Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

 

உங்கள் தலைக்கு எப்படி பேன் வருகிறது தெரியுமா?

உங்கள் தலைக்கு பேன் ஏன் வருகிறது? எப்படி வருகிறது? உங்கள் ஸ்மார்ட்போன் உங்களுக்கு பேன் வர காரணமாக இருக்கிறது.

அது எப்படி?

இது குறித்த பல சந்தேகங்களுக்கு விடையளிக்கும் இக்காணொளியை பாருங்கள். உங்கள் தலையில் பேன் எவ்வாறுவருகிறது என்று தெரியுமா? பிறர் தலையோடு உங்கள் தலை ஒட்டி இருப்பது பொருட்டு தலையில் பேன் உருவாகிறது. சிறு வயது நபர்கள், ஒருவரோடு ஒருவர் தலையை நெருக்கமாக வைக்கும்போது பேன் உருவாகிறது. நீண்ட கூந்தல் இருந்தாலும் இந்த பிரச்சனை வரும்.

குறிப்பாக, கூந்தலை இறுக்கமாக கட்டாத பொழுதுகளில் வரும். எனவேதான் குழந்தைகளுக்கு தலையில் அதிகப்படியான பேன் வருகிறது. அதிகம் பேர் கொண்ட குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை வரும். பதின்ம வயது நபர்கள் அதிகமாக ஸ்மாட் ஃபோன்களை உபயோகித்தாலும் பேன்கள் வரும் வாய்ப்புள்ளது.

 

ஃபோன்கள் மூலம் அல்ல, அலைப்பேசியை பார்க்க ஒருவரோடு ஒருவர் தலையை ஒன்றாக வைப்பதனால் இந்த பிரச்சனை வரும். நீண்ட கூந்தல் இருந்தாலும் இந்த பிரச்சனை வரும். நம் தலையில் பேன் இருப்பது நமக்கு தெரிவதற்கும் முன்னரே அதை பிறருக்கு பரப்ப முடியும். உங்களுக்கு உடனடியாக அறிகுறிகள் தெரியாது மாறாக ஒவ்வாமை போன்ற உணர்வு ஏற்படும்.

மனித தலைமுடியின் வேர்கால்களை விட்டு சிறிது நேரம் மட்டுமே பேன்களால் உயிர் வாழ முடியும். எனவே பூனைகள், நாய்களுக்கு தலைப்பேன் இருப்பதில்லை. விலங்குகளிடமிருந்து வருவதில்லை. பேன்களை அகற்றும் சீப்பு மற்றும்சிகிச்சைகள் உங்களுக்கு பேன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கலாம். உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

இயற்கையைத் தேடும் கண்கள் 15: ஆன்மாவை விடுவிக்கும் கழுகு

 

 
iyarkaijpg

ஆங்கிலத்தில் ‘இஜிப்ஷியன் வல்சர்’ என்றும், தமிழில் மஞ்சள் பாறு, கிராமப்புற மக்களால் ‘பாப்பாத்திக் கழுகு’ என்றும் அழைக்கப்படும் இந்தப் பறவை, இந்தியா, மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் தென்படுகிறது. இதர கழுகு இனங்களைவிட அளவில் மிகவும் சிறியது இது.

மாடு, நாய், எலி உள்ளிட்ட உயிர்களின் சடலங்கள்தான் இவற்றின் முக்கிய உணவு. எனவே, இவற்றை குப்பை, கழிவு நிறைந்த பகுதிகளில் காண முடியும். மனிதர்கள் வாழும் பகுதியைச் சுத்தப்படுத்தும் இது, சிறந்த துப்புரவுப் பறவை. இதர கழுகு இனங்கள் அனைத்தும் தங்களது இரையை உண்பதற்கு, அவற்றினுடைய அலகு, கால்களைப் பயன்படுத்தும். ஆனால், இந்தக் கழுகு மட்டும், கல், குச்சி போன்ற சின்னச் சின்னக் கருவிகளைப் பயன்படுத்துகிறது.

 
 

ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் பகுதியில் உள்ள ஜோர்பீர் எனும் குப்பைக் கிடங்கில்தான் முதன்முதலில் நூற்றுக்கணக்கான கழுகுகளை ஒரே இடத்தில் பார்த்தேன். அவை அனைத்தும் ஒரே இனத்தைச் சேர்ந்த கழுகுகள் அல்ல. வேறு வேறு கழுகு இனங்களின் சங்கமம், அந்த இடம்!

பார்ஸி இன மக்களில் யாரேனும் இறந்தால், அவரது உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல், ‘டவர் ஆஃப் சைலன்ஸ்’ (சுடுகாடு போன்ற ஒரு பகுதி என்று வைத்துக்கொள்ளுங்கள்) எனும் இடத்தில், இந்தப் பறவைகள் உண்பதற்காக வைத்துவிடுவார்கள். பறவைகளால் அந்தச் சடலம் உண்ணப்படும்போது, அந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மா விடுதலை அடையும் என்பது அவர்களின் ஐதீகம்.

ஆனால், சமீபகாலமாக இந்தப் பறவைகளின் எண்ணிக்கை ‘டைக்ளோஃபினாக்’ பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் குறைந்து வருகிறது. போதிய எண்ணிக்கையில் கழுகுகள் இல்லாததால், பார்ஸி மக்களும் தங்களது சடங்கிலிருந்து விலகி, மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

2,000 ஆண்­டுகள் பழ­மை­யான சவப்­பெட்­டியில் தேங்­கி­யுள்ள நீரை அருந்த அனு­ம­திக்க கோரிக்கை

 

 
 

2,000  ஆண்­டுகள் பழ­மை­யான  எகிப்­திய கல்லால் செதுக்­கப்­பட்ட அலங்­கார சவப்­பெட்­டி­யினுள் காணப்­பட்ட  சிவப்பு நிற­மான  திர­வத்தை  அருந்த  அனு­ம­திக்கக் கோரி  பல்­லா­யி­ரக்­க­ணக்­கான  மக்கள்  மனு­வொன்றில் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.

அந்த  சிவப்பு நீரா­னது  மர­ணத்தை  அண்­ட­வி­டாது உயிரை சஞ்­சீ­வி­யாக பேணும் ஒரு அமுதம் என அவர்கள் கரு­து­கின்­றனர். ஆனால் நிபு­ணர்­களோ அது சாக்­கடை நீர்  எனத் தெரி­விக்­கின்­றனர்.

egipth.jpg

கடற்­கரை நக­ரான அலெக்­ஸாண்ட்­றி­யாவில் மேற்­படி  கல்­லாலான சவப்­பெட்டி  இந்த மாத ஆரம்­பத்தில் திறந்து வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து  அது தொடர்­பில பல்­வேறு ஊகங்கள் பரவி வரு­கின்­றன.

அந்தக் கல்­லா­லான சவப்­பெட்டி பண்­டைய  ஆட்­சி­யா­ளர்கள் எவ­ருக்கும் உடை­மை­யா­னது அல்ல  என ஆய்­வா­ளர்­களால்  தெரி­விக்­கப்­ப­டு­கின்ற நிலை­யிலும் அந்த சவப்­பெட்­டி­யி­லி­ருந்த எச்­சங்கள் குறித்து மேலும் விப­ரங்­களைக் கண்­ட­றிய  அவற்றை  மறு­சீ­ர­மைக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்­நி­லை­யில அந்த கறுப்பு நிற கல்­லா­லான சவப்­பெட்­டியில் தேங்­கி­யுள்ள நீரை அருந்­து­வ­தற்கு கோரிக்கை விடுக்கும் விண்­ணப்ப மனுவில் 11,000  பேருக்கும் அதி­க­மானோர் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

கிரேக்க ஆட்­சி­யா­ள­ரான மகா  அலெக்­ஸாண்­ட­ருக்கு இந்த  சவப்­பெட்டி  சொந்­த­மா­னது என அவர்கள் நம்புகின்றனர். அந்த சவப்­பெட்­டி­யி­லான  நீரை அருந்­து­வது  அதன் சக்­தி­களை பெற்­றுக்­கொள்ள வழி­வகை செய்யும் என  அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சவப்பெட்டி திறக்கப்பட்டமையானது  சாபத்தை கட்டவிழ்த்து விடுவதாகவுள்ளதாக வேறு சிலர் தெரிவித்துள்ளனர். அந்த மர்மமான   10  அடி நீளமும் 6.5   அடி உயரமும் கொண்ட சவப்பெட்டி  தரையிலிருந்து 16  அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தது.

30  தொன் நிறையுடைய அந்த சவப்பெட்டியில் 3  உருக்குலைந்த  எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன. தற்போது அந்த 3  எலும்புக்கூட்டு எச்சங்களும்  அலெக்ஸாண்டறியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில்  கல்லாலான சவப்பெட்டி  இராணுவ அருங்காட்சியகமொன்றுக்கு இடமாற்றப்படவுள்ளது.

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

‘மோக நிலையில் நிரந்தரமாக இருத்தலாகாது’
 
 

image_fac645e85c.jpgகாதலர்கள், தமக்குள் ஏதாவது பிணக்கு ஏற்பட்டுவிட்டால் அதுவே, உலகில் மிகப்பெரும் தாக்கம் என நினைத்துக் கொள்வார்கள். பின்னர், அவர்களுக்கிடையில் பிரச்சினைகள் தீர்ந்ததும், தங்களைப் போல சந்தோஷமாக வாழ்வதற்கு, கொடுத்து வைத்தவர்கள் வேறு யாரும் இல்லை எனச் சொல்லிக் கொள்வார்கள். 

மீனைத் தண்ணீரில் இருந்து எடுத்தால் அது துடிக்கும். அடுத்த வினாடி, அதைத் தண்ணீருக்குள் விட்டால், துடிப்புடன் உலா வரும். காதல் இல்லாத வாழ்வு, ஒரு வாழ்வா என எண்ணுபவர்கள், அது மட்டுமே வாழ்க்கையல்ல எனத் தங்களைத் தயார்படுத்துவது கிடையாது. 

மோக நிலையில் எவரும் நிரந்தரமாக இருத்தலாகாது. பிரச்சினைகள், மன உறுத்தல்கள் காதலர்களுக்கு மட்டுமா இருக்கிறது? இல்லையே! 

காதலர்கள், தங்களுக்கான சமூகப் பொறுப்பு பற்றியும் கருதுதல் வேண்டும் அல்லவா? காதல் இனிமையானதும் சுகமானதும்தான். மன வைராக்கியமான, உறுதிமிகு காதலில் கலந்தவர்கள், சகல உறவுகளையும் உதறாத, உறவுபிணைப்புகளிலும் இறுக்கத்தை வைத்திருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று…. ஜூலை 25 நிகழ்வுகள்…!

 
 
 

547: இரண்டாம் ஹென்றி பிரான்ஸின் மன்­ன­னாக முடி­சூ­டினார்.

1593: பிரான்ஸின் நான்காம் ஹென்றி புரட்­டஸ்­தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்­தோ­லிக்­கத்­துக்கு பகி­ரங்­க­மாக மதம் மாறினார்.

