Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

கலப்படத் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி... வீட்டிலே தேனீ வளர்க்கும் எளியமுறை! #HoneyBeeDay

 
 

செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத் திறனை மழுங்கடித்துவிடும். இதனால் தேன் சேகரிக்கச் சென்ற தேனீ கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் அலைந்து திரிந்து இறுதியில் இறந்துவிடுகிறது.

கலப்படத் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி... வீட்டிலே தேனீ வளர்க்கும் எளியமுறை! #HoneyBeeDay
 

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்குப் பெரியவர்கள் அடிக்கடி  சொல்லும் உதாரணம், தேனீ மாதிரி உழைக்கணும் என்பதே. அப்படிப்பட்ட தேனீக்கள் நாளுக்கு நாள் அழிந்துவருகின்றன. அப்படி அழிந்து வரும் தேனிக்களைப் பாதுகாக்கவும், அதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது சனிக்கிழமை 'உலக தேனீக்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. 

 

 

 

 

பல்வேறு உயிரினங்களில் தலைவனாக இருப்பது ஆண்கள்தான். ஆனால், இங்கு பெண் அதாவது, ராணித் தேனீதான் தலைவன். அனைத்து தேனீக்களும் இதன் கட்டுப்பாட்டுக்குள்தான். பல்வேறு கட்டளைகளை இட்டு மற்ற தேனீக்களை வேலை வாங்குவதே ராணித்தேனீயின் முக்கிய வேலை. வேலைக்காரத் தேனீக்கள் காலம் முழுவதும், ராணித்தேனீக்கு அடிமையாக வேலை செய்யும். அது மட்டுமல்லாமல் ஆண் தேனீக்களும் ராணித் தேனீக்களுக்கு அடிபணியும். பார்ப்பதற்குக்கூட ஆண் தேனீயைவிட ராணித் தேனீ பெரியதாகவே இருக்கும். ஒரு தேனீ தன் வாழ்நாள் முழுவதும் ஒன்றரை டீ-ஸ்பூன் தேனை மட்டுமே சேகரிக்கும். ஒரு கோடிக்கும் அதிகமான இடங்களுக்குப் பயணம் செய்து தேன் சேகரிக்கும். தேனீக்கள் தன்னுடைய கூடு இருக்கின்ற இடத்திலிருந்து 12 கி.மீ தூரம் வரை சென்று தேனைச் சேகரிக்கும். உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளராக தேனீக்கள் இருக்கின்றன. உயிரினங்களின் யானை, ஆமைதான் அதிக ஞாபகசக்தி கொண்டவை. ஆனால், அவர்களைக் காட்டிலும் கூர்மையான ஞாபகசக்தியைக் கொண்டது தேனீக்கள். தேனீக்கள் மிக அதிகமாகச் சுத்தம் பார்ப்பவை. 

 

உலகின் மிகச் சிறந்த இயற்கை மருத்துவப் பொருளாகக் கருதப்படுவது தேன். ஒரு தேன் கூட்டில் குறைந்தபட்சமாக 80,000 தேனீக்கள் இருக்கும். அதில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டும்தான் இருக்கும். 250-க்கும் அதிகமான ஆண் தேனீக்கள் இருக்கும். இதில் ஆண் தேனீக்கள் 90 நாள்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனால், ராணித் தேனீ  2 லிருந்து 7 வருடம் வரை உயிருடன் இருக்கும். வேலைக்கார தேனீக்கள் அதிகபட்சமாக 42 நாள்கள் உயிருடன் இருக்கும். ராணித் தேனீ ஒரு நாளைக்கு 2,000 முதல் 3,000 முட்டைகள் வரை இடும். வருடத்துக்கு 5 முதல் 7 லட்சம் முட்டைகள் இடும். தன் மொத்த வாழ்நாளில் ஏறத்தாழ 1 மில்லியன் முட்டைகள் வரை உருவாக்கும். இவற்றுக்கு 6 கால்கள் உண்டு. தன்னுடைய இறக்கைகளை ஒரு நிமிடத்துக்கு 11,400 முறை வேகமாக அடிக்கும். நிமிடத்துக்கு 190 முறை அடிக்கும். ஒரு மணி நேரத்தில் 25 கி.மீ வேகத்தில் பறந்து செல்லும். 

தேனீக்கள் தேன்

 

உலகம் முழுவதும் தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் தேனீயும் சேர்ந்து விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு 42% அதிகரித்திருக்கிறது. தேனீக்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவையே. செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் தேன் சேகரிக்கச் சென்ற தேனீ கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் அலைந்து திரிந்து இறுதியில் இறந்துவிடுகிறது. அதேபோல், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்குவதால் தேனீக்கள் இறந்துவிடுகிறது. தேனீக்களை அழிக்காமலே தேன் எடுக்கும் எத்தனையோ நவீன முறைகள் வந்துவிட்டன. ஆனாலும், நெருப்பு மூட்டித் தேன் எடுக்கும் பழங்கால முறையையே இன்றைக்கும் பலர் பின்பற்றி வருவதும் தேனீக்கள் அழிய ஒரு காரணமாக இருக்கிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன. பலர் வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து வயல்களில் மகரந்தச் சேர்க்கை உண்டாக்கவும் முயல்கிறார்கள். தேனீக்கள், மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன. இதனாலேயே விவசாயிகள், தேனீயை விரும்புவோர் என்று பலர் தேனீக்களை வளர்க்க ஆரம்பிக்கின்றனர். 

குடும்பத்தின் தேவைக்காகவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும், மருத்துவத்துக்கும் அதிகளவில் பயன்படும் தேனீக்களை, கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்றாம்பாளையம் அருகேயுள்ள இயேசுராஜப்புரம் கிராமத்தைச் சேர்ந்த 82 வயதான சந்தியாகு என்பவர் பல்வேறு வருடங்களாக வளர்த்து வருகிறார்.

சந்தியாகு

தேன் வளர்ப்பு முறையும், தேனினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அவர் கூறுகையில், தேனீ வளர்ப்பு ஊரறிந்த விஷயம், ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலை. தேனீக்களை மிக எளிதாக வீட்டின் அருகிலேயே வளர்க்கலாம். தேனீக்கள் வளருவதற்குப் பாதுகாப்பு முக்கியம். முக்கியமாக எறும்புகள் இருக்கும் இடத்தில் அவற்றை வளர்க்கவே கூடாது. தேன் கூடு வைத்த பிறகு அடிக்கடி அந்த இடத்தைப் பார்வையிட வேண்டும். பெட்டியில், எலி, பல்லி, பாம்பு, பூச்சிகள், கரிச்சான் குருவி, மெழுகு பட்டுப்பூச்சி, குளவி, கதம்ப வண்டு போன்றவை உயிரினங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேனீப் பெட்டிகள் நன்கு விளைந்த மரப்பலகைகள் கொண்டு செய்யப்பட வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில்தான் தேனீக்களால் சீரான வெப்ப நிலையைப் பராமரிக்க இயலும். பச்சை மரப் பலகைகள் கொண்டு தேனீப் பெட்டிகள் செய்தால் நாளடைவில் பெட்டியின் பாகங்கள் வளையும். இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் பெட்டிக்குள் புக நேரிடும். பெட்டிகளில் வெடிப்புகள் பிளவுகள் இல்லாமல் இருத்தல் அவசியம். பெட்டியை ஆடாமல் வைக்க மரம் அல்லது இரும்பாலான தாங்கிகளைப் பயன்படுத்தலாம். தாங்கிகளின் கால்கள் எறும்புகள் ஏறாமல் தடுப்பதற்காக நீருள்ள கிண்ணத்துக்குள் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி பெட்டியை ஒரே இடத்தில் வைத்திருந்தால், தேன் கிடைக்காது. காரணம், தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்கு தொடர்ந்து இருக்காது. ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில் பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களில் பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை சேகரிக்கும்போதும், 2 கிலோ அளவுக்குக் குறையாமல் தேன் கிடைக்கும். 

 

 

தேனீ வளர்பு

தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப தேனீப் பெட்டிகள், தேன் பிரிக்கும் இயந்திரம் என்று அனைத்தும் கடைகளிலும் வந்து விட்டன. தேனீப் பெட்டிகள் 6,500 ரூபாய் வரை கிடைக்கிறது. எந்தக் கலப்படமும் இல்லாதத் தூய்மையான தேனில் உயிர் காக்கும் நன்மைகள் உள்ளன. இயற்கை முறையில் உடலைப் பருமனாக மாற்றவும், உடல் பருமனை குறைப்பதிலும் அதிக பங்குவகிக்கிறது. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தி வந்தால், குமட்டல் மற்றும் தலைவலி குணமாகும். தேனையும் மாதுளம் பழரசத்தை கலந்து தினமும் குடித்து வந்தால், இதய நோய்கள் தீரும். கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி, அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் குணமாகும். வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றித் தேன் தடவ வேதனைக் குறையும். இவை, கிராமப்புறங்களில்  கண்டுணர்ந்த இயற்கை வைத்திய முறைகள். அதுமட்டுமின்றி ரத்தம் சுத்திகரிப்பு செய்யவும், நல்ல தூக்கம் வருவதற்கும், குடல் புண், வாய்ப்புண், ரத்த சோகை போன்ற பல்வேறு நோய்களையும் தேன் குணமாக்குகிறது என்கிறார்.

தேனீ

மேலும், தொடர்ந்த அவர், எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருள்களில் முதலிடம் வகிப்பது தேன்தான். தற்போது பயன்பாட்டில் இருப்பவை சுத்தமான தேன்களாக இருப்பதில்லை. வியாபாரத்துக்காகக் கலப்படம் செய்யப்படுகிறது. அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.  

தேன் கலப்படத்தைக் கண்டறியும் சில முறைகள்!

  • சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விட்டால், தண்ணீரில் கரையாமல் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன்.
  • சுத்தமான காட்டன் துணியைத் தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாகச் சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமான தேன். 
  • சுத்தமான தேனை வாணலியில் சூடு செய்தாலும் அதன் அடர்த்தி குறையாது. 
  • சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் வைத்திருக்கும்போது அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும். 
  • சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும். 

                      Honey

  • சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து  மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக  உடனே ஒட்டாமல் குமிழ் போலப் பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போலப் பாத்திரத்தில்  சமநிலையில் இருக்கும். இது போன்று பல்வேறு வழிமுறைகளில் கலப்படத்தை கண்டறியலாம் என்கிறார்.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களாலும் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் எதாவது ஒரு வகையில் நன்மை கிடைக்கின்றன. நம் வாழ்வின் உணவு உற்பத்திக்குப் பெரும்பங்கு வகிப்பதும், நம் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்களைப் பாதுகாக்க நாம் தேனீக்களை வளர்க்க வேண்டும் என்பதில்லை. இருக்கும் சிறிதளவு தேனீக்களையும் அழிக்காமல் இருக்க, அவற்றின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவற்றின் பயன்பாடுகளை முடிந்தளவு குறைக்கலாம். இயற்கையைப் பாதுகாக்கலாம். இயற்கைக்குத் துரோகம் இழைக்காமல் இருந்தாலே போதும். 

உலகில் தேனீக்கள் இல்லையென்றால், நான்கு வருடத்தில் மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

 

அழிந்து வரும் பாரம்பரியத்தை பாதுகாக்க கிடா சண்டை போட்டி

அழிந்து வரும் கிடா சண்டையை பாதுகாக்கும் வகையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற கிடா சண்டை திருவிழாவில் 150 க்கும் மேற்பட்ட கிடாக்கள் பங்கேற்றுள்ளன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக, கிராமங்களில் ‘கிடா முட்டு‘ எனப்படும் கிடா சண்டை பிரபலம். பல மாவட்டங்களில் இந்த விளையாட்டு அழிந்துவிட்ட நிலையில் மதுரை, தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட கோயில் விழாக்களில் மட்டுமே இந்த விளையாட்டு நடந்து வந்தது.

Link to comment
Share on other sites

வெல்லுவதோ இளமை : அந்தச் சில நாட்கள்!

 

 
velluvadhojpg

அந்த டென்னிஸ் பத்திரிகையில் ரோஜருடைய பேட்டி வெளியாகியிருந்தது.

அப்போது ரோஜருக்கு வயது பதினான்குதான். அதற்குள் சுவிட்சர்லாந்து முழுக்க நன்கு அறியப்பட்ட இளம் டென்னிஸ் வீரராகியிருந்தார். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆகவே, பத்திரிகைச் செய்திகள், பேட்டிகளில் ரோஜர் அவ்வப்போது தென்பட்டுக்கொண்டிருந்தார்.

 

ரோஜருடைய தந்தை ராபர்ட்டுக்கும் தாய் லினெட்டுக்கும் மகனுடைய சாதனைகளை எண்ணிப் பெருமை. அவருடைய பேட்டியை ஆவலுடன் படித்தார்கள். ஆனால், அதில் ஒரு கேள்விக்கு ரோஜர் சொல்லியிருந்த பதில் அவர்களுக்குப் பெரும் திகைப்பூட்டியது.

`எகுப்ளானிலிருக்கும் சுவிஸ் தேசிய டென்னிஸ் மையத்தில் சேர்ந்து பயிற்சிபெற உங்களுக்கு ஆர்வமுண்டா?'

