம்’ன்னு தோணுவது பெரிய விஷயமில்லை.

ஆளுங்கட்சி அமைச்சர் பேசுவதைக் கேட்டதும் அடுத்த எலெக்‌ஷன்ல எதிர்கட்சிக்கே ஓட்டு போடலாம்ன்னு தோணுவதுதான் பெரியவிஷயம்.

112p4_1525777337.jpg

twitter.com/Gopi007twitz

ஃப்ளைட்ல இருந்து டயர் வெளியே வர்ற மாதிரி கால் ரெண்டும் வண்டிய விட்டு வெளியே வந்தா, அந்த ஸ்கூட்டி யில் போற பொண்ணு பிரேக் அடிக்கப் போகுதுன்னு அர்த்தம்

twitter.com/thoatta

‘அடிச்சும் பார்த்தாச்சு, அவுத்தும் பார்த்தாச்சு, யாருடா நீங்க?’

‘என்டர்டெயினர்ஸ்’

‘யாருக்கு, மேட்ச் பார்க்கிறவங்களுக்கா?’

‘இல்ல, எங்களோட மேட்ச் ஆடுறவங்களுக்கு’

-ஆர்.சி.பி

112p5_1525777353.jpg

twitter.com/Mehnaaz_Bae

கொளுத்தி எடுக்குற வெயிலுக்கு தலையில முடி முளைச்சதுக்குப் பதிலா  செடி முளைச்சிருந்தா நிழலாச்சும் கொடுத்திருக்கும்.

twitter.com/Gopi007twitz

ரேஷன்கார்டுல பேரைச் சேர்க்கணுமா, அதுக்கு ஏன்யா இங்கே வர்ற? ராஜஸ்தான் தாலுகா ஆபீஸுக்குப் போய்யா!

112p6_1525777376.jpg

twitter.com/sultan_Twitz

டிஜிட்டல் இந்தியாவில் நீட் தேர்வையும் ஆன்லைன்லயே நடத்தி இருக்கலாமே மோடிஜீ?!

facebook.com/jvp.sachin

‘அ.தி.மு.க’ ரெண்டாகப் பிரிஞ்சுதான் ‘அ.தி.மு.க அம்மா அணி’, ‘அ.தி.முக புரட்சித்தலைவி அம்மா’ அணிகள்னு உருவாச்சு. அதுக்கப்புறம் அ.தி.மு.க அம்மா அணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமாக மாறுச்சு.இப்ப என்னன்னா, அந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துல சண்டைவந்து திரும்பவும் அப்படியே ரிவர்ஸ்ல போயி ‘அ.தி.மு.க அம்மா அணி’யைப் புதுப்பிச்சிருக்காங்க.இப்படியே ரிவர்ஸ்ல போனா... அ.தி.மு.க., ஜெ- ஜா அணிகள்., அ.தி.மு.க., தி.மு.க., தி.க., னு போயி கடைசியில ‘நீதிக்கட்சி’லதான் நிப்பாங்க போல.

112p7_1525777390.jpg

facebook.com/iam.suriyaraj

BJP -னால தமிழ்நாட்டுல எல்லோருக்கும் BP வந்ததுதான் மிச்சம்!

twitter.com/iamkarki

நீட் விஷயத்துல ஒரு பக்தர் கேட்கிறாரு. “செம்மரம் வெட்ட பக்கத்து  ஸ்டேட் போவீங்க. மீன் பிடிக்கப் பக்கத்து நாட்டுக்கே போவீங்க. படிக்கப் போக மாட்டீங்களா”ன்னு.

ஏம்ப்பா சாமி. அணு உலை வைக்க இங்க இடமிருக்கு. மீத்தேன் எடுக்க, நியூட்ரினோ ஆய்வு செய்ய இடமிருக்கு. தேர்வு நடத்த மட்டும் இங்க இடமில்லையா?

facebook.com/karthekarna

தயிர்சாதத்தோடு மாம்பழம் வைத்து சாப்பிடும் நாட்களுக்கு மே மாதம் என்று பெயர்.

https://twitter.com/Giri47436512

இணையாத தண்டவாளங்களே “ஊர்களை” இணைத்துவிடுகின்றன!!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 பாலி தீவு - இயற்கை வனப்பும் மனித வனப்பும்

 

 
balijpg
 
 

இந்தோனேசியாவின் புராதனமான சிறு தீவுப் பகுதி பாலி. இந்தோனேசியாவைவிட பாலி தீவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புபவர்களே அதிகம். தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களும் வெளிநாட்டவர்களும் கடந்த நூற்றாண்டில் அதிகம் காண விரும்பிய இடங்களுள் பாலி தீவும் ஒன்று.

 

நாற்பதாயிரம் ஆண்டுகளாக பாலி தீவில் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஜாவாவிலிருந்து பலர் அங்கே குடிபெயர்ந்துள்ளனர். வெகுகாலமாக பாலி மக்கள் இந்துக்களாக வாழ்ந்துவருகிறார்கள். ஆனால், இந்தோனேசியா ஒரு முஸ்லிம் நாடு. பாலியில் முஸ்லிம்கள் பத்து சதவீதத்தினர்தான். அதற்கடுத்து, கிறிஸ்தவர்களும் பௌத்தர்களும் அதிக அளவில் உள்ளனர். மீதமுள்ள அனைவரும் இந்துக்கள்.

பாலி தீவு ஒரு கேளிக்கைத்தலம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பயண நூல் ஒளிப்படங்களில் அத்தீவிலுள்ள பெண்கள் திறந்த மார்புடன் காணப்படுவார்கள். ஆனால், மாராப்பு இல்லாத பாலி பெண்களை அந்நாளைய கறுப்பு வெள்ளை ஒளிப்படங்களிலும் ஆவணப்படங்களிலும் மட்டும்தான் இப்போது காண முடியும்.

பாலி இன்று சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்ப்பதற்கு காரணம் அதன் இயற்கை வனப்பும் கடற்கரைகளும்தாம். நவீன வசதிகளுடன் கூடிய கிராமங்கள்போல், அதன் பல பகுதிகள் தோன்றுகின்றன. உள்ளூர் பயணத்துக்குச் சாலை வழிகள் மட்டுமே உண்டு. ரயில் பாதை கிடையாது. கடற்கரைகளில் கூட்டம் கூட்டமாக வெளிநாட்டுப் பயணிகள் வெயிலில் காய்கிறார்கள். நீர் விளையாட்டுகளுக்காகவே பல வெளிநாட்டவர் அங்கு கூடுகின்றனர்.

பாலி உணவு அப்படியொன்றும் சுவையானது என்று கூறிவிட முடியாது. அரிசி உணவு முக்கியமானது. ஆனால், நம்மைப் போல் அதிக அளவில் அரிசியை உட்கொள்வதில்லை. அசைவ உணவில் கோழி, மீன், பன்றி இறைச்சி ஆகியவற்றுக்கு அதிக இடம் உண்டு.

 

நளினமிகு ராமாயணம்

பாலியில் ‘பாலே ராமாயணம்’ நடைபெறுகிறது. குறுகிய கால அவகாசம் மட்டுமே இருந்ததால், அதைப் பார்க்க இயலவில்லை. ஆனால், அது போன்றே புகழ்பெற்றுள்ள ‘கெசக் ராமாயண’ நாடகத்தைப் பார்க்க முடிந்தது. உலுவடு கோயில் திறந்தவெளி அரைவட்ட அரங்கில் கெசக் ராமாயண நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. மதகுரு ஒருவர் தீபம் ஏற்றியபின் நாடகம் தொடங்குகிறது. நாடகத்தில் மொத்தம் நாலு காட்சிகள். சீதையை ராவணன் இலங்கைக்குக் கடத்திச் செல்வதில் தொடங்கி அனுமன் அங்கே செல்வது, அவரது வாலில் தீ வைக்கப்படுவது, ராமன் சீதையை மீட்டு வருவது வரையிலான கதை சொல்லப்படுகிறது.

