Jump to content

தனிக்கவிதைகள்


Recommended Posts

விண்ணை அளந்திடும் புள்ளினம் போல் மனம்
எண்ணிலா எண்ணம் கொண்டு மிதந்திடும்;
மண்ணில் சூரியக் வெளிச்சமும் விழு முன்னே
கண்ணும் விழித்த கணமே துள்ளி எழ வைக்கும்;
திண்ணிய மனதுடன் எண்ணிய கருமத்தை
வண்ணமுறச் செய்திடும் துணிவையும் தந்திடும்;
தன்னைக் கற்றுணர்ந்து கொண்ட இலட்சியம்
உண்மையென நம்பி உழைக்கும் மனிதர்க்கு!

***

எழிலினை எதனிலும் கண்டு நயந்திடும் பார்வையும்
முழுமையிலா அவனியின் தன்மை உணர் புன்னகையும்
அழுக்காறு களைந்து பிறரை வாழ்த்திடும் உள்ளமும்
ஆழ்மனம் சொல்லும் வழி விலகாத வாழ்வும் கொள்ள
அளவில்லாக் களிப்பில் ஆன்மா முழுமை கொள்ளும்!

***

எல்லைகள் தெரியா விரிந்த வான வெளி - ஆங்கே
எல்லையாய் உந்தன் மனம் இடும் வேலி.
வண்ணங்கள் ஏழு அழகு வானவிலில் - உன்
எண்ணக் கனவின் வண்ணங்கள் எண்ணில;
கணந்தொறும் இவ்வுலகில் தேவைகளும் கணக்கில.
உள்ளத்தே உதித்த வண்ணக் கலவைகளை
அள்ளித் தெளித்திடு அன்புடன் நாள்தொறும்!
வையகமும் வளமாய் வண்ணப் பொலிவுறும்! - மனம்
எல்லையில்லாக் களிப்பினில் வானத்தே பறந்திடும்!

 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசத்தின் கவிதைக்கும், 
அவரை நீண்ட நாட்களின் பின், களத்தில் காண்பதிலும் மிக்க மகிழ்ச்சி.:)

Link to comment
Share on other sites

மல்லிகை வாசத்தின் கவிதைக்கும், 
அவரை நீண்ட நாட்களின் பின், களத்தில் காண்பதிலும் மிக்க மகிழ்ச்சி.:)

மிக்க நன்றி தமிழ் சிறி. :) அடிக்கடி இங்கு வருவதுண்டு. வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வேன். இனிமேல் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகத் தொடர்ந்தும் எழுதுவேன். :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாசமுள்ள கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்  மல்லிகை, வாழ்த்துக்கள்...!  :)

Link to comment
Share on other sites

நல்ல வாசமுள்ள கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்  மல்லிகை, வாழ்த்துக்கள்...!  :)

கருத்துக்கும், என்றென்றும் வாழ்த்திடும் உள்ளத்துக்கும்  நன்றிகள்,  சுவி அண்ணா :) 

Link to comment
Share on other sites

  • 1 year later...

அழகு மனம்

சிந்தை கெடு  கொடும் வஞ்சனைத் தீயும்
ஊனினை,  உள்ளத்தை நலிவுறச்செய் கோபமும் 
அண்டை மானிடர் பால் கொள் பொறாமையும் 
அண்டமும் தனதே, சர்வமும் தானே எனும் கர்வமும் 
எண்ணத்தில் இவையனைத்தும் இல்லாத மனிதர்க்கு 
காணும் அனைத்தும் அழகுறத் தோன்றிடும் -  அவர் 
மனவுலகும் அழகாகும்; மகிழ்ச்சியில் மூழ்கிடும்!

***************************************

உறவுகளின் சங்கீதம்

உள்ளங்களில் ஊற்றெடுக்கும் அன்பெனும் ஜீவநதிகள்
தேசங்கள் கடந்து பாயாமல், சிறு குவளைகளுக்குள் தேங்கிடுமோ?

புள்ளினம் போல் தேசமெலாம் பறந்து திரிந்து உறவு கொண்டாடி
உள்ளம் மகிழாமல், தத்தம் கூண்டுகளுக்குள் நாம் முடங்கிடுவமோ?

புல்லாங்குழலின் துளைகளை அடைத்துவிட்டு, அதை மீட்ட
கோபியரும், கோபாலரும் மகிழும் கானம் பிறந்திடுமோ?

