Jump to content

கற்றுக்கொள்ளுதல்..!


Recommended Posts

கற்றுக்கொள்ளுதல்.

ஒருவரிடம்  இருந்து   கற்றுக்கொள்ள  நிறைய  விஷயம் இருக்கு ,அதிலும்  நமக்கு  மிக மிக  பிடித்த அல்லது  நாம்  மேலாக நேசிக்கும் ஒருவரிடம் இருந்து  கற்றுக்கொள்ளுதல் என்பது மிக அலாதியானதும் பிரியத்துடன்  கூடியதும் அல்லவா ...

அவ்வாறு தலைவர்  பிரபாகரன் என்னும் மனிதனிடம்  இருந்து  கற்றுக்கொள்ள  அவ்வாறே  நிறைய  விஷயம் இருக்கிறது 
குழந்தைகளுடன்  இறங்கி  தானும் குழந்தையாகும் குணம்,
எதிரியை மதிக்கும் விதம் , 
மிக  நீண்ட கால  செயற்பாட்டுக்கான தயார் படுத்தல், 
நாளை  என்ன  வேணும்  எமக்கு  என்பதற்கான  சரியான திட்டமிடல், 
ஒவ்வெரு  நிர்வாகத்தையும் திறமையின் அடிப்படையிலும் கெட்டித்தனதுடன் கூடிய செயற்பாடு  கொண்டு  இயங்கும்  ஒருவரை  இனம்கண்டு  கொடுப்பது  பொறுப்பை,
காயம் அடைத்த போராளிகள் சும்மா இருக்க  கூடாது  என அவர்களுக்கான  தொழில் படிப்புக்கள்,
உலங்கெங்கும் இளையவரை  அனுப்பி நாட்டுக்கு தேவையான படிப்புக்கள்,
நாட்டில் பெரும் நிர்வாக கட்டமைப்புக்கள்.

என அவரின் இந்த  போராட்ட கால வாழ்வில்  எதையும்  முடியாது ,தெரியாது ,செய்ய இயலுமா பார்ப்பம்  என்னும் கதைகளுக்கும் சொற்களுக்கும்  இடமளித்தது கிடையாது ,செய் ,செய்து  முடி ,செய்யலாம்  ஒரு   பிரச்சினையும்  இல்லை என்னும் ,நம்பிக்கை  வசனங்களே இருந்தது இப்பவும் பலரிடம் இருக்கிறது .

அவ்வாறு  அவரிடம் இருந்து அவரை   புரிந்து கொண்டு கற்றுக்கொள்ள நிறையவே எங்களுக்கு  இருக்கும் போது,பலர் இணையங்களில் தங்களை போராளிகளாக விடுதலை பற்றாளர்கள் ஆக காட்டி ,அதி  உச்ச விசுவாசிகள் போல தங்களை  அலங்கரித்து எடுத்ததுக்கு எல்லாம் அவனை போடணும், இவனை போடணும் என குமுறுவது  காணும்  போது ஒன்று மட்டும்  புரிகிறது .

இவர்கள் பிரபாகரன்  என்னும் மனிதனிடம்  இருந்து  எதையும் கற்றுக்கொள்ளவில்லை ,மாறாக அவர் கையில் இருந்த ஆயுதம் பற்றியே அறிந்து  கொண்டவர்களாக இருக்கிறார்கள் ,வன்முறை தான் பாதை எனவும் எடுத்தமா  ஆளை  போட்டமா போனமா என்றுதான் பிரபாகரன்  வாழ்ந்தார், என்பதும் தான் இவர்களில்  பிரபாகரன்  பற்றிய புரிதல் தெரிதல் .

அவரிடம்  இருந்த  ஆளுமையை தூர நோக்கு சிந்தனைகளை  புரிந்து கொள்ளவோ ,அறிந்து  கொள்ளவோ இவர்கள்  தயாராக  இல்லை ,இதன்  அடிப்படையில்  தான் இப்படியானவர்களில்  செயல்களால்  தான், பிரபாகரன்  என்னும் மனிதர்  பலர்  மத்தியில்  இன்னும் வன்முறையாளர்  என்னும் வரையறையில்  நிக்கிறார் .