1603: ஸ்கொட்­லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் பிரித்­தா­னி­யாவின் முத­லா­வது மன்­ன­னாக முடி சூடினார்

1799: பிரான்ஸின் நெப்­போ­லி­யனின் படைகள் எகிப்தில் முஸ்­தபா பாஷா தலை­மை­யி­லான ஒட்­டோமான் படை­யி­னரை சமரில் வென்­றன.

1894: முத­லா­வது சீன – -­ஜப்­பா­னியப் போர் ஆரம்­ப­மா­னது.

1898: புவேர்ட்டோ ரிக்கோ மீதான ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படை­யெ­டுப்பு ஆரம்­ப­மா­னது. முத­லா­வது அமெ­ரிக்கப் படை­யினர் குவா­னிக்கா துறை­மு­கத்தில் தரை­யி­றங்­கினர்.

1907: ஜப்­பானின் ஆட்­சியின் கீழ் கொரியா வந்­தது.

1917: கன­டாவில் தற்­கா­லிக ஏற்­பா­டாக வரு­மான வரி அறி­முகம் செய்­யப்­பட்­டது.

1920: சிரி­யாவின் டமஸ்கஸ் நகரை பிரான்ஸ் கைப்­பற்­றி­யது.

1934: ஆஸ்­தி­ரிய ஜனா­தி­பதி எங்­கல்பேர்ட் டொல்ஃபஸ், நாஸி­க­ளினால் கொலை செய்­யப்­பட்டார்.

1943: இத்­தா­லிய சர்­வா­தி­காரி பெனிட்டோ முசோ­லினி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.

1944: இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸில் இடம்­பெற்ற நோர்­மண்டி சமரில் 5,021 கனே­டிய படை­யினர் கொல்­லப்­பட்­டனர்.

1983: கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்­கடைச் சிறையில் குட்­டி­மணி, தங்­கத்­துரை, ஜெகன் உட்­பட 37 தமிழ் அர­சியல் கைதிகள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1984: சல்யூட் 7 விண்­க­லத்தில் சென்ற சோவியத் யூனியனின் ஸ்வெட்­லானா சவீத்ஸ்­கயா விண்­வெ­ளியில் நடந்த முத­லா­வது பெண் என்ற பெரு­மையைப் பெற்றார்.

1993: லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்­கு­தலை ஆரம்­பித்­தது.

1993: தென் ஆபி­ரிக்­காவில் சென் ஜேம்ஸ் தேவா­ல­யத்தில் 11 மத­கு­ருக்கள் சுட்டுப் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1994: இஸ்­ரே­லுக்கும் ஜோர்­தா­னுக்கும் இடையில் வோஷிங்­டனில் சமா­தான ஒப்­பந்தம் ஏற்­பட்டு

1948ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த முறுகல் நிலை தணிந்­தது.

1996: புரூண்­டியில் இரா­ணுவப் புரட்சி ஏற்­பட்­டது.

1997: கே.ஆர். நாரா­யணன் இந்­தி­யாவின் 10 ஆவது ஜனா­தி­பதியானார்.

1998: சூரியன் எவ்.எம். வானொலி சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது. இன்று தனது 20 ஆவது ஆண்டு நிறைவை சூரியன் எவ்.எம். கொண்­டா­டு­கி­றது.

2000: பிரான்ஸின் கொன்கோர்ட் சுப்­பர்­சோனிக் விமானம் பாரிஸ் நகரில் வீழ்ந்­ததில் அதில் பயணம் செய்த 109 பேரும் தரையில் 4 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

2007: பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியானார்

2010: ஆப்கானிஸ்தான் யுத்தம் தொடர்பான பெரும் எண்ணிக்கையான இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

http://metronews.lk

Link to comment
Share on other sites

3 கோடி இருந்தால் நீங்களும் அயர்ன்மேனாக மாறி பறக்கலாம்... ரெடியா?

 
 

இந்தக் கவசத்தில் 3D பிரின்ட் பாகங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் 12,000 அடி உயரம் வரை பறக்க முடியும்.

3 கோடி இருந்தால் நீங்களும் அயர்ன்மேனாக மாறி பறக்கலாம்... ரெடியா?
 

வானில் பறந்து திரியும் பறவைகளைப் பார்த்து அதைப் போலவே தானும் பறக்க வேண்டும் என்ற ஆசை மனிதனுக்குப் பல காலமாகவே இருந்தது. விமானம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அதில் பாதி நிறைவேறிவிட்டது. ஆனால், அதில் சிலருக்கு திருப்தியில்லை, என்னதான் விமானத்தில் ஏறிப் பறந்தாலும் ஒரு பறவை பறப்பது போல சுதந்திரமாகப் பறக்க முடியாதே?. அதற்குப் பதிலாக உடலில் ஏதாவது உபகரணத்தை மட்டும் பொருத்திக்கொண்டு பறக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் பல வருடங்களாகவே நடைபெறாமல் இல்லை.

நாமும் பறக்கலாம் அயர்ன்மேன்

அப்படி ஒரு கருவியை நினைத்துப் பார்க்கும் பலருக்கும் ஹாலிவுட் படமான அயர்ன் மேன் ஞாபகத்துக்கு வரக்கூடும். அந்தப் படத்தில் கதாநாயகன் தனது பறக்கும் திறன் கொண்ட கவசத்தால் எதிரிகளை `வெச்சு’ செய்வார். கற்பனையாக இருந்தாலும் கூட பலருக்கு அது பிடித்திருந்தது. ஆனால், அப்படி ஒன்றை நிஜத்தில் உருவாக்குவது கடினமான விஷயம்தான் என்றாலும் கிட்டத்தட்ட அதைப் போலவே ஒரு கவசத்தை உருவாக்கியது மட்டுமன்றி அதை விற்பனைக்கும் கொண்டு வந்திருக்கிறார்.

 

 

மூன்று கோடி இருந்தால் நீங்களும் அயர்மேன்தான்:

http_%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2ரிச்சர்ட் பிரவுனிங்

பார்ப்பவர்களை எல்லாம் வியக்க வைக்கும் இந்தக் கவசத்தை உருவாக்கியவர் ரிச்சர்ட் பிரவுனிங்( Richard Browning). பிரிட்டனைச் சேர்ந்த இவர் ராயல் மரைன்ஸ் என்ற ராணுவப் பிரிவில் சில காலம் பணியாற்றியவர் அதன் பிறகு எண்ணெய் வர்த்தகம் செய்து கொண்டிருந்தார். பின்னர் இது போல ஒரு பறக்கும் கவசத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றவே வேலையை விட்டு விட்டு அதைச் செய்தும் காட்டியிருக்கிறார். 

 

 

ரிச்சர்ட்டுக்கு இப்படி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானதில் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் அவரது குடும்பப் பின்னணி அப்படி. அவரது தந்தை ஒரு ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர், தாத்தா ஒரு விமான பைலட் மற்றும் போர் விமானியும் கூட, தாய்வழி தாத்தா ஹெலிகாப்டர் உற்பத்தியாளராக இருந்தவர். இப்படி அவரது குடும்பமே ஏதோ ஒரு வகையில் வானில் பறப்பதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள். இதை உருவாக்குவதற்கான முயற்சியில் கடந்த 2017-ம் ஆண்டில்தான் கிராவிட்டி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

 

 

பறக்கும் கவசம்

கடந்த வருடம் இதன் மாதிரியை உருவாக்கி இதைப் பரிசோதிக்கத் தொடங்கியிருந்தார். அப்பொழுதே இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. தீவிர பரிசோதனைக்குப் பிறகு தற்பொழுது கவசத்தின் வடிவத்தை இறுதிப்படுத்தியிருக்கிறார். இது போன்ற கவசங்களை வடிவமைப்பது சற்று கடினமான விஷயம். முதலில் அது எடை குறைவாக இருக்க வேண்டும், மனிதனின் எடையைச் சுமக்க வேண்டும். இதில் பயன்படுத்தப்படும் எரிபொருளால் விபத்து எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது எனப் பல்வேறு சவால்கள் இது போன்ற கவசத்தை உருவாக்குவதில் இருக்கின்றன.

 

 

முதுகுக்குப் பின்னால் ஒன்றும், ஒவ்வொரு கைகளிலும் இரண்டுமாக இந்தக் கவசத்தில் மொத்தம் ஐந்து ஜெட் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் மொத்தமாகச் சேர்ந்து 1,050-hp திறனை அளிக்கும். இது தரையிலிருந்து மேலெழும்பிப் பறப்பதற்கு போதுமானதாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்துவதற்கான கன்ட்ரோல்களும், திசை மாற்றுவதற்கான அமைப்பும் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 3D பிரின்ட் பாகங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் 12,000 அடி உயரம் வரை பறக்க முடியும்.

 

பறக்கும் கவசம்

இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இதன் பறக்கும் நேரம் மிகவும் குறைவு தற்பொழுது இதன் மூலமாக மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மட்டுமே பறக்க முடியும். மற்றொன்று இதன் பாதுகாப்பு, வானில் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென செயலிழந்தால் நிலைமை மோசமாகும் வாய்ப்புகள் அதிகம். லண்டனில் உள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தற்பொழுது இந்தக் கவசம் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதன் விலை £ 3,40,000 பவுண்டுகள் இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

இந்தக் கவசத்தை ராணுவத்திலும், மீட்புப்பணிகளின் போதும் பயன்படுத்த முடியும் என ரிச்சர்ட் பிரவுனிங் தெரிவித்திருக்கிறார். இது போன்று இதற்கு முன்பே பறக்கும் கவசங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அவற்றில் சிலவை மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கின்றன. அவையும் இது போலவே மிகக் குறைவான நேரமே பறக்கும் திறன் கொண்டவை. இருந்தாலும் இதுபோன்ற முயற்சிகளை ஒரு தொடக்கப்புள்ளியாகப் பார்க்கலாம். வரும் காலங்களில் இதை அடிப்படையாக வைத்து அதிக திறன் கொண்ட மேம்பட்ட கவசம் கண்டுபிடிக்கப்படலாம். அதன் பிறகு என்ன ஒவ்வொருவருமே அயர்ன் மேனாக மாறலாம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

இந்திய பெருங்கடலின் மத்தியில் ஒரு 'பேய் தீவு' : சுவாரஸ்ய தகவல்கள்

 

அந்தமானிலுள்ள தொலைத்தூர மற்றும் கைவிடப்பட்ட பிரிட்டிஷ் குடியேற்றமான ராஸ் தீவு, அதன் உரிமையாளரான இயற்கையிடமே மீண்டும் சென்றுள்ளது.

இந்திய பெருங்கடலின் நடுவில் ஒரு பேய் தீவுபடத்தின் காப்புரிமைNEELIMA VALLANGI

இந்தியாவின் வியத்தகு தீவுகள்

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் 572 வெப்பமண்டல தீவுகளை கொண்ட ஒரு தீவு கூட்டமாகும். இவற்றில் 38 தீவுகளில்தான் மக்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை விட தென்கிழக்கு ஆசியாவிற்கு நெருக்கமாக இந்த தீவுகள் அமைந்துள்ளன.

வியப்பளிக்கும் கடற்கரைகள், செழுமையான கடல்வாழ் உயிரினங்கள், சிறந்த பவளப்பாறைகள் மற்றும் இதுவரை யாரும் செல்லாத பெரிய பழங்காலக் காடுகள் இத்தீவுகளின் அடையாளமாகும்.