பிரிந்து பெரும் பிரவாகத்துடன் ஓடும் நதிகளின் சங்கமம் தான் அழகு!

விரிந்த வானத்தே பட்சிகள் கூடிப்பறந்திட தோன்றிடும் கோலமும் அழகு!
பரந்த உலகிலே பிரிந்த உறவுகள் எல்லாம் கூடிப் பேசி மகிழ்வதும் அழகே!

புல்லாங்குழலின் துளைகளில் விரல்கள் நர்த்தனமிட்டு, உட்சென்ற காற்றை இனிய கீதமாக்கும்.

நல்லுள்ளங்கள் நயமுடன் வார்த்தைகள் நவின்றிட பிறந்திடும் உறவெனும் உன்னத சங்கீதம்!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நள்ளிரவின் முழு நிலவொளியில் சலனமற்ற கடலோரம்,
வளைந்து கடலை வணங்கும் தென்னைமர ஓலை சாமரம் வீசும்;
குளிர்தென்றலும் மெல்ல வந்து மேனி தழுவி நழுவிச் செல்லும்;
கள்ளமுடன் முறுவல் பூக்கும் நிலவொளியில் ஒளி விண்மீன்கள்;
செல்லிடப் பேசியில் ஆர்ப்பாட்டமில்லா மெல்லிசையில் லயிக்கும் 
ஆழ்மனம் அமைதியின் எழிலினை நயந்து களிப்புறும், ஆர்ப்பரிக்கும்!
************************

சிறு சிறு துளிகள் மண்ணைத் தழுவி 
வெள்ளமாய் பாயும் மழையின் பிரவாகமும்,
வசந்தகாலம் கண்கவர் வண்ணமாய் மலர்ந்து 
காற்றினில் ஆடி மகிழும் மலர்களின் குதூகலமும்,
வானவெளியே எழில்மிகு கோலமென ஒருங்கே சேர்ந்து 
உல்லாசமாய் திரியும் பட்சிகளின் ஊர்வலக் காட்சியும்,
சுரங்கள் பல சேர்ந்து ராகமாகி காற்றலைகளில் 
பரவி காதோரம் செல்ல ஏற்படும் பரவசமும், 
அழகு தமிழ் சொற்கள் பொருள்பட சேர்ந்து 
கவிதையாய் பிறக்கையில் அதில் வரும் இன்பமும் 
உணர்ந்து ரசித்து அவற்றில் மூழ்கிடும் தருணங்கள் 
மானிடன் மனதில் தோன்றும் ஆணவத்தை அழித்திடும்;
ஒன்றாய் இணைந்து வாழ்தலின் அழகினை உணர்த்திடும்! 

***********************

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தனிமைக்கு அருமருந்தாம் - அதுவே 
தன்னுள்ளே சிக்க வைக்கும் போதையுமாம்; 
தினந்தோறும் கடல்போல தகவல்களை அள்ளித் 
தந்திடினும் அதில் முத்துக் குளித்து அவற்றின் 
உண்மை தன்மையினை அறிந்திடுதல் கடினமாம்;
முகநூலாம் - நட்புக்கோர் நூலாம் - எனினும் அது ஓர் 
முகமன் நூலாம்; கலை அலங்காரம் செய்த முகம் போலாம்! :11_blush:

(கலை அலங்காரம் - Make-up)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அழகிய கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள் மல்லிகை வாசம் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

On 11/3/2017 at 8:03 PM, suvy said:

இரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அழகிய கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள் மல்லிகை வாசம் .....!  tw_blush:

கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி சுவி அண்ணா :11_blush:

Link to comment
Share on other sites

  • 3 months later...

அழுக்காறு
**************
மல்லிகையின் நறுமணம் கண்டு முல்லை மலர் வாடுவதில்லை;
பென்குயினின் மிடுக்குநடை கண்டு அன்னம் தன் அழகு நடையை மறப்பதில்லை;
ஆழ்கடல் வாழ் மீனினங்கள் காணும் அழகை
வானவெளியே வலம் வரும் புள்ளினங்கள் காணாது வருந்துவதில்லை.
நம் ஒவ்வோர்க்கும் தனித்தனி ஆற்றலை அளித்தனன் இறைவன்.
நம் தனித்துவமே நம் எல்லோர்க்கும் ஆபரணங்களாம் - எனினும்
தங்கத்தில் பதித்த மணிவைரம் ஒளிர்வதால் தங்கத்தின் மதிப்பு குறைவதுமில்லை; இரண்டும் சேர்ந்து அழகாய் மிளிர தவறியதுமில்லை.
பெருமை மிகு மானிட ஜாதிக்கு
பொறாமை எனும் புற்றுநோய் வீணே.
அழுக்காறு எனும் அழுக்கினை அகற்றி
அன்பு எனும் பாலத்தில் அனைவரும் இணைய, உள்ளத்தில் ஆனந்த நதி சலனமின்றிப் பாய்ந்திடுமே! 

