Jump to content

வல்லவனுக்கு ஆன்ட்ராய்டும் ஆயுதம்!


Recommended Posts

வல்லவனுக்கு ஆன்ட்ராய்டும் ஆயுதம்!

 

giphy%20left%201.jpgபாரதி கண்ட புதுமைப் பெண்கள் அதிகளவில் உலாவும் இந்த காலத்தில்தான் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் நிலவுகிறது.

இந்த நேரத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பெண்களுக்கு  பாதுகாப்பு கவசங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆன்ட்ராய்டு ஃபோன்கள் இல்லாத பெண்கள் இல்லை என்றாகிவிட்ட இந்த காலத்தில் அதில் விதவிதமான செயலிகளை பயன்படுத்து கின்றனர் நம் யுவதிகள். அவை வெறும் பொழுதுபோக்கிற்கு என்று மட்டுமில்லாமல் பாதுகாப்பு தருபவையாகவும் இருந்தால் எத்தனை உதவியாக இருக்கும்?

பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணின் ஃபோனிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான 3 செயலிகள் இவை...

SOS - safety first :

இந்த செயலி மிகவும் துரிதமானது. நமக்கு நெருக்கமானவர்களை மட்டுமல்லாமல் நமக்கு அருகில் பிரச்னையில் இருக்கும் யாருக்கு வேண்டுமாயினும் நம்மால் உதவ முடியும். இதில் பெயர், அலைபேசி எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. GPS இருந்தால் போதும்.

நமக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும் நேரத்தில் அதனை Broadcast செய்தால் சுற்றியிருப்பவர்களுக்கு தகவல் போகும். அவசர குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியும் இந்த செயலியில் உண்டு. இதன் அளவு வெறும் 376KB மட்டுமே. இது ஒரு இந்திய செயலி என்பது கூடுதல் செய்தி.

bSafe :

apps%20600%201.jpg

இந்த செயலியின் மூலமாக நம்மால் நம் உறவினர்களையோ, நண்பர்களையோ ஆபத்து ஏற்படும் நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். நமக்கு வேண்டிய அளவு நபர்களை இணைத்து நெட்வொர்க் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். “Live GPS trace” மூலமாக நாம் எங்கிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பிரச்னையில் சிக்கிக் கொண்டால் “Guardian alert button”ஐ அழுத்தினால் நம் நெட்வொர்க்கில் உள்ள அனைவருக்கும் தகவல் அனுப்பப்படும். இது ஒரு US செயலி. இதன் அளவு 11.80MB.

Women security :

இந்த செயலியின் மூலமாக, நாம் பதிந்து வைத்திருக்கும் அனைத்து எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தியோடு நாம் இருக்கும் இடமும் அதில் பதிவாகி செல்லும். இந்த செயலியின் தனித்தன்மை, கேமரா நாம் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து நம் Contacts ல் இருக்கும் அனைத்து Mail id களுக்கும் அனுப்பிவிடும்.

apps%20600%202.jpg

மேலும், நாம் activate செய்த பிறகு 3 முறை அனைத்து எண்களுக்கும் அழைப்பு விடும். இது அனைத்துமே நாம் பிரச்னையில் மாட்டிய 5-10 நிமிடங்களில் நடந்து முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய செயலியின் அளவு 1.62MB.

சாதாரண ஒரு செல்ஃபியை எடிட் செய்ய பல செயலிகளைப் பயன்படுத்தும் நாம், பாதுகாப்பிற்காக இவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாமே?

http://www.vikatan.com/news/article.php?aid=54426

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.