ஆக தலைமை உங்களுக்கு  ஆயுத வழிகளை  மட்டும் காட்ட வில்லை ,மாறாக பல வழிகளை நிர்வாகத்தை கட்டியெழுப்பி நடத்தி  காட்டியவர் ,ஆகவே இவைகளை நீங்களும் தொடர்ந்து செய்யலாம் என்பதுதான் சொல்லவரும் செய்தியாக உள்ளது .

பிரபாகரன் என்றால் துவக்கு தான் என்னும் நிலையை  மாற்றுங்கள் ,அவர் அதை  தாண்டி என்னவெல்லாம்  அங்கு நிர்வகித்தார்  செய்தார் என்று கொஞ்சம்  யோசியுங்கள் ,அவைகளை  மீள எம்மால்  செய்ய  முடியுமா  என  சிந்தியுங்கள் இளையவர்களே .

சரியான ஒரு  தலைவரை, சரியாக பயன்படுத்துவது  தான்,  சரியான பாதைக்கு  வழிவகுக்கும் .

தலைவரை கற்றுக்கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்,நீங்கள் சொன்ன மாதிரி தலைவரிடம் அத்தகைய ஆளுமைகள் இருந்தாலும் அவரும் ஆயுதத்தை மட்டும் தானே நம்பினார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்,நீங்கள் சொன்ன மாதிரி தலைவரிடம் அத்தகைய ஆளுமைகள் இருந்தாலும் அவரும் ஆயுதத்தை மட்டும் தானே நம்பினார்

இவ்வளவு தமிழ்ச் சனத்தையும், சிங்கள இராணுவத்தையும்..... மேய்க்கிறத்துக்கு, ஆயுதத்தை நம்பாமல், 
தலைவரை.... மேடையில் நின்று,  நற்சொற்பொழிவு  ஆற்றி....  அவர்களின் மனதை மாற்றியிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா.... ரதி.
"மயிலே.... மயிலே.... இறகு போடு என்றால்,  எந்த மயிலும்... இறகு போடாது". என்ற பழ மொழியை நீங்கள் வாசிக்க வில்லையா? :cool: :)

Link to comment
Share on other sites

அஞ்சரன்,நீங்கள் சொன்ன மாதிரி தலைவரிடம் அத்தகைய ஆளுமைகள் இருந்தாலும் அவரும் ஆயுதத்தை மட்டும் தானே நம்பினார்

ஆயுதம்  அவரின்  பேரம்  பேசும்  சக்தியாகவே  இருந்தது ,ஒவ்வெரு  போரையும்  புலிகள்  வெல்லும் போதே  உலகம்  சரி  இலங்கை  அரசும்  சரி சமதான  பேச்சுக்கு  இறங்கி  வந்தன ,முழுமையாக  அவர்  ஆயுதத்தை  நம்பி  இருந்தால் அது இலங்கையில்  சிங்கள  மக்கள்  கூட  ஒரு  நிமிடம்  ஏனும்  கண்மூடி  தூங்கி  இருக்க  முடியாது .

அவர்  எல்லாம் சரியாக தான்  செய்தார்  நாம்  தாம்  அவரை  தவறாக  உணர்த்தோம் அதுதான் உண்மை .

நன்றி  வருகை  தந்து  கருத்துக்கள்  பகிர்த்த  அனைத்து  உறவுகளுக்கும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம்  அவரின்  பேரம்  பேசும்  சக்தியாகவே  இருந்தது ,ஒவ்வெரு  போரையும்  புலிகள்  வெல்லும் போதே  உலகம்  சரி  இலங்கை  அரசும்  சரி சமதான  பேச்சுக்கு  இறங்கி  வந்தன ,முழுமையாக  அவர்  ஆயுதத்தை  நம்பி  இருந்தால் அது இலங்கையில்  சிங்கள  மக்கள்  கூட  ஒரு  நிமிடம்  ஏனும்  கண்மூடி  தூங்கி  இருக்க  முடியாது .

