Jump to content

பெரியாரும் சொற்சிலம்பமும் சுய முரண்பாடும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பம் இடையூறானது !

""...பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது.

...புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தப் புருஷனையும், எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது... இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும்.

குடியரசு கட்டுரை 1.3.1931

""...இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன்

மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது...

தந்தை பெரியார் பெங்களூரில் நிகழ்த்திய சொற்பொழிவு விடுதலை 28.6.1973

நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்?

தந்தை பெரியார் "வாழ்க்கைத் துணை நலம்' எனும் புத்தகத்திலிருந்து 1938ஆம் ஆண்டு பதிப்பு

ஆண்களின் சூழ்ச்சி !

...அன்றியும் ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால், பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன், பெண்கள் என்றும் விடுதலைப் பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காக பாடு படுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம், பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.

பெண் விடுதலை

...பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கிறது.

தவிர, "பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது' என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை.

"குடியரசு' (12.8.28)

பத்தினி என்பது முட்டாள்தனம்

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும்

மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு

இயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.

"விடுதலை' (4.5.73)

தேசிய குற்றம்

ஒரு பெண்ணை தாய், தகப்பன், பி.ஏ. படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை துணி அலங்காரங்களுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கவும் செய்தால், பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காக சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப் பணமும் வீண்தானே? இது தேசிய குற்றமாகாதா?

ஆண் போல நடக்க வேண்டும்

...எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழையாமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப் போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா பெண்ணா என்று மற்றவர்கள் கண்டு பிடிக்காத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்ணும் தன்னை "பெண் இனம்' என்று கருத இடமும், எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது.

திருப்பத்தூரில் (15.9.46) பெரியார் சொற்பொழிவு

சுயேச்சைக்கு விரோதம்

...ஆகையால் ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.

"குடியரசு' (6.4.1930)

திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது

புருஷன் மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து திருமண முறையில், புருஷன் மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன்.

""நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது'' என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? பெண்களுக்கு உரிமை வேண்டுவோர், இத்தத்துவத்தைக் கொண்டுள்ள திருமண முறைகளை ஒழித்துக் கட்ட முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கண்ணகி பற்றி பெரியார்...

"".....கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டதன் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன், கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லுகிறான்; கோவலன் இறந்து போகிறான். இதை அறிந்த அம்மாள் கண்ணகிக்குப் பெரும் கோபம் வந்து, நிரபராதிகளான மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள்... கோவலன் ஒழுக்கமற்றவன்; தாசி ஒழுக்கமற்றவள்; கண்ணகி மடப்பெண்.

""அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும் போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண்டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி? மார்பைக் கையால் திருகினால் அது வந்து விடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர, வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பை (முலை) வீசி எறிந்தால், அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் "பாஸ்பரஸ்' இருக்குமா? இந்த மூடநம்பிக்கை கற்பனையானது, என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூற முடியுமா?

""அக்கினி பகவானுக்கு கண்ணகி, "பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்களைச் சுடு!' என்று கட்டளை இட்டாளாம். அதுபோல் பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் சாம்பலானார்களாம்; மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்! இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால், நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா? – என்கின்ற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதம் விட வேண்டும்? ஆகவே, வருணாசிரம தர்ம

மனு நூல், ராமாயணம், பாரதத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?...

""...பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது, கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால், கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல், ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் கற்புக்கரசி! வணங்கத்தக்கவள்! தெய்வமானவள்! பாண்டியன் "குற்றவாளி' இதுதானே சிலப்பதிகாரக் கதை? இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் இந்த மாதிரியான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு, நமக்குச் சொந்தம் என்றா சொல்வது?

""இவைகளைத்தான் நாம் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; நெருப்பு வைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்!...''

(28.7.1951 விடுதலையில் வெளியாகிய பெரியாரின் உரை ஆதாரம் : 22.12.2001 விடுதலை)

உப்பு, மிளகாயா பெண்கள் !

"ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது?

"விடுதலை' (11.10.48)

கல்யாண முறை ஒழிய வேண்டும் !

கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன?

"விடுதலை' (28.6.73)

தமிழனுக்கு தனிவழி கிடையாது !

தமிழன் நடந்து கொள்வதற்கென்று தனிமுறை, வழிமுறை கிடையாது. தமிழனுக்கு என்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது.

