Jump to content

விபச்சாரிகள் அழிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ நெடுக்காலை போவானின் பிறிதொரு இடத்து வார்த்தைகள்.. அவரது இந்த தலைப்புக்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஆனால் அவருக்கே அவரது வார்த்தைகள் எதிராக..

மனித உரிமை என்று இன்னொரு மனிதனிற்கு அல்லது சமூகத்துக்கு தீமை பயக்கக் கூடிய விடயங்களை ஒரு தனி மனிதன் செய்தால் அது அவனுக்கு அல்லது அவளுக்குள்ள மனித உரிமைகளுக்கு அப்பால் தண்டனைக்குரிய குற்றமாகிறது. அந்த வகையில் இவள் தண்டனைக்குரிய குற்றவாளி.

ஆனால் மரண தண்டனை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒருவரின் குற்றத்துக்காக அவருக்கு வாழ இருக்கும் உரிமையைப் பறிக்க முடியாது. அவளைத் தனிமைப்படுத்தக் கூடிய அல்லது தண்டனைகளை அனுபவிக்க வைக்கக் கூடிய சூழல் இல்லாததால் மரண தண்டனை சூழ்நிலை கருதி வழங்கப்பட்டிருப்பினும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஆயுள் தண்டனையோ அல்லது நீண்ட சிறைத் தண்டனையும் திருந்துவதற்கான சந்தர்ப்பம் அளித்தலுமே நேர்மையான தண்டனையாக இருக்க முடியும

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுள் தண்டனையோ அல்லது நீண்ட சிறைத் தண்டனையும் திருந்துவதற்கான சந்தர்ப்பம் அளித்தலுமே நேர்மையான தண்டனையாக இருக்க முடியும்

ஆகவே நண்பர்களே.. நெடுக்கால போவானின் விபசாரிகள் அழிப்பென்பது ஒரு நேர்மையற்ற தண்டனை என்பதை அவரே ஏற்றுக் கொள்கிறார். ஆனால் நேர்மையற்ற தண்டனைக்கு எதற்காக வக்காளத்து வாங்குகிறார் என்று தான் தெரியவில்லை..

ஐயோ.. சாமி.. நீங்க என்ன தான் நினைக்கிறீங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நல்லா பேசுறேளே...

***************

முதலில் ஒன்றை ஞபகத்தில் வைத்திருங்கள்.

கொலை செய்பவனை விட கொலைசெய்யத்தூண்டியவனே அதிகுற்றவாளி. அதேபோன்று விபச்சாரம் செய்பவளை வட விபச்சாரம் செய்யத்தூண்டியவனே அதிகுற்றவாழி...

நம்ம, dear ஆண்வர்க்கமே...

நீங்கள் எல்லாம் ஒருத்திக்கு ஒருத்தன் என்று வாழுவதைப்பார்க்கும்போது மிகவும் சந்தோசம். நீங்கள் தாராளமாய் கொலைசெய்யலாம் இப்படிப்பட்ட விபச்சாரியளை..... அத்தோட மறக்காமல் அவளிட்ட போற நம்ம தமிழ்ப்பொடியள், வெள்ளையள் எண்டு எல்லாரையும் சேர்த்துப்போட்டியள் என்றால் சாலவும் நன்று.

பணத்துக்காக செல்பவளை மட்டும்தான் போடுவாங்களோ, இல்லா இன்பத்துக்காகமட்டும் போறவளவையும் போடுவாங்களோ?

ஏனென்டா... சொன்னா தப்பா நினைக்காதீங்கோ, நம்ம தமிழ்பொட்டையளும் இப்ப அப்டிஇப்டி தானாம். (ஆண்கள் பற்றி சொல்லித்தெரியத்தேவை இல்லை...) பணத்துக்காக போறாளவை எண்டு தப்பா எடுத்துக்காதையுங்கோ... இன்பத்துக்காகதான்.

படம் நீக்கப்பட்டுள்ளது:: யாழ்பிரியா

Added: (N.B: if u thing this image is toomuch for this topic, ask admin to delete thim image)

comments ab this photo

இதென்ன எல்லாரையும் போடச்சொல்லிச் சொல்லிறியள்.

அதுதான் தெளிவாச் சொல்லிப் போட்டினமே?

பாலியற்றொழிலாளியிட்ட போற ஆண்களைக் கொல்லக்கூடாதாம். சிறையிலதான் போட வேணுமாம்.

