Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 வருஷம் வாழ முடியுமாம்... விலை எவ்வளவு தெரியுமா?

2640_thumb.jpg
 
 

மனிதர்களுக்குச் சாகாவரம் மட்டும் சாத்தியமில்லாத ஒன்று என்பதை தெரிந்துகொண்டார்கள். எனவே அவர்களின் இலக்கை மாற்றிக்கொண்டார்கள். இறப்பைத் தடுக்கத்தானே முடியாது, தள்ளிப்போட முடியும் அல்லவா?

இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 வருஷம் வாழ முடியுமாம்... விலை எவ்வளவு தெரியுமா?
 

னிதனுக்கு ஆயுளை நீட்டிக்க வேண்டும் என்ற ஆசை பல காலமாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களின் முயற்சிகள் உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு சிலர் கடவுள் அந்தச் சக்தியை அளிப்பார் என்று நம்பினார்கள். சிலரோ இயற்கையான பொருள்களைக் கொண்டே ஆயுளை அதிகரிக்க முடியும் என நம்பினார்கள். இந்த ஆராய்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்து கொண்டிருக்கிறது. பலமுறை தோல்வி அடைந்தாலும் இந்த முயற்சி கைவிடப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மனிதனின் ஆயுளை நீட்டிக்க முடியுமா?

முதுமை

 

 

உண்மையில் ஆயுளை நீட்டிக்க வேண்டும் என்ற ஆசைக்கு முன்பாக இறப்பே இல்லாத நிலையை அடைய வேண்டும் என்பதுதான் மனிதனின் இலக்காக இருந்தது. ஆனால் காலம் அவர்களுக்கு ஓர் உண்மையை உணர்த்தியது. மனிதர்களுக்குச் சாகாவரம் மட்டும் சாத்தியமில்லாத ஒன்று என்பதை தெரிந்துகொண்டார்கள். எனவே அவர்களின் இலக்கை மாற்றிக்கொண்டார்கள். இறப்பைத் தடுக்கத்தானே முடியாது, தள்ளிப்போட முடியும் அல்லவா? அடுத்த கட்டமாக அதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கின. அதுவும் கடந்த நூற்றாண்டில் தொழில்நுட்பங்கள் மேம்பட்ட பிறகு இந்த ஆராய்ச்சிகள் இன்னும் வேகமெடுக்கத்தது. ஆராய்ச்சியாளர்கள் ஒரு மனிதனுக்கு எதன் காரணமாக முதுமை ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்யத் தொடங்கினார்கள். தற்பொழுது அதற்கான காரணத்தை ஓரளவிற்குச் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது குறித்து பிரபல இணையதளங்களில் வெளிவந்த செய்தி...

 

 

குறைந்த செலவில் முதுமையைத் தாமதப்படுத்தும் தொழில்நுட்பம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் சின்க்ளேர் (David Sinclair) என்பவரும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து முதுமையைத் தாமதப்படுத்தும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலமாக மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இவர்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறை பேராசிரியரான டேவிட் சின்க்ளேர் பல வருடங்களாக முதுமையைத் தள்ளிப்போடும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

முதுமை

இவர்கள் கண்டறிந்திருக்கும் தொழில்நுட்பம் NAD என்ற மூலக்கூற்றைச் சார்ந்து இயங்குகிறது. நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோட்டைட் (nicotinamide adenine dinucleotide) எனப்படும் இந்த மூலக்கூறு அனைத்து உயிரணுக்களிலும் பொதுவாக காணப்படுவது. உயிரணுக்களின் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடல் செயல்பாடு சரியாகப் பராமரிக்கவும் இது தேவைப்படுகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்வதிலும் NAD முக்கிய பங்கு வகிக்கிறது. இது பார்கின்ஸன் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் மூலமாக உயிரணுக்களின் கட்டமைப்பை மாற்றியமைக்க முடியும். எனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் பாகங்களைக் கூட செயல்பட வைக்க முடியும் என்கிறார்கள் இவர்கள்.

 

 

மாத்திரை

வைட்டமின் பி மூலக்கூறுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மாத்திரைகளையும் இந்த ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கியிருக்கிறார்கள். இது போன்று புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் போது அவை முதலில் விலங்குகளில் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அப்படி இந்த மாத்திரையை எலிகளிடம் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. மேலும் இதனால் எலிகளுக்கு வேறு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மருந்தை வரும் 2020-ம் ஆண்டில் முதல் மனிதர்களில் பரிசோதனை செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முதுமையின் காரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை ஓரளவிற்குச் சரி செய்ய முடியும் என்றும், அதிகபட்சம் ஐந்து வருடங்களுக்குள்ளாகவே இந்த மருந்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விடலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கான செலவு என்பது ஒரு நாளைக்கு ஒருவர் காபி குடிக்கும் அளவே இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்பொழுது NAD தொடர்பான மருந்துகள் வெளியில் கிடைக்கின்றன. ஆனால் இது தொடர்பான ஆய்வுகள் முழுமையாக நிரூபிக்கப்படும் வரையில் அவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் டேவிட் சின்க்ளேர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமான ஒன்றா?

முதுமை

எலிகளுக்குப் பரவாயில்லை மனிதர்களில் இந்தத் தொழில்நுட்பம் எந்த அளவிற்குச் சாத்தியப்படும், பக்கவிளைவுகள் எதுவும் இருக்குமா என்று கேள்வி கேட்பவர்களுக்கு அவரையும், அவர் குடும்பத்தினரையும் பதிலாகக் காட்டுகிறார் டேவிட் சின்க்ளேர். அவர்கள் அனைவருமே இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தி பார்த்திருக்கிறார்கள். 1969-ம் ஆண்டில் பிறந்த டேவிட் சின்க்ளேரின் வயது தற்பொழுது 49. இன்னும் ஒரு வருடத்தில் அரை சதத்தை எட்டி விடுவார். ஆனால் அவரைப் பார்த்தால் அவ்வளவு வயதானவர் போலத் தெரியவில்லை. 79 வயதான அவரது தந்தை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளத் துவங்கினார். அவர் தற்பொழுது சாகச விளையாட்டுகளில் ஈடுபடுகிறார் என்றும் கூறுகிறார். 40 வயதைக் கடந்து விட்ட அவரது மனைவியின் சகோதரி மெனோபாஸ் கட்டத்தை எட்டிய பிறகும் கூட இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டதால் தற்பொழுது கருவுறும் தன்மையைப் பெற்றிருப்பதாக கூறி பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் டேவிட் சின்க்ளேர்.

ஒரு வேளை டேவிட் சின்க்ளேர் கூறியபடி ஐந்தே வருடங்களில் இதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடும். ஆனால் இதை மக்கள் பயன்படுத்தத் துவங்கும் போது அது சமூகத்தில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை இப்பொழுதே கணிக்க முடியாது. இயற்கையின் கட்டமைப்பை மாற்ற முயல்வதால் நன்மைகள் அதிகமாக இருந்தாலும் கூட சில தீமைகளும் இருக்கத்தான் செய்யும்.

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

வலைபாயுதே

 

 

twitter.com/amuduarattai

ஆஸ்பத்திரி போனமா, ஆப்பிள் பழத்தைக் கொடுத்தமா, ஆறுதல் சொன்னமான்னு இருக்கணுமே தவிர, நோய்கள் பற்றிய நம் ஆராய்ச்சி முடிவுகளை நோயாளியிடம் சமர்ப்பிக்கக் கூடாது. 

p112a_1536139066.jpg

twitter.com/sundartsp

கிருஷ்ணர் பர்த்டேக்கு குழந்தைகளுக்கு வேஷம் கட்டி மகிழ்ச்சி அடையுறாங்க, விநாயகரை அவர் பர்த்டேக்கு கடல்ல தூக்கிப்போடுறாங்க,  குண்டா  இருந்தா உலகம் கடவுள்னுகூட பாக்குறதில்லை.

twitter.com/HAJAMYDEENNKS

தூங்காம படின்னு பிள்ளைகளிடம் சொன்ன பெற்றோர்கள் இப்ப மொபைலைப் பார்க்காம தூங்குன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க...!

twitter.com/Kozhiyaar

நம் ஊர்லதான்யா, அரசியல்வாதியெலாம் ஆன்மிகம் பேசிட்டிருக்காங்க... சாமியாரெலாம் அரசியல் பண்ணிட்டிருக்காங்க!

twitter.com/yugarajesh2

இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் எச்.ராஜா - விசு# நீங்களே உங்களுக்குள்ள கலாய்ச்சுக் கிட்டா அப்புறம் நாங்க எல்லாம் எதுக்கு..?

facebook.com/elambarithi.k

என்னதான் வீரம், வேதாளம், விவேகம்னு படமெடுத்து ஃபேமஸ் ஆனாலும் உலகம் ‘சிறுத்தை சிவா’ன்னுதான் சொல்லும். அதான் வாழ்க்கை.

facebook.com/karthikeyan.maddy

சாம்பார் பாக்கெட்டின் பின் முனையைக் கடித்து பிய்த்து.. தோசையில் பீய்ச்சி அடித்துக் கொண்டே... ‘தம்பி, பொறுமைங்கிறது... என்று ஆரம்பித்தார் அந்த போதகர்.

facebook.com/iam.suriyaraj

அந்தக் காலத்துல நார்லதானே மாலை கட்டினாங்க. அப்போ அதுக்குப் பெயர் `பூநார்’ன்னு தானே வந்திருக்கணும்..!

twitter.com/Kozhiyaar

கிக் ஸ்டார்ட் பைக்கிலிருந்து செல்ஃப் ஸ்டார்ட் ஸ்கூட்டருக்கு மாறுவது, வயது ஏறுவதற்கான குறியீடுகளில் ஒன்று!

p112b_1536139105.jpg

twitter.com/motheenfarooq

தொலைநோக்குப் பார்வை என்பது தூரத்தில் ட்ராஃபிக் போலீஸ் பிடிப்பதை அறிந்து யூ டர்ன் எடுத்து மாற்றுப் பாதையில் செல்வதே.

twitter.com/chithradevi_91

டீச்சர்களைப் பொறுத்தவரை நல்ல மாணவன் என்பவன் பி.டி பீரியடிலும் புத்தகத்தோடு திரிபவன்.

twitter.com/thoatta

Psychiatrist நம்மகிட்ட கறக்கிறதைவிட சலூன்காரர் அதிகம் விஷயம் கறந்துடுறாரு.

twitter.com/Kozhiyaar

என்னதான் ரியர்வ்யூ கண்ணாடி யில் பார்த்து விட்டாலும், நம்ம தலையைத் திருப்பி நேர்ல பார்த்துகிட்டா தான் யாரும் இல்லைனு நம்புது மூளை!

twitter.com/shivaas_twitz

உடம்பைக் குறைக்க முடிவெடுக்கும் யாரும்,‘டயட்’டை ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதில்லை..!

twitter.com/smhrkalifa

p112d_1536139324.jpg

நண்பன் திட்டும்போது சந்தோஷமாகவும், அதே நண்பன் நம்மைப் புகழும்போது பயமாகவும் இருக்கிறது.

twitter.com/Thaadikkaran

கோபமா இருக்குற அப்பாவைக்கூட நம்பிடலாம். எப்படியும் அடிப்பார்னு தெரியும். ஆனா அடிக்க மாட்டேன்னு சொல்ற அம்மா இருக்காங்களே, வெரி டேஞ்சுரஸ்..!

 facebook.com/Karna Sakthi

ஏக்கர் கணக்கில் தோட்டங்களுடன் இருக்கும் பிரதமர் மாளிகையை மறுத்துவிட்டு எளிமையாக மூன்று அறை கொண்ட ஒரு அபார்ட்மென்ட் ப்ளாட் மட்டும் போதும் என்றிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். இங்கே ஒரு ஏழைத்தாயின் மகன் மொத்த அபார்ட்மென்டையும் வாங்குற விலையில் ஒரு கோட்சூட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு திரிகிறார்.

facebook.com/ஜெ.வி. பிரவீன்குமார்

சில உணவகங்கள் காலையில் பொங்கலையும் சாம்பாரையும் தனித்தனியாக வழங்குகிறார்கள். மதியம் ஆனபின்னர் அந்த சாம்பாரையும் பொங்கலையும் ஒன்றாக்கி சாம்பார் சாதம் எனும் பெயரில் வழங்குகிறார்கள்.

twitter.com/Kozhiyaar

ஏதாவது திட்டுறதுன்னா போன் கட் ஆகிடுச்சான்னு உறுதிப்படுத்திக்கொண்டு திட்டுங்கப்பா! மனசு வலிக்குதுய்யா!

twitter.com/Thaadikkaran

வீட்ல நடக்குற மாமியார் கொடுமையைவிட விஜய் டிவில நடக்குற மாமியார் கொடுமைதான் அதிகமா இருக்கு..!