சீதை மட்டுமின்றி ராமன், லட்சுமணன் கதாபாத்திரங்களையும் பெண்களே ஏற்றுள்ளனர். ராமனும் சீதையும் அரங்கினுள் மெல்ல நடந்துவந்தார்கள். ஆனால், அவர்கள் மிதந்து வந்தார்களோ என்று எண்ணும்படியாக இருந்தது. சீதையாக நடித்தவர் புடவை கொசுவம் பின்னுவதுபோன்ற குறைந்த அபிநயத்தில் மிகுந்த நளினத்தைக் கொண்டுவந்தார். ராவணனின் வேலையாள் விகடம் செய்கிறான். அது கட்டியங்காரன் கதாபாத்திரம். அவன் பாலி மொழியிலிருந்து சட்டென மாறி பார்வையாளர்களுடன் பல மொழிகளில் தொடர்புகொண்டான்.

bali%202jpg

 

விலை கூடிய துவர்ப்புக் காபி

பாலி உள்ளிட்ட இந்தோனேசியாவின் பல இடங்களிலும் ஒரு புது வகை காபி தயாரிக்கப்படுகிறது. அதன் சுவை பற்றிச் சொல்வதற்கு முன்பாக அக்காபி தயாரிக்கப்படும் சுவையான (!) கதையைச் சொல்ல வேண்டும். பாலியில் ‘லுவாக் காபி’தோட்டத்துக்குச் சென்றோம். அங்குள்ள காபி பெர்ரிகளை புனுகு பூனை வகையைச் சார்ந்த மரநாய்கள் சாப்பிட்டுவிட்டு, அவை கழிக்கிற மலத்திலிருந்து பெறப்படும் கொட்டைகளிலிருந்து தயாராவதுதான் ‘லுவாக் காபி’.

மரநாய் தேர்ந்தெடுக்கும் காபி பெர்ரிகள் விசேஷமானவை என்றும் அவை பூனையின் குடலுக்குள் சென்று வெளி வருவதால் அவற்றுக்கு ஒரு புதிய பதம் கிடைக்கிறது என்றும் காபி தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். பூனையின் கழிவிலிருந்து பெறப்படும் காபிக் கொட்டைகளை வெந்நீரில் சுத்தமாகக் கழுவி எடுத்து அவற்றின் தோலை உரித்தெடுத்த பிறகு வாணலியில் இட்டு வதக்குகிறார்கள். பின்னர் உரலில் போட்டுப் பொடிசெய்து காபியாக விற்பனை செய்கிறார்கள்.

துவர்ப்பு கலந்த சுவை அக்காபிக்கு இருந்தது. அது அதிக விலையில் விற்கப்படுகிறது. ரஷ்யாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. நாங்கள் குடித்த ஒரு ‘லுவாக் கப் காபி’யின் விலை இந்திய மதிப்பில் இருநூற்றைம்பது ரூபாய். பார்வையாளர்களுக்கு காட்டப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பூனை உறக்கத்தில் இருந்தது. சப்தம் கேட்டவுடன் தலையை சற்றே தூக்கிப்பார்த்துவிட்டு கண்கள் சொருக மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தது. இரவில் விழித்திருப்பதால் பகல் முழுவதும் அந்த இனம் தூங்கும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறினர்.

இந்தோனேசியாவில் போதைப் பொருள் வைத்திருப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மது அருந்துவதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆல்கஹால் அதிக அளவு இல்லாத மதுபானங்கள்தான் பார்களில் சப்ளை செய்யப்படுகின்றன. நாற்பது சதவீதம் ஆல்கஹால் கொண்ட பாலி சாராயத்தை வாங்கிச் சென்று தனியாக அருந்தலாம்.

ஆனால், அதையே உரிமம் பெற்ற பாரில் அருந்த முடியாது. ஆனாலும் அங்கே போதைப்பொருள் வணிகம் அதிகம். பாலியில் கஞ்சா புகை மணம் காற்றோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.

என்னைப் பெரும் பணக்காரனாக மகிழ வைத்த நாடு இந்தோனேசியா. ஒருமுறை பாலியிலுள்ள ஒரு நந்தவன ஓட்டலில் இயற்கை அழகின் சூழலில் அமர்ந்து நாங்கள் சாப்பிட்டோம். பில் வந்தது. நாங்கள் எட்டு லட்ச ரூபாய்க்குச் சாப்பிட்டிருந்தோம். ஆனால், அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். ஏனெனில், அந்த அருமையான விருந்துக்கு இந்திய மதிப்பில் நாலாயிரம் ரூபாய்தான் ஆகியிருந்தது. இந்திய ரூபாய் ஒன்றின் மதிப்பு அங்கே இருநூறு ரூபாய். எனவே, ஒவ்வொருமுறை சாப்பிட்ட போதும் ஆளுக்கு நாற்பதாயிரம் அம்பதாயிரம் என்று செலவிட்டோம். ஆனால், இந்தோனேசியா ரூபாய் மதிப்பில்தான்.

‘ஏன் இப்படி அநியாயமாக பூஜ்யங்களைச் சேர்த்துக்கொண்டு எங்களைப் பயமுறுத்துகிறீர்கள்? நாணய மதிப்பை எளிதாக்கக் கூடாதா?’ என்று ஒரு பாலிவாசியிடம் கேட்டதற்கு அவர், ‘ஓ, நிச்சயமாக! நான் இந்தோனேசியாவின் அதிபராகப் பதவியேற்றவுடன், அந்தச் சீர்த்திருத்தத்தை முதலில் செய்துவிடுகிறேன்’ என்று கேலியாகச் சொல்லிவிட்டுக் கடகடவெனச் சிரித்தார். அவர்களுக்கு அது ஒரு பிரச்சினையே இல்லை. பாலியின் சொத்து இயற்கை வளங்கள் மட்டுமல்ல எல்லோரையும் இனிதாக வரவேற்கும் பாலி மக்களும்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. அதுவும் ஒரு இயற்கைச் சொத்துதானே.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

சிக்ஸர்கள் விளாசும் சச்சினின் பேட்டை தயாரிப்பது யார்?

இவர்தான் அஸ்லாம் சௌத்ரி. இவர் 'பேட்மேன்' என்று அழைக்கப்படுகிறார்.
Link to comment
Share on other sites

‘நல்ல தமிழ் பேசுக’
 

image_018e203643.jpgசில விடயங்களில், எங்கள் அபிப்பிராயங்களைப் பேசாமல் வாழமுடியாதிருப்பது மேலானது. இருக்கும் இடம் அறிந்து, விடயத்தை நன்குப் புரிந்து, சுற்றியிருக்கும் நபர்களின் குணமறிந்து, பேசலாமா அல்லது விடலாமா எனச் சிந்தியுங்கள்.

கௌரவம் என்பதே என்னவென்றுத் தெரியாத கூட்டத்தில், மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவதை விட, சும்மா இருப்பது நல்லது.

இது, கோழைத்தனமானது அல்ல. நல்லோர், வல்ல புலமையாளரின் முன் பேசுதல், எமக்கான அங்கிகாரத்தை அளிக்கும்.

உட்பூசலுடன் இயங்குபவர்கள், பொறாமைக்காரர்கள், நல்ல விடயங்களைக் காதில் போடவே மாட்டார்கள். சபை நடுவே பேசுமுன், உங்களை நீங்களே நிதானப்படுத்திக்கொள்ளுங்கள். 

சில சமயங்களில், பேச்சாளர்கள் சிறந்த முறையில் பேசும்போது கூச்சலிடுவதுமுண்டு. இதன் பொருட்டுக் கோபப்பட்டுக் கொள்ளாது, அமைதியுடன் இயங்கினால், சபை உங்களை ஏற்றுக்கொள்ளும்.

நல்ல விடயங்களைப் பேசும்போது, மென்மையாக, அமைதியுடன் உரையாற்றினால், பேச்சுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

நல்ல தமிழ் பேசுக!

Link to comment
Share on other sites

இன்று அன்னையர் தினம் !

 

விழிகளுக்கு இமைபோல் நமை காத்திடுவாள் : விழுதுகள் நமக்கு வாழ்வின் ஆணிவேரவள் ! நம்பசி போக்கிட அவள்பசியை துறந்திடுவாள் : நம்நலன் காத்திடவே நாளும் உழைத்திடுவாள் ! இன்று உலக அன்னையர் தினம் அஷ்டிக்கப்படுகின்றது.

mothers-day.jpg

வசந்த காலத்தின் ஆரம்பத்தில் கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர். ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு, வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது.

 

நாம் கொண்டாடும் அன்னையர் தினம், அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர்தான் ஆரம்பித்து வைத்து வழிகாட்டியவர். அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. 

அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது. தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். 

சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது, எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும், தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னா ஜார்விஸ் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு பெரும் ஆதரவு திரட்டினர். 

இதன் காரணமாக 1911ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட முழக்கங்களின் வாயிலாக 1914 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி அதிபர் உட்ரோவ் வில்சன் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுவது என்பதுதான் அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

‘அம்மா’ என்ற வார்த்தைக்கு மட்டும்தான் என்றும் யாராலும் சாதி, மத, மொழி, இன, நாடு, பண பேதம் பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கு சுயநலமே கிடையாது. இது அன்பு உலகம். சம்பளமே இல்லாத முழு நேர வாழ்நாள் வேலை அம்மா என்ற உத்தியோகமே. ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் கூடவே ஒரு தாயும் பிறக்கின்றாள். ஒரு பெண் என்பவள் மனைவி, தாய் என்ற பதவி பெறும் பொழுது ‘நான், என் விருப்பம், என் வயிறு’ என்ற அனைத்தையும் கருப்பையில் இட்டு தியாகம் செய்து விடுகின்றார். 

