Jump to content

ஆனந்த விகடனில் இந்த வாரம் (18.11.15) "சிறுவர்களின் வீடு" என்ற எனது கவிதை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்த விகடனில் இந்த வாரம் (18.11.15) "சிறுவர்களின் வீடு"  என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

சிறுவர்களின் வீடு 

 

 

 

சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன்

 

பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான்.

 

வாசலில் ஒரு சிறுவன்

 

பாண்டி விளையாடுகிறான்.

 

முற்றத்தில் ஒரு சிறுவன்

 

மழையிலாடுகிறான்.

 

கூடத்தில் ஒரு சிறுவன்

 

பல்லாங்குழி விளையாடுகிறான்.

 

சமையலறையில் ஒரு சிறுவன்

 

சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான்.

 

கழிப்பறையில் ஒரு சிறுவன்

 

கதவைத் திறந்துவைத்துப் போகிறான்.

 

குளியலறையில் ஒரு சிறுவன்

 

சத்தமாகப் பாடுகிறான்.

 

படுக்கையறையில் ஒரு சிறுவன்

 

அம்மாவின்மேல் கால்போட்டுத்

 

தூங்குகிறான்....

 

ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில்

 

சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்!

 

-சேயோன் யாழ்வேந்தன்

 

 

நன்றி: ஆனந்த விகடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடனில் பிரசுரமானபின் நான் என்னத்தை மறு பிரசுரம் செய்வது...!

 இணைப்புக்கு நன்றி சேயோன்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் எத்தனையோ.... பருவங்கள் இருந்தாலும்,
வயது போன பின்பும்.... இனிமையாகவும், பசுமையாகவும், கவலை இல்லாமலும்....
இருக்கும் வாழ்க்கை என்றால், சிறுவர் வாழ்க்கை தான். 
அதனை அழகாக எழுதி, ஆனந்த விகடனும் பிரசுரித்த... சேயோனுக்கு பாராட்டுக்கள்.  Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருந்தாலும், யாழ் மண் வாடை இல்லாமல் தமிழக வாசகர்களைக் குறிவைத்த வார்த்தைகளாக உள்ளன. சிலநேரம் பாண்டியும் பல்லாங்குழியும் யாழுக்கு இந்திய தொலைக்காட்சிகளுடன் யாழுக்கு வந்திருக்கலாம் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

கவிதை நன்றாக இருந்தாலும், யாழ் மண் வாடை இல்லாமல் தமிழக வாசகர்களைக் குறிவைத்த வார்த்தைகளாக உள்ளன. சிலநேரம் பாண்டியும் பல்லாங்குழியும் யாழுக்கு இந்திய தொலைக்காட்சிகளுடன் யாழுக்கு வந்திருக்கலாம் :cool:

கிருபன்ஸ்....
உங்களின், அதே.... கேள்விகள் என்னிடமும்  ஏற்பட்டது.
ஆனால்.... சேயோன் யாழ் வேந்தன், யாழில் பிறந்து.... 
சிறுவனாக இருக்கும் போது.... தமிழகத்திற்கு  வந்து, அங்கு.... வளர்ந்தவராக இருந்திருப்பார் என்றே நினைத்தேன்.
அதனை..... மண்வாசனை என்றும் மாறாது என்று கூறுவார்கள்.
அது, சேயோன் விடயத்திலும், இருந்திருக்கலாம்.
அல்லது...அவர், ஈழத் தமிழனை மிக, மிக... நேசிக்கும்.... ராஜவன்னியன் போன்ற, ஒரு உறவாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On Fri Nov 13 2015 22:45:38 GMT+0530 (India Standard, தமிழ் சிறி said:

வாழ்க்கையில் எத்தனையோ.... பருவங்கள் இருந்தாலும்,
வயது போன பின்பும்.... இனிமையாகவும், பசுமையாகவும், கவலை இல்லாமலும்....
இருக்கும் வாழ்க்கை என்றால், சிறுவர் வாழ்க்கை தான். 
அதனை அழகாக எழுதி, ஆனந்த விகடனும் பிரசுரித்த... சேயோனுக்கு பாராட்டுக்கள்.  Smiley

நன்றி தோழர்!