சைபர் ஸ்பைடர்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

‘விதி வழி செல்வது எமது வழியல்ல’
 

image_c23a321e52.jpgபூமி நடுங்குமாம்; வானம் வெடித்துச் சிதறுமாம்; மலை உதிருமாம்; கடல், நிலத்தை மூடுமாம்; நிலமே அழிந்து தெரியாமல் போகுமாம். நல்லது போகட்டும். 

இந்தப் பூமியில் துஷ்டர்களின் கெடுபிடி நிறைந்த ஆக்கிரமிப்பில் இருந்து, விடுபடமுடியாது விடினும், தலைநிமிர்ந்து வாழ, நாம் பழகிவிட்டோம். நல்ல நிலை, நிலையாய் வரும் என்று காத்திருக்கும் நிஜ மனிதர் நாம். 

பேதத்துடன் பேசும் எச்சரிக்கைப் பேச்சுகளுக்கும், வாழ்விடத்தை அபகரிக்கும் நயவஞ்சகத்தனங்களுக்கும் அஞ்சாத நாங்கள், இந்தப் பூமிப் பிரளயத்துக்காகவா அஞ்சப்போகின்றோம்.

விதி வழி செல்வது எமது வழியல்ல; எங்களால் உருவாக்கப்பட்ட வழியே விதி. பொய்யர்களின் தளராத அழுத்தங்கள்தான் எமக்கு வழி சொல்கின்றன. 

எனினும், பூமி புரளாது; வானம் உடைபடாது; மலைகளும் உதிரப்போவதில்லை. விஞ்ஞானம் மிரட்டுகிறது; மெஞ்ஞானம் ஆறுதலூட்டுகின்றது. மக்கள் அனைவரும் பண்புடன் வாழ்ந்தால், நலமாய் வையகம் உயர்ந்து நிற்கும். கவலையை ஒழி; காரியம் நடக்கும்.

Link to comment
Share on other sites

இணைய உலா: சீனப் பெண்ணின் தமிழ் வணக்கம்!

 

 
chinajpg

“வணக்கம்  நேயர்களே! நான் உங்கள் நிலானி, நீங்க என்னோடு  சீனாவுக்கு ஃபேஸ்புக் வழியா வாங்க” எனச் சிரித்த முகத்துடன் பேசுகிறார் அந்தச் சீனத்து இளம் பெண். அவர் பதற்றம் இல்லாமல் ஃபேஸ்புக்கில் தமிழைப் பேசுவதைப் பார்க்க ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் உள்ளது. அழகான தமிழ்ப் பேச்சால் இணையத்தில் பிரபலமாகிவருகிறார் இந்த சீனப் பெண்.

சீனாவிலிருந்து ஒலிபரப்பாகும்  சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார் நிலானி என்றழைக்கப்படும் லி யுவான். அதுபோக அந்நாட்டின் சுற்றுலாத் தலங்கள், சமூக வாழ்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஃபேஸ்புக் மூலம் நேரலை செய்து ஆச்சரியமான விஷயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் நேயர்களுக்குத் தமிழில் வழங்குகிறார். 

 

வைரலான முதல் வீடியோ

முதன் முதலாக அவர் நேரலை செய்தது உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைப் பற்றிதான். அதன் அரிய தகவல்களை நேரலையில் வெளியிட்டார் நிலானி. சீனப் பெருஞ்சுவர் பற்றிய தகவல்களைச் சரளமாகத் தமிழில் நிலானி பேசியது இணைய உலகின் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வீடியோ சில நாட்களிலேயே இணையத்தில் வைரலானது.

இந்தப் பெண்ணின் தமிழ்ப் பேச்சுக்கு ஏராளமான தமிழர்கள் பாராட்டுத் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக, மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து, ‘தன்னுடைய அழகான தமிழ்ப் பேச்சால் இந்தப் பெண் சீனப் பெருஞ்சுவரையே  வென்றுவிட்டார்” எனப் பதிவிட்டிருந்தார்.

ஆங்கிலக் கலப்பு கிடையாது

சீனப் பெருஞ்சுவர் மட்டுமல்லாமல், சீனாவில் புகழ்பெற்ற தாமரைக் குளம், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்  ஐஸ் ஸ்கேட்டிங் மைதானம் ஆகியவற்றையும் நிலானி பதிவுசெய்துள்ளார். தன்னுடைய நேரலையின்போது தமிழில் குறிப்பு எதையும் எழுதி வைத்துக்கொள்ளாமல் தான் காணும் காட்சிகளை இயல்பான பேச்சு வழக்கில் நிலானி பேசுவது தனிச் சிறப்பு.

அவருடைய ஒவ்வொரு நேரலையின்போதும் துளிகூட ஆங்கிலக் கலப்பின்றித் தமிழில் அத்தனை அழகாகப் பேசுகிறார். 2018-ம் ஆண்டைக் குறிப்பிடும்போது ‘ஈராயிரத்து பதினெட்டாம் ஆண்டு’ என்றும் விமானம் வழியாக அனுப்பும் தபாலை ‘விண் அஞ்சல்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நிலானி கவனமாகவே உள்ளார்.  

நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவதுதான் அறிவு என இன்றைய தமிழ் இளைஞர்கள் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சீனப் பெண்ணான நிலானியின் தூய தமிழ்ப் பேச்சைத் தமிழ் இளைஞர்கள் பார்த்தால், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என நிச்சயம் நம்பலாம்.

https://tamil.thehindu.com

 

Link to comment
Share on other sites

21 டன் எடை, 33 அடி நீளம்... பிரமிப்பூட்டும் மடகாஸ்கரின் திமிங்கிலச் சுறாக்கள்!

 
 

மற்ற திமிங்கில இனங்களைப் போலவே இந்த இனமும் அழியும் நிலையில்தான் இருக்கிறது. மனித நடவடிக்கைகள், கடற்சூழலில் மோசமான விளைவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன.

21 டன் எடை, 33 அடி நீளம்... பிரமிப்பூட்டும் மடகாஸ்கரின் திமிங்கிலச் சுறாக்கள்!
 

ம்மைக் கவர்வதற்கு திமிங்கிலச் சுறாக்கள் (Whale sharks) தனியாக எதுவும் செய்யவேண்டியதில்லை. 21 டன் எடையுள்ள 40 அடிவரை வளரக்கூடிய உலகின் மிகப்பெரிய அந்த மீனை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அதன் அழகுக்கு அதுமட்டுமே நிகர். கடலடி நட்சத்திரத்தைப்போன்று மினுக்கும் முதுகுப்புறத்தைக் காட்டி சுற்றிக்கொண்டிருக்கும். அந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது வானைப்போல கடலிலும் ஒரு நட்சத்திரக் கூட்டம் உருவாகிவிட்ட மாயைத்தான் ஏற்படுத்தும். அதற்குத் தகுந்தவாறுதான் மரோகிண்டானா (Marokintana) என்று மடகாஸ்கர் மொழியிலும் அவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், நட்சத்திரங்கள் என்று பொருள். அந்தப் பொலிவுதான், அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்கு பலரையும் தூண்டியது. ஒளிப்பட அடையாளங்களைக் கொண்டு அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கும் முதுகிலிருக்கும் நட்சத்திர அமைப்புகளே துணைபுரிந்தன.

அழிவின் விளிம்பிலிருக்கும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி ஆய்வுசெய்த குழுவொன்று, மடகாஸ்கர் கடற்பகுதியில் ஓர் இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரின் தென்மேற்கில் அமைந்திருக்கும் நோஸி பி தீவு (Island of Nosy Be), நூற்றுக்கணக்கான இளம் திமிங்கிலச் சுறாக்களின் வாழ்விடமாக இருக்கிறது. அந்தப் பகுதியைச் சூழலியல் முக்கியத்துவம் மிக்க பகுதியாக அறிவிக்க வேண்டுமென்றும் அவர்கள் தங்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்கள்.

'அந்த இடத்தில்,  அவை இவ்வளவு இருக்குமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை' என்கிறார் ஆய்வறிக்கையின் முதன்மை ஆராய்ச்சியாளரான ஸ்டெல்லா டையமண்ட் (Stella Diamant). மடகாஸ்கர் திமிங்கிலச் சுறாக்கள் பாதுகாப்புத் திட்டத்தையும் இவர் தற்போது முன்னெடுத்துள்ளார்.

 

 

மற்ற திமிங்கில இனங்களைப் போலவே இந்த இனமும் அழியும் நிலையில்தான் இருக்கிறது. மனித நடவடிக்கைகள், கடற் சூழலில் மோசமான விளைவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன. படகுகளில் மோதுவது, விற்பனைக்குப் பிடிப்பது, ஆழ்கடலில் ஆக்சிஜன் குறைபாடு போன்றவை திமிங்கிலச் சுறாக்களின் இறப்புக்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. அதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திமிங்கிலங்கள் திணறி அழிந்துகொண்டிருக்கும் நிலையில், இவை உயிர்த்திருப்பது உண்மையில் ஆச்சர்யமான விஷயம்தான். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், இந்த உயிரினத்தை சிவப்புப் பட்டியலில் குறிப்பிடும் அளவுக்கு எண்ணிக்கையில் குறைந்துள்ளன. பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் இவற்றின் எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளில் 63 சதவிகிதம் குறைந்துவிட்டது. ஆனால், இந்தப் பகுதியில் இவை ஆரோக்கியமான எண்ணிக்கையில் இருக்கின்றன.

 

 

ஆழ்கடல்

2015 முதல் 2017-ம் ஆண்டின் இறுதி வரையிலும் நடத்திய ஆய்வு முடிவுகளை ஆராய்ந்த டையமண்டின் ஆராய்ச்சிக் குழு, தற்போது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அவர்கள் 2016-ம் ஆண்டில் மட்டும் 85 திமிங்கிலச் சுறாக்களைக் கண்காணித்துள்ளனர்.  மொத்தம் 240 சுறாக்களை அவர்கள் கண்காணித்துள்ளார்கள். இந்த வகைக் கடலினம் வாழும் ஆப்பிரிக்கக் கடல் பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில் கிடைத்ததைவிட இது அதிகம். இந்த 240 மீன்களுமே தனித்தனியாகக் கவனிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க யானையின் எடையில் மூன்று மடங்கு அதிக எடைகொண்டவை. ஒரு பள்ளிப் பேருந்து அளவுக்குப் பெரியதாக இருந்தாலும்கூட (பள்ளிப் பேருந்து குறைந்தது 36 அடி நீளமுடையது, ஓர் இளம் திமிங்கிலச் சுறா, 33 அடிவரை நீளமுள்ளது) இவை சீக்கிரத்தில் நம் கண்ணில் சிக்கிவிடாது. மிகவும் எச்சரிக்கையாக யாரிடமும் சிக்காமல் நழுவிவிடும். இத்தகைய மீன் இனத்தைச் சேர்ந்த 240 மீன்கள் மனிதர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்துள்ளது என்றால், அங்கு அதில்லாமல் மேலும் அதிகமான திமிங்கிலச் சுறாக்கள் இருக்க வேண்டும். அங்கு இன்னும் பல நூறுகளில் அவை இருக்கலாமென்று நம்பப்படுகிறது.

ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அவர்கள் பார்த்த அனைத்துமே இளம் பருவத்தைச் சேர்ந்தது. அதிலும், அதிகமான ஆண் திமிங்கிலச் சுறாக்களே காணப்பட்டன. மொத்த மீன்களில் பெண்பாலின் எண்ணிக்கை 18 சதவிகிதம் மட்டுமே காணப்பட்டது. இதைப்போல, ஆண் மீன்களைவிட அதிகமான எண்ணிக்கையில் பெண் மீன்கள் வாழும் இடங்களைக் கண்டுபிடித்தால், இந்த வித்தியாசத்தால் ஏற்படும் சிக்கலைச் சரிசெய்துவிடலாம். அதற்கான தேடலில்தான் தற்போது டையமண்ட் ஈடுபட்டுள்ளார்.

நோஸி பி தீவில் இந்தச் சுறாக்கள் எப்போதும் இருப்பதில்லை. இனப்பெருக்கத்துக்கு அவை வேறு இடத்துக்குச் சென்றுவிடுகின்றன. இடம்பெயர்ந்து செல்லும்போது கண்காணிக்க முயன்றபோது, ஆய்வுக்குழு தோற்றுவிட்டது. அவை இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளைக் கண்டுபிடித்துவிட்டால், அந்தப் பகுதியைப் பாதுகாப்பதன் மூலமாக இந்த மீன் இனத்தின் வருங்காலச் சந்ததிகளைப் பாதுகாக்க முடியலாம். அந்தத் தேடுதலிலும் ஈடுபட்டுள்ளார்கள். இங்குள்ள நீரில், பிளாங்டன் என்ற நுண்ணுயிரிகள் அதிகம் வாழ்வதும் இவை இங்கு அதிகமாக வாழ்வதற்குக் காரணமாக இருக்கலாம். அகலமான வாயையும் அதிகமான பற்களையும் கொண்ட இவற்றின் உணவுப் பழக்கத்தில் ஆச்சர்யப்படும் வகையில் சிற்றுயிர்களே முக்கியமானது. பெய்ட் மீன் (Bait fish) என்று சொல்லப்படும் மீன் வகைகளை இவை அதிகம் உண்ணுகின்றன (சிறு மீன் வகை). இவை, மிகப் பொறுமையாக நீந்தக்கூடியவைதாம். இருந்தாலும், அதன் அபரிமித வளர்ச்சிக்கும் அந்த உடலை இயக்குவதற்கும் அதீத உணவு தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்தைக் கொடுக்கும் பிளாங்டன்கள் இந்தத் தீவில் அதிகம் கிடைப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

 

 

துனின்னி (Thuninni) என்ற மீனவப் பழங்குடிகளின் அடையாளமாகப் பெயரிடப்பட்ட மீன்வகை, டூனா(Tuna). இவை வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க, திமிங்கிலச் சுறாக்களின் பின்னால் ஒளிந்துகொண்டு நீந்துகின்றன. டுனா மீன்கள் இருக்குமிடத்திலும் பல சமயங்களில் அவை காணப்பட்டுள்ளன. இந்த உறவுக்குள்ளிருக்கும் தொடர்பையும் காரணத்தையும் இதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. அதைப் புரிந்துகொண்டால், இந்தச் சுறாக்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட டுனா மீன்கள் உதவியாக இருக்கும். இந்த மாதிரியான ஆராய்ச்சிகள் அவற்றின் சூழலியல் பங்கைப் புரியவைப்பதோடு, அவற்றைப் பாதுகாக்க அறிவியல்ரீதியிலான புரிதலோடு செயல்படவும் நமக்கு வழிவகுக்கும்.

மடகாஸ்கரில் வாழும் திமிங்கிலச் சுறாக்களைப் பற்றிய ஆய்வு இதுவே முதல்முறை. ஆனால், 2000-ம் ஆண்டு முதலே இவை அப்பகுதியின் மீனவர்கள், சுற்றுலாத் துறையைச் சேர்ந்த படகு சவாரி நிறுவனங்கள் போன்றவற்றின் பார்வையில் சிக்கிவிட்டன. 2011-ம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் சூழலியல் சுற்றுலா அந்த மீன்களை மையப்படுத்தியே நடந்துவருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றைத் தொடுவதற்கு அனுமதியளிப்பது, அவற்றோடு நீந்துவது போன்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, சுற்றுலாத் துறையில் பெரும் வருமானம் ஈட்டியுள்ளனர். அவற்றோடு நீந்துவது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தானது. அவை செல்லும் ஆழங்களுக்கு நம்மால் செல்லமுடியாது. அதுபுரியாமல் செல்லும்போது மூச்சுத் திணறலில் சிக்கி மீண்டுவர முடியாமல் இறந்துவிடுவார்கள். விவரம் தெரியாதவர்கள்தான் இதைச் செய்கிறாகள் என்றுதான் முதலில் கூறப்பட்டது. கண்காணிப்பில் சீ டைவர்களும்(Sea Divers) நீச்சல் வீரர்களுமே அந்த மீன்களின் உடலிலிருக்கும் துடுப்புகளைப் பிடித்துக்கொண்டு ஆழத்துக்குச் செல்வதைப் பொழுதுபோக்காக நினைத்துச் செய்துவருவது தெரியவந்துள்ளது. 

திமிங்கிலச் சுறா

இந்தப் பூதாகரமான மீன்கள் மிகவும் மென்மையானவை. யாருக்கும் தீங்கிழைக்காது. அதைப் பயன்படுத்தி லாபநோக்கோடு செயல்படுகிறார்கள். கப்பல்களை அவற்றுக்கு வெகு அருகில் கொண்டுசெல்வது, சில சமயங்களில் அவற்றைத் தேடிப் போகும்போது நீருக்கடியில் நீந்தும் அவை கண்ணில் படாததால், அதன்மீதே மோதுவது என்று சுதந்திரமாக வாழவிடாமல் அவற்றுக்குப் பல சிக்கல்களை விளைவிக்கின்றனர். அதன்மீது அமர்ந்து சவாரி போகலாமென்றும் சமீப காலங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றது. இவையெல்லாம் திமிங்கிலச் சுறாக்களை மனத்தளவில் பாதிப்பதோடு, அவற்றின் நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது. இந்த மாதிரியான பழக்கங்களை நிறுத்த வேண்டுமென்று டையமண்டின் ஆய்வுக்குழு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அதோடு, அவர்களும் அங்குள்ள சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதோடு, கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

அவற்றைத் தொடக் கூடாது. படகை அருகில் கொண்டுசெல்லக் கூடாது. அவற்றிடமிருந்து 25 மீட்டர் தூரத்திலேயே நின்றுதான் பார்க்க வேண்டும் என்பதுபோன்ற விதிகளை வகுத்துள்ளார்கள். நீந்தும்போதும் சுறாக்களிடமிருந்து மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டுமென்றும் வகுத்துள்ளார்கள். மனிதன் மற்ற உயிரினங்களைத் தனக்கு அடிமைகளாகவும், தனது பொழுதுபோக்குப் பொருளாகவுமே பார்ப்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. அவை நமது தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்திசெய்து, நமக்கு சேவைசெய்யப் பிறக்கவில்லை. நம்மைவிட இந்த உலகத்தில் மற்ற உயிரினங்களின் இருப்பு எத்தனை முக்கியமானதென்ற தெளிவை மக்களிடம் கொண்டுசேர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதையே இது உணர்த்துகிறது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

யானை - மனித மோதலைத் தடுக்க பள்ளி மாணவிகளின் தீர்வு

கிராமங்களில் யானைகள் உலவுவதை எச்சரிக்கும் கருவியை மாணவர் குழு ஒன்று கண்டறிந்துள்ளது. இரும்பு தகடுகள் முரசுகள் அடித்து யானைகளை பயமுத்தி மக்கள் துரத்தி வருவதை இந்த புதிய கருவி முடிவுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கருவி எப்படி இயங்குகிறது என்பதை விளக்கும் காணொளி.

Link to comment
Share on other sites

‘ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா’ - அற்புத அனுபவம்

வனவிலங்கு புகைப்பட கலைஞர் க்ரெக் டு டொயட் ஆப்ரிக்காவின் காடுகளில் அலைந்து திரிந்து சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

எப்போதும் ஒளி பூசிய படங்களாகவே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு க்ரெக்கின் இந்த நிழலோவிய புகைப்படங்கள் புதுவிதமான அனுபவத்தை தருகின்றன.

தெற்கு மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்து பேசும் க்ரெக், "இயற்கையின் நம்பமுடியாத பன்முகதன்மையை விவரிக்க எடுக்கப்பட்டபுகைபடங்கள் இவை." என்கிறார்.

ஒளியை கையாண்டிருக்கும் விதம் மூலமாக வனவிலங்குகளின் வேறொரு தரிசனத்தை இவர் வழங்குகிறார்.

அந்த அற்புத புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM Presentational grey line 'ஆப்ரிக்க காட்டில் ஓர் உலா' - அற்புத அனுபவம்படத்தின் காப்புரிமைGREG DU TOIT/MEDIADRUMWORLD.COM

 

https://www.bbc.com/

Link to comment
Share on other sites

விண்மீன்களுக்கு நடுவே ஓர் எரிமலை: சிலி அற்புதம்

கடந்த வாரம் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்கள் மூலம் அறிவோம்.

'பிரேசில் சோகம்'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'பிரேசில் சோகம்'

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள பழமையான தேசிய அருங்காட்சியம் தீயில் நாசமாகியது. 1818ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், அறிவியல் ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதாகும்.அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள், பிரேசிலின் மிகப்பெரிய விண்கல், டைனாசரின் எலும்புக்கூடுகள், 12,000 வருடங்கள் பழமை வாய்ந்த 'லூசியா' என்ற பெண்ணின் எலும்புக்கூடு போன்றவை அங்கு இருந்தன

'பிரேசில் சோகம்'படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள், பிரேசிலின் மிகப்பெரிய விண்கல், டைனாசரின் எலும்புக்கூடுகள், 12,000 வருடங்கள் பழமை வாய்ந்த 'லூசியா' என்ற பெண்ணின் எலும்புக்கூடு போன்றவை அங்கு இருந்தனபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Presentational grey line

எல்.ஜி.பி.டி கொண்டாட்டம்

எல்.ஜி.பி.டி கொண்டாட்டம்படத்தின் காப்புரிமைABHISHEK N. CHINNAPPA/ REUTERS

இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 6) தீர்ப்பளித்தது. ஒருபாலின உறவை தண்டனைக்குரிய குற்றமல்ல என்றது அந்தத் தீர்ப்பு.

Presentational grey line

இரவில் எரிமலை

கடந்த வாரம் அதிகம் சர்வதேச அளவில் அதிகம் புகழப்பட்ட புகைப்படம் இரவில் எடுக்கபட்ட இந்த எரிமலை புகைப்படம்தான். சிலி புகான் நகரத்தில் உள்ளது இந்த எரிமலை.

இரவில் எரிமலைபடத்தின் காப்புரிமைCRISTOBAL SAAVEDRA ESCOBAR/ REUTERS Presentational grey line

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம்படத்தின் காப்புரிமைCARL COURT/GETTY IMAGES

ஜப்பானில் கடந்த வாரம் 6.7 அளவில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட சாலையில் நடந்துவரும் பெண்.

Presentational grey line

கொசாவா அலங்காரம்

கொசாவா அலங்காரம்படத்தின் காப்புரிமைARMEND NIMANI/AFP

திருமணத்திற்காக முகத்தில் வண்ணம் பூசும் கொசாவா பெண். கொசாவா வழக்கப்படி, திருமணத்தின் போது வாழ்வின் பல்வேறு படிநிலைகளை விளக்கும் ஓவியத்தை முகத்தில் வரைவார்கல். இந்த வழக்கமானது மெல்ல அழிந்து வருகிறது.