ஆனால், இத்தகைய வியத்தகு பார்வைகளுக்கு அப்பால், ஒரு இருண்ட கடந்த காலமும் உள்ளது.

இந்திய பெருங்கடலின் நடுவில் ஒரு பேய் தீவுபடத்தின் காப்புரிமைNEELIMA VALLANGI

காலனிய குடியேற்றத்தின் மர்மமான எச்சங்கள்

இந்த தீவுகளில் ஒன்றான ராஸ் தீவு, முழுமையற்ற, கண்கவர் பேய் நகரமாக உள்ளது, இங்குதான் 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் குடியேற்றத்தின் சிதிலங்கள் எஞ்சியுள்ளன.

1940 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட இந்த தீவுக்கு இயற்கை மீண்டும் உரிமை கோரி எடுத்துக்கொண்டது.

சொகுசான மாளிகைகள், மிக பெரியதொரு தேவாலயம், நடமாடும் அறைகள், கல்லறை ஒன்று என அனைத்தும் காடுகளால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டன.

இந்திய பெருங்கடலின் நடுவில் ஒரு பேய் தீவுபடத்தின் காப்புரிமைNEELIMA VALLANGI

தனிமைப்படுத்தப்பட்ட காலனி

1857 ஆம் ஆண்டில், ஓர் எதிர்பாராத இந்திய எழுச்சிக்கு எதிர்வினையாற்றிய பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவை சேர்ந்த கலகக்காரர்களுக்கு தண்டனை அளிக்கும் இடமாக இந்த தொலைதூரத் தீவுகளை தேர்ந்தெடுத்தது.

பிரிட்டிஷ் முதன்முதலில் 1858 ஆம் ஆண்டில் 200 இந்திய கைதிகளுடன் இத்தீவுக்கு வந்தபோது உட்செல்லமுடியாத வகையில் அடர்ந்த காடாக இது காணப்பட்டது.

0.3 சதுர கிலோமீட்டருக்கும் சற்றே அதிகமான பரப்பை கொண்ட ரோஸ் தீவில் தண்ணீர் இருந்ததன் காரணமாக பிரிட்டிஷாரின் முதலாவது கைதிகள் தங்குமிடமாக இது மாற்றப்பட்டது.

அடர்த்தியாக காணப்பட்ட காடுகளை சுத்தம் செய்யும் கடுமையான பணியை கைதிகளிடம் கொடுத்த அதிகாரிகள் அதுவரை கப்பலிலேயே தங்கியிருந்தனர்.

இந்திய பெருங்கடலின் நடுவில் ஒரு பேய் தீவுபடத்தின் காப்புரிமைNEELIMA VALLANGI

புதிய தொடக்கம்

கைதிகளை தங்கவைக்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ராஸ் தீவிலிருந்த கைதிகள் அருகில் இருக்கும் தீவுகளிலுள்ள சிறைச்சாலைகளுக்கும், ராணுவ குடியிருப்புகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

எனவே, ராஸ் தீவானது நிர்வாகத்தின் தலைமையகமாகவும், உயரதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தாங்கும் பிரத்யேகமான இடமாகவும் மாறியது. ஏனைய தீவுகளிருந்த தண்ணீர் சார்ந்த பிரச்சனையின் காரணமாக இறப்பு விகிதம் அதிகமாக இருந்த நிலையில், செழித்து காணப்பட்ட ராஸ் தீவில் மிகப் பெரிய விடுதிகளும், டென்னிஸ் மைதானங்களும் அமைக்கப்பட்டன.

இந்திய பெருங்கடலின் நடுவில் ஒரு பேய் தீவுபடத்தின் காப்புரிமைNEELIMA VALLANGI

இறுதி வெளியேற்றம்

தொலைதூரத்தில் இருக்கும் இந்த சிறிய தீவில் டீசல் ஜெனரேட்டர் மூலம் மின் நிலையம் செயல்பட்டதால், சுற்றிலுமுள்ள பல தீவுகள் துன்பத்தில் மூழ்கியிருந்தாலும் ராஸ் தீவு ஒளிமயமான சொர்க்கத்தைப் போல காட்சியளித்தது.

1938 ஆம் ஆண்டு ராஸ் தீவில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் 1942 முதல் இத்தீவின் செயல்பாடு வெகுவாக குறைந்தது.

அதன்பிறகு ஜப்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இங்கிருந்து பிரிட்டிஷ் வீரர்கள் தப்பித்து சென்றாலும், மீண்டும் இப்பகுதியானது அவர்களின் ஆளுகையின் கீழ் வந்தது. அதன் பிறகு 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ராஸ் தீவானது அதன் இயல்பான நிலையை அடைந்தது.

இந்திய பெருங்கடலின் நடுவில் ஒரு பேய் தீவுபடத்தின் காப்புரிமைNEELIMA VALLANGI

இயற்கை அதன் போக்கை நோக்கி செல்லும்

தீவின் இடிபாடுகள் அதன் கடுமையான மற்றும் கொடூரமான காலனித்துவ காலம் குறித்த ஒரு சிறிய பார்வையை வழங்குகிறது.

களிமண் கூரைகள், சலசலப்பு மிகுந்த பஜார், இத்தாலிய ஓடுகள் மற்றும் கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவை எல்லாம் மறைந்துவிட்டன. ஆனால், ஆணையாளரின் பங்களா, மற்ற அதிகாரிகளுக்கான விடுதிகள், பிரஸ்பைடிரியன் சர்ச் மற்றும் மற்ற பெயரிடப்படாத சுவர்கள் மற்றும் தடையின்றி நீண்டு வளரும் ஆலமரத்தின் விழுதுகள் ஆகியவை அப்படியே உள்ளன.

வறண்டுபோன வேட்டை திட்டங்கள்

பொழுதுபோக்குக்காக வேட்டையாடுவதற்காக 1900களின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் பல்வேறு வகையான மான்களை அந்தமான் தீவுகளில் அறிமுகப்படுத்தினர்.

இயற்கையாக இங்கிருந்த மான்களை வேட்டையாடுவதற்கான விலங்குகள் இல்லாததால், அவற்றின் எண்ணிக்கை அபரிதமாக அதிகரித்ததுடன், தாவரங்களை அதிகளவில் உண்டதன் காரணமாக பின்னாளில் அப்பகுதியில் புதிய காடுகள் உருவாவதை மட்டுப்படுத்தும் நிலைக்கு சென்றது.

தற்போது முயல்கள் மற்றும் மயில்களோடு இணைந்து மான்களும் ராஸ் தீவின் அடையாளங்களுள் ஒன்றாக பார்வையாளர்களை மகிழ்விக்கின்றது.

இந்திய பெருங்கடலின் நடுவில் ஒரு பேய் தீவுபடத்தின் காப்புரிமைNEELIMA VALLANGI

எதிர்காலத்தை பற்றிய ஒரு பார்வை

கீழ்மட்ட அதிகாரிகளின் பொழுதுபோக்குகளுக்காக கட்டப்பட்ட படத்தில் காணப்படும் இந்த விடுதியில், அக்காலத்தில் நடனமும் இசையும் ஆக்கிரமித்திருந்த நிலையில், தற்போது உடைந்த சுவர்களை கொண்ட அந்த கட்டடத்தில் பறவைகளின் ஒலியே எஞ்சியுள்ளது.

இந்திய காலனித்துவத்தின் இருண்ட வரலாற்றை கொண்ட இந்த காலனி மூடப்பட்டு கிட்டத்தட்ட எட்டு தசாப்தகாலங்கள் ஆகியுள்ளன. ராஸ் தீவு இப்போது இந்திய பெருங்கடலில் மறந்துவிட்ட ஒரு பகுதியாகும். மேலும், மனிதர்கள் ஓரிடத்தைவிட்டு சென்றவுடன் நீண்ட காலம் கழித்து, அவர்களின் உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு கிளர்ச்சியூட்டும் பார்வையை இது வழங்குகிறது.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

பெண்கள் 360: மல்லுக்கட்டும் பெண்கள்

 

 
mallujpg

மல்லுக்கட்டும் பெண்கள்

பாகிஸ்தானியர்கள் வரும் 25-ம் தேதி தங்களது அடுத்த அரசைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவு அதிக அளவிலான பெண்கள் போட்டியிடுகிறார்கள். 272 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் தேர்தலில், 171 பெண்கள் போட்டியிடுகிறார்கள்.  ஆணாதிக்கம் கொண்ட பழங்குடிப் பகுதியில் முதன்முறையாக அலி பேகம் என்ற பெண் போட்டியிடுகிறார். மேலும், இந்தத் தேர்தலில் ஐந்து திருநங்கைகள் போட்டியிடுகிறார்கள். 2013-ல்  நடைபெற்ற தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

       
 
 
mudijpg
 

என் உடலில் முடி உண்டு

பெண்களின் உடல் முடியற்று இருக்க வேண்டும்; பெண்களின் உடலில் முடி இருந்தால் அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துகள் பெண்களின் மீது திணிக்கப்படுகின்றன. திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் முடியற்ற வழுவழுப்பான சருமத்துடனேயே பெண்கள் காட்டப்படுகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பில்லி எனும் ரேஸர் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் பெண்கள் தங்கள் உடலில் உள்ள முடியை ஷேவ் செய்வது காட்டப்படுகிறது. பெண்களின் கால், கழுத்து, வயிற்றில் உள்ள முடிகள் நெருக்கமாகக் காட்டப்பட்டுள்ளதைப் பல பெண்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளனர். உடல் முடி குறித்து இன்னும் நேர்மறையாக நினைக்க, இந்த விளம்பரம் உதவுவதாக இதை ஆதரிக்கும் பெண்கள் கூறுகின்றனர்.

birth%20certijpg
 

தந்தையுமானவள்

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. மணமுறிவுக்குப் பின், செயற்கை முறையில் கருத்தரித்து ஒரு பெண் குழந்தையை மதுமிதா ரமேஷ் பெற்றுக்கொண்டார். அந்தக் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழை அளித்த திருச்சி மாநகராட்சி, தந்தை என்ற பகுதியில் பிரசவத்தின்போது மதுமிதாவுக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர் மனீஷ் மதன்பால் மீனா என்பவரின் பெயரைச் சேர்த்து விட்டது. இதை எதிர்த்து திருச்சி மாநகராட்சிக்கு எதிராக அவர் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

sabarimalaijpg
 

சபரிமலையில் பெண்கள்

சபரிமலைக் கோயிலுக்குள் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முன் விசாரணைக்கு வந்தது. பெண்கள் கோயிலுக்குள் நுழையத் தடைவிதிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அப்போது அவர் கருத்து தெரிவித்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபடுவதற்கு ஆண்களைப் போல் பெண்களுக்கும் உரிமை உண்டு. பெண்களுக்கென்று பிரார்த்தனை செய்யத் தனியாகச் சட்டம் இயற்ற முடியாது. இறைவழிபாடு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

isaijpg

https://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

கண்டுபிடிப்புகளின் கதை: பென்சில்

 

 
pencil%202jpg

எழுதியதையும் வரைந்ததையும் அழித்து, அழித்து சரி செய்வதற்கு பென்சிலை விட்டால் வேறு வழி இல்லை. கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பென்ல்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பேனா வந்தபோதும் பென்ல்களின் செல்வாக்குக் குறையவே இல்லை.