On Fri Nov 13 2015 22:45:38 GMT+0530 (India Standard, தமிழ் சிறி said:

வாழ்க்கையில் எத்தனையோ.... பருவங்கள் இருந்தாலும்,
வயது போன பின்பும்.... இனிமையாகவும், பசுமையாகவும், கவலை இல்லாமலும்....
இருக்கும் வாழ்க்கை என்றால், சிறுவர் வாழ்க்கை தான். 
அதனை அழகாக எழுதி, ஆனந்த விகடனும் பிரசுரித்த... சேயோனுக்கு பாராட்டுக்கள்.  Smiley

நன்றி தோழர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On Sat Nov 14 2015 01:13:12 GMT+0530 (India Standard, தமிழ் சிறி said:

கிருபன்ஸ்....
உங்களின், அதே.... கேள்விகள் என்னிடமும்  ஏற்பட்டது.
ஆனால்.... சேயோன் யாழ் வேந்தன், யாழில் பிறந்து.... 
சிறுவனாக இருக்கும் போது.... தமிழகத்திற்கு  வந்து, அங்கு.... வளர்ந்தவராக இருந்திருப்பார் என்றே நினைத்தேன்.
அதனை..... மண்வாசனை என்றும் மாறாது என்று கூறுவார்கள்.
அது, சேயோன் விடயத்திலும், இருந்திருக்கலாம்.
அல்லது...அவர், ஈழத் தமிழனை மிக, மிக... நேசிக்கும்.... ராஜவன்னியன் போன்ற, ஒரு உறவாகவும் இருக்கலாம்.

 

On Sat Nov 14 2015 00:47:09 GMT+0530 (India Standard, கிருபன் said:

கவிதை நன்றாக இருந்தாலும், யாழ் மண் வாடை இல்லாமல் தமிழக வாசகர்களைக் குறிவைத்த வார்த்தைகளாக உள்ளன. சிலநேரம் பாண்டியும் பல்லாங்குழியும் யாழுக்கு இந்திய தொலைக்காட்சிகளுடன் யாழுக்கு வந்திருக்கலாம் :cool:

தோழர்களுக்கு, தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்.  தி.கோபாலகிருஷ்ணன் என்பது பெற்றோர் இட்ட பெயர்.  அந்தப் பெயரில் சில கவிதைகள் அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் 2003க்கு முன்பு வெளியாகியுள்ளன. அதன் பின்பு, சேயோன் யாழ்வேந்தன் என்ற பெயரில் மட்டுமே எழுதி வருகிறேன். (எனது மகன்கள் ஆழிவேந்தன், ஆழிமுகிலன் என்று ஏற்கனவே யாழ் பதிவொன்றில் பகிர்ந்திருக்கிறேன்). மனிதனை நேசிப்பவன், தமிழனை நேசிப்பதில் தயங்குவதில்லை.  உலக மொழிகளுக்கெல்லாம் தாய், தமிழ் மொழி.  உலகு என்ற சொல், முதன் முதலில் தோன்றியது தமிழில். அந்தப் பொருளில் பிற மொழிகளில் சொற்களே இல்லாமல் இருந்ததும் உண்டு,மற்றபடி தமிழன் என்ற தனிச்செருக்கும் கிடையாது. ஈழத் தமிழருடன் தொடர்பு, பள்ளி மாணவனாக ஊர்வலங்கள் போனபோது ஏற்பட்டது, இன்று வரை தொடர்கிறது.  களத்தில் குருதி சிந்தியதில்லை என்றாலும், நவம்பர் 26 ல் இருமுறை குருதிக்கொடை தந்தேன் (ஆழிவேந்தன் ஒரு முறை).  மனிதரில் பிளவு தேவையில்லை, அது அரசியல்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, nunavilan said:

வாழ்த்துக்கள் சேயோன் யாழ் வேந்தன்.

