Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீராவியென
அனுபவத்திரட்சி 
ஒடுங்கும் தருணத்தில்
முதுமை பெற்றேன்

கட்டுடைத்த பெரும்
குளமெனச் சிதரும்
வார்த்தைப் பிரளயம்
புழுதி மழையில் நனையும்
பூவரசம் சருகெனச்
சரசரக்க

நீர்க்குடம் உடைத்த
நெடி மாறாக் கன்றுகள்
பறக்கும் மேகத்தை
புகை என்ற

பருவம் தொலைத்த
அனுபவங்களின் சீவன்
கட்டும் சொற்களை
கன்றுகள் 
கேட்டுத்தான் வளர்ந்திடுமோ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது , தொடர்ந்து கவிதைகளை இணையுங்கள்  கீர்த்திதீபன் ....!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கீர்த்திதீபன் said:

கட்டுடைத்த பெரும்
குளமெனச் சிதறும்
வார்த்தைப் பிரளயம்
புழுதி மழையில் நனையும்
பூவரசம் சருகெனச்
சரசரக்க

 

முதுமையின் 'பிசத்தல்' நிலையை.. இதை விட அழகாக வார்த்தைகளால் உவமிக்க முடியுமா என்பதை நான் அறியேன்!

ஒரு பாடப்புத்தகத்தில் பதியப்பட வேண்டிய கவிதை இதுவென்று சொல்வேன் கீர்த்தி தீபன்!

அருவியென ஓசையெழுப்பி அமைதியாகத் தவழட்டும்.... உங்கள் கவி நடை!

நன்றி !

Link to comment
Share on other sites

9 hours ago, கீர்த்திதீபன் said:

பருவம் தொலைத்த
அனுபவங்களின் சீவன்
கட்டும் சொற்களை
கன்றுகள் 
கேட்டுத்தான் வளர்ந்திடுமோ?
 

என்ன செய்வது இது ஒரு எழுதாத விதி. நாமும் இப்படித்தான் இருந்தோம், அடுத்த சந்ததியும் இப்படித்தான்.

தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில்.... அழகாக பாவிக்கப் பட்டுள்ள சொற் பதங்களை, மிக ரசித்து வாசித்தேன்.
நன்றி, அனுபவ சீவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தமிழ் சிறி said:

கவிதையில்.... அழகாக பாவிக்கப் பட்டுள்ள சொற் பதங்களை, மிக ரசித்து வாசித்தேன்.
நன்றி, அனுபவ சீவன். 

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

12 hours ago, தமிழ் சிறி said:

கவிதையில்.... அழகாக பாவிக்கப் பட்டுள்ள சொற் பதங்களை, மிக ரசித்து வாசித்தேன்.
நன்றி, அனுபவ சீவன். 

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

21 hours ago, suvy said:

நன்றாக இருக்கின்றது , தொடர்ந்து கவிதைகளை இணையுங்கள்  கீர்த்திதீபன் ....!  :)

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

12 hours ago, ஜீவன் சிவா said:

என்ன செய்வது இது ஒரு எழுதாத விதி. நாமும் இப்படித்தான் இருந்தோம், அடுத்த சந்ததியும் இப்படித்தான்.

தொடர்ந்து எழுதுங்கள்.

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13/11/2015, 06:00:00, தமிழ் சிறி said:

கவிதையில்.... அழகாக பாவிக்கப் பட்டுள்ள சொற் பதங்களை, மிக ரசித்து வாசித்தேன்.
நன்றி, அனுபவ சீவன். 

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

On 13/11/2015, 05:40:52, ஜீவன் சிவா said:

என்ன செய்வது இது ஒரு எழுதாத விதி. நாமும் இப்படித்தான் இருந்தோம், அடுத்த சந்ததியும் இப்படித்தான்.

தொடர்ந்து எழுதுங்கள்.

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/11/2015, 22:49:36, புங்கையூரன் said:

முதுமையின் 'பிசத்தல்' நிலையை.. இதை விட அழகாக வார்த்தைகளால் உவமிக்க முடியுமா என்பதை நான் அறியேன்!

ஒரு பாடப்புத்தகத்தில் பதியப்பட வேண்டிய கவிதை இதுவென்று சொல்வேன் கீர்த்தி தீபன்!

அருவியென ஓசையெழுப்பி அமைதியாகத் தவழட்டும்.... உங்கள் கவி நடை!

நன்றி !

பாராட்டுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடப்படும் கவிதைகளை வாசித்து தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.