`ஓ, நிச்சயம் ஆர்வமுண்டு!'

இந்தப் பதில் ரோஜரின் பெற்றோருக்குத் திகைப்பளிக்கக் காரணம், அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் இதே கேள்வியை ரோஜரிடம் கேட்டிருந்தார்கள். அப்போது ரோஜர் சொன்ன பதில், 'ம்ஹூம், எனக்கு அதில் சுத்தமாக ஆர்வமில்லை, நான் இங்கே நம் ஊரிலேயே என்னுடைய டென்னிஸ் பயிற்சியைத் தொடரத்தான் விரும்புகிறேன்.'

ரோஜருடைய சொந்த ஊர் பாசல். அங்கு அவருக்கு ஒரு நல்ல டென்னிஸ் பயிற்சியாளர் கிடைத்திருந்தார். அவரோடு விளையாடுவதற்குப் பல நண்பர்கள் இருந்தார்கள், பள்ளிச்சூழலும் நன்றாக அமைந்திருந்தது. இதை விட்டுவிட்டு வேறு எங்கும் போகவேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

குறிப்பாக, எகுப்ளான் செல்ல அவர் சிறிதும் விரும்பவில்லை. காரணம், அந்த இடம் அவருடைய சொந்த ஊரிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தது. ஒரு வேளை ரோஜர் அங்கு டென்னிஸ் கற்றுக்கொள்ள விரும்பினால், அங்கேயே தங்கிதான் பயிற்சிபெற வேண்டும். அதாவது, பெற்றோர், நண்பர்களைப் பிரிந்து தனியே தங்க வேண்டும். இதில் அவருக்குத் துளியும் விருப்பமில்லை.

இன்னொரு காரணம், எகுப்ளானில் ஃபிரெஞ்சு மொழி பேசுகிறவர்கள் அதிகம்; ஜெர்மன் மொழி பேசும் ரோஜருக்கு ஃபிரெஞ்சில் ஒரு சொல்கூடத் தெரியாது. மொழி தெரியாத இடத்தில் யார் வீட்டிலோ தங்கிக்கொண்டு பயிற்சியெடுப்பது சிரமமில்லையா?

ரோஜரின் பெற்றோர் இதையெல்லாம் புரிந்துகொண்டார்கள். தங்கள் மகனுடைய தீர்மானத்தை மதித்தார்கள்.  ‘எகுப்ளானுக்குச் சென்றால், நீ இன்னும் நன்றாக டென்னிஸ் கற்றுக்கொள்ளலாமே’ என்றெல்லாம் அவரை வற்புறுத்தவில்லை.

ஆனால் இப்போது, அதே ரோஜர் தன்னுடைய பதிலை மாற்றிச் சொல்லியிருக்கிறார். ‘நான் எகுப்ளான் செல்லத் தயார், அங்கு முழுநேரமாகத் தங்கிப் பயிற்சிபெறத் தயார்’ என்கிறார். இதற்கு என்ன பொருள்?

ரோஜரின் பெற்றோர், தங்கள் மகனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். ‘‘நீ உண்மையில் எகுப்ளான் சென்று பயிற்சிபெற விரும்புகிறாயா?’’

“ஆமாம்’’ என்றார் ரோஜர்.

“அன்றைக்கு அது வேண்டாம் என்று சொன்னாயே? ’’

“உண்மைதான். ஆனால், இப்போது என் மனம் மாறிவிட்டது’ என்று விளக்கினார் ரோஜர். ‘எகுப்ளான் செல்வதில் சில நன்மைகள் இருக்கின்றன, சில தீமைகளும் இருக்கின்றன. அதையெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தேன். ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரராக வேண்டும் என்கிற என்னுடைய கனவு நிறைவேற வேண்டுமென்றால், நான் எகுப்ளான் செல்வதுதான் சரி. அங்குதான் எனக்குத் தேவையான தரத்தில் பயிற்சி கிடைக்கும், என்னால் வேகமாக முன்னேற முடியும்.”

“அப்படியானால், இங்கு உள்ளூரில் இருக்கும் நண்பர்கள், பள்ளிக்கூடம், அதெல்லாம்?”

“எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்வது சிரமம்தான்; ஆனால், நான் அதற்குத் தயாராகிவிட்டேன்” என்றார் ரோஜர்.

இம்முறையும், ரோஜரின் பெற்றோர் அவரை வற்புறுத்தவில்லை. “உன்னுடைய விருப்பம்போல் செய்” என்று அனுமதித்துவிட்டார்கள்.

“நான் எகுப்ளான் செல்கிறேன்” என்று ரோஜர் கம்பீரமாகச் சொல்லிவிட்டாலும், அதற்கான துணிச்சல் அவருக்கு  வரவில்லை. அதை நினைத்தால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் அச்சமாகவும் இருந்தது.

சில நாட்களில், அவர் புறப்படவேண்டிய கேரட் வந்தது. அச்சத்தை வெளி காட்டாமல் கிளம்பிவந்துவிட்டார்.

எகுப்ளானில் கார்னெலியா என்பவருடைய வீட்டில் தங்கினார். அவர் ரோஜரை நன்கு கவனித்துக்கொண்டார். அவருடைய மகன் வின்சென்ட்டும் ரோஜரும் நண்பர்களானார்கள்.

ஆனால், ரோஜர் பயந்ததுபோலவே எகுப்ளானில் அவர் மகிழ்ச்சியாக இல்லை. பயிற்சியெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், பெற்றோர், நண்பர்களைப் பிரிந்து தனியாக வாழ்வது அவருக்குப் பிடிக்கவில்லை. பிரெஞ்சு மொழி தெரியாமலும் தடுமாறினார்.

வாரத்தில் ஐந்து நாட்கள் ரோஜர் எகுப்ளானில் தங்கவேண்டியிருந்தது. சனி, ஞாயிறில் ஊருக்கு வந்துவிடுவார்.  ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பிவிடவேண்டும்.

“எகுப்ளானில் முதல் ஆறு மாதங்கள் பெரும் கொடுமையாக இருந்தன” என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ரோஜர். “எகுப்ளான் திரும்பும் ரயிலில் நான் பலமுறை அழுதிருக்கிறேன்.”

இந்தக் காலகட்டத்தில் ரோஜர் தினமும் ஒரு மணி நேரம் தன் தாயுடன் தொலைபேசியில் பேசுவார். ஆனால், அதெல்லாம் அவருக்குப் போதவில்லை. சொந்த ஊர் திரும்ப ஏங்கினார். டென்னிஸ் பயிற்சி எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட்டுக் கிளம்பிவிடலாமா என்று தோன்றியது.

ஆனால், ரோஜர் திரும்பிச் செல்லவில்லை. எல்லா வருத்தங்களையும் தனக்குள் வைத்துக்கொண்டு டென்னிஸ் பயிற்சியைத் தொடர்ந்தார்.

இதற்குக் காரணம், எகுப்ளான் செல்லவேண்டும் என்று யாரும் அவரை வற்புறுத்தவில்லை. அவரே சிந்தித்து எடுத்த தீர்மானம் அது. ஆகவே, அங்கிருந்து திரும்பிச்செல்ல அவர் விரும்பவில்லை. எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் சரி, முன்வைத்த காலைப் பின்வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஒரு வேளை, ரோஜர் ஃபெடரர் அன்று எகுப்ளானுக்குச் சென்றிருக்காவிட்டாலும்கூட, உள்ளூரிலேயே டென்னிஸ் பயிற்சி பெற்று அவர் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கக்கூடும். ஆனால், எகுப்ளானில் அவருக்குக் கிடைத்த பயிற்சியின் தரம் அவரை அதிவேகமாக முன்னேற்றியது. தனக்கு முன் டென்னிஸ் உலகில் எந்த வீரரும் சாதிக்காதவற்றையெல்லாம் சாதித்து உலகின் முன்னணி வீரரானார்.

இதுவரை டென்னிஸ் விளையாடிய வீரர்களிலேயே மிகச்சிறந்தவர் இவர்தான் என்று  சொல்லுமளவு வளர்ந்தார். பெரும்பாலான வீரர்கள் ஓய்வுபெற்று வீட்டுக்குச் சென்றுவிடுகிற இந்த முப்பத்தேழு வயதிலும் இளைஞர்களுக்குச் சவாலாகத் தொடர்ந்து விளையாடுகிறார், கோப்பைகளை வெல்கிறார்.

இத்தனைக்கும் அடிப்படை, அன்று 14 வயதில் அவர் தன்னுடைய ‘Comfort Zone'லிருந்து வெளியில் வந்ததுதான்!

‘Comfort Zone’ என்பது, நமக்கு வசதியான ஒரு வட்டம். அதற்குள் நாம்தான் ராஜா. எந்தச் சிரமமும் இல்லை. மகிழ்ச்சியாகச் சுற்றிவரலாம். ஆனால், சில ஆண்டுகளில் அந்த வட்டமே நம் முன்னேற்றத்துக்குத் தடையாகிவிடும், ‘இது போதும்’ என்று அதற்குள் நிரந்தரமாகத் தங்கிவிடுவோம்.

அப்படியில்லாமல், அந்த ‘Comfort Zone’லிருந்து வெளியில் வருகிறவர்கள் ஆரம்பத்தில் சில பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். ஆனால், அவற்றுக்குப் பயந்து மீண்டும் அதே வட்டத்துக்குள் சென்றுவிடக் கூடாது. ரோஜரைப்போல், 'சரியோ, தவறோ, ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டேன்; அதன் விளைவுகளை சமாளித்துக்கொள்வேன்' என்று துணிந்து முன்னேற வேண்டும். அப்போது, எல்லாச் சவால்களும் பொடிப்பொடியாகும். பெரிய வெற்றிகள் வசமாகும்!

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்- 19-8-1919

பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையாக விடுதலையான நாள்-  19-8-1919
 
ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கனிசுத்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். மேற்கே ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாகிஸ்தானை எல்லையாக உடையது. வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காஷ்மீரூடாகச் செல்கிறது.

கி.பி. முதலாம் நூற்றாண்டில தொசேரியன், குசானர்கள் போன்றோர் இந்நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை பாரசீகர், சித்தியர் மற்றும் மங்கோலியரான கூன் இனத்தவர் போன்ற யூராசியக் கோத்திரத்தவர்களும், சாசானியர்கள் போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து சாகிகள் போன்றோரும் இந்நிலப்பகுட்தியை ஆட்சி செய்தனர்.

ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள், ஆப்கானிஸ்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின. அரபுப் பேரரசுகள் தமது அரசை மேற்கு ஆப்கானிஸ்தானுக்கு 652-ல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதியையும் 706-709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டன. பின்னர் இப்பகுதியை குராசான் என அழைத்ததுடன் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாறினர்.

19-ம் நூற்றாண்டுப் பகுதியில் ஆங்கிலேய– ஆப்கானிய யுத்ததின் பின்னரும் பராக்சாய் சாம்ராச்சியத்தின் வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி ஐக்கிய இராச்சியத்திடம் போயிருந்தது. 1919-ல் அரசர் அமனுல்லா கான் அரியணை ஏறும் வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானிஸ்தானில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இவருக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பிரிட்டகிடம் இருந்து பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது.

 

 

 

கல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்ட நாள்: 19-8-1946

 
அ-அ+

1946-ம் ஆண்டு இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் கோரிக்கை கொல்கத்தா (அப்போது கல்கத்தா)வில் வலுபெற்றது. இதன் காரணமாக மதக்கலவரம் ஏறபட்டது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

 
 
 
 
கல்கத்தா இந்து- முஸ்லிம் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்ட நாள்: 19-8-1946
 
1946-ம் ஆண்டு இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் கோரிக்கை கொல்கத்தா (அப்போது கல்கத்தா)வில் வலுபெற்றது. இதன் காரணமாக மதக்கலவரம் ஏறபட்டது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் பெரும்பாலான இஸ்லாமியர் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றனர்.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1862- மினசோட்டாவில் லகோட்டா பழங்குடியினர் நியூ ஊல்ம் குடியேற்றத்திட்டத்தைத் தாக்கி பல வெள்ள்ளையர்களைக் கொன்றனர்.

* 1895- கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.

* 1915- முதலாம் உலகப் போர்: ஒட்டோமான் பேரரசுப் படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள் தாக்குதலைத் தொடுத்தனர்.

* 1919- பிரிட்டனிடம் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.

* 1934- ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9 சதவித மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

* 1944- இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது.

* 1945- ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.

*  1953 - பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

* 1960- சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.

*  1980- சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டு 301 பேர் பலியானார்கள்.