ஆனா பெண்களைக் கொல்ல வேணுமாம்.

உந்தக் கொலைகளைச் செய்யிறவன் சந்தேகமேயில்லாமல் ஒரு வெறிபிடிச்ச மனநோயாளி. அதை நியாயப்படுத்திக் கூத்தாடுறதுகள் எப்பிடிப்பட்டதாயிருக்கும்?

ஆனா ஒண்டு.

தமிழராகிய நாங்கள்தான் உலகத்தில தோன்றின மூத்த மனிதச் சமூகத்தின்ர நேரடி எச்சங்கள் எண்டதை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறன்.

காட்மிராண்டித்தனத்தின்ர எச்சங்களை இன்னும் காவிக்கொண்டு திரியிறது வடிவாத் தெரியுதெல்லோ?

அடிக்கடி இயேசுவின்ர வசனமாம் எண்டு இழுத்துவிடுறவருக்கு, அதே இயேசு மதலேன் மரியாளைக் கொலை செய்யவிடாமல் காப்பாத்திறதுக்காகக் சொன்ன வசனத்தை ஞாபகப்படுத்திறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப மதலேன் மரியாளைத் தண்டிக்க இயேசுவுக்குக்கூட 'அருகதை' இல்லை எண்டு நிறுவ வாறியளோ?

சபாஷ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்து,

தமிழ்ப்பண்பாட்டைப் பற்றிக் கதைப்பவர்கள் தயவு செய்து அது எத்தனையாம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது என்பதையும் சொல்லிவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

ஏற்கனவே எங்கள் தமிழ்ப்பண்பாடு பற்றி புழுகோ புழுகென்று புழுகி உள்ளநாட்டுப் புரட்டையெல்லாம் சொல்லி வண்டில் விட்டவர்கள் மீண்டும் அதைத் திருப்பத் தொடங்குகிறார்கள்.

ஆகவே இனி தூய்மையான தமிழ்ப்பண்பாடு பற்றிக் கதைப்பவர்கள் தயவு செய்து எத்தனையாவது ஆண்டிலிருந்து தமிழ்ப்பண்பாடு அல்லது கலாச்சாரம் கணிக்கப்படுகிறதென்பதையும் சொன்னால் நல்லது. இறுதி ஐநூறு ஆண்டா? ஆயிரம் ஆண்டா? இரண்டாயிரம் ஆண்டா? அல்லது அதற்கும் முன்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்து விரலும் ஒரே மாதிரி இல்லைத்தானே "நல்லவன்"

அதுமாதிரி ஒவ்வருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து..

இதோட இந்த topicஐ closeபண்ணுவோமா? ஏனெண்டால் விதண்டவாதங்கள் நீண்டுகொண்டே செல்கின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலாளர்களின் கொலை சமூக மாற்றம் தேவையை உணர்த்துகிறது - இங்கிலாந்து ஆன்மிகத் தலைவர்

இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் ஐந்து பெண்கள் கொலைச் செய்யப்பட்டிருப்பது, பாதுகாப்பின்றி சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களை பாதுகாக்கும் வகையில் சமூகம் மாற வேண்டிய தேவையினை காண்பிக்கின்றது என ஆங்க்லிக்கன் தேவாலய முறையினை பின்பற்றுபவர்களின் ஆன்மிக தலைவர் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்டவர்களில் குறைந்தபட்சம் மூவர் பாலியல் தொழிலாளர்கள்.

இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பது பெரும் பங்கு வகிக்கிறது என கேண்டர்பெரியின் ஆர்க்பிஷப் ரோவன் வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

இந்தக் கொலைகள் குறித்த தனது அதிர்ச்சியினை பிரித்தானிய பிரதமர் டோனி ஃப்ளெர் வெளியிட்டுள்ளார். இப்ஸ்விச் நகரத்தினை சுற்றிலும் நடைபெற்ற இந்த கொலைகளை ஒரே நபர் செய்திருக்கலாம் என காவல்துறையினர் எண்ணுகின்றனர்.

இந்தக் கொலைகளுக்கு காரணமானவர்களை பிடிப்பதற்கு உதவி செய்பவர்களுக்கு கிட்டதட்ட ஐந்து லட்சம் டாலர் வெகுமதி கொடுக்கப்படும் என தேசிய செய்தித்தாள் ஒன்று அறிவித்துள்ளது.