ரோமானியர்கள் பாபிரஸ் தாள்களில் கூரான உலோகத்தால் செய்யப்பட்ட ‘ஸ்டைலஸ்’ என்ற பொருளால் எழுதி, அந்தத் தடங்களைப் பார்த்துப் படித்தனர். பிறகு ஸ்டைலஸுக்குப் பதிலாக காரீயக் குச்சிகளால் (Lead) எழுத ஆரம்பித்தனர். இதுவே நீண்ட காலத்துக்குப் பயன்பாட்டில் இருந்தது. 1564-ம் ஆண்டு இங்கிலாந்தில் பெருமளவில் கிராபைட் (கறுப்பு கார்பன்) கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிராபைட் எழுதுவதற்கு எளிதாக இருந்ததால், ஆடுகள் மீது அடையாளம் இடப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

 
 

இத்தாலியைச் சேர்ந்த சிமோனியோ, லின்டியானா தம்பதி, கிராபைட் குச்சியை வைத்து எழுத ஆரம்பித்தனர். இப்படித்தான் முதல் பென்சில் உருவானது. அவர்களே சில முயற்சிகளுக்குப் பிறகு மென்மையான மர உருளையை இரண்டாக வெட்டி, நடுவில் குடைந்து, அதற்குள் கிராபைட் குச்சியை வைத்து, பசையால் ஒட்டி பென்சில்களை உருவாக்கினார்கள். இந்தத் தயாரிப்பு முறைதான் இன்றளவும் பென்சில் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1662-ம் ஆண்டு ஜெர்மனியில் கிராபைட் துகள்களில் இருந்து பென்சில்கள் தயாரிக்கப்பட்டன.

அடுத்த முன்னேற்றத்தைக் கொண்டுவந்தவர் பிரான்ஸைச் சேர்ந்த நிகோலஸ் ஜாக் கோன்ட்டே. 1795-ம் ஆண்டு கிராபைட் துகளுடன் களிமண்ணையும் சேர்த்து, இன்றைய நவீன பென்சிலை உருவாக்கினார். கிராபைட், களிமண் அளவை மாற்றி, பென்சில்களை உருவாக்கும்போது அழுத்தத்திலும் நிறத்திலும் மாற்றம் ஏற்பட்டது.

penciljpg

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜோசப் ஹார்ட்மத், 1790-ம் ஆண்டு Koh-I-Noor என்ற பென்சில் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். 1802-ம் ஆண்டு உரிமம் பெற்று, வியன்னாவில் பெருமளவில் பென்சில்களைத் தயாரித்த இந்த நிறுவனம், இன்றளவும் முக்கியத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

பென்சில் தயாரிப்பு உலகம் முழுதும் பரவ ஆரம்பித்தது.  உருளை, அறுங்கோண வடிவில் மரக்குச்சியை உருவாக்கி, அதற்குள் களிமண் கலந்த கிராபைட் வைக்கப்பட்டு பென்சில்கள் உருவாக்கப்பட்டன. சாம்பல் வண்ணத்திலிருந்து அடர் கறுப்பு வண்ணம்வரை எழுத்துகள் கிடைக்கும்படி இந்த பென்சில்கள் தயாரிக்கப்படுகின்றன. எழுத்துகளை அழிப்பதற்கு ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட பின் பென்சில்களின் பயன்பாடு அதிகரித்தது.

ரப்பர் வைத்த பென்சில், பிளாஸ்டிக் உருளைக்குள் கிராபைட் குச்சிகள் வைத்த பென்சில், கிராபைட் இங்க் பென்சில், வண்ண பென்சில் என்று ஏராளமான வகைகள் வந்துவிட்டன. வண்ண பென்சில்களில் மெழுகும் வண்ணமும் சேர்க்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் தயாராகும் பென்சில்களில் HB என்று குறிப்பிடப்பட்டிருக்கும். B கறுப்பையும் H கடினத் தன்மையையும் குறிக்கின்றன. அமெரிக்காவில் தயாராகும் பென்சில்களில் கடினத் தன்மையைக் குறிப்பதற்கு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதைப் பார்த்து நமக்குத் தேவையான பென்சில்களை வாங்கிக் கொள்ளலாம்.

பென்சில், வண்ண பென்சில் தயாரிப்பில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. ஜெர்மனியும் பிரேசிலும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

ஒரு பென்சிலில் சுமார் 35 மைல் தூரத்துக்குக் கோடு போடலாம், 45 ஆயிரம் வார்த்தைகளை எழுதலாம் என்கிறார்கள். இன்றும் பென்சிலை ஆரம்பக் காலத்தில் பயன்படுத்தியதுபோல் ‘லெட் பென்சில்’ என்றே பலரும் அழைக்கின்றனர். ஆனால், லெட் பென்சில்களே இப்போது கிடையாது. கிராபைட், களிமண் பென்சில்களே பயன்பாட்டில் இருக்கின்றன.

(கண்டுபிடிப்போம்)

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

பாடினால் சவாரி இலவசம்!

 
paadinaaljpg

பிரம்மாண்ட குரலுக்கான தேடலை நடத்தும் இசைப் போட்டிகளில் பங்கேற்பதற்காகச் சாதகம் செய்பவர்களைப் பார்த்திருப்போம். இசைச் செயலிகளில் பாடி அதை ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் பதிவேற்றி ‘பிரபலம்’ அடைய பாட்டுப் பயிற்சி செய்பவர்களையும் பார்த்திருப்போம். ஆனால், டாக்ஸியில் சவாரி செய்யப் படாதபாடுபட்டுப் பாடல்களைப் பாடிப் பயிற்சி எடுத்துக்கொள்பவர்களைப் பார்த்ததுண்டா?

பின்லாந்து நாட்டு மக்கள் அப்படித்தான் கன்னாபின்னாவென்று கானங்களை அண்மையில் பாடிக்கொண்டிருந்தார்கள். இந்த அட்டகாசத்துக்குக் காரணம், ‘Fortum singalong shuttle’ என்ற டாக்ஸி சேவை. ‘பாட்டுப் பாடினால் எங்களுடைய டாக்ஸியில் மூன்று நாட்களுக்குச் சவாரி இலவசம்’ என்ற அறிவிப்பை ஃபோர்ட்டம் நிறுவனம் அறிவித்தது. பின்லாந்தின் டர்க்யூ நகரில் நடைபெற்ற ‘ரூயிஸ் ராக் 2018’ இசைத் திருவிழாவில் இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி அண்மையில் இந்த இசைத் திருவிழா நடைபெற்ற பகுதியிலிருந்து அரோஜோக்கி நதிக்கரைவரை இந்தச் சேவையைச் செயல்படுத்தியது.

 
 

இதில் சுவாரசியமே, இதில் முன்வைக்கப்பட்ட சில விதிகள்தாம். ‘சிங்அலாங்க் ஷட்டில்’ டாக்ஸி ஓட்டுநர்கள் பணமோ அல்லது கடன் அட்டையோ பெற்றுக்கொள்ள மாட்டார்கள். வண்டியில் பயணிப்பவர்கள் பாடினால் மட்டுமே அவர்கள் டாக்ஸியை ஓட்டுவார்கள். பாடுவதை நடுவில் நிறுத்திவிட்டால் டாக்ஸியும் உடனடியாக நிறுத்தப்படும். டாக்ஸியிலேயே கரோக்கி வசதியுடன் கூடிய பாடல்கள் இசைக்கப்படும் அதனால் ஜாலியாகப் பாடலாம், ஆடலாம், கொண்டாடலாம் என அறிவித்தது.

paadinaal%202jpg
 

வெறுமனே கவன ஈர்ப்புக்காக இப்படியோரு சலுகையை இந்த நிறுவனம் முன்வைக்கவில்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதகம் விளைவிக்காத எரிபொருளைத் தயாரிக்கிறது ஃபோர்ட்டம் நிறுவனம். இவர்களுடைய ‘சிங்அலாங்க் ஷட்டில்’ டாக்ஸி மின்சாரத்தில் இயங்கும் பி.எம்.ட்பிள்யூ. ஐ3 (BMW i3) வகையறா கார். உலகின் ஆடம்பரமான காரில் சொகுசாகவும் அதே நேரம் சூழலியல் நண்பராகவும் சவாரி செய்யலாம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவே ‘சிங் இன் தி ரெயின்’ போல ‘சிங் இன் தி கார்!’ என்கிறார்கள் இவர்கள்.

 

https://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

உடலில் மிக முக்கியமான உறுப்பு எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

 
 

வாழ்க்கையில் எவை எவற்றையோ நாம் முக்கியம் எனக் கருதுகிறோம்... மிக மிக முக்கியமானதை மறந்துவிட்டு

உடலில் மிக முக்கியமான உறுப்பு எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
 

நெகிழ்ச்சிக் கதை

`துயரத்தை வெளிப்படுத்தும் மௌன மொழிதான் கண்ணீர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஃபிரெஞ்ச் தத்துவவியலாளர் வோல்டேர் (Voltaire). பிறரின் துன்பத்தையோ, துயரத்தையோ களைய முயல வேண்டாம்... காது கொடுத்துக் கேட்கக்கூட நம்மில் பலருக்கு அவகாசமில்லை. வாழ்க்கை நமக்குக் கொடுத்திருக்கும் தினசரி சவால்களை எதிர்கொள்ளவே நேரம் போதவில்லை என்பது உண்மையே. அதற்காக மனிதர்களின் அடிப்படை குணமான இரக்கத்தையே தொலைத்துவிடக் கூடாதல்லவா? ஒரு மனிதன் துன்பப்படும்போது உதவ நீளவேண்டிய கரங்களின் அவசியம் குறித்துப் பேசவேண்டிய தருணம் இது. வாழ்க்கையில் எவை எவற்றையோ நாம் முக்கியம் எனக் கருதுகிறோம்... மிக மிக முக்கியமானதை மறந்துவிட்டு. அந்த உண்மையை எடுத்துச் சொல்லும் கதை ஒன்று... 

கதை

 

 

அமெரிக்காவிலிருக்கும் சிறு நகரங்களில் ஒன்றான சார்லஸ்டோனில் (Charleston) அந்தக் குடும்பம் இருந்தது. அம்மா, அப்பா, ஒரே மகன், ஓய்வு காலத்தில் வீட்டிலிருக்கும் தாத்தா என சின்னக் குடும்பம். அப்பா ஊருக்குள் சொந்தமாக ஒரு கார் ஷெட் வைத்திருந்தார். அதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இருந்தது. அம்மா மேரிக்கு, மகன் டேவிட்டை நன்றாக வளர்க்க வேண்டும் என்கிற பெருங்கனவு இருந்தது. அவனுடைய பள்ளிப் பாடங்கள் குறித்து அவர் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. `அதற்குப் பள்ளி இருக்கிறது, ஆசிரியர்கள் இருக்கிறார்கள், தனியாகப் பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன... வாழ்க்கைப் பாடம் அது மிக முக்கியம்’ என நினைத்தார் மேரி. அதற்காகவே டேவிட்டிடம் விடுகதைகள் போடுவார், கேள்விகள் கேட்பார், கதைகளைச் சொல்வார். 