* 1991 - ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும்போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

*  2002 - ரஷ்யாவின் எம்.ஐ.-26 ரக விமானத்தை செச்சினியத் தீவிரவாதிகளின் ஏவுகணையால் தாக்கப்பட்டதில் 118 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிறப்பு

* 1918- சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9-வது குடியரசுத் தலைவர்

* 1929 - ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர்

* 1931 ஜி. கே. மூப்பனார் தமிழக காங்கிரஸ் தலைவர்

* 1946 - பில் கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் 42-வது குடியரசுத் தலைவர்

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

சென்னை அன்றும் இன்றும்

 

 

 
centraljpg

சென்னை சென்ட்ரல் - அன்று

வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி நம் சென்னை மாநகருக்கு வயது 379 வயது ஆகிறது. அதற்கு ஒரு வாரம் முன்பே சென்னையின் பிறந்தநாளை பல்வேறு அமைப்புகள் ‘சென்னை மாதம்’ என்ற பெயரில் கொண்டாடத் தொடங்கிவிட்டன.

central%202jpg

சென்னை சென்ட்ரல் - இன்று

       
 

இந்தத் தேதியில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி மதராசப்பட்டினம் என்ற ஊரை வாங்கியதற்கான ஒப்பந்தம் நிறைவேறியிருக்கிறது.

egmorejpg

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் - அன்று

egmore%202jpg

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் - இன்று

 

இது ஒரு கணக்குதான். அதற்கு முன்பே மதராசப்பட்டினம் என்ற ஊர் அங்கே இருந்திருக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகுதான் அந்த ஊர் ஒரு நகராக உருவெடுத்தது. அதனால் அந்தத் தேதியைக் கொண்டு இந்த நகரின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகிறோம்.

geminijpg

அண்ணா மேம்பாலம் - அன்று

gemini%202jpg

அண்ணா மேம்பாலம் - இன்று

 

மதராஸ் என அழைக்கப்பட்ட அந்தப் பழைய சென்னையின் தொன்மையையும் அதன் கம்பீரத்தையும் நமக்குப் பறைசாற்றுபவை அதன் பழைமையான கட்டிடங்கள்.

senatejpg

செனட் ஹவுஸ் - அன்று

senate%20%202jpg

செனட் ஹவுஸ் - இன்று

 

கட்டப்பட்டுப் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்ட அந்தக் கட்டிடங்கள் புதிய சென்னை வாசிகளுக்கு பழைய நினைவுகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கட்டிடங்கள் சிலவற்றின் அன்றைய, இன்றைய ஒளிப்படங்கள் இவை

the%20hindujpg

இந்து அலுவலகம் - அன்று

the%20hindu%202jpg

‘தி இந்து’ இன்று

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

முப்பரிமாண ஓவியத்தை வரைந்து அசத்திய இலங்கை இளைஞன்

 

துஷாரா சம்பத் என்ற கலைஞரே குறித்த அழகான ஓவியங்களை உருவாக்கியுள்ளார்.

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com

Link to comment
Share on other sites

``ஆனால் அடுத்த 5 ஆண்டுகள் வெயில் கொல்லும்!” - விஞ்ஞானிகள் சொல்லும் காரணம்

 
 
 

விஞ்ஞானிகளின் கணிப்பு நிஜமானால் அடுத்த சில வருடங்களில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்

``ஆனால் அடுத்த 5 ஆண்டுகள் வெயில் கொல்லும்!” - விஞ்ஞானிகள் சொல்லும் காரணம்
 

``போன வருஷத்த விட இந்தத் தடவை வெயில் அதிகமா இருக்குற மாதிரி தெரியுதே " என்று கோடைக்காலங்களில் யாரேனும் ஒருவர் சொல்லியிருக்கக் கேட்டிருப்போம். உண்மையாகவே நிலைமை அப்படித்தான் இருக்கிறதா இல்லையென்றால் நமக்கு மட்டும்தான் அப்படித் தோணுதானும் பலர் யோசித்திருக்கலாம். நீங்க அப்படியெல்லாம் யோசிக்கவே வேண்டாம். நிஜமாகவே கடந்த நான்கு வருடங்களில் வெப்பநிலை அதிகரித்திருப்பது உண்மைதான் எனக் கூறும் விஞ்ஞானிகள், நிலைமை இன்னும் மோசமாகக் கூடும் என எச்சரித்திருக்கிறார்கள்.

விஞ்ஞானிகள்

புவி வெப்பமயமாதல் என்ற விஷயம் பல வருடங்களாக வெறும் விவாதப் பொருளாக மட்டுமே இருந்து வந்தது. அதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகளைப் பற்றி நீண்ட காலமாகவே எச்சரிக்கை செய்து வந்தார்கள் விஞ்ஞானிகள். ஆனால், மனிதர்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்வது போலவே தெரியவில்லை. வழக்கம் போல தங்கள் இஷ்டப்படியே செய்து வந்தார்கள். பூமி இத்தனை வருடங்களாக வெப்பநிலையைச் சமநிலையில் வைப்பதற்கு என்ன காரணிகளையெல்லாம் வைத்திருந்ததோ அதையெல்லாம் யோசிக்காமல் அழித்து வந்தார்கள். இவ்வளவு காலமும் பொறுத்துக்கொண்டிருந்த பூமி இப்போது அதன் விளைவை நமக்கு திருப்பித் தரத் தொடங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் வழக்கத்தை விடவும் அதிகமான வெப்பத்தை உணர்வது.

 

 

அடுத்த ஐந்து வருடங்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம் 

வெப்பநிலை

இதுவரை பதிவு செய்யப்பட்டிருந்த வரலாற்றிலேயே கடந்த நான்கு வருடங்களில்தான் உலகம் முழுவதிலும் அதிகமான வெப்பநிலை நிலவியது என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக 2016-ம் ஆண்டே வழக்கத்துக்கு மாறாக அதிக வெப்பம் பதிவாகியிருக்கிறது. ``அடுத்த ஐந்து வருடங்களில் அதிகமான வெப்பத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம்" என்கிறார் பிரான்ஸின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஃப்ளோரியன் செவேலெக் (Florian Sevellec). இவரும் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவரும் இணைந்து ஆய்வுக்கட்டுரை ஒன்றை நேச்சர் (nature) என்ற அறிவியல் இதழில் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதில்தான் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

 

 

வெப்பநிலை

புவி வெப்பமயமாதல் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே இருந்த வேளையில் 2000வது ஆண்டு தொடங்கி சில வருடங்கள் அதன் வேகம் சற்று குறைந்தது. அதற்குக் காரணமாக இருந்தது சில உள் காரணிகள்தாம். குறிப்பாகப் பூமியில் உள்ள பெருங்கடல்களில் நடைபெற்ற ஏற்றத்தாழ்வுகள் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. இது போன்ற உள் காரணிகள் பூமியின் வெப்பத்தைக் குறைக்க உதவின. இதற்கு முன்பு அது வெப்பத்தைக் குறைக்க உதவியதோ அதுவே தற்பொழுது வெப்பம் அதிகரிப்பதற்கு காரணமாகப் போகிறது என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.

பூமி

இந்த ஆய்வின் போது ஏற்கெனவே இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட காலநிலை தரவுகளை ஆராய்ந்திருக்கிறார்கள். அதன்படி வரும் இந்த ஆண்டு தொடங்கி வரும் 2022-ம் ஆண்டு வரை அதிக வெப்பம் நிலவ வாய்ப்புள்ளது. 58 சதவிகிதம் பூமியின் ஒட்டுமொத்த வெப்பநிலை அதிகரிப்பதற்கும் 69 சதவிகிதம் கடல்களின் வெப்பநிலை அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இது தரவுகளின்படி கணிக்கப்பட்ட ஒன்று என்பதால் இதற்கு முழுமையான உத்தரவாதத்தை அளிக்க முடியாது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களின் கருத்துக்கு மாறாக இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவானது என்று தெரிவித்திருக்கிறார் நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர். அப்படியே நிகழ்ந்தாலும் பெரிதாக ஒன்றும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கண்டுபிடிப்புகளின் கதை: தையல் இயந்திரம்

 

 
sewing%20machinejpg

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் ஊசியை உருவாக்கிவிட்டான். விலங்குகளின் எலும்புகளில் இருந்தும் கொம்புகளில் இருந்தும் ஊசிகளைச் செய்தனர். இதில் விலங்குகளின் தசைநார்களைக் கோர்த்து, தோல்களைத் தைத்து ஆடையாகப் பயன்படுத்தினர். நீண்ட காலம் இந்த ஊசிகளே நிலைத்து நின்றன.

16-ம் நூற்றாண்டில் ஆண்கள் வெளியே வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். வீட்டில் இருந்த பெண்கள் சமையல், குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகளுடன் குடும்பத்தினருக்கு உடை தைக்கும் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது. கைகளால் ஒரு சட்டையைத் தைப்பதற்கே பல நாட்கள் ஆனது.

 

1755-ம் ஆண்டு ஜெர்மானியரான சார்ல்ஸ் வெய்விந்தாலி, தையல் இயந்திரத்துக்கான ஊசியை மரத்தால் உருவாக்கினார். இதற்காக இங்கிலாந்தில் காப்புரிமையும் பெற்றார். ஆனால் இந்தக் காப்புரிமையில் ஊசியைத் தயாரிப்பதற்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை. அதனால் இது பெரிதாகப் பயன்படாவிட்டாலும் தையல் இயந்திரம் கண்டுபிடிப்பதற்கான முயற்சியை ஆரம்பித்து வைத்தது.

நவீன தையல் இயந்திரத்தின் வரலாறு தாமஸ் செயின்ட்டிலிருந்தே ஆரம்பமாகிறது. 1790-ம் ஆண்டு  கைகளால் இயக்கக்கூடிய, தோலைத் தைக்கும் இயந்திரத்தை உருவாக்கினார். ஆனால் இவரது கண்டுபிடிப்பு யாருக்கும் தெரியாமல் இருந்தது. பின்னர் வில்லியம் நியூட்டன் வில்சன் இவரது காப்புரிமையிலிருந்து, தையல் இயந்திரம் உருவாக்கும் விதத்தை வெளி உலகத்துக்குக் கொண்டு வந்தார்.

பிறகு பல்வேறு நாடுகளில் பல்வேறு மனிதர்கள் தையல் இயந்திரம் உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். தாமஸ் செயின்ட் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 1830-ம் ஆண்டு வெற்றிகரமான தையல் இயந்திரம் உருவாக்கப்பட்டது. பார்தெலமி திம்மோனியர் என்ற பிரெஞ்சு தையல் கலைஞர் இதை வடிவமைத்திருந்தார். இதில் இரண்டு ஊசிகள் இருந்தன.

ஓர் ஊசி துளையிடும், மற்றோர் ஊசி நூலை வைத்து தைக்கும். இது சங்கிலித் தையலாக இருந்தது. காப்புரிமை பெற்று, இயந்திரத்தின் மூலம் உடை தயாரிக்கும் முதல் நிறுவனத்தை ஆரம்பித்தார் திம்மோனியர். பிரெஞ்சு ராணுவ வீரர்களுக்கு உடை தயாரிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால், பிரான்ஸில் இருந்த தையல் கலைஞர்களுக்குத் திம்மோனியர் மீது கோபம் வந்தது.

sewing%202jpg
 

தொழிற்சாலை தங்களுடைய வாய்ப்புகளைப் பறித்துவிடும்,  வேலை இல்லாத் திண்டாட்டம் உருவாகும் என்று பயந்தனர். அதனால் திம்மோனியர் தொழிற்சாலைக்குள் இருந்தபோதே, தீயிட்டுக் கொளுத்தினர். மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு,  உயிர் பிழைத்தார் இந்தக் கண்டுபிடிப்பாளர்.

1844-ம் ஆண்டு ஆங்கிலக் கண்டுபிடிப்பாளர் ஜான் ஃபிஷர், தையல் இயந்திரத்தில் அடுத்த முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார். இவரது காப்புரிமை விரைவில் தொலைந்து போனது. அதனால் இவரால் எந்தவித அங்கீகாரமும் பெற முடியாமல் போனது. இவரது இயந்திரத்தைப்போலவே, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எலியாஸ் ஹோவ் 1845-ம் ஆண்டு ஓர் இயந்திரத்தை உருவாக்கினார்.

இவரது இயந்திரத்தில் இழைப்பூட்டுத் தையல் போடப்பட்டது. இதனால் தையல் உறுதியானது. ஆனாலும் இவருக்குப் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இங்கிலாந்துக்குச் சென்றார். நீண்ட காலத்துக்குப் பிறகு அமெரிக்கா திரும்பியபோது, இவரது தையல் இயந்திரத்தைப் பார்த்துப் பலரும் அனுமதி பெறாமலே, இயந்திரங்களை உருவாக்க ஆரம்பித்திருந்தனர்.

அவர்களில் ஒருவர் ஐசாக் மெரிட் சிங்கர். இவர் 1851-ம் ஆண்டு தையல் இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். இன்றுவரை இவரது சிங்கர் நிறுவனம் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

1935-ம் ஆண்டு இந்தியாவில் ஜே.ஜே. இன்ஜினீயரிங் நிறுவனம் மூலம் ‘உஷா’ தையல் இயந்திரம் உருவாக்கப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக உருவான தையல் இயந்திரம், இன்று உடை தயாரிப்பை எளிமையாக மாற்றியிருக்கிறது.

(கண்டுபிடிப்போம்)

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 20
 

image_6c5d6d4fdd.jpg1914 :முதலாம் உலகப் போர் - பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின.

1917 :  இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.

1940 :  மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில், ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.

1944 :  இரண்டாம் உலகப் போர் - ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.

1948 : இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 க்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில்) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

1953 : ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

1960 : செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

1968 : பனிப்போர் -  200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.

1975 :  நாசா வைக்கிங்  - 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.

1977 :  நாசா வொயேஜர்  - 2 விண்கலத்தை ஏவியது.

