Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீராவியென
அனுபவத்திரட்சி 
ஒடுங்கும் தருணத்தில்
முதுமை பெற்றேன்

கட்டுடைத்த பெரும்
குளமெனச் சிதரும்
வார்த்தைப் பிரளயம்
புழுதி மழையில் நனையும்
பூவரசம் சருகெனச்
சரசரக்க

நீர்க்குடம் உடைத்த
நெடி மாறாக் கன்றுகள்
பறக்கும் மேகத்தை
புகை என்ற

பருவம் தொலைத்த
அனுபவங்களின் சீவன்
கட்டும் சொற்களை
கன்றுகள் 
கேட்டுத்தான் வளர்ந்திடுமோ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது , தொடர்ந்து கவிதைகளை இணையுங்கள்  கீர்த்திதீபன் ....!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கீர்த்திதீபன் said:

கட்டுடைத்த பெரும்
குளமெனச் சிதறும்
வார்த்தைப் பிரளயம்
புழுதி மழையில் நனையும்
பூவரசம் சருகெனச்
சரசரக்க

 

முதுமையின் 'பிசத்தல்' நிலையை.. இதை விட அழகாக வார்த்தைகளால் உவமிக்க முடியுமா என்பதை நான் அறியேன்!

ஒரு பாடப்புத்தகத்தில் பதியப்பட வேண்டிய கவிதை இதுவென்று சொல்வேன் கீர்த்தி தீபன்!

அருவியென ஓசையெழுப்பி அமைதியாகத் தவழட்டும்.... உங்கள் கவி நடை!

நன்றி !

Link to comment
Share on other sites

9 hours ago, கீர்த்திதீபன் said:

பருவம் தொலைத்த
அனுபவங்களின் சீவன்
கட்டும் சொற்களை
கன்றுகள் 
கேட்டுத்தான் வளர்ந்திடுமோ?
 

என்ன செய்வது இது ஒரு எழுதாத விதி. நாமும் இப்படித்தான் இருந்தோம், அடுத்த சந்ததியும் இப்படித்தான்.

தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில்.... அழகாக பாவிக்கப் பட்டுள்ள சொற் பதங்களை, மிக ரசித்து வாசித்தேன்.
நன்றி, அனுபவ சீவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

கவிதையில்.... அழகாக பாவிக்கப் பட்டுள்ள சொற் பதங்களை, மிக ரசித்து வாசித்தேன்.
நன்றி, அனுபவ சீவன். 

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

12 hours ago, தமிழ் சிறி said:

கவிதையில்.... அழகாக பாவிக்கப் பட்டுள்ள சொற் பதங்களை, மிக ரசித்து வாசித்தேன்.
நன்றி, அனுபவ சீவன். 

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

21 hours ago, suvy said:

நன்றாக இருக்கின்றது , தொடர்ந்து கவிதைகளை இணையுங்கள்  கீர்த்திதீபன் ....!  :)

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

12 hours ago, ஜீவன் சிவா said:

என்ன செய்வது இது ஒரு எழுதாத விதி. நாமும் இப்படித்தான் இருந்தோம், அடுத்த சந்ததியும் இப்படித்தான்.

தொடர்ந்து எழுதுங்கள்.

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13/11/2015, 06:00:00, தமிழ் சிறி said:

கவிதையில்.... அழகாக பாவிக்கப் பட்டுள்ள சொற் பதங்களை, மிக ரசித்து வாசித்தேன்.
நன்றி, அனுபவ சீவன். 

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

On 13/11/2015, 05:40:52, ஜீவன் சிவா said:

என்ன செய்வது இது ஒரு எழுதாத விதி. நாமும் இப்படித்தான் இருந்தோம், அடுத்த சந்ததியும் இப்படித்தான்.

தொடர்ந்து எழுதுங்கள்.

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/11/2015, 22:49:36, புங்கையூரன் said:

முதுமையின் 'பிசத்தல்' நிலையை.. இதை விட அழகாக வார்த்தைகளால் உவமிக்க முடியுமா என்பதை நான் அறியேன்!

ஒரு பாடப்புத்தகத்தில் பதியப்பட வேண்டிய கவிதை இதுவென்று சொல்வேன் கீர்த்தி தீபன்!

அருவியென ஓசையெழுப்பி அமைதியாகத் தவழட்டும்.... உங்கள் கவி நடை!

நன்றி !

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.