Jump to content

விபச்சாரிகள் அழிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கடந்த மாதமும் ஐப்பசி மாதமும் காணாமல் போன 19ம் 25ம் வயதுள்ள இரண்டு விபச்சாரிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேற்குலகிலும் விபச்சாரிகளை ஏதோ ஒரு வகையில் ஒழித்துக்கட்ட என்று யாரோ புறப்பட்டுவிட்டார்கள் போலும்.

http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6164475.stm

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply

அப்ப பிஸ்னஸ் காரிகள் பிரித்தானியாவில் பயப்படும் காலம் வந்துவிட்டது என சொல்லுங்கோ.

நல்ல விசயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி Pழளவநன நேற்றுஇ 09:41 Pஆ

நல்ல விசயம்

உங்களுக்கு இது நல்ல விசயமோ???

ஜனநாயக நீரோட்டத்தில நீந்திறவை இன்னும் இந்த தலைப்ப

காணயில்லபோல...... கண்டதின் பின்புதான் இருக்கு உங்களுக்கு பதிலடி!

(சில வேளை பிரித்தானியாவில என்ற படியால் விட்டிடுவினம் இதுவே ஈழமாயிருப்பின்

இதை புலியின்ர தலையில கட்டி பின்பு ஜனநாயக நீருக்குள்ள குத்துகரணமடித்து எத்தனை வித்தை காட்டியிருப்பினம்)

இதெல்லாம் இப்ப சேவையாம்....... யாழ்பாணத்தில யாராவது செய்தால் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டுமாம்

அப்படியாரயோ சுட்டதுக்குத்தான் யாழ் களத்திலயே துள்ளி குதித்தவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரிகளை அழிக்க இயக்கம் தொடங்கியிருக்குப் போலிருக்கின்றது. எங்கள் தமிழ் வீரர்கள் போய் சேர்ந்து தாம் புலம் பெயர்ந்த பிரித்தானியா நாட்டிலும் சுத்தீகரிப்பு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே.

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில இப்படி ஒரு இயக்கம் நடாத்த விரும்புபவர்கள் தாராளமாக தங்களது பெயர் முகவரியைத் தந்தால், பொலிசிடம் கொடுக்க வசதியாக இருக்கும்.பிரித்தானியாவில் விபச்சாரம் செய்வது குற்றம் அல்ல ஆனால் கொலை செய்வது குற்றம்.கொலை செய்வதைத் தூண்டும் படி எழுதுவதும் குற்றம்.ஆகையால் இங்கே இவ்வாறன தூண்டுதல்களைச் செய்பவர்கள் பிரிதானியாவில் வசித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

மத வெறியர்களுக்கு இங்கே இடம் இல்லை.கொலை வெறியில் மத பிரச்சாரம் செய்பவர்களுக்கும் இடமில்லை.

Link to comment
Share on other sites

மத வெறியர்களுக்கு இங்கே இடம் இல்லை.கொலை வெறியில் மத பிரச்சாரம் செய்பவர்களுக்கும் இடமில்லை.

ஆயிரத்தில் ஒரு வார்த்தௌ புரியவேண்டிய வெறியர்களுக்கு புரியுமா?

Link to comment
Share on other sites

என்ன நாரதர் கடுப்பாகிவிட்டார். ஐயோ ஏதும் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கபட்டுவிட்டாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில இப்படி ஒரு இயக்கம் நடாத்த விரும்புபவர்கள் தாராளமாக தங்களது பெயர் முகவரியைத் தந்தால், பொலிசிடம் கொடுக்க வசதியாக இருக்கும்.பிரித்தானியாவில் விபச்சாரம் செய்வது குற்றம் அல்ல ஆனால் கொலை செய்வது குற்றம்.கொலை செய்வதைத் தூண்டும் படி எழுதுவதும் குற்றம்.ஆகையால் இங்கே இவ்வாறன தூண்டுதல்களைச் செய்பவர்கள் பிரிதானியாவில் வசித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

மத வெறியர்களுக்கு இங்கே இடம் இல்லை.கொலை வெறியில் மத பிரச்சாரம் செய்பவர்களுக்கும் இடமில்லை.