"குடியரசு' (27.11.43)

(தொடரும் :-)

( நன்றி துக்ளக் )

நன்றி இட்லி வடை வலைப்பூ.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் பெண்ணுக்கு தேவையில்லை என்று சொல்லிச் சொல்லியே 70 வயதில் 25 வயதுப் பெண்ணைக் கலியாணம் செய்த *** ஈ வே ரா...! இவர்கள் எல்லாம் தந்தையர். தந்தை என்ற நிலையையே கேவலப்படுத்திய கொடிய மனித விதிவிலக்கு இந்த பெரியார்..!

பெண் கர்ப்பம் தரிப்பதையே கேவலமாக விமர்சித்தவருக்கு தன் சொந்தப் பிறப்புப் பற்றிய சிந்தனையே இல்லாமல்...பெண்ணின் ஆணின் படைப்பின் பகுத்தறிவு இல்லாமல் போனது....இவர் *** அல்லது...சாதாரண மனிதன் தானா..????! :rolleyes::icon_idea:

*** சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பத்தைப் பற்றி இவனது தாய், இவனைப் பெத்துப் போடு முன்பு சிந்தித்திருக்க வேண்டியது. என்னவோ, இந்தப் பகுத்தறிவு சிறப்பானது! வல்லது! உங்களைக் கட்டுப்படுத்தவில்லை என்று சொல்லி புராணம் பாட கும்பல் வரும்.

Link to comment
Share on other sites

தேவையில்லை

பெண்ணை

நிலையையே

சிந்தனையே

மனிதன் தானா

இவனை

உங்களைக்

கட்டுப்படுத்தவில்லை

அய்யோ! அய்யோ (வடிவேல் பாணியில் படிக்கவும்) :lol::lol::(:icon_idea::rolleyes::lol:

Link to comment
Share on other sites

பெண் உரிமை

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை. (கு3.11.79;8)

பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான். (கு.16.11.30;7)

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள். (கு.8.2.31;12:2௧)

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். (கு.28.4.35;5:1)

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. (கு.16.6.35;7:3)

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4)

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை - ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (கு.21.7.46;2:2)

பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும். (வி.14.2.61;1:பெ,செ.)

திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமா என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக, நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையே தான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள். (வி.5.4.61;1:பெ.செ.)

தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது. (வி.15.4.61;1:பெ.செ)

இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் செல்வமும் நாகரிக அறிவும் கவுரவம் உள்ள சுற்றத்தாருக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டுக் கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்? (பெ.சி.மி.187)

நமக்கு பெண்கள் தங்களைப் பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். (வி.22.3.43;3:4)

பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும். (கு.5.6.48;14:2௩)

கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள். (கு.29.9.40;15:3)

பெண்கள் மதிப்பிழந்து போவதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே பெண்கள் ஆபாசமாய்த் தங்களை அலங்கரித்துக் கொள்வதேயாகும். (வி.15.6.43;1:3)

தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. (வி.11.10.48;3:2)

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். (கு.1.5.27;5:3)

இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்? (கு.3.11.29;8)

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும். (வி.22.3.43;4:2)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். (பெ.சி.மி:170)

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.(கு.8.1.28;6:3)

கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும். (கு.8.1.28;15:1)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது? (பெ.க.மு.தொ;134)

பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை. (கு.1.3.36;11:3)

நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா?(வி.1.6.68;3:5)

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலகத்தி

Link to comment
Share on other sites

சிலர் ஒரு களத்திலேயே மாறி மாறி முன்னுக்குப் பின் முரணாக ஒரு நாளிலேயே கருத்து சொல்வார்கள்.

தந்தை பெரியார் ஆரம்பத்தில் கொண்டிருந்த கருத்துக்களை பின்னாளில் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விடயம் அல்ல.

தந்தை பெரியார் ஒரு காலத்தில் சந்நியாசியாகவும் இருந்திருக்கிறார். சாமி சிலைகளுக்கு பூக் கோர்க்கின்ற வேலையை செய்திருக்கிறார்.

கோயில் தர்மகர்த்தாவாக இருந்திருக்கிறார்.

அப்பொழுது அவர் சொன்ன கருத்துக்கள் கிடைத்தால் அவைகளையும் கொண்டு வந்து போடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் ஒரு களத்திலேயே மாறி மாறி முன்னுக்குப் பின் முரணாக ஒரு நாளிலேயே கருத்து சொல்வார்கள்.

தந்தை பெரியார் ஆரம்பத்தில் கொண்டிருந்த கருத்துக்களை பின்னாளில் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விடயம் அல்ல

ஆக அவர் ஒரு சந்தர்ப்பவாத சமூக வெறியன்..பிராமண சமூக வெறியன்...அப்படி என்று கருதுதலே தகும். அவரையெல்லாம்..பெரியார்....தந்த

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் இயக்க உறுப்பினர்கள் திருமணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சிலர் இதை உண்மை இல்லை, முறையற்ற உறவுகளை தடை செய்யப்பட்டிருந்தது என்று வாதிட்டாலும், தடை இருந்தது உண்மைதான்.

