Jump to content

கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை


Recommended Posts

என்னவள் எனக்கு தந்த ....
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!

என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!

என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!

அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

உன்னை மறுக்கும் நேரத்தில்....
என்னை மறக்கிறேன் ....
உன்னை நினைக்கும் நேரத்தில் ...
என்னை மறக்கிறேன் .....!!!

என்னை மறக்கிறேன்...
உன்னை நினைக்கிறன் ....
என்னை நினைக்கும் நேரத்தில் ....
உன்னையே நினைத்து என்னை ....
மறக்கிறேன் ....!!!

உன்னை மறக்க நினைக்கும் ....
நேரத்தில் என்னை இழக்கிறேன்....
என்னை மறக்க ஒரு நொடிபோதும் ...
உன்னை மறக்க ஜென்மம் போதாது ...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை
 

என்னை கண்டவுடன் ...
தலை குனிந்து போவதை ...
காட்டிலும் ஒருமுறை ...
முறைத்தேனும் பாருயிரே...!!!

தோழிகளுடன் பேசுகிறாய் ...
கண்டவுடன் மௌனமாகிறாய் ....
என் முகத்தைப் பார்…
என்னை திட்டியாவது
என்னுடன் பேசிப் பார்…!!!

என்னை அடித்தாவது
என்னை தொட்டுப்பார்…
அப்படியாவது என் காதல்
உனக்குத் தெரியட்டும்....
காதலுக்கு காத்திருத்தல் தேவை ...
எதுவரை .......?

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

அலைகளை பார்த்தேன் ...
காதலின் தத்துவம் வந்தது ....
காதலில் விழுவது பெரிதல்ல ...
விழுந்தால் உடனே எழவும் ...
கற்று தந்தது ....!!!

அவள் 
உதறிவிட்டு சென்றாள்....
என்று சொல்லமாட்டேன் ....
காதலை தந்துவிட்டு -கையை 
உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

யாருக்கு 
வேண்டுமானாலும் ...
துணைவியாகலாம்....
எந்த நபரும் உன்னால் 
வசீகரிக்கபடலாம் .....
காதல் உனக்கும் எனக்கும் ....
மட்டும்தான் ....!!!
முதல் காதல் வாழ்வுமுடியும் ....
வரை தொடரும் ...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

Link to comment
Share on other sites

தாய்க்கு தெரியும் ....
குழந்தையை பெற்றெடுத்த வலி ....!!

தந்தைக்கு புரியும் ....
குழந்தையை தோளில் சுமந்த வலி ....!!

நண்பனுக்கு தெரியும் ....
பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!!

உனக்கு தெரியும் ....
உன் காதலை நான் சுமக்கும் வலி .....!!

காதலுக்கு தெரியும் ....
உன்னால் நான் படும் வலி ......!!

மற்றவை எல்லாவற்றிலும் 
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

Link to comment
Share on other sites

கண்ணில் விழுந்து
இதயத்திற்கு வந்தாய் ....
இதயத்தில் இருந்து....
எப்படி சென்றாய் ...?

நான் இறப்பதற்கு முன் ....
உன் காதலை தந்துவிடு ....
இல்லையேல் இறந்தபின்னும் ....
உன் நினைவில் வாழுவேன் ....
வேண்டாம் உயிரே ....
உயிரோடு படும் வேதனையை ....
உனக்கு தர மாட்டேன் ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

Link to comment
Share on other sites

உண்மையான அன்பை
எவ்வளவு வேண்டுமானாலும்
காயப் படுத்து ...!!
அது உன்னை
மறுபடியும் நேசிக்கும் ...♥
ஏமாற்றி விடாதே .. ♥
அது மறுபடியும்
யாரையுமே நேசிக்காது ...♥

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

Link to comment
Share on other sites

மரத்தடியில் இருந்து பேசிய ....
வார்த்தைகள் -இலை உதிர் காலம் ....
வந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....!!!

மரநிழலில்......
நிற்கும்போது நீ எனக்கு .....
கூறும் ஆறுதல் வார்த்தைகள்..... 
நினைவு வருகிறது ....!!!