 

 

பொதுவாகவே கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும், விடுகதைகளுக்கும், புதிர்களுக்கும் உடனுக்குடன் பதில் சொல்லிவிடுவார் மேரி. ஆனால், அவர் டேவிட்டிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி ஒன்று இருந்தது. அதற்கு மட்டும் வருடக்கணக்கில் அவனுக்குப் பதில் சொல்லாமல் இருந்தார். அந்தக் கேள்வி... ``நம் உடலில் இருப்பதிலேயே மிக முக்கியமான உறுப்பு எது?’’ என்பது. கடந்த மூன்று வருடங்களாக அந்தக் கேள்வியை அம்மாவிடம் கேட்டுவருகிறான் டேவிட். ஒவ்வொரு முறையும் அவனுக்கு எது சரி என்றுபடுகிறதோ அந்தப் பதிலைச் சொல்வான். ஒரு முறை அம்மா அந்தக் கேள்வியைக் கேட்டபோது, டேவிட்டுக்கு ஓசை என்பது மிக முக்கியம் என்று தோன்றியது. ஓசையை காதுகள் இல்லாமல் கேட்க முடியாதல்லவா? எனவே, ``காதுகள்’’ என்று பதில் சொன்னான். 

தாய் - மகன்

``இல்லடா என் செல்லம். உலகத்துல எத்தனைபேர் கேட்கும் திறன் இல்லாம இருக்காங்க... அவங்கள்லாம் வாழலையா என்ன? இதுக்கான பதிலை யோசிச்சுக்கிட்டே இரு. திரும்பவும் கேட்கிறேன்..’’ என்றார் அம்மா. 

ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அப்படி ஒரு கேள்வி அம்மா கேட்டதைக் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தான் டேவிட். ஒரு நாள் திரும்பவும் கேட்டார் அம்மா. ``நம் உடலில் இருப்பதிலேயே மிக முக்கியமான உறுப்பு எது?’’ இந்த முறை நன்கு யோசித்துவிட்டு பதில் சொன்னான்... ``அம்மா... நம்ம எல்லாருக்குமே பார்வை ரொம்ப முக்கியம். அதுனால நம்ம உடம்புல இருக்குறதுலயே கண்ணுதான் ரொம்ப முக்கியமான உறுப்புனு நினைக்கிறேன்...’’ 

மேரி, மகனை உற்றுப் பார்த்தார். ``நீ ரொம்ப வேகமா வளர்ந்துக்கிட்டு வர்றே... நிறைய கத்துக்கவும் செய்யறே. ஆனா, நீ சொன்ன பதில் தப்பு. இங்கே பார்வையில்லாம எத்தனை பேர் இருக்காங்க... அவங்கள்லாம் வாழலையா என்ன?’’ 

அதற்கும் பிறகு மேலும் ஏழு மாதங்கள் கடந்தன. திரும்ப அம்மா அந்தக் கேள்வியைக் கேட்டார். டேவிட் ஏதோ பதில் சொன்னான். அதையும் இல்லையென்று ஆணித்தரமாக மறுத்தார் மேரி. ஆனால், ``நீ புத்திசாலியா வளர்ந்துக்கிட்டே இருக்கே டேவிட்’’ என்பதை மட்டும் அவர் சொல்லத் தவறவே இல்லை. 

அந்த வருடம் வீட்டில் ஒரு சோகம்... டேவிட்டின் தாத்தா இறந்து போனார். வீட்டிலிருந்த எல்லாருமே உடைந்து போனார்கள். எல்லோருமே கலங்கி அழுதார்கள். அப்பா, அழுது பார்த்தேயிராத டேவிட், அவர் அழுததை முதன்முறையாகப் பார்த்தான். தாத்தாவுக்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு எல்லோரும் வீடு திரும்பினார்கள். அன்று இரவு, டேவிட்டின் அறைக்கு வந்து அவன் தலையை மென்மையாக வருடியபடி அம்மா கேட்டார்.. ``நம் உடலில் இருப்பதிலேயே மிக முக்கியமான உறுப்பு எது?’’ இந்தக் கேள்வியைக் கேட்டு டேவிட் அதிர்ந்து போனான். இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. அதுவரை வழக்கமாக அம்மா கேட்கும் கேள்விகளில் ஒன்று என்றுதான் அவன் நினைத்திருந்தான். பதில் சொல்லாமல் அம்மாவையே பார்த்தான். 

 

 

``இந்தக் கேள்வி ரொம்ப முக்கியமானதுடா செல்லம். நான் ஒவ்வொரு தடவை இந்தக் கேள்வியை கேட்குறப்பவும் நீ ஒரு பதில் சொல்வே. அது தப்புங்கிறதையும், ஏன் தப்புங்கிறதையும் நான் உனக்குச் சொல்வேன். ஆனா, அந்த முக்கியமான பாடத்தை நீ இன்னிக்கு கத்துக்கிட்டே ஆகணும்...’’ சொல்லிவிட்டு மேரி, டேவிட்டை கருணை பொங்கப் பார்த்தார். அவர் கண்களில் நீர் நிறைந்திருந்தது. பிறகு சொன்னார்... ``மகனே... நம் உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பு எது தெரியுமா? தோள்கள்...’’ 

நெகிழ்ச்சிக் கதை

``ஏம்மா, நம்ம தலையைத் தாங்கிக்கிட்டு இருக்குறதாலயா?’’ 

``இல்லை கண்ணு... நமக்கு வேண்டியவங்களோ, உறவினர்களோ, நண்பர்களோ துன்பத்துல கண்ணீர் விடும்போது, அவங்களை நம்ம தோள்ல சாய்ச்சுக்கலாம்... அது தாங்கிக்கும். வாழ்க்கையில ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல துன்பம் வரும்போது நம்ம எல்லாருக்குமே சாய்ஞ்சுக்க ஒரு தோள் தேவைப்படும். உனக்கு நிறைய நண்பர்களும், உன் மேல அன்பு செலுத்துறவங்களும் இருப்பாங்கனு நான் நம்புறேன். அதாவது உனக்கு ஒரு துன்பம்னா, அதுனால நீ அழுதேன்னா உனக்குத் தோள் கொடுக்க நிச்சயம் சில பேர் வருவாங்கனு நம்புறேன். தோள்கள் அவ்வளவு முக்கியம் டேவிட்...’’ அம்மா, செல்லமாக டேவிட்டின் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு அறையைவிட்டு வெளியே போனார். 

டேவிட் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தான். அதுவரை மூடியிருந்த மேகங்கள் விலக, நிலவு பளிச்சென்று தெரிந்தது.  

*** 

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

இன்ஸ்டாகிராமில் படம் வெளியீடு: ரூ.82 லட்சம் அள்ளிய  கோலி

 

 
kohli

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி   -  படம்உதவி: ட்விட்டர்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,  சமூக வலைதளங்களில் தனது கருத்துகள், படங்களைப் பதிவு செய்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார்.  இந்நிலையில் ஹோப்பர் ஹெச்கியூ டாட் காம் என்ற இணையதளம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் நட்சத்திரங்களின் கணக்கு, பின்பற்றுபவர்கள், அவர்களின் பதிவுகள், அதற்கான கால இடைவெளி என பலமுனைகளில் அலசி ஆராய்ந்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதில்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு போஸ்டிற்காக நட்சத்திரங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்த தகவலையும் ஹோப்பர் ஹெச்கியூ தெரிவித்துள்ளது.

 
 

இந்த பட்டியலில் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 17-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை சுமார் 2.3 கோடியை  கொண்டுள்ள விராட் கோலி, ஒரு விளம்பர பதிவுக்காக ரூ.82.45 லட்சம் வரை வருவாய் ஈட்டுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவின் மாடல் அழகியும், செய்தி தொகுப்பாளருமான கெய்லி ஜென்னர் உள்ளார். 

இரண்டாவது இடத்தை நடிகையும் பாடகியுமான செலீனா கோம்ஸும், மூன்றாவது இடத்தை போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்கள் வரிசையில் கணக்கிட்டால் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார்.

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

கழிப்பறை சுத்தமானது என நிரூபிக்க சீன மேற்பார்வையாளர் செய்த வேலை…!

 
 

சீனாவில் உள்ள கழிப்பறைகள் மிகவும் சுத்தமானது என நிரூபிக்க சீன மேற்பார்வையாளரொருவர் சிறுநீர் கழித்த கழிப்பறையில் உணவினையிட்டு அதை எடுத்து உண்ணும் காட்சி அடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீனாவில் ஜெங்ஜோ என்ற இடத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிறுவனமானது தேயிலை விநியோகம் செய்யும் நிறுவனம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தம் நாட்டில் கழிப்பறைகள் மிகவும் தூய்மையானது என நிரூபிக்கவே குறித்த மேற்பார்வையாளர் மற்றும் இரு பெண்கள் இப்படிப்பட்ட  நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

 

http://metronews.lk

Link to comment
Share on other sites

 

முக்கொம்பு அணை காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் மேல் கட்டப்பட்டதாகும்.

Link to comment
Share on other sites

பிட்ஸ் பிரேக்

 

 

19p1_1532496844.jpg

மதன் கார்க்கி

‘2.0’, ராஜமெளலி இயக்கவிருக்கும் படம், ஒரு கொரியன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் மதன் கார்க்கி, இப்போது வசனகர்த்தாவாகவும் பிஸி. ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற ‘சிவ சிவாய போற்றியே’ பாடலின் தமிழ் வெர்ஷனைக் கேட்டு ராஜமெளலி தன்னைப் பாராட்டியதை மறக்க முடியாத பாராட்டாகக் குறிப்பிடுகிறார். மதன் கார்க்கிக்கு சமையல் என்றால் கொள்ளைப் பிரியம். இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் சமையல் கலைஞராக வேலை பார்த்த இவர், வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, மற்ற நாடுகளின் ஸ்பெஷல் உணவுகளை சமைத்துப் பரிமாறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


36p1_1532496867.jpg

பா.விஜய்

பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் எனப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார், பா.விஜய். ‘ஆரூத்ரா’ படத்தை இயக்கி, நடித்துக்கொண்டிருக்கும் இவர், மேலும் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். கிடைக்கும் இடைவேளையில் வரலாற்றுக் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும் விஜய், அதையும் தானே நடித்து, இயக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.


47p1_1532496891.jpg

கு.உமாதேவி

இயக்குநர் பா.இரஞ்சித் படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்ட பாடலாசிரியர் கு.உமாதேவி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். “திருவண்ணாமலை மாவட்டம் அத்திப்பாக்கம் எங்க ஊர். அம்மாவும் அப்பாவும் நாடகக் கலைஞர்கள். பாடல்மீதான ஆர்வம் அம்மா மூலமா வந்தது. எங்க அம்மா நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவாங்க. அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் பழைய புராணக் கதைகள் அனைத்தும் அத்துப்படி. நானும் சின்ன வயசுல கூத்து ஆடியிருக்கேன்!” என்கிறார் கு.உமாதேவி.