Link to comment
Share on other sites

18 hours ago, கஜந்தி said:

அருமை

நன்றி கஜந்தி ?

Link to comment
Share on other sites

  • 11 months later...

போலிப் புன்னகையும், பசப்பு மொழியும் அலங்கரித்த மானுடம் பேருடனும், புகழுடனும் சீர்பெற்று வாழ்ந்திடும்.
இவை அல்லால், அது வாழும் கலை தெரியாப் பொருள் எனப் பெயர் பெறும்!

*******************

நல்லவரையும், நன்மையையும் மட்டும் வேண்டி நிற்க இது சொர்க்கம் அல்ல, பூலோகம்; வல்லவன் தான் வாழ்வான் என கீதை சொல்லும் மார்க்கம்!

*********************

நலிந்தோரை நசுக்கிய வலியவர் சொல்வதே தர்மமாம் - ஆதலால் 'தர்மமே இறுதியில் வெல்லும்' என்று சொல்வதும் நிஜம் தான் போலும்! 🤔 🤡🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் நீங்கள் நிறைய எழுதுவீங்கள் .......பின் இப்போதுதான் மீண்டும் தொடர்ந்து வருகின்றீர்கள்,சந்தோசமாய் இருக்கு மல்லிகை வாசம். நல்ல கவிதைகள்.....இன்னும் நிறைய எழுதுங்கள் வாசிக்க ஆவல் .....!  😁 

Link to comment
Share on other sites

  • 2 months later...

நிஜங்களை தேடித்தேடி தினந்தினம் பயணம்
நீதி, நியாயங்கள் அருகிவிட்ட உலகில்.
நிலையில்லா வாழ்வில் நிலைத்திடா நிஜங்களால் நலிந்திடும் மனதில் நிம்மதியேது?
'நினைவினில் பரம்பொருள் ஒன்றே நிலையெனக் கொள்ளல் நல'மென ஞானியர் நவின்றது 
நடைமுறை வாழ்வினில் நமக்கு ஒவ்வுமா?
நர்த்தனமாடிடும் நடராஜன் அவன் ஆட்டுவிப்பில் 
நாமும் ஓர் பொம்மையென நம்நிலை உணர்ந்து 
நாள்தொறும் நம்கருமம் நலமுடனே ஆற்றுதலும்,
நிஜம் இதுவேயென உணர்தலும் நிம்மதி தரும்.

Link to comment
Share on other sites

சிறு சிறு கவிதைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

10 hours ago, Lara said:

சிறு சிறு கவிதைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி லாரா. 😊

Link to comment
Share on other sites

மல்லிகை வாசம் உங்கள் கவிதை அருமையாக இருக்கின்றது. 

நாமும் ஓர் பொம்மையென நம்நிலை உணர்ந்து 
நாள்தொறும் நம்கருமம் நலமுடனே ஆற்றுதலும்,
நிஜம் இதுவேயென உணர்தலும் நிம்மதி தரும்.

இது தான் நிஜம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 5/4/2019 at 5:10 PM, ஜெகதா துரை said:

மல்லிகை வாசம் உங்கள் கவிதை அருமையாக இருக்கின்றது. 

நன்றி ஜெகதா. 

*****************************************

தன்னலம் மறுத்திட்ட உயர் இலட்சிய மறவர்,
துர்க்குணம் அறியாத் தம் தொழில் ஆற்றி வாழ்
நம் சகமனிதர், இல்லறம் வளர்த்த அன்புத் தாய்மார், 
வானுயர் விருட்சங்களாய் வளர்ந்து - இப்புவிக்கு 
வளம் தரவல்ல இளஞ்சிறு தளிர்கள் - சிறார்கள்
இன்ன நல்லுயிர்கள் இன்று நம்முடனில்லை - எனினும் 
நினைவுதனில் கலையாது நிலைத்திருக்கும் அவர் தியாகம்! 🙏🙏🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.