எந்த தாயும் ஒரு உயிர் தன் வயிற்றினுள் வளரும் காலத்தை மறக்கவே முடியாது. 

இன்று விஞ்ஞானம் முன்னேறி விட்டது. ஒவ்வொரு குடும்பமும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதில்லை. இருப்பினும் இன்று அதிகம் வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளனர். கடும் போட்டி நிலவும் நிர்வாகத்தில் தன் கர்ப்பத்தினை காரணம் காட்டி சில வசதிகள் பெறுவது கடினம். பல நிறுவனங்கள் சமீபத்தில் திருமணம் நடந்த பெண்களுக்கு வேலையே தருவதில்லை. இரவு, பகல் வேலைநேரம், நின்று கொண்டே செய்யும் வேலை, மணிக்கணக்காக கணனி முன் வேலை என காலத்தின் கட்டாயம் தரும் பாதிப்புகளை போராடி ஒரு பெண் குழந்தை பெற்றெடுக்கின்றாள். சிலருக்கு சில மருத்துவ பிரச்சினைகளும் இருக்கக் கூடும். வீடு, வேலைத்தளம் என இயந்திரம் போல் ஆகி விட்ட நிலையில் இந்த கால இளம் தாய்மார்களை கை கூப்பி வணங்கத்தான் வேண்டும். 

சுயநல மில்லாத, கலப்படமில்லாத ஒரு அன்பு என்றால் அது தாயிடம் கிடைக்கும் அன்புதான். இளமை நம்மை விட்டு போகும். வளமை நம்மை விட்டு போகாது, ஆனால் உங்களுக்கு எவ்வளவு  வயதாகி தாய் உயிருடன் இருந்தால் அத்தாயின் அன்பு மட்டும் நீங்கள் பிறந்த அன்றுதொட்டு இருந்தது போலவே இறுதிவரை இளமையாகவும் வளமையாகவும் இருக்கும். 

அனைத்து தாய்மார்களையும் இவ்வுலகம் கை கூப்பி வணங்குகின்றது. அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !

Bildergebnis für happy mothers day

Link to comment
Share on other sites

பால்கனிக்கு ஏற்ற கொடிகள்

 

 
shutterstock1031060533
 
 

வீடு என்றால் அதில் ஒரு சிறு பகுதியைச் சும்மா வெறுமனே போட்டுவைத்திருப்பார்கள். அந்த மாதிரி இடங்களில் செடி, கொடிககளை வளர்ப்பார்கள். அதெல்லாம் அந்தக் காலம். அது இப்போது மலையேறிவிட்டது.

       
 

இன்றைக்குள்ள நெருக்கடியில் வீடு கட்ட நிலம் வாங்குதே பெரும்பாடு. அப்படிக் கிடைக்கும் நிலத்தில் மாடி மேல மாடி கட்டி வாழ வேண்டிய நிலை. இந்தச் சூழ்நிலையில் செடி, கொடுகளுக்குத் தனி இடம் கொடுப்பது சாத்தியமல்ல. அதற்காக உருவாகியுள்ள இடம்தான் பால்கனி.

shutterstock129013217
 

பால்கனியில் பொதுவாகச் செடிகளைவிடக் கொடிகளை வளர்ப்பது சுலபம். அழகாகவும் இருக்கும். அது சாதாரண மண்ணிலேயே செழித்து வளரும். இவற்றிற்கெனத் தனிக் கவனம் கொள்ளத் தேவையில்லை.

shutterstock147638171
 

சிறு தொட்டிகளிலேயே விதைகளைத் தூவிக் கொடிகளை வளர்க்கலாம். பால்கனி சுவர்களிலேயே அழகாகப் படர விடலாம். பூக்களைத் தரும் கொடிகளில் இரு வகைகள் உள்ளன. சில வகைக் கொடிகளில் தண்டிக்கு நெருக்கமாகப் பூ பூக்கும், சிலவற்றில் பூக்கள் கொத்துக் கொத்தாய் பூத்துத் தொங்கும்.

shutterstock446003950
 

முதல் வகைக் கொடிகளைத் தூண்களில் படரவிடலாம். தூணோடு தூணாக அழகிய திரை போலப் படர்ந்து சூழலை அழகுபடுத்தும். இரண்டாம் வகைக் கொடிகளை கூரைமீது படர விடலாம். படபடவெனப் பரவி கூரையில் பூக்களின் தோரணங்கள் கண்ணைப் பறிக்கும்விதமாகப் பார்ப்போரைக் கவரும்.

shutterstock58178923
 

ஜன்னலிலும் கொடிகளைப் படரவிடலாம். கொடிகள் பால்கனிச் சுவர், ஜன்னலில் படர்ந்திருக்கும் காட்சி வீட்டுக்கு வருபவர்களுன் கண்களுக்கு விருந்தாகும். உள்ளுக்குள் இருக்கும் நம் மனதுக்கும் உடலுக்கும் குளுமையைத் தரும்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

வெல்லுவதோ இளமை : கால்களில் மகுடம் தரித்தவன்

 

 
bolt

அன்றைக்குப் பள்ளி மைதானத்தில் ஏகப்பட்ட கூட்டம். பிள்ளைகள் குழுக்களாகப் பிரிந்து ஏதேதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

   
 

எட்டு வயது உசேனுக்குப் பிடித்த விளையாட்டுகள், கிரிக்கெட்டும் கால்பந்தும். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களோடு விளையாடக் கிளம்பிவிடுவான். அதன்பிறகு, அவனுக்கு நேரம் போவதே தெரியாது. சாப்பாடு, தண்ணீர் தேவை இல்லை. விளையாட்டு, விளையாட்டு, விளையாட்டுதான்.

அன்றைக்கு உசேன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். எப்போதும்போல் அதே சுறுசுறுப்பு, விறுவிறுப்பு, வேகம்.

சிறிது நேரம் கழித்து, யாரோ அவனைக் கூப்பிடும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால், மிஸ்டர் டேவெரெ.

அவருடைய முழுப்பெயர், டேவெரெ நுஜென்ட். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆசிரியர். பையன்கள் விளையாடுவதைக் கூர்ந்து கவனித்து அவர்களுடைய திறமைகளைக் கண்டுபிடிப்பார், குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவார். இன்னும் சிறப்பாக விளையாட ஊக்குவிப்பார்.

ஆகவே, உசேன் அவரிடம் ஆர்வத்துடன் ஓடினான், வணக்கம் சொல்லிவிட்டு அவர் முகத்தையே பார்த்தான்.

‘உசேன், கொஞ்ச நாளாவே நீ கிரிக்கெட் ஆடறதை நான் கவனிச்சுகிட்டுதான் இருக்கேன். நல்லா விளையாடறே, வெரிகுட்!’ என்றார்.

‘நன்றி சார்’ என்றான் உசேன். திரும்பி மைதானத்துக்கு ஓடலாமா என்று யோசித்தவனை டேவெரெ விடவில்லை. ‘நம்ம பள்ளியில ஸ்போர்ட்ஸ் டே வருதே, அதுல நீ கலந்துக்கறியா?’

‘கலந்துக்கறேன் சார்.’

‘எந்தப் போட்டியிலெல்லாம் கலந்துக்கறே?’ என்றார் டேவெரெ, ‘ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கறியா?’

சட்டென்று உசேனின் முகம் மாறியது, ‘தெரியலை சார்’ என்றான் மழுப்பலாக.

விளையாட்டு என்றாலே மகிழும் சிறுவன், ஓட்டப்பந்தயம் என்றதும் விட்டேத்தியாகப் பேசக் காரணமுண்டு. அந்தக் காரணத்தின் பெயர், ரிகார்டோ.

11chgowbolt2
 

அவர்களுடைய பள்ளியில் ஓட்டப்பந்தயம் என்றாலே ரிகார்டோதான் வெற்றிபெறுவான். குறிப்பாக, 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவன் கில்லாடி. மற்றவர்களெல்லாம் ஓடத் தொடங்கும்முன் எல்லைக்கோட்டைத் தாண்டி வெளியே வந்துவிடுவான்.

உசேனும் வேகமாக ஓடுகிறவன்தான், ஆனால், ரிகார்டோவை வெல்வது எளிதில்லை. ஒவ்வொருமுறை அவனிடம் தோற்றுப்போகும்போதும் உசேனுக்குக் கோபம் வரும் அல்லது அழுகை வரும்.

ஆகவே, உசேனுக்கு ஓட்டப்பந்தயத்தின்மேல் பெரிய ஆர்வமில்லை. யாராவது ஓடச் சொன்னால் ஓடுவான். மற்றபடி அவனுடைய மனமெல்லாம் கிரிக்கெட், கால்பந்தில்தான் இருந்தது.