1988 :  ஈரான் – ஈராக் போர் - 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.

1991 :  எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.

1997 :  அல்ஜீரியாவில் பொதுமக்கள் 60  பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமைஇ 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.

2006 – நமது ஈழநாடு பணிப்பாளர்இ முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

http://www.tamilmirror.lk

 

 

லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்: 20-8-1948

 
 
 

'இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948' என்பது 1948-ம் ஆண்டில் இலங்கை பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இது 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. பின் நவம்பர் 15-ம்தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 
 
 
 
லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்: 20-8-1948
 
'இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948' என்பது 1948-ம் ஆண்டில் இலங்கை பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இது 1948-ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. பின் நவம்பர் 15-ம்தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்கு தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும், சிங்களத் தேசியவாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் அவர்கள் வெற்றிபெற்றார்கள்.

நாடு விடுதலை பெற்றதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்த இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது எனலாம். இச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடதுசாரிக் கட்சியினரும் எதிர்த்தனர்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

இயற்கையைத் தேடும் கண்கள் : கடமான்கள் எடுத்த ‘குரூப் போட்டோ!’

 

 
iyarkaijpg

ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் சரணாலயத்தில்தான் நான் முதன்முதலாக கடமான்களைப் பார்த்தேன். பிறகு, கார்பெட் தேசியப் பூங்காவில் பார்த்திருக்கிறேன். அங்கே சில ஆண்டுகளுக்கு முன்பு, குளிர்காலம் ஒன்றில், சுமார் ஏழு, எட்டு கடமான்கள் கூட்டமாக ஓரிடத்தில் நெருக்கியடித்துக்கொண்டு நின்றிருந்தன. அந்தக் குளிருக்கு, தங்கள் உடலைச் சூடுபடுத்திக்கொள்ள, அவை ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு நின்றுகொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் ஆண் மான், பெண் மான், குட்டிகள் என அனைத்து வயது, பாலின மான்களும் இருந்தன.

இப்படி ஒரு ‘ஃபேமிலி குரூப் போட்டோ’ கிடைப்பது அரிதிலும் அரிது. அப்போது எடுத்த படம்தான் இது. சில நொடிகள்தான், பிறகு அவை கலைந்து சென்றுவிட்டன. ஆங்கிலத்தில் ‘சாம்பர்’ என்றும் தமிழில் ‘கடமான்’ என்றும் அழைக்கப்படும் இந்த மான், தெற்காசியா, தென் கிழக்கு ஆசியா, தென் சீனா போன்ற பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழகத்தில், முதுமலைப் பகுதியில் இதைக் காண முடியும். எனினும், உலக அளவில், இந்த மான் இனத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டுதான் வருகிறது. எனவே, இது ‘ஆபத்தான நிலையில்’ உள்ள உயிரினமாகக் கருதப்படுகிறது.

 

அடர்ந்த காடுகள், புல்வெளிகள் போன்ற பகுதிகள்தான் இவற்றின் வாழிடம். மான் வகைகளில் அளவில் பெரியது இந்த மான். இவற்றின் சிறப்பியல்பே, கொம்புகள்தான். மூன்று படிநிலைகளாக இருக்கும் கொம்புகள் சுமார் 100 சென்டி மீட்டருக்கும் மேலாக வளரும். ஆண்டுக்கு ஒருமுறை, அந்தக் கொம்புகள் விழுந்து, மீண்டும் புதிதாக முளைக்கத் தொடங்கும்.

புள்ளி மான்களில் ஆண், பெண் மான்கள் அனைத்தும் ஒரே கூட்டமாக இரை தேடும். ஆனால், கடமான்களில் ஆண் மான்கள் தனியாகவும், பெண் மான்கள் தனியாகவும் இரை தேடும். மிகுந்த செவித்திறனும் மோப்பத் திறனும் கொண்டவை இவை. அதனால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் புலி இருந்தால்கூட, அறிந்துகொண்டு அங்கிருந்து தப்பித்துவிட முடியும். குதித்துக் குதித்துத்தான் ஓடும்.

புலிகளைப் போன்றே, தங்களுக்கான பகுதியை வரையறுத்துக்கொள்ளும் பண்பு, ஆண் கடமான்களுக்கு உண்டு. தவிர, அவை சுமார் 6 பெண் கடமான்களுடன் இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையவை. என்றாலும், ஒரு பெண் மான், ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈனும். சிங்கம், புலி போன்ற இரைக்கொல்லி உயிரினங்களுக்கு முக்கிய உணவாக கடமான்கள்தான் இருக்கின்றன.

மனிதர்களைக் கண்டால் ஓடிவிடுகிற கூச்ச சுபாவம் கொண்ட இவற்றை,  கொம்புகளுக்காகவும், அவற்றின் உடல் பாகங்கள் மருத்துவக் குணங்கள் கொண்டதாக மூடநம்பிக்கையுடனும் கள்ள வேட்டையாடப்பட்டு வருகின்றன. வாழிடம் அழிந்து வருவதும், இந்த மான்களின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணம்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

https://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!

 
 

ஜூலியட் மேரி லூயிஸ் லஃபார்க் என்று பெயர். பிரான்ஸில் நிலவிய இனப்பிரிவினைகளை அவள் கண்டுகொள்ளவில்லை. அவள் கண்களை ஜோசப் மீதான காதல் மறைத்திருந்தது. 1908-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 

``டைட்டானிக்" ஜேம்ஸ் கேமரூன் அந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பே இந்த விஷயம் அவருக்குத் தெரிந்திருந்தால் கதை வேறுமாதிரியாகப் போயிருக்கலாம்! 

2000-ம் ஆண்டில் தெரியவந்த இந்த வரலாறு, 1997-ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தை இயக்கிய அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால், கதாநாயகன் ஜாக் என்ற கதாபாத்திரத்தை ஒரு கறுப்பின ஆளாக வைத்திருப்பார். கதாநாயகி ரோஸுடன் அவருக்குத் திருமணமாகி அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்திருக்கும். க்ளைமாக்ஸில் கப்பல் மூழ்கும்போது தனது குடும்பத்தைக் காப்பாற்றிய ஜாக்...

ஜாக்கும் அவர்களோடு பிழைத்தாரா என்பதை க்ளைமாக்ஸிலேயே தெரிந்துகொள்வோம். அதற்குமுன் ஃப்ளாஷ்பேக்.

 

 

டைட்டானிக்

உண்மையான ஜாக்கின் பெயர் ஜோசப் பிலிப் லெமெர்சியர் லாரோஷே (Joseph Phillipe Lemercier Laroche). டைட்டானிக் கப்பலில் பயணித்த ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரேயொரு பயணி. பிரெஞ்சு ராணுவப் படையின் கேப்டனாக இருந்தவருக்கும் ஹைடியக் கறுப்பினப் பெண்ணுக்கும் பிறந்தவர்தான் இந்த ஜோசப். அவரது அம்மா சுதந்திரமான ஹைடியின் (Haiti) முதல் ஆட்சியாளரான ஜான் ஜேக்கஸ் டெஸாலினெஸ் (Jean-Jacques Dessalines) என்பவரது மகள். ஹைடியில் உயர்குடிப் பிரமுகராக வளர்ந்தவர் தனது 14 வயதில் மேற்படிப்புக்காக பிரான்ஸுக்குச் சென்றார். அங்கு பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர் அந்நாட்டிலேயே பாரீஸ் மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் பணிபுரியத் தொடங்கினார்.

 

 

சில ஆண்டுகள் கழித்துத்தான் அவளைச் சந்தித்தார் ஜோசப். அவள் ஒரு வைன் (Wine) விற்பனையாளரின் மகள். ஜூலியட் மேரி லூயிஸ் லஃபார்க் (Juliette Marie Louise Lafargue) என்று பெயர். பிரான்ஸில் நிலவிய இனப்பிரிவினைகளை அவள் கண்டுகொள்ளவில்லை. அவள் கண்களை ஜோசப் மீதான காதல் மறைத்திருந்தது. 1908-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 1909-ம் ஆண்டு அவர்களுக்கு பிப்ரவரி மாதம் சிமோன் (Simmone) பிறந்தாள். 1910-ம் ஆண்டு ஜூலை மாதம் மேரி லூயிஸ் (Marie Louise) பிறந்தாள்.

ஜூலியட் ஒரு கறுப்பின மனிதரைத் திருமணம் செய்ததால் அவரையும் சமூகம் ஒதுக்கி வைக்கத் தொடங்கியது. அவர்களுக்கு யாரும் வீடு தரவில்லை. அதனால் வேறு வழியின்றி ஜூலியட்டின் தந்தை வீட்டிலேயே வாழவேண்டிய நிலை. கௌரவமாக வளர்ந்த ஜோசப்பால் இந்த அவமானங்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு இரண்டாவது பெண் மேரிக்குப் பிறந்ததிலிருந்தே பலவீனமான உடல்நிலை. அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தன. இனவேறுபாடுகள் அதிகமிருந்ததால் மெட்ரோ ரயில் கட்டுமானங்களில் அவருக்குப் போதுமான மரியாதையும் கிடைக்கவில்லை, போதுமான வருமானமும் கிடைக்கவில்லை. செலவைச் சமாளிக்க முடியாமல் ஜுலியட்டின் தந்தை தயவையே நாடவேண்டியிருந்தது. அதனால் இருவரும் 1913-ம் ஆண்டு ஜோசப்பின் சொந்த நாடான ஹைடிக்கே திரும்பிச் சென்றுவிடலாமென்று ஜோசப்-ஜூலியட் தம்பதி முடிவு செய்தார்கள்.

 

 

ஆனால், 1912-ம் ஆண்டு ஜூலியட் கர்ப்பமானார். அதற்கடுத்த ஆண்டு அவர் நிறைமாத கர்ப்பிணியாகிவிட்டால் பயணம் சாத்தியமில்லாமல் போய்விடும். அதனால் அந்த ஆண்டிலேயே கிளம்ப முடிவெடுத்தார்கள். அப்போது அவரது தாய்மாமா டெஸாலினெஸ் எம். சின்சின்னாடஸ் (Dessalines M. Cincinnatus) 1911 முதல் 1912 வரை ஹைடியின் அதிபராக இருந்தார். ஹைடியில் தனது குடும்பத்துக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு கௌரவமான வாழ்க்கை வாழ அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்குமென்று அவர் கருதினார். 

ஜோசப்-ஜூலியட்

இவர்கள் கிளம்பி வருவதற்காக லா பிரான்ஸ் (La France) என்ற கப்பலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை அனுப்பி வைத்தது ஹைடியிலிருந்த அவரது குடும்பம். ஆனால், அந்தக் கப்பலில் குழந்தைகள் எப்போதும் நர்சரியில்தான் இருக்கவேண்டும். அங்கிருக்கும் தாய்மார்கள் அவர்களைப் பராமரித்துக் கொள்வார்கள். முக்கியமாக அனைவரும் சாப்பிடும் டைனிங் ஹாலுக்கு அவர்களைக் கொண்டுவரக் கூடாது. இதுவே முதல் கட்டுப்பாடாக அந்தக் கப்பலுக்கான நுழைவுச்  சீட்டுகளில் போட்டிருந்தது. அதைப் பார்த்த ஜோசப் அதில் பயணிக்க விரும்பவில்லை. அவர், தன் பெண்களுக்குத் தன் கையாலேயே தினமும் ஊட்டிவிட வேண்டும். அனைவரும் ஒன்றாகவே எப்போதும் உணவருந்த வேண்டும். அது அங்கு சாத்தியமில்லை. ஆனால், எப்படியாவது ஹைடி போயாகவேண்டும். அதே சமயம் ஆர். எம். எஸ். டைட்டானிக் (R.M.S. Titanic) என்ற கப்பலின் இரண்டாம் வகுப்பில் பயணிக்க இருந்த ஒரு குடும்பம் இவர்களுக்குப் பழக்கமானது. இவர்களிடமிருந்தது லா பிரான்ஸ் கப்பலின் முதல் வகுப்பு டிக்கெட். அதைக் கொடுத்தபோது அவர்கள் மறுக்கவில்லை. இருவரும் டிக்கெட்டுகளை மாற்றிக்கொண்டார்கள்.

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி கிராண்டே ரேட் (Grande Rade) என்ற பகுதியில் ஜோசப்-ஜூலியட் குடும்பம் கப்பலேறி ஹைடிக்குத் தன் பயணத்தைத் தொடர்ந்தது. ஜோசப் கறுப்பின மனிதர்களுக்கு எதிரான அனைத்து அவமானங்களையும் டைட்டானிக்கில் அனுபவித்தார். அனைவரும் அவர்களை வெறுப்போடு பார்த்தனர். கப்பல் பணியாளர்கள்கூட அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதைகளையும் செய்யவேண்டிய உதவிகளையும் செய்யவில்லை. சாப்பிடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பெரும்பாலும் ஜோசப் தன் குடும்பத்தை அவர்களின் அறையிலேயே தங்க வைத்தார். அவரைப் போலவே அவரது குடும்பமும் அவமானங்களைச் சந்திக்கக் கூடாதென்பதில் உறுதிகொண்டிருந்தார். அவர்களுக்கும் சேர்த்து அவரே அனுபவித்தார். ஒரு கறுப்பின மனிதரைத் திருமணம் செய்ததற்காக ஜூலியட்டும் போதுமான அவமதிப்புகளையும் கோபப் பார்வைகளையும் பெற்றாள். இருவரும் தங்கள் காதலை எதிர்த்த சமூகத்தைத் தைரியமாகவே எதிர்கொண்டனர்.