114p1_1532496916.jpg

கபிலன்

பச்சையப்பா கல்லூரியில் படிக்கும்போது, ‘சென்னை நகர சேரிப் பாட்டுகள் - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர், அந்த ஆய்வில் இருந்தே ‘மெட்ராஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்க ஊரு மெட்ராஸு’ பாடலை எழுதினாராம், கபிலன்.  “பாண்டிச்சேரியில பிறந்து வளர்ந்தேன். பாஸ்போர்ட் அலுவலகத்துல ஆறு வருடம் வேலை. ‘நரசிம்மா’ படத்தின் இயக்குநர் திருப்பதி சாமி சார் என் நண்பர். ஒருநாள் என்னை பாஸ்போர்ட் ஆபீஸ்ல பார்த்து, ‘கல்லூரியில பரபரப்பா கவிதை எழுதிக்கிட்டிருந்த உனக்கு, இங்கே என்ன வேலைனு பாடல் எழுதக் கூட்டிட்டு வந்துட்டார்” என முதல் வாய்ப்பை நினைவுகூர்கிறார், கபிலன்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஆற்றில் அனாதையாக கிடந்த சுமார் ஒரு கோடி ரூபா மதிப்புள்ள தங்கக்கட்டி!

 

 

ஸ்கொட்லாந்து பகுதியில் ஓடும் நதி ஒன்றின் பாறை இடுக்குகளில் இருந்து இலங்கை மதிப்பின் படி சுமார் ஒரு கோடி   (£50,000 பவுண்ட்) மதிப்புள்ள தங்கக்கட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

4E8CF4CA00000578-5989783-image-a-1_15325

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து பகுதியில் ஓடும் நதி ஒன்றில் இருந்து டக்ளஸ் என்ற 40 வயதுடையவரே குறித்த தங்கக்கட்டியினை கண்டெடுத்துள்ளார்.

4E8CF65300000578-5989783-image-a-2_15325

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தங்கக்கட்டியினை கண்டெடுத்த இவர், அது குறித்த இரகசியத்தினை யாரிடமும் வெளியிடாமல் நீண்ட காலம் மௌனம் காத்து வந்த நிலையில் தற்போது மனம் திறந்துள்ளார்.

4E8CF3F100000578-5989783-image-a-3_15325

இதுகுறித்த அவர் கூறுகையில், ஒரு நாள் ஆற்றில் முகத்தை புதைத்தவாறு படுத்திருந்தபொழுது, பாறையில் ஏற்பட்டிருந்த விரிசலை பின்தொடர்ந்தேன். அப்பொழுது அங்கிருந்த பாறைப்படுக்கைக்கு கீழே 2 கிராம் மதிப்புள்ள குறித்த தங்கக்கட்டியை பார்த்து ஆச்சர்யமடைந்தேன். 

4E8CF6C700000578-5989783-image-a-7_15325

பின்னர் என்னுடைய நண்பரை அழைத்தபோது, அவரிடம் காட்டியவேளையில் அதை பார்த்து விட்டு 5 முதல் 7 கிராம் வரை இருக்கும் என கூறினார்.

4E8CF3E600000578-5989783-image-a-6_15325

இதனை ஆய்வு செய்த தங்க நிபுணர் லியோன் கிர்க், தங்கக்கட்டி குறைந்தபட்சம் £50,000 பவுண்ட் மதிப்பு இருக்கும் எனவும் விரைவில் பிரித்தானிய அருங்காட்சியத்திற்காக வாங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

4E8CF31400000578-5989783-image-a-4_15325

முன்னதாக கடந்த 1808 ஆம் ஆண்டு கார்ன்வால் பகுதியில் கண்டறியப்பட்ட 59 கிராம் தங்கக்கட்டியே பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கக்கட்டிகளில் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

பூக்கள் அறிவோம்
அலமாண்டா - Allamanda cathartica

தங்க ஊதுகுழல் (Golden trumpet) என்ற செல்லப்பெயர் கொண்ட மஞ்சள் அலமாண்டாக்கள் இன்ன பருவம் என்றில்லாமல் எப்போதும் பூத்துக்குலுங்குவதால் வீடுகளிலும் தோட்டங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இவற்றின் தாயகம் மெக்சிகோ, அர்ஜென்டைனா, பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகள்.

சுமார் 15 வகை அலமாண்டாக்களுள் பெரும்பாலானவை மஞ்சள் வண்ணத்திலும் சில சிவப்பு, பிங்க், ஆரஞ்சு வண்ணங்களிலும் பூக்கின்றன. சுவிட்சர்லாந்தின் தாவரவியல் வல்லுநரும் மருத்துவருமான Frédéric-Louis Allamand அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் இதற்கு Allamanda என்று பெயரிடப்பட்டுள்ளது.

கிளைகளை உடைத்து நட்டுவைத்தாலே வளரக்கூடிய இவற்றுள் சிலவகை செடிகளாகவும் சிலவகை கொடிகளாகவும் அறியப்படுகின்றன. கொடிவகை அருகிலிருக்கும் எதையும் பற்றிக்கொண்டு மளமளவென்று வளரக்கூடியது.வருடத்துக்கு சுமார் 3 மீட்டர் உயரம் வளரக்கூடியவை. வெட்டினாலும் துளிர்க்கும் தன்மையாலும் விடுவிடுவென்று வளரும் இயல்பாலும் ஆக்கிரமிப்புச்செடியாக பல நாடுகளில் அறியப்படுகிறது.

செடியை உடைத்தால் வரும் பால் நச்சு என்று அறியப்பட்டாலும் இதில் உள்ள வேதிப்பொருட்கள் காரணத்தால் இத்தாவரம் மருத்துவகுணம் உள்ளதாக அறியப்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சட்காமாலை, மலேரியா, கல்லீரல் கட்டிகள், மண்ணீரல் வீக்கம் போன்றவற்றுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.

 

Bild könnte enthalten: Pflanze, Blume, Natur und im Freien
 
முகநூல்
Link to comment
Share on other sites

‘எடுப்பதை விடக் கொடுப்பதே குதூகலம்’
 

image_e627393dbb.jpgதங்களுக்கு என்னென்ன ஆதாயம் கிடைக்கும் எனத் தேடுகின்றவர்களில், பிறருக்கு ஏதாவது கொடுத்தது உண்டா எனத் தங்களைத் தாங்களே கேட்டேயாக வேண்டும். 

எவருக்கும் எதுவுமே கொடுக்காத குணம், வெட்கப்படக்கூடியதாகும். அது சுய கௌரவத்தையும் பாதிக்கும் என்பதை உணர்வார்களாக. 

ஒரு பிச்சைக்காரர், தன்னிடமுள்ள பணம் அனைத்தையும் காலில் செருப்பு இல்லாத ஏழைச் சிறார்களுக்கு வழங்கியதாகச் செய்தி வந்தது. சுனாமி எமது நாட்டைத் தாக்கியபோது, அவரைப் போல வசதியற்ற பலர், ஆற்றிய பணிகள் ஏராளம். அந்த நேரத்தில் பாகுபாடு அற்ற முறையில் அனைத்துத் தரப்பினரும், இனமதபேதமற்று, பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உதவினார்கள். 

பிறரிடம் எடுப்பதை விடக் கொடுப்பதே குதூகலத்தை ஏற்படுத்தும். இலவசங்களையே அரசாங்கங்களிடமிருந்து எதிர்பார்ப்பதால் நாடுகள் ஏழையாகி விட்டன. இத்தகைய நாடுகள், வசதிகூடிய நாடுகளிடம் கையேந்தி, தங்கள் நாட்டை அடிமை நிலைக்குள் உட்படுத்தி விட்டன. இதற்கு மேலாக ஊழல், சுரண்டலால் கொடுக்கும் குணமும் கருகிவிட்டது.  

Link to comment
Share on other sites

உக்ரைன் கண்காட்சியில் ராணுவ விமானம் மக்கள் மீது விழுந்து 85 பேர் பலியான நாள்: 27-7-2002

 
அ-அ+

உக்ரைன் ராணுவத்தின் 60-ம் ஆண்டை முன்னிட்டு விமானப்படை கண்காட்சி நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
உக்ரைன் கண்காட்சியில் ராணுவ விமானம் மக்கள் மீது விழுந்து 85 பேர் பலியான நாள்: 27-7-2002
 
உக்ரைன் ராணுவத்தின் 60-ம் ஆண்டை முன்னிட்டு விமானப்படை கண்காட்சி நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வானில் சாகசம் காட்டிய விமானத்தில் ஒன்று திடீரென தரையை நோக்கி சீறிப்பாய்ந்து பொதுமக்கள் மீது மோதியது. இதில் 77 பொதுமக்கள் பலியானார்கள். 543 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிலர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 85-ஆக உயர்ந்தது. உலகிலேயே விமானப்படை கண்காட்சியில் நடந்த மோசமான விபத்து இதுவாகும்.

இதே நாளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்:-

*  1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொரோண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.

* 1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ- சீனாவைக் கைப்பற்றினர்.

* 1953- கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

* 1955 - ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.

 

 

விடுதலைப்புலிகள் முதன் முதலாக ஆயுத தாக்குதல் நடத்திய நாள்:27-7-1975

 
அ-அ+

1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 27-ந்தேதி யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 
 
 
 
விடுதலைப்புலிகள் முதன் முதலாக ஆயுத தாக்குதல் நடத்திய நாள்:27-7-1975
 
விடுதலைப் புலிகள் அமைப்பு 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 27-ந்தேதி யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுவே புலிகளின் முதல் ஆயுத தாக்குதல் என்றும் கருதப்பட்டது.

யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை செய்யப்பட்டதுக்கு அல்பிரட் துரையப்பாவே காரணம் என கருதி பழிக்கு பழியாக கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இதே நாளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்:-

*1983 - கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

* 1990 - பெலாரஸ் சோவியத் ரஷியாவில் இருந்து விடுதலை அடைந்தது.

* 1990 - டிரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.

* 1997 - அல்ஜீரியாவில் சி செரூக் என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

* 2002 - உக்ரைனின் லுவிவ் நகரில் காண்காட்சி நிகழ்ச்சியின் போது போர் விமானம் ஒன்று மக்களின் மீது வீழ்ந்ததில் 85 பேர் பலியானார்கள்

* 2007 - பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

சக்கரவள்ளிக் கிழங்கில் கார் செய்து அசத்திய நெதர்லாந்து மாணவர்கள்!

 

இந்த ஃபைபர்கள் நானோ அளவுக்கு மிக நுண்ணிய தாதுப் பொருள்களைக் கொண்டவை. அவற்றின் உறுதி எவ்வளவு அதிகம். ஆனால், அவற்றின் எடை மிகக் குறைவாகவே இருக்கும்.

சக்கரவள்ளிக் கிழங்கில் கார் செய்து அசத்திய நெதர்லாந்து மாணவர்கள்!
 

2015-ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த செலுகாம்ப் (Cellucomp) என்ற நிறுவனம் நிலத்துக்கடியில் வேரோடு விளையும் காய்களை வைத்துத் தயாரிக்கும் ஃபைபர் (Fibre) கார்பன், சாதாரண ஃபைபர்களைவிட உறுதியானதாக இருக்குமென்றது. அவர்கள் தயாரிக்கும் அத்தகைய ஃபைபர்கள் ஒருநாள் விமான இறக்கைகளாகக்கூட வடிவமைக்கப் படலாமென்று நம்பிக்கையாகக் கூறியது.