போட்டுத்தள்ளிட்டாங்க அப்புறம் என்னவாம். அடையாளம் இல்லாமலே போட்டிருக்கிறாங்கோ...............!

தொழிலை விட்டே ஓடுறாங்கோ............................... எப்பவும் கொடூரமும் வக்கிரமும் கொடிக்கட்ட முடியாது. அடங்கும் அடக்க ஆட்கள் வருவார்கள்..!

வெல்டன் தொடருங்கள். பெண்களை மட்டுமில்ல ஆண் விபச்சாரிகளையும் போட்டுத்தள்ள வேண்டும்..! :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்டன் தொடருங்கள். பெண்களை மட்டுமில்ல ஆண் விபச்சாரிகளையும் போட்டுத்தள்ள வேண்டும்..! :P :D

நல்லது. நானும் ஆதரிக்கின்றேன். அதன்பின் உங்களைக் காணமுடியாமல் போனால் ஒரு அஞ்சலி போட்டுவிடலாம். :) :P

Link to comment
Share on other sites

ஒரு உடலும் இன்னொரு உடலும் இணைவது பற்றி அந்த ஒரு உடலுக்கோ அல்லது அந்த இன்னொரு உடலுக்கு உரித்து இல்லாத வேறொரு உடலுக்கு என்ன கவலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உடலும் இன்னொரு உடலும் இணைவது பற்றி அந்த ஒரு உடலுக்கோ அல்லது அந்த இன்னொரு உடலுக்கு உரித்து இல்லாத வேறொரு உடலுக்கு என்ன கவலை?

உடலும் உடலும் வியாபாரத்துக்காக இணைவதும்...வக்கிரத்துக்காக இணைவதும் மனிதனில் தவிர வேறேங்கும் இல்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் உலகுக்கு அவசியமில்லை. ஒழிந்தே போகட்டும்.

இறந்த உடலை அடக்கம் செய்ய ஏன் வருத்தப்படுகிறார்கள். வெற்று உடல் தானே என்று எறிந்துவிட்டுப் போவது. அந்த வகையில் இந்த விபச்சார மனித நாய்களும் கடைகளால் மனிதப் பகுத்தறிவுக்கே வேலையற்றுக் கிடக்கிறது. வெறும் பணத்துக்கும் வக்கிரத்தனத்துக்கும் உடல விற்கும் மனிதப் புறநடைகள்..உடலின் தேவைக்கும் அப்பால் அசிங்கமாக சில மனிதர் மட்டும்......சிந்திக்கவும் செய்யவும்...??! இவை மானிட நாகரிகத்தைத் தொடவே முடியாத விலங்குகளிலும் கடைகள்.............! :D

Link to comment
Share on other sites

என்ன நாரதர் கடுப்பாகிவிட்டார். ஐயோ ஏதும் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கபட்டுவிட்டாரோ?

இல்லை விபச்சாரம் செய்பவர்கள் மட்டும் அல்ல, விபச்சாரத்திற்குத் துணை போனவர்கள்.மனதால் விபச்சாரம் செய்பவர்கள்.கட்டிய மனைவி இருக்க நடைகயுடன் கனவில கலவி செய்பவர்கள்.ஐஸ் அக்காவுடன் குடும்பம் நாடாதுபவர்கள். கலைக் கண்ணோடு ஐச் அக்காவைப் பார்ப்பவர்கள் என்று எல்லாரையும் போட்டுத் தள்ளினா களத்தில ஒருவர் மின்ச்சுவியளா? :P :D

Link to comment
Share on other sites

ஒருவனுக்கு ஒருத்தி எம்கிற நடை முறையில இல்லாத சிவனையும்,முருகனையும் முதலில போட வேண்டும்.அதுக்கு முதலில பல பேருடன் உறவாடும் கிரிஸ்ணனைப் போட வேணும். :D:)

Link to comment
Share on other sites

ஒருவனுக்கு ஒருத்தி எம்கிற நடை முறையில இல்லாத சிவனையும்,முருகனையும் முதலில போட வேண்டும்.அதுக்கு முதலில பல பேருடன் உறவாடும் கிரிஸ்ணனைப் போட வேணும்.