பிபிசி தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பம் கிடைக்காத வரை எல்லோரும் கற்ப்புக்கரசர்கள்(அரசிகள்)தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதனைத் தவிர எந்த உயிரினமும் கர்ப்பம் தரித்த பின் உறவு வைத்திருப்பதைத் தவிர்க்கின்றன...!

ஆமாம்.. ஆனால் வேறு கர்ப்பம் தரிக்காத மிருகத்தோடு உறவு கொள்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனைத் தவிர எந்த உயிரினமும் கர்ப்பம் தரித்த பின் உறவு வைத்திருப்பதைத் தவிர்க்கின்றன...!

ஆமாம்.. ஆனால் வேறு கர்ப்பம் தரிக்காத மிருகத்தோடு உறவு கொள்கின்றன.

ஆக மிருகத்திலும் கீழ் நிலையில் இருக்கிறது மட்டுமில்லாமல் மிருகமாகவும் இருக்கச் சொல்லுறீர்கள்..எப்போ மனிதனாக நாகரிகம் உள்ளவனாக பகுத்தறிவுக்கு வேலை கொடுப்பவனாக இருக்கப் போகிறீர்களோ...????????????! :lol:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போ மனிதனாக நாகரிகம் உள்ளவனாக பகுத்தறிவுக்கு வேலை கொடுப்பவனாக இருக்கப் போகிறீர்களோ...????????????!

மனிதனுடைய நாகரீகம் எப்போ எத்தனையாம் ஆண்டு அல்லது எத்தனை வருடங்களுக்கு முன் தோன்றியது. மனிதன் காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்திய போது அத்தனை பேரையும் போட்டுத் தள்ளியிருக்க வேணும்..

கர்ப்பம் தரித்த பிறகும் குறிப்பிட்ட காலம் வரை உறவு கொள்ளலாம் என ஒரு முறை மாத்ரு புதமும் டொக்டர் சாலினியும் சொன்னவை..

என்னப் பொறுத்த வரை உறவு கொள்ளுதலே மிகப் பெரிய பாவம். காட்டு மிராண்டிகளின் வேலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ மனிதனாக நாகரிகம் உள்ளவனாக பகுத்தறிவுக்கு வேலை கொடுப்பவனாக இருக்கப் போகிறீர்களோ...????????????!

மனிதனுடைய நாகரீகம் எப்போ எத்தனையாம் ஆண்டு அல்லது எத்தனை வருடங்களுக்கு முன் தோன்றியது. மனிதன் காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்திய போது அத்தனை பேரையும் போட்டுத் தள்ளியிருக்க வேணும்..

கர்ப்பம் தரித்த பிறகும் குறிப்பிட்ட காலம் வரை உறவு கொள்ளலாம் என ஒரு முறை மாத்ரு புதமும் டொக்டர் சாலினியும் சொன்னவை..

என்னப் பொறுத்த வரை உறவு கொள்ளுதலே மிகப் பெரிய பாவம். காட்டு மிராண்டிகளின் வேலை..

மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த போது பில்லியன் கணக்கில் பெருகவில்லை. அவன் இயற்கையின் விதிகளால் கட்டுப்பட்டு அவனே அழிக்கப்பட்டான். அவனுடைய சனத்தொகை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று கொண்டது. ஆனால் மனித சிந்தனை வளர்ச்சியும் நாகரிக வளர்ச்சியுமே மனிதனை முன்னேற்றியது. விலங்குகளின்றும் வேறுபடுத்தியது. அப்படி நாகரிகம் வளர்ந்து அதன் வழி பாலியல் தேவைகளும் நாகரிக எல்லைக்குள் பூர்த்தி செய்ய வசதிகள் இருந்தும் ஏன் அதைத் தாண்ட வேண்டும். மீண்டும் மிருகமாகி அழிய வேண்டும்...அழிவைத் தேட வேண்டும்.

விலங்குகளை பறவைகளைப் பொறுத்தவரை அவை உடலிரசாயன இயக்கத்தோடு செல்பவை. அவை கருத்தரித்த பின் குறித்த பெண் விலங்குடன் உறவு வைப்பதைத் தவிர்க்கின்றன. இது பொதுவான நடத்தையியல் நிலை. பறவைகளைப் பொறுத்தவரை அடைகாக்கும் பறவைகளாக அதிகம் பெண் பறவைகளே இருக்கின்றன. குறிப்பிட்ட அடைகாக்கும் பருவத்தில் அவை உறவுகள் வைப்பதில்லை.