ஆனால் அந்த தடை அர்த்தமற்றது என்பதை எமது தலைவர் அனுபவத்தின் ஊடாக உணர்ந்து கொண்டார். அந்த தடை பின்பு நீக்கப்பட்டது. இன்று பல தளபதிகள், போராளிகள் திருமணம் செய்து இருக்கிறார்கள்.

யாருமே ஆரம்ப காலத்தில் கொண்டிருக்கும் கொள்கைளை கடைசி வரை கொண்டிருப்பதில்லை. அப்படிக் கொண்டிருப்பவர்கள் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. அனுபவங்களின் ஊடாக அவர்களின் கருத்துக்கள் கொள்கைகள் மாறிக் கொண்டு முன்னோக்கிச் செல்லும்.

அது சந்தர்ப்பவாதம் என்று நீங்கள் சொன்னால், உலகில் எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் இயக்க உறுப்பினர்கள் திருமணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சிலர் இதை உண்மை இல்லை, முறையற்ற உறவுகளை தடை செய்யப்பட்டிருந்தது என்று வாதிட்டாலும், தடை இருந்தது உண்மைதான்.

ஆனால் அந்த தடை அர்த்தமற்றது என்பதை எமது தலைவர் அனுபவத்தின் ஊடாக உணர்ந்து கொண்டார். அந்த தடை பின்பு நீக்கப்பட்டது. இன்று பல தளபதிகள், போராளிகள் திருமணம் செய்து இருக்கிறார்கள்.

யாருமே ஆரம்ப காலத்தில் கொண்டிருக்கும் கொள்கைளை கடைசி வரை கொண்டிருப்பதில்லை. அப்படிக் கொண்டிருப்பவர்கள் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. அனுபவங்களின் ஊடாக அவர்களின் கருத்துக்கள் கொள்கைகள் மாறிக் கொண்டு முன்னோக்கிச் செல்லும்.

அது சந்தர்ப்பவாதம் என்று நீங்கள் சொன்னால், உலகில் எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்தான்.

இயலாக்கட்டத்தில் தான் புலிகளை வாதத்துக்குள் இழுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்களில் நீங்களும் ஒருவர். அந்த வகையில் உங்கள் இயலாமை....??! சரி அதிலும் கூட நீங்கள் முண்ணுக்குப் பின் முரணாபவர் என்பீர்கள்....சரி விடுவம்...

விசயத்துக்கு வந்தால்..இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் அப்படிக் கொள்கைகள் இருப்பினும்..புலிகள் பெண்கள் திருமணமே செய்யக் கூடாது..கலியாணம் என்பது பெண்ணடிமைத்தனம்..என்றெல்லாம் கடையளந்துவிட்டு திருமணம் செய்யவில்லை. போராளிகளுக்கு கடமையும் மரணமும் காத்திருப்பன. அந்த வகையில் பொறுப்புக்கள் அதிகம் என்பதால் குடும்பப் பொறுப்புக்களையும் கவனிப்பது கூடுதல் சுமை என்பதால் அதிலிருந்து விலக்களித்தனர். இன்றும் முதல் 5 வருட சேவைக்காலத்தில் திருமணம் செய்ய முடியாது. அதன் பின்னர் அவர்கள் விரும்பின் பட்சத்தில் செய்து கொள்ளலாம். ஆனால் திருமணத்துக்காக இயக்கத்தை விட்டு விலகுவது என்பது உடனடிச் சாத்தியமில்லை. தளபதிகளாகிய பின்னர் அவர்களின் களப்பங்களிப்புக் குறைந்து திட்டமிடல் அதிகம் என்பதால் அவர்களுக்கு திருமணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் விரும்பினால் மட்டும்.

ஆனால் பெரியார் என்ற *** 18 வயதில் முடித்து அனுபவப்பட்ட பின் இவ்வளவு பகுத்தரிவு வாதம் பேசிய பின் 76 வயதில் 22 வயதுப் பெண்ணை முடிச்சிருக்கின்றார்என்றால்...அது முரண்பாடல்ல..முரண்டு பிடிக்கிறது..! :P :lol:

*** கருத்து நீக்கப்பட்டதுடன், ஒரு சொல் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

ஒரு இலட்சம் என்பது தவறு. கோடிக்கணக்கான என்பதே சரி!

அவர் தந்தை பெரியாரை தாராளமாக ஒருமையில் அழைக்கட்டும்.

தந்தை பெரியார் மீது செருப்புக்கள் எல்லாம் வீசப்பட்டன. தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் முன்னால் இதெல்லாம் ஒன்றுமே அல்ல.