 1300 பயணிகளும், 900 பணியாளர்களுமாக டைட்டானிக் கப்பலில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பயணித்தனர். அவர்களில் வெள்ளையரல்லாத வேற்றினத்தவர்கள் இரண்டே பேர் தானிருந்தார்கள். மற்றொருவர் இத்தாலியரான விக்டர் கிக்லியோ (Victor Giglio). முதல் வகுப்பில் பயணித்த பெஞ்சமின் குக்கென்ஹெயிம் (Benjamin Guggenheim) என்பவரின் உதவியாள். அதனால் அவரும் முதல் வகுப்பிலேயே பயணித்தார். அதோடு விக்டர் கறுப்பினமில்லை. அவர் மாநிறத்துக்கும் கூடுதலான வெள்ளைக்குச் சற்றே குறைவான நிறம். கறுப்பினத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஒருவர் மட்டுமே. இது ஏதோ தற்செயலாக நடந்ததென்று கடந்துபோக முடியவில்லை. டைட்டானிக் பயணத்துக்கு முன்பதிவு செய்யும்போதே அந்த நிறுவனம் வெறும் வெள்ளையர்களாகவே பதிவுசெய்திருக்க வேண்டும். இந்த இருவரும் பயணிப்பதுகூட கடைசி நேரத்தில் தெரிந்ததால் அவர்களால் அதைத் தவிர்க்க முடியவில்லை. இதைப் பின்னாளில் ஒப்புக்கொண்ட தி வொய்ட் ஸ்டார் லைன்(The White Star Line) கப்பல் நிறுவனம் தங்கள் கப்பலில் நடத்தப்பட்ட இனவெறிச் செயற்பாடுகளுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது.

டைட்டானிக் மூழ்கிய ஏப்ரல் 14 அன்று இரவு, ஜோசப் கப்பலின் மேல்தளத்தில் புகைப்பிடித்துக்கொண்டிருந்தார். கப்பல் ஒரு பனிமலைமீது மோதியதால் ஆபத்துக்குள்ளாகிய விஷயம் தெரிந்தவுடன் தனது அறைக்கு ஓடினார். குழந்தைகளோடு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஜூலியட்டை எழுப்பினார். கப்பல் மூழ்கத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாகப் பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் முதலில் காப்பாற்றிக்கொண்டிருந்தார்கள். படகுகளில் ஏறுவதற்கு முயன்றுகொண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் தனது குடும்பத்தைப் போராடி அழைத்துச் சென்றவர் ஒருவழியாகப் படகில் ஏற்றினார். ஜூலியட்டுக்குத் துக்கம் தாங்கவில்லை. துக்கம் வெடித்துப் பொங்கிவந்த கண்ணீரும் அவளது தேம்பலும் அந்தப் படகிலிருந்த வெள்ளையர்களுக்கு அவர்களின் காதலைப் பறைசாற்றிக்கொண்டிருந்தது. ஆனால், மேட்டுக்குடிப் போதையில் சிக்கியிருந்த அவர்களின் காதுகளுக்கு வேறுபாடுகளைத் தாண்டியவர்களின் காதல் கதறல்கள் கேட்கவில்லை.

லூயிஸ் லாரோஷே

ஜோசப்-ஜூலியட் தம்பதியின் இரண்டாவது மகள் லூயிஸ் லாரோஷே 1998-ம் ஆண்டு தனது 88 வது வயதில்...

அவர்களை அழைத்து வரும்போது தன்னிடமிருந்த பணம், நகைகளை முடிந்தமட்டும் `கோட்' பையில் போட்டுக்கொண்டுதான் கிளம்பினார். அவரைப் பிரியமுடியாமல் திணறிய காதல் மனைவிக்கு அந்தக் `கோட்'டை அணிவித்து, ``ஜூலி, நீ கவலைப்படாதே. நான் வேறு படகைப் பிடித்து நிச்சயம் வந்துவிடுவேன். நீ குழந்தைகளைப் பத்திரமாகக் கரைசேர்த்துவிடு. நாம் நியூயார்க்கில் சந்திப்போம்" என்று சமாதானம் கூறினார். குழந்தைகளோடு ஜூலியட் அமர்ந்திருந்த படகு கிளம்பியவுடன் மற்ற பெண்கள் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றார் ஜோசப். தனது குடும்பத்தைப் போராடிக் காப்பாற்றிய அவரால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளமுடியாமல் போனது. கப்பலோடு அவரும் மூழ்கிப்போனார். அவரது உடல்கூட கிடைக்கவில்லை.

உயிருக்குப் போராடிய அந்த நிலையிலும் ஜூலியட் மீது அவர்கள் வெறுப்பைக் கக்கினார்கள். கரைசேரும் முன்பே ஜோசப் கொடுத்த `கோட்' படகிலிருந்த ஒருவரால் பிடுங்கப்படவே வெறுங்கையோடு நின்றாள் ஜூலியட். கர்ப்பிணியான அவள் தனது இரண்டு பெண் குழந்தைகளோடு தப்பித்துக் கரைசேர்ந்தாள். இனி எங்கு செல்வதெனத் தெரியாமல் துவண்டுபோயிருந்த ஜூலியட் மீண்டும் தந்தையிடமே திரும்பினாள். ஆனால், அவரோ முதல் உலகப் போரின் விளைவால் தனது தொழிலை முற்றிலுமாக இழந்து மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தார். அனைவரும் வறுமையில் வாடினர். பிரான்ஸில் ஜூலியட்டுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. சில ஆண்டுகளில் டைட்டானிக் கப்பலின் பேரழிவால் பாதிக்கப்பட்டதற்கு நஷ்டஈடாக ஜூலியட் பெயரில் நிலம் கிடைத்தது. அதற்குப் பிறகு அதைவைத்துச் சராசரி வாழ்க்கையை மட்டுமே கடைசிவரை வாழமுடிந்தது. கடைசிவரை அவர் மறுமணமே செய்துகொள்ளவில்லை. இறுதிவரைத் தன் காதல் கணவன் நினைவிலேயே வாழ்ந்துவிட்டார்.

கடலுக்கடியில்

பொருளாதார நிலையின் இருதுருவங்களில் வாழ்பவர்களின் காதலை மையாகக்கொண்ட ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக், காலம் சொல்லும் காதல் கதை.

சமூகக் கட்டமைப்பின் இருவேறு பிரிவுகளில் வளர்ந்தும், உயர்வு தாழ்வு பாராமல் தோன்றியது ஜோசப்-ஜூலியட் காதல். இது காலம் சொல்ல மறந்த காதல்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

 

ஷாங்காய் திருமண சந்தையில் ஜோடி தேடும் சீன பெற்றோர்

திருமணமாகாத சீனர்களின் பெற்றோர் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒன்றுகூடி தங்களின் மகன்/மகளுக்கு, காதலன்/காதலியை ஏற்பாடுசெய்ய முயலும் ஷாங்காய் ‘திருமணச் சந்தை‘ பற்றிய காணொளி.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண இளைஞனால் வரையப்பட்ட – மிகப்பெரிய பிள்ளையார் ஓவியம்!!

 
 
39685758_2163142300631381_35955173076122

யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்குவேலிப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மிகப் பெரிய பிள்ளையாரின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தின் நூற்றாண்டு நினைவாக ஐங்கரன் என்பவரால் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பிள்ளையார் ஓவியம் என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

https://newuthayan.com

Link to comment
Share on other sites

பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது (21-8-1821)

 
 
 
 
பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது (21-8-1821)
 

16-ம் நூற்றாண்டில் இத்தாலியின் பிரபல ஓவியர் லியனார்டோ டா வின்சி என்பவர் பொப்லார் பலகையில் மோனா லிசா ஓவியத்தை வரைந்தார். இது எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் ஜியோகோண்டோவின் மனைவி லிசா கெரார்டினியின் உருவப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உலகின் மிகப் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றான இந்த ஓவியத்தை பல்வேறு அறிஞர்கள் திறனாய்வு மற்றும் ஆராய்ச்சி செய்துள்ளனர். பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் வைத்திருந்த இந்த ஓவியம் 1911ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி திருடப்பட்டது. மறுநாள் அங்கு சென்ற பிரெஞ்சு ஓவியர் லூயிஸ் பீராட், தனது ஓவியங்களை பார்வையிட்டபோது, 5 ஆண்டுகளாக மோனோ லிசா ஓவியம் இருந்த இடம் காலியாக இருந்தது. அந்த ஓவியம் பொருத்தப்பட்ட 4 முறுக்காணிகளை அவர் கண்டுபிடித்தார். இதனால் வணிக நோக்கத்திற்காக அதை புகைப்படம் எடுப்பதற்காக திருடியிருக்கலாம் என்று சந்தேகிப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

பின்னர் நீண்ட விசாரணைக்குப் பிறகு அருங்காட்சியகத்தின் ஊழியர் பெருகியா என்பவர், ஓவியத்தை திருடியது தெரியவந்தது. அதனை விற்பனை செய்ய முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். அவர் செய்த குற்றத்திற்காக அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. 

 

 

பவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது : 21-8-1821

 
அ-அ+

1821-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிரிட்டிஷ் நாட்டின் எலிசா பிரான்சிஸ் கப்பலில் சென்ற ஐரோப்பியர்கள் பவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவினைக் கண்டுபிடித்தனர்.

 
 
 
 
பவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது : 21-8-1821
 
ஜார்விஸ் தீவு என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு ஆகும். இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த தீவு பவளப்பாறைகளால் ஆனது.  இத்தீவு, தென் பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் குக் தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது.

1821-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிரிட்டிஷ் நாட்டின் எலிசா பிரான்சிஸ் கப்பலில் சென்ற ஐரோப்பியர்கள் இந்த தீவினைக் கண்டுபிடித்தனர். ஆளில்லா இந்த தீவு, குவானோ தீவுகள் சட்டப்படி தங்களுக்கே சொந்தம் என்று 1857-ம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. அதன்பின்னர் 1858ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி முறைப்படி அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

இதேபோல் ஆகஸ்ட் 21-ம் தேதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் வருமாறு:-

1770 - ஜேம்ஸ் குக் கிழக்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பிரிட்டனுக்கு சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.

1831 - கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.

1863 - அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லாரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.

1920 - இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாக சேர் ஏ. கனகசபை தேர்வு செய்யப்பட்டார்.

1945 - இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் சமர் முடிவடைந்தது.

1963 - தெற்கு வியட்நாமின் குடியரசு ராணுவத்தினர் நாட்டின் புத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.

1968 - சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.

1983 - பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.

1986 - கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1991 - லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 - சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.

2007 - சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.

1906 - பொதுவுடமைவாதி ப.ஜீவானந்தம் பிறந்தநாள்.

1986 - ஜமேக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய சாம்பியன் உசேன் போல்ட் பிறந்தநாள்.

1995 - நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல்-இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் இறந்த நாள். 
 
 
 
in-art-close-icon-128x128-16481b937f87b244a645cdbef0d930f8.png
 

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

பிரசவத்திற்காக சைக்கிளில் சென்ற பெண் அமைச்சர்!!!

 

தனது பிரசவத்திற்காக நியூஸிலாந்து பென் அமைச்சர் ஒருவர் சைக்கிளை தானே ஓட்டிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் பாடு பொருளாக உலா வருகிறது.

Woman_minister_who_bicycle_for_delivery.

நியூஸிலாந்தின் இணை போக்குவரத்து துறை அமைச்சரான 38 வயதுடைய ஜூலி அன்னே ஜென்டர் தனது முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காக சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

வீட்டிலிருந்து சுமார் ஒரு கி. மீ தூரம் தன்னுடைய சைக்கிளை தானே ஓட்டிக்கொண்டும், செல்பி எடுத்துக் கொண்டும் சாதாரணமாக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

download.jpg

ஜூலி எடுத்துக் கொண்ட செல்பிகள் சமூக வலைத்தளங்களில் பிரபலமானதோடு, பல பெண்கள் ஜூலியின் மன தைரியத்தை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

 

கால்வாயில் வீசப்பட்ட 'சுதந்திரம்' மீட்கப்பட்ட கதை

சென்னை வளசரவாக்கம் பகுதி கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையை, அப்பகுதியில் வசிக்கும் கீதா என்பவர் காப்பாற்றினார். சுதந்திர தினத்தில் மீட்டெடுக்கப்பட்ட இந்த ஆண் குழந்தைக்கு, சுதந்திரம் என அவர் பெயர் சூட்டினார். அந்த குழந்தையை மீட்கும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.

Link to comment
Share on other sites

குஜராத்: ஒரு கிலோ இனிப்பின் விலை 9 ஆயிரமாம்!

 
 
குஜராத்: ஒரு கிலோ ஸ்வீட்டின் விலை 9 ஆயிரமாம்!படத்தின் காப்புரிமைMEHANG DESAI

வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் மற்றும் ஜென்மாஷ்டமி போன்ற பண்டிகைகளின் காலம் நெருங்கி வரும் நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் இனிப்பு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த இனிப்பை அந்த பகுதி மக்கள் 'கோல்டன் ஸ்வீட்' என்று அழைக்கின்றனர்.