அப்படியே அனுமான் வால்மாதிரி கருத்துக்கள் வைக்கும் மாமாகளையும் போட்டு தள்ளனும்

:P

Link to comment
Share on other sites

அப்ப எஞ்சுவது யார்?

ஏன் அவர்களை மட்டும் குறை சொல்லவேண்டும் நம் அந்தணர்கள் யாகம் செய்யும் போது அவர்களையே உசுப்பேத்துகிறார்களே!!!!!! வெத்தலையை எப்படி கற்பனை செய்கிறார்கள். வாழைப்பழத்தை எப்படி கற்பனை செய்கிறார்கள். பாக்கை எப்படி கற்பனை செய்கிறார்கள். பின் ஆகுதியிலே கொட்டும் நெய்யைத்தான் எப்படி கருதுகிறார்கள். இப்படி மானிடர்களும் தானே செய்கிறார்கள். எவ்வளவு ஒரு அயோக்கியத்தனம். தெய்வத்தையே கலவியில் மயக்கி வரம் கேட்கிறார்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் சிலரை வேண்டும் என்று வம்புக்கு இழுப்பதற்கு இதை கொண்டு வந்து இணைக்க, கறுப்பி "நல்ல விசயம்" என்று சொல்கிறார்.

கறுப்பி தொட்டதற்கெல்லாம் "நன்றாக இருக்கிறது, நல்ல விசயம்" என்று எழுதுவதை நிறுத்தினால், அதுதான் உண்மையில் நல்ல விசயமாக இருக்கும்.

இங்கே சில விடயங்களில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

இனவாதத்தை அழிக்க வேண்டும் என்பது வேறு. இனவாதிகளை அழிக்க வேண்டும் என்பது வேறு.

பார்ப்பனியத்தை அழிக்க வேண்டும் என்பது வேறு. பார்ப்பனர்களை அழிக்க வேண்டும் என்பது வேறு.

இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்பது வேறு. இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்பது வேறு.

அதே போன்று

பாலியல்தொழிலை ஒழிப்போம் என்பது வேறு. பாலியல் தொழிலாளர்களை ஒழிப்போம் என்பது வேறு.

இங்கே சொல்லப்பட்டவற்றில் இரண்டாவதாக சுட்டிக்காட்டப்படுகின்ற சிந்தனைகளை கொண்டவர்களிடம் இருந்து அவ்வாறான சிந்தனைகள் ஒழிந்து போகட்டும்.

Link to comment
Share on other sites

கறுப்பி தொட்டதற்கெல்லாம் "நன்றாக இருக்கிறது, நல்ல விசயம்" என்று எழுதுவதை நிறுத்தினால், அதுதான் உண்மையில் நல்ல விசயமாக இருக்கும்.

நட்பு விசுவாசம் என்று ஒன்று இருக்கு தானே :P

Link to comment
Share on other sites

ஒருவனுக்கு ஒருத்தி எம்கிற நடை முறையில இல்லாத சிவனையும்,முருகனையும் முதலில போட வேண்டும்.அதுக்கு முதலில பல பேருடன் உறவாடும் கிரிஸ்ணனைப் போட வேணும். :D:)

முருகன் விரும்பி மணந்தவர் வள்ளி மட்டும்தான்... கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயனின் மனைவி பெயர் தெய்வானை, மூண்று தலைகளை உடைய பிரம்மாவின் மகள் எண்று சொன்னவர்கள் வட இந்தியர்கள். அவர்களை அதை நம்பினார்கள். அதைத்தான் உங்களுக்கும் சொல்ல இருவரையும் சேர்த்து இரண்டாக்கியது தமிழர்களின் தவறு...!

