Jump to content

ஃபேஸ்புக்கிடம் பதிவுகளை நீக்க கோரியதில் இந்தியா முதலிடம்


Recommended Posts

ஃபேஸ்புக்கிடம் பதிவுகளை நீக்க கோரியதில் இந்தியா முதலிடம்

 
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உடன் பிரதமர் நரேந்திர மோடி. | கோப்புப் படம்: ஏபி
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உடன் பிரதமர் நரேந்திர மோடி. | கோப்புப் படம்: ஏபி

 

உள்நாட்டு சட்ட விதிமுறைகளை மீறியதாக உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்திடம் நாடிய உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இத்தகைய இந்திய அரசின் கோரிக்கைகளின் எண்ணிக்கையை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், இப்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

ஃபேஸ்புக் நிறுவனம் வழக்கமாக தங்களது பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை எந்த அரசுக்கும், புலனாய்வு ஏஜென்சிகளுக்கும் தருவதில்லை. எனினும், தங்கள் பயனாளர்களில் குற்றப் பின்னணிக்கான முகாந்திரம் உள்ளவர்கள் தொடர்பான தகவல்களை அளிக்கும் நடைமுறையை 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் பல நாடுகள் கேட்ட பயனாளர் குறித்த தகவல்களின் எண்ணிக்கையும், பதிவுகளை நீக்குவதற்கு விடுக்கப்படும் கோரிக்கைகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஃபேஸ்புக்கின் விவர அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு உட்பட்டதாகும்.

அந்த அறிக்கையின்படி, தங்களது பயனாளர்கள் தொடர்பாக, உலக நாட்டு அரசுகள் கேட்கும் தகவல்கள் தற்போது 18 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கடைசி 6 மாதத்தில் 35,051 பேரின் தகவல்களை உலக நாடுகள் கேட்டிருந்தன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 41,214 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உள்ளூர் சட்டங்களை மீறிய 20,568 பேரின் பதிவுகள் நீக்கப்பட்டுவிட்டன. இது கடந்த ஆண்டின் கடைசி 6 மாதத்தில் நீக்கியதை விட 2 மடங்காகும்.

முகநூல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 1.4 பில்லியனில் இருந்து தற்போது 1.55 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் தனிநபர்கள் குறித்த தகவல்கள் வழங்குமாறு அமெரிக்காவிடம் இருந்துதான் அதிகமாக கோரிக்கைகள் வந்துள்ளன. மொத்தம் 26,579 பேரின் தகவல்களை அமெரிக்க அரசு புலனாய்வு நிறுவனங்கள் கேட்டுள்ளன. அதற்கடுத்த நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகள் அதிக தகவல்கள் கேட்டுள்ளன.

பதிவுகளை நீக்கக் கோருவதில் இந்தியா முதலிடம்

இந்தியாவை பொறுத்தவரையில், உள்நாட்டு சட்ட விதிமுறைகளை மீறியதாக உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்திடம் வைத்த கோரிக்கைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது இந்தியாவில் 190 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் சட்டவிரோதமாக கருத்துகளை பதிவு செய்த வகையில், இந்த ஆண்டு 15,155 பேரின் கருத்துப் பகிர்வுகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஃபேஸ்புக்கின் நிறுவனங்களான வாட்ஸ்ஆப், மெசஞ்சர் ஆப்ஸ் மற்றும் புகைப்படப் பகிர்வுத் தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவையும் இதில் அடங்கும்.

உலக அளவில் பதிவுகள் நீக்கக் கோரிக்கைகளை முன்வைத்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள துருக்கி 4,496 பதிவுகளையும், மூன்றாம் இடத்திலுள்ள பிரான்ஸ் 295 பதிவுகளையும் நீக்கக் கோரியிருந்தன.

ஒட்டுமொத்தமாக, இந்த 6 மாதங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கக் கோரி, 92 நாடுகள் முறையிட்டிருந்தாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் சட்டவிரோதமாக பலர் கருத்துகள், படங்களை வெளியிட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான விமர்சனங்களை பதிவிடுகின்றனர். இதனால் பல நாடுகள் சட்டம் - ஒழுங்கை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபேஸ்புக்கில் சட்டவிரோதமாக தகவல்கள், படங்கள் வெளியிடுவோரின் விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகள் அந்நிறுவனத்திடம் கேட்டு பெறுகின்றனர். அல்லது, சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கவோ தடை செய்யவோ வலியுறுத்துகின்றன.

தனிநபர் தகவல்கள் பாதுகாப்புக்கு ஃபேஸ்புக் நிறுவனம் உத்தரவாதம் அளித்திருந்தாலும், அதிகாரம் மிக்க அரசுகள் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க உளவு நிறுவனத்தை சேர்ந்த எட்வர்ட் ஸ்நோடன் பல நாடுகளின் ரகசியங்களை இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய பின், செல்போன், இணையதள நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளில் பல நாட்டு அரசுகள் மும்முரமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7869817.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம். லாம் இல்லை. செய்ய வேண்டும். ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல. அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.