நன்றி தோழர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, seyon yazhvaendhan said:

 

தோழர்களுக்கு, தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்.  தி.கோபாலகிருஷ்ணன் என்பது பெற்றோர் இட்ட பெயர்.  அந்தப் பெயரில் சில கவிதைகள் அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் 2003க்கு முன்பு வெளியாகியுள்ளன. அதன் பின்பு, சேயோன் யாழ்வேந்தன் என்ற பெயரில் மட்டுமே எழுதி வருகிறேன். (எனது மகன்கள் ஆழிவேந்தன், ஆழிமுகிலன் என்று ஏற்கனவே யாழ் பதிவொன்றில் பகிர்ந்திருக்கிறேன்). மனிதனை நேசிப்பவன், தமிழனை நேசிப்பதில் தயங்குவதில்லை.  உலக மொழிகளுக்கெல்லாம் தாய், தமிழ் மொழி.  உலகு என்ற சொல், முதன் முதலில் தோன்றியது தமிழில். அந்தப் பொருளில் பிற மொழிகளில் சொற்களே இல்லாமல் இருந்ததும் உண்டு,மற்றபடி தமிழன் என்ற தனிச்செருக்கும் கிடையாது. ஈழத் தமிழருடன் தொடர்பு, பள்ளி மாணவனாக ஊர்வலங்கள் போனபோது ஏற்பட்டது, இன்று வரை தொடர்கிறது.  களத்தில் குருதி சிந்தியதில்லை என்றாலும், நவம்பர் 26 ல் இருமுறை குருதிக்கொடை தந்தேன் (ஆழிவேந்தன் ஒரு முறை).  மனிதரில் பிளவு தேவையில்லை, அது அரசியல்.  

மன்னிக்கவேண்டும் நண்பரே. பெயர் யாழ்வேந்தன் என்று உள்ளதால் யாழில் வசிக்கின்றீர்கள் என்று எண்ணிவிட்டேன். தொடர்ந்தும் யாழ் களத்தில் வாசம் செய்யவேண்டும் நண்பரே.

Link to comment
Share on other sites

 

ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில்

சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்,

 

பரந்துபட்ட அகில மானிட அனுபவமாக மனித உணர்வுகளை மேம்பட எத்தனிப்பது உயர்ந்த கவிதைகளின் பண்பு. வாழ்த்துக்கள் கவிஞா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On Mon Nov 16 2015 11:54:46 GMT+0530 (India Standard, nunavilan said:

வாழ்த்துக்கள் சேயோன் யாழ் வேந்தன்.

நன்றி தோழர்!

 

3 hours ago, poet said:

 

ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில்

சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்,

 

பரந்துபட்ட அகில மானிட அனுபவமாக மனித உணர்வுகளை மேம்பட எத்தனிப்பது உயர்ந்த கவிதைகளின் பண்பு. வாழ்த்துக்கள் கவிஞா

 

தங்களின் கனிவான கருத்துக்கு நன்றி ஐயா!

13 hours ago, கிருபன் said:

மன்னிக்கவேண்டும் நண்பரே. பெயர் யாழ்வேந்தன் என்று உள்ளதால் யாழில் வசிக்கின்றீர்கள் என்று எண்ணிவிட்டேன். தொடர்ந்தும் யாழ் களத்தில் வாசம் செய்யவேண்டும் நண்பரே.

 

இத்தகைய சொற்களை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  உங்கள் கருத்து எவ்விதத்திலும் என்னைப் புண்படுத்தவில்லை.  என்னை சுயவிளம்பரம் செய்துகொள்வதற்கு நீங்கள் நல்ல வாய்ப்பையல்லவா வழங்கியிருந்தீர்கள்!  யாழ் களத்தில் எப்போதும் மகிழ்வுடன் தொடர விரும்புகிறேன். விரைவில் யாழ் மண்ணிலும் கால் பதிக்க அவா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.