ஆனால் நெடுக்காலபோவானின் பரிதாப நிலையை பாருங்கள்!

நாம் இங்கே தந்தை பெரியார் பற்றி பேசியது குறைவு. பகுத்தறிவுக் கருத்துக்களையே முன்வைக்கிறோம். அது தந்தை பெரியாருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நெடுக்காலபோவான் துணைக்கு அழைத்த தோழர் ஜீவாவும் ஒரு பகுத்தறிவுவாதிதான். தந்தை பெரியார்,தோழர் ஜீவா, அறிஞர் அண்ணா, காமராஜர், பழ.நெடுமாறன், சுபவீ என்று எல்லோரும் காட்டுகின்ற வழியில், அவைகள் சரியான வழியாக இருப்பதால், நாம் அதில் நடக்கிறோம். (இதில் ஒவ்வொருவரின் கருத்துக்களில் சிறிது மாறுபாடுகளும், செய்முறைகளில் வேறுபாடுகளும் உண்டு. நோக்கம் என்பது ஒன்றுதான்)

சரி! இப்பொழுது விடயத்திற்கு வருவோம்

நாம் சிவன், விஸ்ணு போன்றவைகள் இல்லை என்கிறோம். அவைகள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்கின்ற உண்மைகளை சொல்கிறோம்.

நாம் இங்கே கடவுள் என்று நம்பப்படுபவைகள் பற்றி விமர்சிக்கிறோம். அதை நெடுக்காலபோவானால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அவரும் இந்த சித்திரங்களை வணங்குபவராக இருக்கலாம்.

பதிலுக்கு அவர் "பெரியார், பெரியார்" என்று கூச்சலிடுகிறார்.

இங்கே வித்தியாசத்தை பாருங்கள்.

நாம் கடவுள் பற்றி கேள்வி எழுப்புகிறோம்.

அவருடைய பதில் ஒரு மனிதரை தாக்குவதாக இருக்கிறது.

இது நெடுக்காலபோவானின் பரிதாபநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இலட்சம் என்பது தவறு. கோடிக்கணக்கான என்பதே சரி!

அவர் தந்தை பெரியாரை தாராளமாக ஒருமையில் அழைக்கட்டும்.

தந்தை பெரியார் மீது செருப்புக்கள் எல்லாம் வீசப்பட்டன. தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் முன்னால் இதெல்லாம் ஒன்றுமே அல்ல.

ஆனால் நெடுக்காலபோவானின் பரிதாப நிலையை பாருங்கள்!

நாம் இங்கே தந்தை பெரியார் பற்றி பேசியது குறைவு. பகுத்தறிவுக் கருத்துக்களையே முன்வைக்கிறோம். அது தந்தை பெரியாருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நெடுக்காலபோவான் துணைக்கு அழைத்த தோழர் ஜீவாவும் ஒரு பகுத்தறிவுவாதிதான். தந்தை பெரியார்,தோழர் ஜீவா, அறிஞர் அண்ணா, காமராஜர், பழ.நெடுமாறன், சுபவீ என்று எல்லோரும் காட்டுகின்ற வழியில், அவைகள் சரியான வழியாக இருப்பதால், நாம் அதில் நடக்கிறோம். (இதில் ஒவ்வொருவரின் கருத்துக்களில் சிறிது மாறுபாடுகளும், செய்முறைகளில் வேறுபாடுகளும் உண்டு. நோக்கம் என்பது ஒன்றுதான்)

சரி! இப்பொழுது விடயத்திற்கு வருவோம்

நாம் சிவன், விஸ்ணு போன்றவைகள் இல்லை என்கிறோம். அவைகள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்கின்ற உண்மைகளை சொல்கிறோம்.

நாம் இங்கே கடவுள் என்று நம்பப்படுபவைகள் பற்றி விமர்சிக்கிறோம். அதை நெடுக்காலபோவானால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அவரும் இந்த சித்திரங்களை வணங்குபவராக இருக்கலாம்.

பதிலுக்கு அவர் "பெரியார், பெரியார்" என்று கூச்சலிடுகிறார்.

இங்கே வித்தியாசத்தை பாருங்கள்.

நாம் கடவுள் பற்றி கேள்வி எழுப்புகிறோம்.

அவருடைய பதில் ஒரு மனிதரை தாக்குவதாக இருக்கிறது.