அவர்  எல்லாம் சரியாக தான்  செய்தார்  நாம்  தாம்  அவரை  தவறாக  உணர்த்தோம் அதுதான் உண்மை .

நன்றி  வருகை  தந்து  கருத்துக்கள்  பகிர்த்த  அனைத்து  உறவுகளுக்கும் tw_blush:

உண்மையிலும் உண்மை. தவறுகள் எங்கேயோ இருக்க தலைவரின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் ஏளனம் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

எல்லாமே அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயங்கள் .

உலக வரலாற்றில் பல தனி மனிதர்களின் ஆழுமை இப்படியான பல நிகழ்வுகளை  தெளிவாக சொல்லியே வந்திருக்கு . 

எதுவும் தெரியாமல் பிரபாகரன் என்ற தனி மனிதன் முப்பது ஆண்டுகளுகள் இலங்கை அரசை இந்திய அரசை ஏன் சர்வதேசத்தையும் தன்னை பற்றிய கவனத்திற்குள் கொண்டுவந்திருக்க முடியாது .

ஆனால் அவருக்கு தெரியாத அவரால் வெளிவர முடியாத விடயங்களும் பல இருந்தது .

அரசியல் காய் நகர்தல் என்ற விடயத்தில்  அவர் தோற்றுவிட்டதுதான் உண்மை .

அவரால் தமிழ் ஈழம் அல்லது தமிழர்களுக்கு ஒரு தீர்வு எடுத்துகொடுக்கமுடியாமல் போனது அஞ்சரன் எழுதிய அவ்வளவு விடயங்களையும் புறம் தள்ளிவிடும் .

பிரபாகரன் போகும் பாதை அவரையும் அழித்து கடைசியில் தமிழர்களையும் அழிக்கும் என்று அப்பவே சொன்னவர்கள் பலர் இருந்தார்கள் அவர்கள் சொன்னதுதான் உண்மை ஆகியதே ஒழிய பிரபாகரனின் என்ற தனிமனிதனின் ஆழுமை அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.பிரபாகரன் போகும் பாதை அவரையும் அழித்து கடைசியில் தமிழர்களையும் அழிக்கும் என்று அப்பவே சொன்னவர்கள் பலர் இருந்தார்கள் அவர்கள் சொன்னதுதான் உண்மை ஆகியதே ஒழிய பிரபாகரனின் என்ற தனிமனிதனின் ஆழுமை அல்ல .

Thanks Arjun.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அவர்களால் மாரித் தவளை மாதிரி கத்த தெரிந்ததே தவிர தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரில் பிழை பிடிப்பதோ அல்லது குறை சொல்வதோ என் நோக்கம் இல்லை. அவரை விமர்சிப்பதற்கு கூட எனக்குத் தகுதி இல்லை.ஆயினும்,
தலைவரால் கூட எங்கள் மக்களை ஒன்றினைக்க முடியாது போய் விட்டது. அதற்கு முக்கிய காரணம் அவர் ஆயுதத்தை முக்கியமாக கருதியது.