டேவெரெ இதை ஏற்றுக்கொள்ளவில்லை, ‘நீ நல்லா ஓடறே, கொஞ்சம் முயற்சி செஞ்சா உன்னால மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனா வர முடியும்!’ என்றார்.

அவரை நம்ப முடியாமல் பார்த்தான் உசேன். வேறு என்ன காரணம் சொல்லி இவரிடமிருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தான்.

டேவெரெ அதைப் புரிந்துகொண்டதுபோல் பேசினார், ‘உசேன், உனக்குக் கிரிக்கெட்லதான் ஆர்வம்னு எனக்குப் புரியுது. ஆனா, கிரிக்கெட்ல பந்து வீசறதுக்காக நீ ஓடிவர்றதைப் பார்க்கும்போதே நீ பிரமாதமான ஓட்டப்பந்தய வீரனா வருவேன்னு எனக்குப் புரிஞ்சுபோச்சு. இந்த அளவு வேகமா ஓடறவங்க யாரையும் நான் பார்த்ததில்லை. நான் சொல்றதைக் கேளு, நீ இந்த கிரிக்கெட், ஃபுட்பாலையெல்லாம் ஓரங்கட்டிட்டு ஓட்டப்பந்தயத்துல கவனம் செலுத்து, பெரிய அளவுல வருவே!'

அப்போதும் உசேனுக்கு நம்பிக்கை வரவில்லை. ‘முயற்சி பண்றேன் சார்’ என்று நழுவப் பார்த்தான்.

‘சரி, நீ இந்த ஓட்டப்பந்தயத்துல ஜெயிச்சா நான் உனக்கு ஒரு பரிசு தர்றேன்’ என்றார் டேவெரெ, ‘ஒரு பாக்ஸ் லஞ்ச்!’

சட்டென்று நிமிர்ந்தான் உசேன். ‘ஆஹா, பாக்ஸ் லஞ்ச், நிஜமாவா?’

‘பாக்ஸ் லஞ்ச்’ என்பது, சிக்கனும் இன்னும் பல தின்பண்டங்களும் கொண்ட உணவுப்பொட்டலம். உசேனுக்கு மிகவும் பிடித்த விஷயம்.

ஆகவே, பெரிய சிரிப்போடு தலையாட்டினான் அவன், ‘நான் நிச்சயமா ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கறேன் மிஸ்டர் டேவெரெ!’

கலந்துகொள்ளலாம், ஆனால், ரிகார்டோவை வெல்வது எப்படி?

உசேன் வேகமாக ஓடுவதாக டேவெரெ சொல்கிறார்; அதை நம்பி ரிகார்டோவின் வேகத்துடன் போட்டிபோட முடியுமா?

முயன்று பார்த்துவிட வேண்டியதுதான். பாக்ஸ் லஞ்ச் சும்மா கிடைக்குமா?

போட்டி நாள் வந்தது. ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள் வரிசையில் நின்றார்கள். உசேனுக்குச் சற்றுத் தள்ளி ரிகார்டோ நின்றிருந்தான். அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி ஓடத் தயாரானான் உசேன்.

சில நிமிடங்களில், டேவெரெ சத்தமாக, ‘கோ!’என்று கூவினார். எல்லாரும் ஓடத் தொடங்கினார்கள்.

அதுவரை உசேன் பல ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டிருந்தான்; ஆனால், இந்த ஓட்டப்பந்தயம் மிகவும் வித்தியாசமாகத் தோன்றியது. காரணம், அந்த பாக்ஸ் லஞ்ச் பரிசு.

அவன் சாப்பாட்டுக்காக ஓடவில்லை, ஆனால், இந்தப் பந்தயத்தில் ஜெயித்தால் ஒரு பரிசு உண்டு என்ற எண்ணம் அவனைச் செலுத்தியது, அவனுடைய போட்டி மனப்பான்மை வெளியே வந்தது, இயல்பான ஓடும் திறமையும் அதனுடன் சேர்ந்துகொண்டது, வெற்றி பெற வேண்டும், அந்தப் பரிசைக் கையில் வாங்க வேண்டும் என்ற துடிப்புடன் அதிவேகமாக ஓடத் தொடங்கினான்.

போட்டி தொடங்கிய சில விநாடிகளுக்குள், உசேன் ரிகார்டோவைத் தாண்டியிருந்தான். அதன்பிறகு, ரிகார்டோவின் மூச்சுச் சத்தம்தான் அவனுடைய முதுகுக்குப்பின் கேட்டது, ஓரக்கண்ணால் பின்னே பார்த்தால், ரிகார்டோவைக் காணவில்லை.

‘அப்படியானால், நான் ரிகார்டோவைவிடக் கணிசமாக முன்னே இருக்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டான் உசேன். அந்த எண்ணமே அவனை இன்னும் வேகமாக ஓடச்செய்தது. டேவெரெ கண்டுபிடித்துச் சொன்ன ஓட்ட திறமை அவனை முன்னோக்கிச் செலுத்தியது, எல்லைக்கோட்டைத் தொட்டு வெற்றிக் களிப்போடு துள்ளிக் குதித்தான்.

அதுதான் தொடக்கம். அதன்பிறகு, அந்தப் பள்ளியில் மட்டுமல்ல, சுற்றியிருந்த மற்ற பல பள்ளிகளிலும்கூட ஓட்டப்பந்தயத்தில் உசேனை வெல்ல யாரும் இல்லை. கலந்துகொண்ட போட்டிகளிலெல்லாம் வெற்றியைக் குவித்தான் அவன்.

usain
 

அப்போதும், அவனுக்குள்ளிருந்த கிரிக்கெட், கால்பந்து ஆர்வம் குறையவில்லை. அவ்வப்போது நண்பர்களுடன் விளையாடச் சென்றுவிடுவான். ஆசிரியர்கள் அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து ஓடவைப்பார்கள். ‘டேய், உன்னோட தங்கச் சுரங்கம் உன் கால்ல இருக்குடா’என்பார்கள்.

கொஞ்சம்கொஞ்சமாக, மற்ற கவனச்சிதறல்கள் நின்றன. ஓட்டப்பந்தயம் மட்டும்தான் முக்கியம், அதில் நிறைய பயிற்சி எடுப்பதுதான் தன்னை இன்னும் சிறந்த வீரனாக்கும் என்பதைப் புரிந்துகொண்டு முழுக் கவனத்தையும் அதில் செலுத்தத் தொடங்கினான். அது அவனை உலகின் உச்சத்துக்கே கொண்டுசென்றது, ‘உசேன் போல்ட்’ என்ற பெயரை எல்லாருக்கும் தெரியச் செய்தது, எட்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், இன்னும் எண்ணற்ற கோப்பைகள், வெற்றிகள், கவுரவங்கள் என்று பெரும் புகழையும் செல்வத்தையும் சேர்த்துத் தந்தது.

மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பையனுடைய ஓட்டத் திறமையை அடையாளம் கண்டு, அதை அவனுக்கே அறிமுகப்படுத்தி, ‘ஜெயிச்சா பாக்ஸ் லஞ்ச் வாங்கித் தர்றேன்’ என்று தந்திரமாக அவனை ஓட்டப்பந்தயக் களத்துக்கு அழைத்துவந்து வெற்றிக்குப் பழக்கப்படுத்திய அந்த ஆசிரியர், உசேனின் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். ‘விளையாட்டுப் பையன்’ உசேனை ‘வெற்றியாளர்’ ஆக்கினார்.

சுறுசுறுப்பான இளைஞர்களுடைய திறமைகள் பல திசைகளில் ஓடுவதைவிட, ஒருங்கிணைந்த ஆற்றலாக ஒரே திசையில் செல்லும்போது வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன, இலக்கு விரைவாகக் கைக்கு எட்டுகிறது!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

பேசும் படம்:

 

 
13CHLRDNEET

நீட் தேர்வின்போது சோதனை என்ற பெயரில் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது தொடர்பாகத் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கும் சிபிஎஸ்இ அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

13CHLRDKATHU

கதுவா சிறுமி படுகொலை வழக்கை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் மாவட்ட விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த வழக்கை எந்த ஒத்திவைப்புமின்றி தினசரி நடத்த வேண்டும் எனவும் அது உத்தரவிட்டுள்ளது.

 
13CHLRDPRIYA

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பிரியதர்ஷினி சுரேஷ், நீளம் தாண்டுதல் போட்டியில் 12.90 மீட்டர் தாண்டி புதிய சாதனை படைத்துத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

13CHLRDTRANSCOUPLE

கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை சூர்யாவும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி இஷானும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதோடு அதைச் சட்டப்படி கடந்தவாரம் பதிவும் செய்துகொண்டனர்.