Presentational grey line Presentational grey line

ஓய்வில் மான்கள்

ஒய்வில் மான்கள்படத்தின் காப்புரிமைCLODAGH KILCOYNE/ REUTERS

ஐர்லாந்து டப்ளினில் உள்ள ஃபீனிக்ஸ் பூங்காவில் ஓய்வெடுக்கும் மான்கள்.

Presentational grey line

திறந்தன பள்ளிகள்

திறந்தன பள்ளிகள்படத்தின் காப்புரிமைJOHANNES EISELE/AFP

சீனா ஷாங்காய் மாகாணத்தில் விடுப்பு முடிந்து பள்ளி திரும்பிய குழந்தைகள் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

இயற்கையைத் தேடும் கண்கள் : ‘மணம்’ விரும்புதே உன்னை…

 

 
iyarkaijpg

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள்… இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் இயற்கைச் சொத்துகளில் ஒன்று! இந்த இரண்டு நாடுகளில் மட்டும்தான் இந்தக் காண்டாமிருகங்கள் உள்ளன. மொத்த எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம். அதில் சுமார் ஆயிரத்து 600 காண்டாமிருகங்கள் இந்தியாவின் காஸிரங்கா தேசியப் பூங்காவிலும், நேபாளத்தின் சித்வான் தேசியப் பூங்காவிலும் இருக்கின்றன.

ஆசியாவில், யானைக்கு அடுத்து, இரண்டாவது மிகப்பெரிய பாலூட்டி இனம் இது. இவற்றின் கொம்பு, 20 முதல் 60 சென்டிமீட்டர் வரை இருக்கும். ஒரு மணி நேரத்துக்குச் சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. நீர் நிலைகளில் உள்ள தாவரங்கள்தாம் இவற்றின் முக்கிய உணவு. எனவே, நதிக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றுப் படுகைகள்தாம் இவற்றுக்கான பொருத்தமான வாழிடம். அதனால்தான் பிரம்மபுத்திரா நதிப் படுகைப் பகுதியில் அமைந்திருக்கும் காஸிரங்காவில் இவை அதிக அளவில் தென்படுகின்றன.

 

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரே ஒரு குட்டிதான் ஈணும். இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சுமார் 10 வகையாகக் குரல் எழுப்பும் தன்மை கொண்ட இவை, தனிமை விரும்பிகள். இவற்றுக்கு அதிக அளவில் மோப்ப சக்தி உண்டு. உடலிலிருந்து வெளிப்படும் வாசனையை வைத்துத்தான், காண்டாமிருகங்கள் இணை சேரும்.

2011-ல், இவற்றைப் படம் எடுப்பதற்காக முதன்முதலாக காஸிரங்காவுக்குச் சென்றிருந்தேன். நாட்டிலிருக்கும் தேசியப் பூங்காக்களிலேயே கார்பெட் தேசியப் பூங்காவுக்கு அடுத்து, நன்கு பராமரிக்கப்படும் தேசியப் பூங்கா காஸிரங்காதான்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் அங்கே சென்றிருந்தேன். பொதுவாக, குட்டியுடன் இருக்கும் தாய் காண்டாமிருகங்கள் அவ்வளவாக வெளியே வராது. ஆனால், அதிர்ஷ்டவசமாக நான் சென்றிருந்தபோது, தாய் காண்டாமிருகம் ஒன்று இரை தேட, தன் குட்டியுடன் வந்தது. அப்போது எடுத்த படங்கள்தாம் இவை.

கொம்புகளுக்காக இவை கள்ள வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவருகிறது!

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

குணமா வாய்ல சொல்லனும்!- ஒரு செல்லக் குரல் சொல்லும் மகத்தான சேதி


 

 

child-beating-is-wrong

 

 

 

கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப்பில் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும் ஒரு வைரல் வீடியோவைப் பற்றியதுதான் இந்த பதிவு. 

ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஓடும் அந்த வீடியோவில் சமர்த்தாக சம்மனம் இட்டு அமர்ந்திருக்கும் பெண் குழந்தை அழுது கொண்டே பேசுகிறது.

முதலில் குழந்தையின் தாய், சேட்டைப் பண்றது தப்பா தப்பு இல்லையா? பேச்ச மாத்தாம பதில் சொல்லு எனத் தொடங்க "தப்புதான். அதுக்கு என்ன சொல்லனும். 

தாய்: அதுக்குத்தான் அடிக்கிறது. புரிஞ்சதா? 
குழந்தை: அடிச்சா தப்பு. குணமா வாய்ல சொல்லனும். திட்டாம அடிக்காம வாய்ல சொல்லனும். 
தாய்: அதுக்கு நீ சேட்ட பண்ணாம இருக்கனும். 
குழந்தை: சேட்ட பண்ணாலும் வாய்ல குணமா சொல்லனும். 
தாய்: இப்ப எதுக்கு நீ இப்படி அழுதுக்கிட்டிருக்க சுந்தரிகா. 
குழந்தை: அடிச்சா அழாம என்ன பண்ணுவாங்க நீ சொல்லு. 
தாய்: சேட்ட பண்ணா அடிக்காம என்ன செய்வாங்க நீ சொல்லு. 
குழந்தை: குணமா வாய்ல சொல்லனும்" 

அந்த உரையாடல் இங்கே முடிகிறது.

அந்தக் குழந்தையின் குரல் ரசிப்பதற்காகவும் எவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறது என பாராட்டுவதற்காக மட்டுமல்ல. சிந்திப்பதற்கும்கூட. வீட்டில் பிள்ளைகளை அடிக்கும் பெற்றோர், பள்ளியில் குழந்தைகளை அடிக்கும் ஆசிரியர்கள் என அனைவருக்குமான பாடம் இந்தப் பிஞ்சுக் குரல்.

தப்பே செய்தாலும்கூட திட்டாமல் அடிக்காமல் குணமாக சொல்ல வேண்டும் என்று அந்தக் குழந்தை கூறுவது அஹிமைசயின் சாராம்சம். பிஞ்சுக் குழந்தைக்கு இயல்பிலேயே அந்தக் குணம் உள்ளே இருக்கிறது. அந்தக் குழந்தையும் ஒரு மகாத்மாவே.

குழந்தைகள் எப்போதும் நாம் சொற்படி நடப்பவர்கள் அல்ல நம்மைப் பார்த்து நமது செய்கைகளைப் பிரதிபலிப்பவர்கள். இது சைல்டு சைக்காலஜிஸ்ட்களின் கூற்று. இன்று நாம், நம்மைவிட வயதில் குறைந்த பலத்தில் குறைந்த நம் குழந்தைகளை அடித்தால் நாளை அந்தக் குழந்தை சக குழந்தையை அடிப்பது தவறல்ல. வன்முறை தவறல்ல. எளியோரை அடிப்பது தவறல்ல எனப் புரிந்து கொள்ளும். எதிர்காலத்தில் வன்முறையை சகஜமான உணர்வாக ஏற்றுக் கொள்ளும்.

பொதுவாக பிள்ளைகளை அடிக்கும் பெற்றோர் தண்டனை கொடுத்த அந்த நிமிடத்தில் அவர்களுக்கு ஏதோ பெரிய நிவாரணம் கிடைத்ததைப் போல் உணர்வார்கள். முதலில் அந்த நிவாரணம் குழந்தை மீதான கோபத்தைப் போக்கியதால் கிடைத்ததா இல்லை வேறு ஒரு விரக்தியினை இப்படித் தீர்த்துக் கொண்டதால் கிடைத்ததா என்பதை உணர வேண்டும். பெரும்பாலும் பெரியவர்களின் ஏதோ ஒரு கோபத்துக்கு தான் குழந்தைகள் ஆளாகின்றனர். 

அப்போது குழந்தைகளும் தங்களுக்கு அழுத்தம் இருந்தால் அதை வேறு ஒருவரிடம் பழிதீர்க்கும் பழக்கத்தைக் கற்றுக்கொள்கிறது. முதலில் வன்முறை தவறு என்பதை வளர்ந்த நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் தவறு செய்வது இயல்புதான். அதுவும் அவர்கள் நாம் சொன்னவுடன் அப்படியே கேட்டு நிச்சயம் நடக்கமாட்டார்கள்தான். அதற்காக அடிப்பது என்பது வன்முறை. அப்புறம் எப்படித்தான் கையாள்வது என்கிறீகளா? பொறுமையும், நிதானமும் தேவை. குழந்தைகளுடம் நேரத்தை செலவழிக்க வேண்டும். அவர்களிடம் அதிகமாக பேச வேண்டும். அவர்கள் செய்வது ஏன் தவறு என்பதை உணர்த்த வேண்டும். இது ஒரே இரவில் நடந்துவிடாது. நீண்ட காலமாகும். இதுதான் குழந்தை வளர்த்தல் முறை.

இதைத்தான் அந்தக் குழந்தை அடிக்காம திட்டாம வாய்ல குணமா சொல்லணும் எனக் கூறுகிறது.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பினிலே என்பதை உணர்ந்து வளர்க்க வேண்டும்.

 

https://www.kamadenu.in

 

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 10
 

image_cdaa54018b.jpg1931 : பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.

1939 : இரண்டாம் உலகப் போர் - கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.

1943 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மானியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.

1951 : ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

1967 : கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.

1974 : கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 : பிரித்தானிய விமானமொன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில், 176 பேர் கொல்லப்பட்டனர்.

2000 : மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.

2002 : சுவிட்சர்லாந்து, ஐ.நாவில் இணைந்தது.

2006 : ஈழப்போர் - முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில், 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 11
 

image_ae20cd7c4c.jpg1906 : மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.

1914 : ஆஸ்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த ஜேர்மனியப் படைகளை வெளியேற்றினர்.

1916 : கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

1919 : ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஹொண்டுராசினுள் நுழைந்தனர்.

1926 : பெனிட்டோ முசோலினி மீதான கொலைமுயற்சி தோல்வியடைந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: பக்கிங்ஹாம் அரண்மனை ஜேர்மனியினரின் வான் தாக்குதலில் சேதமடைந்தது.

1944 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..

1945 : இரண்டாம் உலகப் போர் - போர்ணியோ தீவில் ஜப்பானியரினால் அடைக்கப்பட்டிருந்த போர்க் கைதிகளை ஆஸ்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15இல் கொல்லப்படவிருந்தனர்.

1961 : டெக்சாசை 4ஆம் கட்ட சூறாவளி கார்லா தாக்கியது.

1968 : பிரான்சில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் கொல்லப்பட்டனர்.

1973 : சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. ஜனாதிபதி சல்வடோர் அலெண்டே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் ஆகுஸ்டோ பினொச்சே ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.

1974 : வட கரோலினாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில், 71 பேர் கொல்லப்பட்டனர்.

1978 : அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், எகிப்திய அதிபர் அன்வர் சதாத், இஸ்ரேல் பிரதமர் பெகின் ஆகியோர் மத்திய கிழக்கு அமைதி முயற்சிகளை முன்னெடுக்க, காம்ப் டேவிட்டில் சந்தித்தனர்.

1982 : பாலஸ்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூட் நகரை விட்டு அகன்றனர். 5 நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.

2001: வான் தாக்குதல்களில் உலக வர்த்தக மையம் எரிந்து தீ பற்றியது.

1989 : ஹங்கேரிக்கும் ஆஸ்திரியாவுக்குமான எல்லை திறந்து விடப்பட்டதில் ஆயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனி மக்கள் தப்பியோடினர்.

1992 : ஹவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.

1997 : ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை அமைக்க ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தனர்.

2001 : நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.

2006 : ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

64 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கும் ஃபேஸ்புக்! ஆச்சர்யமளிக்கும் கட்டடம்

3338_thumb.jpg
 

உலகில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் மனித இனம் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அண்மைக் காலமாகத் தீவிரமாக எச்சரித்து வருகின்றனர். ஐ.நா-வும் புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. 