சிவனுக்கு உமையொரு பாகன் என்பதுதான் பெயர்... அவரின் தலையில் இருந்து , அதவது உயரத்தில் இருந்து வருவதால்த்தான் கங்கையை சிவன் ( இமயத்தில் உற்பத்தியாகும்) வைத்திருக்கிறார் என்பார்கள்... கங்கை என்பது நதி மட்டும்தான்... அதை அன்னையாக இந்துக்கள் இருக்கும் இடங்களை வாழவைப்பதால் பார்க்கிறார்கள்... அதனால்தான் சிவனுக்கு கெட்ட பெயர்...

Link to comment
Share on other sites

முருகன் விரும்பி மணந்தவர் வள்ளி மட்டும்தான்... கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயனின் மனைவி பெயர் தெய்வானை, மூண்று தலைகளை உடைய பிரம்மாவின் மகள் எண்று சொன்னவர்கள் வட இந்தியர்கள். அவர்களை அதை நம்பினார்கள். அதைத்தான் உங்களுக்கும் சொல்ல இருவரையும் சேர்த்து இரண்டாக்கியது தமிழர்களின் தவறு...!

சிவனுக்கு உமையொரு பாகன் என்பதுதான் பெயர்... அவரின் தலையில் இருந்து , அதவது உயரத்தில் இருந்து வருவதால்த்தான் கங்கையை சிவன் ( இமயத்தில் உற்பத்தியாகும்) வைத்திருக்கிறார் என்பார்கள்... கங்கை என்பது நதி மட்டும்தான்... அதை அன்னையாக இந்துக்கள் இருக்கும் இடங்களை வாழவைப்பதால் பார்க்கிறார்கள்... அதனால்தான் சிவனுக்கு கெட்ட பெயர்...

தல,

உதில நான் ஆயிரம் கேள்வி கேக்கலாம் ,அப்படிக் கேட்டு உங்களது மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.

விபச்சாரம் ஒழிய விபச்சாரிகளைப் போட வேண்டும் என்பதில் உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்....

நமது கலாச்சாலரம் வேறு, ஐரோப்பியனின் கலாச்சாரம் வேறு. என்னைப்பொறுத்த அளவில் விலைமாதுக்கள் போன்றவர்களால் வெள்ளை இனத்தவனின் சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் சில வன்புணர்ச்சிகள் தடுக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட பெண்களால், இளம்பெண்கூட தன்னந்தனியாக நடுநிசில் உலாவமுடிகின்றது. காமுகன் ஒருவன் தனது பசியைத்தீர்க நாடும் இடம் விலைமாதுவின் வீடு. அப்படி ஒருத்தி சமுதாயத்தில் இல்லாதிருந்தால் காமுகனின் பசிக்கு இளம்பிஞ்சுகள் பலியாக நேரிடும். (இலங்கை இராணுசமும் தமிழ் பெண்களும்போல)

நான் ஒன்று கேக்கிறேன் விலைமாதுவை கொலைசெய்யப்படுவதை ஏற்றுக்கொள்பவர்கள், அவளிடம் செல்லும் ஆண்களை என்ன செய்யலாம் என்று சொல்கிறார்கள்????

1800ம் ஆண்டுக்காலப்பகுதிக்கு நாம் செல்லாவிட்டால் நன்று...

Link to comment
Share on other sites

வணக்கம்....

நமது கலாச்சாலரம் வேறு, ஐரோப்பியனின் கலாச்சாரம் வேறு. என்னைப்பொறுத்த அளவில் விலைமாதுக்கள் போன்றவர்களால் வெள்ளை இனத்தவனின் சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் சில வன்புணர்ச்சிகள் தடுக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட பெண்களால், இளம்பெண்கூட தன்னந்தனியாக நடுநிசில் உலாவமுடிகின்றது. காமுகன் ஒருவன் தனது பசியைத்தீர்க நாடும் இடம் விலைமாதுவின் வீடு. அப்படி ஒருத்தி சமுதாயத்தில் இல்லாதிருந்தால் காமுகனின் பசிக்கு இளம்பிஞ்சுகள் பலியாக நேரிடும். (இலங்கை இராணுசமும் தமிழ் பெண்களும்போல)

நான் ஒன்று கேக்கிறேன் விலைமாதுவை கொலைசெய்யப்படுவதை ஏற்றுக்கொள்பவர்கள், அவளிடம் செல்லும் ஆண்களை என்ன செய்யலாம் என்று சொல்கிறார்கள்????