முதலில் அவர்கள் நிலத்தடி விளைபொருள்களில் காரட் (Carrot) போன்றவற்றையே பயன்படுத்தினர். டாக்டர் டேவிட் ஹெப்வொர்த் மற்றும் டாக்டர் எரிக் வேல் (Dr. David Hepworth and Dr. Eric Whale) என்ற இரண்டு விஞ்ஞானிகளே இந்த முறையை முதலில் கண்டுபிடித்தனர். இந்த ஃபைபர்களை வைத்து மீன்பிடித் தூண்டில்கள் போன்ற சின்னச் சின்னப் பொருள்களை தயாரித்துக்கொண்டிருந்தது செலுகாம்ப் நிறுவனம். பிறகு பெயின்டிங், கோட்டிங் (Coating) போன்ற துறைகளில் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

இந்த ஃபைபர்கள் மிக நுண்ணிய தாதுப் பொருள்களைக் கொண்டவை. அவற்றின் உறுதி எவ்வளவு அதிகமாக இருந்தாலும், எடை மிகக் குறைவாகவே இருக்கும். இதற்கு அவற்றிலிருக்கும் நானோ தாதுக்களே காரணம். அத்தோடு தேவையான பாகுத் தன்மையைக் (Viscosity) கொடுத்து உராய்வுகளை எளிமையாக்குகிறது. இந்த ஃபைபர்களை வைத்து வருங்காலத்தில் நாங்கள் விமான இறக்கைகளைக்கூட வடிவமைப்போமென்று கூறியது செலுகாம்ப் நிறுவனம். இப்படிச் சொல்லிவிட்டு மீன்பிடித் தூண்டில்களைத் தயார் செய்துகொண்டிருந்தது. அவர்கள் அதைக் கூறிய அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே நெதர்லாந்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அந்த வகை ஃபைபரை வைத்து காரே தயாரித்துவிட்டனர்.

 

 

லீனா

Photo Courtesy: TU/ Ecomotive

அவர்களைவிட இவர்கள் சிறிது முன்னோக்கிச் சென்று சக்கரவள்ளிக் கிழங்கைப் பயன்படுத்தினர். காரட்டைவிடச் சக்கரவள்ளிக் கிழங்கு சுக்ரோஸ் (Sucrose) என்ற ஒருவகைச் சக்கரையை அதிகமாகத் தன்னகத்தே கொண்டிருப்பதால் அதைப் பயன்படுத்தியுள்ளார்கள். 

 

 

சக்கரவள்ளிக் கிழங்கில் கார்? இது உண்மையில் சாத்தியமா?

சாத்தியமாக்கியுள்ளார்கள், நெதர்லாந்தின் எய்ந்தோவென் பல்கலைக்கழக (Eindhoven University) மாணவர்கள். அவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தின் எக்கோமோடிவ் (Ecomotive) துறையைச் சேர்ந்தவர்கள். அது சுற்றுச்சூழலோடு இயைந்த வகையிலான ஆட்டோமோடிவ் (Automotive) துறை.

அவர்கள் சக்கரவள்ளிக் கிழங்கிலிருந்து எடுக்கப்பட்ட பிசினைப் பயன்படுத்தி கார்களுக்கான வெளிப்புறப் பாகங்களைத் தயாரித்துள்ளார்கள். அந்தக் கிழங்கில் அதிகமான சுக்ரோஸ் இருப்பதால் அதிலிருந்து எடுக்கப்படும் பிசினில் அதிகமான நானோ தாதுப்பொருள்கள் (Nano Cellulose) இருக்கும். அது மிக உறுதியான மிகக் குறைவான எடைகொண்ட பாகங்களை உருவாக்க அவர்களுக்கு உதவியுள்ளது. சக்கரவள்ளிக் கிழங்கின் பிசின் மூலம் தயாரித்த ஃபைபர்களை வைத்து கார் வெளிப்புறப் பாகங்களை வடிவமைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆளி விதைப் பிசின்களால் மேற்புறம் கோட்டிங் செய்துள்ளனர். பாகங்களில் உறுதி மற்றும் அழகான கட்டமைப்பு இரண்டுமே கிடைப்பதற்கு, கார் பாடி (Car's Body) பேனல்களைத் தேனீக் கூடுகளைப் போன்ற அமைப்பில் வடிவமைத்து அதற்குமேலாக ஆளிப் பூச்சு பூசியுள்ளனர்.

 

 

பசுமைக் கார்

Photo Courtesy: TU/ Ecomotive

காரின் மேற்புறப் பாகங்கள் முழுவதையும் பல்வேறு உட்புறப் பேனல்களாக அமைத்து உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் அவற்றின் உறுதியை அவர்களால் அதிகமாக்க முடிந்துள்ளது. காரின் அடிப்பீடத்தை (Chassis) அலுமினியத்தில் செய்துள்ளார்கள். சஸ்பென்சன் (Suspension), முன்புற பின்புற பிரேக்குகள் என்று உட்புறப் பாகங்கள் அனைத்தும் வழக்கம்போலவே சாதாரணமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மின் சக்தியால் இயங்கக்கூடிய இந்த காரின் உட்புறப் பாகங்கள் தவிர்த்து மற்ற அனைத்துமே இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டவை. அதிலிருக்கும் மூன்று லித்தியம் பாட்டரிகள் இரண்டு மோட்டார்களை இயங்கவைத்து கார் இயங்குவதற்கான மின்சாரத்தைக் கொடுக்கிறது.

லீனா (Lina) என்று அந்த மாணவர்களால் பெயரிடப்பட்டுள்ள அந்த காரின் எடை வெறும் 310 கிலோ மட்டுமே. ஒருமுறை சார்ஜ் செய்தால் 62 மைல்கள் வரை ஓடும். கார்களில் மிகக் குறைவான எடையுடைய நிஸானின் லீஃப் (Nissan Leaf) என்ற காரைவிடக் குறைவான எடை கொண்டுள்ளது லீனா. அது ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 மைல்கள் வரை ஓடக்கூடியது. ஆனால், லீனாவால் அதில் பாதி மட்டுமே ஓடமுடியும். இருப்பினும் மிகப்பெரிய கார் நிறுவனத்தின் காரோடு ஒப்பிடும் தரத்துடன் ஒரு சில கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளார்கள் என்பது பிரமிப்பூட்டக்கூடியதே.

நான்கு பேர் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் லீனாதான் உலகின் முதல் பசுமை கார். இவர்கள் உட்புறப் பாகங்களைத் தவிர அனைத்தையும் மக்கும் பொருள்களை வைத்தே தயாரித்துள்ளார்கள். இவர்களின் இந்த முறையே வருங்காலமாகக்கூட மாறலாம். மின்சக்தியால் இயங்கும் பாட்டரி கார்கள் வருங்காலத்தில் விலை குறைவாகவும் எளிதில் வாங்கக்கூடியதாகவும் மாறும்போது அனைவராலும் விரும்பக்கூடிய வகையில் லீனா போன்ற மக்கும் கார்கள் சந்தைகளில் அதிகம் இடம்பெற வாய்ப்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சக்கரவள்ளிக் கிழங்கு, ஆளி போன்றவற்றால் தயாரிக்கக்கூடிய மக்கும் பொருள்கள் கார் தயாரிப்பில் எளிமையாக உள்ளது.

கார் தயாரிப்பாளர்கள் எடை குறைவான அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர்களையே பயன்படுத்துகிறார்கள். அதைவிட எளிமையான மூலப்பொருள்கள் கிடைத்தால் அதற்கு மாறிவிடுவார்கள். ஆனால், அது தரமிக்கதாகவும், இப்போதைய காரின் வேகம் மற்றும் செயற்பாட்டில் சிறிதும் குறைவில்லாத வகையிலும் இருக்கவேண்டும். அப்போது நெதர்லாந்து மாணவர்கள் தயாரித்த சக்கரவள்ளிக் கிழங்கு கார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.

நெதர்லாந்து

Photo Courtesy: TU/ Ecomotive

இதை நடைமுறைச் சாத்தியமாக்குவதில் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இயற்கைப் பொருள்களைப் பதனம் செய்து கார் தயாரிப்பதற்கு ஏற்றவாறு மாற்றுவது பல கட்ட பணிகள் அடங்கியது. இப்போதிருப்பதைவிட இது கார் தயாரிக்கும் நேரத்தைவிட ஆறு மடங்கு அதிகப்படுத்தும். அத்தோடு தற்போதிருக்கும் உலோகங்களைப் போல இயற்கைப் பொருள்கள் கார் உற்பத்தித் தேவைக்கு நிகராகக் கிடைக்குமா என்பது சந்தேகமே. இவற்றைவிட முக்கியமான குறைபாடு ஒன்று உண்டு. இப்போதைய கார் தயாரிக்கும் பொருள் களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், மக்கும் பொருள்களைப் பயன்படுத்தி கார் தயாரித்தால் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இது தயாரிப்புச் செலவை மேலும் அதிகப்படுத்தும்.

இரும்பை மட்டுமே மூலப்பொருளாக வைத்து கார்களைத் தயாரிப்பதிலிருந்து மாற்றமடைந்து பல்வேறு உலோகங்களைத் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். கார் தயாரிப்பாளர்களுக்கு இந்த மக்கும் கார் தற்போது ஒரு வித்தியாசமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அதனால், எதிர்காலத்தில் பசுமைக் கார்களும் சந்தைக்கு வர வாய்ப்பிருக்கிறது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

 

64p1_1532427556.jpg

‘அவெஞ்சர்ஸ்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவரும்  ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் அடுத்து ‘Rub & Tug’ என்ற  படத்தில்  நடிக்க ஒப்பந்தமானார். இதில் ஒரு திருநங்கைக் கதாபாத்திரத்தில் நடிக்க விருக்கிறார்.  ‘ஹாலிவுட்டில் மூன்றாம் பாலின நடிகர்கள் ஏராளமாக இருக்கும்போது ஏன் ஒரு பெண் நடிகரை நடிக்க வைக்கவேண்டும்?’ என்று எதிர்ப்பு கிளம்பி யுள்ளதால், ஸ்கார்லெட் அப்படத்திலிருந்து விலகி யுள்ளார். உணர்வுகளுக்கு மதிப்பளி!


64p2_1532427588.jpg

ன்றைய தேதியில் ஹாலிவுட் படங்களில் மோஸ்ட் வான்டட் இந்திய நடிகை என்றால் அது பிரியங்கா சோப்ராதான். பிஸி பேபியான பிரியங்கா பாதிநாள்கள் அமெரிக்காவில்தான் இருக்கிறார். ஜூலை 18-ம் தேதி மீடியாக்கள் பிரியங்காவின் பிறந்தநாளை ஸ்பெஷல் எடிஷன்கள் போட்டுக் கொண்டாடித் தீர்த்தாலும் சத்தமே இல்லாமல் தன் பிறந்த நாளை மும்பை பாந்த்ராவில் இருக்கும் தன் வீட்டில் கொண்டாடியிருக்கிறார்.  சிம்பிளே சிறப்பு!