ஃபேஸ்புக் அலுவலகம்

இந்த நிலையில், சமூக வலைதளமான ஃபேஸ்புக், கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதிய கட்டடம் ஒன்றைக் கட்டியுள்ளது. இதில் என்ன ஆச்சர்யம் என்ற கேள்வியா...? 5,23,000 சதுர அடி ( 22.7 ஏக்கர்) பரப்பளவில், திறக்கப்படவுள்ள புதிய கட்டடம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனுடன், மறுசுழற்சி நீர் அமைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை பிரபல கட்டட வடிவமைப்பாளர் பிராங்க் கெரி வடிவமைத்துள்ளார். 

 

 

ஃபேஸ்புக் தலைமை அதிகாரி ஷெரில் சாந்பெர்க்

ஃபேஸ்புக் தலைமை அதிகாரி ஷெரில் சாந்பெர்க் கூறுகையில், `புதிதாகத் திறக்கவுள்ள கட்டடம் மிகவும் நிலையானதாகவும் உறுதியாகவும் உள்ளது. ஆற்றல் மற்றும் கழிவுகளைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அதாவது, மறுசுழற்சி செய்யப்படும் நீரால் ஆண்டுக்கு 17 மில்லியன் கேலன்கள் தண்ணீர் சேமிக்க முடியும்' என்றார். 

ஃபேஸ்புக் நிறுவன அலுவலக கட்டடத்தால் மட்டும் கலிபோர்னியாவில் ஆண்டுக்கு, 64 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

முண்டாசுக் கவிஞன் பாரதி நினைவு நாள் ; பீடுநடைத் தமிழ் உடையோன் அவன்.!

 

 
Image

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்பன முண்டாசுக் கவிஞன் பாரதியின் வைர வரிகள். ஆம், பாரதி அவரது கவிதைகளை போலவே வாழ்ந்திட்ட பெருமகன். சமூக அவலங்களை சாடி எழுவனவே மக்களுக்கான கலைகள் என்றானால் பாரதியின் எழுத்துக்கள் நிச்சயம் மக்களுக்கானவைதான்.

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்திட்ட பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன். 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் தாயின் நேசத்தினை உணர்ந்தவர் ஆனார்.

கவிஞர், எழுத்தாளர், விடுதலைப்போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல முகங்கள் கொண்ட பாரதியின் அத்தனை பிம்பங்களின் அடிநாதமும் சமூக மாற்றம் தான். தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அவர். அவரைப்பின்பற்றி கவி - எழுத்துலகில் பாரதி பரம்பரை உண்டானதெல்லாம் வரலாறு.

எட்டயப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவதெங்கும் காணோம் என தமிழ்சங்கநாதம் கொட்டிய பாரதியின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. தமிழின் - தமிழரின் பெருமையை, தொன்மையை உலகினுக்கு உணர்த்திச்சென்ற பாரதியின் வரலாற்றை இளைய தலைமுறை பயில வேண்டிய - அதன் படி நடந்திட வேண்டிய காலம் இது.

வாயுரைக்க வருகுதில்லை ; வாழி நின்றன் மேன்மையெல்லாம் - பாரதி!

https://www.ibctamil.com

41651281_10155466622475163_7579245640979316736_n.png?_nc_cat=0&oh=78db35f2e6dcaa46f3935e294dbc3fc2&oe=5BEF15BA

Link to comment
Share on other sites

அந்த 12 நொடி... 144 திருமண மோதிரங்கள்... டி.என்.ஏ. சாம்பிள்.. 9/11 நினைவலைகள்! #VikatanInfographics

3274_thumb.jpg
 

9/11 தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 100 நாள்கள் தேவைப்பட்டது. கட்டடம் இடிந்ததால் கிளம்பிய தூசுகள் அமெரிக்காவில் பல மைல் தூரம் பயணித்ததைப் படம் பிடித்துக் காட்டியது நாசா. இதனால் ஏற்பட்ட மாசின் அளவு 1.8 மில்லியன் டன்களாகக் கணக்கிடப்பட்டது.

அந்த 12 நொடி... 144 திருமண மோதிரங்கள்... டி.என்.ஏ. சாம்பிள்.. 9/11 நினைவலைகள்! #VikatanInfographics
 

செப்டம்பர் 11, 2001. இரட்டைக் கோபுரம், வாஷிங்டன் நகரம். நேரம், காலை 8:30. 

காலை உணவருந்திக்கொண்டிருந்தவர்கள், நேற்றைய வேலையை இன்னமும் செய்துகொண்டிருந்தவர்கள், நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர்கள், மேலதிகாரியிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தவர்கள் என எப்போதும் போல இயங்கிக்கொண்டிருந்தது இரட்டைக் கோபுரக் கட்டடம். அடுத்த கால் மணி நேரத்தில் பயங்கரச் சத்தம். இரட்டைக் கோபுரத்தின் ஒரு பகுதியில் விமானம் ஒன்று மோதியது. மற்றொரு பகுதியில் இருந்தவர்கள் கட்டடத்தை விட்டு வெளியேற அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று சிலர் மாடியிலிருந்து குதித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மற்றுமொரு விமானம் வந்து மோதியதில் மொத்தக் கட்டடமும் தரைமட்டமானது. 9/11 தாக்குதல் நடைபெற்று இன்றோடு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இரட்டைக் கோபுரம் நாசா புகைப்படம் 9/11 தாக்குதல்

 

 

9/11 தாக்குதலால் உருவான தூசு எவ்வளவு தூரம் பரவிச் சென்றது என்பதை விளக்கும் நாசா புகைப்படம்

அமெரிக்காவிலுள்ள, இரட்டைக் கோபுரக் கட்டடம்தான் உலக வர்த்தக மையமாகச் செயல்பட்டது. இங்கு 50,000 பேர் பணிபுரிகிறார்கள். தினமும் சுமார் 1.4 லட்சம் பேர் இங்கு வந்து செல்வார்கள். எவரும் எதிர்பாராத நேரத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு. இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்ற அதே தருணத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் தாக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாற்றில் இது மிகப்பெரிய சோகமாக பதிவானது. தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாள் விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த ஒரு தகவலும் பதிவாகவில்லை. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 100 நாள்கள் தேவைப்பட்டன. கட்டடம் இடிந்ததால் கிளம்பிய தூசுகள் அமெரிக்காவில் பல மைல் தூரம் பயணித்ததைப் படம் பிடித்துக் காட்டியது நாசா. இதனால் ஏற்பட்ட மாசின் அளவு 1.8 மில்லியன் டன்களாக கணக்கிடப்பட்டது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற 3 மாதங்கள் கழித்து, அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஓசாமா பின்லேடன், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டது அமெரிக்கா. மே 2, 2011 அன்று ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றது அமெரிக்க ராணுவம். ஆகஸ்ட் 16, 2016 ம் ஆண்டு உலக வர்த்தக மையம் புதுப்பொலிவுடன் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இரட்டைக் கோபுரத் தாக்குதலில், சேதமடைந்த சுரங்க ரயில் நிலையம் ஒன்று, 17 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 9 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 

 

 

நினைவலைகள்

9/11 தக்குதலில் சுமார் 3,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில் 17 கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர். உயிரிழந்தவர்களில் 1,111 பேர் இதுவரை யாரென்றே அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காகவே நியூயார்க் நகரில் தனியாக ஒரு பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக 89 வது தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஸ்காட் மைக்கேல் ஜான்சன் என்ற நிதி ஆய்வாளர் கடந்த ஜூலை மாதம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டார். 17,000 பேரின் DNA சாம்பிள்களைக் கொண்டு இந்தப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. 9/11 தாக்குதலுக்காகக் கடத்தப்பட்ட ஃப்ளைட் 93 ல் பயணம் செய்து உயிரிழந்த 40 பயணிகளின் நினைவாக, 93 அடிகள் மற்றும் 40 மணிகள் கொண்ட டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காற்று அடிக்கும்போது அந்த மணிகளிலிருந்து எழுப்பப்படும் ஓசை மக்களுக்கு மனவலிமையைக் கொடுக்கும் என்று நம்புகிறது அமெரிக்க அரசு. இந்த டவருக்கு `Tower Of Voices' என்று பெயரிட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் Tower Of Voices நினைவகத்தில் இன்று  நடைபெறும் நினைவுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். மிகப் பெரிய தாக்குதலான, 9/11 தாக்குதல் மக்கள் மனதில் ஆழமாகப் பதியவேண்டும் என்பதற்காக இந்த நாளை `தேசப் பற்று தினம்' ஆக கொண்டாடுகிறது அமெரிக்கா.    

 

 

9/11 தாக்குதல் நினைவலைகள்...

   இரட்டைக் கோபுரம் 9/11 தாக்குதல்

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

கொள்ளை முயற்சியில் எதிர்பாரா திருப்பம்
 
சூழ்நிலை கைகொடுக்காவிட்டால், திருடும் முயற்சி கூட எடுபடாது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
 
 
Link to comment
Share on other sites

அமெரிக்க இலக்கிய உலகம் கொண்டாடிய சிறுகதை எழுத்தாளர்... ஓ.ஹென்றி பிறந்த தினப் பகிர்வு!

 

செய்தித்தாள்களை எடுத்து, பிடித்த பெயர்களைப் பார்த்துவந்த சிட்னி பார்ட்டர்க்கு `ஹென்றி' என்ற பெயர் பிடித்துப்போக, அதோடு எளிதாக எழுதப்படும் எழுத்தான O-வை இணைத்து `ஓ.ஹென்றி' என வைத்துக்கொண்டார்.

அமெரிக்க இலக்கிய உலகம் கொண்டாடிய சிறுகதை எழுத்தாளர்... ஓ.ஹென்றி பிறந்த தினப் பகிர்வு!
 

மெரிக்காவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான `தி நியூயார்க் டைம்ஸ்' 1909-ம் ஆண்டு தனது நிருபர் ஒருவரை அழைத்து, எழுத்தாளர் வில்லியம் சிட்னி பார்ட்டர் என்பவரை நேர்காணல் செய்யும் பணியை ஒப்படைத்தது. அந்த நிருபருக்கு ஆறு வாரம் கெடு வழங்கப்பட்டது. ஐந்து வாரம் கடந்தும் அந்த எழுத்தாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசி வாரத்தின் திங்கட்கிழமை அன்று, வில்லியம் சிட்னி பார்ட்டரின் புத்தகங்களின் பதிப்பாளர் வழியே அவர் தங்கியிருந்த மேடிசன் ஸ்குவேர் என்ற இடத்தைக் கண்டுபிடித்துச் சந்தித்தார் அந்த நிருபர்.

முதன்முறையாகச் சந்திக்கும்போது நிருபர், ``உங்களை பல நாள்களாகத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறேன்'' என்றாராம். உடனே, சிரித்துக்கொண்டே ``தெரியும்'' என்றார் சிட்னி பார்ட்டர்.

சரி, `யார் இந்த சிட்னி பார்ட்டர்? நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் எல்லாம் தேடிக் கண்டுபிடித்து நேர்காணல் செய்யும் அளவுக்கு அவ்வளவு பெரிய எழுத்தாளரா என்ன?' என்று யோசிக்கலாம். அவருடைய புனைபெயரைக் கூறினால் உங்களுக்கே தெரியும். ஆம். அமெரிக்காவே கொண்டாடிய சிறுகதை எழுத்தாளர் ஓ.ஹென்றியின் இயற்பெயர்தான் `வில்லியம் சிட்னி பார்ட்டர்'.

 

 

ஹென்றி

முறுக்கிய கறுப்பு மீசை, நம்பிக்கையும் கம்பீரமும் நிரம்பிய கண்களைப் பார்த்தாலே ராணுவ வீரரை ஞாபகப்படுத்தும் ஹென்றியின் இளம் வயது புகைப்படம். காதலும் அன்பும் நிரம்பிய கண்கள், இதயத்தின் இனிமையைப் புன்னகையாய் முன்னிறுத்தும் உதடுகள் என்று சாக்லேட் பாயை ஞாபகப்படுத்தும் ஹென்றியின் சற்று வயதேறிய புகைப்படம். இப்படி என்றும் அழகாய், புதிராய் இருந்த ஓ.ஹென்றி, 1867-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் கிரீன்ஸ்போரா என்னுமிடத்தில் பிறந்தவர்.