13CHLRDJANET

உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகியான ஜேனெட் ஜாக்சன், இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருந்தான பில்போர்டு ஐகான் விருதை இந்த ஆண்டு பெறுகிறார்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

டிவிட்டரில் டிரெண்டான சன்னிலியோன்

524463-sunnyleonewater1-500x281.jpg

நடிகை சன்னிலியோன் இன்று தன்னுடைய 37-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் சன்னிலியோனிற்கு கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

மற்றொருபுறம் ரசிகர்கள் #HappyBirthdaySunny Leone, #HBD Queen என்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி டிவிட்டரில் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர் தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை சன்னி லியோன் கடந்த 1981-ஆண்டு மே-13 அன்று பிறந்தார். இதையடுத்து, டேனியல் வெபர் என்பவரரை  7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னிலியோனை ‘வடகறி’ என்னும் திரைப்படம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தது.

இவர் தற்போது, தமிழில் சரித்திர படமான வீரமா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் பாகத்தை மே மாதம் 18 ஆம்  திகதி படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.

http://metronews.lk

Link to comment
Share on other sites

கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம்பூச்சியாய் மின்னிய ஐஸ்வர்யா ராய்..!

 
 

ஐஸ்வர்யா

பிரான்சில் 2018-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அவர் அணிந்துவந்த ஆடை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் பேச்சு. 

 

ஐஸ்வர்யா ராய்
 

இது ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட விழா. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பட்டாம்பூச்சிகள் வரிசைப்படுத்தப்பட்ட மெர்மெய்ட் கவுனில் மிகவும் அழகாகத் தோன்றினார். அதிலும், ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்தவாறு ஐஸ்வர்யா நடந்து வந்த தோரணை அனைவரது கண்களையும் பிரமிக்கச் செய்தது. 

கேன்ஸ்

தனது மகள் ஆராத்யா பிறந்த சமயத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட  ஐஸ்வர்யா ராயின், லிப்ஸ்டிக் கலர், உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை வைத்து அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். 

கேன்ஸ்ஐஸ்வர்யா

ஆனால், இந்த ஆண்டு விழாவில் தன் மீது எழுந்த விமர்சனங்களை மறக்கச்செய்தது மட்டுமல்லாமல், `ஐஸ்வர்யாவுக்கு நிகர் ஐஸ்வர்யாதான்' என சொல்லும்படி செய்துவிட்டார். மீண்டும் ஒருமுறை ரெட் கார்ப்பெட்டில் பவனி வரமாட்டாரா என ஏங்க வைத்துவிட்டார். ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவுடன் விழாவில் கலந்து கொண்டபோது எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புகில் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. 

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

'சூரியன் - சந்திரன்' - பிபிசி நேயர்களின் புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

 

ஜிந்தா ஷேக் மொஹிதீன், சென்னை

 

ஜிந்தா ஷேக் மொஹிதீன், சென்னை

ஜீவன் குமார், ஈரோடு

 

ஜீவன் குமார், ஈரோடு

 

 

அஷாட், இலங்கை

 

அஷாட், இலங்கை

லோகேஸ்வரன்

 

லோகேஸ்வரன்

நாராயண சங்கர், புதுச்சேரி

 

நாராயண சங்கர், புதுச்சேரி

நளினா, திருப்பூர்

 

நளினா, திருப்பூர்

பெர்ஸிஸ் ஏஞ்சல்

 

பெர்ஸிஸ் ஏஞ்சல்

ராஜசேகரன், கோயம்புத்தூர்

 

ராஜசேகரன், கோயம்புத்தூர்

ஸ்ரீகாந்த் சந்திரசேகரன், துபாய்

 

ஸ்ரீகாந்த் சந்திரசேகரன், துபாய்

 

 

விஜயராஜ், திருப்பூர்

 

விஜயராஜ், திருப்பூர்

சிவஞானம் ஜீவகுமரன், இலங்கை

 

சிவஞானம் ஜீவகுமரன், இலங்கை

சதீஷ் கண்ணன், ராமநாதபுரம்

 

சதீஷ் கண்ணன், ராமநாதபுரம்

முகமது இஷ்ரத்

 

முகமது இஷ்ரத்

ஹாரிஷ் ராகவ், ஈரோடு

 

ஹாரிஷ் ராகவ், ஈரோடு

பீமால் அந்தோணி, திருச்சி

 

பீமால் அந்தோணி, திருச்சி

 

https://www.bbc.com

Link to comment
Share on other sites

திருமணத்திற்கு பிறகும் இந்த ஆட்டம் காட்டியிருக்கிறார் ஸ்ரேயா; வைரலாகும் புகைபடம்…..!

படங்களில் கவர்ச்சி நடிகை என்றால் முன்பு பெயர் சொல்லப்படுபவர் நடிகை ஸ்ரேயா. அவர் மார்ச் 12ம் திகதி ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரி கோசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர் நடிப்பில் மற்றும் அன்றி நடனத்துறையிலும் சிறந்து ஜொலிப்பவர். திருமணத்துக்கு முன்பு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே தலையை காட்டினார்.

fsgsfgfxvg.jpg

திருமணத்திற்கு பிறகாவது சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எந்த சினிமா பக்கத்திற்கும் நடிக்க முன்வரவில்லை.

hjkdhddl.jpg

இந்த நேரத்தில் அவர் கோடை காலம் என்பதால் நண்பர்களுடன் நீச்சல் உடையில் ஆட்டம் போட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளமான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் திருமணத்திற்கு பிறகும் இப்படியா உடை அணிந்து சுற்றுவது என கரித்து கொட்டி காமண்ட் செய்து வருகிறார்கள்.

http://metronews.lk

Link to comment
Share on other sites

பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: மே 14- 1811

 

பராகுவே ஸ்பெயினிடம் இருந்து 1811-ம் அண்டு மே மாதம் 14-ந்தேி விடுதலை பெற்றது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1811 - பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. * 1861 - ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது. * 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.

 
பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: மே 14- 1811
 
பராகுவே ஸ்பெயினிடம் இருந்து 1811-ம் அண்டு மே மாதம் 14-ந்தேி விடுதலை பெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1811 - பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
 
* 1861 - ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.
 
* 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.
 
* 1900 - கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.
 
* 1931 - சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
* 1939 - பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.

* 1940 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.
 
* 1943 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்துக்கருகில் ஜெர்மன் நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1948 - இஸ்ரேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின.
 
* 1955 - பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.

* 1965 - இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
 
* 1973 - ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்கப்பலில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
 
* 1976 - யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.
 
* 2004 - டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த "மேரி டொனால்ட்சன்" என்னும் பெண்ணை திருமணம் புரிந்தார்.
 
 
Link to comment
Share on other sites

`கருணை என்பது ஞானம்... எப்படி?’ - ஒரு நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory

கதை

`ருணையைவிடப் பெரிய, எந்த ஞானத்தை உங்களால் அடைந்துவிட முடியும்?’ - என்று கேள்வியெழுப்புகிறார் தத்துவமேதை ரூஸோ. கருணை என்பது ஞானம். அது தியானத்தாலோ, யோகத்தாலோ கிடைப்பதல்ல; அன்பு செய்வதால் கிடைப்பது; ஈ. எறும்பு உள்பட சக உயிர்களை நேசிக்கத் தெரிந்த மனப்பக்குவத்தால் கிடைப்பது; அழும் குழந்தையைத் தூக்க ஓடும் தாய்மை உள்ளம் வாய்க்கப் பெற்றவர்களுக்குக் கிடைப்பது. அப்படிப்பட்ட ஞானம் பெற்றவர்கள் உலகமெங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் அறியப்படாமல், புகழ் வெளிச்சம் கொஞ்சம்கூடத் தங்கள் மேல்பட விடாமல், ஏதோ ஒரு மூலையில் சத்தமில்லாமல், இந்தச் சமூகத்துக்குத் தங்களால் ஆன சேவையைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். அந்த அரிய மனிதர்களில் ஒருவரின் உண்மைக் கதை இது.

 

62 வயதைக் கடந்த அந்த முதியவரின் தோளில் ஓர் ஆறு வயதுக் குழந்தை கிடக்கிறது. மருத்துவமனையால் `இனி பிழைக்காது’ என்று கைவிரிக்கப்பட்ட குழந்தை அது. லட்சக்கணக்கானவர்களில் ஒருவரை பாதிக்கும் மிக மோசமான மூளை பாதிப்பு அந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருந்தது. அது, ஒவ்வொரு விநாடியையும் வலியோடு கடக்கவேண்டியிருந்தது. கைகளும் கால்களும் பக்கவாதம் தாக்கிச் செயலிழந்திருந்தன. முதியவர் முகமது பஸீக் (Mohamed Bzeek) குழந்தையைத் தட்டிக்கொடுக்கிறார்; ஆதுரமாக அதன் முதுகைத் தடவிக்கொடுக்கிறார்: கை, கால் விரல்களை அன்போடு வருடிக்கொடுக்கிறார். அவர் எதிர்பார்ப்பெல்லாம், `இந்தக் குழந்தை, வாழ்க்கையில் தான் தனியாக இல்லை என்று உணர வேண்டும். அவ்வளவுதான்.’