பட்டமரம் தழைப்பதில்லை  ....
கெட்ட மனம் நேசிப்பதில்லை ....
பட்டமரம் விறகாகும் ....
கெட்ட மனம் விரக்தியாகும் ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை

Link to comment
Share on other sites

அழுகை பிடிக்கும் எனக்கு ...
வேதனைகள் நீ தந்ததால்....!!!

வலிகள் பிடிக்கும் எனக்கு 
காயங்கள் உன்னால் வந்ததால் ....!!!

தோற்க பிடிக்கும் எனக்கு 
வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!!

எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு 
நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!!

இதென்ன... 
மரணம் கூட பிடிக்கும் எனக்கு 
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா.....
கை பிடித்தபடி அருகில் தங்கை......
குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்.....
ஆனாலும் இதயம் முழுதும் வலி.....
உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!

ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்......
ஆயிரம் மின் அரட்டை நொடியில்......
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்......
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......
இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...
உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....
உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!

அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....
முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா.... 
திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....
யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ......
இதயத்தை இழந்தவர்களை தவிர ...???

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை

Link to comment
Share on other sites

  • 1 month later...
நீ கவலை படாதே ....
எனக்கு கவலை வாழ்கை ....
உனக்கும் சேர்த்து 
கவலைப்படுகிறேன்....
இன்பத்துக்கு மட்டுமல்ல ....
காதல் .....!!!

நம் இருவரின் காதல் ....
முகத்தால் வந்திருந்தால்....
முகத்தை சுழித்துவிட்டு ....
போயிருப்பேன் -அகத்தால்....
வந்து தொலைந்து ....
விட்டதே ....!!!

&
.............காதல் சோக கவிதை.................
..............கவி நாட்டியரசர்..................
.........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னையும் ....
உன் வலிகளையும்......
எவ்வளவேனும் நான் ...
சுமப்பேன் ....
என்னை உன் விழிகளில் .....
சுமந்து விடு ....!!!

மற்ந்து விடு என்று ....
ஒருமுறை சொல் .....
என்னை மறந்து விடுகிறேன் ....
என் உறவுகளை மறந்து ....
விடுகிறேன் ......!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • 1 month later...

நீ 
கிடைப்பாயா ....?
ஏங்கிய மனம் -இப்போ 
விட்டு விடுவாயா என்றும் ....
ஏங்கிதுடிகிறது ....!!!

கிடைத்த பின் காதல் ....
கிடைக்க முன் காதல் ....
ஏக்கத்தோடு வாழும் ....
வாழ்கையே காதல் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

காதலின் 
கடும் தண்டனை ....
மௌனமாயிருந்து ....
கொல்வதே....!!!

உன்னைப்போல் ....
அன்பை என்மீது ...
யாரும் வைத்ததில்லை ...
உன்னை தவிர என்னால் ..
யாரிலும் அன்பு வைக்க ...
போவதில்லை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஒவ்வொரு காதலனும் ....
முத்தமுட முன்னர் ...
விரும்புவது ....
காதலியின் தோளில்...
சாய்வதற்கே ....
ஏன் என்று 
கேட்டுப்பாருங்கள் ....
யாராலும் காரணம் ....
சொல்லிவிட முடியாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

என்னை உனக்கு ....
பிடிக்கவில்லையென்றால் ...
உண்மையாக என்னை ....
வெறுத்துவிடு ....!!!

பிடிக்கததுபோல் ...
நடிக்காதே - அது ....
என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாய் கொல்கிறது....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

வேண்டாமடி ...
என்னை காதலித்து விடாதே ....
நான் படும் அவஸ்தையை ....
நீயும் படாதே ....!!!

இதயத்தின் காயங்கள் 
உள்ளேயே இருப்பதால் ....
வெளியே தோன்றும் ....
அழகில் மயங்கி விடாதே ...!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

உனக்கு .... 
முதல் நான் ... 
இறந்தாலோ .... 
எனக்கு.... 
முதல் - நீ 
இறந்தாலோ .... 
நம் .... 
கல்லறையின் ... 
வாசகம் - " மீண்டும் 
காதலிப்போம் " .... 
அடுத்த ஜென்மத்தில் ...!!! 

+ 
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

நான் 
உன்னை ஏமாற்றினால் ...
என்ன செய்வாய் ...
என்று விளையாட்டுக்கு ....
கேட்டபோதே ....
என் இதயம் இறந்து விட்டது ....!!!


கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

Link to comment
Share on other sites

இரவே ...
விரைவாக வந்துவிடு ...
உன்னில் இருந்து ....
அழுவதே எனக்கு ....
சுகமாக இருக்கிறது ....!!!

மழையே ...
விரைவாக பொழிந்துவிடு ....
உன்னோடு சேர்ந்து ....
அழுவதே எனக்கு .....
பாதுகாப்பாக இருக்கிறது ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

நீ 
தரும் வலிகளை...
உன் முகத்துக்கு ...
சொல்ல முடியவில்லை ....
முடிந்தால் என் வரிகளை ....
பார் வலிகள் தெரியும் ...!!!

என்.... 
வரிகளை ....
வெறும் வரிகளாக ....
பார்க்காதே அந்த ...
வரிகளுக்கு ......
வலியாகிவிடும்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்


 

Link to comment
Share on other sites

நீ 
என்னை விட்டு பிரிந்து ...
பலகாலங்கள் ஆகிவிட்டது ...
பலமுறை என் இதயத்துக்கு ...
சொல்லிவிட்டேன் ....
நம்பமாட்டேன் என்கிறது ...
என் இதயம் .....!!!

ஒருமுறை ...
நீ என் இதயத்தில் இருந்த ....
இடத்துக்கு வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு போவாயா ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

நிஜமான வாழ்க்கை....
கிடைக்கவில்லை ....
கற்பனையில் என்றாலும் ....
வாழவிடு ....!!!

வாழ்ந்தால் 
உன்னோடுதான் ...
வாழ்வேன் அடம்பிடிகிறது ...
மனசு .......!!! 

மடிந்தால் ....
உன் நினைவோடு மடிவேன் ....
செத்து துடிக்கிறது ....
இதயம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

உன்னோடு ....
வாழவேண்டும் என்றுதான் ....
காதல் செய்தேன் ....
உன் மௌனம் என்னை ....
கொல்கிறது....!!!

உன்னோடு வாழவேண்டும் ...
என்பதெல்லாம் கலைந்து....
உன்னோடு பேசினால் ..
போதும் என்று ஏங்குகிறேன் ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

வலிகள் மனதில் ....
வரும்போதேலாம் ....
மௌனமாக அழுவது ...
இதயம் .....!!!

உறவுகளை ....
வருத்த கூடாது ....
என்பதற்காக ....
போலியாய் சிரிக்கிறது ....
உதடு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

  • 2 months later...

 நீ 
சிந்திவிடக்கூடாத 
கண்ணீர் -நான் 
சிந்திக்கிறேன் 
கண்ணீர் வருகிறது 

என் வாழ்க்கையில் 
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து 
உன்னை நான் தெருவில் 
பார்த்தது 

என் தூக்கத்தை 
கனவு கலைக்கிறது 
என் நினைவை 
நீ கலைக்கிறாய் 

கஸல் ;134

வயலில் புற்கலாக‌
வளர்கின்றன‍
நான் பசுவாக‌ நின்று
மேய்கிறேன்

கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
நான் புகைப்படமாக‌
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
என் இதயத்தை பார்ப்பேன்

கஸல் ;135

Link to comment
Share on other sites

மனம் உன் பார்வையால்
உடைந்து சிதறி விட்ட்து 
கவலைப்படவில்லை
உடைத்தது நீ

காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக‌
வரப்போகிறாய் ...?

உன் அன்பு உன்னையும்.....
கடந்து என்மீது பட்டதால்....
இந்தவலி.....!!!

கஸல் ;136

உள்ளத்தில் காதல்.....!
வேண்டாம் ‍போதும்.....
அவஸ்தை......
தயவு செய்து இன்னும்......
கொஞ்சம் காயப்படுத்து.....
உன்னை நினைத்தபடி வாழ‌....!!!

 ஒவ்வொரு இமை....
சிமிட்டலும் உன்னை....
நான் இழப்பதாகவே....
வருந்துகிறேன்...
கண்சிமிட்டும் ...
நேரம் வராதே....!!!

காதல் என்பது....
உடல் முழுவதும்....
உள்ளமாக‌ மாறும்...
இயற்கை நிகழ்வு.....!!!

கஸல்;137

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.