மனிதன் கருத்தரித்த பின் குறிப்பிட்ட காலத்துக்கு உறவு வைப்பது ஆபத்துக் குறைவானது என்றே சொல்லப்படுகிறது. முற்றிலும் ஆபத்து அல்ல என்று சொல்ல முடியாது. ஏன் இதைச் சொல்கிறார்கள் என்றால் அறிவுமட்டம் குறைந்த மக்கள்..விலங்குகள் போல உடல் இச்சைக்கு தீர்வு தேட விளைவதால்..அவர்களுக்கு இது ஓர் அறிவிப்பாக சொல்லப்படுகிறது. அதைத் தவறான அர்த்தப்படுத்தலுக்கு இட்டுச் செல்வதைத் தவிர்ப்பது நன்று..! :lol:

Link to comment
Share on other sites

37 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Link to comment
Share on other sites

37 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்!

யாரு கைது செய்யப்பட்டது? கொலை செய்த மன நோயாளரா இல்லை கொலை செய்யத் தூண்டியவரா? :lol:

Link to comment
Share on other sites

தனிமையில் இருந்த மன நோயாளர் இந்தக் கொலையாளி.இவரைத் தான் இங்கே ஒருவர் விபச்சாரத்தை அழிக்க அவதாரம் எடுத்தவர் என்று எழுதினார்.இவரின் கருத்துப்படி இந்த ஆன்மிக வாதி தான் பல முறை விபச்சாரி களைத் தேடிச் சென்றுள்ளார்.இவ்வாறனவர்களும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு, பகல் என்று யாழ் களத்தில் எழுதுவதில் இருந்தே, தனிமைப்பட்டிருக்கின்றார் என்று தெரிகின்றது. சிலவேளைகளில் பகுத்தறிவான கருத்துக்களை வைப்பவர்களைப் போட்டுத் தள்ள மனதில் விருப்பம் இருக்கலாம். ஆனால் செயல்வடிவம் கொடுக்க தைரியம் வேண்டும். விசைப் பொறியைப் பலமாகத் தாக்குவதுபோல் மனிதர்களையும் தாக்கலாம் என்று நம்பினாலும் நம்புவார்.. யார் கண்டது.. :lol:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின் கருத்துப்படி இந்த ஆன்மிக வாதி தான் பல முறை விபச்சாரி களைத் தேடிச் சென்றுள்ளார்.

உமக்குத் தெரியாது நாரதர்.. அவர் விபசாரிகளினால் சமூகத்துக்கு என்ன தீமை எண்டதை அறிந்து கொள்ளுறதுக்காக அப்பிடி அடிக்கடி போயிருப்பார். அவர் அருணகிரிநாதர் கண்ணதாசன் மாதிரி ஒரு ஆள்.

Link to comment
Share on other sites

யோ காவ்ஸ், நீர் என்ன சொல்லவாறீர்?

என்ன மாதிரி ஆக்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் என்றா?

சா கேட்டாலே வெக்கமாக இருக்கு :huh:

எதுக்கும் ஒருக்கா காலைத் தொட்டு கும்பிடும் ஆசீர்வாதம் செய்யிறன்

Link to comment
Share on other sites

நல்லவனிற்கு 5 விரல் தான் இருக்கு அந்த 5 உம் ஒன்று என்று நேர கண்டவவோ snegi? மேலதிகமாக விண்ணானரீதியில் நிறுவினவோ?

சரி அடுத்தாக 5 விரல் நல்லவனின் கேள்விக்கு வருவம். எங்கடை கள்ளச்சாராயம் பண்பாடு எத்தனை வருடங்கள் பழமைவாய்ந்தது? எங்கடை கள்ளச்சாராயாம் பண்பாடு என்பன கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்னர் தோன்றியது. ப+மியினதும் அதன் நட்சத்திர மண்டலத்தினதும் வயதை 4.55 பில்லியன் வருடங்களிற்கு முன்னர் தோன்றியது என்று விஞ்ஞானரீதியில் சொல்கிறார்கள். எனவே அதற்கு தேவையதன கல்லும் மண்ணும் தோன்ற முதலே தோன்றிய எமது கள்ளச்சாராயம் பண்பாடு குறைந்த பட்சம் 4.55 பில்லியன் வருடங்களாவது பழமை வாய்ந்தது என்று விண்ணானரீதியில் நிறுவ விளைகிறோம். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவனிற்கு 5 விரல் தான் இருக்கு அந்த 5 உம் ஒன்று என்று நேர கண்டவவோ snegi? மேலதிகமாக விண்ணானரீதியில் நிறுவினவோ?