இது நெடுக்காலபோவானின் பரிதாபநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

கடவுள்கள் பற்றிய ஆபாசச் சித்தரிப்புக்கள் தவறு என்பதை ஏலவே உங்களுக்கு உணர்த்தி உள்ளோம். அவை வேற்று மத ஆதிக்கக் காலத்தில் செருகப்பட்ட மதங்களை மலினப்படுத்தும் நோக்கிலான புனை கதைகள்..! அவையல்ல மதங்கள் சொல்லும் உண்மைகள். அவை விழிப்பவை வேறு என்பது உங்களுக்கு அறிவியலும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் சொல்லி வருகின்றோம். கவனியுங்கள்..! :lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்து பார்ப்பான்களும் நச்சுப் பாம்புக்கு இணையானவர்கள் என்பது இந்தக் களத்துக்கு வந்தபின்பே புரிகிறது :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து பார்ப்பான்களும் நச்சுப் பாம்புக்கு இணையானவர்கள் என்பது இந்தக் களத்துக்கு வந்தபின்பே புரிகிறது :P

அட!

பெரியாரின் போக்கிரித் தனத்தைப் பற்றிக் கதைச்சால் பார்ப்பாணர் பட்டம் கட்டி, பெரும் சாதனை புரிந்து விட்டீர்களே தோழா!

என்ன செய்ய, எதற்கெடுத்தாலும் ஆரிய எதிர்ப்பு என்று திட்டித் தீர்த்து உங்களுக்கு பழகிப் போயிருக்கும். இல்லையா? :icon_idea:

Link to comment
Share on other sites

அட!

பெரியாரின் போக்கிரித் தனத்தைப் பற்றிக் கதைச்சால் பார்ப்பாணர் பட்டம் கட்டி, பெரும் சாதனை புரிந்து விட்டீர்களே தோழா!

என்ன செய்ய, எதற்கெடுத்தாலும் ஆரிய எதிர்ப்பு என்று திட்டித் தீர்த்து உங்களுக்கு பழகிப் போயிருக்கும். இல்லையா? :lol:

இதை நெடுக்காலபோவான் ஐடியிலேயே சொல்லியிருக்கலாமே? :P

தந்தை பெரியாரின் கருத்துக்களை முழுமையாக இல்லாமல் துண்டு துண்டாக கத்தரித்து, எந்தச் சூழ்நிலையில் சொன்னார் என்பதையும் மறைத்து அவர் புகழுக்கு களங்கம் விளைவிக்க கங்கணம் கட்டி அலைகிறது ஒரு சிறு கும்பல்....... அந்த கும்பல் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும் தான் என்பதைச் சொல்ல எந்தத் தயக்கமும் எமக்கில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நெடுக்காலபோவான் ஐடியிலேயே சொல்லியிருக்கலாமே? :P

தூயவனுக்கு கடவுச்சொல் தெரிய வாய்ப்பில்லை.

அது எல்லாம் தெரிந்த, அவர் சொன்னா ஊரே சொன்னமாதிரியான குருவி.. சுயதடை என்று சுத்துமாத்துவிட்டார். எனினும் சிரங்கைச் சொறிஞ்சா விடமுடியாத மாதிரி மீண்டும் வந்திருக்கின்றார்..

Link to comment
Share on other sites

தூயவனுக்கு கடவுச்சொல் தெரிய வாய்ப்பில்லை.

அது எல்லாம் தெரிந்த, அவர் சொன்னா ஊரே சொன்னமாதிரியான குருவி.. சுயதடை என்று சுத்துமாத்துவிட்டார். எனினும் சிரங்கைச் சொறிஞ்சா விடமுடியாத மாதிரி மீண்டும் வந்திருக்கின்றார்..

ஓ! அப்படியா சேதி!!!

தோழர் தூயவன் மன்னிக்கவும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு கடவுச்சொல் தெரிய வாய்ப்பில்லை.

அது எல்லாம் தெரிந்த, அவர் சொன்னா ஊரே சொன்னமாதிரியான குருவி.. சுயதடை என்று சுத்துமாத்துவிட்டார். எனினும் சிரங்கைச் சொறிஞ்சா விடமுடியாத மாதிரி மீண்டும் வந்திருக்கின்றார்..

இவர் கிருபனுக்கு இன்னும் சிலருக்கு குருவியோட முற்பிறவி பகை போல. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இவருக்கு குருவி போல யார் எழுதினாலும் அது குருவியாத்தான் தெரிகிறது. இவர் கருத்துக்கு கருத்தெழுதியதிலும் யார் கருத்தெழுதினம் என்று சிரங்கு நோண்டுற வேலையைத்தான் செய்கிறார் அதிகம். ஏலவே மட்டுறுத்தினர் யாழ்பாடி இப்படி எழுத வேண்டாம் என்று அறிவுறுத்தியும் இவர்கள் கேட்பதில்லை. மோகனும் இதற்கு உடந்தையாக உள்ளாரா...??! :lol::rolleyes::unsure:

லக்கிலுக் நமக்கும் குருவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பல தடவைகள் சொல்லியும் சந்தேகம் பிடிச்ச ஜீவங்களின் சந்தேகத்தைக் கலைக்கிறது வேலை மிணக்கேடு என்பதால் ஏதோ உளறட்டும் என்று விட்டாச்சு.