64p3_1532427609.jpg

ஜூலை 20-ம் தேதி புரூஸ்-லீ நினைவுநாள். ஹாங்காங்கில் இருக்கும் புரூஸ்-லீயின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார் ஜாக்கி சான். `என் இன்றைய வாழ்க்கைக்குக் காரணம் என் குரு புரூஸ்-லீ தான். விரைவில் அவர் வாழ்க்கையைப் படமாகத் தயாரித்து நடிக்கவிருக்கிறேன். அதுதான் என் வாழ்நாள் கனவு!’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், புரூஸ்லீயாக நடிக்கப்போவது ஜாக்கி இல்லையாம். அவர் மகன் ஜெய்சி சான். குட்டிப்புலி!


64p4_1532427690.jpg

ருவழியாக முன்னாள் காதலர்களும் இந்நாள் சண்டைக்கோழிகளுமான கங்கனா ரணாவத் - ஹ்ரித்திக் ஜோடி மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். மீடியாக்களுக்குத் தொடர்ந்து நெகட்டிவ் நியூஸ்கள் கொடுத்துக்கொண்டிருந்த இருவரையும் இணைத்தது யார் தெரியுமா? ஹ்ரித்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன். தன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக இருவரையும் வரவழைத்து, சந்திக்க வைத்திருக்கிறார். இதனால், மனைவி சூசனை டைவர்ஸ் செய்துவிட்டுத் தனியாக வாழும் ஹ்ரித்திக்கும் கங்கனாவும் மீண்டும் காதலில் விழுந்துள்ளனர் எனக் கிசுகிசு வர ஆரம்பிக்க, `எங்களுக்குள் இருப்பது உண்மையான நட்பு மட்டுமே!’ என இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்துள்ளனர். முதல்ல இப்படித்தான் ஆரம்பிச்சாங்க!


64p5_1532427718.jpg

பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தைத் தயாரித்து  நடித்து வரும் தனுஷ், தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்துவருகிறார். இதனை அடுத்து ‘றெக்க’, ‘வா டீல்’ படங்களை இயக்கியுள்ள ரத்தின சிவா இயக்க, தாணு தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். லிஸ்ட் பெரிசாகிட்டே போகுதே!


64p6_1532427737.jpg

குறுகிய காலத்தில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்த இந்திப் படவுலகின் இளம் கதாநாயகி ஆலியா பட், தான் பயன்படுத்திய ஆடைகளை ‘மி வார் ட்ரோப் சு வார்ட்ரோப்’ என்ற எக்ஸ்போ மூலம் விற்று அந்தப் பணத்தின் மூலம் மின்சார வசதியே சென்றடையாத, கர்நாடக மாநில `கிக்கேரி’ என்ற கிராமத்துக்கு சூரிய மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார். படங்களே பார்க்காத கிக்கேரி மக்களுக்கு, இப்போது ஆலியாதான் ‘பவர்’ ஸ்டார். ஆஹா ஆலியா!


64p7_1532427753.jpg

லிட்டில் மாஸ்டரின் வாரிசு கிரிக்கெட் அரங்கத்துக்குள் கால் வைத்துவிட்டார்.  இந்தியா-இலங்கை 19 வயதுக்குட் பட்டோர் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறார் அர்ஜுன் டெண்டுல்கர். இடது கை வேகப்பந்துவீச்சாளர். ரன் அப், கையைச் சுழற்றுவது, பாலை ரிலீஸ் செய்வது என பௌலிங்கில் அச்சு அசல் வாசிம் அக்ரம்தான். ‘சச்சினின் மகன்’ என்றே எல்லோரும் அடையாளப்படுத்த, தன்னைத் தனித்துவமாக நிலைநிறுத்தத் போராடுகிறார் அர்ஜுன். அசத்து ராஜா!


64p8_1532427776.jpg

‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு யோகப் பயிற்சிகளில் தன் முழு நேரத்தையும் செலவழித்து வருகிறார் அனுஷ்கா. அவ்வப்போது அடுத்த படத்துக்கான கதைகளையும் கேட்டுவருகிறார். ஹாரர் கதைகள் தனக்கு ஓர் அடையாளமாக மாறிவிட்டதாகவும், தற்போது ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும், கதை சொல்பவர்களிடம் அழுத்தமாய்ச் சொல்கிறார். உங்ககிட்ட இருக்கா அப்படி ஒரு கதை!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

21ஆம் நூற்றாண்டின் மிகவும் நீண்ட சந்திர கிரகணம்

பூமியின் நிழலை நிலவு கடந்துபோகும் சமயத்தில் சந்திர கிரகணம் ஏற்படும். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களில் இதை காணலாம்.

Link to comment
Share on other sites

இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை விதைக்கும் கலாமின் பொன் மொழிகள்!

 

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அறிவியல் துறையில் பல சாதனைகளை புரிந்த அவர், குழந்தைகளை சந்தித்து பேசுவதில் விருப்பம் கொண்டிருந்தார். குழந்தைகளிடையே அவர் ஆற்றிய பல உரைகள் பிரபலமானவை. அவற்றிலிருந்து சில பொன்மொழிகளை தொகுத்து வழங்குகிறோம்.

"கனவு காணுங்கள். ஆனால், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு."

குழந்தைகளுடன் கலாம்படத்தின் காப்புரிமைSTRDEL/AFP/GETTY IMAGES line break

"நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன."

குழந்தைகளுடன் கலாம்படத்தின் காப்புரிமைPRAKASH SINGH/AFP/GETTY IMAGES line break

"கனவு காணுங்கள். கனவு எண்ணங்கள் ஆகும், எண்ணங்கள் செயல்கள் ஆகும்."

குழந்தைகளுடன் கலாம்படத்தின் காப்புரிமைSEBASTIAN D'SOUZA/AFP/GETTY IMAGES line break

"உன்னுடைய இலக்கினை அடையும் வரை, மிகவும் கடினமான சண்டைகளை நீ போட வேண்டும்."

குடியரசு தலைவர் மாளிகையில், மாணவர்களுடன் கலாம்.படத்தின் காப்புரிமைPRESIDENTIAL PALACE/AFP/GETTY IMAGES Image captionகுடியரசு தலைவர் மாளிகையில், மாணவர்களுடன் கலாம். line break

"நீ யார் என்பது முக்கியமல்ல. உனக்கென்று ஒரு பார்வை இருந்து, அதை அடையக்கூடிய உறுதி உனக்கு இருந்தால், நீ நிச்சயம் அதை செய்வாய்."

குழந்தைகளுடன் கலாம்படத்தின் காப்புரிமைDESHAKALYAN CHOWDHURY/AFP/GETTY IMAGES line break

"புத்தகங்களே நிரந்தர தோழர்கள். சில நேரங்களில், அவை நமக்கு முன்பு பிறக்கின்றன, நம் வாழ்க்கை முழுவதும், நம்மை வழிநடத்துகின்றன. பல தலைமுறைகளுக்கு அவை தொடர்கின்றன."

குழந்தைகளுடன் கலாம்படத்தின் காப்புரிமைARUN SANKAR/AFP/GETTY IMAGES line break

"படைப்பாற்றல் என்பது, ஒரே விஷயத்தை பார்த்தாலும், அதை வேறு வழியில் சிந்திப்பது."

நிகழ்ச்சிக்கு பிற்கு குழந்தைகள் கலாமுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.படத்தின் காப்புரிமைRAVEENDRAN/AFP/GETTY IMAGES line break

"நாம், நமது நம்பிக்கைகளை போல இளமையாகவும், நம் சந்தேகங்களை போல முதுமையாகவும் இருக்கிறோம்."

கலாமிற்கு மாலையிடும் குழந்தை line break

"நீங்கள் சூரியனை போல ஒளிர வேண்டும் என்றால், முதலில், சூரியன் போல எரிய வேண்டும்."

https://www.bbc.com

Link to comment
Share on other sites

உலகின் அழகிய சிறுமியாக நைஜீரியாவின் சிறுமி….

 

ஒரே நாளில் உலகின் அழகிய சிறுமியாக  அசத்தி இருக்கிறாள் நைஜீரியாவை சேர்ந்த ஒரு சிறுமி.

 

5 வயதான ஜாரே என்ற குறித்த  சிறுமியின் தோற்றம் வசீகரமானது. கவிதை பாடும் கண்கள், மென்மையான சருமம், கவர்ந்திழுக்கும் கூந்தல் என அழகான அத்தனை அம்சங்களும் இந்த சிறுமியிடம் சங்கமம்.

இந்த சிறுமியை மொபே பாமுயிவா என்ற புகைப்பட கலைஞர் பார்த்து பரசவசப்பட்டு புகைப்படங்கள் எடுத்து தள்ளிவிட்டார்.

Beautiful-girl-in-the-world-jare-nigeria

 
 

அவற்றை “ஓ… இவள் மனிதப்பிறவிதான்… ஆனால் இவள் ஒரு தேவதை” என்று தலைப்பிட்டு ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “இவளை புன்னகைக்க வைத்து படம் எடுத்து இருக்க முடியும். இவளை சத்தமிட்டு சிரிக்க வைத்து படம் எடுத்து இருக்க முடியும். ஆனால் இவளை இவளது இயல்பான நிலையில் நமது கண்களின் வழியாக பார்க்க வைத்து இருக்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

ஜாரேயின் படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்தவர்கள் ‘இவள் அன்றோ உலகின் அழகிய சிறுமி’ என கூறியுள்ளனர்.

இதேவேளை  சிறுமிக்கு ஜோமி என்று 7 வயதிலும், ஜோபா என்று 10 வயதிலும் இரண்டு மூத்த சகோதரிகளும் இருக்கிறார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://senpakam.org201807271145172862_Nigeria-beautiful-young-girl_SECVPF.gif

 

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று : ஜூலை 27
 
 

image_fd34979ebe.jpg1905 : ரஷ்ய - ஜப்பானியப் போரின் போது, பொத்தெம்கின் என்ற ரஷ்யப் போர்க்கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.

 

1941 : ருமேனியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது.  இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

 

1950 : கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.

1954 :  சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.

1954 : இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

1957 : டெக்சஸ்– லூசியானா எல்லையை சூறாவளி தாக்கியதில், 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1973 : உருகுவை அரசுத்தலைவர், உவான் மரியா போர்டபெரி நாடாளுமன்றத்தைக் கலைத்து, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்.

1974 : அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.

1976 : ஏர் பிரான்ஸ் 139 (டெல் அவீவ் – ஏதென்ஸ் - பாரிஸ்) பாலத்தீன விடுதலை இயக்கப் போராளிகளால் கடத்தப்பட்டு, உகாண்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1977 : சீபூத்தீ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 : முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1980 : பலெர்மோ நோக்கிச் சென்ற இத்தாலியின் ஏரோலைனீ 870 விமானம், நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற 81 பேரும் உயிரிழந்தனர்.

1981: சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தனது, 'மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை' வெளியிட்டது. இதில் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் விளைவுகளுக்காக,, மா சே துங் மீது குற்றஞ்சாட்டியது.

1982 : கொலம்பியா விண்ணோடம் தனது கடைசி பயணத்தை முடித்துகொண்டது.

1991: சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.

1994 : ஜப்பானில் ஓம் சிர்க்கியோ மதக்குழுவினர் மத்சுமோட்டோ நகரில் நச்சு வாயுவைக் கசியவிட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 660 பேர் காயமடைந்தனர்.

1998 : கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.

2014 : ஆந்திரப் பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.