மிஸ்டர் குறுக்ஸ்..

நீர் என்னசொல்லவர்ரீர் என்று எனக்கு புரியவில்லை... கொஞ்சம் விளக்கம் தந்தால் நல்லாய் இருக்கும். என்னைமாதிரி விளக்கம் இல்லாத பஸ்ஸங்க நிறையப்பேர் இருப்பாங்க..

நல்லவனுக்கு மட்டும்தான் ஐந்துவிரல் எண்டு சொன்னேனா?

நான் அந்தக்கருத்து நல்லவனுக்கு தான் கூறியிருந்தேன் என்று அர்த்தம்... தப்புதப்பா விளங்கி தப்புதப்பா பேசுறேளே...

(பி.கு: சனேகி = சினேகிதன். அவா இல்லை அவர் :huh: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லீஷ் பொலிசை வென்றுடும் போல இருக்குது இங்கு சிலர் நடத்தும் விசாரணை. கைதி செய்யப்பட்ட இருவரூம் சந்தேக நபர்கள். குற்றங்கள் நிரூபிக்கப்படவுமமில்லை. அதில் ஒருவர் இங்கீலிசுப் பொலிஸில் விசேட உறுப்பினராக கிட்டத்தட்ட 4 வருடங்கள் பணி புரிந்துள்ளார்...??! தற்போது சுப்பர் மாக்கெட்டில் வேலல. ஆக இங்கிலீஸ் பொலிஸ், சுப்பர் மார்க்கெட்டில வேலை செய்யுறவை எல்லாம் யாழ் கள ஆய்வாளர்களின் கருத்துப் படி தனிமைகள்...ஆன்மீகத் துறவிகள்...! :unsure::o

விபச்சாரம்..நேரடியான மனித ஒழுக்கத்துக்கு கேடு. அதுமட்டுமன்றி விபச்சாரத்தின் மூலம் கிடைக்கப் பெறும் பணம் மூலம்..அல்லது அந்தப் பணத்துக்காக சமூக விரோத தேச விரோத மனித விரோத செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றன. பால்வினை நோய்கள் பரப்பப்படுகின்றன. அந்த வகையில் ஈழத்தில் எல்லாளன் படை போல் விபச்சாரத்தை விபச்சாரிகளை அதன் வாடிக்கையாளர்களை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் வளமான ஒழுக்கமுள்ள நாகரிகமான சமூகத்தை பேண முடியும்...! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு = நமது சமய புராணங்கள் உண்மையா பொய்யா என்று அறிய முற்படுதல்.

பன்னாடையறிவு = பொய்யென்று ஆதாரங்களுடன் கூறும்போது, அதை நம்ப மறுத்து கண்களை மூடிக்கொள்ளல்.

ஜயோ பாவம்! உமக்குப் பன்னாடை என்பதற்கு விளக்கமே தெரியவில்லை. அந்த லட்சணத்தில் பகுத்தறிவு பற்றிக் கதைக்கின்றீர்.

பன்னாடை என்று ஒருவரை ஏன் திட்டுவது என்றால் அதில் தானாம் முந்தி ஏதையும் வடிப்பார்கள். முக்கியமாகக் கள்ளு. அதில் நல்ல பொருட்களைக் கீழே போகவிட்டு, கஞ்சலையும், கழிவையும் மட்டுமே வைத்திருப்பதால் தான் ஒருவரைப் பார்த்து பன்னாடை என்று திட்டுவார்கள். இப்போது விளங்கிவிட்டுதா?

இந்து மதம் என்று, வெறுமனே புராணக்கதைகள் தான் என்று சொல்லி வியாக்கியமானமும், வம்பும் அளப்பதை தான் இந்த சமயத்தில் பன்னாடைகள். அடிப்படை அறிவில்லாத விவாதிகள்.

பகுத்தறிவு என்றால் அதற்கு ஒரு எல்லை இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய அறிவு இருக்க வேண்டும். என் நடவடிக்கை நல்ல வழியாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பதும், மற்றவர்களுக்கு புத்தி சொல்லவது என்றால், அது கிண்டலாகவோ, கீழ்தரமாக இருக்க கூடாது என்று சிந்திப்பது கூட சிறப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.