பெரியாரின் அணுகுமுறைகள் சிலவற்றில் எமக்கு உடன்பாடில்லை. நவகால உலக ஒழுங்கிற்கு பெரியார் அவசியமில்லை என்பதும் உண்மை ஈழத்தைப் பொறுத்தவரை. பெரியார் ஈழத்தில் பெரிதும் அறிமுகப்படுத்தப்பட்ட நபரும் அல்ல...! அநேகருக்கு அவரைத் தெரியவே தெரியாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கிருபனுக்கு இன்னும் சிலருக்கு குருவியோட முற்பிறவி பகை போல. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இவருக்கு குருவி போல யார் எழுதினாலும் அது குருவியாத்தான் தெரிகிறது. இவர் கருத்துக்கு கருத்தெழுதியதிலும் யார் கருத்தெழுதினம் என்று சிரங்கு நோண்டுற வேலையைத்தான் செய்கிறார் அதிகம். ஏலவே மட்டுறுத்தினர் யாழ்பாடி இப்படி எழுத வேண்டாம் என்று அறிவுறுத்தியும் இவர்கள் கேட்பதில்லை. மோகனும் இதற்கு உடந்தையாக உள்ளாரா...??! :lol::rolleyes::unsure:

லக்கிலுக் நமக்கும் குருவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பல தடவைகள் சொல்லியும் சந்தேகம் பிடிச்ச ஜீவங்களின் சந்தேகத்தைக் கலைக்கிறது வேலை மிணக்கேடு என்பதால் ஏதோ உளறட்டும் என்று விட்டாச்சு.

பெரியாரின் அணுகுமுறைகள் சிலவற்றில் எமக்கு உடன்பாடில்லை. நவகால உலக ஒழுங்கிற்கு பெரியார் அவசியமில்லை என்பதும் உண்மை ஈழத்தைப் பொறுத்தவரை. பெரியார் ஈழத்தில் பெரிதும் அறிமுகப்படுத்தப்பட்ட நபரும் அல்ல...! அநேகருக்கு அவரைத் தெரியவே தெரியாது. :lol:

:lol::lol: :P :P :lol:

Link to comment
Share on other sites

தாரகி முதல் சிவத்தம்பி வரை தமிழ்த் தேசியத்தின் ஊற்றுவாயை அறிந்த அனைவரும் பெரியாரைப்பற்றி எழுதி விட்டனர்.

தமக்குப் பெரியாரைத் தெரியாது போனால் அது உலகத்துக்கே தெரியாது என்பவர்களை நினத்துச் சிரிப்பதா அழுவதா?

இவ்வாறான அறிவுபூர்வமான கருத்துக்களைச் சொல்லக் கூடிய எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் யார் என்று களத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

லக்கி நாய் குரைத்து நிலவுக்கு எதாவது நடந்திருக்கா?முடின்ச்சா இரண்டு கல்லை எடுத்து எறிந்தீர்கள் என்றால் ஊளையிடும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாரகி முதல் சிவத்தம்பி வரை தமிழ்த் தேசியத்தின் ஊற்றுவாயை அறிந்த அனைவரும் பெரியாரைப்பற்றி எழுதி விட்டனர்.

தமக்குப் பெரியாரைத் தெரியாது போனால் அது உலகத்துக்கே தெரியாது என்பவர்களை நினத்துச் சிரிப்பதா அழுவதா?

இவ்வாறான அறிவுபூர்வமான கருத்துக்களைச் சொல்லக் கூடிய எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் யார் என்று களத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

லக்கி நாய் குரைத்து நிலவுக்கு எதாவது நடந்திருக்கா?முடின்ச்சா இரண்டு கல்லை எடுத்து எறிந்தீர்கள் என்றால் ஊளையிடும் ....

பேராசிரியர் சிவத்தம்பி பெரியாரைக் குறிப்புகளில் குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் ஈழத்தில் பெரியாரை உதாரணம் காட்டி தமிழ் தேசியம் எழவில்லை. பெரியாருக்கு ஈழத்தில் சிலையும் இல்லை பெரியாருக்காக சிலை உடைப்பும் இல்லை. பெரியார் பற்றி எங்கும் போதிப்பதும் கிடையாது.