கருணை

`இந்தப் பிஞ்சுக் குழந்தையால பார்க்க முடியாது, கேட்க முடியாதுனு எனக்குத் தெரியும். ஆனாலும் விடாம இதோட பேசிக்கிட்டு இருக்கேன். இவளைத் தூக்கிவெச்சுக்குறேன், விளையாடுறேன், தொட்டுத் தொட்டுப் பேசுறேன். ஏன்னா, இவளுக்கும் உணர்வு இருக்கு; உயிர் இருக்கு. இவ ஒரு மனுஷி...’ என்று குறிப்பிட்டிருக்கிறார் முகமது பஸீக்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருக்கும் அஸுசா (Azusa) நகரில் வசிக்கிறார் இந்த முதியவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய முழுநேரத் தொழிலே மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட, மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்ட, இறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தைகளுக்குத் தன்னால் இயன்ற ஆதரவைக் கொடுப்பதுதான். லிபியாவிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தவர் பஸீக். அங்கே டான் (Dawn) என்ற பெண்ணைச் சந்தித்தார். திருமணமும் செய்துகொண்டார். 80-களின் தொடக்கத்தில் டான் சில குழந்தைகளுக்கு வளர்ப்புத் தாயாக இருந்தார். ஒரு கட்டத்தில் இருவருமே உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது என்று முடிவு செய்துகொண்டார்கள்.

கலிஃபோர்னியாவிலிருக்கும் ஏதோ ஒரு மருத்துவமனை. யாரோ ஒருவர் போனில் அழைக்கிறார்... `இங்கே ஒரு குழந்தைக்கு மிக மோசமான நோய். அதைப் பார்த்துக்குறதுக்கு ஹோம் ஏதாவது இருக்கா?’ என்று கேட்டால், அவர்களின் நினைவுக்கு வருவது முகமது பஸீக்கின் முகம்தான். மேலை நாடுகளில் குழந்தையை வளர்க்க வளர்ப்புப் பெற்றோர் (Foster Parents) இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் பஸீக்கும் டானும் வகுப்புகள் எடுத்தார்கள். உடல்நலமில்லாத குழந்தையை எப்படிக் கையாள்வது, குழந்தை மரணமடைந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். டான், கலிஃபோர்னியா மாகாணத்தில் `வளர்ப்புப் பெற்றோர்களில் மிக முக்கியமானவர்’ என்கிற பெயரெடுத்தார்.

1991-ம் ஆண்டில் அவர்கள் வளர்த்த ஒரு குழந்தையைப் பறிகொடுத்தார்கள். அப்போதுதான், `இனி மிக அபாயகரமான நிலையிலிருக்கும் குழந்தைகளை மட்டும் அரவணைத்துக்கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆனால், அந்த வேலை அத்தனை சுலபமாக இல்லை. பெற்றோர்களே `இந்தக் குழந்தை நமக்கு வேண்டாம்’, `நம்மால் இந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ளவே முடியாது’ எனப் புறக்கணிக்கிற குழந்தைகளிடம் வாஞ்சையோடு, பாசத்தைக் கொட்டிச் சீராட்டுவது சாதாரண காரியமில்லை. ஆனால், வருடம் முழுக்க முகமது பஸீக்கின் வீட்டின் கதவு குழந்தைகளுக்காகத் திறந்தே கிடந்தது.

பரிதவிப்பு

பஸீக் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்... `உங்களை நீங்க எவ்வளவு நேசிக்கிறீங்களோ, அந்த அளவு நேசத்தைக் குழந்தைகிட்ட காட்டணும். அந்தக் குழந்தைகளெல்லாம் கடுமையான நோயால பாதிக்கப்பட்டிருக்காங்கனு எனக்குத் தெரியும். அவங்க சீக்கிரமே இறக்கப் போறாங்கங்கிறதும் தெரியும். ஒரு மனிதப் பிறவியா என்னால என்ன முடியுதோ அதைச் செய்றேன், மற்றதை கடவுள்கிட்ட விட்டுர்றேன்...’

முகமது பஸீக்குக்கும் அவர் மனைவி டானுக்கும் ஆடம் (Adam) என்கிற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குப் பிறவியிலேயே எலும்பில் ஒருவிதமான நோய். `ட்வார்ஃபிஸம்’ (Dwarfism) என்றார்கள்; கூடவே வளர்ச்சிக் குறைவும் இருந்தது. எளிதில் உடைந்து போகும் அளவுக்கு பலவீனமாக இருந்தன குழந்தையின் எலும்புகள். எந்த அளவுக்கு என்றால், டயாப்பரை மாற்றினால்கூட எலும்பு முறிந்துவிடும் அளவுக்கு பலவீனம். ஆடமை, அவனின் பலவீனங்களோடு அப்படியே ஏற்றுக்கொண்டார் பஸீக்.

2015-ம் ஆண்டு, டான் உடல்நலக் குறைவால் இறந்து போனார். டானின் இறப்பு பஸீக்கைக் கொஞ்சம் கலங்கவைத்தாலும், அவருடைய சேவையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அதோடு தன் மகன் ஆடமையும் அவரே பார்த்துக்கொண்டார். ஓர் ஆண்டுக்கு மிக மோசமான உடல்நிலையோடு குறைந்தது 12 குழந்தைகளாவது பஸீக்கிடம் வருகிறார்கள். அவரும் கனிவோடு, தன் இரு கைகளையும் நீட்டி அவர்களை அரவணைத்துக்கொண்டே இருக்கிறார். இவரின் கதை பத்திரிகைகளில் செய்தியாக வந்த பிறகு, இணையதளத்தில் இவருக்கு உதவுவதற்கென ` GoFundMe’ என்ற பக்கம் உருவாக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் வரை அவருக்கு நன்கொடையாக வந்து சேர்ந்த தொகை 5 லட்சம் டாலர்!

முகமது பஸீக்கிடம் பலரும் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. `நீங்க ஏன் இந்த வேலையைச் செய்யணும்?’ அவரிடம் அதற்கு எளிமையான பதில் இருந்தது. `இந்தக் குழந்தைங்க பார்க்கவோ, பேசவோ, மற்றவர்களோட தொடர்புகொள்ளவோ முடியாத நிலையில இருந்தாலும், இவர்களுக்கு உயிர் இருக்கு. இவங்களுக்கு யாரோ ஒருத்தரோட அன்பு தேவைப்படுது. நான் அவங்ககிட்ட, `உங்களுக்கு ஓ.கேன்னா உங்களுக்காக நான் இருக்கேன்’னு சொல்றேன். அவங்க சரின்னு சொல்றாங்க. நாங்க சேர்ந்து வாழுறோம்.’

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

12 hours ago, நவீனன் said:

'சூரியன் - சந்திரன்' - பிபிசி நேயர்களின் புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சிவஞானம் ஜீவகுமரன், இலங்கை

 

சிவஞானம் ஜீவகுமரன், இலங்கை

 

 

https://www.bbc.com

வாழ்த்துகள் ஜீவன் சிவா,

BBC தமிழ் போட்டியில் உங்கள் படமும் தெரிவாகி உள்ளதில் சந்தோசம்.

பண்ணை கடற்கரையா இந்த இடம்?

Link to comment
Share on other sites

25 minutes ago, நவீனன் said:

வாழ்த்துகள் ஜீவன் சிவா,

BBC தமிழ் போட்டியில் உங்கள் படமும் தெரிவாகி உள்ளதில் சந்தோசம்.

பண்ணை கடற்கரையா இந்த இடம்?

நன்றிகள்

இடம் - பண்ணைப் பாலத்திலிருந்து ஒரு பார்வை / யாழ்ப்பாணம், இலங்கை
 
பெயர் - சிவஞானம் ஜீவகுமாரன் 
 
Camara : Canon EOS 70D    
ISO : 100   
Shutterspeed :n 1/320 sec    
Apperture : F6,3   
Focal length : 200.0 mm    
Lens : Canon EF-S 55-250mm f/4-5.6 IS STM
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

நன்றிகள்

இடம் - பண்ணைப் பாலத்திலிருந்து ஒரு பார்வை / யாழ்ப்பாணம், இலங்கை
 
பெயர் - சிவஞானம் ஜீவகுமாரன் 
 
Camara : Canon EOS 70D    
ISO : 100   
Shutterspeed :n 1/320 sec    
Apperture : F6,3   
Focal length : 200.0 mm    
Lens : Canon EF-S 55-250mm f/4-5.6 IS STM

வாழ்த்துக்கள் ஜீவன் சந்தோசமாய் இருக்கிறது.....!   ?