கல்லூரிக்குச் செல்லாத சிட்னி பார்ட்டர், தனது 15 வயதோடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார். தன் நண்பனிடம் ``இலக்கியத்துக்காக வேறு பெயர் வைக்க வேண்டும்'' என்று கூறினார். செய்தித்தாள்களை எடுத்து, பிடித்த பெயர்களைப் பார்த்துவந்த சிட்னி பார்ட்டர்க்கு `ஹென்றி' என்ற பெயர் பிடித்துப்போக, அதோடு எளிதாக எழுதப்படும் எழுத்தான O-வை இணைத்து `ஓ.ஹென்றி' என வைத்துக்கொண்டார்.

ஓர் எறும்பு சிறு சர்க்கரைத் துணுக்கைச் சுமந்து வருவதுபோல அவருடைய அடையாளத்தை இன்று வரை இந்தப் பெயர்தான் சுமந்து வந்துகொண்டிருக்கிறது அதே சுவையோடு. இது தெரியாத பல பத்திரிகைகள், `ஆலிவர் ஹென்றி' என்றெல்லாம் தங்களது கற்பனையை இவர் பெயரில் காட்டியுள்ளது.

டெக்ஸாஸ், நியூ ஆர்லியன்ஸ், நியூயார்க் எனப் பல பகுதிகளில் தன்னுடைய பணிக்காகக் குடியேறிய ஹென்றி, சிறந்த ஊர்சுற்றும் வாலிபரும்கூட. பல இடங்களுக்குச் செல்வதும், மக்களைச் சந்திப்பதும், அவர்களுடன் உரையாடுவதும் என வாழ்க்கையை ரசித்து வாழும் ஹென்றி, ஒருமுறை மத்திய அமெரிக்காவுக்கு நண்பனுடன் வாழைப்பயிர் பற்றித் தெரிந்துகொள்ள சென்றாராம். ஆனால், ``வாழைப் பயிரிட்டு வளர நீண்டகாலமாகும் என்பதால் நான் திரும்பி வந்துவிட்டேன்'' என்றார் வேடிக்கையாக. பிறகு `ஹூஸ்டன் போஸ்ட்' (Houston Post) பத்திரிகையில் எடிட்டராகவும், பிறகு அதன் பங்குதாரராகவும் பணியாற்றினார். பல பணிகள் இருந்தாலும் இலக்கியத்தை அவர் விடவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஹென்றி

13 வயது முதல் 19 வயது வரை அதிக புத்தகங்களை வாசித்த ஹென்றி, வாசிப்பதோடு மட்டுமல்லாமல் சிறுகதைகளை எழுதவும் ஆரம்பிக்கிறார். சிறுவயதில் கலைஞனாக வேண்டும் என எண்ணிய அவர், தனது 21 வயது வரை தான் ஒரு சிறுகதை எழுத்தாளனாக வருவேன் என எண்ணவில்லை. அவர் எழுதிய கதைகள் எல்லாமே எங்கேயோ பிரசுரமாகிக்கொண்டுதான் இருக்கும். ஒரு பத்திரிகை நிராகரித்துவிட்டால், வேறு ஸ்டாம்பு ஒட்டி வேறு இதழுக்கு அனுப்பிவிடுவாராம். அப்படி `The Emancipation of Billy’ என்ற கதை `13 தடவை பிரசுரமாகாமல் திரும்பியதாம். ஆனால், ``நான் எழுதியதில் மிகச்சிறந்த கதை அது'' என்கிறார் ஹென்றி.

ஜான்சி மற்றும் சூய் ஆகிய இருவரும் வாஷிங்டனில் வசித்துவரும் நண்பர்கள். அது, நிமோனியா என்னும் நோய் பரவிக்கொண்டிருந்த காலம். அந்த நோயால் ஜான்சி பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் ஜன்னல் வழியே தெரியும் மரத்தின் இலைகள் ஒவ்வொன்றாக உதிர, `கடைசி இலை உதிரும்போது நானும் இறந்துவிடுவேன்' என எண்ணினாள். நம்பிக்கை இழந்த ஜான்சிக்குப் பலர் ஆறுதல் கூறியும், அதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசி இலை மட்டுமே மரத்தில் மீதி. இந்தச் செய்தியை அறிந்த கீழ் வீட்டில் இருக்கும் பெர்ஹ்மன் என்கிற ஓவியர், இரவு முழுவதும் பனியில் நனைந்தபடி உயிருள்ள இலை ஒன்றை வரைந்து அதில் ஒட்டுவார். மறுநாள் காலை ஜான்சி அதைப் பார்த்து உற்சாகம் பெற, நோயும் குணமாகிவிடும். ஆனால், பெர்ஹ்மன் இறந்துவிடுவார். `அந்த இலைதான் அவர் வரைந்த மாஸ்டர் பீஸ்' என்று கதை முடியும். `THE LAST LEAF' சிறுகதைதான் இது. ஹென்றியின் ஆகச்சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று.

பள்ளியில் மோட்டிவேஷன் கதையாகச் சொல்லித்தரப்பட்ட இந்தக் கதை, அதையும் தாண்டி உணர்ச்சிகரமானது. ஜான்சிக்கும் சூயிக்கும் இடையில் இருக்கும் அன்பு. வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படாத ஓவியராக இருந்த பெர்ஹ்மன் யார் என்றே தெரியாதவர்களுக்காக தனது உயிரையே தந்த அந்த மனம். இரு மனிதர்களுக்கிடையில் சிக்கித்தவிக்கும் உணர்ச்சிகரமான அன்பை மாளாது எழுதியவன்தான் ஓ.ஹென்றி.

ஹென்றி

ரொமான்டிக் மைண்ட் உள்ள ஓ.ஹென்றி, காதலர்களுக்கிடையில் இருந்த மிகச்சிறந்த காதலையும் எழுதியிருக்கிறார். `THE GIFT OF THE MAGI' என்ற கதையில் வரும் டெல்லாவும் ஜிம்மும் ஏழைக் கணவன்-மனைவி. கிறிஸ்துமஸ் விழாவுக்குத் தங்களுடைய துணைவருக்குப் பரிசு வழங்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். ஜிம் தன்னுடைய கோல்டு வாட்சை விற்று டெல்லாவின் அழகிய நீண்ட முடிக்கு அலங்காரச் சீப்புகளை வாங்கிவருவார். டெல்லா தன்னுடைய அழகிய நீண்ட முடிகளை விற்று ஜிம்மின் வாட்சுக்கு பிளாட்டினம் செயின் வாங்குவார். இருவரும் சர்ப்பிரைஸ் அளிக்க நினைத்து ஏமாந்து நிற்கும் அந்த நொடியின் உச்சபட்ச காதலின் முன்பு உலகமே தோற்றுத்தான்போயிருக்கும். தன்னைப் பற்றி எதுவும் உலகத்துக்குச் சொல்லாததினுள் ஓ.ஹென்றியின் காதலும் புதைந்துபோயிருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்தக் கதைகள் மட்டுமல்ல, `THE RANSOME OF RED CHIEF', `THE COP AND THE ANTHEM' என்று மிகப் புகழ்பெற்ற கதைகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். பல கதைகள் எழுதியிருக்கும் ஓ.ஹென்றிக்கு Burton's `Anatomy of Melancholy' and Lane's `Arabian Nights' ஆகிய புத்தகங்கள்தாம் மிகவும் பிடித்தவை. தனக்குப் பிடித்த கதைகளை மட்டும் எழுதும், எழுதியதைத் திருப்பிப் படிக்காத ஓ.ஹென்றி தன்னைப் பற்றிச் சொல்வதையோ எழுதுவதையோ கடைசிவரை விரும்பவில்லை. தன்னுடைய வாழ்வில் அவர் அளித்த ஒரே பேட்டி மேற்கூறிய பேட்டி மட்டும்தான். அந்தப் பேட்டியில்கூட `என்னைப் பற்றிக் கேட்பதைவிட ஷேக்ஸ்பியரைப் பற்றிக் கேளுங்கள்' என்றுதான் கூறுவார்.

வாழ்க்கையில் எழுத்துகளில் மட்டுமே பிரபலமான ஓ.ஹென்றி, தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் வில்லியம் சிட்னி பார்ட்டராக மட்டுமே வாழ்ந்தார். பெர்ஹ்மனின் மாஸ்டர் பீஸாகவும் ஜிம் மற்றும் டெல்லாவின் காதலாகவும் வாசகர்களுக்குள் வாழ்கிறார் ஓ.ஹென்றி.

https://www.vikatan.com/news/miscellaneous/136629-the-famous-writer-ohenry-birthday-special-article.html

Link to comment
Share on other sites

வட கரோலினாவில் 10 டன் தங்கத்துடன் சென்ற கப்பல் மூழ்கி 425 பேர் பலி (செப். 12, 1857)

 
அ-அ+

மத்திய அமெரிக்காவிற்கும் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளுக்குமிடையில், நீராவியால் இயங்கக்கூடிய எஸ்.எஸ். சென்ட்ரல் அமெரிக்கா என்ற பயணிகள் கப்பல் 1950களில் இயக்கப்பட்டு வந்தது.

 
வட கரோலினாவில் 10 டன் தங்கத்துடன் சென்ற கப்பல் மூழ்கி 425 பேர் பலி (செப். 12, 1857)
 


மத்திய அமெரிக்காவிற்கும் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளுக்குமிடையில், நீராவியால் இயங்கக்கூடிய எஸ்.எஸ். சென்ட்ரல் அமெரிக்கா என்ற பயணிகள் கப்பல் 1950களில் இயக்கப்பட்டு வந்தது.

1857-ம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி 477 பயணிகள், 101 ஊழியர்களுடன் இந்தக் கப்பல் கலோனில் உள்ள பானமேனியன் துறைமுகத்தில் இருந்து, நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தக் கப்பலில் 10 டன் தங்கமும் கொண்டு செல்லப்பட்டது.

செப்டம்பர் 9-ம் தேதி வடகரோலினா கடற்பகுதியில் சென்போது கடும் சூறாவளியில் இந்தக் கப்பல் சிக்கி திசைமாறியது. 11-ம் தேதி 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து, நீராவி கலன் செயலிழந்தது. 12-ம்தேதி கப்பல் மூழ்க ஆரம்பித்தது.

இதுபற்றி தகவல் அறிந்த இரண்டு மீட்பு கப்பல்கள் அங்கு விரைந்தன. பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 153 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 425 பேர் மூழ்கி இறந்தனர்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

ஆச்சரியமூட்டும் ஹம்மிங் பறவை

 
 
img1131128035_1_1.jpg

 

 

உலகிலேயே மிகச் சிறிய பறவைதான் ஹம்மிங் பறவை.

இந்தப் பறவை கடல் கடந்து பறந்து செல்லும் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மை.

Calypte_anna_-San_Luis_Obispo_California

அமெரிக்காவில் காணப்படும் சிவப்புக் கழுத்து ஹம்மிங் பறவைகள் தான் மிக அதிகமான தொலைவு பறந்து செல்கின்றன.

அமெரிக்காவில் பனிக்காலம் ஆரம்பித்தவுடன் இவை கூட்டமாக மெக்ஸிகோ, கியூபா உள்ளிட்ட நாடுகளுக்குப் பறந்து போகும்.

800 முதல் 3 ஆயிரத்து 200 கிலோ மீற்றர் தூரம் வரை இவை பறந்து செல்கின்றன என்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்கள்.

hummingbird-flowers-flying_1366x768.jpg

கடல் கடந்து பறப்பதற்கான சக்தி கிடைப்பதற்காக இவை பனிக்காலம் தொடங்குவதற்கு முன்பு மிக அதிகமாக உணவு உண்ணத் தொடங்கி விடுமாம்

இந்த உணவைக் கொழுப்பு வடிவில் தங்கள் உடலில் சேகரித்து வைப்பது தான் ஹம்மிங் பறவைகளின் சிறப்புத் தன்மையாக இருக்கிறது.

images-3-1.jpg

வெகு தொலைவு பறப்பதற்கான சக்தி கிடைப்பதற்காக இந்தக் கொழுப்பைத்தான் இவை பயன்படுத்துகின்றன.