தமிழ் தேசியம் கன்னடனால் பிறப்பிக்கப்பட்டது என்பது சுத்த சுத்துமாத்து. கால இடைவெளியில் கன்னடன் தனது தென்னிந்திய செல்வாக்குக்காக கையில் எடுத்ததே தமிழ் தேசியம். அது இறுதியில் ஐக்கிய இந்தியாவுக்குள் தமிழ்நாடு மாநிலத்தை உருவாக்கியதோடு வெற்று இந்தி எதிர்ப்போடு முடங்கிப் போனது. இறுதியில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்ததோடு சரிந்து போனது. இன்று சிலை வைப்புக்கும் உடைப்புக்கும் மட்டுமே பெரியார்..!

பெரியார் விதைத்த பிராமணிய எதிர்ப்பு என்ற சாதி வெறி இன்று வெகுவாக இல்லை. ஒரு சில கறுப்பு அங்கி மனிதர்கள் சிலைகளை உடைக்கலாம். ஆனால் மக்களின் மத உரிமைகளை அழிக்க முடியாது. பெரியாரை விட பாரதி போன்றவர்களே சாதி ஒழிப்புக்கு அதிகம் பங்காற்றியுள்ளனர். பாரதிக்கு ஈழத்தில் சிலை உண்டு. வள்ளுவனுக்கு உண்டு. ஒளவைக்கிழவிக்கு உண்டு. காந்திக்கு உண்டு. எம் ஜியாருக்கு உண்டு. ஆனால் பெரியார் என்ற சந்தர்ப்பவாதிக்கு சிலை வைக்க ஈழத்தமிழன் ஒன்றும் முட்டாள் இல்லை..!

இங்கு சில மெத்தப்படிச்ச ஜென்மங்கள் உளறுவதையே கருமமாகக் கொண்டுள்ளன. அவற்றிற்கு யதார்த்த உலகம் என்ன என்று தெரியுமோ தெரியாது. எந்தக் குகைக்குள் வாழ்கிறார்களோ..தெரியாது..! :lol:

Link to comment
Share on other sites

பெரியாரை விட பாரதி போன்றவர்கள் சாதி ஒழிப்பிற்கு அதிகம் பங்காற்றி உள்ளனரா என்று தெரியவில்லை. ஆனால் பாரதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவித்து புரட்சி செய்தார்.

பெரியாரை விட பாரதி சற்று அதிகமாகவே பார்ப்பனர்களை கண்டித்தார். அதனால் பார்ப்பனர்கள் பாரதியை ஒதுக்கி வைத்து பட்டினி போட்டு சாகடித்தனர்.

ஆனால் இதற்காக ஈழத்தில் பாரதிக்கு சிலை வைக்கப்படவில்லை.

இந்து வேளாள அரசியல் தலைவர்கள் ஈழத்தில் "பகுத்தறிவுச் சிந்தனைகள்" வந்து விடாது பார்த்துக் கொண்டனர். பாரதியும் ஈழத்தில் பராசக்தி பக்தனாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டான்.

திருவள்ளவருக்கும் நீறு பூசித்தான் சிலை வைத்தனர்.

ஈழத்தமிழினத்தின் முன்னைய இந்து வேளாள தலைமைகள் மக்களை ஏமாற்றி வைத்திருந்தனர்.

புதிய தலைமையின் வழிகாட்டலில் இன்று மக்கள் தெளிவு பெறத் தொடங்கி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி ஒழிப்பிற்கும் சமூக விடுதலைக்கும் பெரியார் போராடிய அளவுக்கு பாரதி உட்பட எவரும் போராடவில்லை.

காந்தியடிகள், பாரதி போன்றவர்கள் புண்ணுக்கு மருந்து போட்டார்கள் ஆனால் பெரியார் செய்ததோ அறுவைச் சிகிச்சை.

Link to comment
Share on other sites

இலங்கையில் தமிழ்த் தேசிய உணர்வு உருவாக்கத்திலும் எடுத்துரைப்பிலும் திராவிட இயக்கத்தின் பெரியாரின் செல்வாக்கு மிகக் கணிசமானதாகும். இலங்கையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கு மிகவும் வரையறுக்கப்பட்ட ஒரு வரவேற்பே இருந்தது. ஆனால் இருந்தது என்பது உண்மை. 1920,30 களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டி என்னும் கிராமத்தில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார். இத்தகைய ஒரு குழுமம் கிழக்கிலங்கையிலுமிருந்தது. பிற்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பத்திரிக்கையின் ஆசிரியராக விளங்கிய எஸ்.டி. சிவநாயகம் மட்டக்களப்பில் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பினார். அவர் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாக செ. இராசதுரை (பின்னர் பாராளுமன்ற அங்கத்தினர்/அமைச்சர்), எஸ்.இ. கமலநாதன் ஆகியோர் விளங்கினர். அரசியல் நிலைப்பட்ட தமிழின உணர்வு வளர்ச்சியில் 1949 இல் தோற்றுவிக்கப்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கிய ஆர்வம் காட்டிற்று. இந்தக் கட்சியினர் தங்கள் கட்சிப் பிரசாரங்களில் அண்ணாதுரை, திமுகவின் கருத்துப் பரப்புகைக்குப் பயன்படுத்திய சொற்பொழிவு முறைமையைப் பயன்படுத்தினர். இவர்களும் பாசறை, தளபதி போன்ற பதங்களைப் பயன்படுத்தினர்.