குஜராத்தின் சூரத் நகரில் இந்த இனிப்பு விற்கப்படும் கடையில், அதை பார்ப்பதற்கு கூட்டம் அலைமோதுகிறது. ஏனெனில், இதை சுவைத்து பார்க்க வேண்டுமென்று நினைப்பவர்கள் பல ஆயிரங்களை செலவிட வேண்டியிருக்கும்.

இந்த இனிப்பின் சிறப்பு என்ன?

இந்தியாவில் வைர விற்பனையில் முக்கிய சந்தையாக திகழும் சூரத், தெருவோர உணவுகளுக்கும் பிரபலமானதாக அறியப்படுகிறது.

குஜராத்: ஒரு கிலோ ஸ்வீட்டின் விலை 9 ஆயிரமாம்!படத்தின் காப்புரிமைMEHANG DESAI

ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ஸ்வீட்டின் சிறப்பு குறித்து அது விற்கப்படும் '24 கேரட்ஸ்' என்னும் அந்த கடையின் உரிமையாளர் ரோஹன் மித்தைவாளாவிடம் கேட்டதற்கு, "நாங்கள் கோல்டன் ஸ்வீட்டை போன்று நான்கு வகை இனிப்புகளை மிகவும் தரம் உயர்ந்த பொருட்களை கொண்டு தயாரித்துள்ளோம்" என்று கூறுகிறார்.

"இந்த இனிப்புகளுக்காக சிறப்புவகை குங்குமப்பூவை ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம்" என்று அவர் கூறுகிறார்.

"நாங்கள் சிறந்த முந்திரி பருப்புகள் மட்டுமல்லாது, சுத்தமான தங்க இலைகளை இதில் பயன்படுத்தியுள்ளோம். காஜூகத்ரி, நர்கிஸ் கலாம், பிஸ்தா பாதுஷாஹ், ட்ரை ஃபுரூட் பஹார், கேசர் குஞ்ச் ஆகிய ஐந்து வகை இனிப்புகளை தயாரித்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

ரோஹனின் குடும்பத்தினர், எட்டு தலைமுறைகளாக இனிப்புகள் விற்கும் தொழிலை செய்து வருகின்றனர்.

குஜராத்: ஒரு கிலோ ஸ்வீட்டின் விலை 9 ஆயிரமாம்!  

"தங்க ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் தங்கத்தை விட இந்த ஸ்வீட்டுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் விலை அதிகம்" என்று ரோஹன் கூறுகிறார்.

"தங்கத்தை உணவில் பயன்படுவதற்காக உண்ணத்தக்க வகையில் மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் செயல்முறையின் காரணமாக இதன் விலை அதிகமாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்

இந்த இனிப்புகளை உருவாக்குதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, "எங்களது கடையின் வெள்ளிவிழாவை சமீபத்தில் கொண்டாடினோம். அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் இதை நானும், எனது சகோதரரும் சேர்ந்து உருவாக்கினோம்" என்று கூறினார்.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

``பட்டுப்புழு கூடுகள்ல நகை.. அதான் இப்ப ஃபேஷன்!'' - கிராஃப்ட் பிசினஸில் கலக்கும் கார்த்தீஸ்வரி

3354_thumb.jpg
 
 

கிராஃப்ட்டில் ஒன்றைக் கற்றுக்கொண்டு அதில் பயிற்சி வகுப்புகள் எடுத்தால், நிறைய வெரைட்டி செய்யலாம்.

``பட்டுப்புழு கூடுகள்ல நகை.. அதான் இப்ப ஃபேஷன்!'' - கிராஃப்ட் பிசினஸில் கலக்கும் கார்த்தீஸ்வரி
 

"கல்யாணத்துக்கு அப்புறம் குடும்பம், குழந்தைனு எனக்கான அடையாளமே இல்லாமல் போயிடுச்சு. என் கேரியரையே தொலைச்சுட்டேன்'' என நிறையப் பெண்கள் புலம்புவதைக் கேட்டிருப்போம். சமீபமாக, அதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே சிறு தொழில் செய்து, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில், ``நான் வீட்டில்தான் இருக்கிறேன். ஆனால் ஃபேஷன் நகை, கிராப்ட் மூலமாக மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். குழந்தை, குடும்பம் எனச் சரியாகப் பார்த்துக்கொள்ளவும் முடிகிறது" என மனநிறைவுடன் பேச ஆரம்பிக்கிறார் கார்த்தீஸ்வரி. ஆறு ஆண்டுகளாக கிராஃப்டில் கலக்குகிறார்.

ஃபேஷன் நகை

``எனக்குத் திருநெல்வேலி சொந்த ஊர். அம்மா ஒரு கிராஃப்ட் டீச்சர். ஏதாவது கிராஃப்ட் வேலைப்பாடுகள் செய்து வீட்டை அலங்கரிச்சுட்டே இருப்பாங்க. அதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துச்சு. அம்மாவுக்குப் போட்டியா அச்சு எடுத்த மாதிரி செய்து அசத்துவேன். விளையாட்டாகச் செய்ய ஆரம்பிச்சதுதான் இன்னைக்கு என் பிசினஸா ஆகியிருக்கு. கிராஃப்ட் வேலைப்பாடு செய்ய ஆரம்பிச்சுட்டா பொழுது போறதே தெரியாது. நேர்த்தியும் திருப்தியும் வரும் வரை எத்தனை முறை வேணும்னாலும் செய்துட்டே பார்ப்பேன். கிராஃப்ட்டை பொறுத்தவரை, ஒருத்தரிடமிருந்து கற்றுக்கொள்வதைவிட, நுட்பமா செய்றதில்தான் இருக்கு வெற்றி.

 

 

நான் படிச்சது எலக்ட்ரிக் இன்ஜினீயரிங். காலேஜ் படிக்கும்போதும் ஃப்ரீ டைமில் கிராப்ட் செய்வேன். நிறையப் ஃபேஷன் நகைகள் செய்து ஃப்ரெண்ட்ஸுகளுக்குக் கொடுப்பேன். நானும் புதுப்புது டிரெண்டில் போட்டுவிட்டுப் போவேன். என் அக்ஸசரிஸ்களுக்கு நிறைய ஃபேன்ஸ் இருந்தாங்க. படிச்சு முடிச்சதும் கல்யாணம். இங்கும் வீட்டில் இருக்கும் பொருளை வெச்சு கிராஃப்ட் செய்துட்டிருப்பேன். என் ஆர்வத்தைப் பார்த்த கணவர், என்னுடைய கிராஃப்ட்களை போட்டோ எடுத்து ஆன்லைனில் அப்லோடு செய்தார். எல்லோரும் சூப்பர்னு பாராட்டினதும் ஆர்வம் அதிகமாச்சு. இதை ஒரு பிசினஸா மாற்றலாம்னு முடிவுசெய்தேன். குறைந்த முதலீட்டில் ஆரம்பிச்சேன்.கார்த்தீஸ்வரி

 

 

கிராஃப்ட்டை பொறுத்தவரை அப்டேட் ரொம்ப முக்கியம். இப்போ என்ன டிரெண்டில் போயிட்டிருக்குன்னு கவனிச்சு, பயிற்சி வகுப்புகளுக்கும் போயிருக்கேன். இந்த பிசினஸை ஆரம்பிக்கும்போது முதலில் க்விலிங் கத்துக்கிட்டேன். அதில் பலரும் நகைகள்தான் பண்ணுவாங்க. நான், கிரிட்டிங் கார்ட்ஸ் செய்து விற்றேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. புதுப் புது டிசைனில் நான் உருவாக்கிய கிரிட்டிங் கார்ட்ஸ் எனக்குத் தனி அடையாளத்தைத் தேடிக் கொடுத்துச்சு. அப்புறம், சில்க் த்ரெட் நகைகள் டிரெண்டிங் ஆச்சு. அதிலும் கலர் செலக்‌ஷனில் வித்தியாசம் காட்டினேன். அதுக்கு காலேஜ் பெண்களிடம் ரீச் அதிகமாக இருந்துச்சு. தோழிகளுடன் சேர்ந்து கிராஃப்ட் வேலை செய்வதில் 2017-ம் ஆண்டு 3000 பெண்களுடன் இணைந்து 58,970 கைவேலைப்பாடுகள் ஒரு மாத்தில் செய்து கின்னஸ் பிரேக் செய்திருக்கேன். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன். ஃபேஷன் நகைகளைப் பொறுத்தவரை, இப்போ பட்டுப்புழுவின் கூட்டிலிருந்து செய்யும் கக்கூன் ஜூவல்லரி டிரெண்டில் இருக்கு அதற்கான பயிற்சி வகுப்புகளையும் எடுக்கிறேன். 

கிராஃப்ட்டில் ஒன்றைக் கற்றுக்கொண்டு அதில் பயிற்சி வகுப்புகள் எடுத்தால், நிறைய வெரைட்டி செய்யலாம். இப்ப பட்டுப்புழுக்கூடுதான் ஃபேஷன். குக்கூன் ஜூவல்லரிக்குப் பட்டுப்புழுக் கூடுகள், கிராஃப்ட் பொருள் தயாரிக்கும் கடைகளிலே ரெடிமேடாகக் கிடைக்கிறது. அதை வாங்கி பெயின்ட் செய்து, நகையாக உருவாக்குவதில்தான் நம் திறமையும் வெற்றியும் இருக்கு. குறைவான விலையில் நிறைய லாபமும் கிடைக்கும். இப்போது டிரெண்டில் இருப்பதால் குக்கூன் ஜூவல்லரி மேக்கிங் அடிப்படையைக் கற்று, கற்பனைத்திறனுக்கு ஏற்ப மாடல்கள் தயார்செய்து ஆன்லைனில் அப்லோடு செய்தால் போதும். பிசினஸ் சூடு பிடிக்கும். இந்த வகை நகை செய்பவர்களிடமிருந்து மொத்த விலைக்கு வாங்கி விற்பதன் மூலமும் லாபம் அள்ளலாம்" எனப் புன்னகைக்கிறார் கார்த்தீஸ்வரி.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

54 வயதிலிருந்து சாகும்வரை சைக்கிளில் பயணித்த அனி மஸ்டோவின் அனுபவங்கள்!

 
 

1987-ம் ஆண்டு, 54 வயதில் அந்தப் பயணத்தைத் தொடங்கினார். இந்த உலகப் பயணத்துக்கு முதல் விதை, ஒருமுறை இந்தியாவுக்குப் பயணித்தபோதுதான் ஏற்பட்டது என்று கூறியுள்ளார் அனி மஸ்டோ.

54 வயதிலிருந்து சாகும்வரை சைக்கிளில் பயணித்த அனி மஸ்டோவின் அனுபவங்கள்!
 

னி மஸ்டோ (Anne Mustoe) இவர் எழுதிய, டூ வீல்ஸ் இன் தி டஸ்ட் (Two Wheels in the Dust: From Kathmandu to Kandy) புத்தகம் வெளியாகி, 7 வருடங்கள் ஆகப்போகிறது. இப்படி ஒரு பயணக் காதலியைப் பற்றி நாம் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அனி மஸ்டோ

படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, பேரன் - பேத்திகள், ஆன்மிகப் பயணம் எனத் தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கைச் சக்கரத்தில் சூழன்று கொண்டிருக்கும் நம்மில் பலருக்கும், லண்டனில் பிறந்த அனி மஸ்டோவின் சுதந்திரமான சைக்கிள் சக்கர வாழ்க்கைக்கும் வித்தியாசம் உண்டு. பெண்கள் தங்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் வாழலாம் என்பதற்கு அற்புதமான வழிகாட்டி என்று கூறலாம். சொல்லப்போனால், அவர் வாழ்க்கையை 54 வயதுக்குப் பிறகுதான் தொடங்கினார்.

 

 

அனி

PC: telegraph.co.uk

இங்கிலாந்தின் நாட்டிங்கம் நகரில், 1933 மே 24-ம் தேதி பிறந்தவர் அனி ரவில். கேம்ப்ரிட்ஜ் கிர்டன் கல்லூரில் `கிளாஸிக்ஸ்’ பாடம் படித்தார். முதல் வேலை, லண்டனில் உள்ள ஜி.கே.என் இன் ஜினேயர்ஸில் உதவியாளர். அங்குதான் வருங்கால கணவர் நெல்சன் மஸ்டோவை சந்தித்தார். அவர் செயலாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். 1960-ம் ஆண்டு, இருவருக்கும் திருமணம் நடந்தது. பிறகு, கின்சிங்டனில் உள்ள `ஃப்ரன்சிஸ் ஹோலாண்டு' பள்ளியில் கிளாஸிக்ஸ் பொருளாதாரம் கற்றுத்தரும் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். 1978-ம் ஆண்டு, செயின்ட் ஃப்ளிக்ஸ் பள்ளியில், ஒரு தலைமையாசிரியராக மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்தார். அவரின் வார்த்தைகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் மதிப்பு தந்தனர். இதற்கிடையில், மூன்று குழந்தைகளையும் வளர்த்தார். தன் கடமைகளை ஓரளவு நிறைவேற்றிவிட்டோம் என நினைத்தவர், தனக்காக வாழ்க்கையை வாழ தேர்ந்தெடுத்ததுதான், சைக்கிளில் உலகம் சுற்றும் பயணம். ஆனால், அதற்கு முந்தைய 30 வருடங்களாக அவர் சைக்கிளைத் தொடவே இல்லை.