எந்த அடக்கு முறைக்கு எதிராக போராட தொடங்கினாரோ அதே அடக்கு முறையை தனது மக்களுக்கு எதிராக பயன் படுத்தினார்.அதில் குறுகிய காலத்தில் சில நன்மைகள் இருந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் பார்க்கும் போது மிகவும் ஆபத்தானாது. எங்கட அழிவுக்கு முக்கிய காரணம் அது தான்.
மு.வாய்க்காலின் வன்னியில் சண்டை நடந்து கொண்டு இருக்கும் போது வட,கிழக்கில் உள்ள மக்கள் வாயை மூடிக் கொண்டு இருந்ததற்கு சுயநலம் போன்ற பல காரணங்கள் இருந்தாலும்,முக்கிய காரணம் இது தான்... ஏன் தலைவரால் அனைத்து மக்களையும் ஒன்றினைக்க முடியாது போனது?, மக்களை விடுங்கள் சுயநலமிக்கவர்கள் என்டால் புலிகளில் இருந்து கருணாவோடு பிரிந்து போன புலிகளை கூட ஒற்றுமையாக ஓரணியில் வைத்திருக்க முடியவில்லை?,பிரியாமல் ஏன் தடுக்க முடியவில்லை?...கருணாவின் பிரிவை தலைவர் நினைச்சிருந்தால் தடுத்திருக்கலாம். கருணா அந் நேரத்தில் ஒரு தனி மனிதர் இல்லை.தலைவருக்கே தெரிந்திருக்கும்.

என்ன தான் தமிழ் மக்களுக்குகாகப் போராடினாலும் தன்ட ஊர் மக்களுக்கு அதிக் நன்மைகள் செய்திருக்கிறார்.
சமாதான காலத்தில் இருந்து தனது மனைவியின்/அவரது வழி ஆட்கள்,சு.ப போன்ற அரசியல் வழி சொல்கிறதை கேட்டு ஆமாம் போடத் தொடங்கிட்டார்.
வன்னியில் அந் நேரம் வசித்த மக்களை சந்தித்தாரோ இல்லையோ தெரியாது.ஆனால் இங்கேயிருந்து போன பெரிய தலைகள்,தமிழக சினிமாக்காரர் போன்றவர்களை சந்தித்து தன்ட இமேஜை தானே கெடுத்து கொண்டார்.
முக்கியமாக தலைவருக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இருக்கவேயில்லை.
உலக அரசியலை புரிந்து கொள்ளவில்லை/புரிநது கொண்டாலும் அதற்கேற்ப நடக்க முயற்சிக்கவில்லை.
ஆயுத வெற்றியில் மட்டும் நம்பிக்கை வைத்திருந்தார்.

மற்ற இயக்கங்களோ அல்லது தலைவர்களோ பல் வேறு காரணங்களுக்காக போராட முடியாமல் போக தலைவ்ர் மட்டும் தான் நீண்ட கால நோக்கில் இயக்கத்தை கொண்டு நடத்தினார்.அதே நேரத்தில் அவரால் தான் இவ்வளவு அழிவும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வளவு காலம் போராடி,இவ்வளவு மக்களையும்,போராளிளைகயும்,அவரது குடும்பத்தையும்,அவரையும் அழித்து அவர் சாதித்தது என்ன?...இன்னும் சொல்லப் போனால் தமிழ் மக்களை ஒரு கேவலமான நிலைக்கு தள்ளிய அவப் பெயர் புலிகளுக்கும்,தலைவருக்கும் கிடைத்தது. இதை விட மற்ற இயக்கங்கள் மாதிரி முதலே இயக்கத்தை கலைத்திருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்காதோ என்னவோ?

நாடு கேட்டு போராட‌ வெளிக்கிட்டு,இப்ப மு.வாய்க்காலுக்காக நீதி கேட்டு நிற்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டுக்கு ஒரு தலைவன் தான் இருக்கமுடியும்.

துவக்கு தூக்கின எல்லாருக்கும் தலைவன் சிந்தனை வரக்கூடாது. அப்படி ஒவ்வொரு இராணுவ சிப்பாய்க்கும் தலைவன் நினைப்பு வந்து விட்டால் அவன் உண்மையான நாட்டு சிந்தனையாளன் அல்ல. 


தன்னடக்கம் ஒவ்வொரு தொழிலும் இருக்க வேண்டும்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6.11.2015, 17:16:03, ரதி said:

அஞ்சரன்,நீங்கள் சொன்ன மாதிரி தலைவரிடம் அத்தகைய ஆளுமைகள் இருந்தாலும் அவரும் ஆயுதத்தை மட்டும் தானே நம்பினார்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.