இத்தகைய பின்பற்றுகைகளுக்கு மேலே சென்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், திராவிட இயக்கத்தினருடன் நேரடித் தொடர்புகளும் ஏற்படுத்தினர். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் அ. அமிர்தலிங்கமும், பெரியாரையும் அண்ணாதுரை அவர்களையும் சந்தித்தனர் (தமிழரசுக் கட்சி வெள்ளிவிழா மலர் 1974).

இலங்கையில் வாழ்ந்து வரும் இந்திய வழிசாவழித் தமிழரிடையே, குறிப்பாக 1950 களில் திராவிட இயக்கம் முக்கியமான அரசியற் செல்வாக்குக் கொண்டிருந்தது. இச்செல்வாக்கு இலங்கையின் மலையகத்தில் (Hill Country of Sri Lanka) உள்ள தோட்டத் தொழிலாளரிடையே பரவத் தொடங்கியதும் அக்கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இலங்கைத் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இளஞ்செழியனுக்குள்ள இடம் முக்கியமானதாகும்.

இந்த வரலாற்றுண்மையை அண்மையில் வெளிவந்த பெ.முத்துலிங்கத்தின் 'எழுதாத வரலாறு' (கொழும்பு 1997) என்னும் நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.

பெரியாரின் மறைவின் பின்னரே இது பெரிதும் உணரப்படலாயிற்று (1973). பெரியார் பற்றிய இத்தகைய சிந்தனைகள் தமிழ்த் தேசியத்தினைத் தமது அரசியல் நிலைபாடாகக் கொள்கின்றன. இலங்கையில் நடைபெறும் ஆயுதந்தாங்கிய ஈழத்துத் தமிழர் விடுதலை இயக்கத்தின் ஊடாட்டம், இந்தச் சிந்தனை உருவாக்கத்திற் கணிசமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது என்று கூறலாம்.

இன்று முன்னணியில் நிற்கும் புலமை முக்கியத்துவமுள்ள பல இளைஞர்கள் இந்தக் கண்ணோட்டத்திற் பிராமணியத்தின் கடுமையான விமர்சகர்களாக உள்ளனர் என்பது கவனத்திற்கொள்ளப்படவேண்டிய ஒரு சமூகவியல் உண்மையாகும். இவர்கள் பற்றி இவ்வாய்வின் தொடக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

இவர்களின் இந்த எழுத்துச் சிந்தனைப் போக்குகள், கடந்த சில வருடங்களாகக் காணப்படாத முறையில் தமிழ்நாட்டின் சிந்தனை வெளிப்பாடுகளில் இருதுருவத் தன்மையைக் காட்டுகின்றன.

இத்தகைய ஒரு புலமை நிலை தோன்றுவதற்கான இன்னுமோர் அரசியற் பின்புலத்தையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.

முன்னர் பொதுவுடைமைக் கட்சிகளோடு தொடர்புகொண்டிருந்த, அவற்றிலிருந்து பிரிந்து சென்றவர்களே பெரியாரின் மீள்கண்டுபிடிப்பில் முன்னுக்கு நிற்கின்றனர்.

ஆனால், இந்த மீள்கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய அமிசம் உள்ளது. இந்தப் பெரியாரிய மீட்பு, செயற்பாடு சார்ந்த ஓர் அரசியல் நடைமுறையாக மாறாது, பண்பாட்டுத் துறை நடவடிக்கையாகவே உள்ளது என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.

பெரியார் பற்றிய இந்த மீள்கண்டுபிடிப்பு, சமகாலச் சர்வதேசச் சிந்தனையில் முக்கிய இடம் பெற்றிருக்கும் பெண் நிலைவாதத்தைத் தமிழ்ச் சமூகநிலைப்படுத்திக் கொள்வதற்குப் பெரிதும் உதவுகின்றது. குடும்பம், கற்பு பற்றிய பெரியாரின் சிந்தனைகள் இன்று சர்வதேசியப் பெண்நிலை வாதத்திலே விதந்து போற்றப்படுபவையாகவுள்ளன (நட்டாலி பிக்கெறிங்).

http://www.noolaham.net/library/books/01/59/59.htm

ஈழநூல் 059

நூல் திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு

ஆசிரியர்: கா. சிவத்தம்பி

மின்னூலாக்கம் இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.