இப்படி வலசை போகின்ற பறவைகள் அமெரிக்காவில் பனிக்காலம் முடியும்போது சற்றும் வழி தவறாமல் அவ்வளவு தூரத்தையும் கடந்து தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பி விடுவதும் ஆச்சரியம்தான்.

https://newuthayan.com

Link to comment
Share on other sites

’ஹிட்லரை விட ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்தான் எங்களை அவமதித்துவிட்டார்!’ - ஜெஸ்ஸி ஓவன்ஸ் பிறந்த தினப் பகிர்வு

 
 
’ஹிட்லரை விட ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்தான் எங்களை அவமதித்துவிட்டார்!’ - ஜெஸ்ஸி ஓவன்ஸ் பிறந்த தினப் பகிர்வு
 

``கறுப்பு உழைப்போட வண்ணம்" - காலா படத்தில் அனைவரையும் பேச வைத்த ஒரு வசனம். அவமானமாகப் பார்க்கப்படும் கறுப்பை அடையாளமாக்கியது இந்த வசனம். இன்று அந்த வசனத்தை அப்படிச் சிலாகித்துப் பாராட்டுகிறோம். ஆனால், 80 ஆண்டுகளுக்கு முன்னரே  நிறவெறியையும், இனவெறியையும் எதிர்த்து சர்வ வல்லமை படைத்த ஒரு சர்வாதிகாரியின் அடக்குமுறைக்குத் தன் வெற்றியின் மூலம் பதில் சொன்ன ஜெஸ்ஸி ஓவென்ஸ் கொண்டாடித் தீர்க்க வேண்டிய ஒரு வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  

ஒரு சாதாரணக் கூலி விவசாயின் பத்தாவது மகன், பல ஆண்டுகளாக வெள்ளையர்களுக்குக் கொத்தடிமையாக விளங்கியவர்களின் பேரன் இவை தவிர்த்து, அடையாளம் எதுவும் ஜெஸ்ஸி ஓவென்ஸ்க்கு இல்லை. அமெரிக்காவின் தென் கோடியில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில்தான் ஓவென்ஸ் பிறந்தார். பின்னாளில் மிகப் பெரிய தடகள வீரர் ஆவார் என்ற எந்தச் சாத்தியக்கூறுகளும் அவரிடம் இல்லை.  ஏனெனில், ஒல்லியான கால்களும், மெலிந்த தேகமும், தட்டையான மார்புகளோடும்தாம் அவர் உடல்வாகு இருந்தது. அந்தத் தீக்குச்சி போன்ற உடலமைப்பினுள்ளேதான் ஒரு பிரவாகத்துக்கான ஜுவாலை அடங்கியிருந்தது, யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

காலையில் வேலைக்குச் சென்றால் ஓவன்ஸின் பெற்றோர் வீடு திரும்ப இருட்டிவிடும். இந்த உடலைக் கொண்டு தன்னால் பெற்றோர்களுக்கும் சகோதரர்களுக்கும் வயல்வெளியில் உதவியாக இருக்க முடியாது என்பதை அறிந்த ஓவன்ஸ், தன் பால்ய காலத்தின் ஆரம்பத்தை தனிமையில் கழித்தார். ஐந்தாவது வயதில் ஓவன்ஸின் மார்பில் ஒரு கட்டி வளர்ந்தது. நுரையீரலை ஆக்கிரமித்திருக்கும் அந்தக் கட்டியை அகற்றாவிட்டால் இரண்டு வருடங்களில் அவர் ஆயுள் முடிந்துவிடும் என மருத்துவர்கள் சொல்ல, செய்வதறியாது நின்றனர் அவரது பெற்றோர். அரைவயிறு கஞ்சிக்கு அடிமைகளாக அல்லற்படும் பெற்றோரிடம் ஆபரேஷன் எனப் பழக்கப்படாத வார்த்தைகளைக் கூறினால்.... ஓவன்ஸின் தாய் முடிவெடுத்துவிட்டார் சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு ஓவன்ஸின் கட்டியைக் கிழித்தெறிந்தார். அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டது. 

 

 

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

ஒரு வழியாக ஓவன்ஸ் உயிர்பிழைத்தார். அவரது உடல் இயல்பு நிலைக்குத் திரும்பியபோது நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். மீண்டும் போராடி மீண்டார் ஓவன்ஸ். இப்படி அடுத்தடுத்து உடல்நிலை கோளாற்றாலும் வேலையில் ஏற்பட்ட மாற்றுதலாலும் அமெரிக்காவின் வடக்கு மாகாணத்துக்குக் குடிபெயர்ந்தனர் ஓவன்ஸ் குடும்பத்தினர். அங்கே இதைவிட நிறவெறி தலைவிரித்தாடியது. ஓவன்ஸின் பெற்றோர் கஷ்டப்பட்டு ஒரு வழியாக அவரைப் பள்ளிக்கு அனுப்பினர்.

பள்ளியில் பிற குழந்தைகள் நிறத்தைக் காரணமாக முன்னிறுத்தி அவரை ஒதுக்கியே வைத்திருந்தனர். தன்னைப் போன்ற குழந்தைகள் மனதிலும் ஒரு பேதத்தை வளர்த்தற்காக, இந்தச் சமூகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தார் ஓவன்ஸ். ஓரே ஒரு கண்டிப்பான ஆசிரியர் மட்டுமே ஓவன்ஸை அரவணைத்தார். ஜெஸ்ஸி ஓவன்ஸ் என்ற பெயர் வைத்தவரும் அவரே. ஜேம்ஸ் கேம்லாடு ஓவன்ஸை சுருக்கி J.C Owens என்றே அழைப்பார் அந்த ஆசிரியர். JC என்ற பட்டப் பெயரே பின்னாளில் JESSE OWENS என்றாகி கடைசி வரை நிலைத்து விட்டது. தினமும் காலையில் பள்ளி சென்று மாலையில் வீடு திரும்ப ஓவன்ஸுக்குப் பிடித்தமில்லை.

இந்த நிலையிலும் தன்னைப் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோருக்கு உதவும் விதமாகச் செருப்புத் தைக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அவர் வாழ்வின் ஒவ்வோர் அத்தியாயமும் கஷ்டங்களோடு இருக்க, அவரின் பள்ளி ஆசிரியர் ஓவன்ஸை ஆடுகளத்துக்கு அழைத்துச் சென்றார். முதலில் கூச்சப்பட்டு வெளியிலேயே நின்ற ஓவன்ஸ் பின்னர் விளையாடத் தொடங்கினார். மைதானத்திலும் இன பேதம் ஓவன்ஸைச் சூழத் தொடங்கியது. அப்போது வெறி வந்தவர் போல ஓடத் தொடங்கினார் ஓவன்ஸ். தினமும் அனைவரும் சராசரி ஐந்து சுற்றுகள் ஓடினால் அவர் பத்துச் சுற்று ஓடுவார். தன்னை இகழ்ந்து பேசியவர்களும் தானும் சமம் என்பதை நிரூபிப்பதற்காக அவர் ஓடவில்லை. இகழ்ந்தவர்களும் தன்னைப் புகழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு தன் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைத்தார்.

இந்தச் சமூகத்தினால் ஒடுக்கப்பட்டவனுக்கு அதே சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்க ஓடினார். பல தூரம் ஓடினார். அந்த ஓட்டமும் ஆசையும் ஒரு புள்ளியில் இணைய முதன்முறையாகத் தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். பங்கேற்ற முதல் பெரிய போட்டியிலே பெயர் சொல்லும் அளவுக்குப் பெரிய வெற்றியை எட்டினார். 100 யார்ட் (91மீ)  ஓட்டத்தில் 9.4 நொடிகளில் முதலிடம் மட்டுமல்லாமல், உலக சாதனையும் படைத்தார். நீளம் தாண்டுதலில் 7.56 மீட்டர் தாண்டி தங்கம் வெல்லும் போதுதான் தன்னாலும் வெற்றி என்ற சொல்லை உணர முடியுமென்பதை அறிந்தார். அதன் பின் ஓவன்ஸுக்கு ஓக்லோ பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அங்குதான் தன் பயிற்சியாளராகவும் மானசிக குருவாகவும் இருந்த லேரி ஸ்னைடரைச் சந்தித்தார். 

 1935-ம் ஆண்டு ஓவன்ஸ் வாழ்வை தலைகீழாய் திருப்பியது. NCAA சாம்பியன்ஷிப்பில் நான்கு தங்கம் வென்றார். எலும்பில் காயமிருந்த போதிலும் போராடி வென்றார். இந்த வெற்றி அவருக்கு Buckeye bullet என்ற பட்டப்பெயரை பெற்றுத் தந்தது. பின்னர் 1936-ம் வருடம் அதே சாம்பியன்ஷிப். அங்கும் அதே நான்கு தங்கங்கள். தொடர்ச்சியாக அந்த சாம்பியன்ஷிப்பில் 8  தங்கங்கள் பெற்று இன்று வரை தகர்க்க முடியாத சாதனையைத் தன்வசமாக்கினார். தடகள வாழ்வில் கோலோச்சிய போதும் எங்கும் தீண்டாமை அவரைத் தீண்டிப் பார்த்தது.  உணவு விடுதிகளில் அவருக்கு மட்டுமல்ல எல்லாக் கறுப்பினத்தவர்க்கும் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது.

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

இந்த நிலையில்தான் 1936-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஓவன்ஸ் உட்பட சில கறுப்பின வீரர்களுக்கு அழைப்பு வந்தது. இதுவரை உள்ளூர் உள்நாட்டுப் போட்டிகளையே பார்த்த ஓவன்ஸுக்கு முதன்முறையாக உலகளவில் தன் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், யாரும் செல்வதற்கு தயாராய் இல்லை. பின்னர் ஒலிம்பிக் கமிட்டி நிறபேதத்துக்கு இடம் அளிக்காது என உறுதியளித்த பின்னரே ஓவன்ஸ் உட்பட 14 கறுப்பின வீரர்கள் ஒலிம்பிக் சென்றனர். அமெரிக்க வீரர்களாக அவர்கள் சென்றாலும், அவர்களுக்கெனத் தனி வீடு, தனி இடம் என ஒலிம்பிக் கிராமத்திலேயே பாகுபாடு இருந்தது. போட்டி தொடங்கிய அன்று, உலகின் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மன் வீரர்கள் தவிர, யாருடனும் கைகுலுக்காமல் செல்ல மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார் ஓவன்ஸ்.

அந்த மனஉளைச்சல்தான் ஓவன்ஸை மின்னல் வேகத்தில் ஓட வைத்து, நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனையோடு தங்கம் பெற வைத்தது. ஜெர்மன் வீரர்கள்தாம் தங்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துக்கு முதல் முட்டுக்கட்டைப் போட்டார். என்ன நடப்பதென்று ஹிட்லர் சுதாரிப்பதற்குள் 200 மீ, நீளம் தாண்டுதல், 400 மீ தொடர் ஓட்டம் என அடுத்தடுத்து மூன்று தங்கங்கள். அதுவும் உலக சாதனைகளோடு... மிரண்டு போனார் ஹிட்லர்.

ஓட்டத்தில் தங்கம் வெல்வது என்பது இயலாத காரியமில்லை. ஆனால், ஓட்டத்தோடு நீளம் தாண்டுதலிலும் உலக சாதனையோடு தங்கம் வென்றது இன்றளவும் யாராலும் சமன் செய்ய முடியாத சாதனை. யாரிடம் கைகுலுக்க வெட்கப்பட்டு ஹிட்லர் சென்றாரோ அந்த 14 கறுப்பின வீரர்கள் பத்துப் பதக்கங்கள் பெற்றனர். என்னதான் ஜெர்மனி பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றாலும் ஜெர்மனிக்குக் கிடைக்குமென நினைத்த நான்கு பதக்கங்களையும் அள்ளிச் சென்ற ஓவன்ஸின் மீது தீரா வன்மம் இருந்தது ஹிட்லருக்கு.