1800ம் ஆண்டுக்காலப்பகுதிக்கு நாம் செல்லாவிட்டால் நன்று...

என்ன சினேகி இப்படிச் சொல்லிப் போட்டீங்க. நம்ம நாடுகளில் விலைமாதர்கள் இல்லையா? நமது இலக்கியங்களில் இல்லையா? நமது கோவிகள் தானே தேவதாசிகளை உருவாக்கின? சும்மா எதுக்கெடுத்தாலும் மேற்குலகை குறை சொல்வதே நமது தொழில் ஆகி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சினேகி இப்படிச் சொல்லிப் போட்டீங்க. நம்ம நாடுகளில் விலைமாதர்கள் இல்லையா? நமது இலக்கியங்களில் இல்லையா? நமது கோவிகள் தானே தேவதாசிகளை உருவாக்கின? சும்மா எதுக்கெடுத்தாலும் மேற்குலகை குறை சொல்வதே நமது தொழில் ஆகி விட்டது.

ஈழத்தில் நான் வசிக்கும் போது விலைமாதுக்கள் இருந்ததாக நான் அறியவில்லை. தற்போதைய நிலைமை வேறுதான் நாரதா...

நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட விமாதுக்களின் இருப்பிடம் இல்லை என்று வினைக்கிறேன். . அடுத்ததாக இலக்கியங்கள் மேல் எனக்கு பெரிதாக ஈடுபாடில்லை. மேற்குலகை மட்டும் குறைகூறவில்லை. தப்புசெய்பவன் ஏல்லோரையும் குறிப்பிடுகிறேன். முக்கியமாக "ஊருக்குதான் உபதேசம், தனக்கில்லை " என்பவனை...

Link to comment
Share on other sites

தல

"............"

விபச்சாரம் ஒழிய விபச்சாரிகளைப் போட வேண்டும் என்பதில் உங்கள் கருத்து என்ன?

வியாபாரம் எண்டு வெளிக்கிட்டவை எதைவித்தா எனக்கு என்ன வந்தது... அதாலை எங்கட சனத்துக்கு ஏதாவது கேடு வந்தால்த்தான் கடுப்பாவன்...

ஒட்டு மொத்தமாய் சொன்னால் நானும் எங்கட சனமும் (தமிழர் எல்லாரையும்தான் சொல்லுறன்) இங்கை பாலியல் தொடர்பு வச்சிருக்கிறவையால பாதிக்கப்பட வில்லை, பாதிப்பு அடைஞ்சவன் யாரோ போட்டு தள்ளுறான் போலகிடக்கு, இல்லை மனநோயாளியாயும் இருக்கலாம்... இதிலை எனக்கு எந்த கருத்தும் கிடையாது... பாதிக்க வைத்தவர் பாதிப்படைந்தவர் பிரச்சினை....!

Link to comment
Share on other sites

என்ன சினேகி இப்படிச் சொல்லிப் போட்டீங்க. நம்ம நாடுகளில் விலைமாதர்கள் இல்லையா? நமது இலக்கியங்களில் இல்லையா? நமது கோவிகள் தானே தேவதாசிகளை உருவாக்கின? சும்மா எதுக்கெடுத்தாலும் மேற்குலகை குறை சொல்வதே நமது தொழில் ஆகி விட்டது.

கோயில்கள் யாரையும் தேவதாசியாக்கவில்லை நாரதர் அண்ணா... மன்னரும் மக்களும்தான் அதுக்கு காரணம்... பழியை மட்டும் கோயில்களில் போட்டு விடுவார்கள்... பாவம் ஒரு இடம் பளி ஓரிடம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.