 

 

1987-ம் ஆண்டு, 54 வயதில் அந்தப் பயணத்தைத் தொடங்கினார். இந்த உலகப் பயணத்துக்கு முதல் விதை, ஒருமுறை இந்தியாவுக்குப் பயணித்தபோதுதான் ஏற்பட்டது என்று கூறியுள்ளார் அனி மஸ்டோ. ராஜஸ்தானில் ஓர் இடத்துக்குப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியே ஓர் ஐரோப்பிய மனிதர், தார் பாலைவனத்தின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் சைக்கிளில் பயணிக்கும் காட்சியைக் கண்டார். ``அது எனக்கு ஒரு பொறாமை ஏற்படுத்தியது. உடனடியாக, நானும் சைக்கிளில் சுதந்திரமாகப் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இந்தியாவின் உண்மையான நிலையை ஒரு கண்ணாடி வழியாகப் பார்க்காமல், அந்த இயற்கை அழகுடன் பயணிக்க முடிவெடுத்தேன். அதற்கு சைக்கிள்தான் சரியாக இருக்கும். மறுநாள் காலை, இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றித் திரியும் உறுதி கூடிவிட்டது. இதைப் பற்றி நினைக்க நினைக்க, ஏன் இந்தியாவோடு பயணத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும், உலகம் முழுவதுமே சுற்றித்திரியலாமே என நினைத்தேன்'' என்கிறார்.

 

 

அனி மஸ்டோ

PC: road.cc

1987 மே மாதம், மேற்கிலிருந்து கிழக்குக்கு சைக்கிளில் தனியாகப் பயணம் செய்ய ஆரம்பித்தார் அனி. ``54 வயது, அதிக எடை, அன்ஃப்ட்” - இப்படித்தான் தன்னை தன் பயணத் தொடக்கத்தில் வர்ணித்துக்கொண்டார். 30 வருடங்களாக சைக்கிள் ஓட்டியதே இல்லை. அவர் தலைமையாசிரியர் பொறுப்பிலிருந்து விலகியபோது, பள்ளி சார்ப்பில் பரிசளித்த சைக்கிள், ஸ்டுர்டே கொண்டர் (Sturdy Condor). அவருக்காகவே லெதர் இருக்கைகளுடன் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டது. எப்போதெல்லாம் அவர் லண்டன் வருகிறாரோ, அப்போதெல்லாம் சர்வீஸ் செய்துவிடுவார். அவர் சிரியாவில் உடல்நலம் சரியின்றி இறக்கும்வரை, அதே சைக்கிளில்தான் பயணித்தார்.

தனது முதல் சில உலக பயணங்களின் அனுபவங்களை, எ பைக் ரைட் (‘A Bike Ride) என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டார். சைக்கிள் பயண ஆர்வலர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டி. பிறகு, தன் பயண அனுபவங்களை 6 புத்தகங்களாக எழுதி வெளியிட்டார். இவரின் புத்தகங்கள் மிகவும் பிரபலமானது. பயண விரிவுரையாளராகவும் அவ்வப்போது உரையாற்றியிருக்கிறார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் பயணித்த அனுபவத்தை, `டூ வீல்ஸ் இன் தி டஸ்ட்' என்ற புத்தகமாக வெளியிட்டார். ஆனால், இந்தியாவில் சில மோசமான அனுபவங்களையும் பெற்றிருக்கிறார் அனி. அவரைச் சில கும்பல் வழிமறித்துத் தடுத்தது, தலைமுடியைப் பிடித்து இழுத்தது போன்ற சம்பவங்களை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்போது, அவர் தனக்குள் இருந்த தலைமையாசிரியர் குணத்தைத் தட்டி எழுப்பி, ``எனக்கு வழிவிடுங்கள்!” என அழுத்தமாகக் கூறியதாக எழுதியிருக்கிறார்.

2009-ம் ஆண்டு, சிரியாவின் அலேப்போ என்ற இடத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அனி மஸ்டோவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சாகும் தருணத்திலும் பயணித்துக்கொண்டே இருந்த அவரின் கால்கள், ஒரு லட்ச மைல்கள் பயணித்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. 

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: 22-8-1989

 
அ-அ
 
நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: 22-8-1989
 
சூரிய குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள கோளான நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.

மேலும் இதே நாளில் நடந்த பிற முக்கிய நிகழ்வுகள்

• 1848 - நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

• 1864 - 12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலைமையில் ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள்.

• 1911 - பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனலிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

• 1932 - தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.

 

 

 

சென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள்: 22-8- 2004

 
 அ-அ+

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும்.

 
 
 
 
சென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள்: 22-8- 2004
 
சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது.

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

16 தாதியர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கர்ப்பமான அதிசயம்

அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் 16 தாதியர்களும் கர்ப்பமாக உள்ளனர். இதனால் மருத்துவமனையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது அரிசோனா மாகாணம். இங்குள்ள மேசா என்ற இடத்தில் பேனர் டெசர்ட் மெடிக்கல் சென்டர் என்ற வைத்தியசாலை உள்ளது.இங்கு 3 விதமான தீவிர சிகிச்சை பிரிவுகள் காணப்படுகின்றன. இதில் 16 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் கர்ப்பமாக உள்ளனர்.

e.jpg

இதுகுறித்து தாதியர்கள் கூறுகையில் ஆரம்பத்தில் எங்களது வயிறுகள் பெரிதாவதை நோயாளிகளும் கவனித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் கேன்டீன் செல்லும் போது ஒன்றாகவே செல்வோம்.சாலட்களை விரும்பி சாப்பிடுவோம். இன்னொரு நாட்கள் ஊறுகாய் மற்றும் ஆலிவ் பழங்களை சுவைப்போம். ஒரே நேரத்தில் கர்ப்பமாவதை நாங்கள் யாரும் திட்டம் போட்டு செய்யவில்லை. அதுவாகவே நடந்துவிட்டது என்றனர்.

இந்த 16 தாதியர்களுக்கும் செப்டம்பர் முதல் பெப்ரவரி மாதத்தில் குழந்தை பிறக்கும் . இதனால் அவர்கள் 12 வார மகப்பேறு விடுப்பில் செல்லவுள்ளனர். 

r-1-1024x576.jpg

இதனால் வைத்தியசாலையில் தாதியர்ககளின் பற்றாக்குறை அதிகரிக்கும். தற்போதே வைத்தியசாலை ஆட்களை பிடிக்கும் உத்தியில் இறங்கியுள்ளது. இதனிடையே 16 தாதியர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கான சிறிய அளவிலான ஆடை வைத்தியசாலை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

g-2.jpg

அதில் “எனது தாய் பேனர் நர்ஸ்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து நோயாளிகளும் அசந்து போகின்றனராம்.

 

http://metronews.lk

Link to comment
Share on other sites

பிறந்தநாள் கொண்டாடும் சென்னை: குடியேறிகளின் நகராக மாறிவிட்டதா?

 

திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலும், மண்ணடி காளிகாம்பாள் கோயிலும், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலும் பல நூறு ஆண்டுகள் பழமையானவை. கோயிலே ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றால், அப்பகுதி மக்களின் நாகரிகமும், அதன் பிற கட்டமைப்புகளும் அதனினும் பழமையானதாக இருக்க வேண்டும். பின் மெட்ராஸுக்கு 379 வது பிறந்தநாள் என்று குறிப்பிடப்படுவது ஏன்?

மெட்ராஸ் பிறந்த கதை ! - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதற்கான பதில் மிகவும் சுவாரஸ்யமானது. குறிப்பாக இந்தியா அடிமைப்பட்ட வரலாற்றுக்கும் இதற்கும் மிக நெருங்கிய தொடர்பும் உள்ளது.

'மெட்ராஸ் பிறந்த கதை'

"இன்று சென்னை என்று அழைக்கபடும் மாநகர் அன்று சிறு சிறு கிராமங்களின் தொகுப்பாக இருந்தது. அப்போது கடற்கரையை ஒட்டிய பகுதி வெங்கடப்ப நாயக்கரின் கட்டுப்பாடில் இருந்தது. 379 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் அந்த பகுதியை வெங்கடப்பரிடமிருந்து பிரான்ஸிஸ் டே என்ற வணிகர் 16 ஆயிரம் வராகன் கொடுத்து வாங்கினார். பின் கோட்டை கட்டினர்கள், உள்கட்டமைப்பை மேம்படுத்தினார்கள். இப்படியாகதான் இந்த நகரம் உருபெற்றது. பிரான்சிஸ் டே நாயக்கரின் ஆளுகையில் இருந்த பகுதியை வாங்கிய இந்த நாளைதான் நாம் மெட்ராஸ் டேவாக கொண்டாடுகிறோம்" என தனது புத்தகத்தில் பதிவு செய்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன்.

அன்னிபெசன்டும் அடையாறும்

சென்னை என்றவுடன் நமக்கு கூவமும், அடையாறும்தான் நினைவுக்கு வரும். இப்போது நகரத்தின் கழிவுகளை சுமந்து செல்லும் அடையாறு அப்போது ஏகாந்தமான நிலப்பரப்பாக இருந்திருக்கிறது.

மெட்ராஸ் பிறந்த கதை ! - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அடையாறு குறித்து அன்னிபெசன்ட், "பல நாடுகளை சென்று பார்ப்பது எவ்வளவு நல்லதோ அவ்வளவு நல்லது அடையாறில் வாழ்வதும்..." என்கிறார்.

அதுபோலதான் பக்கிங்கம் கால்வாயும் இருந்திருக்கிறது. கூவத்தையும், அடையாறையும் இணைக்கும் இந்த கல்வாயில் ஒரு காலத்தில் படகு போக்குவரத்து நடந்திருக்கிறது.

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு இந்த படகுகளில் பொருட்கள் வந்திருக்கிறது. இந்த படகு போக்குவரத்தில் ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் ஜீவானந்தம், பாவேந்தர் பாரதிதாசன் பயணித்து இருக்கிறார்கள்.

மெட்ராஸ் பிறந்த கதை ! - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES மெட்ராஸ் பிறந்த கதை ! - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த படகு போக்குவரத்து குறித்து தனது அனுபவத்தை பாவேந்தர் பாரதிதாசனார், "ஒரு நாள் மாலை 4 மணிக்கு சென்னை பக்கிங்கம் கால்வாயில் தோணி ஏறி, அடுத்த நாள் காலை 9 மணிக்கு மகாபலிபுரம் சேர்ந்தோம்...வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாகக் கழிந்தது" என்று குறிப்பிட்டதாக 'கூவம் அடையாறு பக்கிங்கம்' புத்தகத்தில் பதிவு செய்கிறார் கோ.செங்குட்டுவன்.

இப்போது சென்னை எப்படி இருக்கிறது?

மெட்ராஸ் பிறந்த கதை, செழிப்பாக இருந்த நதி... இவையெல்லாம் கடந்த காலம். இப்போதுச் சென்னை எப்படி இருக்கிறது? இப்போது அந்த நகரம் எப்படி உருமாறி இருக்கிறது? செயற்பாட்டாளரும், சென்னையின் பூர்வக்குடியுமான ஷாலின் மரியா லாரன்ஸிடம் பேசினோம்.

மரியா, "இந்த மண்ணின் மக்களை மெல்ல வெளியே அனுப்பிவிட்டு வேறொரு நிறத்திற்கு எங்கள் நிலம் மாறிக் கொண்டிருக்கிறது சென்னை" என்கிறார்.

மெட்ராஸ் பிறந்த கதை ! - சுவாரஸ்ய பகிர்வுபடத்தின் காப்புரிமைFACEBOOK

"நான் வடசென்னைகாரி. என் சிறு வயதில் நான் என்ன பார்த்தேனோ, எதை உண்டு வளர்ந்தேனோ அது எதுவும் இப்போது இங்கு இல்லை. வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள், மெல்ல அந்த நகரத்தை தனதாக்கிக் கொண்டு, எங்களை வெளியே அனுப்பி கொண்டிருக்கிறார்கள். ஒரு நகரம் காலத்திற்கு ஏற்றவாரு மாறும். மாற வேண்டும். ஆனால், அந்த மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆனால், எங்கள் நிலத்தை எங்கிருந்தோ வந்தவர்கள் ஆக்கிரமித்துவிட்டு, அவர்களின் பண்பாட்டை எங்களிடம் திணிக்கிறார்கள். நாங்கள் ஓடி ஆடி வளர்ந்த வீதிகளில், அந்நியராக நாங்கள் வெளியே நிற்கிறோம்" என்கிறார்.

மெட்ராஸ் தினத்தை கொண்டாடுவது என்பது எங்கள் நிலத்தை எங்களுக்கு உறுதிப்படுத்துவது என்கிறார் ஷாலினி.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

14 நாள்கள்

 
கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்

 

9p1_1534584844.jpg

``சந்தோஷங்களில் திளைக்கிறேன்!’’

நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜசிந்தா ஆர்டென் தன் முதல் பெண் குழந்தை பிறந்து ஆறு வாரப் பிரசவ விடுப்புக்குப்பின் மீண்டும் பணியில் சேர்ந்தார். 38 வயதான ஜசிந்தா, தான் சூப்பர் ஹியூமன் இல்லை என்றும், குழந்தை வளர்ப்பின் சிரமங்களை மறைக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். பதவியில் இருக்கும்போது குழந்தைப்பேறு அடைந்த இரண்டாவது பிரதமர் ஜசிந்தா. முதலாமவர் பெனாசிர் பூட்டோ.

“குற்ற உணர்ச்சி என்பது பெண்களுக்குக் கண்டிப்பாக இருக்கும். குழந்தைக்கு இன்னும் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு நிச்சயம் உண்டு” என்று தெரிவித்த ஜசிந்தா, “பெண்கள் தங்கள் மனதுக்கு நெருக்கமான முடிவுகளை எடுத்து குடும்பம், அலுவலகம் என இருபுறமுமே திருப்தியை அடையும் காலம் என்றாவது வரும்” என்றார். பிரதமர் என்பதாலேயே தன்மீது உலகின் பார்வை தேவையற்று விழுந்திருக்கிறது என்பதை உணர்ந்துள்ள ஜசிந்தா, இப்போதைக்கு குழந்தைக்குப் பால் புகட்டுவது, நேப்பி மாற்றுவது, தூங்குவது எனச் சின்னச் சின்ன சந்தோஷங்களில் திளைப்பதாகத் தெரிவித்தார்.

அம்மான்னா சும்மாவா!


9p2_1534584857.jpg

என் நிலவே... என் நட்சத்திரமே!

`பம்பாய்’, `காதலர் தினம்’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்த பாலிவுட் நடிகையான சோனாலி பெந்த்ரே, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.   அண்மையில் இந்தியாவில் இருக்கும் அவர் மகன் ராக்கி என்ற ரன்வீர் பெல்லின் 13-வது பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சோனாலி. “ரன்வீர்… என் கதிரவனே, என் நிலவே, என் நட்சத்திரமே, என் வானமே… ஓகே… கொஞ்சம் நாடகத்தனமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது உன் பதின்மூன்றாவது பிறந்தநாள். வாவ்... நீ ஒரு டீன்ஏஜர்! இதை நம்ப எனக்கு இன்னும் கொஞ்சம் நாள்கள் ஆகும். என்னை மிகவும் பெருமைகொள்ளச் செய்திருக்கிறாய் நீ. உன் நகைச்சுவை உணர்வு, உன் பலம், உன் அன்பு, உன் சேட்டை… எல்லாவற்றையும் நான் ரசிக்கிறேன். நாம் ஒன்றாக இல்லாத முதல் பிறந்தநாள் இது. உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். நிறைய அன்பும் அணைப்பும்” என்று பிறந்தநாள் வாழ்த்தை மகனுக்குச் சொல்லியிருக்கிறார்.

“அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணினாலும், எப்போதுமே அவனுடன் வெளிப்படையாகவே எல்லாம் விவாதித்து வந்திருக்கிறோம். இப்போதும் அப்படித்தான். மிகுந்த மெச்சூரிட்டியுடன்  கேன்சர் செய்தியைக் கேட்டுக்கொண்டான். அடுத்த நொடியே என் வலிமைக்கு அஸ்திவாரமாக, என் தன்னம்பிக்கையின் ஊற்றாக மாறிப்போனான்” என நெகிழ்ந்து எழுதியிருக்கிறார்.

மனதார வாழ்த்துகிறோம்... ஹேப்பி பர்த்டே ராக்கி!


9p3_1534584876.jpg

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி

சமீபத்தில் சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார் நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமானி. இதற்கு முன் அப்பதவியை வகித்த நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்வதால், அந்தப் பதவிக்கு வந்திருக்கிறார் விஜயா. நீதிபதி துரைசாமியுடன் இணைந்து, டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க வேண்டிய மகளிர் உரிமை சம்பந்தப்பட்ட பொதுநல வழக்குகள், கிரிமினல் மேல்முறையீட்டு மனுக்கள், கிரிமினல் வழக்குகள் ஆகியவற்றை இவர் விசாரிப்பார் என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இவை தவிர, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் மேல்முறையீட்டு வழக்குகளையும் இவர் விசாரிப்பார்.

1958-ம் ஆண்டு பிறந்த விஜயா, 1982-ம் ஆண்டு மகாராஷ்டிரம் மற்றும் கோவா மாநிலங்களின் பார் கவுன்சிலில் பதிவு செய்த பின், மும்பை சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றம் போன்றவற்றில் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்கிறார். கடந்த 2001-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இவை தவிர 1987 முதல் 1993 வரை கே.சி. சட்டக்கல்லூரியில் பகுதிநேர விரிவுரை யாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக (ஆக்டிங்) செயல்பட்டு வந்திருக்கிறார் விஜயா.

வாழ்த்துகளும் வணக்கமும்... விஜயாம்மா!


9p4_1534584889.jpg

96 வயதில் தேர்வெழுதி வென்ற பாட்டி!

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாதை அடுத்த சேப்பாது கிராமத்தைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி கார்த்தியாயினி அம்மாள், கேரள மாநில அரசு சமீபத்தில் நடத்திய தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார். கேரள அரசு 16 முதல் 75 வயது வரையுள்ள எழுத்தறிவற்றவர்களுக்குக் கல்வி தர `அக் ஷரலக் ஷம்’ என்னும் திட்டத்தைச் செயல் படுத்துகிறது. இதன்படி சமீபத்தில் 40,363 பேர் கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் நடத்திய தேர்வை எதிர்கொண்டனர். கார்த்தியாயினி அம்மாளும், சேப்பாது காணிச்சனெல்லூர் அரசுப்பள்ளியில் தேர்வெழுதினார். வாசிப்புத் திறன், எழுதும் முறை, கணக்கு என மூன்று பிரிவுகளில் 100 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற தேர்வில் 30 மதிப்பெண் எடுத்தால் தேர்வாகலாம். இதில் வாசிப்புத்திறன் பிரிவில் 100 மதிப்பெண் எடுத்துக் கலக்கிவிட்டார் கார்த்தியாயினி அம்மாள்.

ட்விட்டரில் இந்தச் செய்தியைப் பதிவு செய்த ஒருவர், மஹிந்த்ரா நிறுவனத்தின் தலைவரான தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவை அதில் `டேக்’ செய்தார். கார்த்தியாயினி அம்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டதும், “இது உண்மை என்றால், இவர்தான் இனி என் ரோல் மாடல். இவரைப் போல புதியதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால், என் மூளைக்கு மரணமே கிடையாது” என்று கருத்து வெளியிட்டார் ஆனந்த். பாட்டிக்கோ ஒரே ஒரு கவலைதான். அவரின் ஆசிரியையான சுவாதி, `படித்த அத்தனை கேள்விகளுக்கும் வரவில்லை. நான் நிறையப் படித்திருக்கத் தேவை இல்லையோ?’ என கார்த்தியாயினி அம்மா கவலைப்பட்டதாகத் தெரிவித்தார்!

சூப்பர் டூப்பர் டாப்பர் பாட்டி!


9p5_1534584903.jpg

சீரிய முயற்சி... பெரிய சாதனை!

தமிழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகச் சென்னையைச் சேர்ந்த ஷீலா ஸ்டீஃபனை நியமித்து ஆணைப் பிறப்பித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதன்மூலம், இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் ஆகியிருக்கிறார் ஷீலா. தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுப் பதிப்புகளில் ஷீலாவின் 70 ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மனவளம் குன்றிய சிறுவர்களின் உடல், உணர்ச்சி, அறிவாற்றல், கண்டுணர்திறன் ஆகியவற்றின் மீது `மூவ்மென்ட் தெரபி’ எனப்படும் அசைவு சிகிச்சையின் பலன், சர்வதேச அளவில் தரமான உடற்கல்வி பயிற்சி பற்றிய ஆய்வுகள் என பல ஆய்வுகளில் ஈடுபட்டு அறிக்கைகள் அளித்திருக்கிறார் ஷீலா.

9p6_1534584940.jpg

லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் நகரின் ஸ்ப்ரிங்ஃபீல்டு உடற்கல்வி கல்லூரி, லண்டன் வார்சஸ்டர் பல்கலைக்கழகம் உள்பட உலகெங்கும் உள்ள 14 உயர்கல்வி நிலையங்களில் கல்வித்தொடர்பு கொண்டுள்ளார் ஷீலா. இதுவரை 110 எம்.ஃபில் மற்றும் 10 பிஹெச்.டி. மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இன்னும் மூன்றாண்டுகளுக்கு இவர் இப்பணியில் தொடர்வார் என்றும் ஆளுநர் இல்ல செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

புதிய துணைவேந்தருக்கு வாழ்த்துகள்!


9p7_1534584918.jpg

1,000 ஆண்டுகளுக்கு முன்பே சுனாமி!

பெங்களூரு இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தின் பேராசிரியரும், ‘சீஸ்மாலஜிஸ்ட்’ எனப்படும் நிலநடுக்க ஆய்வாளருமான குசலா ராஜேந்திரன் இந்த ஆண்டு புதிதாக அரசு ஏற்படுத்தியிருக்கும் `தேசிய பெண் விஞ்ஞானி விருது' பெற்று சாதனை புரிந்திருக்கிறார். காதல் கணவர் ராஜேந்திரனுடன் நில அதிர்வுகளை ஆய்வு செய்து பல ஆய்வறிக்கைகளை அளித்துள்ள குசலா, “பெண்கள் முழுமூச்சுடன் எவ்வளவுதான் பணிபுரிந்தாலும், அதற்கான சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. தங்கள் வீடு, அலுவலகம், சமுதாயம் என்று மும்முனையிலும் போரிட்டுக்கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“என் கணவரும் இதே பணியில் இருப்பதால், மிகவும் வசதியாக உணர்கிறேன். ஆனால், பிற பெண்களால் அத்தனை எளிதில் களப்பணி செய்ய முடிவதில்லை. இந்தியாவிலும், பல பின்தங்கிய நாடுகளிலும், பெண்கள் பயணித்துக் களப்பணி செய்வதென்பது அத்தனை எளிதாக இல்லை. இந்தியாவில் உடன்பணிபுரியும் ஆண்களுடன் நீண்ட பயணங்கள் மேற்கொள்ள பெண்களால் முடிவதில்லை” என்கிறார். 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபின் காவிரிப்பட்டினம் வந்த இந்த ஜோடி, கடலில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் மண்ணில் தோண்டி, கடல் மணலை வெளிக்கொணர்ந்தது. `மணிமேகலை’ காப்பியத்தில் ஆழிப்பேரலை குறித்த குறிப்புகள் இருந்ததையடுத்து, அதை ஊர்ஜிதம் செய்ய, இன்னும் அதிகம் தோண்டியதில், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கடல் மணல் மற்றும் களிமண் பானைத் துண்டுகளை மண்ணுக்கு அடியில் இருந்து எடுத்தனர். ஆக, 1,000 ஆண்டுகளுக்கு முன் காவிரிப்பட்டினத்தில் சுனாமி ஏற்பட்டதை நிரூபித்துள்ளனர் இருவரும்!

குட்லக் குசலா!

- நிவேதிதா லூயிஸ்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

மேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990

 
மேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990
 
மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி ஒன்றாக இணைவதாக 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி முடிவெடுத்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியினர் லண்டன் மீது குண்டு வீச்சை ஆரம்பித்தனர்.
 
* 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பாடசாலை ஒன்றின் மேல் வீழ்ந்ததில் 61 பேர் பலியானார்கள்
 
* 1948 - ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன. * 1952 - அரபு லீக் அமைக்கப்பட்டது.

* 1966 - லூனார் ஆர்பிட்டர் 1 முதன் முதலாக சந்திரனின் சுற்றுவட்டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்களை லூனார் ஆர்பிட்டர் 1 அனுப்பியது.
 
* 1973 - இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
 
* 1975 - லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது. * 1990 - ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

* 1990 - மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் 3 இணையவிருப்பதாக அறிவித்தன.
 
* 2000 - பஹ்ரேய்னில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.

மகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் வெளிவந்த நாள்: 23-8-1948

 

மகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் தமிழிலும் தெலுங்கிலும் 1948-ம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டன.

 
 
 
 
மகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் வெளிவந்த நாள்: 23-8-1948
 
மகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் தமிழிலும் தெலுங்கிலும் 1948-ம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டன. இந்தப் படத்தை ஏ.கே. செட்டியார் தயாரித்திருந்தார்.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1541 - பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார்.
 
* 1555 - நெதர்லாந்தில் கால்வினிஸ்துகளுக்கு முழுமையான உரிமைகள் வழங்கப்பட்டன.
 
* 1784 - மேற்கு வட கரோலினா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை.
 
* 1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது.
 
* 1839 - சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹாங்காங்கை கைப்பற்றியது.

* 1914 - முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜெர்மனியுடன் போரை அறிவித்தது.
 
* 1929 - பாலஸ்தீனத்தில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி அவர்களில் 133 பேரைக் கொன்றனர்.
 
* 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்லாந்து, உக்ரைன், போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.