அதனால், ``கறுப்பின மக்களின் உடல் இன்னும் முழுப் பரிணாம வளர்ச்சியடைவில்லை. எனவே, அவர்களை மற்ற வீரர்களோடு சமமாகப் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்" என அறிக்கை விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஹிட்லர் கோட்டையிலேயே தங்க வேட்டையாடி உலகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட ஓவன்ஸ் கறுப்பினத்திற்கே விடிவுகாலம் பிறந்துவிட்டதாக எண்ணி அமெரிக்கா திரும்பினார்.

ஆனால், அங்கு எல்லாமும் அப்படியேதான் இருந்தது. ஒலிம்பிக்கிற்கு  முன், ஒலிம்பிக்கிற்கு பின் என மாற்றி எழுதும் படியான நிகழ்வு ஏதும் நிகழவில்லை. பேருந்தின் முன் சீட்டில் அமர்ந்து கூட அவரால் பயணிக்க முடியவில்லை. பின்னர் ஓவன்ஸ் ஒரு பேட்டியில் ``தன்னை மிகவும் மனக்கஷ்டத்துக்கு ஆளாக்கியது ஹிட்லர் அல்ல, இவ்வளவு பெயர் எடுத்தும் மரியாதை நிமித்தமாகக் கூட எங்களைச் சந்திக்காத அமெரிக்க ஜனாதிபதி ப்ராங்ளின் ரூஸ்வெல்ட்தான் எங்களின் வருத்தத்துக்குக் காரணம்" எனப் பதிவிட்டார். ஒலிம்பிக்கில் சாதித்த பின்னும், தன் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஓவன்ஸுக்கு இல்லை. நான்கு ஒலிம்பிக் தங்கங்கள் பெற்றும் ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்ததால் தடகளத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர் குதிரைகளோடு ஓடியும், சில புதிய உள்ளூர் வீரர்களோடு ஓடியும் காசு சேர்த்தார் ஓவன்ஸ். அதன் பின்னர் பெட்ரோல் பங்க், dry cleaning எனச் சின்ன வேலைகளை, தன்னை நம்பி வந்த தன் காதல் மனைவி மற்றும் தன் மகளின் வாழ்வாதாரத்தின் பொருட்டு செய்து வந்தார். பின்னர், சில தனியார் நிறுவனங்களில் வேலை செய்து, ஒலிம்பிக் கமிட்டியிலும் இடம் பெற்றார். 1976-ம் ஆண்டு ஜனாதிபதி விருது, 1979-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது. தன் பத்தாவது வயதில் வந்த நுரையீரல் தொற்று விட்டுபோன செல்களால் உருவாகிய புற்றுநோயால் 1980-ம் ஆண்டு மார்ச் 30-ல் இறந்து போனார்.

அவருக்குப் பின் பல கறுப்பின வீரர்கள் தடகளத்தில் கோலோச்சியிருக்கலாம். பல சாதனைகளைச் செய்திருக்கலாம். இன்று தடகள உலகையே தன் வசமாக்கிய உசைன் போல்ட் 2009-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தான் பெற்ற பதக்கங்களையும், நிகழ்த்திய உலக சாதனைகளையும் ஓவன்ஸுக்குச் சமர்ப்பிப்பதாகச் சொன்னார். போல்ட் பெர்லினில் உலக சாதனை நிகழ்த்தியதும், ஓவன்ஸ் நிகழ்த்தியதும் அவர்களின் 22-ம் வயதில்தான் என்பது சுவாரஸ்யம். `இவரை விட வேறெந்த விளையாட்டு வீரரும் அடக்குமுறை, இனவெறி, சர்வாதிகாரம் இவற்றிற்கு எதிராகப் போராடியதில்லை’ என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கார்டர் கூறியுள்ளார்.

இன்று கறுப்பின வீரர்கள் தடகளத்தில் கோலோச்சுவதற்கான விதை ஜெஸ்ஸி ஓவன்ஸ் போட்டது. ``எல்லோருக்கும் ஆசை இருக்கும் அந்த ஆசை நிறைவேறத் தீர்மானமும் அதற்கான மனவுறுதியும் இருந்தால் போதும்" என்ற கூறி ஹிட்லரின் சர்வாதிகாரக் கோட்டையில் தங்க வேட்டையாடிய கறுப்பு வைரம் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பிறந்ததினம் இன்று.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

தென் கிழக்காசிய நாடான வியட்நாமில் பாம்பு இறைச்சி ஒரு சுவையான உணவு. பாம்பு இறைச்சியை உண்ணும்போது, பாம்பின் ரத்தம் அல்லது பித்தப்பை அல்லது ஈரலோடு ஒயினை குடிக்கலாம். பாம்பு இறைச்சியும், ரத்தமும் ஆண்மையை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், 50 வயதுக்கு கீழானோர் குடித்தால் ஆண்மை இழக்கலாம் என கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

ஜாக் மா: அலிபாபா நிறுவனர் பற்றிய 5 சுவாரசிய தகவல்கள்

உலகின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாக் மா அந்நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார்.

Alibaba Jack Maபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தனது 55ஆம் பிறந்தநாளன்று அவர் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

உலகில் பரவலாக அறியப்பட்ட தொழில் அதிபர்களின் ஒருவரான ஜாக் மா குறித்த ஐந்து சுவாரசிய தகவல்கள் இதோ.

1. ஆங்கில ஆசிரியர்

சீனாவின் ஹாங்சோ நகரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜாக் மா தனது தொழில்முறை வாழ்க்கையை ஓர் ஆங்கில ஆசிரியராகத் தொடங்கினார்.

Jack Maபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கணினி நிரல் மொழிகள் குறித்த அறிவு எதுவும் இல்லாமலே 1990களில், நண்பர்களின் உதவியோடு அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கினார்.

2. மிகவும் செல்வந்தர்

2017ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி ஜாக் மா சீனாவின் மூன்றாவது பெரிய பணக்காரர்.

அவரது சொத்து மதிப்பு 36.6 பில்லியன் அமெரிக்க டாலர்.

அலிபாபா நிறுவனத்தின் 9% பங்குகள் இவர் வசம் உள்ளன. இவற்றின் மதிப்பு 420 பில்லியன் அமெரிக்க டாலர்.

3. ஜாக் மா பவுண்டேஷன்

ஜாக் மா பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்ய விரும்புவதாக 2013இல் அலிபாபாவின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியபோது அவர் கூறியிருந்தார்.

சீனாவில் கிராமப்புறக் கல்வியை மேம்படுத்த ஜாக் மா பவுண்டேஷன் 30 மில்லியன் டாலர் அளிப்பதாக உறுதியளித்தது.

4. டிரம்ப் பாராட்டு

Alibaba Jack Maபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், டொனல்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு சில நாட்கள் முன்பு ஜாக் மாவை சந்தித்தார்.

அப்போது "அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளையும் நேசிக்கும் மிகச்சிறந்த தொழில் அதிபர்," என்று டிரம்ப் இவரைப் பாராட்டினார்.

5. எப்போதும் வெளிச்சத்தில் இருக்க விரும்புவார்

Alibaba Jack Maபடத்தின் காப்புரிமைAFP

2017இல் நடந்த அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில், 'திரில்லர்' (Thriller) இசைத் தொகுப்பில் மைக்கேல் ஜேக்சன் அணிந்திருந்த உடையுடன் தோன்றினார் ஜாக் மா.

கடந்த ஆண்டு கோங் ஷோ தாவோ (Gong Shou Dao) எனும் குங்-பூ குறும்படத்தில் நடித்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளாக தாய்-சி எனும் சீன தற்காப்பு கலையை பயிற்சி செய்து வருகிறார்.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

புகைப்படச் சுருள் கண்டுபிடித்த நாள் (13-9-1898)

 
 
 
 
புகைப்படச் சுருள் கண்டுபிடித்த நாள் (13-9-1898)
 
'ஹனிபல் குட்வின் செலுலோயிட்' என்பவர் 1898-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி புகைப்படச் சுருளை கண்டுபிடித்தார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1914 - முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

* 1923 - ஸ்பெயினில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினார்.

* 1939 - கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.

* 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.

* 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.

* 1943 - சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.

* 1948 - இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.

* 1949 - இலங்கை, இத்தாலி, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்டான் உள்ளிட்ட 6 நாடுகள் ஐநாவில் அங்கீகாரம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.

 

 

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் : 13-9-1989

 
 
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் : 13-9-1989
 
தென்ஆப்பிரிக்காவில் நிறவெறி என்பது 1948- 90-ம் ஆண்டுக்கும் இடையில் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த தேசியக் கட்சி அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்ட அடிப்படையிலான இனவாரித் தனிமைப்படுத்தல் முறையைக் குறிக்கும். இதனை எதிர்த்து  1989-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி மாபெரும் போராட்டம் டெஸ்மண்ட் டூட்டு தலைமையில் இடம்பெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1953 - நிக்கிட்டா குருஷேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

* 1968 - அல்பேனியா வார்சா ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

* 1971 - நியூயோர்க்கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

* 1993 – நார்வேயில் இடம்பெற்ற ரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத்துக்கும் இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.

* 1994 - யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென் முனையைக் கடந்தது.

* 1999 - மாஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

சிஎஸ்கே மேட்ச் டிக்கெட் போல் திருமண அழைப்பிதழ்: தோனியின் சூப்பர் ரசிகர் ருசிகரம்

 

 
csk%20match%20ticketjpg

சிஎஸ்கே மேட்ச் டிக்கெட் வடிவில் திருமண அழைப்பிதழ்.

ஐபிஎல் டாப் டீமான தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேட்ச் டிக்கெட் போல் தனது திருமண அழைப்பிதழை வடிவமைத்து ஈர்த்துள்ளார் தீவிர ரசிகர் கே.வினோத்.

கே.வினோத் கூறுவது என்ன? “சிஎஸ்கே மற்றும் தோனியின் சூப்பர் ரசிகனான நான் என்னுடைய திருமண அழைப்பிதழ் தனிச்சிறப்பாக அமைய வேண்டும் என்று எண்ணினேன்” என்கிறார் 29 வயது வினோத்.

 

இவருக்கு நேற்று, புதன்கிழமை திருமணம் சென்னையில் நடைபெற்றது.

marriagejpg
 

ஐடி துறையில் பணிபுரியும் வினோத், சிஎஸ்கேவின் தீவிர ரசிகருமான கிராபிக் டிசைனருமான தன் நண்பரிடம் ஆலோசித்து இந்த சுவாரஸியமான அழைப்பிதழை வடிவமைத்துள்ளார்.

இவர் தோனியின், சிஎஸ்கேவின் மிகப்பெரிய ரசிகர் என்பதால் பல வீடியோக்களை இணையத்தில் ஏற்றி அவை வைரலாகியுள்ளன.

2015 ஐபிஎல் தொடரில் தோனியின் கையெழுத்திட்ட பேட் ஒன்றை இவருக்கு சிஎஸ்கே திடீரென பரிசளித்ததில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் வினோத்.

2018 ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. பல தடைகளை மீறி தோனி இதனைச் சாதித்தது சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com

திருமண அழைப்பிதழை டிக்கெட் போன்று வடிவமைத்து டோனி, சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகர் அசத்தல்

Link to comment
Share on other sites

 

‘நான் ஆணையிட்டால் மழை வரும்’ - நைஜீரியாவின் மழை மனிதர்கள்

நைஜீரியாவின் சில பகுதிகளில் 'மழை வரவழைப்போர்' அதிக மதிப்புடன் நடத்தப்படுகின்றனர். நண்பகலுக்குப்பின் சற்று நேரம் கழித்து ஒனேசெடு தன் சடங்குகளைத் தொடங்குகிறார். அவர் சொன்னதுபோலவே இரண்டு மணிநேரத்துக்குள் மழை பொழிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.