பகிர்வுக்கு நன்றி நவீனன் .... சான்ரைஸ் ஹைதராபாத் அஸ்தமித்தால் அதில் உங்களுக்கும் பங்குண்டு.சிம்பாலிக்காய் சொல்வதினால்...!  ?

Link to comment
Share on other sites

அட... நம்ம மார்க்கும் ஃபேஸ்புக்லதான் லவ் பண்ணிருக்காரு! #HBDMarkZuckerberg

 
 

மோடியால் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆள முடியும்; ட்ரம்ப்பால் அமெரிக்கா போன்ற மிகப்பெரிய வல்லரசை ஆள முடியும்; ஆனால், அரசியல்வாதி அல்லாத ஒருவரால் உலகத்தையே ஆள முடியும் என்றால் நம்ப முடிகிறதா? முடியும் என்பதுதான் நிதர்சனம். மார்க் சக்கர்பெர்க் எனும் 34 வயது இளைஞன்தான், இன்று 220 கோடி மக்கள் வாழும் ஃபேஸ்புக் எனும் உலகின் முடிசூடா மன்னன். எல்லைகளைக் கடந்து இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே செல்கிறது மார்க்கின் விர்ச்சுவல் சாம்ராஜ்யம்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரிக்குள் மற்ற மாணவர்களுடன் தொடர்புகொள்ள மார்க் ஆரம்பிக்க நினைத்ததுதான் ஃபேஸ்புக்.  ஆனால், அது ஒரு முழுக்க முழுக்க கல்லூரி அரட்டைகளுக்கானதாகதான் மார்க்கின் மனதில் இருந்தது. ஆனால், அப்போது சீனியர்கள் சிலருக்கு மார்க்தான் கோடிங் குரு. சீனியர்களின் ஐடியாவில் மார்க்கின் ஃபேஸ்புக் கோடிங் சேர்ந்துதான் அது பெரிய சமூக வலைதளமாக உருவானது. மார்க் சீனியர்களை ஏமாற்றிவிட்டார் என்பது எப்போதும் மார்க்கை சுற்றும் ஹார்வர்டு சர்ச்சை. ஆனால், அதையெல்லாம் சட்டரீதியாக உடைத்துதான் மார்க் ஃபேஸ்புக்கை ஆரம்பித்தார்.

 

மார்க் சக்கரபெர்க்

ஃபேஸ்புக் ஆரம்பிக்கும்போது, அது வெறும் நண்பர்களை இணைக்கும் தளம்தான். ஆனால், இன்று உலகையே ஒற்றைக் குடையின்கீழ் இணைக்கும் தளம். மார்க் சக்கர்பெர்க் வெறும் சமூக வலைதளம் மூலம் மக்களை இணைக்கவில்லை. மக்களின் சமூகத்தையும், உலகின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறார். பூகம்பமோ, இயற்கை சீற்றமோ, கலவரமோ மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதையும் இன்று மார்க் சொன்னால் சரியாக இருக்கும் என்று கூற வைத்திருக்கிறார்.

சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மார்க் சக்கர்பெர்க்குக்கு பட்டம் வழங்கியது அதில் பேசிய மார்க். ''நான் உங்களுடன் இன்று இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் செய்த சிலவற்றை என்னால் செய்ய முடியவில்லை. இன்று இந்த உரையை நான் வெற்றிகரமாக முடித்தால் ஹார்வர்டில் நான் ஒரு விஷயத்தை ஒழுங்காக முடித்திருக்கிறேன் என்று சொல்லலாம். நான் கேலி இணையதளமான ஃபேஸ்மேஷை ஹார்வர்டில் தான் வடிவமைத்தேன். பல்கலைக்கழக நிர்வாகம் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியது. நான் வெளியேற்றப்படுவேன் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். அந்த சமயம், என் நண்பர்கள் என்னை பார்ட்டிக்கு அழைக்கிறார்கள். அது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்; அந்த பார்ட்டியில்தான் பிரிசில்லாவை சந்தித்தேன். முதலில் பாத்ரூமுக்குச் செல்லும் வரிசையில் பிரிசில்லாவைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் கூறியது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. மூன்று நாள்களில் என்னை கல்லூரியைவிட்டு அனுப்பிவிடுவார்கள். நாம் உடனடியாக டேட்டிங் செல்வோம் என்று கூறினேன். இப்போது யார் வேண்டுமானாலும் இங்கு அந்த வரிகளைப் பயன்படுத்தலாம். ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கெல்லாம்? ஃபேஸ்மேஷ்தான் ஃபேஸ்புக் சாம்ராஜ்யம் உருவாகக் காரணம். ஃபேஸ்மேஷ் இல்லாமல் பிரிசில்லாவை கண்டுபிடித்திருக்க மாட்டேன். பிரிசில்லா என் வாழ்வில் மிகவும் முக்கியமானவள். இங்கு என் நாள்களை கட்டமைத்ததில் அவளது பங்கு அதிகம்'' என்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். தன் சாதனைகள் அத்தனைக்கும் காதலையே காரணமாகவும் சொன்னார்.

மார்க் சக்கர்பெர்க்

ஒரு பக்கம் இப்படி எமோஷனாலாக இருந்தாலும். இன்னோரு பக்கம் மார்க் கோபக்காரர். 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை என்றதும், "என்னங்க சார் உங்க சட்டம்?"னு ட்ரம்பை நேரடியாகத் தாக்கினார். சிரியாவில் அமெரிக்கா ஆயுதத் தாக்குதல் நடத்தியபோது, "இன்றுதான் முதல் உலகப்போர் துவங்கியது" என நினைவுகூர்ந்து இனி போரில்லா உலகம் படைப்போம் என்றும் ட்ரம்பை விளாசினார். ஒரு கட்டத்தில் ட்ரம்ப் கோபத்தின் உச்சத்துக்கே சென்று ஆன்டி - ட்ரம்ப் மனநிலையில் இருந்து மாறுங்கள் என்று மார்க்கை தாக்கினார்.

வருடாவருடம் இவர் எடுக்கும் நியூ இயர் ரெசல்யூசன் எல்லாம் மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக்கியுள்ளன. 2015-ல் கல்விக்கு `இயர் ஆஃப் புக்ஸ்'  என்றால், 2016-ல் ஆரோக்கியத்துக்கு `இயர் ஆஃப் ரன்னிங்'கை கையில் எடுத்தார் மார்க். 

`ஒரு வருடத்தில் 365 மைல் ஓடுவேன்' எனச் சபதம் எடுத்து ஓடி முடித்தார். அவர் ஓடியது வெறும் அமெரிக்க வீதிகளில் மட்டும் அல்ல, உலகம் எங்கும் ஓடினார். இந்தியா, சீனா, ஐரோப்பா, ஜப்பான் எனத் தொழில்நுட்பரீதியாக வளர்ந்த நாடுகளில் மார்க் கால்கள் பதிந்தன. சிரியா போன்ற மக்கள் ஆதரவின்றித் தவிக்கும் நாடுகளிலும் ஓடினார். இது அமெரிக்கர்கள் மத்தியில் மார்க்கின் பிம்பத்தை ஓர் அக்கறையான நல்ல இளைஞனாகப் பதிவுசெய்தது. 2017-ல் அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கும் சென்று மக்கள் குறை கேட்பேன் என்றார். ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் மார்க் பயணம் செய்து மக்கள் பிரச்னைகளைப் பேசினார். கிட்டத்தட்ட அமெரிக்காவின் அறிவிக்கப்படாத அதிபராகவே செயல்பட்டார்.

மார்க்

இத்தனை ஆண்டுகளும் வசந்தம் வந்துவீசிய மார்க்கின் வாழ்க்கை மீது யார் கண் பட்டதோ... தெரியவில்லை. இந்த ஆண்டு அடுக்கடுக்கான பிரச்னைகளைச் சந்தித்தது ஃபேஸ்புக். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை, அமெரிக்க தேர்தலுக்காகப் பயன்படுத்தியது வெளியே தெரியவே உலகெங்கும் உருண்டது மார்க்கின் தலை. அரசியல் சார்ந்த பிரச்னை என்பதால், மார்க்கே நேரில் சென்று விளக்கமளிக்க வேண்டிய அளவுக்கு விஷயம் சீரியஸானது. அமெரிக்க செனட் சபை சரமாரி கேள்விகளால் மார்க்கை துளைத்தெடுத்தது. அதில் ஒரு கேள்வி மார்க்கின் சாம்ராஜ்ஜியத்தை லேசாக ஆட்டம் காணவைத்தது. 

நேற்று இரவு உங்கள் மெசஞ்சரில் உங்கள் நண்பரிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்பதை கூற முடியுமா என்று செனட் சபை கேட்டது.

இல்லை... என்று சிரித்துக்கொண்டே பதில் தந்தார் மார்க்.

"நீங்கள் பாதுகாக்கும் ப்ரைவஸியை ஃபேஸ்புக் பயன்பட்டாளர்களுக்கு நீங்கள் தரவில்லையே? உங்கள் வர்த்தகத்துக்காக அவர்கள் ப்ரைவஸியை விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறீர்களே?" என்றனர்.

எல்லா கேள்விகளும் இப்படியே செல்ல கொஞ்சம் ஆடிப்போனார் மார்க்.

மகளுக்கு பிறந்தாள் கடிதம் எழுதுகிறார். அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார். உணர்வுகளைப் பிரதிபலிக்க வைக்கிறார். ஆனால், இது எல்லாவற்றிலும் வர்த்தகம் பார்க்கிறார் மார்க் என்பது தற்போதுள்ள சூழல். மக்களின் டேட்டா, அவர்களின் பிரைவசி எல்லாவற்றையும் காசாக்குவதுதான் ஃபேஸ்புக்கின் பிசினஸ் மாடல் என்றால், அறம் என்ற ஒன்றுக்கே அங்கே இடம் கிடையாதா என்பதுதான், உலகின் ஒட்டுமொத்த ஃபேஸ்புக் பயனாளர்களின் கேள்வி. பிரச்னைகள் எல்லாம் கூடிய விரைவில் சரியாகிவிடும் எனச் சொல்லியிருக்கிறார் மார்க். இது பிரச்னையை சரிசெய்யும் வழியா அல்லது பிரச்னையை மறைக்கும் வழியா என்பதுதான் நம் முன்னாள் இருக்கும் கேள்வி. விடை மார்க்கிற்கு மட்டுமே தெரியும்.

மார்க் சக்கர்பெர்க் என்ற நபர் ஃபேஸ்புக் என்ற ஒன்றை உருவாக்காவிட்டால் சிரியாவின் அய்லான் பெட்டிசெய்தியாகவே முடிந்திருக்கலாம். ஜல்லிக்கட்டுப் போராட்டம் இவ்வளவு வீரியம் பெற்றிருக்காது. நெடுவாசலும், நியூட்ரினோவும் அந்தந்தப் பகுதி மக்களின் போராட்டங்களாகவே முடிந்திருக்கலாம்; இந்த நல்ல விஷயங்களுக்கெல்லாம் ஓர் ஊடகத்தை உருவாக்கியதற்காக மார்க்கை  நிச்சயம் பாராட்டலாம்; அப்படியே, இன்று ஹேப்பி பர்த்டேவும் சொல்லலாம். ஃபேஸ்புக் பயனாளர்களின் பிரச்னைகளை எல்லாம் அடுத்த வருடத்திற்குள் முழுமையாகச் சரிசெய்துவிட்டால், மார்க்கிற்கு லைக் என்ன...? லவ்வே போடலாம்! #HBDMarkZuckerberg

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

க்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி... சம்மருக்கேற்ற உடைகள்! #Fashion

 
 

தீப்திடித்துக் கொளுத்தும் வெயில் ஒருபுறம், அதற்கேற்ற ஃபேஷன் உடைகள் மறுபுறம் என இந்த சம்மர் வழக்கம்போல வெளுத்து வாங்குகிறது. அவை என்ன என்கிற செய்தியோடு நம்மிடம் பேசினார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட், தீப்தி.

''பொதுவாக, பெண்கள் எப்போதும் வழக்கமான ஒரு டிரஸ்ஸிங் ஸ்டைலையே ஃபாலோ செய்துகொண்டு இருப்பார்கள். அது அவர்களுக்கு வசதியான ஆடையாக இருக்கலாம். அதையே சம்மரிலும் அணிய முடியாது என்பதுதான் நிதர்சனம். கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாகச் சுரக்கும். சரும நோய்களுக்கான காலமும்கூட. இந்த நேரத்தில் இறுக்கமான காட்டன் சல்வார் அணியும்பட்சத்தில், சரும பாதிப்புகள் அதிகமாகும். மேலும், ஒரே மாதிரியான ஆடை அணிபவர்கள் மாற்றம் செய்ய விரும்பினால், அதுக்கு சம்மர்தான் சரியான நேரம். ஒவ்வொரு வருடமும் சம்மரில்  ஒரு புது ட்ரெண்ட் வந்திறங்கும். இந்த வருடம்  மேக்ஸி முதல் க்ளாட்ஸ் வரை நிறைய ஆடைகள் ட்ரெண்டாக வந்திருக்கின்றன.

 

 

 

க்ளாட்ஸ்: culottes

க்ளாட்ஸ்

சில ஆண்டுகளுக்கு சம்மரில் ட்ரெண்டாக இருந்த க்ளாட்ஸ், தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளது. பார்க்க த்ரீ ஃபோர்த் பேன்ட் போலிருக்கும். அலுவலகத்துக்கு க்ளாட்ஸ் பேன்ட் அணிந்துசெல்ல விரும்புகிறவர்கள், காட்டன் ஷர்ட்டை அணியலாம். பார்ட்டி, டிராவல் செய்ய விரும்புகிறவர்கள், க்ராப் டாப்பின் மேல் லாங் ஓவர் கோட் அணிந்துசெல்லலாம். இந்த டைப் ஆடைகளுக்கு அணிகலன்கள் அவசியமில்லை. அதேநேரம், ஹைஹீல்ஸ், கட் ஷூ போன்ற பொருத்தமான காலணிகள் அவசியம். 

லாங்  ஸ்கர்ட்ஸ்:

லாங் ஸ்கர்ட்ஸ்

லாங் எத்னிக் காட்டன் ஸ்கர்ட் சம்மருக்கு ஏற்ற ஸ்டைலான லுக்கை கொடுக்கும். லாங் காட்டன் குர்தி அணிவது, அலுவலகத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்.  ஃபார்ட்டிக்குச் சென்றால், கிராப் டாப், ஸ்லீவ்லெஸ் டாப், ஹை காலர் நெக் ஷர்ட் என அவரவரின் உடல்வாக்குக்கு ஏற்ப தேர்வுசெய்து அணியலாம். இதற்கு, லாங் நெக் அக்சசரீஸ் பொருத்தமாக இருக்கும். ஹீல்ஸ் பெஸ்ட் சாய்ஸ். 

மேக்ஸி:

9130dd70-c899-44dd-9ae0-ea23fd74f136_163

நயன்தாரா முதல் தீபிகா படுகோன் வரை செலிபிரட்டிகளின் சம்மர் சாய்ஸ், மேக்ஸி. பார்க்க லாங் கவுன் போலிருக்கும் இந்த ஆடை, எல்லா இடத்துக்கும் பொருந்தி போகும். இக்கட் மற்றும் பிரின்டட்  லைட் கலர் மேக்ஸி, சம்மரிலும் உங்களை கூலாக  காட்டும்.

பலாசோ: Palazzo

பலாசோ

அநேக கல்லூரி பெண்களின் சாய்ஸ், பலாசோதான். ட்யூனிக் டாப்ஸ், ஷார்ட் குர்தி, சல்வார் டாப்ஸ் இதற்கு மேட்ச்சாக இருக்கும். இதற்கு ட்ரெண்ட்லியான நெக்பீஸ், ஹேண்ட்பீஸ்கள் அணிந்துகொண்டால், ஸ்மார்ட் லுக் கிடைக்கும்.

குர்தி - லெங்கிங்ஸ்:

உடைகள் - குர்தி லிங்கிங்ஸ்

எல்லா வயதினருக்கும் குர்தி, லெக்கின்ஸ் பொருத்தமாக இருக்கும். லைட் கலர்ஸ் குர்தி அதற்கு கான்ட்ராஸ்ட் லெக்கின்ஸ், ஹை போனிடெய்ல், சிம்பிள் இயர் ரிங், லாங் ஆக்ஸிடைஸ்டு நெக்பீஸ், திக் வார் வாட்ச் அணிந்தால் நீட் லுக் கிடைக்கும்

பொதுவாக, கோடைக்காலத்தில் வெளிர் நிற காட்டன் ஆடைகளைத் தேர்வுசெய்து அணிவது நல்லது. ப்ளோரல் டிசைன் ஆடைகள், நீட் லுக் கொடுக்கும். க்ளிட்டர் ஜமிக்கி வைத்த ஆடைகளைத் தவிர்த்துவிடுங்கள். ஸ்லீவ் லெஸ் போட விரும்பாதவர்கள், ஸ்ரக் வாங்கிப் பயன்படுத்தலாம். புதுவிதமான ஆடைகளைத் தேர்வுசெய்து அணிந்து பாருங்கள். இனி நீங்களும் ட்ரெண்ட் செட்டர்களே.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.